வாக்குமூலம்

(சற்றே பெரிய சிறுகதை)

1
நான் = பிரபு

என்னால் நம்பவே முடியவில்லை. நித்யாவா இப்படி?
‘டேய் உண்மையாகத்தான் சொல்றியா?’ நான் மதனிடம் கேட்டேன். உடன் முரளியின் சகோதரன் கார்த்திக் இருந்தான். நான், முரளி, மதன், கணேஷ், நித்யா, சுபா, திருவேங்கடம் அனைவரும் எம்.சி.யே. கடைசி வருட நண்பர்கள்.
‘நான் என்ன பொய்யா சொல்லப் போறேன். ரொம்ப நாள் கழிச்சு நேத்து தான் தண்ணியடிக்கும் போது கணேஷ் உளரினான்’
நான் நம்ப முடியாமல், முரளியின் சகோதரன் கார்த்திக்கைப் பார்த்தேன். கார்த்திக் தலை கவிழ்ந்தான்.
‘கணேஷ் வீட்டு போன் தான் இதுக்கு மெஸஞ்சர்’ – மதன்
கார்த்திக் இப்பொழுது மதனை முறைத்தான்.
கையில் வைத்திருந்த பீரை இன்னொரு மடக் குடித்தான்.
மதன் – ‘என்னை ஏன்டா முறைக்கிற? முரளி எனக்கு நண்பன் மாதிரி பிரபுவும் எனக்கு நண்பன் தான். எத்தனை நாள் மறைக்கிறது? பல நாள் திருடன் ஒரு நாள் அகப்படுவான்ல?’ என்று கூறி சிரித்தான்.
‘டேய்..உன் பழமொழியெல்லாம் இருக்கட்டும், சத்தியமா சொல் நீ சொல்றதெல்லாம் உண்மையா?’ நான்
‘மாப்ள. இந்த பீர் பாட்டில் மேல சத்தியமா சொல்றேன்! நித்யா, முரளிய லவ் பண்றா! அவன் கிட்ட ப்ரோபோசும்(propose) பண்ணிட்டா!’
என்னால் நம்ப முடியவில்லை.
மதன் – ‘ஏண்டா! நீயும் நித்யாவும், இணை..பிரியா நண்பர்களாச்சே, உன்கிட்ட அவ இத சொல்லலியா? என்னதான் இருந்தாலும் நீ பாய் பிரண்டு தானே, கேர்ள் பிரண்டா இருந்தா சொல்லியிருப்பா!’ என்று ஏதோ ஜோக் சொன்னவன் போல விழுந்து விழுந்து சிரித்தான்.
‘நித்யா ஏன் இப்படி செய்தாள்! என்னிடம் சொல்லியிருக்கலாமில்ல?’

**

2
நான் = திருவேங்கடம்

நான் திருவேங்கடம். நான், சுபா, நித்யா,மதன், கணேஷ், முரளி அனைவரும் ஒரே கிளாஸ். எம்.சி.யே. மதுரை காமராஜ் மாலை நேர கல்லூரி. ம்..ம்.. ஒருத்தனை விட்டுட்டேன்னு நினைக்கிறேன். அவன் தான்..அலட்டல் கேசு…பிரபு. மெட்ராஸ்லேருந்து மதுரைக்கு படிக்க வந்திருக்கான். படிக்கவா வந்திருக்கான்? ம்..ம்..அவனுக்கு நிறைய பெண்கள் சினேகிதம். அதனாலேயே அவனுக்கு திமிர் ஜாஸ்தி.
நான் தான் சென்டர் ஆப் அட்ராக்ஷன், இன்னைக்கு.
‘டேய், குழந்தை..சொல்லுடா..பிரபு டைரியில இருந்து எந்த பொண்ணு போன் நம்பரை எடுத்த?’ – கணேஷ்.
குழந்தைன்னு என்னைத்தான் கூப்பிடுறான், இந்த சோடாபுட்டி கணேஷ். ஒன்னும் இல்லீங்க, அதென்ன பிரபு பேசினாத்தேன் பொண்ணுங்க எல்லாம் பேசுமா? நான் பேசுனா பேசாதான்னு பிரபு டைரியில இருந்து எனக்கு பிடிச்ச பொண்ணு போன் நம்பரை எடுத்துட்டேன். அத இவிங்க எப்பிடியோ மோப்பம் பிடிச்சிட்டாய்ங்க. மாட்டிக்கிட்டேன். சும்மா விடுவாய்ங்களா? ஆனாலும் நானாவது சொல்றதாவது? ஹ..ஹே..கம்முன்னு நல்லா தவளைய முழுங்கின பாம்பு மாதிரியிருந்தேன்.
‘டேய்..டேய்.. அது மஞ்சு போன் நம்பர் தானே?’ – மதன், ‘நான் தான் கிளாஸ்லேயே பார்த்திருக்கேனே, உன்னோட ஒன்றரைக் கண்ணில அரைக் கண்ண உருட்டி அவளை பாப்பியே? ஆமா குழந்தை..எனக்கு ஒரு சந்தேகம்..அவளோட பெரிய உடம்பு என் அரைக் கண்ணில பத்துதா?’ என்று கேட்டுவிட்டு மாயா பஜார் ரங்காராவ் மாதிரி சிரித்துவைத்தான்.
நான் சிரிக்கல. ம்..ம்…சிரிப்பனா?
‘ப்ளீஸ்.. டா மாமு. சொல்லிடு. இத்தனை பேர் கேக்கரோமில்ல. உன்னோட ஆளு யாருன்னு நாங்க தெரிஞ்சுக்கிறோமே..ப்ளீஸ் டா செல்லம் சொல்லுடா…’ கணெஷ்.
‘ம்ம்..ஹ¤ம்.. மாட்டேன்’ நான்
‘சரி நமக்குள்ள ஒரு டீல். நீ இதச் சொன்னேன்னா..நாங்க..உனக்கு ஒரு ஹாட் மேட்டர் சொல்லுவாம்’ மதன்.
மதனை கணேஷ் முறைத்தான். எதற்கு மதனை கணேஷ் முறைக்கிறான். எனக்கு ஆர்வம் ஆகியது.
‘ஓகே..அப்படீன்னா..நீ முதல்ல சொல்லு’ நான்
அப்பொழுதுதான் எனக்கே தெரிந்தது. நித்யாவும் நல்ல பொண்ணு, முரளியும் நல்ல பையன். வாயே திறக்கமாட்டான். அதுவும் பொண்னுங்ககிட்ட கேக்கவேவேணாம். எப்படி இவர்களுக்குள்? என்ன இருந்தாலும் முரளி என் நண்பன்..ஹ்ம்ம்..எங்கிருந்தாலும் வாழ்க!!
‘இப்ப சொல்லுடா..யாரு போன் நம்பரை நீ எடுத்த?’ மதன் விடுவதாயில்லை.
‘ம்..சொல்லமாட்டேன்..ஆனா எழுதிவேனா காமிக்கறேன்’

**

3
நான்=கணேஷ்
இன்றைக்கு ரூமில நான், மதன், முரளியின் சகோதரன் கார்த்திக் இருக்கிறோம். கார்த்திக் ஒரு மூளையில படுத்திருக்கிறான். மதனும் நானும் பேசிக்கொண்டிருக்கிறோம். இந்தப் பக்கம் முரளி தூங்கிகொண்டிருக்கிறான். குழந்தை வந்தான்.
‘வாடா..குழந்தை!’ மதன்.
‘என்னடா இரண்டு பேரும் இடி விழுந்தா மாதிரி உட்கார்ந்திருக்கீங்க’ – குழந்தை.
நாங்கள் ஒன்றும் சொல்லவில்லை.
பானையில் தண்ணீர் குடித்து விட்டு, எங்கள் பக்கத்தில் வந்து உட்கார்ந்தான் குழந்தை.
‘சொல்லுங்கடா. என்ன ப்ராபளம்? நான் தீர்த்துவைக்கிறேன்’ – குழந்தை.
‘நித்யாவுக்கு வேற மாப்பிள்ளை பார்த்துட்டாங்களாம். இந்த வருட படிப்பு முடிந்ததும் கல்யாணமாம். அதான் என்ன பண்றதுன்னு தெரியாம இன்ன வரைக்கும் அழுதிட்டு இப்பத்தான் படுத்தான்’ நான்
சிறிது நேரம் யோசித்த குழந்தை, ‘அதுக்கென்ன, நித்யாவை கல்யாணத்துக்கு சம்மதிக்கச் சொல், நிச்சயம் முடியட்டும். நம்ம ஆள் தான் காதல் மன்னனாச்சே, கல்யாணத்திற்கு முந்தின நாள் கடத்திட்டு வந்துரட்டும்’..குழந்தை சொல்லிவிட்டு என்னிடம் திரும்பி ஏதோ கௌவ்ரம் சிவாஜி ரேஞ்சுக்கு ஒரு லுக் விட்டு, ‘என்ன கணேஷ் நான் சொல்றது?’ என்றான்.
மதன் வேகமாக எழுந்து வாஷ் பேசினில் போய் நன்றாகக் காரித்துப்பிவிட்டு வந்தான். எங்கள் குரூப்பிலே மதன் தான் ‘ஓட்டு’ வங்கி. அவனைத் தான் ஓட்டு ஓட்டு என்று அனைவரும் ஓட்டுவோம். முரளியின் தம்பி கார்த்திக் கூட சில சமையங்களில் கேலி செய்வான். ஆனால் அதில் தப்பில்லை என்று தோன்றுகிறது.
‘ஐடியா சரியில்லேன்னா வேற யோசிப்போம்’ என்று நகர்ந்து உட்கார்ந்தான் குழந்தை.
அப்பொழுது தான் தூக்கதிலிருந்து கார்த்திக் எழுந்தான். ‘டேய் கார்த்திக்..இங்க வாடா!’ என்றான் குழ்ந்தை.
கார்த்திக் வந்து உட்கார்ந்தான்.
‘பயப்படாதே! ஒன்றும் நடக்காது! நான் இருக்கிறேன். எப்படியாவது உங்க அண்ணனையும் அண்ணியையும் (நித்யா) சேர்த்து வைக்கிறேன்’ குழ்ந்தை.
கார்த்திக் பேசாமல் இருந்தான்.
‘ஆமா..உங்க அண்ணன், இத பத்தி உங்க அப்பாகிட்ட சொன்னா என்ன?’ குழந்தை.
‘எங்க அப்பாகிட்டயா?’ கார்த்திக்
‘ஆமா’ குழ்ந்தை.
‘கொன்றுவாரு’ சொல்லிவிட்டு எழுந்து போய்விட்டான் கார்த்திக்.
குழந்தை எங்களைப் பார்த்தான்.

**

4
நான்=பிரபு

என்னால் நம்பவும் முடியவில்லை. நம்பாமல் இருக்கவும் முடியவில்லை. கேட்கலாம் என்றால், தன்மானம் இடம் தரவில்லை. அவளா வந்து சொல்லியிருக்கலாம். ச்.சே..கடைசியில் இப்படி ஆகிடுச்சே. கணேஷ் வீட்டு போன் தான் மெசஞ்சராமே!..ஹம்ம்..
நான் கணேஷ் வீட்டிற்குள் நுழைந்தேன்.
‘வாப்பா, பிரபு! எப்படி இருக்கே! உன்னோட கேர்ள் பிரண்ட்ஸ் எல்லாம் நலமா? நலமறிய அவா!’ என்று சொல்லிக் கண்சிமிட்டினார், கணேஷின் அப்பா.
கணேசஷின் அப்பா கணேஷைப் போல கல்லூளி மங்கன் கிடையாது.எதையும் மறைக்காமல் பேசுபவர்.
‘எல்லாம் நால்லாயிருக்கங்கப்பா!’ நான்
‘ஏண்டி மரகதம், யார் வந்திருக்கா பாரு, மன்மதராசா வந்திருக்காக! காப்பி எடுத்திட்டு வாம்மா!’ மனைவியை அழைத்தார்.
எனக்கு சிரிப்புதான் வந்தது.
‘கணேஷ் எங்கப்பா காணோம்?’ என்றேன்.
‘முரளி வந்திருந்தான் கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி. உனக்கு ஒரு விசயம் தெரியுமா? கணேசுக்கு பொண்ணுங்ககிட்டே இருந்தெல்லாம் போன் வருது! இன்னைக்கு நான் போனை எடுத்திட்டேன்! ஹி..ஹி..ஹி..’ என்று சொல்லி மறுபடியும் கண்சிமிட்டினார்.
எனக்கு பகீரென்றது.
‘போன்ல யாருப்பா?’ நான்.
‘நித்யான்னு சொன்னமாதிரி ஞாபகம். உனக்கு தெரியுமா?’ என்றார்.
ம்..ம்.. என்க்கு தெரியாமலா? எனக்கு கோபம் வந்தது.
‘இப்போ எங்க போயிருக்கானுங்க இவனுங்க?’ நான்
‘போன் வந்த கொஞ்ச நேரத்தில ரெண்டு பேரும் வெளியில கிளம்பி போய்ட்டாய்ங்க. இவிங்க திரியிற திரிச்சலே சரியில்ல. ஏண்டியம்மா காப்பித் தண்ணிய கொண்டுவா!’
‘சரிப்பா நான் போயிட்டு வாரேன்’ நான்
‘அட, இருடா! காபி சொல்லியிருகேன்ல! நீ இருந்தா தான் எனக்கு கிடைக்கும்!’

**

5
நான்=கார்த்திக். முரளியின் சகோதரன்.
குழந்தை வந்து உட்கார்ந்தார். ‘டேய்! கார்த்தி! உனக்கு சின்ன வயசு. நீ எதைப் பத்தியும் கவலைப் படாதே.!’
எனக்கு சின்ன வயசாம். நானும் எம்.சி.யே ஈவினிங் காலேசில தான் படிக்கிறேன். இவங்களோட ஒரு வயசு கம்மி. குழந்தை அளந்தாருன்னா அதுக்கு அளவே இருக்காது. இவரை குழந்தைன்னு கூப்பிடறதுக்கே ஒரு கதை இருக்கு.

ஒரு நாள் இரவு ரொம்ப நேரமா பன்றி ஒன்று கத்திக் கொண்டிருந்தது. நீண்ட நேரமாகியும் பன்றியிம் சத்தம் ஓயவில்லை. எங்களுக்கே தூக்கம் வரவில்லை. குழந்தை வீராப்பாக நான் சென்று பார்த்து வருகிறேன் என்று சொல்லி சென்றவர், சிறிது நேரம் கழித்து திரும்பி வந்தார். வந்தவர்,’அது ஒன்றுமில்லை பசங்களா. பன்றி ‘குழ்ந்தை’ போட்டிருக்கு’ என்றார்.

பன்றியாவது? குழந்தையாவது? எங்களுக்கு சிரிப்பு வந்தது. நாங்கள் அவரிடம் மறுபடியும் கேட்க, அவர் கூலாக ‘என்னங்கடா, புரியாதமாதிரி பார்க்கறீங்க! பன்றி குழந்தை போட்டிருக்கு அதுதான் கத்தறது. தூங்குங்க!’ என்று சொல்லிவிட்டு படுத்துக்கொண்டார். அதை குழந்தை என்று சொல்லக் கூடாது குட்டி என்று தான் சொல்லனும் என்று சொல்லிப் புரியவைப்பதற்குள் போதும் போதும் என்றாகிவிட்டது. அன்றிலிருந்து அவரை குழந்தை என்று தான் அழைப்போம்.
‘டேய்..கார்த்திக்! நான் வேணும்னா உங்க அப்பாரு கிட்ட வந்து பேசட்டுமா? நான் சொன்னா உங்க அப்பா கேப்பாரு! ஒன்னு செய்யறேன், இந்த வாரம் உங்க அப்பாகிட்ட வந்து பேசறேன்!’
இவர் வந்து பேசினா எங்க அப்பா கேட்ருவாரா? சரியான டுபுக்கு.

**

6
நான்=பிரபு
அதோ முரளியும் கணேசும் std பூத்திலிருந்து வெளியே வருகிறார்கள். நான் மறைந்து கொள்கிறேன். அவர்கள் என்னைக் கடந்து சென்றபின், நான் மெதுவாக கடைக்குள் நுழைகிறேன்.
‘வாங்க பிரபு, அண்ணே’ என்றான் பூத் பையன்.
‘ஏண்டா! முரளியும் கணேசும் இங்க வந்தாங்களா? என்றேன். தெரியாததுபோல்.
‘ஆமாண்ணே! வந்தாங்க! இதோ இந்த நம்பருக்குத்தான் போன் பண்ணிப் பேசினாங்க!’
அவள் வீட்டு நம்பர் தான்.

**

7
நான்=கணேஷ்
குழந்தை வந்தான். முரளியிடம் சென்றான்.
‘டேய் முரளி! உனக்கு இதெல்லாம் தேவையாடா! நீ எதுக்கு இங்க வந்த? படிக்கத்தானே? உன்னை எவ்வளவு கஷ்டப்பட்டு வீட்ல படிக்க வைக்கிறாங்க? உனக்கு லவ்வெல்லாம் தேவையாடா?’ முரளி மவுனமாக இருந்தான்.
‘அம்மா அப்பா பாத்து கல்யாணம் பண்ணிவைக்கிற பொண்ணைத் தான் கல்யாணம் செய்துக்கனும் அதுதான் நிலைக்கும்! காதல் கல்யாணம் எல்லாம் சும்மா ஜிகினா தூள் மாதிரி’ குழந்தை. உதாரணத்துக்கொன்னும் கொறைச்சல் இல்ல. முரளி ஏதும் பேசவில்லை.
‘என்னடா பேசாம இருக்க? இப்ப என்னையே எடுத்துக்கோ. வீட்ல பாக்குற பொண்ண கல்யாணம் பண்ணிக்கனும்னு தான் நான் இன்னும் லவ் பண்ணாம இருக்கேன்!’ குழந்தை
திஸ் இஸ் டூ மச். எனக்கு சிரிப்பு வந்தது. முரளி நிமிர்ந்து பார்த்து விட்டு மறுபடியும் தலையைக் கவிழ்ந்து கொண்டான்.
‘இப்போ என்னதான் பண்ணலாம்னு முடிவோட இருக்க?’ குழந்தை முரளியை விடுவதாகை இல்லை.
‘டேய் மாமா! இங்க வா! ஏற்கனவே பயத்துல இருக்கிற அவன் கிட்ட எதையாவது சொல்லி மேலும் பயமுறுத்தாத. பய ஏதாவது பண்ணிக்கப் போறான்! நான் குழந்தையைக் கூப்பிட்டேன்.
குழந்தை திகிலுடன் முரளியைப் பார்த்துவிட்டு, என்னிடம் வந்தான்.
‘என்னடா சொல்ற?’ குழந்தை.
‘நீ தான் ஏதாவது ஐடியா கொடுக்கனும்’ நான்
குழந்தை தீவிரமாக யோசித்தான்.

**

8
நான்= சுபா
2..5..6..6..3..6..4 எண்களை டயல் செய்து, ரிசீவரை காதுக்கு கொடுத்தேன்.
ஒரு ரிங்…ரெண்டு ரிங்…’மடையா எடுடா..’
‘ஹலோ’ மறுமுனை
‘ஹலோ! பிரபுவா?’ நான்
‘ஆமா! சுபாதானே?’ பிரபு
‘ஆமா! எப்படிடா இருக்க?’ நான்
‘ரொம்ப முக்கியம். என்ன விசயம் சொல்லு!’ பிரபு
‘என்னடா ரொம்ப சூடா இருக்க போலிருக்கு, ம்..ம்..சரி..முரளியை எப்படி பிடிக்கிறது?’ நான்
‘வாட்?’ பிரபு
‘இல்லப்பா! முரளியை எப்படி கான்ட்டாக்ட் பன்றதுன்னு கேட்டேன்?’ நான்
‘நீ எதுக்கு அவனைக் கான்ட்டாக்ட் பண்ணனும்?’ பிரபு
‘இன்னிக்கு காலையில, நித்யாவும் முரளியும் வெளியில போனாங்க, இன்னும் வரலை! மதியம் 2 ஆச்சு, அவங்க அம்மா தேடறாங்க! அதான் கேட்டேன்! நீ என்னமோ ரொம்ப பிகு பண்ணற’ நான்
சிறிது மவுனம். பிறகு லைன் துண்டிக்கப்பட்ட சத்தம்.
எனக்கு ஏமாற்றம். கோபமும் கூட. ‘இவன் ஏன் இப்படி பண்றான், ஸ்டுப்பிட்’ ரிசீவரை வைத்தேன்.

**

9
நான்=கணேஷ்

திருவேங்கடம் இங்கிட்டும் அங்கிட்டுமாக நடந்து கொண்டிருந்தான். திருவேங்கடமா? யாரு அதுன்னு யோசிக்கிறீங்களா? அதுதாங்க, நம்ம குழந்தை! ஹி..ஹி..

குழந்தை, நித்யா-முரளி க்கு ஒரு வழி யோசித்துக் கொண்டிருந்தான். அறையில் மதன், நான்,குழந்தை,கார்த்திக் ஆகியோர் இருக்கிறோம்.
குழந்தை தொல்லை தாங்கமுடியல. ஐடியா தருகிறேன் பேர்வழி என்று எதையாவது ‘அச்சு பிச்சு’ ன்னு உளறார்.
‘இப்படிப் பண்ணா என்ன? பேசாமா நித்யாவை முரளி வீட்லையும் முரளியை நித்யா வீட்லையும் வேலை செய்ய சொல்வோம். அப்புறம் நித்யா வீட்ல முரளியையும், முரளி வீட்ல நித்யாவையும் புடிச்சுப் போயிரும். அப்புறம் என்ன சுபம் தான்’ குழந்தை.
‘என்ன படம் முடிஞ்சிருச்சா! ஏன் குழந்தை நீ வேற படுத்தற? எரிச்சலக் கிளப்பாம கொஞ்சம் சும்மா இருக்கியா?’ நான்
‘அதெப்படி நாம பேசாம இருக்கிறது, நம்ம பிரண்டோட வாழ்க்கை இல்லியா?’ என்று சொல்லிவிட்டு மறுபடியும் குறுக்கும் நெடுக்குமாக நடக்க ஆரம்பித்தான்.

**

10
நான்=கணேஷ்
‘டேய் எல்லோரும் இருக்கீங்களா? எங்கடா போய் தொலைஞ்சீங்க?’ நல்ல போதையில் பிரபு வந்தான்.
நான் பிரபுவைப் பார்த்து, ‘ என்னடா பிரபு? எப்பவுமே இங்க வந்து தானே ஏத்துவ? இன்னிக்கு ஏத்திக்கிட்டு அப்புறம் இங்க வந்திருக்க?’ என்று கேட்டேன்.
பிரபு, ‘உஷ்…நீ பேசாத!’ விக்கல் ‘நீ கூட..நீ கூட..என்கிட்ட சொல்லாம மறைச்சிட்ட பார்த்தியா?
நான், ‘டேய்..நித்யா உன் பிரண்டு, உனக்கு தெரியும்னு நினைச்சேன்’
‘பிரண்டு..பொல்லாதா பிரண்டு..அவளை நான் என் பிரண்டு மாதிரியாடா வெச்சிருந்தேன்..இங்க டா..இங்க வெச்சிருந்தேன் அவளை’ பிரபு இதையத்தைக் காட்டினேன்.
எனக்கு விளங்கியது.
‘என்னடா சொல்ற மச்சான்?’ மதன்
‘என்ன நொன்னாடா சொல்ற? அதான் சொன்னேனே, இதயத்தில வெச்சிருக்கேன்னு. யெஸ். ஐ லவ் ஹெர்! அதுக்குள்ள இந்த முரளி பய வந்து ஆட்டைய களைச்சுட்டான்’ விக்கல்.
நாங்கள் விக்கித்து நின்றோம்.
‘ஊமை ஊரைக் கெடுக்கும் பெருச்சாளி வீட்டக் கெடுக்கும்னு சும்மாவா சொன்னானுங்க, ஊமை மாதிரி இருந்திட்டு என்னென்ன வேலை பண்ணியிருக்கான் பாரு இந்த முரளி. அவனுக்கு துணை இந்தக் கூட்டம். இந்தக் கூட்டத்துக்கு தலைவர்..கணேஷ்’..என்னைப் பார்த்து கண்ணை உருட்டினான், பிரபு.
‘நான் ஒரு வேளை செத்தா, என் சாவுக்கு நீங்கள் தான் காரணம் அப்படீன்னு லெட்டர் எழுதி வெச்சிருக்கேன். கவிதை கூட எழுதிருக்கேன். படிக்கவா?’ பாக்கெட்டைத் துளாவி ஒரு லெட்டர் ஒன்றை எடுத்தான்.
எனக்கு திக்கென்றது. கவிதைக்காக் அல்ல.
‘நீ எதுக்குடா சாகனும்?’ நான்.
‘டேய் மடையா, மனுசனா பிறந்தா, சாகறது உறுதிடா. அதுவும் ரெண்டு புல் பாட்டில் பூச்சிக் கொல்லி மருந்து குடிச்சா கண்டிப்பா குளோஸ் டா..ஹா..ஹா..’ சிரித்துக் கொண்டே சரிந்தான் பிரபு. வாயில் லேசாக நுரை.
‘ஐயையோ…விளையாட்டு வினையாகிடுச்சேடா! தூக்குங்கடா தூக்குங்கடா’ பதறிக்கொண்டு தூக்கினோம்.

**

11
நான்=நித்யா

இன்று காலை எழுந்து குளித்து விட்டு, என்னுடைய கம்ப்யூட்டர் ரூம்முக்கு வந்தேன். நாளைக்கு அஸைன்மென்ட் வைக்க வேண்டும். இன்று புரோகிராம் எழுதி டெஸ்ட் செய்ய வேண்டும். தெண்டப் பசங்க, நாளைக்கு என்னைப் பார்த்துதான் காப்பியடிப்பானுங்க. பவர் பட்டனை ஆன் செய்தேன். கம்ப்யூட்டர் பூட் ஆகவில்லை. ஆப் செய்து ஆன் செய்தேன்..ம்..ஹ¤ம்…பூட் ஆகவில்லை..போனதடவை..இது மாதிரி ஆனப்போ கணேஷ் தானே சரி செய்து கொடுத்தான்.
கணேஷ் நம்பரை சுழற்றினேன்.
கணேஷின் அப்பா எடுத்தார். ‘ஹலோ..யார் பேசறது?’
‘கணேஷ் இருக்காறா?’
‘நீ யாரும்மா?’
‘நான் கணேஷோட பிரண்ட் நித்யா.’
‘ஓஹோ…!! டேய் கணேஷ் ஓடியாடா! எதோ பொண்ணு பேசுதுடா..ம்..ம்ம்ம்..ம்ம்ம்ம்..’ சிரித்தார்
கணேஷ் போனை வாங்கி பேசினான்.
‘என்ன நித்யா?’

**

12
நான்=கணேஷ்
அப்பாவிடமிருந்து போனை வாங்கினேன்.
‘என்ன நித்யா?’
‘என் கம்ப்யூட்டர் பூட் செய்யலடா. ஏதோ ப்ராபளம் போல் தெரியுது!’ என்றாள்
நான் சில சிம்ட்டம்ப்ஸ் (symptoms) கேட்டும் எனக்கு புலப்படவில்லை, சரி வீட்டிற்கே வருகிறேன் என்று சொல்லிவிட்டு, முரளி இதில் எக்ஸ்பேர்ட் என்பதால் அவனையும் வருமாறு அழைத்துக் கொண்டேன். நானும் முரளியும் நித்தியா வீட்டிற்கு சென்றோம்.

**

13
நான்=முரளி
நித்யா வீட்டிற்கு சென்றும் ஒன்றும் பிரையோஜனம் இல்லை. எங்களுக்கு ஒன்றும் பிடிபடவில்லை. எனவே புராஸஸரை எடுத்துக் கொண்டு செர்வீஸ் ஸ்டேசன் போகலாம் என்று முடிவு செய்தோம். நித்யாவும் ‘நானும் ஹார்டுவேர் கத்துக்கணும் அடுத்த முறை உன்னைக் கூப்பிடவேண்டாம் பாரு, அதனால நானும் வருவேன்’ என்று அடம் பிடிக்கவே அவளையும் அழைத்து சென்றோம். செர்வீஸ் ஸ்டேசனில் நேரமாகும் என்று சொல்லவே, நித்யாவை அனுப்பிவிட்டோம்.
சிறிது நேரம் கழித்து, அவர்கள் நாளைக்குத்தான் கிடைக்கும் என்று சொல்லவே, இந்த தகவலை நித்யாவிடம் சொல்ல std பூத்திற்கு சென்றோம். பையன் நம்பரைக் குறித்துக் கொண்டான்.

**

14
நான்=மதன்
ஆம்புலன்ஸ் ஓடிக் கொண்டிருந்தது. பிரபு அரை மயக்கத்திலிருந்தான். பல்ஸ் இருந்தது. நாங்கள் செய்வதறியாமல் விழித்துக் கொண்டிருந்தோம்.
‘டேய்..பிரபு’ நான்
‘ம்ம்..ம்ம்..ய்..ய்..யா..யாலு இது..நி.நி..நி..ல்த்யா..வ.கூல்ட்டிட்டுவா’
‘டேய் நான் மதன்டா. என்னை மன்னிச்சிடுடா. நீ கேர்ள் பிரண்டு அது இதுன்னு பிலிம் காட்டினதால உன்னை உன் டியர் பிரண்டோட சண்டை போட வைக்கலானுதான் பிளான் போட்டோம். நான் தான் உன்கிட்ட முதன் முதலா சொன்னது! ப்ளீஸ் என்னை மன்னிச்சிடுடா!’
சைரன் ஒலி காதைப் பிளந்தது.
‘ப்ளீஸ் சாரிடா!’ கணேஷ்
‘ம்….ம்…ல்ல்…ல்..’ பிரபு முனகினான்
‘மன்னிச்சிட்டேன்னு சொல்றா’ நான்
‘ம…ன்..ல்…னி..ச்…சி..ட்..ட்…ட்..டே….ன்…’
‘சரி! அந்த லெட்டர் எங்கேடா வெச்சிருக்க!’ நான் துலாவினேன்.
மடேர் என்று அடி விழுந்தது.
பிரபு எழுந்து உட்கார்ந்தான்.
‘அட பாவி! நான் உயிருக்கு போறாடிக்கிட்டிருக்கிற நேரத்திலும் உனக்கு லெட்டர் தான் முக்கியமா?’ Driver sir அம்புலன்ஸ நிறுத்துங்க! எனக்கு ஒன்றுமில்லை! ஐயாம் பெர்பெக்ட்லி ஆல்ரைட்! பிரபு.
எங்களுக்கு நிலைமை விளங்கி, அவனை மொத்த ஆரம்பித்தோம்.

**

15
நான்=பிரபு

நாங்கள் அனைவரும் அமைதியாக உட்கார்ந்திருந்தோம். ஆளுக்கொரு மூலையில். குழந்தை வந்தான்.
‘அடடே..பிரபுவா? வாடா! ரொம்ப நாளைக்கப்புறம் இந்தப் பக்கம் வந்திருக்க?’
ம்ம் என்றேன்
‘ஆமா..உனக்கு மேட்டர் தெரியுமா?’
‘என்ன?’ நான்
‘நம்ப நித்தியும்…’
‘நித்தியா? யாரு அது?’
‘அதாண்டா உன் பிரண்டு நித்யா!’
‘ம்ம்.ம்ம்’
‘உன் பிரண்டு நித்யாவும். நம்ப முரளியும் லவ் பண்றாங்களாமே!! நித்தி வீட்ல..மாப்ள பார்த்துட்டாங்களாம்..அவங்களைச் சேர்த்து வைக்க நீதான் ஐடியா ஏதாவது கொடுக்கனும்’
நான் கணேஷைப் பார்த்தேன். கணேஷ் மதனைப் பார்த்தான். கணேஷ் முரளியை பார்த்தான். முரளி என்னைப் பார்த்தான்.
குழந்தைக்காக நான் ஐடியா யோசிக்க ஆரம்பித்தேன்.

******************************************************************************

கிணறு – சிறுகதை

மே, 14, 1993.

‘அண்ணா, எப்பண்ணா போவ?’ கேட்டான் என் தம்பி பிரகாஷ். மதிய உணவு முடித்து, அனைவரும் சிறிய உறக்கத்திற்கு தயாராகிக் கொண்டிருந்தனர். நான் மதியங்களில் தூங்குவதில்லை. அதிலும் குறிப்பாக விடுமுறை நாட்களில். எங்களுக்கு, விடுமுறை நாட்கள் தோறும் காளியம்மன் கோவில் திடலில் கிரிக்கெட் ஆடியே தீரவேண்டும். விளையாடி விட்டு வீட்டுக்கு வரும் வேளையில் அப்பா இருந்தால் நிறைய திட்டுகள் வாங்க வேண்டிவரும். பரவாயில்லை விளையாட்டிற்காக பெற்றுக் கொள்ளலாம். எங்கள் குழுவில் மொத்தம் ஒன்பது பேர். கணேஷ், செல்வா, ஆனந்த், சரவணன், ராஜன், பிரதாப், சிவா மற்றும் நான். +2 தேர்வு எழுதிவிட்டு கல்லூரிக் கனவுகளோடு இருக்கிறாம். இன்று தான் தேர்வு முடிவுகள் வெளியாயின. சரவணனைத் தவிற அனைவரும் தேர்ச்சிபெற்றுவிட்டோம். சரவணன் தவறியது எங்களுக்கெல்லாம் ஆச்சரியமே.’பொருடா, அப்பா தூங்கப்போகட்டும்’ என்று என் தம்பிக்கு பதில் கூறினேன். ‘அண்ணா, நானும் இன்னைக்கு வரவா? நேத்து மாதிரி இன்னைக்கும் நீச்சல் பழகித்தருவியா?’

காளியம்மன் கோவில் திடல் ஊருக்கு ஒதுக்குப் புறமாக வயல் வெளி சூழ மிக அழகாக அமைதியாக இருக்கும். மனித நடமாட்டம் அதிகமாக இராது. ஊரைவிட்டு வெளியேறி மசூதியைத் தாண்டி, மிகுந்த நாற்றத்தோடு ஒரு நத்தையைப் போல ஊர்ந்து கொண்டிருக்கும் குண்டாற்றின் சிறிய பாலத்தைக் கடந்து, வன்னான் பாறையில் இறங்கி, கணுக்கால் அளவுத் தண்ணீரில் நடந்து, பாறைகளில் ஏறி, இறங்கி, காளியம்மன் திடலுக்குச் செல்லும் ஒற்றையடிப் பாதையில் ஏறும் இடத்தில் கிணறு ஒன்று இருக்கிறது. நாயக்கர் கிணறு என்று அதற்குக் பெயர். எங்களுக்குத் தெரிந்த வகையில் இது தான் இந்த வட்டாரத்திலே பெரிய கிணறு. எனக்கு நினைவு தெரிந்து கிணற்றில் தண்ணீர் வற்றியது கிடையாது. மழைக் காலங்களில் நல்ல ஆழமானதாக இருக்கும். நாங்கள் விளையாடிவிட்டு இந்தக் கிணற்றில் தான் குளிப்பது வழக்கம்.கிணற்றில் இறங்குவதிற்கு கிணற்றின் பக்கவாட்டுச் சுவர்களில் பதிக்கப்பட்ட கற்களால் ஆன படிகள் உண்டு. ஆனால் பல சமயங்களில் நாங்கள் இறங்குவதில்லை, கிணத்துமேட்டிலிருந்து ஒரே ‘சொர்க்’ தான்.

‘ம்ம்..ஆனால் உன்னை இன்னைக்கு அம்மா விடமாட்டாங்கன்னு நினைக்கிறேன்’ சொல்லிமுடித்ததும் அம்மாவின் குரல் கேட்டது ‘பிரகாஷ், இங்க வந்து படு’. அவன் என்னை ஏக்கமாகப் பார்த்துக்கொண்டே, ‘அம்மா, நான் அண்ணாவோடு கிரிக்கெட் ஆடப் போறேன்’, என்று சொன்னான். ‘வந்தேன், அடி பிச்சுருவேன், கிரிக்கெட் ஆடப் போறேன்னு கிணத்துல நீச்சப் பழகியிருக்க, ராத்திரியெல்லாம் ஒரே கத்தல்! ஒழுங்கா வந்து படு!’ அம்மாவின் அதட்டலுக்குப்பயந்து, எழுந்து சென்றான் பிரகாஷ்.

ராஜாவின் வீட்டில் எங்கள் குழு கூடியது. சரவணனைத் தவிற அனைவரும் ஆஜர். பாஸாகிவிட்ட சந்தோஷம் அனைவரின் முகத்திலும் தெரிந்தது.ராஜாவின் வீடுதான் கிரிக்கெட் மட்டை, ஸ்டம்ப்,பேட் வைக்கப்படும் இடம். ஆளுக்கு ஒன்றைக் கையில் எடுத்துக் கொண்டு போருக்குச் செல்வதைப் போன்று காளியம்மன் திடலை நோக்கி நடக்கத் தொடங்கினோம்.சிரித்துப் பேசிக் கொண்டே வந்தவர்கள் ஏனோ சரவணனின் வீட்டைக் கடக்கும் பொழுது மட்டும் மிகுந்த அமைதியைக் கடைப்பிடித்தோம்.

மணி ஆறைத் தொட்டு விட்டது. பொழுது சாயத்தொடங்கு வெகு நேரமாகிவிட்டது. ஆனால் யாரும் கலைப்படைந்ததாய்த் தெரியவில்லை. கிரிக்கெட்டில் இது ஒரு வசதி. கால்ப் பந்தைப் போலவோ, ஹாக்கியைப் போலவோ, கூடைப்பந்தைப் போலவோ ஆட்டம் முழுவதும் ஓடிக்கொண்டிருக்கத் தேவையில்லை. ராஜா கீழே குணிந்து கொள்ள அடுத்த ஆட்டத்திற்கு, பேட்டிங் வரிசை, அவன் முதுகில் விரல்களால் எண்கள் காண்பித்து கேட்கப்பட்டது. நான்தான் முதலாவதாக பேட் செய்ய வேண்டும். எனக்கு ஸ்பின் ஆடப் பிடிக்கும். எங்கள் குழுவிலேயே நன்றாக ஸ்பின் பவுலிங் செய்பவன் சரவணன் மட்டுமே. அவன் வராதது எனக்கு ஏக்கத்தையே அளித்தது. ஏனோ ஆட்டத்தில் கவனம் இல்லாது இரண்டாவது பந்திலே கிளீன் போல்டு ஆகினேன்.

இருள் கவியத் தொடங்கிய போது நாங்கள் ஆட்டத்தை முடித்துக் கொண்டு நாயக்கர் கிணற்றை நோக்கி நடந்தோம். ஏனோ எப்பொழுதும் இருக்கும் உற்சாகம் இன்று இல்லை. மற்றவர்கள் ‘பை’ சொல்லிக் கிளம்ப, நானும் ராஜாவும், செல்வாவும், ஆனந்தும் மட்டுமே மிஞ்சினோம். ராஜாவும், செல்வாவும் ‘சொர்க்’ அடிக்க, நானும் ஆனந்தும் படிகள் வழியே இறங்கினோம். தண்ணீர் வெதுவெதுப்பாக இருந்தது.

தண்ணீரில் இறங்கிய உடன் உற்சாகம் தானாக வந்து தொற்றிக்கொண்டு விடுகிறது.சிறிது நேரத்திற்குப் பிறகு, ஆனந்த் கையில் மணலை வைத்துக் கொண்டு ‘இதோ பார் நான் தரையைத் தொட்டுவிட்டேன்’ என்று ஆர்பாட்டம் செய்துகொண்டிருந்தான். செல்வா பதிலுக்கு நானும் எடுத்துவருகிறேன் பார் என்று தண்ணீருக்குள் பாய, ‘யார் முதலில் மணல் எடுத்து வருகிறார்கள்’ என்ற போட்டி ஆரம்பமாகியது. எற்கனவே மணல் எடுத்து வந்திருந்ததால், ஆனந்த், எங்கள் தண்ணீ கோர்ட்டின் நீதிபதியாக நியமிக்கப்பட்டான்.கல் படியில் அவன் உட்கார்ந்து கொள்ள, நாங்கள் மூவரும் தண்ணீருக்குள் பாய்ந்தோம்.

தண்ணீருக்குள் மூழ்கியிருக்கும் பொழுது, உலகப் பேரிரைச்சல்களிடமிருந்து விடுபட்டு மனம் அமைதிகொள்ளவே செய்கிறது. நான் தான் முதலில் வந்தேன். ஆனந்த் 110 எண்ணியிருந்தான். 130இல் செல்வா வந்து சேர்ந்தான். 150 வரையில் ராஜா வரவில்லை. 160 ஆயிற்று. நாங்கள் மூவரும் நிசப்தமாக தண்ணீரில் எழும் சிற்றலைகளையே வெறித்துக் கொண்டிருக்க, தாடலென்று மூச்சிரைக்க தண்ணீரிலிருந்து வெளிப்பட்டான் ராஜா. நாங்கள் ஹே வென்று சொல்லிவைத்தார் போல் கத்தினோம். ராஜா தட்டுத் தடுமாரி படியில் வந்து உட்கார்ந்தான். அவன் முகம் வெளிரியிருந்தது. கைகளும் கால்களும் நடுங்கியவன்னம் இருந்தன. மேல்மூச்சு கீழ்மூச்சு வாங்க மலங்க மலங்க விழித்துக் கொண்டு இருந்தான். கையில் மணல் இல்லை. எங்களைப் பார்த்து ஏதோ சொல்ல வந்தவன் வார்த்தை கிடைக்காமல் திக்கித் திணரிக் கொண்டிருந்தான். ‘டேய்..ட்…ட்..டேய்..கீ..கீ…கீழே..கீழே..ப்..ப்..பொ..பொணம் டா’ என்று சொல்லி அழ ஆரம்பித்துவிட்டான். நாங்கள் விக்கித்து விட்டோம். ‘டேய்..ராஜ்..எதையாவது பார்த்து பயந்திருப்ப! செடி கொடியாக இருக்கும்!’ என்றான் செல்வா. ‘இல்..இல்லடா…நான் பார்த்தேன்..கால்..வி..விரல் தெரிந்..தது!’ அவன் சொல்வதை முற்றிலும் நாங்கள் நம்பவில்லையென்றாலும், சற்று பயமாகத்தான் இருந்தது. செல்வா, ‘டேய்..நாம போய் பார்த்துட்டு வருவமா?’ என்றான்.நான் சரியென்றேன். ராஜ் தடுத்தும் நாங்கள் கேட்கவில்லை.

பயத்துடன் முங்கு நீச்சல் அடிப்பது மிக மிக கடினம். தண்ணீருக்கு அடியில் நிலவும் அசாதாரண அமைதி மேலும் பயத்தை அதிகரித்தது. செல்வாவின் இருதயம் துடிப்பது கூட எனக்கு கேட்பது போல இருந்தது. திரும்பி விடலாம் என்று நினைத்த பொழுது, அதோ சுமார் ஐந்தடி தூரத்தில் புதர்களுக்கு நடுவே கால்விரல்கள் தெரிந்தன.ஒரு நிமிடம் கண்கள் சுழல ரத்த ஓட்டம் அதிகரித்தது. இருதயம் 1000 மீட்டர் ஒட்டப்பந்தயத்தில் ஒடிக்கொண்டிருந்தது.சிவப்புச் சட்டையும் தெரிந்தது. என்ன செய்வது என்று தெரியாமல் நின்றுகொண்டிருந்த என்னை செல்வா கையை பிடித்து இழுத்து சுயநினைவுக்குக் கொண்டுவந்தான்.

மேலே வந்து பார்த்தால் ஆனந்தும், ராஜும் சட்டை,பேண்ட்களை மாட்டிக் கொண்டு தயாரக நின்றுகொண்டிருந்தனர். நாங்கள் வேக வேகமாக படிகளில் ஏறினோம். நடுக்கத்தால் படிகள் முன்பைவிட வழுக்குவதாகவேபட்டது. மேலே ஏறி கைகள் நடுங்க பேண்ட்களை போட்டுக் கொண்டோம்.யாரும் யாருடனும் பேசிக்கொள்ளவில்லை. வழிநெடுக அமைதி. பிரியும் பொழுது, ‘யார்கிட்டையும் சொல்லாதீங்க’ என்றேன், எதோ சொல்லவந்த செல்வா, ஒன்றும் சொல்லாமல் தலையை மட்டும் ஆட்டினான்.

வீட்டிற்குள் நுழையும் பொழுது அப்பா வந்திருந்தார். ஏனோ ஏதும் கேட்கவில்லை.துண்டை எடுத்து தலை துவட்டிக் கொள்ளும் பொழுது ‘அம்மா காப்பி வெச்சிருக்காடா,உன்னை சரவணனின் அம்மா தேடிட்டுப் போனாங்க’ என்றார். நான் காபியை ஒரெ மடக்காகக் குடித்துவிட்டு, சரவணன் வீட்டிற்குச் சென்றேன்.

சரவணனின் அம்மா மட்டுமே இருந்தார்கள்.’சரவணன் உன்கூட விளையாட வந்தானாப்பா?’ என்றார்கள். ‘இல்லையே ஆன்ட்டி, ஏன்?’ ‘மதியத்தில இருந்து காணல அதான்.நாம போய்த் தேடிட்டு வருவமா?’ ‘எங்காவது ப்ரண்ட்ஸ் வீட்டில இருப்பான் ஆன்ட்டி. நீங்க இருங்க, நான் போய்ப் பார்த்துட்டு வாரேன்’ ‘இல்லப்பா. நானும் வாரேன். அப்படியே அவங்க அப்பாவுக்கும் போன் போடனும்’ சரவணனின் அப்பா ராஜ்காட்டில் இருக்கிறார். நான் சைக்கிளை மிதிக்க, பின்னால் சரவணின் அம்மா ஏறிக்கொண்டார்கள்.

எனக்குத் தெரிந்த வீடுகளிலும், சரவணின் உறவுக்கார வீடுகளிலும் தேடினோம். நேரம் செல்லச் செல்ல சரவணனின் அம்மாவிற்கு கவலை பன் மடங்கு அதிகரித்தது போல இருந்தது. எனக்கும் ஒன்றும் புரியவில்லை. ‘சரவணன் எங்கு பொயிருப்பான்?’ ‘தம்பி, அப்படியே கலாஷ் பாத்திரக்கடை பக்கத்திலிருக்கும் சந்தில் அவனுடைய சித்தப்பா வீடு இருக்கிறது, அங்கும் பாத்துட்டுப் போலாம்’ என்றார்கள். சரவணின் அம்மா எற்கனவே பாதி அழுது கொண்டிருந்தார்கள்.

சரவணின் சித்தியும் சித்தப்பாவும் சரவணனின் அம்மாவைத் தேற்ற முயற்சி செய்து கொண்டிருந்தார்கள். அதுவரை அழாமல் இருந்த அவர்கள் அழத்தொடங்கினார்கள். நான் என்ன செய்வது என்று தெரியாமல் விழித்துக் கொண்டிருந்தேன். ஆறிப்போனக் காப்பியைக் குடித்துவிட்டு நாங்கள் புறப்பட்டோம். சித்தப்பாவும் உடன் வந்தார்.

மேலும் சில இடங்கள் தேடிவிட்டு, உசிலம்பட்டி ரோட்டில் இருக்கும் போலீஸ் ஸ்டேசனை சோர்வுடனும் இனம் புரியாத ஒரு உணர்வுடனும் கடக்கையில், சித்தப்பா,’ மதனி, நீங்களும் தம்பியும் இங்கன நில்லுங்க, நான் போய் ஏட்டையா கிட்ட ஒரு வார்த்தை சொல்லிட்டு வந்திடறேன்!’ என்று சொல்லிவிட்டு சைக்கிளுக்கு ஸ்டாண்ட் போட்டு விட்டு சித்தப்பா சென்றார்.

நாங்கள் இருவரும் அமதியாக நின்று கொண்டிருந்தோம்.லாரி ஒன்று புழுதி வாரி இரைத்துச் சென்றது.. சரவணனின் அம்மாவின் கண்களில் கண்ணீர் வழிந்து கொண்டேயிருந்தது.ஸ்டேஷனை விட்டு வெளியே வந்த சித்தப்பா, ‘மதனி, சரவணன் காலையில் என்ன டிரஸ் போட்டிருந்தான்?’ என்றார். சரவணின் அம்மா சிறிது யோசனைக்குப் பின் விசும்பலோடு, ‘பச்சைப் பேண்ட்….சிவப்புச் சட்டை’ என்றார்கள்.

நான் நிலை தடுமாறினேன். சைக்கிள் பிடியிலிருந்து விடுபட்டு கீழே விழுந்தது.பேருந்து ஒன்று சத்தமாக ஹாரன் அடித்துக் கொண்டு எங்களுக்கு மிக அருகில் சென்றது.நாயொன்று விடாமல் குறைத்தது. எனக்கு முழுவதுமாகத் திடம் இழந்துவிட்டதைப் போன்று ஒரு உணர்வு. வியர்த்து வழிந்தது.குடலைப் பிரட்டியது. சித்தப்பா வந்தவுடன் மூவரும் மிக அமைதியாக வீடு வந்து சேர்ந்தோம்.

அங்கே சரவணன் நின்று கொண்டிருந்தான். அவன் கூடவே சற்று பருமனான, மீசை அடர்த்தியாக வைத்துக்கொண்டு ஒருவர் நின்று கொண்டிருந்தார்.நான் அனைத்து கடவுள்களுக்கும் நன்றி சொல்லிக்கொண்டிருந்தேன்.சரவணின் அம்மா வேகமாக ஓடிச்சென்று, சரவணனின் பக்கத்தில் இருந்தவரை ‘வாங்கண்ணே!’ என்று சொல்லிவிட்டு, சரவணனை ஓங்கி ஒரு அரை விட்டார்.

நான் வீட்டிற்கு வந்து சைக்கிளிற்கு ஸ்டாண்ட் போட்டுவிட்டு, உள்ளே நுழைந்தேன். ஏனோ மனம் பஞ்சு போல இலகுவாகிவிட்டிருந்தது. உள்ளே அம்மா அழுதுகொண்டிருந்தார்கள்.என்னைப் பார்த்ததும் ‘தம்பியைப் பார்த்தியாடா?’ என்றார்கள். ‘ஏன் என்னாச்சு?’ என்றேன். ‘சாயங்காலத்திலிருந்து காணல. அப்பா தேடப் போயிருக்கார்’ என்றார்கள்.

எனக்கு சுரீர் என்றது. ‘என்ன சட்டை போட்டிருந்தான்?’ என்றேன். என்னை ஒரு நிமிடம் மவுனமாகப் பார்த்துவிட்டு, பின் ‘ஏன், அவன் எப்போதும் போடுவானே, காலர் இல்லாத சிகப்பு டீசர்ட்.அதுதான்!’ என்றார்கள்.
நான் வீதியில் இறங்கி நாயக்கர் கிணறை நோக்கி தலை தெறிக்க ஓடிக் கொண்டிருந்தேன். நாய்கள் என்னைப் பின் தொடர்ந்து வந்து கொண்டிருந்தன.
**

எதிர்பாராத திருப்பம்

எதிர்பாராத திருப்பம் சிறுகதை

ட்டோவின் வேகம் குறைந்தது. இயந்திரம் மெதுவாக சத்தம் போட்டு பின் சுத்தமாக அடங்கியது. சுஜிதா ஆட்டோக்குள்ளிருந்து தலையை வெளியே நீட்டி எட்டிப்பார்த்தாள். ‘ரெயில்வே க்ராஸிங்மா’ ஆட்டோக்காரன் இருக்கையை விட்டு எழுந்து பெட்டிக் கடையில் பீடியைப் பற்ற வைத்துக்கொண்டான். சுஜிதா கைக்கெடிகாரத்தைப் பார்த்தாள். மணி இரவு 8:10. இன்னும் 20 நிமிடங்கள் இருந்தன. இதயம் படபடத்தது.இரத்த ஓட்டம் அதிகமானது போல் இருந்தது. அப்பாவை நினைத்தால் பயமாகவும் இருந்தது, பாவமகவும் இருந்தது. சீட்டில் சாய்ந்து முகத்தைத் திருப்பிப் பார்த்தாள். தியாகராஜர் பொறியியற் கல்லூரிக்குச் செல்லும் சாலை மெர்க்குரிச் வெளிச்சத்தில் பிரகாசமாக வெரிச்சின்று இருந்தது.

‘மதுரை,திருச்சி,விழுப்புரம் மார்க்கமாக சென்னை எழும்பூர் செல்லும் நெல்லை எக்ஸ்பிரஸ் இன்னும் சிறிது நேரத்தில் முதல் பிளாட்பாரத்தில் இருந்து புறப்படும்’. சுரேக்ஷ் பொறுமை இழந்து செல்லை எடுத்து பொத்தானை அழுத்தினான்.’காலிங் சுஜிதா…..’ என்று ஸ்கிரீனில் தெரிந்தது. காதில் வைத்துக்கொண்டான். ‘கமான் சுஜிதா..கமான் டேக்கிட்’ என்றவன் சுற்றும் முற்றும் பார்ததான். முகம் வெளுத்திருந்தது.

******************************

சுரேக்ஷ் தனக்கும் பிராசத்துக்கும் டீ சொல்லிவிட்டு, தினத்தந்தி பேப்பரை எடுத்துக் கொண்டு ஹாயாக பெஞ்சில் உட்கார்ந்தான்.பைக்கை நிறுத்தி விட்டு பிரசாத்தும் வந்து அவன் பக்கத்தில் உட்கார்ந்தான்.சுரேக்ஷ¢டமிருந்து ஒரு பேப்பரை வாங்கி தானும் படிக்கத்துடங்கினான்.காலேஜ் முடிந்து பெண்கள் தத்தம் வடுகளுக்குச் சென்று கொண்டிருந்தனர்.

காலேஜ் முடிந்தவுடன் இப்படி இங்கு வந்து டீ குடிப்பது அவர்கள் வழக்கம்.’டேய் சுரேக்ஷ்..நீஎழுதின கதை ஒன்னு குமுதத்தில்….’ தோளில் கை விழுந்தவுடன் பிராசாத் பேச்சை நிறுத்திவிட்டுத் திரும்பினான்.மூன்று நான்கு கனத்த உருவங்கள் நின்று கொண்டிருந்தன.’சுரேக்ஷ் யாருடா இங்க?’ உருவத்தைப் பார்த்த பிரசாத் மிரண்டான். அவனையும் அறியாமல் அவன் கண்கள் சுரே¨க்ஷ நோக்கித் திரும்பின.சுரேக்ஷ் ஒன்றும் புரியாமல் விழிக்க, நங்கென்று குத்து ஒன்று முகத்தில் விழுந்து மூக்கு உடந்தது.

அதற்கப்புரம் விழுந்த அடிகள் தர்ம அடிகள். எல்லாம் முடிந்து போகும் போது ஒரு உருவம் சொல்லியது,’தூத்தேறி, கதை எழுதினியே பேரு ஊரு எல்லாம் மாத்து எழுதத் தெரியாது?. முண்டம். நீயெல்லாம் கதை எழுதி…’ என்று சொல்லி மண்டும் ஒரு மிதி மிதித்துச் சென்றது.சுரேக்ஷ் நினைவிழந்தான்.

*********************

சுஜிதா…காலிங்பெல் சத்தம் கேட்குது பார். போய் யாருன்னு பாரு!’ சமையலரையில் இருந்து அம்மாவின் குரல் கேட்கவே..படித்துக் கொண்டிருந்த குமுதத்தை வைத்து விட்டு எழுந்து சென்று கதவைத் திறந்தாள், சுஜிதா. ‘எம்.எல்.ஏ சார் இல்லையாமா?’ கதர் வேக்ஷ்டி சட்டை ஒன்று கேட்டது.’ஏன் கேட்கும் போது இருக்கரானு கேக்க மாட்டீங்களா?’ சுஜிதா அரட்டினாள். ‘எம்.எல்.ஏ சார் இருக்காராமா?’ கதர் வேக்ஷடி சலைக்கவில்லை. ‘இல்லை. பெரிய வீட்டில் இருப்பார்’பட்டென்று சொல்லிவிட்டு சட்டன்று கதவைச் சாத்தினாள் சுஜிதா.

உள்ளே வந்து குமுதத்தை எடுத்து மறுபடியும் அரசு பதில்களைப் படிக்கத் துடங்கினாள். ‘யாரும்மா வெளியில?’ உள்ளே இருந்து குரல் கேட்டது,’தெரியலைம்மா’ பக்கத்தைத் திருப்பினாள். ‘எதிர்பாராத திருப்பம்’ சிறுகதை பிரசுரமாகி இருந்தது. படிக்கத் துடங்கினாள்.

************************

ணி எட்டாகிறது. இன்னும் என்னடா தூக்கம். உன் பிரண்டு பிரகாக்ஷ் வந்திருக்கான்’ காபியை வைத்துவிட்டு அக்கா போனாள். சுரேக்ஷ் கண் முழித்துப் பார்த்தான். வெயில் சுள்ளென்று அடித்துக் கொண்டிருந்தது மொட்டை மாடியில். எழுந்து முகத்தைக் கழுவிக்கொண்டு கிழே போனான். பிராசாத் பேப்பர் பார்த்துக் கொண்டிருந்தான். ‘வாடா. எப்போ வந்த?’ ‘இப்போத்தான். என்னாடா இன்னும் தூக்கம், மேட்ச் இருக்கு, மறந்துட்டியா?’ ‘பொருடா, அப்பா வெளியே கிளம்பட்டும்’ என்று சொல்லிக்கொண்டே டீவியை ஆன் செய்து விட்டு குளிக்கப்போனான் சுரேக்ஷ்.

குளித்து சாப்பிட்டுவிட்டு பாஸ் வேம்ப்பையர் கிரிக்கட் பேட்டை எடுத்துக் கொண்டு வெளியே கிளம்பும் வேளையில் ‘டேய் சுரேக்ஷ், ஒழுங்கா அப்பா மதியம் சாப்பிட வருவதற்குள் வந்திடு, அப்புறம் நல்லா வாங்கிக்கட்டிக்கிடாதே’ அம்மாவின் எச்சரிக்கையையும் பொருட்படுத்தாமல் பிராசாத்தின் ஸ்ப்லண்டரில் தொத்திக் கொண்டான். ‘பிராசாத் வண்டியை நிறுத்து பால் வாங்கனும்’ வண்டி தன்ராஜ் ஸ்டோரின் முன் நின்றது.’வாடா சுரேக்ஷ், என்ன கிரிக்கட் பாலா?’ என்று கேட்டான் தன்ராஜ்.சுரேக்ஷ¤க்கு நண்பன். உறவினனும் கூட. ‘ஆமா தன்ராஜ் போய் எடுத்திட்டு வா.’

‘ஒரு ஒன் குயர் அன்ரூல்ட் நோட்புக் கொடுங்க’ தேனில் குழைத்து எடுத்தாற் போல் ஒரு குரல் கேட்கவே, சுரேக்ஷ் திரும்பிப் பார்த்தான். ‘அழகிய இருவிழி என்னைத் தொட என்னைத்தொடப் பார்த்ததே ஹ¤…ஹ¥…’ காற்றில் அவள் கேசம் படபடத்தது. ‘நெரிசலில் நடுவினில் கவிதையின் தரிசனம் நீளுதே..ஹ¤…ஹ¥’. அளவாக அழகாக செதுக்கப்பட்ட நாசி. அதற்குக் கீழே வரைந்தார் போல உதடு. ‘நுரைதொட்டு கரைதொட்டு புது வெள்ளம் மனதினில் பாயுதே..ஹ¤..ஹ¥!’ ‘ஹாய்’ என்றான் சுரேக்ஷ். பதில் இல்லை. சுரேக்ஷ் சுற்றும் முற்றும் பார்த்தான். மறுபடியும் ‘ஹாய்’ என்றான். ம்ம்ஹ¤ம். ‘உங்க பேர் என்ன?’ ம்ம்ஹ¤ம். பதில் இல்லை பார்க்கவும் இல்லை. நோட்டை வாங்கிக் கொண்டு விறு விறுவென்று நடந்து சென்று தன் சன்னியை ஸ்டார்ட் செய்தாள்,அந்தப் பெண்.

சுரேக்ஷ் பிரசாத்திடமிருந்து சாவியைப் பறித்து, ஸ்ப்லண்டரை ஸ்டார்ட் செய்தான். அவளைப் பின் தொடர்ந்தான்.

விரட்டிச் சென்ற சுரேக்ஷ், சட்டென்று அவள் பைக்கின் முன்னால் கட் அடித்து நிறுத்தினான். அந்தப் பெண் பயத்தில் உலன்றது. நல்ல வேளை கழே விழ வில்லை. சுரேக்ஷ் வருத்தப்பட்டான். மண்டும் ஸ்டார்ட் செய்தான். சிறிது நேரம் கழித்து அவளும் பின் தொடர்ந்தாள்.இந்த முறை அவளின் அருகில் பைக்கில் சென்று கொண்டே ‘உங்க பேர் என்னனுதானே கேட்டேன்’ என்றபடி அவளது அவளது பைக்கை ஒதுக்கினான். அந்த பெண் ரோட்டை விட்டு மண்ணில் இறங்க வேண்டியது ஆயிற்று, வேறு வழியின்றி அந்த் பெண் பைக்கை நிறுத்தி பேந்த பேந்த விழித்தது.

‘ஏய் என்னாப்பா அங்க?’ இரண்டு பேர் கேட்கவும் சுரேக்ஷ் வண்டியை ஸ்டார்ட் செய்து பறந்தான். சிறுது தூரம் சென்று திரும்பிப் பார்த்தான். அந்தப் பெண் அங்கேயே நின்று கொண்டிருந்தது. தன்ராஜ் கடை. சுரேசும், பிரசாத்தும் அமர்ந்திருந்தனர். ‘சுரேக்ஷ், அந்தப் பொண்ண விரட்டிட்டுப் போனியே என்னாச்சு?’ சுரேக்ஷ் ‘ ஒன்னும் ஆகலை, பேர் கேட்டேன்உடனே அழ ஆரம்பித்து விட்டாள்’ என்றான். ‘என்கிட்ட கேளு நான் சொல்றேன். அந்தப் பெண் பெயர் சுஜிதா. நம்ம ஊர் தனபதி எம்.எல்.ஏ வோட பொண்ணு. டேஞ்சர் பார்ட்டி.அவங்கப்பா பயங்கரமானவன், பார்த்து நடந்துக்கோ.’ சுரேக்ஷ¤க்கு அடி வயிற்றில் புளியைக் கரைத்தது. ‘அந்தப் பெண் நம்மை அடயாளம் கண்டுக்குமோ?’

லைவாணித் தியேட்டர். திருநகர் இரண்டாவது நிறுத்தம். சுரேக்ஷ் மற்றும் பிராசாத்தின் நண்பர் கூட்டம் அரட்டைக் கச்சேரி ஆரம்பித்திருந்தது.பள்ளிக்கூடம் விடும் நேரம். சுரேக்ஷ் மட்டும் உன்னிப்பாக எதையோ கவனித்துக்கொண்டிருந்தான். நேரிசல் மிகுந்த அந்த சாலையின் மறுபுறம் சுஜிதா சன்னியை விட்டு இறங்கிக்கொண்டிருந்தாள். சுற்றும் முற்றும் பார்த்தாள். பின் சுரே¨க்ஷப் பார்த்தாள். வண்டியை உருட்டிக் கொண்டு போய் மரத்தின் அடியில் நிறுத்தினாள்.சுரேக்ஷ் பிராசாத்தை தட்டி அவளைக் காண்பித்தான்.சுஜிதா கைப்பையில் எதையோ தேடி பின் ஒன்றை வெளியில் எடுத்தாள். செல்போன்.சுஜிதா நம்பர்களை அழுத்தி காதில் வைத்தாள். எதோ பேசினாள். ‘டேய் சுரேக்ஷ், அந்த பொண்ணு நடந்ததை எல்லாம் அவங்க அப்பாகிட்ட சொல்லி உன்னைக் காட்டிக் கொடுக்கப்போகுது டா! வா, போயிடலாம்’ என்றான் பிரசாத். நடந்ததை கேட்ட பாதி நண்பர் கூட்டதைக் காணவில்லை. அந்தப் பெண் இவர்களையே வெறித்துக் கொண்டிருந்தது.

சிறிது நேரத்தில், சீறிப் பாய்ந்து ஒரு டாடா சுமோ வந்து நின்றது. உள்ளேயிருந்து ஆட்கள் இறங்கினார்கள்.சுஜிதாவை நோக்கிச் சென்றனர்.சுரேக்ஷ்,பிரசாத்தைத் தவிற அனைவரும் எஸ்கேப். அந்தப் பெண் இவர்களை நோக்கிக் கையைக் காண்பித்தது. பின் சுமோவில் ஏறிக் கொண்டது.பிரசாத்தும் இனி நிற்பது டேஞ்சர் என்று ஓடி விட்டான்.
சுமோவில் வந்தவர்களில் ஒருவன் சுஜிதாவின் சன்னியைத் தள்ளிக் கொண்டு சாலையைக் கடந்து இவனை நோக்கி வந்தான்.சுரேக்ஷ் ஒன்றும் புரியாமல் விழிக்க, வந்தவன் சாலையைக் கடந்து, இவனுக்குப் பின்னால் சென்றான். சுரேக்ஷ் திரும்பிப்பார்க்க ஒர்க்க்ஷ¡ப். சுஜிதாவின் வண்டி டயர் பங்சர்.

சுரேக்ஷ¢ற்கு உயிர் வந்தது.

************************************

தையைப் படித்து முடித்த சுஜிதா வெளிறினாள். மறுபடியும் காலிங் பெல் சத்தம் கேட்டது. குமுதத்தை வைத்து விட்டு, எழுந்து போய் கதவைத் திறந்தாள். தனபதி.’போய்க் கொஞ்சம் தண்ணர் கொண்டுவாம்மா’ என்று சொல்லிக் கொண்டே வந்து சோபாவில் அமர்ந்தார் தனபதி. எதிரே டீ பாயில் இருந்த குமுதத்தைப் பிரித்தார். ‘எதிர் பாராத திருப்பம்’ கதை தெரிந்தது. படிக்கத் துடங்கினார்.

************************************

பிராசாத்தும் சுரேக்ஷ¤ம் கோவிலில் உட்கார்ந்திருந்தனர். சுரேக்ஷ¢ன் கையில் மாவுக்கட்டுப் போடப்பட்டிருந்தது. தூரத்தில் சுஜிதா தெரிந்தாள். சுஜிதாவைக் கண்டதும் சுரேக்ஷ் எழுந்து காலை இழுத்து இழுத்து நடந்தான். கட்டு என்னமோ கையில் தான். சுரே¨க்ஷப் பார்த்துவிட்ட சுஜிதா முதலில் தயங்கி நின்றாள். பின் மெதுவாக நடந்து இவர்களிடம் வந்தாள். பிராசாத்தப் பார்த்தாள். பிரசாத் சுரே¨க்ஷப் பார்த்தான். சுரேக்ஷ் சுஜிதாவைப் பார்த்தான். காற்றில் கேசம் பறந்தது. ‘நுரை தொட்டு கரை தொட்டு புது வெள்ளம் மனதினில் பாயுதே..ஹ¤..ஹ¥’ ‘ஹாய் சுரேக்ஷ் சாரிப்பா, எல்லாம் என்னாலதான். என்னை மன்னிச்சிடுங்க ப்ளீஸ். நானாக எதையும் சொல்லவில்லை. கதையைப் படித்து விட்டு அப்பாவே புரிந்து கொண்டார். நான் எவ்வளவு தடுத்தும் கேட்கவில்லை. ஆனாலும் உங்களுக்கு தைரியம் தான். பேரைக் கூட மாற்றாமல் எழுதியிருக்கீங்களே. மறுபடியும் சாரி. இந்தாங்க பிரசாதம். திருநீரை எடுக்கப் போய், சுஜிதவின் கைகளை இறுகப் பற்றிக் கொண்டான் சுரேக்ஷ். சிரித்த சுஜிதாவும் கைகளை விடுவிக்க முயற்சிக்கவில்லை. பிரசாத் இடத்தைக் காலி செய்தான்.

*******************

ல்லப்பா என்னால் வேறு ஒருவரைக் கல்யாணம் செய்துக்க முடியாது’ என்றாள் சுஜிதா. பளார் என்று அறை விழுந்தது.’நானும் படிச்சுப் படிச்சு கிளிப்பிள்ளைக்குச் சொல்றமாதிரி சொல்லிக்கிட்டு இருக்கிறேன், நீயும் கிளிப்பிள்ளை மாதிரி சொன்னதையே சொல்றியா?’ தனபதி ருத்ர மூர்த்தியாகியிருந்தார். ‘பாவம் படிக்கிற பையன்னு உயிரோட விட்டா, என்கிட்டையே விளையாடுரானா? அவன் உயிரோடு இருந்தால் தானே நீ அவனைக் கல்யாணம் செய்துப்ப?’ ‘பாக்கியம்’ மனைவியை அழைத்தார். ‘இவளை ஒழுங்கா உள்ள பூட்டி வை. இன்னும் ஒரு வாரத்தில இவளுக்கும் எம்.எல்.ஏ. தனசேகரன் பையனுக்கும் கல்யாணம். நான் அந்த பயலப் பார்த்துட்டு வாரேன்’ அனல் பறக்க வெளியேரினார் தனபதி.

* ***********

செல்போன் ஸ்கிரீனில் ‘காலிங் சுஜிதா…..’ என்று தெரிந்தது. பதற்றத்துடன் செல்போனைக் காதில் வைத்துக் கொண்டான் சுரேக்ஷ். ரெயில்வே ஸ்டேசன் இரைச்சலாக இருந்தது. ‘கமான்…கமான்…சுஜிதா..டேக் இட்’ செல்போன் சத்தம் கேட்டு பையில் செல்போனைத் தேடினாள் சுஜிதா.

தடக்..தடக்..தடக்.தடக்..பேரிரைச்சலோடு ரயில் ஒன்று சென்றது. செல்போனைக் காதிற்குக் கொடுத்தாள்.’ம்…ம்ம்…ம்…ம்…சரி. டோன்ட் ஒரி டா. நான் இன்னும் 10 நிமிடத்தில் ஸ்டேசனில் இருப்பேன்…’

ரெயில்வே க்ராசஸிங் கேட் திறந்தது. ஆட்டோக்காரான், பீடியை அனைத்து விட்டு ஒடி வந்து ஆட்டோவை ஸ்டார்ட் செய்தான். ஆட்டோ நகர்ந்தது. சுஜிதா பின் ஜன்னல் வழியே வெளியே பார்த்தாள். பிரசாத்தும், மற்றும் பல சுரேக்ஷ¢ன் நண்பர்களும் பைக்கில் பின்னால் வந்து கொண்டிருந்தனர்.
திருப்பரங்குன்றம் மலை அவளை விரட்டிக் கொண்டு வந்தது;

********************************************************