IPL விசில் போடு – 10: And the Juggernaut rolls on…

நேற்று பூனாவில் நடைபெற்ற சன்ரைசர்ஸ்க்கெதிரான போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றிபெற்றது.

Following the recent trend, வெற்றி தோல்வி என மாறி மாறி கண்ணாமூச்சி காட்ட, சென்னை அணி 11ஆம் தேதி ஜெய்பூரில் நடந்த போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியிடம் தோல்வியடைந்தது. டாஸில் வென்ற தொனி ஆச்சரியமாக பேட்டிங் தெர்வுசெய்தார். அணியின் management அறிவுரை என்றார். வேண்டா வெறுப்பாக ஒப்புக்கொண்டது முகத்தில் அப்பட்டமாகத் தெரிந்தது. பிட்சில் ஏகப்பட்ட விரிசல்கள் இருப்பது ஒரு காரணமாக இருக்கலாம். பின்னர் பவுலிங் செய்ய வரும்போது சுழல்பந்து வீரர்களுக்கு சாதகமாக இருக்கும் என்ற ஒரு காரணமாகவும் இருக்கலாம்.

Par score 160 என்று இருக்கையில் சென்னை அணி 176 ரன்கள் எடுத்தது. இதில் ராஜஸ்தான் அணி தானமாக கொடுத்த 10 வைட் ரன்கள் அடக்கம். தொடர்ந்து பேட்டிங் செய்த வந்த ராஜஸ்தான் அணியின் ஜாஸ் பட்லர் முதல் மூன்று பந்தில் 3 பவுன்ரிகள், அடுத்து  ஓவரிலும் 2 பவுன்ரிகள் 1 சிக்ஸர் என அதிரடி துவக்கம் தந்தார். பவர் ப்ளேவின் முடிவில் 52 ரன்கள் குவிக்க ஆட்டம் சூடுபிடித்தது. நடுவில் கொஞ்சம் விக்கட்டுகள் விழ கடைசி 3 ஓவரில் 38 ரன்கள் தேவையிருக்க ப்ராவாவோனின் ஓவரில் தோனி ஒரு கடினமான கேட்சை தவறவிட்டார். கடைசி 2 ஓவரில் 28 ரன்கள் தேவையிருந்தது.

டி20 போட்டிகளில் கடைசி 5 ஓவர்களை death overs என்பார்கள். இந்த ஓவர்களில் ஆட்டத்தின் போக்கே மாற வாய்ப்புண்டு. 19வது ஓவரை வீச வந்த டேவிட் வில்லி எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் இந்த போட்டியை மறக்க முயலுவார். கர்னாடகா ரஞ்சி வீரர் கிருஷ்ணப்பா கௌதம் 2 சிக்ஸர்கள் விளாச, ராஜஸ்தான் ராயல்ஸ் அணி அந்த ஓவரில் மொத்தம் 16 ரன்கள் குவித்தது. கடைசி ஓவரில் 12 ரன்கள் தேவை என்ற நிலையில் ப்ராவோவின் ஓவரில் ஜாஸ் பட்லர் ஒரு இமாலய சிக்ஸருடன் 2 ரன்களாக மூன்று முறை எடுக்க ராயல்ஸ் அணி வெற்றி இலக்கை எட்டியது.

You can’t win just because you are talented, you need to execute well.

சென்னை அணி இதை நன்றாக உணர்ந்திருக்கும். வழக்கமாக உணர்ச்சிவசப்படாத Captain Cool தோனி அன்று பேட்டியில் சென்னை அணி பவுலர்களை வருத்தெடுத்ததை பார்த்த பலரின் புருவங்கள் உயர்ந்திருக்கும்.

Will Dhoni’s reaction fire up the CSK bowlers என்ற கேள்வியுடன் ஆரம்பித்த சன்ரைசர்ஸ் அணிக்கெதிரான இன்றைய போட்டி மற்றொறு masterclass.  Not just a contest between table toppers, but a contest between the best bowling unit and the best batting unit என்பதால் சுவாரசியத்திர்க்கு பஞ்சமில்லை.  டாஸ் வென்ற தோனி வழக்கம் போல் பவுலிங் தேர்வு செய்தார். காயம் காரணமாக ஒதுங்கியிருந்த தீபக் சகார் உள்ளே வர பவுலிங் கொஞ்சம் வலுவடைந்தது.

ஆரம்பமே அமர்க்களமாக அமைய நான்காவது ஓவரில் தீபக் சகாரின் பந்தில் அலெக்ஸ் ஹால்ஸ் அவுட். இரண்டாவது விக்கட்டுக்கு தாவனும் சன்ரைசர்ஸ் அணியின் கேப்டன் வில்லியம்சன்னும் சேர்ந்து 123 ரன்கள் குவித்தனர். நியுசிலாந்து வீரர் கேன் வில்லியம்சன் இன்னொரு Mr. Cool. மிக துல்லியமான திட்டமிடல், தன் அணி வீரர்களின் திறமையை முழுவதும் பயன்படுத்திக்கொள்ளும் ஆற்றல், அலட்டிக்கொள்ளாத attitude என்று கேப்டன் பதவிக்கான முழுத்தகுதியும் உள்ளவர்.

நம் எம்.ஜி.யாரைப் போல் ஓடி ஓடி உழைக்கனும் என்று பாடியவாரே விளையாடுவார் என்று நினைக்கத் தோன்றும்.

ஸ்டைர்க் ரேட் 130 முதல் அதிகபட்சமாக 135 இருக்கும். ஆனால் பவுண்ரிகளும் சிக்ஸர்களூம் அதிகம் இருக்காது. பல சந்தர்ப்பங்களில் டேவிட் வார்னரை விட மிக சிறப்பாக அணியை வழிநடத்துகிறார். இன்னிங்ஸ் முடிவில் சன்ரைசர்ஸ் அணி 179 ரன்கள் குவித்திருந்தது.

பின்னர் விளையாட வந்த சென்னை அணியின் துவக்க ஆட்டக்காரர்கள் ராயுடுவும் வாட்சனும் மிகச் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தினர். ஆந்திராவுக்கே  கோங்குராவா என்று அம்பத்திபாகுபலிராயுடு வந்த ஓவ்வொறு பந்தையும் திருப்பதி லட்டாக மாற்றியது தான் highlight. ஒரு பக்கம் வாட்சன் விளாச மறுபக்கம் சன்ரைசர்ஸ் அணியின் ஒவ்வொறு ஸ்டார் பவுலர்களையும் பதம் பார்த்தார். 7 பவுண்ரிகளும் 7 சிக்ஸர்களும் பறக்க வெறும் 62 பந்துகளில் டி20 போட்டிகளில் தனது முதல் சதத்தை அடித்தார்.

சென்னை அணியைப் பொருத்தவரை மும்பை இந்தியனஸ் அணியிடமிருந்துகளவாடியவீரர்கள் அனைவரும் மிகச் சிறந்த வீர்களாக உருமாரியது கொஞ்சம் அதிசயம். ப்ராவோ, டுவைன் ஸ்மித், ராயுடு, ஹர்பஜன் சிங் என அனைவரும் சென்னை சூப்பர் கிங்ஸை பொருத்தவரை low capital with high returns என்ற முதலீடு வகையைச் சேர்ந்தவர்கள். யாரும் சோடை போனதில்லை.

எந்த ஒரு நிறுவனம் தன் ஊழியர்கள் மீது உண்மையான நம்பிக்கை வைத்து ஊக்கமும் அளிக்கின்றதோ அந்த அளவுக்கு அந்த ஊழியர்கள் தங்கள் திறனை வெளிக்கொணர்வார்கள்.

இதற்கு சென்னை அணியும் ராயுடு, வாட்சன் போன்ற வீரர்கள் சிறந்த உதாரணம். தோனியும் தன் பங்கிற்க்கு ஒரு பவுண்ரியும் சிக்ஸரும் தெரிக்க விட, சென்னை அணி 8 விக்கட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

ddfsmuoxkaepamy

சன்ரைசர்ஸ் அணியைப் பொருத்த வரை புவனேஷ்வர் குமார், சந்தீப் சர்மா, ரஷீத் கான், சித்தார்த் கவுல் என IPL போட்டிகளின் ஆகச் சிறந்த பவுலர்கள் இருந்தாலும் இந்த வருடத்தில் அவர்களுக்கெதிறாக மூன்று அணிகளின் வீரர்கள் (க்ரிஸ் கெய்ல், ரிஷப் பந்த், அம்பத்தி ராயுடு) சதமடித்திருப்பது விசித்திரம்.

கிட்டத்தட்ட ப்ளேஆஃப் சுற்றுக்கு தேர்வான நிலையில், இதே நாளில் நடந்த மற்றொறு போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மும்பை இந்தியன்ஸ் அணியை வென்றதன் மூலம் சென்னை அணி தனது ப்ளேஆஃப் தேர்வை உறுதி செய்ததுசூரியன் கிழக்கில் உதிக்காமல் கூட போகலாம் ஆனால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ப்ளேஆஃப் சுற்றுக்கு தகுதி பெறாமல் போகாது என்று ரசிகர்கள் ட்வீட்டியது நியாயமானதே.

For yet another clinical performance, சென்னை அணிக்கும் ராயுடுவுக்கும் ஒரு சூப்பர் விசிலுடன்,

ஹரிஹரன்

முந்திய பகுதிகள்:
IPL விசில் போடு – 9: Kings, for a reason
IPL விசில் போடு – 8: Paradise lost… Paradise regained
IPL விசில் போடு – 7: The name is Dhoni
IPL விசில் போடு – 6: ஆந்திர ஆவக்காயும் சுவையானதே!
IPL விசில் போடு – 5: பைசா வசூல்!
IPL விசில் போடு – 4: கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே
IPL விசில் போடு – 3
IPL விசில் போடு -2 : திரும்பி வந்துட்டேன்னு சொல்லு!
IPL – விசில் போடு – 1

ஹரிஹரன்: சொந்த ஊர் சென்னை. படித்தது கோவையில். வேலை சிங்கையில். வேலை நேரம் போக நாடி நரம்பில் ஊறியிருப்பது கிரிக்கெட். நாவல், சிறுகதையிலும் சிறிது நாட்டம். விருப்பி வாசிப்பது Sidney Sheldon மற்றும் இந்திரா சொளந்திரராஜன்.

IPL விசில் போடு – 3

ஹரிஹரன்

3

சென்னை மாநகராட்சி உங்களை அன்புடன்வரவேற்கிறது.
1095 நாள் காத்திருப்பு ஒருவழியாக முடிந்தது! இத்தனை காலம் காத்திருந்த பலனாக சென்னை ரசிகர்களுக்கு மாபெரும் விருந்தாக இந்த போட்டி அமைந்தது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கோல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியை வென்று சேப்பாக்கம் தன் கோட்டை என நிருபித்தது. Welcome back to the den Lions!
ஆனால் இந்த போட்டியை முழுமையாக ஏனோ ரசிக்க முடியவில்லை. அரங்கத்தில் போட்டியை காணவந்த சில ரசிகர்கள் தாக்கப்பட்டனர். போட்டியின் போது சென்னை வீரர் டூபெளிசியின் மீது செருப்பு வீசப்பட்டது. சென்னை இதுவரை பார்த்திராத காட்சிகள் இவை. கோல்கத்தா மற்றும் இன்னும் சில வட இந்திய நகரங்களில் இவ்வாறு நடந்ததுண்டு.
சாதாரண கிரிக்கெட் ரசிகனுக்கும் இந்த நிகழ்வகளுக்கும் தொடர்பிருக்காது என நாம் சொன்னலும் knowledgeable crowd என அனைவராலும் பாராட்டப்படும் சென்னை மக்களுக்கு இது ஒரு களங்கம். 1999 ஆண்டு சென்னையில் நடந்த பாக்கிஸ்த்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் எதிரணி வென்றாலும் எழுந்து நின்று கைதட்டி பாரட்டிய நிகழ்ச்சி தான் கண் முன் வந்து சென்றது. இந்த நிகழ்வுகளின் காரணமாக சென்னையில் போட்டி தடைபடாது என நம்புவோமாக. Hope good sense will prevail.
Coming back to the splendid contest, சென்னை ஒரு புது ஹீரோவை அடையாளம்கண்டுகொண்டது.இங்கிலாந்து வீரர் சாம்பில்லிங்ஸ் அதிரடியை காட்டசார் ஜடேஜா முத்தாய்ப்பாய் சிக்கர் அடித்து வெற்றியை உறுதி செய்தார். சாம்பில்கிங்ஸ் இன்னமும் ஒருவளர்ந்து வரும் வீரராகவே இங்கிலாந்தில் கருதப்படுகிறார். இருந்தாலும்தம்பி வா, தலைமையேற்கவா என்று இங்கிலாந்துவாரியம் அவருக்கு காப்டன்பதவிக்கு அழைப்புகொடுக்கலாம்.
சென்னை மாதிரியானமைதானத்தில் டாஸ் ஒருமுக்கியமான விஷயமாகக் கருதப்படுகின்றது. ஆட்டம் செல்லச் செல்ல பிட்ச்மெதுவடையும். அவ்வாறு இருக்கையில் டாஸ் வென்றஅணி வழக்கமாக பேட்டிங்செய்யும். ஏனேன்றால், அடுத்துபந்து வீசும்போது பிட்ச்சுழற்பந்துக்கு சாதகமாகஇருக்கும். டாஸ் வென்றதோனி ஆச்சிரியமாக பவுலிங் தேர்வு செய்தார்.எதிரணியில் நிறைய அதிரடிஆட்டக்காரர்கள் இருப்பது ஒருகாரணமாக இருக்கலாம்.இதனால் ரன் இலக்குகை குறிவைத்து ஆடுவது எளிது என்று நினைத்திருக்கலாம்.இரண்டாவதாக சென்னை மைதானத்தில் இரவு பனிப்பொழிவு அதிகம்.அதனால் பவுலர்ககளுக்கு இரண்டாவது இன்னிங்ஸில்பந்து வீசுவது கடினம் என்று நினைத்திருக்கலாம்.
கோல்கத்தா தொடக்க ஆட்டக்காரர்கள் ஆரம்பம் முதல் அதிரடியாக விளையாடினர்.ஒரு பக்கம் விக்கட்டுகள் சரிந்தாலும் பத்து ஓவர்களில்கிட்டத்தட்ட 90 ரன்களுக்கு மேல் எடுத்தனர். பின்னால்வந்த ஆன்ரே ரசல் பதினோரு சிக்சர்களை அடித்து அரங்கத்தை அதிரவைத்தார்.
மேற்க்கிந்திய வீரர்கள் அதிரடி ஆட்டப்பிரியர்கள்.தொடக்ககாலந்தொட்டு தன்அபார ஆட்டத்திறனால் எதிரணி வீரர்களை குலை நடுங்கச்செய்வர். 2000வருடத்திற்க்குப்பின் இரங்குமுகந்தான். அடுத்து வரும் உலக கோப்பை தகுதி சுற்றில் ஸ்காட்லேண்ட் ஜிம்பாப்வே அணிகளுடன் மொதும் பரிதாபமான சூழ்நிலை. ப்ராவோ,போலார்ட், சாமுவேல்ஸ்,கெயில், ஆன்ரே ரசல், சுனில்நரேன் போன்ற சிறந்த வீரர்கள்இருந்தும் சிறந்த அணியாகத் திகழாதது துரதிஷ்டவசம்.
நவக்கிரஹம் போல தனியாகபலனை தருவார்கள், கூட்டாக/அணியாக அல்ல.
சென்னை அணியின் முரளிவிஜய் மறுபடியும் மிஸ்ஸிங். போட்டிக்கு இரண்டு நாள் முன்பாக நாம் எடுத்த கருத்துகணிப்பில் பெரும்பாலானொர் முரளி விஜய் வரவேண்டுமென்று பதிவு செய்தார்கள்.


ஆனால் சென்ற போட்டியில் களமிறங்கிய ராயுடுவும் வாட்சனும் நானும் ரவுடி தான் என்று நினைதார்களோ என்னவோ, கொல்கத்தா பவுளர்களை பதம் பார்த்தார்கள். முரளி விஜய் இனி களமிரங்குவது சிரமமென தெரிகிறது. சாம் பில்லிங்ஸ், ப்ராவோ மற்றும் ஜடேஜா கைகொடுக்க சென்னை ஒரு பந்து மிதமிருக்க வெற்றி கண்டது.

Opening and lower order looks formidable now. சென்னை மிடில் ஆர்டரில் கவனம் செலுத்துவது நல்லது. காயமடைதொரின் என்னிக்கை வேறு கூடுகிறது. அனேகமாக playing XI போல் Injured XI வருமோ என்னவோ.


Opening and lower order looks formidable now. சென்னை மிடில் ஆர்டரில் கவனம் செலுத்துவது நல்லது. காயமடைதொரின் என்னிக்கை வேறு கூடுகிறது. அனேகமாக playing XI போல் Injured XI வருமோ என்னவோ

தல தோனியின் அதிரடி ஆட்டத்தை காணவந்த ரசிகர்களுக்கு கொஞ்சம் ஏமாற்றந்தான். அடுத்த போட்டியில் தல கலக்குவார் என்ற நம்பிக்கையுடன், welcome once again lions.
சூப்பர் விசிலுடன்,
ஹரிஹரன்

முந்திய பகுதிகள்:

IPL விசில் போடு -1

IPL விசில் போடு – 2


ஹரிஹரன்: சொந்த ஊர் சென்னை. படித்தது கோவையில். வேலை சிங்கையில். வேலை நேரம் போக நாடி நரம்பில் ஊறியிருப்பது கிரிக்கெட். நாவல், சிறுகதையிலும் சிறிது நாட்டம். விருப்பி வாசிப்பது Sidney Sheldon மற்றும்இந்திரா சொளந்திரராஜன்.

IPL விசில் போடு -2 : திரும்பி வந்துட்டேன்னு சொல்லு!

-ஹரிஹரன்

2

திரும்பி வந்துட்டேன்னு சொல்லு!

CSK is back with a bang! 2018 IPL முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மும்பை இந்தியன்ஸ் அணியை அதன் சொந்த மண்ணில் தோற்க்கடித்து தனது வருகையை பதிவு செய்தது.

அதென்ன சார் சொந்த மண்? தோனியும் ரெய்னாவும் பாக்கிஸ்தான் வீரர்களா என்று நீங்கள் கேட்டால் உங்களுக்கு IPL பற்றி இன்னும் புரிதல் வேண்டும் என்று தான் சொல்ல வேண்டும். உங்கள் ஊரில் உங்களுக்கு எதிராக ஒரு வெளிநாட்டவர் விளையாடினால் கூட உங்கள் கண் முன்னே ஐம்பதாயிரம் பேர் அந்த வெளினாட்டவருக்குத்தான் ஆதரவு அளிப்பார்கள். அப்போது உங்களுக்கு அது தன்னுடைய சொந்த மண் என்ற உணர்வு எப்படி வரும்?

damyvovwkaab32m3939227663761785487.jpg

காலன், கரிகாலன் ப்ராவோ தன் விஸ்வரூபத்தைக்காட்ட, ஜாதவ் நீ கேலி செய்த ஆள் நானில்லை என்று சொல்லாமல் சொல்ல, தன் அபாரமான ஆற்றலை CSK   வெளிக்கொணர்ந்தது. ஏழு சிக்ஸர்கள் எடுத்த எரிமலை என நீ அன்போடு அழைக்கப்படுவாய் ப்ராவோ என்று நெட்டிஸன்கள் கொண்டாட , மங்களகரமாக சென்னை தன் அக்கௌண்டை துவக்கியது.

சென்னை சூப்பர் கிங்ஸை பொருத்தவரையில் நாம் அந்த அணியை உலகின் பிரசிதிப்பெற்ற Manchester United அணியுடன் ஒப்பீடு செய்யலாம்.

Value for money, huge fan base என அனைத்தும் சூப்பர் கிங்ஸுக்குப் பொருந்தும். ஏலத்தின் போது யார் யாரை கேலி செய்தார்களோ அவர்கள் தான் நேற்றய போட்டியில் பிளந்து கட்டினார்கள்.

டாசில் வெற்றி பெற்ற தோனி பவுலிங்கை தேர்வு செய்தார். Playing XI எனப்படும் களமிறங்கும் வீரர்கள் பெயர்களை பார்த்த போது அனைவரும் கொஞ்சம் அதிர்ச்சியானது உண்மைதான். மூன்று நான்கு வீரர்களை தவிர்த்து impact players யாரும் இல்லை. கண்ணில் விளக்கெண்ணையை ஊற்றி பார்த்தால் கூட ஆக்ரோஷமாக ஆடும் வீரர்களை கண்டுபிடிக்க முடியவில்லை. Is this a winning team என்ற கேள்வி வராமல் இல்லை. ஒட்டுமொத்தமாக தோனியை நம்பியே அணியை அமைத்திருக்கிறார்கள் என்று தெளிவாக தெரிந்தது.

 2015 ஆண்டு வரை தோனி தன் அணியில் ஆக்ரோஷமாக ஆடும் தொடக்க ஆட்டக்காரர்களை களமிரக்குவார். ஒரு solid lower down இருக்கும். சுழர் பந்தில் அஷ்வின் கலக்குவார். அத்தனையும் மிஸ்ஸிங்.

குறிப்பாக அஷ்வின், கிளிக்கு இறக்கை முளைச்சுடுத்து ஆத்த விட்டு பறந்துபோயிடுத்து என்று ரசிகர்கள் முகநூலிலும் டுவிட்டரிலும் புலம்பியது நியாயமானதே.

ஏழு பவுலர்கள் தேவையா தல என்ற கேள்வி தோனிக்கு மட்டுமில்லை சென்னை அணியின் மங்களம் சார் ஸ்டீபன் பிளமிங்கையும் யோசிக்கவைத்திருக்கும். Anyways, இது நமது முதல் போட்டி. வீரர்களை சோதனை அடிப்படையிலேயே தேந்தெடுத்திருப்பார்கள் என நம்புவோமாக.


ஸ்கோர்கார்ட்

Batting

bowling


எது எப்படியோ இந்த வெற்றி இரண்டு வருடங்களாக ஏங்கித்தவித்த ரசிகர்கள் மத்தியில் ஒரு பெரிய உற்சாகத்தை ஏற்படுத்தியது. மும்பை இந்தியனஸ் அணி எப்போதுமே ஆரம்பத்தில் வாமன அவதாரம் எடுத்து பின் ஒரே அடியில் இறுதியில் எதிரணியை வெல்லும். அதனால் இந்த தோல்வி அவர்களுக்கு துளியும் பாதிப்பை ஏற்படுத்தியிருக்காது. காண்டாகி அம்பானி ஜியோவில் கைவைப்பாரோவென்ற கலவரம் கிரிக்கெட் பார்க்காதவர்கள் கண்களில் தெரிந்தது. 

போட்டிகள் செல்லச்செல்ல போட்டித்தன்மை மாறமாற அணிகளும் தங்களின் யுக்த்திகளை மாற்றும். ஓரிரு வாரங்களில் அணிகளின் உண்மையான பலமும் பலவீனங்களும் தெரியவரும். சென்னை சூப்பர் கிங்ஸும் தன் பங்கிர்க்கு எவ்வாறு தன் யுக்திகளை கையாளும் என்பதை பொருத்துத்தான் பார்க்க வேண்டும். அதுவரை,

இன்னும் பலமான விசிலுடன்.

ஹரிஹரன்

முந்திய பகுதிகள்: IPL விசில் போடு -1


ஹரிஹரன்: சொந்த ஊர் சென்னை. படித்தது கோவையில். வேலை சிங்கையில். வேலை நேரம் போக நாடி நரம்பில் ஊறியிருப்பது கிரிக்கெட். நாவல், சிறுகதையிலும் சிறிது நாட்டம். விருப்பி வாசிப்பது Sidney Sheldon மற்றும் இந்திரா சொளந்திரராஜன்.

IPL – விசில் போடு – 1

-ஹரிஹரன்

1

IPL a.k.a The Great Indian Circus has finally begun. ஒன்றரை மாத திருவிழா நாளை முதல் ஆரம்பம்! பதினோரு மாதமும் ஒரே அணியாக, இந்திய அணியாக, விளையாடிய வீரர்கள் வெவ்வேறு அணியாக, மற்ற நாட்டவருடன்வி ளையாடும் வித்தியாசமான போட்டி. குரங்கு என “அன்பாக வர்ணித்த” ஹர்பஜனும் சைமசும் கட்டித்தழுவி வெற்றியை கொண்டாட, அதை பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சியடைய வைத்த போட்டி. இந்தியனாக இருந்து சென்னை சூப்பர் கிங்சாக உருமாரி பின் இந்தியனாக மறுபடியும் பரிணாம வளர்ச்சி தரும் போட்டி.

ydrdo_sk_400x400513950112345151173.jpg

என்ன சார், அப்படி என்னதான் இருக்கு இந்த போட்டியில்? After all, it’s another T20 game என்று நீங்கள் நினைத்தால், sorry sir, you may be wrong என்று தான் சொல்லத் தோன்றுகிறது. இந்த பத்து வருடத்தில் எவ்வளவோ சர்ச்சைகள். இருந்தாலும் பார்போரின் எண்ணிக்கைக்கு என்னவோ குறைவில்லை. அரங்கம் முழுவதும் பார்வையாளர்கள், வண்ண விளக்குகள், those beautiful cheerleaders, ஒவ்வொரு விக்கட்டுக்கும் பவுண்டரிக்கும் ஆர்பரிக்கும் ரசிகர்கள், கடைசி ஓவரில் தன் அணி வெற்றி பெருமா என்ற ஏக்கத்துடன் நகத்தை கடிக்கும் அணியினர், என சுவாரசத்தியர்க்கு பஞ்சமில்லை.

ஒரு வேளை திருவள்ளுவர் இருந்திருந்தால் சிக்சர் அடித்து வாழ்வாரே வாழ்வார் மற்றவரெல்லாம் சிங்கள் அடித்து சாவார் என்று ஒரு குறள் IPL பற்றி ஸ்பெஷலாக பாடியிருக்கலாம்.

அதெல்லாம் ஒகே, என்ன ஸ்பெஷல் இந்த வருடம்?

சூதாட்ட சர்ச்சையால் இரண்டு வருட வனவாசத்திற்க்கு பிறகு சென்னை சூப்பர் கிங்சும், ராஜஸ்தான் ராயல்சும் களமிளங்குகிறது. வருட தொடக்கத்தில் நடைபெற்ற ஏலத்தித்திற்கு முன்பே ஓவ்வொரு அணிக்கும் மூன்று வீரர்களை தக்க வைக்க சந்தர்ப்பம் கொடுக்கபட்டது. No prizes for guessing – சென்னை அணி “தல” தோனியையும், “சின்ன தல” ரெய்னாவையும், “சர்” ஜடேஜாவையும் தக்க வைத்தது.

ஏலத்தின் முதல் நாளில் இது சென்னை சூப்பர் கிங்சா? இல்லை சென்னை சீனியர் கிங்சா?

 

என்ற கேள்வி வராமல் இல்லை. ஏலத்தில் எடுத்த அத்தனை வீரர்களுக்கும் 32 வயதுக்கு மேல். மற்ற அணியினர் வளர்ந்து வரும் வீரர்களை வாங்க, சென்னை சீனியர்களின் மீது முதலீடு செய்தது. இரண்டாவது நாளில் தலை கீழ். இருந்த பணத்தில் நிறைய uncapped வீரர்களை வாங்கியது. இவர்கள் மாவட்ட அளவிலோ மாநில அளவிலோ விளையாடும் வீரர்கள்.

இதனூடே காவிரி பிரச்சனையினால் கொந்தளித்து கொண்டிருக்கும் தமிழகத்தில் போட்டியை நடத்தவிட மாட்டோம் என்று சில அமைப்புகள் வேறு.

கண்ணாடிய திருப்பி வச்சா எப்படி ஜீவா வண்டி ஓடும் என்று கேட்கத்தான் தோன்றுகிறது.

 

எது எப்படியோ ரசிகர்களுக்கு இன்னும் ஒன்னறை மாததிற்க்கு பொழுது போக்க பஞ்சமில்லை. இது விளையாட்டே அல்ல ஒரு entertainment package என்று நீங்கள் நினைத்தாலும் சரி, என் அணி என் உரிமை என்று நீங்கள் நினைத்தாலும் சரி, IPL is here to stay.

சர்வதேச அளவில் இந்த போட்டிக்கென ஒவ்வொறுவருடமும் ஒரு கால அட்டவனையை உருவாக்க ஐசிசி திட்டமிட்டளுள்ளது. வர்த்தகரீதியில் ஒரு வருடத்தில் ஐந்தாயிரம் கோடி வருமானம் என இதன் வளர்ச்சியோ வாயை பிளக்க வைக்கிறது.

நாளை முதல் போட்டியில் சென்னை அணி தன் பரமவைரியான மும்பை அணியுடன் மோதுகிறது. தல பழைய கெத்துடன் திரும்புவார் என்று ஏக்கத்துடன் காத்திருக்கும் ரசிகர்களோடு

விசில் போடுவோம்


ஹரிஹரன்: சொந்த ஊர் சென்னை. படித்தது கோவையில். வேலை சிங்கையில். வேலை நேரம் போக நாடி நரம்பில் ஊறியிருப்பது கிரிக்கெட். நாவல், சிறுகதையிலும் சிறிது நாட்டம். விருப்பி வாசிப்பது Sidney Sheldon மற்றும் இந்திரா சொளந்திரராஜன்.

 

இவிங்க ரொம்ப நல்லவய்ங்கடா!

டிராவிட் அந்த நான்கு போர்கள் அடிக்கும் போதுகூட எனக்கு நிறைய நம்பிக்கையிருந்தது. ஆஸ்திரேலியாவின் பெவன் போல தனியாளாக நின்று போராடி ஜெயித்துக்கொடுப்பார் என்று தான் நம்பினேன். பெவன் இது போல எத்தனை முறை செய்திருக்கிறார்? வெறும் எழுபது ரன்கள் தானே? காலீஸ் எத்தனை முறை செய்திருக்கிறார்? யுவராஜ் எத்தனை முறை செய்திருக்கிறார்? வெற்றி தோல்வி முக்கியமல்ல. ஆனால் எப்படி தோற்கிறோம் என்ற ஒன்று இருக்கிறதல்லவா? அப்படியே நெடுஞ்சான்கடையாக போய் காலிலே விழுவதா? நான் டிராவிட்டை மட்டும் குற்றம் சொல்லவில்லை. அவர் மட்டும் என்ன செய்வார் பாவம்? அவர் மட்டும் தனியாக என்ன செய்திருக்கிறார் இது வரை? ஒன்று கங்கூலி அடிப்பார், டிராவில் துணை நிற்பார். இல்லையேல் சச்சின் அடிப்பார், டிராவிட் துணை நிற்பார். அதுவும் இல்லையேல் யுவராஜ் அடிப்பார், டிராவிட் துணை நிற்பார். அதுவும் இல்லையேல் கைப் அடிப்பார், டிராவிட் துணை நிற்பார். அவர் தனியாக நின்று ஜெயித்துக்கொடுத்த மேட்ச் ஏதாவது இருக்கிறதா? கங்கூலி செய்திருக்கிறார். சச்சினும் செய்திருக்கிறார்.

ஒரு ஓவரில் நான்கு determined ஷாட்ஸ் அடித்து விட்டு அடுத்த ஓவரில் பரிதாபமாக விக்கெட்டைக் குடுப்பானேன்?! ஏன் கடைசிவரை நிற்பதுதானே? நின்று என்னத்த சாதிக்கபோறோம் என்ற நினைப்பா? அவர் சேவாக் போல அவுட் ஆகியிருந்தால் பரவாயில்லை, சேவாக்கின் அவுட் முரளியின் மாயாஜாலம். ஆனால் டிராவிட் தனது விக்கெட்டை தானே தூக்கிக் கொடுத்த மாதிரியல்லவா இருந்தது? அவர் நின்றிருந்தால் ஜெயித்திருப்போம் என்று நான் சொல்லவில்லை. பின்னால் அகார்கர் இருக்கிறார். ஹர்பஜன் இருக்கிறார். ஜாகீர் இருக்கிறார். இவர்கள் அனைவரும் ஓரளவுக்கு பேட்டிங் பிடிப்பவர்கள் தான். கொஞ்சம் நம்பிக்கை வைத்து இறுதி வரை போராடியிருக்கலாமே? அதுவும் இது என்னமாதிரியான ஒரு மேட்ச். தோற்றால் முதல் சுற்றிலே வெளியேற வேண்டும். சச்சின், டிராவிட், கங்கூலி என்ற மூன்று legends ஒன்றாக இருந்த டீம் முதல் சுற்றிலே வெளியே வருகிறது என்றால், 50 செஞ்சுரி,400 அம்பது, 12312 மூன்று என்று சும்மா கணக்கு மட்டும் வைத்து என்ன பிரயோஜனம்? கணக்கு எதற்கு? யாருக்கு வேண்டும் சொந்த கணக்கு?

சச்சின் டக் அவுட் ஆன பிறகு ஒரு விளம்பரம் -National Egg Corporation -வந்தது. ஒரு சின்ன பையன் முட்டை சாப்பிட்டுவிட்டு சச்சினுடன் கை குழுக்குவான், சச்சினுக்கு எழும்பு முறிவது போல வலிக்கும். என் நண்பர் ஒருவர் அடித்த கமெண்ட்- நல்லா முட்டைய சாப்பிட்டு வந்துட்டு முட்டை போட்டுட்டு போயிட்டார். சச்சின் ஒரு மாஸ்டர் பேட்ஸ்மேன். மறுப்பதற்கில்லை. ஆனால் முக்கியமான -மிக முக்கியமான- சந்தர்ப்பத்தில் ஆடாமல் விட்டால் மாஸ்டராவது, டோஸ்டராவது.

நான் போன பதிவிலே சொன்னது போலதான் இருந்தது கங்கூலியின் ஆட்டம். அவர் தூக்கி தூக்கி அடிக்க பார்க்கிறார். அவரால் strike rotate செய்ய முடியவில்லை. சுற்றி நிற்கும் fielders க்கு fielding practice கொடுத்தப்புறம் ரன் ரேட்டை (தனது strike rate) உயர்த்த தூக்கி அடிக்கிறார். சில சமயம் மாட்டுகிறது பல சமயம் முரளியின் கைகளில் மாட்டுகிறது. அவர் என்ன செய்வதென்று தெரியாமல இங்கும் அங்கும் ஓடுகிறார். (மலர் ஸ்டேடியத்தில் இருந்ததால் முரளி கொஞ்சம் ஓவர் enthu வா இருந்தாரோ?!)

மற்றொரு ஸ்வீட் சர்ப்ரைஸ் (ஸ்ரீலங்காவுக்கு!) யுவராஜ் அவுட். “இவிங்க ரொம்ப நல்லவய்ங்களா இருக்காய்ங்கடா, நமக்கு ரொம்ப தொல்ல தராம அவிங்களே அவுட் ஆகிட்டு போறாய்ங்க” என்று ஸ்ரீலங்காவின் கேப்டன் சொன்னதாக சிரிக் இன்போ செய்தி வெளியிட்டிருந்தது!

அப்புறம் நம்ப பிஞ்ச் ஹிட்டர். அகார்க்கர். என்னவாம் அப்படியொரு ராக்கெட் ஷாட் அடிச்சிட்டு அவ்ளோ அவசரமா ஓடினார்? அங்க பெவிலியன்ல யார் இருந்தாவாம்? பிஞ்ச் ஹிட்டர். நெக்ஸ்ட் கபில் தேவுக்கு என்ன ஆச்சு? இதெல்லாம் டூ மச்.

இதுக்கெல்லாம் மேல, ஏதோ டெஸ்ட் மேட்ச் ஆடிட்டு இருக்கற மாதிரி, டிராவிட் மட்டைய போட்டதுதான். என் நண்பர் : “மொல்லப்பா.. மொல்ல.. மொல்ல.. பந்துக்கு வலிக்கப்போகுது.” என்று மிக மிக எரிச்சலாக கமெண்ட் அடித்துக்கொண்டிருந்தார். இவர்கள், மற்றவர்கள் ஆடும் மேட்சுகளைப் பார்க்கிறார்களா இல்லியா? அவனவன் எப்படி அடிக்குறான்? சும்மா அந்த ப்ளாஷ் கேம்ல அடிச்சமாதிரி பொலந்து கட்றானுங்க. இவிங்க என்னன்னா! சும்மா பெர்முடா மாதிரி ஏதாவது கிடச்சா போதும் சுத்தி நின்னு கும்மி அடிக்கறது, அடப்போங்கப்பா.

பாப் உல்மர், பாகிஸ்தான்-அயர்லாந்து மேட்சுக்கு முன்னர் ஒரு பேட்டியில்: ICC wants, minnows to give an upset. Lets just not hope thats us! என்றார். Chappell என்ன சொன்னார் என்று தெரியவில்லை. vision 2011 பத்தி யோசிச்சிட்டு இருந்திருப்பார். Chappell சொன்ன பதில் : We just didnt play enough cricket. ம்ம்..அதுதான் எங்களுக்கு தெரியுமே! நீங்க என்ன சொல்றீங்க? வேற சொல்லுங்க! இப்படி தோக்கறதுக்கு எத்தன build-up? விஷன் 2007, we are in process of strategic planning towards world cup!! எத்தன? வில்லன் படத்துல கருணாஸ் “இதுதானா உங்க டக்கு” ன்னு சொலறமாதிரி, “இதுதானாய்யா உங்க ப்ராஸஸ்”!

பவுலிங். அவனவன் 140,150ன்னு பொட்டுட்டிருக்கான், நம்பாளுங்க 90க்கு முக்கறாங்க. பின்ன எங்கிட்டு விக்கெட் விழும்? அப்புறம் நம்ப பேட்ஸ் மேன், சும்மா சொல்லக்கூடாது பவுன்ஸர் போட்டா சொல்லிவெச்சமாதிரி டக்குன்னு குனியிறாங்க. இந்த ஹ¥க்குன்னு ஒரு ஷாட் இருக்குமே அதெல்லாம் மறந்து போச்சா சார்? இல்ல பெர்முடாகூட மட்டும் தான் அடிப்பீங்களா? இல்லியே நாங்க மத்த நாடுகள் கூடவும் அடிப்பமே. ஆனா அவங்க இந்தியாவுக்கு வரனும். அப்பத்தான் அடிப்போம்!

வாஸ்க்கே டான்ஸ் ஆடின நம்ப ஆளுங்க ஜெயிச்சு சூப்பர்8க்கு போனா மட்டும் என்ன பண்ணப்போறாங்க? அங்க மெக்ராத், போலாக், பாண்ட் ஓடி வர ஆரம்பிச்ச உடனே ஒன்னுக்கு அடிச்சுறுவாங்க. மொத ரவுண்ட்லயே வெளியே வந்தது நல்லதுதான். இல்ல இன்னும் சிரியா சிரிச்சுறுப்பாய்ங்க. கங்கூலி ஆடுற ஆட்டத்துக்கெல்லாம், இவருக்கெல்லாம் கிரிக்கெட் ஆடத்தெரியுமா தெரியாதான்னு கேப்பாய்ங்க! ஏனய்யா சும்மா அவங்களையே பிடிச்சுக்கிட்டு தொங்கறீங்க? இவ்ளோ பேர் இருக்கற தேசத்துல ஆளே இல்லியா? சரி படான், ஸ்ரீசாந்த் எங்க போனாங்க? அகார்கருக்கு இவங்க ரெண்டு பேரும் கொறஞ்சு போயிட்டாங்களா? அட்லீஸ்ட் படான் பேட்டிங்காவது பண்ணுவார், அகார்கர் மாதிரி ராக்கெட் ஷாட் அடிக்க மாட்டார்! ஐயோ கடவுளே, இந்த அகார்கர் கிட்டயிருந்து இந்திய டீம காப்பாத்த யாருமே இல்லியா?! இந்த சுரேஷ் ரெய்னான்னு ஒருத்தர் இருந்தாரே அவர் எங்க போனார்? ஒன்னுமே புரியல! என்ன செலக்ஷனோ? என்னா கமிட்டியோ!

எங்க அண்ணன் கவலைப்படுவார், இந்த ஜெனரேஷனுக்கு அப்புறம் அடுத்த ஜெனரேஷன் ப்ளேயர்ஸ் யாரும் சரியில்ல என்பார். இப்போ பாக்கும் போது இந்த ஜெனரேஷனே சரியில்ல, பின்ன என்ன அடுத்த ஜெனரேஷன்?

அடப்போங்கப்பா, காலையில அஞ்சு மணி வரை கண்ணு முழிச்சு பாத்ததுக்கு ஒரே ஒரு பலன். இந்திய கிரிக்கெட் தெகட்டிப் போச்சு. புட்பாலுக்கு மாறலாமான்னு யோசிச்சிட்டு இருக்கேன். அமேரிக்கவாசிகள் பேஸ்கட் பால் பார்ப்பீர்கள்! பெட்டர். இல்லியா? இந்த நேரத்தில வேற ஏதாவது கேம் (ஹாக்கி!) இந்தியாவில் பிரபலமாவதற்கு முயற்சி செய்தால் பலன் கிடைக்கும்! கிரிக்கெட்டர்ஸ்க்கு மட்டும் என்ன கொம்பா இருக்குங்கற இமேஜ உடைக்கலாம்! ஹாக்கி கப் வேற வருது! (ஆனா அவிங்களும் அப்படித்தான் முக்கியமான நேரத்தில சொதப்புவாங்க!) Best Wishes Hockey Team!

Cricket Team, Please Learn the basics! And learn from Bangladesh, what the word “team” stands for!

என்னோட ஜட்ஜ்மென்ட் (யார் கேட்டா?!) : Dissolve the team! Send every one to play Ranji or whatever local match (And dont recruit them how-so-ever they play, like you did for Jadeja!). Build a new young team – and a sub-team with a whole bunch of 11 members always ready – with Yuvraj as captain. Let them fight and let them win or loose! Yes. Winning or Loosing doesnt matter at all. We want a fight. A real fight! Fight and Die, Yeah, thats better!