IPL விசில் போடு – 7: The name is Dhoni

Yet another high scoring game! Yet another last over drama! சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தன் வெற்றிக் கொடியை பெங்களூரிவிலும் நாட்டியது.

எப்படி மும்பை இந்தியன்சுக்கு எதிரான போட்டியில் ஒரு பெரிய எதிர்பார்ப்பு இருக்குமோ, அவ்வாறே ராயல் சாலஞ்சர்ஸ் அணிக்கெதிரான போட்டிகளிலும் ஒரு பெரிய எதிர்பார்ப்பு இருக்கவே செய்யும். சார், ராயல் சாலஞ்சர்ஸ் அணிக்கும் பெங்களூருவுக்கும் என்ன சம்மந்தம்? யாராவது ஒரு கர்னாடகா ரஞ்சிக் கோப்பை வீரரை காட்டுங்கள் என்று நீங்கள் கேட்கலாம் – indeed you are right. கிட்டத்தட்ட எல்லா அணிகளும் இப்படித்தான். பெயரளவில் மட்டுமே தங்கள் ஊர்களை தாங்கி வருகின்றது. Welcome to IPL. அப்படியென்றால் சென்னை – ராயல் சாலஞ்சர்ஸ் போட்டிகளில் ஏன் சார் இவ்வளவு டென்ஷன்? தெரியவில்லை. ஒரு வேளை “அவங்க தண்ணி கொடுக்காத பசங்க சார்” என்று சென்னை ரசிகர்கள் விளக்கம் கொடுக்கலாம்.

எது எப்படியோ நேற்றைய ஆட்டம் ஒரு classic T20 battle. ஒரு டி20 போட்டியின் சாமுத்ரிகா லட்சனங்கள் அத்தனையும் அடக்கம். சிக்ஸரிகளும் பவுண்ரிகளும் பறக்க, சில ரசிகர்கள் பிராத்தனைகளில் இறங்க, கடைசி ஓவரில் டென்ஷன் ஏற, அந்த டெப்ஷனில் அம்பையர்கள் சொதப்ப, சிறாஜ் வைடாக பந்துகளை போட, போட்டி அதகளம்.

dbppis4u0aat55i

டாஸ் வென்ற தோனி பவுலிங் தேர்வு செய்தார். டூபெளசியும் கரன் சர்மாவும் வெளியேற, ஹர்பஜனும் இம்ரான் தாஹீரும் உள்நுழைந்தனர். ராயல் சாலஞ்சர்ஸ் அணியில் கிரிஸ் வோக்ஸுக்கு பதிலாக காலின் க்ராண்ட்ஹோம்.

ராயல் சாலஞ்சர்ஸ் அணியின் டிகாக்கும் டிவில்லியர்ஸ்ஸும் மிகச்சிறப்பாக விளையாடினர். சில பேட்ஸ்மென்களின் ஆட்டத்தை பார்க்கும் போது இவர்கள் கிரிக்கெட் விளையாடவே பிறந்தார்களா எனத்தோன்றும். விவியன் ரிச்சர்ட்ஸ், கவாஸ்கர், குண்டப்ப விஸ்வனாத், சச்சின் டெண்டுல்கர், கோலி வரிசையில் டிவில்லியர்ஸையும் சேர்க்கலாம்.

கர்ணன் கவச குண்டகங்களொடு பிறந்தது போல் இவர்கள் ஹெல்மெட் பேட் சகிதம் பிறந்தார்களோ என்னவோ.

டிவில்லியர்ஸ் அடித்த சிக்சர்கள் அனைத்தும்  நின்று பேசும் அவர் புகழை. அவர் அடித்த 8 சிக்ஸர்களில் ஒன்று அரங்கத்தின் வெளியே சென்று கானாமலே போனது. அனேகமாக பெங்களூரில் தடுக்கி விழுந்தால் தென்படும் ஏதாவது சாப்ட்வேர் இஞ்சினியர் மேல் விழுந்திருக்கலாம.

ஒரு சமயத்தில் சென்னை அணிக்கு இலக்கு 230லிருந்து 240 வரை இருக்கும் என்று கூட தோன்றியது. சரியான நேரத்தில் இம்ரான் தாஹீர் டிவில்லியர்ஸ் விக்கட்டை எடுக்க அட்டத்தின் momentum சற்று கட்டுக்குள் அடங்கியது. பின்னால் வந்த மந்தீப் சிங்கும் வாஷிங்டன் சுந்தரும் தன் பங்குக்கு விளாச 20ஆம் ஓவரின் முடிவில் ராயல் சாலஞ்சர்ஸ் அணி 205 ரன்கள் குவித்தது.

இந்த ரன் குவிப்பை வேறொறு கோனத்தில் பார்க்கும் போது டி20 போட்டிகள் கடந்த சில ஆண்டுகளில் கொண்டுவந்த பரிணாம வளர்ச்சிகள் தான் காரணமோ எனத் தோன்றுகிறது. சிறிய மைதானம், பவுலர்களுக்கு சற்றும் உதவாத பிட்ச், lightning fast outfield என அனைத்தும் பேட்ஸ்மென்களுக்கு ஆதரவான ஒரு அம்சங்கள். இதன் காரணமாக பெங்களூரு போன்ற மைதானத்தில் 190 என்பதே ஒரு par score. இதன் காரனமாக டி20 என்றால் என்ன? Is it a sheer exhibition of muscle strength? என்ற கேள்வி வராமல் இல்லை. இதன் அடுத்த பரிணாம நிலை என்னவாக இருக்கும் என்பதை யாரெனும் கணிக்க முடியுமா என்பதே அடுத்த கேள்வி. காலமே இதற்கு விடை கூறட்டும்.

dbtfcgmwkaizr4s

டி20 போட்டிகளில் திறமை இருந்தாலும் கொஞ்சம் அதிர்ஷ்டமும் வேண்டும். ராயல் சாலஞ்சர்ஸ் அணியைப் பொருத்தவரை சற்று அதிர்ஷ்ட்டமில்லா அணியென்றே தோன்றுகிறது. பூவோடு சேர்ந்த நாரும் மணம் வீசும் நாரோடு சேர்ந்த பூவும் நாரும் என்பதற்கேற்ப்ப கோலி, டிவில்லியர்ஸ் போன்ற தலை சிறந்த ஆட்டக்காரர்களின் முயற்சி அனைத்தும் வீனாவது கொஞ்சம் துரதிஷ்டம் தான்.

சென்னையின் வாட்சன், ரெய்னா, சாம் பில்லிங்ஸ் மற்றும் ஜடேஜா 9 ஓவர்களுக்குள் வெளியேற சென்னை 74 ரன்கள் மட்டுமே குவித்திருந்தது. ரசிகர்கள் முகத்தில் டென்ஷன் ஏற ஆரம்பித்தது. ஐந்தாவது விக்கட்டுக்கு ராயுடுவும் தோனியும் 100 ரன்கள் சேர்க்க ரசிகர்கள் கொஞ்சம் கூல் ஆனார்கள். கடைசி 5 ஓவர்களில் கிட்டத்தட்ட 70 ரன்கள் தேவையிருக்க தோனி தான் டி20 போட்டியின் முடிசூடா மன்னன் என மற்றொறு முறை அறிவித்தார். ஒவ்வொறு ஓவரிலும் கணக்காக இலக்கை வைத்து ரன் குவிக்க, சிக்ஸர்கள் பறக்க சின்னசாமி அரங்கமே அதிர்ந்தது.

தன் impact bowlers உமேஷ் யாதைவையும் செகாலையும் 13  ஓவருக்குள்ளேயே தங்களின் 4 ஓவர்களை முடித்தது ஏனென நெட்டிசன்கள் புலம்பாமல் இல்லை. சென்னையைப் போலவே ராயல் சேலஞ்சர் அணியின் பவுலிங் சொதப்பல்கள் அப்பட்டமாகவே வெளிப்பட்டது. 18வது ஓவரில் ராயுடு ரன் அவுட்டாக, காலன் கரிகாலன் ப்ராவோ தன் பங்கிற்க்கு 20வது ஓவரில் ஒரு பவுன்ரியும் சிக்சரும் விளாச, தோனி தன் trademark (2011ஆம் உலககோப்பை இறுதிப்போட்டி) ஷாட்டுடன் ஒரு சிக்ஸர் அடிக்க, இரண்டு பந்துகள் மீதமிருக்க சென்னை அட்டகாசமான வெற்றி கண்டது.

dbptclevmaanqp_

Nothing like beating the opponent in their own backyard!

சென்னை சூப்பர் கிங்ஸ் மறுபடியும் table toppers. தங்களின் தொடர் வெற்றியை தக்கவைக்க முனைவார்கள். ராயல் சாலஞ்சர் அணி playoff தகுதிசுற்றுக்கு தகுதிபெறுவது சந்தேகமே எனத்தோன்றுகிறது. கிட்டத்தட்ட பாதி போட்டிகள் முடிவடைந்த நிலையில் இனி எல்லா போட்டிகளிலும் வெற்றிபெற முனையவேண்டும்.

தல தொனியின் மற்றொறு கலக்கல் ஆட்டத்திற்காக ஒரு சுப்பர் விசிலுடன்,

ஹரிஹரன்

முந்திய பகுதிகள்:

IPL விசில் போடு – 6: ஆந்திர ஆவக்காயும் சுவையானதே!
IPL விசில் போடு – 5: பைசா வசூல்!
IPL விசில் போடு – 4: கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே
IPL விசில் போடு – 3
IPL விசில் போடு -2 : திரும்பி வந்துட்டேன்னு சொல்லு!
IPL – விசில் போடு – 1

ஹரிஹரன்: சொந்த ஊர் சென்னை. படித்தது கோவையில். வேலை சிங்கையில். வேலை நேரம் போக நாடி நரம்பில் ஊறியிருப்பது கிரிக்கெட். நாவல், சிறுகதையிலும் சிறிது நாட்டம். விருப்பி வாசிப்பது Sidney Sheldon மற்றும் இந்திரா சொளந்திரராஜன்.

IPL விசில் போடு – 6: ஆந்திர ஆவக்காயும் சுவையானதே!

இனி சென்னை சூப்பர் கிங்ஸின் போட்டிகளூக்கு முன் “பதினெட்டு வயதுக்கு உட்பட்டவர்கள், இதய நோயாளிகள், கர்பிணி பெண்கள் பார்க்க வேண்டாம்” என்ற எச்சரிக்கை அறிக்கை வெளியிட வெண்டும். கடந்த ஆண்டுகளைப் போலவே இம்முறையும் கடைசி பந்து வரை போட்டியை இழுத்து ரசிகர்களை நுனி நாற்காலியில் உட்கார வைத்து, தங்கள் நகங்களை கடிக்க வைத்து, Masters of the heartbeat என்று அவர்களை முகநூலில் வழக்கம் போல கதற வைத்தார்கள்.

In the battle of Southern spices, it is always the Andhra flavor that adds more taste.

ஆந்திராவுக்கே ஊருகாயா என்று ராயுடு விளாச, சென்னை அணி நான்கு ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் சன் ரைசஸ் அணியை வென்றது.

உடல் நிலை காரணமாக இம்ரான் தாஹிர் வெளியேற டூப்ளெசிக்கு வாய்ப்பு கிடைத்தது. ஹைதராபாத் அணியில் ஷிகார் தவான் வெளியேற மற்றொறு ஆந்திரா வீரர் ரிக்கி புய்க்கு வாய்ப்பு கிடைத்தது. டாஸ் வென்ற கேன் வில்லியம்சன் சென்னை அணியை பேட் செய்ய அழைத்தார். முன்பு நடந்த போட்டி போல் அல்லாமல் மிக மெதுவாக கணக்கை துவக்கியது சென்னை. இந்த வருடம் நடந்த IPL போட்டிகளில் பவர்ப்ளே ஓவர்களில் ஆக குறைவான் ரன்களை, அதாவது 27 ரன்களை மட்டுமே எடுத்தது. பத்தாவது ஓவரின் முடிவில் வெறும் 50 ரன்களே எடுத்திருந்தது. அந்த நிலையில் 20வது ஓவரின் முடிவில் 120 ரன்களாவது எடுக்குமா என்றே தோன்றியது.

Hats off to the Sunrisers bowlers, முதல் 10 ஓவர்களில் மிக துல்லியமாக பவுலிங் செய்தனர். துவக்க ஆட்டக்காரராக வந்த டூப்ளெசியாலும் வாட்சனாலும் நிறைய பந்துகளை connect செய்ய முடியவில்லை. சன்ரைசர்ஸ் அணியை பொருத்த வரை, பவர்ப்ளே ஓவர்களில் இரண்டாவது ஆக குறைவான  economy rate உடையவர்கள். புவவேஷ்வர், ரஷீத் கான், பில்லி ஸ்டான்லேக், கிரிஸ் ஜோர்டான் போன்ற சிறந்த சர்வதேச பவுலர்களையும், சித்தார்த் கவுல், சந்தீப் சர்மா, பசீல் தம்பி போன்ற உள்ளூர் பவுலர்களும் அந்த அணியில் உள்ளது மிக சிறப்பான ஒன்றாகும்.

குறிப்பாக ரஷீத் கான் – comes with a very high expectation. ஆப்கானிஸ்தானுக்கும் சுழற்பந்து பவுலிங்கிற்கும் என்ன connection என்று நீங்கள் கேட்டால் டி20 போட்டிகளில் அவர்களின் கடந்த ஆண்டு சாதனைகளை பார்க்க வேண்டும். இந்த ஆண்டு நடந்த ஏலத்தில் சன்ரைசர்ஸ் அணி ரஷீத் கான் (9 கோடி), மொஹமத் நபி (1 கோடி), பஞ்சாப் அணி முஜீப் உர் ரெஹ்மான் (4 கோடி), ராஜஸ்தான் அணி ஜகீர் கான் (60 லட்சம்) ஆகிய சுழர் பந்து வீரர்களை வாங்கியது. That’s a nice way to recognize an associate nation!

கற்றோர்க்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு – ஆப்கானிஸ்தான் சுழற்பந்து வீரர்களுக்கு சென்ற இடமெல்லாம் வாய்ப்பு.

ஆஸ்திரேலிய வீரர்களூம், தென் ஆப்ரிக்க வீரர்களூம் மட்டுமே ஆதிக்கம் செலுத்தி வந்த IPL போட்டிகளில் ஆப்கானிஸ்தான் வீரர்களூம் ஆதிக்கம் செலுத்துவது ஒரு மிகப் பெரிய மாற்றம்!

Returning back to today’s wonderful contest, ராயுடு 37 பந்துகளில் 79 ரன்களை விளாசித் தள்ளினார். அவர் அடித்த ஒனபது பவுண்ரிகளும் நான்கு சிக்ஸர்களும் – treat to the eyes. தன் பங்கிற்க்கு Mr. IPL ரெய்னாவும் 54 ரன்களை குவிக்க விறுவிறுப்பு கூடியது. 3வது விக்கட்டுக்கு இருவரும் 112 ரன்கள் சேர்த்தனர். அதன் பின் வந்த தோனியும் தன் பங்கிற்க்கு ஒரு சிக்ஸரும் மூன்று பவுண்ரிகளூம் அடிக்க 182 ரன்களை சென்னை அணி குவித்தது. கடைசி 11 ஓவர்களில் மட்டும் சென்னை அணி 141 ரன்கள் குவித்தது.

அடுத்து வந்த சன்ரைசர்ஸ் அணி தீபக் சகாரின் பந்தில் சிக்கித் திணறியது. வீசிய ஒவ்வொரு ஓவரிலும் ஒவ்வொரு விக்கட்டுகளை வீழ்த்தினார் சகார். There is always a connection between CSK and uncapped seamers! மன்ப்ரீத் கோனி, மோஹித் சர்மா வரிசையில் தீபக் சகார் மற்றும் ஷர்துல் தாகூரையும் சேர்க்கலாம். It’s not about spending big money, but about finding talents என்பதே சென்னையின் யுக்தியாக இருந்து வருகிறது!

பின்னால் வந்த சன்ரைசர்ஸ் அணியின் கேன் வில்லியம்சன் தான் டேவிட் வார்னருக்கு சற்றும் சளைத்தவரல்ல என்பதை நிருபித்தார். 51 பந்துகளில் 84 ரன்கள் எடுத்து கிட்டத்தட்ட வெற்றியின் விளிம்பிற்க்கு தன் அணியை அழைத்துச் சென்றார். 18 மற்றும் 19 ஓவர்களில் கேன் வில்லியம்சனும் யூசப் பதானும் வெளியேர, 19 ரன்கள் தேவை என்ற நிலையில் அடுத்து வந்த ரஷீத் கான் கடைசி ஓவரில் ஒரு சிக்ஸரும் பவுன்ரிகளூம் விளாச, சென்னை ரசிகர்கள் முகத்தில் டென்ஷன் டென்ஷன் டென்ஷன் ! கடைசி பந்தில் 6 ரன்கள் தேவை என்ற நிலையில் ப்ராவொவின் துல்லியமான யார்கரில் ஒரே ஒரு ரன் மட்டுமே எடுக்க, சென்னை ரசிகர்கள் மூச்சு விட ஆரம்பித்தனர்!

Yet another match, yet another hero – இந்த வழியில் ராயுடுவிம் சகாரும் திருப்புமுனை தந்தனர்!  Loss against a quality team is a pride – பாராட்டுக்கள் சன்ரைசர்ஸ் அணி. 2013ஆம் வருடத்திற்க்குப் பிறகு வார்னரும் தாவனும் ஒன்றாக களமிறங்காத முதல் போட்டி என்ற நிலையில் தங்கள் திறனில் பெருமை கொள்ளலாம்!

dbzthmuvqaq-suy

For another nail biting finish and for bringing back the excitement, ஒரு பெரிய விசிலுடன்

ஹரிஹரன்

முந்திய பகுதிகள்:

IPL விசில் போடு – 5: பைசா வசூல்!

IPL விசில் போடு – 4: கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே

IPL விசில் போடு – 3

IPL விசில் போடு -2 : திரும்பி வந்துட்டேன்னு சொல்லு!

IPL – விசில் போடு – 1


ஹரிஹரன்: சொந்த ஊர் சென்னை. படித்தது கோவையில். வேலை சிங்கையில். வேலை நேரம் போக நாடி நரம்பில் ஊறியிருப்பது கிரிக்கெட். நாவல், சிறுகதையிலும் சிறிது நாட்டம். விருப்பி வாசிப்பது Sidney Sheldon மற்றும் இந்திரா சொளந்திரராஜன்.

IPL விசில் போடு – 5: பைசா வசூல்!

சென்னை சூப்பர் கிங்ஸின் புது வீட்டின்கிருஹப்ரவேசம்இனிதாக முடிந்தது! தன் புது வீடான பூனாவில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை 64 ரன்கள் வித்தியாசத்தில் அசத்தலாக வெற்றி கண்டது.

பூனாவில் நடைபெற்ற போட்டியைக் காண சென்னை ரசிகர்களை சூப்பர் கிங்ஸ் அணி  “விசில் போடு எக்ஸ்பிரஸ்” என்ற சிறப்பு ரயிலில் ஆழைத்துச் சென்றது. கிட்டத்தட்ட 1000 பேருக்கு அந்த வாய்ப்பு கிடைத்தது. உணவு, தங்கும் இடம் மற்றும் நுழைவு சீட்டு என அனைத்தும் இலவசம். இது போல கடந்த காலத்தில் ஒரு அணி தன் ரசிகர்களூக்காக மெனக்கெட்டு ஏற்ப்பாடு செய்திருக்குமா என்பது சந்தேகமே. IPL போட்டிகள் ஒரு இடத்திலிருந்து மற்றொறு இடத்துக்கு மாறுவது இது முதல் தடவையல்ல. 2010ல் தெலுங்கானா பிரச்சைனையின் காரணமாக டெக்கான் சார்ஜஸ் அணியின் போட்டிகள் அனைத்தும்  ஹைதராபாத் மற்றும் விசாகப்பட்டினத்திலிருந்து மும்பைக்கு மாற்றப்பட்டது. ஆனால் இதுபோல் எந்த அணியும் தன் ரசிகர்களுக்காக முயற்ச்சியில் இறங்கியதில்லை, especially when money is the driving factor in IPL. ரசிகர்களூக்கும் தனக்கும் இடையில் இருக்கும் இணக்கத்தை/நெருக்கத்தை சென்னை அணி போல எந்த அணியும் ஏற்படுத்தியதில்லை என்றே கூறலாம்.

You can take away CSK matches from Chennai, but you cannot take away CSK from Chennai fans!

ஒரு வேளை திருவிளையாடல் திரைப்படத்தை இப்போது எடுத்திருந்தால் “பிரிக்க முடியாத்து என்னவோ?” என்ற கேள்விக்கு “சென்னை சுப்பர் கிங்சும் ரசிகர்களும்” என்ற பதில் வந்திருக்கலாம்.

Well done CSK!

சென்ற போட்டியின் போது காயமடைந்த தோனி இம்முறை களமிளங்குவாரா என்ற சந்தேகம் இருந்தாலும் தல தோனியைக் காண 21 மணி நேரம் பயணம் செய்த ரசிகர்கள் ஏமாற்றமடையவில்லை. மணிக்கொருதரம் தமிழில் ட்வீட்டும் திருபஜன் சிங் என்ற  ஹர்பஜனும், முரளி விஜயும் வெளியேற, ரெய்னாவும் கரன் சர்மாவும் களமிறங்கினர். டாஸ் வென்ற ரகானே சென்னை அணியை பேட் செய்ய அழைத்தார். Win the toss and ask the opponent to bat first seems to be the new trend these days. தன் போலர்கள் மீதுள்ள நம்பிக்கையின்மையா அல்லது பின்னால் எந்தவொரு இலக்கையும் சந்திக்கலாம் என்ற தன் பேட்ஸ்மென் மீதுள்ள நம்பிக்கையா? தெரியவில்லை.

முதல் ஓவரிலேயே ஆட்டமிழந்திருக்க வேண்டிய வாட்சனுக்கு இரண்டு முறை அதிர்ஷமடித்தது. ராகும் த்ரிபாதி இருமுறை வாட்சன் கொடுத்த catch-சை தவறவிட, அதற்கு ராஜஸ்தான் 98 ரன்கள் நஷ்டயீடு கட்ட வேண்டியிருந்தது. Catches win matches என்பார்கள் – குறிப்பாக டி20 போட்டிகளில் யாரோ ஒருவரின் மேலான்மை இருக்கும். அது பவுலர்களாகவும் இருக்கலாம், பேட்ஸ்மென்களாகவும் இருக்கலாம். வந்த வாய்ப்பை தவற விட்டால் போட்டியை இழக்க வேண்டியது தான். ஒரிரண்டு ஓவர்களில் போட்டியின் சூழலே மாறும் தன்மையுடையது டி20 போட்டிகள். ரெய்னா ஒரு பக்கம் பவுண்ரிகளாக அடிக்க வாட்சன் மறுபக்கம் சிக்ஸர்களாக வீசினார். அடுத்துதடுத்த வந்த ஓவர்களில் வாட்சன் சிக்ஸர்களும் பவுண்ரிகளும் தெரிக்கவிட, 6 ஓவர்களின் சென்னை அணி 69 ரன்கள் எட்டியது.

சென்ற முறை ராஜஸ்தான் அணிக்காக விளையாடிய வாட்சன் சென்னை அணிக்கெதிராக சதமடிக்க, இந்த முறை, சென்னை அணிக்காக விளையாடி ராஜஸ்தான் அணிக்கெதிராக சதமடித்தார். சின்ன கல்லு பெத்த லாபம் என்ற யுக்தியை ஏலத்தின் போது கையாண்ட சென்னை அணி கிட்டத்தட்ட அனைவரையும் குறைந்த விலைக்கு வாங்கியது. வாட்சனை 4 கோடிக்கு வாங்கிய போது சென்னை அணியை அதன் ரசிகர்களே கேலி செய்தனர். அதே ரசிகர்களின் மனநிலை இன்று மாறியிருக்கும்! அவர் அடித்த 6 சிக்ஸர்களும் 9 பவுண்ரிகளும் spotless!

நேற்றைய போட்டியில் சதமடித்த கெயிலும் சரி, இன்றைய போட்டியில் சதமடித்த வாட்சனும் சரி,

ஏலத்தில் எடுத்தாரா ஒறுத்தல் அவர்

நாண சதமடித்து விடல்

என்று IPL குறள் வழி age is just a number என்பதை தன் பழைய அணிக்கு சொல்லாமல் சொல்லிச் சென்றனர்.

dbp9hmbwsaahtcu

ஏலத்தின் போது பெரிய அளவில் எதிர்பார்புடன் வாங்க்கப்பட்ட ஜெயதேவ் உனாட்கட்டும், இங்கிலாந்தின் பென் ஸ்டோக்சும் பெரிய அளவில் கைகொடுகாதது ராஜஸ்தான் அணிக்கு ஏமாற்றத்தை கொடுத்திருக்கும். பேட்டிங்கில் முனைப்புடன் விளையாடாது, வந்த கேட்ச் வாய்ப்புகளை தவறவிட்டது என்று மேலும் சொதப்பல்கள். கோலிக்கு நிகராக கருதப்பட்ட ரஹானே பவர்ப்ளே 6 ஓவர்களில் 5 பவுளர்களை மாற்றியது சற்று ஆச்சரியத்தை தருகிறது. 205 என்ற இமாலய இலக்கை நோக்கி விளையாடிய ராஜஸ்தான் 140 ரன்களுக்கு சுருண்டது.

மற்ற அணிகள் கிட்டத்தட்ட ஒரே ஆட்டக்காரர்களை தன் வெற்றிக்காக நம்பியிருக்க, சென்னை அணியின் ஒவ்வொரு போட்டிகளிளும் ஒவ்வொரு ஆட்டக்காரர்கள் சிறப்பாக விளையாடுவது ரசிகர்களுக்கு பெரிய அளவில் மகிழ்ச்சியடைய வைத்திருக்கும்.

தோனியும் இளைய தளபதி விஜய் போல ஒரு தடவை முடிவெடுத்தா தன் பேச்சை தானே கேட்க மாட்டார் – தன் set ஆன அணியில்  மாற்றத்தை கொண்டுவர விரும்பமாட்டார். டூப்பிளசி, டேவிட் வில்லி போன்ற வீரர்களூக்கு வாய்ப்பு கிடைப்பது சந்தேகமே எனத்தோன்றுகிறது. இனி வரும் போட்டிகளில் எவ்வகையான மாற்றத்தை கொண்டுவருவார் என பொருத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

அது வரை, வாட்சனின் சததிற்காகவும், table toppers CSK காகவும், ஒரு பெரிய விசிலுடன்.

ஹரிஹரன்.

முந்திய பகுதிகள்:

IPL விசில் போடு – 4: கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே

IPL விசில் போடு – 3

IPL விசில் போடு -2 : திரும்பி வந்துட்டேன்னு சொல்லு!

IPL – விசில் போடு – 1


ஹரிஹரன்: சொந்த ஊர் சென்னை. படித்தது கோவையில். வேலை சிங்கையில். வேலை நேரம் போக நாடி நரம்பில் ஊறியிருப்பது கிரிக்கெட். நாவல், சிறுகதையிலும் சிறிது நாட்டம். விருப்பி வாசிப்பது Sidney Sheldon மற்றும் இந்திரா சொளந்திரராஜன்.

ஃபன்றி/Fandry – ஒரு நிமிட பார்வை

சாய்ராட் என்கிற மிகப்பிரபலமான மராத்தி மொழி திரைப்படத்தைப் பார்க்காதவர்கள் உடனடியாகப் பார்த்துவிடவும். நாகராஜ் மஞ்சுளே இயக்கிய இந்தத் திரைப்படம் சாதிய அடுக்குகளையும், சாதி பொதுமக்களுக்குத் தரும் போதையையும், அந்த போதையினால் அவர்கள் யாரையும் கொலை செய்ய தயங்கமாட்டார்கள் என்பதையும் அழகாக ஒரு கத்தியை எடுத்து மெதுவாக உங்கள் நெஞ்சில் பொறுமையாக இறக்குவதைப் போல இறக்கும். பாடல்கள் எல்லாம் இளையராஜா ரகம். இசையமைப்பாளர்களான அஜய்-அதுல் நாங்கள் இளையராஜாவின் ரசிகர்கள் என்று சொல்லியிருக்கிறார்கள். ஒரு நிமிடம் ஆச்சா? 🙂

நாகராஜ் மஞ்சுளேவின் சாய்ராட்டுக்கு முந்திய படம் தான் ஃபன்றி (Fandry). ஃபன்றி என்று உச்சரிப்பு ஆனால் உண்மையில் பன்றி என்று தான் அர்த்தம். உண்மையில் மராத்திக்கும் தமிழுக்கும் நிறைய தொடர்பு இருக்கிறது. மராத்தி திராவிட மொழி என்று ஒரு தியரி இருக்கிறது. ஆனால் தமிழுக்குத்தான் மராத்தி நெருக்கம். சிவாஜியின் (நடிகர் சிவாஜி இல்லை. சிவாஜி படத்தில் நடித்த சிவாஜி ராவ் ரஜினியும் இல்லை. சத்ரபதி சிவாஜி) தம்பி வெங்கோஜி தஞ்சாவூரில் அமைத்த ராஜ்ஜியத்தால் தஞ்சாவூர் மராத்தியார்கள் என்கிற பிரிவு உண்டானது. அப்போ நடந்த மொழிப்பரிமாற்றத்தில் பன்றி இடமாறியிருக்கக்கூடும். பன்றிக்கு தமிழ் ஆதிச் சொல் ஒன்று இருக்கிறது. வராகம். ஒரு நிமிடம் ஆச்சா? 🙂

ஜப்யா என்கிற தீண்டத்தகாத டீன் ஏஜ் சிறுவன் ஒரு தலையாக தன்னுடன் படிக்கும் ஷாலு என்கிற மேல் சாதி டீன் ஏஜ் சிறுமியைக் காதலிக்கிறான். அவனுடைய அப்பா அந்த ஊரில் மற்றவர்கள் கொடுக்கும் வேலையைச் செய்துகொண்டு சொற்ப வருமானத்தில் வாழ்கிறார். ஜப்யாவுக்கு இரண்டு அக்காக்கள். முதல் அக்காவுக்கு திருமணம் முடிந்து வீட்டோடு வந்துவிடுகிறார். இரண்டாவது அக்காவிற்கு திருமண ஏற்பாடாகிறது. ஜப்யாவின் காதல் நாளுக்கு நாள் முற்றிக்கொண்டே போகிறது.

அதே ஊரில் சைக்கிள் கடை வைத்திருக்கும் நாகராஜ் மஞ்சுளே (டைரக்டர்) ஜப்யாவுக்கு ஆதரவாக இருக்கிறார். அந்தப் பெண் ஜப்யாவை லவ் பண்ண வேண்டுமென்றால்: கருப்பாக இருக்கும் ரெட்டைவால் குருவியைப் பிடித்து, அதை எரித்து அந்த சாம்பலாக்கி அதை ஷாலுவின் மேல் தூவினால் மட்டுமே நடக்கும் என்று கூறுகிறார். ரெட்டைவால் குருவியைப் பிடிப்பது அவ்வளவு எளிதல்ல என்பது பையனுக்குத் தெரியவில்லை.

ரெட்டைவால் குருவியை ஜப்யா தேடி அலைகிறான். ஜப்யாவுக்கு ஜீன்சும் டீ சர்ட்டும் போட வேண்டும் என்று ஆசை ஆனால் காசில்லை. குச்சி ஐஸ் செய்து நாகராஜின் சைக்கிள் கடையில் சைக்கிள் வாடகைக்கு எடுத்துக்கொண்டு டவுனுக்குப் போய் அதை விற்று, ஜீன்ஸ் வாங்க பணம் சேர்க்கிறான். ஒரு முறை அப்படிச் செல்லும் போது, ஒரு பறவை விற்கும் கடையைப் பார்க்கிறான். உள்ளே ரெட்டைவால் குருவி இருக்கும் என்று நினைத்து, அவசரமாக சைக்கிளை அருகே நிற்கும் வேனில் சாய்த்து நிறுத்தி விட்டு, உள்ளே ஓடோடுகிறான். வேன் ரிவெர்ஸ் எடுத்து, சைக்கிளை நசுக்கி விடுகிறது. ஜீன்ஸ் கனவு டமால்.

அந்த கிராமத்தில் திருவிழா வருகிறது. அந்தக் கிராமம் பன்றியைத் தீட்டாகக் கருதுகிறது. ஒரு முறை பள்ளியில் ஷாலுவின் அக்காவை பன்றி தீண்டிவிடுகிறது. ஷாலு, உடனே அக்காவை வீட்டிற்கு அழைத்துச் சென்று விடுகிறாள். அக்கா தீட்டு நீங்க, குளிக்கிறாள். அம்மா தீட்டு நீங்க கோமியம் தெளிக்கிறாள். ஷாலுவும் வாலண்டியராக தனக்கும் தெளிக்கும் படி கேட்டு வாங்கிக்கொள்கிறாள்.

அந்த திருவிழாவில் தேர் தூக்கும் பொழுது, ஒரு பன்றி தேர் தூக்குபவரைத் தீண்டி விடுகிறது. தேர் தூக்குபவர் பதறிப் போய் தேரை விட்டுவிடுகிறார். அபசகுனம் ஆகி விடுகிறது. ஊர் தலைவர் ஜப்யாவின் அப்பாவை அழைத்து அந்தப் பன்றியைப் பிடிக்கச் சொல்கிறார். ஜப்யாவின் அப்பா இன்னும் ரெண்டு நாளில் திருமணம் இருக்கிறது என்றும் பிடிக்க முடியாது என்றும் கூறுகிறார். ஊர் தலைவர் வேணுமின்னா பணம் தருகிறேன் என்று சொல்கிறார். பணத்தை வாங்கிக்கொண்ட ஜப்யா,தான் மட்டும் எப்படிப் பிடிப்பது என்று கேட்க, உன் குடும்பத்தை அழைத்துக்கொள் என்று சொல்கிறார் தலைவர்.

காலை மொத்த குடும்பமும், மணப்பெண் உட்பட பன்றி பிடிக்கக் கிளம்புகிறது. ஜப்யா ஷாலுவின் கண்களில் பட்டுவிடாமல் ஒளிந்து கொள்கிறான். அனைவரும் பள்ளிக்கூடத்திற்குள் சென்றபிறகு, நிம்ம்திப் பெருமூச்சு விட்டு வெளியே வருகிறான். ஒரு கும்பல், பன்றி பிடிக்க பன்றிக் குடும்பம் என்று கேலி செய்கிறது. ஒரு கிரிக்கெட் மேட்சை ரசிப்பது போல அவர்கள் இந்தக் குடும்பம் பன்றி பிடிப்பதை ரசிக்கிறார்கள். ஒருவன் ஃபேஸ்புக்கில் ஸ்டேட்டஸ் போட்டோ கூடப் போடுகிறான்.

ஒரு வழியாக பன்றியை கார்னர் செய்து விடுகிறார்கள், கயிற்றை பன்றியின் கழுத்தில் போட ரெடியாகும் பொழுது, தேசிய கீதம் ஒலிக்கிறது. அப்படியே நின்று விடுகின்றனர். பன்றிக்குத் தெரியுமா அது தேசிய கீதம் என்று? பன்றி ஓடி விடுகிறது.

பன்றியைப் பிடிக்கவைத்து, தங்களைப் பன்றியைப் போல நடத்தும் இந்த தேசத்தின் தேசிய கீதம் அவர்களுக்குமானதா?

ஓடிய பன்றியைத் தேடி குடும்பமே நாயாய் பேயாய் ஓடுகிறது. பள்ளி மதியச் சாப்பாட்டுக்கு மணியடித்து விடுகிறது. ஷாலு வந்து விடுவாளே என்று பயந்து ஓடி ஒழிந்து கொள்கிறான். பன்றியைக் காணாது செம கடுப்பில் இருக்கும் ஜப்யாவின் அப்பா ஜப்யாவை வெறி கொண்டு தேடத் தொடங்குகிறார். ஒழிந்துகொண்டிருக்கும் ஜப்யா கருப்பான ரெட்டைவால் குருவியைக் காண்கிறான். மெதுவாக ஓசையெழாமல் அமர்ந்து குருவியை அடிக்க, குருவியின் மேல் ஒரு கண் வைத்துக்கொண்டே, ஒரு சிறு கல்லை எடுக்கக் குனிகிறான். ஜப்யாவின் அப்பா அவனைத் தேடிக்கொண்டு வந்துவிடுகிறார். கடுங்கோபத்தில் வந்தவர், அவனை வெளியே இழுத்துவந்து ஊர் முன்னிலையில், ஷாலு முன்னிலையில் அடித்துத் துவைக்கிறார். ஷாலு எள்ளி நகையாடுகிறாள். ஜப்யா கூனிக்குறுகிப்போகிறான்.  நீண்ட கஷ்டத்திற்குப் பிறகு குடும்பம் பன்றியைப் பிடிக்கிறது. ஷாலு இதை அனைத்தையும் தன்னுடன் இருப்பவளுடன் கேலி பேசி ஹைஃபை செய்து ஒரு விளையாட்டு போல ரசிக்கிறாள்.

மணப்பெண்ணும் ஜப்யாவும் ஒரு கட்டையில் பன்றியைத் தொங்கப்போட்டுக்கொண்டு தூக்கிக்கொண்டு போகிறார்கள். ஊர் நின்று வேடிக்கை பார்க்கிறது. ஷாலுவும் தான். ஒரு கும்பல் அவர்களை கேலி பேசிக்கொண்டு கூடவே வருகிறது. பொறுத்துப் பொறுத்துப் பார்த்த ஜப்யா, கடும் சினம் கொண்டு அவர்களைத் தாக்கத் தொடங்குகிறான். பிறகு கடைசியாக ஒரு கல்லை எடுத்து அவர்களின் மீது எறிகிறான். அந்தக் கல் வேகமாக காற்றில் பயணித்து காமெராவின் லென்சை உடைக்க வருகிறது. அதோடு படம் முடிகிறது.

ஜப்யா கல் எறிந்தது உங்கள் மீதும் என் மீதும் தான். ஒரு நிமிடம் ஆச்சா?

IPL விசில் போடு – 4: கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே

காவிரி பிரச்சனையின் காரணமாக சென்னையில் நடக்கவிருந்த போட்டிகள் அனைத்தும் பூனாவிற்க்கு மாற்றப்பட்டது. இது தமிழர்களூக்கு கிடைத்த மாபெரும் வெற்றியாக போராட்டக் குழுவினர் அறிவித்துள்ளனர். இந்த நிகழ்வுகளால் கர்னாடகா மாநில முதல்வர் சித்தராமையாவுக்கு சித்தம் தெளிவாகி காவிரி நீரை தமிழ்நாட்டுக்கு தண்ணீரை திறந்து விடுவாரென நம்புவோம். அப்படியே சனி ஞாயிற்றுக் கிழமைகளிளும் சீரியல் ஒளிபரப்பும் சேனல்களையும் தமிழ்நாட்டிலிருந்து உப்புமாவையும் தடை செய்ய வேண்டுமென்று பாதிக்கப்பட்ட சிலர் டுவிட்டரிலும் முகநூலிலும் அனல் பரக்க ஆவேசமாக முழங்கினர். இவர்கள் கோரிக்கைகளையும் இந்திய கிரிக்கெட் வாரியம் ஏற்றுக் கொள்ளூம் என்றும் நம்புவோமாக.

Yet another high scoring game, yet another dramatic end!

197 என்ற இலக்குடன் ஆடிய சென்னை அணி நான்கு ரன்கள் வித்தியாசத்தில் பஞ்ஞாப் அணியிடம் தோல்வியடைந்தது. ப்ரீத்தி ஜிந்தா ஆனந்த நடமாட, ரசிகர்கள் ஆர்பரிக்க, அஷ்வின் T20 போட்டிகளில் தன் value என்ன என்பதை நிரூபித்தார். எதிர்பாராத விதமாக கெயிலை களமிரக்கியது, சரியான நேரத்தில் ராயுடுவை ரன் அவுட்டாக்கியது, மோஹிட் சர்மாவுக்கு தைரியமாக கடைசி ஓவரை கொடுத்தது ஏன்று அனைத்தும் master stroke.

அஷ்வினும் தோனியும் எதிரெதிர் அணியினர் என்று விளையாடும் நிலை சென்னை ரசிகர்களை சற்று எரிச்சலையடைய வைத்திருந்தாலும், this is the beauty of IPL என்ற எதார்த்தத்தை உணர்ந்தாக வேண்டும். இருவரும் டாஸ் நேரத்தில் சந்தித்துக் கொள்ளூம் போது உங்கள் மந்தையில் இருந்து இரண்டு ஆடுகள் வேறு வேறு பாதையில் போய் விட்டன இரண்டும் சந்தித்த போது பேச முடியவில்லையே என்று சென்னை ரசிகர்கள் சோகமாக பாடியிருக்க கூடும். டாஸ் வென்ற தோனி பஞ்ஞாப் அணியை பேட்டிங் செய்ய அழைத்தார்.

அணிகள் மாறியிருந்தாலும் இருவரும் தத்தமது பலங்களையும் பலவீனங்களையும் அறிந்திருந்ததால்  போட்டி சுவாரசியமாகவே அமையும் என்ற எதிர்பார்ப்பு வீனாகவில்லை.

கே.எல்.ராகுலும் கெயிலும் அடித்த அடியில் சென்னை பவுலர்கள் சிக்கித் திணறினார்கள். பவர்ப்ளே (6வது ஓவர்) முடிவில் பஞ்ஞாப் அணி 75 ரன்கள் எடுத்திருந்தது.  ஒன்பதாவது ஓவரின் முடிவில் நூறு ரன்களை தாண்டியிருந்தது. கெயில் தான் இன்னமும் Universal Boss என்பதை உரக்கச் சொன்னார். Darling of IPL and a nightmare to every bowler,

கெயில் புயல் இன்னமும் ஓயவில்லை. ஏலத்தில் தன்னை எடுக்காத அணியிணர்க்கு ஒரு message அனுப்புவதாகவே இருந்தது அவரது இன்றைய innings.

பொதுவாகவே இடதுகை ஆட்டக்காரர்களிடம் ஒருவித தனி ஸ்டைல் & ஆக்ரோஷம் இருக்கும். அவர்களின் கட் ஷாட்டுகளும் புல் ஷாட்டுகளும் வலதுகை ஆட்டக்காரர்களின் ஷாட்டுகளை விட பார்ப்பதற்க்கு மிகவும் பிரம்மிப்பானவை. டேவிட் வார்னர், மாத்யூ ஹைடன், ஆடம் கில்கிரிஸ்ட், மைக்கெல் ஹாஸி, குமார் சங்ககாரா, கங்கூலி, கேரி சோபர்ஸ், ஜெயசூர்யா, சயீத் அன்வர் என புகழ் பெற்ற இடதுகை ஆட்டக்காரர்கள் பலர். இவர்களுக்கு பந்து வீசுவது அவ்வளவு எளிதல்ல. It’s always going to be tough to adjust the line and length. இவ்வரிசையில் கெயில் சற்று வித்தியாசமானவர். Footwork அவ்வளவாக இருக்காது, ஆனால் ஒவ்வொரு ஷாட்டிலும் அதிகமான power இருக்கும். நின்ற இடத்திலேர்ந்து சிக்ஸ்ர் அடிப்பார்.

Back to the game again, கடைசி நான்கு ஓவர்களில் 67 ரன்கள் தேவை என்ற நிலையிலும் சென்னை அணி ஓரளவு பதற்றம் அடையாமல் ஆடியது. ப்ராவோ மற்றும் ஹர்பஜன் விக்கெட்டுகள் கையில் இருப்பது காரணமாக இருக்கலாம். ஆரம்பந்தொட்டு பேட்டிங்கில் வேகம் இல்லை. விஜயும் தனக்கு கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தவில்லை. கிட்டத்தட்ட ஒன்பது பேட்ஸ்மென் இருக்கும் போது சென்னை அணி சற்று defensive ஆக விளையாடியது.

image 20180411 1339007944988610149401853..jpg

அதிக ரன்கள் இலக்காக இருக்கும் போது முன்பு சிறப்பாக ஆடிய ப்ராவோவை ஏன் முன்பாக ஆட அனுப்பவில்லை, ஜடேஜாவை அனுப்பியது ஏனென்ற கேள்விகள் வராமலில்லை.    தல தோனியின் 5 சிக்சர்களும் 6 பவுன்ரிகளும் சென்னை ரசிகர்களுக்கு பெரிய ஆறுதல்.

வடிவேவுக்கு பாடி ஸ்டாராங் பேஸ்மெண்ட் வீக்சென்னை அணிக்கு பேட்டிங் ஸ்டாராங் போலிங் வீக்.

இந்நிலை சற்று மாறும் என நம்புவோமாக.

For fighting till the last ball, for hitting the maximum number of sixes in the last overs in IPL, for keeping his opponents in their toes, that’s Dhoni for you. கெத்தாக விளையாடிய தல தோனிக்கு ஒரு பெரிய விசிலுடன்,

ஹரிஹரன்

 

முந்திய பகுதிகள்:

IPL விசில் போடு -1

IPL விசில் போடு – 2

IPL விசில் போடு – 3


ஹரிஹரன்: சொந்த ஊர் சென்னை. படித்தது கோவையில். வேலை சிங்கையில். வேலை நேரம் போக நாடி நரம்பில் ஊறியிருப்பது கிரிக்கெட். நாவல், சிறுகதையிலும் சிறிது நாட்டம். விருப்பி வாசிப்பது Sidney Sheldon மற்றும் இந்திரா சொளந்திரராஜன்.

IPL விசில் போடு – 3

ஹரிஹரன்

3

சென்னை மாநகராட்சி உங்களை அன்புடன்வரவேற்கிறது.
1095 நாள் காத்திருப்பு ஒருவழியாக முடிந்தது! இத்தனை காலம் காத்திருந்த பலனாக சென்னை ரசிகர்களுக்கு மாபெரும் விருந்தாக இந்த போட்டி அமைந்தது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கோல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியை வென்று சேப்பாக்கம் தன் கோட்டை என நிருபித்தது. Welcome back to the den Lions!
ஆனால் இந்த போட்டியை முழுமையாக ஏனோ ரசிக்க முடியவில்லை. அரங்கத்தில் போட்டியை காணவந்த சில ரசிகர்கள் தாக்கப்பட்டனர். போட்டியின் போது சென்னை வீரர் டூபெளிசியின் மீது செருப்பு வீசப்பட்டது. சென்னை இதுவரை பார்த்திராத காட்சிகள் இவை. கோல்கத்தா மற்றும் இன்னும் சில வட இந்திய நகரங்களில் இவ்வாறு நடந்ததுண்டு.
சாதாரண கிரிக்கெட் ரசிகனுக்கும் இந்த நிகழ்வகளுக்கும் தொடர்பிருக்காது என நாம் சொன்னலும் knowledgeable crowd என அனைவராலும் பாராட்டப்படும் சென்னை மக்களுக்கு இது ஒரு களங்கம். 1999 ஆண்டு சென்னையில் நடந்த பாக்கிஸ்த்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் எதிரணி வென்றாலும் எழுந்து நின்று கைதட்டி பாரட்டிய நிகழ்ச்சி தான் கண் முன் வந்து சென்றது. இந்த நிகழ்வுகளின் காரணமாக சென்னையில் போட்டி தடைபடாது என நம்புவோமாக. Hope good sense will prevail.
Coming back to the splendid contest, சென்னை ஒரு புது ஹீரோவை அடையாளம்கண்டுகொண்டது.இங்கிலாந்து வீரர் சாம்பில்லிங்ஸ் அதிரடியை காட்டசார் ஜடேஜா முத்தாய்ப்பாய் சிக்கர் அடித்து வெற்றியை உறுதி செய்தார். சாம்பில்கிங்ஸ் இன்னமும் ஒருவளர்ந்து வரும் வீரராகவே இங்கிலாந்தில் கருதப்படுகிறார். இருந்தாலும்தம்பி வா, தலைமையேற்கவா என்று இங்கிலாந்துவாரியம் அவருக்கு காப்டன்பதவிக்கு அழைப்புகொடுக்கலாம்.
சென்னை மாதிரியானமைதானத்தில் டாஸ் ஒருமுக்கியமான விஷயமாகக் கருதப்படுகின்றது. ஆட்டம் செல்லச் செல்ல பிட்ச்மெதுவடையும். அவ்வாறு இருக்கையில் டாஸ் வென்றஅணி வழக்கமாக பேட்டிங்செய்யும். ஏனேன்றால், அடுத்துபந்து வீசும்போது பிட்ச்சுழற்பந்துக்கு சாதகமாகஇருக்கும். டாஸ் வென்றதோனி ஆச்சிரியமாக பவுலிங் தேர்வு செய்தார்.எதிரணியில் நிறைய அதிரடிஆட்டக்காரர்கள் இருப்பது ஒருகாரணமாக இருக்கலாம்.இதனால் ரன் இலக்குகை குறிவைத்து ஆடுவது எளிது என்று நினைத்திருக்கலாம்.இரண்டாவதாக சென்னை மைதானத்தில் இரவு பனிப்பொழிவு அதிகம்.அதனால் பவுலர்ககளுக்கு இரண்டாவது இன்னிங்ஸில்பந்து வீசுவது கடினம் என்று நினைத்திருக்கலாம்.
கோல்கத்தா தொடக்க ஆட்டக்காரர்கள் ஆரம்பம் முதல் அதிரடியாக விளையாடினர்.ஒரு பக்கம் விக்கட்டுகள் சரிந்தாலும் பத்து ஓவர்களில்கிட்டத்தட்ட 90 ரன்களுக்கு மேல் எடுத்தனர். பின்னால்வந்த ஆன்ரே ரசல் பதினோரு சிக்சர்களை அடித்து அரங்கத்தை அதிரவைத்தார்.
மேற்க்கிந்திய வீரர்கள் அதிரடி ஆட்டப்பிரியர்கள்.தொடக்ககாலந்தொட்டு தன்அபார ஆட்டத்திறனால் எதிரணி வீரர்களை குலை நடுங்கச்செய்வர். 2000வருடத்திற்க்குப்பின் இரங்குமுகந்தான். அடுத்து வரும் உலக கோப்பை தகுதி சுற்றில் ஸ்காட்லேண்ட் ஜிம்பாப்வே அணிகளுடன் மொதும் பரிதாபமான சூழ்நிலை. ப்ராவோ,போலார்ட், சாமுவேல்ஸ்,கெயில், ஆன்ரே ரசல், சுனில்நரேன் போன்ற சிறந்த வீரர்கள்இருந்தும் சிறந்த அணியாகத் திகழாதது துரதிஷ்டவசம்.
நவக்கிரஹம் போல தனியாகபலனை தருவார்கள், கூட்டாக/அணியாக அல்ல.
சென்னை அணியின் முரளிவிஜய் மறுபடியும் மிஸ்ஸிங். போட்டிக்கு இரண்டு நாள் முன்பாக நாம் எடுத்த கருத்துகணிப்பில் பெரும்பாலானொர் முரளி விஜய் வரவேண்டுமென்று பதிவு செய்தார்கள்.


ஆனால் சென்ற போட்டியில் களமிறங்கிய ராயுடுவும் வாட்சனும் நானும் ரவுடி தான் என்று நினைதார்களோ என்னவோ, கொல்கத்தா பவுளர்களை பதம் பார்த்தார்கள். முரளி விஜய் இனி களமிரங்குவது சிரமமென தெரிகிறது. சாம் பில்லிங்ஸ், ப்ராவோ மற்றும் ஜடேஜா கைகொடுக்க சென்னை ஒரு பந்து மிதமிருக்க வெற்றி கண்டது.

Opening and lower order looks formidable now. சென்னை மிடில் ஆர்டரில் கவனம் செலுத்துவது நல்லது. காயமடைதொரின் என்னிக்கை வேறு கூடுகிறது. அனேகமாக playing XI போல் Injured XI வருமோ என்னவோ.


Opening and lower order looks formidable now. சென்னை மிடில் ஆர்டரில் கவனம் செலுத்துவது நல்லது. காயமடைதொரின் என்னிக்கை வேறு கூடுகிறது. அனேகமாக playing XI போல் Injured XI வருமோ என்னவோ

தல தோனியின் அதிரடி ஆட்டத்தை காணவந்த ரசிகர்களுக்கு கொஞ்சம் ஏமாற்றந்தான். அடுத்த போட்டியில் தல கலக்குவார் என்ற நம்பிக்கையுடன், welcome once again lions.
சூப்பர் விசிலுடன்,
ஹரிஹரன்

முந்திய பகுதிகள்:

IPL விசில் போடு -1

IPL விசில் போடு – 2


ஹரிஹரன்: சொந்த ஊர் சென்னை. படித்தது கோவையில். வேலை சிங்கையில். வேலை நேரம் போக நாடி நரம்பில் ஊறியிருப்பது கிரிக்கெட். நாவல், சிறுகதையிலும் சிறிது நாட்டம். விருப்பி வாசிப்பது Sidney Sheldon மற்றும்இந்திரா சொளந்திரராஜன்.

அம்பேத்கர் : காவியாகி மீண்டும் நீலத்திற்கு திரும்பினார்

நீங்கள் மேலே காண்பது, படௌன் நகரில் உத்திரப்பிரதேசத்தில், காவிமயமாகி காட்சிதரும் அம்பேத்கர் சிலை. அப்புறம் பி எஸ் பி கட்சிப் பிறமுகர் ஒருவர் அதை நீலத்திற்கு மாற்றுகிறார்.

இதற்குமுன்னர், யோகி அதியநாத்தின் அரசாங்கம், டாக்டர் பீம்ராவ் அம்பேத்கர் என்கிற பெயரில் டாக்டர் பீம்ராவ் ராம்ஜி அம்பேத்கர் என்று மாற்ற முடிவெடுத்தது குறிப்பிடத்தக்கது.

மகனின் காதுகுத்தை நடத்தலாமா எலெக்‌ஷன் கமிஷன் ஆபீசர்?

மகனின் காதுகுத்தை நடத்தலாமா என்று கணவன் மனைவியிடமோ அல்லது மனைவி கணவனிடமோ கேட்பது வழக்கம், ஆனால் எலெக்‌ஷன் கமிஷன் ஆபீசரிடம் கேட்பது?

கர்நாடகாவில் இந்த தேர்தல் நேரத்தில், என்ன்வெல்லாம் செய்யலாம் என்ன செய்யக்கூடாது, என்கிற தெளிவில்லாததால், பொதுமக்கள் எலெக்‌ஷன் கமிஷனரை சாதாரண விசயத்துக்குக் கூட அனுகுகின்றனர். கல்யாண ஏற்பாடு செய்யலாமா, காது குத்தலாமா, தங்கம் வாங்கலாமா, பேர்வைப்பு வைபவம் செய்யலாமா, பிறந்தநாள் கொண்டாடலாமா என்பன போன்ற கேள்விகள் எலெக்‌ஷன் கமிஷனுக்கு வருகிறதாம்.

இவ்வாறான விழாக்களுக்காக வாங்கப்படும் பரிசுகள், நகைகள், பொருட்கள் பொதுவாக கட்சிகள் மக்களுக்கு ஓட்டுப்போடக் கொடுப்பதால், இவ்வாறான குழப்பம் ஏற்பட்டிருக்கிறதாம்.

சீஃப் எலெக்‌ஷன் ஆபிசர் சஞ்சீவ் குமார் குடும்ப விழாக்களை நடத்த அனுமதி வாங்கத் தேவையில்லை என்று கூறியிருக்கிறார்.

IRNSS-1I – ISROவின் புதிய சாட்டிலைட் நாளை வின்னில் பறக்கிறது

ஸ்ரீஹரிகோட்டோ நாளை வியாழக்கிழமையன்று புதிய வழிசொல்லி (Navigation) செயற்கைக்கோளை வின்னில் ஏவத்தயாராகி வருகிறது. இந்த மாதத்தில் வின்னில் ஏவப்பட்ட இரண்டாவது செயற்கைக்கோள் இது.

சென்னையிலிருந்து 80 கிமீ தொலைவிலிருக்கும் சதிஷ் தாவன் வானாராய்ச்சி மைய்யத்திலிருந்து இந்த செயற்கைக்கோள் செலுத்தப்படும். 1A விலிருந்து 1G வரை, ஜுலை 2013லிருந்து ஏப்ரல் 2016வரை அனுப்பட்ட இந்தியாவில் பிற 7 செயற்கைக்கோள்களுடன் இது இணைந்து கொள்ளும்.

US GPSக்கு இணையாக வழிசொல்லி செயற்கோள்களை இந்தியாவின் இஸ்ரோ உருவாக்கியிருக்கிறது. இது பொதுமக்களுக்கும் மிலிட்டரிக்கும் இருக்கும் இடத்தைப் பற்றிய டேட்டாவைக் கொடுக்கும்.


  • ஒரு நபரின் (அல்லது பொருளின்) இடத்தையும், நேரத்தையும், பயனிக்கும் வழியையும் கண்டுபிடிக்க உதவும் சிக்னல்களை அனுப்பும். இப்பொழுது நாம் உபயொகப்படுத்தும் ஜிபிஎஸ் அமெரிக்காவினுடைய செயற்கொள்களால் நமக்குக் கிடைக்கிறது.
  • 1,425 எடையுள்ள இந்த செயற்கைக்கோள் 1A விலிருந்து 1G வரை, ஜுலை 2013லிருந்து ஏப்ரல் 2016வரை அனுப்பட்ட இந்தியாவில் பிற 7 செயற்கைக்கோள்களுடன் இது இணைந்து கொள்ளும்.
  • NavICயின் எட்டாவது செயற்கைக்கொளான இது, PSLV ராக்கட்டில் அனுப்பப்படும்.

மார்ச் 29 அன்றுதான் தொடர்புக்கான செயற்கைக்கோளை இஸ்ரோ அனுப்பியது. இது அனுப்பிய மூன்றாம் நாள் தன்னுடைய சுற்றுக்கு சென்றுவிட்டது, ஆனால் எந்த சிக்னல் அனுப்புவதை நிறுத்திக்கொண்டது.

இந்த செயற்கைக்கோள்கள் பத்துவருடம் வேலை செய்யும் என்று நம்பப்பட்டது ஆனால் IRNSS-1A வின் ருபீடியம் அடாமிக் கடிகாரம் அனுப்பிய இரண்டாவது ஆண்டே வேலை செய்யாமல் போய்விட்டது.

ஒரு நபரின் தற்போதைய இடத்தையோ அல்லது நேரத்தையோ சரியாக 24 மணி நேரமும் கணக்கிட இந்த ஏழு செயற்கைக்கோள்களும் சரியாக வேலைசெய்ய வேண்டும்.

கூகுள் ஹோம் ஸ்பீக்கர்ஸ் இந்தியாவில் அறிமுகம்

கூகுள் செவ்வாயன்று “பேசுவதை கேட்டு வேலை செய்யும்” (வாய்ஸ் ஆக்டிவேட்டட் ஸ்பீக்கர்ஸ்) ஸ்ப்பீக்கர்களான ஹோம் மற்றும் ஹோம் மினியை இன்று இந்தியாவில் அறிமுகம் செய்தது.

இதற்குப்பின்னால் இருக்கும் தொழிநுட்பம் கூகுள் அஸிஸ்டெண்ட். நீங்கள் உங்கள் ஆன்ட்ராய்டு ஃபோனில் ஓகே கூகுள் என்று சொன்னவுடன் உங்கள் உத்தரவிற்காகக் காத்திருக்கிறேன் மன்னா என்று முழித்துக்கொண்டு நீங்கள் தேடச்சொல்லுவதை தேடிக்கொண்டு வருகிறதே , அதே தான்.

இந்த சாதனம் அமேசானின் எக்கோவுடன் போட்டிபோடும். ஹோம் மற்றும் ஹோம் மினியின் விலை ₹9,999 மற்றும் ₹4,499 ஆகும். இவை ஆன்லைனில் தற்சமையம் ஃபிலிப்கார்ட்டில் மட்டுமே கிடைக்கும். 750 பிற கடைகளில் ரிலையன்ஸ் டிஜிட்டல் உட்பட் கிடைக்கும்.


இந்த மாதிரியான சாதனங்கள் பற்றிய கட்டுரையையும் படித்துவிடுங்கள்.

அந்த விளம்பரம் அலெக்சா என்ன பேச முடியும் என்பதைப் பற்றியதாக இருந்தாலும் – நிறைய டிஜிட்டல் உதவியாளர்கள் ஸ்மார்ட் ஸ்பீக்கர்கள் மூலம் நம் வீட்டிற்குள் வந்துவிட்ட இந்தக் கால கட்டத்தில், முக்கியமான கேள்வி, அலெக்சாவால் நாம் பேசுவதிலிருந்து என்னவெல்லாம் ஒட்டுக் கேட்டுத் தெரிந்து கொள்ள முடியும் என்பதே.

அலெக்சா, நீ என்ன ஒட்டுக் கேட்கிறாய்?