Pi

ஜெயமோகனின் காடு நாவலும் ஏழாவது உலகமும் மிக பெரிய உள் விரிவுகளை அடக்கிய நாவல்கள் அல்ல, ஆனால் விஷ்ணுபுரம் அப்படி அல்ல. மதுரை இலக்கியப்பண்ணையில் அந்தப் புத்தகத்தைப் பார்த்தப்பின் வாங்காமல் இருக்க இயலவில்லை. பக்கங்களின் எண்ணிக்கை பயமுறுத்துவதாக இருந்தது. அப்பா மருத்துவமனையில் இருந்த பொழுது நேரத்தை செலவு செய்வதற்காக படிக்க ஆரம்பித்தேன். எனக்கு தெரிந்து, தமிழ் அகராதியைக் கையில் (அல்லது தரையில்) வைத்துக்கொண்டு நான் படித்த முதல் தமிழ்நாவல் இது தான் என்று நினைக்கிறேன். நிறைய வார்த்தைகளுக்கு அர்த்தம் விளங்கவில்லை. அப்பாவிடம் கேட்டுத்தான் தெரிந்து கொண்டேன்.அப்பா ரிடையர்ட் தமிழாசிரியர் என்பதையும் சில கவிதைத் தொகுப்புகளும் எழுதியிருக்கிறார் என்பதையும் இங்கே குறிப்பிட்டாக வேண்டும். மேலும் என் அண்ணனுக்கும் – வக்கீலாக பணிபுரிகிறார்- அம்மாவுக்கும், நிறைய வார்த்தைகளுக்கு அர்த்தம் தெரிந்திருந்தது எனக்கு வியப்பாக இருந்தது.

விஷ்ணுபுரம் நாவலை நான் முழுதாக படிக்கவில்லை. 300 பக்கங்கள் வரை கொஞ்சம் பொருமையிருந்தது, அதற்கப்புறம் வாக்கியங்களில் சுற்றி சுற்றி மீள முடியாத மயக்கநிலைக்கே சென்று கொண்டிருந்தேன். ஆதலால் வாசிப்பை துரிதப்படுத்தினேன், skipping pages. ஏனோ நாவலின் முடிவைப் பார்த்துவிட்டால் போதும் என்றிருந்தது. ஆனால் முடிவென்பது இல்லை என்பதே நாவலின் கருப்பொருள். அப்படியிருக்க நாவலுக்கு எப்படி முடிவிருக்கும். தொடங்கிய இடத்திலே முடிகிறது. நாவலில் வரும் விஷ்ணுபுரமும், கோபுரங்களும் மிக மிக அழகு. அதிலும் கோபுரங்களின் கட்டமைப்பு பற்றி மிக விரிவாக விமர்சித்திருப்பது, நம்மை அந்த கோவிலின் அருகிலே கொண்டுசெல்கிறது. மிகத் தேர்ந்த ஒளிப்பதிவாளரின் நேர்த்தியுடன் காட்சி நம் கண் முன்னே விரிகிறது. கருடனின் கதையும் புல்லரிக்க செய்கிறது. முழுமையாக வாசிக்காத காரணத்தால் இந்த புத்தகத்தைப் பற்றி விரிவாக பேச இயலாது. ஆனால் விஷ்ணுவின் சிலையும் (அது விஷ்ணுவே இல்லையென்றும் நாவலிலே சொல்லப்படுகிறது) மூன்று வாசல்களும் என் கண் முன்னே இன்னும் நிற்கிறது. மீண்டும் ஒரு முறை – வாய்ப்பும் போதிய நேரமும் கிடைத்தால் – நிச்சயம் மறுபடியும் படிக்க வேண்டும்.

சோம. வள்ளியப்பன் எழுதிய அள்ள அள்ள பணம் என்ற பங்குச் சந்தையை அக்குவேறு ஆணிவேறாக அலசும் சிறிய – comparative to விஷ்ணுபுரம் – புத்தகம் ஒன்றை படித்தேன். மிக மிக நல்ல புத்தகம். பங்குச் சந்தையில் கால் வைக்க விரும்பும் புதியவர்களை ஊக்கப்படுத்துவதோடு; மிக அழகாக சறுக்கி விழக்கூடிய ஆபத்தையும் உணர்த்துகிறார் ஆசிரியர். நாணயம் விகடனுக்காக காத்திருக்கத் தேவையில்லை. வாங்குங்கள். படியுங்கள். களத்தில் இறங்குங்கள். ஆனால் சொல்லித்தெரிவதில்லை “பங்குச்சந்தை” கலை! பட்டுத்தான் தெரியவேணும். என்னுடைய பாஸ் புத்தகத்தைப் பார்த்தவுடன் வாங்கிச்சென்றுவிட்டார். ரஜினி பாடலில் வரும் : “அஞ்சுக்குள்ள நாலவை. ஆழம் பார்த்து காலவை” என்ற வாக்கியத்தை மட்டும் ஞாபகத்தில் இருத்திக்கொண்டால் போதுமானது.

எங்கள் ஆபீஸ் டவரில் இருக்கும் Private Lending Library யில் சுற்றிக்கொண்டிருந்த பொழுது, Life Of Pi என்ற நாவலைப் பார்த்தேன். Man Booker Prize வாங்கிய நாவல் இது. முன்பே பலமுறை பலர் சொல்ல கேள்விப்பட்ட நாவல் தான் இது. எப்பொழுதும் ஒரு மாதம் கால அவகாசம் தரும் Library, இந்த புத்தகத்தை சீரியஸ் ரீடிங் என்று கணக்கில் கொண்டு இரண்டு மாத காலம் அவகாசம் தந்தது. ஆனால் உண்மையைச் சொன்னால் : சீரியஸாக படித்தால், ஆறு மணி நேரத்தில் படித்து விடலாம். ஒரு சனிக்கிழமை இரவு. அவ்வளவே.

நீங்கள் ஆரம்பித்தால் மட்டுமே போதுமானது, நாவல் உங்களை பக்கங்கள் தோறும் கடத்திச் செல்லும், அமைதியாக ஓடும் நதியில் மிதக்கும் மரம் போல நீங்கள் உணர்வீர்கள். இதுவரை நான் படித்திராத கதைக் களம். புதிய உத்தி. அதிரடி க்ளைமாக்ஸ். நான் கொஞ்சம் தத்தி, அதனால் க்ளைமாக்ஸ் அதிரடியாக இருந்திருக்கலாம். உங்களுக்கு எப்படியோ! யான் மார்ட்டல் எழுதிய இந்நாவல் பாண்டிச்சேரியில் தொடங்கி கனடாவில் முடிகிறது. ஆசிரியரும் கனடாவைச் சேர்ந்தவரே. கனடாவின் இலக்கியம் வளம் மிக நன்றாக இருக்கிறதென்று நினைக்கிறேன்.

ஹீரோ பை (Pi) யின் அப்பா ஒரு மிருகக்காட்சி சாலை வைத்திருக்கிறார். ஒரு கட்டத்தில், zoo வை விற்று விட்டு தன் குடும்பத்தாருடன் கனடாவை நோக்கி கப்பலில் பயணிக்கிறார். கப்பல் கவிழ்ந்து விடுகிறது. பை மட்டும் ஒரு Life Boat ல் தப்பிக்கிறான். ஆனால் அந்தோ பரிதாபம், அந்த லைப் போட்டில் ஒரு ஓநாயும், ஒரு வரிக்குதிரையும், ஒரு ஓரங்குட்டானும், ஒரு 140 பவுண்ட் புலியும் இருக்கின்றன. அவை அனைத்தும் அவர்களுடைய மிருகக்காட்சி சாலையில் இருந்தவை. முதலில் புலி அமைதியாக இருக்கிறது. ஓநாய் வரிக்குதிரையை உயிருடன் கடித்து திண்ண ஆரம்பிக்கிறது. பிறகு ஓரங்குட்டானை கொல்கிறது. பை தொடர்ந்து கொல்லப்படாமல் தப்பிக்கிறான். பிறகு புலி விழித்துக் கொள்கிறது. ஒரே அடியில் ஓநாயை வீழ்த்துகிறது. பிறகு ஓநாயையும், எஞ்சிய வரிக்குதிரையின் பாகங்களையும், ஓரங்குட்டானையும் திண்கிறது. அடுத்தது பை தான்.

பை இருநூறுக்கும் மேற்பட்ட நாட்கள் எப்படி கடலில் அந்த மிருகத்திடமிருந்து தப்பித்து கரைசேருகிறான் என்பதே கதை. அதற்குப்பிற்கு ஒரே ஒரு சஸ்பென்ஸ் மட்டுமே இருக்கிறது. கடவுள் நம்பிக்கையையும், தன் நம்பிக்கையையும், வாழ நினைத்தால் வாழலாம் என்பதையும் அறிவுறுத்தும் நாவல் இது. மெல்லிய நகைச்சுவை நாவல் தோறும் பரவிக்கிடக்கிறது, பீச்சிலிருக்கும் மணல் போல. எடுத்துக்காட்டாக அவனுக்கு எப்படி Pi என்ற பெயர் வந்தது என்பது. நான் நாவலை வாங்கும் பொழுது, பை யின் அப்பா ஒரு மிகச்சிறந்த கணித மேதையாக – Pi=3.14 -இருக்கக்கூடும் என்று தான் நினைத்திருந்தேன். படியுங்கள் : A laugh guaranteed.

அப்புறம் நீண்ட நாட்களாக நூறு பக்கங்களை மட்டுமே படித்துவிட்டு வைத்த The Glass Palace என்ற அற்புதமான நாவலை மீண்டும் வாசிக்கத்தொடங்கினேன். அடுத்த பதிவில் Amitav Gosh ஐ சந்திக்கலாம்.

புத்தகப்புழு

இப்பொழுதெல்லாம் சில நிமிடங்கள் இடைவெளி கிடைத்தால் கூட படித்துக்கொண்டிருக்கும் நாவலில் ஒரு சில பக்கங்களையாவது படித்துவிடத் துடிக்கிறேன். சிறிது சிறிதாக ஒரு புத்தகப்புழுவாக மாறிக்கொண்டிருக்கிறேன் என்று நினைக்கிறேன். ‘புத்தகப்புழு’ என்ற வார்த்தை புத்தகப்பிரியர்களுக்கு தவறான சொல் என்பது என் எண்ணம். புத்தகம் என்ற பறந்து விரிந்த அனு அண்டமெல்லாம் சிதறிக்கெடக்கும் ஒரு உலகில் அலைந்து திரிந்து மூழ்கித் திளைத்துக்கொண்டிருப்பவர்களுக்கு புழு என்ற சொல் பொருத்தமானதாகத்தெரியவில்லை. மேலும் வாசித்தல் என்பது அவ்வளவு எளிதான காரியமும் அல்ல, சன் டீவியில் கோலங்கள் பார்ப்பதைப் போல. எத்தனை நபர்கள் புத்தகத்தைக்கண்டால் ஜிஞ்சர் திண்ண மங்கி மாதிரி முகத்தை வைத்துக் கொள்கிறார்கள் தெரியுமா?

என் நண்பன் ஒருவன் இருக்கிறான். அவன் குமுதம் ஆனந்த விகடன் கூட படிக்க மாட்டான். குமுதத்தை வாங்கையவுடன் வேகவேகமாக படங்களை மட்டுமே பார்ப்பான். அப்புறம் இது தேறாது என்று மார்க்போடுவான். மற்றபடி ஒரு எழுத்து ஒரு வரி கூட படிக்க மாட்டான். இவனுக்கு படிப்பறிவு இருக்கிறதா இல்லையா என்று கூட சமயத்தில் நினைக்கத்தோன்றும். ஒரு வேளை நம் கிரிக்கெட் ப்ளேயர்களுக்கு கிரிக்கெட் மறந்துபோனது மாதிரி அவனுக்கு வாசிக்க மறந்து போயிருக்கலாம். வாய்ப்பிருக்கிறதில்லியா?

புத்தகப்புழுவாக இருப்பதில் சில தீமைகளும் பல நன்மைகளும் இருக்கின்றன. தீமைகள் என்றால் முக்கியமாக நண்பர்களை இழத்தல். ஆனால் முற்றிலுமாக அல்ல. புத்தகங்களை விடவா நல்ல நண்பர்கள் இருக்கிறார்கள்? என்னதான் சொல்லுங்கள் புத்தகத்திடம் ஒரு ஐம்பது ரூபாய் கடன் வாங்க முடியுமா என்ன? பிறகு சில பல முக்கியமான காரியங்களை மறத்தல், உதாரணமாக : ஆபீஸ் செல்வது.

நன்மைகள் என்றால் ஏராளம். ஏராளம். உலகத்தில் உள்ள நன்மைதீமைகளையும், மனிதர்களையும், அறிவையும், அனுபவத்தையும் ஒரு மனிதன் பெற வேண்டுமென்றால் ஒரு ஜென்மம் போதாது. இவை அனைத்தையும் பெற வேண்டுமெனில் புத்தகம் மட்டுமே உதவும். ஏன் டிஸ்கவரிச் சேனலும் நேசனல் ஜியோகிராபி சேனலும் இருக்கிறதே? என்று கேட்டால், நம் சுதந்திரம் கெட்டுப்போகிறதே. நம் இஷ்டத்திற்கு நாடுகளை பற்றித்தெரிந்து கொள்ள இயலாதே? அந்த சேனலில் வரும் தகவல்களை மட்டுமே நாம் பெற முடியும். தாய்பேய்க்கு பதில் தாய்லாந்து பற்றி அறிந்துகொள்ள வேண்டுமெனில் என்ன செய்வது? இப்படி புத்தகத்தின் அருமை பெருமைகளை ஒரு சமயம் பேசிக்கொண்டிருந்த பொழுது கடுப்பான என் நண்பன் ஒருவன் (மேற்குறிப்பிட்ட நபர் தான்) மிகுந்த கோபமுடன், புத்தகத்தில ஜிலேபின்னு எழுது வாசிச்சா, ருசி கிடைக்குமாடா என்றான். என்னைக்கேட்டால் சில சமையம் கிடைக்கும் என்று தான் சொல்வேன். நாவல் படித்துக்கொண்டிருக்கும் போது சிரிக்கிறோமே அல்லது சில சமயம் புல்லரிக்கிறதே (இன்று கூட ஜெயமோகனின் கொற்றவையைப் படித்துக்கொண்டிருக்கும் போது முதல் “பழம் பாடல் சொன்னது” என்னை புல்லரிக்க வைத்தது, தொடர்ந்து இரண்டாவதும்) அந்த சுவையை நாம் உணரும் போது ஜிலேபியின் சுவையையும் உணர வாய்ப்பிருக்கிறது. சில நேரங்களில் மட்டுமே.

மேலும் இந்த டீவியின் தொல்லையிலிருந்து தப்பிக்க முடிகிறதே அதுவே பெரிய விசயம். இல்லையேல் விஜய் டீவியில் வரும் “குட்டி தங்கக்கட்டி” என்ற நிகழ்ச்சியின் விளம்பரத்தையே தான் பத்து நிமிடத்திற்கொருமுறை பார்க்க நேரிடும். போதாக்குறைக்கு “வாடிப்பட்டிக்கு பக்கத்தில” என்ற காத்து கருப்பின் விளம்பரம். என்ன கொடும சரவணா இது?

இந்தியா சென்று திரும்பியதும் home sick லிருந்து தப்பிக்க நிறைய படங்களும் சில புத்தகங்களும் படித்தேன்.

கொஞ்சமாவது நன்றாக இருந்த படம் என்றால் அது : “Texas Chain Saw Massacre : The beginning” மட்டுமே. த்ரில் மற்றும் போன பாகத்தில் வந்தவர்களைப் பற்றிய கதைகள் நன்றாக இருந்தன. சுத்தியலால் அந்த டாக்டரின் முகத்தில் ஓஓஒங்ங்கி அடித்துக் கொல்லும் முதல் காட்சி மனதை உறையச்செய்யும் காட்சி. முகத்திற்கு பக்கத்தில் சுத்தியல் வரும் போது காமிராவை நகர்த்திவிடுவார்கள் என்று நினைத்தது தவறாகிவிட்டது. மேலும் THX ஒலியில் பார்த்ததால் கூட படம் நன்றாக இருந்திருக்கலாம். இந்தியாவில் திரையிடப்பட்டால் நிச்சயம் பாருங்கள்.

மற்றபடி ‘crank’, ‘covenant‘ ‘grudge2’ போன்றவை பரவாயில்லை ரகம். “Grudge 2” படம் பார்த்தவர்கள் காயோகாவை மறந்திருக்க முடியாது.
இந்த படத்தை மிக அருமையான திரில் படம் என்று சொல்பவர்கள் இருக்கிறார்கள். என்னைப்பொருத்தவரை முதல் பாகத்தை விட இரண்டாம் பாகம் நன்றாக இருந்தது. காயோகாவின் ப்ளாஷ்பேக் காட்டப்படுகிறது. சில காட்சிகள் பயமாக இருந்தது. சிறிது நாட்களுக்கு முன் ‘Grudge 1′ படத்தை டீவிடியில் பார்த்தோம். அந்தப் படம் பார்த்தவர்களுக்கு பேய் வரும்பொழுது கூடவே வரும் சத்தம் ஞாபகம் இருக்கும். இந்த சத்தத்தைக்கேட்டு என் நண்பர் வட்டாரம் : என்னடா பேய் ஏப்பம் ஏப்பமா விடுது? என்றனர். பிறகு ஒவ்வொரு முறை ஏப்பம் விடும் பேய் வரும் பொழுதெல்லாம் காமெடி ஸ்டோரிதான்.

crank” ஒரு வித்தியாசமான (by the standards of hollywood) கதை தான். அதாவது விஷம் செலுத்தப்பட்ட ஒரு நபர், சாகாமல் இருக்க வேண்டுமென்றால் இதயத்தை துடித்துக்கொண்டேயிருக்க செய்ய வேண்டும். அதற்கு என்னவெல்லாம் செய்யலாம் என்று நீங்கள் நினைக்கிறீர்களோ அதெல்லாம் படத்தில் உண்டு. கொஞ்சம் ஓவராக.

“covenant” போகட்டும் விட்டுவிடுங்கள்.

அப்புறம் புது ஜேம்ஸ்பாண்ட் படம். ‘the casino royale’. நிறைய விமர்சனங்கள் Daniel Craig பற்றி. ஏன் நானே சொல்லியிருக்கிறேன். Brossnan இருந்த இடத்தில் இவரா என்று. ‘Munich‘ பார்க்கும் போது கூட : கருமம் கருமம் கிழிஞ்ச பேண்ட் மாதிரி இருக்கான் இவனெல்லாம் ஜேம்ஸ்பாண்டா? என்று கமெண்ட் அடித்திருக்கிறோம்.

ஆனால் சும்மா சொல்லக்கூடாது. ஜேம்ஸ்பாண்டுக்கு ஒரு புது இலக்கணம் வகுத்திருக்கிறார், Daniel Craig. என்ன கம்பீரம், என்ன மிடுக்கு? என்ன நடை? என்ன உடை? ஆனால் உதட்டை எப்பொழுதும் கிஸ்ஸ¤க்கு ரெடி என்பது போலவே வைத்திருப்பது சற்று எரிச்சலைத் தருகிறது. Ask the girls!

படத்தில் வரும் Title Graphics க்கும், அந்த ‘You know my name’ பாடலுக்கும், முதல் chase சண்டைக்காட்சிக்கும், படிக்கட்டில் வரும் சண்டைக்காட்சிக்குமே கொடுத்த காசு சரியாகப்போகிறது. Bond girl? ம்ம்..Bonus. நாங்கள் இந்தப் படத்தி ஏசியாவிலே மிகப்பெரிய திரையில் GV MAX (24.2 M wide) பார்த்தோம். அனுபவம் புதுமை.

பெரிய திரைதான், ஆனால் கோலாலம்பூரில் இருக்கும் iMax திரை போல வராது. அது திரை மட்டுமே ஐந்து மாடிக்கு இருக்கும். இங்கு தான் ‘The Polar Express’ பார்த்தோம். இரண்டு வருடங்களுக்கு முன்பு. இந்தியாவில் iMax ஹைதராபாத்தில் இருக்கிறது என்று கேள்விப்பட்டுள்ளேன். தெரியவில்லை.

புத்தகங்கள்?? அடுத்த பதிவில். ப்ளீஸ்.

த நைட் லிசனர்

இந்த பதிவை எழுதத்தொடங்கும் முன் எனக்கு த நைட் லிசனர் என்பதை –தமிழார்வ மிகுதியால்; இராகவனின் சொல் ஒரு சொல் பதிவுகளைப் படித்ததால் கூட இருக்கலாம் – தமிழில் மொழி பெயர்த்தாலென்ன என்கிற விபரீத எண்ணம் தோன்றியது. இரவில் கவனிப்பவன் என்றால் வேறுவிதமான அர்த்தம் –மன்னிக்கவும்– தோன்றுவதாக அடியேனுக்கு படுகிறது. இரவு கவனிப்பாளன். சில தமிழகராதியில் – நீ ஏன் இப்படி அகராதித்தனம் பண்ணுகிறாய் என்று நீங்கள் கேட்பது எனக்கு கேட்காமலில்லை – தேடியதில் “லிசனர்” என்பதற்கு உற்று கேட்கிறவர் என்கிற அர்த்தம் கிடைத்தது. மொத்தமாய் : இரவில் உற்றுக்கேட்பவர் – என்னை முரைத்தால் நான் என்ன செய்ய முடியும்; அப்படித்தானே அர்த்தம் வருகிறது!– நான் ஆட்டைக்கு வரலப்பா.

ராபின் வில்லியம்ஸ் படங்கள் எனக்கு பிடிக்கும். அவரது படங்கள் முன்பெல்லாம் நகைச்சுவையாக இருந்தது. இப்பொழுது மர்மம் நிறைந்ததாக இருக்கிறது. ஒன் அவர் போட்டோ, த பைனல் கட், இன்சோம்னியா. இப்பொழுது த நைட் லிசனர். நகைச்சுவை என்றால் புகுந்து விளையாடும் ராபின் வில்லியம்ஸ், சீரியஸ் ரோல் என்றால் மிகவும் சோகமாகி விடுகிறார். இரண்டு வருடங்களுக்கு முன் நடந்த ஆஸ்கார் விழாவில், ராபின் வில்லியம்ஸ் அனைவரையும் மேடையில் கலாய்த்தது உங்களுக்கு நினைவிருக்கும்.

கேப்ரியல் நூன் (ராபின் வில்லியம்ஸ்) ஒரு ரேடியோ ஷோ நடத்துபவர். அவரது நிகழ்ச்சி இரவு 11:00 மணியிலிருந்து – 12:00 மணி வரைக்கும் இடம்பெறும். இரவில் கதை சொல்வார் கேப்ரியல். ஒரு நாள் அவரது நண்பர் கேப்ரியலிடம் ஒரு மனுஸ்க்ரிப்ட் கொடுக்கிறார். அது ஒரு கதை. பீட் என்கிற பதினான்கு வயது சிறுவன் எழுதிய கதை. அவன் தனது பெற்றோர்களால் உடலாலும் மனதாலும் துன்புறுத்தப்பட்டு அவர்களிடமிருந்து தப்பித்த எய்ட்ஸ் நோயாளி. பிறகு ஒரு தெரபிஸ்ட் (டோனி) அவனைத் தத்தெடுக்கிறாள். இப்பொழுது அந்த சிறுவனுக்கு அவளே பாதுகாவலர். அவள் பொறுப்பில் இருக்கும் பொழுதுதான் அந்த சிறுவன் இந்த கதையை எழுதியிருக்கிறான்.

கேப்ரியல் கதையை படித்து முடிக்கிறார். அவருக்கு பதினான்கு வயது சிறுவன் இதை எழுதினானா என்று நினைக்கிற பொழுது ஆச்சரியமாக இருக்கிறது. அவன் இவ்வாறு எழுத நேர்ந்ததை – அவன் பட்ட துன்பங்களை- நினைக்கும் போது பாவமாகவும் இருக்கிறது. புத்தகத்தை வெளியிட விரும்புகிறார் கேப்ரியல். தன்னுடைய நண்பரிடம் அவனது போன் நம்பர் வாங்கி அவனை தொடர்பு கொள்கிறார்.

கேப்ரியலுக்கும் அந்த சிறுவனுக்கும் நட்பு மலர்கிறது. கேப்ரியல் அந்த சிறுவனுக்கு தந்தை ஸ்தானத்தில் ஒருவர் தேவைப்படுகிறார் என்பதை அறிந்து அவனிடம் மேலும் அன்பு செலுத்துகிறார்.

ஒரு நாள் பீட்டிற்கு உடம்பிற்கு முடியாமல் போகிறது. அவனை ஆஸ்பத்திரியில் அட்மிட் செய்கிறாள் டோனி. போனின் இந்த விசயத்தை கேள்விப்பட்ட கேப்ரியல் மிகுந்த சோகம் அடைகிறார். அந்த சிறுவனை பற்றி முழுமையாக தெரியாமல் இருக்கும் பொழுது, ஏன் இப்படி கேப்ரியல் மிகுந்த வருத்தமாக இருக்கிறார் என்று நினைத்து கேப்ரியலின் நண்பர்கள் வருத்தமடைகின்றனர். மேலும் அந்த சிறுவன் உண்மையிலே இருக்கிறானா என்று கேள்வி எழுப்புகின்றனர். மேலும் கேப்ரியலின் நண்பர் ஒருவர், கேப்ரியல், டோனி மற்றும் பீட் தொலைபேசியில் (ஸ்பீக்கர் போனில்) பேசும் போது கேட்டுக்கொண்டிருக்கிறார். அவர் கேப்ரியலிடம் : பீட் மற்றும் டோனியின் குரல் ஒரே மாதிரி இருக்கிறது என்றும் கொழுத்திப்போடுகிறார். கேப்ரியலிடம் அந்த சிறுவனின் படம் (போட்டோ) ஒன்று இருக்கிறது. தொலைபேசி எண் இருக்கிறது. வீட்டு அட்ரஸ் இருக்கிறது.

பீட்டிற்கு உடம்பு சரியாகின்றது. கேப்ரியலை கிரிஸ்துமஸ் பார்ட்டிக்கு அழைக்கிறாள் டோனி. கேப்ரியலும் அவர் நண்பரும் இணையத்திலும் மற்ற ரெக்கார்டிலும் பீட் பற்றி தேடுகின்றனர். பீட் டின் அடையாளமே கிடைக்கவில்லை. (அத்திப்பட்டியைப் போல!) கேப்ரியலுக்கு சந்தேகம் வருகிறது. டோனியின் தொலைபேசி எண் வேலை செய்யவில்லை.

கேப்ரியல் அந்த அட்ரஸை தேடிச் செல்கிறார். (விமானப்பயணம் மற்றும் பனி கொட்டும் வழியில் கார் பயணம்). நீண்ட பயணத்திற்குப்பின் அவர் தேடிவந்த முகவரி ஒரு ரீட்டையில் ஷாப். அங்கு வீடே இல்லை.

அந்த ஊரிலே லாட்ஜ் எடுத்துத் தங்குகிறார். தற்செயலாக ஹோட்டலில் இருந்து பார்க்கும் பொழுது பீட் அடிக்கடி சொல்லும் லைட்டால் செய்யப்பட்ட நட்சத்திரம் தெரிகிறது. இரவென்றும் பார்க்காமல் அங்கே செல்கிறார். அது ஒரு வாட்டர் டேங்கின் வெளிப்புறத்தில் பிரகாசமான் மின் விளக்குகள் பொருத்தப்பட்ட ஸ்டார் வடிவ விளக்கு. அங்கே உள்ள வீட்டிற்கு அவர் செல்ல முற்படுகிற பொழுது அந்த வீட்டிலிருந்து நாய் குரைக்கிறது. கேப்ரியல் பயந்து ஓடி விடுகிறார்.

மறுநாள் காபி ஷாப்பில் சாப்பிட்டுக்கொண்டிருக்கும் போது, தடித்த கண்ணாடியால் (அந்த பக்கம் உட்கார்ந்திருப்பவரின் உருவம் மட்டுமே மிக மங்கலாகத் தெரியும்) மறைக்கப்பட்டு அந்த பக்கம் உட்கார்ந்திருக்கும் ஒரு பெண்ணின் குரல் கேட்கிறது. அது பரிச்சயமான குரலாக இருக்கிறது. அந்த பெண்ணும் இவரைப் பார்ப்பது சற்று மங்கலாகத் தெரிகிறது. அந்த பெண் புறப்படும் வரை காத்திருந்து, அவளைப் பின் தொடர்கிறார். அவள் பார்வை இழந்தவள். கூடவே ஒரு நாயிருக்கிறது. அவள் நேற்று பார்த்த நட்சத்திரத்திற்கு எதிரான வீட்டிற்கே போகிறாள். இவள் தானா டோனி என்கிற சந்தேகத்தில் வீட்டிற்கு வெளியேயே மறைவாக நின்று கொண்டிருக்கும் கேப்ரியலை, வாசலில் நின்று திரும்பி, ‘ஒரு ஹலோ சொல்லமாட்டியா கேப்ரியல்” என்கிறாள் டோனி.

கேப்ரியல் வீட்டில் தேடிப்பார்க்கிறார். பீட் இல்லை. அவனது படுக்கை மட்டுமே வெறுமையாக இருக்கிறது. கேப்ரியல் பீட் எங்கே என்று கேட்கவும், டோனி அவனுக்கு உடம்புக்கு ரொம்பவும் முடியாமல் போய் விட்டது என்றும் ஹாஸ்பிட்டலில் இருக்கிறான் என்றும் சொல்கிறாள். கேப்ரியல் நாளை சென்று பீட்டை பார்க்கலாமா என்று கேட்க, சரி போகலாம் என்கிறாள் டோனி. டோனி தானும் கேப்ரியலின் ரசிகை என்றும், ஒரு முறை தொட்டுப்பார்த்துக்கொள்ளலாமா என்றும் கேட்கிறாள்.

கேப்ரியல் மறுபடி மறுபடி பீட்டைப் பற்றி விசாரிக்க, டோனி, உங்களுக்கு சந்தேகமா? புத்தகம் வெளியிடுவதில் பிரச்சனையா என்று கேட்கிறாள். கேப்ரியல் ஆமாம் எனவும், மிகுந்த ஆத்திரம் கொண்டவளாக உன்னை நாளைக்கு ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்ல மாட்டேன் என்றும் இனி மேல் இங்கு வரத்தேவையில்லை என்றும் சொல்கிறாள். கதவை மூடிவிடுகிறாள்.

கேப்ரியல் அந்த ஊருக்கு அருகிலிருக்கும் ஆஸ்பத்திரிக்கு சென்று பீட்டைத்தேடுகிறார். அங்கிருக்கும் மற்ற அனைத்து மருத்தவமனைக்கும் சென்று தேடுகிறார் எங்கும் பீட் இல்லை.

மறுநாள் கேப்ரியல் கண்ணாடியை உடைத்துக்கொண்டு டோனியின் வீட்டிற்குள் நுழைகிறார். எங்கும் பீட் இல்லை. அவர் தேடிக்கொண்டிருக்கும் பொழுது போலீஸ் வந்துவிடுகிறது. போலிஸில் அனைத்து விசயங்களையும் விவரித்து, வெளியே வரும் பொழுது, டோனி நின்று கொண்டிருக்கிறாள். பீட் நேற்றிரவு இறந்து விட்டான் என்று சொல்கிறாள். கேப்ரியல் நம்ப மறுக்கிறார். பொய் சொல்கிறாய் என்கிறாள். அவள் ரோட்டில் உட்கார்ந்து இல்லை இல்லை என்று கத்துகிறாள். ஒரு ட்ரக் வருகிறது. கேப்ரியல் அவளை எழுந்து வருமாறு சொல்ல, அவள் கைதூக்கி விடச்சொல்கிறாள். கேப்ரியல் கைதூக்கிவிட முயற்சிக்கும் போது, டோனி கேப்ரியலை அழுத்தமாகப் பிடித்துக்கொண்டு கொலை செய்ய முயற்சிக்கிறாள்.


கேப்ரியல் திரும்பி வந்து விட்ட பொழுதும் டோனி விடாமல் போனில் அழைத்துக்கொண்டேயிருக்கிறாள். ஒரு நாள் தான் தங்கியிருக்கும் லாட்ஜுக்கு கடைசி ஒருமுறை வரச்சொல்லுகிறாள். கேப்ரியல் லாட்ஜுக்கு செல்கிறார். படியேறி அவள் ரூமை நோக்கி செல்லும் போது, டோனி ரூமிலிருந்து வெளிப்படுவதைப் பார்த்து ஒளிந்து கொள்கிறார். டோனி படியிரங்கும் முன், கேப்ரியலை நன்றாக உற்றுப்பார்த்து (கருப்பு கண்ணாடி அணிந்திருக்கிறாள்) செல்கிறாள்.

கேப்ரியல் ரூமுக்கு உள்ளே நுழைந்து ஒரு வீடியோ கேசட் இருப்பதைப் பார்க்கிறார். அதில் பீட் படுத்திருக்கும் படம் ஓடிக்கொண்டிருக்கிறது. போன் அழைக்கிறது. பீட் பேசுகிறான். தான் டோனிக்காக ஏர்போர்டில் காத்துக்கொண்டிருப்பதாகவும், உங்களிடமிருந்து என்னைக்காப்பாற்றவே டோனி தான் இறந்துவிட்டதாக சொன்னாள் என்றும் சொல்கிறான்.

சில நாட்களுக்கு பிறகு டோனி ஒரு ப்ளாட்டைப் பார்த்துக்கொண்டிருக்கிறாள். அவளுக்கு நன்றாக கண் தெரிகிறது. ப்ளாட்டை சுற்றிக்காட்ட வந்த ஏஜென்ட் கேட்கிறாள், “How exactly did your son lost his legs?”

சேர்க்கப்பட்டது:
நான் புரிந்துகொண்டது:

டோனி கேப்ரியலின் தீவிர ரசிகை. கேப்ரியலின் அன்பையும், இரக்கத்தையும் கவனிப்பையும் பெற அவள் பீட் என்கிற சிறுவனை கற்பனை செய்து கொள்கிறாள். அவ்வாறே போனில் பேசுகிறாள். இரண்டு குரல்களில். கேப்ரியல் நேரடியாக தேடிக்கொண்டு வந்தவுடன், பீட் ஆஸ்பத்திரியில் இருக்கிறான் என்று பொய் சொல்கிறாள். கேப்ரியல் ஆஸ்பத்திரியில் தேடியலைந்த பீட் அங்கு இல்லை என்று கேள்வி எழுப்பிய போது, பீட் இறந்துவிட்டான் என்கிறாள். அவளுடைய முயற்சி கேப்ரியலிடம் செல்லுபடியாகாததால், வேறு இடத்திற்கு ஜாகையை மாற்றி, தன் மகனுக்கு கால் போய்விட்டதாகவும், அவனை ஆஸ்பத்திரியில் வைத்திருப்பதாகவும் அக்கம் பக்கம் உள்ளவர்களிடம் கூறிக்கொண்டிருக்கிறாள்.
இது உண்மைச் சம்பவம் என்றும் அந்த பீட் என்ற சிறுவனின் ஐடன்டிட்டி இன்று வரை நிரூபிக்கப் படவில்லையென்றும் படம் முடிந்தவுடம் போடுகிறார்கள். இருந்தால் அவனுக்கு 28 வயது இருக்குமாம். பீட்டு அப்பீட்டாயிட்டியேபா!

ஸ்டே

ஓசியாக கிடைக்கிறதே என்று கண்ட படத்தையும் வாங்கிப்பார்த்தால் இப்படித்தான் ஆகும். போன சனிக்கிழமை ஸ்டே “stay” என்ற படத்தின் டி.வி.டி கிடைத்தது. IMDB யில் ரேட்டிங் பார்த்ததில் 6.8 என்றிருந்தது. அப்பொழுதே உசாராகியிருந்தால் இந்த பதிவை நீங்கள் படிக்கும் அவசியமேற்பட்டிருக்காது. பொதுவாக imdb யில் ஐந்து மதிப்பெண்களுக்கு மேல் குடுத்திருக்கிறார்கள் என்றால் கண்டிப்பாக அந்த படத்தைப் பார்க்கலாம். ஏழு, எட்டு, ஒன்பது என்றால், உஷார் : புரியாமல் போக வாய்ப்பிருக்கிறது. அவர்களே, என்ன இது புரியமாட்டேன் என்கிறது; பேசாமல் நல்ல மார்க்கை கொடுத்துத்தொலைப்போம்; நமக்கேன் வீணவம்பு என்று மார்க்களிக்கிறார்கள் என நினைக்கிறேன். Twelve Monkeys போல. சத்தியமாக எனக்கு Twelve Monkeys படம் புரியவில்லை. ஒரு நண்பன் -அவன் நிறைய ஆங்கில சினிமா பார்ப்பவன்; என் பதிவுகளை படிப்பவர்களுக்கு; குறட்டை கோவிந்தன், வேட்டையராஜா, சம்மன சாமியார் – என்னிடம் “அப்படியா புரியவில்லையா?? கொடு பார்ப்போம்” என்றான். நானும் அவனும் ஒரு ஞாயிற்றுக்கிழமை மதியம் Twelve Monkeys – டூ மன்கீஸ் சீயிங் டுவல்வ் மன்கீஸ் : என்று கவிதை எழுதுபவர்கள்; பரவாயில்லை பிழைத்துப்போங்கள்! -பார்ப்பதற்கு உட்கார்ந்தோம்.

அவன் சோபாவில் உட்கார்ந்திருந்தான். நான் கீழே உட்கார்ந்திருந்தேன். நான் இந்த முறையாவது புரிகிறதா பார்க்கலாம் என்று படத்தில் மூழ்கிவிட்டேன். ஒரு இடத்தில் எனக்கு இந்தமுறையும் புரியாமல் போகவே: என்னடா இது என்று அவனைத் திரும்பிப்பார்க்க; அவன் நன்றாக தூங்கிக்கொண்டிருந்தான். குட். படத்தில் கடைசியில் ட்விஸ்ட், சஸ்பென்ஸ் என்று இருப்பதெல்லாம் ஓகே தான். ஆனால் கடைசியில் இருக்கும் ட்விஸ்டை பார்ப்பதற்கு; படத்தின் கடைசி வரைப் பார்க்கவேண்டுமே-தூக்கம் அல்லது குறட்டை வராமல்!

12 monkeys போல இல்லையென்றாலும், “ஸ்டே” கொஞ்சம் நல்லாவே இருந்தது. எடுத்த விதமும், கதை சொல்லப்பட்ட விதமும், நவோமி வாட்ஸ¤ம் (த ரிங், கிங் காங்) அழகு!

முதலில் ஒரு கார் ஆக்ஸிடென்ட் ஆவது காட்டப்படுகிறது. வித்தியாசமாக. அதாவது, உள்ளே உட்கார்ந்து ட்ரைவ் செய்பவரின் கண் பார்வைக்கு எப்படித்தெரியுமோ, அப்படி. பிறகு ஒரு மனிதன் கவிழ்ந்து எரிந்து கொண்டிருக்கும் காருக்கு அருகே உட்கார்ந்திருக்கிறான். அந்த காரில் பயணித்தவனாக இருக்கவேண்டும். சும்மாவே உட்கார்ந்திருக்கிறான். பிறகு எழுந்து சென்று விடுகிறான்.

ஒரு சைக்யாட்ரிஸ்ட் இருக்கிறார். அவருக்கு கை நரம்புகளை அறுத்துக்கொண்டு தற்கொலைக்கு முயன்ற காதலி இருக்கிறாள். ஒரு நாள் பென் (ஆக்ஸிடென்ட் ஆன காரில் இருந்தவர்) சைக்யாட்ரிஸ்டை பார்க்க வருகிறார். சைக்யாட்ரிஸ்ட் அவரிடம் கேள்விகள் சில கேட்க, அவர் பதில் அளிக்க மறுக்கிறார். பிறகு இன்றைக்கு கடும்புயல் வரும் என்று சொல்கிறார். வானம் மிகத்தெளிவாக இருக்கிறது. பிறகு தான் தற்கொலை செய்துக்கொள்ளப்போவதாக சொல்கிறார். சைக்யாட்ரிஸ்ட் ஏன் தற்கொலை செய்துகொள்கிறாய்? எப்பொழுது செய்துகொள்ளப்போகிறாய் என்று கேட்கிறார். ஏன் என்பதற்கு பதிலலிக்காமல் அடுத்த சனிக்கிழமை செய்துகொள்ளப்போகிறேன் என்று பென் சொல்லிவிட்டு சென்றுவிடுகிறான். அவன் சொன்னமாதிரியே அன்றைக்கு கடும் புயல் வருகிறது.

வீட்டில் சென்று காதலியிடம் பென்னைப்பற்றி சொல்கிறார் சைக்யாட்ரிஸ்ட். காதலி மீண்டும் தற்கொலைக்கு முயற்சிசெய்வாளோ என்ற சந்தேகம் அவருக்கு இருக்கிறது. மீண்டும் பென் தன்னைப்பார்க்க வரமாட்டான் என்று தன் காதலியிடம் சொல்ல, காதலி, இல்லை பென் கண்டிப்பாக வருவான் என்கிறாள்.

சைக்யாட்ரிஸ்ட்டும், ஒரு கண் தெரியாத நபரும் செஸ் விளையாடிக்கொண்டிருக்கிறார்கள். சைக்யாட்ரிஸ்ட் கண் தெரியாத நபரிடம் ஒரு வெட்டிங் ரிங்கை எடுத்து காண்பிக்கிறார். கண் தெரியாத நபர் அதை தொட்டுப்பார்த்து விட்டு, சைக்யாட்ரிஸ்டின் காதலி இப்பொழுது எப்படி இருக்கிறாள் என்றும் வேகமாக திருமணம் செய்து கொள்ளுங்கள் என்றும் சொல்கிறார். அப்போது பென் அங்கே வருகிறான். கண் தெரியாத நபரைப்பார்த்ததும், பென், அவர் தனது தந்தை என்றும், அவர் நீண்ட நாட்களுக்கு முன் இறந்து விட்டார் என்றும் சொல்கிறான்.

சனிக்கிழமை நெருங்கிக்கொண்டிருக்கிறது. பென்னுக்கு ஒரு காதலி இருக்கிறாள். அவள் பெயர் அதீனா. அதீனா ஒரு ஹோட்டலில் வெய்ட்ரஸாக இருக்கிறாள். ஒரு நாள் சைக்யாட்ரிஸ்ட் கையில் வெட்டிங்ரிங் இருப்பதைப் பார்த்து, பென், அது தான் தன் காதலிக்கு வாங்கின வெட்டிங் ரிங் என்று சொல்கிறான். சைக்யாட்ரிஸ்ட் இல்லை அது தன்னுடையது என்றும் அவர் பென்னிடமிருந்து திருடவில்லையென்றும் கூறுகிறார். பென் நம்பிக்கையில்லாமல் அவரைப் பார்த்தபடியே இருக்கிறான். அப்பொழுது ஒரு பலூன் வைத்திருக்கும் சிறுவனும் , சிறுவனின் அம்மாவும் அவனைக்கடந்து செல்கின்றனர். அந்த பையன்: அம்மா, (பென்னைப் பார்த்து) இவன் சாகப்போகிறானா? என்று கேட்கிறான். அவனுடைய அம்மா: இல்லை அவன் பிழைத்துவிடுவான் என்கிறாள். (அதானே எதற்கு சம்பந்தாசம்பந்தமில்லாமல் திடகாத்திரமாக நின்று கொண்டிருக்கும் ஒரு நபரைப் பார்த்து ஒரு சிறுவன் ஏன் இப்படி கேட்கவேண்டும் என்ற கேள்வி எனக்கும் எழாமலில்லை!)

அடுத்த சில நாட்கள் பென்னைக் காணவில்லை. சைக்யாட்ரிஸ்ட் அவனைத்தேடிக்கொண்டு அவன் வீட்டு அட்ரஸை தேடிக்கண்டுபிடித்து அங்கே செல்கிறார். அங்கே பென்னின் அம்மா இருக்கிறார். அவர் சைக்யாட்ரிஸ்டைப் பார்த்ததும் அன்புடன்: வா மகனே என்று அழைக்கிறார். சைக்யாட்ரிஸ்டும் உண்மையை அறிந்துகொள்வதற்காக மகனாகவே (பென்னாகவே) காட்டிக்கொள்கிறார். அங்கே ஒரு நாய் இருக்கிறது. பேசிக்கொண்டிருக்கும் போதே பென்னின் அம்மாவின் நெற்றியில் இரத்தம் ஒழுக ஆரம்பிக்கிறது. சைக்யாட்ரிஸ்ட் அவரிடம் ஏன் இரத்தம் ஒழுகுகிறது என்றும் ஹாஸ்பிட்டலுக்கு செல்லலாம் என்றும் அழைக்கிறார். அதற்கு அவள் வேண்டாம் உனக்கு சாப்பாடு தயாரிக்கிறேன் என்று சொல்லி சமையலரைக்கு போகிறாள். சைக்யாட்ரிஸ்ட் நிர்பந்திக்கவே, நாய் சைக்யாட்ரிஸ்டை கடித்துவிடுகிறது.

சைக்யாட்ரிஸ்ட் கையில் கட்டுப்போடப்பட்டு உட்கார்ந்திருக்கிறார். போலீஸ் வந்து என்ன நடந்தது என்று கேட்கிறார். சைக்யாட்ரிஸ்ட் தான் பென்னின் வீட்டிற்கு சென்றதாகவும். அங்கே அவளுக்கு இரத்தம் ஒழுகிக்கொண்டிருப்பதாகவும். உடனடியாக காப்பாற்றவேண்டும் என்று கூறுகிறார். ஆனால் போலீஸோ தான் பென்னின் அம்மாவின் பள்ளித்தோழன் என்றும் பென்னின் அம்மாவின் இறுதிச்சடங்கிற்கு தான் சென்றிருந்ததாகவும் சொல்கிறார். (என்ன தலை சுற்றுகிறதா? சும்மா கதை கேட்பதற்கே இப்படியென்றால். சனிக்கிழமை இரவு 12 மணிக்கு படம்பார்த்த எங்களுக்கு எவ்வளவு எரிச்சலாக இருந்திருக்கும்?)

கையில் கட்டுடன் வீட்டிற்கு செல்கிறார் சைக்யாட்ரிஸ்ட். அவருடைய காதலி அவர் கதவைத்திறக்கும் முன்னர் கதவைத்திறந்து விடுகிறாள். இந்த காட்சி நிறைய முறை “ரிப்பீட்டு” ஆகிறது. அவர் கதவைத் திறக்கிறார், காதலி எங்கே இரவெல்லாம் சென்றிருந்தீர்கள் என்கிறாள். திறக்கிறார். எங்கே இரவெல்லாம் சென்றிடுந்தீர்கள். றக்கிறார். இரவெல்லாம் சென்றிருந்தீர்கள். க்கிறார். சென்றிருந்தீர்கள். அதை தொடர்ந்து சைக்யாட்ரிஸ்ட் படுக்கைக்கு வந்து படுக்கும் வரை காட்சிகள் மீண்டும் மீண்டும் காட்டப்படுகின்றன. ஒரே வசனம் ரிப்பீட் செய்யப்படுகிறது.

மறுநாள் காலை சைக்யாட்ரிஸ்ட் எழுந்திருக்கும் முன் காதலி கிளம்பி வெளியே சென்றுவிடுகிறாள். சைக்யாட்ரிஸ்ட்டும் வீட்டிற்கு வெளியே வரும்பொழுது அங்கே பென் உட்கார்ந்திருக்கிறான். இருவருக்கும் வாக்குவாதம் வருகிறது. சைக்யாட்ரிஸ்ட் பென்னிடம் : நீ உன் அம்மா இறந்துவிட்டார் என்றாய் ஆனால் நான் அவளைப் பார்த்தேன். தலையில் இரத்தம் சொட்டிக்கொண்டிருந்தது. உன் நாயைக்கூடப் பார்த்தேன் அது என்னைக் கடித்துவிட்டது- என்கிறார். அதற்கு அவன் மறுத்துவிட்டு, அதெப்படி சாத்தியம் என் அம்மாவை நான் தானே சுட்டுக்கொன்றேன் என்கிறான். நான் சிறுவனாக இருக்கும் போதே எங்களுடைய நாய் இறந்துவிட்டது நான் தான் புதைத்தேன் என்றும் சொல்கிறான். இருவருக்கும் வாக்குவாதம் வர, இருவருக்கும் ஒரே வாக்கியங்களை ஒரே சமயத்தில் பேசிக்கொள்கின்றனர். பிறகு பென் போகிறான். சைக்யாட்ரிஸ்ட் அவனைத்தடுக்க, அவன் துப்பாக்கியைக் காட்டி மிரட்டி, சென்றுவிடுகிறான்.

சைக்யாட்ரிஸ்ட் பென்னின் காதலி ரெஸ்டாரென்டில் தான் வேலை செய்கிறாள் என்று தெரிந்து கொண்டு அவளைத்தேடி ஒவ்வொரு ரெஸ்டாரென்டாக ஏறி இறங்குகிறான். எந்த ரெஸ்டாரண்டிலும் அவள் இல்லை. கடைசி ரெஸ்டாரென்டில் சைக்யாட்ரிஸ்ட் பென்னின் காதலியை (அதினா) பற்றி விசாரித்து விட்டு அவள் இல்லை என்றவுடன் சோர்வாக உட்கார்ந்து டீ சாப்பிட்டுக்கொண்டிருக்கிறார். அப்பொழுது ஒரு வெய்ட்ரஸ் சைக்யாட்ரிஸ்ட்டிம் வந்து, அதினாவை ஏன் தேடுகிறீர்கள் என்கிறாள்.

ஒருவழியாக அதீனாவை தேடிக்கண்டுபிடித்துவிடுகிறார் சைக்யாட்ரிஸ்ட். அங்கே அவள் நாடக ரிகர்சலில் இருக்கிறாள். நாடகம் முடிந்ததும் சைக்யாட்ரிஸ்ட் அவளிடம் தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டு பென் பற்றி விசாரிக்கிறார். அவள் அவரை சுழல் படிகள் கொண்ட பாதாளத்திற்கு அழைத்துச் செல்கிறாள். (சுழல் படிகள் சுழலுகிறதோ இல்லையோ நம் தலை சுழல்கிறது) படிகளில் வேகமாக இறங்கிக்கொண்டிருந்த சைக்யாட்ரிஸ்ட் தடுமாறி கீழே விழுந்து விடுகிறார் (விழட்டும் நன்றாக வேண்டும்). காதலிக்காக வாங்கி வைத்திருந்த ரிங் (பென் தன்னுடையது என்று சொன்னது) கீழே விழுந்து விடுகிறது. தடவி தடவி ரிங்கை எடுக்கிறார். அதீனாவை காணவில்லை. மீண்டும் படிகளில் ஏறி மேலே வருகிறார். அங்கே முன் பார்த்த அதே காட்சி அதே வசனத்துடன் நாடக ஒத்திகை நடந்து கொண்டிருக்கிறது. (அட போங்கப்பா!)

பென் ஒரு புத்தக கடைக்கு அடிக்கடி போவான் என்கிறாள் அத்தீனா. பென்னை தான் காதலிக்கவில்லை என்றும் கூறுகிறாள். சைக்யாட்ரிஸ்ட் பென்னைத்தேடிக்கொண்டு அந்த புத்தகக் கடைக்கு போகிறார். புத்தகக் கடைகாரருக்கு பென்னை ஞாபகம் இருக்கிறது. மேலும் அவர், பென் தான் படிக்கும் புத்தகங்களுக்கு பணம் கொடுக்க முடியாததால் ஒரு படம் வரைந்து கொடுத்திருக்கிறான் என்கிறார். அந்த அழகிய படத்தை சுவற்றில் மாட்டி வைத்திருக்கிறார். படத்தில் பிரபல் எழுத்தாளர் (அல்லது ஓவியர். எனக்கு மறந்துவிட்டது!) இருக்கிறார். அப்பொழுது தான் சைக்யாட்ரிஸ்ட்டுக்கு நினைவுக்கு வருகிறது, அவருடைய காதலியும் அந்த படத்திலிருப்பவரின் ரசிகை என்று.

தன் காதலிக்கு போன் செய்து அந்த படத்திலிருப்பவரைப்பற்றி கேட்கிறார் சைக்யாட்ரிஸ்ட். அவள் அவர் தற்கொலை செய்து கொண்டதாக சொல்கிறாள். விபரமாக : அவர் ஒரு சனிக்கிழமை தனது இருபத்தி ஒன்றாவது பிறந்தநாளின் இரவில் ஒரு பாலத்தில் (அந்த பிரிட்ஜ் அவர்கள் வசிக்கும் நகரத்திலே இருக்கிறது) துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார் என்றும் சொல்கிறாள்.

பென்னுக்கும் அது இருபத்தியொன்றாவது பிறந்த நாளே. சைக்யாட்ரிஸ்ட் அந்த பாலத்தை நோக்கி ஓடுகிறார். சைக்யாட்ரிஸ்ட்டின் காதலியும் பாலத்திற்கு வருகிறார். அங்கே பென் அவர்கள் முன்னாலேயே துப்பாக்கியால் சுட்டுக்கொள்கிறான்.

கார் விபத்து நடக்கிறது. டயர் வெடித்து கார் நிலை குப்புற விழுகிறது. கார் ஓட்டிக்கொண்டுவந்த பென் நிலை குப்புற விழுகிறான். தலையில் பலமாக அடிபடுகிறது. காரில் இருந்த பென்னின் அப்பா, அம்மா மற்றும் காதலி அந்த இடத்திலே உயிரை விடுகிறார்கள். பென்னிற்கு மட்டுமே கொஞ்சம் உயிர் இருக்கிறது.

பென்னிற்கு பின்னால் கார் ஒட்டிக்கொண்டுவந்த சைக்யாட்ரிஸ்ட் (அவர் சைக்யாட்ரிஸ்ட் அல்ல. ஒரு சாதாரண மருத்துவர்) விபத்தை பார்த்து, பதறியடித்துக்கொண்டு காப்பாற்ற வருகிறார். பென்னுக்கு தைரியம் சொல்கிறார். பென் அரை மயக்கத்தில் அவரைப்பார்க்கிறான்.

இன்னொரு காரில் அந்தப்பக்கம் வந்த சைக்யாட்ரிஸ்ட்டின் காதலி (சைக்யாட்ரிஸ்ட்டின் காதலியே அல்ல. அவள் வேறு யாரோ! ) யும் பென்னை காப்பாற்ற முயற்சி செய்கிறாள். பென் அரைமயக்கத்தில் இருவரையும் பார்க்கிறான்.

படத்தில் போலிசாக வந்தவர், அந்த கூட்டத்தில் இருக்கிறார். படத்தில் வரும் மற்ற கதாப்பாத்திரங்கள் (பலூன் வைத்திருக்கும் பையனும்,அம்மாவும் கூட்டத்தில் இருக்கிறார்கள். அந்த பையன்: அம்மா, இவன் சாகப்போகிறானா? என்று கேட்கிறான். அவனுடைய அம்மா: இல்லை அவன் பிழைத்துவிடுவான் என்கிறாள்)
எல்லாம் – அதீனா இருக்கும் ரெஸ்டாரன்டை சொன்ன மற்றொரு வெயிட்ரஸ்- கூட்டத்திலே இருக்கின்றனர்.

ஆம்புலன்ஸ் வந்து பென்னை தூக்கிக்கொண்டு செல்கின்றனர். அவன் இன்னும் சாகவில்லை. (அவனை ஆம்புலன்ஸில் தூக்கி வைக்கும்போது அவன் பார்வையில் தெரியும் கட்டிங்கள் சாட்சி). பிறகு அவனுக்கு உதவிய இருவரும் (டாக்டர் மற்றும் இன்னொரு பெண்) காபி சாப்பிட செல்கின்றனர்.

நான் புரிந்துகொண்டது :

எல்லாம் மாயை. illusion. கார் ஆக்ஸிடன்டில் அடிபட்டு சாகப் பிழைக்க கிடக்கும் பென்னின் ஆழ் மனது, தான் வாழ்க்கையில் சந்தித்த நிகழ்வுகளையும், நினைத்து வைத்திருந்த கற்பனைகளையும் ஒன்றாக சேர்த்து, அதற்கு, நிஜ வாழ்க்கையில் தற்பொழுது உதவிக்கொண்டிருக்கும் டாக்டரையும், உடன் இருக்கும் ஒரு பெண்ணையும், ஹீரோ, ஹீரோயினாக வைத்து ஒரு குழப்பமான நிகழ்ச்சி பின்னலை ஏற்படுத்திக்கொள்கிறது. அதே மனது, டாக்டரை தானாகவும் சில இடங்களில் -சைக்யாட்ரிஸ்ட், பென்னின் அம்மாவைப் பார்க்கப்போகும் போது, பென்னின் அம்மா சைக்யாட்ரிஸ்ட்டை பென்னாக நினைத்து பேசுவது, பென்னும் சைக்யாட்ரிஸ்ட்டும் பேசிக்கொள்ளும் போது இருவரும் ஒரே வாக்கியங்களை பயன்படுத்துவது – எண்ணிக்கொள்வது தான் விசித்திரம்.

மாயா மாயா எல்லாம் மாயா. சாயா சாயா எல்லாம் சாயா. வேறு வகைகளில் படத்தைப் புரிந்தவர்கள், ப்ளீஸ் என்னன்னு கொஞ்சம் சொல்லுங்க!

காமோ சோமோ

இந்த பதிவை எழுதவேண்டிய நிலை வந்துவிட்டதை நினைக்கும்போது கொஞ்சம் சங்கடமாகத்தான் இருக்கிறது. காலங்கள் மாறிக்கொண்டேயிருக்கின்றன. மனிதர்களும் காலத்திற்கேற்றார்போல் தம்மை மாற்றியமைத்துக்கொள்கின்றனர். நடை, உடை, பேச்சு, கலாச்சாரம் என்று காலப்பெருஞ்சுழலில் இவையாவும் பெரிய மாற்றத்தைக் கண்டிருக்கின்றன. குகைகளில் வாழ்ந்து திரிந்து தன் மனம்போன போக்கில் வாழ்ந்து வந்த மனிதன் பிற்பாடு என்ன நினைத்தானோ தெரியவில்லை தன்னை நெறிப்படுத்தத் தொடங்கினான். விதிகள் வகுக்க ஆரம்பித்தான். ஒருவனுக்கு ஒருத்தி என்றான். தீங்கு செய்யலாகாது என்றான். பிறன்மனை நோக்காமை என்றான். அடுத்தவரை துன்புறுத்தினால் தண்டனை என்றான். விலங்குகள் போல இருந்த மனிதன் எதற்காக பிற்பாடு தனக்கு தானே விதிகளை வகுத்துக்கொண்டான்? அவன் என்ன கேனையனா?

கலாச்சாரம் என்ற ஒன்று எவ்வாறு பிறந்தது? எதற்காக உருவாகிறது? எவ்வாறு மாற்றம் அடைகிறது? நாம் உடுக்கும் உடை, பேசும் பேச்சு, பயிலும் பொழி, உண்ணும் சாப்பாடு, வணங்கும் தெய்வம் என்று எத்தனையோ விசயங்களில் கலாச்சாரம் மாறுபட்டிருக்கிறது. தமிழ் வெண்பா இயற்றிக்கொண்டிருந்த நாம் இன்று ஆங்கிலம், ஜெர்மனி, ஜாப்பனீஷ் என்று வகைக்கு ஒன்றாக படிக்கிறோம். பள்ளியில் கூட தமிழுக்கு பதிலாக சான்ஸ்க்ரீட் எடுத்து படிப்பவர்கள் இருக்கிறார்கள். இது வேறு. இது சர்வைவல் ஆப் த பிட்டஸ்ட். இது மனிதன் தன்னை இந்த உலகத்தில் இருத்திக்கொள்ள செய்யவேண்டியது. வரவேற்கத்தக்க ஒன்று. இவ்வாறன விசயங்களில் மாற்றம் தேவை. ஆனால் கலாச்சாரத்தின் ஆணிவேரிலே மாற்றம் தேவையா? ஒருவனுக்கும் ஒருத்தி என்பது போய், இப்பொழுது ஒருவனுக்கு ஒருவன் என்றும், ஒருத்திக்கு ஒருத்தி என்று ஆகும் நிலை அவசியம் தானா? அதை ஆதரிக்க சட்டம் தேவையா?

ஓரினச்சேர்க்கையை ஊக்குவிக்கக்கூடாது என்பது தான் அனைவரது நோக்கமாகவும் இருக்கும். ஆனால் ஒரினச்சேர்க்கையை ஆதரிப்பது போல சட்டம் இயற்றினால் அது ஊக்குவிப்பது இல்லாமல் வேறு என்ன? பாசிவிப்பதா? என்னங்கைய்யா இது? ஷியாம் பெனேகல், அருந்ததிராய், விக்ரம் சேத் பரிந்துரைசெய்திருக்கிறார்கள். நிறைய ஆங்கில நாவல்கள் வாசிப்பார்கள் போலும். வாசித்துவிட்டு போகட்டும். தவறில்லை. அதற்காக நாவலில் படித்த கதைகளை எல்லாம் பரிந்துரை செய்ய வேண்டுமா என்ன? சரி அப்படியே பரிந்துரை செய்தாலும் நாம் யோசிக்கவேண்டுமா இல்லையா? மேற்கத்திய எக்கனாமியை பின்பற்றுவது தவறில்லை. அவர்களைப் போல ஓட்ஸ் சாப்பிடுவதில் பிழையில்லை. அவர்களைப்பார்த்து, கொழுத்தும் மெட்ராஸ் வெயிலில் கோட்சூட் அணிந்து கொண்டால்கூட பரவாயில்லை. வெஸ்டர்ன் டாய்லெட்டில் உட்கார்ந்து கொண்டாலும் தப்பில்லை. ஆனால் கலாச்சாரத்தையும் வருஙகால சந்ததியினரையும் அடியோடு பாதிக்கும் ஒரு விசயத்தை நாம் விதைக்கலாமா?

சிலர் இந்த சட்டம் ஓரினச்சேர்க்கையாளர்களை அடையாளம் கண்டுகொள்ள உதவும் என்றும் அதன் மூலம் அவர்களை திறுத்தலாம் என்றும் பாஸிட்டிவாக யோசிக்கின்றனர். புல்ஷிட். இந்தியாவிலிருக்கும் மக்கள்தொகைக்கு இவர்கள் எங்கிருந்து திறுத்துவார்கள்? இல்லை இது போன்று திறுத்திய வரலாறு ஏதேனும் இருக்கிறதா? மது அருந்துவதை சட்டபூர்வமாக்கி என்னாவாயிற்று? எத்தனை பேர் மது அருந்துவதை நம்மால் தடுக்கமுடிந்தது? சட்டம் என்ற ஒன்று கொண்டுவந்துவிட்டால் அதை வாபஸ் பெறுவது என்பது இயலாத காரியம். இப்பொழுது யாரும் மது அருந்தக்கூடாது என்றொரு சட்டம் கொண்டுவரவேண்டும் என்றால் அதை நினைத்துக்கூட பார்க்கமுடியாது. ஏற்கனவே அங்கொன்றும் இங்கொன்றுமாக இருக்கும் இந்த ஓரினச்சேர்க்கை பழக்கம் சட்டபூர்வமாக்கி விட்டால் பரம்பொருள் போல ஆகிவிடவும் வாய்ப்பிருக்கிறது. சிகரெட்டை போல. விக்ரம் சேத்துக்கு என்ன கவலை? வழக்கம்போல பக்கம் பக்கமாக எழுதி உலகின் மிகப்பெரிய புத்தகம் எழுதியவர் என்ற லிஸ்டில் மேலும் முன்னேறப்பார்ப்பார்.

இதில் மனித உரிமை பிரச்சனை வேறு. மண்ணாங்கட்டி. ஓரினச்சேர்க்கை மனித உரிமையா? எந்த ஊரில் சொன்னார்கள்? அமெரிக்காவிலா? நீங்கள் எங்கிருக்கிறீர்கள்? என்னது அத்திப்பட்டியிலா? பிறகென்ன போய் நாளைய சாப்பாட்டிற்கு என்ன வழி என்று பாரும். இல்லை உங்கள் அத்திப்பட்டி, மேப்பில் இன்னும் இருக்கிறதா என்று மற்றொருமுறை பார்த்து உறுதி படுத்திக்கொள்ளும். நினைப்பதெல்லாம் செய்தால் அதற்குப்பெயர் மனித உரிமையா? அதற்கு டெபனிஷன் வேறு. எந்த உயிரும் மற்றொரு உயிருக்கு தீங்கு ஏற்படுத்தாமல் வாழ உரிமையிருக்கிறது என்று. ஒரு மனிதன் நிர்வானமாய் இருந்தால் அதில் ஏதேனும் மற்றவருக்கு கெடுதி இருக்கிறதா? பிறகு ஏன் அது தடை செய்யப்படுகிறது? இது மனித உரிமையில்லையா? இங்கே மட்டும் கலாச்சாரம் கூரையைப்பொத்துக்கொண்டு டபக் என்று விழுகிறதோ? மது அருந்துவது மனித உரிமையா. மது அருந்திவிட்டு அந்த போதையில் நீ மற்றொரு மனிதனின் உரிமையில் தலையிடவில்லையா? மது அருந்திவிட்டு லாரியை ரோட்டில் ஒட்டாமல் ரோட்டை விட்டு கீழே மணலில் உனக்கு பயந்து கஷ்டப்பட்டு ஸ்கூட்டர் ஓட்டிக்கொண்டிருக்கும் மனிதனை பத்திரமாக சொர்கத்திற்கு அனுப்பிவிட்டு நீ ஆலமரத்தின் கிளையில் லாரியை பார்க் செய்ய ட்ரை பண்ணதில்லையா? குடிப்பது உரிமைதான். அதனால் மற்றவர்களுக்கு மறைமுகமாக தீங்கு ஏற்படுகிறதா இல்லையா? அப்பொழுது உங்கள் டெபனிஷன் தவறாகிறதே. மதுவாவது பரவாயில்லை கவர்மெண்ட் பிச்சை எடுக்காமல் காலம் தள்ள உதவுகிறது. மிஞ்சிபோனால் ஒரு தனி மனிதனையோ, அல்லது ரோட்டில் ஸ்கூட்டர் ஓட்டும் அப்பாவி மனிதனையோ, அல்லது ஒரு குடும்பத்தையோ தான் பாதிக்கும். இந்த ஓரினச்சேர்க்கை நம் சந்ததியினர் அனைவரையுமல்லவா பாதிக்கும். கலாச்சாரத்தை வேரோடு அழிக்குமே.

ஒவ்வொரு மனிதனுக்கு, ஒரு சமுதாயத்துக்கும், நாட்டுக்கும், ஏன் விலங்குக்கும் கூட ஒரு தனித்துவம் – ஐடன்டிட்டி – இருக்கிறது. அது தான் நமது அடையாளம். அதை எக்காரணத்தைமுன்னிட்டும் நாம் தொலைத்துவிடக்கூடாது. சிங்கம் என்றால் கர்ஜிக்கத்தான் வேண்டும். பிடரியில் முடி இருக்கத்தான் செய்யும். அது மனிதனைப்பார்த்து கிராப் வெட்டிக்கொண்டு ஹேர் கலரிங்கும் செய்து கொண்டால் நன்றாகவா இருக்கும். மேற்கத்தியனரின் கலாச்சாரமும் வாழ்க்கைமுறையும் வேறு. நீ இதற்கு சட்டம் வைத்திருக்கிறாயா? ஓகே. குட். அவ்வளவுதான். எங்களுக்கு இது சரிப்படாது. நாங்கள் ஓரினச்சேர்க்கையை தடுக்க என்ன செய்யலாம் என்று நாங்களே யோசித்துக்கொள்கிறோம். நமக்கு யோசிக்கத்தெரியாதா? எதற்கெடுத்தாலும் அமெரிக்காவிலிருந்து கட், காப்பி, பேஸ்ட் தானா? நாங்கள் – சாப்ட்வேர் மக்கள் – பரவாயில்லை.

இது கலாச்சாரத்திற்கு மட்டுமல்ல. இயற்கைக்கே விரோதமானது. தெரியாமலா இயற்கை ஆணையும் பெண்ணையும் படைத்தது. அல்லது கடவுள் மறுப்புக்கொள்கை உள்ளவர்களுக்கு. Evolution என்றால், தன் தேவைக்காகத்தானே ஆணாகவும், பெண்ணாகவும் evolve ஆனோம். தேவையில்லையென்றால் ஆண் முட்டும் தானே பரிணாமவளர்ச்சி அடைந்திருப்பான். திருவள்ளுவர் மிகப்பெரிய அறிவாளி என்று உலகமே ஒத்துக்கொள்கிறது. அவர் காமத்துப்பாலைப்பற்றி விரிவாக எழுதியிருக்கிறார். அங்கே எங்காவது ஓரினச்சேர்க்கை வருகிறதா? இல்லை நமது புராணங்கள் எதிலும் இவ்வாறு வருகிறதா? இப்ப மட்டும் என்ன அவசியம் பொத்துக்கொண்டு வந்தது? இதிலும் குலோபலைஷெசனா? சுதந்திரமா? இப்படி படிப்படியாக கட்டுப்பாடுகளை இழந்து கொண்டுவந்தால் நாம் மறுபடியும் சுதந்திரமான விலங்குகளாகத்தானே ஆவோம்? நமக்கும் ஐந்தறிவு விலங்குக்கும் என்ன வேறுபாடு?

ஓரினச்சேர்க்கையாளர்களை ஒதுக்கிவிட முடியாது. அதற்காக அதை சட்டமாக்கவும் கூடாது. தண்டனையில்லையேல் குற்றம் பல்கிப்பெருகி ஆலவிருட்சமாக வளர்ந்துவிடும். ஏன் கொலையை குற்றம் என்று சொல்கிறோம்? அதற்கு அதிகபட்சத்தண்டனை வழங்குகிறோம்? குற்றம் என்பதால் தான் கொலையை செய்ய மனிதன் தயங்குகிறான். இல்லையென்றால் என்னடா என் மீசையைப்பார்த்தாடா சிரிக்கிற என்று கத்தியை சொருகிவிட்டு சாதாரணமாக செல்வான் மனிதன்.

அடக்குமுறைகளாலும் சட்டத்திட்டங்களாலும் பயத்தினாலும் தான் மனிதன் மனிதனாக இன்று வரை இருந்துவந்திருக்கிறான். அப்படி அவசர அவசரமாக சட்டமாக்க இதென்ன அடிப்படை பிரச்சனையா? இந்தியாவில் உண்ண உணவு, உடுக்க உடை, இருக்க இடம், குடிக்க தண்ணீர், படிக்க கல்வி – கன்னடத்திலோ, தமிழிலோ அல்லது லத்தீனிலோ, அதுவல்ல பிரச்சனை – அனைவருக்கும் கிடைக்கிறதா?பிறகு, இந்த சட்டத்திற்கு என்ன அவசரம்? இல்லை உங்களுக்கு பொழுது போகவில்லையா? பொழுது போகவில்லையென்றால் சாக்பீஸில் கோடு போட்டு தாயம் விளையாடுவது தானே? ஏன் காமோ சோமோ – என்ன அர்த்தம் என்று கேட்காதீர்கள் ப்ளீஸ் – வென்று என்னத்தையாவது செய்துகொண்டிருக்கிறீர்கள்?

நன்றி: சிவபாலன்.

கேட்பதற்கு உரிமையில்லை!

ரஜினி ஒரு மூன்றெழுத்து மந்திரம். ஒத்துக்கொண்டாலும் ஒத்துக்கொள்ளாவிட்டாலும் அவர் ஒரு மந்திரம் தான். சிலர் அவரைப் புகழ்ந்து விளம்பரம் தேடிக்கொள்கின்றனர். சிலர் அவரை விமர்சித்து விளம்பரம் தேடிக்கொள்கின்றனர். விளம்பரம் விளம்பரம் தான்.

ரஜினி வேலு பிரபாகரனுக்கு உதவி செய்திருக்கிறார். அது கடனாகவோ, ரொக்கமாகவோ எப்படி வேண்டுமென்றாலும் இருக்கலாம். அதை வேலுப்பிரபாகரன் விகடனுக்கு அளித்திருக்கும் பேட்டியில் கூறியிருக்கிறார். கவனிக்க, ரஜினியின் சொந்தமோ அல்லது ரஜினியின் ரசிகர் மன்றமோ அல்லது ரஜினியோ இதைச் சொல்லவில்லை. வேலு பிரபாகரனே கூறியிருக்கிறார். ரஜினியின் நிர்பந்தத்தினாலே அவர் சொன்னார் என்று நினைத்து விட வாய்ப்பிருக்கிறது. அது சின்ன புத்தியுள்ளவர்களுக்கே சாத்தியம். ரஜினியை காட்ட சாட்டமாக விமர்சித்தவர் வேலு பிரபாகரன். தனக்கு ஒரு கஷ்டம் என்று வந்தவுடன் ரஜினியிடம் அதை சொல்லியிருக்கிறார். ரஜினி பழயதை நினைத்து உதவியிருக்கலாம். அல்லது நினைக்காமல் உதவியிருக்கலாம். உதவி உதவி தானே ஐயா? வேலுபிரபாகரனின் கஷ்டம் தீர்ந்ததா இல்லையா? உங்களுக்கு ஏன் பற்றிக்கொண்டு வருகிறது? மற்ற எத்தனை தயாரிப்பாளர்கள் கஷ்டப்படுகிறார்கள் அவர்களுக்கு ஏன் உதவவில்லை என்று கேட்பது மிக மிக அபத்தமாக இருக்கிறது. ஒருவர் மற்றொருவருக்கு உதவுகிறார் என்றால் அவரிடம் போய்: ஏய் நீ ஏன் அடுத்தவருக்கு உதவவில்லை என்று கேட்பது போல் இருக்கிறது. மேலும் ரஜினி தனது படங்களில் நலிந்த தயாரிப்பாளர்களை இணைத்தயாரிப்பாளர்களாக சேர்த்துக்கொள்கிறார் என்பது அனைவருக்கும் தெரிந்த செய்தி. தற்போதைய சிவாஜியில் கூட எஸ்.பி.முத்துராமனை சேர்த்திருக்கிறார். பண்டரிபாய், வீ.கே.ராமசாமியை தனது முந்தைய படங்களில் சேர்த்திருந்தது உங்கள் அனைவருக்கும் தெரிந்திருக்கும். குற்றம் பார்ப்பதே குற்றம். அதிலும் நல்லவிசயத்தில் குற்றம் பார்ப்பது என்பது மிக மிக அபத்தம்.

மனோரமா ரஜினியை விமர்சித்தார். அதனால் அவருக்கு படங்கள் குறைந்தது. அதற்கு காரணம் ரஜினியாம். ரஜினி எல்லோரிடமும் சென்று மனோரமாவிற்கு வாய்ப்பு தராதீர்கள் என்று சொன்னாராம். சினிமாவிலிருந்து கொண்டே சினிமாக்காரர்களை விமர்சிப்பது – அதுவும் பெர்சனலாக – சினிமாக்காரர்களையே எரிச்சலடையச் செய்யும்.நாளை நம்மையும் விமர்சிப்பார் என்ற பயம் கூட காரணமாக இருக்கும். மேலும், ஒரு துறையில் பலசாலியாக இருப்பவரை, அந்த துறையில் இருக்கும் ஒருவர் விமர்சித்தால், மற்ற யாரும் விமர்சித்தவருக்கு ஆதரவு தர மாட்டார்கள். தாட் இஸ் நேச்சுரல். ரஜினியே வாய்ப்பு கொடுத்தால் மற்றவர்கள் தானாகவே வாய்ப்புத்தருவார்கள் என்பதால் கூட முதலில் ரஜினி அழைத்து வாய்ப்பு தந்திருக்கலாம். ஹீரோக்களை துதி பாடுவது என்பது புதிதல்ல, அதை சகித்துக்கொள்வதும் நமக்கு புதிதல்ல. எம்.ஜி.ஆர் திரைப்படங்களில் படத்திலிருக்கும் ஈ. எறும்பு முதற்கொண்டு அனைத்தும் அவரைத் துதிபாடும். அப்படியிருக்க மனோரமாவும் அந்த படத்தில் ஒரு கதாப்பாத்திரம். ரஜினியே நீங்கள் எனக்கு வில்லியாக நடியுங்கள்; என்னைத் திட்டுங்கள் என்று சொல்லியிருந்தால் கூட அன்றைய சூழ்நிலையில், மனோரமா அதை செய்திருக்கமாட்டார் என்றே தோன்றுகிறது. அப்படியிருக்க இதைக்காரணம் காட்டி அவரை சேடிஸ்ட் என்று சொல்வது நியாயமா? நம் சுய விளம்பரத்திற்காக அவரை பிண்டம் என்று சொல்லலாமா?

ரஜினி ஏதாவது சமூகசேவை செய்திருக்கிறாரா என்றும் கேட்கிறார்கள் அவர் ஒரு நடிகர். அவர் தொழில் நடிப்பது. சமூக சேவை செய்வது அல்ல [அப்படியும் அவர் நிறைய செய்திருக்கிறார்]. மேலும் அவர் செய்ய வேண்டும் என்கிற அவசியம் ஏதும் இருக்கிறதா என்ன? கடவுள் அவரைப் படைக்கும் போது : சிவாஜிராவ், நீங்கள் தமிழகம் சென்று திருத்தொண்டாற்றக்கடவது என்று சொல்லி அனுப்பினாரா என்ன? நீங்கள் சமூக சேவை செய்வதற்கென்றே தேர்ந்தெடுத்து அனுப்பிவைத்திருக்கிறீர்களே முதலில் அவர்கள் சமூக சேவை செய்கிறார்களா என்று பாருங்கள். பிறகு நம் ரேஞ்சுக்கு நாம் என்ன செய்கிறோம் என்று பாருங்கள். நீங்களும் சமுதாயத்தில் ஒரு அங்கத்தினர் தானே, ரஜினியைப் போல்.

அவர் கோடி கோடியாக அள்ளுகிறார். பிறகு இமயமலைக்கு போகிறார் என்றொரு பேட்டி வந்திருந்தது. இது என்ன அநியாயம்? அவர் சம்பாதிக்கிறார். அவர் இமயமலைக்கு செல்கிறார், இல்லை எங்கு வேண்டுமானாலும் செல்லட்டும். உனக்கென்ன? உன் காசையா திருடிவிட்டு செல்கிறார்? படம் பார்த்த தமிழ்மக்களுக்கு அவர் என்ன செய்தார் என்று கேட்கிறார்கள். என்ன செய்யவேண்டும்? சாம்பார் இட்லி சாப்பிடுகிறோமே சரவணபவனில், சரவணபவன் நமக்கு என்ன செய்தது என்று கேட்க முடியுமா? சாம்பார் இட்லி சாப்பிட்டாச்சா? அப்படியே ஓடிப்போயிடு. அதுதான். படம் பார்த்தீல. உன்ன யாராச்சும் தர தரன்னு புடிச்சு இழுத்துட்டு போனாங்களா? கண்டிப்பா டிக்கெட் வாங்கு இல்லேன்னா குலநாசம்னு யாராச்சும் பயமுறுத்துனாங்களா? அதுவும் முதல் நாளே பாக்கலீன்னா உனக்கு ஆயுள் தண்டனைன்னு சொன்னாங்களா? நீயாத்தான பார்த்த. நீ கொடுத்த காசு படத்துக்கு சரியாப்போச்சு. அவ்வளவுதான். மளிகைக்கடையில கடல உருண்டை வாங்குறமாதிரிதான். வாங்கிட்டியா? சாப்டாச்சா? போயிட்டேயிரு. அண்ணாச்சி உன் கடையில் நான் கடலஉருண்ட சாப்பிட்டிருக்கேன், நீ எனக்கு என்ன செஞ்சன்னு கேக்க முடியுமா? படம் புடிச்சிருந்தா பாரு. இல்லயா பாக்காத. பாத்துப்புட்டு, விசிலடிச்சுப்புட்டு ஐயோ நீ இமயமலைக்கு போனா நான் எங்க போறதுன்னு கேட்டா? சம்பாதிக்கறார் சம்பாதிக்கறார் என்றால்? வரி கட்டுகிறாரா இல்லையா?

ஐயா, நாட்ல எல்லோரும் தான் சம்பதிக்கிறோம். எல்லோரும் தான் செலவழிக்கிறோம். எல்லோருக்கும் செலவு இருக்கு. அவங்க அவங்க சக்திக்கு தகுந்தாமாதிரி. மொதல்ல நாம நம் சக்திக்கு உட்பட்டு என்ன தான தர்மம் பண்றோம். என்ன பொது நலத்தொண்டுகள் கிழிக்கறோம்னு பார்க்கனும். அதவிட்டுப்புட்டு அவன் நொல்ல, இவன் தொல்லன்னு சொல்றது வேறஒன்னுமில்ல பொறாமை அதன் விளைவாக அரசியல். அவர் ஒரு நடிகர். இன்னும் நேரடி அரசியலில் கால் எடுத்து வைக்கவில்லை. அவர் அரசியலுக்கு வரட்டும், பதவியில் அமரட்டும் அப்போது கேட்கலாம் எங்களுக்கு என்ன செய்தாய் என்று? அது வரைக்கும் நமக்கு கேட்பதற்கு உரிமையில்லை.

செய்ய வேண்டும் தான். செய்திருக்கலாம் தான். அவர் வசதிக்கு அவர் இப்பொழுது செய்துகொண்டிருப்பதைக்காட்டிலும் மிக நன்றாக செய்யலாம் தான். எத்தனையோ கிராமங்கள் வறுமையால் உலன்று கொண்டிருக்கின்றன. அதில் ஒரே ஒரு கிராமத்தை மட்டும் தத்தெடுக்கலாம். அதற்கு வசதிகள், வேலைவாய்ப்பு என்று ஏற்படுத்திக்கொடுக்கலாம். பள்ளிக்கூடங்கள் திறக்கலாம். புதிதுபுதிதாக ரிசெர்ச்சுக்கு உதவலாம். விவசாய ரிசர்ச். உப்புத்தண்ணி ரிசர்ச். முடி கொட்டாமல் தடுப்பது எப்படி. அவருக்காவது உபயோகமாக இருக்குமே. இதை செய்ய முடியாதா அவரால்? பிறகு பணமிருந்து என்ன பயன்? – இத விட்டுபுட்டு எங்க பேச கூப்டாலும் போய் மேடையேறி, பேச கூப்டவரை நல்லவரு வல்லவருன்னு மட்டும் பேசிட்டு ஒரு கத சொல்லிட்டு போனா என்னங்க அர்த்தம்? – ஆனால் இதையெல்லாம் செய்யாதது குற்றமில்லை. இதை அவர் மட்டும் தான் செய்திருக்க வேண்டும் என்றில்லை. செல்வந்தர்களாக இருக்கும் எவரும் செய்திருக்கலாம். யார் செய்தார்கள்? தமிழ்நாட்டில் இவர் ஒருவர் மட்டும் தான் பணக்காரராக இருக்கிறாரா? வேறு எவரிடமும் பணமில்லையா?

இது தமிழகத்தின் தலையெழுத்து. என் தெலுங்கு நண்பர் ஒருவர் கேட்டார் : ஏன் சூர்யா ஜோதிகா திருமணத்திற்கு இவ்வளவு முக்கியத்துவம் தருகின்றன உங்கள் பத்திரிக்கைகள் என்று. நியாயம் தானே? ஏன் இவ்வளவு முக்கியத்துவம்? படங்களுக்கு ஏன் இவ்வளவு முக்கியத்துவம்? பத்திரிக்கைகளும் தொலைக்காட்சிகளும் நம்மை சினிமா என்ற போதையில் அமுக்கி வைத்திருக்கவே விரும்புகின்றன. சினிமா ஒரு பொழுது போக்கி. நம் ஊரில் பொழுதைப்போக்குவதற்கு வேறு விசயங்கள் இல்லாததும் ஒரு காரணமாக இருக்கலாம். அப்படியே இருந்தாலும் – தீம் பார்க் – மிக காஸ்ட்லியாக இருக்கின்றன. குடும்பத்துடன் செல்ல வேண்டுமானால் பாதி மாத சம்பளம் – சாப்ட்வேர் மக்களே நான் உங்களைப்பற்றி பேசவில்லை – எடுத்து வைக்கவேண்டும். அதைவிட சினிமா எவ்வளவோ தேவலை. சீப் அன்ட் பெஸ்ட் பொழுதுபோக்கி. 60ரூபா டிக்கெட் எடுத்து மூன்று மணி நேரம் உட்கார்ந்துவிட்டு வந்துவிடலாம். அது கொடுக்கும் தலைவலியில் வீட்டு பிரச்சனைகளை ஈசியாக மறந்துவிடுகிறோம்.

வேண்டுமானால் நாம் சினிமா – தியேட்டருக்கு போய் – பார்ப்பதை நிறுத்தலாம். இதற்குத் தான் நமக்கு உரிமை இருக்கிறது. படம் பார்ப்பதற்கு பதிலாக: அந்த நேரத்தை நம் உடம்பை பேணுவது, வீட்டில் தோட்டம் வளர்ப்பது, குடும்பத்தினருடன் – சண்டைவராமல்- முக்கியமாக தாய் தந்தையருடன் பேசிக்கொண்டிருப்பது, அவர்களது கதைகளை காது கொடுத்து கேட்பது, பிள்ளைகளை பார்க்கு பீச் என்று அழைத்து செல்வது, உறவினர் வீட்டிற்கு விசிட் -டேரா போட்டு அவர்களுக்கு செலவிழுத்து வைக்காமல்-அடிப்பது, எங்கேயாவது டிரிப் அடிப்பது, புத்தகம் படிப்பது -படித்துவிட்டு; ஜெயமோகனை: நான் உன் புத்தகம் படித்தேன் நீ எனக்கு என்ன செய்தாய் என்று கேட்ககூடாது-படிக்கதூண்டுவது, விளையாடுவது, விளையாட இடமில்லையா, எங்கே இடம் அமைக்கலாம் என்று யோசிப்பது என்று எத்தனையோ விசயங்கள் இருக்கிறது.

சினிமா பார்ப்பதை நிறுத்துவோம். அதற்கு செலவழிக்கும் காசையும் நேரத்தையும் – முக்கியமாக நேரம் -ஒருங்கினைப்போம். நல்ல விசயத்திற்கு ஸ்டிரீம் லைன் பண்ணுவோம். அது தான் நம்மால் முடிந்தது. அதை விட்டுட்டு இன்னும் எத்தனை காலம் ரஜினியையே குற்றம் சொல்லிக்கொண்டிருப்பது? போங்கப்பா. போங்கப்பா. போய் பிள்ளைகளை படிக்க போடுங்கப்பா.

ஓட்டுரிமை

தேன்கூடு போட்டிக்கு மூன்றாவது முறையாக நான் என் சிறுகதையை சமர்பித்திருக்கிறேன். முதல் இரண்டு முறையும் அறிமுக பிளாகரான எனக்கு நானே எதிர்பார்த்திராத அளவிற்கு வாக்குகள் கிடைத்தன. சந்தோஷம். இந்த முறை என் அலுவலகத்தில் என்னுடன் பணிபுரியும் சில நண்பர்கள் – என் பதிவுகளை தவறாமல் வாசித்துவருபவர்கள் – என் சிறுகதைக்கு வாக்களிக்க முயற்சித்து, நான் தோல்வியைத் தழுவும் முன் அவர்கள் தோல்வியைத் தழுவியிருக்கின்றனர்.

21 ஆம் தேதி காலையிலே நான் என் அலுவலகத்திற்கு வந்தவுடன் வாக்களித்து விட்டேன். நான் வாக்களித்ததால், என்னைத் தொடர்ந்து வாக்களிக்க முயற்சித்த என் நண்பர்கள் அனைவருக்கும் இதே errror msg -ஐத் தான் பெற்றனர்.

>>Thank you for voting on this poll. The results will be announced shortly! (you already submitted an answer for this survey. If this not the case, please contact us.)

ஏன் என்று தெரியவில்லை. நாங்கள் எல்லாரும் ஒரே server -க்கு கீழ் இருப்பதாலா? அப்படியென்றால் தேன்கூட்டில் userid, pwd எதற்கு? வெறும் server ip வைத்தே login செய்து கொள்ளலாமே. என்ன logic என்று எனக்கு விளங்கவில்லை.

சரி, அலுவலகத்தில் ஒரே செர்வருக்கு கீழ் இருப்பதால் வாக்களிக்க இயலவில்லை என்று என் நண்பர் ஒருவர் வீட்டிற்கு சென்று முயற்சித்திருக்கிறார், வீட்டிலும் இதே err msg தான். (இது என்ன கடவுளே, புரியாது கடவுளே!)

அவர் படைப்புகளை தேர்ந்தெடுக்கவேயில்லை. வாக்களிக்கவும் இல்லை. அவருக்கு எப்படி தேன்கூடு நன்றி சொல்கிறது?
>>Thank you for voting on this poll. தேன்கூடுக்கு ரொம்பத்தான் பவ்யம்.

ஒரே நபர் வேறு வேறு userid -க்களை create செய்து தன் கதைக்கு தானே பலமுறை வாக்களிப்பதை தடுப்பதே இதன் நோக்கம் என்பதை நான் அறியாமலில்லை, ஆனால் அதே சமயத்தில் வாக்களிக்க விரும்புபவர்களை – வாக்களிப்பதற்காகவே, userid create செய்தவர்களை – discourage செய்வதாகவே இருக்கிறது.

கள்ளவோட்டுகள் போடக்கூடாதுதான், ஓட்டே போடக்கூடாது என்றால் எப்படி?

சேர்க்கப்பட்டது:
தேன்கூடு நன்றி. இப்பொழுது என் நண்பர்களால் ஓட்டளிக்க முடிகிறது
.

ஆயிரம் கால் இலக்கியம் – 4

கடவுளுக்கு பாரபட்சம் அதிகம். இல்லையென்றால் ஒருவருக்கு நன்றாக பாடும் திறன், சிலருக்கு நச்சென்று கதை, அழகாக கவிதை எழுதும் திறன், சிலருக்கு நாட்டியத்திறமை, சிலருக்கு நுண்அறிவென்று வகைக்கு ஒன்றாக பிரித்துக்கொடுப்பாரா என்ன? அதனால் தான் உலகம் ரசிக்கும் படியாக இருக்கிறதோ? அதிலும் இந்த தபூ ஷங்கர் விசயத்தில் கடவுளுக்கு ரொம்பத்தான் தாராளம். கற்பனா சக்தியை அள்ளி அள்ளி வாரி வாரிக் கொடுத்திருக்கிறார். அவர் மட்டும் ஏன் இப்படி எழுதுகிறார்? பையன்கள் கிரீட்டிங் கார்டு கடைகளில் ஆங்கிலத்தில் நல்ல வாசகங்களைத்தேடி நேரத்தை வீணடிக்காமல் தபூ சங்கரின் படைப்புகளை ஒரு முறை வாசித்தால் உடனடிப்பலன் கிடைக்க வாய்ப்பிருக்கிறது.

‘என்னை எங்கு பார்த்தாலும்
ஏன் உடனே நின்று விடுகிறாய்?’
என்றா கேட்கிறாய்.

நீ கூடத்தான்
கண்ணாடியை எங்கு பார்த்தாலும்
ஒரு நொடி நின்று விடுகிறாய்

உன்னைப் பார்க்க உனக்கே
அவ்வளவு ஆசை இருந்தால்
எனக்கு எவ்வளவு இருக்கும்!

‘போதும் பார்த்தது
கண் பட்டுவிடப்போகிறது’ என்றாய்
ச்சே…ச்சே..உன்னைப் பார்த்தால்
என் கண்களாவது பட்டுப் போவதாவது
துளிர்த்துக்கொண்டல்லவா இருக்கின்றன.


கரையில் நின்றிருந்த உன்னைப் பார்த்ததும்
கத்தி விட்டன கடல் அலைகள்…
‘கோடான கோடி ஆண்டுகள்
எம்பி எம்பிக் குதித்து
கடைசியில் பறித்தே விட்டோமா
நிலவை’ என்று.


தான் வரைந்த ஓவியத்தை
கடைசியாக ஒரு முறை
சரி செய்யும் ஓவியனைப் போல்
நீ ஒவ்வரு முறையும்
உன் உடைகளை சரி செய்கிறாய்


காற்றோடு விளையாடிக் கொண்டிருந்த
உன் சேலைத் தலைப்பை இழுத்து
நீ இடுப்பில் செருகிக்கொண்டாய்
அவ்வளவுதான்…
நின்றுவிட்டது காற்று.


ஹ்ம்ம்ம்ம்…டூ லேட் டா முத்து.
***
ஜெயமோகன் கடைசியில் இருக்கும் முடிச்சு தான் கதையை சிறுகதையாக்குகிறது என்றார். ஒரு வகையில் சரிதான். ஆனால் கண்டிப்பாக ட்விஸ்ட் இருக்க வேண்டும் என்ற அவசியமில்லை என்று சில கதைகள் சொல்கின்றன. கதை சொல்லும் விதம் மிக மிக புதிதாக இருந்தால் ட்விஸ்ட் எதற்கு? அப்படியொரு கதை சில வருடங்களுக்கு முன் படித்தேன். ராஜா வல்லாரை கேப்சூல்ஸ் சாப்பிட்டு என் ஞாபகசக்தியைக் கூட்டிக் கொள்ள வேண்டும் என்று நினைக்கிறேன். இந்த முறையும் எழுதியவரின் பெயரோ, வெளியான புத்தகமோ நினைவில் இல்லை. தெரிந்தவர்கள் துப்புக் கொடுக்கவும்.

ஒரு கதையாசிரியர் கதை எழுதுவதற்காக நாற்காலி, பேனா, நோட்டுப் புத்தகம் சகிதமாக மொட்டை மாடியில் வந்து அமர்கிறார். கதை எழுத ஆரம்பிக்கிறார். அவர் எழுதிக்கொண்டிருக்கும் கதையில் ஒரு மரம் இருக்கிறது. மரத்தை சுற்றியே கதை பிண்ணப்பட்டிருக்கிறது. அவர் தினமும் வந்து எழுதிக்கொண்டிருக்கும் போது, ஒரு காகம் வந்து மொட்டைமாடியில் உட்கார்ந்து கரைந்து கொண்டிருக்கிறது.

ஒரு நாள் ஆசிரியர் எழுதிக்கொண்டிருக்கும் பொழுது அந்த காகம் ஆசிரியரை நெருங்கி, தனக்கு கூடு கட்ட இடமில்லையென்றும், தன்னை கதையில் இருக்கும் மரத்தில் கூடு கட்டிக்கொள்ள அனுமதி தருமாறும் கேட்கிறது காகம். முதலில் மறுத்த ஆசிரியர், பிறகு காகம் கெஞ்சுவதைப் பார்த்து, சரியென்று சொல்கிறார். தான் கதை எழுதுவதற்கு இடைஞ்சலாக கரைந்து கொண்டிருக்கக் கூடாது என்றும் கண்டிசன் போடுகிறார். காக்கை ஒத்துக்கொள்கிறது. கதை வளர்கிறது. காக்கைக்கும் குஞ்சுகள் உண்டாகின்றன. குடும்பமாக அந்த மரத்தில் கூடு கட்டி சந்தோசமாக வசித்து வருகிறது.

ஆசிரியர் கதையை முடிக்கப் போகிறார். கதைப்படி, கதையில் வரும் மரம் வெட்டப்படவேண்டும். அதனால் ஆசிரியர் காக்கையிடம் முன்பே எச்சரிக்கை செய்து விடுகிறார். கூட்டை காலி செய்யும் படியும் கேட்டுக்கொள்கிறார். காக்கை மறுக்கிறது. ஆசிரியர் மரத்தை வெட்டியே தீர வேண்டும் என்று பிடிவாதமாக இருக்க, காக்கை கோர்டிற்குப் போகிறது. நீண்ட வழக்குக்குப்பிறகு மரத்தை வெட்டக்கூடாது என்று காக்கைக்கு சாதகமாக தீர்ப்பு சொல்லப்படுகிறது. காக்கை சந்தோஷமாக அந்த மரத்தில் இருக்கும் கூட்டிலே தன் வாழ்க்கையைக் கழிக்கிறது.

ஆசிரியர் மரத்தை வெட்ட முடியாததால் கதையை முடிக்கமுடியாமல் தவிக்கிறார். இனி காக்கைக்கு தான் எழுதும் கதைகளில் இருக்கும் மரங்களில் கூடு கட்ட இடம் தரக்கூடாது என்று திடமான முடிவு எடுக்கிறார் என்று முடிகிறது கதை.

என்ன கதை இது என்று கேட்பவர்களும் இருக்கிறார்கள்? ஆகா என்ன அழகான கதை இது என்று சிலாகிப்பவர்களும் இருக்கிறார்கள். கதையை மட்டுமே ஆசிரியர் கூறியிருக்கிறார், அதை எதோடுவேண்டுமானாலும் ஒப்பிட்டுப்பார்த்து புரிந்து கொள்வது வாசகனின் திறமை. கதையைப் படித்து புரிந்துகொள்ள வேண்டுமா? ஒரு கதையை பாடப்புத்தகம் போல வாசிக்க வேண்டுமா? என்றால் ஆம் தான். கதை ஆசிரியரிடத்தே முடிவதைக்காட்டிலும் வாசகனிடம் முடிவதே சிறப்பு. ஆசிரியரின் கதைகளில் வாசகனுக்கும் பங்கு வேண்டும். அது தான் சுவை. கவிதை போல.

மற்றொரு காக்கை சம்பந்தப்பட்ட கதையை கணையாழியில் படிக்க நேர்ந்தது. யார் எழுதியது என்று மறந்து விட்டது.

பாட்டி வடை சுட்ட கதையிலிருந்து ஆரம்பிக்கிறார் ஆசிரியர். (போன பகுதியில் காக்கை வடைசுட்ட கதையைப்பற்றி அடுத்த பகுதியில் பார்ப்போம் என்று சொல்லியிருந்தேன்.) அப்புறம் அந்த கதையில் நமக்கு தெரிந்த ட்விஸ்டைக் கொடுக்கிறார். அதாவது, காக்கை வடையைத்தூக்கிக் கொண்டு மரத்திலமர்ந்து கொள்கிறது. வடையை சாப்பிட்டுக் கொண்டிருக்கும் பொழுது, நரியார் வந்து காக்கையே உன் குரல் மிக அழகாக இருக்கிறது, ஒரு பாடல் பாடேன் என்கிறது. புகழ்ச்சிக்கு மயங்கிய காக்கை பாட வாயைத்திறக்கிறது, பிறகு உஷாராக, வடையை வாயிலிருந்து எடுத்து காலில் வைத்து கொண்டு பாட்டு பாடுகிறது. ஏமாற்றத்தால் (காக்கையின் பாடலாகக்கூட இருக்கலாம்) நரி ஒடிவிடுகிறது.

அப்புறம் ஆசிரியர் யோசிக்கிறார். காக்கை-நரி கதை அப்புறம் என்னவாயிற்று? காக்கை வடையைத்தின்று விட்டு என்ன செய்தது? காக்கையிடம் ஏமாந்த நரி என்ன செய்தது?

யோசித்துக்கொண்டிருக்கும் பொழுது, “பெரும்பாலும் குழந்தைகளின் கதைகளை பெரியவர்களே எழுதியிருக்கிறார்கள். அந்த கதைகளிலெல்லாம் குழந்தைகள் வெளியே நின்று கொண்டிருக்கின்றனர் என்கிறார். உண்மைதானே? குழந்தைகளின் உலகம் வேறு. பெரியவர்களின் உலகம் முற்றிலும் வேறு. அதெப்படி குழந்தைகளின் கதைகளை பெரியவர்கள் எழுதலாம்? எழுதினால் அது குழந்தைகளுக்கு ஏற்றார் போல இருக்குமா? குழந்தைகளிடம் கதை கேட்டுப் பாருங்கள். அவர்கள் கதை மிக மிக புதிதாக, மிகவும் கற்பனை மிகுந்ததாகவும் இருக்கும். யானைக்கு மாடு போல கொம்பு இருக்கும். குதிரைக்கு யானைத்தந்தங்கள் இருக்கும். என் அக்கா மகளுக்கு யானை பிடிக்காது. பயம். எனவே அவளின் கதைகள் அனைத்திலும் வில்லன்கள் யானையாக இருக்கும். அது பாட்டி வடைசுட்ட கதையாக இருந்தாலும் அங்கே நரிக்குப் பதிலாக யானைதான் காக்கையை வம்புக்கிழுத்துக்கொண்டிருக்கும்.

நமது கற்பனை எல்லைக்குட்பட்டது. எது சாத்தியம் எது சாத்தியமில்லை என்பது நம்க்கு தெரியும். ரெஸ்ட்ரிக்டட் இமேஜினேஷன். குழந்தைகளின் உலகம் எல்லைகள் அற்றது. வானமற்றது.

யோசித்துக்கொண்டிருந்தவர், ஒரு ஆசிர்வதிக்கப்பட்ட நாளில் – எனக்கு இந்த இரு சொற்கள் பிடித்திருக்கிறது. என்வே அதையே பயன்படுத்திக்கொள்கிறேன் – அந்தரத்தில் முடிவில்லாமல் தொங்கிக்கொண்டிருக்கும் காக்கா-நரி கதையின் அடுத்த பகுதி கிடைக்கிறது.

எங்கே நரி வடையைப் பிடுங்கிவிடுமோ என்று பயந்த காகம் வேகவேகமாக தின்றது. வேகவேகமாக தின்றதில் காகத்திற்கு விக்கல் வந்து காடெல்லாம் தண்ணீருக்காக அலைகிறது. எங்கும் தண்ணீர் பஞ்சம். கடைசியாக ஒரு குடத்தில் தண்ணீர் மிக மிக அடியில் கிடப்பதைப் பார்க்கிறது. ஆனால் அந்தோ பரிதாபம், காக்கைக்கு எட்டவில்லை. சுற்றும் முற்றும் பார்க்கிறது. உடனே அதற்கு ஐடியா ஒன்று தோன்றுகிறது. பானைக்கு அருகில் இருக்கும் கற்களை எடுத்து ஒன்றொன்றாய் பானையில் போடுகிறது. கற்கள் நிரம்பியதால் தண்ணீர் மேலே வருகிறது. ஆனந்தமாய் குடித்து செல்கிறது காக்கை.

எப்படி கோர்க்கிறார் பாருங்கள்?

சரி, காக்கையிடம் தோல்வி கண்ட நரியார் அப்புறம் என்ன செய்தார்? ஹோல்ட் ஆன். நீங்கள் யோசியுங்கள். ஆசிரியரின் மனப்போக்கையும் கதை(!?)ப் போக்கையும் அறிந்திருக்கிறீர்கள் அல்லவா? ம். நீங்கள் யோசித்தது சரியா என்று பார்க்கலாம்.

காக்கையிடம் தோல்வி கண்ட நரி, ஏமாற்றமுடன் செல்கிறது. அப்படி செல்லும் பொது, ஒரு திராட்சைத்தோட்டத்தைப் பார்க்கிறது. (எத்தனை பேர் கரெக்டாக யோசித்தீர்கள்) அந்தோ பரிதாபம். திராட்சைப் பழங்கள் எல்லாம் மிக உயரத்திலிருக்கின்றன. நரி எம்பி எம்பி குதித்துப் பார்க்கிறது. திராட்சை சிக்கவேயில்லை. எட்டவேயில்லை. சோர்ந்துபோன நரி, சீ.சீ. இந்த பழம் புளிக்கும் என்று சென்று விடுகிறது.

இன்ட்ரஸ்டிங் இல்ல? இந்த கதையின் இறுதியில் திருப்பம் எதற்கு? மிகப் புதுமையான முயற்சியே கதையை தூக்கி நிறுத்தும். நம்மை கட்டிப்போடும்.

சரி. திராட்சைப்பழம் கிடைக்காத நரி என்ன செய்தது? வயிறு முட்ட தண்ணீர் குடித்த காக்கை அப்புறம் என்ன செய்தது? நமக்கென்ன தெரியும், மிகுந்த புத்திக்கூர்மையால் ஐ.ஐ.டியில் கூட சீட் கிடைத்து படித்து அல்லது ஸ்ட்ரைக் செய்து கொண்டிருக்கலாம்.

விகடனில் வந்த ஒரு நிமிட கதை ஒன்று. கதை ஒரு நிமிடம் என்றாலும் என்னை ஒரு 20 செகண்டாவது யோசிக்கவைத்தது.

பீரோவில் எதையோ தேடிக்கொண்டிருந்தபோது, ரகசிய அறைக்குள் இருந்த அந்த டைரி என் கையில் கிடைத்தது. எடுத்து ஆர்வமாகப் புரட்டினேன்.
ஜனவரி 1: புத்தாண்டு. என்னைப்பொறுத்த மட்டும் இது புத்துணர்ச்சி ஆண்டு. காரணம் இன்று தான் கவிதா என்கிற என் தேவதையை முதன் முதலாகச் சந்தித்தேன்..
ஐயோ. இது அவர் டைரியே தான். படபடக்கும் இதயத்தோடு மேலும் புரட்டினேன்.
ஜூலை 5: இன்று எனக்கு மிகக் கொடுமையான நாள். அப்பா அம்மா பேச்சை மீற விரும்பாமல், அவர்கள் பார்த்த மாப்பிள்ளையையே கல்யாணம் செய்துகொள்ள முடிவெடுத்து விட்டாளாம் கவிதா.
செப் 21: இன்று அவளுக்கு திருமணம். டைரியை அழகாகப் பேக் செய்து எடுத்துப் போய், அவள் கையிலே பரிசாக…
‘கவிதா..கவிதா’ என்று குரல் கொடுத்தபடி என் கண்வர் வருவது தெரிய, சட்டென்று அந்த டைரியை மீண்டும் அந்த ரகசிய அறைக்கு உள்ளேயே வைத்து பூட்டினேன்.

பிறகு ஒரு மிக நகைச்சுவையான கதை ஒன்றை உயிர்மையில் படிக்க நேர்ந்தது. பொதுவாக டெக்ரானில் – எங்கேயிருக்கிறது என்று கேட்காதீர்கள், நானும் ஜியோகிராபியில் ரொம்ப வீக் – யுத்தம், ஈரானின் இலக்கியவளம், கொலம்பியாவின் குழம்பிய பெண் கவிஞர் என்று சற்றும் சம்பந்தா சம்பந்தமில்லாமல் இலக்கியத்தொண்டு செய்து கொண்டு வரும் உயிர்மை, வித்தியாசமாக ஒரு நல்ல சிறுகதையைப் பிரசுரத்திருந்தது. நாஞ்சில் நாடன் எழுதியிருந்தார். கதையின் பெயர் “கதை எழுதுவதின் கதை”.

கதை என்று ஒன்றே இல்லாததுதான் கதையின் சிறப்பு. கதைக்கு மஞ்சள் கரு, வெள்ளைக்கரு, ஹேர்பின் பெண்ட் எல்லாம் வேண்டுமென்று கேட்பவர்கள் கண்டிப்பாக படிக்கவேண்டிய கதை. கதை கேட்கும் பத்திரிக்கைகளையும், கதை எழுதுபவர்களையும் சாடு சாடு என்று சாடியிருக்கிறார். ஜெயமோகன், கதையில் எங்க வந்தார் என்று தான் எனக்கு புரியவில்லை. ஜெயமோகனைப் போட்டு புரட்டி எடுத்திருக்கிறார்,நாஞ்சில் நாடன். இதைப்பற்றி அடுத்த பகுதியில் பார்க்கலாம்.

(தொடரும்)

பிற பகுதிகள்:

 

இன்சிடென்ட்ஸ் – 2

 

கனவுகள் சில சமயங்களில் பயங்கர ரியாலிஸ்டிக்காக இருப்பதை நினைத்து நான் பல முறை ஆச்சரியப்பட்டிருக்கிறேன். உதாரணமாக நான் +2 முடித்து, இன்ஜினியரிங் காலேஜ் முடித்து, இந்தியாவில் 2 வருடம் மாவரைத்து இட்லி சுட்டு, மலேசியாவில் இரண்டு வருடம் அதே மாவை அரைத்து தோசை சுட்டு, பிறகு சிங்கப்பூரில் அதே மாவை அரைத்து வடைசுட்டுக்கொண்டிருக்கிறேன். ஆனால் நான் பரிட்சையில் பெயிலாகி விட்டு, ஐயோ என்னடா இது பெயிலாகிவிட்டோமே இப்ப என்ன செய்றது என்று மிக தீவிரமாக வருத்தப்பட்டு கொண்டிருப்பது போன்று கனவுகள் வரும். சில சமயம் அது மிகவும் தத்ரூபமாக இருக்கும். அழுகை அழுகையாக வரும். கனவிலிருந்து விழித்த பிறகு, அப்பாடா நாம் பெயிலெல்லாம் ஆக வில்லை, நாளை சாப்பாட்டிற்கு ஒரு வேலை இருக்கிறது என்று உணரும் போது ஒரு நிம்மதி;சந்தோஷம் வரும் பாருங்கள், அடா..அடா. 12B போன்று, நடக்காத ஒன்று நடந்திருந்தால் என்ன ஆகியிருக்கும் என்று உணர்ந்து கொள்வதற்கு கனவுகள் மிகவும் உதவியாக இருக்கின்றன, இல்லையா?

இன்னொரு மிகுந்த ஆச்சரியமான விசயம் கனவில் கிடைக்கும். நாம் ஒரு விசயத்தை பல நாட்கள் மறந்தே போயிருப்போம். ஏன் பல மாதங்கள் கூட ஆகியிருக்கலாம். ஆனால் அந்த விசயம் (உங்கள் பள்ளித் தோழியாகவோ, தோழனாகவோ கூட இருக்கலாம்!) ஒரு நாள் ஒரு மின்னலைப் போல திடீரென்று கனவில் தோன்றும். நாம் கனவிலிருந்து விழித்து பேந்த பேந்த விழித்துக்கொண்டிருப்போம். இது எப்படி சாத்தியமாகிறது? நாம் நீண்ட நாட்கள் மறந்திருந்த விசயத்தை ஏன் மூளை புதுப்பிக்க நினைக்கிறது? நம் நினைவில் இல்லாத பல விசயங்களை மனம் அசை போட்டுக்கொண்டேயிருக்கிறது என்பது மட்டும் புலனாகிறது.

தூக்கம் மிக மிக புதிரானது. அது நம்மை சில மணி நேரங்கள் இந்த உலகத்தை விட்டே பிரித்து விடுகிறது. எழுந்தால் தான் நிச்சயம். பேசிக்கொண்டிருக்கும் போதே குறட்டை விடும் நபர்களைப் பார்த்திருக்கிறேன். எந்த இடத்தில் எப்பொழுது படுத்தாலும் தூங்கிவிடும் நபர்களும் இருக்கிறார்கள். சில நாட்கள் சும்மா ஒன்றும் விரிக்காமல் தலைக்கு கையை வைத்துக்கொண்டு தூங்கிவிடுகிறோம். சில நாட்கள் மெத்தை, ஏசி, கஜல் பாடல் என்று படுத்தாலும் இன்சோமேனியாக்காக இருக்கிறோம். பக்கத்தில் குறட்டை விடும் நண்பனையே பொறாமையாக பார்க்கிறோம்.

நான் மலேசியாவில் இருக்கும் பொழுது ஒரு நீண்ட நாள் முடிந்து மிகுந்த அலுப்புடன் வந்து படுத்து விட்டேன். பக்கத்து அறையில் ஒரு நண்பரும் அவர் மனைவியும் படுத்துக்கொண்டிருக்கிறார்கள். நான் நன்றாக தூங்கிவிட்டேன். திடீரென்று செல் போன் ஒலிக்கவே திட்டிக்கொண்டே எடுத்தேன். என் மேனேஜர் தான் கால் பண்ணியிருந்தார் (திட்டினது சரிதான் என்று நினைக்கிறீர்களா?). எடுத்த எடுப்பிலே அவர் என்ன முத்து எதுவும் ஆகலையே நல்லாயிருக்கேல்ல என்றார். எனக்கு கோபம் தலைக்கேறியது. யோவ். நட்ட நடு ராத்திரியில கால் பண்ணி இது என்னையா கேள்வி என்றேன் கோபமாக. அவர் அடடே உனக்கு விசயமே தெரியாதா, KL முழுதும் நில நடுக்கம், அது தான் கேட்டேன் என்றார். ஒன்றும் இல்லை நாம் நன்றாகத்தானே இருக்கிறேன் என்றேன். ஜாக்கிறதை. கவனமாக இரு என்றார். எனக்கு அதுக்கப்புறம் தூக்கம் கலைந்து விட்டது. எழுந்து டீவியை ஆன் செய்து பி.பி.சி யைப் பார்த்தேன். உண்மைதான். ப்ளாஷ் நியூஸில் கே.எல் லில் நிலநடுக்கம் என்று ஓடிக்கொண்டிருந்தது. எனக்கு சந்தேகம் வரவே, எழுந்து சட்டை அனிந்து கொண்டு லிப்ட் எடுத்து கீழே சென்ற பொழுதுதான் நான் உணர்ந்து கொண்டேன். கீழே, ரோட்டில் எங்கள் கோண்டோமினியத்தில் இருக்கும் என்பது ப்ரஸண்ட் மக்கள் சலசல என்று பேசிக்கொண்டு அந்த அர்த்த ராத்திரியில் நின்று கொண்டிருந்தனர். தொடர்ந்து சில நிமிடங்களில் அமெரிக்காவிலிருக்கும் என் அண்ணனிடமிருந்து கால். அப்புறம் அறையில் ஒன்றுமே தெரியாமல் தூங்கிக்கொண்டிருந்த அந்த அப்பாவி நண்பரை எழுப்பி விசயத்தை சொன்னேன். யான் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம். பேந்த பேந்த விழித்துக்கொண்டு இரண்டும் வந்ததுகள். உண்மையிலே பூகம்பம் வந்ததென்று வைத்துக்கொள்ளுங்கள், யார் எழுப்பி சொல்வார்கள்? அங்கே செல் போன் வேலை செய்யுமா?

என் நண்பன் ஒருவன் இருக்கிறான், பக்கத்தில் பிபாசாவே ஆடிக்கொண்டிருந்தாலும் கவலையே பட மாட்டான். வந்து படுத்தவுடன் தூங்கிவிடுவான். விளக்கு எரிந்தாலும், பாடல் சத்தமாக ஒலித்தாலும் (நான் வேண்டுமென்றே லேப்டாப்பில் பாடலை சத்தமாக ஒலிக்க செய்வேன்) கவலையே படமாட்டான். நன்றாக இழுத்துப்போர்த்திக்கொண்டு, சம்மனங்கால் போட்டுக்கொண்டு (?! எப்படி இவனால் முடிகிறது என்று நான் நிறைய நாட்கள் யோசித்ததுண்டு!) தூங்குவான். அதனால் அவன் சம்மன சாமியார் என்றும் அழைக்கப்படுகிறான். ஆனால் ஒன்றே ஒன்று. அவன் தூங்கிய பிறகு அவனை மிக மிக மெதுவாக அழைத்து தான் எழுப்ப வேண்டும். இல்லையேல் தடால் புடால் என்று அடித்து பிடித்து எழுந்து நம்மையே பயமுறுத்துவான். பிறகு உங்களுக்கு சாபம் தான்.

முதல்நாள் திருச்சி, மறுநாள் கோவில்பட்டி அடுத்த நாள் போடி என்று பிரயாணம் செய்து விட்டு எங்கள் வீட்டு மொட்டை மாடியிலிருக்கும் ரூமில் கதவைப் பூட்டிக்கொண்டு படுத்துவிட்டேன். வெளியே மொட்டை மாடியில் என் குடும்பத்தினர் படுத்திருக்கின்றனர். தூங்கிய நான் என்ன நினைத்தேனோ தெரியவில்லை கதவை தட தடவென்று அடித்து கதவைத்திறங்கள் கதவைத்திறங்கள் என்று சத்தம் போட ஆரம்பித்துவிட்டேன். அப்புறம் வெளியிலிருந்த என் அண்ணன் மிகவும் சத்தமாக டேய் நீ தான் தாழ் போட்டிருக்க நீதான் திறக்கனும் என்று சொன்னவுடன் தான் நான் நினைவு திரும்பி, அட ஆமால்ல (வடிவேலு போல சொல்லவும்), என்று நினைத்து கதவைத்திறந்து கொண்டு “பேக்கு” மாதிரி விழித்துக்கொண்டு வெளியே வந்தேன். என் நான்கு வயது அக்கா மகள் மாமா சாமிய கும்பிட்டு திருநீர் பூசிட்டு தண்ணீ குடிச்சிட்டு தூங்குங்கள் என்றது தான் மிக மிக கேவலம். நீண்ட நேரம் என் அண்ணன் ஏன்டா அப்படி கத்தின ஏன்டா அப்படி கத்துன என்று கேட்டுக்கொண்டேயிருந்தார். நான் பதிலே சொல்லவில்லை. தெரிந்தால் தானே சொல்வதற்கு! பக்கத்து வீட்டாருக்கெல்லாம் கேட்டிருக்கிறது. மறுநாள் மானம் போய்விட்டது.

(தொடரும்)

இன்சிடென்ட்ஸ் (1)

குறட்டை கோவிந்தன்

உண்மையைச் சொல்லவேண்டும் என்றால் எனக்கு ஒரு நாளும் கனவில் திரிஷாவோ, சினேகாவோ அல்லது அட்லீஸ்ட் சரோஜாதேவியோ கூட வந்ததில்லை. ஏன் என்றும் சில நாள் நான் மிக சீரியஸாக யோசித்திருக்கிறேன். அதற்காக எனக்கு கனவே வராது என்பதும் உண்மையல்ல. நான் நிறைய கனவு காண்கிறவன். ஆனால் என் கனவுகள் எல்லாமே என்னை பயமுறுத்துபவை. திரில்லர் படங்கள் தோற்கும் போங்கள். சில நாட்கள் நான் யாரையாவது குத்தி கொலை செய்து விட்டு ஓடிக்கொண்டிருப்பேன். போலீஸ் என்னை துரத்திக்கொண்டிருக்கும். சில நாட்கள் ஏதேனும் மிருகங்கள் என்னைத் துரத்திக்கொண்டிருக்கும். சிங்கம், புலி முக்கியமாக நாய். நான் ஏன் நாயைக் கண்டால் பயப்படுகிறேன் என்றும் தெரியவில்லை. ஆனால் இந்த நாயைக் கண்டு பயப்படும் கும்பலில் நான் மட்டும் தனியாக இல்லை என்பது என் நண்பன் நாங்கள் எப்பொழுதும் பயன் படுத்தும் பாதையை விட்டு வேறு பாதையை திடீரென்று உபயோகப்படுத்தியபோது தெரிந்து கொண்டேன். ஏன் என்று கேட்டதற்கு வழியிலிருக்கும் ஒரு வீட்டில் புதிதாக நாயொன்று வாங்கியிருக்கிறார்கள் என்றான். இத்தனைக்கும் அந்த நாயை கேட் போட்டு அடைத்து வைத்திருப்பார்கள். ஒரு நாள் போல ஒரு நாள் இருக்காது என்று போனஸாக அறிவுரை வழங்கினான். சரிதான்.

முன்பெல்லாம் வெள்ளிக்கிழமைகளில் ஒலியும் ஒளியும் வரும். தெருவில் நடந்தால் வீட்டிற்குப்போகும் வரையில் ஒரு பாட்டு கூட மிஸ் ஆகாது. அனைத்து வீடுகளிலும் ஒலியும் ஒளியும் ஓடிக்கொண்டிருக்கும், கதவு வேறு திறந்திருக்கும், டீவி கரெக்டாக வாசலுக்கு நேரே இருக்கும். நாம் டீவி பார்த்துக்கொண்டும் பாடல் கேட்டுக்கொண்டும் ஜாலியாக நடக்கலாம். ஆனால் இதில் ஒரு டிஸ்அட்வாண்டேஜ் இருக்கிறது. எப்படி என்கிறீர்களா? இப்படி நாம் பெராக்கு பார்த்துக் கொண்டே நடக்கும் போது வழியில் ஹாயாகப் படுத்துக்கிடக்கும் நாயை நறுக்கென்று மிதித்துவிட வாய்ப்பிருக்கிறது. நாயும் கோபத்தில் நாம் போட்டுக்கொண்டிருக்கும் புது பேண்டையும், கொஞ்சம் சதையையும் லபக்கென்று கடித்துவிட வாய்ப்பிருகிறது. அப்படித்தான் நடந்தது அன்று. நாயைச் சொல்லி குற்றமில்லை புது பேண்ட் என்று நாய்க்கு எப்படித்தெரியும். அப்பொழுது தான் ஏன் இப்படி கதவைத்திறந்து போட்டுக்கொண்டு டீவி பார்க்கிறார்கள் என்று எரிச்சல் எரிச்சலாய் வரும். அதனால் தானே நாம் பெராக்கு பார்த்துக்கொண்டு நாயை மிதிக்கவேண்டிய சூழ்நிலை வந்தது. மதுரை கவர்மெண்ட் ஆஸ்பத்திரியில் சென்று தொப்புளை சுத்தி 6 ஊசி தான் போட்டுக்கொண்டேன். விடாக்கண்டன் டாக்டர் நான் ஊசி போட யோசித்தபோது பக்கத்து அறையைக்காட்டி – அந்த அறை பூட்டப்பட்டிருந்தது, கம்பி ஜன்னல் வைக்கப்பட்டிருந்தது – இந்த அறையில் தான் நாய் கடித்து ஊசி போடாமல் நாய் மாதிரியே ஆகிவிட்ட மனிதன் குரைத்துக் கொண்டு இருக்கிறான் என்றார். சத்தமில்லாமல் ஊசி போட்டுக்கொண்டேன். அந்த அறையைக்கடந்து வந்த போது திரும்பிப் பார்க்ககூட மனசு வரவில்லை.

அன்றைய இரவிலும் இப்படித்தான் நாயொன்று என்னை விடாமல் துரத்திக்கொண்டே வந்தது, கனவில் தான். பயங்கர உறுமல் சத்தம் வேறு. கர் புர் என்று. சன் டீவியில் முன்பு மர்மதேசம் தொடர் வந்த போது டைட்டிலில் ஒரு நாய் குரைக்குமே நினைவிருக்கிறதா? நாய் பார்ப்பதற்கு பயங்கரமாக இருந்தது. நல்ல கருப்பாக. திடகாத்திரமாக. கடித்தால் அரைக்கிலோவோ ஒருகிலோவோ நிச்சயம் லாஸ் ஆக வாய்ப்பிருக்கிறது. அடுத்த ஒரு சில மாதங்களுக்கு பிட்னஸ் கிளப் போகத்தேவையில்லை. ஒரு வழியாக தப்பித்து நினைவு லோகத்திற்கு வந்தேன். பக்கத்திலிருந்த பாட்டிலில் தண்ணீர் குடித்துக்கொண்டேன். அப்பொழுதும் கர் புர் என்ற சத்தம் கேட்டது. கனவிலே எழுந்து தண்ணீர் குடித்துக்கொண்டிருக்கோமா? அவ்வளவு ரியாலிஸ்டிக்கான கனவா? எந்த மடையனாவது நாய் துரத்திக்கொண்டிருக்கும் போது, சாவகாசமாக தண்ணீர் குடித்துக்கொண்டிருப்பானா? கிள்ளிப்பார்த்துக்கொண்டேன். நினைவுதான். அப்புறம் கர் புர் சத்தம் மட்டும் எங்கிருந்து வருகிறதாம்? அப்பொழுதுதான் என் நண்பன் என் பக்கத்திலே உறங்கிக்கொண்டிருந்தது நினைவுக்கு வந்தது.

யாராக இருந்தாலும் “நீங்கள் குறட்டை விடுகிறீர்கள்” என்று சொன்னால் உடனே கோபம் தான் படுகிறார்கள். என் நண்பன் மட்டும் விதி விலக்கா என்ன? நான் ஒன்றும் குறட்டை விட மாட்டேனாக்கும் என்று மார்தட்டினான். ஆனால் நான் அவனைப்போல டுபாகூர் 1943 ஆம் வருசத்து செல்போன் வைத்திருக்கிறேன் என்று நினைத்துக்கொண்டான். அங்கே தான் சிறு தவறு நடந்து விட்டது. என்னிடம் பிடிஏ இருக்கிறது. நைசாக அவன் தூங்கும் போது அவனுடைய மூக்கிற்கு மிக அருகில் – எனக்கு சந்தேகம் வேறு வந்துவிட்டது. சத்தம் மூக்கிலிருந்து வருகிறதா அல்லது வாயிலிருந்து வருகிறதா என்று. இன்னும் சந்தேகம் தீர்ந்த பாடில்லை – பிடிஏவை வைத்து சத்தத்தை ரெக்கார்ட் செய்து விட்டேன். “மாட்னடா நீயி” – பழம்பெரும் நடிகர் அசோகன் போல சொல்லவேண்டும் – என்று சொல்லிக்கொண்டேன். என்னுடைய இயர் போனில் அதை ரீப்ளே செய்து பார்த்ததில் டால்பி டிஜிட்டலும், டி ஹச் எக்ஸ¤ம் தொற்றது போங்கள். அவ்வளவு துள்ளியம். கேட்பவர்கள் டைனோசர் வருகிறதோ என்று கூட நினைத்துக்கொள்ள வாய்ப்பிருக்கிறது.

ஆதாரம் காட்டிய போது என்ன செய்ய முடியும். என்னடா பன்றது எனக்கு குறட்டை வருகிறதே, நான் என்ன செய்ய என்று பாவமாய் மூஞ்சியை வைத்துக்கொண்டான். இலவசமாக டிப்ஸ் சில சொன்னான். அதாவது அவன் தூங்கும் போது அவனுடைய பெட்டைப்பிடித்து இழுக்க வேண்டும். அப்படிச்செய்தால் குறட்டை நின்று விட வாய்ப்பிருக்கிறது என்றான்.

அன்றைய இரவு அந்த டெக்னிக்கை கையாண்டேன். பலன் இருந்தது. ஆனால் ஜஸ்ட் ஒன் மினிட் தான். மறுபடியும் உறுமல். நான் என்ன இரவு முழுதும் பெட்டை ஆட்டிக்கொண்டேவா இருக்க முடியும். ஒரே சீராக குறட்டை வரும் பட்சத்தில் பழக்கமாகிவிடும். ஆனால் வேறு வேறு பிட்ச்களில் விதம் விதமாக குறட்டை விட்டால் என்னதான் செய்யமுடியும்? சில சமயம் பூனை கத்துவதைப்போன்று சத்தம் வரும். சில சமயம் யானை பிளிறுவதைப் போல. ஐயோ யானைக்கூட்டத்தில் மாட்டிக்கொண்டோமே இப்ப எப்படித் தப்பிப்பது? என்று சீரியசாக நான் கனவில் திங்க் செய்திருக்கிறேன்.

ஒரு நாள் சத்தம் தாங்காமல் பெட்டை வேகமாக் நான் ஆட்டிவிட, முழித்துக்கொண்ட என் நண்பன் கோபம் வந்த விசுவாமித்திரனாக மாறி “உனக்கு என்னய விட பல மடங்கு சத்தமா குறட்டை விடுற பொண்டாட்டி தான்டா கிடைப்பா” என்று சாபம் வேறு கொடுத்தான். மறுநாள் அவன் நாக்கை தரோவாக செக் செய்து விட்டேன், கரி நாக்கு ஒன்றும் இல்லையாம். இருந்தாலும் கொஞ்சம் பயமாகத்தான் இருக்கிறது.

நான் இந்தியாவில் வேலை செய்த பொழுது என்னுடன் வேலை செய்த நண்பர் ஒருவருக்கு குறட்டை விடும் பழக்கம் இருந்தது. நைட் வேலை செய்யவேண்டும் என்றால் தொலைந்தோம். கிடைக்கும் சில மணி நேரத்தை தூங்கலாம் என்று நினைத்தால், குறட்டை சுத்தமாக கெடுத்துவிடும். அவருக்கு டெக்னிக் வேறு. அவரைத் தொட்டால் குறட்டை நின்று விடும். ஆனால் சில நிமிடத்தில் மீண்டும் தொடரும். நீங்கள் கையை அவர் மேலேயே வைத்துக்கொள்ளலாமே என்று ஸ்மார்டாக சிந்தித்தால் அதெல்லாம் வேலைக்காகாது. தட்டிக்கொடுத்துக்கொண்டே இருக்கவேண்டும். நாம் எப்படித் தூங்குவது? கவலைப்படாதீர்கள் தட்டிக்கொடுத்துக்கொண்டே தூங்குவதற்கு பழகிக்கொண்டு விடலாம். சித்திரமே கைப்பழக்கம்.

அவர் சாப்பிட்டு விட்டு ஆபீஸ் வந்ததும் சில நேரங்களில் தூங்க ஆரம்பித்து விடுவார். நாம் தூங்கும் போது நமது மூளை விழித்தேயிருக்கிறது என்பதில் யாருக்கேனும் சிறு ஐய்யப்பாடு இருக்குமேயானால் நீங்கள் அவரைத் தான் முதலில் பார்க்க வேண்டும். ஹாயாக கம்ப்யூட்டரின் முன் சேரில் அமர்ந்து கொண்டு தலையை சேரில் சாய்த்துக்கொண்டு விட்டத்தைப் பார்த்து கண்களை மூடித் தூங்கிக்கொண்டிருப்பார். பக்கத்தில் சென்று நின்றோமேயானால் உடனே மௌசைப்பிடித்திருக்கும் கை மட்டும் வேக வேகமாக அசையும். வேலை செய்கிறாராம்.

மதியம் ஆபிசில் தூங்குவதைக்கூட பொருத்துக்கொள்ளலாம். ஆனால் தூங்கி குறட்டை விடுவது டூ மச் இல்லையா? அதையும் அவர் செய்தார். அதுவும் எங்கள் பாஸ் உடன் இருக்கும் போது. என்ன தெனாவெட்டு? இப்பொழுது கெச்.சி.எல் லில் ஹாயாக குறட்டை விட்டுக்கொண்டிருக்கிறார். ஹெச்.சி.எல் கவர்மெண்ட் ஆபீஸ் போன்றது என்று என் நண்பர்கள் சொன்னபோது நான் நம்பவில்லை.