பாருக்குப்போன குதிரை

புத்தக விமர்சனம் :

A horse walks in to a bar- ஒரு ஸ்டேண்டப் காமெடியனின் வலி.

இந்த ஜோக்கை கேள்விப்பட்டிருப்பீர்கள் என்று நினைக்கிறேன். இல்லையென்றால் இதோ:

ஒரு குதிரை பாருக்குப் போனது. என்னடா குதிரை பாருக்கு வந்திருக்கிறதே என்று அனைவரும் ஆச்சரியப்பட்டனர். சிலர் கேலி பேசினர். ஆனால் குதிரை யாரையும் கண்டுகொள்ளவில்லை. கருமமே கண்ணாக நேரே பார்மேனிடம் (ஊத்திக்கொடுப்பவர்) சென்றது. பார்மேன் என்ன வேண்டும் என்பது போல பார்த்தான். ஒரு டக்கீலா என்றது குதிரை. பேசிய குதிரையைக் கண்டு அதிர்ந்த பார்மேன், அதிர்ச்சியைக் காட்டிக்கொள்ளாமல் ஒரு டக்கீலா கொடுத்தான். மடக்கென்று குடித்த குதிரை கொஞ்ச நேரம் உட்கார்ந்திருந்தது. பிறகு என்ன விலை என்று கேட்டது. ஓ காசு வேற வெச்சிருக்கா என்று மேலும் அதிர்ந்த பார்மேன் 2000 ரூபாய் என்று சொன்னான். ஒன்றும் பேசாமல் அவன் கையில் புதிய 2000 ரூபாய் நோட்டை திணித்துவிட்டு நடையைக் கட்டியது குதிரை. பார்மேனுக்கு சந்தோஷம் தாங்கவில்லை – பேசும் குதிரை அதுவும் கேட்ட காசைக் கொடுக்கும் குதிரை. பார்மேன் ஓடிப்போய் வெளியே போய்க்கொண்டிருந்த குதிரையை மடக்கிக் கேட்டான்: ஆச்சரியமாக இருக்கிறது. பேசும் குதிரையை இதுவரை நான் பார்த்ததில்லை என்றான். ஹ்ம்ம் உங்க டகீலா விலை அதிகம். இனிமே பாக்கமாட்டீங்க என்று சொல்லிவிட்டு குதிரை வெளியேறியது.

*

பாருக்குப் போன குதிரை (A horse walks in to a bar) நாவலை எழுதியவர் டேவிட் க்ராஸ்மேன் என்கிற இஸ்ரேலிய எழுத்தாளர். ஹீப்ரூ மொழியில் எழுதப்பட்ட இந்த நாவல் ஆங்கிலத்தில் ஜெசிக்கா கொஹென்னால் மொழிபெயர்க்கப்பட்டு 2017ஆம் ஆண்டு மேன் புக்கர் பரிசு வாங்கியது. 194 பக்கங்களே கொண்ட சிறிய நாவல். இரண்டு மூன்று நாட்களில் படித்து முடித்து விடலாம் – ஆனால் இந்த புத்தகத்தின் தாக்கம் சிறிது நாட்களுக்கு நம்முடன் இருக்கும்.

*

இஸ்ரேலின் நெட்டன்யா நகரில் ஒரு காமெடிக் க்ளபின் மேடையில் ஒரு சாயங்காலம் டோவேலோ ஜி என்கிற கமெடியன், காமெடியன்களின் வழக்கமான பாணியில் ஸ்டேண்டப் ஷோ செய்ய ஆரம்பிக்கிறார். டோவேலோ ஜி ஒரு ஐம்பது வயதான ஜி. சில நாட்களுக்கு முன் அவருடைய பழைய நண்பரான அவிஷாயை (சமீபத்தில் மனைவியை இழந்த ஒரு ரிடையர்ட் ஜட்ஜ்) தொலைபேசியில் அழைத்து தன்னுடைய ஷோவுக்கு வரும்மாரு அழைக்கிறார். இருவருக்குமான நட்பு நாற்பது வருடங்களுக்கு முந்தியது – கடைசியாக ஒரு சம்மர் கேம்பில் பார்த்தது. அவிஷாய்க்கு முதலில் டோவேலோ ஜி யார் என்பதே ஞாபகம் இல்லை.

அன்றைக்கு ஸ்டேஜில் எப்பொழுதும் போலவே ஜோக்குகளுடன் ஆர்ம்பிக்கிறார். சில மொக்கை ஜோக்குகள், செக்ஸ் ஜொக்குகள், ஊரைப்பற்றி, இஸ்ரேலைப்பற்றி, பார்க்க வந்திருப்பவர்களைப் பற்றி கேலி பேசி ஜோக்குகள் என்று ஆரம்பிக்கிறது ஷோ. அவிஷாய் உங்களுக்கு எல்லாமே காமெடிதான். உங்கள் அம்மா கூட உங்களுக்கு காமெடி தான் என்பார். ஆனால் போகக் போக டோவேலா தனது சிறுவயதில் நடந்த ஒரு அதிர்ச்சியான துயரச் சம்பவத்தை விவரிக்கும் பொழுது பார்வையாளர்கள் இன்னும் அந்தத் துயரச் சம்பவத்திலிருந்து மீளாத உள்ளுக்குள் உடைந்து கொண்டிருக்கிற ஒரு மனிதனைக் காண்கின்றனர்.

க்ராஸ்மேன் ஒரு ஜியானிஸ்ட் (யூதர்களுடைய பூர்வீக நிலத்தை மீட்டு அவர்களை அங்கே குடியேற்றவேண்டும் என்கிற கொள்கை) ஆனால் மிதவாதி.மேலும் யூதர்களுக்கும் பாலஸ்தீனியர்களுக்குமிடையே அமைதியாக சுமூகமாகவே நல்லிணக்கம் வேண்டும் என்று விரும்புபவர். அப்படியானல் இந்த டோவேலோ ஜி அடிபட்ட ஒரு தேசத்தின் குறியீடா? இல்லை வெளி உலகத்துக்கு கொடுமைக்காரனாகவும் சுயநலவாதியாகவும் தன்னைக் காட்டிக்கொண்டு உள்ளுக்குள் 1973ஆம் வருடம் நடந்த ஒரு சம்பவத்தால் வஞ்சிக்கப்பட்ட பாதிக்கப்பட்ட அந்த பாதிப்பிலிருந்து இன்னும் மீளாத ஒரு குழந்தையாகவே இருக்கும் ஒரு மனிதனின் கதையா?

அன்றைய மாலையின் முழு ஷோவும் – ஒவ்வொரு ஜோக்கும், டோவேலாவின் ஒவ்வொரு கையசைவும், பார்வையாளர்களின் ஒவ்வொரு எதிர்ப்பும், சிரிப்பும், ஆர்ப்பரிப்பும் தெளிவாக எழுத்தாளர் க்ராஸ்மேனால் – அல்லது அவிஷாயால் – விவரிக்கப்படுகிறது. க்ராஸ்மேனின் தெளிவான ஆனால் பிடித்திழுக்கும் நடை நம்மை அந்த ஷோ நடக்கும் அந்த க்ளப்பின் பாதாள அறைக்கே இழுத்துச் செல்கிறது.

முதலில் கொஞ்சம் ஆசுவாசமாக ஆரம்பித்தாலும், போகக் போக ஒரு கழுகு எப்படி தன் இரையை நோக்கி பாயுமோ, அதே அளவு வீரியத்துடன் டோவேலா பார்வையாளர்களை தன் வாழ்க்கையையே மாற்றிய அந்த தருணத்திற்கு அழைத்துச் செல்கிறார்.

எப்படிச் செய்தார்? எனக்குப் புரியவில்லை. எப்படி இவ்வளவு குறுகிய நேரத்தில், பார்வையாளர்களை -என்னையும் சேர்த்து – அவரது ஆன்மாவின் குடும்ப உறுப்பினராக ஆக்கினார்? எப்படி எங்களையெல்லாம் பினைக்கைதிகளாக ஆக்கினார்?

என்று இந்தக் கதையை சொல்லும் பார்வையாளர்களுள் ஒருவரான அவிஷாய் கேட்கிறார்.

பார்வையாளர்களில் மேலும் ஒருவர் டோவேலோவைத் தெரிந்தவராக இருக்கிறார். அவரது வீட்டுக்குப் பக்கத்திலே இருந்தவர் – ஒரு சிறிய குட்டையான பெண்.

எனக்கு உன்னைத் தெரியும். நீ தானே கைகளால் தலைகீழாக நடப்பவன்?

என்று தனது முதல் அறிமுகத்திலே எல்லோர் முன்னிலையிலும் சொல்லுகிறார். டோவேலோ கைகளால் தலைகீழாக நடப்பதை வழக்கமாக வைத்திருப்பவர். அப்பாவிடம் கடுமையான பெல்ட் அடி வாங்கினாலும் கைகளால் நடக்கும் பழக்கத்தை கைவிட இயலாதவர். தலைகீழாக நடக்கும் பொழுது ரத்தம் தலைக்கு ஏறி காதுகளை அடைத்துக்கொண்டு உலகத்தின் சத்தங்களையெல்லாம் வடிகட்டி அமைதியை கொடுக்கிறது என்கிறார்.

டோவேலோவின் கடுமையான கேலிப்பேச்சுகளைப் பார்த்து” நீ அப்பெல்லாம் இப்படி இல்லை நீ ரொம்ப நல்லவன்” என்கிறார் அந்தப் பெண்.

க்ராஸமேனின் டோவேலாவின் கதாப்பாத்திரத்துக்கும் டோவேலாவின் நாடான இஸ்ரேலுக்கும் நிறைய தொடர்பிருக்கிறது. டோவேலாவின் துயரம் என்னவென்றால்: அவர் தன் இயல்பிலிருந்து மாறி, ஏன் தன்னையே வஞ்சித்துக்கொண்டு, தன் சுயத்தை இழந்தவர். ஒரு காலத்தில் உற்சாகமான – அந்தப் பெண்ணைப் பொருத்தவரை நல்ல – சிறுவனாக இருந்த டோலேவா அவமானத்திற்கும் குற்ற உணர்ச்சிக்கும் ஆளாகி கொடுமைக்காரனாகவும், அடுத்தவர்களிடம் குறைகளை மட்டுமே காணுபவனாகவும் காலப்போக்கில் மாறிப்போனான். அவனுடைய வாழாத வேறுவிதமான தனக்கு உண்மையான வாழ்க்கையின் ஒரு மிகச் சிறிய பகுதியைத்தான் எஞ்சியிருந்த பார்வையாளர்கள் அன்றைய மாலையில் பார்த்தனர்.

க்ராஸ்மேன் ஒரு பேட்டியில் சொன்னார்: இதை ஒரு இணையாக எடுத்துக்கொண்டு நான் நினைத்ததுண்டு, இஸ்ரேலியர்களாக நாம் வேறு ஒரு வாழ்க்கை வாழ்ந்திருக்கவேண்டும். 1967ஆம் ஆண்டு நடந்த போர் தான் திருப்புமுனை. 1967இல் தான் இஸ்ரேல் தான் அதுவரை பிடித்துவைத்திருந்த பகுதிகளை தனது அண்டை நாடுகளான எகிப்து, ஜோர்டான், சிரியா போரிட்டு தக்கவைத்துக்கொண்டது. ஜோர்டானிடமிருந்து மேற்கு கரையையும், எகிப்திடமிருந்து சினாய் மற்றும் காசாவையும், சிரியாவிடமிருந்து கோலன் ஹைட்சையும் போரிட்டு வென்று அந்தப் பகுதியின் அசைக்கமுடியாத ராணுவமாக உருமாறியது இஸ்ரேல். க்ராஸ்மேனைப் பொருத்தவரை இது ஒரு வரலாற்றுப் பிழை. புவியியல் பிழையும் கூட. அந்தப்பிழை திருத்தப்பட்டால் அல்லது திருத்தப்படும் பொழுது நாம் நம்முடைய அண்டை நாட்டவருடன் சுமூகமாக சண்டையின்றி வாழலாம். நம் வாழ்க்கை இவ்வளவு இருட்டாக நித்தமும் பயமாக இருந்திருக்காது என்று கூறுகிறார்.

மேலும்,

1967க்கு முன்பிருந்த இஸ்ரேலைக் கொண்டாடவில்லை, 1948இல் நடந்ததைப் போன்ற கொடுமைகள் நடந்திருக்கின்றன தான். ஆனால் 1967க்கு முன்பு வரை அடுத்த 50 ஆண்டுகளுக்கு நமது அண்டை நாடுகளுடன் போரிட்டுக்கொண்டிருக்காமல் ஓரளவுக்கு இனக்கமான சூழ்நிலையில் வாழ்வதற்கான வாய்ப்பிருந்தது. வாளால் வாழ்ந்து, வாளால் மடிவது. இன்றைக்கிருக்கும் இஸ்ரேலியர்களுக்கு வேறு வழியில்லை இது தான் ஒரே வழி, இப்படித்தான் வாழ்ந்திருக்க முடியும் என்கிற மனப்போக்கிருக்கிறது. 1967க்கு முன் பெரும்பாலான இஸ்ரேலியர்கள் இந்த மன்நிலையில் இல்லை என்று நினைக்கிறேன்.

இவ்வாறான கருத்துகளால் க்ராஸ்மேன் ஒரு தேசதுரோகி என்று சிலர் கருதுகின்றனர். நம்ம ஊர்காரர்கள் ஆண்டி-இண்டியன்ஸ், பாக்கிஸ்தானுக்குப்போ என்று சொல்வது போல. 2016இல் இஸ்ரேலிய கலாச்சார மந்திரி பழைய ப்ரிகேடியர் ஜெனரல் மிரி ரெகவ், இடதுசாரி எழுத்தாளர்கள் என்று சிலரைப் பட்டியலிட்டு அவர்களுக்கு அரசு ஊக்கத்தொகை இல்லை என்று அறிவித்தார். க்ராஸ்மேனும் அந்தப் பட்டியலில் இருந்தார். உங்களுக்கு பயமாக இருக்கிறதா என்று கேட்டதற்கு க்ராஸ்மேன் இல்லை பெருமைப் படுகிறேன் என்றார்.

பார்வையாளர்கள், மேடையில் இருப்பவனின் கதையைத் தெரிந்துகொள்ள விரும்புவதில்லை. அந்தக் காமெடியன் சொல்லும் ஜோக்குகள் மட்டுமே அவர்களுக்குத் தேவை. காமெடியனின் வலி அவர்களை அசைப்பதில்லை.

டோவேலா தனது கதையைச் சொல்லிக்கொண்டிருக்கும் பொழுது சிலர் போதும் நிறுத்து, ஜோக் சொல்லு என்று கதறுகிறார்கள். சிலர் கிளம்பி விடுகிறார்கள். டோவேலா ஒரு சில ஜோக் அவ்வப்போது சொல்லத்தான் செய்கிறார்.

உதாரணத்துக்கு:

ஒருத்தர் ஒரு கிளி வளர்க்கிறார். அந்தக்கிளி அவரைக் கண்டபடி திட்டுகிறது. கெட்ட கெட்ட வார்த்தையாலேயே திட்டுகிறது. காது கூசும் அளவுக்கு கழுவி கழுவி ஊற்றுகிறது. யார் இருக்கிறார்கள் இல்லை என்று பார்ப்பதில்லை. வளர்ப்பவர் சொல்லிப் பார்த்தார். கெஞ்சிப்பார்த்தார். எல்லார் முன்னிலையில் திட்டு வாங்கும் பொழுது என்னைத் திட்டவில்லை, என் அட்மினைத்தான் திட்டுகிறது என்று சொல்லி சமாளித்தார். யாரும் நம்பவில்லை என்பது வேறு விசயம். பொறுக்கமுடியாமல் உனக்கு சாப்பாடே கிடையாது என்று பட்டினியும் போட்டுப் பார்த்தார். கிளி அடங்கவில்லை. ஒரு கட்டத்தில் கடுப்பாகி கிளியை ஃப்ரிட்ஜின் ஃப்ரீசரில் வைத்து அடைத்துவிட்டார். கொஞ்ச நேரம் கழித்து கிளியை வெளியே எடுத்தார். கிளி மிகவும் பவ்யமாய் ஐயா என்னை மன்னித்து விடுங்கள். தவறிழைத்து விட்டேன். இனி ஒருபோதும் இது போல செய்யமாட்டேன். உங்களிடம் மரியாதையாகவே உரையாடுவேன். ஆனால் இதற்கு மட்டும் பதில் சொல்லுங்கள்: உள்ளேயிருக்கும் கோழி என்ன தவறிழைத்தது என்று சொன்னது.

மேலும் ஒரு ஜோக், கொஞ்சம் அசைவம்:

நடுக்கடலில் ஒரு சிறிய கப்பல் ஒன்று கவிழ்ந்து விடுகிறது. அதிலிருந்து ஒரு மனிதன் தப்பித்து நீந்தி கஷ்டப்பட்டுக் கரையேறுகிறான். கரையில் அதுபோலவே ஒரு நாயும் ஒரு ஆடும் தப்பித்து கரையேறியிருந்தன. அது ஒரு தீவு. ஒரு மனிதன். ஒரு நாய். ஒரு ஆடு. அவ்வளவே. நாட்கள் ஓடின.வாரங்கள் ஆயின. மாதங்கள் ஆயின. மனிதன் செக்ஸுக்கு காய்ந்துபோய் விட்டான். என்ன செய்வது. யாருடன் செய்வது. ஆடு ஒன்றுதான் வழி என்று முடிவுசெய்து ஆட்டை நெருங்கினான். ரெடியாகும் பொழுது ஒரு உறுமல் சத்தம் கேட்டு திடுக்கிட்டுத் திரும்பிப் பார்த்தான். நாய் பற்களைக் கடித்துக்கொண்டு உறுமிக்கொண்டிருந்தது. மனிதன் இது என்னடா வம்பாப் போச்சு என்று வாலைச் சுருட்டிக் கொண்டு போய்விட்டான். பிறகு நாய் தூங்கும் வரை பொறுமையாகக் காத்திருந்து தூங்கியபின் மெதுவாக தவழ்ந்து தவழ்ந்து ஆட்டின் அருகில் சென்று ரெடியானான். மறுபடியும் உறுமல் சத்தம். வெறுத்துப் போன மனிதன் அடப்போங்கப்பா என்று போய்விட்டான். வாரம் மாதம் ஓடியது நாய் ஒரு நாளும் மனிதனை ஆட்டிடம் நெருங்கவிடவில்லை. வேறெந்தக் கப்பலும் வரவும் இல்லை. வெறுப்பின் உச்சத்தில் இருந்த மனிதன் மற்றுமொரு கப்பல் தூரத்தில் கவிழ்வதைக் கண்டான். அதிலிருந்து ஒரு பெண் கடலுக்குள் குதிப்பதைக் கண்டான். குஷியான மனிதன் நீந்திச் சென்று அந்தப் பெண்ணைக் காப்பாற்றி கரை சேர்த்தான். அந்தப் பெண் மிக அழகாக இருந்தாள். சற்று நேரம் கழித்து கண் முழித்த அந்தப்பெண் ஆகா என் ரட்சகரே. என்னைக் காப்பாற்றிக் கரை சேர்த்தவரே என்னையே உங்களுக்குத் தருகிறேன். எடுத்துக் கொள்ளுங்கள். எமை ஆளுங்கள் என்றாள். அதற்கு அந்த மனிதன் எனக்கு ஒரே ஒரு உதவி செய்யுங்கள். அந்த நாயை மட்டும் கொஞ்ச நேரம் பிடித்துக் கொள்ளுங்கள் என்றான்.

டோவேலோ தன் கதைக்கு நடுவே சில ஜோக்குகள் இது போலச் சொன்னாலும் அவனது கதையிலே அவன் கவனமாக இருக்கிறான். பார்வையாளர்கள் அவனுடைய ஜோக்கிலே கவனமாக இருக்கிறார்கள்.காமெடியனின் வலி அவர்களை அசைப்பதில்லை. இதேபோன்றதொரு மனநிலையைத் தான் நாம் (இஸ்ரேலியர்கள்) அகதிகளிடம் காட்டுகிறோம் என்கிறார் க்ராஸ்மேன். நாம் அகதிகளின் கேட்பாரற்ற நிலையைப் பார்க்கிறோம். அவர்களை ஒரு அழுக்கு போல கருதுகிறோம். அவர்களுக்கு நம்மை போல துணிமணிகளை அணிவித்து, அவர்களை நம்மை போன்றதொரு அப்பார்ட்மெண்ட்டில் வைத்து, அவர்களுக்கு நம்மைப் போன்றதொரு நல்ல வாழ்க்கையைக் கொடுத்து ஒரு முப்பது விநாடி கற்பனை கூட நாம் செய்ய விரும்புவதில்லை. அகதிகள் பிரச்சனையைத் தீர்க்க, அவர்களை அவர்களுடைய வாழ்க்கையில், ஒரு புதிய இடத்தில், இணைத்துவிட அவர்கள் மீதான நம்முடைய பார்வையை நாம் மாற்றவேண்டும். அவர்கள் இழந்த மதிப்பையும் பெருமையையும் அவர்கள் மீட்டெடுக்க அதுதான் ஒரே வழி என்கிறார் க்ராஸ்மேன்.

எந்த அளவுக்கு இந்த நாவல் – முக்கியமாக டோவேலாவின் கதாப்பாத்திரம் – இஸ்ரேலின் குறியீடு என்று தெரியவில்லை.

இந்த நாவலின் முக்கிய கதாப்பாத்திரம் டோவேலாவா, ஓய்வுபெற்ற நீதிபதி அவிஷாயா அல்லது வாசகர்களாகிய நாமா?

இறுதியில் டோவேலா தன் கதையைச் சொல்லி முடிக்கும் பொழுது எஞ்சியிருப்பது நான்கே பேர் தான். அதில் இருவர் டோவேலாவை முன்பே அறிந்தவர்கள். இதை வைத்து க்ராஸ்மேனிடம் : உங்களுக்கான வாசகர்கள் உங்களுடைய கருத்துக்களால் இது போல குறைந்து வருகிறார்களா என்று கேட்டார்கள்.

அதற்கு அவர் நான் எனது கலைக்கு உண்மையாக இருக்கிறேன் என்றார்

Asura: The tale of Vanquished

Anand Neelakantan’s Asura is an important book. I think, it is a must read for those who know Ramayana or at least who had heared about Rama or Ravana. I guess in this era, you understand very well about History. You had already learnt to read between the lines of a news snippet. You had already started to think why a person says this or that and what he gets if I buy his argument, or what I would loose . If not, better start to think, for your and others well being.

History is nothing but perspective. Perspective of the winners. Perspective of those who happened to win. One small mistake, one change of a tide, one split second of escape from the – carefully prepared – poison coated arrow, one betrayal, one deception, one stupid decision can make one the victorious and the other a stupid sucker. If the victorious is a cunning fox or a gang of merciless ruthless killers the loser will be just wiped from the history. And that’s it mostly. But if the winner is terribly scared of the loser and his clan, he has to make sure that the clan never reclaims their lost glory. Never even try. Not even think of it.

And how would one do it? Rewrite the history, make him – and his clan – a villain, tell the story to every rustic corner, to the last man or woman or child who is living, to every child who will born in future, after 1000 years. Like entreprenuers pay the journalists, bloggers or who ever for paid stories, you pay any poet to write this story in every possible language in the country. Persuade every king, small or big, to accept the story, to ask his poets to write it down and to vow to take that to every beggar in the street. Make the story in to a literature. After that, again and again, persistently, say this is the best ever literature. Say that the poet is the best of the best. Say that the poet is so good that even his dog can write poem. A story will become a literature. The literature will turn in to a legend. People will jump head first in to the legend. Now the legend is set for thousand years to come.

How is it possible for us to think Prahalada as a good chap when he killed his own father? That’s when perspective comes to picture. One side of a coin. You are seeing through the eyes of the winner. You don’t even think that there is another perspective. You forget the other side of the coin.Now think from the perspective of Hiranyakasipu, his father, the poor lad who was poisoned by his own son. Or think from the perspective of his country people. Prahalada becomes a traitor. He collaborated with King’s enemy Vishnu, and poisoned the king. How did Prahalada moved from the status of a traitor to deity? Simple – because he was on the winners side. If you look carefully, history is full of traitors. Betrayals are everywhere. Sugreeva, Vibhisana to name a few.

Why Ravana cannot touch Sita? Here comes the answer to test your rationality. She has a ring of fire. But but how? (Mind Voice: Are yaar it is just a story). Think from Ravana’s perspective. He abducts Sita and he can’t touch her? He takes her to his kingdom, keep her house arrest, when he continue to live with his only wife and son. His people and his army fought and stood with him till the very end, despite their old king’s stupid lust? How is it possible? What could be the reason? Because Sita is Ravana’s daughter. (I had heared about this story when I was a kid).

One of my friend, when I narrated Asura to him, kept asking me: how did the author (Anand) know all these things? How can you believe him? Where is the evidence? Wow. Now my friend starts to be rational – which is not usual for him. I welcome his change. I appreciate. But he should ask the same question with more rationality to the author of the current known version of Ramayana – Valmiki. (Atually there is a version – or many versions- before Valmiki’s Ramayana) How does Valmiki know what he wrote? How and why would my friend accept – and believe – the version of Valmiki with out any question but would question Anand’s Asura version? How did he develop selective rationality? It could be because he had been ferociously taught about Ramayana. He had been prepared for this with out his consent from the moment he came to this world. So, naturally deep in his mind he believes Valmiki’s version, as he would believe sun rises in the east. Its natural. Its fact. He honestly believes it is true. But did he had any other choice? Did we ever let Ravana tell his story? We had already taken side, and sharply biased against the poor chap – and indirectly against his beloved clan.

But we need not to be on the winner’s side. Or for that matter on the loser’s side. We don’t have to accept the view of others. We just need to be aware of the fact that there is indeed another side for a coin.

Perhaps there are more sides.

டாலர் தேசம்

dollardesam

சு.வெங்கடேசனின் காவல் கோட்டம் படித்ததிலிருந்து வரலாற்றின் மேல் ஒரு காதல் வந்துவிட்டது. காவல் கோட்டம் பற்றி வேறொரு சமயத்தில் எழுதலாம் – இன்னும் படித்து முடிக்கவில்லை. அதற்குள் டாலர் தேசத்துக்கு தாவினேன். இரண்டு அத்தியாயங்கள் படித்த நிலையில், இந்தியா சென்றிருந்த பொழுது, அமெரிக்க வரலாற்றை ஏன் படிக்கவேண்டும் – இந்திய வரலாறே நமக்குச் சரிவரத் தெரியாதே – என்கிற எண்ணம் தோன்றியது.

ஏர்போர்ட்டில் John Keay எழுதிய India: A History வாங்கினேன். 200 பக்கங்கள் படித்த நிலையில், என்ன படித்தோம் என்று ரீவைண்ட் செய்து பார்த்த பொழுது, ஒன்றும் நினைவில் இல்லை. வரலாறு கதை அல்ல. அதை சுவராஸ்யமாக எழுதுவது எளிதல்ல. சுவராஸ்யமாக இல்லையெனில் – படிப்பது எளிதல்ல. மீண்டும் முதலில் இருந்து படிக்கத் தொடங்கினேன். அந்த சமயத்தில் தான் என்னிடம் டாலர் தேசம் வாங்கிச்சென்ற என் நண்பர் புத்தகத்தைத் திருப்பிக் கொடுத்தார். (புத்தகத்தை திருப்பிக்கொடுக்கும் சில உயர்ந்த உள்ளங்கள் இந்த உலகத்தில் இன்னும் இருப்பதாலேயே, இவ்வுலகம் உய்த்திருக்கிறது. 🙂 ) திருப்பிக்கொடுத்ததோடில்லாமல், அபாரம் என்றும் சொன்னார்.

டாலர் தேசம்

பதிப்பகம்: கிழக்குப் பதிப்பகம்

ஆசிரியர்: பா.ராகவன்

இந்த புத்தகத்தின் நோக்கம், அமெரிக்க வரலாறு அல்ல.  அமெரிக்காவைப் புரிந்துகொள்ளுதல்.

நமக்குத் தெரிந்த அமெரிக்கா நிஜமான அமெரிக்க அல்ல. அதன் பளபளப்புக்குப் பின்னால் இருக்கும் அழுக்குகள், அதன் வெற்றிக்குப் பின்னால் இருக்கும் சறுக்கல்கள், அதன் ஜன்நாயகத்துக்குப் பின்னால் இருக்கும் சர்வாதிகாரம், அதன் ஸ்டைலுக்குப் பின்னால் ஒளிந்திருக்கும் ஸ்லம், அதன் பணபலத்துக்குப் பின்னாலிருக்கும் கடன் சுமைகள், அதன் அதிகாரத்துக்குப் பின்னால் இருக்கும் அச்சுறுத்தல்கள் – இவையெல்லாம் தான் நிஜமான அமெரிக்கா.

இந்த புத்தகத்தைப் படித்தால் அமெரிக்க வரலாற்றைக் கரைத்துக்குடித்துவிடலாம் என்றில்லை. இந்த புத்தகத்தை வரலாற்றுப் பாடமாக்கலாமா என்றால் – முடியாது. பிறகு எதற்குத்தானய்யா இந்த புத்தகம்? அமெரிக்காவைப் புரிந்துகொள்வதற்கு! அமெரிக்காவை எதற்காகய்யா புரிந்துகொள்ளவேண்டும்? அமெரிக்கா என்ன என் மாமியாரா? காரணம் இருக்கிறது. அமெரிக்க வரலாற்றை நீங்கள் புரட்டிப்பார்த்து புரிந்துகொண்டால், நீங்கள் தற்பொழுது பார்க்கும் இந்த உலகம் – நீங்கள் கேட்கும் செய்திகள் – ஏன் இப்படி இருக்கிறது என்பதைப் புரிந்துகொள்ளத் தொடங்குவீர்கள்.

வியட்நாம் யுத்தம் ஏன்? ஈராக்கில் என்ன நடந்தது? சதாம் உசேன் என்னதான்யா தப்பு செஞ்சார்? எகிப்து ஏன் நொண்டுகிறது? முதல் உலக யுத்தத்தில் ஏன் அமெரிக்கா நுழைந்தது? என்ன காரணம்? இரண்டாம் உலக யுத்தத்திலும் ஏன் நுழைந்தது? பேர்ல் ஹார்பர் மட்டும் தான் காரணமா? ஜப்பான் மீது ஏன் குண்டு போட்டது? ஜப்பான் ஏன் பேர்ல் ஹார்பரை தாக்கியது? அமெரிக்கா சும்மா தானய்யா இருந்தது – பின்ன ஜப்பான் ஏன் தாக்கியது? திமிர் தான? இல்ல கடுப்பில தாக்கியதா? என்ன காரணம்? க்யூபாவில் என்ன நடந்தது? கௌடமாலாவில் என்ன பிரச்சனை? சுடானில் என்ன பிரச்சனை? அல்-கைதாவுக்கும் அமெரிக்காவுக்கும் என்ன வாய்க்கா சண்டை? ஆஃகானிஸ்தானில் ஏன் அமெரிக்கா நுழைந்தது? ரஷ்யாவுக்கும் அமெரிக்காவும் என்னப்பா பிரச்சனை? கொரியாவில் என்ன நடந்தது? பாலஸ்தீனப்போரில் அண்ணனின் பங்கு என்ன? பெர்லின் சுவர் உடைக்கப்பட்டது சரி – எதுக்குய்யா கட்டினாங்க? பாக்கிஸ்தான் ஆஃப்கானிஸ்தானைத்தான ஆதரித்திருக்கவேண்டும்? எதுக்கு அமெரிக்காவுக்கு சலாம் போடுகிறது? இப்படி நிறைய கேள்விகள் உங்களுக்கு இருக்கலாம். அதற்கான அத்தனை விடைகளும் உங்களுக்கு இந்த ஒரு புத்தகத்தில் கிடைத்துவிடும் என்று நான் சொல்லவில்லை. ஆனால் அந்த விடைகளுக்கான தேடலின் தொடக்கமாக இந்த புத்தகம் இருக்கக்கூடும்.

1500 இல் ஆரம்பித்து இன்றுவரையிலான அமெரிக்க சரித்திரத்தை அலசுகிறது இந்த புத்தகம். வரலாற்று நூலை இவ்வளவு சுவராஸ்யமாக எழுதமுடியும் என்று நான் நினைத்ததில்லை. பா.ராகவன் செய்திருக்கிறார். மூன்று நாட்கள் மூச்சுவிடாமல் படித்து முடித்தேன்.

அமெரிக்காவுக்கு போக வேண்டும் என்று நான் நினைத்ததில்லை – கட்டாயத்திலும் இல்லை. ஆனால் ஒரே ஒரு கேள்வி மட்டும் என்னுள் இருந்தது. அது ஏன் அமெரிக்கா மட்டும் ஜொலிக்கிறது என்கிற கேள்வி. இதற்கும் அமெரிக்காவின் சரித்திரம் வெறும் ஐநூறு ஆண்டுகள் மட்டுமே. ஐநூறு ஆண்டுகளுக்குள் ஒரு நாடு எப்படி வல்லரசாக முடியும்? கல்தோன்றி முன்தோன்றா டாஸ்மாக்குடி காலத்தைச் சேர்ந்த நம்மால் ஏன் முடியவில்லை? ஒவ்வொரு இந்தியனிடமும் பெருமை இருக்கிறது. எதற்கெடுத்தாலும் எப்படி இருந்த நாம், இப்படி ஆகிட்டோம் என்பதுதான். ஆனால் ஏன் இப்படி ஆனாம் என்று நினைத்திருப்போமா? அதற்கு இந்திய வரலாறு (நடுநிலமையான; உண்மை பேசும்; வரலாற்றையும் கற்பிதங்களையும் போட்டுக்குழப்பாத) வேண்டும்.

இல்லையெனில், வளர்ந்த நாடு எப்படி அதைச் செய்தது என்று பார்க்கலாம்.

ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன் பல்கலைக்கழகங்கள் இருந்தன. அப்பொழுதே சாக்கடை கட்டியிருக்கிறோம். அப்போதே பொது தண்ணீர் சேமிப்பு – விநியோக திட்டம் இருந்திருக்கிறது. தெற்கே முத்து வியாபாரம் கண ஜோராக நடந்திருக்கிறது. வடக்கே சந்தைகள் கொழித்திருக்கின்றன. நமது மொழி ஆயிரக்கணக்கான வருஷத்து பழமையானது. பாரதியார் கனவு கண்டார். காசியில் பேசினால் காஞ்சியில் கேட்கவேண்டும் என்றார். ஆனால் ரேடியோ கண்டுபிடித்தோமா நாம்? ராவணன் சீதையை ஆகாய விமானத்தில் வைத்து தூக்கிச்சென்றான் (கதை தான் என்றாலும்) என்று படித்து உருகுகிறோம். விமானம் கண்டுபிடித்தோமா? ஏன் முடியவில்லை? அமெரிக்காவால் ஏன் முடிந்தது?

சிம்பிளா சொன்னா: நம்ம கிட்ட இல்லாதது அப்படி என்ன இருக்கு அவங்ககிட்ட?

இந்த கேள்வி உங்களுக்கு இருக்குமேயானால் இந்த புத்தகத்தைப் படிப்பது அவசியம். பணக்காரர்களை நாம் எட்ட இருந்து பார்க்கும் வரை அவர்களது ஜொலிப்பு அட்டகாசமாய் இருக்கும். அவர்களுடன் பழகிப்பார்த்தால் தான், அவர்களது உண்மை நிலவரம் புரியும். பணக்காரர்களாக இருப்பதற்கு, பணத்தை சம்பாதித்துக்கொண்டேயிருப்பதற்கு, அவர்கள் என்னென்ன தகிடுதத்தங்கள் செய்யவேண்டியிருக்கிறது என்பது புரியவரும். பணக்காரர்களாகவே இருப்பது எளிதல்ல. பணக்காரர்களுக்குக் கூட பணம் மரத்தில் காய்ப்பதில்லை என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். பிறகு என்ன செய்தால் பணம் காய்த்துக்கொண்டேயிருக்கும்?

எங்கேயும் பிஸினஸ். எதிலும் பிஸினஸ். ஆயிரத்தில் ஒருவனில் பாலைவனத்தில் மாட்டிக்கொண்ட கார்த்திக்கு, பார்ப்பதெல்லாம், பீரும் பிரியாணியாகத் தெரிவது போல – எதிலும் பணத்தைப் பார்ப்பது. மனிதநேயத்தையும் பிஸினஸையும் குழப்பிக்கொள்ளக்கூடாது. ஒழுக்கவிதிகளையும் பிஸினஸையும் மிக்ஸ் செய்யக்கூடாது. இது சரியா? செய்த தவறுகளை பணத்தை வைத்து மறைத்துவிடு.

 அயல்நாடுகளுடன் உறுதியான, வளமான வர்த்தகத் தொடர்புகள் இருந்தாலொழிய அமெரிக்கப் பொருளாதாரத்தை நிமிர்த்தி உட்காரவைக்க முடியாது என்பது ரூஸ்வெல்டுக்குத் தெரிந்தது.

ஆனால் முதல் உலகப்போருக்குப்பின் ஐரோப்பிய தேசங்களுக்குள்ளேயே பல அமெரிக்காவுடன் நட்பு-பகை என்று மாறிமாறி உறவாடிக்கொண்டிருந்தன. பிஸினஸ் தான் முக்கியம் என்று முடிவு செய்துவிட்டால் இந்த உறவு சமாச்சாரமெல்லாம் சரிப்படாது என்று அப்போதைய அமெரிக்க அரசு கருதியது.

இப்படி சர்வாதிகார தேசங்களையெல்லாம் கம்யூனிஸ்டு சோவியத்துக்கு எதிரானா மனோபாவத்தை வளர்த்துக் கொண்டிருந்த நேரத்தில், அத்தகைய தேசங்களைத் தேடிப் பொறுக்கி எடுத்து தனது வர்த்தக ஒத்துழைப்பு மூலம் சோவியத்துக்கு எதிரான அத்தேசங்களின் கோபங்களைக் கொம்பு சீவிவிடலாம் என்று கணக்குப் போட்டது அமெரிக்கா.

இது ஒரே கல்லில் ரெண்டு தேங்காய் சமாச்சாரம். பிஸினஸுக்கு பிசினஸும் ஆச்சு. சோவியத்தையும் கொஞ்சம் அடக்கிவைக்க வேண்டும் என்கிற அமெரிக்காவின் நெடுநாளைய ஆசைக்கும் வடிகால். அதுவும் தாம் நேரடியாகச் சம்பந்தப்படாமல் ஜெர்மனியையும் ஜப்பானையும் தூண்டிவிட்டுச் செயல்படுவதால் தனக்கு நேரடியாக வில்லன் இமேஜ் வந்து சேராது.

சரிந்து கிடந்த அமெரிக்கப் பொருளாதாரம் சீர்படத் தொடங்கியது இப்போதுதான். கொஞ்ச நஞ்சமல்ல. பல லட்சக்கணக்கான ராணுவத்தளவாடங்கள் ஏற்றுமதி செய்யப்பட்டன. மூலப்பொருட்களோ கப்பல் கப்பலாக அனுப்பிவைக்கப்பட்டன.

கிட்டத்தட்ட அமெரிக்காவே ஒரு கொல்லன் பட்டறை மாதிரித்தான் இருந்தது. பகிரங்கமாகவும் ரகசியமாகவும் பில்லியன் கணக்கிலான ஆயுதங்கள் உற்பத்தி செய்யப்பட்டன.

ஆனால் அவரே [ஹிட்லர்] கூட நினைத்துப் பார்த்திராத விசயம், அமெரிக்கா மீதான ஜப்பானின் அந்த திடீர் தாக்குதல. பேர்ல துறைமுகத் தாக்குதல். . எப்படிப் பார்த்தாலும் ஜப்பானின் எழுச்சியில் அமெரிக்காவுக்கு பெரும் பங்கு உண்டு. ராணுவ ரீதியில் அந்த தேசம் பெரிய அளவில் வளர்ந்து நிற்க மறைமுகமாக நிறைய பொருளுதவியும் ஆயுத உதவியும் செய்திருந்தது….

ஆனால் இப்படி க்ளோசப்பின் நேசப்பிணைப்பாக இருந்த இரு நாடுகள் ஏன் தாக்கிக்கொண்டன? எப்படியிருந்தாலும் இரண்டாம் உலகப்போரின் நாயகன் ஹிட்லர். அணுகுண்டு போடுவதென்றால் ஜெர்மனி மீது தான் அமெரிக்கா போட்டிருக்கவேண்டும் – ஆனால் ஏன் துக்கனூண்டு ஜப்பான் மீது போட்டது? பொதுநலமா? “குண்டு போட்டது பெருமையா கடமை ப்ரோ”ன்னு உலகநியாயம் பேசினாலும், குண்டுக்குப்பின் இருந்தது, வர்த்தக போட்டி. பொறாமை. ஆற்றாமை. ஏன்? என்ன ஆற்றாமை? ஜப்பானுக்கும் அமெரிக்காவுக்கும் அப்படியென்ன உள்குத்து?

குமுதம் ரிப்போர்ட்டரில் இந்தப் புத்தகம் தொடராக வந்தது என்று நினைக்கிறேன். வாரா வாரம் படிக்க நன்றாக இருந்திருக்கலாம். ஆனால் புத்தகமாக மொத்தமாக படிக்கும்பொழுது, அதுவும் வரலாறு, நன்றாகவா இருக்கும் என்ற எண்ணம் வருவது இயல்பு. நன்றாகத்தான் இருந்தது. மூன்று நாட்களில் படித்து முடித்தேன். அதற்குக் காரணம் பா.ராகவனின் இயல்பான நகைச்சுவை கலந்த நடை.

உதாரணமாக அமெரிக்காவுக்கும் ரஷ்யாவுக்கும் இடையேயான பனிப்போரைப்பற்றிப் பேசும்போது:

 இந்தப் பனிப்போரைப் பற்றி நமது பாடப்புஸ்தகங்கள் சொல்லுகிற விவரங்கள் எல்லாமே மிகவும் தமாஷானவை. கம்யூனிசத்தின் வளர்ச்சியைப் பார்த்து அமெரிக்கா கவலைப்பட்டது; அமெரிக்காவின் ஆயுத பொருளாதாரப் பெருக்கத்தைப் பார்த்து ரஷ்யா வெறுப்படைந்தது; அதனால் பனிப்போர் ஏற்பட்டது என்று ஒரு வாயில் சொல்லிவிட்டுப் போய்விடுகிறார்கள்.

உண்மையில் புரோட்டா மாதிரி லேயர் லேயராக நிறைய சங்கதிகளும் , காரணத்துக்குள் காரணம், அதற்குள் இன்னொரு காரணம் என்று பூரணக்கொழுக்கட்டைகளாக உள்ளே பொதிந்து வைத்த மேட்டர்கள் மிக அதிகம்!

அடிமைகளின் வாழ்க்கை பெரும்பாலும் அடிகளாலானது. கசையடி. நிற்க வைத்து நூறு, நூற்றைம்பது என்று எண்ணிக்கை வரையறுக்கப்பட்ட கசையடிகள். கசையடிக்கு அப்புறம் உழௌப்பி. ஒரு தினத்தில் குறைந்தபட்சம் பதினெட்டு மணிநேரம் அவர்கள் உழைத்தாக வேண்டும். உழைக்கும் நேரமெல்லாம் அவர்களின் வெற்றுடம்பிலிருந்து சொட்டிக்கொணே இருப்பது வியர்வை மட்டுமல்ல; காயங்களிலிருந்து ரத்தமும் கூட.

இப்புத்தகத்தின் மிக முக்கியமான அத்தியாயம் பிரடரிக் டக்ளஸின் அத்தியாயம் தான்.

டக்ளஸின் கலிவித்தாகம் விவரிப்புக்கு அப்பாற்பட்டது. உலகின் தலைசிறந்த இலக்கியங்களுள் ஒன்றாகக் கருதப்படும் அவரது சுயசரிதத்தில் டக்ளஸ் கையாண்டிருக்கும் மொழி, வாசிக்கும் போது பிரமிப்பூட்டக்கூடியது. வாழ்நாளில் ஒருநாள் கூட பள்ளிக்குப் போகாதவர், சேர்ந்தாற்போல் பத்துநிமிடம் உட்கார்ந்து பாடம் என்று எதையுமே படிக்காதவர், வெறும் கேள்வி ஞானமும் சுயமுயற்சியும் மட்டுமே கொண்டு எழுதப்படிக்கக் (அதுவும் பயந்து பயந்து, ரகசியமாக!) கற்றுக்கொண்டவர் அவர்.

அமெரிக்க கண்டுபிடிக்கப்பட்டது, பிறகு குடியேற்றம், தாய்நாட்டுக்கு எதிரான விடுதலைப் புரட்சி, ப்ரஸிடெண்ட்டுகள், அரசியல் கட்சிகள், அடிமை வரலாறு, அவர்களின் புரட்சி, பொருளாதார மேம்பாடு, உற்பத்திப்பெருக்கம், உற்பத்தி செய்த பொருட்களை விற்க சந்தைகள் பிடிப்பது, சந்தைகள் பிடிக்க பல குட்டிகரணங்கள் போடுவது, தில்லிமுல்லு செய்தது, ஆட்சியைக் கலைப்பது, கலைத்த ஆட்சியை தனக்குச் சாதகமாக நேர்செய்வது, பிறகு சந்தையை நிறுவுவது, தீவிரவாதிகளை உருவாக்குவது, பிறகு வேலை முடிந்தபின் அவர்களை நடு ராத்திரியில் வீட்டிற்குள் புகுந்து அழித்தொழிப்பது, பிள்ளையைக் கிள்ளுவது, தொட்டிலை ஆட்டுவது என்று பல திருவிளையாடல்கள் புரியும் அமெரிக்கசிவனின் நடன-பாவங்களைப் பற்றித் தெரிந்து கொள்ள இந்தப் புத்தகத்தைப் படிப்பது அவசியம்.

உலக வரலாற்றில் ஆர்வமிருக்கும் எவரும் கண்டிப்பாகப் படிக்கவேண்டிய புத்தகம்.

மேகத்தில்…

இன்று இந்த அருமையான வீடியோ காணக்கிடைத்தது..

மேகங்கள் கொந்தளிக்கும் கடல் போல இருக்கிறது..
Danial Lopez என்பவர் Canary Island இல் எடுத்த வீடியோ..
நம் கிரகம் எவ்வளவு அழகானது பார்த்தீர்களா?

**

ராக் மியுசிக்கும் வானவியல் ஆராய்ச்சியும் இணைந்தால் என்ன கிடைக்கும்?
இது போன்றதொரு (மற்றொரு) அருமையான வீடியோ கிடைக்கும்..

Cassini அனுப்பிய புகைப்படங்களுக்கு Nine Inch Nails இன் ராக் மியூசிக்..
Enjoy ராஜாக்களா 😉 
(via Discovery News)


**


தெய்வத் திருமகன் படம் பற்றிய விமர்சனம் படித்து விட்டேன் (படம் பார்த்துவிட்டேன் என்று சொல்ல ஆசை தான்!). விமர்சனம் படித்த வரைக்கும் இது I AM SAM இன் காப்பி போலத் தெரியுது.. கிரெடிட் ஏதும் போட்டார்களா? இல்ல கமல் பண்ற மாதிரி வெறும் காப்பி மட்டும் தானா? (முன்னாடி கமல் மட்டும் தான் செய்வாரு!)

**

இரண்டு முக்கியமான (அட்லீஸ்ட் என்னக்கு அப்படி தோணிச்சு!) புத்தகங்கள் படித்து முடித்தேன்:


1. Pour Your Heart Into It: How Starbucks Built a Company One Cup at a Time
2. The Facebook Effect

பிசினஸ் ஆரம்பிக்க வேண்டும் என்கிற கனவோடு இருக்கும் அனைவரும் கண்டிப்பாக படிக்க வேண்டிய புத்தகங்கள். புத்தகங்களைப் பற்றி இன்னொரு முறை விரிவாக எழுத வேண்டும். இப்பொழுது ஒரு சில விஷயங்கள்.

Howard Schultz தான் Starbucks பற்றிய புத்தகத்தை எழுதியவர். அவர் தான் Starbucks இன் CEO கூட! ஆச்சரியமான விசயம் என்னவென்றால் Howard Schultz Starbucksஐ ஆரம்பிக்கவில்லை. Starbucks முன்னமே இயங்கிக் கொண்டிருந்தது. ஆனால் இப்படி காஃபி விற்கும் கம்பெனியாக அல்ல – காஃபி கொட்டை விற்கும் கம்பெனியாக! Starbucks ஐ ஆரம்பித்தவர்கள் மூவர்! ஒருவர் ஆங்கியல் ஆசிரியர் (Jerry Baldwin). ஒருவர் வரலாற்று ஆசிரியர் (Zev Seigl). ஒருவர் எழுத்தாளர் (Gordon Bowker). ஆனால் மூவருமே காஃபியின் மேல் தீராத ஆசை கொண்டவர்கள்! 

இவர்களோடு 1982ஆம் வருடம் ரீடைலைக் கவனித்துக்கொள்ள வந்தவர் தான் Schultz. மிலனுக்கு ஒரு பிஸினஸ் ட்ரிப் அடித்தவுடன் அவரது மனம் துள்ளிக்குதிக்கிறது! மிலனில் மக்கள் ஆசை ஆசையாக தெருமுனைகளில் இருக்கும் காஃபி பார்களில் காஃபியை சுவைத்துக்கொண்டிருப்பதைக் காண்கிறார். இதையே நாம் அமெரிக்காவில் செய்தால் என்ன என்கிற எண்ணம் அவருக்கு உதித்தது. ஆனால் Jerry இதற்கு ஒத்துக்கொள்ளவில்லை. Jerry ஐ ஒத்துக்கொள்ள வைக்க படாத பாடு பட்டும் பிரயோசனம் இல்லாதாதல் தானே தனியாக கடை போடுவது என்று முடிவெடுத்தார் Schultz. அப்படி ஆரம்பிக்கப்பட்டதுதான்  Il Giornale. பெயரே வித்தியாசமாக இருக்கிறதல்லவா?! அப்புறம் Schultz Starbucksஐயே வாங்கியது வேறு கதை!


*

zuckerbergஐப் பற்றி நான் ஒன்றும் பெரியதாகச் சொல்லத் தேவையில்லை. இந்தப் புத்தகம் பற்றியும் நான் சொல்லத் தேவையில்லை. இது படமாக வந்து விட்டது. Social Network.


அதாவது உலகம் முழுதும் மொத்தம் 400 பில்லியன் டாலர் வருமானம் ஆண்டொன்றுக்கு விளம்பரங்கள் மூலம் கிடைக்கின்றன. இவை டீவி, பேப்பர், இன்டர்னெட் போன்ற எல்லா ஊடகங்கள் வாயிலாகவும் கிடைக்கிறது. இதில் ஒரு சொற்பப் பகுதியே இன்டெர்னெட்டிலிருந்து கிடைக்கிறது. அதன் பெரும்பகுதி கூகிள் இன்று வரை எடுத்துக்கொண்டிருந்தது. AdSense மூலமாக. கூகிளின் மிகப்பெரிய பலவீனம்: செர்ச்.


விளம்பரத்துறையில் இது பலவீனம் தான். ஏனென்றால் விளம்பரம் மக்களுக்கு எப்படிக்கொடுக்கமுடியும்? அவர்கள் செர்ச்சில் ஏதாவது ஒரு வார்த்தை அடித்தப்பிறகு தானே? ஆனால் நீங்கள் செர்ச் செய்ய வரும் முன்னரே 80 சதவிகிதம் உங்களுக்கு என்ன தேடுகிறோம் என்பது தெரிந்து விடும். எடுத்துக்காட்டுக்கு: SAMSUNG LED TV. அதை வைத்துக்கொண்டு தான் அவர்களால் விளம்பரம் கொடுக்கமுடியும்.


ஆனால் 750 மில்லியன் நபர்களை உறுப்பினராகக் கொண்டிருக்கும் facebookக்கு உங்களுக்கு என்ன வேண்டும் என்பது தெரியும். உங்களைப் பற்றி நன்றாகத் தெரியும். உங்கள் பெயர் என்ன, பிறந்த ஊர் என்ன, நீங்கள் படித்த கல்லூரியின் பெயர் என்ன, உங்கள் அப்பா யார், அம்மா யார், உங்கள் பிறந்த தேதி என்ன, உங்கள் நண்பர்கள் யார், அவர்களுக்கு என்ன பிடிக்கும், பிடிக்காது, என்ன புத்தகங்கள் படிப்பார்கள் போன்ற எல்லா விசயங்களும் தெரியும்!


இப்பொழுது சொல்லுங்கள் யார் அதிக வருவாய் ஈட்ட முடியும்?

இப்பொழுது தெரிகிறதா கூகிள் ஏன் தலைகீழாய் நின்று தண்ணி குடிக்கப் பாக்குதுன்னு?


ஆனா எனக்கென்னவோ டூ லேட்டுங்கிற மாதிரி படுது! Circleஐயும் Hangoutஐயும் கொண்டுவருவதற்கு facebook க்கு எவ்வளவ நேரம் ஆகப்போகுது?


*



2010 இல் நான் படித்த புத்தகங்கள்

1. Richard Dawkins எழுதிய The Greatest Show On Earth
2. Brain Greene எழுதிய The Elegant Universe
3. Michio Kaku எழுதிய Parallel Worlds
4. Jerry A Coyne எழுதிய Why Evolution Is True
5. Jarred Diamond எழுதிய Guns,Germs and Steel
6. Richard Dawkins எழுதிய The Blind Watchmaker
7. Carl Zimmer எழுதிய Evolution – The Triumph of an Idea
8. Richard P Feynman எழுதிய கட்டுரைகளின் தொகுப்பான The Pleasure Of Finding Things Out
9. Richard P Feynman எழுதிய கட்டுரைகளின் தொகுப்பான Surely You’re Joking, Mr. Feynman
10. The Beermat Entrepreneur

என் (மென்!) துறை சார்ந்த புத்தகங்கள்:
1. Head First Design Patterns
2. The Art Of Agile Development
3. Brownfield Application Development
4. Succeeding with Agile – Software Development Using Scrum
5. C# In Depth
6.Agile Project Management With Scrum
7. Patterns Of Enterprise Application Architecture (படித்தேன்; படிக்கிறேன்; படிப்பேன்! ;))

மதம் – குழந்தைகளின் மீதான வன்முறை

The Indian Clerk என்கிற நாவலைப் படித்துக் கொண்டிருக்கிறேன். David Leavitt எழுதியது. இப்பொழுதெல்லாம் பெரும்பாலும் Non-Fiction வகையான புத்தகங்கள் படிப்பதால் நாவல் படிப்பதற்குப் போதுமான நேரம் கிடைப்பதில்லை. நாவல் படிப்பதிலும் எனக்கு ஆர்வம் வெகுவாகக் குறைந்துவிட்டது. (மீண்டும் ஆர்வத்தைத் தூண்டும் விதத்தில் ஏதாவது ஒரு அற்புதமான நாவல் ஒன்றைப் பரிந்துரை செய்யுங்களேன்!)

நான் வாரம் ஒரு புத்தகம் படிக்கிறேன் என்று வைத்துக்கொண்டால் என் வாழ்நாள் முழுவதிலும் நான் சில ஆயிரம் புத்தகங்கள் மட்டுமே படித்திருப்பேன் – இது உலகத்தில் கிடைக்கப்பெறும் புத்தகங்களின் எண்ணிக்கையில் சொற்பம் தான். தந்திரம் என்னவென்றால் – படிக்கவேண்டிய ப்த்தகங்களைத் தெரிந்து வைத்திருப்பதே! (The trick is to know which books to read!)
– கார்ல் சாகன்

நூலகத்தில் இந்த நாவலைப் பார்த்த பொழுதே நினைத்தேன் இது அவரைப் பற்றியதாகத்தான் இருக்கவேண்டும் என்று. நான் நினைத்தது சரியாகப் போயிற்று. இது அவரைப்பற்றிய நாவலே தான்!

யார் அவர்? யூகியுங்கள் பார்ப்போம். (Clue – நாவலின் பெயர் The Indian Clerk :))

இந்த நாவல் கணித மேதை ராமனுஜர் பற்றியது ஆனால் இங்கிலாந்தின் கணிதமேதையான G.H.Hardyஐ சுற்றிப் பிண்ணப்பட்டுள்ளது. வெறும் ஐம்பது பக்கங்கள் மட்டுமே படித்துள்ள நிலையில் நாவலைப் பற்றி பெரிதாகச் சொல்வதற்கு ஒன்றுமில்லை!

நாவலில் வரும் ஒரு கேள்வி என்னைக் கவர்ந்தது:

ஒரு ஊரில் உள்ள ஒரு பார்பர் அந்த ஊரில் தானே முகச்சவரம் செய்து கொள்ளாத எல்லோருக்கும் முகச்சவரம் செய்துவிடுகிறார். அப்படியென்றால் அவருக்கு அவரே முகச்சவரம் செய்துகொள்வாரா?

***

சமீபத்தில் நான் படித்துமுடித்த வேறொரு புத்தகம் Christopher Hitchens எழுதிய god is not great. ஹிட்சன்ஸ் ஒரு அமெரிக்கப் பத்திரிக்கையாளர். ஒரு தேர்ந்த debater. யூ டியூபில் அவரது debate வீடியோக்களைத் தேடிப்பாருங்கள். அவருக்கு இருப்பது மூளையா இல்லை என்சைக்லோப்பீடியாவா என்று தெரியவில்லை. எப்படி ரஷ்யாவின் மூலையில் நடந்த சம்பவங்களைக் கூட சரியான சந்தர்ப்பத்தில் எடுத்து விட முடிகிறது? அவருக்கு எதிராக வாதம் செய்பவர் என்றைக்குமே பாவம் தான் – ஹிட்சன்ஸ் முன்னால் அவர் முட்டாளாகத்தான் தெரிவார்.

Richard Dawkins உங்களுக்குத் தெரிந்திருக்கும் என்று நினைக்கிறேன். அவர் ஒரு விஞ்ஞானி. இன்று உலகத்தில் இருக்கும் மிகச் சிறந்த கடவுள் மறுப்பாளர்களில் மிக முக்கியமானவர். அவரது எல்லாப் புத்தகங்களுமே அற்புதமானவை. (விஜய் டீவியின் மன்மதன் அம்பு நிகழ்ச்சியில் கோபிநாத்திடம் கமலஹாசன் தான் தற்பொழுது படித்துக்கொண்டிருக்கும் புத்தகம் எனச் சொன்னது Richard Dawkins எழுதிய The Greatest Show on Earth என்கிற புத்தகம் தான். கமலஹாசன் ஆனால் எதோ வேறு ஒரு பெயர் சொன்னார்!) ஆரம்பமாக The God Delusion என்கிற அவரது புத்தகத்தை நான் பரிந்துரை செய்வேன். (தற்பொழுது தி.க.வினர் இந்தப் புத்தகத்தை தமிழில் மொழிபெயர்த்திருக்கிறார்கள் என்று கேள்விப்பட்டேன்). பிறகு The Blind Watchmaker.

Richard Dawkins தனது இந்த வருடத்தின் ஹீரோ Christopher Hitchens தான் என்று சொல்லியிருக்கிறார்.

God is not great பலவகையில் ஒரு அருமையான புத்தகம். பொறுமையாக படித்தீர்கள் என்றால் இது ஒரு விழிப்புணர்ச்சியைக் கொடுக்கும். (நீங்கள் விழித்துக்கொள்ளத் தயாராக இருக்கவேண்டும்! தூங்குவது போல நடிக்கக் கூடாது!)

மதம் என்பது குழந்தைகளின் மீதான வன்முறை

என்று சொல்கிறார் Hitchens.

பதினெட்டு வயதுக்கு அப்புறம், குழந்தைகளுக்கு நாம் நம்முடைய மதத்தைப் பற்றிச் சொல்லிக்கொடுத்திருந்தோம் என்றால் இந்த உலகம் முற்றிலுமாக வேறுமாதிரி இருந்திருக்கும்.

எப்படி ஐய்யா மதம் குழந்தைகளின் மீதான் வன்முறையாகும்?

ஒரு எடுத்துக்காட்டுக்கு நீங்கள் ஒரு இந்து. நீங்கள் வசிக்கும் வீட்டுக்குப் பக்கத்தில் ஒரு கிறிஸ்தவர் வசிக்கிறார் என்று வைத்துக்கொள்ளுங்கள். நீங்கள் உங்கள் குழந்தைக்கு தினமும் வேத பாடங்கள் சொல்லிக்கொடுத்து ஹிந்துவாக வளர்க்கிறீர்கள். (அல்லது அப்படியேதும் ப்ரத்யேகமாக சொல்லிக்கொடுக்காவிடிலும் நீங்கள் கும்பிடும் கடவுளையே உங்கள் குழந்தைக்கு நீங்கள் பரிந்துரை செய்கிறீர்கள்)ஆனால் உங்கள் குழந்தை பக்கத்திலிருக்கும் கிறிஸ்தவரின் வீட்டுக்கு சென்று பழகுவதால் அவரது மதத்தால் ஈர்க்கப்பட்டு கிறிஸ்துவப் பழக்கங்களை கடைப்பிடிக்க ஆரம்பிக்கிறது. பைபிள் தான் படிக்கிறது. கிறிஸ்துவனாக மாறப்போகிறேன் என்று சொல்கிறது.

அப்பொழுது நீங்கள் என்ன சொல்வீர்கள்? ஐயையோ பாழாப்போன பக்கத்து வீட்டுக்காரன் என் குழந்தையின் பச்ச மனச கலச்சு இல்லாதது பொல்லாததையெல்லாம் சொல்லிக்கொடுத்திருக்கானே அப்படீன்னு புலம்ப மாட்டீர்கள்?!

பக்கத்து வீட்டுக்காரன் செய்வது உங்கள் குழந்தையின் மீதான வன்முறை என்றால், நீங்கள் செய்வது?!

***

நான் ஆ·பீஸிலிருந்து வரும் பொழுது ரயிலில் என்னுடன் வேலை பார்க்கும் ஒருவரிடம் பேசிக்கொண்டு வந்தேன். அப்பொழுது அவர் தன் இரண்டு வயது மகளை ஒரு பள்ளியில் சேர்த்திருப்பதாகவும். அந்தப் பள்ளியில் இடம் கிடைக்கவேண்டும் என்றால் அட்மிஷன் தெதிக்கு முந்தின நாள் இரவு முழுவதும் வரிசையில் நிற்க வேண்டும் என்று சொன்னார். அப்படியென்ன அந்த பள்ளியில் விஷேசம் என்றேன். ஸ்லோகம் எல்லாம் சொல்லித்தருகிறார்கள். சாப்பாட்டுக்கு முன்னால் சாமி கும்பிடச் சொல்லிக்கொடுக்கிறார்கள் என்று அடுக்கிக்கொண்டே சென்றார்.

அத்துடன் நில்லாது என்னையும் என் மகளை அந்த பள்ளியில் சேர்த்துவிடுமாறு சொன்னார். நான் எனக்கு கடவுள் நம்பிக்கையில்லை என்றேன். திடுக்கிட்டுப் பார்த்தவர் ஒருவாரு சமாளித்து பேச்சைத் தொடர்ந்தார். பிறகு சைடு கேப்பில “இப்போ நீங்க கடவுள் நம்பிக்கை இல்லைன்னு சொல்றீங்க நான் என்ன உங்களுக்கு மதிப்பு கொடுக்காமலா போயிடப்போறேன்” என்றார்.

சட்டென்று நான் “இப்போ நீங்க கடவுள் இருக்கார்ன்னு சொல்றீங்க நான் என்ன உங்கள மதிக்காமலா போயிட்டேன்” என்றேன். அத்துடன் அவர் கப்சிப்.

சில நூற்றாண்டுகளுக்கு முன் ஹோமோ செக்ஸ¤வல்ஸ் எப்படி வெளிப்படையாக தாங்கள் ஹோமோ செக்ஸ¤வல்ஸ் என்று சொல்லிக்கொள்ள இயலவில்லையோ அதே நிலையில் இன்று கடவுள் மறுப்பாளர்கள் இருக்கிறார்கள்

என்று யாரோ சொல்லியிருந்தார்கள். மிகச் சரி.

***

நீங்கள் ஹாயாக பீச்சில் குளித்துக்கொண்டிருக்கிறீர். திடுமென சுனாமி வந்துவிடுகிறது. நீங்கள் உங்களைக் காத்துக்கொள்ள ஓடுகிறீர்கள். நீங்களாகவே ஓடி தப்பிக்க முடியாது. உங்களுக்கு இரண்டு சாய்ஸ் இருக்கிறது. உங்களின் இஷ்ட தெய்வத்தின் படம் ஒன்று இருக்கிறது. பக்கத்தில் அறிவியலின் கண்டுபிடிப்பான புத்தம் புதிதாக அதிவேகமாகச் செல்லும் கார் ஒன்று இருக்கிறது. நீங்கள் என்ன செய்வீர்கள்?

1. கடவுளே என்னைக் காப்பாற்று. சுனாமியை நிறுத்திவிடு என்று அந்தப் படத்தைக் கும்பிடுவீர்களா? (ஐயப்பன் கோவிலில் சமீபத்தில் நடந்த சம்பவத்தை நினைவில் கொள்க!)
2. அந்தக் காரில் ஏறிக்கொண்டு அறிவியலின் துணைகொண்டு தப்பிப்பீர்களா?

(அந்த அறிவியலை மனிதன் கண்டுபிடிக்க காரணமாக இருந்ததே கடவுள் தானே என்கிற மிக மொன்னையான பதிலைத் தரக்கூடாது!)

***

சில வருடங்களுக்கு முன் ஒரு பார்ட்டிக்குச் சென்றிருந்த பொழுது – சாப்பிட்டுக்கொண்டிருந்த பொழுது – ஒரு ஆந்திராக்காரர் தமிழர்களைப் பற்றி கமெண்ட் ஒன்று அடித்துக்கொண்டிருந்தார். “கல்யாணப்பத்திரிக்கையில் கட்சித் தலைவர்களின் படங்களைப் போய் போடுகிறார்கள் இவர்கள். அதெப்படி கல்யாணப் பத்திரிக்கையில் கூட கட்சித் தலைவர்களின் படங்களைப் போடுகிறீர்கள்? கணேஷ் ஷிவாவைப் போன்ற கடவுள்களின் படங்களைத்தானே போடவேண்டும்?!” என்று நக்கலாகச் சிரித்தார்.

அங்கிருந்த ஒரு கடவுள் மறுப்பாளர் “கட்சித் தலைவர்களின் படங்களைப் போட்டாலாவது அவர்கள் கல்யாணத்திற்கு வருவதற்கு வாய்ப்பிருக்கிறது!” என்று படக்கென்று சொன்னார். எல்லோரும் கப்சிப்.

முற்றிலும் உண்மை. 🙂

***

300. 2 States

ரொம்ப நாள் ஆச்சு நான் நாவலோ கதையோ சிறுகதையோ படித்து. புதினத்தைக் கொஞ்ச காலம் ஒதுக்கிவைத்துவிட்டு புதினம் அல்லாத புத்தகங்களைப் படித்துக்கொண்டிருக்கிறேன். இதற்கு முக்கிய காரணம் கார்ல் சாகன் என்கிற விஞ்ஞானி. கிட்டத்தட்ட நம்ம சுஜாதா மாதிரி. என் நண்பர் சஜித் எனக்கு கார்ல் சாகனின் த காஸ்மோஸ் (ப்ரபஞ்சம்) என்கிற வீடியோவைக் கொடுத்தார். ப்ரபஞ்சத்தைப் பற்றிய எளிய அறிமுகம். சுஜாதா எழுதிய ஆழ்வார்கள் ஓர் எளிய அறிமுகம் போல.

இது புத்தகமாகவும் வந்தது. கண்டிப்பாகத் தேடிப்பிடித்து படியுங்கள். வீடியோ கிடைத்தாலும் பாருங்கள். உங்கள் குழந்தைகளுக்குக் காண்பியுங்கள். படிக்கச் சொல்லுங்கள்.

காஸ்மோஸ் பற்றியும் நான் படித்த மற்ற புத்தகங்களைப் பற்றியும் மற்றொரு நாள் எழுதுகிறேன் இப்பொழுது நான் சமீபத்தில் படித்த சேட்டன் பகத் எழுதிய 2 states பற்றிப் பார்ப்போம். சேட்டன் பகத்தின் The three mistakes of my life பற்றி நான் ஏற்கனவே எழுதியிருக்கிறேன். மேலும் 3 இடியட்ஸ் பிரச்சனைக்குப்பிறகு சேட்டன் பகத் உலக அளவில் மிகவும் பிரபலமாகியிருக்கிறார்.

மெதுவாக ஆங்கில நாவல்கள் படிக்கத்துவங்கும் கார்பரேட் இளைஞர்கள் பெரும்பாலும் சேட்டன் பகத்தின் எல்லா புத்தகங்களையும் படித்திருக்கின்றனர். 3 இடியட்ஸ் பிரச்சனைக்குப்பிறகு அவர்கள் சேட்டன் பகத் வஞ்சிக்கப்பட்டதாகவே நினைக்கின்றனர். எனக்கென்னவோ அப்படித் தெரியவில்லை சேட்டன் பகத் ஒப்பந்தந்தத்தில் கையெழுத்துப்போட்டிருக்கிறார்.

ஒப்பந்தம் இங்கே இருக்கிறது. முழு ரைட்ஸ¤ம் கொடுத்திருக்கிறார். நிபந்தனையற்ற ரைட்ஸ். படிக்காமல் கையெழுத்துப்போட்டாரா?

2 states நாவல் நான் வேலை செய்யும் அலுவலகத்தில் நான் மேற்குறிப்பிட்டது போன்ற புதிதாகச் சேர்ந்த ஒரு இளைஞர் படிக்கச்சொல்லி எனக்கு கொடுத்தார். நான் அவருக்கு பதிலுக்கு shantaram கொடுத்தேன். Shantaram is a tough read.

சிங்கப்பூரிலிருந்து பாரீஸ் வரும் வழியில் இரண்டே மணிநேரத்தில் இந்த நாவலைப் படித்து முடித்தேன். நாவல் என்று சொல்லுவது சரியாக இருக்காது; சற்றே பெரிய கதை என்று சொல்லலாம். அஸ் யூஸ்வல் இதும் ஒரு feel good, அதென்ன வார்த்தை, ம்ம்ம்ம்…பைங்கிளிக் கதை. ஸீரோ டிகிரியைப் பற்றி நான் எழுதிய விமர்சனத்தைப் படித்து விட்டு கடுங்கோபம் கொண்ட ஒருவர் என்னுடைய நசீர் கதையை பைங்கிளிக்கதை என்றுதான் ஏளனமாகக் குறிப்பிட்டார்! 😦

ஹீரோ பஞ்சாபி. ஹீரோயின் தமிழ் பிராமின். இருவரும் ஐஐஎம்மில் படிக்கின்றனர். இருவரும் காதல் வருகிறது. செக்ஸ் வைத்துக்கொள்கின்றனர். திருமணம் பற்றி யோசித்து விட்டு இரு வீட்டாரின் சம்மதத்தோடுதான் திருமணம் என்று முடிவு செய்கின்றனர். பிறகு ஹீரோ ஹீரோயினின் வீட்டுக்கு சென்று அனைவரையும் தன்பால் ஈர்க்கிறார். ஹீரோயினும் அ·தே செய்கிறார். நடுவில் மேலும் செக்ஸ் வைத்துக்கொள்கின்றனர். பிறகு கடைசியில் திருமணம் முடிகிறது.

ஒரு பாலிவுட் மசாலாவுக்குத் தேவையான அனைத்தும் இதில் இருக்கிறது. தமிழில் சூர்யா ஜோதிகா நடித்த படம் ஒன்று இதே போல் ஏற்கனவே பத்து வருடங்களுக்கு முன் வந்துவிட்டது. என்ன அவர்கள் ஐஐஎம்மில் படிக்கவில்லை. திருமணத்துக்கு முன் செக்ஸ் வைத்துக்கொள்ளவில்லை. அவ்வளவே.

நாவலில் தமிழ்நாடு பற்றியும் தமிழ்நாட்டு மக்களைப் பற்றியும் ஏகத்துக்கும் எழுதியிருக்கிறார் சேட்டன் பகத். இதோ சில:

The first thing I noticed, excuse my shallowness was that almost ninety percent of the people were dark complexioned. Of these ninety percent, eighty percent had dabbed talcum that gave them a grey skin tone. I understood why Fair & Lovely was invented.

Most women at the conveyor belt looked like Ananya’s mother; I couldn’t tell one from the other. They all wore tones of gold,

 First, the sign in every shop was in Tamil. The Tamil font resembles those optical illusion puzzles that give you a headache if you stare at them long enough. Tamil women, all of them, wear flowers in their hair. Tamil men don’t believe in pants and wear lungis even in shopping districts. The city is filled with film posters. The heroes’ pictures make you feel even your uncles can be movie stars. The heroes are fat, balding, have thick moustaches and the heroine next to them is a ravishing beauty. Maybe my mother had a point in saying that Tamil women have a thing for North Indian men.

The driver stopped the auto. He craned his neck out of the auto and folded his hands. ‘What?’ I gestured. ‘Thalaivar,’ he said, pointing to the poster. I looked out. The poster was for a movie called Padayappa. I saw the actors and recognised only one. ‘Rajnikant?’ The auto driver broke into a huge grin.

 Any impressions of Tamil men being timid (influenced by Ananya’s father) evaporated as I felt a driver tap my back

Be careful, your building is vegetarian. No alcohol also.’ ‘Really?’ ‘Yes, people here are like that. For them, anything fun comes with guilt,’ he said as the lift doors shut

The Tamil sense of humour, if there is any, is really an acquired taste.

‘ ‘One tip, never leave before your boss,’ he said and winked at me. He laughed, and I didn’t find it funny at all. I want to see what a Tamil joke book looks like.

Tamilians love to irritate non-Tamil speakers by speaking only in Tamil in front of them. This is the only silent rebellion in their otherwise repressed, docile personality.

பாவம் ஜெயராம் வட நாட்டவராகப் பிறந்திருக்க வேண்டும்.

உங்களுக்கு ஒரு விளையாட்டு : Observation

உங்களுக்கு ஒரு பரிட்சை வைக்கிறேன். கிழே ஒரு வீடியோவுக்கான லிங்க் இருக்கிறது. அந்த வீடியோவில் நிறையப் பேர் பாஸ்கெட் பால் வைத்து விளையாடிக்கொண்டிருப்பார்கள். சரியாகச் சொல்லப்போனால் பாஸ்கட் பாலை ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு பாஸ் செய்து கொண்டிருப்பார்கள். இந்த வீடியோ மொத்தம் 25 வினாடிகள் தான் ஓடும். அதற்குள்ளாக நீங்கள் ஒரு விசயத்தைக் கவனித்து கணக்கிட வேண்டும். என்னவென்றால் எத்தனைமுறை பந்து ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு பாஸ் செய்யப்பட்டது என்பது தான் அது. Just count howmany times the ball is passed. ரெடியா?இது உங்கள் கவனத்தைச் சோதிக்கும் வீடியோ. வீடியோ இங்கே இருக்கிறது.
1.2.3……25..26..27
பார்க்காமல் கீழே இருப்பதைப் படிக்காதீர்கள். ஒரு 25 வினாடி செலவிட்டால் தான் என்ன? பிஸியா? ஓகே. பிறகு எதற்கு பதிவு படிக்க வந்தீர்கள்? போங்க சார் போய் பாத்துட்டு வாங்க!
பாத்தாச்சா?

இப்பொழுது பதில் சொல்லுங்கள்:
1. மொத்தம் எத்தனை முறை பந்து பாஸ் செய்யப்பட்டது?
2. ஓகே. வீடியோவின் நடுவில் ஒரு கொரில்லா வந்ததே பார்த்தீர்களா?

பார்த்தவர்கள் நாம நெக்ஸ்ட் மீட் பண்ணலாம். பாக்காதவர்கள் மட்டும் நியாயமாக பின்னூட்டம் இடுங்கள் ப்ளீஸ்.

ஓகே இப்பொழுது விசயத்துக்கு வருவோம். illinoisஇல் வேளை பார்த்துவரும் புரபொஸர் Daniel J Simons என்பவர் கண்களின் சாட்சியை எவ்வளவு தூரம் நம்பலாம் என்பதை ஆராய்ச்சி செய்வதற்காக உபயோகித்த எடுத்துக்காட்டு தான் இது. இந்த விளையாட்டில் எத்தனை முறை பந்துகள் பாஸ் செய்யப்பட்டது என்பதைக் கணக்கிட வந்தவர்கள் பெரும்பாலோனோர் இளம் வயதினர் தான். அவர்கள் எல்லோரும் விளையாட்டைப் 25 வினாடிகள் பார்த்து முடித்தவுடன் அவர்களிடம் “நீங்கள் எத்தனை பேர் கொரில்லாவைப் பார்த்தீர்கள்?” என்று கேட்கப்பட்டதாம். நிறையப் பேர் கொரில்லா வந்ததை கவனித்திருக்கவில்லை என்பது தான் உண்மை. இத்தனைக்கும் இந்த 25 வினாடி விளையாட்டில் கிட்டத்தட்ட 9 வினாடிகள் (நிகிழ்ச்சி நடந்த நேரத்தில் மூன்றில் ஒரு பங்குக்கும் மேல்!) கொரில்லா சூட்டில் ஒருவர் வந்து நின்று என்னைப்பார் என்னைப்பார் என்று கை காட்டியும் நிறையப்பேர் பார்த்திருக்கவில்லையாம்!

இப்பொழுது வீடியோவில் பார்க்கும் பொழுது அப்பட்டமாக கொரில்லா வருவது தெரிகிறது. ஆனால் கொரில்லா வரும் என்பது எனக்கு முன்னமே தெரியும். (Richard Dawkins எழுதிய The Greatest Show On Earthஇல் இதைப் படித்துவிட்டுத் தான் இந்த வீடியோவைத் தேடிக்கண்டுபிடித்தேன்). உங்களுக்கு முன்னமே தெரியாதல்லவா?

இந்த லட்சனத்தில் இருக்கிறது கண்களின் சாட்சி. அதற்காக கண்கள் காண்பது எதையும் நம்பக்கூடாது என்பதல்ல கருத்து. வித்தியாசம் இருக்கிறது. இவன் தான் கொலை செய்தான் நான் பார்த்தேன் என்பதற்கும் ஒரு எக்ஸ் ரே ரிப்போர்டைப் பார்த்தோ அல்லது Large Hadron Colliderலிருந்து எடுக்கப்பட்ட ரிப்போர்ட்டைப் பார்த்தோ புரிந்துகொள்வதற்கும் நிறைய வித்தியாசங்கள் இருக்கின்றன தானே?

பாத்ததும் படித்ததும்

(அரவிந்த அடிகா, விகாஷ் ஸவரூப், ஸ்லம்டாக், எஸ்.ராமகிருஷ்ணன் மற்றும் படங்கள்)

அரவிந்த் அடிகா வைட் டைகருக்கு அப்புறம் Between The Assasinations என்றொரு சிறுகதைத் தொகுப்பு வெளியிட்டிருக்கிறார். பாப்புலரில் இன்று பார்த்தேன். தொகுப்பு பாப்புலராகிவிட்டதா என்று தெரியவில்லை. தற்பொழுது படிப்பதற்கு நிறைய இருப்பதால் இப்போதைக்கு வாங்கவேண்டாம் என்று நினைத்திருக்கிறேன். சல்மான்ருஷ்டிக்கு பிறகு இந்திய ஆங்கில எழுத்து மிகவும் வளர்ச்சி அடைந்திருக்கிறது என்று தான் சொல்லவேண்டும். கிரண் தேசாய், அருந்ததி ராய், விக்ரம் செத், அரவிந்த் அடிகா, அமிதவ் கோஷ் போல நிறைய பேர் வெளிச்சத்துக்கு வந்திருக்கின்றனர். புக்கர் பரிசை வரிசையாக தட்டிச்செல்கிறார்கள். இந்த வரிசையில் மேலும் ஒருவர்: ஸ்லம் டாக் மில்லியனரை எழுதிய விகாஷ் ஸ்வரூப். இன்று கூட சிங்கப்பூரிலிருந்த வெளிவரும் இந்திய வாரப்பத்திரிக்கையான Tablaவில் கூட இவர்களைப் பற்றிய கட்டுரை வந்திருந்தது. பிரிட்டிஷ் எப்படி வளைச்சு வளைச்சு அட்டாக் பண்ணி காலணிய ஆதிக்கம் பண்ணாங்களோ அதே போல இந்தியர்கள் சகட்டுமேனிக்கு எல்லாத் துறைகளிலும் புகுந்து வெளுத்துக் கட்டுறாங்க. அதுவும் எழுத்துத் துறையில் முக்கிய இடம் பிடிப்பது என்பது மிக நன்று.

தற்பொழுது படித்துக்கொண்டிருக்கும் Three Cups Of Teaக்கு அப்புறம் Tagging என்றொரு புத்தகத்தை எடுத்து வைத்திருக்கிறேன். Fiction படிப்பதை கொஞ்ச நாளைக்கு தள்ளி வைக்கலாம் என்றிருக்கிறேன், Michio Kaku எழுதிய புத்தகங்களின் மேல் ஒரு கண் இருக்கிறது. மேலும் அயன் ரான்ட்-இன் Atlas Shrugged படிக்கவேண்டும் என்றும் நினைத்திருக்க்றேன். பார்ப்போம்.

*

என் அண்ணன் நெடுங்குருதி ஒரு வழியாக படித்துமுடித்து விட்டேன் என்று சொன்னார். நெடுங்குருதி பற்றி ஒரு நெடும் பதிவு தான் போடவேண்டும்,. சிங்கப்பூருக்கு வந்த பொழுது இங்கே நூலகத்தில் மெம்பராக சேர்ந்த பொழுது முதன் முதலாக இரண்டு புத்தங்கள் எடுத்தேன். Code To Zero மற்றும் நெடுங்குருதி. கடைசி அறுபது எழுபது பக்கங்கள் கொஞ்சம் தேவையில்லை என்று ஒதுக்கிவிட்டால் நெடுங்குருதி தமிழில் ஒரு மிக முக்கியமான நாவல். ராமகிருஷ்ணனின் அழுங்காத அலட்டல் இல்லாத எழுத்து நடை எனக்கு மிகவும் புதிதாக இருந்தது. அவருடைய சிந்தனையும் உவமைகளும் மிகவும் புதிதாக இருந்தது. ராமகிருஷ்ணன் மிக நுனுக்கமான பார்வை கொண்டவர். வெயிலையும் எறுப்புகளையும் அவர் பின் தொடர்ந்து செல்வது எனக்கு ஆச்சரியமாக இருந்தது. நெடுங்குருதியில் வரும் அந்த சிறு பையன் கண்டிப்பாக அவராகத்தான் இருக்கவேண்டும். அனுபவிக்காத ஒருத்தரால் எழுதப்பட்ட நாவல் இல்லை இது. அந்த நாவலின் நான் வாங்கிய மறுபதிப்பில் ராமகிருஷ்ணன் முன்னுரை எழுதியிருப்பார் அது கூட அவ்வளவு அழகாக இருக்கும். மீண்டும் ஒரு முறை படிக்கவேண்டும்.

ஆனால் அவரது யாமம் படித்தபொழுது எனக்கு ஏமாற்றமே மிஞ்சியது. ஏன்? ஏன் ராமகிருஷ்ணன் இது போன்றதொரு நாவல் எழுதினார் என்று நான் நிறைய நாட்கள் எனக்குள்ளும் என் நண்பர் ராஜாராமிடமும் கேட்டுக்கொண்டிருந்தேன். அவருக்கும் பதில் தெரிந்திருக்கவில்லை. கடைசியாக ராமகிருஷ்ணனை சிங்கப்பூரில் சந்தித்தபொழுது அந்தக் கேள்வியை நான் கேட்டேவிட்டேன். நீங்கள் இந்த நாவல் எழுத வேண்டிய கட்டாயம் என்ன என்று. சிரித்த ராமகிருஷ்ணன் சொன்ன பதில் எனக்கு ஞாபகம் இல்லை. இந்தக் கேள்வியை அவரிடம் கேட்டு கண்டிப்பாக எட்டு மாதங்கள் இருக்கும். யாமம் படித்து ஒரு வருடம் இருக்கும். கண்டிப்பாக மீண்டும் யாமம் படிக்கும் எண்ணமில்லை. adultryஐ ராமகிருஷ்ணன் போன்ற எழுத்தாளர்கள் எழுதினால் எனக்கு பிடிப்பதில்லை. பாலகுமாரன் எனக்கு பிடிக்காமல் போனதற்கு அது தான் காரணம்.

*

ஸ்லம்டாக் மில்லியனர் கொஞ்ச நாட்களுக்குப் பிறகு தான் பார்த்தேன். ஆரம்பத்தில் கொஞ்சம் நன்றாக இருந்தாலும் பிறகு போர் அடிக்க ஆரம்பித்துவிட்டது. ஹாலிவுட்ல இருந்து வந்து படம் எடுத்தாலும் பாலிவுட் படத்துக்கு கண்டிப்பா லவ் இருக்கனும்ங்கற விதியை கடைப்பிடித்திருக்கிறார் டேனி போயல். நிறைய கேள்விகளுக்கு படத்தில் பதில் இல்லை. சேரியில் வளர்பவர்களுக்கு எப்படி இவ்வளவு இங்கிலீஷ் பேச வருகிறது. அது தான் மிக முக்கியமான கேள்வி. ஆஸ்கார் வாங்கியிருக்கிறதில்லியா? இந்தக் கேள்விக்கு பதில் தெரிந்துகொள்ள கோனார் நோட்ஸைப் புரட்டிப்பார்ப்பது போல விகாஸ் ஸ்வருப்பின் ஒரிஜினல் நாவலை (Q&A) எத்தனை பேர் படிக்கப் போகிறார்கள்?

நான் நாவல் படிக்கவில்லை. படிக்கவும் விருப்பம் இல்லை. நாவல் படித்துவிட்டு படம் பார்க்கலாம். நன்றாக இருக்கும். ஹாரி பாட்டர் ஒரு உதாரணம். படித்து அனுபவித்த சாகச காட்சிகளை நேரில் படமாகப் பார்ப்பது என்பது தனி ஆனந்தம் தான். ஆனால் படம் பார்த்து விட்டு நாவல் படிக்க முடியுமா? இந்தமாதிரி விடை தெரியா கேள்விகள் இருக்கிற படங்களுக்கு நாவல் படித்து முழுவதும் புரிந்துகொள்வதைத் தவிர வேறு வழியில்லை.

Telluride Film Festivalஇன் போது டேனி போயலிடம் “நீங்கள் எப்பொழுதும் எடுக்கும் சினிமாவை விட்டுவிட்டு ஏன் இந்தியாவை சப்ஜக்ட்டாகக் கொண்ட படத்தை இயக்குகிறீர்கள்?” என்ற கேள்விக்கு அவர் கீழ்வருமாறு பதில் சொன்னாராம்: “எனக்கு இந்தியாவைப் பற்றி ஏதும் தெரியாது, நான் இந்தியாவுக்கு போனதே இல்லை. அதானால் இதை ஒரு சரியான சந்தர்ப்பமாக பயன்படுத்திக்கொண்டேன்” என்றாராம். இதேபோல “எனக்கு நீயுயார்க் நகர கீழ்தட்டு மக்களின் வாழ்க்கை தெரியாது, நான் நியூயார்க்குக்குப் போனதேயில்லை, அதனால் தெரிந்துகொள்வதற்காக நான் படத்தை இயக்குகிறேன்” என்று சொன்னால் என்ன நடக்கும் என்கிற கேள்வியைக் கேட்டிருந்தார் சல்மான்ருஷ்டி. கிழிச்சிருக்கமாட்டாய்ங்க.

சரி. படத்துக்கும் நாவலுக்கும் என்னென்ன வித்தியாசங்கள் இருக்கிறதென்று பார்ப்போம். படத்தின் ஹீரோ ஜமால் மாலிக் படத்தில் காட்டுவதைப் போன்ற கலவரத்தால் அனாதையாக்கப்பட்டவர் அல்ல. பிறந்த உடன் கைவிடப்பட்டு ஆங்கில கதோலிக்க பாதிரியாரால் எட்டு வயது வரை டெல்லியில் வளர்க்கப்பட்டவர். பாதிரியாரும் கதோலிக்க சர்ச்சும் டெல்லியும் படத்தில் வரவேயில்லை. ஆங்கில கதோலிக்க பாதிரியாரால் வளர்க்கப்பட்டதால் தான் ஜமால் ஆங்கிலம் பேசுகிறான். ஜமால் சரி, கோனார் நோட்ஸைப் பார்த்து தெரிந்து கொண்டாயிற்று மற்றவர்கள் எப்படி ஆங்கிலம் பேசுகிறார்கள்? கதோலிக்க சர்ச் வரவில்லை சரி, இந்து முஸ்லீம் கலவரம் ஏன் படத்தில் திணிக்கப்பட்டது? வளர்த்த பாதிரியார் பிறகு மற்றொரு பாதிரியாரால் கொலை செய்யப்படுகிறார். இதுவும் படத்தில் வரவில்லை. மேலும் பல வித்தியாசங்களுக்கு இங்கே பார்க்கவும்.

இந்தப் படத்துக்கு ஆஸ்கார் கொடுத்திருக்கத்தான் வேண்டுமா? இதற்கு முன்னர் ஆஸ்கார் வாங்கிய No Country For Old Men, Crash போன்ற படங்களுக்கு பக்கத்திலாவது இது வரமுடியுமா? கண்டிப்பாக கிடையாது. தாரே ஜமீன் பர் ஏற்படுத்திய பாதிப்பில் ஒரு பகுதியைக் கூட இது ஏற்படுத்தவில்லை. ரஹ்மான் அப்படி என்ன படத்துக்கு இசையமைத்துவிட்டார்? ஜெய் ஹோ பாடல் ரஹ்மானின் தரத்துக்கு மிக மிக சாதாரணம் தான். படத்தில் ஜெய் ஹோ என்று கடைசியில் பாலிவுட் ஸ்டைலில் டான்ஸ் வேறு. அது சாதாரண டான்ஸை விட மிகவும் கேவலமாக இருந்தது. அப்படி இருக்க ஆஸ்கார் கொடுக்குமளவுக்கு என்ன இருக்கிறது படத்தில்?

படத்தில் ஒன்றும் இல்லை. படத்துக்கு வெளியே நாம் இருக்கிறோம். இந்தியர்கள் இருக்கிறார்கள். கடந்த வருடம் No country for old men படம் ஆஸ்கார் வாங்கியது என்று எத்தனை பேருக்கு தெரிந்திருக்கும்? அதை எத்தனை பேர் லைவ்வாக Oscar Show பார்த்திருப்பார்கள்? What was the viewership rating? இந்திய மொழி படம் ஒன்று ஆஸ்காருக்குள் நுழைந்தஉடன் எத்தனை பேர் ஆஸ்கார் ஷோவைப் பார்த்திருப்பார்கள்? Thats the trick. ஆசியாவிலும் ஆஸ்கார் மிகவும் பிரபலமடைந்துவிடும். This film was at the right time. Thats it.

இனி வருடம் தோறும் ஒரு ஆசிய மொழி படத்துக்கு எதோ ஒரு விருது கிடைத்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.
நான் சொல்வதை நம்பவில்லையென்றால் இதைப் பாருங்கள்:
போனவருடம் எப்படி இருந்தது?
இந்த வருடம் எப்படி இருந்தது? 13% viewership கூடியிருக்கிறது.

கமல் படத்தில் உள்ள எல்லா கேரக்டர்களையும் நானே செய்வேன் என்று அடம்பிடித்து மூன்னூறு மணி நேரம் மேக்கப் போடாமல் அழகாக இயல்பாக மனதை தொடுகிற சப்ஜெக்ட்டோடு நடித்தார் என்றால் சீக்கிரமே ஆஸ்கார் நாயகன் ஆகிற வாய்ப்பிருக்கிறது. ஜெய் ஹோ.

*

Gran Torino பார்த்தேன். எனக்கு ஏதோ ரஜினி படம் பார்த்ததைப் போல இருந்தது. கறுப்பர்களிடம் வெறும் விரல்களைக் காட்டி மிரட்டும் போது ஆகட்டும், அவருடைய புல் தரையில் சண்டைப் போடும் சீன குண்டர்களைப் பார்த்து துப்பாக்கியைக் காட்டி “If you ever step in to my lawn..” என்று கர்ஜிக்கும் பொழுதாகட்டும், Client Eastwood is still a lion. க்ளைமாக்ஸ் தான் ஒட்டவில்லை. வித்தியாசமாக இருந்தது. ஆனால் ஏனோ எனக்கு பிடிக்கவில்லை.

மற்றொரு படம் The Lost (2009). மற்றொரு மல்டிப்பிள் பர்சனாலிட்டி டிஸ் ஆர்டர் கதை. நம்ப விடாது கருப்பு தொடர் மாதிரி. I doubted the end. But I didnt doubt. Mummy : The Tomb of the dragon empire. கன்றாவி. விஜயகாந்த் எவ்வளவோ தேவலாம். Fraserக்கு வயசாகி விட்டது.

அபியும் நானும். ஒரு நல்ல பொழுதுபோக்கு படம். மற்றபடி நெஞ்சைத் தொடும் விதமாக ஏதும் இல்லையென்றே எனக்குத் தோன்றியது. பிச்சக்காரரைப் பார்த்த உடன் ப்ரகாஷ்ராஜ் டக்கென்று ஐஸ்வர்யாவிடம் “உன்னொட சொந்தக்காரரா?”ன்னு கேக்குற இடம் நச். மற்றபடி த்ரிஷா தனது லவ்வருடன் சேர்ந்து நடப்பதைப் பார்க்கும் போது ப்ரகாஷ்ராஜ் கோபப்படுவதைப் பார்க்கும் பொழுது நமக்கு கடுப்பு தான் வருகிறது. என் அனுமதி இல்லாமல் பாய் ·ப்ரண்ட் வெச்சிருக்கியேன்னு கோபப்படுறது ஒரு ரகம். ஒத்துக்கொள்ளலாம். இதெல்லாம் கொஞ்சம் டூமச் தான். ஆனால் மகள் மீது possesiveஆக இருக்கும் அப்பாக்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். I know what I am doing டயலாக் ·பேஷனாகியிருக்குமே?

சொல்லமறந்துவிட்டேன், ஒரு அற்புதமான படம் பார்த்தேன், பெயர்: அருந்ததி. அப்பப்பா என்ன படம். என்ன நடிப்பு. என்ன வேகம். சான்சே இல்ல. இது போன்ற ஒரு படம் பார்த்து எவ்வளவு நாள் ஆச்சு. ஹைலி எமோஷனல் மூவி. மூன்று மணி நேரம் நம்மை இழுத்துப் பிடித்து உட்காரவெச்சிருந்தார் டைரக்டர் கோடி ராமகிருஷ்ணா. அம்மன் படம் பாத்தப்பவே நான் அவரது ரசிகன். இப்போ பரம் விசிரி ஆகிவிட்டேன். அனுஷ்கா அருமையான செலக்ஷன். எப்படி ரம்யாகிருஷ்ணனை கரெக்ட்டாக அம்மனுக்கு பிடிச்சாரோ அதே போல. மண்டையில் தேங்காய் உடைத்து உயிர் தியாகம் செய்யும் போதாகட்டும், இந்த ஜென்மத்தில் முன் ஜென்மத்தில் தானே வரைந்த படத்தில் இருக்கும் செய்தியை decode செய்யும் பொழுதாகட்டும், சயாஜி ஷிண்டே தூக்கியெறியும் வாளை பிடிப்பதாகட்டும் தூள். வாளை லாவகமாக பிடிக்கும் பொழுது இன்னொரு பாட்ஷா போல இருந்தது.

*

சன் டீவி குங்குமம் தொல்லை தாங்கமுடியல. ஒரு அட்டு படத்தை எடுத்துற வேண்டியது. அப்புறம் படத்தில் நடிச்சவங்கள ஊர் ஊரா கூட்டிட்டு போய் டான்ஸ் ஆடவெச்சு அமர்க்களம் பண்ணவிடுறது. பாக்க வந்த மக்கள கை ஆட்ட வெச்சு படம் பிடிக்கிறது. குங்குமத்தில் ஆஹா ஓஹோன்னு விமர்சனம் எழுத வேண்டியது. அப்படித்தான் நான் ஒரு படத்துக்கு ஏமாந்தேன். படிக்காதவன். பொதுவா நான் குங்குமம் விமர்சனம் எல்லாம் படிக்கிறதில்ல. ஆனா விதி வலியது இல்லியா, அன்னிக்கின்னு பார்த்து என் கண்ணில பட்டுத் தொலைஞ்சது. அப்படி இப்படி ஆஹா ஓஹோன்னு ஒரே அலம்பல். எனக்கு இவிங்க படம்ங்கிறது தெரியாது. தெரிஞ்சிருந்தா தப்பிச்சிருப்பேன். தனுஷ் நடிச்ச முந்தைய படங்கள் கொஞ்சம் பாக்கிற மாதிரி இருந்துச்சா, அதானால் நல்லா இருக்கும் போலருக்குன்னு நாலு டாலர் கொடுத்து வாடகைக்கு எடுத்துவந்தேன். தனுஷ் சார் சந்தானம் கருணாஸ் இந்த படத்துல இல்லியா சார்? மயில்சாமி, சன் டீவில வர்ற காமெடியன்கள்ன்னு ஒரே அப்பா வயசு ப்ரண்ட்ஸ் உங்களுக்கு! சகிக்கல. நானும் படத்தில இப்ப டர்னிங் பாயின்ட் வந்திரும் அப்ப டர்னிங் பாயின்ட் வந்திரும்னு உக்காந்து உக்காந்து ஏமாந்துட்டேன். விவேக் காமெடியும் சகிக்கல. எப்படித்தான் கொஞ்சம் கூட மனசாட்சி இல்லாம படத்த ஆஹா ஓஹோன்னு விமர்சனம் எழுதமுடியுதோ தெரியல.

விகடனும் இதுக்கு விதிவிலக்கல்ல. SMS படத்துக்கு மார்க் மழை பொழிந்திருந்ததைப் பார்த்தேன். அவ்ளோ நல்லாவாயிருக்கு படம்? நான் பாக்கல.

*

நான் கடவுள் நான் பார்க்கவேயில்லை. பார்க்கவேண்டும் என்றும் தோன்றவும் இல்லை. ஜெமோவின் ஏழாவது உலகம் நாவல் படித்திருக்கிறேன். அது ஏற்படுத்திய பாதிப்பு குறையவே நீண்ட நாட்கள் ஆனது. படத்தைப் பார்த்து உணர்ச்சி வசப்பட விரும்பவில்லை.

*

வாரணம் ஆயிரம் இப்போத்தான் பார்த்தேன். சூர்யா அழகாக இருக்கிறார். இப்ப அவர் தான் மீடியாக்களுக்கு சுல்த்தான் போல? விஜன் அவார்ட்ஸ்ல பார்த்தீங்களா? சூர்யா ஜோதிகாவுக்கு கொடுக்கப்பட்ட முக்கியத்துவத்தை? பாவம் விஜய் இருக்காறா இல்லியாங்கிற அளவுக்கு உக்காந்திருந்தார். யாரும் கண்டுக்கிடல. இப்ப வருகிற படங்கள கவனிச்சீங்களா? சூரியாவின் உடைகளுக்கு கொடுக்கப்படுகிற முக்கியத்துவத்தை. அயனையும் ஆறுவையும் பாருங்கள். வித்தியாசம் தெரியும்.

அயன் மற்றொரு படம். நன்றாக இருந்தது. சண்டை பாட்டு காதல் காமெடி சென்ட்டிமெண்ட் என்று கலந்து அடித்து விளையாடியிருந்தார் இயக்குனர் KV ஆனந்த். ஜெகன் ஒரு சிறந்த குணச்சித்திர நடிகர் என்று மீண்டும் ஒரு முறை நிரூபித்துள்ளார். அவரை விஜய் டீவியில இப்ப பாக்க முடியிறதில்லையே? அந்த ஆப்பிரிக்க சண்டைக்காட்சி சேசிங் அற்புதம். ஆனால் குவாண்டம் ஆ·ப் சோலேஸை நினைப்படுத்தியது. இதே போல ஒரு சண்டைக் காட்சி The Bourne Ultimatumவிலும் உண்டு. ஞாபகம் இருக்கிறதா? ஹனி ஹனி பாடல் என்னுடைய ·பேவரிட்டாக ரொம்ப நாள் இருந்தது. இப்பொழுது “காற்றுக்குள்ளே” பாடல் சர்வம் படத்திலிருந்து தான் என்னுடைய ·பேவரிட்.

அடுத்து சர்வம். விஷ்ணுவர்த்தன் அடுத்த மணிரத்னம் என்று சொன்னார்கள். ஆனால் ஒரு நாளும் மணி இது போன்ற ஒரு படம் கொடுக்கமாட்டார். படம்மாய்யா இது? சும்மா காமிரா மட்டு அழகாக இருந்தால் போதுமா? Trailer பாத்து ஏமாந்தேன்யா. அவ்ளோ அழகா இருந்தது Trailer. நல்ல கதையும் கூட. ஆர்யா த்ரிஷா யுவன் நீரவ்ஷாவை வைத்துக்கொண்டு இதற்குமேலும் வீணடிக்க முடியாது. படத்தில் சொல்கிறார் போல மனதில் நிற்கிறார் போல ஒரு காட்சி கூட இல்லை. சர்வ நாசம்.

யாவரும் நலம் நல்ல முயற்சி. அழகாக நேர்த்தியாக எடுத்திருந்தார்கள். முடிவு கச்சிதம். ஆனால் எனக்கு Amityville Horror படம் நினைவுக்கு வந்தது ஏனென்று தெரியவில்லை.

*

மூன்று தேநீர் கோப்பைகள் மற்றும் தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள்

எனக்கு ஒரு கனவு இருக்கிறது. அது குறைந்த கட்டணத்தில் தரமான கல்வி கிராமப்புற மக்களுக்கு கொடுக்கவேண்டும் என்பது.

நான் சில அரசு பள்ளிகளுக்கு சென்றிருக்கிறேன். வகுப்பில் ப்ளாக் போர்டு, டேபிள், சாக்பீஸ் போன்ற விசயங்கள் இல்லாமல் இருக்கலாம். ஆனால் வாத்தியார் இல்லாமல் இருக்கலாமா? அதை விட கொடுமை வேறு என்ன இருக்கமுடியும்? நிறைய அரசு பள்ளிகள் அப்படித்தான் இருக்கின்றன. நான் எல்லா ஆசிரியர்களையும் சொல்லவில்லை. பல நல்ல ஆசிரியர்கள் இருக்கிறார்கள். நான் அவர்களைக் காயப்படுத்த விரும்பவில்லை. ஆனால் வகுப்புக்கு வந்துவிட்டு மாணவர்களை அவர்களாகவே பாடம் படித்துக்கொள்ளச்சொல்லிவிட்டு தூங்கும் ஆசிரியர்களைப் பார்த்திருக்கிறேன். பெரும்பாலும் குக்கிராமங்களில் தான் இது போல நடக்கின்றன என்று நினைக்கிறேன். மொத்த பள்ளிக்கும் ஒரே ஆசிரியர் தான் இருப்பார். மிஞ்சிப்போனால் இருவர் அல்லது மூவர். மூவர் இருந்தாலும், பெரும்பாலும் மூவரும் வருவதில்லை. சொல்லிவைத்துக்கொண்டு லீவு போட்டு விடுகிறார்கள். அல்லது பெர்மிசன் என்கிற பெயரில் மதியம் கிளம்பிவிடுகிறார்கள். டிஇஓ திடீர் விசிட் அடித்தால் மட்டும் அவர் என்ன செய்யப்போகிறார்? வேலை பார்க்கும் நமக்கு மனசாட்சி வேண்டும். சம்பளம் வாங்குகிறோமா இல்லையா?

ஆசிரியராக இருந்துகொண்டு மாணவர்களுக்கு சரியாக பாடம் சொல்லிக்கொடுக்காமல் இருப்பது பெரும் துரோகம். அந்த ஏழை அறியா மாணவர்களுக்கு நீங்களும் பாடம் சொல்லிக்கொடுக்கவில்லையென்றால் யார் தான் சொல்லிக்கொடுப்பார்கள்? இங்கே பணிரெண்டாம் வகுப்புக்கு கெமிஸ்ட்ரி, பிஸிக்ஸ், மாத்ஸ் பாடம் எடுக்க வேண்டிய ஆசிரியர்களைப் பற்றி நான் சொல்லவில்லை. அதெல்லாம் அடுத்த லெவல். இதுவும் தவறு தான் என்றாலும் பணிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு எப்படியோ படித்துக்கொள்ளத் தெரியும். அவர்களுக்கு புரிந்துகொள்கிற வயது. ஆனால் பச்சிளம் குழந்தைகள்? They need a good start.

சம்பளம் போதவில்லையா? I dont think so.

இப்படி இருக்கும் பொழுது செய்யும் வேலையில் மட்டும் ஏன் தொய்வு? ஆசிரியராக இருந்துகொண்டு நீங்கள் என்னென்ன செய்யலாம்? எப்படி எப்படி பாடம் எடுக்கலாம்?

1. கொஞ்சம் செலவு செய்ய மனமிருந்தால் போதும் அட்டகாசமாய் சார்ட்கள் வாங்கி வெட்டி ஒட்டி பாடம் எடுக்கலாம்.
2. கதைகள் படித்து அழகாய் குழந்தைகளுக்கு சொல்லலாம்.
3. கொஞ்சம் வளர்ந்த பிள்ளைகளுக்கு பொது அறிவு கற்றுக்கொடுக்கலாம். அதற்கு முதலில் நீங்கள் கற்க வேண்டும். விஜய் டீவியில் நீயா நானாவில் ஒரு முறை ஆசிரியர்கள் பற்றிய நிகழ்ச்சியில் “சந்திராயன் வெற்றியா தோல்வியா?” என்கிற கேள்விக்கு ஒரு ஆசிரியருக்குக் கூட விடை தெரியாமல் இருந்தது கொஞ்சம் வருத்தப்படவேண்டிய விசயம்.
4. ஆங்கிலம் நீங்கள் படித்துகொண்டு குழந்தைகளுக்கும் கற்றுக்கொடுக்கலாம்.
5. சுத்தம் கற்றுக்கொடுக்கலாம்.
6. ஒழுக்கம் கற்றுக்கொடுக்கலாம்.
7. ரைம்ஸ் கற்றுக்கொடுக்கலாம். எத்தனையோ வீசிடிகள் மற்றும் டீவிடிகள் குறைந்த விலையில் கிடைக்கின்றன. உங்கள் டீவிடி ப்ளேயரை எடுத்துக்கொண்டு (வீட்டில் டீவிடி ப்ளேயர் இல்லையென்று மட்டும் சொல்லாதீர்கள்!) ஊரில் இருக்கும் பொது டீவியில் அந்த வீசிடிகளை போட்டுக் காட்டலாம்.
8. புதிதாக விளையாட்டு கற்றுக்கொடுக்கலாம். புட் பால் வாங்கிக்கொடுங்கள். கிரிக்கெட் பேட் வாங்கிக்கொடுங்கள். பாட்மிட்டன் ராக்கெட் வாங்கிக்கொடுங்கள். உங்கள் குழந்தைகள் குடிக்கும் காம்ப்ளானுக்கு இலவசமாக கிடைக்கும் டென்னிஸ் பந்துகளையாவது அட்லீஸ்ட் கொடுங்கள்.
9. டீம் ஸ்பிரிட் கற்றுக்கொடுக்கலாம். உங்களுக்கு தெரிந்திருந்தால்.
10. இலக்கியம் கற்றுக்கொடுக்கலாம்.
11. தேடலை கற்றுக்கொடுக்கலாம். உங்கள் ஹேர்பின், ஹேண்ட்பேக், கண்ணாடி, செருப்பு பொன்றவற்றை தேடச்சொல்கிறீர்களே அதைப் பற்றி நான் சொல்லவில்லை, அறிவுத் தேடல் பற்றி சொல்கிறேன். Teach them how to acquire knowledge.
12. உங்கள் பிள்ளைகளை ஒரு நாள் பள்ளிக்கு அழைத்துச் சென்று அவர்களுக்கு தெரிந்தவற்றைக் கற்றுக்கொடுக்கச்சொல்லுங்கள். பகிர்ந்துகொள்ளச்சொல்லுங்கள்.

நான் சொன்னவை மிக மிக குறைவு. குறைந்த செலவில் நீங்களே அரசை எதிர்பார்க்காமல் இன்னும் நிறைய செய்யமுடியும்.முயற்சி செய்யுங்கள். Find a role model and be a role model.

The Three Cups of Tea கிடைத்தால் படியுங்கள்.