மீண்டும் பாரீஸ் பிஸினஸ் ட்ரிப்பில் வந்திருக்கிறேன். இந்த முறை கொஞ்சம் அதிக நாள் தஙக வேண்டும். இரண்டு மாதங்கள். இந்த முறை அனுஷாவையும் நிதியையும் அழைத்து வரவில்லை. வந்து மூன்று நாட்கள் தான் ஆகிறது அதற்குள் அவர்களை ரொம்பவும் மிஸ் செய்கிறேன். சாய்ங்காலம் ஆபீஸ் விட்டு வந்தவுடன் என் மகள் கையை நெற்றிக்கு அருகில் ஸ்ட்ரெயிட்டாக வைத்து சொல்லும் “ஹலோ டாடி”யை மிஸ் செய்கிறேன். அவள் என் கைகளைப் பிடித்து ‘லா லா லா’ பாடுவதை மிஸ் செய்கிறேன்.
Month: March 2010
டைனோசர்கள் ஏன் திடீரென்று அழிந்து போயின?
டைனோசர்கள் ஏன் திடீரென்று அழிந்து போயின என்பதற்கான காரணங்கள் பல சொல்லப்பட்டாலும், இப்பொழுது ஆதாரப்பூர்வமாக ஒரு காரணம் நிரூபிக்கப்பட்டிருக்கிறது.
65.5 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் சுமார் 15 கிமீ நீளமுள்ள ஒரு விண் கல் கல்ஃப் ஆப் மெக்சிகோவில் (Chicxulub on Mexico’s Yucatan Peninsula) வினாடிக்கு இருபது கிமீ வேகத்தில் வந்து மோதியது. இந்த மோதல் எப்படி இருந்தது தெரியுமா? 100 ட்ரில்லியன் டன்கள் எடைகொண்ட டிஎன்டியின் எரி சக்தியைப் போல; அதாவது ஹிரோஷிமா நாகசாகியில் போடப்பட்ட அணுகுண்டுகளைப் போல பில்லியன் மடங்கு அதிக சக்தி இந்த மோதலில் இருந்து வெளிப்பட்டதாம்.
இந்த மோதலால் ஏற்பட்ட 180 கிமீ விட்டம் கொண்ட குழி இன்றும் மெக்சிகோவில் இருக்கிறது. இந்த சம்பவம் கடும் எரி சக்தியை ஏற்படுத்தி அருகாமையில் இருந்த உயிரினங்களைக் கொன்றதோடு நில்லாமல் வேறொரு பக்கவிளைவையும் ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தால் ஏற்பட்ட புகை பூமியை ஒரு போர்வை போல மூடிக்கொண்டது. சூரியவெளிச்சம் உள்ளே வராமல் பூமி இருட்டில் மூழ்கிப்போனது. பூமியின் வெப்பம் அதிவேகமாகக் குறைந்து கடும் பனி பரவியது. இந்த திடீர் வெப்ப மாற்றத்தைத் தாங்கிக்கொள்ள இயலாமல் பல உயிரினங்கள் அத்திப்பட்டி போல மறைந்து போயின. டைனோசர்கள், பறக்கும் டெரோசெரஸ்கள், மிகப்பெரிதான இன்ன பிற கடல் வாழ் உயிரினங்கள் எல்லாம் அழிந்து போயின. ஆனால் இவைதான் மனிதன் உருவாவதற்கு வழிசெய்து கொடுத்தன என்பதை மறுக்க முடியாது. டைனோசர்கள் உயிரோடு இருந்திருந்தால் மனிதன் பரிணாம வளர்ச்சி அடைந்திருப்பானா என்பது கேள்விக்குறி தான்.
இந்த 20 வருட ஆராய்ச்சியை 41 நபர்கள் கொண்ட குழு ஒன்று மீண்டும் ஆராய்ந்து தீர்ப்பு சொல்லியிருக்கிறது.
>>
The review confirms that a unique layer of debris ejected from a crater is compositionally linked to the Mexican crater and is also coincident with rocks associated at the Cretaceous-Tertiary (K-T) boundary.
The team also says that an abundance of shocked quartz in rock layers across the world at the K-T boundary lends further weight to conclusions that a massive meteorite impact happened at the time of the mass extinction. This form of the mineral occurs when rocks have been hit very quickly by a massive force. It is only found at nuclear explosion sites and at asteroid impact sites
>>
Source
ஆயிரத்தில் ஒருவன்
காக்கோச் வா வா கட்ச்சு..காக்கோச் வா வா கட்ச்சு என்று என் மகள் பேசும் மழலையை கேட்டுக்கொண்டே இருக்கலாம். அப்படிக் கேட்டுக்கொண்டேயிருப்பதால் தான் அதிகம் பதிவு எழுத முடிவதில்லை. 🙂 காக்கோச் வா வா கட்ச்சு ?! காக் ரோச் வா வா வந்து கடிச்சு வை என்பது தான்.
*
ஆயிரத்தில் ஒருவன் பார்த்தேன். படம் பார்த்துவிட்டு; குழப்பத்தில் விக்கிப்பீடியாவில் என்ன தான்டா சொல்லவர்றாய்ங்க என்று என்னைத் தேடவைத்த முதல் தமிழ்ப்படம் இது தான். அதுக்காக புரியவில்லை என்று நான் சொல்லவரவில்லை. அது முக்கியமும் இல்லை. புரிந்து கொள்ளவேண்டும் என்கிற ஆர்வத்தை தூண்டியது தான் முக்கியம்.
பாடல்களை கிட்டத்தட்ட ஒரு வருடத்துக்கு முன்னர் கேட்ட பொழுதே எனக்கு மிகவும் பிடித்துவிட்டது. ஜூனில் என் மகளின் முதல் பிறந்தநாளின் போது இந்த படத்தின் பாடல்களைத் தான் திரும்பத் திரும்ப ஒலிக்கச்செய்து கொண்டிருந்தோம். பெம்மானே பாடல் அப்பொழுது நடந்து முடிந்திருந்த ஒரு துயரச்சம்பவத்தை நினைவூட்டியது. இன்றும் அந்த சம்பவத்தையும் பெம்மானே பாட்டையும் மனதும் மூளையும் இணைத்தே தான் பார்க்கின்றன. அதே போல உள்ளே தேடத்தேட பாடலும் கோவிந்தா கோவிந்தாவும் பீட் நம்பர்ஸ். நெல் ஆடிய நிலமெங்கே பாடல் இன்றும் எனக்கும் என் மனைவிக்கும் ஃபேவரிட் தான். ரீமா சென்னின் நடனம் அந்தப் பாடலுக்கு மிக அற்புதம்.மாலை நேரம் பாடல் சூப்பர் மெலடி ஆனால் படத்தில் இல்லை. இந்தப் படத்தில் இந்தப் பாடலுக்கு இடமில்லை.
*
சிற்பம் வடித்து கலையை வளர்த்த சோழர்கள் சோற்றுக்கு அடித்துக்கொள்வார்களா? புல்ஷிட் கேள்வி. தமிழ்நாட்டில இப்ப கொஞ்ச நாளா கிளப்பப்படுகிற பல ஸ்டுபிட் பிரச்சனைகளில் இதுவும் ஒன்று. இந்த மாதிரி அசட்டுத்தனமான கேள்வி கேக்குறவைங்கல சோறு தண்ணியில்லாம குகையில போட்டு ஆயிரம் வருசம் வெச்சாத்தான் தெரியும். சிற்பம் வடிச்சா சிற்பத்தையாய்யா சாப்பிட முடியும்? சோத்த வடிச்சாத்தனய்யா சோத்த சாப்பிடமுடியும்?
படம் ஆரம்பிக்கிறதுக்கு முன்னரே டைரக்டர் சொல்லிட்டாருல்ல இது கற்பனைக் கதைன்னு அப்புறம் என்ன? அதுவுமில்லாமல் பாலைவனத்தில் ஒரு குகைக்குள் ஆயிரம் வருடங்களாக எவர் கண்களிலும் படாமல் வாழும் மனிதர்கள் சோற்றுக்கு எங்கே போவார்கள்? கிடைக்கிறத அடிச்சு பிடுங்கத்தான் சொல்லும். ஏன் அவ்வளவு தூரம் போகனும். காட்ரினா புயல் வந்தப்போ உலகப் பணக்கார நாடான அமெரிக்காவில வசிக்கிற மக்கள் ப்ரட்டுக்கு அடிச்சிக்கிட்டத பாத்தோம்ல?
டைரக்டர் சோழ மன்னர்களுக்கு பதிலா கூழ மன்னர்கள் பூண்டிய மன்னர்கள் அப்படீன்னு பேரு வெச்சிருந்திருக்கலாம். இந்த டூபாக்கூர்களிடமிருந்து தப்பித்திருப்பார்.
*
அதுக்கப்புறம் இந்த சீன் கிளாடியேட்டர்ல வருது இந்த சீன் மம்மில வருது இந்த சீன் டம்மில வருதுன்னு சொல்லப்படுற குற்றச்சாட்டுகள். பல ஆயிரக்கணக்கான மக்களின் முன்னிலையில் கேம் ஷோ போல குண்டர்களுடன் சண்டையிடுவதும் சிங்கம் புலிகளுடன் சண்டையிடுவதும் குலேபகாவலியிலே எம் ஜி ஆர் செய்துவிட்டார். அப்ப கிளாடியேட்டர் குலேபகாவலியப் பார்த்து காப்பியடிக்கப்பட்டதா? மேலும் இந்த மாதிரியான கேம் ஷோ வரலாறு. ரோமில் அதன் சின்னம் சிதலடைந்து இன்றும் இருக்கிறது. வரலாற்றை எல்லோரும் படிப்பார்கள் அல்லவா? மேலும் ஒத்துக்கமுடியாத இன்னொரு வாதம் போர்க்காட்சிகள் 300 திரைப்படத்தைப் போல இருக்கின்றன என்பது. உலகத்தில வேறு எங்குமே போர் நடந்ததில்லைய்யாய்யா?!
*
இதெல்லாம் சரிதான் ஆனால் டைரக்டர் சொல்லவந்ததை ஒழுங்க சொல்லாம குழப்பிட்டாருல்ல? அவரு என்ன சொல்லவந்தாருன்னு உங்ககிட்ட சொன்னாரா? அவரு குழப்பித்தான் சொல்லனும்னு கூட நெனச்சிருக்கலாம் இல்ல? 😉 மேலும் எனக்கும் முதல் முறை படம் பாக்குறப்போ பல குழப்பங்கள் இருக்கத்தான் செஞ்சது. ஆனா மீண்டும் ஒரு முறை படம் பார்த்த பொழுது குழப்பம் தீர்ந்தது. ரெண்டு தடவ பாத்தாத்தான் புரியுமோன்னு நீங்க கேக்கறது புரியுது. ஆனா எத்தன மொக்க படத்த ரெண்டு தடவைக்கு மேல பாத்திருப்போம்?
*
வல்கரா இருக்கு. ம்ம்க்கும். தூள் படத்தில் இல்லாத வல்காரிட்டியாய்யா? அதெல்லாம் தலையில தூக்கிவெச்சுக் கொண்டாடினீங்க?
*
லாஜிக் இல்ல. மறுபடியும் அவ்வ்வ்வ்வ்வ்வ். தமிழா தமிழா இது உனக்கே ஓவராத்தெர்லயா?
*
இந்த மாதிரி குறை சொன்ன மக்கள் நிறைகளைப் பற்றிச் சொல்லவேயில்ல. அது ஆர்ட் டைரக்ஷன், ரீமாவின் நடிப்பு, கார்த்தியின் நடிப்பு, செல்வராகவனின் டைரக்ஷன் மற்றும் கோஆர்டினேசன்.
ஹீரோயின்கள் நடிக்கவேறு செய்வார்களா என்கிற அதிசயமாக கேட்கும் நிலையில் இருக்கும் நாம் ரீமாவின் நடிப்பை கண்டிப்பாக பாராட்டியே ஆகவேண்டும். ஓவர் ஆக்ட் இல்லாமல் ஜஸ்ட் லைக் தேட் நடிப்பு.
1. ரீமாவின் நடிப்பு: கார்த்தி “ஒரு காதலன் ஒரு காதலிகிட்ட கேக்குறமாதிரி கேளு”ன்னு சொன்னவுடனே ரீமா சென் ஒரு சிரிப்பு சிரிப்பார்ல அங்கேயே சிக்ஸர் அடிச்சிட்டாரு; சிலையைப் பார்த்தவுடன் அழுவது; சோழர்கள் ரீமா, கார்த்தி,ஆன்ட்ரியாவை கட்டிவைக்க கூட்டிக்கொண்டு போகும் பொழுது அங்கிருக்கும் பெண் ஒருவர் ரீமாவை பின்னந்தலையில் தட்டிவிடுவார் ரீமா திரும்பி நின்று முறைப்பது
2. ரீமாவின் நடனம்: நெல் ஆடிய நிலம் எங்கே பாடல். க்ளாசிக்.
3. ரீமாவின் ஆக்ஷன்: ரீமா இந்த கேரக்டரில் கொஞ்சம் கூட நெருடலாக இல்லாதது; இவர் செய்வார் என்று நம்மை நம்பவைத்தது.
கார்த்தி அஸ் யூஸ்வல்.
1. ஒரு எடுத்துக்காட்டு. கார்த்தி ரீமா ஆன்ட்ரியா மூவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு சட்டென்று ரீமா துப்பாக்கியின் ட்ரிக்கரை அழுத்திவிடுவார். அப்போ கார்த்தி முகத்தில் தெரியும் எக்ஸ்ப்ரஷன். உங்கள் நெற்றியில் துப்பாக்கியை வைத்து ட்ரிக்கரை அழுத்தி லக்கிலி ஒன்றும் ஆகாமல் இருந்தால் மட்டுமே உங்களுக்குப் புரியும். 😉
*
பார்த்திபன். பார்த்திபன் நல்ல செலக்ஷன். ஆனால் இந்த ரோலுக்கு தனுஷ் நடிப்பதாக இருந்ததாம். நடித்திருந்தால் அற்புதமாக இருந்திருக்கும். காமடியில்லீங்க நெஜம். தனுஷ் நடிச்சிருந்தாருன்னா பசி பஞ்சத்தில வாடுற மக்களின் உண்மையான அரசனா ரீமா கேலி பேசும் “சுருங்கிப்போன ரத்தம்” டயலாக்குக்கு ஏற்ற மாதிரி இருந்திருப்பார்.
பார்த்திபனின் உருவம் மட்டுமே ஒரு நெருடல். ஆனால் சுயநல அரசன் அல்லது பாசக்கார மக்கள் என்ற வாதத்தால் அவர் மட்டும் பெருத்திருக்கிறார் என்று ஒத்துக்கொள்ளலாம். பார்த்திபனின் “நெல் ஆடிய” நடனம் நன்றாக இருந்தது.
*
செல்வராகவன். கையக் கொடுங்க சார். கலக்கிட்டீங்க. “காதல் கொண்டேன்” படத்திலிருந்தே உங்களோட ஃபேன் நான். மணிரத்னத்துக்கு அப்புறம் நீங்க தான்னு சிலர் சொல்லுவாங்க. அவங்க சொல்லட்டும் அதெல்லாம் கண்டுக்காதீங்க..அது காலவரிசைப்படுத்தினா மட்டுமே பொருந்தும்.
7ஜி ரெயின்போ காலனியில் க்ளைமேக்ஸில் ஹீரோ உண்மையை மறைத்து போலீசிடம் பொய் சொல்லும் போது ஹீரோயினின் அப்பா “என் பொண்ணு தெய்வம்பா தெய்வம்” என்று கதறும் பொழுது, அருகில் இருக்கும் ஹீரோயினின் அம்மா ஹீரோவின் தலையில் ரகசியமாக ஆசீர்வாதம் செய்கிற அந்த காட்சியமைப்பு ஒன்றே நான் மேற்கூறியது உண்மைதான் என்று பொருந்தும்.டைரக்ஷன் இருக்கட்டும் இவ்வளவு நபர்களை வைத்துக்கொண்டு எப்படி கோஆர்டினேட் செஞ்சீங்க?
செல்வா மென் மேலும் கலக்குங்க. ஒரு இன்வஸ்டிகேட்டிவ் த்ரில்லர் தமிழ்ல கொடுங்க செல்வா.
*
இவ்வளவு தூரம் துணிச்சலா ஒரு படம் எடுத்திருக்கீங்க, இன்னும் ஏன் பாடல்கள் வெக்கறீங்க? பாடல்கள் இருந்தும் ஆயிரத்தில் ஒருவன் படு ஸ்பீடாப்போச்சுங்கறது தான் உண்மை. ஆனா பாடல்கள் இல்லீன்னா படம் இன்னும் நல்லாயிருக்கும்.
*
நல்ல முயற்சி என்றெல்லாம் சொல்லி இந்த முயற்சியை பத்தோடு பதினொன்னா ஆக்கவெல்லாம் விரும்பவில்லை.
அட்டகாசமான படம்.
சன்டீவியின் அத்துமீறல்
ஆறு வருடங்களுக்கு (ஃபெப்ரவரி 1 2004 அன்று) முன் ஜானட் ஜாக்சனும் ஜஸ்டின் டிம்பர்லேக்கும் சூப்பர் பவுல் ஃபுட்பால் போட்டியில் நடனமாடிக்கொண்டிருந்த பொழுது ஜானட்டின் ஒரு பக்க மார்பு துணியை உணர்ச்சி வேகத்தில் தெரியாமல் கிழித்து விட்டார் டிம்பர்லேக். (தெரிந்தே செய்தார்; அவருடைய பாடலில் இது போன்றதொரு வரி வருகிறது “Hurry up ’cause you’re taking too long… better have you naked by the end of this song” என்று வாதிடுபவர்களும் இருக்கிறார்கள் )
இந்த வரலாற்று அம்சம் பொருந்திய சம்பவம் நடந்தது வெறும் அரை செகன்ட் மட்டுமே. இந்த super bowl நிகழ்ச்சியை நேரடியாக ஒளிபரப்பிக்கொண்டிருந்த சிபிஎஸ் தொலைக்காட்சி சேனல் இந்த சம்பவத்தையும் ஒளிபரப்பிவிட்டது.
மீடியாக்களை கண்காணிக்கும் பிடிசி இந்த சம்பவம் ஒளிபரப்பானதைக் கண்டித்து இன்டீசன்சி கம்ப்ளெயன்ட் (idenceny complaint) வழக்கை பெடரல் கோர்ட்டில் (FCC) தாக்கல் செய்தது. இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பானதைத் தொடர்ந்து 540,000 புகார்கள் அமெரிக்க மக்களால் தாக்கல் செய்யப்பட்டது. கனடாவில் மக்கள் புகார் செய்தனர்.
வழக்கை விசாரித்த ஃபெடரல் கோர்ட் இதை ஒளிபரப்பிய சிபிஎஸ் க்கு 550000 டாலர் அபராதம் விதித்தது. இந்த வழக்கு இன்றும் நிலுலையில் இருக்கிறது என்பது வேறு விசயம்.
நேரடி ஒளிபரப்பில் (திட்டமிடாமல்) நடந்த தற்செயல் நிகழ்ச்சிக்கே அமெரிக்க மக்கள் 540,000 புகார்களை பதிவு செய்தனர். 550,000 டாலர் அபராதம் விதிக்கப்பட்டது.
ஆனால் சன் டீவி ஒளிபரப்பிய நித்தியானந்தர் ரஞ்சிதா சம்பந்தப்பட்ட காட்சிகள் அப்பட்டமான அத்துமீறல். திட்டமிட்ட செயல். Explicit sexual content. ப்ரைம் டைம் செய்தி நேரத்தில் ஒரு வீட்டில் எல்லோரும் அமர்ந்து செய்தி பார்த்துக்கொண்டிருக்கும் பொழுது எப்படி இவ்வாறான செக்ஸ் படத்தை ஒளிபரப்பினார்கள்? ஒளி ஒலி பரப்பியது குற்றமில்லையா?
முதலில் சன்டீவியின் மேல் தானே வழக்கு பதிவு செய்யவேண்டும்? குஷ்புவின் மீதும் ஜெயராமின் மீதும் நித்தியானந்தர் மீதும் வன்முறைகளை கட்டவிழ்த்து விடும் மக்கள் முதலில் தங்களது வரவெற்பறையில் என்ன நடக்கிறது என்று பார்க்கவேண்டும்.
நித்தியானந்தர் செய்தது குற்றமா இல்லையா என்பது அவரை பின்பற்றுபவர்களின் நம்பிக்கை சார்ந்தது;அது அவர்களை மட்டுமே பாதிக்கும்; ஆனால் சன்டீவி செய்தது எல்லோரையும் பாதிக்கும் ஒரு அப்பட்டமான அத்துமீறல்.
Do we have parental television council or media watch dog group here? மீடியாக்களை கண்காணிக்கும் குழு இந்தியாவில் இருக்கிறதா இல்லையா? ஏனென்றால் நமது குழந்தைகளும் டீவி பார்க்கிறார்கள்.