அடைத்தோசையும் அண்டங்காக்காயும்

(சிறுகதை)

ஒரு ஊர்ல ஒரு காக்கா இருந்துச்சாம். அந்த காக்காவுக்கு காலையில் இருந்து சாப்பிடறதுக்கு ஒன்னுமே கிடைக்கலையாம். சரி பக்கத்து ஊர்லயாச்சும் போய் ஏதாவது கிடைக்குதான்னு பாக்கலாம்னு கெளம்புச்சாம். கெளம்புன காக்கா கொஞ்ச நேரத்துல டேக் டைவர்சன் போர்ட்களை பார்த்து பார்த்து வேற ஒரு ஊருக்கு வந்துருச்சாம். வீட்லயே தண்ணி குடிக்காம வந்த காக்காவுக்கு தண்ணி ரொம்ப தவிச்சதாம். எங்கனாச்சும் தண்ணி கிடைக்குமான்னு பாத்த காக்காவுக்கு ரொம்ப ஏமாத்தமா போச்சாம். எங்கயுமே தண்ணி இல்ல. அலைஞ்சு திரிஞ்சு ஜகந்நாதன் நகர் ·ப்ர்ஸ்ட் ஸ்டீரீட்ல இருக்கிற ஒரு மொட்டை மாடியில வந்து உக்காந்துச்சாம் அந்த காக்கா. அந்த மொட்டை மாடியில ஒரு பையன் சிகப்பு கலர் சேர்ல உக்காந்து ஏதோ புத்தகத்த வெச்சு படிச்சுட்டிருந்தானாம். அந்த காக்கா அவன் வெச்சிருக்கிறது என்ன புத்தகம்ன்னு பாக்கறதுக்கு முயற்சி பண்ணுச்சு. ஆனா முடியல. அப்பத்தான் ஒரு பொண்ணு படி ஏறி அந்த மொட்டை மாடிக்கு வந்துச்சு. அந்த பொண்ணு கையில ஏதோ வெச்சிருந்துச்சு. வேகவேகமா வந்த அந்த பொண்ணு அந்த பையன் கிட்ட ஏதோ பேசுச்சு. பசியினால காக்காவுக்கு காதடச்சுக்கிச்சு. அவங்க பேசினது எதுவுமே கேக்கல. ஆனா அந்த பையனோட முகத்தில தெரிஞ்ச திகில வெச்சு கண்டிப்பா அவன் அந்த பொண்ணோட ஹஸ்பெண்டாத்தான் டூட்டி பாத்திட்டிருப்பான்னு தெரிஞ்சிகிடுச்சு அந்த காக்கா.

பேசி முடிச்சிட்டு அந்த பொண்ணு மொட்டை மாடியோட ஒரு மூலையில செவத்துமேல கையில வெச்சிட்டிருந்த அந்த அடைத்தோசையை வெச்சது. வெச்சிட்டு அந்த பொண்ணு பாட்டுக்கு நடக்க ஆரம்பிச்சுடுச்சு. மொட்டை மாடியில வாக்கிங் போக வந்திருக்கு போல. ஆமா நாம வானத்தில பறக்கறப்பவே இந்த ஆட்டோக்காரர்கள் “தள்ளி நடம்மே பேமாணி”ன்னு சொல்றப்ப, பாவம் இந்த பொண்ணுக்கு ரோட்ல நடக்க எங்க இடம் கிடைக்கும்? மொட்டைமாடியில தான் நடக்கனும். சாப்பாடு வெச்சா மட்டும் போதுமா? கூப்புட வேணாமான்னு ரொம்ப கோபபட்டுச்சு காக்கா. ஆனாலும் பசி வயித்த கிள்ளுனுதால பரவாயில்ல சின்ன பொண்ணுதானன்னு மன்னிச்சு விட்டுட்டு அந்த அடைத்தோசைய சாப்புட ஆரம்பிச்சது காக்கா. மொதல்ல கொஞ்சம் புளிக்கிற மாதிரி இருந்தாலும் பசின்னால அதுக்கு ஒன்னும் புரியல மாங்கு மாங்குன்னு திண்ணுச்சு. ஆனா தன்னை பாவமா பாத்திட்டிருக்கிற அந்த பையனை அந்த காக்கா கவனிக்கவேயில்ல. அதுக்குள்ள இன்னும் சில காக்காய்கள் அங்க சுத்த ஆரம்பிச்சிருச்சுக. ஆனா இந்த மொட்டை மாடிக்கு பக்கம் வரவேயில்ல ஒன்னு கூட. எல்லாம் பக்கத்தில இருக்குற BSNL டவர் மேல உக்காந்துகிடுச்சுக.

இந்த காக்கா தான் பசியோட இருந்தாலும் மத்த காக்காய்கள சாப்பிட கூப்பிட்டுச்சு. காக்கா மனுசன் கிடையாது பாருங்க, யாரு சாப்பிட்டா என்ன சாப்பிட்டா என்னன்னு இருக்க. ஆனா இந்த காக்கா இவ்வளவு கூப்பிட்டும் மத்த காக்காக ஒன்னு கூட கண்டுக்கிடல. இது கத்தின கத்தல்னால பக்கத்துல சிகப்பு சேர்ல உக்காந்து படிச்சிட்டிருந்த பையன் கடுப்பாகி புத்தகத்தை சட்டுன்னு கீழ வெச்சான். ச்சூ ச்சூ ன்னு அந்த காக்காய விரட்டினான். பிறகு எழுந்து கீழே போனான். சாப்பிட்டது போதும்னு நினைச்ச காக்கா பறக்க தயாராச்சு. அப்பத்தான் அவன் வெச்சிருந்த புத்தகத்த பாத்துச்சு அது ஏதோ கவிதைகள்ன்னு மட்டும் தான் பாத்துச்சு. யார் எழுதினதுன்னு தெரியல. அடைத்தோசைய தின்னாலாவது செமிச்சிடும் இந்தக்காலத்து கவிதைகள்? நமக்கெதுக்கு வம்புன்னு நினைச்ச காக்கா பறக்க முயற்சி பண்ணுச்சு. அதால முடியல. கொஞ்ச தூரம் பறந்துட்டு முடியாம அந்த பையன் வெச்சிருக்கிற புத்தகத்துக்கு பக்கத்துல வந்து உக்காந்துச்சு. காத்துல புத்தக்கத்தோட பக்கங்கள் பறந்துச்சு. ஆர்வக்கோளருல அந்த கேப்ல காக்கா ஒரு கவிதை படிச்சது. கவிதைய படிச்சதுதான் தாமதம், காக்காவுக்கு தலை சுத்த ஆரம்பிச்சிருச்சு. வயிறு குமட்டிட்டு வந்துச்சு. காக்கா அடைத்தோசையை திரும்பி பாத்துச்சு. தான் சாப்பிட்டது போக மீதம் அப்படியே இருந்துச்சு. திரும்பி கவிதை புத்தகத்த பாத்துச்சு. காக்காவுக்கு வாமிட் வர்ற மாதிரி இருந்துச்சு. ஆனா வாமிட் அடைத்தோசைனாலயா இல்ல இப்ப படிச்ச கவிதைன்னாலையான்னு காக்காவுக்கு தெரியல. அப்பத்தான் ஒரு விசயத்தை கவனிச்சது அந்த காக்கா: ஏன் அடைத்தோசைய பாத்தும் நாம கூப்பிட்டும் எந்த காக்காவும் இந்த வீட்டு மொட்டைமாடிக்கு சாப்பிட வரல? நம்மாளுக சாப்பாட்ட பாத்தவுடனே எங்கிருந்தாலும் கும்பலா பறந்து வந்திடுவாங்களே?!

***

பயங்கர அத்துவான காடு. எங்கும் கும்மிருட்டாத்தான் இருக்கனுங்கற அவசியம் இல்லாததால கொஞ்ச வெளிச்சமா இருந்துச்சு. அங்க பாமரும், பட்சனரும் தங்கள் கையில் இருக்கிற வில்லை தூக்கமுடியாமல் தூக்கிக்கொண்டு நடந்துகொண்டிருந்தனர். பட்சனர் கேட்டான்: அண்ணா? என்னா? எனக்கு ஒரு சந்தேகம்? சொல்! பாமானந்த் பாகரின் நாடகத்தில் பாமராக நடிக்கும் அந்த கோமாணந்தபாண்டி எப்படி இவ்வளவு கனமான வில்லையும் தூக்கிக்கொண்டு எப்பொழுதும் சிரித்துக்கொண்டேயிருக்கிறான், நீங்கள் இப்படி திணருகிறீர்களே? கோபமான பாமர், பட்சனரை நோக்கி “நீ அடுத்த பிறவியில் அந்த பாமானந்த் பாகராக பிறக்க கடவது” என்கிற சாபத்தை தூக்கிப்போட்டார். அதிபுத்திசாலியான பட்சனர் டக்குன்னு விலகினதால, பக்கத்துல இருந்த புல் மீது அந்த சாபம் விழுந்தது. (பாமரிடம் சாபம் வாங்கியதால் தான் பாமானந்த் பாகரின் குடும்பம் விடாமல் பாமரைப் பற்றிய நாடகங்கள் எடுத்து அதில் கொஞ்சமும் விளங்காத கோமணந்த பாண்டி போன்றோரை பாமராக நடிக்க வைத்து தங்களது பழியை தீர்த்துக்கொள்கின்றனர் என்பது வேறு ஒரு கிளைக்கதை)

பாமரும் பட்சனரும் வில் வித்தை மற்றும் பல் வித்தையில் (சிரித்துக்கொண்டேயிருப்பது) கைத் தேர்ந்தவர்கள் என்பதால் தைரியமாக அந்த காட்டில் நடந்து திரிந்தனர். அப்பொழுது அந்த பக்கம் தோன்றிய பருடன் பட்சனரை தனியே அழைத்து, ஏன் இப்படி இந்த காட்டில் சுற்றித்திரிகிறீர்கள்? யாரையவது தொலைத்து தேடிக்கொண்டிருக்கிறீர்களா? அதற்கு பட்சனர் சிரித்துக்கொண்டே நீங்கள் குரல்வலை என்கிற பதிவை படிப்பதில்லையா? நாங்கள் இயற்கைக்கு திரும்புகிறோம். எங்களுக்கு நகர வாழ்க்கை மந்தமாக போய்க்கொண்டிருப்பதால் இங்கே வங்தோம் என்றான். பருடன் குரல்வலையின் முகவரியை வாங்கி தனது இறக்கையில் குறித்துக்கொண்டது.

பருடன் கிளம்ப ஆயத்தமானபோது பட்சனர் தனக்கு தாகம் எடுக்கிறது என்றும் குடிக்க ஏதாவது கிடைக்குமா என்றும் கேட்டார். பருடன் ஒரு நாள் வாழ்க்கை வெறுத்து உயரே உயரே உச்சியிலே படு வேகமாக பறந்து கொண்டிருந்த பொழுது, தான் ஒரு விசித்திரமான ஊரைக் கண்டதாகவும் அங்கே மக்கள் குடிக்கும் ஒரு வகையான கருப்பு நிற பாணத்தை குடித்ததாகவும் கூறியது. வெள்ளை நிறத்தில் இருப்பவர்களும் இந்த கருப்பு நிற பானத்தையே குடிக்கும் விசித்திரத்தை அங்கு தான் தான் கண்டதாகவும், அன்று முதல் தானும் அந்த பாணத்தை குடித்து வருவதாகவும் கூறியது. மேலும் அந்த பாணத்தில் சுகர் அதிகமாக இருப்பதால், ஒரு நாளைக்கு இரண்டு மணி நேரம் பறக்கவேண்டும் என்பதை தனது மருத்துவர் கூறியதாகவும் சொல்லியது.

பட்சனர் மிகவும் சோர்வடைந்திருப்பதால் இந்த பாணத்தை குடித்துக்கொள்ளலாம் என்று ஒரு குடுவையை கொடுத்தது. பட்சனர் தான் அதை குடிப்பதற்கு முன், பாமரிடம் அதை குடுத்தான். எதற்கு வம்பு, முதலில் பட்சனரே குடிக்கட்டும் என்று பாமர் “நீயே முதலில் குடி பட்சனா” என்று தனது தெய்வீக குரலில் கூறி விட்டு சிரித்தார். பாமர் எதற்கு சிரிக்கிறார் என்று புரியாமல் பருடன் முழித்தபோதும், அது தனது சந்தேகத்தை முகத்தில் காட்டிக்கொள்ளவில்லை.

பட்சனரைத் தொடர்ந்து பாமரும் குடிக்க ஆயத்தமாகும் பொழுது: “Eating or drinking is not allowed in this train” என்கிற சத்தத்தை கேட்டு திடுக்கிட்டு முழித்தார் பாமர். என்ன சொல்கிறார்கள் என்று புரியாமல் என்னை நோக்கினார் பாமர். எனக்கோ ஹிந்தி சரியாக தெரியாது. எனவே “பானி பீத்தே அவுர் கானா காத்தே நகீ அலவுட்” என்றேன். புரிந்துகொண்ட பாமர், குடிக்கலாமா வேண்டாமா என்ற மனக்குழப்பத்தில் என்னைப் பார்த்தார். அலவுட் என்கிற ஆங்கில வார்த்தையை அவர் புரிந்துகொண்டது விந்தையிலும் விந்தையே. ட்ரைனில் பயனிப்பவர்களுக்குத் தான் இந்த விதிகள். நீங்களோ என் லேப் டாப்பிற்குள் இருக்கிறீர்கள், எனவே நீங்கள் குடிப்பதில் தவறில்லை. குடியுங்கள் என்றேன். என் தீர்ப்பை கேட்ட பாமர் ஆனந்தமாக குடிக்க தொடங்கும் முன், பருடன் பறந்துவிட்டிருந்தது.
***

பகழிகை என்கிற மிக அழகான பெண்ணாகத்தான் இருக்க வேண்டும் என்கிற அவசியம் இல்லை என்பதால் கொஞ்சம் சுமாரான ஒரு பெண் அந்த அத்துவான காட்டில் சுற்றித்திரிந்து கொண்டிருந்தாள். அவள் தனது ரத்தத்தை இளமையாக்கி என்றும் தன்னை அழகாக வைத்திருக்கும் ப்ளட் ஆர்கிட் என்கிற மூலிகையை தேடிக்கொண்டு வந்தாள். மூலிகையை தேடி அழைந்த பொழுது, அப்பக்கமாக சென்ற பூர்ப்பபகை என்கிற அழகிய வஞ்சியை கண்டாள். அவளது அழகைப் பார்த்து அவளுக்கு ப்ளட் ஆர்கிட்டின் இருப்பிடம் கண்டிப்பாக தெரிந்திருக்கும் என்று எண்ணி; ப்ளட் ஆர்கிட் இருக்கும் இடம் உனக்கு தெரியுமா என்று கேட்டாள் பகழிகை. கல் இருக்கும் இடத்தில் சாணி இருக்கும். சாணியும் கல்லும் ஒன்னு. இதை அறியாதவருக்கு ஆர்கிட் மண்ணு என்று சொல்லிவிட்டு எப்பொழுதும் போல ஹா ஹா ஹா ஹா என்று எக்கோ அடித்து சிரித்து டஸ் என்று மறையாமல், தேமே என்று மெதுவாகவே நடந்து சென்று மறைந்தாள் பூர்ப்பபகை.

***

நாள் முழுதும் சுற்றித் திரிந்த பகழிகைக்கு தாகம் எடுத்தது. அப்பொழுது புரியாத மொழியில் யாரோ பேசுவது கேட்கவே திரும்பிப்பார்த்தாள். அங்கே பாமரும் பட்சனரும் கையில் ஏதோ குடுவையுடன் நடந்துவந்துகொண்டிருக்க கண்டாள். குடுவையை கண்டதும் பகழிகைக்கு நாவில் நீர் சுரந்தது.

பகழிகையைக் கண்ட பாமரும் பட்சனரும் பேசுவதற்கு வெட்கப்பட்டனர். பகழிகையே வந்து முதலில் பேசட்டும் என்று காத்திருந்தனர். பொறுமை இழந்த பகழிகை, பாமரிடம் சென்று எனக்கு தாகமாக இருக்கிறது குடிக்க ஏதாவது இருந்தால் குடுங்கள் என்று குடுவையைப் பார்த்து கேட்டாள். அவர்கள் புரியாமல் முழிக்கவே, சைகை மூலம் செய்து காட்டினாள். பாமர் அப்பொழுதும் ஏதும் பேசாமல் இருக்க, பட்சனர் அவர் பாகசத்னி விரதர் என்று சொன்னார்; மேலும் தன்னிடம் புரியாத மொழி பேசும் வெள்ளையான மனிதர்களும் கருப்பு பாணத்தை பருகும் அந்த விசித்திர தேசத்தின் பாணமே இருக்கிறது என்று சொன்னார். அவர் கொடுப்பதற்குள் பகழிகையே முந்திக்கொண்டு பிடுங்கியே குடித்துவிட்டாள்.

தாகம் அடங்கிய பகழிகை ஆர்கிட் செடியை மீண்டும் தேடத்தொடங்கினாள். பட்சனர் இது யாருடைய காடு என்று கேட்கவே, பகழிகை பாவணர் என்கின்ற மன்னனுக்கு சொந்தமான காடு என்று சொல்லிவிட்டு தன் வழியில் நடக்க தொடங்கிய பொழுது, திடிரென்று எக்கோ அடிக்கும் குரலில், பாமர் யானை ஒன்று இங்கிருந்து ஒரு கல் தொலைவில் மாடுகள் ஏப்பம் விடும் இடத்திற்கு பக்கத்தில் சானம் இட்டுள்ளது என்று கூறிவிட்டு தனது தெய்வீக சிரிப்பை உதிர்த்தார். சாபம் வாங்கிய புல்லாகிய பாமனந்த் சாகர் பாமரின் இந்த சிரிப்பு கொஞ்ச ஓவர் ஆக்ட் என்று நினைத்துக்கொண்டார்.

***

பாமரின் சொற்களை மனதில் வைத்து வழியை கண்டுபிடித்து சரியாக யானை சானம் இருக்கிற இடத்திற்கு வந்தாள் பகழிகை. இங்கே எங்கே ஆர்கிட் இருக்கிறது என்று தேட ஆரம்பித்தாள். எங்கு தேடியும் ஆர்கிட் கிடைக்கவில்லை. சோர்வான பகழிகை தெரியாமல் யானை சானத்தை மிதித்து விட்டாள்.

சானத்தை எங்கே தொடைப்பது என்று நினைத்துக்கொண்டிருக்கையில் அருகில் ஒரு பெரிய கல் தென்பட்டது. அப்பொழுதுதான் பூர்ப்பபகையின் அந்த வார்த்தைகள் மீண்டும் எக்கோ அடித்தது: சாணியும் கல்லும் ஒன்னு. இதை அறியாதவருக்கு ஆர்கிட் மண்ணு. மண்ணு. மண்ணு. மண்…ஆகா பாமரே என்னே உந்தன் கருணை என்று நினைத்துக்கொண்டாள். உடனே தனது காலை அந்த கல்லில் வைத்து தேய்த்தாள் பகழிகை.

இடி இடித்தது. மின்னல் வெட்டியது. காற்று பலமாக அடிக்கத் தொடங்கியது. கல் சட்டென்று மறைந்து அங்கே கசுவாகத்திரர் தோன்றினார். கசுகாகத்திரர் கடும் கோபத்தில் இருந்தார். மனிதனாக உட்கார்ந்தால் தான் ஐட்டம் பாடல்களை போட்டு நமது தவத்தை கெடுக்கிறார்கள் என்று கல்லாக மாறி தவம் செய்தால் பேதை பெண் இப்படியா செய்வாய் என்று கடும் சினம் கொண்டும் கத்தத் தொடங்கினார். அவர் அவ்வாறு கத்துவதால் தான் அவருக்கு கசுவாகத்திரர் என்ற பெயர் வந்தது. கடும் சினத்தில் கசுவாகத்திரர் கீழ்வருமாறு கூறினார்: என்னுடைய தவத்தை கெடுத்த பகழிகையே; இந்தா பிடி சாபம். இந்த நொடிமுதல் நான் அண்டங்காக்க்காயாக மாறி இந்த உலகத்தை சுற்றித்திரிவேனாக. ஜென்மங்கள் பல தாண்டி பாமரின் மனைவி கீத்தா கொடுக்கும் அடைத்தோசையை சாப்பிட்ட பிறகே நான் ஜென்ம சாபல்யம் பெறுவேன் என்றார்.

பகழிகை வாயடைத்துவிட்டாள். தான் தவறாக தனக்கே சாபம் கொடுத்துவிட்டதை அறியாமல் தனது நீண்ட தாடியை நீவிவிட்டபடியே இருந்தார் கசுவாகத்திரர். சுவாமி என்ன சொல்லிவிட்டீர்கள் உங்களுக்கு நீங்களே சாபம் கொடுத்துக்கொண்டீர்களே என்பதை அவள் எடுத்துச்சொன்ன பிறகு தான் கசுவாகத்திரருக்கு உறைத்தது. அதற்குள் அவர் அண்டங்காக்காயாக மாறத்தொடங்கியிருந்தார்.

எழுதியதை மாற்ற முடியுமா என்று என்னிடம் கேட்டார் கசுவாகத்திரர். நான் என்ன செய்வேன். நான் வெறும் பதிவர். வரலாற்று பதிவர். அதுவும் பின் தொடரும் நிழலின் குரலை படித்த பதிவர். வரலாற்றின் குரல் ஒலித்துக்கொண்டேயிருக்கும் என்பதை அறியாதவனா நான். மேலும் வரலாற்றை நான் மாற்றத்தேவையில்லை. காலமும் காற்றும் கோட்டையையும் கரைக்கும். எனக்கு பின்னால் வரும் பம்ப்பர் என்னும் புனைக்கவிதை நிபுணர் அவ்வாறு செய்வார். ஆம் அப்படியே ஆகுக. ஓம் சத் சத்.

பதிவரே வரலாறு மாற்றப்பட்டால் என் சாபம் மாறுமா என்று கேட்டது காக்காய். வரலாறு மாறலாம். ஆனால் அது கொடுக்கும் தகராறு என்றைக்கும் மாறாது என்றேன் சூசகமாய். இதைக்கேட்ட காக்காவாக இருக்கும் கசுவாகத்திரருக்கு நாக்கு வெளியே தள்ளியது. இதைப் பார்த்த பகழிகை “ஓ நாக்கு முக்க நாக்கு முக்க நாக்கு முக்க” என்று ஆடிப்பாடத் தொடங்கினாள். பின்னர் என்னைப் பார்த்து: வரலாற்று பதிவரே. ப்ளட் ஆர்க்கிட் எங்கே இருக்கிறது என்று உங்களுக்காவது தெரியுமா என்று கேட்டாள்.

***

அடைத்தோசையை சாப்பிட்ட அண்டக்காக்காய் சட்டென்று கசுவாகத்திரராய் மாறியது. அந்த பையன் உட்கார்ந்திருந்த சிகப்பு சேரில் சென்று உட்கார்ந்து கொண்டது. பிறகு அவன் வைத்திருந்த கவிதை புத்தகத்தை எடுத்து படிக்க ஆரம்பித்தது. நான் எவ்வளவு எடுத்து சொல்லியும் கேட்காத கசுவாகத்திரர் அந்த கவிதையை படித்துவிட்டு நான்கு கோழிகளை ஒரே முழுங்கில் முழுங்கிய பாம்பு போல படுத்துக்கிடந்தார்.

பின்னர் எழுந்து படிகளின் வழியே இறங்கினார். யாருடா இது தாடியும் கீடியுமா என்று பயந்து போன அந்த பெண் வீல் என்று கத்தாமல் யோவ் யாருய்யா நீ என்று கேட்டாள். செம கடுப்பான கசுவாமித்திரர் ஏ கீத்தா உன் வீட்டுக்காரன் பாமர் எங்கே என்றார். யாருடா கீத்தா பாமர்ன்னு உளறுராருன்னு யோசிச்சுது அந்த பொண்ணு. யோவ் தாடி ஒழுங்கா சொல்லு யாரு நீ? என்று கேட்டாள். கோபம் அடைந்த அந்த கசுவாகத்திரர் இந்தா பிடி சாபம் என்று சொல்லும் போது” ஏ நாக்கு முக்க நாக்கு முக்க” என்ற பாடல் ஒலிக்கும் நான் கூட எதிர்பார்க்கவில்லை. ஒன்றும் பேசாமல் கசுவாகத்திரர் படியிறங்கி சென்றார்.

***

மறு நாள் தினத்தந்தியில் நீண்ட தாடியுடன் விசித்திர மனிதர் சென்னையில் நடமாட்டம். கடும் வெயிலையும் பொறுட்படுத்தாமல் பஸ்ஸில் புட்போர்ட் அடித்தார் என்கிற செய்தியை அனைவரும் படித்து வியந்தனர்.

அந்த மாதத்தின் தீராநதியில் பின்நவீனத்துவமும் முன்தாடியும்: ஒரு விவாதம் என்கிற நகைச்சுவை கட்டுரையில் ஜெயமோகன் அந்த தாடி வைத்த கேடி பாலாவின் நான் கடவுள் படத்தில் நடித்த எக்கச்சக்க சாமியார்களுள் ஒருவராக இருக்கக்கூடும் என்ற தகவலை சொன்னதை யாரும் கண்டுகொள்ளவில்லை.

மேலும்..

போதும் போதும் பாப்பா தூங்கிருச்சு..நிறுத்துங்க விட்டா அளந்துட்டே போவீங்க!

***

இயற்கைக்கு திரும்புதல் : பாலாஜி ஷங்கருடனான உரையாடல்

பாலாஜி ஷங்கர் என்பவர் ஒரு Neoவைப் போல. Neo? Mr.Anderson in The Matrix. The Matrix படத்தின் ஒன் லைன் “Get out the System : Free your mind” என்பது தான். Thats what Mr.Balaji Shankar has done.

***

Henry David Thoreau-வின் எண்ணங்கள் தான் பாலாஜிக்கு மனவெழுச்சியை உண்டாக்கின. மகாத்மாவைப் போலவே அவரும் Thoreauவினால் ஈர்க்கப்பட்டார். இயற்கையோடு வாழ்தலையும், எளிமையாக வாழ்தலையும் அவர்கள் பாலாஜிக்கு கற்றுத்தந்தனர்.

***
If a man does not keep pace with his companions, perhaps it is because he hears a different drummer – H D Thoreau in Walden

“ஒரு மனிதன் தன் சகாக்களோடு அணி சேர நடக்கவில்லை என்றால் அவன் வேறு ஏதோ தாளத்தின் இசையில் நடக்கிறான்”

***

தொர்ரோவின் சிந்தனைகளால் ஈர்க்கப்பட்ட பாலாஜிக்கு நீண்ட காலமாகவே அவரைப் போல இயற்கையோடு வாழவேண்டும், மீண்டும் இயற்கைக்கு திரும்பவேண்டும் என்கிற ஆசை இருந்து கொண்டே இருந்தது. நாம் என்ன செய்துகொண்டிருக்கிறோம்? நாடு எங்கே போய்க்கொண்டிருக்கிறது? எல்லோரும் white collar வேலைகளுக்கு வந்துவிட்டால் விவசாயத்தை யார் கவனிப்பது? சோற்றுக்கு எங்கே போவது? மேலும் நாள் முழுக்க குளிரூட்டப்பட்ட அறைக்குள் கணினியையே வெறித்துப்பார்த்துக்கொண்டிருந்து விட்டு சூரியக்கதிர்கள் கூட நம் மீது பட்டுவிடாமல் மிகக் கவனமாக நாம் வாழும் வாழ்க்கை நம்மை எதை நோக்கி இட்டுச்செல்கிறது? முதுகு தண்டு வலியை நோக்கியா? முதலில் நடுவிரலின் அடிப்பகுதியில் தோன்றி பிறகு மணிகட்டுக்கு முன்னேறி பிறகு தோள்பட்டைக்கு நகரும் நரம்பு வலியை நோக்கியா? எதை நோக்கி நாம் சென்று கொண்டிருக்கிறோம்?

நாம் நமது மூதாதயர்களை விட மகிழ்ச்சியாக இருக்கிறோமா? அவர்களை விட ஆரோக்கியமாக இருக்கிறோமா? அவர்களுக்கிருந்ததை விட ஓய்வான நேரங்கள் நமக்கிருக்கிறதா? இதையெல்லாம் விட அவர்களுக்கு இருந்த இயற்கை வளங்கள் நமக்கிருக்கிறதா? இருக்கும் இயற்கை வளங்களை நாம் அழித்துக்கொண்டல்லவா இருக்கிறோம்? போன்ற எண்ணற்ற கேள்விகள் தொடர்வண்டியாய் பாலாஜியை தாக்கின. கேள்விகளின் கடும் புகை அவரை சூழ்ந்துகொண்டது. எப்படி வெளியேறுவது?

இங்கே தான் Thoreau-வின் புகழ்பெற்ற கேள்வி அவர் முன் தோன்றியது: “How can I earn a livelihood and still have time to live?” இந்த அவசர யுகத்தில் வாழ்வதற்கெங்கே நேரம் இருக்கிறது?

வாழ்க்கையை வாழ்வதற்கு பணம் வேண்டும்; அதே சமயத்தில் அந்த வாழ்க்கையை ரசித்து வாழ நல்ல அமைதியான ஓய்வான மனமும் வேண்டும். என்ன செய்யலாம் என்கிற கேள்விக்கு; தேவைகளை குறைத்துக்கொள் என்பதே அவருக்கு பதிலாக கிடைத்தது.

***

“மண்மீதிலே எந்த மானிடர்க்கும் அளவில்லாத ஆசைகள்
ஒன்றல்லவே ஓராயிரத்தை தாண்டி நிற்கும் தேவைகள்”

என்கிற வரிகளை இன்று யேசுதாஸின் இனிமையான குரலில் கேட்டுக்கொண்டிருந்தேன். உண்மைதான்.

தேவைகள் அதிகமாக அதிகமாக மேலும் நாம் நம்மை வறுத்திக்கொள்கிறோம். பணத்தை நோக்கி ஓடுகிறோம், வாழ்க்கையில் தேங்கி நிற்கிறோம். தேவைகளை குறைத்துக்கொள்வதால், இந்த rat raceக்கு நாமும் அடிமையாக மாட்டோமே! கணக்கிலடங்காத எலிகளுடன் நாமும் நம்மை இணைத்துக்கொண்டு அதிகமாக சத்தமிட்டுக்கொண்டும் முட்டி மோதிக்கொண்டும் எதற்காகவோ ஓடிக்கொண்டிருக்கிறோம்; முடிவில் எவருக்கும் முடிவு என்பதே கிடைப்பதில்லை. எதையுமே நாம் சாதிப்பது இல்லை. முடிவாக போராட்டம் இல்லாத மனிதவாழ்க்கை என்பது இல்லை என்கிற அளவுக்கு நாம் கொண்டுவந்துவிட்டோம். ஒரு ப்ளஸ் டூ மாணவன் 1200 மதிப்பெண்களுக்கு 1150 மதிப்பெண்கள் வாங்கியாக வேண்டிய கட்டாயத்தை நாம் உருவாக்கிவிட்டோம்!

***

பாலாஜி ஷங்கர் பெங்களூரில் இருக்கும் IIS-இல் படித்தவர். ஆஸ்திரேலியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளில் வசித்துவிட்டு, வேலைசெய்து விட்டு பிறகு இந்தியா வந்து சென்னையில் சில காலம் வசித்துவிட்டு, பிறகு அந்த வேலையையும் விட்டுவிட்டு விவசாயத்தை கவனிக்க சென்றுவிட்டார். He got out of the system from which we are unable to get out; and probably will never get out!

ரெண்டு ஹெக்ட்டேர் நிலத்தை மட்டும் வாங்கிக்கொண்டு தனது விவசாயத்தை ஆரம்பித்து, இன்று தனது நிலத்திலிருந்து வரும் வருமானத்தில் ஆனந்தமாக வாழ்க்கை நடத்திக்கொண்டிருக்கிறார். No meetings. No deadlines. No clients. No nothing!

visit him here: http://earth.org.in

***

என் நண்பர் ராஜா நீண்ட காலமாக என்னிடம் இந்த “இயற்கைக்கு திரும்பதல்” என்கிற கோட்பாட்டை பற்றி நிறைய பேசிக்கொண்டிருந்தார். எனக்கு சமயத்தில் எரிச்சலாக இருக்கும். என்னய்யா இயற்கைக்கு திரும்புகிறீர்? சூரியன் மேலே படவில்லையா? உடல் உழைப்பு இல்லையா? காலையில எழுந்து ஜாக்கிங் போ. எக்ஸர்சைஸ் பண்ணு. சூரிய வெளிச்சத்தில நில்லு. இயற்கையோடு இருக்கனுமா? வருசத்துக்கு ரெண்டு முறை கேரளா போ. அவ்வளவு தான். இத விட்டுட்டு “இயற்கைக்கு போறேன்னுட்டு” இருக்கிற வேலையை விட்டுட்டு நான் மாடு மேய்க்கத்தான் போவேன்னா என்ன அர்த்தம்? விவசாயம் பண்ணுவேன்னு சொன்னா என்ன அர்த்தம்?

நம்மில் நிறைய நபர்களின் பெற்றோர்கள் நாம் கிராமத்திலே கிடந்து உழன்று அழிந்து விடக்கூடாது என்கிற காரணத்தினத்தை முன்னிறுத்தியே கிராமங்களை விட்டு வெளியேறினர். நாலு எழுத்து படிச்சா அவன் அவன் பொழப்ப பாத்துப்பான் என்கிற ஒன்றே அவர்களது கனவாக இருந்தது. அவர்களது கனவுகளை தகர்த்தெரிந்து விட்டு மீண்டும் அதே கிராமத்துக்கு செல்லத்தான் வேண்டுமா? என்கிற வாதத்தை நான் அவரின் முன் வைத்தேன்.

அதற்கு என் நண்பர் சொன்னார்: நீங்க இப்படி எல்லாரும் white collar jobsக்கு போனா யார் விவசாயம் செய்யுறது? சோறு எங்கே கிடைக்கும்? நான் சொன்னேன்: விஞ்ஞானம் வளர்ந்து கொண்டே தான் இருக்கிறது. எல்லாவற்றிர்கும் மாற்று இன்றில்லாவிட்டால் நாளை வரத்தான் போகிறது. அதே போல சோற்றுக்கு பஞ்சம் ஏற்படும் காலத்தில் நாம் “necessity is the mother of invention” என்கிற வாதத்தின் அடிப்படையில் சாப்பாட்டுக்கு மாற்றாக ஏதாவது கண்டுபிடித்தே தீருவோம். ஆங்கில science fiction படங்களில் வருவதைப் போல காலை எழுந்தவுடன் just ஒரு capsule மட்டும் போதும், நாள் முழுவதும் பசிக்கவே பசிக்காது! போதும்ல? இதுக்கு எதுக்கு விவசாயத்துக்கு போகணும்? சரிப்பா விவசாயத்துக்கு எல்லாரும் போறம்ன்னு வெச்சுக்குவோம்; இந்த கண்டுபிடிப்புகள் எல்லாம் யார் கண்டுபிடிக்கிறது?

எடுத்துக்காட்டாக நானும் பாலஜி ஷங்கரும் உரையாடிய Google Chatஐயும் அதற்கு உதவிய இன்ன பிற நெட்வொர்க் சமாச்சாரங்களையும் என் லேப்டாப்பையும் யார் கண்டுபிடிப்பது? மனிதகுளம் என்பது கடுமையான சீற்றம் கொண்ட ஒரு ஆற்றைப் போல. வழிநெடுகிலும் கிடக்கும் கற்களையும் மணலையும் உருட்டிக்கொண்டு அது சென்று கொண்டேயிருக்கும். we continue to evolve. நாம் ஆற்றோடு ஓடிக்கொண்டிருக்கிறோம். பாலாஜி ஆற்றின் திசையை திருப்பச் சொல்கிறார். பரிணாம வளர்ச்சி இல்லையேல் நாம் குட்டையாக தேங்கிவிடுவோம். அனைவரையும் விவசாயத்துக்கு திருப்ப வேண்டும்; simplify என்பது தாரக மந்திரமாக இருக்கும் பட்சத்தில் எல்லாரும் காந்தியை போல ஆடை உடுத்தாமலே இருப்போம். “இன்புற்றிருப்பதையன்றி வேறொன்றும் அறியேன் பராபரமே” என்று வாழ்ந்தால் விஞ்ஞானம் எப்படி வளரும்?

இப்படி சும்மா நானும் ராஜாவுமே பேசிட்டிருந்தா எப்படின்னுட்டு பாலாஜி ஷங்கருக்கு ஒரு ஓலை அனுப்பிச்சேன். அவரும் நான் ரெடி நீங்க ரெடியான்னு எனக்கு பதில் ஓலை போட்டார். அப்படி நாள் குறிச்சது தான் இந்த திங்கள் கிழமை இரவு 11:30 சிங்கப்பூர் நேரம். நானும் பாலாஜியும் பேசிய பேச்சுக்கள் தான் இந்த பதிவுக்கு வித்து.

***

பாலாஜி ஷங்கர் சொன்னார்: If you really look at it, நீங்கள் ஆற்றோடு ஓடவில்லை. நீங்கள் ஆற்றை எதிர்த்து நீச்சல் அடிக்கிறீர்கள். நான் தான் ஆற்றோடு ஓடுகிறேன். இந்த உலகத்தில் இருக்கும் அனைத்து ஜீவராசிகளும் இயற்கையுடனே ஒத்துவாழ்கிறது; மனிதன் மட்டுமே அதை மாற்ற முயற்சிக்கிறான். நான் மாற்ற முயற்சிக்கவில்லை. மேலும் அவருடைய நண்பர் சொன்னதாக சொன்னார்: “Now nobody makes easy chair! Life is no more easy!” நினைத்துப் பார்த்தால் எவ்வளவு உண்மை?

***

Lets imagine today I dont have to go to office, I dont have to send my children to school, I dont have to go to the market to buy things; அப்படீன்னு வெச்சுக்கோங்களே then I will become a tedious terror to the economy! என்றார் பாலாஜி. அப்படியென்றால் economy growth என்பதே இருக்காதே! அதற்கு அவர் சொன்னார்: GDP growth என்பதெல்லாம் சும்மா. எத்தனை விழுக்காடு மக்கள் வளர்ச்சியடைந்திருக்கிறார்கள்? இது corporationsஐ மட்டுமே வளர்ச்சியடையவைக்கும். நாம் rural economyஐ வளர்த்தால் ஒழிய பரவலாக வளர்ச்சி என்பது இருக்காது.

இருபதினாயிரம் பேருக்கு வேலை கொடுக்க இந்தியன் பேங்க் பரிட்சை வைக்கிறார்கள் அதை இருபது லட்சம் பேர் எழுதுகிறார்கள். அதுவும் ஒரு மிகப்பெரிய வேலையும் இல்லை. பத்தாயிரம் ரூபாய் தான் சம்பளம். சென்னையில் குடியிருக்க அவன் நாலாயிரம் ரூபாய் வாடகை கொடுக்கவேண்டும். மேலும் கரண்ட் பில் மருத்துவம் குழந்தைகள் படிப்பு போன்ற அத்தியாவிசய தேவைகள் போக அவனுக்கு என்ன மீதம் இருக்கும்?

***

சிங்கப்பூரில் வேலை செய்யும் நிறைய நபர்கள் குழந்தைகளின் படிப்பு செலவுகளை சமாளிக்க முடியாமல் இந்தியாவில் தங்களது பெற்றோர்களின் வீட்டில் தங்கவைத்து படிக்கவைக்கின்றனர் என்கிற பொழுது வேறு என்ன சொல்வது. அப்படி சேமிக்க முடியாத மனிதன் வேறு என்ன செய்வான் rat raceஇல் இன்னும் அதி வேகமாக ஓட ஆரம்பிப்பான். என் தாத்தா என் அப்பாவை பத்து வயசு வரை தோளில சுமந்து கொண்டு பள்ளிக்கூடத்துக்கு கூட்டி செல்வாராம். என் அப்பா என்னை ஏழாவது படிக்கும் வரை பள்ளிக்கூடத்துக்கு அழைத்துச்செல்வார். நான் என்ன செய்வேன்? என் தாத்தாவைப் போல நான் என் குழந்தைகளை தோளில் தூக்கிக் கொண்டு பள்ளிக்கூடத்துக்கு போகமுடியுமா? இவ்வாறெல்லாம் யோசித்தால்; சுத்த லூசாயிருப்பான் போல இருக்குன்னு நினைக்க வாய்ப்பிருக்கு. மேலும் இக்கால குழந்தைகளே அதை விரும்புவார்களா என்பது சந்தேகமே! மற்ற பசங்க கேலி செய்றாங்க என்று சொல்லிவிடுவார்கள்

***

Ecological Foot Print பற்றி தெரியுமா என்று கேட்டார்?
Ecological Foot Prints represent the land and water it takes to provide us with the things we use and to absorb our wastes.

எனக்கு தோராயமாக 7 ஹெக்ட்டேர் வந்தது. உங்களுக்கு எவ்வளவு தேவைப்படும் என்பதை நீங்களே பார்த்துக் கொள்ளுங்கள்.

***

upper class இந்தியர்களுக்கு ரெண்டு ஹெக்டேர் மூணு ஹெட்டேர் நிலம் தேவைப்படுமாம். நான் upper upper சுந்தரர் மாணிக்கவாசகர் இந்தியன் போலருக்கு; 7 ஹெக்டேர் தேவைப்படுது. அமெரிக்கர்களுக்கு பத்து ஹெக்டேர் தேவைப்படுமாம். நான் மேலே குறிப்பிட்ட அந்த வலைத்தளத்தின் கேள்விகளுக்கு பதிலளித்துக்கொண்டிருக்கையில், Mode Of Travel சம்பந்தபட்ட கேள்விகள் நிறைய கேட்கப்பட்டன. இதனால் மற்றும் packed foods and meat சாப்பிடுவதால் நிலம் அதிகமாக தேவைப்படுகிறதாம்! சிங்கப்பூரே கிட்டத்தட்ட Packed Food மாதிரித்தான்!

மேலும் பாலாஜி சொன்னது:
இப்ப இருக்கிற resources இப்ப இருக்கிற மக்கள் தொகைக்கே பத்தாது. அறுபது எழுபது விழுக்காட்டு மக்கள் Low ecological food printஇல் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். They dont travel much; they dont consume resources and they are not part of the central economy!

நாம் நிறைய electronic சாதனங்கள் பயன்படுத்துகிறோம். We employ lot of labour saving machinery, Like washing machine, mixi, grinder, fridge. Inspite of using these electronic devices for our house chores; we enjoy much less leisure than an average villager! Isnt this a paradox? வாழ்க்கையில குறிக்கோள் இல்லாத வெற்றிடம் ஆகிவிடுகிறோம்.

So when you see this its an unsustainable life style; no body is free enough; every body says we need more more!

உருபடியா வாழனும் அப்படீன்னா இந்த planetஅ காப்பாத்தனு அப்படீன்னா நம்ப தேவைகளை நாம குறைச்சுக்கனும் தேவைகள்னு சொல்றதக்காட்டிலும் ஆடம்பரங்களை குறைத்துக்கொள்ளவேணும். இத நான் கண்கூடா பாத்துட்டேன் நான் நிறைய சம்பளம் வாங்கிய போது சந்தோஷமா இல்ல ரொம்ப கம்மியா சம்பாதிக்கும் போது ரொம்ப ஆனந்தமா இருக்கேன். நான் ரொம்ப freeயா இருக்கேன். சம்பாதிக்கிறத இந்த கிராமத்திலையே invest செய்யறேன். Mutual Fundsஇல் invest செய்யவில்லை.
we are employing organic forming; அதனால நிறைய நபர்களை பணிக்கு அமர்த்தியிருக்கிறோம். அடுத்த வருஷம் மாடு வெச்சு உழனும்னு நினைச்சிருக்கோம்.

My plan is to cause minimal damage to the environment and still live a good life style. Like windmill வெச்சு motor ஓட்டறது.
If government wants it can implement it.

ஐம்பதாயிரம் கோடி ரூபாய்ல ஆரம்பக்கல்வி ஐம்பதாயிரம் கோடி ரூபாய்ல கடன் தள்ளுபடின்னு பண்றாங்க, இதுக்கு ஆயிரம் கோடி ரூபாய்ல windmill போட்டாங்கன்னாக்க current தேவையில்ல. இதெல்லாம் பண்ணாம nuclear energyன்னு நாடே கவுந்தாலும் பரவாயில்லன்னு அதத்தான் பண்ணுவேன்னு சொல்றாங்க.

நாற்பதாயிரம் கோடிரூபாய் இந்தியன் கவர்மெண்ட் spends for fertilizer subsidy!

நேத்துக்கூட பேப்பர்ல படிச்சேன் ஐந்தாயிரம் கோடி ரூபாய்ல ஏதோ தொழிற்கூடமோ ஏதோ திறக்கிறார்களாம், இது ஐம்பதாயிரம் வேலைகளை உருவாக்குமாம்?! அப்படீன்னா ஒரு வேலைக்கு பத்து லட்சம் ரூபாய் அரசு செலவழிக்கிறது. manufacturing sectorஇல் சராசரியாக ஒருவருக்கு வருடத்திற்கு ஒரு லட்சம் வரைதான் சம்பளம் கிடைக்கும்.

***

அடுத்த வருடத்தில் இருந்து தனது மகனுக்கு தானே பாடம் சொல்லிக்கொடுக்கப்போகிறாராம். பாடம் என்றால் சாயங்காலம் சும்மா ரெண்டு அரட்டு போட்டுட்டு என்னடா படிச்சிட்டியா? ஒழுங்கா மார்க் வாங்கி என் மானத்த காப்பாத்துவியா? ங்கற மாதிரி இல்ல. பள்ளிகூடத்துக்கே அனுப்பாமல் தானே பாடம் சொல்லிக்கொடுத்து பரிட்சை எழுத வைப்பது. சும்மா try பண்ணப்போறேன் என்றார். NIOS websiteக்கு கொஞ்சம் போய்ப்பாருங்கள்.

***

(அடுத்த பகுதியில் சந்திப்போம்)

நீல பத்மநாபன், ஞானகூத்தன், மதில்கள், முத்து, முராகமி, zen

ஒரு மகிழ்ச்சியான செய்தி: ஜுன் 21ஆம் தேதி எனக்கு பெண் குழந்தை பிறந்திருக்கிறது. ஸ்ரீநிதி என்று பெயரிட்டிருக்கிறோம்.

***

ஞானக்கூத்தன் கவிதைகள் என்கிற விருட்சம் வெளியிட்ட கவிதைத் தொகுப்பை படித்துக்கொண்டிருக்கிறேன் அவ்வப்போது. ஞானகூத்தன் 1968 -லிருந்து 1994 வரை எழுதிய கவிதைகளின் தொகுப்பு இந்த புத்தகம்.

என்னைக் கவர்ந்த கவிதைகள் சில:

அதனால் என்ன

பாடச் சொன்னால் வெட்கப்படுகிறார்கள்
பேசச் சொன்னால் கூச்சப்படுகிறார்கள்
ஆடச் சொன்னால் கோணுகிறார்கள்
நடிக்கச் சொன்னால் தயங்குகிறார்கள்
வரையச் சொன்னால் வராதென்கிறார்கள்
கவிதை வருமா என்றால் உடனே
எண்பது பக்க நோட்டுப் புத்தகம்
இரண்டை எடுத்து நீட்டுகிறார்கள்.

அதான?!

நாய்

காலம் கடந்துண்ணும் எதிர்மனைப் பாப்பான்
எச்சிற் களையைத் தெருவில் எறிந்தான்
ஆள் நடவாத தெருவிள் இரண்டு
நாய்கள் அதற்குத் தாக்கிக் கொண்டன
ஊர் துயில் குலைத்து நாய்கள் குரைக்கவும்
அயல்தெரு நாய்களும் ஆங்காங்கு குரைத்தன
நகர நாய்கள் குரைப்பது கருதிச்
சிற்றூர் நாய்களும் சேர்ந்து குரைத்தன
நஞ்சை புஞ்சை வயல்களைத் தாவிக்
கேட்கும் குரைச்சலின் குரைச்சலைக் கேட்டு
வேற்றூர் நாய்களும் குரைக்கத் தொடங்கின
சங்கிலித் தொடராய்க் குரைத்திடும் நாய்களில்
கடைசி நாயை மறித்துக்
காரணம் கேட்டால் என்னத்தைக் கூறும்?

பிரச்னை

திண்ணை இருட்டில் எவரோ கேட்டார்
தலையை எங்கே வைப்பதாம் என்று
எவனோ ஒருவன் சொன்னான்
களவு போகாமல் கையருகே வை.

இந்த கவிதை தான் முத்தாய்ப்பு:

உயர்திரு பாரதியார்

சிறுவயதில் நான் பார்த்த நடனம் ஒன்றில்
பாடினார் இளம் பெண்கள் இருவரேதோ
பாட்டுக்கு. எவரெழுதித் தந்தா ரந்தப்
பாட்டென்று நான் கேட்டேன் உம்மைச் சொன்னார்.

சிறுவயதில் நான் சென்ற பொதுக் கூட்டத்தில்
சூடுள்ள சிலவரிகள் ஒருவன் சொன்னான்
எவரெழுதித் தந்தவரி என்றேன். வேர்த்த
முகம்துடைத்துக் கொண்டபடி உம்மைச் சொன்னான்

மணியறியாப் பள்ளிகளில் தண்டவாளத்
துண்டொன்று மணியாகத் தொங்கல் போலக்
கவிஞரிலாத் தமிழகத்தில் எவரெல்லாமோ
கவிஞரெனத் தெரிந்தார்கள் உமக்கு முன்பு

அணைக்காத ஒலிபெருக்கி மூலம் கேட்கும்
கலைகின்ற கூட்டத்தின் சப்தம் போலப்
பிறகவிஞர் குரல் மயங்கிக் கேட்குமின்னும்
நீர் மறைந்தீர் உம் பேச்சை முடித்துக்கொண்டு.

மணியில்லாத பொழுது தண்டவாளத்துண்டுகள் மணிகளாக இருக்கின்றன. என்றாலும் ஒரு போது தண்டவாளத் துண்டு மணியாக முடியாது.

***

நீல.பத்மநாபன் அவர்கள் எழுதிய இலையுதிர் காலம் படித்து முடித்தேன். சுவராஸ்யம் இல்லை. சுவராஸ்யத்தைக் கூட விட்டுத்தள்ளுங்கள், நீல பத்மநாபன் அவர்களின் நேர்காணலை தீராநதியில் படித்தேன். 1968ல உறவுகள் என்கிற அழகான (நான் இன்னும் படிக்கவில்லை) நாவலை எழுதியவர். அன்றைக்கே விருது கொடுக்கப்பட்டிருக்க வேண்டியதாம். அப்ப நான் பிறக்கவேயில்ல! அடப்பாவிகளா. அவருக்கு எப்ப விருது கிடைத்திருக்கிறது பாருங்கள்.

வெளிநாட்டில் எல்லாம் விருது பெற்ற பின்னர், அந்த எழுத்தாளரின் புத்தகங்கள் அதிகமாக விற்க ஆரம்பிக்கும். இங்கு எப்படியோ? ஆனால் இப்பாவாவது கொடுத்தார்களே. சந்தோஷம். விருது செய்தியையும் நேர்காணலையும் படித்த பின்னர்தான் நான் நூலகத்தில் தேடிப்பிடித்து இலையுதிர் காலத்தை எடுத்து படித்தேன் என்பதை இங்கு சொல்லியாகவேண்டும். அவர் 2005 எழுதிய புத்தகம் இலையுதிர் காலம். இதை முன்வைத்துத்தான் சாகித்திய அகடெமி விருது அவருக்கு வழங்கப்பட்டிருக்கிறது. செய்யாமல் விட்ட ஒன்றை காலம் போன கடைசியில் செய்து சந்தோஷப்பட்டுக்கொள்கிறதோ அகடெமி? தெரியவில்லை. ஆனால் இலையுதிர்காலம் அகடெமி விருதுக்கு ஏற்றதா என்பது சந்தேகமே.

பேசாமல் சாகித்திய அகடெமி விருதை, வாழ்நாள் சாதனை விருது போல அறிவித்துவிடலாமே? நாங்கள் சாகித்திய அகடெமி விருது வாங்கிய ஒரு புத்தகத்தை தேடிகண்டுபிடித்து, நன்றாக இருக்குமென்று நினைத்து படித்து ஏமாற்றமடைய மாட்டோமே!

அவருடைய “தேரோடும் வீதி” அடுத்து படிக்க எடுத்து வைத்திருக்கிறேன்.

***

வைக்கம் முஹம்மது பஷீர் எழுதிய மதில்கள் என்கிற நாவலை ஏர்போர்ட்டில் வாங்கினேன். இன்னொன்று சொல்ல வேண்டும், சாருநிவேதிதா எழுதிய ராசலீலா நாவலையும் பார்த்தேன். 750 ரூபாயாம். வேலில போற ஓணான 750 ரூபாய் கொடுத்தா வாங்குவார்கள்? பேசாமல் வைத்துவிட்டேன். அதை வாங்கி படித்துவிட்டு, மூளை குழம்பி மேலும் ஒரு புல் தரையில் ரத்தம் போன்ற ஒரு கதையை எழுதினேன் என்றால், என்னுடைய ப்ளாக்குக்கு வரும் விசிட்டர்கள் ரூம் போட்டு என்னை அடித்தாலும் அடிக்க வாய்ப்பிருக்கிறது. ஆனால் நான் எழுதிய சிறுகதைகளிலே எனக்கு மிகவும் பிடித்தது புல் தரையில் ரத்தம் கதை தான். அந்த கதை ஒரு உண்மை சம்பவமும் கூட. The strait times-இல் செய்தியாக அதைப் படித்தேன்.

“Arrested for killing his father in 1958, Mr James was ruled mentally ill by a judge, sent to an asylum for the criminally insane – and then forgotten.

Decades after his doctors pronounced him cured, he remained trapped in a criminal justice nightmare. The hospital could release him only to the prisons authority. The prisons authority could pick him up only under a court order. The courts never called for him because they could not find his file.

When he was finally released, he became a hero in Sri Lanka, and his ordeal a source of embarrassment as it exposed the bloated, inefficient bureaucracy. ”

அதை அப்படியே ஒரு கதையாக எழுதலாம் என்று நினைத்தேன், சாருநிவேதிதாவின் ஜீரோ டிகிரி அப்பொழுதுதான் படித்து முடித்திருந்த நிலையில், என்னால் அப்படித்தான் எழுத முடிந்தது. மேலும் கதையின் நிஜ ஹீரோவான Mr.James ஒரு மனநிலை தவறியவர் என்பதாலும் மனப்பிறள்வு நிலையிலே எழுதலாம் என்று முடிவு செய்தேன்.

***

மதில்கள் நாவல் இல்லை. அது ஒரு குறு நாவல் அல்லது சிறுகதையை போன்ற ஒன்றே. என்னைக் கேட்டால் சற்றே பெரிய சிறுகதை என்று வைத்துக்கொள்ளலாம். “வேணுங்கறது வேணுங்கறபோது கிடைக்காது” என்பது தான் கதையின் கரு.

இதையே அழகாக:
“ஒத்திகை செய்து நடத்தப்படும் நாடகமல்ல வாழ்வு. நம் திட்டங்களையும் தீர்மானங்களையும் சிதறடித்து எதிர்பாரா தருணங்களில் ஓர் விபத்து போல மோதி நம்மை வீழ்த்தி பெப்பே காட்டுவதாகவே இருக்கிறது”
என்கிறார் சந்தியா நடராஜன். (மதில்கள்: பதிப்புரை)

வைக்கம் முஹம்மது பஷிர் எழுதிய கதைகள் எல்லாம் அவரது சொந்த அனுபவங்கள் என்று சொல்லுவார்கள். வைக்கம் முஹம்மது பஷீர் சிறை சென்றிருக்கிறாரா என்பது தெரியாது.

“ஆனால் இப்போது இந்த ஜெயில் வாழ்க்கை முழுக்க முழுக்க இலக்கியத்துக்காக.. நினைத்துப் பார்த்த போது எனக்கே பெருமிதமாக இருந்தது.” (ப:16)

இந்த கதையை சுரா மஞ்சரியில் மொழிபெயர்த்திருந்திருக்கிறார்.

ஒரு இலக்கியவாதி சிறை செல்கிறார். சிறையில் சில தலைவர்களும் உடன் இருக்கிறார்கள். சிறையின் மதில்கள் தான் “மதில்கள்”. சிறையில் அந்த இலக்கியவாதி ஆனந்தமாக பொழுதைக் கழிக்கிறார். கொஞ்ச நாட்கள் கழித்து அனைவரும் விடுதலை செய்யப்படுகிறார்கள். இவரைத் தவிர. தலைவர்கள் எல்லாரும் வெளியே சென்ற பின்னர், இந்த இலக்கியவாதி மட்டும் தனியே பொழுதைக் கழிக்கிறார். அப்பொழுதுதான் பெண்கள் பகுதியில் இருக்கும் ஒரு பெண்ணுடன் பரிச்சயம் ஏற்படுகிறது. இருவரும் பேசிக்கொள்கிறார்கள். பொருட்கள் பறிமாறிக்கொள்கிறார்கள். ஆனால் ஒருவரை ஒருவர் பார்த்தது கிடையாது. இருவருக்கும் அன்பு பெருக்கெடுக்கிறது. காதலாக மலர்கிறது. இருவரும் பார்த்துக்கொள்வதற்கு சந்தர்ப்பம் கிடைக்கிறது. நாளை பார்த்துக்கொள்ளலாம் என்று இருவரும் தங்களது அடையாளங்களை சொல்லிவைத்துக்கொள்கிறார்கள். அந்த இலக்கியவாதி நாளை அவளை பார்த்து விடலாம் என்று காத்துக்கொண்டிருக்கும் பொழுது, விடுதலை செய்யப்படுகிறார்.

“வை ஷ¤ட் ஐ பி ·ப்ரீ… ஹ¥ வான்ட்ஸ் ·ப்ரீடம்?” என்கிறார் அவர்.

அது தான் வாழ்க்கை! அழகான கதை!

***

ஹருக்கி முராக்கமியின் “The wind-up bird chronicle” படித்துக்கொண்டிருக்கிறேன். ரொம்ப காலமாக படித்துக்கொண்டிருக்கிறேன், கொஞ்சம் கொஞ்சமாக. On and Off. 600 பக்க நாவல் இது. Shantaram 900 பக்க நாவல். ஆனால் Shantaramஐ படித்தது போல தொடர்ச்சியாக Mr.Wind-up birdஐ படிக்க முடியாது. இதுவும் மனப்பிறள்வு சம்பந்தப்பட்ட நாவல் தான்.

இந்த மாதிரியான நாவல்களை தொடர்ச்சியாக படிப்பதனால் சில disadvantages இருக்கின்றன.

  1. நீங்கள் washing machineஇல் துணி போட்டிருக்கலாம். கொஞ்ச நேரத்தில் rinse செய்யும் போது அது sound கொடுக்கலாம். நீங்கள் உடனே washing-machine problem என்று நினைத்திவிடுவீர்கள். நினைத்தது மட்டுமல்லாமல், உங்கள் house ownerக்கும் சொல்லிவிடுவீர்கள். ஏன் தமிழ்மணத்துக்கு கூட சொல்லிவிட வாய்ப்பிருக்கிறது. அப்புறம் அந்த weird feeling வடிந்த பிறகு, தற்செயலாக washing machineஐ பார்க்கும் பொழுதுதான் தெரியும்; “You stupid, there is no problem with the machine, really, the problem is with your stupid head! The water outlet pipe of the washing machine was not released!” huh?!
  2. நீங்கள் நேத்து சாப்பிட பர்கரின் cheese TV remote controlஇல் விழுந்திருந்தால், TV remote controlஐ எடுத்துக்கொண்டு போய் தண்ணீரிலே கழுவி எடுப்பீர்கள். ஏதோ சாப்பிட்டு முடித்த தட்டை கழுவி வைப்பது போல.

An excerpt from the book:

Malta Kano put her elbows on the table and brought her palms together before her
face. “Neither,” she said. “There are no sides in this case. They simply do not exist. This
is not the kind of thing that has a top and bottom, a right and left, a front and back, Mr.
Okada.”
“Sounds like Zen,” I said. “Interesting enough in itself as a system of thought, but not
much good for explaining anything.”

So already weird heads, stay out of these books!

***

நீல பத்மநாபன், ஞானகூத்தன், மதில்கள், முத்து, முராகமி, zen

ஒரு மகிழ்ச்சியான செய்தி: ஜுன் 21ஆம் தேதி எனக்கு பெண் குழந்தை பிறந்திருக்கிறது. ஸ்ரீநிதி என்று பெயரிட்டிருக்கிறோம்.

***

ஞானக்கூத்தன் கவிதைகள் என்கிற விருட்சம் வெளியிட்ட கவிதைத் தொகுப்பை படித்துக்கொண்டிருக்கிறேன் அவ்வப்போது. ஞானகூத்தன் 1968 -லிருந்து 1994 வரை எழுதிய கவிதைகளின் தொகுப்பு இந்த புத்தகம்.

என்னைக் கவர்ந்த கவிதைகள் சில:

அதனால் என்ன

பாடச் சொன்னால் வெட்கப்படுகிறார்கள்
பேசச் சொன்னால் கூச்சப்படுகிறார்கள்
ஆடச் சொன்னால் கோணுகிறார்கள்
நடிக்கச் சொன்னால் தயங்குகிறார்கள்
வரையச் சொன்னால் வராதென்கிறார்கள்
கவிதை வருமா என்றால் உடனே
எண்பது பக்க நோட்டுப் புத்தகம்
இரண்டை எடுத்து நீட்டுகிறார்கள்.

அதான?!

நாய்

காலம் கடந்துண்ணும் எதிர்மனைப் பாப்பான்
எச்சிற் களையைத் தெருவில் எறிந்தான்
ஆள் நடவாத தெருவிள் இரண்டு
நாய்கள் அதற்குத் தாக்கிக் கொண்டன
ஊர் துயில் குலைத்து நாய்கள் குரைக்கவும்
அயல்தெரு நாய்களும் ஆங்காங்கு குரைத்தன
நகர நாய்கள் குரைப்பது கருதிச்
சிற்றூர் நாய்களும் சேர்ந்து குரைத்தன
நஞ்சை புஞ்சை வயல்களைத் தாவிக்
கேட்கும் குரைச்சலின் குரைச்சலைக் கேட்டு
வேற்றூர் நாய்களும் குரைக்கத் தொடங்கின
சங்கிலித் தொடராய்க் குரைத்திடும் நாய்களில்
கடைசி நாயை மறித்துக்
காரணம் கேட்டால் என்னத்தைக் கூறும்?

பிரச்னை

திண்ணை இருட்டில் எவரோ கேட்டார்
தலையை எங்கே வைப்பதாம் என்று
எவனோ ஒருவன் சொன்னான்
களவு போகாமல் கையருகே வை.

இந்த கவிதை தான் முத்தாய்ப்பு:

உயர்திரு பாரதியார்

சிறுவயதில் நான் பார்த்த நடனம் ஒன்றில்
பாடினார் இளம் பெண்கள் இருவரேதோ
பாட்டுக்கு. எவரெழுதித் தந்தா ரந்தப்
பாட்டென்று நான் கேட்டேன் உம்மைச் சொன்னார்.

சிறுவயதில் நான் சென்ற பொதுக் கூட்டத்தில்
சூடுள்ள சிலவரிகள் ஒருவன் சொன்னான்
எவரெழுதித் தந்தவரி என்றேன். வேர்த்த
முகம்துடைத்துக் கொண்டபடி உம்மைச் சொன்னான்

மணியறியாப் பள்ளிகளில் தண்டவாளத்
துண்டொன்று மணியாகத் தொங்கல் போலக்
கவிஞரிலாத் தமிழகத்தில் எவரெல்லாமோ
கவிஞரெனத் தெரிந்தார்கள் உமக்கு முன்பு

அணைக்காத ஒலிபெருக்கி மூலம் கேட்கும்
கலைகின்ற கூட்டத்தின் சப்தம் போலப்
பிறகவிஞர் குரல் மயங்கிக் கேட்குமின்னும்
நீர் மறைந்தீர் உம் பேச்சை முடித்துக்கொண்டு.

மணியில்லாத பொழுது தண்டவாளத்துண்டுகள் மணிகளாக இருக்கின்றன. என்றாலும் ஒரு போது தண்டவாளத் துண்டு மணியாக முடியாது.

***

நீல.பத்மநாபன் அவர்கள் எழுதிய இலையுதிர் காலம் படித்து முடித்தேன். சுவராஸ்யம் இல்லை. சுவராஸ்யத்தைக் கூட விட்டுத்தள்ளுங்கள், நீல பத்மநாபன் அவர்களின் நேர்காணலை தீராநதியில் படித்தேன். 1968ல உறவுகள் என்கிற அழகான (நான் இன்னும் படிக்கவில்லை) நாவலை எழுதியவர். அன்றைக்கே விருது கொடுக்கப்பட்டிருக்க வேண்டியதாம். அப்ப நான் பிறக்கவேயில்ல! அடப்பாவிகளா. அவருக்கு எப்ப விருது கிடைத்திருக்கிறது பாருங்கள்.

வெளிநாட்டில் எல்லாம் விருது பெற்ற பின்னர், அந்த எழுத்தாளரின் புத்தகங்கள் அதிகமாக விற்க ஆரம்பிக்கும். இங்கு எப்படியோ? ஆனால் இப்பாவாவது கொடுத்தார்களே. சந்தோஷம். விருது செய்தியையும் நேர்காணலையும் படித்த பின்னர்தான் நான் நூலகத்தில் தேடிப்பிடித்து இலையுதிர் காலத்தை எடுத்து படித்தேன் என்பதை இங்கு சொல்லியாகவேண்டும். அவர் 2005 எழுதிய புத்தகம் இலையுதிர் காலம். இதை முன்வைத்துத்தான் சாகித்திய அகடெமி விருது அவருக்கு வழங்கப்பட்டிருக்கிறது. செய்யாமல் விட்ட ஒன்றை காலம் போன கடைசியில் செய்து சந்தோஷப்பட்டுக்கொள்கிறதோ அகடெமி? தெரியவில்லை. ஆனால் இலையுதிர்காலம் அகடெமி விருதுக்கு ஏற்றதா என்பது சந்தேகமே.

பேசாமல் சாகித்திய அகடெமி விருதை, வாழ்நாள் சாதனை விருது போல அறிவித்துவிடலாமே? நாங்கள் சாகித்திய அகடெமி விருது வாங்கிய ஒரு புத்தகத்தை தேடிகண்டுபிடித்து, நன்றாக இருக்குமென்று நினைத்து படித்து ஏமாற்றமடைய மாட்டோமே!

அவருடைய “தேரோடும் வீதி” அடுத்து படிக்க எடுத்து வைத்திருக்கிறேன்.

***

வைக்கம் முஹம்மது பஷீர் எழுதிய மதில்கள் என்கிற நாவலை ஏர்போர்ட்டில் வாங்கினேன். இன்னொன்று சொல்ல வேண்டும், சாருநிவேதிதா எழுதிய ராசலீலா நாவலையும் பார்த்தேன். 750 ரூபாயாம். வேலில போற ஓணான 750 ரூபாய் கொடுத்தா வாங்குவார்கள்? பேசாமல் வைத்துவிட்டேன். அதை வாங்கி படித்துவிட்டு, மூளை குழம்பி மேலும் ஒரு புல் தரையில் ரத்தம் போன்ற ஒரு கதையை எழுதினேன் என்றால், என்னுடைய ப்ளாக்குக்கு வரும் விசிட்டர்கள் ரூம் போட்டு என்னை அடித்தாலும் அடிக்க வாய்ப்பிருக்கிறது. ஆனால் நான் எழுதிய சிறுகதைகளிலே எனக்கு மிகவும் பிடித்தது புல் தரையில் ரத்தம் கதை தான். அந்த கதை ஒரு உண்மை சம்பவமும் கூட. The strait times-இல் செய்தியாக அதைப் படித்தேன்.

“Arrested for killing his father in 1958, Mr James was ruled mentally ill by a judge, sent to an asylum for the criminally insane – and then forgotten.

Decades after his doctors pronounced him cured, he remained trapped in a criminal justice nightmare. The hospital could release him only to the prisons authority. The prisons authority could pick him up only under a court order. The courts never called for him because they could not find his file.

When he was finally released, he became a hero in Sri Lanka, and his ordeal a source of embarrassment as it exposed the bloated, inefficient bureaucracy. ”

அதை அப்படியே ஒரு கதையாக எழுதலாம் என்று நினைத்தேன், சாருநிவேதிதாவின் ஜீரோ டிகிரி அப்பொழுதுதான் படித்து முடித்திருந்த நிலையில், என்னால் அப்படித்தான் எழுத முடிந்தது. மேலும் கதையின் நிஜ ஹீரோவான Mr.James ஒரு மனநிலை தவறியவர் என்பதாலும் மனப்பிறள்வு நிலையிலே எழுதலாம் என்று முடிவு செய்தேன்.

***

மதில்கள் நாவல் இல்லை. அது ஒரு குறு நாவல் அல்லது சிறுகதையை போன்ற ஒன்றே. என்னைக் கேட்டால் சற்றே பெரிய சிறுகதை என்று வைத்துக்கொள்ளலாம். “வேணுங்கறது வேணுங்கறபோது கிடைக்காது” என்பது தான் கதையின் கரு.

இதையே அழகாக:
“ஒத்திகை செய்து நடத்தப்படும் நாடகமல்ல வாழ்வு. நம் திட்டங்களையும் தீர்மானங்களையும் சிதறடித்து எதிர்பாரா தருணங்களில் ஓர் விபத்து போல மோதி நம்மை வீழ்த்தி பெப்பே காட்டுவதாகவே இருக்கிறது”
என்கிறார் சந்தியா நடராஜன். (மதில்கள்: பதிப்புரை)

வைக்கம் முஹம்மது பஷிர் எழுதிய கதைகள் எல்லாம் அவரது சொந்த அனுபவங்கள் என்று சொல்லுவார்கள். வைக்கம் முஹம்மது பஷீர் சிறை சென்றிருக்கிறாரா என்பது தெரியாது.

“ஆனால் இப்போது இந்த ஜெயில் வாழ்க்கை முழுக்க முழுக்க இலக்கியத்துக்காக.. நினைத்துப் பார்த்த போது எனக்கே பெருமிதமாக இருந்தது.” (ப:16)

இந்த கதையை சுரா மஞ்சரியில் மொழிபெயர்த்திருந்திருக்கிறார்.

ஒரு இலக்கியவாதி சிறை செல்கிறார். சிறையில் சில தலைவர்களும் உடன் இருக்கிறார்கள். சிறையின் மதில்கள் தான் “மதில்கள்”. சிறையில் அந்த இலக்கியவாதி ஆனந்தமாக பொழுதைக் கழிக்கிறார். கொஞ்ச நாட்கள் கழித்து அனைவரும் விடுதலை செய்யப்படுகிறார்கள். இவரைத் தவிர. தலைவர்கள் எல்லாரும் வெளியே சென்ற பின்னர், இந்த இலக்கியவாதி மட்டும் தனியே பொழுதைக் கழிக்கிறார். அப்பொழுதுதான் பெண்கள் பகுதியில் இருக்கும் ஒரு பெண்ணுடன் பரிச்சயம் ஏற்படுகிறது. இருவரும் பேசிக்கொள்கிறார்கள். பொருட்கள் பறிமாறிக்கொள்கிறார்கள். ஆனால் ஒருவரை ஒருவர் பார்த்தது கிடையாது. இருவருக்கும் அன்பு பெருக்கெடுக்கிறது. காதலாக மலர்கிறது. இருவரும் பார்த்துக்கொள்வதற்கு சந்தர்ப்பம் கிடைக்கிறது. நாளை பார்த்துக்கொள்ளலாம் என்று இருவரும் தங்களது அடையாளங்களை சொல்லிவைத்துக்கொள்கிறார்கள். அந்த இலக்கியவாதி நாளை அவளை பார்த்து விடலாம் என்று காத்துக்கொண்டிருக்கும் பொழுது, விடுதலை செய்யப்படுகிறார்.

“வை ஷ¤ட் ஐ பி ·ப்ரீ… ஹ¥ வான்ட்ஸ் ·ப்ரீடம்?” என்கிறார் அவர்.

அது தான் வாழ்க்கை! அழகான கதை!

***

ஹருக்கி முராக்கமியின் “The wind-up bird chronicle” படித்துக்கொண்டிருக்கிறேன். ரொம்ப காலமாக படித்துக்கொண்டிருக்கிறேன், கொஞ்சம் கொஞ்சமாக. On and Off. 600 பக்க நாவல் இது. Shantaram 900 பக்க நாவல். ஆனால் Shantaramஐ படித்தது போல தொடர்ச்சியாக Mr.Wind-up birdஐ படிக்க முடியாது. இதுவும் மனப்பிறள்வு சம்பந்தப்பட்ட நாவல் தான்.

இந்த மாதிரியான நாவல்களை தொடர்ச்சியாக படிப்பதனால் சில disadvantages இருக்கின்றன.

  1. நீங்கள் washing machineஇல் துணி போட்டிருக்கலாம். கொஞ்ச நேரத்தில் rinse செய்யும் போது அது sound கொடுக்கலாம். நீங்கள் உடனே washing-machine problem என்று நினைத்திவிடுவீர்கள். நினைத்தது மட்டுமல்லாமல், உங்கள் house ownerக்கும் சொல்லிவிடுவீர்கள். ஏன் தமிழ்மணத்துக்கு கூட சொல்லிவிட வாய்ப்பிருக்கிறது. அப்புறம் அந்த weird feeling வடிந்த பிறகு, தற்செயலாக washing machineஐ பார்க்கும் பொழுதுதான் தெரியும்; “You stupid, there is no problem with the machine, really, ther problem is with your stupid head! The water outlet pipe of the washing machine was not released!” huh?!
  2. நீங்கள் நேத்து சாப்பிட பர்கரின் cheese TV remote controlஇல் விழுந்திருந்தால், TV remote controlஐ எடுத்துக்கொண்டு போய் தண்ணீரிலே கழுவி எடுப்பீர்கள். ஏதோ சாப்பிட்டு முடித்த தட்டை கழுவி வைப்பது போல.

An excerpt from the book:

Malta Kano put her elbows on the table and brought her palms together before her
face. “Neither,” she said. “There are no sides in this case. They simply do not exist. This
is not the kind of thing that has a top and bottom, a right and left, a front and back, Mr.
Okada.”
“Sounds like Zen,” I said. “Interesting enough in itself as a system of thought, but not
much good for explaining anything.”

So already weird heads, stay out of these books!

***

தமிழ்மணம் ஸ்டார் : தமிழ்மணத்துக்கு கொடுத்த CV!

என் நண்பர் ராஜாவிடம் (சாஹ்ரிதயன். spelling தெரியல ராஜா! தப்பா இருந்தா மன்னிச்சுக்கோங்க!) என்னைப்பற்றி எழுதித்தாருங்கள் என்று கேட்ட பொழுது கொஞ்சமும் சிரிக்காமல்; என்னைப்பற்றி எழுதிக்கொடுத்த அந்த உயர்ந்த உள்ளத்துக்கு நன்றிகள் பல!

“தேடுத‌ல் உடைய‌ வ‌ள‌ரும் எழுத்தாள‌ர் முத்து, க‌ணிப்பொறி துறையில் ப‌ணியாற்றிக் கொண்டு ப்ளாக் எழுதுத‌ல், சிறுக‌தை, குறு நாவ‌ல், க‌ட்டுரை என‌ த‌ன‌து த‌ள‌த்தை விரிவாக்கி வ‌ருகிறார். ஆங்கில‌ ம‌ற்றும் த‌மிழ் எழுத‌ல்க‌ளை (இல‌க்கிய‌ம்?!) விரும்பி ஸ்வாசித்து சிங்கையில் வாழ்ந்து கொண்டு இருக்கிறார். குடும்ப‌ம், ச‌மூக‌ம் என‌வும் அவ‌ரது ப‌ங்க‌ளிப்பு ப‌ர‌வுகிற‌து. ச‌மீப‌த்தில் தந்தையாகிருக்கிறார். ”
– Sahridayan

மேலும் இந்த ரணகளமெல்லாம் எங்கிருந்து ஆரம்பிச்சதுன்னு (History of the incident) பாக்கறதுக்கு இந்த பதிவைப் படிங்க!

Biodata!

பெயர்: முத்து MSV
ஊர்: திருப்பரங்குன்றம், மதுரை
தற்போது வசிப்பது: இது என்ன ஊர்; சிங்கப்பூர்!

படிப்பு: BE, MEPCO (பாஸ்!)
முந்தைய தொழில்: தட்டு பொட்டிதல் (ஹை! கண்டுபிடிங்க பாக்கலாம்!)
சமீபத்திய தொழில்: அதேதாம்ப்பா! கூட அப்பா வேலையும்!

பிடித்தது: வாசிப்பது, தூங்குவது, மேலும் தூங்குவது. மேலும் மேலும் தூங்குவது!
பிடிக்காதது: என் கலீக்ஸ¤ம் படிக்கறாங்க, சொல்ல முடியாது!

நீண்டகால எரிச்சல்: சரியாக ஆபீஸ் டயமுக்கு வருகிறவர்கள்!
சமீபத்திய எரிச்சல்: வீட்ல washing machine வேலை செய்யாதது!

நீண்டகால சாதனை: சிறுகதைகள் எழுதுவது (தூங்கி எழுந்து கண்ட கனவெல்லாம் எழுதறது சிறுகதையாய்யா! கொஞ்சம் புரியுற மாதிரி எழுதுய்யா!)
சமீபத்திய சாதனை: எஸ். ராமகிருஷ்ணன் அவர்களிடமிருந்து பாராட்டு (இத ஒன்ன சொல்லிடறான்; எங்க போனாலும்!), தமிழ்மணத்தின் அழைப்பு! (இது வேறையா?!)

பிடித்த எழுத்தாளர்: எஸ். ராமகிருஷ்ணன் (ஐஸ்டா மச்சான்!)
பிடித்த பதிவர்: சுஜாதா, ஜெயமோகன் (சரிகட்டியாச்சு!)
படித்ததில் மிகவும் பிடித்த பதிவு: நிறைய இருக்கு! Like வெட்டிப்பயலின் மணமகள் கையேடு! ஆனா இப்பவும் நினைச்ச உடனே சிரிக்கக்கூடிய பதிவு! ப்ராகாஷ்-இன் (என் நைனாவும் சாருநிவேதிதாவும்)

நீண்டகால விருப்பம்: காந்தம் கதையை எழுதி முடிப்பது. ஏதேனும் வார புத்தகத்துக்கு தொடராக கொடுப்பது! (தெரிஞ்சவங்க சொல்லுங்கப்பா!)
சமீபத்திய விருப்பம்: ஒரு புது கதை எழுதுவது. (ஐயையோ!) அதை publish செய்வது.

சமீபத்திய சர்ப்ரைஸ்: சாலமன் பாப்பையா அவர்களை விமானத்தில் சந்தித்தது! (போட்டோ எல்லாம் எடுக்கலைப்பா!)

நீண்டகால சர்ப்ரைஸ்: தமிழ் பதிவுலக நண்பர்கள்! (எப்படி இவ்ளோ fast-ஆ எல்லா விசயத்தையும் எழுதறாங்க! இன்று தமிழ்நாட்டு பாடப்புத்தகங்கள் வலையேற்றப்பட்டதை நான் அறிந்து கொண்டபொழுது, மா.சிவக்குமார் அவர்களது பதிவில் சர்வேசன் துணையோடு ஒரு ரணகளமே நடந்துவிட்டிருந்தது! Sema fast macchiஸ்!)

என்னை நட்சத்திரமாக தேர்ந்தெடுத்த தமிழ்மணத்துக்கு நன்றி!