தேர்வுகள் – ஏர் டெக்கான் – லவ் ஸ்டோரி

த்தாவது ரிசல்ட் என்னைக்குப்பா வருது? இன்னைக்குன்னு சொல்றாங்க. நாளைக்குன்னு சொல்றாங்க. இல்ல இல்ல 31ஆம் தேதின்னு சொல்றாங்க. ஏன் ஒரு தேதி சொல்லமாட்டேன்றாங்க? இன்னைக்கு காலைல ஆறு மணி நியூஸ்ல (இந்த outlook issue : Dynasty At War ல தமிழ்நாட்டுல டீவின்னா சன் டீவிதான்ங்கற அளவுக்கு monopoly இருக்குன்னு சொல்லியிருந்தாங்க. அதனால நியூஸ்ன்னா சன்நியூஸ் தான் -derived result- என்பதால நான் இங்கே குறிப்பிட்டு சன்நியூஸ்ன்னு சொல்லல!) இன்னைக்கு ரிசல்ட் வருதுன்னு சொல்லியிருக்காங்க. ஆனா அதுக்கப்புறம் 8:30 மணி நியூஸ்ல ரிசல்ட் பத்தி ஒன்னும் சொல்லல. வேறு எந்த பேப்பரிலும் செய்தி இல்ல. நான் இணையத்தில அலசிட்டேன். இன்னைக்கு இல்லப்பா. (இதை எழுதும் வரைக்கும் இல்ல!). நிறைய ஸ்டூடண்ட்ஸ் தூக்கம் இல்லாம இருக்காங்க. ரிசல்ட நினைச்சு. ப்ளீஸ் ரிசல்ட் என்னைக்குன்னு சொல்லிடுங்க. சிவாஜி பட ரிலீஸ் தேதி மாதிரி சஸ்பென்ஸ்ல வெக்காதீங்க.

***

என்னால இந்த exam விசயத்தில ஒன்னே ஒன்ன புரிஞ்சுக்கவே முடியல. அது எப்படி out-of-syllabus ல இருந்து question வருது? ஒழுங்கா syllabus குள்ள இருந்து கேள்விகள் எடுப்பதில் அப்படி என்ன சிக்கல் இருக்கிறது? அப்படி என்ன கஷ்டம் இருக்கிறது? என்ன பள்ளிக்கூடம் மாதிரியா மாசா மாசம் (Midterm, revision) exam வெச்சு question கொடுக்கறீங்க? வருசத்து ஒரு முறைதான உங்கள question எடுக்க சொல்றாங்க? அதக்கூட ஒழுங்கா செய்யமுடியாதா உங்களால? question paper prepare செய்த பிறகு அத cross-check பண்ணக்கூட யாரும் இல்லையா? இல்ல cross-check பண்ணியும் கண்டுபிடிக்க முடியாத அளவுக்கா syllabus இருக்கு?

out-of-syllabusல இருந்து கேள்வி வந்ததுன்னா மார்க் கொடுத்தடறீங்க. சரி. ஆனா இந்த மார்க் எல்லாருக்கும்ல போகுது. ஒழுங்கா படிச்சவங்க, படிக்காதவங்க இப்படி எல்லாருக்கும்ல மார்க் கிடைக்குது. உங்களுக்கே தெரியும், cut-off மார்க் பத்தி. 0.01 மார்க் வித்தியாசத்துல எத்தன பேர் இருப்பாங்கன்னு? அப்படி இருக்கும் போது 12 மார்க் சும்மா கொடுக்கறதுன்னா? அதுவும் அந்த கேள்வி அட்டண்ட் பண்ணியிருந்தா 12 மார்க். இல்லீன்னா நீ என்ன எழுதனியோ அதுக்குதான் மார்க். It surely makes some difference, இல்லியா?

இப்ப நுழைவுத்தேர்வும் கிடையாது. கஷ்டம். இப்போ proffessional admission கிடைப்பது US H1B மாதிரி ஆகிடுச்சு. பம்ப்பர் லாட்டரி. குலுக்கல் முறை. இரண்டு பேர் ஒரே கட்-ஆப் வைத்திருந்தால் (ஒரே caste போன்ற எல்லா விசயமும்) குலுக்கல் முறைதான். முன்பும் இதே முறைதான் என்றாலும், இரண்டும் பேரி ஒரே கட்-ஆப் ஒரே காஸ்ட் என்றிருப்பது அரிது. இந்த ஆண்டு இது ரொம்ப ரொம்ப சாத்தியம்.

யோசித்துப் பாருங்கள். குலுக்கல் முறையில் ஒருவன் doctor seatஐ இழப்பதை!

***

question paper out ஆவதைக்கூட ஒரு கணக்கில் சேர்த்துவிடலாம். ஏனென்றால் எல்லா செண்டருக்கும் question paper அனுப்ப வேண்டும். எங்கோ ஒரு இடத்தில் தவறு நடந்து விட வாய்ப்பிருக்கிறது. IPS, IAS தேர்வுகளின் கேள்வித்தாள்களே out ஆகும் போது SSLC தேர்வு கேள்வித்தாள்கள் எம்மாத்திரம்? (ஆனால் அதையும் தவிர்க்கவேண்டும்.) ஆனால் இந்த out-of-syllabusஐ என்னால் ஒத்துக்கொள்ளவே முடியவில்லை. QA team ஒன்னு செட் பண்ணுங்கப்பா.

Computer Aided Test வைப்பதன் மூலமே question paper outஐ தடுக்க முடியும். அதற்காக எல்லா மாணவர்களுக்கும் computer கொடுக்க முடியுமா? ஆனால் ஒவ்வொரு exam hallக்கும் ஒரு computer கொடுக்க முடியுமே? பத்து மணிக்கு பரிட்சை என்றால், கரெக்ட்டாக காலை மணி 9:30க்குத்தான் question paper serverஐயே ரிலீஸ் செய்ய வேண்டும். ஒவ்வொரு ஹாலும் உடனே மாணவர்களுக்கு print-outs எடுத்துக் கொடுக்கலாம். அப்படி செய்தால் question-paper outஐ control செய்வது எளிது. ஆனால் நடைமுறை சிக்கல்கள் -budget problem- நிறைய இருக்கிறது. atleast 12th examக்காவது implement செய்யலாம்!

***

ஏர் டெக்கானில் செக் இன் செய்து பொர்டிங் பாஸ் வாங்குவதற்கு நான் கிட்டத்தட்ட ஒன்றரை மணி நேரம் நின்றிருக்கிறேன். க்யூவில் இடைச்செறுகலாக வந்தவர்களை திருப்பி க்யூவின் பின்னால் அனுப்பினேன். ஒரு வழியாக கவுண்ட்டருக்கு வந்து என்னுடைய டிக்கெட்டைக் கொடுத்தபோது, ஏர் டெக்கானில் வேலை செய்யும் ஒருவர், தனக்கு தெரிந்த நபருக்கு உடனே செக்கின் செய்து போர்டிங் பாஸ் கொடுக்குமாறு வந்து எனக்கு முன்னால் டிக்கெட்டை நீட்டினார். (கவனிக்க, நான் டிக்கெட் கொடுத்துவிட்டு, அதே கவுண்ட்டரில், போர்டிங் பாஸ் பெறுவதற்காக நின்று கொண்டிருக்கிறேன்.) நான் வாங்காதீர்கள் என்றேன். என்னைப்போலவே இன்ன பிற மக்களும் சொன்னார்கள். யார் கேட்கிறார்கள்?

செக் இன் செய்து கொண்டிருந்த நபர் கூட சிறிதளவு தயங்கினார். ஆனா ரெக்கமண்ட் செய்த அந்த நபர் சிறிதும் தயங்கவில்லை. அவருக்கு ஆதரவாக அங்கே நின்று கொண்டிருந்த இன்னொரு பெண்மணி, அந்த கவுண்ட்டரில் luggage போட்டுக்கோடா, இந்த கவுண்ட்டரில் செக்கின் செய்து கொடுடா (சரளமாக அனைவரையும் வாடாபோடா -செல்லமாக- என்று சொல்லிக்கொண்டிருந்தார்!) என்று சரளமாக ஐடியாக்களை அள்ளி வீசிக்கொண்டிருந்தார்.

நான் பார்த்துக்கொண்டிருந்த போதே என் கவுண்ட்டர் ஆபிசர், அவரது டிக்கெட்டை வாங்கி, என்னுடைய டிக்கெட்டை கெடப்பில் போட்டுவிட்டு, அவருக்கு முதலில் போர்டிங் பாஸ் கொடுத்தார். என்னால் “திஸ் இஸ் டோட்டலி அன்·பேர்” என்று மட்டும் தான் சொல்லமுடிந்தது.

மக்களை க்யூவில் வாருங்கள் என்று சொன்னேன். அவர்கள் (மனதுக்குள் திட்டினாலும்) கேட்டுக்கொண்டார்கள். ஆனால் அதிகாரிகளே தவறு செய்யும் போது நான் என்ன செய்யமுடியும்? Atleast, I can point it out here. அவருடைய பெயர் என்னவென்று கேட்டு வைத்துக்கொண்டேன். அவ்வளவே. சந்தர்ப்பம் கிடைக்கும் போது பார்த்துக்கொள்ளலாம்.

அந்த ஆபீசர் ஒரு வயதானவருக்கு ஹெல்ப் செய்திருந்தால் கூட கவலையில்லை. அல்லது எங்களுக்கு முன்னால் போகும் வேறு ப்ளைட்டுக்கு போகிறவருக்கு “ஐயோ நேரம் இல்லையே செக் இன் செய்து கொள்ளட்டும் ப்ளீஸ்” என்று சொல்லியிருந்தால் கூட பரவாயில்லை. அவர் எங்கள் ப்ளைட்டில் எங்களுடனே வரப்போகிற நடுத்தர வயதுக்காரர். கை கால்கள் எல்லாம் நன்றாகத்தான் இருந்தது.

எனக்கு ஒரே ஒரு கோபம் தான் : அதிகாலையில இருந்து, ஒன்றரை மணி நேரம் வியர்த்து விறுவிறுத்து நிக்கறவனெல்லாம் கேணையனா?

***

ஏர்போர்ட் காபி நன்றாக இருந்தது. ஆனால் ரசித்துக்குடிக்க நேரம் இல்லை. எனக்கு ப்ளைட் ஏறி விட்டால் போது என்றிருந்தது.

ப்ளைட் மிகவும் சிறியது. மிகவும் சிறியது. ஒரு ப்ரைவேட் ஜெட் மாதிரி இருந்தது. ஒரு பஸ்ஸைப் போலவே இருந்தது. ப்ளைட்டைப் பார்த்ததும் எனக்கு, வேறு பயம் வந்துவிட்டது இப்போது. ஒழுங்கா மதுரைக்கு போயிருமா? இல்ல நடுவானத்துல, ஆப் ஆயிடுச்சு, பிளீஸ் யாராவது இறங்கி தள்ளிவிடுங்கன்னு சொல்லுவாங்களோன்னு நினெச்சேன்.

எங்க எல்லோருடைய மூடையும் என்னோட அக்கா பொண்ணு மாற்றினாள். வயது ஏழு. முதன் முதல் ப்ளைட் அனுபவம். ப்ளைட்டில் ஏறியவுடன் வேகவேகமாக எனக்கு ஜன்னல் சீட் என்று சொல்லி ஜன்னலோரமாக உட்கார்ந்து கொண்டாள். கொஞ்ச நேரத்தில் சத்தமாக “மாமா. இந்த ஜன்னலை திறந்து விடுங்களேன். ப்ளீஸ்” என்றாள். கிட்டத்தட்ட ப்ளைட்ல இருந்தவங்க எல்லாரும் சிரிச்சுட்டாங்க. அவளுக்கு ஜென்னலை திறக்கமுடியவில்லை என்று பயங்கர வருத்தம்.

ஏழு வயதில், அவளால் ப்ளைட் ஏற முடிந்தது, கண்டிப்பாக ஏர்-டெக்கானின் சாதனை.

***

சிங்கப்பூரிலிருந்து சென்னை செல்லும் போது john grisham எழுதிய the rain maker படித்து முடித்தேன். ஏற்கனவே 100 பக்கங்கள் படித்திருந்தேன். மிச்சத்தை ப்ளைட்டிலேயே படித்து முடித்தேன். பக்கத்தில் உட்கர்ந்திருந்த சிவா (ஆஸ்திரேலியாவில் இருந்த் வருகிறவர்) வுடன் கூட அதிகம் பேசவில்லை.

the rain maker is witty. நிறைய இடத்தில் நன்றாகவே வாய்விட்டு சிரித்தேன். அதுவும் அந்த arguments section. john grishamமின் மற்ற நாவல்கள் போல twists and turns இல்லை. ஹீரோ பெரிய ஹீரோவும் இல்லை. no miracles. ஆனால் நாவல் தோறும் இழையோடிக்கிடந்த அந்த நகைச்சுவை என்னை கடைசிப் பக்கம் வரை -தொடர்ந்து- படிக்க வைத்தது.

ஒரு young lawyer -just outta college!- எப்படி மிகப்பெரிய insurance companyஐ எதிர்த்து போராடி ஒரு அப்பாவி அம்மாவுக்கு நியாயம் வாங்கித்தருகிறார் என்பதைப்பற்றியது. Insurance policy எடுத்ததற்கு அப்புறம் அந்த அம்மாவின் பையன் leukemiaவால் பாதிக்கப்படுகிறான். நியாயப்படி காப்பீட்டுத் தொகை அந்த insurance கம்பெனி வழங்கவேண்டும். ஆனால் ஏதேதோ காரணம் காட்டி கம்பெனி மறுக்கிறது. மறுத்தது மட்டுமில்லாது, அந்த அம்மாவை, you must be stupid stupid stupid என்கிறது. அந்த அம்மாவோ கோர்ட்டுக்கு செல்ல வழியில்லாதவர். பணமில்லாதவர். அந்த அம்மாவின் பையன் இறந்து போகிறான். insurance company காப்பீட்டு தொகை வழங்கியிருந்தால் அவன் உயிரோடு இருந்திருப்பான்.

எப்படி ஹீரோ வாதாடி இழப்பீட்டு தொகை வாங்கித்தந்து அந்த insurance company செய்த தவறையும் வெளிச்சத்துக்கு கொண்டுவருகிறார் என்பதே மிச்சம். so witty at places!

***

இந்த நாவல் முடித்த கையோடு Eric Segal எழுதிய Love Story ஆரம்பித்தேன். கொஞ்சம் மெதுவாகவே படிக்க முடிந்தது. போன சனிக்கிழமை இரவு சிங்கிள் சிட்டிங்கில் மிச்சமிருந்த 150 பக்கங்களையும் படித்து முடித்தேன். Very touching but original love story. மனசுக்கு சங்கடமாக போய்விட்டது. Very much impressive.

நான் படித்த கடைசி இரு நாவல்களும் leukemia சம்பந்தப்பட்டது. கதை என்னவோ usual வாழ்வேமாயம் தான் என்றாலும், கதை சொல்லப்பட்ட விதம் மிக அருமை. I liked the dialogues very much. Very Natural and Spontaneous. I loved the story. But who didnt?

அதில் அடிக்கடி வரும் ஒரு டயலாக் : Love means you never have to say you’re sorry!

***

எனக்கு பிடித்த ஒரு பகுதி, ‘லவ் ஸ்டோரி’ நாவலில் இருந்து:

‘Who said I wasn’t going to keep at it, for God’s
sake? I’m gonna study with Nadia Boulanger, aren’t I?’
What the hell was she talking about?’ From the way she
immediately shut up, I sensed this was something she had not
intended to mention.
‘Who?’ I asked.
‘Nadia Boulanger. A famous music teacher. In Paris.’
She said those last two words rather quickly.
‘In Paris?’ I asked, rather slowly.
‘She takes very few American pupils. I was lucky. I
got a good scholarship too.’?’Jennifer – you are going to Paris?’
‘I’ve never seen Europe. I can hardly wait.’
I grabbed her by the shoulders. Maybe I was too rough,
I don’t know.
‘Hey – how long have you known this?’
For once in her life, Jenny couldn’t look me square in
the eye.
‘Ollie, don’t be stupid,’ she said. ‘It’s inevitable.’
‘What’s inevitable?’
‘We graduate and we go our separate ways. You’ll go to
Law school – ‘
‘Wait a minute – what are you talking about?’
Now she looked me in the eye. And her face was sad.
‘Ollie, you’re a preppie millionaire, and I’m a social
zero.’
I was still holding onto her shoulders.
‘What the hell does that have to do with separate
ways? We’re together now, we’re happy.’
‘Ollie, don’t be stupid,’ she repeated. ‘Harvard is
like Santa’s Christmas bag. You can stuff any crazy kind of
toy into it. But when the holiday’s over, they shake you out
. . . ‘ She hesitated.
‘ . . . and you gotta go back where you belong.’
‘You mean you’re going to bake cookies in Cranston,
Rhode Island?’
I was saying desperate things.
‘Pastries,’ she said. ‘And don’t make fun of my
fatter.’
‘Then don’t leave me, Jenny. Please.’
‘What about my scholarship? What about Paris, which
I’ve never seen in my whole goddamn life?’
‘What about our marriage?’
It was I who spoke those words, although for a split
second I wasn’t sure I really had.
‘Who said anything about marriage?’
‘Me. I’m saying it now.’
‘You want to marry me?’
‘Yes.’
She tilted her head, did not smile, but merely
inquired:
‘Why?’
I looked her straight in the eye.
‘Because,’ I said.
‘Oh,’ she said. ‘That’s a very good reason.’?She took my arm (not my sleeve this time), and we
walked along the river. There was nothing more to say,really.

Thanks: Erich Segal
***

ரிச்சர்ட்கியர்-கீதாஞ்சலி-சரவணா ஸ்டோர்ஸ்-ஏர் டெக்கான்

ரிச்சர்ட்கியர்-கீதாஞ்சலி-சரவணா ஸ்டோர்ஸ்-ஏர் டெக்கான்

போன பதிவைப் படித்துவிட்டு என் தோழி ஒருத்தி சொன்னாள்: “ஏன் அவங்க உனக்கு செல்போன் குடுக்க மாட்டேன்னு சொன்னாங்க? தூக்கிட்டு ஓடிடுவேன்னா? உன்னப்பாத்தா திருடன் மாதிரியா இருக்கு? அதுக்கு தான் சொல்றது ஊருக்குப் போகும் போது ஒழுங்கா முடிய வெட்டிட்டுப் போன்னு!”

நான் கொஞ்சம் நீண்ட தலைமுடி வைத்திருந்தேன் என்பது குறிப்பிடத்தக்கது. அதனால் கூட அவர்கள் செல்போன் குடுக்க மறுத்திருக்கலாம். நீண்ட தலைமுடிவைத்திருப்பவர்கள் எல்லாம் ரெமோக்கள் அல்ல.

***

ஒரு வழியாக ஸ்டேஷனை விட்டு வெளியேறி கையில் வைத்திருந்த சில நாணயங்களில் ஒரு ரூபாய் நாணயம் ஒன்றைத்தேடி கண்டுபிடித்து வீட்டுக்கு டயல் செய்து ஆறு மணியாகும் என்பதை உறுதிப்படுத்திக்கொண்டு, ஒரு டீ சாப்பிட்டேன். மாம்பலம் ஸ்டேசனுக்கு பக்கத்தில் இருக்கும் ரைட் கட்டிங்கில் இருந்த ஒரு டீ கடையில். அதிகாலையில் சூடாக டீ சாப்பிடுவது ஒரு சுகம் தான்.

ஒரு இந்தியா டுடே வாங்கிக்கொண்டேன். ரிச்சர்ட்கியரின் முத்தத்தை அடிப்படையாக வைத்து இந்திய கலாச்சாரத்தைக் காப்பவர்களை (அல்லது அப்படி சொல்லிக்கொண்டு அட்டகாசம் செய்பவர்களை) கேள்விகள் கேட்டிருந்தனர்.

ரிச்சர்ட்கியர் செய்தது தவறா அல்லது BigBrother அம்மணி சிரித்துக்கொண்டே ரசித்தது (உணமையில் ரசித்தாரா என்பது அவர் மட்டுமே அறிந்த உண்மை!) தவறா என்பது சாலமன் பாப்பையாவால் தீர்ப்பு சொல்லப்படவேண்டிய ஒன்று. ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம். ரிச்சர்ட்கியர் மகா ரசிகன். நான் ஆபீஸில் இருக்கும் போது எனக்கு இந்த கிளிப்பிங் ஈமெயிலில் வந்தது. பார்த்தவுடன் எனக்கு ஏனோ எரிச்சல் எரிச்சலாக வந்தது. மாஸ்டர் ஆம்லேட்! (இது நான் காலேஜ் படிக்கும் போது famous dialogue. பசங்க யாராவது கடலை போடறதப் பாத்தா, நமக்கு சூடா வயித்துல ஒரு அனல் எழும்பும் பாருங்க, அந்த ஹீட்டில் ஒரு முட்டைய உடச்சு ஊத்தினா அது உடனே ஆம்லேட் ஆயிடுமாம்! அவ்ளோ ஹீட்!)

Viewers Envy! Kissers Pride! What about Kissie?

***

கீதாஞ்சலியில் என்ன ஸ்பெஷல் என்று தெரியவில்லை. அதிகாலை நான்கு நாற்பதுக்கு receptionistஐ எழுப்பிய போது, வேண்டா வெறுப்பாக அவர் ரூம் போட்டுக்கொடுத்தது கூட இருக்கலாம். அல்லது ஏசி ரூம் புக் பண்ணியும் துண்டு, சோப்பு கூட குடுக்காது இருக்கலாம். கதவைத் திறந்தவுடன் ஓடிய கரப்பான்பூச்சிகளாக இருக்கலாம். இல்லை ஏசி ரூமில் எவ்வளவு நேரம் ஓடியும் கொஞ்சமும் குளிராத ஏசியாக இருக்கலாம். டீவி ரிமோட் காலை ஏழு மணிக்கு கேட்டு, கீழே ரிசப்ஷனில் மறுமுறை ஞாபகப்படுத்தியும் நாங்கள் கிளம்பும் வரை ரிமோட் கொடுக்காதது கூட இருக்கலாம். டீ சொல்லுவதற்காக ரிசப்ஷனுக்கு கால் செய்து, “சார் ஒரு டீ..” என்று சொல்லி முடிப்பதற்குள் “ஏழுக்கு கால் பண்ணுங்க” என்று சொல்லி டப்பென்று வைத்ததாக இருக்கலாம். நாங்கள் கேட்டிருந்த சுமோ வருகிறது வருகிறது என்று சொல்லி ஒரு மணி நேரம் வீணடித்து கடைசியில் கூலாக “வராதாம்” என்று சொன்னது கூட இருக்கலாம்.

கீதாஞ்சலி fast foods இல் நாலு இட்லி ஒரு தோசை சொல்லிவிட்டு அரைமணி நேரமாக நின்று கொண்டிருந்தேன். இத்தனைக்கும் கூட்டம் அதிகம் இல்லை. பொறுமையிழந்து அங்கே காபி போட்டுக்கொண்டிருந்த பையனிடம் சென்று “ஹலோ. நான் நான்கு இட்லி ஒரு தோசை சொல்லிருந்தேன். இன்னும் வரல என்னாச்சு” பதில்லில்லை. அவன் நிமிர்ந்து கூட பார்க்கவில்லை. “ஹலோ” பதிலில்லை. “தம்பி” பதிலில்லை. நிமிர்ந்துகூட பார்க்கவில்லை. உன் கடமை உணர்ச்சிக்கு அளவே இல்லையாடா? “தம்பி” நிமிர்ந்து பார்த்தான் “என்ன?” you see, just என்ன. (நான் தம்பி என்று மரியாதையாக கூப்பிட்டேன். நான் கண்டிப்பாக அவனை விட வயதில் மூத்தவனாகத்தான் இருப்பேன்.) “நான் நாலு இட்லி ஒரு தோசை பார்சல் சொல்லிருந்தேன்..” என்று நான் சொல்லிமுடிப்பதற்குள், அவன் “சொல்ட்டேல்ல. கொடுப்பாங்க. போ” என்றான். எனக்கு பளார் என்று ஒன்று விடலாமா என்று தோன்றியது. பிறகும் அவன் கையில் கொதித்துக்கொண்டிருந்த பால் என்னை அச்சப்படுத்தியது. முகத்தில ஊத்தினாலும் ஊத்திருவான். நகர்ந்து safeஆக நின்று கொண்டேன்.

***

சரவணா ஸ்டோர்ஸ் கண்டிப்பாக போயே ஆக வேண்டும் என்று என் அக்கா அடம் பிடிக்கவே, வேறு வழியில்லாமல் சென்றோம். கூட்டமோ கூட்டம். எனக்கு பிரமிப்பாக இருந்தது. இன்று வரை அந்த பிரமிப்பு அகலவில்லை. அடேயப்பா எவ்வளவு items. எத்தனை salespersons. எத்தனை மக்கள் கூட்டம். எப்படி சமாளிப்பார்கள்? சமாளிக்கிறார்கள்? விலையும் குறைவு என்று என் அக்கா சொன்னார். கூட்டத்திலும் இரைச்சலிலும் தள்ளுமுள்ளுவிலும் என்னால் நிற்க முடியவில்லை. ஆனால் நாள் முழுதும் நின்று கொண்டு, வாடிக்கையாளர்களின் “இதே ஸ்கூல் பேக் வேணும் ஆனா முன் பக்கம் ஜிப் இல்லாம ராமர் பச்சை கலர்ல வேணும். இருக்கா?” போன்ற stupid கேள்விகளுக்கு சலைக்காமல் முகத்தில் சிரிப்புடன் பதில் சொல்லிக்கொண்டிருக்கும் அந்த salespersonகளுக்கு ஒரு பெரிய சல்யூட்.

***

சரவணா ஸ்டோர்ஸில் purchase கூட பண்ணிவிடலாம் ஆனால் லிப்ட் கிடைப்பது தான் கஷ்டம். சிங்கப்பூரில் வீடு கிடைப்பதை விட கஷ்டமானதாகத் தோன்றியது எனக்கு. சரி படிகளில் இறங்கிவிடலாம் என்று நினைத்தபோது அம்மா எப்படி இறங்குவார்கள் என்ற எண்ணம் தோன்றியது.

காத்திருந்தோம். லிப்ட் வந்தது. எங்கள் floorஇல் இருந்து கொஞ்சம் பேர் மட்டுமே ஏற முடிந்தது. நாங்கள் ஏறவில்லை. லீப்ட் overload. பூட்ட முடியவில்லை. லிப்ட் ஆபரேட் செய்யும் பையன் “please யாராவது ரெண்டு பேர் இறங்குங்க.” என்றான். எங்களுக்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லாத மாதிரி நின்றிருந்தனர் மக்கள். “ரெண்டு பேர் இறங்குங்க. அப்பத்தான் லிப்ட் போகும்” ஒரு அசைவும் இல்லை. முன்னாள் சில க்கேரி பேக்குகளுடன் நின்றிருந்த நடுத்தர வயது நபரின் முகம் எனக்கு இன்னும் நன்றாக ஞாபகம் இருக்கிறது. அவரது முகமும் எனக்கென்ன வந்தது என்ற அந்த noexpression-expressionம். வாவ்.

அப்புறம் என் அண்ணன் இறங்குங்களேன் ன்னு ஒரு சவுண்ட் கொடுத்ததற்கப்புறம் தான் இறங்கினர். ஏன் இறங்கமறுத்தனர்? லிப்ட் ஓவர் லோட் என்று தெரியாதா? அதுதான் ஆபரேட்டர் சொல்கிறாரே. அப்புறமும் தைரியமாக எப்படி நிற்கின்றனர். லிப்ட் overloadஇல் எங்காவது பாதியிலே நின்று விட்டால்? அப்பொழுது என்ன செய்வது?

எனக்கு ஓவர்லோடாக சென்ற ஷேர் ஆட்டோ ரயில்வே க்ராஸிங்கில் மாட்டிக்கொண்டு ஆக்ஸிடென்ட் ஆன சம்பவம் ஏனோ நினைவுக்கு வந்தது. அதில் பயணம் செய்த மக்கள் கொஞ்சம் பொறுப்புணர்வோடு செயல்பட்டிருந்தால் அந்த ஆக்ஸிடென்டை தவிர்த்திருக்கலாம்.

எல்லோருக்கும் பொறுப்பிருக்கிறது என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.

***

சென்னையிலிருந்து மதுரை வருவதற்கு train tickets எல்லாமே full. எனவே நான் air-deccanஇல் எல்லோருக்கும் ticket போட்டிருந்தேன். என் நண்பன் சிவா முன்னரே சொல்லியிருந்தான் : உங்க சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் மாதிரி இருக்காது. flight கிளம்புவதற்கு கொஞ்ச நேரம் முன்னர் தான் ஏசி போடுவார்கள். இறங்கிய அடுத்த நொடி ஏசி ஆப் செய்யப்பட்டு விடும். அது ஒன்றும் பெரிய பிரச்சனை இல்லை. Budget Airways என்றால் அப்படித்தான். குறைந்த கட்டணத்தில் அழைத்துச் செல்கிறார்களா இல்லையா? Gain something, you loose something.

அதிகாலையில் வேகமாகவே கிளம்பிவிட்டோம். காலை நான்கு மணி இருக்கும். எங்களுக்கு ப்ளைட் ஆறு நாற்பதுக்கு. ஏர்போர்ட்டுக்குள் நுழைந்தவுடன் எனக்கு ஷாக். அவ்ளோ கூட்டம். பெரிய க்யூ. அப்பாவையும் அம்மாவையும் ஒரு இடத்தில் அமரச்செய்து விட்டு, நானும் அண்ணனும் luggageஉடன் க்யூவில் நின்றோம். நீண்ட நேரம் கழித்து, security check அருகில் சென்றவுடன், அங்கிருந்த பையன் சொன்னான் “மதுரை செல்லும் ப்ளைட்டுக்கான கவுண்ட்டர் இன்னும் ஓபன் செய்யப்படவில்லை. கொஞ்ச நேரம் நில்லுங்கள்” என்றான்.

நான் சுற்றும் முற்றும் பார்த்தேன். மணி 5:15. கொஞ்ச தூரத்தில் ஏதோ சலசலப்பு கேட்கவே என்வென்று பார்க்கப் போனேன். அங்கே ஒரு வடக்கத்திய குடும்பம் அங்கிருந்த ஏர் டெக்கான் ஆபிசருடன் சண்டையிட்டுக் கொண்டிருந்தனர். அவர்கள் flightக்கு இன்னும் அரைமணி நேரம் இருக்கிறது. இவர்களை செக்கின் செய்ய மறுக்கிறார்கள். அந்த கும்பலில் இருந்த பெண்மணி தாம்தூம் என்று குதித்துக்கொண்டிருந்தார்.அதிகாரி என்னால் ஏதும் செய்ய முடியாது என்று சொல்லிவிட்டார்.

உள்ளேயும் போக முடியாது. டிக்கெட் பணமும் திரும்பக்கிடைக்காது. ஆனால் வெளியே போகலாம்! என்றார் அதிகாரி. என்னை போல வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த ஒரு நபர் சொன்னார்: உங்களுக்கு தெரியுமா டெக்கான் ஏர்வேஸில் பயணம் செய்ய வேண்டுமானால் மூன்று மணி நேரத்துக்கு முன்னர் வரணும்.

(மூணு மணி நேரமா? பிறகு எதுக்கு flightல போவானேன்? மதுரைக்கு போறோம்னு வெச்சுக்கோங்க. மதியம் 12:30 வைகையை பிடிச்சொம்னா கரெக்டா 8 மணி சுமாருக்கு மதுரைக்கு கொண்டுபோய் விட்டுடுவான். Travelling time just 7:30 hrs. இந்த ப்ளைட்ல போறதுக்கு வீட்ல இருந்து ஏர்போர்ட் வருவதற்கு ஒரு மணி நேரம். மூணு மணிக்கு முன்னர் வரணும். அப்புறம் travelling time 45 நிமிஷம். அப்புறம் லக்கேஜ்க்காக வெயிட் பண்றது ஒரு 45 நிமிஷம்னு இதுவே 5 மணி நேரம் கணக்கு வந்திருது. மிச்சமென்ன? trainல போனா லக்கேஜ் செக்கின் பண்ற தலைவலி இருக்காது.)

அவர்களைப் பத்திக் கவலையில்லை. என்னோட கவலை இப்போ அதிகமாயிடுச்சு. மணி 5:30 ஆகிருச்சு. 6:40க்கு flight. இன்னும் கவுண்ட்டரே ஓபன் பண்ணல. அதே அதிகாரியிடம் போய் “அண்ணே மணி 5:30 இன்னும் மதுரை ப்ளைட் கவுண்ட்டர் ஓபன் பண்ணவேயில்ல. தயவு செஞ்சு ஓபன் பண்ணிடுங்க. பிறகு இந்தமாதிரி ஆக்கிவிட்டுடாதீங்க” ன்னு சொன்னேன். அதற்கப்புறம் தான் அவர் பார்த்து கோயம்புத்தூர் கவுண்டரில போடறேன் நீங்க போங்க சார்ன்னு சொன்னார்.

***

கோயம்புத்தூர் செல்லும் விமானத்துக்கும் மதுரை செல்லும் விமானத்திற்கும் boarding pass வாங்குவதற்கு ஒரே க்யூ தான். போர்டிங் பாஸ் வாங்கறதுக்கு க்யூவுல நிக்கறதுக்குள்ள பெரியபாடாயிருச்சு. அப்படி அப்படியே இடைச்செறுகலா மக்கள் வந்து ஒட்டிக்கறாங்க. எப்படி முடியுது? அவங்களை எல்லாம் அப்புறப்படுத்தி க்யூ இது, பின்னாடி போங்கன்னு சொல்ற வேலையை நான் எடுத்துக்கிட்டென்.

அங்க கவுண்ட்டர்ல ஒரு foreign lady சண்டை போட்டிட்டிருந்தாங்க. over luggage fine கட்டுங்கன்னு air-deccan சொல்லுது. அந்த அம்மணி கூலாக என்கிட்ட பணம் இல்லன்னு சொல்றாங்க. பணமில்லை என்னால fine கட்ட முடியாது. இந்த இடத்தை விட்டும் போக மாட்டேன். Mangerஅ இங்க வரச்சொல்லுன்னு சொல்லிட்டிருந்தாங்க. அப்படி போடு!

இந்த குழப்பத்தில் நான் சென்று என் டிக்கெட்டைக் காட்டினேன். அங்கிருந்த செக் இன் செய்யும் நபர் foreign ladyஐ திட்டிக்கொண்டே, என்னுடைய luggageக்கு கோயம்புத்தூர் ஸ்டிக்கர் ஒட்டினார். அடப்பாவி நான் மதுரைக்கு போகும் போது என் luggage மட்டும் எப்படி கோயம்புத்தூர் போகும்?

நல்லவேளை நான் கவனித்தேன். இல்லையேல் மதுரை சென்று எங்கடா இன்னும் பேக் வந்து சேரலைன்னு பேக்கு மாதிரி முழிச்சிட்டு இருந்திருப்பேன்.

***

சூரியனோ? சந்திரனோ? – செல்போன் இருக்கா?

எழுதுவதற்கு கொஞ்சமும் நேரம் கிடைப்பதில்லை, இப்பொழுதெல்லாம். அப்படியே கிடைத்தாலும் என்ன எழுதுவது என்றும் தெரிவதில்லை. திரும்பத்திரும்ப, படித்த புத்தகங்களைப் பற்றியும், பார்த்த படங்களைப் பற்றியும் எத்தனை முறைதான் எழுதுவது. ஆனால் இதையும் எழுதாவிட்டால் பிறகு எதைத்தான் எழுதுவது. இவற்றைத் தவிர்த்து வேறு ஏதாவது எழுதினால் அது கண்டிப்பாக மொக்கைப் பதிவாகிவிடுகிறது.

***

போன வாரம் இந்தியா சென்றிருந்தேன். ஒரு வார அவசர விஸிட். பல்லேலக்கா பல்லேலக்கா காவிரியாரும் கைக்குத்தல் அரிசியும் மறந்து போகுமா ன்னு பாட்டு பாடிட்டே போகலாம்னு நினைச்சேன். ஆனா அதெல்லாம் அமேரிக்கால இருந்து வற்ரவங்கதான் பாடனுமாமே? இங்கனக்குள்ள இருக்கற சிங்கப்பூர்ல இருந்து வந்துட்டு இந்த அலும்பான்னு கேக்கறாங்க. சரி விடுங்க. இன்னோரு மேட்டர் சொல்றேன். சூரியனோ சந்திரனோ யாரிவனோ சட்டென சொல்லு, பாட்டக்கேக்கும் போது எனக்கு ஒன்னு தோணுச்சு.

ஒரு ஊர்ல சூரியன், சந்திரன் அப்படீன்னு ரெண்டு twins இருந்திருக்காங்க. சூரியன் ரொம்ப குண்டு. சந்திரன் ரொம்ப ஒல்லி. சூரியன் நல்லாவே படிக்கமாட்டான். சந்திரன் நல்லா படிப்பான். சூரியன் இந்தியாவிலே இருந்திட்டான். சந்திரன் சாப்ட்வேர் இஞ்சினியர்யாகி அமெரிக்கா போயிட்டான். (நல்லா படிச்சாத்தான் அமெரிக்கா போகமுடியும் அப்படிங்கற அர்த்தம் இல்ல!) நம்ப சந்திரன் அமெரிக்கா போன பிறகு நல்லா அங்க மாட்டுக்கறி பன்றிக்கறின்னு ஏதேதோ சாப்டு நல்லா தொந்தியும் தொப்பையுமா குண்டாகிட்டான். பின்ன ரொம்ப நாள் கழிச்சு லீவுல இந்தியா வந்திருக்கான். வீட்டுக்கு பல்லேலக்கா பல்லேலக்கான்னு பாட்டு பாடிட்டே வந்திருக்கான். அவங்க அப்பத்தா நிமிந்து பாத்திட்டு “பல்லு வெளக்கல. எனக்கு தான் பொக்கைவாய்ல” ன்னு சொல்லிருக்கு. பாரு கெழவிக்கு எம்புட்டு திமிருன்னு நெனச்சிருக்கான். அப்புறம் தான் அப்பத்தா சொல்லிருக்கு “சூரியனோ சந்திரனோ யாரிவனோ சட்டென சொல்லு” ஏன்னா ரெண்டு பயலுவலும் குண்டாத்தான இருக்காய்ங்க? இதுல யாரு சூரியன் யாரு சந்திரன்னு குழப்பம் வரத்தான செய்யும்?

அப்புறம் “அண்ணன் வந்தா தமிழ்நாடும் அமெரிக்கா” ன்னு சந்திரன் பாடிட்டேயிருந்திருக்கான். சந்திரன் வந்துட்டான்ல இனிமே நம்ப வீட்ட அவனோட அமெரிக்கா வீடு மாதிரி நல்லா hitechஆ மாத்திருவான்னு கெழவி நெனச்சது. பாத்த காலைல இருந்து ராத்திரி வரைக்கு அவன் தூங்கிட்டே கெடந்திருக்கான். அப்பத்தான் அப்பத்தா கேட்டுச்சு, “ஏண்டா சூரியா, இந்த சந்திரன், ‘அண்ணன் வந்தா தமிழ்நாடும் அமெரிக்கா அமெரிக்கா’ ன்னு பாடிட்டு கெடந்தானே? என்ன இப்படி தூங்கிட்டு கெடக்கான்” ன்னுச்சு. அதுக்கு சூரியன் சொல்லிருக்கான்: “உனக்கு விசயம் தெரியாதா அப்பத்தா. நம்பளுக்கு பகல்ன்னா அமெரிக்காவில ராத்திரி. அதானால தான் அவன் சொன்னான், தமிழ்நாடும் அமெரிக்கான்னு. இங்க வந்து பகல்லையும் நல்லா தலையோட பொத்திக்கிட்டு தூங்கறதுக்குத்தான் இந்த பில்டப்பு” ன்னுருக்கான்.

“காவிரியாறும் கைக்குத்தல் அரிசியும் மறந்து போகுமான்னு” பாடிட்டேயிருந்திருக்கான். அப்பத்தா அவன் கிட்ட கேட்டுச்சு, “ஏண்டா கோர்ட்டு கர்நாடகாவ எத்தன டிஎம்சி தண்ணி தெறந்து விடச்சொல்லுச்சு, அதுக்கு அவிங்க எத்தன டிஎம்சி தொறந்து விட்டாய்ங்கன்னு தெரியுமா?” அவன் முழிச்சான். பிறகு சொன்னான், “வாஜ்பாய்க்கு வந்த selective memmory disorder மாதிரி எனக்கு situation memmory disorder இருக்கு. அதனால இந்த situationla மறந்து போயிருச்சு. பின்னால ஞாபகம் வரும்போது சொல்றேன் கெழவி” ன்னு சொன்னான். மனசுக்குள்ளே “கெழவி எப்படி கோர்த்துவிடுதுபாரு” ன்னு நெனச்சுக்கிட்டான்.

***

இந்த முறை சிங்கப்பூர் ஏர்லைன்ஸ¤ம் ஒன் ஹவர் டிலே.யாரோ பேஸஞ்சர் கடைசி நிமிடத்தில வரலையாம். அதனால அவரோட செக்-இன் பண்ணின பேக்கேஜ்ஜையெல்லாம் திரும்ப எடுத்திட்டு இருந்தாங்க. அதனால லேட். ஆனா வழக்கத்துக்கு மாறா வேகமாக போச்சு. கடைசியில லேண்ட் ஆகும் போது பத்து நிமிசம் தான் லேட். நாம வேகமா போய் ஒன்னும் மில்லியன் டாலர் ஒப்பந்தத்தில கையெழுத்து போடப் போறதில்லதான், ஆனா அப்படி கையெழுத்து போடறவங்களும் இருக்காங்களே!

***

விமானத்தில் என் சீட்டுக்கு பக்கத்தில் இருந்தவர் ஆஸ்திரேலியாவிலிருந்து வருகிறவர். என் வயது அல்லது கொஞ்சம் அதிகம் இருக்கும். சிங்கப்பூரில் transitஇல் நண்பர்கள் வீட்டில் சொஜ்ஜி பஜ்ஜியெல்லாம் சாப்பிட்டுவிட்டு ஹாயாக வந்திருந்தார். நான் தமிழ் தான் என்றவுடன் அவருடைய முகத்தில் ரொம்ப சந்தோஷம். நிறைய பேசனும்னு நினைச்சார். பொன்னியின் செல்வனை முப்பது தடவைக்கும் மேல் படித்திருப்பதாகச் சொன்னார். முப்பது தடவையா? கொஞ்சம் கஷ்டம் தான். மதனிடம் ஒரு முறை ஒருவர் கேள்வி கேட்டிருந்தார் : ” நீங்கள் அதிக முறை படித்த புத்தகம் எது” என்று. அவர் பொன்னியின் செல்வன் என்று சொல்லிவிட்டு பிறகு சொன்னார் “இப்பொழுதெல்லாம் ஒரு புத்தகத்தை ஒரு முறைக்கு மேல் படிப்பதில்லை. ஏனென்றால் அதே புத்தகத்தை மறுமுறை படிக்கும் அந்த நேரத்தில் வேறொரு புத்தகத்தை படித்துவிடலாமே” என்றார்.

நானும் மதன் கட்சிதான். இது வரையில் நான் எந்த ஒரு புத்தகத்தையும் ஒரு முறைக்கு மேல் படித்ததில்லை. பொன்னியின் செல்வன் உட்பட.

***

சுயவிளம்பரம் எனக்கு பிடிக்காது! (ம்ம்…சொன்னாங்க. சொன்னாங்க!) ஆனாலும் புத்தகத்தைப்பத்தி பேசிட்டிருந்தப்போ நான் ஒரு bloggerன்னு சொல்லியிருக்கக்கூடாதுதான். ஒரு நிமிஷம் யோசிச்ச அவர், “நான் ஒரு blogger” ன்னு அவர்க்குள்ளே சொல்லிக்கொண்டார், பிறகு “அது என்ன புக்? கொஞ்சம் சொல்லுங்களேன்” ன்னு சொன்னார்.

***

சென்னையில் தாஜ் கோரமண்டலில் சாப்பிட்டோம். ரெஸ்டாரெண்ட் பெயர்: Match Point. பசங்ககிட்ட அஞ்சப்பர் போகலாம்டான்னு சொன்னா வித்தியாசமா பாக்கறாய்ங்க. இப்பெல்லாம் சோழா செராட்டான், லீ ராயல் மெரிடியன், அப்புறம் ஏதோ கார்னர் (அதுவும் buffet தான்), பார்க் இன் அப்படீன்னு தான் சாப்படறாங்களாம்.

அப்புறம் வேளச்சேரில டபுள் பெட்ரூம் ப்ளாட் வாடகை ஏன் பணிரெண்டாயிரம் ரூபாய் இருக்காது? நான் முதன் முதலில் சென்னைக்கு வேலை தேடி வந்த போது, இப்ப இருக்கற 100 ft ரோடெல்லாம் வெறும் காடுதான். அதிகமில்லை ஜென்டில்மேன் just before six years!

இப்போ அதே இடத்தில் வாடகை : பணிரெண்டாயிரம்! எப்பொழுதும் current போகவேபோகாதாம். மொட்டை மாடியிலிருந்து அந்த ப்ளாட்டையே பார்த்துக்கொண்டு சொன்னார்கள் என் நண்பர்கள்.

இரவு மொட்டைமாடியில் தான் தூங்கினேன். கொசுக்கடி. ஆனா நாள் பூரா வெயில்ல அலைஞ்சு திரிஞ்சதுக்கு இரவு குளிர் இதமாக இருந்தது.

Match Point-ல் கொஞ்சம் காஸ்ட்லி தான் ஆனால் உணவு எனக்கு பிடித்திருந்தது. அங்கு சாப்பிட வந்திருந்த girlsம். நாங்கள் சாப்பிட்ட இடம் : pool view.

***

காலையில் எழுந்து டி.நகரில் கீதாஞ்சலியில் ரூம் போட்டுவிட்டு, மாம்பழம் ரயில் நிலையத்திற்கு குடும்பத்தினரை வரவேற்கச்சென்றேன். என்னிடம் செல் போன் இல்லை. என் நண்பன் நவனீதனின் செல் போனைத்தான் உபயோகித்துக்கொண்டிருந்தேன். அதிகாலையில் அவனிடமிருந்து வாங்கிவரவில்லை.

என் அண்ணன் நெல்லை எக்ஸ்பிரஸ் மாம்பழத்துக்கு, காலையில 5 மணிக்கெல்லாம் வந்திடும்டான்னு சொல்லியிருந்தார். நான் ஸ்டேஷன் போனதென்னவோ 5:10. எனக்கு சந்தேகம். டிடீயாரிடம் விசாரித்ததில் அவர் 5:30க்குத்தான் வரும்ன்னு சொன்னார். பிறகு போர்ட்டரிடம் விசாரித்ததில், எப்படியும் காலை ஆறு மணி ஆகிவிடும்ன்னு சொன்னார்.

எனக்கு குழப்பம். பசிக்கவேறு செய்கிறது. செல்போன் இருந்தால் வசதியாக இருக்கும். அண்ணனுக்கு கால் பண்ணி exactly எங்க வந்திட்டிருக்காங்கன்னு தெரிஞ்சுக்கலாம்.

பக்கத்து இருக்கையில் கோயம்புத்தூர் எக்ஸ்பிரஸ¤க்கு மூன்று இளைஞர்கள் காத்துக்கொண்டிருந்தனர். சாப்ட்வேர் மக்கள் என்பது அவர்களது பேச்சிலிருந்து தெரிந்தது. தமிழிலும் ஆங்கிலத்திலும் பேசிக்கொண்டிருந்தனர்.

அவர்களிடம் செல்போன் வாங்கி ஒரு கால் செய்யலாமா என்று யோசித்தேன். ஆனால் கொஞ்சம் தயக்கம் இருந்தது. சிறுது நேரம் மௌனமாக உட்கார்ந்திருந்தேன். ஒரு டீ சாப்பிடனும் போல இருந்தது. எங்கிருக்கிறார்கள் என்று தெரிந்தால் வெளியே போய் நிம்மதியாக டீ சாப்பிட்டு விட்டு வரலாம். முடிவாக அவர்களிடம் செல்போன் கேட்பது என்று முடிவு செய்தேன்.

எழுந்து சென்று “ஹலோ. எக்ஸ்க்யூஸ் மீ. உங்களிடம் செல்போன் இருக்கிறதா? அவசரமா ஒரு கால் செய்யனும். ப்ளீஸ்” என்றேன். அதில் கண்ணாடி அணிந்திருந்த வளர்த்தியாக இருந்த ஒரு நபர் சட்டென்று சொன்னார் : “இல்லை”. நான் ஒரு நிமிடம் தடுமாறிவிட்டேன். “yeah sure” என்ற பதிலைத்தான் நான் எதிர்ப்பார்த்திருந்தேன். என் வாய் தானாக “இல்லையா?” என்று கேட்டது. மீண்டும் திட்டவட்டமாக அவர் “ஆமாம். எங்களிடம் இல்லை” என்றார். “ஓகே. தாங்க்ஸ்” என்று சொல்லிவிட்டு மீண்டும் என் இடத்தில் – அவர்கள் பக்கத்தில் இருந்த இருக்கையில் – வந்து அமர்ந்து கொண்டேன்.

Embarrased. என்னால் அவர்களைப் பார்க்கவே முடியவில்லை. so அவர்கள் அமர்ந்திருக்கும் எதிர் திசையிலே பார்த்துக்கொண்டிருந்தேன். அவர்கள் பேச்சை சுத்தமாக நிறுத்தி விட்டிருந்தனர். அவர்களுக்குள் பேசவே இல்லை. நீண்ட மௌனம்.

கோயம்புத்தூர் train வந்தபிறகு அவர்கள் சத்தமில்லாமல் ஏறிச்சென்றனர். அதற்கப்புறம் தான் என்னால் அவர்கள் அமர்ந்திருந்த திசையை நோக்கி பார்க்கவே முடிந்தது.

***

லவ்ஸ் – 1

(கற்பனைக்காதலி : புஷ்பா)

கார்ரெட் கம்ப்யூட்டர் சிஸ்டெம்ஸ். காபிட்டேரியா.

ஸ்ட்ரா பாக்கெட்டுகள்
கூட்டம் கூட்டமாக
தற்கொலை செய்து கொண்டன.

புஷ்பா இன்று ஜூஸ்
சாப்பிட வரவில்லை.

***

பிரம்மா. படைப்புலகம்.

வாருங்கள்.
நீங்கள் போன பிறவியில்
நிறைய நன்மைகள்
செய்திருப்பதால், இந்தமுறை
நீங்கள் எது நினைக்கிறீரோ
அதுவாகவே பிறக்கலாம்.

உலகத்தின் மிகப்பெரிய
செல்வந்தராக போகிறீரா?

வேண்டாம்.

உலகத்தின் ஆன்மீகத்
தலைவராக?

வேண்டாம்.

உலகத்தையே உங்கள்
கையில் வைத்துக்கொள்ளும்
அதிகாரம் கொண்டவராக?

வேண்டாம்.

அழகான கிளியோபாத்ராவாக?

வேண்டாம்.

பெண்கள் மயங்கும் மன்மதனாக?

வேண்டாம்.

யூ.எஸ். ப்ரசிடென்ட்டாக?

வேண்டாம்.

கொஞ்சும் கிளியாக?

வேண்டாம்.

அழகான முயலாக?

வேண்டாம்.

பிறகு என்னவாகத்தான் பிறக்கவேண்டும்
என்று நினைக்கிறீர்கள்?

புஷ்பாவின் போனிடெயிலுக்கு
ஹேர்பேண்டாக. ப்ளீஸ்.

***

அடர்ந்த காடு.
கடும் குளிர்.
விடாமல் தவம் புரியும்
விசுவாமித்திரர்.

வேட்டையாடவந்த
அழகான மன்மதன்
ஒருவன்
அவரின்
தவத்தைக் களைத்தான்.

விசுவாமித்திரர்
கொடுத்தார் சாபம்
என் கூஜாவிலிருக்கும்
தண்ணீராக மாறிவிடு.

அவன் மன்றாடினான்.
கூத்தாடினான்.

மனம் இளகிய
விசுவாமித்திரர்
சொன்னார்.
மனிதன் அல்லாத
வேறு
உருவம் உனக்கு
கொடுக்கிறேன்.
கேள் என்றார்.

சற்றும் தாமதிக்காமல்
அவன் சொன்னான்:

புஷ்பாவின் டெஸ்கிலிருக்கும்
மானிட்டராகப் போகிறேன்.
தினமும் அவள் என்னைப்
பார்த்துக்கொண்டேயிருப்பாள்.

***

புஷ்பாவுக்கு
ரொம்பத்தான் திமிர்
என்றது தலையணை.

நான் தான் அவளுடைய
தலைக்கு இதமாக இருக்கிறேன்.
ஆனால் என்றுமே
எனக்கு கிடைப்பதில்லை
அவளது முத்தங்கள்.

ஆமாம் ஆமாம்
உண்மைதான்.
நான் தான் அவள்
போர்த்திக்கொள்ள
உதவுகிறேன்.
ஆனாலும்
எனக்கு கிடைப்பதில்லை
அவளது முத்தங்கள்.
என்றது போர்வை.

ஆமாம்.ஆமாம்.
நான் தான் அவள்
படுப்பதற்கு
இதமாக இருந்து
அவளுக்கு நல்ல
தூக்கத்தைத் தருகிறேன்
ஆனாலும்
எனக்கு கிடைப்பதில்லை
அவளது முத்தங்கள்
என்றது மெத்தை.

ஆமாம். ஆமாம்.
நான் தான் அவளுக்கு
குளிர்ந்த காற்றைத்
தருகிறேன்
இருந்தும்
எனக்கு கிடைப்பதில்லை
அவளது முத்தங்கள்
என்றது மின்விசிறி.

இவை எதுவுமே
செய்யாமல் சும்மா
இருக்கும்
அந்த டெடி பியருக்குத்தான்
எப்பொழுதுமே
கிடைக்கின்றன முத்தங்கள்
என்றன எல்லாமுமாய்
சேர்ந்து.

டெடி பியர்
சொல்லியது:
உங்கள் எல்லாரையுமே
அவளாக வாங்கிக்கொண்டாள்.

என்னை
அவன் அல்லவா
வாங்கிக்கொடுத்தான்.

நீங்கள்
அவனிடம் சென்று
மன்றாடுங்கள்.

***

PlayList : Muthu’s Most Wanted

சென்னை 600028-ல உன் பார்வை மேலே பட்டால் நான் தூசியாகின்றேன் பாட்டு கேட்டிங்களா? விஜய் யேசுதாஸ் பாடியது. இப்போ அது தான் என்னோட ·பேவரிட் சாங். அப்புறம் உன்னாலே உன்னாலே , ஜூன் போனா ஜூலை from உன்னாலே உன்னாலே. எஸ்பிபி, சித்ரா பாடிய யாரோ யாருக்குள் இங்கு யாரோ யுவனின் வாய்ஸ் எனக்கு எப்பவுமே பிடிக்கும். so, அவரது வாய்ஸ்க்காக வேர்ல்ட் கப்ப ஜெயிக்கப்போறோம்

அப்புறம் that seducing voice ஒ ஓ என்னன்னமோ பண்ணுது பண்ணுது யார் பாடியது என்று பார்த்தேன். அனுஷ்கா. இந்தக்காவா? ஆனா உடம்பை ஏன் “உடும்பு” என்று சொல்கிறார்? உடும்பு செய்யுது இம்சைன்னு சொல்றார். அதுவும் கூட நல்லாத்தான் இருக்கு. (ஓவர் ஜொள்ளுடா!).

உன் சிரிப்பினில் உனக்குள் நான் from பச்சைக்கிளி முத்துச்சரம்.

அப்புறம் என்ன பாட்டு? ம்ம்.. அறியாத வயசு from பருத்திவீரன். ராஜா ராஜா தான். சிலருக்கு அவர் வாய்ஸ் பிடிக்காது. ஆனால் சில girls seductive என்று சொல்லக்கேள்விப்பட்டிருக்கிறேன். அதுவும் இந்தப்பாட்ல first stanza முடிஞ்சப்புறம் மறுபடியும் “அறியாத வயசு” ன்னு அடித்தொண்டையில பாடுவாரு பாருங்க. சூப்பர்.

அப்புறம் ஸ்ரீநிவாஸ் பாடிய மௌனமே உன்னிடம் அந்த மௌனம் தானே அழகு பாடல் from மொழி. வித்யாசாகர் எப்படினாலும் வருஷத்துக்கு பத்து சூப்பர் மெலடி கொடுத்தரார். அதே படத்தில் சுஜாதா பாடிய காற்றின் மொழியே பாடல். அப்புறம் நெஞ்சிருக்கும் வரையிலிருந்து பாம்பே ஜெயஸ்ரீயும், விஜய்யேசுதாசும் பாடிய பிடிச்சிருக்கு பிடிச்சுருக்கு

போக்கிரியிலிருந்து சுசித்ரா பாடிய டோலு டோலு தான் . நீ முத்தமொன்று கொடுத்தால்

அடுத்த பாட்டு கொஞ்சம் பழசு தான் ஆனாலும் என் லிஸ்ட்ல எப்படியோ இன்னும் இருக்கு. யுவன் பாடிய ஏதேதோ எண்ணங்கள் வந்து கண்ணை விட்டு கண் இமைகள் from பட்டியல். ஐ லைக் யுவன்ஸ் வாய்ஸ். இப்போ girls voice-ல எனக்கு பிடிச்சது. ஷ்ரேயா கோஷல். அடேங்கப்பா. கொஞ்சல்ஸ் வாய்ஸ். ஒரு முறை எனக்கு பிடித்தபாடல் கேட்டுப்பாருங்கள்.

அப்புறம் வந்துட்டாருய்யா நம்ப தலை. சூரியனோ சந்திரனோ from சிவாஜி. எஸ்பிபி still rocks.

உன் பார்வையில் பைத்தியமானேன் from சம்திங் சம்திங் உனக்கும் எனக்கும்.

தாமிரபரணியில் கருப்பான கையால முதல்ல கேக்கும்போது பிடிக்கல. ஆனா வீடியோவில பாக்கும் போது பானுவோட dance steps பிடிச்சிருந்தது. அதுவும் முதல் step. பானுவோட ஸ்டெப்ஸ் பாத்ததுக்கு அப்புறமும் பாட்டு பிடிக்காம போயிருமா என்ன? விஷாலும் நல்லாவே ஆடியிருந்தார். ஒரு சிரிப்பு சிரிப்பாரே, நல்லாயிருந்துச்சு.

இந்தப்பாட்டு கேட்டிருக்கீங்களான்னு தெரியல. வாத்தியார்ன்னு ஒரு படம் வந்துச்சு தெரியுமா? நம்ப ஆக்ஷன் கிங் அர்ஜுன் நடிச்சது. அதுல ஒரு நல்ல பாட்டு இருக்கு.
எங்கோ பாத்திருக்கிறேன் இமான் பாடியிருக்கிறார்.

கடைசியா: அதிரடிக்காரன் மச்சான் மச்சான் மச்சான் டேய் from சிவாஜி. ரஹ்மானே பாடியிருக்கார். பில்லா ரங்கா பாஷா தான். ரஹ்மான் பாடிய பாட்டு சூப்பர்தான். 🙂

எப்போ என்ன பாட்டு கேட்டாலும், தூங்கறப்போ இளையராஜா இல்லீனா சீர்காழி தான். சில சமயம் ரொம்ப பயமா இருந்துச்சுன்னா, லைக் அன்னைக்கு exorcism of emily rose பாத்ததுக்கு அப்புறம் நைட் ரொம்ப பயமாபோயிருச்சு, “மண்ணானாலும் திருச்செந்தூரில் மண்ணாவேன்” தான். 🙂

ரொம்ப தலைவலி!

னக்கு சனிக்கிழமை ரொம்ப தலைவலி. வீடு வேற மாத்தறமா, நிறைய வேலை வேற. க்ளீனிங். பேக்கிங். புத்தகங்களப் பேக் பண்றதுக்கு தான் கொஞ்சம் நேரம் பிடிச்சது. நல்லா ரெண்டு அட்டைப்பெட்டி வாங்கி உள்ள அடச்சுட்டேன். மதியம் சாப்பிடப்போறதுக்கு சாயங்காலம் நாலு மணி ஆயிடுச்சு. போய் க்ராப் ஒரு புடி பிடிச்சேன். அதுவும் இனியவன் சூப்பரோ சூப்பர். அஞ்சப்பர் மாதிரி காஸ்ட்லி கிடையாது ஆனால் அஞ்சப்பரை விட நல்ல டேஸ்ட் இருக்கு. (அஞ்சப்பர் மற்றும் இனியவன், இவங்க ரெண்டு பேரும் யாருப்பான்னு அப்பாவியா கேக்குற அம்மாஞ்சிகளுக்கு. இவை ரெண்டும் லிட்டில் இந்தியாவிலிருக்கும் உணவகங்கள்) சாப்பிட்டுட்டு நாலு டீவிடி வாங்கினேன். இதே வேலையாப்போச்சு. ஒன்னு புத்தகம் இல்லீன்னா டீவிடி. ஆனாஎன்னக்கேட்டா புத்தகத்த விட டிவிடி பெட்டர். டிவிடிய கண்டிப்பா பாத்திருவோம். புத்தகம்? என்கிட்ட எத்தன புத்தகம் இருக்கு தெரியுமா இன்னும் டச் கூட பண்ணாம? (வாங்கினப்ப டச் பண்ணியிருப்பல்ல? ஏன் இப்படி பீலா விடறன்னு கேக்குற அதிமேதாவிகளுக்கு: இன்னும் தாங்க்ஸ் பேஜ் கூட படிக்காம அப்படியே வைத்திருக்கிற புத்தகங்கள்)இந்த தடவ பேக் பண்றப்போதாதான் இன்னும் எத்தனி புத்தகம் படிக்கனும்டா நீன்னு கேட்டுக்கிட்டேன். (இப்போ விஜய் டீவியில யார் மனசுல யாரு ஓடிட்டிருக்கு. அதில கலந்துக்க வந்த ஒருத்தர்ட்ட நம்ப க்ராண்ட் மாஸ்டர் உங்களுக்கு பாடத்தெரியுமான்னு கேட்டுத்தொலச்சுட்டார். கலந்துக்க வந்தவர் இது தான்டா சான்ஸ்ன்னு ஆமா ஆமான்னு பாட (சாரி. பேச) ஆரம்பிச்சார். கவிதைகள் சொல்லவா உன் பெயர் சொல்லவா பாடல். கண்றாவி. இவென் கவலையே படறதில்ல. நாலு பேரு சாவறாங்கன்னு கவலையே படறதில்லன்னு பொலம்பினான். எதுனாச்சும் தெரியுமான்னு புரோகிராம் நடத்துறவர் கேட்டா, இல்லீங்ணா ஒன்னும் தெரியாதுங்ணான்னு சொல்லி தப்பிக்கலாம்ல. எங்கள ஏன் படுத்தறீங்க?)

நான் சொல்ல வந்ததே வேற. அன்னக்கி சனிக்கிழமை சாயங்காலம் க்ராப் கிராப் எல்லாம் சாப்ட்டு முடிச்சிட்டு வீட்டுக்கு வந்தா செம தலைவலி. பேசாம தூங்கிடலாமன்னு யோசிச்சேன். ஆனா சும்மாவே நமக்கு ராத்திரி தூக்கம்வரமாட்டேங்குது. (இத நான் சொல்லனும்ங்கற அவசியம் கிடையாது. ஏன்னா இது எல்லா ப்ளாக்கர்ஸ்க்கும் இருக்கற ஒரு காமன் charaச்ter. தூக்கம் வருதுன்னா நாங்க ஏன்யா post போடப்போறோம்?) இதுல சாயங்கலம் தூங்கினா கண்டிப்பா சிவராத்திரி தான். அதுவும் இந்த வீட்ல தனியா முழிச்சிருக்கறது கஷ்டம். அதுவும் நாளைக்கு காலி பண்றோம். கடைசி நாள் இன்னிக்காவது முத்துகிட்ட பேசுவோம்ன்னு பண்ணென்டு மணிக்கு நடமாடறவைங்க அப்ரோச் பண்ணாய்ங்கன்னு வெச்சுக்கோங்க என்ன பன்றது. இதுல The Exorcism Of Emily Rose படத்துல பண்ணென்டு மணிக்கு கெடியாதுமே, மூனு மணிக்கு தாமே அவிங்கல்லாம் கெளம்புவாய்ங்கன்னு சொன்னாய்ங்க. அன்னிக்கிருந்து காலையில பிஸ் அடிக்க கூட எழுந்திருக்கறதில்ல. சைனீஸ் பேய்க எல்லாம் எத்தன மணிக்கு கெளம்புதுகளோ யாருகண்டா? இந்த The Exorcism Of Emily Rose, சும்மா சொல்லக்கூடாது ரெண்டு மூனு இடத்துல ரொம்ப பயமாப் போச்சு. Emily Rose தங்கை நடு ராத்திரி அக்காவோட ரூம்ல ஏதோ சத்தம் கேக்குத்துன்னு மெதுவா மெதுவா வந்து Emily Emilyன்னு ஸ்வீட்டான வாய்ஸ்ல கூப்பிடறப்போ அது சுவரு பூராம் நகத்தால கீறி ஒரு சவுண்டு கொடுக்கும் பாருங்க அடேயப்பா. அதுக்கப்புறம் exorcism பண்றப்போ. அதுக்கப்புறம் Emilyயோட பாய் ப்ரண்ட் அவளோட ரும்ல இருந்துட்டு டுபாக்கூர் நல்லா தூங்கிடுவான். அப்புறம் கொஞ்ச நேரம் கழிச்சு எங்கடா emilyய காணோம்னு மெதுவா திரும்பி பாப்பான் பாருங்க: emily Z மாதிரி வளஞ்சு வளஞ்சு படுத்து முகத்த மட்டும் அவன நோக்கி திருப்பி கண்ண தொறந்தமாதிரி இருப்பாபாருங்க, ஒரு நிமிஷம் நடுங்கிடுச்சு.

என்ன சொல்லவந்தேன்? ம்ம்ம்..அன்னக்கி சனிக்கிழமை சாயங்காலம் செம தலவலி, தூங்கிடலாம்னு நெனச்சு பின்ன வேணாம்னு முடிவு செஞ்சேன். வாங்கிட்டு வந்திருக்கற படங்கள்ள ஏதாவது ஒன்ன கொஞ்ச நேரம் பாத்துட்டு அப்புறம் தூங்கிடலாம்னு நெனச்சேன். வாங்கின படங்கள் : மொழி, அழகிய தீயே, கண்ட நாள் முதல் அப்புறம் பச்சைக்கிளி முத்துச்சரம். இதுல நாலையுமே நான் பாத்திட்டேன். ஆனா நாலு படங்களும் எனக்கு ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப பிடிக்கும். எத்தன தடவ வேணும்னாலும் பாக்கலாம். இந்த நாலில் எனக்கு பிடிச்சது மொதல்ல, கண்ட நாள் முதல். பிரசண்ணா எனக்கு பிடிக்கும். ஆனா இந்த படத்தில் ஸ்பெஷல் லைலா தான். பிரசன்ன கூட(just friends) பைக்ல போகும் போது, அவளோட மானேஜர் அந்த வழியா கார்ல வருவார். லைலா பிரசன்னாகிட்ட அந்த மானேஜர் தொல்ல தாங்கமுடியல ஓவர் ஜொல்லுன்னு போட்டுக்கொடுத்திடுவா. பிரசண்ணா உடனே பைக்க விட்டு இறங்கி மானேஜர்கூட கார்ல ஏறிட்டு வழியெல்லாம் அவர அடிச்சு தொவச்சு கிளம்புன இடத்துக்கே கொண்டுவருவார். வந்தஉடனே அந்த மானேஜர் லைலாகிட்ட மன்னிப்பு கேப்பார். அவர் போனப்பிறகு லைலா பிரசன்னாவ கட்டிக்குவா. இனிமே நான் வேலைக்குப்போகலன்னு க்யூட்டா முகத்தவெச்சுகிட்டு சொல்லுவா பாருங்க.ஹ¤ம்ம்ம். அப்புறம் ஒரு நாள் லைலா வீட்ல கோபமா ரூம்ல கதவசாத்திக்கிட்டு வெளிலவராம இருப்பா, யார் யாரோ வந்து கதவதட்டுவாங்க திறக்கமாட்டா, அப்பத்தான் நம்ப ஹீரோ ப்ரசண்ணா வருவார். வந்து ஹலோ லைலா நான் ப்ரசண்ணா வந்திருக்கேன் கதவதிற என்பார். உடனே கதவு திறக்கப்படும். லைலா வெளில வந்து : ப்ரசன்னா என்ன பெரிய இவனா? அவன் தட்டுனா திறக்கனுமா? முடியாது போடா என்பார். செம க்யூட். இது மாதிரி அந்த படம் முழுக்க கடைசியில லைலா பிரசன்னாவுக்கு ஒரு slap கொடுக்கறவரைக்கு க்யூட் தான். ஐ லவ் திஸ் மூவி.

பச்சைக்கிளி முத்துச்சரம் ஒரு தைரியமான அப்ரோச். ஆனா நிறைய ஆங்கில படங்கள் இதே போல இருக்கு. லைக் derailed அப்புறம் out of time. ஆனா தமிழ்ல இது கொஞ்சம் புதுசு. ஹீரோ திரைக்கு பின்னால என்ன கூத்தடிச்சாலும் திரையில் நல்லவராகத்தான் வருவார். அதுவும் நம்ப சரத்குமார் மாதிரி சுப்ரீம் ஹீரோஸ் கேக்கவே வேணாம். ரொம்ப ரொம்ப நல்ல ரொல்ல தான் நடிப்பாரு. ஆனா இந்த படத்துல வர்றது போல சம்பவங்கள் நடக்காமலா இருக்கு. ரொம்ப நாளைக்கு முன்ன ஜீவில படிச்ச ஒரு நியூஸ். ஈஸ்ட் கோஸ்ட் ரோட்ல ஒரு தடவ ஒரு ஜோடி நைட் ரொம்ப லேட்டா பைக்ல ஊருக்கு திரும்பி வந்திட்டு இருந்திருக்காங்க. போலீஸ் போஸ்ட் அவங்கள் நிறுத்தியிருக்காங்க. பாத்தா அந்த பொண்ணு முகம் முழுதும் காயம். அப்புறம் கையெல்லாம் கூட. சுடி கிழிஞ்சிருக்கு. போலீஸ் என்ன நடந்துச்சுன்னு எத்தனதடவ கேட்டும் பதில் சொல்ல மாட்டேன்டுருச்சுக. அப்புறம் போலீசு நீங்க இப்படி மவுனமா இருந்தா நாங்க எப்படித்தான் அவிங்கள புடிக்கறதுன்னு வருத்தப்பட்டு கேட்டபிறகு தான் அவிங்க சொன்னாய்கலாம்: இவன் என்னோட மனைவி இல்ல. என்னோட கலீக். வெளில தெரிஞ்சா இவளோட வீட்டுக்காரனும் என்னோட வீட்டுக்காரம்மாவும் எங்கள டைவர்ஸ் பண்ணிடுவாங்க. so, உலகத்தில எல்லாமே நடக்குது இல்லீங்கல. ஆனா அத தைரியமா கதையா சொல்றப்போதான் அந்த சம்பவங்கள் எல்லார் கண்லயும் படுது. எல்லாரும் உஷார் ஆவறதுக்கு ஒரு சந்தர்ப்பம். அதுவும் பெரிய ஹீரோ ஹீரோயின் நடிக்கறப்போ ஒரு effect இருக்கு இல்லியா? கடைசி பைட் தேவையில்லதான். ( விஜய் டீவியில காத்து கருப்பு ஓடிட்டு இருக்கு. ஒரு சில சமயங்களில் தனியா உக்காந்து பாத்தம்னா இது கூட கொஞ்சம் பயமாத்தான் இருக்கு!)

என் ப்ரண்ட் ஒருத்தன் (கோனபாட்டில் கோவிந்தன்) மொழி படத்த எப்படியாச்சும் பாத்துப்புடனும்னு ரெண்டு தடவ யூசூன் வரைக்கும் போனான். ஒரு தடவ 300 பாத்திட்டு வந்தான். இன்னொரு தடவ வேற ஏதோ படத்த பாத்திட்டு வந்தான். ரெண்டு தடவையும் நான் எஸ்கேப். என்னோட சாபம் தான் அவனுக்கு டிக்கெட் கிடைக்கலன்னு சொல்லிட்டிருந்தான். முஸ்தபால மொழி சிடிய பாத்தானா விடுவானா? வாங்கிட்டான். அன்னைக்கே பாத்துட்டோம். வேற வேலை? ஆனா நல்ல படம் தான். சில டுபாக்கூர் படங்களுக்கு மூனு மணிநேரம் செலவழிக்கறதுக்கு இது எவ்வளவோ பெட்டர். ரொம்ப நல்ல படம்ங்க. ஆனா எனக்கு ப்ருத்திவிராஜை பிடிக்காது. கனா கண்டேன்ல அவர எனக்கு பிடிச்சிருந்தது. ஆனா பாரிஜாதம்ல அவ்வளவா பிடிக்கல. (உனக்கு பிடிச்சா என்ன பிடிக்காட்டி என்ன மேட்டருக்கு வா!) ப்ரகாஷ்ராஜ் வரவர பின்னி எடுக்கறார். அந்த காக்ரோச்ச எங்க அட்மிட் பண்ணியிருக்கீங்கன்னு கேக்கறப்போ குபீர் சிரிப்பு. ஜோதிகா தான் ஹீரோ. ஹீரோ ஹீரோ ஹீராதி ஹீரோ. ஜோதிகா உங்க யார் கிட்டயும் இல்லாத மொழி ஒன்னு என்கிட்ட இருக்கு அது மௌனம்னு சொல்றப்போவும், பிருத்திவ், ஜோதிகாவுக்கு இசையை உணர கற்றுத்தரும் போதும் க்ளைமாக்ஸிலும் அட்டகாசம். க்ளைமாக்ஸில் ஜோதிகா ரோஸ் நிறப்புடவையில் அட்டகாசமாக இருந்தார். சூர்யா ஒழிக.

என்னப்பா சொல்ல வந்தேன்? ம்ம்ம்..அன்னக்கி சனிக்கிழமை சாயங்காலம் என் ப்ரண்ட் மட்டும் வற்புறுத்தலைன்னா அந்த படத்த மிஸ் பண்ணியிருப்பேன். அது சென்னை 600028. ஏற்கனவே அந்த க்ரூப் தயாரித்த உன்னைச் சரணடைந்தேன் பாத்திருக்கறேன். அடிதடி படங்கள் அதிகம் வந்த அந்த காலகட்டத்தில் அந்த படம் ஒரு வித்தியாசமான முயற்சிதான். ஆனா ஓவர் நாடகத்தனன். இங்கிலீஷ்ல இந்த படம் வந்தா Gayன்னு சொல்லிருவாய்ங்க. ஆனா சென்னை 600028 சூப்பரோ சூப்பர். ரொம்ப நாளைக்கு அப்புறம் full படமும் காமெடி. லைக் உள்ளத்தை அள்ளித்தா. ஆனா இந்த காமெடி நேச்சுரல். நாம டெய்லி வாழ்க்கையில் பாக்கறதுதான் ஆனா பெர்பெக்ட்.

க்ளைமாக்ஸ் கூடங்க. பைனல்ல போராடி கப் ஜெயிப்பாய்ங்கன்னு நினச்சா, அத கூட காமெடி பண்ணிட்டாய்ங்க. இளவரசு நானும் ஆடறேன் ஆடறேன்னு சொல்லிட்டேயிருப்பார். கடைசில யாரோ வரலைன்னு, இளவரச ஆடக்கூப்பிடுவார் நம்பாளு (அவர் பேரெல்லாம் மறந்துபோச்சு! ஆனா மொத்தத்தில அவரத்தான் எனக்கு பிடிச்சது). இளவரசு ரொம்ப பீளிங்கா ஏண்டா ஜெயிக்க வேண்டிய மேச்ச என்ன ஆடச்சொல்றீங்க, அர்ணால்டு இருப்பான் அவன ஆடச்சொல்லுங்கன்னு சொல்லுவார். நம்பாளு கொஞ்சநேரம் பாத்துட்டு, சும்மா கேட்டா இவர் ஏன் இப்படி ப்ளீங்கா பேசறார்ன்னு சொல்லுவாரே பாக்கலாம். சீரியஸ கூட காமெடி ஆக்கிட்டாங்க. சின்ன பசங்ககூட பெட்டிங் மேட்ச் போட்டு முப்பத்தி சொச்சம் ரன் அடிச்சுட்டு, பவுலர் கிட்ட டேய் லெக்லையே போடுறா, முப்பது ரன் தான்டா அடிச்சிருக்கோம்னு ரொம்ப பீளிங்கா சொல்றது. (எங்களுக்கு இதே மாதிரி ஒரு அனுபவம் இருக்கு. சென்னையில NGO காலனி க்ரவுண்ட்ல, சின்ன பசங்ககூட ஆடி மொத்தத்துக்கு 12 ரன் தான் அடிச்சோம். அப்புறம் மொதோ ஓவர் நான் தான் போட்டேன். மூனு பால் மூனு ·போர். நாலாவது பாலும் ஒரு ·போர் அடிச்சு ஜெயிச்சாய்ங்க. நல்லவேலையா நாங்க பெட்டிங் எல்லாம் கட்டல.) அப்புறம் க்ரவுண்ட விட்டு ஒருத்தன் வெளில அடிச்சுடுவான். (நம்ப எல்லோரும் rules வெச்சிருப்போம்ல. வெளில அடிச்சா அவுட்டான்னு. அதே மாதிரிதான்). இன்னொருத்தன் பால் எடுக்க சுவரேரி குதிச்சு வெளில ரோட்டுக்கு போகனும். சுவர் வரைக்கும் வேகமாக ஓடி, சுவர் ஏறுவதற்கு முன்னாடி, திரும்பி அடிச்சவன போடா பொறம்போக்குன்னு திட்டிட்டு போவான் பாருங்க. exactly நம்ப பண்ணதுமாதிரிதான். “ஓ ஓ என்னன்னமோ பண்ணுது பண்ணுது” வாய்ஸ் ரொம்ப seducing. அந்த பாட்டுக்கு ஆடுற அம்மணி first introduceஆகும் போதே தெரிஞ்சிடுச்சு அந்த பாட்டு இந்த அம்மணிக்குத்தான்னு. எல்லா பாடலுமே நல்லாயிருக்கு. எனக்கு பிடிச்சது எஸ்.பி.பி “பாடிய யாரோ யாருக்குள் இங்கு யாரோதான்”.

விஜய் டீவில ஜில்லுன்னு ஒரு ஜோடி (அனிதா ஜோடி! அழகிய அசுரா அழகிய அசுரா பாடியவர்) ஓடிட்டிருக்கு. அந்த தம்பதியினரில் மனைவி கணவரைப் காமிச்சு, மமதிகிட்ட, எந்த functionக்கு போனாலும் இவர் லேட்தான்னு சொல்லுவார். அதற்கு மமதி அவர்களைப் பார்த்து, “ஏன் எல்லா functionக்கும் லேட்டாப்போறீங்க, நீங்க ரெண்டு பேரும் dress எங்க பண்ணுவீங்க ஒரே ரூமிலா?” ன்னு கேக்கறார். மமதி நீங்க ஓபராவி·ப்ரே இல்லீங்கோ. அவங்க மமதியின் இடக்கை கண்டுகொள்ளவில்லை. கண்டுகொண்டாலும் பதில்சொல்ல விரும்பவில்லை.