(சிறுகதை)
இங்கே படிக்கவும்.
ஏனோ feedburner இந்தப் பதிவை விட்டுவிட்டது. அதனால் ஸ்பெஷல் update for rss readers. 🙂
(சிறுகதை)
இங்கே படிக்கவும்.
ஏனோ feedburner இந்தப் பதிவை விட்டுவிட்டது. அதனால் ஸ்பெஷல் update for rss readers. 🙂
ஆபீஸ்:
இந்த வருஷம் சைனீஸ் நியூ இயர் குடீஸ் என்ன தெரியுமா?
என்னது?
2.2 மில்லியன் டாலர் லாட்டரி சீட்டு?
வாவ்..வாங்கிட்டியா?
ம்ம்..தோ..
பொறு நான் போய் வாங்கிட்டு வந்திடறேன்..
***
2.2 மில்லியன் டாலர்ன்னா எவ்ளோ தெரியுமா?
2.2 மில்லியன் டாலர்.
ம்ம்ச்சு..இந்திய ரூபாய் எவ்ளோ?
கருமம்..இந்த என் ஆர் ஐ பசங்களுக்கு ரத்தத்திலே ஊறுனதுப்பா..ஊறுகாய் வாங்கப்போனாக்கூட இந்திய ரூபாய்ல எவ்வளவுன்னு கணக்குப் பாக்காம வாங்கவே மாட்டனுங்க..
நீ மட்டும் என்னவாம்?
ம்ம்..கிட்டத்தட்ட ஏழரைக்கோடி ரூபாய்..
வாவ்..ஏழரைக்கோடி ரூபாய்ன்னா?
டேய் டுபாக்கூர் மண்டையா..இனி என்ன இந்தோனேசியா ரூபாய்ல கணக்குப் போடனுமா? கால்குலேட்டர் க்ராஷ் ஆயிடும்..
ஆமா ஏழரைக்கோடி ரூபாய வெச்சு நீ என்ன பண்ணப்போற?
இப்ப இருக்கிற வெலவாசீல சென்னையில ஒரு க்ரவுண்ட் நெலம் கூட வாங்கமுடியாது..
என்னடா மாப்ள ஏழரைக்கோடி ரூபாய் கூட பத்தலைன்னா என்னதாண்டா பண்றது?
சரி நீ என்ன பண்ணுவ?
ஒரு காண்டோ வாங்குவேன்..
சிங்கப்பூர்லையா?
பின்ன..தாய்லந்துலையா?
ஏன்டா இவ்ளோ ரூபாய் கொடுத்தும் இந்தியா போக மாட்டியா?
இல்லடா மாப்ள அங்க எல்லாம் நம்மளை மதிக்கமாட்டானுவடா.. ஒரு லட்சம் கோடி அடிச்சிட்டிருக்கானுவ பிச்சாத்து ஏழரைக்கோடியவா மதிக்கப்போறனுங்க?
வாஸ்தவம் தான்..
அப்புறம்?
***
அபீஸ்ல ப்ரசாத் சாப்பிட்டுக்கொண்டிருக்கிறார்..சாம்பார் முடித்துவிட்டார்..அடுத்தது ரசம்..
அஜய் சாப்பாட்டுக்கூடையை தூக்கிக்கொண்டு உள்ளே வருகிறார்.
வாங்க அஜய்..தயிர் வேணுமா..
உங்களுக்கு வேணான்னா கொடுங்க..
(அட்டக்கத்தி..தெளிவாவே கேக்கமாட்டான்..)
இருக்கு அஜய் எடுத்துக்கோங்க.. சரி..லாட்டரி வாங்கிட்டீங்களா?
வாங்கிட்டேன்..அதுல பாத்தீங்களா ஆபீஸ்ல எல்லோரோட லாட்டரி சீட்டு நம்பரும் ஒன்னுல ஆரம்பிக்குது..
ஓகோ..
ஆமா..நீங்க பாக்கலையா? ஆனா முடியறது வேற நம்பர்ல முடிஞ்சாலும் மொத மூணு நம்பர் கிட்டத்தட்ட ஒன்னு தான்..
ஓகோ..
ஆனா ஜாவா டீம் பசங்களுக்கு சிலருக்கு கடைசி நம்பர் மட்டும் ஒன்னா இருக்கு..
ஓ..
நான் கூகிள் பண்ணிப்பார்த்தேன்..எந்த சைட்டுன்னு தெரிஞ்சிடுச்சு..
என்ன சைட்? எதுக்கு?
ஹலோ..லாட்டரி ரிசல்ட் எங்க பாப்பீங்க??
ஓ..ஓகே ஓகே..
இப்போ போன வருசம் கூட ஒருத்தனுக்கு 3.3 மில்லியன் டாலர் விழுந்துச்சாம்..
ஓ..
கவர்மெண்ட என்ன பண்ணாங்க தெரியுமா?
ம்ம்ஹ¥ம்.. (கையில் எடுத்துவிட்ட ரசம் சாதத்தை விழுங்குவதா வேண்டாமா என்று யோசித்துக்கொண்டிருக்கிறார்)
அவனுக்கு 33.33 % வட்டி போட்டாங்க..அப்புறம் 7.54%
குட்டி போட்டாங்களா? (பக்கத்தில் அதுவரை பொறுமையாக சாப்பிட்டுக்கொண்டிருந்த திணேஷ் கேட்டான்)
(விண்ணைக்காப்பான் ஒருவன் மண்ணைக்காப்பான் ஒருவன்..உன்னை என்னை காக்கும் அவனே அவனே இறைவன்..என்கிற பாடல் ரிங் டோனாய் ஒலிக்கிறது)
அ..ஆஹா..இவன் இங்க உக்காந்திருக்கறத பாக்கலையே..(மனதுக்குள் அஜய்)
ப்ரசாத் நமட்டு சிரிப்பு சிரித்து ரசம் சோற்றை அவசர அவசரமாக விழுங்குகிறார்..
அஜய்: இல்ல..7.54%
யோவ்..லாட்டரி சீட்டு விழுந்தா எதுக்குய்யா வட்டி போடறாங்க? அவன் என்ன கடனா வாங்கினான்? கேக்கறவன் ப்ரசாத்தா இருந்தா அஜய் எக்ஸ்டரா உப்பு போடாம சாப்பிட்டாருன்னு சொல்வீங்க போல இருக்கே..
அஜய் தனது டிபன் பாக்ஸ¤க்கு அருகில் வைத்திருந்த உப்பு டப்பாவையே பார்க்கிறார்..
ஆனா மதிய லஞ்சுக்கு கூட உப்பு டப்பாவும் ஊறுகா டப்பாவும் கொண்டு வர்ற ஆள் நீதான்யா..
ஏன் சாப்பிடறதில என்ன தப்பு..உப்புல என்னன்ன இருக்கு தெரியுமா? இந்த உப்பில ஐயோடின் 3.4% கம்மி..
(ஐயையோ..ப்ரசாத் சாப்பிட்டும் சாப்பிடாம எழுந்து ஓடுகிறார்)
அடுத்து பக்கத்தில் உர்கார்ந்து ஆந்த்ரா மீல்ஸ கட்டிட்டிருந்த முஸ்தபா கிட்ட அஜய் பேச ஆரம்பித்தார்..முஸ்தபாவுக்கு தமிழ் தெல்லேது..
திஸ் இஸ் வாழக்காய் ரைட்?
யெஸ்..யு வாண்ட்?
யூ டோண்ட் வாண்ட் ரைட்?
இட்ஸ் ஓகே..
யூ பீபிள் குக் வாழக்காய் ஆல்சோ?
முஸ்தபா முழிக்கிறார்..
நோ..ஐ மீன்..யூ தெலுங்கு பீபிள் ஆல்சோ குக் வாழக்காவா?
யெஸ் யெஸ்..கேன் பை ஒன்லி ·ப்ரம் முஸ்தபா..
ஓ யூ பை ·ப்ரம் முஸ்தபா ரைட்?
யெஸ் யெஸ்..
முஸ்தபா காஸ்ட்லி ரைட்?
நோ..நோ..ஒகே ஓகே ப்ரைஸ்..
தே கீப் ஓல்ட் வாழக்காய் ரைட்?
முஸ்தபா பேசவில்லை..
யு காட் லாட்டரி டிக்கெட் ரைட்?
முஸ்தபா ரெண்டு மூணு வாழக்காயை ஒன்றாக சேர்த்து அமுக்கிக்கொண்டார்..
அஜய் கண்டக்டரா இருந்திருந்தார்ன்னா அவர் ரைட் சொல்ற அழகுக்கே இந்நேரம் ரஜினிகாந்தா ஆகிருப்பார்..
***
(விண்ணைக்காப்பான் ஒருவன்..மண்ணைக்காப்பான் ஒருவன்..)
திணேஷ் வருகிறார்..
ப்ரசாத் ஆபீஸல உட்கார்ந்து ஹாயாக ·போன் பேசிக்கொண்டு இருக்கிறார்..
என்னய்யா..லாட்டரி சீட்டு தான் வாங்கிருக்க..என்னமோ மில்லியன் டாலர் விழுந்துட்டா மாதிரி வேலைசெய்யாம ஹாயா ·போன் பேசிட்டு இருக்க..
நாராயணன் எங்க?
அவருதான் லீவுல இருக்கார்ல..
எப்ப வருவார்?
ஒரு வாரம் ஆகும்..
அப்ப அவருக்கு லாட்டரி?
நான் வாங்கிட்டேன்..
அது சரி..எந்த லாட்டரி உங்களோடது..எது அவரோடது?
அது ரிசல்ட் பாத்ததுக்கு அப்புறம் தான் சொல்லமுடியும்..
***
(ரஞ்சிதாவின் கண்ணா என் சேலைக்குள்ள கட்டெரும்பு புகுந்திருச்சு..டியூன் செல்·போன் ரிங் டோனாய் எங்கோ ஒலிக்கிறது..)
விஜே வருகிறார்..
விஜே யாருன்னு யோசிக்கிறவங்களுக்கு..
விஜே ஒரு ஜெண்டில்மேன்..குஞ்சுமோன்..தியானச்செம்மல்..கம்ப்யூட்டர் துறையில் பணிபுரியும் ஒரு சாமியார்..கார்ப்பரேட் சாமியார்..மேலுலகம் கீழுலகம் என்று அனைத்தையும் கரைத்து குடித்துவைத்திருப்பவர்..ஆபீஸ்ல வேலை செஞ்சிட்டிருக்கப்போ கூடு விட்டு கூடு பாஞ்சு மக்கள் ஒழுங்கா வேலை செய்றாங்களான்னு செக் பண்ணுவார்..
ஒரு முறை அவர் நம்ம திணேஷிடம்..
(ப்ளாஷ்பேக்)
திணேஷ் வேலை செய்துகொண்டிருக்கிறார்..அல்லது கம்ப்யூட்டர் திரையை வெறித்துப்பார்த்துகொண்டிருக்கிறார்..
கார்பரேட் சாமியார் என்ட்ரி (கண்ணா என் சேலைக்குள்ள கட்டெறும்பு புகுந்திருச்சு.. டியூன்)
இந்த ஞாயித்துகிழமை நீங்க ·ப்ரியா?
ஏன் எதுக்கு?
தியானம் செஞ்சிருக்கீங்களா?
எதுக்கு?
என்ன இப்படி கேக்கறீங்க?
ஆமா எதுக்கு தியானம் செய்யனும்?
மனம் நிம்மதியா இருக்கத்தான்..
நீங்க செய்றீங்களா?
ஆமா..வாரா வாராம்…எங்களுக்கு ஒரு மாஸ்டர் இருக்கார்..
புரோட்டா மாஸ்டரா?
இல்ல..தியானம் சொல்லிக்கொடுக்கிற மாஸ்டர்..
ம்ம்..நான் தியானம் பண்ணிருக்கேன்..
எப்போ?
எங்க ஊர்ல அன்னை அரவிந்த்சுவாமி ஆஸ்ரம் ஒன்னு இருக்கு..
என்ன அரவிந்த்சுவாமி ஆஸ்ரமா? புதுசா இருக்கே..அதென்ன அன்னை அரவிந்த்சுவாமி?
அர்விந்த்சுவாமியோட அன்னை…அங்க தியானம் பண்ணிருக்கேன்..
சரி..அப்புறம் ஏன் விட்டுட்டீங்க?
நான் விட்டுட்டேன்னு சொல்லவேயில்லையே..
இப்பவும் பண்ணறீங்களா..
நேத்து நைட்லருந்து காலைல வரைக்கும் பண்ணிட்டுதான் இருந்தேன்..
ஜோக்கா..எங்க மாஸ்டர்கிட்ட வாங்க..நல்லா சொல்லிக்கொடுபபார்..
எது?
தியானம் தான்..
யாரு உங்க மாஸ்டர்?
ராவணசந்த்ரா..எங்க க்ரூப் பேரு சகாய மார்க்..
என்னது சகாய மார்க்கா? என்னய்யா பேரே ஒரு மார்க்கமா இருக்கு..
ஆமா..வாரா வாரம் எங்க மாஸ்டர் கிட்டருந்து மெயில் வரும்..
என்ன மெயில்?
இனி என்ன நடக்கப்போகுதுன்னு?
எங்க என்ன நடக்கப்போகுது?
இந்த உலகத்தில..இனி என்னவெல்லாம் நடக்கும்னு..மாஸ்டர் கிட்டருந்து..மெயில் வரும்..
ஏன் மாஸ்டர் உங்களப்பாக்கிறப்போ நேர்லையே சொல்லமாட்டாரா..மெயில் தான் அனுப்புவாரா?
அவர் செத்து நிறைய வருஷம் ஆச்சு..
என்னது.. (திணேஷ¤க்கு தூக்கம் கலைந்துவிட்டது..உங்களுக்கும் கலைஞ்சிருக்கும்னு நினைக்கிறேன்.. சாமியார்கிட்ட கொஞ்ச நேரம் பேசினீங்கன்ன மூளையே கலங்கிரும்..டெரர் சாமியார்..)
ஆமா..
யோவ் உனக்கு மரகிர கழண்டிடுச்சா..செத்தவன் எப்படிய்யா மெயில் அனுப்பமுடியும்?
அனுப்பராரே..நானே பாத்திருக்கனே..
என்ன பாத்திருக்கீங்க..
அவர் அனுப்பிச்ச மெயில..
லூசாயா நீ?
என்ன திணேஷ் நீங்களே இப்படி பேசறீங்க? நீங்க ரொம்ப நல்லவருன்னு நெனச்சேன்..
நீ சொல்ற உட்டாலக்கடியெல்லாம் மூடிட்டு கேட்டிட்டிருந்தா நல்லவனா?
திணேஷ்..என் நம்பிக்கை இது..ஏன் என்ன ஹர்ட் பண்றீங்க?
யோவ் என்னய்யா வம்பா போச்சு..சும்மா உக்காந்திருக்கிறவன் கிட்ட வந்து மாஸ்டர் மெயில்ல தோச சுடறாரு ஆ ·ப்பாயில் சுடறாருன்னு உதார் விட்டுட்டு இப்ப என்ன ஹர்ட் அது இதுன்னு பீலா விடற..மொதல்ல இடத்த காலி பண்ணு..
ஆமா..உங்க மாஸ்டர் எங்கிருந்து மெயில் அனுப்பறார்? ஐபி அட்ரச ட்ரேஸ் பண்ணவேண்டியதுதான?
அவர் வேற காலக்ஸில இருக்கார்..
ஆஹா உக்காந்து யோசிப்பாய்ங்களோ?!
***
என்ன வீஜே (கண்ணா என் சேலைக்குள்ள கட்டெறும்பு புகுந்திருச்சு)
சொல்லுங்க திணேஷ்
உங்களுக்கு லாட்டரி விழுமா விழாதான்னு உங்க மாஸ்டர் கிட்டருந்து மெயில் வரலையா?
இதெல்லாம் இந்த உலகத்தில கண நேரம் நமக்கு கிடைக்கப்போகிற சந்தோஷம்..அத நினைச்சிட்டு இருக்கக்கூடாது..
என்னாது? அப்படீன்னா உனக்கு லாட்டரி வேணாம்..சரி என்கிட்ட கொடுத்திடு..
ஹா..ஹா..ஹா..ஹா…
யோவ் எதுக்குய்யா சிரிக்கிற..
நாம எல்லாம் ஒரு இடத்துக்குத் தான போறோம்?
என்ன ஒரு இடத்துக்கு போறோமா? எங்க போறோம்..
ஒருத்தன் கிட்டருந்து வந்தோம்..
என்னய்யா சொல்ற? யாருய்யா அந்த ஒருத்தன்?
நம்மலையெல்லாம் படச்ச கடவுள்..
என்னது உன்னைய கடவுள் படைச்சாரா? அப்புறம் பரிணாம வளர்ச்சின்னு சொல்றாங்களே அது என்ன?
அது மூள வளர்ச்சி இல்லாதவங்க கட்டிவிடற கதை..
·பாசில்ஸ் எடுக்கறாங்களே?
·பாசில யார் எடுக்கிறா? ·பாசில் தான சினிமா எடுக்கிறார்?
அது சரி..
அதனால தான் எங்க க்ரூபில இருக்கிற எல்லோரும் இரவு ஒன்பது மணிக்கு கூட்டுப்பிரார்த்தனை செய்வோம்..
எனனது கூட்டுப்பொறியல் சாப்பிடுவீங்களா?
கூட்டுப்பிரார்த்தனை..
டெய்லி ஒன்னா உங்க வீட்ல கூடுவீங்களா?
இல்ல..அவங்க அவங்க வீட்ல இருந்துட்டே..
வீடியோ காண்·பரண்ஸ்லையா
இல்ல. அவங்க அவங்க வீட்ல இருந்துட்டே..மனசாற..ஒரே நேரத்துல எல்லோரும் ப்ரார்த்தனை செஞ்சா..
செஞ்சா?
ஒரு வேவ்லென்த் கிடைக்கும்?
வேவ்லென்த்தா?
ஒரு ·ப்ரிக்வென்ஸி..
என்னய்யா உளர்ற..வேவ்லெந்த்துங்கற..·ப்ரீக்வென்ஸிங்கற..என்னய்யா சொல்ற?
உங்களுக்கு புரியாது..அத உணர்ந்து பாத்தாத்தான் தெரியும்..
பரவாயில்ல..அது ஏதோ வேவ்லெந்துன்னு சொன்னியே..அது என்ன வேவ்லெந்த்..லாம்டா அளவு என்ன?
இதெல்லாம் சொல்லிப்புரியவெக்கமுடியாது..
பரவாயில்ல சொல்லுங்க பார்ப்போம்..
திணேஷ்..மாம்பழம் இனிக்கும்னு நான் உங்ககிட்ட சொல்றேன்..இனிப்பா..அப்படீன்னா என்னன்னு கேட்டா நான் எப்படி.. விளக்கவா முடியும்..சாப்டாத்தான தெரியும்..
ம்ம்..1945ல தியாகராசபாகவதர் சொல்லிட்டிருந்த டயலாக்க இன்னும் அதே எபக்ட்டோட சொல்லிட்டு டெரர்ரா பாத்தா என்ன அர்த்தம்..எப்படி புடிச்சேன் பாத்தியான்னா?
ம்ம்..
யோவ் லூசு..சுவையெல்லாம் எப்பவோ டாக்குமெண்ட் பண்ணியாச்சு..உங்களுக்கு இனிப்பு சுவைய ஸ்டிமுலேட்டே பண்ணமுடியும்..சுவைங்கறது மூளைக்குப் போற எலக்ட்ரிக்கல் சிக்னல்..வேலைய போய் பாருய்யா.
***
நாளைக்கு லாட்டரி ரிசல்ட் வந்திடுமா?
ஆமா..யாராவது மில்லியனர் ஆனா..என்கிட்ட சொல்லாதீங்கய்யா..என் வயித்தெரிச்சல கொட்டிக்காதீங்க..
***
திணேஷ்..என்னைக்குமே காலைல வேகமா எழுந்திருக்காதவன்..அன்னைக்கு ஆறு மணிக்கு எழுந்திருக்கிறான்..ஆபீஸ¤க்கு லீவு வேற..இந்நேரத்தில் எதுக்கு எந்திர்க்கான்னு அவன் மனைவி கூட அதிசியமா பாத்தா..
லேப்டாப்ப தொறந்து..சிங்கப்பூர் பூல்ஸ் வெப் சைட் போய் தேடினான்..
ctrl+f சர்ச் விண்டோ வந்தது..1237.. நம்பர் டைப் செய்தான்..பாதி டைப் செய்துகொண்டிருக்கும்பொழுதே செர்ச் விண்டோ சிவப்பு காட்டியது..
பிம்பிலிக்கா பிலிப்பா..மாமா பிஸ்கோத்து..
கம்ப்யூட்டர் வந்ததுக்கப்புறம் லாட்டரி டிக்கெட் ரிசலட் ஒவ்வொரு நம்பரா தெடுற த்ரில் கூட இல்ல..
***
ஐயையோ வேற யாருக்காவது விழுந்திருக்கப்போவுதுன்னு அவனுக்கு வயித்த கலக்க ஆரம்பிச்சிருச்சு..ப்ரசாத்துக்கு கால் பண்ணான்..
இல்ல திணேஷ் நான் இன்னும் காங்கல..கீழ இருக்கேன்..அப்புறம் பாத்திட்டு சொல்றேன்..
***
அன்றைக்கு மதியம் வெளியே போய் சாப்பிட்டுவிட்டு..இரவு வீட்டிற்கு வந்து..தூங்கப்போகும் பொழுது.. ·போன் மணி அடித்தது..
ஹலோ..
நான் தான் முருகன் பேசறேன்..
என்ன முருகன்..
ப்ரசாத்துக்கு லாட்டரி விழுந்துட்டு தெரியுமா?
என்னாது?
ஆமா..
எனக்கு பக்கத்தில தான் விஜே இருக்கார்..அவரு வெலவெலத்துப் போயிட்டார்..
எவ்ளோ?
250,000 டாலர்..
3.3 மில்லியன் இல்லையா?
இல்ல ராஜ்..250,000 கிடைக்கிறதெ பெரிசு இல்லையா?
ஆமா ஆமா..எங்க அவரு..
தெரியல..நாங்க மலேசியா வந்தோம்..ப்ரேசர் ஹில்ஸ்ல இருக்கோம்..
ஒகே ஓகே..என்ஜாய்..
அன்றைக்கு இரவு திணேஷ¤க்கு தூக்கம் பிடிக்கவில்லை.
***
பிறகு மூன்று நாட்கள் ப்ரசாத்தை பிடிக்கவே முடியவில்லை..
***
மூன்று நாட்கள் கழித்து. திணேஷ் ஆபீஸ¤க்கு வந்தான். பக்கத்து சீட் முருகன் சொன்னார்: திணேஷ் உனக்கு சேதி தெரியுமா? என்ன செய்தி? ப்ரசாத்துக்கு லாட்டரி விழுந்திருக்கு. உண்மையாவா? திணேஷ் திக்குமுக்காடிப்போயிட்டான். தான் நல்லாயில்லாட்டியும் மத்தவங்க நல்லாஆஆஆஆஅ இருக்கனும்னு நினைக்கிற சமூகம் இல்லையா இது? உண்மையாவா முருகன்? அட நீ வேற திணேஷ்.. சும்மா கெளப்பிவிட்டிட்டிருக்கோம்..உக்காரு.. பக்கத்து சீட் தருண் முருகனிடம், என்ன திணேஷ் நம்பிட்டார் போல? என்று சிரித்தார்..
முருகனின் செல்போன் மெதுவாகச் சிணுங்கியது..
ஹலோ
ஆமா
அட சதீஷா?
(சதீஷ் ப்ரசாத்தின் நண்பர். இப்பொழுது தனியாக கண்ஸல்டண்ட் கம்பெனி வச்சிருக்கார்.)
உங்களுக்கு எப்படித் தெரியும்?
விஜே சொன்னாரா?
(விஜேவும் ப்ரசாத்தும் சதீஷ¤ம் சிங்கப்பூருக்கு வடை சுட வரும் முன் பெங்களூரில் மாவாட்டிக்கொண்டிருந்தனர்)
அதுக்குள்ள சொல்லிட்டாரா?
இன்னும் ப்ரசாத் கைல வாங்கலியே..
நம்பர் பாத்தாச்சு.. ஆமா விழுந்திருக்கு..
நம்பரா? என்கிட்ட இல்லியே..
பொய்யா? அவனுக்கே கால் பண்ணிக்கேட்டுக்கிடுங்க..
ஆமா சதீஷ்.. லாட்டரிக்காகத்தான் போயிருக்கான்..
சிக்னல் வீக்கா இருக்கும்..பொறுத்துப்பண்ணுங்க..கிடைக்கும்..
250,000 டாலர்..
தெரியலையே.. அவன் வந்தாத்தான் தெரியும்..
சரி..
பை..
·போனை வைத்துவிட்டு..சிரித்தார் முருகன். இங்கவாங்க. நியூஸ் எப்படி தீயாப்பரவுது பாத்தீங்களா? விஜே உண்மைன்னு நம்பிட்டாரு..அதனால தான் சதீஷ்கிட்ட கால் பண்ணி சொல்லிருக்காரு.. சரி இது தான் மேட்டர்: ப்ரசாத்துக்கு 250,000 டாலர் லாட்டரி விழுந்திருக்கு..சரியா..அப்படியே மெயின்டையின் பண்ணிக்கிடுங்க..
தருண் உற்சாகமாய் சிரிக்கிறார்..
என்னா ஒரு வில்லத்தனம்?
***
கொஞ்ச நேரம் கழித்து..அஜய் வந்தார்..
திணேஷைக் கடந்து தான் முருகனிடம் போகவேண்டும்..அஜய் நேராக முருகனிடம் போனார்..
திணெஷ் தருணைப் பார்த்துக் கண்ணடித்தார்..
முருகன்..
…
முருகன்..
..
முருகன்..
ஒரு நிமிஷம் அஜய்…முக்கியமான வேலை..
..
அஜய் நிலை கொள்ளாமல் தவிக்கிறார்..
தருண்..
….
தருண்..
…
தருண்..
(தருண் போனை எடுத்துக்காதில் வைத்துக்கொள்கிறார்..)
இப்பொழுது வேறு வழியில்லை..திணேஷிடம் தான் பேசியாக வேண்டும்..
ஏன்னா அங்க உக்காத்திருந்த இன்னொரு நபர் ஜ·ப்ரூலுக்கு தமிழ் தெரியாது..
நம்ம அஜய்யோ சுத்தத் தமிழர்..ரத்தத்தின் ரத்தம்.. (கேட்டீங்கன்னா ஹிந்தியில ப்ராஷ்த்தியமா பரிட்சை எழுதி ப்ளாக் பெல்ட் வாங்கிருக்கேன்னு சொல்லுவார்)
வேறு வழியின்றி சற்று தூரம் நடந்து அங்கிருந்த பாராவிடம் பேச்சுக்கொடுத்தார்..
பாரா..
ம்ம்.. சொல்லுங்க அஜய்..
ப்ரசாத்துக்கு லாட்டரி விழுந்திருக்காமே…?
ஆமா அஜய்.. உங்களுக்கு விழலியா?
நமக்கெல்லாம் எங்க பாரா விழும்? ஆமா எவ்வளவு?
500,000 டாலர்..
என்னது 500,000 டாலரா? (அஜய் அப்படியே ஷாக் ஆகிட்டாரு) 250,000 டால்ர்ன்ல்ல சொன்னாங்க?
ஓ அப்படியா? எனக்கு 500,000 டாலர்ன்லையா சொன்னாய்ங்க?
(அடச்சே மனதுக்குள் அஜய்)
உங்களையும் குழப்பிட்டாங்களா?
(முருகன் இன்னும் பிஸிய இருக்கிறார்)
அஜய் கிளம்புகிறார்..
அஜய் வாங்க இங்க..
(அஜய் ஓட்டமும் நடையுமா வருகிறார்..)
என்ன அஜய்..இந்தப்பக்கம்?
தருண் ·பொனை வைத்துவிடுகிறார்..திணேஷ் திரும்பி உட்காருகிறார்..
(அஜய் முருகனிடம் வந்து நின்று..திணேஷைக் கூர்ந்து கவனிக்கிறார்..பிறகு)
என்ன முருகன்..ப்ரசாத்துக்கு லாட்டரி விழுந்திருக்காமே?
ஆமா..
எவ்வளவு?
250,000 டாலர்..
அடேங்கப்பா.. உண்மையாவா?
திணேஷ்: இல்ல உல்லுலாய்க்கு..
(அஹ்ஹ்ஹ்..ஆஹா..கெளம்பிட்டாய்ங்கடா..)
திணேஷக் கூர்ந்து பார்த்தபடி: ப்ராசாத் இப்போ எங்கே?
திணேஷ்: கூகிள் பண்ணுங்க..
நம்ம ஊரரசு இந்த வார விகடனுக்கு கொடுத்திருந்த பேட்டியில் “இயக்குனர் என்றால் பாரதிராஜா தான் நினைவுக்கு வருவார்” என்றார். (ஊரரசு பேட்டியவெல்லாம நீ படிக்கிறன்னு கேக்காதீங்க!). என்னைப் பொருத்தவரையிலும் இது தான் உண்மை. தமிழ் மொழியில் வேறு வேறு தளங்களில் படம் கொடுத்தவர் அவர் மட்டுமே. சிவப்பு ரோஜாக்கள், பதினாறு வயதினிலே, ஒரு கைதியின் டைரி, கிழக்கே போகும் ரயில், டிக் டிக் டிக், முதல் மரியாதை, கிழக்கு சீமையிலே என்று சொல்லிக்கொண்டே போகலாம். என்னுடைய ஆல் டைம் பேவரிட் படம் முதல் மரியாதை தான்.
அவரை ஒரு முறை லேன்ட் மார்க்கில் வைத்து பார்த்திருக்கிறேன். வழக்கம் போல் ஒரு டி சர்டும் ஜீன்சும் போட்டுக்கொண்டு புத்தகங்கள் பார்த்துக்கொண்டிருந்தார். யாரும் கண்டு கொண்டதாகத் தெரியவில்லை. நான் சென்று என்னை அறிமுகப் படுத்திக்கொண்டேன். கை குழுக்கள்களுக்கு அப்பால் கொஞ்ச நேரம் பேசிகொண்டிருந்தோம். திரும்பி வரும் பொழுது ஒரு மிகப் பெரிய இயக்குனருடன் பேசிக்கொண்டிருந்தது போல இல்லை.
பாரதிராஜா ஒரு சிறந்த ஓவியர் என்பது எனக்கு இன்று தான் தெரிந்தது. அதுவும் எனக்குப் பிடித்தமான எழுத்தாளரை வரைந்திருக்கிறார். இதோ பாரதிராஜா வரைந்த எஸ்.ராமகிருஷ்ணனின் படம்.
*
நடிகர் சிவக்குமார் நன்றாகப் படம் வரைவார் என்று தெரியும் ஆனால் நன்றாக கதை அடிப்பார் என்று அண்மையில் தான் தெரியவந்தது. ஏதோ ஒரு பெண்கள் கல்லூரியில் விழிகள் தெரிக்க அவர் மொக்கை போட்டுக்கொண்டிருந்ததை விஜய் டீவியில் பார்க்க நேர்ந்தது. அதில் முக்கியமாக என்னை கடுப்பேற்றிய விசயம்.ஏதோ ஒரு சாஃப்ட்வேர் கம்பெனியில் காண்டம்கள் கொத்து கொத்தாகக் கிடைத்தனவாம். இது என் எல்கேஜி காலத்திலிருந்து மிகவும் பிரபலமான கதை. வேதாளம் புளியமரத்தில் இருப்பதைப் போல.எந்த வேதாளம் எந்தப் புளியமரம் என்று கேட்டுப்பாருங்கள் ஒரு பயலுக்கும் தெரியாது.சிவக்குமாரிடம் எந்த கம்பெனி எந்த வருடம் என்று கேட்டுப்பாருங்கள்!
அப்புறம் பெண்பிள்ளைகளுக்கு அட்வைஸ் வேறு. நீங்கள் ஏன் திருமணத்திற்கு முன் செக்ஸ் வைத்துக்கொள்கிறீர்கள். அது துரோகம் இல்லையா – என்பது போல பல பிதற்றலகள்.இவை யாவும் சாஃப்ட்வேர் மற்றும் கால் செண்டரில் வேலை பார்க்கும் பெண்களை (அதன் மூலமாக ஆண்களை) நோக்கி வீசப்பட்ட கேள்விகள். என்னவோ அவர்கள் செக்ஸ் வைத்துக்கொள்வதற்காகத்தான் வேலைக்கே செல்கிறார்கள் என்பதைப் போல.
மேலும் இது (செக்ஸ் பிரச்சனை) என்னவோ சாஃப்ட்வேர் மற்றும் கால் செண்டர் தொழில்களுக்குத் தான் இருக்கிறது என்பது போல கதைகள் பிண்ணப்படுகின்றன. அப்புறம் இவரைப் போன்ற ராமச்சந்திர மூர்த்திகள் அக்கதைகளைப் பரப்பிவிடுகின்றனர்.
அக்கதைகளைப் பரப்பும் முன் இன்னும் ஜாதகம் பார்த்து வரதட்சனை கொடுத்து கல்யானம் செய்துகொடுக்கும் இந்தச் சமூகத்தில் இம்மாதிரியான செக்ஸ் கதைகள் எத்தகைய விளைவுகளை இருபாலருக்கும் உண்டு பண்ணும் என்று ஸ்ரீல ஸ்ரீ ராமசந்திரமூர்த்திகள் யோசிப்பது நலம்.
*
http://www.maattru.com/2011/06/blog-post_25.html
http://kazhuhu.blogspot.com/2011/06/blog-post_06.html
UCCயுடன் சேர்த்து UCILம் வழக்கிலிருந்து கழட்டிவிடப்பட்டது. நீதிமன்றம் இறுதி தீர்ப்பை நிறைவேற்றுவதற்கு அவர்கள் பங்கு மிக முக்கியம் என்று கூறியது. இதற்கு என்ன அர்த்தம் என்றால்: UCILக்கு எதிராக பதிவுசெய்யப்பட்ட அனைத்து வழக்குகளும் தள்ளுபடி செய்யப்படும்.
குரல்கள்:
பன்னாட்டு நிறுவனங்கள் வேலையில்லாத்திண்டாட்டத்தைக் குறைப்பதற்காகத் தான் வளர்ந்துவரும் நாடுகளில் தொழில் ஆரம்பிக்கின்றன என்று யாரும் சொல்வதில்லை. பிறகும் ஏன் அவர்கள் குறைந்த கூலி கிடைக்கும் இடத்தில் தொழில் ஆரம்பிக்கிறார்கள்? லாபம் அதிகம் கிடைக்கும் என்ற ஒரே நொக்கத்துடன் மட்டுமே. ஆனால் இந்தக் காரணத்தைத் தவிர வேறொரு காரணமும் வெளிச்சத்துக்கு வராமல் இருக்கிறது. வளர்ந்துவரும் நாடுகளில் பாதுகாப்புத் தர விதிகள் மிகவும் குறைவாக இருக்கும், மேலும் ஏதாவது அசம்பாவிதம் நடந்துவிட்டால் அதற்கான இழப்பீட்டை மிகவும் மலிவாக முடித்துவிடலாம் என்பதே.
– Philip Knightley in London Newsletter, Indian Express 30 Dec 1984
இழப்பீட்டுத்தொகைக்கு எதிராக பலதரப்பட்ட குழுக்களும் போராட்டங்களை நடத்தின. வழக்கு பதிவு செய்யப்பட்ட பொழுது கேட்கப்பட்ட தொகை 3 பில்லியனாக இருக்கும் பட்சத்தில் இந்திய அரசாங்கம் ஏன் வெறும் 470 மில்லியன் டாலருக்கு ஒப்புக்கொண்டது என்ற கேள்வி திரும்ப திரும்ப கேட்கப்பட்டது.
மேலும் குற்றம்,பொறுப்பு போன்ற விசயங்களை நீதிமன்றம் எவ்வாறு மறந்தது என்ற கேள்வியுடனும் ஆங்காங்கே போராட்டங்கள் நடந்தன. ஒரு விஷவாயு தயாரிக்கும் தொழிற்சாலை தொடங்கப்பட்ட பொழுது அதன் சம்பந்தமான சட்டதிட்டங்கள் ஏன் தெளிவாக கடுமையாக பின்பற்றப்படவில்லை என்ற கேள்வியை UCCயிடமோ, UCILஇடமோ அல்லது குறைந்தபட்சம் மத்தியபிரதேஷ் அரசிடமோ கூட நீதிமன்றம் முன்வைக்கவில்லை என்பது தான் மிகவும் வேதனையான விசயம். சமுதாயம் விஷவாயுவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உண்மையாக கொடுக்கப்படவேண்டிய தொகையைப் பற்றி மறந்துவிட்டது போலவே இருந்தது.
வளர்ச்சியையும் முன்னேற்றத்தையும் இழந்துவிட்ட அந்த மக்களுக்கு உடல்நலம் குறித்த சலுகைகள் தேவைப்படும். அவர்களின் வாழ்க்கைமுறையை செப்பனிடவேண்டும். அவர்கள் தங்களின் எஞ்சியிருக்கும் வாழ்க்கையை நன்றாக வாழவேண்டும். இவற்றில் ஒன்றைக்கூட யாரும் கவனத்தில் கொள்ளவில்லை.
UCC கொடுத்த 470 மில்லியன் டாலர் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சரியாக, முறையாக பிரித்துக்கொடுக்கப்படும் என்று இந்திய அரசாங்கம் உறுதியளிக்குமா? உறுதியளிக்கமுடியுமா? சந்தேகம் தான். காரணம் ரொம்ப சிம்பிள். பாதிக்கப்பட்ட மக்களை வகைப்படுத்த எந்த சூத்திரமும் அரசாங்கத்திடம் இல்லை என்பதே. மேலும் நீண்டகால நிவாரணத்திட்டம் என்ற ஒன்றும் அரசாங்கத்தின் மனதில் இல்லை. கடைசி சோகம் என்னவென்றால்- இழப்பீட்டுத் தொகை முறையாக பாதிக்கப்பட்டவர்களை சென்றடையவில்லை என்பதே. பாதிக்கப்பட்ட ஒவ்வொருவரும் தலா 25000 ரூபாய் பெற்றனர். அதில் பத்தாயிரம் ரூபாய் இடைக்கால நிவாரணாமாக கொடுக்கப்பட்டது என்று கழித்துக்கொள்ளப்பட்டது. காலதாமதமாக கிடைத்த பணத்துக்கு வட்டியும் கொடுக்கப்படவில்லை. பாதிக்கப்பட்ட மக்கள் தொடர்ந்து தங்களது ஏழ்மையிலே வாழ்ந்தனர் – அனைவராலும் புறக்கணிக்கப்பட்டு. மறக்கப்பட்டு. காலம் முழுதும் ஊணமாக்கப்பட்டு.
உண்மையை வெளிக்கொனரும் வாய்ப்பு இந்திய கோர்ட்டிடம் இருந்தது. இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி மக்களின் மத்தியில் போப்பால் பேரிடரை என்றும் மறவாமல் செய்திருக்கமுடியும். வராலறையும் அவ்வரலாறு நமக்களிக்கும் படிப்பினைகளையும் மறப்பதென்பது மிகவும் ஆபத்தான விசயம். போப்பாலின் உண்மை நிலவரம் இவ்வாறு மறைக்கப்படிருக்கும் பொழுது, இதே போல பேரிடர் எங்கு எப்பொழுது நடக்கும் என்பதை யாரரிவார்?
குரல்கள்:
போப்பால் பேரிடர் மாதிரியான துயரசம்பவங்கள் அமெரிக்காவில் நடந்திருந்தால் இந்நேரம் அதற்கான தீர்வுகள் கண்டிப்பாகக் கிடைத்திருக்கும் என்பதில் சிறிதளவும் ஐயம் இல்லை. நிறுவனம் இதற்குப் பொறுப்பேற்று தீர்வு காணாவிடில், அமெரிக்க அரசாங்கமே தீர்வைக் கொண்டுவந்திருக்கும், பிறகு அந்தத் தீர்வுக்கான பணத்தை மூன்று மடங்காக நிறுவனத்திடம் கறந்திருக்கும். அமெரிக்காவில் இருக்கும் நிறுவனங்களின் மேலாளர்கள் ஒவ்வொருக்கும் இது தெரிந்திருக்கும்.இது ரசாயன விஷ கழிவுகளை வெளியேற்றினால் நிறுவனத்துக்குக் கிடைக்கும் பக்கவிளைவுகள் என்பதை அவர்கள் நன்று அறிவார்கள்.
– Curtis Moore, former Attorney to US Senate
1990-91
விஷவாயுவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கும் பூகம்பம் மற்றும் வெள்ளம் போன்ற இயற்கை சீற்றங்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்கும் என்ன வித்தியாசம் என்றால், விஷவாயுவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வலியும் வேதனையும் துன்பமும் நாளுக்குநாள் அதிகரித்துக்கொண்டு வருவதுதான். கடைசியாக, விஷவாயு மட்டுமே தங்கள் வாழ்க்கையைப் பாதிக்கவில்லை என்பதை அவர்கள் உணர்ந்துகொண்டார்கள்.இதே அளவுக்கு வேதனை தரக்கூடிய விசயம் என்னவென்றால், இவர்களை சந்தேகப்பார்வையுடன் பார்க்கும் சமுதாயத்துடன் இணைந்து வாழ்வதே. பாதிக்கப்பட்ட மக்களில் நிறைய பேருக்கு இரட்டிப்பு அடி. படிப்பறிவும் இல்லாமல் வேலைவாய்ப்பும் இல்லாமல் சேரிகளில் வறுமைக்கோட்டுக்கு கீழே வாழ்ந்து வரும் அவர்களை சமுதாயம் ஏற்கனவே ஒரு சுமயாக கருதிக்கொண்டிருந்தது. இப்பொழுது இந்த நகரம் அவர்களை புல்லுருவிகளாகவும் எண்ணியது. ஆபரேஷன் பெயித் (Operation Faith) முடிந்ததுக்கப்புறமும் தொடர்ந்துவரும் சில பிரச்சனைகளால் நிர்வாகக்கோளாறுகள் இன்னும் நிறைய இருந்தன. 1991ஆன் ஆண்டில் மத்தியபிரதேஷ் அரசாங்கம் போப்பாலின் முகத்தை அழகு படுத்த விரும்பியது. அழகு படுத்தும் வேலை துவங்கியது. பூங்காக்களை சீரமைப்பது, சாலைகளை ஒழுங்குபடுத்துவது மற்றும் தெருக்களுக்கு விளக்கேற்றுவது.
இதில் வெகு சில பணிகளே விஷவாயுக்களால் பாதிக்கப்பட்ட மக்கள் வாழும் பகுதிக்கு சென்றடைந்தது. இங்கு வாழ்ந்து கொண்டிருக்கும் பெரும்பாலான மக்கள் சமுதாயத்தின் அடித்தட்டைச் சேர்ந்தவர்கள். அவர்களது மண் மற்றும் ஓலைக் குடிசைகளை இருட்டும், திறந்திருக்கின்ற சாக்கடைகளின் துர்நாற்றமுமே சூழ்ந்திருந்தன. சராசரியாக ஒரு குடும்பம் ஒரு மாதத்துக்கு 150 ரூபாய் மட்டுமே சம்பாதிக்கமுடிந்தது. சமைப்பதற்கு பெண்கள் கரித்துண்டுகளையும் மாட்டு எருக்களையுமே பயன்படுத்தினர். விஷவாயுக்களால் பாதிக்கப்பட்டிருந்த அவர்களது கண்களும் நுரையீரலும், புகைகக்கும் மண் அடுப்புகளில் மீண்டும் எரிந்தன.
குரல்கள்:
ஜூன் 16 1984 இல் ராஜ் குமார் கேஸ்வனி IRaj Kumar Keswani) எழுதிய கட்டுரையில் அவர் கீழ்வருமாரு கூறியிருக்கிறார்”போஸ்ஜின் (phosgene) என்கிற ரசாயனத்தை பயன்படுத்துவது தொழிற்சாலையில் வேலைசெய்யும் பணியாளர்களையும் தொழிற்சாலைக்கு அருகில் குடியிருக்கும் மக்களையும் மிகவும் பாதிக்கும்” (கேஸ்வனி தான் தொழிற்சாலையின் பாதுகாப்பைக் குறித்து முதலில் அபாயச்சங்கு ஊதியவர்.
– Radhika Ramaseshan in Economic and Political Weekly, 22-29 Dec 1984
1975இல் M.N.Buch, என்ற போப்பாலின் IAS அதிகாரி, மக்கள் வசிக்கும் பகுதிகளில் தொழிற்சாலையை அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தார். அவர் நகரத்துக்கு வெகு தூரத்தில் தொழிற்சாலையை இடமாற்ற யோசனை கூறியிருந்தார். ஆனால் அந்த IAS அதிகாரி தான் கடைசியில் இடமாற்றப்பட்டார். இப்பொழுது அழகு படுத்தும் முயற்சியில் இந்த சேரி குடிசைகளும் இடமாற்றப்பட்டன. நிறைய குடிசைகள் இடித்து தள்ளப்பட்டன. மக்கள் நகரத்துக்கு அப்பால் 12-14 கி.மீ தள்ளி குடியேறினர்.
இவற்றுள் ஒன்று லால் இம்லி வாலி மஸ்ஜித் கி பஸ்தி (Lal Imli Wali Masjid Ki Basti). 26 மே 1991 அன்று, நகர அதிகாரிகள், 200 காவல்துறையினரின் துணையுடன், 75 குடிசைகளை தகர்த்தெறிந்தனர். மற்றுமொருமுறை விஷவாயுக்களால் பாதிக்கப்பட்ட மக்கள் திக்கு தெரியாமல் ஓடத்துடங்கினர். ஒவ்வொரு குடும்பத்துக்கும் சொற்ப தொகையான ரூ.1000 வழங்கப்பட்டது. மேலும் 15 மூங்கிலும், 5 பாயுகளும் மற்றும் 10மீ பிளாஸ்டிக் ஷீட்களும் வழங்கப்பட்டன. நகரத்துக்கு வெளியே அவர்கள் 12 அடிக்கு 25 அடியில் குடிசைகள் கட்டிக்கொள்ள அனுமதி வழங்கப்பட்டது. இவ்வாறன ஒரு மாற்று இடத்தில் – புதிய காந்தி நகர் – கடைகள் இல்லை. பேருந்து நிறுத்தம் இல்லை. பக்கத்தில் மருத்துவமணை இல்லை. அங்கு வாழும் மக்கள் அனைவருக்கும் தண்ணீர் கொடுப்பதற்கு ஒரே ஒரு அடிகுழாய் மட்டுமே இருந்தது.
இந்த இடம் பெயர்தல் நினைத்ததை விடவும் கடுமையானதாக இருந்தது. இடைக்கால நிவாரணம் கிடைக்கவேண்டும் என்றால் அவர்கள் தங்கின ஏதாவது ஒரு வார்டில் அவர்கள் பதிவு செய்திருக்க வேண்டும். குடியிருப்பு மாறிய பிறகு அவர்கள் தங்களது பதிவுகள் கேன்சல் செய்யப்பட்டன. இந்த மாதிரியான ஒரு மிகப்பெரிய இடம்பெயரும் நடவடிக்கை, பாதிக்கப்பட்ட மக்களுக்குள் இருந்த ஒற்றுமையைக் குலைத்தது. புதிய குடியிறுப்புக்கு அவர்கள் ஒருவருக்கொருவர் சண்டையிட வேண்டியதாயிற்று.
விஷவாயுவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வாழ்க்கை முற்றிலுமாக மாறியிருந்தது. பாதிக்கப்பட்ட மக்கள் தங்கள் உடலில் ஏற்பட்டுவிட்ட நிறைய மாற்றங்களோடு போராட வேண்டியிருந்தது. அவர்களால் கவனத்தை ஒருமுகப்படுத்த இயலவில்லை. எதையும் ஞாபகம் வைத்துக்கொள்ள முடியவில்லை. வேறு எந்த கடினமான வேலையையும் செய்யமுடியவில்லை. நிறைய பேர் கடினமான உடல் உழைப்பை நம்பியிருந்தவர்கள். மூட்டைதூக்குவது, கட்டுமான பணிகளில் ஈடுபடுவது இல்லையேல் வண்டி இழுப்பது போன்ற வேலைகளைதான் அவர்கள் செய்து வந்தனர். விஷவாயுவால் பலகீனம் அடைந்துவிட்ட அவர்கள் சம்பாதிக்கும் திறனை இழந்தார்கள். நாளடைவில் அவர்கள் மிகவும் ஏழ்மையான நிலையை அடைந்துவிட்டிருந்தனர். நெசவு தொழிலிலோ அல்லது பேப்பர் ஆலைகளிலோ, புகைகக்கும் ரயில் நிலையங்களிலோ வேலை செய்தவர்கள், அபாயகரமான பைபர்களுடனும், நச்சு புகைகளிலும் வருந்தினர். மாதத்தில் 15 அல்லது 20 நாட்கள் அவர்கள் உடல்நலம் பாதிக்கப்பட்டு அவதியுற்றனர். உடல் ஒத்துழைக்காத பட்சத்தில் அவர்கள் தங்கள் சுயகவுரத்தை இழந்தனர், கடும் மன உழைச்சலுக்கு ஆளாகினர்.
விபத்தில் தப்பித்தவர்கள் விஷவாயு பீதி என்று குறிப்பிடப்பட்ட நோயால் அவதியுற்றனர்.ஏதோ ஒரு வாயுவை சுவாசித்த பொழுதோ அல்லது மூச்சுத்திணறல் ஏற்பட்ட பொழுதோ அவர்கள் மிகுந்த பீதிக்குள்ளானர்கள். இந்த பிரச்சனைகள் மனோதத்துவம் சார்ந்தது என்று பெரிதும் ஒதுக்கப்பட்டுவிடும். அவர்களை யாரும் நோயாளிகளாக பாவிக்கக்கூட தயங்கினர். அவர்களை யாரும் புரிந்துகொள்ளவில்லை. முயற்சிக்கவும் இல்லை.
மருத்துவமனைகள் விஷவாயுவால் பாதிக்கப்பட்டவர்களை வரையறுக்க சில அறிகுறிகளை வகைப்படுத்தியிருந்தன. அந்த அறிகுறிகளைக் கொண்டிருந்தவரை அவர்கள் விஷவாயுவால் பாதிக்கப்பட்டவர் என்று குறித்துக்கொண்டனர். அவருக்கு அத்தாட்சி சாண்றிதழும் வழங்கப்படும். இதனால் பாதிக்கப்பட்டவருக்கு இடைக்கால நிவாரணமோ அல்லது உணவோ கிடைக்கும். ஆனால் இடைக்கால நிவாரணமான 200 ரூபாயைப் பெறுவதற்கு அவர்கள் பல்வேறு கடினமான நடைமுறைகளை கடக்க வேண்டியிருந்தது. இந்த கடினமான நடைமுறைகளை எளிதாக்க -மனதளவிலும், உடலளவிலும்- யாரும் முன்வரவில்லை. அவர்கள் அனுபவிக்கும் கஷ்டத்தை யாரும் நினைத்துப்பார்க்ககூட இல்லை.
வளர்ந்துவரும் தொழிற்துறை சார்ந்த சமுதாயத்தில் ஏற்படவிருக்கும் பாதிப்புகளை குறித்து யாரும் அவ்வளவாக சிந்திப்பதில்லை. கார்பைடு தொழிற்சாலை வேலைவாய்ப்பு வழங்கி அதன்மூலம் கடைநிலை மக்களின் வாழ்க்கைத் தரத்தை ஓரளவேனும் உயர்த்தும் என்றே யோசித்தனர். மாநில அரசும் இந்த ஒப்பந்தத்தில் ஒரு பங்குதாரரே. இந்த ஆர்வத்தில் யாருக்கும் தொழிற்சாலையை மக்கள்தொகை அதிகமாக இருக்கும் இடத்தில் நிறுவக்கூடாது என்கிற சிந்தனை உதித்ததாக தெரியவில்லை. திட்டமிடுதலின் போது வளர்ச்சியினோடு பொறுப்புணர்ச்சியும் வந்திருக்கவேண்டும். ஆனால் காலவேகத்தில் பொறுப்புணர்ச்சி என்ற விசயம் பின் இருக்கையையே பிடிக்கமுடிந்தது. எதுவும் அவர்களுக்கு அபாயகரமாகத் தோண்றவில்லை, சேரிகள் மட்டுமே மிகப்பெரிய ஆபத்தை எதிர்நோக்கியிருந்தனர்.
விஷவாயுவால் பாதிக்கப்பட்ட சேரிவாழ் மக்கள், பாதிப்பு ஏற்படுத்திய கார்பைடு தொழிற்சாலையால் சிறிதளவு கூட பயன்பெறவில்லை என்பது மிகவும் அபூர்வமான விசயம் ஆகிவிடுகிறது. அவர்களுக்கு தொழிற்சாலை மீண்டும் வேலை கொடுக்கவில்லை. அவர்கள் தினக்கூலிகளாக தங்களது வேலையைத் தொடர்ந்தனர். பீடி சுற்றுபவர்களாகவும், செருப்பு தைப்பவர்களாகவும், வீட்டுவேலை செய்பவர்களாகவும் காலந்தள்ள வேண்டியிருந்தது. அவர்கள் மிகவும் அடித்தட்டு வாழ்க்கையை வாழ்ந்துகொண்டிருந்தனர்.
அதேசமயத்தில் சட்டம் தன் வேலையை செய்துகொண்டிருந்தது. அக்டோபர் 3 ஆம் தேதி 1991 அன்று, திருத்தப்பட்ட தீர்ப்பு ஒன்று வழங்கப்பட்டது. குற்றம்சாட்டப்பட்ட 12 நபர்கள் (UCC மற்றும் UCIL) மீதும் மீண்டும் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
(தொடரும்)
thanks : swaroopa mukarjee
6
மெல்ல நெருங்கிடும் போது
நீ தூரப்போகிறாய்
விட்டு விலகிடும் போது
நீ நெருங்கி வருகிறாய்
க்ளாஸ் ரூம். ஐ திங் இட் வாஸ் அ மேக் சி·ப்ட் க்ளாஸ் ரூம். நாளைக்கு ஏதோ எக்ஸாம். நாங்க எல்லாம் படிச்சிட்டு இருக்கோம். நான் எப்போதுமே கீழ உக்காந்து தான் படிப்பேன். இன்னிக்கும் அப்படித்தான் படித்துக்கொண்டிருக்கிறேன். சித்தார்த் மேலே பெஞ்சில் உட்கார்ந்திருக்கிறான். இன்டர்வெல். எழுந்து செல்கிறேன்.
காதலின் திருவிழா
கண்களில் நடக்குதே
குழந்தையைப் போலவே
இதயமும் தொலையுதே
அவன் டெஸ்க்கு முன்னால் நின்று கொள்கிறேன். அவனிடம் பேசுகிறேன். அவன் ஏதோ சொல்கிறான். எனக்கு கேட்கவில்லை. மீண்டும் சொல்கிறன். எனக்கு கேட்கவில்லை.
வானத்தில் பறக்கிறேன்
மோகத்தில் திளைக்கிறேன்
காதலால் நானும் ஒர் காற்றாடி ஆகிறேன்.
என் கால் மேல ஏறி நிக்கிற கீழ இறங்கு லூசு. ஓவ்..சாரி சித்தார்த்..நான்..
வெள்ளிக்கம்..ஹாங்..ஹாங்..
வாட் டூ யூ விஷ் டு ஹாவ் மேம்
ஹாங்
வெஜ் ஆர் நான்-வெஜ்
நான் வெஜ்
ஓகே. வுட் யூ லைக் டு ஹேவ் சிக்கன் ஆர் ..
நோ நோ..ஐ ஆம் வெஜ்…ப்ளீஸ் கிவ் மீ வெஜ் மீல்ஸ்
தூங்கியிருக்கிறேன். நன்றாக தூங்கியிருக்கிறேன். சீட்டில் நன்றாக சாய்ந்து கொண்டு எனக்கெதிரே இருந்த திரையில் சேனலை மாற்றி விமானம் எங்கே பறந்துகொண்டிருக்கிறது என்று பார்த்தேன். அட்லான்டிக் பெருங்கடலில் எங்கோ ஒரு புள்ளியில் சென்று கொண்டிருந்தது விமானம். இன்னும் ஆறு மணி நேரம் இருக்கிறது. நியுயார்க் செல்வதற்கு.
நியுயார்க்கில் பிடியாட்ரிக்ஸ் போஸ்ட் க்ராஜுவேஷன் பண்ணப்போகிறேன். அங்கே என் சித்தி இருக்கிறார். அவர் வீட்டில் தற்சமயம் தங்கிக்கொள்வதாக ப்ளான். எப்படியும் ஒரு வருடம் இருப்பேன். அந்த ஏர்ஹோஸ்டஸ் சிரித்துக்கொண்டே ப்ரேக்பாஸ்ட் கொடுத்தாள். வரண்ட ரொட்டியைப் பிரித்து நிதானமாக பட்டர் தடவினேன். ஜாம் தடவினேன். இன்னும் கொஞ்ச காலத்துக்கு ரொட்டி தான்.
சித்தப்பா விமான நிலையத்திற்கு வந்திருந்தார். அவருடைய பெரிய வேனில் ஏறிக்கொண்டேன். ரொம்ப தூரம் வேன் சென்றுகொண்டேயிருந்தது. அவர் அப்பாவைப் பற்றியும் குடும்பத்தை பற்றியும் நிறைய கேட்டுக்கொண்டே வந்தார். அகல அகலமான ரோடுகள். பெரிய பெரிய கட்டிடங்கள். பிறகு மீண்டும் அகலமான ரோடுகள். பெரிய பெரிய காலியிடங்கள். வெற்றிடங்கள். பின் மீண்டும் அகலமான ரோடுகள்.
ஒரு மணி நேரம் கழித்து ஒரு சின்ன டவுனுக்குள் நுழைந்தோம். கொஞ்சம் சுற்றலுக்குப் பின் மீண்டும் பெரிய ரோடுகளைக் கடந்து வரிசையாக நின்றுகொண்டிருக்கும் வீடுகளுக்கு அந்துசேர்ந்தோம். பெரிய பெரிய வீடுகள். என் சித்தியும் அவருடைய சின்னப்பையனும் நின்று கொண்டிருந்தார்கள். சித்தி ஆரத்தி எடுத்து வரவேற்றார்கள்.
ரொம்ப நேரம் பேசி களைத்த பிறகு மீண்டும் பேசத்தொடங்கினோம். இந்தியாவைப் பற்றி பேசினால் அதற்கொரு முடிவே இருக்காது போல. பழங்கதைகள். அவ்வாவைப் பற்றிய கதைகள். எனக்கு மொட்டை போட்டது முதற்கொண்ட கதைகள். சித்தப்பா நாளை முதல் ட்ரெயினில் எப்படிப் போவது என்கிற பெரிய போரிங் லெக்ச்சர் கொடுத்தார். ரொம்பவும் காம்ப்ளக்ஸ் போல. எனக்கு எதுவுமே மண்டையில் ஏறவில்லை. நாளை ஒரு நாள் என்னுடன் ட்ரெயினில் வருவதாக சொன்னார்.
லைப் இன் யூஎஸ் இஸ் ஸோ டி·பரண்ட். இந்தியாவிலும் எங்கள் வீடு மிகப்பெரியதாக இருக்கும் என்றாலும் இவ்வளவு வசதிகள் கொண்டதாகவும் இவ்வளவு ஸ்டைலாகவும் இல்லை. எனக்கென்று கொடுக்கப்பட்ட அறையில் என்னுடைய லக்கேஜ்ஜை வைக்க சித்தப்பா ரொம்பவே சிரமப்பட்டார். கொஞ்ச நேரம் தூங்கு என்றதும், டப்பென்று போய்ப் படுத்துக்கொண்டேன்.
நிம்மதியான தூக்கம். எழுந்து கீழே போய் சாப்பிட்டுவிட்டு வந்தேன். மீண்டும் தூக்கம்.
எழுந்தபோது மணி என்னவென்று தெரியவில்லை. லக்கேஜ்ஜை பிரிக்கவேண்டிய நேரம் வந்துவிட்டது. எனிவே மணி என்னவென்று பார்த்தேன். இரவு இரண்டு மணி. வீட்டிற்கு பேசவேண்டும் போல இருந்தது. எப்படி பேசுவது என்றுதெரியவில்லை. லக்கேஜ் எடுத்து பிரித்து எனக்கு கொடுக்கப்பட்டிருந்த அலமாரியில் அவற்றை அடுக்கினேன். நாளைய இன்டர்வியூவுக்கு போட வேண்டிய ட்ரஸ் எடுத்து வைத்தேன். சர்ட்டிபிக்கேட்ஸ் டாக்குமென்ட்ஸ் எடுத்துவைத்தேன். மீண்டும் பெட்டில் வந்து உட்கார்ந்து கொண்டேன். தலையனையில் சாய்ந்து கொண்டேன். கால்களை நன்றாக நீட்டிக்கொண்டேன். கைகளை நெஞ்சுக்கு குறுக்காக வைத்துக்கொண்டேன்.
அன்றைய இன்டர்வியூ சரியாகப் போகவில்லை. நான்கு எக்ஸாம் வேறு எழுத வேண்டும். எக்ஸாமுக்கு ப்ரிப்பேர் பண்ணுவதே மிகப்பெரிய வேலையாகிப்போனது. வெதர் வேறு சரியில்லை. நல்ல குளிர். இது போல குளிரை நான் பார்த்ததில்லை. குளிருடன் சண்டைபோடுவதுதான் மிகப்பெரிய வேலை. இருக்கும் வேலைகளை செய்வதற்கு எனக்கு நேரம் போதவில்லை.
முழுதாக எட்டு மாதங்கள் ஓடி விட்டன. நான் நியூயார்க் வந்து எட்டு மாதங்கள் ஓடிவிட்டன. எனக்கு இங்கே ஒரு யுனிவர்ஸிட்டியில் இன்டர்ன்ஷிப் கிடைத்துவிட்டது. அதே யுனிவர்ஸிட்டியில் பிடியாட்ரிக்ஸ¤ம் கிடைத்துவிட்டது. கொஞ்சம் ப்ரண்ட்ஸ் கிடைத்திருக்கிறார்கள்.
எனக்கு கொடுக்கப்பட்ட லெப்டாப்பில் என் வேலை போக மீதமிருந்த நேரத்தில் ஈமெயில் அனுப்பக் கற்றுக்கொண்டேன். சாட் செய்யவும் கற்றுக்கொண்டேன். அமெரிக்க இந்திய தோழிகள் சிலரது ஆலோசனையின் பேரில் ஆர்குட்டிலும் மெம்பர் ஆகிவிட்டேன். எனக்கு பெரும்பாலும் நைட் டூட்டி தான் இருக்கும். டூட்டி முடிந்து வருவதற்கு மறுநாள் காலை பதினோரு மணி ஆகிவிடும். அதற்கப்புறம் நன்றாக தூங்கிவிடுவேன். முழு நாளும் தூக்கம் தான். சில நேரம் வீட்டுக்குப் போகணும் போல இருக்கும். சில நேரம் நான் படித்த பள்ளிக்கு செல்லவேண்டும் போல இருக்கும். வாழ்க்கை ஓடிக்கொண்டிருக்கிறது. மிக வேகமாக ஓடிக்கொண்டிருக்கிறது.
பெண்களுடை எடுத்தவனே
தங்கக் குடை கொடுத்தவனே
ராசலீலை புரிந்தவனே
ராஜ வேலை தெரிந்தவனே
என் அண்ணனுக்கு பெண் குழந்தை பிறந்திருக்கிறது. எனக்கு பார்க்கவேண்டும் போல இருக்கிறது.
மோகனங்கள் பாடி வந்து
மோகவலை விரித்தாயே
மோகனங்கள் பாடி வந்து
மோகவலை விரித்தாயே
அவளுடைய ·போட்டாவை யாகூவில் பார்த்தேன். கொள்ளை அழகு. அப்படியே அள்ளிக்கொள்ளலாம் போல இருந்தது.
சேலைகளைத் திருடி – அன்று
செய்த லீலை பல கோடி
சம் டே ஐ வில் கோ டு இந்தியா அன் ஹாவ் ஹெர் இன் மை ஹேண்ட்ஸ். தூங்குதற்கு முன் ஒரு முறை மெயில் செக் பண்ணிவிட முடிவு செய்தேன்.
வானில் உள்ள தேவரெல்லாம்
போற்றிப்பாடும் காதல் மன்னா
வந்தாய் கோபாலனே..
Orkut – Muthu has written you a scrap book entry.
முத்து என்கிற யாரோ ஒருவன் எனக்கு ஆர்குட்டில் மெஸேஜ் அனுப்பியிருந்தான்.
“You have exactly the same name of my friend: Ramya Rajagopal. Just a Hi from me!”
பூ முத்தம் தந்தவனே
வந்தாய் கோபாலனே..
பூ முத்தம் தந்தவனே
வான் போலே வண்ணம் கொண்டு
வந்தாய் போபாலனே
பூ முத்தம் தந்தவனே..
ஐ ஸ்டாப்ட் மை சிடி ப்ளேயர். ஹ¥ இஸ் திஸ் கை? ஐ ச்செக்ட் ஹிஸ் ப்ரெ·பைல்.
(தொடரும்)
(குட்டித் தொடர்கதை)
1
“என்னாச்சு ரம்யா? ஏன் ரொம்ப நாளா ஸ்கூலுக்கு வரல?”
“ம்ம்..உடம்புக்கு முடியலடா”
“ஜான்டீஸா”
“ம்ம்ம்ம்”
“இப்போ சரியாப்போச்சா”
“ம்ம்”
“ஏன் சரியாவே பேசமாட்டேன்ற?”
“ஒன்னுமில்லடா” “இந்தச் செயின் நல்லாயிருக்கா?”
“சூப்பரா இருக்கு. புதுசா?”
“ம்ம் அவ்வா வாங்கிக் கொடுத்தாங்க”
“ஜான்டீஸ் வந்ததுக்கா?”
சித்தார்த் கேட்டப்போ எனக்கு என்ன பதில் சொல்றதுன்னு தெரியல. ஒரு நாள் அவனுக்கு புரியும்.
“இன்னிக்கு ரிகர்சல் எப்படி இருந்தது?”
“சூப்பரா இருந்தது”
“நான் நடிச்சது பிடிச்சிருந்தா?”
“நீ நடிச்சத விட, அந்த மைக் கீழ விழுந்தப்போ நீ கொடுத்த ரியாக்ஷன் நல்லா இருந்தது”
நல்லா நடிக்கிறான். நல்லா பேசறான். நல்லா படிக்கிறான். எங்க அப்பாவுக்கு இவன ரொம்ப பிடிக்கும். என்கிட்ட நிறைய தடவை அவன பத்தி பேசியிருக்கிறார், ஸ்கூலுக்கு வரும் பொழுதெல்லாம் இவன் கிட்ட பேசாம போனதேயில்ல.அவன் கைய பிடிச்சுக்கிட்டு நின்னு பேசிட்டிருப்பார். அவனுடைய நண்பர்கள் என் அப்பா வருவதைப் பார்த்தவுடன் “டேய் உன்னோட மாமா வர்றாருடா” என்று என் காதுபடவே கிண்டல் செய்கிறார்கள். சித்தார்த் ரொம்ப நல்லவன் இதையெல்லாம் அவன் காதில் போட்டுக்கொண்டதைப் போலவே தெரியவில்லை.
“அப்பா”
….
“அப்பா”
“என்னடா?”
“இனிமே ஸ்கூலுக்கு வரும்போது சும்மா சும்மா சித்தார்த்தோட பேசாதீங்கப்பா”
“ஏன்?”
…
“பசங்க கிண்டல் பண்றாங்களா?”
…
“சரி. இனிமே தேவைன்னா மட்டும் பேசறேன்”
ஆனால் இன்றும் அப்பா பள்ளிக்கு வந்திருந்தபோது சித்தார்த்திடம் பேசியதைப் பார்த்த செல்வா வேண்டுமென்றே நான் க்ளாஸ¤க்கு வரும்பொழுது, சித்தார்த்தைப் பார்த்து “டேய் சித்தார்த் மாமா வந்திருந்தாரே. என்ன சொன்னார்?” என்று கேட்டுத்தொலைத்தான். இடியட். நான் தான் க்ளாஸ் லீடர் என்றாலும், கிட்டத்தட்ட அவன் தான் க்ளாஸ் லீடர். நான் உப்புக்குச்சப்பானி. ப்ரிண்ஸி எதுன்னாலும் ரெண்டு பேரையும் சேத்துதான் கூப்பிடுவாங்க.
“மேடம்”
“என்னாச்சு ஆயா?”
“ப்ரின்ஸி மேடம் சித்தார்த்தையும் ரம்யாவையும் கூட்டிட்டு வரச்சொன்னாங்க”
..
“சித்தார்த், ரம்யா போயிட்டுவாங்க”
..
நான் தான் ஏதும் பேசவில்லை என்றால், அவனாவது ஏதாவது பேசியிருக்கலாம். எங்கள் க்ளாஸிலிருந்து பிரின்ஸி ரூம் ரொம்ப தூரம். அட்லீஸ்ட் இன்னைக்கு அப்படி தோன்றியதா? இரண்டு பேரும் ஒரு வார்த்தை கூட பேசிக்கொள்ளவில்லை. அவன் இன்றைக்கு ஷ¥ போடவில்லை. வெறும் செறுப்பு தான் போட்டிருந்தான். டை கட்டவில்லை. இன் செய்யவில்லை. ஏன் இப்படி இருக்கிறான்? அதுவும் இன்று ப்ரின்ஸி ரூமுக்கு வேற போனோம். அது சரி. இவன் தான் ஸ்கூலுக்கு செல்லப்பிள்ளை ஆச்சே. எல்.கே.ஜில இருந்து ஒரே ஸ்கூல்ல படிச்சா இப்படித்தான் ஆகும். பெரிய தாதான்னு நினைப்பு. ஆனா ரொம்ப திமிர். ப்ரின்ஸி இந்தமுறை குழந்தைகள் தினவிழாவை நாங்கள் தான் (+2) நடத்தவேண்டும் என்று சொல்லிவிட்டார். திமிர் பிடிச்சவன் போகும் போதும் ஒரு வார்த்தை கூட பேசவில்லை. வரும் பொழுதும் ஒரு வார்த்தை கூட பேசவில்லை. நான் அவனை திரும்பிக்கூட பார்க்கவில்லை. அவனும் என்னை திரும்பிப் பார்க்கவில்லை.
“ரம்யா. நாங்க இந்தப்பாட்டு செலக்ட் செஞ்சிருக்கோம்”
வெல்வெட்டா வெல்வெட்டா..
மன்மதன் கல்வெட்டா..
“ச்சீ என்ன பாட்டுடி இது? இது ·பிப்த் பசங்களுக்கா?”
“அப்ரூவ் பண்றியா இல்லியா?”
“நான் அப்ரூவ் பண்றனா இல்லியாங்கறது வேற விசயம். சித்தார்த் அப்ரூவ் பண்ணனும்”
“நீ போய் அவன் கிட்ட கேளு.. சரின்னுடுவான்”
“என்ன விளையாடுறியா? இந்த பாட்ட நான் அவன் கிட்ட போட்டு காட்டனுமா?”
“யெஸ்”
“நெவர்”
“லைன்ஸ் தான் அப்படி இருக்கும். ஆனா டான்ஸ¤க்கு இந்த பாட்டு கரெக்ட்டா இருக்கும். ஸீ த பீட்ஸ்..”
..
“என்னவோ சொல்ற..சரி டேப் ரிக்கார்டர கொடு..நீயும் கூட வா..”
நான் போய் அவன் கிட்ட இந்தப்பாட்ட போட்டு காண்பிச்சேன். அவன் ஒன்னுமே சொல்லல. தூக்கிட்டு ஓடிறுன்னு மட்டும் தான் சொன்னான். ஷீபா ஏதோ சொல்ல ஆரம்பிச்சா.. வேற பாட்டு செலக்ட் பண்ணுங்க ப்ளீஸ்ன்னு டக்குன்னு சொல்லிட்டான். அவ வாய மூடிட்டு வந்தா. நாங்க திரும்பி நடந்து வரும் போது கோபால் அவன் கிட்ட ஏதோ சொல்லிருக்கான். அவன் முறைச்சானாம். ஷீபா தான் கேட்க சொன்னான்னா எனக்கு எங்க போச்சு அறிவு. முண்டம். கண்டிப்பா சித்தார்த் ஒத்துக்கமாட்டான்னு தெரியும். பட் ஐ ஜஸ்ட் வாண்டட் டு நோ வாட் ஹீ திங்க்ஸ்.
“எக்ஸ்க்யூஸ்மி மிஸ்”
“யெஸ் கம் இன் சித்தார்த்”
…
…
…
“என்னாச்சு சித்தார்த்”
“நத்திங் மிஸ்”
…
..
“என்னாச்சுடீ உன் ஆளுக்கு”
“என் ஆளா? உதைப்பேன்”
“என்னம்மோ எல்லாரும் கீழ குணிஞ்சு குணிஞ்சு பாக்குறாங்க?”
“ஆமா..என்னாச்சுடி?”
…
அவன் பக்கத்து ஊரிலிருந்து பஸ்ஸில் பள்ளிக்கு வருபவன். இன்று கொஞ்சம் லேட். இன்று என்ன இன்று எப்போதுமே அவன் லேட் தான். ப்ரிண்ஸி சித் லேட்டா வந்தா மட்டும் கண்டுகொள்ளாது. அவனை மட்டும் போகச்சொல்லிடும். பணிரெண்டாவது படிக்கிற எருமைமாடு லெட்டா வந்தா போகச்சொல்றதா? ஏன்னா அவன் ஸ்கூலோட ஹீரோ. இன்னிக்கு பஸ்ஸ¤ல ரன்னிங்க்ல இறங்கிருக்கான். கீழ விழுந்துட்டான். ஸ்கூல்ல ஹீரோன்னா, விழுந்தா ரத்தம் வராதா? முழங்கால் எல்லாம் ரத்தம். மிஸ் அங்கிட்டும் இங்கிட்டும் ஓடுது. எல்லோரும் என்ன என்னன்னு பாத்தாங்க. நான் கண்டுக்கிடல. எனக்கென்ன வந்தது?
“சித்தார்த் என்ன ஆச்சு?”
“நத்திங். ஐ யாம் ஓகே ரம்யா”
“கால்ல காயமா?. பஸ்ல விழுந்துட்டியா?”
“ம்ம்..சும்மா ஒன்னுமில்ல..”
…
…
(கோபால் சித்தார்த்தின் காதில் ஏதோ சொன்னான்)
“ஏய் ஏன் அழற?”
“உன் மூஞ்சி. நான் எங்க அழறேன்” “லஞ்ச் கொட்டிடுச்சாமே”
“ம்ம்”
“எங்க கூட வந்து சாப்பிடேன்” (மெதுவாக மூக்கை உறிஞ்சுகிறாள்)
“நீ தயிர் சாதமும் பொட்டுகடலையும் தான கொண்டு வந்திருப்ப?”
“வேணாட்டிப்போ”
..
ஆனா இன்னிக்கு அம்மா மோர் குழம்பு கொடுத்திருந்தாங்க. பொட்டுக்கடலை எப்பொழுதும் கொண்டுவருவேன் என்பது உண்மைதான் என்றாலும் அது எனக்கு ஈவினிங் ஸ்நாக்ஸ் தான். சாப்பாட்டுக்கு போய் யாராவது பொட்டுக்கடலையை தொட்டுக்கொள்வார்களா? இடியட். ஆனா நான் தினமும் பொட்டுக்கடலை கொண்டுவருகிறேன் என்பது அவனுக்கு எப்படி தெரியும்? நான் கூப்பிட்டப்போ வராதவன் சௌமியா கூப்பிட்டப்போ சாப்பிட வந்தான். நண்பர்களையும் அழைத்து வந்திருந்தான். எங்க பதினாலு வருட பழக்கத்தில் இன்றைக்குத்தான் கேர்ள்ஸ¤ம் பாய்ஸ¤ம் ஒன்றாக க்ளாஸில உட்கார்ந்து சாப்பிட்டோம். எல்லோரிடமும் கொஞ்சம் கொஞ்சம் வாங்கிக்கொண்டான். என்னுடைய மோர் குழம்பை வாங்கி சாப்பிடவேயில்லை. நானும் கொடுக்கவில்லை. ஏன் சாப்பிடும் பொழுது ஆட்காட்டி விரலை தனியாக நீட்டிக்கொள்கிறான்? ஸ்டைல்ன்னு நினைப்பு! தடாலடியாக என்னுடைய ஸ்நாக்ஸ் பாக்ஸை அவனே எடுத்து திறந்துவிட்டான். கொஞ்சம் பொட்டுக்கடலை எடுத்து சாப்பிட்டான். அந்த சிவப்பு ஸ்நாக்ஸ் பாக்ஸை ரொம்ப நேரம் கைகளில் மாற்றி மாற்றி வைத்துக்கொண்டிருந்தான். கைகளில் நீள நீளமாக நகம். வெட்டுவானா மாட்டானா? சோடாபுட்டி. சோடாபுட்டி.
“ரம்யா”
“ஆங் என்ன?”
“எங்களோட நாடகத்தில ஒரு நர்ஸ் வேஷம் இருக்கு. நீ நடிக்கிறியா?”
“என்னது நானா?”
“நடிக்கனும்.”
“ஏய் ஸ்டுபிட்டா நீ? இத்தன வருஷத்தில ஒரு நாளாவது நான் ஸ்டேஜ்க்கு பக்கமாவது போயிருக்கனா?”
“போயிருக்க. என்னோட யூகேஜில டான்ஸ் ஆடுற மாதிரி போட்டோ இருக்கு. பாக்குறியா?”
“இடியட் அது யூகேஜில. இப்போ என்னால முடியாது”
“எப்போ பாத்தாலும் படிச்சுட்டுதான இருக்க. கொஞ்ச நேரம் ரிலாக்ஸ்டா வந்து சும்மா நடியேன்”
“முடியாது”
“உன்ன நான் நடிக்க கூட்டிட்டு வருவேன்னு சொல்லிருக்கேன்”
“நீ சொன்னா? நோ.”
…
…
அவன் அப்படி மூஞ்ச வெச்சுக்கிறத பாக்க சகிக்கல. ரொம்ப பாவமா இருந்துச்சு. ஆனா இது நாள் வரைக்கும் நான் டான்ஸ்க்காகவோ ட்ராமாவுக்காகவோ ஸ்டேஜ் ஏறினதே இல்லை. எனக்கு ரொம்ப பயம். ஒரு தடவை இங்கிலீஸ் மேம் ரொம்ப வற்புறுத்தி கூப்பிட்டும் வரமுடியாதுன்னுட்டேன். இன்னைக்கு சித் கூப்பிட்டதும் என்ன செய்யறதுன்னு தெரியல. ஆனா இவன் இப்படி என்கிட்ட கேட்டதேயில்ல. பயமாகவும் இருக்கு. என்னோட பெஸ்ட் ப்ரண்ட்டோட ரிக்வஸ்ட தட்டவும் முடியல.
“ஹேய் ரம்யா வாட் எ சர்ப்ரைஸ்”
“சும்மா வந்தேன்”
சித்தார்த் ஓடி வந்தான்.
“ஹே ரம்யா தேங்க்ஸ்.”
தமிழம்மாவிடம் திரும்பி “அம்மா அந்த நர்ஸ் வேஷம்” என்றான்
தமிழம்மா எனக்கு கொஞ்சம் பெரிய டயலாக் கொடுத்தாங்க. கோர்ட் சீன். நான் நர்ஸாக வந்து சித்தார்த்துக்கு ஆதரவாக சாட்சி சொல்லவேண்டும். இது கொஞ்சம் பெரிய டயலாக். சித்தார்த் பக்கத்திலிருந்தே சொல்லிக்கொடுத்தான். என்னால் எவ்வளவு பெரிய கட்டுரையையும் எளிதாக மனப்பாடம் செய்து விட முடியும். ஆனால் இந்த நாடகம். வாசிக்கும் பொழுது நன்றாக சித்தார்த்திடம் சொல்லிவிடுகிறேன். ஆனால் ரிகர்சல்லுன்னு வர்றப்போத்தான் உதறுது.
“கனம்..க்க்” “க்க்கோர்ர்ட்டார் அவர்களே”
“ரம்யா பயப்படாம சொல்லு”
“எதிரே நிற்கும் ப்ராக்கியூஸ்டர்..”
சிரிப்பு.
“ரம்யா ஒரு தடவை நல்லா டயலாக்க பாரு. ஏன் கை நடுங்குது உனக்கு”
என்னால முடியல. ஒரே ஓட்டமா ஓடி வந்துட்டேன். சித்தார்த் பின்னால ரம்யா ரம்யான்னு கத்தறது கேட்டது. க்ளாஸ¤க்கு வந்து ஒரே அழுகை. ஷீபாவும் வாணியும் தான் தேற்றினார்கள். சித்தார்த் அன்றைக்கு க்ளாசுக்கு வரவேயில்லை. அவன் மேல எனக்கு கோபம் கோபமா வந்தது. எனக்கு ஒன்னும் கோபம் வரலை. நான் ஏன் கோபப்படனும்? அவன் கூப்பிட்டதுக்கு ட்ரை பண்ணினேன். அவ்ளோதான்.
“கௌரி தட் வாஸ் ·பெண்டாஸ்டிக்”
“தாங்க்ஸ்”
“டான்ஸ் ரொம்ப ரொம்ப நல்லா இருந்துச்சு. இல்ல ரம்யா”
“ம்ம்”
“உனக்கு க்ளாஸிக் தான் வரும்னு நினைச்சேன். வெஸ்டர்னும் பிச்சு உதறுர”
கௌரி வழிகிறாள்.
“உன்னொட ஸ்டெப்ஸ் எல்லாத்துலயும் ஒரு நளினம் இருந்துச்சு. இல்ல ரம்யா?”
“ம்ம்”
“சித்தார்த் ஷேல் வி மூவ் டு நெக்ஸ்ட் க்ளாஸ்”
இருக்கும். இருக்கும். அது என்ன இல்ல ரம்யான்னு என்னைய கேக்குறது? விழாவுக்கு இன்னும் கொஞ்ச நாள் தான் இருக்கிறது. இன்னிக்கு மத்தவங்க ப்ரோகிராம்ஸ் எல்லாத்தையும் பென்ச்மார்க் பண்ணனும்னு நான் தான் சொன்னேன். அது தான் தப்பா போச்சு. இவன் என்னடான்னா போற வர்ற இடத்துலயெல்லாம் வழியறான். நல்லா இருந்துச்சுன்னா நல்லாயிருந்துச்சுன்னு சொல்லவேண்டியதுதான. அது என்ன நளினமா இருந்துச்சுன்னு வழியல் வேண்டிக்கிடக்கு? சரியான வழிஞ்சான் கோஷ்ட்டி. நானும் அவனும் பேசிக்கிட்டே நடக்கிறத பாத்த செல்வா அங்கிருந்து கத்தினான்: சித்தார்த் கொடுத்துவெச்சவண்டா நீ. இன்னிக்கு சித்தார்த் ரொம்ப சிரிச்சான். வழிஞ்சான். லூசு. அவன் சிரிச்சா அழகாயிருக்கும். ஆனா சிடுமூஞ்சி. சிரிக்கவே சிரிக்காது.
“என்னடி இன்னும் சித்தார்த்த காணோம்?”
“வந்திருவான்”
…
…
“செல்வா. சித்தார்த் எப்போ வருவான்?”
“தெரியல ரம்யா. வந்திருக்கனும். நேத்து டெகரேட் பண்ணிட்டு லேட்டாத்தான போனான். வந்திருவான்”
“ப்ரிண்ஸி எப்போ ப்ரோகிராம் ஸ்டார்ட் பண்றதுன்னு கேக்கறாங்க”
“ஸ்டார்ட் பண்ணலாமே!”
“சித்தார்த் வரட்டும் மேடம். வந்திருவான்”
(தொடரும்)
You can put lipstick on pig. It is still a pig!
-உபயம் Barrack Obama
கோஹெனின் இந்த பாடலை கேளுங்கள்! ஒபாமாவிற்கும் அமேரிக்க மக்களுக்கும் இந்த பாடல்!
சினிமா வசனம் வாழ்விலும் இருக்கும் : விஜயகாந்த்!
“சினிமாவில் என்ன வசனம் பேசுகிறேனோ அந்த வசனம் வாழ்விலும் இருக்கும், ஒரே ஒருமுறை எங்களுக்கு சந்தர்ப்பம் கொடுங்கள், நேர்மையான ஆட்சியை கொடுப்பேன்’
-சினிமாவிலும் வாழ்க்கையிலும் வசனங்கள் பேசித்திரியும் எங்கள் அண்ணனுக்கு இந்த பாடல்!
Bonus:
இங்கே பார்க்கவும்