காமன்வெல்த் போட்டிகள் : இந்தியாவுக்கு மேலும் மூன்று தங்கம்

XXI காமன்வத் போட்டிகளில், நேற்று இந்தியாவுக்கு தங்கநாள், இந்தியா வீராங்கனைகள் மூன்று தங்கங்களை அள்ளினர்.

  • இந்த அதிரடியால் இந்தியா காமன்வெல்த் போட்டிகளில் நான்காவது இடத்தைத் தக்கவைத்துக் கொண்டது. இந்தியா மொத்தம் 7 தங்கமும், 2 வெள்ளியும், 3 வென்கல பதக்கங்களை இன்றுவரை அள்ளியிருக்கிறது.
  • பூனம் யாதவ், பெண்கள் பிரிவின் 69 கிலோ பலுதூக்கும் போட்டியில், தங்கம் வாங்கினார். பலுதூக்கும் போட்டியில் இந்தியா மொத்தம் 5 தங்கங்களை வென்றது. விகாஸ் தாகூர் ஆண்கள் பிரிவின் 94 கிலோ போட்டியில் வென்கலம் வென்றார்.
  • 16வயது மனு பகேர் பத்து மீட்டர் சூட்டிங்கில் தங்கம் வென்றார். ஹீனா சிது வெள்ளி வென்றார். ரவிக்குமார் வெண்கலம் வென்றார்.
  • பெண்கள் டேபில் டென்னிஸ் அணியான மனிகா பத்ரா, மதூரிகா பட்கர் மற்றும் மௌமா தாஸ், நடப்பு சாம்பியனான சிங்கப்பூரை வென்று முதல் தங்கப்பதக்கத்தை இந்தியாவிற்குப் பெற்றுத் தந்தனர்.

மேலும்:

  • ஹாக்கியில் இந்திய ஆண்கள் அணி வேல்ஸ் அணியை 4-3 என்கிற செட் கணக்கில் வென்றது. பெண்கள் பிரிவு இங்கிலாந்தை 2-1 என்கிற செட் கணக்கில் வென்றனர். இருவரும் செமி ஃபைனல் போகிறார்கள்.
  • பாக்சர் மேரி கோம் செமி ஃபைனல் செல்கிறார். அவருக்கான பதக்கம் உறுதியாயிற்று.

பூனம் யாதவ்

ஹீனா சிது, மனு பக்கேர்