கூண்டிலடைக்கப்பட்ட பறவை

எனக்கு நீ வேண்டும்;
ஆனால் ஒருபோதும் என்
கைகளால் உன்னை
அணைத்துக்கொள்ள
முடியாதென்றும் தெரியும்.
நீ துல்லியமான
பிரகாசமுள்ள ஆகாயம்.
நானோ
கூண்டிலடைக்கப்பட்ட பறவை.

– ·பரூக் ·பரோக்சாத்

இன்சிடென்ட்ஸ்-8

(இதற்கு முந்தைய பகுதிகளை sidemenuவில் பார்க்கவும்! யாரும் பாக்கமாட்டிங்கன்னு எனக்கு தெரியும், ஆனா சொல்றது என் கடமை இல்லியா?)

இந்தமுறை ஊருக்கு சென்றிருந்த பொழுது, ஒரு ஹாட்டான மதிய நேரத்தில், நல்லா மூக்குபிடிக்க வெறால் மீன் குழம்பை ஒரு கட்டுகட்டிவிட்டு, வெத்தலை பாக்கு போட்டுகொண்டே அனந்தசயனத்தில், மேலே “எனக்கு கொஞ்சம் ரெஸ்ட் கொடுங்களேன்டா, ப்ளீஸ்!” என்று கதறி அழுது கொண்டிருந்த ·பேனிலிருந்து கீழே மிக மெதுவாய், மிக மிக மெதுவாய், ஸ்டுபிட் ஹாட் ஏர் என்னை நோக்கி இறங்கிக்கொண்டிருந்த பொழுது, என் மருமகள் (அக்காவின் மகள்) ஒரு சூட்கேஸை தூக்கமுடியாமல் தூக்கிகொண்டு வந்து என் முன்னால் வைத்தாள், கிட்டத்தட்ட தடால் என்று கீழே போட்டாள். போட்டுவிட்டு, ஆச்சி முழிச்சுக்கப்போறாங்க,ஐயோ என்று வேகவேகமாக என் அருகில் உட்கார்ந்துகொண்டாள். ஆச்சி முழித்தார் என்றால், தூங்கச்சொல்லுவாரே என்ற பயம் அவளூக்கு. நான் சிறுவனாய் இருந்த பொழுது எனக்கிருந்த அதே பயம். மதியம் விளையாடாமல் தூங்க வேண்டுமே என்கிற பயம். (இப்போ தூக்கம் வராமல் இரவு ரெண்டு மணிக்கு கூட கொட்டக்கொட்ட முழித்துக்கொண்டிருப்பது வேறு விசயம்!! சித்தி என்ற படத்தில் தூக்கத்தைப் பற்றிய பாடல் ஒன்று உண்டு! அந்த பாடல் நிதர்சன உண்மை. அது ஏதோ பெண்ணைக் குறித்து பாடப்பட்டது போல தோன்றினாலும், ஆணுக்கும் கச்சிதமாக பொருந்தும். ஆணுக்கும் பெண்ணுக்கும் அதே அளவு கவலைகளும் மனச்சுமைகளும் உண்டு. வகைகள் மட்டுமே வேறு!).

கீழே விழுந்த சூட்கேஸில் இருந்து தூசி சிறிய புகையாக எழும்பிக்கொண்டிருந்தது. பக்கத்தில், தோட்டத்தைப் பார்த்திருந்த ஜன்னலில் இருந்து வழிந்துகொண்டிருந்த பளீர் வெயிலில், தூசி பெரும் புகையாக மாறிவிட்டது போல இருந்தது. பார்த்திருக்கிறீர்களா? நான் சிறுவனாக இருந்த பொழுது, ஜன்னல் பக்கத்தில் மட்டுமே தூசிகள் இருக்கின்றன என்று நினைத்து, அந்த ஒளிக்கீற்றில் மின்னும் தூசிகளை கைகளால் அந்தப்பக்கம் தள்ளிவிட முயற்சித்திருக்கிறேன்.ம்ம்ஹ¥ம். நான் தள்ளிவிட தள்ளிவிட, எங்கிருந்தோ தூசி வந்து அதே இடத்தில் ஒட்டிக்கொள்ளும், நாம் எவ்வளவு துரத்தினாலும் மீண்டும் அதேவேகத்தில் நம்மில் வந்து ஒட்டிக்கொள்ளும் ஒரு சில நினைவுகளைப் போல.

அந்த சூட்கேஸில்தான் போட்டோக்கள் இருக்கின்றன. சூட்கேஸ் நிறைய போட்டோக்கள் இருக்கின்றன. விருந்தினர்கள் யாராவது தெரியாத்தனமாய் போட்டோக்கள் என்று கேட்டுவிட்டால் அவ்வளவுதான் தொலைந்தார்கள். போதுமடா சாமி என்று சொல்லும்வரை நாங்கள் எடுத்துகொடுத்து கொண்டேயிருப்போம். சன் டீவியின் சீரியல்கள் போல இது முடியவே முடியாதா என்று சொல்லும் அளவுக்கு தொடர்ந்து கொடுத்துக்கொண்டேயிருப்போம். வந்திருந்த உறவினர்கள் வீட்டுக்கு சென்றபின், வராத அவர்கள் வீட்டாரிடம், “நல்லாத்தான் இருக்காய்ங்க, ஆனா நீ போனீனா கண்டிப்பா போட்டோ பத்தி மட்டும் பேச்சு எடுத்திடாத. போட்டோ கேட்ட தொலஞ்சடிமாப்ள” என்று சொல்லுவார்களோ என்று சில சமயம் நான் சிரியஸாக யோசித்திருக்கிறேன். நமக்கு வேண்டுமென்றால் போட்டோக்கள் -ஒரு கட்டத்தில்- சலித்து விடும், ஆனால் இந்த வாண்டுகளுக்கு அதில் என்னதான் இருக்கிறதோ தெரியவில்லை. எத்தனை முறைதான் அதே போட்டோக்களை திரும்பத்திரும்ப பார்த்துக்கொண்டிருக்குங்களோ தெரியவில்லை. “மாமா இங்க இருக்காங்க பாத்தியா? அம்மா குட்டிப்பிள்ளையா இருக்கும் போது எடுத்தது தெரியுமா? தாத்தா மீட்டிங்கில பேசறாங்க பார்” என்று பார்த்த போட்டோக்களையே மீண்டும் பார்த்து, அதே அளவு fresh ஆச்சரியத்துடன் கேட்டுக்கொண்டிருங்குங்கள். இன்றும் அதே சூட்கேஸை தூக்கிகொண்டு என் அருகில் கூட்டமாக உட்கார்ந்து கொண்டதுகள். எங்கள் வீட்டில் வாண்டுகள் அதிகம்.

எல்லா குட்டீஸ்களையும் ஒன்றாக அமைதியாக உட்காரவைக்க வேண்டும் என்றால் இரண்டு வழிகள் இருக்கின்றன, ஒன்று: கில்லி அல்லது சந்திரமுகி படத்தை டிவீடியில் போட்டுவிடுவது. இரண்டு: போட்டோ பார்க்கலாம் வாங்க என்று சொல்வது. இதில் ·பர்ஸ்ட் ஐடியா ஈசி. டிவீடிக்களைக் கிழிக்க முடியாது.

உட்காரவைக்கவில்லை என்றால் வரிசையாக இங்கிட்டும் அங்கிட்டும் ஓடிக்கொண்டே இருக்குங்க. வீட்டுக்கு முன்னாடியும், பிறகு பின்னாடியும், பிறகு மீண்டும் முன்னாடியும், பிறகு மீண்டும் பின்னாடியும் ஓடி ஓடி, இரவு மொட்டை மாடியில் படுக்கும் வரைக்கும் அப்படி என்னதான் விளையாடுங்களோ தெரியவில்லை! ஒரு முறை நானும் மற்ற எல்லோரும் வீட்டின் வாசல் படிகள் உட்கார்ந்து ஒரு சாயங்காலம் கதை அடித்துக்கொண்டிருந்தோம், குட்டீஸ்கள் வரிசையாக மேலும் கீழும் அங்கும் இங்கும் ஓடிக்கொண்டிருந்துச்சுங்க. என்னுடைய வக்கீல் அண்ணன் “எப்பவுமே லெவல் க்ராஸிங்கல உட்கார்ந்திருக்கறமாதிரியே இருக்குடா! ஒரு ட்ரெயின் க்ராஸ் பண்றமாதிரியே இருக்குல்ல!” என்று ஒரு கமெண்ட் அடித்து எல்லோரையும் சிரிக்க வைத்தார். உண்மைதான். என்ஜினை மட்டும் ஆப் செய்தால் போதும், ட்ரெயின் நின்றுவிடும் என்றார். இன்ஜின், அக்காவின் இரண்டாவது மகள்.

ஒவ்வொரு போட்டோ ஆல்பமாக பார்த்துகொண்டுவந்தோம். அக்காபெண்களின் பள்ளிக்கூட நண்பர்கள். அவர்கள் போட்ட சண்டைகள். பள்ளிக்கூடத்து நிகழ்ச்சிகள். ஆடிய டான்ஸ். பேசிய பேச்சுப்போட்டி என்று ஒவ்வொன்றாக கேட்டுக்கொண்டுவந்தேன். என்னுடைய பள்ளிக்கூட போட்டோ ஆல்பம் வந்தது.

***

ஒருமுறை, என்னோட பள்ளிக்கூட ஆல்பத்தை பள்ளிக்கு எடுத்துச்சென்றிருந்தேன். ஆலபம் என்றால் அதில் என்னுடைய எல்லா வயது போட்டோக்களும் இருக்கும், எல் கே ஜி யிலிருந்து பணிரெண்டாம் வகுப்பு வரை. நான் மூன்றாவது படித்துக்கொண்டிருந்த பொழுது – என்று நினைக்கிறேன் – குன்றக்குடி அடிகளாரிடம், திருமங்கலம் (மதுரை) இலக்கிய பேரவையில், மாலை வாங்கியதும் ஒரு போட்டோவில் இருக்கிறது. மாலை போட்டுக்கொண்டு, ஒரு சேரில், மாலையையே குனிந்து பார்த்துக்கொண்டு, ஒரு டார்க் ப்ளூ டீசர்ட்-டவுசரில், அமைதியாக என் தனி உலகத்தில், கற்பனையில், ஆழ்ந்திருப்பேன். அன்று என்ன யோசித்துக் கொண்டிருந்திருப்பேன்?

இலக்கிய பேரவையில் மாலை வாங்கிருக்கியா? அதுவும் மூன்றாவது படிக்கும் போதா? என்று என் இலக்கிய பெருமைகளை எண்ணி நீங்கள் வியந்து, வாவ் முத்து, யூ ஆர் ராக்கிங்! என்று சொல்வதற்கு முன்னர், உண்மையைச் சொல்லிவிடுகிறேன். அன்று நான் கூட்டத்தில் எதுவுமே செய்யவில்லை. அப்பாவுடன் சும்மா சென்றிருந்தேன். அப்பா இலக்கிய பேச்சாளர். புலவர். பட்டிமன்றப்பேச்சாளர். கவிஞர். (இரண்டு கவிதைத் தொகுப்புகளை வெளியிட்டிருக்கிறார்). என்னை மேடையில் பார்த்த குன்றக்குடி அடிகளார், எல்லோருக்கும் மாலை போடுவதையே வெறித்து வெறித்து பார்க்கிறானே -கண்டிப்பாக வெறித்துப் பார்த்திருப்பேன் – என்று பாவப்பட்டு அவருக்கு போட்ட மாலையைக் கழட்டி எனக்கு அணிவித்தார்.

இப்படியாக குன்றக்குடி அடிகளாரிடம் மாலை வாங்கிய பெருமை எனக்கிருக்கிறது. சும்மானாச்சுகாவது வாங்கிருக்கம்ல! பிற்பாடு பத்தாவது படிக்கும் பொழுது அவர் கையால், கேடையம் வாங்கியிருக்க வேண்டியது மிஸ் ஆகிப்போனது வேறு விசயம். இன்னோரு “இன்சிடென்டில்” அதை சொல்கிறேன்.

சரி மேட்டருக்கு வருகிறேன். என் போட்டோக்களை ஆர்வமாக என் பள்ளி ·ப்ரண்ட்ஸ் பார்த்தார்கள். பார்த்துவிட்டு, ஒரு
ப்ரண்ட் சொன்னாள்: “முத்து, நீ குழந்தையாக இருக்கறப்போ அழகாத்தான் இருந்திருக்க போல?

***

பள்ளிக்கூட நாட்களில் நான் நடித்த நாடகங்களில் – அல்லது பொதுவாக stageperformance- எனக்கு மிகவும் பிடித்தது, அல்லது இன்று வரை நான் மறக்காமல் இருப்பது: வேடன்-புறா கதையை, நான் மோனோஆக்ட்(MonoAct) செய்தது. அது வெறும் நாடகம் இல்லை. அது ஒரு பாட்டு-நாடகம். (பாட்டுமன்றம் போல!). என்னுடைய அப்பா அதை எழுதித்தந்திருந்தார். அந்த நாடகத்தில் வசனங்களே இல்லை. வெறும் பாடல்கள் தான். பாடல்கள் என்றால்? சினிமா மெட்டுக்களில் அமைந்த வசன-பாடல்கள். அனைத்துப் பாடல்களையும் சினிமா மெட்டுக்களில் எழுதியிருந்தார் என் அப்பா. அது எங்கள் பள்ளியில் மிகப்பெரிய ஹிட்.

அந்தப்பாடல்களில் இரண்டு பாடல்களை நான் இன்று வரை முனுமுனுப்பதுண்டு. வேடன்-புறா கதை உங்கள் அனைவருக்கும் தெரிந்திருக்கும் என்று நினைக்கிறேன். (அந்த கதையையும் சொல்லி -எழுதி- மேலும் மொக்க போட நான் விரும்பவில்லை!)

சீன்: வேடன் வலையை விரித்துவிட்டான். அதில் சில தாணியங்களையும் வைத்துவிட்டான் (as bait). புறாக்கூட்டங்கள் தாணியங்களைப் பார்த்ததும் அருகில் உட்கார்ந்துவிட்டன. ஆனால் தலைமைப்புறா “இவ்வளவு தாணியங்களை ஒரு சேர நான் என் வாழ்க்கையில் பார்த்ததில்லை, இதில் ஏதோ சூது இருக்கிறது” என்கிறது. ஆனால் பெரிசுக சொல்றதை என்னிக்கு வெடலப்புள்ளைக கேட்டிருக்கு?

பெரிச எதிர்த்து ஒரு வெடலை பாடுது இப்படி:

அட குவிஞ்சிருக்கு இங்க நெல்லு,
உனக்கு வேண்டானா தள்ளி நில்லு!

இனி உங்க பேச்சு
கேக்க மாட்டோம் சூச்சு

வந்தா வாங்க
வராட்டி போங்க
நாங்க போறமுங்க.

வந்தா வாங்க
வராட்டி போங்க
நாங்க போறமுங்க!”

இதற்கு தளபதியில் வரும் “ராக்கம்மா கையத்தட்டு” பாடலின் மெட்டை உபயோகிக்க வேண்டும்.

“ஜாங்கு ஜக்கு ஜஜக்கு ஜக்கு
ஜாங்கு ஜாங்கு ஜக்கு ஜா”

” வந்தா வாங்க
வராட்டி போங்க
நாங்க போறமுங்க.”

அப்புறம் வேறு ஒரு குருவி பாடும் பாட்டு:

பசிக்குது வயிறு
ருசிக்குது பயறு

(இப்பவும், எனக்கு பசிக்கும்போது இந்த வரிகள் தான் ஞாபகம் வருகின்றன! வாய் ஆட்டோமேட்டிக்கா முனுமுனுக்குது!)

என்னபாட்டு தெரியுதா? “அடிக்குது குளிரு”

இந்த மோனோ ஆக்ட்டைக் கேள்விப்பட்ட +2 மாணவர்கள் (மற்றும் மாணவியர்கள்!) – அவர்கள் அன்று போட்டியைப் பார்க்கவில்லை, ஏதோ பரிட்சையோ என்னவோ- ரொம்பவும் ஆர்வமாகி, என்னை அழைத்து தனியாக -பிர்த்தியேக ஷோ- அவர்களுக்காக மீண்டும் மோனோஆக்ட் செய்யச்சொன்னர்.

After the performance, தேவியும், தீபாவும் என் கண்ணத்தை கிள்ளி so sweet, well done! என்று சொன்னது, இன்னும் எனக்கு பசுமையாக ஞாபகம் இருக்கிறது. (இருக்கனும்ல! நான் அப்பொழுது ஒன்பதாவது படித்துக்கொண்டிருந்தேன் என்பதை சொல்ல மறந்துவிட்டேன்!)

இன்னொரு முறை – வீட்டுக்கு போகும் போது கண்டிப்பாக தேடிப்பிடித்து – முழு பாடல்களையும் பதிவு செய்கிறேன்.

***

(தொடரும்)

சில ஹைக்கூக்களும், முத்துவும்.

(No! when I say Haikus, I am not mentioning girls!)

ஒரு ஞாயிறு மதியம் Open Page என்கிற புத்தகக்கடையில் சுற்றித்திரிந்து கொண்டிருந்த பொழுது, ஒரு சில ஹைக்கூ புத்தகங்கள் கிடைத்தன. சும்மா, புரட்டினேன். (பாவம் நீங்கள்!) என்னால் முடிந்த அளவிற்கு மொழிபெயர்த்திருக்கிறேன்.

In the mirrors on her dress
Little pieces of my
Self.
-Cor van den heuvel

அவளின் சுடிதார் கண்ணாடிகளில்
நான்
சிதறிக்கிடக்கின்றேன்.


The momment two bubbles
are united, they both vanish.
A lotus blooms.
-Murakami Kijo / TR. Makoto Ueda

இரண்டு குமிழ்கள் சந்திக்கும் தருணத்தில்
இரண்டுமே மறைந்துபோகின்றன.
அங்கே ஒரு தாமரை மலர்கிறது.

Kept awake
By the silence
Of her breathing.
-Maurice Tasnier

அவள் முச்சுக்காற்றின்
நிசப்தத்தில்
நான் முழித்திருக்கிறேன்.

Morning Shyness –
After our bath
She wraps herself in a towel.
-Brain Tasker

காலை வெட்கம் –
எங்கள் குளியலுக்கப்புறம்
துண்டு அவளைப் போர்த்திக்கொண்டது.

Looking for you
Through hundreds
Of love haiku.
-Manu Bazzano

கணக்கிலடங்கா
காதல் ஹைக்கூக்களில்
உன்னைத் தேடிக்கொண்டிருக்கிறேன்.

Since you went away
No flowers are left on earth.
-Natsume Soseki

நீயும் சென்றுவிட்டபிறகு
பூக்களே இல்லை –
இந்த பூமியில்.

A broken heart
Is an open
Heart.
-Anonymous.

உடைந்த இதயம்-
ஒரு திறந்த
இதயம்.

In Cold Blood

In Cold Blood என்ற புத்தகத்தை ஆறு மாதங்களுக்கு முன்னால் வாங்கினேன். சில மாதங்களுக்கு முன்னால் படிக்க ஆரம்பித்து, முதல் ஆறு பக்கங்கள் மட்டுமே படித்தேன். அவ்வளவு தான் படிக்கமுடிந்தது, அப்போது. (படிப்பதற்கும் mood செட்டாகவேண்டும் இல்லியா?!) பிறகு வேறு வேறு நாவல்களுக்கு தாவிவிட்டு, பிறகு மீண்டும் சென்ற வாரம், புதன்கிழமை படிக்க ஆரம்பித்தேன். இரண்டே நாட்களில் -அதுவும் weekdays- படித்து முடித்தேன். என்னால் இந்த நாவலைப் படித்துமுடிக்கிற வரையில் வேறு எதிலும் கவனம் செலுத்த முடியவில்லை. அதற்கப்பிறகு, இந்த நாவலை தழுவி -தழுவி என்று சொல்லமுடியாது. அச்சு அசல் அதே போல – எடுக்கப்பட்ட திரைப்படம், In Cold Bloodஐயும் பார்த்தேன். இந்த நாவலைப் பற்றி என் நண்பரிடம் நிறைய பேசிக்கொண்டிருந்தேன். நிறையவே பேசிவிட்டேன். சாப்பிடும் போது. சாப்பிட்டு முடித்த பிறகு. வீட்டிற்கு செல்லும் வழியில். பிறகு செல்போனில். என் ஆர்வத்தைப் பார்த்த அவர், சென்ற வெள்ளியன்று, என் பிறந்தநாள் பரிசாக, Capote என்ற படத்தின் DVDஐ surprise presentஆக கொடுத்தார். அன்றே அந்த படத்தையும் பார்த்துவிட்டேன். (வேற வேலையே இல்லியாடா உனக்கு? என்கிற உங்களது குரல் என்னை வந்தடைந்து விட்டதை இங்கே தெரிவித்துக் கொள்ள கடமைப்பட்டிருக்கிறேன்!)

இந்த நாவல் ஒரு புதிய முயற்சி என்று Truman Capote சொல்கிறார். அதாவது Non-Fiction Novel. நாவல் என்றாலே புனைவுதான். ஆனால் இது புனைவு அல்லாத ஒரு உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்ட நாவல். அடிப்படை இல்லை. முழுக்க முழுக்க உண்மையே. “capote” படம் இந்த நாவலை எழுதிய Truman Capote அவர்களின் பயோகிராபி. பயோகிராபி என்று சொல்லமுடியாது. இந்த நாவல் உருவான கதை என்று வைத்துக்கொள்ளலாம். (இந்தப்பதிவில் இரு விசயங்களைப் பற்றிப் பார்க்கப்போகிறோம். In Cold Blood என்ற Truman Capote எழுதிய நாவல். Truman Capote எப்படி இந்த நாவலை எழுதினார் என்பதைப் பற்றிய படம்: Capote)

***

Kansas நகரத்திலிருந்து ஒதுங்கி தனியாக நிற்கும் Holcomb என்ற அழகான கிராமத்தில் நவம்பர் 1959இல் நடந்த நான்கு படுகொலைகளைப் பற்றியது தான் இந்த In Cold Blood என்ற நாவல். நாவல் பிரசுரம் செய்யப்பட்ட ஆண்டு 1965. 1967இல் இந்த நாவலை தழுவி எடுக்கப்பட்ட படம் “In Cold Blood”. பிறகு 2005 Capote வெளிவந்தது. Capoteயாக நடித்த Philip Seymour Hoffman (மிஷன் இம்பாசிபில் 3ல வந்த வில்லன்!) 2005இல் சிறந்த நடிகருக்கான அகாடெமி விருதைப் பெற்றார்.

Holcomb விவசாயத்தை முக்கியத் தொழிலாகக் கொண்ட கிராமம். அந்த கிராமத்தில் விவசாயம் செய்து வாழ்ந்து வருகிறது Clutter குடும்பம். Clutters கொஞ்சம் செல்வந்தர்கள். அந்த ஊரில் தன் நற்குணங்களால் நல்ல பெயரெடுத்தவர் Clutter. அவருக்கு மூன்று மகள்கள் ஒரு மகன். முதல் இரண்டு மகள்களுக்கும் திருமணம் நடந்து வேறு வேறு ஊர்களில் செட்டில் ஆகிவிட, கடைசி மகளும் மகனும் மட்டும் Holcombஇல் அப்பா அம்மாவுடன் வாழ்ந்து வருகிறார்கள். Clutterஇன் மனைவி Bonnie கொஞ்சம் மனநிலை தவறியவர். சிகிச்சைக்குட்பட்டு இப்பொழுதுதான் கொஞ்சம் தேறிவருகிறார். கடைசி மகள் Nancy அந்த ஊரின் செல்லப்பெண். Everyone’s Darling. அழகான. சுறுசுறுப்பான, பொறுப்பான, மரியாதையான பெண். “Nancy Clutter is always in a hurry, yet she always has time. And that’s one definition of a lady.” என்று ஒரு neighbour அவளைப் பற்றி சொலிகிறார். Kenyon கடைசி பையன். மொத்தத்தில் Clutter குடும்பம் அந்த ஊரின் உதாரணக்குடும்பம்.

இந்த நாவலில் மிக முக்கியமான விசயம் என்னவென்றால் சொல்லப்பட்டவிதம். The narration. ரொம்ப யதார்த்தமாக ஆனால் ஒரு சஸ்பென்ஸ் இருந்துகொண்டேயிருக்கக்கூடிய வகையில் இந்த நாவல் முழுவதையுமே அமைத்திருக்கிறார் Truman Capote. நாவல் ஆரம்பித்து கொஞ்ச பக்கங்களிலே நான்கு படுகொலைகள் நடந்துவிடுகின்றன. ஏன், சொல்லப்போனால், எனக்கு நாவல் படிக்க ஆரம்பிக்கும் முன்னரே தெரியும், இது நான்கு படுகொலைகளைப் பற்றியதுதான் என்பது. ஆனால் தெரிந்தும், எது என்னை நாவலின் கடைசிப்பக்கம் வரைக்கும் கொண்டுசென்றது? என்னை ஈர்த்தது எது? அது கொலைக்கான motive. அதைத் தேடித்தான் நான் பக்கங்கள் தோறும் விரைந்துகொண்டிருந்தேன்.

அதாவது Holcomb என்ற கிராமத்துக்கும், clutterக்கும் சிறிதும் சம்பந்தமில்லாத இரண்டு நபர்கள் (Perry, Dick), clutterஇன் வீட்டுக்குள் நடு இரவினில் புகுந்து, வீட்டிலிருந்த நான்கு பேரையும் (clutter, clutterஇன் மனைவி Bonie, Nancy and Kenyon) சுட்டுக் கொலைசெய்கின்றனர். ஆனால் அவர்கள் வீட்டில் இருந்த பல பொருட்கள் அப்படியே இருக்கின்றன. including bonie’s necklace. கொலை செய்யப்பட்டவர்களும் நன்றாக சௌகரியமாக படுக்கவைக்கப்பட்டு (கழுத்துக்கு தலையணை கொடுத்து! ஏதோ அவர்களுக்கு வலிக்கும் என்று உணர்ந்தவர்கள் போல!) கைகால் கட்டிப்போடப்பட்டு, சரியாக நெற்றிப்பொட்டில் சுடப்பட்டிருக்கின்றனர். கொலையைத் துப்பறியவரும் KBI (kansas’s beurau of investigation)ஐ சேர்ந்த Dewey என்பவரும் குழம்பிப்போகிறார். ஏன் கொலைசெய்யப்பட்டனர்? மேலும் clutter 80 centsக்கு கூட செக் -No Cash!- கொடுப்பவர் என்பதை அங்கிருக்கும் மக்கள் அனைவரும் அறிவர். அப்படியிருக்க பணத்தை தேடி அவர்கள் வந்திருக்கமாட்டார்கள் என்று திட்டவட்டமாக நம்புகிறது KBI. அவர்களுக்கு எந்த clueவும் கிடைக்கவில்லை. ஒன்றைத்தவிர. அது, கொலைசெய்யப்பட்டுக்கிடக்கும் பிரேதங்களைப் படம்பிடித்ததில் தற்செயலாக, ஒரு போட்டாவில் விழுந்திருக்கும், shoe impression. அப்படியே கொலைகாரர்கள் கிடைத்தாலும், அவர்கள் அந்த ஷ¥க்களோடே சுற்றிக்கொண்டு இருக்க வேண்டும், அப்படியிருந்தால் தான், அவர்களைக் கொலைகாரர்கள் என்று கோர்ட்டில் நிரூபிக்க முடியும். Proof. Sole Proof. (wow, முத்து கலக்கற!) கொலைகாரர்கள் அவ்வளவு முட்டாள்களா என்ன? ஷ¥வை தூக்கி வீசியிருக்கமாட்டார்களா என்ன?

Perryயும் Dickக்கும் கொலைசெய்துவிட்டு மெக்ஸிக்கோவிற்கு தப்பிச்செல்கின்றனர். ஆனால் சென்ற சிறிது நாட்களிலே – கையிலிருந்த பணமும், ஓட்டி வந்த காரை விற்ற பணமும் செலவழிந்த பிறகு – மெக்ஸிகோ திகட்டிவிட அவர்கள் மீண்டும் அமெரிக்கா (LasVegas, Nevada) வருகின்றனர். அங்கிருந்து புறப்படும் போது கையில் போதுமான பணம் -காரும் இல்லை- இல்லாததால், அவர்கள் பஸ்ஸில் பயணிக்கின்றனர். Perry ஒரு சிறந்த படிப்பாளி. நிறைய புத்தகங்கள் படிக்கின்றவன்.(நிறைய புத்தகங்கள் படிக்கறவயங்களையே நம்பக்கூடாதுப்பா!) படிப்பதோடு மட்டுமில்லாமல் கிடைக்கும் புதிய வார்த்தைகளை சேகரித்து, அதை எப்படியும் -தேவையே இல்லாத போது- உபயோகின்றவன். He is building his vocabulary. எனவே தான் வைத்திருந்த புத்தகங்களையும், தன்னுடைய ஷ¥வையும் (ஆதாரம்!) ஒரு பார்ஸலில் போட்டு Nevadaவுக்கு அனுப்பி வைக்கிறார்.(மாட்னடா நீ!)

இதற்கிடையே, ஜெயிலில் Dickக்குடன் ரூமை பகிர்ந்து கொண்ட ஒருவன், தற்செயலாக ரேடியோவில் Clutterவீட்டு கொலைகளைப் பற்றிய செய்தியைக் கேட்கிறான். அவனுக்கு உடனே விசயம் பிடிபடுகிறது. அதாவது, அவன், சிறுவயதில் clutterஇன் நிலத்தில் வேலை பார்த்தவன். clutter பெறும் பணக்காரர் என்பதை நன்கறிவான். அவன் ஒரு முறை எதேச்சையாக Dickக்கிடம் இதை சொல்லிக்கொண்டிருந்த போது, அன்றே clutterஐக் கொள்ளை அடிக்கப்போவதாக முடிவு செய்திருக்கிறான், Dick. அதை அவனிடமும் கூறியிருக்கிறான். மேலும், அவன், Dickக்கிடம் clutter வீட்டின் முழு வரைபடத்தையும் வரைந்து காண்பித்திருக்கிறான் -அவனுக்கு ஞாபகம் இருக்கும் அளவுக்கு. ஆனால், அவன் ஒரு தவறான விசயத்தை Dickஇடமும் Perryயிடமும் சொல்லியிருக்கிறான். அது Clutter வீட்டில் Safe இருக்கிறது என்பது! உண்மை என்னவென்றால், Clutter என்றுமே கையில் cash வைத்துக்கொள்வது கிடையாது, 20-30டாலர்கள் தவிர. ரேடியோவில் செய்தியைக் கேட்டவுடன், அவனுக்கு எல்லாமே விளங்குகிறது. KBI, துப்புக்கொடுப்பவர்களுக்கு கொடுப்பதாக அறிவித்திருந்த ஆயிரம் டாலர் பரிசுப்பணத்தை, நினைத்து அவன் approver ஆகிவிடுகிறான்.

மெக்ஸிக்கோவில் இருந்து திரும்பிய Perryயும் Dickம், தாங்கள் காட்டிக்கொடுக்கப்பட்டதை அறியாமல், போலி செக்குகளை –Dick, போலி செக்குகள் கொடுப்பதில் புலி!- இன்னும் கொடுத்துக்கொண்டு திரிகின்றனர். Perry போஸ்ட் ஆபிஸில் சென்று தனது பார்ஸலை எடுக்கும் போது கையும் கலவுமாக பிடிபடுகிறான். பார்ஸலில் ஷ¥ இருக்கிறது. ஆதாரம். இருவரும் குற்றத்தை ஒப்புக்கொல்கின்றனர். கொள்ளைஅடிக்கப்போனதாகவும், அங்கு கொள்ளைஅடிக்க ஏதும் இல்லை என்றபொழுது, அனைவரையும் சுட்டுவிட்டோம் என்றும் கூறுகின்றனர். Plan போட்டது Dick, ஆனால் சுட்டது Perry, என்று Dick சொல்கிறான். (அதுதான் உண்மையும் கூட) ஆனால் Perry இதை ஒத்துக்கொள்ள மறுக்கிறான். நான் தான் நான்கு நபர்களையும் சுட்டேன் என்றாலும், Dickக்கும் தண்டனை வேண்டும், அதனால் இரண்டு கொலைகளை Dick செய்தான், என்றும் இரண்டும் கொலைகளை நான் செய்தேன் என்றும் வாக்குமூலம் கொடுக்கிறான். இது Perryஇன் குணம். பொறாமை. தனக்கு இல்லையென்றால் யாருக்கும் இருக்கக்கூடாது. அவரிடம் இருக்கிறதா, தனக்கும் வேண்டும்!

இருவரின் குற்றங்களும் நிரூபிக்கப்பட்டு, இருவருக்கும் தூக்குதண்டனை வழங்கப்படுகிறது.

***

கொலை நடந்த மறுதினம் பேப்பரில் செய்தியாகப் பார்க்கும் Truman Capote இதில் ஆர்வமாகி ஒரு ஆர்டிக்கிள் எழுதுவதற்காக Holcombக்கு வருகிறார். அங்கு சென்று விசாரித்ததில், இந்த சம்பவத்தை, இதில் ஈடுபட்ட மனிதர்களின் வேறுபட்ட குணங்களை அறிந்த capote, இது ஒரு முழு புத்தகமாக எழுதுவதற்கு ஏற்றது என்று முடிவு செய்கிறார். இது வெறும் கொலையைப் பற்றிய சஸ்பென்ஸ் நாவல் இல்லை. இந்த கொலையில் சஸ்பென்ஸ் முக்கியமில்லை. மனிதர்களின் குணாதிசயங்கள், சஸ்பென்ஸை பின் சீட்டுக்கு தள்ளிவிட்டு, அவை முன் சீட்டுக்கு தாவி வருகின்றன. நாவல் நெடுகிலும் மனிதர்களின் குணங்கள் அலசப்படுகின்றன.

அன்று அவர்கள் செய்தது நான்கு கொலைகள். அதன் மூலம், அவர்களுக்கு கிடைத்த லாபம் எவ்வளவு தெரியுமா? 40-50 டாலர்கள். நான்கு உயிர்களின் மதிப்பு 50 டாலர்கள். ஏன் கொலை செய்தார்கள்? பிற்பாடு விசாரிப்பின் போது, Perry இவ்வாறு சொல்கிறான்:

“I don’t know why,” he said, as if holding it to the light, and angling it now here, now there. “I was sore at Dick. The tough brass boy. But it wasn’t Dick. Or the fear of being identified. I was willing to take that gamble. And it wasn’t because of anything the Clutters did. They never hurt me. Like other people. Like people have all my life. Maybe it’s just that the Clutters were the ones who had to pay for it.”

அவனுக்கே தெரியவில்லை, ஏன் கொலை செய்தோமென்று! Just an impulsive reaction. Clutterஐக் கொன்ற பிறகு, மத்த எல்லோரையும் கொல்லவேண்டியதாயிற்று.

Peryயின் அப்பா, ஒரு முறை அவனை நடுராத்திரியில் நடுங்கும் குளிரில் துப்பாக்கி முனையில் வீட்டை விட்டு துரத்துகிறார். அந்த நினைவு அவன் மனதில் ஆழமாக பதிந்துவிடுகிறது. சிறுவயதில் தாயும் தந்தையும் பிரிந்ததில், pery தாயுடன் இருக்கவேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்படுகிறான். அவள் ஒரு குடிகாரி. அவளால் தினமும் துன்புறுத்தபடுகிறான். பள்ளிக்கு சென்றால் இவனை (half-indian என்பதால்) மற்ற சிறுவர்கள் இவனை கேலி செய்கின்றனர். இதனால் ஒரு மனநோயாளியாக வளர்கிறான். எல்லோர் மீதும் பொறாமை கொள்கிறான். Capoteக்கு Pery மீது தான் பாசம். அல்லது பாசம் வைத்திருப்பதைப் போல நடிக்கிறார். (அது Capote திரைப்படத்தில் காட்டப்படுகிறது.)

Pery மன்நோயாளியாக வளர்ந்தததற்கு ஆயிரம் காரணம் இருக்கலாம் ஆனால் Nancy போன்ற சுறுசுறுப்பான அழகான அறிவான ஒரு பெண்னைக் கொல்வது என்பதை எந்த வகையில் ஒத்துக்கொள்வது?

அப்புறம் kenyon? அந்த சிறுவனின் முன்னால் அவனது தந்தையின் கழுத்தை அறுத்து கொலை செய்தது? தன் தந்தையின் இறுதிப் போராட்டத்தையும் உடலின் துள்ளலையும் பார்த்த அந்த சிறுவனின் கடைசி நிமிடம் எப்படி இருந்திருக்கும்? இந்த சத்தத்தையெல்லாம் கேட்டுக்கொண்டு தன் பிள்ளைகளின் கதி என்னவாயிருக்கும் என்று பதறிய அந்த தாயின் கடைசி நிமிடங்கள் எப்படி இருக்கும்?
எனவே தான் கடைசியில் தீர்ப்பு வழங்குவதற்கு முன்னர் ஜூரியிடம் ஜட்ஜ் இவ்வாறு சொல்கிறார்::

“What are you going to do? What are you going to do with these men that bind a man hand and foot and cut his throat and blow out his brains? Give them the minimum penalty? Yes, and that’s only one of four counts. What about Kenyon Clutter, a young boy with his whole life before him, tied helplessly in sight of his father’s death struggle. Or young Nancy Clutter, hearing the gunshots and knowing her time was next. Nancy, begging for her life: ‘Don’t. Oh, please don’t. Please. Please.’ What agony! What unspeakable torture! And there remains the mother, bound and gagged and having to listen as her husband, her beloved children died one by one. Listen until at last the killers, these defendants before you, entered her room, focused a flashlight in her eyes, and let the blast of a shotgun end the existence of an entire household.”
Pausing, Green gingerly touched a boil on the back of his neck, a mature inflammation that seemed, like its angry wearer, about to burst.-”So, gentlemen, what are you going to do? Give them the minimum? Send them back to the penitentiary, and take the chance of their escaping or being paroled? The next time they go slaughtering it may be your family. I say to you,” he solemnly said, staring at the panel in a manner that encompassed and challenged them all, “some of our enormous crimes only happen because once upon a time a pack of chicken-hearted jurors refused to do their duty. Now, gentlemen, I leave it to you and your consciences.”

Peryயும் Dickக்கும் தூக்குதண்டனைக்கு காத்திருக்கும் போது அங்கே Andy என்றொரு பதின்மவயது சிறுவன் அழைத்துவரப்படுகிறான். அவன் அவனுடைய அப்பா அம்மா அக்கா எல்லோரையும் எந்த குற்ற உணர்ச்சியும் இல்லாமல் பச்சாதாபமும் இல்லாமல் சுட்டுக்கொன்றவன். ஏன் என்று அவனுக்கு தெரியவில்லை. ஏன் கொன்றான்? அவனுக்கு பெரிய gangsterஆக வேண்டும் என்ற எண்ணம் உண்டாம்.

Dick ஒருமுறை Andy பற்றி சொல்லும் போது இவ்வாறு சொல்கிறான்:
“I really liked Andy. He was a nut-not a real nut, like they kept hollering; but, you know, just goofy. He was always talking about breaking out of here and making his living as a hired gun. He liked to imagine himself roaming around Chicago or Los Angeles with a machine gun inside a violin case. Cooling guys. Said he’d charge a thousand bucks per stiff.”

சமுதாயம் இவர்களைப் பொறுப்பில்லாமல் நடத்துகிறதா? அவனது குடும்பம் அவனைக் சரிவர கவனிக்க வில்லையா? அல்லது மனிதர்கள் குற்றவாளிகளாகவேதான் பிறக்கிறார்களா என்ன? Pery வளர்ந்த விதம் சரியில்லை என்று ஒத்துக்கொள்ளலாம். ஆனால் Dick? Dick ஒரு பாசமான குடும்பத்தை சேர்ந்தவனே. ஒழுங்காக வளர்ந்தவனே. ஆனால் அவன் மாறியதற்கு காரணம் பணத்தாசை. ஆடம்பரம். ஆடம்பரத்தால் போலி செக் கொடுக்க ஆரம்பித்தான். ஆடம்பரம் என்பது புலி வாலைப் பிடித்த கதைதான். செக் மோசடிக்கு உள்ளே சென்றவன், நான்கு நபர்களை கொலைசெய்யும் தீட்டம் தீட்டி, (ஆனால் அவன் ஒருவரைக்கூட கொல்லவில்லை) தூக்குதண்டனைக் கைதியாகி, கடைசியில் தூக்கிலிடப்பட்டு இறந்தான். இதற்கு சமுதாயம் எப்படி பொறுப்பாகும்? சமுதாயம் அவனை ஆடம்பரமாக வாழவேண்டும் என்று வற்புறுத்தியதா என்ன? ஆனால் அவன் மாறியதற்கு, நடந்த ஒரு ஆக்சிடென்ட் காரணமாக இருக்கலாம் என்று விவாதிக்கப்படுகிறது. (Richard Hickock தான் Dick.)

Dickஐப் பற்றிய Testification:
“Richard Hickock is above average in intelligence, grasps new ideas easily and has a wide fund of information. He is alert to what is happening around him, and he shows no sign of mental confusion or disorientation. His thinking is well organized and logical and he seems to be in good contact with reality. Although I did not find the usual signs of organic brain damage-memory loss, concrete concept formation, intellectual deterioration-this cannot be completely ruled out. He had a serious head injury with concussion and several hours of unconsciousness in 1950-this was verified by me by checking hospital records. He says he has had blackout spells, periods of amnesia, and headaches ever since that time, and a major portion of his antisocial behavior has occurred since that time. He has never had the medical tests which would definitely prove or disprove the existence of residual brain damage. Definitive medical tests are indicated before a complete evaluation can be said to existஸ Hickock does show signs of emotional abnormality. That he knew what he was doing and still went ahead with it is possibly the most clear-cut demonstration of this fact. He is a person who is impulsive in action, likely to do things without thought of consequences or future discomfort to himself or to others. He does not seem to be capable of learning from experience, and he shows an unusual pattern of intermittent periods of productive activity followed by patently irresponsible actions. He cannot tolerate feelings of frustration as a more normal person can, and he is poorly able to rid himself of those feelings except through antisocial activityஸ His self-esteem is very low, and he secretly feels inferior to others and sexually inadequate. These feelings seem to be overcompensated for by dreams of being rich and powerful, a tendency to brag about his exploits, spending sprees when he has money, and dissatisfaction with only the normal slow advancement he could expect from his jobஸ He is uncomfortable in his relationships to other people, and has a pathological inability to form and hold enduring personal attachments. Although he professes usual moral standards he seems obviously uninfluenced by them in his actions. In summary, he shows fairly typical characteristics of what would psychiatrically be called a severe character disorder. It is important that steps be taken to rule out the possibility of organic brain damage, since, if present, it might have substantially influenced his behavior during the past several years and at the time of the crime.”

இது Peryஐப் பற்றிய Testification.
: “Perry Smith shows definite signs of severe mental illness. His childhood, related to me and verified by portions of the prison records, was marked by brutality and lack of concern on the part of both parents. He seems to have grown up without direction, without love, and without ever having absorbed any fixed sense of moral values.He is oriented, hyper alert to things going on about him, and shows no sign of confusion. He is above average in intelligence, and has a good range of information considering his poor educational backgroundஸ Two features in his personality make-up stand out as particularly pathological. The first is his ‘paranoid’ orientation toward the world. He is suspicious and distrustful of others, tends to feel that others discriminate against him, and feels that others are unfair to him and do not understand him. He is overly sensitive to criticisms that others make of him, and cannot tolerate being made fun of. He is quick to sense slight or insult in things others say, and frequently may misinterpret well-meant communications. He feels he has great need of friendship and understanding, but he is reluctant to confide in others, and when he does, expects to be misunderstood or even betrayed. In evaluating the intentions and feelings of others, his ability to separate the real situation from his own mental projections is very poor. He not infrequently groups all people together as being hypocritical, hostile, and deserving of whatever he is able to do to them. Akin to this first trait is the second, an ever-present, poorly controlled rage-easily triggered by any feeling of being tricked, slighted, or labeled inferior by others. For the most part, his rages in the, past have been directed at authority figures-father, brother, Army sergeant, state parole officer-and have led to violent assaultive behavior on several occasions. Both he and his acquaintances have been aware of these rages, which he says ‘mount up’ in him, and of the poor control he has over them. When turned toward himself his anger has precipitated ideas of suicide. The inappropriate force of his anger and lack of ability to control or channel it reflect a primary weakness of personality structureஸ. In addition to these traits, the subject shows mild early signs of a disorder of his thought processes. He has poor ability to organize his thinking, he seems unable to scan or summarize his thought, becoming involved and sometimes lost in detail, and some of his thinking reflects a ‘magical’ quality, a disregard of reality. He has had few close emotional relationships with other people, and these have not been able to stand small crises. He has little feeling for others outside a very small circle of friends, and attaches little real value to human life. This emotional detachment and blandness in certain areas is other evidence of his mental abnormality. More extensive evaluation would be necessary to make an exact psychiatric diagnosis, but his present personality structure is very nearly that of a paranoid schizophrenic reaction.

ஆனால் அன்றைய kansas கோர்ட்டில் சட்டதிட்டங்கள் வேறு மாதிரியாக இருந்தது. விட்னஸ், “ஆம்”, “இல்லை” என்ற பதில்களை மட்டுமே கூறலாம். விளக்கம் சொல்லமுடியாது. அதனால் இருவரையும் test செய்த டாக்டர், இருவரும், மனநோயாளிகள் இல்லை (மேலோட்டமாகப் பார்க்கும் போது!) என்றே testify செய்திருக்கிறார்.

(Dick மற்றும் Perryஐப் பற்றி officialஆக அந்த டாக்டர் எந்த சான்றும் வழங்கவில்லை என்றாலும், விளக்கம் கேட்கப்படிருந்தால், அவர் மேலே சொன்னமாதிரி தான் சொல்லியிருப்பார்!)

Capoteக்கு ஒரு எண்ணம், நாவல் தோறும் இருக்கிறது. அது : கொலையாளிகளுக்கு தீர்ப்பு முறையாக வழங்கப்படவில்லை. அவர்கள் தரப்பு வாதங்களை யாரும் சரிவரக்கேட்கவில்லை. கோர்ட்டில் அவர்களின் குரல்கள் சரியாக ஒலிக்கவில்லை என்பதே. ஆனால் கொலைசெய்யப்பட்ட அந்த நால்வரின் குரல்கள் கொலையாளிகளின் மண்டையில் உரைத்ததா? Nancy “No! No! Please! Please!” என்று கெஞ்சிக் கூத்தாடினாளே? அது அவர்களின் காதுகளில் விழவில்லையா?

இறுதியாக Dick தூக்குமேடைக்கு செல்லும் முன்னர் இவ்வாறு கூறுகிறான்:
Hickock nodded. “I just want to say I hold no hard feelings. You people are sending me to a better world than this ever was”; then, as if to emphasize the point, he shook hands with the four men mainly responsible for his capture and conviction, all of whom had requested permission to attend the executions: K.B.I. Agents Roy Church, Clarence Duntz, Harold Nye, and Dewey himself. “Nice to see you,” Hickock said with his most charming smile; it was as if he were greeting guests at his own funeral

வேறொரு கொலைவழக்கில் -தொடர் கொலைகள்- கைது செய்யப்பட்ட Latham, இவ்வாறு சொல்கிறான்:
the world was hateful, and everybody in it would be better off dead. “It’s a rotten world,” Latham said. “There’s no answer to it but meanness. That’s all anybody understands-meanness. Burn down the man’s barn-he’ll understand that. Poison his dog. Kill him.” Ronnie said Latham was “one hundred percent correct,” adding, “Anyway, anybody you kill, you’re doing them a favor.”

தவறுகள் –எது தவறு? எது சரி? யாருக்கு தெரியும்? என்று வியாக்கியானம் பேசுபவர்களுக்கு: விதிக்கப்பட்ட விதிமுறைகளை மீறுவது தவறு! கடவுள் விதித்த விதிகளையும், மனிதன் விதித்த விதிகளையும்– செய்யும் அனைவரும் தாங்கள் நல்லவர்களே என்று தான் நினைத்துக்கொண்டிருக்கின்றனர். தங்களைச் சுற்றிலும் இருக்கும் மக்கள் யாவரும் தங்களுக்கு எதிராக இருப்பதாக அவர்கள் கற்பனை செய்துகொள்கிறார்கள். ஆனால் பல சமயங்களில் இந்த கற்பனை நிஜமாகவே ஆகிவிடுவதுதான் துரதிர்ஷ்டம்.

***

Capote படம் நன்றாகவே இருந்தது. கொஞ்சம் slow. Capoteஐப் பற்றி அறிந்து கொள்வதற்கு பெரிதும் உதவியது இந்தப்படம். Capoteஐப் பற்றி அறிந்து கொள்வதற்கு என்ன இருக்கிறது? அவர் ஒரு எழுத்தாளர் என்பதை விட எழுத்தாள-நடிகர் என்று சொன்னால் மிகையாகாது. அல்லது A writer full of lies. Of course, A writer has to lie, isnt it? கதையில் பொய் சொல்லலாம். கதை என்றாலே பொய் தானே? ஆனால் நிஜ வாழ்க்கையில்?

Pery மீது அவருக்கு முதலிலிருந்தே ஒரு kindof attraction இருந்துவந்திருக்கிறது என்பதை மறுக்கமுடியாது.சொல்லப்போனால், Capoteயே ஒரு open Gayதான். In Cold Blood புத்தகத்தை முக்கால் வாசி முடித்துவிட்ட நிலையில் ஒரு நாள் Peryஐ சந்திக்கவருகிறார் Capote. புத்தகம் எழுத ஆரம்பிக்கும் முன்னரே, புத்தகத்துக்கு பெயரும் வைத்துவிட்டார். (பெயர் வைத்ததோடு மட்டுமில்லாது, இந்த நூற்றாண்டின் மிகச்சிறந்த புத்தகங்களில் ஒன்றாக இந்த புத்தகம் பின்னாளில் அறியப்படும் என்று தன் நண்பர்களிடம் சொல்கிறார்!!) ஆனால், Pery, புத்தகத்துக்கு என்ன பெயர் வைக்கப்போகிறீர்கள் என்று அவரிடம் கேட்கும்போது, “இன்னும் ஒரு வார்த்தை கூட எழுதவில்லை. புத்தகத்துக்கு பெயரும் வைக்கவில்லை” என்று அப்பட்டமாக பொய் சொல்கிறார். Pery, Capoteஐ நம்பினானா என்பது தெரியவில்லை. நம்பியிருக்கவேண்டும். இல்லையேல், மாதக்கணக்கில் ஜெயிலில் உண்ணாவிரதம் இருக்கும் Perry, Capote வந்து உணவு கொடுத்தவுடன் ஏன் சாப்பிடவேண்டும்? (படத்தில் capoteதான் Perryயின் உண்ணாவிரத்தை முடித்துவைத்தார் என்று காட்டப்படுகிறது. ஆனால் நாவலில், capote, Pery எப்பொழுதும் கனவுகாணும் மஞ்சள் நிறப்பறவை தான், அவனின் உண்னாவிரத்தை முடித்துவைத்தது, என்று எழுதுகிறார். Capoteதான் அந்த பறவையோ?)

Capote புத்தகத்தை கிட்டத்தட்ட எழுதி முடித்துவிடுகிறார். இன்னும் க்ளைமேக்ஸ் மட்டும் தான் பாக்கி. Capote, நேரடியாக Peryயிடம் அன்று இரவு என்ன நடந்தது என்று கேட்டறிய விரும்புகிறார். முதலில் அவன் சொல்ல மறுத்து பிறகு எல்லாவற்றையும் capoteயிடம் சொல்கிறான். எல்லாம் எழுதியாச்சு. இன்னும் தூக்கு தண்டனைதான் பாக்கி. கொலையாளிகளுக்கு தூக்கு தண்டனை நிரைவேற்றப்பட்டுவிட்டால், புத்தகத்தை publish செய்துவிடலாம். ஆனால், விதி விளையாடியது! Perry மற்றும் Dickக்கு தூக்குதண்டனையை நிறைவேற்ற கோர்ட் தற்காலிகமாக தடை விதித்திருந்தது. Capote நாவலை எழுதிமுடிக்க முடியவில்லை. ஏற்கனவே மூன்று ஆண்டுகள் இந்த ஒற்றை நாவலுக்காக செலவழித்திருக்கும் Capote, மானசீகமாக Perryக்கு தூக்குதண்டனை விரைவில் நிறைவேற்றப்படவேண்டும் என்று நினைக்கிறார். விரும்புகிறார். அவரது தோழியிடமும் –Harper Lee, To Kill A Mocking Birdஐ எழுதியவர்!- இதைச் சொல்கிறார். Perry உதவி கேட்டு எழுதும் கடிதங்களுக்கு பதில் எழுத மறுக்கிறார் capote. ஒரு வழியாக தடை விலக்கப்பட்டு, கொலையாளிகளுக்கு தூக்குதண்டனைக்கு நாள் குறிக்கப்படுகிறது. கடைசியில், அவர்களுக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்படும் நாளன்று Capote, அவர்களைச் சந்திக்கிறார். எந்த முகத்தோடு? (அதற்காக வாடகைக்காக முகம் வாங்கமுடியும்?!) “I am sorry! I have done all I could!” என்று அழுகிறார் Capote. உண்மையாகவே அழுகிறார். தன்னால் எந்த உதவியும் செய்யமுடியாமல் போனதை நினைத்து அழுதார். தன் உதவி தனக்கே பாதகமாக -நாவலை முடித்து வெளியிட முடியாது!- அமையும் என்று நினைத்து இதுநாள் வரையில் அமைதியாக இருந்துவிட்டார். ஆனால் அந்த குற்ற உணர்ச்சி, இப்பொழுது கன்ணீராக வெளிவருகிறது. Perry “i know” என்கிறான். (எதை அவன் அறிவான், என்பதை அவன் மட்டுமே அறிவான்!)

இந்த நாவலுக்கு அப்புறம் வேறு எந்த நாவலையும் Capote எழுதி முடிக்கவில்லை என்றும், கடைசியில் குடிப்பழக்கத்தில் மூழ்கி இறந்ததாகவும், படத்தின் முடிவில் காட்டப்படுகிறது.
***

காந்தம்-8

(இதற்கு முந்தைய பகுதிகளை sidemenuவில் பார்க்கவும்)

முன்னும் பின்னும்.
3

சென்னை. எழும்பூர் ரயில் நிலையம்.

“…திருநெல்வேலி செல்லும் நெல்லை எக்ஸ்ப்ரஸ் இன்னும் சிறிது நேரத்தில் முதலாவது ப்ளாட்பாரத்திலிருந்து புறப்படும்” இதே வரிகளை மீண்டும் அந்தப்பெண் ஹிந்தியில் சொல்ல ஆரம்பித்தார். அந்த இடமே மிகவும் நெருக்கடியாக இருந்தது. பயணிகளும் பயணிகளை வழியனுப்ப வந்தவர்களும் ப்ளாட்பாரத்தை ஆக்கரமிப்பு செய்து கொண்டிருந்தனர். கோவர்த்தன் அந்த சிறிய புத்தகக்கடையில் நுழைந்து அங்கிருந்த சொற்ப புத்தகங்களை புரட்டிக்கொண்டிருந்தார். நக்கீரன், ரிப்போர்ட்டர், ஆனந்த விகடன், துக்ளக், குமுதம், ஜூவி, அவுட்லுக், ·ப்ரண்ட் லைன், த வீக், பிஸினஸ் வேர்ல்ட் என்று சிக்கின அனைத்தையும் எடுத்துக்கொண்டார். கவுண்டரில் வந்து பில் கட்டியபொழுது கவுண்டரில் இருந்த அந்த பையன் இவரை அடையாளம் கண்டுகொண்டான். “கோ. சார்” என்றான். கோவர்த்தன் சிரித்து தலையாட்டிவிட்டு “நம்ப பத்திரிக்கை வந்திருக்குமே” என்றார். “ஆமா சார் இப்போ தான் வந்தது. இன்னும் பண்டில் பிரிக்கல. வேணுமா சார்?” “ம்ம் ஒன்னு கொடு” அந்த பையன் கீழே குனிந்து இன்னும் பிரிக்கப்படாத பண்டலைப் பிரித்து “நான்காவது தூண்” என்ற கவர்ச்சிகரமான பத்திரிக்கையை எடுத்து நீட்டினான். கோவர்த்தன் அதை வாங்கிக்கொண்டு அதற்கும் சேர்த்து பில் கட்டினார். கோவர்த்தன் அந்த “நான்காவது தூண்” பத்திரிக்கையை உற்றுப்பார்த்தார். “அணி மாறும் கட்சிகள். ஜெயிக்கப்போவது யார்?” – அரசியல் வித்தகர் கோ வின் பிரத்தியேக கட்டுரை என்ற தலைப்பு கனத்த செந்நிரத்தில் பிரிண்ட் செய்யப்பட்டிருந்தது. கோ தனக்குள் சிரித்துக்கொண்டார். கல்லாவிலிருந்த அந்த பையன் கேட்டான் “சார் இது உங்க பத்திரிக்கை. நீங்களே வாங்கறீங்களே சார்?”. “என் பத்திரிக்கையை நானே வாங்கலீனா வேற யார் வாங்குவா?” என்று தனது பானியில் சிரித்துக்கொண்டே சொல்லிவிட்டு “அதில்லப்பா, எப்பொழுதும் கொண்டுவருவேன். இன்னிக்கு மறந்துட்டேன். நெல்லைய பிடிக்கனும் வரட்டா” என்று சொல்லிவிட்டு கீழிறங்கி தனது கோச்சுக்கு சென்றார்.A3.

2 டயர் ஏசி கோச்சில் அவ்வளவாக கூட்டம் இல்லை. இரண்டு மூன்று பேர் மட்டுமே இருந்தனர். இவருக்கு எதிரே உட்கார்ந்திருந்தவர் வந்தவுடன் இவரைக் கண்டுகொண்டு சிரித்தார். கோ தனது பெட்டியிலிருந்து ஒரு ப்ளாஸ்டிக் தலையணையை எடுத்து காற்று ஊதி பெரிதாக்கினார். பிறகு அதை தனது முதுகுக்கு கொடுத்து நன்றாக சாய்ந்து உட்கார்ந்து கொண்டார். வாங்கின புத்தகங்களை ஒவ்வொன்றாக வேகமாக திருப்ப ஆரம்பித்தார். இன்னும் பரிட்சைக்கு இரண்டு நிமிடங்களே இருக்கிறது என்கிற பொழுது ஒரு மாணவன் எப்படி திருப்புவானோ அப்படி திருப்பினார் அவர். ஒரு கால் மணி நேரத்தில் அத்தனை பத்திரிக்கைகளையும் ஒரு சுற்று படித்திருந்தார். தனது மிகப்பெரிய கண்ணாடியைக் கழட்டி வைத்துவிட்டு, மௌனமாக சிறிது நேரம் உட்கார்ந்திருந்தார். பிறகு தனது பேக்கைத் திறந்து அதிலிருந்து பார்சல் ஒன்றை எடுத்து பிரித்தார். இட்லியின் வாடை மூக்கைத் துளைக்க, எதிரே உட்கார்ந்திருந்தவரைப் பார்த்தார். அவர் ஏதோ புத்தகத்தில் மூழ்கியிருந்தார்.

இட்லியின் வாசனை அவரையும் சென்றடைந்திருக்க வேண்டும். அவர் நிமிர்ந்து பார்த்தார். ஐம்பது வயது மதிக்கத்தக்கவராக இருந்தார். தலை நிறைய முடி. சுருள் சுருளாக. பெரிய கண்ணாடி. இறங்கு மீசை. முள் முள்ளாக மூன்று நாள் தாடி. கூர்மையான மூக்கு. ஒள்ளியான ஆனால் திடகாத்திரமான தேகம். வெள்ளை சட்டையின் மேல் இரண்டு பட்டன்களை கழட்டிவிட்டிருந்ததால், கழுத்தில் இருந்த புலிநகம் அழகாக தெரிந்தது. கோ-வைப் பார்த்து புன்னகைத்தார்.

“இட்லி சாப்படறீங்களா?” “இல்ல Mr.கோ. நான் வீட்டிலேயே சாப்பிட்டேன். நீங்க சாப்பிடுங்க” “இதுவும் வீட்ல பண்ணதுதான். என் பெண்டாட்டி எப்பவுமே அதிகமாத்தான் வெச்சுவிடுவா. உங்களுக்கும் இருக்கு. ரெண்டு இட்லி சாப்பிடுங்களேன்” “பரவாயில்ல கோ சார். எனக்கு பசி இல்ல. நான் பேசிட்டிருக்கேன். நீங்க சாப்பிடுங்க. பைதவே, என் பெயர் சிவா.” சிவா தான் படித்துக்கொண்டிருந்த புத்தகத்தை மூடி பக்கத்தில் வைத்தார். கோ தன் தலையை திருப்பி சாய்வாக வைத்துக்கொண்டு அந்த புத்தகத்தின் பெயரைப் படிக்க முயற்சித்தார் “இன்டர் லிங்கிங் ஆப் ரிவர்ஸ்.”.சற்று வியப்பாக சிவாவைப் பார்த்தார். சிவா புத்தகத்தை எடுத்து கோ-விடம் கொடுத்தார். “இப்போ தான் படிக்க ஆரம்பித்திருக்கிறேன்” என்றார்.

கடைசி இட்லியை சாப்பிட்டு முடிக்கும் போது “சோ, நீங்க இந்திய ஆறுகளையெல்லாம் ஒன்றாக சேர்க்க முடியும்னு நினைக்கிறீங்க?” “முடியும். முடியாதென்பது எதுவும் இல்லை. ஆனால் உங்க அளவுக்கு இதில் எனக்கு விசயம் தெரியாது. just reading. thats it”

***

ரயில் சீரான வேகத்தோடு சென்று கொண்டிருந்தது. ரயிலின் தாலாட்டலில் அனைவரும் தூங்கிப்போயிருந்தனர். கோவர்த்தனுக்கு அடிவயிறு முட்டிக்கொண்டு வந்தது. ரயிலின் குலுங்களில் மேலும் அது அதிகமானது. சரி எழுந்துவிடுவோம் என்ற முடிவுக்கு வந்தவராய் தனது கண்ணாடியைத் தேடி எடுத்து அணிந்து கொண்டார். எழுந்து உட்கார்ந்தார். எதிரே, சிவா ஒரு சின்ன டேபிள் லேம்பின் துணையுடன் ஏதோ ஒரு புத்தகத்தில் மூழ்கியிருந்தார். கோ எழுந்த சத்தம் கேட்டு திரும்பிப்பார்த்து சிரித்தார். கோ வெறுமனே சிரித்துவிட்டு எழுந்து சென்றார்.

***

“என்ன சிவா சார், பெரிய படிப்பாளியா இருப்பீங்க போல இருக்கு? இப்போ என்ன புத்தகம்? அதே interliking of rivers தானா?” என்று கேட்டக்கொண்டே மீண்டும் தன் படுக்கைக்கு வந்தார் கோ. சிவா தன் கையில் வைத்திருந்த அழகான போர்ஸீலியன் கோப்பையிலிருந்து காபியை உறிஞ்சிக்கொண்டே, “ம்ம்..very intersting” என்றார். “என்ன சொல்றாங்க அந்த புத்தகத்தில?” “ம்ம் இன்னவரைக்கும் ஒன்னும் பெரிசா இல்ல. ஆனா ஒரு லட்சத்து அறுபதினாயிரம் கோடி ரூபாய் செலவாகும்ங்கறது மட்டும் புரியுது..காபி சாப்படறீங்களா?” “இல்ல. நீங்க சாப்பிடுங்க. பரவாயில்ல” “நான் travel பண்ணும் போது எப்பவுமே flaskல காபி எடுத்துட்டு போவேன். நைட்ல இப்பவெல்லாம் எனக்கு தூக்கம் வற்ரதேயில்ல. இன்னும் காபி நிறைய இருக்கு. உங்களுக்கு வேணும்னா சொல்லுங்க. dont be shy” “குளிருக்கு சூடா காபி குடிச்சா நல்லா தான் இருக்கும். ம்ம்ம்..கொடுங்க”

flaskஐ திறந்து அதன் மூடியில் கொஞ்சம் காபியை ஊற்றி கோவிடம் கொடுத்தார் சிவா. “நான் எப்போதுமே ப்ளாக் காபி தான். நீங்களும் டயாபடீஸ் பேஷண்ட் தான். உங்களுக்கும் தேவைப்படாதுன்னு நினைக்கிறேன்” “வாவ். நான் டயாபடீஸ் பேஷண்ட்ங்கறதுகூட உங்களுக்கு தெரிஞ்சிருக்கு..ம்ம்” “என்ன சார் இப்படி கேட்டுட்டிங்க? எவ்வளவு பெரிய எழுத்தாளர் நீங்க? எவ்வளவு அரசியல் ஞானம். எவ்வளவு ராஜதந்திரம். கிட்டத்தட்ட ஒரு கிங்மேக்கர் நீங்க. உங்களப்பத்தி தெரியாம இருக்குமா?” “என்ன சிவா என்ன ரொம்ப புகழறீங்க” கோ காபியை முகர்ந்து விட்டு, முதல் மடக்கை ரசித்து விழுங்கினார்.

ரயில் வேறொரு ரயிலுக்காக காத்திருந்தது.

***

பணம் ஒரு பிரச்சனை தான் என்றாலும் நதிகளை இணைக்கறதில வேறு சில ஜியோகரபிகள் பிரச்சனைகள் இருக்குங்கறத நிறைய பேர் மறந்திடறாங்க” காபியைக் குடித்துமுடித்து flaskக்கின் மூடியை சிவாவிடம் கொடுத்தார் கோவர்த்தன். சிவா மூடியை வாங்கி மெதுவாக flaskஐ மூடினார். கண்ணாடியைக் கழற்றினார்.

“உன்ன மாதிரி ஆட்கள் இருக்கறவரைக்கும் எதுவுமே பிரச்சனை தான் கோ” கோ சட்டென நிமிர்ந்து பார்த்தார். “வாட்?” “50 கோடி நீ வாழ்க்கையில பாக்காத பணம் இல்ல?” “என்ன சொல்ற?” “என்ன சொல்றனா? ஹ¤ம்..50 கோடி கோவர்த்தன். 50 கோடி.” “யார் நீ?” “செல்வி ஞாபகம் இருக்கா?” “ய்ய்ய்யாய்யார் ந்நீ” “ரொம்ப சின்ன பொண்ணுல்ல அவ? நல்லாயிருந்துச்சா அன்னிக்கு? அங்கிள் அங்கிள்ன்னு உன்மேல எவ்ளோ பாசமா இருந்தா அவ?” “நீ நீ” கோ கையை தூக்க முயற்சித்தார் முடியவில்லை. “என்ன பாக்குற? உன்னால இனிமே கையையோ காலையோ அசைக்க முடியாது. எங்க try பண்ணு” “த் த் த் த் ..ன்..ன்..ன்” கோவின் கண்கள் பிதுங்கின. “ம்ம்..இப்போ எப்படி இருக்கு? Are you alright?” “த் த் த் த் த் த்” சிவா தனது சுருள் முடியை கழற்றி கீழே வைத்தார். முன் தலை வழுக்கை, ஜன்னலில் வழிந்து கொண்டிருந்த வெளிச்சத்தில் மின்னியது. “சூ.. சூ.. சூ..” “பரவாயில்லையே..இன்னும் என்ன நீ மறக்கல. yes. the same old stupid surya” “நீ.. நீ..” “உன்னால பேச முடியாது கண்ணா. என்கிட்ட காபி வாங்கி குடிக்கறதுக்கு முன்ன நீ யோசிச்சிருக்கனும். நல்ல ஜாலியா என்ஜாய் பண்ணு. உன் கூட்டாளிகள உனக்கு துணைக்கு அனுப்பி வெக்கறேன். Goodbye.”

கோ-வுக்கு ரத்தகுழாய்கள் வெடித்துவிடுவது போல இருந்தது. வாயில் சூடாக செக்கச்சிவப்பாய் ஒரு திரவம் வெளியேறியது. கண்கள் செருகின. “டாடி என்ன காப்பாதுங்க டாடி. ப்ளீஸ் அங்கிள் வேண்டாம் அங்கிள். வேண்டாம் அங்கிள். எனக்கு பயமா இருக்கு அங்கிள்.டாடி.டாடி.டாடி..” என்று ஒரு சிறுமி அழும் சத்தம் மட்டும் அவர் காதில் ரீங்காராமய் ஒலித்துக்கொண்டிருந்தது. கண்கள் நிலைகுத்தின.

ரயில் சிவப்புவிளக்கைப் பார்த்ததும் நின்றது.

***

சிவா கீழிறங்கினார். கையில் வைத்திருந்த மிகச்சிரிய டார்ச் லைட்டை உபயோகித்து தண்டவாளத்தை கடந்தார். கடும் இருட்டு. சிறிது தூரம் நடந்து சென்று முட் புதர்களைக் கடந்தார். நடந்து கொண்டேயிருந்தார். மேலே நிமிர்ந்து நிலாவைப் பார்த்தார். சிரித்துக்கொண்டார். செல்போனை எடுத்து மெஸேஜ் கொடுத்தார். காத்திருந்தார்.

சிறிது நேரத்தில் மோட்டார் பைக் ஒன்று வந்து நின்றது. மோட்டார் பைக்கில் வந்தவன் வேகவேகமாக ஹெல்மெட்டைக் கழற்றிவிட்டு, கீழிறங்கி, சிவாவின் கைகளை குலுக்கி கட்டியணைத்துக்கொண்டான், அவன் நா தழுதழுத்தது, “வணக்கம் தலைவா. என் பெயர் ஜீவா. போகலாம்” என்றான்.

அந்த அமைதியான இரவின் ரம்மியத்தை குத்தி கிழித்துக்கொண்டு சென்றது அந்த மோட்டார் பைக்.

***

கிரீடம்

வரிசையாக சில ப்ளாப்புக்கு அப்புறம் அஜித்துக்கு கை கொடுக்க வந்திருக்கும் sweet hit இந்தப் படம். புது இயக்குனர்கள் மீது அவர் வைத்திருக்கும் நம்பிக்கை வீண் போகவில்லை. Thats why he is known as the man of confidence. டைரக்டர் விஜய் தன் பணியை கரெக்டாக செய்திருக்கிறார். (அஜீத்தை டைரக்ட் செய்யும் விஜய்?!)

(மலையாள எழுத்தாளர் மற்றும் பிரபல இயக்குனரான லோகிததாஸ் தன் கிராமத்தில் நடந்த ஒரு உண்மைச்சம்பவத்தை வைத்து பிண்ணிய கதையை சிபி மலையாளி 1989இல் கிரிடம் என்ற படமாக டைரக்ட் செய்தார். இதில் மோகன்லாலும் திலகனும் நடித்திருந்தனர். 1990இல் இந்திய அரசின் விருதை பெற்றது இந்தப்படம். 1993இல் இதனுடைய அடுத்த பார்ட்டாக செங்கோல் வெளிவந்தது. மேலும் இதே கிரீடத்தை ஹிந்தியில் ப்ரியதர்சன் ஜாக்கிஷராப்பை வைத்து கர்தீஷ் என்ற பெயரில் ரீமேக் செய்தார்.என் மலையாள நண்பர் ஒருவர் கொடுத்த தகவல் : இது தான் மலையாளத்தில் தொடர்ந்து ஒரு வருடம் ஓடிய திரைப்படமாம்!)
Thanks :துளசி கோபால்

“யாரிடமும் குற்றமில்லை காலம் செய்த குற்றமிதுதான்” படத்தின் முடிவில் வரும் இந்த வரிகள் தான் படத்தின் கரு. ஏற்கனவே நிறையமுறை பார்த்த கதைதான். ஆனால் புதிதாக சொல்லியிருக்கிறார்கள். எங்கேயும் யாருக்காகவும் இயக்குனர் காம்ப்ரமைஸ் செய்துகொள்ளவில்லை. முதல் பாதி திரைப்படம் அசத்தல். காமெடி கதம்பம். விவேக், சந்தானம், சத்யன் என்று காமெடிக்கு நிறைய ஆட்கள் இருக்கிறார்கள். ஆனால் யாரையும் இயக்குனர் டாமினேட் செய்யவிடவில்லை. எந்த காமெடியும் தனி ட்ராக்காக இல்லை. கதையினோடே வருகிறது. விவேக் வழக்கம்போல ஆங்காங்கே நடப்பு செய்திகளை தூவி சிரிக்கவைக்கிறார். “இது ஏட்டையா வீடா?” என்று கேட்டுவரும் போன் காலுக்கு, “இல்ல வேட்டையாடு விளையாடு ராகவன் வீடு” என்று கண்களை விரல்களை வைத்து விழித்து -கமலஹாசன் மாதிரி – செய்து காட்டுவது அமர்க்களம்.

அஜித் அழகாக இருக்கிறார். அமைதியாக இருக்கிறார். க்ளைமேக்ஸில் அழகாக நடித்திருக்கிறார். கண்டிப்பாக க்ளைமேக்ஸ் பெரிதாக பேசப்படும். (ஒரு நல்ல நடிகரை இன்னும் சரியாக யாரும் use பண்ணவில்ல என்று தோன்றுகிறது) பாந்தமாக வசனம் பேசுகிறார். No punch dialogues. பாத்தீங்களா, பஞ்ச டயலாக்ஸ் இல்லீன்னாலே நல்ல படமோன்னு நினைக்கவேண்டியிருக்கு! முதல் பாதியில் அஜீத்துக்கு நிறைய வேலை இல்லை. அஜீத் த்ரிஷா காதல் அழகாக மலர்கிறது. (ஆனால் அவ்ளோ ஈசியா? யாரவது லவ் பண்ணவங்க சொல்லுங்கப்பா! என்னோட மரமண்டைக்கு ஏறவேமாட்டேங்குது!) த்ரிஷா செம அழகு. உதட்டுக்கு கீழே இருக்கும் மச்சம் செம க்யூட். (ஷ்ரேயா இல்லீனா பானு!!! ரசிகர் மன்றத்துக்கு மாறிடலாமான்னு நினெச்சிட்டிருந்தேன், கிரிடம் த்ரிஷாவைப் பார்த்த பிறகு இப்போதைக்கு கட்சி மாறும் எண்ணம் இல்லை. அடுத்து பீமா வேற வருது. பார்ட்டி நாளுக்கு நாள் அழகாகிட்டே வருது!!) த்ரிஷா ஒரு சீன்ல ரொம்ப கொஞ்சராங்க! அடாஅடா!!!! (ம்ம்ம்..மாஸ்டர் ஆம்லேட்!) தண்ணீர் தொட்டிக்குள் அஜீத்துடன் உட்கார்ந்து கொண்டு த்ரீஷா அஜீத்தின் வீட்டு நபர்களைப் பற்றி அடிக்கும் கமெண்ட்கள் ஜோர். த்ரிஷா, அஜீத் வீட்டுக்கு வந்து, அவர் வரும் வரை பார்க்கமுடியாமல் தவித்து, அவர் வந்தவுடன் கண்டுகொள்ளாமல் ஆக்ட் கொடுப்பது க்யூட். (ஓவர் ஜொல்லுடா!) “அக்கம் பக்கம் யாருமில்லா பூலோகம் வேண்டும்” பாடலில் த்ரிஷா அவ்ளோ அழகு!

“கனவெல்லாம்” பாடலின் வரிகள் அருமை. ராஜ்கிரணுக்கு இந்த படம் மேலும் ஒரு மைல்கல். தனக்கு கொடுக்கப்பட்ட வேலையை கனகச்சிதமாக செய்திருக்கிறார். தவறாக காரைப் பார்க் செய்துவிட்டு, போலீஸ்காரரை அடிக்கும் MLA மகனை, பளார் என்று அறைவதும், வில்லனின் ஆட்களிடம் தனியாளாக சண்டையிடுவதும் கம்பீரம். அந்த fight-sequence நன்றாக இருந்தது. (பிரசாந்த் நடித்த தமிழ் படத்தை நினைவூட்டினாலும் நன்றாக இருந்தது) அப்பா வில்லன்களிடம் அடிவாங்குவதை பார்த்து, அஜீத் பதறி ஓடிவந்து, வில்லனை நன்றாக இரும்புக்கம்பியால் அடித்து துவைத்துவிட்டு, அவன் மூச்சுப்பேச்சில்லாமல் கீழே விழுந்தபிறகு, நடந்துவிட்டதை நினைத்து கையில் வைத்திருக்கும் இரும்புக்கம்பியை பதறி தூக்கியெறிவது அருமை. அஜித் நிறைய இடங்களில் நிறைவாக செய்திருக்கிறார். லவ்விலும் சரி. சண்டையிலும் சரி. குடும்ப பாசத்திலும் சரி. ஓவர் ஆக்ட் இல்லாமல் அளவாக அழகாக செய்திருக்கிறார். costumes, வழக்கம்போல அவருடைய semi-formal ஸ்பெஷல். SI interviewவில் அஜித் செம க்யூட். அந்த shirt. பளிச்சின்னு ஷேவ் செய்யப்பட்ட அந்த முகம். அழகான டை. மறுபடியும் காதல் கோட்டை அஜீத். சொல்லப்போனால் அதைவிட அழகான அஜீத். ஒரு நடுத்தர வர்க்க குடும்பமும், குடும்பத்தின் பாசமும் ஓவர் sentimentஆக இல்லாமல் அழகாக காட்டப்பட்டிருக்கிறது. “

சில காட்சிகள் வழக்கம்போல் இருக்கும் என்று நினைக்கையில் ஆங்காங்கே சில திருப்பங்கள் நம்மை நிமிர்ந்து உட்காரவைக்கின்றன. ஆனால் அவ்ளோ பெரிய வில்லன் தனியாகவே எப்பொழுதும் அடிவாங்குவது கொஞ்சம் நெருடல். க்ளைமாக்ஸ் எதிர்பாறாத ஒன்று. வழக்கம்போல எந்த compromiseஉம் டைரக்டர் செய்துகொள்ளவில்லை. அப்படின்னா அப்படித்தான். தேவையில்லாத சண்டைக்காட்சிகள் இல்லை. ஓரு இடத்தை தவிற வேறு (அதுவும் இங்கே mute செய்யப்பட்டுவிட்டது) எங்கும் இரட்டை அர்த்த வசனங்கள் இல்லை. ஹீரோவின் துதி இல்லை. இரண்டாம் பாதி கொஞ்சம் இழுவை. மற்றபடி படம் good. GV.Prakashஇன் பின்னனி இசை படம் நெடுகிலும் பாந்தமாக இருக்கிறது, காதுகளை உறுத்தாமல்.

ஒரு தந்தையின் கனவு நிறைவேறாமலே போனது மட்டும் கொஞ்சம் வருத்தமாக இருந்தது. கடைசியில் போலீஸ் ஸ்டேஷனில் இருக்கும் கிரிமினல்கள் லிஸ்டில், வரதனின் (வில்லன்) போட்டோ கிழிக்கப்பட்டு அதே இடத்தில் சக்தியின் (அஜீத்) போட்டோ ஒட்டப்படுகிறது. “யாரிடமும் குற்றமில்லை காலம் செய்த குற்றமிதுதான்” என்ற வரிகள் விஜய் ஏசுதாஸின் கனீர் குரலில் ஒலிக்கிறது. வரதனும் இப்படித்தான் குற்றவாளி ஆகியிருப்பாரோ என்று ஒரு நிமிடம் யோசிக்கவைக்கிறது. அது சரி. பிறக்கும்போதே எல்லோரும் குற்றவாளிகளாகப் பிறக்கிறார்களா என்ன?

எப்போதுமே மலையாளத்திலிருந்து தமிழுக்கு ரீமேக் செய்யப்பட்ட படங்களைப் பார்த்துவிட்டு, மலையாள ஒரிஜனலைப் பார்க்கும் போது, மலையாள ஒரிஜினல் பெட்டர் என்றுதான் எனக்கு தோன்றும். உதாரணத்திற்கு, அண்ணா நகர் முதல் தெரு. இதன் ஒரிஜினலான “காந்திநகர் பர்ஸ்ட் ஸ்ட்ரீட்” எனக்கு ரொம்பவும் பிடித்திருந்தது. சத்யராஜ்-ஜனகராஜ் (மாதவா எங்கேயோ போய்ட்டடா!) காமெடியும் நன்றாகத்தான் இருந்தது இல்லையென்று சொல்லவில்லை. ஆனால் மோகன்லால்-சீனிவாசன் காம்பினேஷன் அவர்களை விட நன்றாக இருந்ததாகவே தோன்றியது. எனக்கு சீனிவாசனை ரொம்பவும் பிடிக்கும். அதற்கப்புறம், சந்திரமுகி. (நான் சொல்லத் தேவையில்லை!) இப்பொழுது கிரீடம். கிரீடத்தைப் பற்றி என் மலையாள நண்பர் சஜீத்திடம் சொன்னபோது சட்டென்று உணர்ச்சிவசப்பட்டுவிட்டார். மலையாள கிரீடம் கண்டிப்பாக பார்க்கவேண்டும்.

யார் முழித்திருக்க போகிறார்கள் – 6

(இதற்கு முந்தைய பகுதிகளை sidemenuவில் பார்க்கவும்)

மே 12 1986

மே 12 1986 அன்று யூனியன் கார்பைடு கேட்டுக் கொண்டதற்கிணங்க, நீதிபதி ஜான் F கீனன் (John F Keenan), வழக்கை தள்ளுபடி செய்ய மறுத்துவிட்டார். ஆனால், வழக்கை அமெரிக்காவில் வைத்து விசாரிக்க முடியாது என்ற அவர்களின் கோரிக்கையை நீதிபதி ஏற்றுக்கொண்டு, வழக்கை இந்தியாவுக்கு மாற்றுமாறு தீர்ப்பு வழங்கினார். மேலோட்டமாக பார்க்கும் போது, நீதிமன்றம் இந்தியாவிற்கு சாதமாக பாரபட்சமாக நடந்து கொண்டது போல் தெரியும். பாதிக்கப்பட்ட தன் மக்களுக்கு சரியான நீதி வாங்கித்தர இந்தியாவுக்கு இது சரியான சந்தர்ப்பமாக அமையும் என்றும் நீதிபதி கூறினார். இது ஒருவகையில் UCCக்கு சாதகமே. வளர்ந்துவரும் நாடான இந்தியாவில் வாழ்க்கைத்தரம் தாழ்ந்திருப்பதால், இந்திய நீதிமன்றம் வழங்கும் பாதிப்பிற்கான இழப்பிடு -அமெரிக்காவை ஒப்பிட்டுப் பார்க்கும் போது- மிகவும் குறைவாக இருக்கும் என்று அவர்கள் நினைத்தார்கள்.

நீதிபதி கீனனின் தீர்ப்பு இந்த வழக்கில் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது. நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்பார்த்து காத்திராமல், தாமே ஒரு இழப்பீட்டு தொகைக்கு, பேச்சுவார்த்தையின் மூலம் வந்தடைவதற்கு இந்த தீர்ப்பு அடித்தளமாக அமைந்தது. இதற்கு அவர்கள் சொன்ன காரணம்: UCCயின் அமெரிக்க அலுவலகத்தின் மேல் குற்றம் சுமத்தி நிரூபிப்பது மிகவும் கடினம். நடந்த பேரிழப்புக்கு UCIL தான் காரணம் ஏனென்றால் UCIL, முற்றிலும் இந்தியர்களால் நடத்தப்பட்டு வருகிறது என்றார்கள். UCILஇன் மொத்த தொழிலாளர்களில் ஒரு மிகச்சிறிய விழுக்காட்டினருக்கே அமெரிக்காவில் பயிற்சி அளிக்கப்பட்டது என்றும், UCCக்கு UCILஇன் மீது முழுக்கட்டுப்பாடு இருந்தாலும், அது இந்தியாவின் சட்டதிட்டத்துக் கட்டுப்பட்டதே என்றும் அவர்கள் கூறினார்கள்.

எனவே பேச்சுவார்த்தையே மிக வேகமான ஒரு தீர்வுக்கு வழிவகுக்கும் என்ற ஒரு பிம்பம் அவர்களால் தோற்றுவிக்கப்பட்டது. இரு தரப்பினருக்கு இடையே சுமூகமான ஒரு தீர்வை ஏற்படுத்துவதற்கு நீதிமன்றம் போராடியிருக்கிறது என்று நீதிபதி கூறினார். ஆனால், என்ன ஆனாலும், UCC, 350 மில்லியன் டாலர்களுக்கு மேல் ஒரு பைசா கூட கொடுக்கத் தயாராக இல்லை என்பதை அவர் கூறவில்லை. அது என்ன 350 மில்லியன் டாலர் கணக்கு, வேறொன்றுமில்லை, அது UCCக்கு கிடைக்கும் இன்சூரன்ஸ் தொகை. ஒரு செட்டில்மெண்ட் தொகை மட்டும் தானா என்ற கோஷம் யாராலும் எங்கும் எழுப்பப்படவேயில்லை. நீதி என்ற வார்த்தை சிறிது சிறிதாக பின்னுக்கு தள்ளப்பட்டு மறக்கடிக்கப்பட்டது.

ஆரம்பத்திலிருந்தே, இந்த போப்பால் வழக்கில், ஒரு வெளிநாட்டு நீதிமன்றம் இன்னொரு நாட்டின் பாதுகாப்பு அம்சத்தை எப்படி கணக்கிடமுடியும், என்ற ஆட்சேபத்திற்குறிய வாதம் இருந்துவந்தது. இந்தியா ஒரு ஏழை நாடாக இருப்பதால், இங்கு வாழ்க்கைத் தரம்; சொத்து; வளம்; உடல்நலம் மற்றும் நம்பிக்கை சார்ந்த விசயங்கள்; கண்டிப்பாக மிகுந்த வேறுபாட்டுடன் -அமெரிக்காவுடன் ஒப்பிடும் போது- இருக்கும். “இந்த வேறுபாடுகளையெல்லாம் மீறி நாம் நமது வாழ்க்கைத்தரம் மற்றும் நமக்கிருக்கும் கொள்கைகளை அவர்கள் மீது திணிக்கவேண்டுமா?” என்று கேள்வி எழுப்பினார் நீதிபதி.

ஆனால் இந்த வேறுபாடுகளை மனதில் கொண்டுதான் UCC போப்பாலில் பாதுகாப்பு வியூகத்தை கவனக்குறைவாக தரம் குறைந்ததாக அமைத்ததா? ஆனால் இவ்வாறான கேள்வி எழும் என்பதை நீதிபதி நன்கு உணர்ந்திருந்தவர் போல ,”இந்த பூச்சிக்கொல்லி தொழிற்சாலை மிகுந்த ஆபத்தை விளைவிக்கக்கூடியது என்பதை இந்தியா உணர்ந்திருந்தும் இது கொடுக்கும் வருவாய் அவர்களுக்கு தேவையானதாக இருந்த பட்சத்திலே அவர்கள் இந்த தொழிற்சாலையை நிறுவ ஒப்புக்கொண்டார்கள்” என்றார். அவர் சொன்னதற்கான அர்த்தம் என்னவென்றால்: “வளர்ந்து வரும் நாடான இந்தியா, ஒரு வல்லரசின் ஆபத்தான் தொழில்நுட்பத்தை அரவணைத்துக்கொள்ள தயாராக இருக்கும் பட்சத்தில், அந்த தொழில்நுட்பம் ஏற்படுத்தும் இழப்பிற்கும் இந்தியாவே பொறுப்பு ஆகும்

இந்த தீர்ப்பின் அதிர்ச்சியான் விசயம் என்னவென்றால், தீர்ப்பு UCCயின் தனிப்பட்ட பிரச்சனைக்கு ஆதராவாக இருந்தது என்பதே. ஆனால் உலக நாடுகளின் துணையுடன் உலகநாடுகளுக்கு எல்லாம் ஏற்படவிருக்கும் ஒரு பொதுப்பிரச்சனையை மனதில் கொண்டு இந்தியா முன் வைத்த வாதம் கண்டுகொள்ளப்படவில்லை. நீதிபதி இந்த பிரச்சனையை ஒரு தனிப்பட்ட கம்பெனியின் பிரச்சனையாக மட்டுமே அனுகினார். இது மொத்த மனித இனத்திற்கும் தீங்கு விளைவிக்கக் கூடிய பொதுபிரச்சனையாக அவர் அறிய தவறினார்.

தீடிரென்று, இழப்பின் தீவிரமும் எண்ணிக்கையும், மிக அதிகமாக இருந்த பொழுதிலும், போப்பால் பிரச்சனை ஒரு உள்ளூர் பிரச்சனையாக மாறிப்போனது. இனிமேல் அந்த கம்பெனியாச்சு மக்களாச்சு என்றே எல்லோரும் நினைத்தனர். உலகின் மிகப் பயங்கரமான ஒரு பேரிடர், உலகமக்களையெல்லம் பாதிக்கக்கூடிய பின்விளைவுகளைக் கொண்ட பேரிடர், உலகம் முழுவதும் பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஏற்படவிருக்கும் மாற்றங்கள், பல்லாயிரம் மக்களை பலிவாங்கியும், இன்னும் பல்லாயிரம் மக்களை பாதித்திருக்கும் இந்தப் பேரிடர், அமெரிக்காவின் மிகப்பெரிய வர்த்தகத்தின் முன் தனது முக்கியத்துவத்தை இழந்தது. வேறு வார்த்தைகளில் சொல்வதாக இருந்தால், அமெரிக்க நீதிபதியின் பார்வையில், வர்த்தகம் மனித உரிமையை வென்றுவிட்டது.

ஏழைக்கு மனித உரிமையாவது? மண்ணாங்கட்டியாவது?!

ஹமிதியா (Hamidia) மருத்துவமனையைச் சேர்ந்த டாக்டர் சத்பதி (Dr.A.Satpathy, forensic expert) கையில் பிடித்திருக்கும் இந்த பெரிய புகைப்படம், இன்னும் அடையாளம் காணப்படாத மற்றும் யாராலும் சொந்தம் என்று ஏற்றுக்கொள்ளப்படாத மக்களின் புகைப்படங்களைக் காட்டுகிறது. டாக்டர் சத்பதி விஷவாயுவினால் பாதிக்கப்பட்ட இருபதினாயிரத்துக்கும் மேற்பட்ட பிரேதங்களைப் பரிசோதனை செய்திருக்கிறார். அவர் பாதிக்கப்பட்டவர்கள் 27 விதமான வேறு வேறு விஷ இரசாயனப் பொருட்களால் பாதிக்கப்பட்டிருந்தனர் என்று கண்டறிந்தார். அவர்கள் விஷத்தன்மை மிகுந்த நச்சு வாயுக்களால் -அவற்றை சுவாசித்ததால் – தான் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்றார். ஆனால் இவ்வளவு இரசாயனப் பொருட்கள் எப்படி வந்தன என்பதனை விளக்குவதற்கு யாருக்கும் தெரிந்திருக்கவில்லை.

செப்டம்பர் 5 1986

செப்டம்பர் 5 1986 அன்று இந்தியா நியூயார்க் நகரிலிருந்து வழக்கை போப்பால் மாவட்ட நீதிமன்றத்திற்கு மாற்றிக்கொண்டது.

வழக்கம்போல, UCC, தனது சட்ட தந்திரங்களால், நீதிமன்றத்தை “மறுப்பு” கணைகளால் தாக்கியவன்னம் இருந்தது. ஒரு பூச்சிக்கொல்லி தொழிற்சாலை நிறுவுவதன் மூலம் ஏற்படவிருக்கும் ஆபத்தை தாங்கள் எந்தக் காலத்திலும் மாநில ஆரசிடமிருந்தோ அல்லது மத்திய அரசிடமிருந்தோ மறைத்ததில்லை என்று UCC சத்தியம் செய்யாத குறையாக சொன்னது. மேலும் MIC அப்படியொன்றும் மிகப்பயங்கரமானது அல்ல என்றும் கூறியது. மக்கள் தொகை அதிகம் இருக்கும் இடத்தில் தொழிற்சாலை நிறுவியதை மறுத்தது. நான்காவது ஐந்தாண்டு திட்டத்தில் (1969-1974) விதிக்கப்பட்ட பன்நாட்டு ஒருங்கிணைப்பு விதிகளை மீறியதை மறுத்தது. விசவாயு கசிந்ததை மறுத்தது. அது ஒரு தொழிலாளியிம் நாசவேலை என்று தடாலடியாக பல்டி அடித்தது.

கடைசியாக, அவர்களில் இருப்பையே அவர்கள் நிராகரித்தார்கள்!! இந்திய வழக்கறிஞர்கள் UCCஐப் பற்றிக்குறிப்பிடும் போது,”மிகப்பெரிய பன்னாட்டு நிறுவனம்” என்று கூறியிருந்தார்கள். இதைப் பயன்படுத்திய UCC அப்படியாருமே இல்லை என்றது. ஒரு சொல்லை எடுத்துக்கொண்டு அதற்கு வேறுவேறு அர்த்தங்கள் கற்பித்து வழக்கை திசைதிருப்புவது வழக்கறிஞர்களுக்கு கைவந்த கலை. ஆனால் இது சிலேடையின் உச்சக்கட்டம். UCC கண்ணுக்குப்புலப்படாத ஒரு அமெரிக்க வர்த்தகம். அவர்கள் மற்ற நாடுகளில் இருக்கும் சில பெரிய நிறுவனங்களில் சில பங்குகளை மட்டுமே வைத்திருந்தனர். அவ்வாறான வேற்று நாட்டு நிறுவனங்களில் ஒன்று தான் UCIL என்று கூத்தடித்தனர்.

போப்பால் தொழிற்சாலையில் தினமும் நடக்கும் விசயங்களுக்கும் தங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்பதை காட்டிக்கொள்ள விரும்பியது UCC. அப்படியிருக்க நேர்ந்த இந்த பேரிடருக்கு எப்படி UCC பொறுப்பாகமுடியும் என்று பாவமாக கேட்டது UCC. ஆனால் எவ்வளவு பாவமாக முகத்தை வைத்துக்கொண்டு சொன்னாலும் உண்மை அதுவல்ல. UCILஇன் எந்த ஒரு பாலிசியும், செலவுதிட்டமும், செலவும், நிறுவனத்தின் எந்த ஒரு அறிக்கையும், டான்பரியில் (Danbury) இருக்கும் UCCயின் தலைமை அலுவலகத்தின் ஒப்புதல் வாங்கவேண்டும். இதை நீதிமன்றத்தில் நிரூபிப்பது மிகவும் கடினமான வேலை.

(தொடரும்)

thanks : swaroopa mukarjee

காந்தம்-7

(தொடர்கதை)

(இதற்கு முந்தய பகுதிகளை sidemenuவில் பார்க்கவும்)

முன்னும் பின்னும்.
2

டன்டடகட டன்டடகட டன்டடகட டன்டடகட டன்டடகட டன்டடகட டன்டன்டன்டன்டன் டன்டடகடடன்டடகடடன்டடகட பிபீபிபீபிபீபீ………டன்டடகட டன்டடகட டன்டடகடடன்டடகட டன் டன் டன் பிபீபிபீபிபீபீ..

சங்கு சேகண்டி முழங்கவே
சலங்கைச் சத்தம் கேட்கவே
வீச்சருவா தூக்கிக்கிட்டு
வெள்ளக் குதிரை மேலே
ஆடி வாரான் பாடிவாரான்
எங்க பெரிய கருப்பன் தானே

“ம்ம்ம்ம்.ம்ம்ம்ம்..பாட்டு மறந்துபோச்சுடா…அப்புறம் என்னடா வரும்?”
“போதும். போதும். நீ என்னிக்கு ஒழுங்கா பாடிருக்க? சாமிக்கு அருள் வந்திடுச்சு.”

காளி தன் வெட்டப்படாத சடைமுடியை இங்கும் அங்கும் ஆட்டியபடி முழியைப் பிதுக்கி, நாக்கை வெளியே மடக்கி வைத்து, கையில் அருவா பிடித்திருப்பதைப் போல ஒரு வாழை மட்டையை பிடித்துக்கொண்டு அங்கும் இங்கும் குதித்துக்கொண்டிருந்தான். காளிக்கு பணிரெண்டு வயது. காளி கொஞ்சம் வளர்ந்திருந்தான். பிறந்த பொழுது எப்படி இருந்தானோ அதே கரிய நிறம், ஒல்லியான தேகம். ஆனால் அந்த சிறிய கண்களின் வசீகரம் சற்று கூடி இருப்பது போல இருந்தது. கருப்பு நிற கால்சட்டை அணிந்திருந்தான். மேலே சட்டை ஏதும் போட்டிருக்கவில்லை. கழுத்தில் அப்பாவின் புலிநகம் அதே மினுக்கோடு இருந்தது.

விலா எழும்பு தெரிய வயிற்றை எக்கி அடித்தொண்டையிலிருந்து காளி கர்ஜித்தான், “டேய் கருப்பன் வந்திருக்கன்டா” “கருப்பா”..அருகிலிருந்த குமார் காளியின் கைகளை இறுக்கமாக பற்றிக்கொண்டான் “கருப்பா எங்களயெல்லாம் காப்பாத்தி கொடுப்பா” “ம்ம்..காப்பாத்தறேன்டா..காப்பாத்தறேன்” காளியின் டவுசர் இடுப்பில் நிற்காமல் கீழிறங்கியது. அருகிலிருந்த சிறுமிகள் சிரித்தனர். “கருப்பா டவுசர் அவுறுது பார்” காளி கையிலிருந்த வாழை மட்டையை கீழே போட்டுவிட்டு டவுசரை இருக்கிப் பிடித்து முடிச்சு போட்டான். பிறகு மீண்டும் கீழே போட்ட வாழை மட்டையை குனிந்து எடுத்து கையில் அருவா போல வைத்துக்கொண்டான். இதையெல்லாம் செல்வி பார்த்திருப்பாளோ என்ற சந்தேகம் வர ஓரக்கண்ணால் அவளை பார்த்தான். ஒரு ஓரத்தில் கத்தரிப்பூ நிறத்தில் பூப்போட்ட சீட்டி பாவாடை அணிந்து சோகமே உருவாக ஓரத்தில் நின்று கொண்டிருந்தாள் செல்வி.

“ம்ம்..ஒவ்வொருத்தரா வாங்கப்பா” பூசாரி பக்தர்களை அழைத்தார். சிறுவர்கள் முட்டிமோதிக்கொண்டனர். எல்லோரும் உட்கார்ந்து கொண்டனர். யாரும் எழுந்திருக்கவில்லை. “ம்ம்..அருள் வாக்கு வாங்க ஒவ்வொரு ஆளா வாங்கப்பா” ம்ம்..ஹ¥ம்..ஒருத்தன் கூட எழுந்திருக்கவில்லை. “டேய்……….” காளி மறுபடியும் கத்தவே, ஒரு சிறுவன் எழுந்தான்.

ஏன்டா பாடபொஸ்தகத்திலெல்லாம் ஆறு ஏரின்னு ஏதேதோ சொல்றாய்ங்கல்ல அதெல்லாம்
எங்கடா இருக்கு?

மெதுவாக நடந்து காளியின் அருகே வந்தான். “காளி..” சட்டென்று இயல்பு நிலைக்கு வந்த காளி, வாழை மட்டையை வைத்து அவனை நங்கென்று தலையில் தட்டினான், “அண்ணேன்னு சொல்றா” பிறகு மீண்டும் “ம்ம்ம்ம்ம்” என்று ஆடத்துடங்கினான். அந்த சிறுவன் தலையை தடவிக்கொண்டே “காளியண்ணே..” என்றான். இப்பொழுது பூசாரி போல பக்கத்தில் நின்றிருந்த குமார் காளியிடமிருந்து வாழைமட்டையை பிடுங்கி சிறுவனின் தலையில் மீண்டும் ஒருமுறை நங்கென்று அடித்தான் “அண்ணனா, மூஞ்சப்பாரு..கருப்பான்னு சொல்லுடா சடத்தலையா”. கடுப்பான சிறுவன் தலையை தடவிக்கொண்டே “வோய் குமாரு கொமாரு ஓந்தலை மட்டும் நல்ல தலையா..போடா முட்டைத் தலையா” குமாரின் தலை முட்டை அகலவாக்கில் வைத்தால் எப்படி இருக்குமோ அப்படி இருக்கும், பின்னால் வீங்கியது போல. சமாதன முயற்சியில் இறங்கிய கருப்பசாமி சாந்தமாக “பக்தா என்ன வேண்டும் கேள்” என்றது.

ம்ம்…சாமி..சாமி..இந்த சேகர் இருக்கியான்ல சேகர்..அவென் எம் பம்பரத்த..ம்ம்..ஆக்கர் ஆடிச்சு ஆக்கர் அடிச்சு ஒடச்சுபுடறயான்..நீ அவென் பம்பரத்த..ம்ம்..ம்…ம்…ஒளிச்சுவெச்சுடு..”

“ம்ம்..காப்பாத்தி கொடுக்கறனப்பா..உம் பம்பரத்த காப்பாத்தி கொடுக்கறனப்பா.” என்று காளி கண்களை மூடிக்கொண்டு ஒரு ஆட்டம் போட்டு, குமார் பிள்ளையார் கோயிலிருந்து ஆட்டயபோட்டுட்டு வந்து கையில் வைத்திருந்த திருநீரை எடுத்து, அந்த சிறுவனின் நெற்றியில் பூசினான். காளி “ம்ம்ம்ம்ம்ம்..” என்று உடலை குலுக்கினான். சிறுவனும் தன் பங்குக்கு ஆடத்தொடங்க, குமார் அவனை நிறுத்தி, நீயெல்லாம் ஆடக்கூடாது, போ போய் உக்கார் இல்லீண்ணா சேகர விட்டு ஆக்கர் அடிக்க சொல்லுவேன் என்றதும் அவன் சத்தம் போடாமல் தன் இடத்தில் சென்று உட்கார்ந்து கொண்டான்.

அடுத்து ஒவ்வொருத்தராய் வந்து அருள் வாக்கு வாங்கிக்கொண்டனர். காளி இன்னும் விட்டபாடில்லை, விடாமல் ஆடிக்கொண்டிருந்தான் குமார் “போதும் சாமி போதும்” என்றும் கேட்காமல் சங்மங் என்று குதித்துக்கொண்டிருந்தான். “டேய்..யாராவது கத்தரிப்பூ கலர்ல பாவாட சட்ட போட்டவங்க இருந்தா வரச்சொல்லுடா” என்றான். குமார், சுற்றும் முற்றும் பார்த்தான், பிறகு செல்வியைப் பார்த்தான். புரிந்து கொண்டவன், காளியிடம் திரும்பி “அடியேய்..உனக்கு ரப்பு தான்டி..” என்று சொல்லிவிட்டு, “ஏத்தா கெழவி”..”டேய் செல்விடா” “ம்ம்க்கும் தெரியுது தெரியுது..ஏத்தா செலவி..இங்க வா..சாமி கூப்பிடுது பாரு”

முதலில் வரமாட்டேன் என்று மறுத்தவள் பிறகு என்ன நினைத்தாளோ மிக மெதுவாக எழுந்து வந்தாள். ஆடிக்கொண்டிருந்த காளியின் முன்னர் வந்து நின்றாள். குமார், “ஏன் சோகமா இருக்க? எதுவா இருந்தாலும் நம்ப கருப்பன் கிட்ட சொல்லு, தீத்து வெச்சுடும்” என்றான். காளி சிரித்தபடி ஆடிக்கொண்டிருந்தான்.

தயங்கியபடிக்கு நின்று கொண்டிருந்தவள், பிறகு மெதுவாக “காளி.காளி.. என்ன என்ன அந்த கணக்கு வாத்தியார் அடிச்சிட்டாருடா. இங்கபாரு..” என்று உள்ளங்கையை விரித்துக்காட்டினாள். உள்ளங்கையில் வரிகள். காளி மிகக்கடுமையாக முகத்தை வைத்துக்கொண்டான். “டேய் வாத்தி..” என்று கத்தினான், பிறகு செல்வியிடம் திரும்பி “எதுக்கு உன்ன அந்த வாத்தி அடிச்சான்?” என்றான். செல்வி அழத்தொடங்கினாள். அவளது கண்களில் சிறு சிறு துளிகள் துளிர்த்தன. காளி இப்பொழுது ஆடவில்லை. அவளையே பார்த்துக்கொண்டிருந்தான். “என் கணக்கு நோட்டு தொலஞ்சுபோச்சு..வேற நோட்டு வாங்க ஐயா துட்டு கொடுக்கல..இன்னிக்கு கூட வாத்தியார் அடிச்சாரு தெரியுமா?” என்றாள் கேவியபடி. காளி இந்த உலகத்திலே இல்லை.

“டேய் குமாரு அந்த வாத்தியானா நாளைக்கு..வேணா வேணாம் இன்னிக்கே ஒருவழி பண்ணிடுவோம்டா.. செல்வி அதுக்குமுன்ன உனக்கொரு வழி சொல்லட்டா” என்றான் காளி. செல்வி அழுவதை நிறுத்துவிட்டு, “என்னடா?” என்றாள். “பக்கத்துல வா காதில சொல்றேன்” “ம்ம்” செல்வி கண்ணீரைத்துடைத்துக்கொண்டே காளியின் அருகில் சென்றாள். காளி அவளது காதுகளுக்கு அருகில் சென்றான், செல்வி கண்ணத்தில் வழிந்த கண்ணீரை துடைத்துக்கொண்டே காத்திருந்தாள், காளி பச்சக் என்று செல்வியின் கண்ணத்தில் ஒரு முத்தம் வைத்தான். பிறகு திரும்பிப்பார்க்காமல் தலைதெறிக்க ஓட்டம் பிடித்தான். ஏற்கனவே குமார் காளியின் முன்னால் ஓடிக்கொண்டிருந்தான்.

செல்வி கீழே விழுந்து மண்ணில் புரண்டு அழ ஆரம்பித்தாள். போடா காளி தக்காளி என்றாள் மிகச்சத்தமாக.

***

“டேய் காளி அங்க ஒன்னு இருக்கு பாருடா” என்றான் குமார். காளி பாய்ந்து சென்று அதை எடுத்து தன் டவுசர் பையில் போட்டுக்கொண்டான். குமார் தரையில் ஒரு இடம் பாக்கியில்லாமல் தவழ்ந்தபடி தேடினான். காளி அவனுக்கு அருகில் நின்று கொண்டு பரவலாக நோட்டம் விட்டுக்கொண்டிருந்தான். பிறகு ஏதும் கிடைக்காமல் “டேய் குமார் நாம சாவடிக்கு போவோம்டா. பெரிசுக எல்லாம் தூங்கிருக்குங்க” என்று காளி சொல்ல இருவரும் மந்ததையை விட்டு சாவடிக்கு நடையைக் கட்டினர்.

சாவடியில் அந்த காலை பதினோரு மணி வெயிலையும் பொருட்படுத்தாமல் நாலைந்து வழுக்கைத் தலை பெரிசுகள் தூங்கிக்கொண்டிருந்தனர். பிள்ளையார் சத்தமில்லாமல் உட்கார்ந்திருந்தார். காளியும் குமாரும் படிகளிலும் சாவடிக்கு கீழேயும் தெடினர். நல்ல வேட்டை. நிறைய கிடைத்தது. இருவரும் சிரித்துக்கொண்டனர். பிறகு வேகவேகமாக நடக்கத்தொடங்கினர். ஊரணியைக் கடந்து மொட்டைமலையில் ஏறி, கோவிலுக்கு பின்னால் சென்று அங்கிருந்த திண்டில் குத்தவைத்து உட்கார்ந்து கொண்டனர்.

காளி பையில் கைவிட்டு சேகரித்ததில் ஒன்றை எடுத்து வாயில் வைத்துக்கொண்டான். துண்டு பீடி. குமாரும் ஒன்றை எடுத்து வாயில் வைத்துக்கொண்டான். காளி டவுசர் பையில் கைவிட்டு ஒரு தீப்பெட்டியை எடுத்து அதில் மீதமிருந்த இரண்டு தீக்குச்சிகளில் ஒன்றை எடுத்தான். வாயில் துண்டுபீடியை வைத்துக்கொண்டு குமார் காளிக்கு ஏதோ சமிக்ஞை காட்டினான். காளி என்னவென்று கேட்க, காத்தடிக்குது அந்தப்பக்கம் திரும்பி பத்தவை என்றான். காளி குமாரின் மதிநுட்பத்தை வியந்தவாறு சுவற்றுப்பக்கம் திரும்பி தனது பீடியைப் பற்றவைத்துக்கொண்டான். அவனது பீடி மிகவும் சிறியதாக இருந்தது. கஞ்சப்பிசினாரி பயலுக கடைசிவரைக்கும் இழுத்துட்டுத்தான் போடறாய்ங்க என்றான் புகையை வெளியே விட்டுக்கொண்டே. பிறகு குமாரின் பீடியைப் பற்றவைத்தான். இருவரும் ரசித்து புகைக்க ஆரம்பித்தனர்.

காற்று பீடியைக் கரைத்துக்கொண்டிருந்தது. காளியின் முன்னந்தலையில் விழுந்த அவனது நீண்ட தலைமுடி காற்றில் இங்கும் அங்கும் அலைந்து கொண்டிருந்தது. அவன் அருகிலிருந்த சுவற்றில் சாய்ந்து உட்கார்ந்து கொண்டான். அங்கிருந்து பார்க்கும் போது அருகிலிருந்த நிறைய கிராமங்கள் தெரிந்தன. கடினமான வெயில் எங்கும் படர்ந்திருந்தது. கண்ணுக்கெட்டிய தூரம் வரையிலும் பொட்டக்காடு மட்டுமே தெரிந்தது. தூரத்தில் யாரோ வெடிவைத்து பாறையைத் தகர்க்கும் சத்தம் கேட்டது.

காளி ஏதோ நினைவு வந்தவனாக திரும்பி குமாரிடம் கேட்டான் “ஏன்டா பாடபொஸ்தகத்திலெல்லாம் ஆறு ஏரின்னு ஏதேதோ சொல்றாய்ங்கல்ல அதெல்லாம் எங்கடா இருக்கு?” குமார் தனக்கு-எதுவும்-தெரியாது-தான்-எதையும்-ஒளித்தும்வைக்கவில்லை என்பதைப் போல ஒரு பாவனை காட்டிவிட்டு அடுத்த துண்டுபீடியை எடுத்து வாயில் வைத்து அணையப்போகும் பீடியின் நெருப்பில் அதைப் பற்றவைத்துக்கொண்டான்.

காளி ஏதும் பேசாமல் வெயிலையே வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தான். பீடிப்புகை காற்றில் எழும்பி கரைந்து கொண்டிருந்தது.

***

இருள் பூச்சியின் சத்தம் கனமாக கேட்டது. அது நிலவின் ஒளி போல தூங்கும் பொழுது வருகிறது. காலையில் எழுந்தால் நிலவைப் போலவே காணாமல் போய்விடுகிறது என்று யோசித்துக்கொண்டே காளி ஒரு பக்கமாக சாய்ந்து கால்களை மடக்கி கைகளை கால்களுக்கும் முகத்துகும் நடுவை வைத்துக்கொண்டு கண்களை மூடிப் படுத்திருந்தான். ராக்கம்மா அவனுக்கு அருகில் படுத்திருந்தாள். கதவு திறக்கும் சத்தம் கேட்டு முழித்துக்கொண்டு எழுந்தாள். ரங்கன் வந்தான். ராக்கம்மாவின் தலைமுடியை முடிந்துகொண்டு “சாப்படறியா?” என்றாள். “ம்ம்..இருக்கறத போடு” என்றவாரே உட்கார்ந்தான். பிறகு “எங்க உன் செல்ல மருமவன் தூங்கிட்டானா? இன்னிக்கு அவன் மொட்டமலையில் உட்கார்ந்து பீடி குடிச்சத எங்கூட்டாளிக பாத்திருக்காய்ங்க. காலையில் எந்திரிக்கட்டும் அவனுக்கு இருக்கு” என்றான். ராக்கு ஒரு சட்டி நிறைய கூழ் போன்ற ஏதோ ஒன்றையும் மிளகாய் இரண்டும் எடுத்து வந்து அவனருகில் வைத்துவிட்டு, அவன் பக்கத்தில் உட்கார்ந்து கொண்டாள். “இந்தா பேசாம சாப்பிடு. நீ பண்ணாத சேட்டையையா உன் மருமவன் செய்யறான்?”

***

காளி எழுந்து பார்த்தான். அனைவரும் தூங்கிவிட்டிருந்தனர். ராக்குவும் ரங்கனும் ஆழ்ந்த உறக்கத்திலிருந்தனர். காளி மெதுவாக எழுந்து ஓசைப்படாமல் கதவைத்திறந்து கொண்டு வெளியே வந்தான். வெம்மையான காற்று அவன் முகத்தில் அறைந்தது. மெதுவாக நடக்க ஆரம்பித்தான். குமார் வீட்டைக்கடக்கும் போது உதட்டைக்குவித்து மெதுவாக ஒரு விசில் அடித்தான். இரண்டு மூன்று நிமிடங்களில் குமார் வெளியே வந்தான்.

இருவரும் நடக்க ஆரம்பித்தனர். கொஞ்சம் தூரம் சென்றதும், இன்னும் சில பையன்கள் சேர்ந்துகொண்டனர். சிலர் கைகளில் சாக்குகளும் கிழிந்து நைந்து போன பழைய போர்வைகளும் இருந்தன. அவர்கள் ஊரணியை நோக்கி நடக்க ஆரம்பித்தனர்.

காளி இன்னிக்கு என்ன படம்டா?” என்றான் கொஞ்சம் குட்டையாக இருந்தவன்.

***
(காந்தம் ஈர்க்கும்)

ஓவியம்: ராம்கி

நீயும். உன் மீன்களும்.

நீ இல்லாத
இந்த நாட்களில்
மீன்கள் என்னை
வந்தடைந்தன.

மீன்கள் இல்லாத
உன்னுள்
என் செதில்கள் மட்டும்
நீந்துகின்றனவாம்.

***

மீன்கள் என்னை
வந்தடைந்த அன்று
இலைகளற்ற
இந்த மரத்தினடியில்
செதில்கள் இல்லாத நானும்
உன் வெற்றிடமும்
மௌனமாக
அமர்ந்திருந்தோம்.

பேச்சுத்துணை கிடைக்காத
மீன்கள்
இலையில்லாத கிளைகளில்
சென்று ஒட்டிக்கொண்டன.

நீ இல்லாத
உன் வெற்றிடத்தை
உதிர்ந்த இலைகள்
கூட
நிரப்ப மறுக்கின்றன.

***

திடுக்கிட்டு
விழிக்கும் நான்
முன்நகராத
பின்னிரவில்
என்னை உற்றுநோக்கும்
உன்
மீன்களுடன்
பேசத்துவங்குகிறேன்.

ஏனோ,
என் வார்த்தைகள்
கிளைகளை
சென்றடைவதேயில்லை.

***

நீயும். உன் மீன்களும்.

நீ இல்லாத
இந்த நாட்களில்
மீன்கள் என்னை
வந்தடைந்தன.

மீன்கள் இல்லாத
உன்னுள்
என் செதில்கள் மட்டும்
நீந்துகின்றனவாம்.

மீன்கள் என்னை
வந்தடைந்த அன்று
இலைகளற்ற
இந்த மரத்தினடியில்
செதில்கள் இல்லாமல்
நானும் உன் வெற்றிடமும்
மௌனமாக
அமர்ந்திருந்தோம்.

பேச்சுத்துணை கிடைக்காத
மீன்கள்
இலையில்லாத கிளைகளில்
சென்று ஒட்டிக்கொண்டன.

நீ இல்லாத
உன் வெற்றிடத்தை
உதிர்ந்த இலைகள்
கூட
நிரப்ப மறுக்கின்றன.

திடுக்கிட்டு
விழிக்கும் நான்
முன்நகராத
பின்னிரவில்
என்னை உற்றுநோக்கும்
உன்
மீன்களுடன்
பேசத்துவங்குகிறேன்.

ஏனோ,
என் வார்த்தைகள்
கிளைகளை
சென்றடைவதேயில்லை.