ஒழிவு தெவசத்தே களி

சினிமா விமர்சனம்

Off-day-1140x687

சாதியை சொல்லாதே/சாதியை கேட்காதே/ஆனால் ஏதும் செய்யாதே/சாதியை மறப்பதற்கு என்று ஐயப்ப பனிக்கர் எழுதினார். ஆர் உன்னி எழுதிய ஒழிவு தெவசத்தே களி என்கிற சிறுகதையை வைத்து சனல் குமார் சசிதரன் டைரக்ட் செய்த படம் இது. ஒழிவு தெவசத்தே களி என்றால் ஓய்வு நாளில் விளையாட்டு என்று பொருள். கேரளாவில் சாதி மக்களின் வாழ்க்கையில், அதிகார அடுக்கில், அரசியல் மட்டத்தில் எப்படி ஊடுறுவியிருக்கிறது என்பதை அப்பட்டமாக தோலுரித்துக் காட்டியிருக்கிறது படம்.

ஆயிர வருட பழமையை எதிர்ப்பதென்பது அவ்வளவு எளிதல்ல.அதை மாற்ற முயற்சிக்கும் பொழுது பெரிய எதிர்ப்புகளை சந்திக்க வேண்டும். அது தான் எனக்கு நடந்தது. ஆனால் இந்த போலித்தனத்தை வெளிச்சம் போட்டுக் காட்டி மக்களிடம் உரையாட விவாதம் செய்ய இது தான் சந்தர்ப்பம். இல்லாவிட்டல் இந்த சமூகம் இருக்கிற இடத்திலே தேங்கிவிடும்.

என்று செக்ஸி துர்கா படத்தினால் தான் சந்தித்த சிக்கல்களைப் பற்றி ஒரு பேட்டியில் சொன்னார் சனல் குமார் சசிதரன்.

Director_Sanal_Kumar_Sasidharan

சனல் குமார் சசிதரன் ஒரு வழக்கறிஞர். மாணவ காலத்தில் அவர் அகில் பாரதிய வித்யார்த்தி பரிஷத்தில் உறுப்பினராக இருந்தார். இது பாரதிய ஜனதா கட்சியின் மாணவ கிளை. பிறகு கருத்து வேறுபாட்டால் பாஜாகாவிலிருந்து வெளியேறி பாஜாகாவை தீவிரமாக விமர்சிக்கத் தொடங்கினார். க்ரௌட் ஃபண்ட் மூலம் மலையாளத்தின் முதல் க்ரௌட் ஃபண்டட் சினிமாவை இயக்கினார்.

*

கடைசிக்கட்ட தேர்தல் பிரச்சாரத்தின் கடைசி நாளன்றைய கடைசி சில மணி நேரங்களில் ஒழிவு தெவசத்தே களி படம் தொடங்குகிறது. அந்தப் பெருங்கூச்சலிலிருந்து விலகி ஐந்து நண்பர்கள் ஓடைப் பக்கம் ஒதுங்குகின்றனர். ஓடையின் ஓரம் அமர்ந்து அவர்கள் பல கதைகள் பேசுகின்றனர். நடக்கவிருக்கும் தேர்தல் பற்றியும் அரசியல் பற்றியும் வேறு சில ஜோக்குகள் அடித்துக்கொண்டும் பொழுதைப் போக்குகிறார்கள். நாளை தேர்தல் தினம். மேலும் குடிப்பதற்கு சரக்கு எங்கும் கிடைக்கவும் செய்யாது. நாளைய ஓய்வு தினத்தை எப்படிக் கொண்டாடுவது கழிப்பது என்றும் பேசிக்கொள்கிறார்கள்.

அவர்கள் காட்டுக்குள் இருக்கும் தனிமையான பழைய பெரிய வீட்டில் எப்படி ஓய்வு தினத்தைக் கழித்தார்கள் என்பது மீதிப் படம். அவர்களுடைய ஆழ்மனதையும் உள்ளுணர்வுகளையும் அது வெளிக் கொண்டுவரும் கொடூர குணங்களையும் இப்படம் காட்டுகிறது. அந்த வீட்டில் அவர்களுக்கு குடி ஒன்றே பிரதானம். சமைப்பதற்கு ஒரு பெண் இருக்கிறார். குடியினூடே அவர்களது விவாதம் எமர்ஜென்சி பற்றியும் துபாய் குடிபெயற்சி பற்றியும் அரசியல், ஜனநாயகம் என்று முடிவில் சாதியை முன்னிலைப்படுத்தி நடக்கவிருக்கும் ஒரு சோக நிகழ்ச்சிக்கு அச்சாரமாக அமைகிறது. ஒரு சின்ன சச்சரவு சண்டையாக முடியும் பொழுது அவர்களுள் இருக்கும் ஒடுக்கப்பட்ட சாதியைச் சேர்ந்தவனே பெரிய விலை கொடுக்க வேண்டியிருக்கிறது.

ஐந்து நண்பர்களுள் தர்மன் பணக்காரன் திமிர்ப்பிடித்தவன். நண்பரளுக்குள்ளே மதிப்பையும் மரியாதையையும் பணத்தாலும் பேச்சுத்திரணாலும் பெருகிறான். ஆனல் திருமேனி ஒரு ஐயர். அவனுக்கு இயல்காகவே மதிப்பும் மரியாதையும் கிடைத்துவிடுகிறது. வினயன் ஜனநாயக நெறிமுறைகளைப் பேசுகிறான், தர்மனின் திமிரை எதிர்த்து சண்டையிடுகிறான். தாசனிடம் பாட்டாளி வர்க்க மனப்பாண்மை இருக்கிறது. அசோகன் பாசாங்குக்காரன்.

மரமேறி பலாப்பலம் பறிப்பதாகட்டும் கறிக்குழம்பிற்காக கோழியை பிடித்து அடிப்பதாகட்டும் இப்படி எந்த எடுபிடி வேலையாகட்டும் அவர்களுள் கருப்பு நிறத்தவனான தாசன் (வேலைக்காரன் என்று பொருள்) என்பவனே முடிவில் செய்ய வேண்டியிருக்கிறது. ஏன் அவர்களுடைய சண்டைகளைக்கும் அவனே சமாதானம் போகவேண்டியிருக்கிறது. எதிர்ப்பார்த்தபடி அவன் ஒருவனே தேர்தல் முடிவுகளை தெரிந்துகொள்ள ஆர்வமாக இருக்கிறான்.

பேச்சினூடே தாசனின் கருப்பு நிறம் கேலிக்குட்படுத்தப்படுகிறது. அவனது நணபர்களே அவனை கருப்பு என்று கேலி செய்து அதை விளையாட்டு என்கின்றனர். அவர்கள் கேலி செய்வது அவனது நிறத்தை அல்ல – அவனது சாதியை. பொறுமையிழந்த தாசன் எழுந்து “நான் பிறக்கும் பொழுது கருப்பு. வளரும் பொழுது நான் கருப்பு. சூரிய வெளிச்சத்தில் நான் விளையாடும் பொழுது நான் கருப்பு. நோய்வாய்ப்படும் பொழுது நான் கருப்பு. சாகும் பொழுது நான் கருப்பு. நீ.. நீ பிறக்கும் பொழுது..” என்கிற பாடலை அவன் பாடுகிறான். அனைவரும் எழுந்து வெளியேறி விடுகின்றனர். பால்கனியில் சென்று நின்றுகொள்கின்றனர். அதாவது அவர்கள் எவ்வளவு பகடி செய்தாலும், தாசன் பொறுமையாக இருக்கவேண்டும். விளையாட்டு என்று எடுத்துக்கொள்ளவேண்டும். அவன் சிறு எதிர்ப்பு காட்டிவிட்டாலும் மற்றவர்களுக்கு அது பிடிப்பதில்லை.

ozhivudivasathe-kali-380

ஒடுக்கப்பட்ட சாதியைச் சேர்ந்த மற்றொருவர் அவர்களுக்கு சமைத்துக்கொடுக்கும் பெண் கீதா – படத்திலிருக்கும் ஒரே பெண். வந்திருந்த விருந்தாளிகள் அனைவருக்கும் – தாசனைத் தவிர – அவள் மீது ஒரு கண் இருக்கிறது. அனைவரும் அவளை அவர்களுடைய வழிகளில் அடைய முயற்சிசெய்கின்றனர். சின்னச் சின்ன சமிஞ்சைகளின் மூலம், மறைமுகமான பேச்சின் மூலம், ஆனால் கட்டாயப்படுத்தாமல் அவளை அவர்களின் ஆசைக்கு இழுக்கப்பார்க்கிறார்கள். அவர்களுள் பெரியவன் போல இருக்கும் ஒருவன், தருமன், அவளைக் கைபிடித்து இழுக்க, அவள் ஓங்கி ஒரு அறை விடுகிறாள். தரையில் அரிவாளால் ஓங்கி வெட்டி ஆண்வர்க்கதினரின் மேலிருக்கும் பெண்களின் கோபத்தைக் காட்டுகிறாள்.

“என்ன அரசியல், அது ஆண்களின் விளையாட்டு” என்று அவள் சொல்லும் பொழுது இந்த நாட்டில் பெண்களின்  உலகமும் பெண்களுடைய மொத்த பிரச்சனைகளும் ஒட்டு மொத்தமாக ஆளும் ஆண் வர்க்கத்தால் நிராகரிக்கப்படுகிறதென்பதை தெளிவாகச் சொல்லுகிறாள். உதாரணம்: தெருத் தெருவுக்கு கோயில் இருக்கும் இந்நாட்டில் பெண்கள் அவசரத்துக்கு சிறுநீர் கழிக்க இடம் வேண்டும் என்பதை ஆளும் ஆண் அதிகாரவர்க்கம் எப்படி புரிந்துகொள்ளும்? இந்நாட்டில் ஆளும் மந்திரிகூட அவசரத்துக்கு காரைவிட்டிறங்கி நின்றவாறு சிறுநீர் கழித்து எளிதாக சென்றுவிடுவார் – அவர் எப்படி பெண்களுடைய பிரச்சனையைப் புரிந்துகொள்ள இயலும்?

இத்தனைக்கும் சமையற்காரி போல தாசன் வெளியாள் இல்லை. மாறாக அவன் அந்த நெடுநாளைய நட்பு வட்டத்தில் ஒரு ஆள். அந்த நட்புவட்டம் அவனை உள்ளுக்குள் ஏற்றுக்கொண்டது போலத் தெரிந்தாலும், அவனை வெளியிலேயும் அவர்களுக்கு கீழேயுமே வைத்திருக்கிறது.

நேரம் ஆக ஆக வெறுமனே நண்பர்களுக்குள்ளேயான தண்ணிப் பார்ட்டி கொஞ்சம் கொஞ்சமாக ஒரு விளையாட்டாக உருமாறுகிறது . அதிகாரமும் வன்மமும் வெறியும் கொண்ட விளையாட்டு. அவர்கள் சிறுவர்களாக இருந்தபொழுது அவர்கள் விளையாடிய விளையாட்டு. சீட்டுப் போட்டு அவர்களுள் யார் அரசனாவது, யார் மந்திரியாவது, யார் போலீஸாவது, யார் திருடனாவது, யார் நீதிபதியாவது என்று அவர்களுக்குள்ளே முடிவு செய்துகொள்கிறார்கள். சீட்டுப் போடுகிறார்களே தவிர அந்த அந்தச் சாதியினார் அந்த விளையாட்டில் தங்களுக்கென்ன பங்கு என்று அவர்களாவே முடிவு செய்கின்றனர். வெள்ளையாக இருப்பவன் அவனாகவே நீதிபதியாகிக் கொள்கிறான். கடைசியில் கருப்பாக இருப்பவனுக்கே திருடன் ரோல் கிடைக்கிறது. அவன் மறுத்துப் பார்க்கிறான் – ஆனால் விளையாட்டு தானே என்று அவனைச் சமாதானப்படுத்துகின்றனர். இந்த விளையாட்டும் விளையாடும் நபர்களும் நமது ஜனநாயகத்தில் பின்னிப்பிணைந்திருக்கும் வர்னாசிரம அடுக்குகளையே பிரதிபலிக்கின்றனர்.

friends

விளையாட்டில் நீதிபதி தவறு செய்யும் பொழுது அவர்களுக்குள் பேசி நீதிபதிக்கு எந்த தண்டனையும் கிடைக்காதவாறு பார்த்துக்கொள்கின்றனர். நீதிபதியை எப்படி தண்டிப்பது? நீதிபதியாக உட்கார்ந்திருக்கும் சாதியைச் சேர்ந்தவரை எப்படி தண்டிப்பது? அவரைத் தண்டிப்பது மகாப்பாவம் ஆகாதோ? அதே போல ராஜா தவறு செய்து பிடிபடும் பொழுது ராஜாவுக்கு அறிவுரை வழங்கப்படுகிறது. இவ்வாறு செய்யலாகாது என்று அனைவரும் எடுத்துச் சொல்கின்றனர். மந்திரி தவறு செய்து பிடிபடும் பொழுது மாறாக அவனுக்கு தண்டனை கிடைக்கிறது. ஆனால் அந்த தண்டனையிலிருந்து வெளிவர சொற்ப அபராதம் மட்டுமே வழங்கப்படுகிறது. போலீஸ் தவறு செய்து பிடிபடும்பொழுது அவனுக்கு மிகச்சிறிய தண்டனையும் பிறகு அதிலிருந்து வெளியேறுவது எப்படி என்பதையும் மந்திரியும் நீதிபதியுமே சொல்கின்றனர். ராஜா கண்டுகொள்வதில்லை. ஆனால் திருடன் – ஒடுக்கப்பட்ட சாதியைச் சேர்ந்தவன் – தவறு செய்து பிடிபடும்பொழுது அவனைக் காப்பாற்ற யாரும் இல்லை. அவனுக்கு இருப்பதிலே கொடுமையான தண்டனை கொடுக்கப்படுகிறது. அதிலிருந்த அவன் மீள வாய்ப்பேயில்லை. அவனை அதிலிருந்து வெளியேற்றிவிட யாரும் முன்வருவதில்லை. இந்த விளையாட்டிலும் அப்படியே. யாரும் அவனைக் காப்பாற்ற முயற்சிக்கவில்லை. முடிவில் அந்தக் கொடூரம் அரங்கேறுகிறது.

இந்தப் படத்தின் கடைசிக் காட்சி பார்ப்பவர்களை நிலைகுலையச் செய்துவிடும். சாதீயம் மீதும் சாதி சார்ந்த சமூக படிநிலைகள் மீதும் அனல்கக்கும் கேள்விகளை அவர்களைக் கேட்கத் தூண்டும். அந்த கடைசிக் காட்சியில் பார்ப்பவர்கள் ஒன்று தண்டனை பெறுபவராகவோ அல்லது தண்டனை கொடுப்பவர்களுல் ஒருவராகவோத்தான் இருக்க முடியும்.

 

எல்லைதாண்டி கைகுலுக்க வேண்டிய தருணம்

indpak

பாக்கிஸ்தான் தனது ஹைக்கமிஷனரை (ஷோஹைல் மொகமத்) திரும்பவும் இந்தியாவுக்கு (ஒரு வாரத்திற்கு முன் பாக்கிஸ்தான் அவரைத் திரும்பப் பெற்றுக்கொண்டது) அனுப்ப முடிவுசெய்திருக்கிறது. அவர் டெல்லியில் நடக்கவிருக்கும் பாக்கிஸ்தான் தேசிய தின விழாவை நடத்துவார். அதே போல இந்தியாவும் அந்த நிகழ்ச்சிக்கு விவசாயம் மற்றும் விவசாயிகள் நல அமைச்சர் கஜேந்திர சிங் செக்காவத்தை அனுப்ப முடிவு செய்திருப்பது இரு நாட்டுக்குள்ளும் துளிர் விடும் நல்லிணக்கத்தைக் காட்டுகிறதா? இந்த மாதம் 19ஆம் தேதிக்குப் பிறகு இரு தரப்பினரும் ஜம்மு காஷ்மீர் எல்லையில் பரஸ்பரம் தோட்டாக்கள் பரிமாறிக்கொள்ளவில்லை என்பதும் வரவேற்கத்தக்க செய்தி. ஆனால் இருதரப்பினரும் தூதுவர்களை கொடுமைப் படுத்த தூண்டிய காரணங்கள் என்ன என்ன என்பதை அறிந்து அதைக் களைய முற்பட வேண்டும். இல்லையேல் இது போன்ற செயல்கள் மீண்டும் நடக்கக்கூடும்.

ஏன் பாக்கிஸ்தான் தூதுவரைத் திரும்பப் பெற்றுக்கொண்டது என்கிற பிரச்சனை எங்கே ஆரம்பித்தது என்பதைப் பார்த்தால்: முதலில் பாக்கிஸ்தானில் புதிதாக கட்டப்படும் இந்தியத் தூதரகத்திற்கு (இப்பொழுது இருக்கும் தூதரகத்திற்கு அருகே) கட்டுமானப் பொருட்கள் வழங்கப்படுவது நிறுத்தப்பட்டன. மேலும் அங்கே வேலை செய்துகொண்டிருந்த ஆட்களும் வெளியேற்றப்பட்டனர். காரணம் கேட்கப்பட்ட பொழுது டெல்லியிலிருக்கும் பாக்கிஸ்தான் ஹைகமிஷனுக்குட்பட்ட இடத்தில் புதிதாக ஒரு கட்டடம் கட்ட பாக்கிஸ்தான் பல முறை கேட்டும் ஞாபகப் படுத்தியும் அனுமதி வழங்கப்படவில்லை என்று சொன்னது பாக்கிஸ்தான். இரண்டாவதாக க்ளப் உறுப்பினர் சர்சை. பாக்கிஸ்தான் தூதுவர்களுக்கு இந்திய க்ளப்கள் மிக மிக அதிகமாக கட்டணம் வசூலிக்கிறது என்று கூறி பாக்கிஸ்தான் இந்திய தூதுவர்களை தனது க்ளப்பிற்குள் அனுமதிக்க மறுத்தது. இந்தியா தனியார் க்ளப்களில் வசூலிக்கப்படும் கட்டணங்களை அரசு கட்டுப்படுத்த முடியாது என்று பதில் சொன்னது. க்ளப் பிரச்சனை கொஞ்சம் தனியார் வசம் இருந்தாலும், கட்டடம் கட்டும் பிரச்சனையை இரு அரசுகளும் பரஸ்பரம் பேச்சுவார்த்தையின் மூலம் சுலபமாக சுமூகமாகத் தீர்த்துக்கொண்டிருக்க முடியும்.

இவ்வாறான பிரச்சனைகள் போர் நிறுத்த ஒப்பந்தகளை சேதப்படுத்தி தோட்டாக்களையும் சமயத்தில் உயிர்களையும் வீணடிக்கும். மேலும் தூதுவர்களை மோசமாக நடத்தவும் இவ்வாறான பிரச்சனைகள வழிவகுக்கும். இது 1961இல் நிறைவேற்றப்பட்ட வியன்னா ஒப்பந்தத்திற்கு எதிரானது.

இரண்டு தரப்பு தூதுவர்களும் கடுமையான கண்காணிப்பிற்கு உள்ளாவது ஒன்றும் புதிதல்ல. 1990இல் காஷ்மீரில் ஊடுருவல்கள் ஆரம்பித்தபொழுது இந்தியாவிற்கும் பாக்கிஸ்தானிற்கும் இடையே போர் மூளக்கூடும் என்கிற சூழ்நிலையில் இரு தரப்பு தூதுவர்களுக்கும் அந்தந்த நாடுகளில் பணியாற்றுவதென்பது மிகவும் கஷ்டமாக இருந்தது. இன்றிருக்கும் நிலையை விட அப்பொழுது இன்னும் மோசம். ஆனால் அப்பொழுதே நவம்பரில் இருதரப்பினரும் தூதுவர்களை பாதுகாக்கும் விதிமுறைகளை வகுத்துக்கொண்டது. அந்த சமையத்தில் லோக்கல் போலிசுக்கு எப்படி தூதுவர்களை நடத்துவது என்று தெரியாத காரணத்தினாலேயே தூதுவர்கள் துன்புறுத்தப்பட்டார்கள் என்று விதிமுறைகள் இந்தியிலும் உருதிலும் மொழிபெயர்க்கப்பட்டு லோக்கல் போலீஸுக்கு அனுப்பப்பட்டது.

இது நம்மை வேறொரு கொஞ்சம் சம்பந்தப்பட்ட டாப்பிக்கான உளவாளிகள் பற்றி பேசவைக்கிறது. எப்படி இரு நாட்டினரும் உளவாளிகளைக் கையாள வேண்டும்? இரு நாட்டினரும் நாங்கள் உளவாளிகள் அனுப்புவதில்லை என்றே சொல்லிவந்திருக்கின்றனர். உளவாளிகள் பிடிபடும் பொழுது இரு அரசும் மௌனம் காத்து எங்களுக்கும் உளவாளிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றே சொல்லும், ஆனால் உளவாளிகள் எல்லையைக் கடந்து அந்தப்பக்கம் சென்றவுடன் தான் உளவு செய்ததாக ஒப்புக்கொள்வர். மிகவும் மோசமான விஷயம் என்னவென்றால் அப்படிப் பிடிபடும் உளவாளிகள் மிகவும் கொடூரமான துன்புறுத்தல்களுக்கு ஆளாகின்றனர்.

நாம் ஒரு விஷயத்தை ஒத்துக்கொள்ளவேண்டும்: நமது நாடுகள் உளவு பார்க்கும். பார்க்கத்தான் வேண்டும். இல்லையேல் எப்படி நாட்டை பாதுகாப்பது. நாடாள்வதில் மிக முக்கியமான அங்கம் உளவு. உளவு செய்யவில்லை என்று ஒரு அரசாங்கம் சொல்வது நகைத்தலுக்குறியது. அப்படி உளவாளிகள் பிடிபடும் பொழுது அவர்கள் நாட்டை விட்டு வெளியேற்றப்பட வேண்டுமேயன்றி துன்புறுத்தலுக்கு ஆளாக்கக் கூடாது. சமீபத்தில் 2010இல் அமெரிக்காவும் ரஷ்யாவும் வியன்னாவில் உளவாளிகளை பரிமாற்றம் செய்து கொண்டது.

இருதரப்பினருக்கும் இடையேயான தொடர்பு மிகவும் மோசமான நிலையில் இருக்கும் இந்த சூழ்நிலையில் துளிர்விடும் நல்லிணக்க முயற்சியை இரு தரப்பினரும் உறுதியாக பிடித்துக்கொள்ள வேண்டும்.

(தி ஹிந்துவில் வெளிவந்த ஒரு கட்டுரையின் தேர்ந்தெடுக்கப்பட்ட பகுதிகளின் தமிழாக்கம். ஆங்கிலத்தில் எழுதியவர்: ஹேப்பிமோன் ஜேகோப்)

பாருக்குப்போன குதிரை

புத்தக விமர்சனம் :

A horse walks in to a bar- ஒரு ஸ்டேண்டப் காமெடியனின் வலி.

இந்த ஜோக்கை கேள்விப்பட்டிருப்பீர்கள் என்று நினைக்கிறேன். இல்லையென்றால் இதோ:

ஒரு குதிரை பாருக்குப் போனது. என்னடா குதிரை பாருக்கு வந்திருக்கிறதே என்று அனைவரும் ஆச்சரியப்பட்டனர். சிலர் கேலி பேசினர். ஆனால் குதிரை யாரையும் கண்டுகொள்ளவில்லை. கருமமே கண்ணாக நேரே பார்மேனிடம் (ஊத்திக்கொடுப்பவர்) சென்றது. பார்மேன் என்ன வேண்டும் என்பது போல பார்த்தான். ஒரு டக்கீலா என்றது குதிரை. பேசிய குதிரையைக் கண்டு அதிர்ந்த பார்மேன், அதிர்ச்சியைக் காட்டிக்கொள்ளாமல் ஒரு டக்கீலா கொடுத்தான். மடக்கென்று குடித்த குதிரை கொஞ்ச நேரம் உட்கார்ந்திருந்தது. பிறகு என்ன விலை என்று கேட்டது. ஓ காசு வேற வெச்சிருக்கா என்று மேலும் அதிர்ந்த பார்மேன் 2000 ரூபாய் என்று சொன்னான். ஒன்றும் பேசாமல் அவன் கையில் புதிய 2000 ரூபாய் நோட்டை திணித்துவிட்டு நடையைக் கட்டியது குதிரை. பார்மேனுக்கு சந்தோஷம் தாங்கவில்லை – பேசும் குதிரை அதுவும் கேட்ட காசைக் கொடுக்கும் குதிரை. பார்மேன் ஓடிப்போய் வெளியே போய்க்கொண்டிருந்த குதிரையை மடக்கிக் கேட்டான்: ஆச்சரியமாக இருக்கிறது. பேசும் குதிரையை இதுவரை நான் பார்த்ததில்லை என்றான். ஹ்ம்ம் உங்க டகீலா விலை அதிகம். இனிமே பாக்கமாட்டீங்க என்று சொல்லிவிட்டு குதிரை வெளியேறியது.

*

பாருக்குப் போன குதிரை (A horse walks in to a bar) நாவலை எழுதியவர் டேவிட் க்ராஸ்மேன் என்கிற இஸ்ரேலிய எழுத்தாளர். ஹீப்ரூ மொழியில் எழுதப்பட்ட இந்த நாவல் ஆங்கிலத்தில் ஜெசிக்கா கொஹென்னால் மொழிபெயர்க்கப்பட்டு 2017ஆம் ஆண்டு மேன் புக்கர் பரிசு வாங்கியது. 194 பக்கங்களே கொண்ட சிறிய நாவல். இரண்டு மூன்று நாட்களில் படித்து முடித்து விடலாம் – ஆனால் இந்த புத்தகத்தின் தாக்கம் சிறிது நாட்களுக்கு நம்முடன் இருக்கும்.

*

இஸ்ரேலின் நெட்டன்யா நகரில் ஒரு காமெடிக் க்ளபின் மேடையில் ஒரு சாயங்காலம் டோவேலோ ஜி என்கிற கமெடியன், காமெடியன்களின் வழக்கமான பாணியில் ஸ்டேண்டப் ஷோ செய்ய ஆரம்பிக்கிறார். டோவேலோ ஜி ஒரு ஐம்பது வயதான ஜி. சில நாட்களுக்கு முன் அவருடைய பழைய நண்பரான அவிஷாயை (சமீபத்தில் மனைவியை இழந்த ஒரு ரிடையர்ட் ஜட்ஜ்) தொலைபேசியில் அழைத்து தன்னுடைய ஷோவுக்கு வரும்மாரு அழைக்கிறார். இருவருக்குமான நட்பு நாற்பது வருடங்களுக்கு முந்தியது – கடைசியாக ஒரு சம்மர் கேம்பில் பார்த்தது. அவிஷாய்க்கு முதலில் டோவேலோ ஜி யார் என்பதே ஞாபகம் இல்லை.

அன்றைக்கு ஸ்டேஜில் எப்பொழுதும் போலவே ஜோக்குகளுடன் ஆர்ம்பிக்கிறார். சில மொக்கை ஜோக்குகள், செக்ஸ் ஜொக்குகள், ஊரைப்பற்றி, இஸ்ரேலைப்பற்றி, பார்க்க வந்திருப்பவர்களைப் பற்றி கேலி பேசி ஜோக்குகள் என்று ஆரம்பிக்கிறது ஷோ. அவிஷாய் உங்களுக்கு எல்லாமே காமெடிதான். உங்கள் அம்மா கூட உங்களுக்கு காமெடி தான் என்பார். ஆனால் போகக் போக டோவேலா தனது சிறுவயதில் நடந்த ஒரு அதிர்ச்சியான துயரச் சம்பவத்தை விவரிக்கும் பொழுது பார்வையாளர்கள் இன்னும் அந்தத் துயரச் சம்பவத்திலிருந்து மீளாத உள்ளுக்குள் உடைந்து கொண்டிருக்கிற ஒரு மனிதனைக் காண்கின்றனர்.

க்ராஸ்மேன் ஒரு ஜியானிஸ்ட் (யூதர்களுடைய பூர்வீக நிலத்தை மீட்டு அவர்களை அங்கே குடியேற்றவேண்டும் என்கிற கொள்கை) ஆனால் மிதவாதி.மேலும் யூதர்களுக்கும் பாலஸ்தீனியர்களுக்குமிடையே அமைதியாக சுமூகமாகவே நல்லிணக்கம் வேண்டும் என்று விரும்புபவர். அப்படியானல் இந்த டோவேலோ ஜி அடிபட்ட ஒரு தேசத்தின் குறியீடா? இல்லை வெளி உலகத்துக்கு கொடுமைக்காரனாகவும் சுயநலவாதியாகவும் தன்னைக் காட்டிக்கொண்டு உள்ளுக்குள் 1973ஆம் வருடம் நடந்த ஒரு சம்பவத்தால் வஞ்சிக்கப்பட்ட பாதிக்கப்பட்ட அந்த பாதிப்பிலிருந்து இன்னும் மீளாத ஒரு குழந்தையாகவே இருக்கும் ஒரு மனிதனின் கதையா?

அன்றைய மாலையின் முழு ஷோவும் – ஒவ்வொரு ஜோக்கும், டோவேலாவின் ஒவ்வொரு கையசைவும், பார்வையாளர்களின் ஒவ்வொரு எதிர்ப்பும், சிரிப்பும், ஆர்ப்பரிப்பும் தெளிவாக எழுத்தாளர் க்ராஸ்மேனால் – அல்லது அவிஷாயால் – விவரிக்கப்படுகிறது. க்ராஸ்மேனின் தெளிவான ஆனால் பிடித்திழுக்கும் நடை நம்மை அந்த ஷோ நடக்கும் அந்த க்ளப்பின் பாதாள அறைக்கே இழுத்துச் செல்கிறது.

முதலில் கொஞ்சம் ஆசுவாசமாக ஆரம்பித்தாலும், போகக் போக ஒரு கழுகு எப்படி தன் இரையை நோக்கி பாயுமோ, அதே அளவு வீரியத்துடன் டோவேலா பார்வையாளர்களை தன் வாழ்க்கையையே மாற்றிய அந்த தருணத்திற்கு அழைத்துச் செல்கிறார்.

எப்படிச் செய்தார்? எனக்குப் புரியவில்லை. எப்படி இவ்வளவு குறுகிய நேரத்தில், பார்வையாளர்களை -என்னையும் சேர்த்து – அவரது ஆன்மாவின் குடும்ப உறுப்பினராக ஆக்கினார்? எப்படி எங்களையெல்லாம் பினைக்கைதிகளாக ஆக்கினார்?

என்று இந்தக் கதையை சொல்லும் பார்வையாளர்களுள் ஒருவரான அவிஷாய் கேட்கிறார்.

பார்வையாளர்களில் மேலும் ஒருவர் டோவேலோவைத் தெரிந்தவராக இருக்கிறார். அவரது வீட்டுக்குப் பக்கத்திலே இருந்தவர் – ஒரு சிறிய குட்டையான பெண்.

எனக்கு உன்னைத் தெரியும். நீ தானே கைகளால் தலைகீழாக நடப்பவன்?

என்று தனது முதல் அறிமுகத்திலே எல்லோர் முன்னிலையிலும் சொல்லுகிறார். டோவேலோ கைகளால் தலைகீழாக நடப்பதை வழக்கமாக வைத்திருப்பவர். அப்பாவிடம் கடுமையான பெல்ட் அடி வாங்கினாலும் கைகளால் நடக்கும் பழக்கத்தை கைவிட இயலாதவர். தலைகீழாக நடக்கும் பொழுது ரத்தம் தலைக்கு ஏறி காதுகளை அடைத்துக்கொண்டு உலகத்தின் சத்தங்களையெல்லாம் வடிகட்டி அமைதியை கொடுக்கிறது என்கிறார்.

டோவேலோவின் கடுமையான கேலிப்பேச்சுகளைப் பார்த்து” நீ அப்பெல்லாம் இப்படி இல்லை நீ ரொம்ப நல்லவன்” என்கிறார் அந்தப் பெண்.

க்ராஸமேனின் டோவேலாவின் கதாப்பாத்திரத்துக்கும் டோவேலாவின் நாடான இஸ்ரேலுக்கும் நிறைய தொடர்பிருக்கிறது. டோவேலாவின் துயரம் என்னவென்றால்: அவர் தன் இயல்பிலிருந்து மாறி, ஏன் தன்னையே வஞ்சித்துக்கொண்டு, தன் சுயத்தை இழந்தவர். ஒரு காலத்தில் உற்சாகமான – அந்தப் பெண்ணைப் பொருத்தவரை நல்ல – சிறுவனாக இருந்த டோலேவா அவமானத்திற்கும் குற்ற உணர்ச்சிக்கும் ஆளாகி கொடுமைக்காரனாகவும், அடுத்தவர்களிடம் குறைகளை மட்டுமே காணுபவனாகவும் காலப்போக்கில் மாறிப்போனான். அவனுடைய வாழாத வேறுவிதமான தனக்கு உண்மையான வாழ்க்கையின் ஒரு மிகச் சிறிய பகுதியைத்தான் எஞ்சியிருந்த பார்வையாளர்கள் அன்றைய மாலையில் பார்த்தனர்.

க்ராஸ்மேன் ஒரு பேட்டியில் சொன்னார்: இதை ஒரு இணையாக எடுத்துக்கொண்டு நான் நினைத்ததுண்டு, இஸ்ரேலியர்களாக நாம் வேறு ஒரு வாழ்க்கை வாழ்ந்திருக்கவேண்டும். 1967ஆம் ஆண்டு நடந்த போர் தான் திருப்புமுனை. 1967இல் தான் இஸ்ரேல் தான் அதுவரை பிடித்துவைத்திருந்த பகுதிகளை தனது அண்டை நாடுகளான எகிப்து, ஜோர்டான், சிரியா போரிட்டு தக்கவைத்துக்கொண்டது. ஜோர்டானிடமிருந்து மேற்கு கரையையும், எகிப்திடமிருந்து சினாய் மற்றும் காசாவையும், சிரியாவிடமிருந்து கோலன் ஹைட்சையும் போரிட்டு வென்று அந்தப் பகுதியின் அசைக்கமுடியாத ராணுவமாக உருமாறியது இஸ்ரேல். க்ராஸ்மேனைப் பொருத்தவரை இது ஒரு வரலாற்றுப் பிழை. புவியியல் பிழையும் கூட. அந்தப்பிழை திருத்தப்பட்டால் அல்லது திருத்தப்படும் பொழுது நாம் நம்முடைய அண்டை நாட்டவருடன் சுமூகமாக சண்டையின்றி வாழலாம். நம் வாழ்க்கை இவ்வளவு இருட்டாக நித்தமும் பயமாக இருந்திருக்காது என்று கூறுகிறார்.

மேலும்,

1967க்கு முன்பிருந்த இஸ்ரேலைக் கொண்டாடவில்லை, 1948இல் நடந்ததைப் போன்ற கொடுமைகள் நடந்திருக்கின்றன தான். ஆனால் 1967க்கு முன்பு வரை அடுத்த 50 ஆண்டுகளுக்கு நமது அண்டை நாடுகளுடன் போரிட்டுக்கொண்டிருக்காமல் ஓரளவுக்கு இனக்கமான சூழ்நிலையில் வாழ்வதற்கான வாய்ப்பிருந்தது. வாளால் வாழ்ந்து, வாளால் மடிவது. இன்றைக்கிருக்கும் இஸ்ரேலியர்களுக்கு வேறு வழியில்லை இது தான் ஒரே வழி, இப்படித்தான் வாழ்ந்திருக்க முடியும் என்கிற மனப்போக்கிருக்கிறது. 1967க்கு முன் பெரும்பாலான இஸ்ரேலியர்கள் இந்த மன்நிலையில் இல்லை என்று நினைக்கிறேன்.

இவ்வாறான கருத்துகளால் க்ராஸ்மேன் ஒரு தேசதுரோகி என்று சிலர் கருதுகின்றனர். நம்ம ஊர்காரர்கள் ஆண்டி-இண்டியன்ஸ், பாக்கிஸ்தானுக்குப்போ என்று சொல்வது போல. 2016இல் இஸ்ரேலிய கலாச்சார மந்திரி பழைய ப்ரிகேடியர் ஜெனரல் மிரி ரெகவ், இடதுசாரி எழுத்தாளர்கள் என்று சிலரைப் பட்டியலிட்டு அவர்களுக்கு அரசு ஊக்கத்தொகை இல்லை என்று அறிவித்தார். க்ராஸ்மேனும் அந்தப் பட்டியலில் இருந்தார். உங்களுக்கு பயமாக இருக்கிறதா என்று கேட்டதற்கு க்ராஸ்மேன் இல்லை பெருமைப் படுகிறேன் என்றார்.

பார்வையாளர்கள், மேடையில் இருப்பவனின் கதையைத் தெரிந்துகொள்ள விரும்புவதில்லை. அந்தக் காமெடியன் சொல்லும் ஜோக்குகள் மட்டுமே அவர்களுக்குத் தேவை. காமெடியனின் வலி அவர்களை அசைப்பதில்லை.

டோவேலா தனது கதையைச் சொல்லிக்கொண்டிருக்கும் பொழுது சிலர் போதும் நிறுத்து, ஜோக் சொல்லு என்று கதறுகிறார்கள். சிலர் கிளம்பி விடுகிறார்கள். டோவேலா ஒரு சில ஜோக் அவ்வப்போது சொல்லத்தான் செய்கிறார்.

உதாரணத்துக்கு:

ஒருத்தர் ஒரு கிளி வளர்க்கிறார். அந்தக்கிளி அவரைக் கண்டபடி திட்டுகிறது. கெட்ட கெட்ட வார்த்தையாலேயே திட்டுகிறது. காது கூசும் அளவுக்கு கழுவி கழுவி ஊற்றுகிறது. யார் இருக்கிறார்கள் இல்லை என்று பார்ப்பதில்லை. வளர்ப்பவர் சொல்லிப் பார்த்தார். கெஞ்சிப்பார்த்தார். எல்லார் முன்னிலையில் திட்டு வாங்கும் பொழுது என்னைத் திட்டவில்லை, என் அட்மினைத்தான் திட்டுகிறது என்று சொல்லி சமாளித்தார். யாரும் நம்பவில்லை என்பது வேறு விசயம். பொறுக்கமுடியாமல் உனக்கு சாப்பாடே கிடையாது என்று பட்டினியும் போட்டுப் பார்த்தார். கிளி அடங்கவில்லை. ஒரு கட்டத்தில் கடுப்பாகி கிளியை ஃப்ரிட்ஜின் ஃப்ரீசரில் வைத்து அடைத்துவிட்டார். கொஞ்ச நேரம் கழித்து கிளியை வெளியே எடுத்தார். கிளி மிகவும் பவ்யமாய் ஐயா என்னை மன்னித்து விடுங்கள். தவறிழைத்து விட்டேன். இனி ஒருபோதும் இது போல செய்யமாட்டேன். உங்களிடம் மரியாதையாகவே உரையாடுவேன். ஆனால் இதற்கு மட்டும் பதில் சொல்லுங்கள்: உள்ளேயிருக்கும் கோழி என்ன தவறிழைத்தது என்று சொன்னது.

மேலும் ஒரு ஜோக், கொஞ்சம் அசைவம்:

நடுக்கடலில் ஒரு சிறிய கப்பல் ஒன்று கவிழ்ந்து விடுகிறது. அதிலிருந்து ஒரு மனிதன் தப்பித்து நீந்தி கஷ்டப்பட்டுக் கரையேறுகிறான். கரையில் அதுபோலவே ஒரு நாயும் ஒரு ஆடும் தப்பித்து கரையேறியிருந்தன. அது ஒரு தீவு. ஒரு மனிதன். ஒரு நாய். ஒரு ஆடு. அவ்வளவே. நாட்கள் ஓடின.வாரங்கள் ஆயின. மாதங்கள் ஆயின. மனிதன் செக்ஸுக்கு காய்ந்துபோய் விட்டான். என்ன செய்வது. யாருடன் செய்வது. ஆடு ஒன்றுதான் வழி என்று முடிவுசெய்து ஆட்டை நெருங்கினான். ரெடியாகும் பொழுது ஒரு உறுமல் சத்தம் கேட்டு திடுக்கிட்டுத் திரும்பிப் பார்த்தான். நாய் பற்களைக் கடித்துக்கொண்டு உறுமிக்கொண்டிருந்தது. மனிதன் இது என்னடா வம்பாப் போச்சு என்று வாலைச் சுருட்டிக் கொண்டு போய்விட்டான். பிறகு நாய் தூங்கும் வரை பொறுமையாகக் காத்திருந்து தூங்கியபின் மெதுவாக தவழ்ந்து தவழ்ந்து ஆட்டின் அருகில் சென்று ரெடியானான். மறுபடியும் உறுமல் சத்தம். வெறுத்துப் போன மனிதன் அடப்போங்கப்பா என்று போய்விட்டான். வாரம் மாதம் ஓடியது நாய் ஒரு நாளும் மனிதனை ஆட்டிடம் நெருங்கவிடவில்லை. வேறெந்தக் கப்பலும் வரவும் இல்லை. வெறுப்பின் உச்சத்தில் இருந்த மனிதன் மற்றுமொரு கப்பல் தூரத்தில் கவிழ்வதைக் கண்டான். அதிலிருந்து ஒரு பெண் கடலுக்குள் குதிப்பதைக் கண்டான். குஷியான மனிதன் நீந்திச் சென்று அந்தப் பெண்ணைக் காப்பாற்றி கரை சேர்த்தான். அந்தப் பெண் மிக அழகாக இருந்தாள். சற்று நேரம் கழித்து கண் முழித்த அந்தப்பெண் ஆகா என் ரட்சகரே. என்னைக் காப்பாற்றிக் கரை சேர்த்தவரே என்னையே உங்களுக்குத் தருகிறேன். எடுத்துக் கொள்ளுங்கள். எமை ஆளுங்கள் என்றாள். அதற்கு அந்த மனிதன் எனக்கு ஒரே ஒரு உதவி செய்யுங்கள். அந்த நாயை மட்டும் கொஞ்ச நேரம் பிடித்துக் கொள்ளுங்கள் என்றான்.

டோவேலோ தன் கதைக்கு நடுவே சில ஜோக்குகள் இது போலச் சொன்னாலும் அவனது கதையிலே அவன் கவனமாக இருக்கிறான். பார்வையாளர்கள் அவனுடைய ஜோக்கிலே கவனமாக இருக்கிறார்கள்.காமெடியனின் வலி அவர்களை அசைப்பதில்லை. இதேபோன்றதொரு மனநிலையைத் தான் நாம் (இஸ்ரேலியர்கள்) அகதிகளிடம் காட்டுகிறோம் என்கிறார் க்ராஸ்மேன். நாம் அகதிகளின் கேட்பாரற்ற நிலையைப் பார்க்கிறோம். அவர்களை ஒரு அழுக்கு போல கருதுகிறோம். அவர்களுக்கு நம்மை போல துணிமணிகளை அணிவித்து, அவர்களை நம்மை போன்றதொரு அப்பார்ட்மெண்ட்டில் வைத்து, அவர்களுக்கு நம்மைப் போன்றதொரு நல்ல வாழ்க்கையைக் கொடுத்து ஒரு முப்பது விநாடி கற்பனை கூட நாம் செய்ய விரும்புவதில்லை. அகதிகள் பிரச்சனையைத் தீர்க்க, அவர்களை அவர்களுடைய வாழ்க்கையில், ஒரு புதிய இடத்தில், இணைத்துவிட அவர்கள் மீதான நம்முடைய பார்வையை நாம் மாற்றவேண்டும். அவர்கள் இழந்த மதிப்பையும் பெருமையையும் அவர்கள் மீட்டெடுக்க அதுதான் ஒரே வழி என்கிறார் க்ராஸ்மேன்.

எந்த அளவுக்கு இந்த நாவல் – முக்கியமாக டோவேலாவின் கதாப்பாத்திரம் – இஸ்ரேலின் குறியீடு என்று தெரியவில்லை.

இந்த நாவலின் முக்கிய கதாப்பாத்திரம் டோவேலாவா, ஓய்வுபெற்ற நீதிபதி அவிஷாயா அல்லது வாசகர்களாகிய நாமா?

இறுதியில் டோவேலா தன் கதையைச் சொல்லி முடிக்கும் பொழுது எஞ்சியிருப்பது நான்கே பேர் தான். அதில் இருவர் டோவேலாவை முன்பே அறிந்தவர்கள். இதை வைத்து க்ராஸ்மேனிடம் : உங்களுக்கான வாசகர்கள் உங்களுடைய கருத்துக்களால் இது போல குறைந்து வருகிறார்களா என்று கேட்டார்கள்.

அதற்கு அவர் நான் எனது கலைக்கு உண்மையாக இருக்கிறேன் என்றார்

ஆப்பிலின் புதிய ஐபேட்

ஆப்பில் இன்று மற்றுமொரு புதிய ஐபேட் ரிலீஸ் செய்திருக்கிறது. போனவாரத்திலிருந்தே கிசுகிசுக்கள் வர ஆரம்பித்துவிட்டன. ஆப்பில் அமெரிக்க மாணவர்களை டார்கெட் செய்து ஐபேடின் விலையை குறைக்கப்போகிறது என்ற செய்தி பல வலைத்தளங்களில் வைரலாகப் பரவி வந்தது.

விலை குறைந்ததா? பார்ப்போம்.

  1. ஐபேடின் சைஸ் 9.7 இன்ச்
  2. மாணவர்களையும் ஆசிரியர்களையும் டார்கெட் செய்வதால் ஆப்பில் பென்சில் இதில் பயன்படுத்தலாம்.
  3. இதன் விலை தோராயமாக பள்ளிகளுக்கு 19400₹ க்கும் பொதுமக்களுக்கு 21300₹ க்கும் கிடைக்கும்.

வேறு என்னென்ன இருக்கிறது:

  • 10 மணி நேரம் பேட்டரி சார்ஜ்
  • 8 mp கேமரா
  • LTE ஆப்ஷன்
  • A10 சிப்
  • ஜி பி எஸ்
  • காம்பஸ்
  • HD ஃபேஸ் டைம் கேமரா
  • ரேகை ஐடி

ஆப்பில் அதன் இலவச ஐக்லௌட் சேமிப்பை 5 ஜிபிலிருந்து 200 ஜிபியாக கூட்டியிருக்கிறது, ஆனால் இது ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் மட்டும் தான்.

ஆப்பிள் பென்சில் ஐபேடுடன் இலவசமாக வராது, தனியாகத் தான் வாங்கவேண்டும்.மேலும் எந்த தட்டச்சுப்பலகையையும் ப்ளூடூத்தின் வழியே இணைத்து பயன்படுத்தலாம்.

கவனம்: ஆப்பிள் இன்னொரு 9.7 இன்ச் ஐபேடும் விற்கிறது ஆனால் இதில் ஆப்பிள் பென்சில் உபயோகிக்க முடியாது.

இந்த புதிய ஐபேடை செவ்வாய்க்கிழமையிலிருந்து (நேற்று) ஆர்டர் செய்யலாம்.

Enjoy Apple Fans.

போய் வாருங்கள் Stephen Hawking

Obituary:
Stephen Hawking அறிவியலின் மிகச்சிறந்த தூதுவர்

Stephen Hawking இறப்பினால் அறிவியல் உலகம் ஒரு விஞ்ஞானியை மட்டும் இழக்கவில்லை, அது பொதுமக்களுக்கான தனது மிகச் சிறந்த தூதுவரை இழந்து விட்டது.

அவருடைய அறிவும், கவர்ச்சியும் – ஏன் அவரது ஊனமும் கூட – அவரை இவ்வுலகத்தின் சமகாலத்தின் புகழ்பெற்ற விஞ்ஞானியாக்கியது. அவரும் அவருக்குக் கிடைத்த இடத்தை மிகச் சரியாகப் பயன்படுத்திக் கொண்டார்.

அறிவியலின் தேவையையும் அன்றாட வாழ்வில் அறிவியலுக்கு இருக்கும் முக்கியமான பங்கையும் பொதுமக்களிடம் கொண்டு சென்றார். அதை விட அறிவியலுக்கு அரணாக இருந்தார் என்பதே மிகச் சரி.

எளிதில் புரிந்து கொள்ள இயலாத அண்டவியலைச் சாதாரணப் பொதுமக்களுக்குப் புரியும் படியும், அதைப் பற்றி மேலும் தெரிந்து கொள்வதற்கு ஆர்வத்தை தூண்டும் விதமாக ஏழுதியதே அவரது சிறப்பு. உதாரணத்திற்கு 1988இல் அவர் எழுதிய A Brief History Of Time.

ஓரளவிற்கு ஆர்வமிருந்தால் போதும் ஒரே மூச்சில் இந்தப் புத்தகத்தைப் படித்து விடலாம். படித்து முடிக்கும் பொழுது நீங்கள் விஞ்ஞானியாகியிருக்க மாட்டீர்கள்தான், ஆனால் விஞ்ஞானியாவதற்கு மிக முக்கியத் தேவையான அந்த பேரார்வம் உங்களிடம் வந்திருக்கும். அவருடைய இந்தப் புத்தகத்தை இளவயதில் படித்து அகத்தூண்டுதல் அடைந்து வானியற்பியல் படித்து முழுநேர விஞ்ஞானியானவர்கள் பலர். நானும் நினைத்திருக்கிறேன்: இந்தப் புத்தகத்தை என் பதின் பருவத்தில் படித்திருக்க வேண்டும் என்று. Better late than never தான் இல்லையா? 😉

எயின்ஸ்டினைப் போல் அவர் ஒரு ஜீனியஸ் இல்லை என்று சிலர் சொல்லுவார்கள். Leonard Susskind எழுதிய Blackhole War என்கிற புத்தகம் Hawkins உடன் நடந்த அறிவியல் வாக்குவாதம் பற்றியதே.

Hawking கருந்துளையில் எந்த ஒரு விஷயமும் கரைந்து போகும் என்று சொன்னார். Susskind இது அறிவியலின் அடிப்படையே மாற்றிவிடும் என்றார். எந்த ஒரு விஷயமும் மற்றொரு விஷயமாக மாற்றம் பேருமே தவிர என்றைக்கும் கரைந்து காணாமல் போகாது என்றார். இறுதியில் Susskind வென்றார். இப்போதைக்கு. அறிவியலில் எதுவுமே நிரந்தரம் இல்லை. இப்போதைக்கு இவ்வளவு தான் தெரியும். இன்னும் பத்து வருடங்களில் ஹாக்க்கின்சின் புத்தகத்தை படித்து யாராவது இன்ஸ்பையர் ஆகி விஞ்ஞானியாக வளர்ந்து கரிந்துளையை ஆராய்ச்சி செய்து Hawking தான் சரி என்று சொல்லலாம்.

அண்டத்தின் மீது தீராத காதல் கொண்ட Hawking ஒரு முறை ஜீரோ புவி ஈர்ப்பு விசையில் பயணம் செய்தார். அண்டத்தில் மனித இனம் பயணம் செய்து வேறு கிரகங்களை கண்டுபிடிக்கவில்லை என்றால் மனித இனம் அழிவது உறுதி என்றார் அவர். அவருடைய நாடி நரம்பு இரத்தம் புத்தி அனைத்தும் அண்டமே நிரம்பியிருந்தது.

அவர் ஜீனியஸ் இல்லை என்பதில் எனக்கு உடன்பாடில்லை. ஜீனியஸ் என்ற ஒரு விஷயம் இருக்கிறதா என்று எனக்கு தெரியாது. ஆனால் அவர்கள் சொல்வதில் கொஞ்சம் உண்மை இருக்கத்தான் செய்கிறது. அவர் மிகச் சிறந்த விஞ்ஞானி இல்லை. ஆனால் இப்படிஸ் சொல்பவர்கள் ஒரு விஷயத்தை வசதியாக மறந்து விடுவார்கள் – அது Hawking அறிவியலுக்கு செய்த மகத்தான தொண்டு – அறிவியலை மக்களுக்கு கொண்டு சென்றது. இதுவே அவரது மகத்தான பணி. விலை மதிப்பில்லாத ஒன்று. வெகுசிலரே இதை செய்திருக்கிறார்கள்.

பல நூற்றாண்டுகள் பின் நோக்கி போய்க்கொண்டிருக்கும் இந்த உலகத்துக்கு இவரைப்போல இன்னும் நிறைய அறிவியல் தூதுவர்கள் தேவை. ஆனால் இவரது இடத்தை இன்று நிரப்புவதற்கு யாரும் இல்லை என்பதே உண்மை.

போய் வாருங்கள் Stephen Hawking. We’ll miss you.

Asura: The tale of Vanquished

Anand Neelakantan’s Asura is an important book. I think, it is a must read for those who know Ramayana or at least who had heared about Rama or Ravana. I guess in this era, you understand very well about History. You had already learnt to read between the lines of a news snippet. You had already started to think why a person says this or that and what he gets if I buy his argument, or what I would loose . If not, better start to think, for your and others well being.

History is nothing but perspective. Perspective of the winners. Perspective of those who happened to win. One small mistake, one change of a tide, one split second of escape from the – carefully prepared – poison coated arrow, one betrayal, one deception, one stupid decision can make one the victorious and the other a stupid sucker. If the victorious is a cunning fox or a gang of merciless ruthless killers the loser will be just wiped from the history. And that’s it mostly. But if the winner is terribly scared of the loser and his clan, he has to make sure that the clan never reclaims their lost glory. Never even try. Not even think of it.

And how would one do it? Rewrite the history, make him – and his clan – a villain, tell the story to every rustic corner, to the last man or woman or child who is living, to every child who will born in future, after 1000 years. Like entreprenuers pay the journalists, bloggers or who ever for paid stories, you pay any poet to write this story in every possible language in the country. Persuade every king, small or big, to accept the story, to ask his poets to write it down and to vow to take that to every beggar in the street. Make the story in to a literature. After that, again and again, persistently, say this is the best ever literature. Say that the poet is the best of the best. Say that the poet is so good that even his dog can write poem. A story will become a literature. The literature will turn in to a legend. People will jump head first in to the legend. Now the legend is set for thousand years to come.

How is it possible for us to think Prahalada as a good chap when he killed his own father? That’s when perspective comes to picture. One side of a coin. You are seeing through the eyes of the winner. You don’t even think that there is another perspective. You forget the other side of the coin.Now think from the perspective of Hiranyakasipu, his father, the poor lad who was poisoned by his own son. Or think from the perspective of his country people. Prahalada becomes a traitor. He collaborated with King’s enemy Vishnu, and poisoned the king. How did Prahalada moved from the status of a traitor to deity? Simple – because he was on the winners side. If you look carefully, history is full of traitors. Betrayals are everywhere. Sugreeva, Vibhisana to name a few.

Why Ravana cannot touch Sita? Here comes the answer to test your rationality. She has a ring of fire. But but how? (Mind Voice: Are yaar it is just a story). Think from Ravana’s perspective. He abducts Sita and he can’t touch her? He takes her to his kingdom, keep her house arrest, when he continue to live with his only wife and son. His people and his army fought and stood with him till the very end, despite their old king’s stupid lust? How is it possible? What could be the reason? Because Sita is Ravana’s daughter. (I had heared about this story when I was a kid).

One of my friend, when I narrated Asura to him, kept asking me: how did the author (Anand) know all these things? How can you believe him? Where is the evidence? Wow. Now my friend starts to be rational – which is not usual for him. I welcome his change. I appreciate. But he should ask the same question with more rationality to the author of the current known version of Ramayana – Valmiki. (Atually there is a version – or many versions- before Valmiki’s Ramayana) How does Valmiki know what he wrote? How and why would my friend accept – and believe – the version of Valmiki with out any question but would question Anand’s Asura version? How did he develop selective rationality? It could be because he had been ferociously taught about Ramayana. He had been prepared for this with out his consent from the moment he came to this world. So, naturally deep in his mind he believes Valmiki’s version, as he would believe sun rises in the east. Its natural. Its fact. He honestly believes it is true. But did he had any other choice? Did we ever let Ravana tell his story? We had already taken side, and sharply biased against the poor chap – and indirectly against his beloved clan.

But we need not to be on the winner’s side. Or for that matter on the loser’s side. We don’t have to accept the view of others. We just need to be aware of the fact that there is indeed another side for a coin.

Perhaps there are more sides.