IRNSS-1I – ISROவின் புதிய சாட்டிலைட் நாளை வின்னில் பறக்கிறது

ஸ்ரீஹரிகோட்டோ நாளை வியாழக்கிழமையன்று புதிய வழிசொல்லி (Navigation) செயற்கைக்கோளை வின்னில் ஏவத்தயாராகி வருகிறது. இந்த மாதத்தில் வின்னில் ஏவப்பட்ட இரண்டாவது செயற்கைக்கோள் இது.

சென்னையிலிருந்து 80 கிமீ தொலைவிலிருக்கும் சதிஷ் தாவன் வானாராய்ச்சி மைய்யத்திலிருந்து இந்த செயற்கைக்கோள் செலுத்தப்படும். 1A விலிருந்து 1G வரை, ஜுலை 2013லிருந்து ஏப்ரல் 2016வரை அனுப்பட்ட இந்தியாவில் பிற 7 செயற்கைக்கோள்களுடன் இது இணைந்து கொள்ளும்.

US GPSக்கு இணையாக வழிசொல்லி செயற்கோள்களை இந்தியாவின் இஸ்ரோ உருவாக்கியிருக்கிறது. இது பொதுமக்களுக்கும் மிலிட்டரிக்கும் இருக்கும் இடத்தைப் பற்றிய டேட்டாவைக் கொடுக்கும்.


  • ஒரு நபரின் (அல்லது பொருளின்) இடத்தையும், நேரத்தையும், பயனிக்கும் வழியையும் கண்டுபிடிக்க உதவும் சிக்னல்களை அனுப்பும். இப்பொழுது நாம் உபயொகப்படுத்தும் ஜிபிஎஸ் அமெரிக்காவினுடைய செயற்கொள்களால் நமக்குக் கிடைக்கிறது.
  • 1,425 எடையுள்ள இந்த செயற்கைக்கோள் 1A விலிருந்து 1G வரை, ஜுலை 2013லிருந்து ஏப்ரல் 2016வரை அனுப்பட்ட இந்தியாவில் பிற 7 செயற்கைக்கோள்களுடன் இது இணைந்து கொள்ளும்.
  • NavICயின் எட்டாவது செயற்கைக்கொளான இது, PSLV ராக்கட்டில் அனுப்பப்படும்.

மார்ச் 29 அன்றுதான் தொடர்புக்கான செயற்கைக்கோளை இஸ்ரோ அனுப்பியது. இது அனுப்பிய மூன்றாம் நாள் தன்னுடைய சுற்றுக்கு சென்றுவிட்டது, ஆனால் எந்த சிக்னல் அனுப்புவதை நிறுத்திக்கொண்டது.

இந்த செயற்கைக்கோள்கள் பத்துவருடம் வேலை செய்யும் என்று நம்பப்பட்டது ஆனால் IRNSS-1A வின் ருபீடியம் அடாமிக் கடிகாரம் அனுப்பிய இரண்டாவது ஆண்டே வேலை செய்யாமல் போய்விட்டது.

ஒரு நபரின் தற்போதைய இடத்தையோ அல்லது நேரத்தையோ சரியாக 24 மணி நேரமும் கணக்கிட இந்த ஏழு செயற்கைக்கோள்களும் சரியாக வேலைசெய்ய வேண்டும்.