ராக‌ம், பெய‌ர்க‌ள், அபி அப்பா ம‌ற்றும் அர‌சு ப‌ள்ளிக‌ள்.

மாச‌ற்ற‌ கொடி த‌லையைக்குணியும் தாம‌ரையே பாட‌ல் ரீதிகௌள‌ ராக‌ம் என்று சொல்லியிருக்கிறார். இசையின்ப‌ம் த‌ன் ப‌திவில் ராக‌த்தைக் க‌ண்டுபிடிக்க‌ பிற‌ பாட‌ல்க‌ளின் ராக‌ங்க‌ளை தெரிந்துகொண்டு அந்த‌ப் பாட‌லையும் இந்த‌ப்பாட‌லையும் க‌ம்பேர் செய்ய‌வேண்டும் என்றார். மாச‌ற்ற‌ கொடி க‌ண்க‌ள் இர‌ண்டால் பாட‌லும் இதே ராக‌ம் தான் என்கிறார். த‌லையைக் குணியும் தாம‌ரையேவும் க‌ண்க‌ள் இர‌ண்டாலும் ஒரே ராக‌த்திலா இருக்கிற‌து? இருப்ப‌து போல‌வும் இருக்கிற‌து. இல்லாத‌து போல‌வும் இருக்கிற‌து.

அது என்ன‌ ரீதிகௌள‌ ராக‌ம்? ஏன் இப்ப‌டி பெய‌ர்? ராக‌ங்க‌ள் தெரிந்துகொள்ள‌ ஏதாவ‌து சைட் (வெப் சைட்ட‌ சொன்னேம்ப்பா! நீங்க‌ வேற‌!) இருக்கிற‌தா என்ன‌? இருந்தால் சொல்ல‌வும்.

*

ராக‌ம் எப்ப‌டியோ, மாச‌ற்ற‌ கொடி பெய‌ர் ந‌ன்றாக‌ இருக்கிற‌து. மாச‌ற்ற‌ கொடி! எப்ப‌டி பிடிக்கிறாங்க‌ பாருங்க‌? என‌க்கு பிடித்த‌ ம‌ற்ற‌ ப்ளாக‌ர்க‌ளின் பெய‌ர்க‌ள்:
இட்லிவ‌டை
பினாத்த‌ல்
க‌ப்பிப்பய‌
வெட்டிப்ப‌ய‌ல்
ஒன்றுமில்லை (நிர்ம‌ல் இப்பொழுது ஏன் ப‌திவ‌தே இல்லை? இல்லை ஜாகை மாற்றிவிட்டாரா?)
பொட்டீக்க‌டை (டீ க்கு ம‌ட்டும் “” போட்டிருப்ப‌து!)
செந்த‌ழ‌ல ர‌வி (செந்த‌ழ‌ல்!)
ச‌ர்வேச‌ன் (அவ‌ருடைய‌ லோகோவும்)
வால் பைய‌ன்
அபி அப்பா

இன்னும் நிறைய‌ அப்ப‌ப்போ பாக்கிற‌ப்போ தோணும், இப்போ ஞாபக‌ம் வ‌ர‌ல‌.

*

அபி அப்பா அபியும் நானும் ப‌ட‌ம் வ‌ந்து ரொம்ப‌ நாள் க‌ழித்து ப‌ட‌ம் ப‌ற்றி விம‌ர்ச‌ன‌ம் எழுதியிருந்தார். நிறைய‌ விம‌ர்ச‌ன‌ங்க‌ளைப் ப‌டித்துவிட்டு ச‌ரி அபி அப்பா அபியின் அப்பாவாச்சே, அபியும் நானும் ப‌ற்றி என்ன‌ எழுதியிருக்கிறார் என்று படிக்க‌ப் போனேன், ப‌டித்து முடித்து விட்டு, கீழே பின்னூட்ட‌ங்க‌ளையும் வாசிக்கும் பொழுது என்னையும் அறியாம‌ல் நான் சிரித்து விட்டேன்.

அந்த‌ பின்னூட்ட‌ம்: என்னது‌ காந்தி செத்துட்டாரா?

அபி அப்பா, கேலிப‌ண்ற‌துக்காக‌ எழுதல‌, த‌ப்பா நினைச்சுக்காதீங்க‌. இந்த‌ மாதிரி பின்னூட்ட‌க்கார‌ர்க‌ளுக்கு ப‌ய‌ந்துட்டேதான் நிறைய‌ எழுதாம விட்டுட‌ வேண்டியிருக்கு. ந‌ம‌க்கு ஒரு விச‌ய‌ம் தெரிந்து அதை எழுத‌னும்னு தோணுற‌ப்போ, ப‌திவுல‌க‌மே அந்த‌ விச‌ய‌த்தை நார்நாரா கிழிச்சு காய‌ப்போட்றாங்க‌!

அத‌னால‌ தான் இப்போ ப‌ட‌ம் விம‌ர்ச‌ன‌ம் எல்லாம் நான் எழுத‌ற‌தேயில்ல‌. முன்ன‌ பேச்சுல‌ரா இருந்த‌ப்போ ப‌ட‌ம் பாக்குற‌து ஒன்னு தான் தொழில். எந்த‌ மொக்க‌ப் ப‌ட‌மா இருந்தாலும் தயங்காம போய் பாத்திட்டு வ‌ந்து ப‌திவு போடுவோம். இப்போ குடும்ப‌ம் பெருத்துப்போச்சு. நான் சிறுத்துப்போயிட்டேன்.

அப்ப‌டியும் அப்ப‌ப்போ ப‌ட‌ம் பாத்துட‌றேன். க‌டைசியாக‌ பாத்த‌ ப‌ட‌ம் க்ரான் டொரினோ.

செந்தில் என‌க்கு பிடித்த‌ ப‌திவ‌ர், அவ‌ருடைய‌ இந்த‌ ப‌திவு க‌ண்டிப்பாக‌ உங்க‌ளையும் சிரிக்க‌ச்செய்யும்.

*

சும்மா த‌மிழ்நாடு அர‌சு ப‌ள்ளிக‌ளைப் ப‌ற்றித் தேடிக்கொண்டிருந்த‌ பொழுது இந்த‌ http://www.coimbatoregovtschools.com வெப் சைட் கிடைத்த‌து. ந‌ல்ல‌ முய‌ற்சி. முத‌லில் பெற்றோர்க‌ளுக்கான‌ வெப் சைட் என்று தான் நினைத்தேன். அப்புற‌ம் வெப் சைட் மூல‌ம் பிள்ளைக‌ளின் க‌ல்வித் திற‌னைத் தெரிந்துகொள்ள‌க்கூடிய‌ பெற்றோர்க‌ள் எத‌ற்காக‌ அர‌சு ப‌ள்ளிக‌ளில் சேர்க்க‌ப்போகிறார்க‌ள் என்கிற‌ உண்மை பிற‌கு தான் உண‌ர்ந்தேன். இந்த‌ வெப் சைட் ந‌ன்கொடைக‌ளை நோக்கியே நிறுவ‌ப்ப‌ட்டிருக்கிற‌து. இதில் இருக்கும் ப‌ள்ளிக‌ளின் இன்ஃப்ரா ஸ்ட்ர‌க்ச்ச‌ர் நிலைமைக‌ளையும் தெரிந்துகொள்ள‌லாம். எப்ப‌டி இருந்தாலும் இது ஒரு ந‌ல்ல‌ முய‌ற்சியே.

ந‌ன்கொடைக‌ளை எதிர்பார்த்து நிற்கின‌ற‌ன‌வா அர‌சு ப‌ள்ளிக‌ள்? ஆசிரிய‌ர்க‌ளின் ச‌ம்ப‌ள‌ம் ம‌ட்டும் ஜெட் வேக‌த்தில் உய‌ர்ந்துகொண்டு போகும் பொழுது ஏன் ப‌ள்ளிக‌ளின் த‌ர‌த்தையும் அர‌சு உய‌ர்த்த‌ முன் வ‌ர‌க்கூடாது?

ஹிந்துவில் வெளிவ‌ந்த‌ இந்த‌ செய்தியும் என் க‌ண்ணில் ப‌ட்ட‌து.

*

அரசு பள்ளிகள்:எங்கேயிருக்கிறது பிழை?

இந்தக் கட்டுரையைப் படித்தீர்களா? The Beautiful Tree வாங்கவேண்டும். என்னை இந்தப் புத்தகத்தை வாங்கவைப்பதினால் இந்தக் கட்டுரை வெற்றிபெற்றுவிட்டது என்று வைத்துக்கொள்ளலாமா?

அதிருக்கட்டும், இந்திய அரசுப் பள்ளிகளின் நிலை நன்றாக இருக்கிறதா? என்னைக் கேட்டால் Higher Secondary கொஞ்சம் தேவலாம். என் அக்காவே +1, +2 அரசு பள்ளியில் தான் படித்தவர். அவர் பதிநான்கு ஆண்டுகளுக்கு முன்னர் ஆயிரம் மதிப்பெண்கள் வாங்கினார். ஆனால் அரசு பள்ளிகளில் படிக்கும் எத்தனை மாணவர்கள் இதே போல அதிக மதிப்பெண்கள் வாங்குகிறார்கள்? மிக மிக குறைவாகத்தான் இருக்கமுடியும்.

எலிமென்டரி பள்ளிகள் மிக மோசமான நிலையில் இருக்கின்றன என்று நினைக்கிறேன். நான் டியூசன் எடுக்கும் காலத்தில் எங்களிடம் ஒரு மாணவன் வந்தான், அவன் ஆறாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தான். அவனுடைய அப்பா என் அண்ணனிடம் இவன எப்படியாவது எட்டாவது பாஸ் பண்ண வெச்சிருங்கன்னு கெஞ்சிட்டுப் போனார். எங்களிடம் வந்தபொழுது அந்த பையனுக்கு தமிழ் எழுத்துக்கூட்டி வாசிக்கத்தெரியாது. ஆங்கிலம் கேட்கவே வேண்டாம்.அதே சமயத்தில் எங்களிடம் அருகிலிருந்த சில மெட்ரிக் பள்ளியில் படித்த மாணவர்களும் இருந்தார்கள். அவர்களில் மூன்றாம் வகுப்பு மாணவன் இவனை விட நன்றாக தமிழும் ஆங்கிலமும் ஏன் ஹிந்தியும் கூட வாசித்தான். மெட்ரிக் பள்ளியில் படித்த மாணவனுடைய கல்வி முறை வேறு. அரசு பள்ளி மாணவனுடைய கல்வி முறை வேறு. அவன் மாதா மாதம் நூற்றிஎன்பது ரூபாய் கட்டவேண்டும். இவனுக்கு அது இல்லை. ஆனால் அவனுக்கு சொல்லித்தந்த ஆசிரியர்கள் வெறும் ஆயிரம் ரூபாய் தான் சம்பளம் வாங்கினார்கள். இவனுக்கு சொல்லித்தரும் வாத்தியார்கள் கண்டிப்பாக ஐயாயிரம் ரூபாய், ஏன் அதற்கு மேலும், சம்பளம் வாங்குவார்கள். அப்புறம் ஏன் இருவருக்குள் இந்த அதீத வித்தியாசம்?

இன்றும் தனியார் பள்ளி ஆசிரியர்கள் மிகக் குறைவாகவே சம்பளம் வாங்குகிறார்கள். ஆனால் தனியார் பள்ளிகளின் கல்வித்தரம் அரசுப் பள்ளிகளை விட நன்றாக இருக்கிறது என்று ஒத்துக்கொண்டு தானாகவேண்டும். அரசு பள்ளி ஆசிரியர்கள் தனியார் பள்ளிகளில் வேலை பார்க்கும் ஆசிரியர்களை விட மிக மிக அதிகமான சம்பளம் வாங்குகிறார்கள். பம்பர் போனஸ் வேறு கிடைக்கிறது. ஆனால் அரசு பள்ளிகளின் கல்வித்தரம் மிக மிக குறைவாக இருக்கிறது என்பதை ஒத்துக்கொள்கிறீர்களா இல்லையா?

எங்கே இருக்கிறது பிழை? எனக்கு புரியவில்லை.

என்னுடைய கனவு: மிக குறைந்த கட்டணத்தில் உயர்தர கல்வித்தரம் அளிக்கும் பள்ளிகளை உருவாக்கவேண்டும் என்பதே. சிரிக்காதீர்கள். கனவு. உயர்தர கல்வித்தரம் கொடுக்கவெண்டும் என்றால் அவ்வாறான ஆசிரியர்களைத் தேடிக்கண்டுபிடிக்கவேண்டும். அவர்கள் அதிக சம்பளம் கேட்ப்பார்கள், இல்லியா?

உயர்தர கல்வி கற்றுக்கொடுப்பவர்கள், அதிக சம்பளம் கேட்ப்பார்கள் = True.
அதிக சம்பளம் வாங்குபவர்கள், உயர்தர கல்வி கற்றுக்கொடுப்பார்கள் = Looks logically true.

நம்மிடம்(அரசு பள்ளிகள்) அதிக சம்பளம் வாங்கும் ஆசிரியர்கள் ஏற்கனவே இருக்கிறார்கள், கண்டிப்பாக அவர்கள் உயர்தர கல்வி கற்றுத்தந்துதானாக வேண்டும்? ஏன் அவ்வாறு செய்வதில்லை? எங்கேயிருக்கிறது பிழை?