புவியீர்ப்பு விசைக்கு கட்டணம் : அ முத்துலிங்கம் எழுதிய கதையும் அதை சார்ந்த ஒரு செய்தியும்

சமீபத்தில் அ.முத்துலிங்கம் அவர்கள் எழுதிய ஒரு சிறுகதையை படித்தேன். கதையின் பெயரும் அது வெளிவந்த இதழும் சரியாக நினைவில் இல்லை. தீராநதி / காலச்சுவடு / உயிர்மை இவற்றுள் ஏதாவது ஒன்றாக இருக்கலாம்.அதைப் பற்றி பதிவிட வேண்டும் என்று எடுத்து வைத்திருந்தேன். இன்று அந்த கதையில் வருவதைப் போன்ற ஒரு செய்தியை நாளிதழில் பார்த்தபொழுது சட்டென மீண்டும் நினைவுக்கு வந்தது அந்த கதை. என் வீட்டில் தேடியபொழுது அந்த கதை எங்கோ சென்று பதுங்கிக்கொண்டு விட்டது. நன்றாயிருக்கிற நம்மை (கதயை) பற்றி எழுதுகிறேன் பேர்வழி என்று கடித்து குதறி துப்பிவிடுவான் என்கிற பயம் கூட காரணமாக இருக்கலாம்.

கதை நமது வாழ்க்கையையும் நம்மை வழி நடத்துகிற அரசையும் நையாண்டி செய்கிறது. இந்த மாதிரியான சிந்தனை சிலருக்கு தான் வாய்க்கும். அ.முத்துலிங்கம் இன்றைய தமிழ் இலக்கியத்திற்கு இலங்கை அளித்திருக்கிற கொடை என்று யாரோ சொல்லியிருந்தார்கள். நான் அதை வழிமொழிகிறேன்.

கதையின் நாயகனுக்கு பில் கட்ட சொல்லி அரசிடமிருந்து கடிதம் வந்திருக்கிறது. பில்லை பிரித்து பார்த்த நாயகன் அதிர்ச்சிக்குள்ளாகிறான். கிரடிட் கார்டு பில்லா என்று நீங்கள் கேட்டால், இல்லை. அதெல்லாம் நமக்குத்தான் வரும். என்ன பில்? புவியீர்ப்பு விசைக்கான பில். என்னது?! புவியீர்ப்பு விசையை பயன்படுத்துவதற்கு அரசுக்கு பணம் கட்டவேண்டுமா? ஆமாம். கதையில் அரசு மக்கள் பயன்படுத்தும் புவியீர்ப்பு விசையை கணக்கில் கொண்டு மாதமாதம் ஒரு பில் அனுப்புகிறது. நாயகன் பணம் கட்ட மறுக்கிறார். அரசு நீங்கள் தண்ணீருக்கு கட்டணம் செலுத்துகிறீர்கள். மின் கட்டணம் கட்டுகிறீர்கள். காற்றுக்கு கூட (சுத்தீகரிப்பு) கட்டணம் கட்டுகிறீகள். ஏன் தரைக்கு கூட கட்டணம் கட்டுகிறீர்கள். பிறகு புவிஈர்ப்பு விசைக்கு கட்டணம் கட்டுவதற்கு மட்டும் என்ன யோசனை என்று கேட்கிறது. அதற்கு நாயகன் : காற்றை சுத்தம் செய்கிறீர்கள். தண்ணீரை சுத்தம் செய்கிறீர்கள். அதனால் கட்டணம் கட்டுகிறோம். புவியீர்ப்பு விசைக்கு நீங்கள் என்ன செய்கிறீர்கள்? என்று கேட்கிறார். அதற்கு அரசு: புவியீர்ப்பு விசை எவ்வளவு முக்கியம் தெரியுமா? அது இல்லாவிட்டால் பூமியே சுழலாது. அதனால் நீங்கள் கண்டிப்பாக கட்டணம் செலுத்தவேண்டும் என்று வாதிடுகிறது. நமது நாயகன் விடாமல்: தண்ணீருக்கு பில் கட்டவில்லையென்றால் தண்ணீரை நிறுத்திவிடுகிறீர்கள். மின் கட்டணம் கட்டவில்லையென்றால் மின்சாரத்தை தடைசெய்து விடுகிறீர்கள். புவியீர்ப்பு விசைக்கு கட்டணம் கட்டவில்லையென்றால் நீங்கள் என்ன செய்யமுடியும்? என்று புத்திசாலித்தனமாக கேட்கிறார். (என்னை மாதிரியே யோசிக்கிறாரு!) அதற்கு அந்த அரசு அதிகாரி, சிரித்து கொண்டே சொல்கிறார். இப்படித்தான் ஒரு அதிமேதாவி (நான் இல்லப்பா!) சொன்னான், அவனை என்ன செய்தோம் தெரியுமா? அவனை ஒரு சாட்டிலைட்டில் அமர்த்தி புவியீர்ப்பு விசை இல்லாத இடத்திற்கு கொண்டு சென்று விட்டுவிட்டோம். அப்படியே அவன் பூமியை சுற்றி வந்து கொண்டிருந்தான். பிறகு அவன் புவியீர்ப்பு விசையின் இன்றியமையாமையை உணர்ந்த பிறகு அவனை கொண்டுவந்து பூமியில் விட்டோம் என்கிறார். ஐயா ஓசியில் பூமியை சுற்றி பார்க்கலாம் என்று நம் நாயகன் நப்பாசையில் இருக்க, அந்த அரசு அதிகாரி மேலும் ஒரு குண்டைத் தூக்கி போடுகிறார்.

அவ்வாறு பூமியை சுற்றி வருவதற்கு அவருக்கான செலவு 1000000000 மில்லியன் டாலர் (எனக்கு தொகை ஞாபகமில்லை. இது போன்ற ஒரு பெரிய தொகை தான்) அவரால் கண்டிப்பாக இந்த ஜென்மத்தில் கட்ட முடியாது. எனவே அவரது மகன்களிடம் (பேரன்கள் காலத்திலும்) இந்த தொகையை அவர்கள் எப்படியும் கட்டி முடிக்கவேண்டும் என்று எழுதி வாங்கியிருக்கிறது அரசு. இதை கேட்டு மிரண்டு போன நம் நாயகன் கண்டிப்பாக நாளைக்கே பணத்தை கட்டிவிடுகிறேன் என்று சொல்லி அவ்வாறே கட்டியும் விடுகிறார்.

அடுத்த மாதமும் புவியீர்ப்பு விசை பில் வருகிறது. எடுத்து பார்த்தவருக்கு அதிர்ச்சி. போன மாசத்தை விட இந்த மாசம் அதிகமாக இருக்கிறது பில். கடுப்பான நம் நாயகன் புவியீர்ப்பு மேற்பார்வை அலுவலகத்துக்கு தொடர்பு கொள்கிறார். தொலைபேசியில் வந்த அலுவலர், புகாரை விசாரித்து விட்டு, ஏன் கட்டணம் கூடியிருக்கிறதென்று சொல்லுகிறார்: உங்கள் மனைவி போன மாசத்தை விட இந்த மாசம் நிறைய வெயிட் (வெயிட் கூடினால், புவியீர்ப்பு விசை அதிகம் தேவைப்படும்!) போட்டிருக்கிறார். மேலும் உங்களுக்கு வெளிநாட்டிலிருந்து விருந்தினர்கள் வந்திருக்கிறார்கள் அதனால் தான் இந்த மாதம் உங்களுக்கு புவியீர்ப்பு கட்டணம் கூடியிருக்கிறது என்கிறார்.

***

நான் நாளிதழில் பார்த்த செய்தி: சிங்கப்பூர் சம்பந்தப்பட்ட செய்தி. சிங்கப்பூரில் ஒரு புது கார் வாங்கினீர்கள் என்றால் அதை பத்து வருடங்களுக்கு தான் உபயோகப்படுத்த முடியும். பத்து வருடங்களுக்கு மேல் என்றால் scrap தான். சிங்கப்பூர் அரசு, மக்களை கார் உபயோகப்படுத்த விடாமல், public transportஐ support செய்கிறது. அதற்காக இந்தமாதிரியான சட்டதிட்டங்கள். கொஞ்ச நாளைக்கு முன்ன, சிங்கப்பூரில ஒரு சர்வே நடந்தது. சிங்கப்பூர் மக்களின் தேசப்பற்று எப்படி இருக்கிறது என்று சும்மா ஒரு சர்வே நடத்தியது Strait Times. மக்களுக்கு தேசிய கீதத்தை விட நகரில் எங்கெங்கு ERP உள்ளது என்பது மனப்பாடமாக தெரிந்திருந்தது.

நேற்று (March 31 2008) The Straits Times (HOME) இல் வெளிவந்த செய்தி இது:
மக்களை கார் ஓட்டுவதிலிருந்து விடுவித்து எப்படி Public Transportஇல் போக வைக்கலாம் என்கிற Master Plan.

>> Planning a satellite-based system that charges drivers for the distance they travel.

புவியீர்ப்பு விசைக்கு கட்டணம் கட்டும் காலம் வெகுதூரத்தில் இல்லை என்றே எனக்கு தோன்றுகிறது.
***

PS: blogger ஏன் இப்படி படுத்துது?! Help பண்றேன் பேர்வழி என்று என்னை கடுப்பேத்துகிறது. Blog post text boxல யார் தமிழ் டைப்பிங் கேட்டா?! சும்மா ஏதாவது ஒரு வார்த்தையை கலர் மாத்தலாம் என்று select செய்தாலே it hangs.

வீடு மாற்றம் இல்லை, விளம்பரம், ஒரு கவிதை, ஒரு பல்ட்டி

 

***
Bloggerஇல் இருந்து wordpressக்கு மாறும் எண்ணத்தை கைவிட்டுவிட்டேன். இப்போதைக்கு வீடு மாற்றும் எண்ணம் இல்லை. போனவாரம் எல்லாம் என்ன செய்வதென்று தெரியாமல் கொட்டகொட்ட முழித்துக் கொண்டிருந்தேன். Blogger to wordpress import tool எல்லாருக்கும் வேலை செய்யும் எனக்கு மட்டும் வேலைசெய்யாது. நானும் நிறைய தடவை முயற்சி செய்து பார்த்துவிட்டேன் முடியவில்லை. என்னிடம் 175 போஸ்ட்டுகள் தான் இருக்கின்றன. சரியாக எல்லாதடவையும் 87 போஸ்ட்டுகளே import ஆகிறது. இது பாதியிலே நின்று விட்டதால் பின்னூட்டங்களும் import செய்யப்படவில்லை. போங்கப்பா என்று விட்டுவிட்டேன். பின்னூட்டங்களை விட்டுவிட்டு போக மனமில்லை. மேலும் இருக்கிற பதிவுகளையும் அப்படியே விட்டுவிட்டு புதிதாக ஆரம்பிக்கவும் மனமில்லை. மனமிருந்தால் மார்க்கபந்து தான் ஆனா நமக்கு வேலை செய்யமாட்டேங்குதே!

***
கொஞ்ச காலத்துக்கு blogger தான் என்று முடிவாகிவிட்டபின், இருக்கிற தொடப்பத்த வெச்சு வீட்ட எப்படி சுத்தப்படுத்தறது என்று யோசிச்சேன். Labelsஐ பயன்படுத்தியே categories போட்டுவிட்டேன். மேலும் ஒவ்வொரு தொகுப்புக்கும் ஒவ்வொரு இடம் இடப்பக்கமும் வலப்பக்கமும் கொடுத்துட்டேன். ஆனால் அவை தற்சமயம் dynamic இல்லை. நாமளே தான் மாற்றவேண்டும். அது ஒன்றும் பெரிய விசயம் இல்லை. stumbleupon, digg this, del.ico.us போன்ற bookmarks சேர்க்கவேண்டும்.

***
வெளியே மழை பெய்து கொண்டிருக்கிறது. எனக்கும் தூக்கம் வருகிறது. இதோ ஒரு கவிதை:

மழை என்னும் பிராணி

திடீரென
விழித்த தூக்கத்தில்

உள்ளே வரத்துடிக்கும்
ஒரு
பிராணியைப்போல
கதவுகளைப்
பிறாண்டிக்கொண்டிருந்தது
மழை

என்
தலையணைக்கடியிலிருந்த
கனவுகளையும்
அழைத்துக்கொண்டு
நனையப்போயிருக்கிறது
தூக்கம்

-த அகிலன்

ஆமாம், நனையப்போன தூக்கம், வேகமாக திரும்பி மீண்டும் என்னை தலையணைக்கு அழைக்கிறது. கனவுகள் எனக்காக காத்திருக்கின்றன.

***

ஒரு “நானா சொன்னேன்?” வகை:
டிசம்பர் 14 2007
“It is necessary for the sake of maintaining peace and security in the country”
DATUK SAMY VELLU speaking a day after the five Hindraf leaders were detained for organising a massive rally last nov 25 to protest against government policies which allegedly discriminate against Indian Community.

மார்ச் 30 2008
“This is done in fairness, sympathy and also we feel that we as Indians have to do something about it. It is not a publicity stunt”
DATUK SAMY VELLU, calling for detainee’s release yesterday.

நடந்து முடிந்த தேர்தலில் சாமிவேலு தோல்வியைத் தழுவினார் என்பது குறிப்பிடத்தக்கது.

***

வீடு மாற்றம் இல்லை, விளம்பரம், ஒரு கவிதை, ஒரு பல்ட்டி

Bloggerஇல் இருந்து wordpressக்கு மாறும் எண்ணத்தை கைவிட்டுவிட்டேன். இப்போதைக்கு வீடு மாற்றும் எண்ணம் இல்லை. போனவாரம் எல்லாம் என்ன செய்வதென்று தெரியாமல் கொட்டகொட்ட முழித்துக் கொண்டிருந்தேன். Blogger to wordpress import tool எல்லாருக்கும் வேலை செய்யும் எனக்கு மட்டும் வேலைசெய்யாது. நானும் நிறைய தடவை முயற்சி செய்து பார்த்துவிட்டேன் முடியவில்லை. என்னிடம் 175 போஸ்ட்டுகள் தான் இருக்கின்றன. சரியாக எல்லாதடவையும் 87 போஸ்ட்டுகளே import ஆகிறது. இது பாதியிலே நின்று விட்டதால் பின்னூட்டங்களும் import செய்யப்படவில்லை. போங்கப்பா என்று விட்டுவிட்டேன். பின்னூட்டங்களை விட்டுவிட்டு போக மனமில்லை. மேலும் இருக்கிற பதிவுகளையும் அப்படியே விட்டுவிட்டு புதிதாக ஆரம்பிக்கவும் மனமில்லை. மனமிருந்தால் மார்க்கபந்து தான் ஆனா நமக்கு வேலை செய்யமாட்டேங்குதே!***
கொஞ்ச காலத்துக்கு blogger தான் என்று முடிவாகிவிட்டபின், இருக்கிற தொடப்பத்த வெச்சு வீட்ட எப்படி சுத்தப்படுத்தறது என்று யோசிச்சேன். Labelsஐ பயன்படுத்தியே categories போட்டுவிட்டேன். மேலும் ஒவ்வொரு தொகுப்புக்கும் ஒவ்வொரு இடம் இடப்பக்கமும் வலப்பக்கமும் கொடுத்துட்டேன். ஆனால் அவை தற்சமயம் dynamic இல்லை. நாமளே தான் மாற்றவேண்டும். அது ஒன்றும் பெரிய விசயம் இல்லை. stumbleupon, digg this, del.ico.us போன்ற bookmarks சேர்க்கவேண்டும். .

***
வெளியே மழை பெய்து கொண்டிருக்கிறது. எனக்கும் தூக்கம் வருகிறது. இதோ ஒரு கவிதை:

மழை என்னும் பிராணி

திடீரென
விழித்த தூக்கத்தில்

உள்ளே வரத்துடிக்கும்
ஒரு
பிராணியைப்போல
கதவுகளைப்
பிறாண்டிக்கொண்டிருந்தது
மழை

என்
தலையணைக்கடியிலிருந்த
கனவுகளையும்
அழைத்துக்கொண்டு
நனையப்போயிருக்கிறது
தூக்கம்

-த அகிலன்

ஆமாம், நனையப்போன தூக்கம், வேகமாக திரும்பி மீண்டும் என்னை தலையணைக்கு அழைக்கிறது. கனவுகள் எனக்காக காத்திருக்கின்றன.

***

ஒரு “நானா சொன்னேன்?” வகை:
டிசம்பர் 14 2007

It is necessary for the sake of maintaining peace and security in the country

DATUK SAMY VELLU speaking a day after the five Hindraf leaders were detained for organising a massive rally last nov 25 to protest against government policies which allegedly discriminate against Indian Community.

மார்ச் 30 2008

This is done in fairness, sympathy and also we feel that we as Indians have to
do something about it. It is not a publicity stunt

DATUK SAMY VELLU, calling for detainee’s release yesterday.

நடந்து முடிந்த தேர்தலில் சாமிவேலு தோல்வியைத் தழுவினார் என்பது குறிப்பிடத்தக்கது.

***

படித்த முட்டாள்கள்

படித்த முட்டாள்களே, ப்ளீஸ் உங்கள் முட்டாள் தனத்தை இத்துடன் நிறுத்திக்கொள்ளுங்கள்.

True Known என்றொரு முட்டாள், ஏதோ ஒரு தேவையில்லாத விசயத்தை தொகுத்து மீண்டும் மீண்டும் அனுப்பிக் கொண்டிருக்கிறார். அவரது IP Addressஐ கண்டுபிடித்து cyber-crimeஇல் புகார் செய்வது அவ்வளவு ஒன்றும் பெரிய கஷ்டமில்லை. (புகார் செய்தால் ‘போப்பா போய் பிள்ளைகள படிக்கப்போடு’ என்று சொல்வார்கள் என்பது நிச்சயம்!) அது எனக்கு தேவையில்லாத வேலையும் கூட. அவர் தான் ஏதோ பொழுதுபோகாமல் அனுப்புகிறார் என்றால், அதற்கு பதிலாக ccயில் இருக்கிற எல்லாரும் “remove my mailid” என்று ccயில் இருக்கிற மற்ற எல்லோருக்கும் “reply all” போட்டால் என்ன அர்த்தம்? உங்கள் சம்மதத்தை கேட்டுக்கொண்டா எல்லாரும் மெயில் அனுப்பிக்கொண்டிருக்கிறார்கள்? நீங்கள் remove my id ன்னு சொன்னா உங்க ஈமெயில் ஐடியை நீக்கி விடவா போகிறார்கள்? Be sensible. ஏன் இப்படி கொஞ்சம் கூட யோசிக்காமல் சகட்டுமானிக்கு spam அனுப்பிக்கொண்டிருக்கிறீர்கள்? சுத்த சின்னபிள்ள தனமால்ல இருக்கு. True Known அனுப்பறது ஒரு மெயில், இவிங்க பதிலுக்கு அனுப்புறது நாப்பதிரெண்டு மெயில். கஷ்டம்.

சிரிப்பு போலீஸ்!

எதற்கு இந்த வீண் சண்டை? யார் பெரியவர் யார் சிறியவர்? என்னுடைய மெயில் ஐடி எப்படி ஐயா உங்களுக்கு கிடைத்தது? ஒரு தேவையில்லாத மெயில் சிக்குன மெயில் அடிக்கெல்லாம் அனுப்பப்பட்டிருக்கிறது. உங்களுக்கு வந்துச்சா? யாருக்கு வேணும் உங்க சண்டை? True Known அப்படீங்கற True Unknown தான் இந்த மெயில அனுபிச்சது. சத்தியமாக எனக்கு அந்த anonymous mail வரும்வரை இதில் குறிப்பிட்டிருந்த எந்த சண்டையும் தெரியாது. வலைப்பூக்களில் நடக்கும் சண்டைகளை நான் கவனிப்பதே கிடையாது. அப்போ எனக்கு இந்த மெயில் அவசியமா? அவ்ளோ பெர்ர்ர்ரிய cc list. இதுல காமெடி என்னன்னா, வந்த மெயிலே spam, அதுக்கு நிறைய பேர் மறுமடியும் எல்லாருக்கும் cc போட்டு ‘remove myid’ன்னு சொன்னது. இது மட்டும் spam இல்லியா? உங்களையெல்லாம் பார்க்க சிரிப்பு போலீஸ் மாதிரி தான் இருக்கு.

இப்படி வர்ற மெயிலால என் மெயில் பாக்ஸ் நிறைந்து விடும் என்பதற்காக நான் சொல்லவில்லை. ஒரு தேவையில்லாத செய்தியை ஏன் எல்லாருக்கும் அனுப்புகிறீர்கள்? இதே போல் புத்தாண்டு வாழ்த்து வந்தது சரமாக வந்தது. SPAMஆ இருந்தாலும் இத்தனை பேர் வாழ்த்துக்களை பகிர்ந்து கொள்வதை பார்க்கும் பொழுது சந்தோஷமாகத்தான் இருந்தது. வாழ்த்துக்களுக்கு எண்ணிக்கையில்லை. ஆனால் ஒருவர் மேல் ஒருவர் தேவையில்லாமல் வீண் பழி சுமத்துவது எதற்கு? ஏன் இந்த கொலைவெறி? ஒற்றுமையாக இருப்போம் தோழர்களே. கருத்துவேறுபாடுகள் இருக்கலாம். ஆனால் துவேஷம் வேண்டாமே. ப்ளீஸ்.

நாம் அனைவரும் ஒருங்கிணைந்து ஆரோக்கியமானதொரு விவாத கருத்துப் பறிமாற்ற மேடையாக மட்டுமே தமிழ் வலைப்பூவை வைத்திருப்போம்.

***

ஜெயமோகனின் (ஆளாளுக்கு ஜெயமோகனைப் பற்றி பேச ஆரம்பிச்சுட்டாய்ங்கப்பான்னு நீங்க புலம்புறது என் காதுல விழுது!) கடிதத்தை மதி கந்தசாமியின் வலைப்பூவில் பார்த்தேன். ஜெயமோகன் அவரது கோபத்தை (அல்லது over-confidence!) கொக்கரிப்பாக வெளிபடுத்தியிருக்கிறார். அவர் வலைப்பக்கமய்யா அது. அவருக்கு என்ன தோணுதோ அத அவர் எழுதுவார். (கூடிய விரைவில் வலைப்பூக்களை கட்டுப்படுத்துவதற்கு கடினமான சட்டதிட்டங்களை கொண்டுவரலாம்.) ஆனா இதுவும் எங்க வலைப்பக்கமுல்ல? நாங்களும் எழுதுவம்ல. எழுதுவம்ல!

நான் மதிக்கு எழுதிய பின்னூட்டத்தின் சாரம் இங்கே::
ஜெயமோகனின் உலகம் தருக்கம் தத்துவம் மற்றும் ஆழமான ?! கேள்விகள் சார்ந்தது என்று அவரே உருவாக்கிக் கொண்டார். தத்துவமும் தர்க்கமும் கொக்கரிப்பில் முடிந்து சக மனிதர்களை மண்ணில் இட்டு மிதிக்கத்தான் செய்யும் என்றால் அந்த தத்துவமும் தர்க்கமும் எதற்கு? தத்துவமும் தர்க்கமும் வாழ்க்கையை புரிந்து கொள்ள செய்யவேண்டும். வாழ்க்கையை புரிந்து கொண்டால் “தான்” இருக்காது.

“நான் தமிழ் வரலாற்றில் என்றும் இடம்பெறும் ஆளுமை” என்று அவர் சொல்லியிருப்பது “தான்” என்பதில்லாமல் வேறு எதைக் காட்டுகிறது? அப்ப நீங்க சொல்லும் உங்க தத்துவமும் தர்க்கமும் யாருக்கு? உயிரோடு இருக்கும் பொழுதே தானே தனக்கு சிலை வைத்துக்கொண்டது போலத்தான் இவரது ஸ்டேட்மன்ட்டும் இருக்கிறது.

ஆனால் இதற்காக அவர் புத்தகத்தையெல்லாம் படிக்காமல் நான் இருக்கமாட்டேன். Reading is pleasure.

உங்களையெல்லாம் பாத்தா எனக்கு சிரிப்பு போலீஸ் மாதிரிதான் இருக்கு” ன்னு சொல்லிட்டு உடு ஜூட்.

***

படம்-நியூஸ்-புத்தகம்-கா·பி

ரிக்கி பாண்டிங்,ரஜினிகாந்த், IBN-CNN, ஜல்லிக்கட்டு, மும்பை மானபங்கம்

There’s a breathless hush in
the class tonight
Ten to make and the match to win
A bumping pitch and a
blinding light.
An hour to play, and
the last man in.
And it’s not for the sake of a
ribboned coat.
Or the selfish hope of a
season’s fame,
But his captain’s hand on
his shoulder smoke
Play up! Play up! And play
the game!

Henry Newbolt எழுதிய இந்த கவிதையை Ricky Ponting மனப்பாடம் செய்யவேண்டும். மனப்பாடம் செய்தால் மட்டும் போதாது, இதன் அர்த்தத்தையும் புரிந்துகொள்ளவேண்டும். விளையாட்டு என்றால் என்னவென்று தெரிந்துகொள்ள வேண்டும். மேலும் திடலில் ஒருவருக்கு ஒருவர் மரியாதை கொடுக்கவேண்டும் என்பதையும் நினைவில்கொள்ள வேண்டும்.

Chak de India திரைப்படத்தை BCCI சாருக்கானுக்கு ப்ரத்தியேகமாக போட்டுக்காட்டலாம். மேலும் சாருக்கானுடன் ஒரு சந்திப்பையும் ஏற்பாடு செய்யலாம். நடந்து முடிந்த சிட்னி டெஸ்ட் ஆஸ்திரேலியாவின் தெருச்சண்டை மனோபாவத்தை உலகுக்கு எடுத்துக்காட்டுவதாக அமைந்தது, ஆஸ்திரேலியாவின் மீது தீராத காண்டிலிருக்கும் மற்ற அணிகளுக்கு, மகிழ்ச்சியைத் தருவதாக இருந்திருக்கும்.

Peter English என்கிற ஆஸ்திரிலேய எடிட்டர், crickinfoவில் எழுதியிருப்பதை இங்கே பாருங்கள்:

“Somebody probably a preschool teacher, needs to explain simply to Ricky Ponting
about the damages that has been caused by his team during the Sydney Test”

ஆனால், விளையாட்டு விளையாட்டு தான், போர் இல்லை, என்கிற விசயத்தை இந்தியர்களாகிய நாம் சொல்வதற்கு தகுதி உடையவர்களா என்பதையும் இந்த நேரத்தில் சிந்திக்க வேண்டும். டோனி வீடு தாக்கப்பட்டதை இந்த நேரத்தில் நாமெல்லாம் நினைவில் கொள்ளவேண்டும்.

எனவே மேலே கொடுக்கப்பட்ட Henry Boltஇன் கவிதையை, ரிக்கி பாண்டிங் படிக்க வேண்டும். படித்து விட்டு, அவர் இந்தியர்களுக்கும் தாரளமாக forward செய்யலாம்.

ஆனாலும் கங்கூலி அவுட் ஆனது, கொஞ்சம் ஓவர்தான். அவுட் இல்லை என்று தீர்மானமாக நின்ற கங்கூலியைப் பார்த்து ரிக்கி பாண்டிங் கோஷ்டி சிரித்தது மேலும் எரிச்சலூட்டுவதாக அமைந்தது. அம்பையர்களே நீங்கள் தூங்குங்கள் தவறில்லை. Afterall, then and there, every one takes a nap, during his work. ஆனால் தூங்கி எழுந்தபின், third umpire, என்கிற ஒருவர் இருக்கிறார் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

***

BCCI, கடைசி மேட்சை கேன்சல் செய்யப்போகிறது, என்கிற அறிவிப்பு வெளியானதும், அவர்கள் எவ்வளவு பணம் ஸ்பான்ஸர்ஸ¤க்கு கொடுக்க வேண்டியது இருக்கும் என்கிற எண்ணம் எல்லார் மனதிலும் உதித்தது. எல்லாரும் ஒவ்வொரு கணக்கு போட்டனர். ஆனால் அந்த கணக்கில் என்னுடைய 25$ சேர்க்கப்பட்டிருந்ததா என்று தெரியவில்லை. நானும் தானயா subscribe பண்ணிருக்கேன்? எனக்கு யார் பணத்தை திருப்பி தருவா? என்கிற குழப்பம் என்னுள் இருந்தது. என் நண்பர்கள் யாவரும் அப்படி திருப்பித் தருவதற்கு வாய்ப்புகள் ரொம்பவும் கம்மி என்றே சொன்னார்கள். எனக்கு புரியவில்லை, ஏன் என்னுடைய பணமும் தானே முக்கியம். இந்த முறை பார்த்துவிடலாம் என்கிற ஆவலோடு இருந்தேன், ஆனால் BCCI மேட்ச் நடக்கும் என்கிற முடிவுக்கு சென்று விட்டது, கொஞ்சம் ஏமாற்றம் அளித்தது. ஆனால் ஆஸ்திரிலேயாவின் ரெக்கார்ட்டை இந்தியா முறியடிக்கப்போகிறது (மறுபடியும்!) என்கிற நினைப்பு வரும் பொழுது அந்த ஏமாற்றம் மறைந்து விடுவது என்னவோ உண்மைதான்.

Over Confidence! நமக்கு சூடு சொரணை இருக்கா இல்லியாப்பா?

இன்னிக்கு பட்டிமன்றத்துல கூட ராஜா சொன்னார்: இந்தியா ஜெயிக்கறதுக்கு ரொம்ப கஷ்டப்படுது, அப்படி ஜெயிக்கறமாதிரி போனாக்கூட பக்னர் வந்து பக்குன்னு அமுக்கிடறார்

***

ரஜினிகாந்த் ஷங்கர் படத்தில் மீண்டும் நடிப்பது ரெட்டிப்பு மகிழ்ச்சி. அவர் முதல்வனிலே நடித்திருக்க வேண்டியது. ஷங்கரின் தாக்கம் ரஜினியிடம் நிறையவே இருக்கிறது இப்பொழுது. He is aiming big, bigger than ever before. முதல்வனில் ரஜினி நடித்திருந்தால், பத்து வருஷத்தில் கண்டிப்பாக நிறைய மாற்றங்கள் நடத்திருக்கும். இந்நேரத்துக்கு ஒரு international ஹீரோவாக வளர்ந்திருப்பார். ரம்யாகிருஷ்ணனோடு அதிகமா ஆசைபடற ஆம்பள ஆப்பாயில் போடத்தெரியாத பொம்பளன்னு தத்துவம் பேசிக்கொண்டிருந்திருக்க மாட்டார்.

இப்பொழுதுதான், ரஜினிகாந்தை வடக்குப்பக்கத்து மக்கள் திரும்பிப்பார்க்க ஆரம்பித்திருக்கின்றனர். (அவங்க திரும்பிப் பார்த்தா என்ன, பாக்காட்டி நமக்கென்ன?) CNN-IBNல வந்த ஒரு செய்தி:

The third contender is ultimate style king Rajnikanth. It will be a travesty to
call him the ageing style king, because he showed in Sivaji-The Boss that age
just has nothing to do with it. For one, you cannot make out he is ageing. And
two, does it matter?

The film turned out to be a big blockbuster,
packing cinema halls even in the north. He can fight, sing and dance just as
well as the youngest Kapoor on the block — Ranbir ‘Saawariya’ Kapoor — if not
better: the kid can learn a few things from Rajnikanth.

அடெங்கப்பா “learn a few things from Rajnikanth” இதற்கு முன்னர் ரஜினிகாந்துக்கு இந்திய அளவில் ஒரு அங்கீகாரம் கிடைத்தது, தளபதி படத்தின் போது என்று தான் நான் நினைக்கிறேன். Filmfare அட்டையில் வெளிவந்த ரஜினிகாந்தின் அந்த புகைப்படம் தான், என்னுடைய, இதுநாள் வரையிலான favourite. அந்த படம் யாரிடமாவது இருந்தால் எனக்கு அனுப்பிவையுங்கள்.

ஒரு வைட் பைஜமா குர்தாவில் அழகாக கைகளை மடித்துவிட்டு சிரித்துக்கொண்டிருப்பார் ரஜினிகாந்த்.

***

CNN-IBN Indian of the year Listஇல் ரஜினிகாந்த் மற்றும் கங்கூலி ஆகிய இருவரும் வந்தது இனிய அதிர்ச்சி. இவர்கள் இருவரின் மீதும் எனக்கு நிறைய நம்பிக்கை உண்டு. இவர்கள் இருவரின் போராட்ட குணம் அனைவருக்கும் ஒரு பாடம். எந்த நிலையிலும் சோர்ந்து போகாமல், மீண்டும் எழுந்து வர முடியும் என்று நிரூபித்தவர்கள் இவர்கள் இருவரும். நான் ஓட்டு போட்டுட்டேன்.

ஆனால் ரஜினிகாந்தை CNN-IBN லிஸ்டில் சேர்த்தது, தெற்கு பக்கத்து மக்களையும் கவர வேண்டும் என்கிற வியாபார தந்திரமா என்கிற சந்தேகம் எனக்கு இருந்து கொண்டுதான் இருக்கிறது.

***

ஜல்லிக்கட்டுக்கு தடை விதித்த பொழுது எழுத ஆரம்பித்த பதிவு இது. இன்று ஜல்லிக்கட்டுக்கு தடை நீக்கம் செய்யப்பட்டு விட்டது. எதுக்கு இந்த வீண் பந்தா? ஏன் ஜல்லிக்கட்டுக்கு தடை? இந்தியாவிலே ஒரே ஒரு இடத்தில் தான் இது நடக்கிறது அதையும் காலி செய்து விடலாம் என்கிற நோக்கமா? இது ஆண்டாண்டு காலமாக நடக்கும் வீர விளையாட்டு. இதில் வீரம் எங்கிருக்கிறது என்று என் நண்பர் ஒருவர் கேட்டார். என்னது? வீரம் இல்லியா? இந்த விளையாட்டை டீவியில் பார்ப்பதற்கு கூட வீரம் வேண்டுமப்பா. உயிர் போகிறதே என்று கவலைப்படுகிறீர்களா? அடா அடா என்னே உங்களது மக்களின் மீது இருக்கும் பாசம்? உங்கள் பாசம் என்னை வியப்படைய வைக்கிறது. மற்ற எல்லவற்றையும் சரிசெய்தாகிவிட்டது. இது தான் பாக்கி. இந்த ஜல்லிக்கட்டை நிறுத்தி விட்டால், இந்தியாவில் உயிர் சேதமே இருக்காதா? இது வீர விளையாட்டு. தமிழர் குணங்களில் எஞ்சி நிற்கும் ஒரு சில குணங்களில் இதுவும் ஒன்று. நம்மாளு இலவசத்துக்கும் க்யூவில நிப்பான், மாட்ட அடக்கறதுக்கும் க்யூவில நிப்பான். எங்களை பாதுகாத்துக்க எங்களுக்கு தெரியும். நாட்ல காயர்லாஞ்சிக்கு தீர்ப்பு கிடைச்சாச்சான்னு பாருங்கப்பு.

***

ஜல்லிக்கட்டுக்கு தடைன்னு மட்டும் வேகவேகமா தீர்ப்பு எழுதத் தெரியுதுல? அதே தீர்ப்ப அதே வேகத்தோட, பம்பாயில் பெண்களை ஒரு கும்பலே மானபங்கம் செஞ்சதே, அத ஒரு வாரத்துக்குள்ள கண்டுபிடிக்கனும்னு, இல்லீன்னா சம்பந்தப்பட்ட அதிகாரிகளை பணி நீக்கம் செய்ய வேண்டும்னு தீர்ப்பு எழுதச்சொல்லுங்க பார்ப்போம்? முடியாது. ஆயிரெத்தெட்டு ரூல்ஸ் இருக்கு. கைது செய்யப்பட்டவங்களுக்கு பெயில் கிடைக்குது. காயர்லாஞ்சி என்ன ஆச்சு? கேஸ் நடத்துக்கிட்டே இருக்கு. ஏன், இந்த மாதிரி கேஸ்ஸ¤க்கு கூட வேகமா தீர்ப்பு எழுத முடியாதா? ஒன்னுமே புரியல.

இன்னிக்கு, இன்னவரைக்கும் மும்பை கேஸ்ல கண்டுபிடிச்சத, ரேணுகா சவுத்ரி விசாரிக்க போகிறார். என்ன நடக்குதுன்னு பாப்போம்.

***

பத்திரிக்கைகளின் வேலை ஒரு செய்தியை எழுதுவதோடு மட்டுமே முடிவடைவதில்லை. அதை யார் வேண்டுமென்றாலும் செய்யலாம். இப்பொழுது ப்ளாகர்களே செய்திகளை பதிவு செய்கிறன்றனர். பத்திரிக்கைகளின் வேலை, செய்திகளை follow-up செய்வது. பின்ன என்ன இதுக்கு நம்பர் ஒன் புலனாய்வு இதழ்ன்னு அட்டையில போடனும்?

எத்தன மறக்கப்பட்ட கேஸ்கள்? அவையெல்லாம் என்ன ஆயிற்று?

***

2008இல் என்னென்ன நடக்கலாம்?

வலைப்பூ நண்பர்களுக்கு, என் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். இந்த புத்தாண்டிலாவது, உறக்கமின்றி, எதை எழுதித் தொலைக்கலாம், என்று மண்டையை உடைத்துக் கொண்டிருக்கும், வலைப்பூ நண்பர்களுக்கு (எனக்கும் சேத்துதான்!) நல்ல சுகமான உறக்கம் கிடைக்க இறைவனை வேண்டிக்கொள்கிறேன்.

ஏனோ எனக்கு Avril Lavigneயின் “Chill out whatcha yelling’ for?” வரிகள் ஞாபகத்துக்கு வருகின்றன.

***
சர்வேசன் நடத்திய சிறுகதைப்போட்டி பற்றி தெரியாமல் இருந்து விட்டிருக்கிறேன். நேற்றைக்கு தான் தெரியும். ஏதோ நான் எழுதியிருந்தால், முதல் பரிசு கிடைத்திருக்கும், என்பதற்காக நான் சொல்லலீங்க, அப்படியாச்சும் ஒரு சிறுகதை எழுதியிருப்பன்ல? சில சமயம் இப்படித்தான், என்னை சுற்றிலும் என்ன நடக்கிறது என்று தெரியாமல், பூனை போல கண்களை மூடிக்கொண்டிருப்பேன். விழித்துக்கொள்ளும் போது, நன்றாக விடிந்திருக்கும். And obviously, I would have missed all the fun! எப்படியும் இந்த வாரத்திற்குள் ஒரு சிறுகதை எழுதி போஸ்ட் செய்ய முயற்சிக்கிறேன். (ஐயோ! என்று நீங்கள் கத்துவது எனக்கு கேட்கவில்லை!)

***

சர்வேசன், உங்கள் சர்வேக்களுக்கு, நீங்கள் zohoவை பயன்படுத்தலாமே? zoho creator try பண்ணியிருக்கீங்களா? இந்தியன் ஏர்லைன்ஸ் பற்றிய complaint பக்கத்திற்கு நான் zoho creatorஐ பயன்படுத்தி இருக்கிறேன். (இன்னும் வெளியிடவில்லை! உங்களுக்கு exclusive preview!) அந்த பக்கத்தை நீங்கள் இங்கே பார்க்கலாம். zoho creatorஐ பயன்படுத்தி நீங்கள் நிமிடத்தில் ஒரு web page create செய்து விடலாம். we can create validation scripts and lot of other things also. And you can also design the view for the datas entered by the users, as you wish! Really nice! And it can be embedded with in blogger! Try it. If you know it previously, then sorry, for my late point out!

***
இரண்டு நாட்கள் விடுமுறையில் நான் நிறைய டீவி பார்த்தேன். (ஒரு டீவி தான் நிறைய program பார்த்தேன். உஷாரா இருக்க வேண்டியிருக்கு.) அதில கஜேந்திரான்னு ஒரு படம் காட்டப்பட்டது. சுரேஷ் கிருஷ்ணா இயக்கம். நம்ப விஜயகாந்த் சார் நடிச்சது. ஐயோ காமெடி தாங்கல. ஏற்கனவே நரசிம்மாவின் டிரான்ஸ்பார்முக்கே ஷாக் அடிக்கும் சீனப் பாத்து, பழங்காநத்தம் தியேட்டரில இருந்து, பின்னங்கால் பிடறில படற அளவுக்கு ஓடிவந்தது எனக்கு இன்னும் பசுமையா நினைப்புல இருந்தும், எந்த தைரியத்தில, டீவி சேனல மாத்தாம இருந்தேன்னு, எனக்கு இன்னும் புரியவேமாட்டேங்குது. ஆனாலும் எனக்கு தைரியம் ஜாஸ்திபா.
விஜயகாந்த் intro scene. வில்லன்களுடன் சண்டை போடவேண்டும். ரமணா படத்தில “டேய் அடங்குடா. உங்க அண்ணனோட ரெட்டைக்கைய ஒத்தக்கையா ஆக்குனவரே அவர்தாண்டா” டயலாக் சொல்லுவார்ல, அவர்தான் அடியாட்களின் தலைவன். (ரமணா நல்ல படம் என்பதை யாரும் மறுக்கமுடியாது!). அவர் கத்திய எடுத்து விஜயகாந்த கிழிச்சிடுவார். ரத்தம் வந்திடும். கத்தில ரத்தம் ஒட்டிட்டு இருக்கும். யாரோட ரத்தம்? விஜயகாந்தோட ரத்தம். கூலா, விஜயகாந்த் சிகரெட் எடுத்து வாய்ல வைப்பார். சிகரெட்டை பத்தவெக்க தீப்பெட்டி இருக்காது. அதையும் அடியாட்களின் தலைவனே சொல்வான்: சிகரெட்டை பத்த வைக்க வத்திப்பட்டி வேணும்ல என்கிட்ட இல்லீல்ல என்ன செய்வ?! (சண்டை போட வந்தீங்களா? சிகரெட் பத்தவைக்க வந்தீங்களா?!) உடனே நம்ப தலை ஒரு சிரிப்பு சிரிப்பார். பிறகு இவருடைய ரத்தம் பட்ட கத்தி இருக்குல்ல, அத எடுத்து ரத்தம் சிகரெட்ல படற மாதிரி சும்மா வெப்பார், சிகரெட் பத்திக்கும்!
அப்புறம் மீசை மேல கைய வெப்பார். “என் மீசை மேல கைய வெச்சா என்ன ஆகும்னு தெரியுமா?” ன்னு கேட்டுட்டே, மீசைய சும்மா சுண்டி விடுவார், அடியாட்களில் ஒருத்தன், சும்மா பல்டி அடிச்சு தூரமா போய் விழுவான்.

***

உங்க safetyக்காத்தான் சொல்றேன், அவர் அரசியல் கூட்டத்தில பேச வந்தா, பக்கத்தில கிக்கத்தில போய்டாதீங்க. மீசைய சுண்டி கிண்டி விட்டுறப்போறாரு. தூரமாவே நின்னுக்குங்க.

***

கடந்த சில வாரங்களில் Orhan Pamuk எழுதிய Snow, Douglas Adams எழுதிய Hitchhikers Guide To Galaxy, சா.கந்தசாமி எழுதிய தொலைந்துபோனவர்கள் படித்து முடித்தேன். Aldous Huxley எழுதிய Brave New World படிக்க எடுத்தேன். பிடிபடவில்லை. பிறகு Haruki Murakami எழுதிய Hard-boiled wonderland and the End of the world இப்பொழுது படித்துக்கொண்டிருக்கிறேன்.

ஏற்கனவே Haruki Murakami எழுதிய Norwegian Wood படித்திருக்கிறேன். எனக்கு அவரது எழுத்து நடை, அலட்டல் மற்றும் அலங்காரம் இல்லாத வாக்கியங்கள், மிகவும் பிடித்திருந்தன. Norwegian Wood படித்து முடித்ததும், The windup birds chronicle வாங்கினேன். இந்தியா சென்றிருந்த பொழுது, நேரம் கிடைத்தால், படிப்பதற்காக எடுத்துச்சென்றிருந்தேன். ஒரு பக்கம் கூட படிக்கவில்லை. புத்தகமும் எங்கே போனதென்று தெரியவில்லை. தலைமறைவாகி விட்டது.

இந்த வருடம் மட்டும் மூன்று புத்தகங்களை தொலைத்திருக்கிறேன்: Orhan Pamuk எழுதிய Istanbul:memories of a city எங்கே போனது என்றே தெரியவில்லை. Geroge Orwell எழுதிய 1984 cabஇல் தொலைத்துவிட்டேன். அப்புறம் இந்த windup bird.
***

தமிழில் எஸ்.ராமகிருஷ்ணன் சிறுகதைத் தொகுப்பும், புதுமைப்பித்தனின் கட்டுரைத் தொகுப்பும் படித்துக்கொண்டிருக்கிறேன்.

எஸ்.ராமகிருஷ்ணனின் சிறுகதைத் தொகுப்பில், எனக்கு தாவரங்களின் உரையாடல் என்கிற சிறுகதை மிகவும் பிடித்திருந்தது. இவருக்கு கதைக் களம் எங்கிருந்து கிடைக்கிறது என்பது மிகவும் வியப்பாகவே இருக்கிறது. எனக்கு பிடித்திருந்த மற்றொரு கதை “ஒரு தலைகீழ் கதை“. ஆயிரம் கால் இலக்கியத்தின் அடுத்த பகுதியில் இந்த கதைகளைப் பற்றி எழுதுவேன் என்று நினைக்கிறேன்.

தாவரங்களின் உரையாடல் என்கிற கதையின் போக்கில் இருந்த மற்றொரு சிறுகதையை காலச்சுவடில் படிக்க நேர்ந்தது. அது யுவன் சந்திரசேகரின் “உள்ளோசை கேட்பவர்கள்” என்கிற சிறுகதை. சிறுகதை அல்ல நெடுங்கதை தான்.

***

இந்த வருடம் தான் நான் நிறைய புத்தகங்கள் படித்திருக்கிறேன். என்னென்ன புத்தகங்கள் என்று என் நினைவில் இருக்கிற அளவிற்கு யோசித்து ஒரு பதிவு போடுகிறேன். நிறைய சினிமாக்கள் பார்த்திருக்கிறேன். (இந்த list முடியாது!) கொஞ்சம் technology கற்றுக்கொண்டிருக்கிறேன். நிறைய விசயங்கள் செய்யவேண்டும் என்று நினைத்து செய்யாமல் விட்டிருக்கிறேன். செய்யாமல் விட்ட அனைத்தையும் இந்த புது வருடத்தில் செய்யவேண்டும் என்று உறுதி எடுத்திருக்கிறேன். உங்களுக்கும், நீங்கள் நினைத்தது எல்லாவற்றையும் செய்து முடிக்கக்கூடிய மன வலுவையும் உடல் வலுவையும் இறைவன் கொடுக்கவேண்டும் என்று வேண்டிக்கொள்கிறேன்.

***
2008 இல் என்ன என்ன நடக்கும்? நடக்கலாம்?

1. ஸ்ருதியில் லக்ஷ்மண், தசாவதாரம் தோல்வியைத் தழுவியிருக்கலாம் என்று எழுதியிருந்தார். அது நடக்காது என்றே நினைக்கிறேன். நடக்கவும் கூடாது. தொடர்ந்து தோல்வியைத் தழுவினாலும், தன் முயற்சியை சற்றும் கைவிடாத கமல், ரசிகர்களாகிய நம்மீது கொண்டிருக்கும் அபாரமான நம்பிக்கையை, நாம் இந்த முறையாவது சிதைத்து விடக்கூடாது என்றே நான் நினைக்கிறேன்.

2. ரஜினி முருகதாஸ் பாலச்சந்தர் கூட்டணியில் அடுத்த பட அறிவிப்பு வரலாம்.

3. ஸ்டாலின் முதலமைச்சராகவும், அழகிரி திமுக கட்சித் தலைவராகவும் பொறுப்பேற்கலாம்.

4. த்ரிஷா இன்னும் க்யூட்டாகியிருக்கலாம்

5. இந்தியாவில் CostToCompany மேலும் அதிகரித்து மாஸ்கோவிற்கோ அல்லது வியட்நாமிற்கோ MNC Companies படையெடுக்கலாம்.

6. பாடும் office programmeஐ suntv விஜய் டீவியிடமிருந்து காப்பிஅடித்து “Corporateகீதம்” என்கிற பெயரில் புதிய புரோகிராம் ஆரம்பிக்கலாம்.

7. விஜய் டீவி ஜோடி நம்பர் ஒன் season 2 போட்டியாள்ர்களை வைத்து மேலும் என்னென்ன வகையில் business செய்யலாம் என்று யோசித்து, ஜோடி நம்பருடன் ஒரு நாள் என்று ரசிகர்களை அவர்கள் வீட்டிற்கு அழைத்து சென்று மொக்க போடலாம்.

8.சுற்றுச்சூழல் மாசு படுவதைத் தடுக்க ஒரு அருமையான திட்டம்: electric scooter என்று சொல்லிக்கொண்டு நச்சுத்தண்மையுள்ள பேட்டரிகளை பயன்படுத்தி மேலும் சுற்றுச்சூழலை மாசு படுத்தலாம். வேற என்ன? குதிரை வண்டியிலா போக முடியும்?!

9. Microsoft .Net4.0, 4.5, 5.0, 5.5, 6.0, 6.5 என்று மாசத்துக்கு ஒன்னாக release செய்து புரோகிராமர்களை குழப்பி, இதுல புரோகிராம் பண்றதுக்கு, நாலு பன்னிக்குட்டி வாங்கித்தாங்கப்பா, அத மேச்சாவது பொழச்சுக்கறேன் என்று பிதாமகன் சூர்யா போல கடுப்படைய வைக்கலாம்.

10. Web2.0 மற்றும் Virtual PCs விஸ்வரூபம் எடுக்கலாம். Zohoவை கூகிள் நசுக்க பார்க்கலாம். zoho ·பீனிக்ஸ் பறவையாக எழுந்து நிற்கலாம்.Microsoftஇன் Live பெரும் தோல்வியைத் தழுவலாம். கூகிள் இன்ன பிற சின்ன சின்ன utilities sitesஐ aquire செய்யலாம். Microsoft இறுதியில் web தன் கையை விட்டு சென்றுவிட்டதை உணர்ந்து கொள்ளலாம். கூகிளுடன் partnership போடலாம்.

11. சன் மைக்ரோ சிஸ்டம் தனது 2009 பட்ஜெட்டை கணக்கிட்டு அந்த தொகையை Microsoftஐ sue செய்து வசூலிக்கலாம்.

12. சிங்கப்பூரில் வீட்டு வாடகை டப்பென்று குறையலாம். (கடவுளே இது மட்டும் கண்டிப்பா நடக்கனும்! முடியல!)

13. ராகுல் காந்தி டீவியில் அதிகம் தென்பட ஆரம்பிப்பார்.

14. விஜயகாந்த் புது சேனல் (ஆண்டாள் அழகர் சேனல்) ஆரம்பித்து கன்னாபின்னான்னு கவர்மெண்ட் ரூல்ஸ் பேச ஆரம்பிக்கலாம். தனது மண்டபம் இடிக்கப்பட்டது ரெக்கார்ட் செய்ததை மீண்டும் மீண்டும் தனது டீவியில் காட்டலாம். தனது ஆண்டாள் அழகர் கல்லூரி எப்படியெல்லாம் நன்றாக இருக்கிறது என்பதைப் பற்றிய செய்திப்படம் நாளொன்றுக்கு நான்கு முறை ஒளிபரப்பலாம். விஜயகாந்த் நடித்த அதிரடி திரைப்படங்கள் அதிரடியாக காட்டப்படலாம். (?!)

15. சரவணா ஸ்டோர்ஸில் மேலும் விலை குறைப்பு நடக்கலாம். மக்கள் கூட்டம் மேலும் அதிகரிக்கலாம். யாராவது ஒரு NRI செமத்தியாக அடிவாங்கலாம். அங்கு வாங்கின அழகான ஸ்லிப்பர்ஸ் இன்னும் குறைவான நாட்களே உயிர்வாழலாம்.

16. விப்ரோ இன்போஸிஸ் டாட்டா போன்ற நிறுவனங்கள் மீடியா தொழிலில் இறங்கி கதாநாயகர்களின் கால்ஷீட் கிடைக்காமல் ராமராஜனை புது படத்திற்காக அனுகலாம். ராமராஜனின் எங்க ஊரு பாட்டுக்காரனை ரீமேக் செய்யலாம். நிஷாந்தி நடித்த ரோலில் சினேகா நடிக்கலாம்.
17. மோகன் உதயகீதத்தை ரீமேக் செய்து கையில் மைக் இல்லாமல் காலரில் சின்ன மைக் வைத்துக்கொண்டு மேலும் வேக வேகமாக இங்கிட்டும் அங்கிட்டும் நடந்து “சங்கீத மேகம்” பாடல் பாடலாம்.

18. ரேடியோ மிர்ச்சி சென்னை அலைவரிசை இன்டர் நெட்டில் வரலாம் (ஏற்கனவே இருந்தா link கொடுங்க நண்பர்களே). சூரியன் FM மொக்க தாங்க முடியலப்பா.

19. ஒலிம்பிக்ஸில் இந்தியா medal tableலிலே வராமல் போகலாம். (இது கண்டிப்பாக நடக்க கூடாது என்பது தான் என் விருப்பம். நடந்தால் சொல்வதற்கில்லை!)

20. ஆஸ்திரேலியாவை இந்தியா டெஸ்டில் வீழ்த்தலாம். கங்கூலி மேலும் இரண்டு சதம் அடிக்கலாம். (நான் subscribe பண்ணியிருக்கேன்ப்பா!)

21. தமிழ்நாட்டில் கலர்டீவி நடமாட்டம் அதிகரிக்கலாம். தெருவில் மனிதர்கள் நடமாட்டம் குறையலாம்.

22. ஜெயமோகன் இன்னும் பெரிய புத்தகம் எழுதலாம். vikram sethக்கும் அவருக்கும் யார் அதிக பக்கங்கள் எழுதியது, எழுதப்போவது என்கிற போட்டி உருவாகலாம். (விக்ரம் செத்தை அடிச்சுக்க முடியாது என்பது என் கருத்து. ஆனாலும் ஜெயமோகனைப் பற்றியும் ஒன்னும் சொல்வதற்கில்லை)

23. சேக்குவேரா படம் போட்ட தொப்பிகள் மற்றும் ஜட்டிகள் இந்தியாவில் பிரபலமடையலாம். அதை அணிந்து கொண்டிருக்கும் ஒரு யூத்திடம் இவர் யார் என்று கேட்டால் சட்டென்று அவர் “you dont know him. pity you. He is a great Rock Star!” என்று சொல்லலாம்.

24. ப்ளாஸ்மா டீவிக்களையும் ஐபாட்களையும் காமெராக்களையும் லேப்டாப்களையும் செல்போன்களையும் இந்தியர்கள் வாங்கி குவிக்கலாம். (Electronic wastesஐ என்ன செயவது என்பதை பற்றி கவர்மெண்ட் வழக்கம் போல யோசிக்காமல் இருக்கலாம்)

25. வழக்கம்போல ஏரிகளை தூர்வாராமல் விடலாம். புதிய நீர் தேக்கங்கள் கட்டப்படாமல் போகலாம். இன்னும் நிறைய சிமென்ட் ரோடுகளை போட்டு தண்ணீரை நிலத்தில் சேர விடாமல் தடுக்கலாம். பருவமழை அடித்து ஊத்தலாம். தண்ணீர் யாருக்கும் பயன் படாமல் கடலில் சென்று கலக்கலாம். T.கள்ளுப்பட்டி விவசாயிகள் மழை விட்ட மூன்றாம் நாள் தண்ணீருக்கு என்ன செய்வது என்று வானத்தைப் பார்த்து உட்கார்ந்திருக்கலாம்.

26. அரசு ஏழை எளியோர் பயன்படும் வகையில் டீவிடி ப்ளேயர்க்ளை அன்பளிப்பாக தரலாம். மாசம் இரண்டு டீவிடிகளை மலிவான விலையில் ரேஷன் கடைகளில் வாங்கிக்கொள்ள செய்யலாம். வீட்டில் நிறைய பெண்கள் இருந்தால் நாடக டீவிடிகளும் அவர்களுக்கு கூடுதலாக வழங்கலாம்.

27. மலிவு விலை சாராயம் ரேஷனிலே வழங்கப்படலாம். குடும்பத்தலைவர்களின் நலன் கருதி, அந்த சாராயத்தை பெண்களே வந்து வாங்கிப்போக வேண்டும் என்றும் சட்டத்திருத்தம் கொண்டுவரலாம்.

28. பெசன்ட் நகர் பீச்சில் மேலும் சில வெளிநாட்டு காபி கம்பெணிகள் கடை திறக்கலாம். ஒரு காப்பி 400ரூபாய் விற்கலாம். அதையும் வாங்குவதற்கு நான் க்யூவில் காத்துகிடந்து நின்று “one more sugar packet please” என்று எரிச்சலாக சிரிக்கலாம்.

29. மதுரையில் மேலும் பாலங்கள் கட்டப்படலாம். ஏதும் உபயோகிக்கப்படாமல் பேருந்துகள் மீண்டும் மதுரைக்குள்ளே வரலாம். எவ்வளவு பாலங்கள் கட்டப்பட்டாலும் தொழில் நுட்பம் வளர்ந்தாலும், திருப்பரங்குன்றம் மட்டும் ரயில்வே கிராஸிங்க்குள் அடைந்து கிடக்கலாம். அவசரமாக ஹாஸ்பிடலுக்கு செல்ல வேண்டும் என்கிற நிலை வரும் போது, கடவுளே லெவல் க்ராஸிங் திறந்திருக்கவேண்டும் என்று மனதுக்குள் ஒவ்வொரு திருப்பரங்குன்றத்துக்காரனும் வேண்டிக் கொள்ளலாம். அப்படி வேண்டிக்கொண்டு சென்று விட்டு வீட்டிற்கு வந்த பிறபாடு இதை பற்றி கவலையே படாமல், அரசி சீரியலில் மூழ்கிப்போகலாம்.

30. திருப்பரங்குன்றத்திற்கு பக்கத்தில் இருக்கும் வெள்ளக்கல்லில் மேலும் மேலும் மதுரையின் மொத்த குப்பைகளும் கொட்டப்படலாம். நோய் பரவாமல் இருக்க எந்த ஏற்பாடும் செய்யப்படாமல் இருக்கலாம். வெள்ளைக்கல் மக்களைப் போல திருப்பரங்குன்றத்து மக்களும் ஈக்களுக்கு பயந்து திருமணங்களைக்கூட இரவில் நடத்தலாம். திருப்பரங்குன்றத்தில் ஈக்கள் மேலும் அதிகரிக்கலாம். சாப்பிடும் போது வந்தமரும் ஈக்களை விரட்டிவிட ஒவ்வொரு வீட்டிலிருக்கும் நபர்களின் எண்ணிக்கையைப் பொறுத்து அரசு கை விசிறிகள் வழங்கலாம். ஒரு நாளைக்கு ஒன்பத்திரண்டு தடவை மின்சாரம் தடைப்படும் பொழுதாவது உபயோகித்துக்கொள்ளலம் இல்லியா?
***
Muthu, Chill out whatcha yelling’ for?!

என் நண்பன் என்னிடம் கேட்ட பத்து கேள்விகள், மற்றும் பதில்கள்.

இன்று மதிய சாப்பாட்டிற்கு அப்புறம், உட்கார்ந்து பேசிக்கொண்டிருந்த பொழுது என் நண்பன் என்னிடம் பத்து கேள்விகளை கேட்டான். அதற்கு பதில் சொல்ல சொன்னான். விளக்கம் தேவையில்லை என்றும், just as short as possible, முடிந்தவரை yes/no மட்டுமே சொல்லவேண்டும் என்றான்.

அவன் கேட்ட கேள்விகளும் அதற்கான பதில்களும்.

1. Tamil Cinema’s best introduction song?
புதிய வானம் புதிய பூமி (அன்பே வா)
பொதுவாக என் மனது தங்கம் (முரட்டுக்காளை)


2. Best PrimeMinister for India? Best President?
திரு. ராஜீவ் காந்தி. President?! எனக்கு அந்த பதவியே பிடிக்காது. அந்த பதவியே தேவையில்லை என்று நினைப்பவன் நான்.

3. India’s best (usefull) nobel prize winner?
Sir CV Raman

4. India’s economy is dependent on US economy. Do you think India’s economy can be independent?
Since every thing is Globalized now, there cannot be really an independent economy. But India have to come out of “IT sevice” sector. We have to innovate something. We need to spend a lot in research.

5. Does Indian NRI’s have patriotisim still left in them?
Yes. (But I dont think that is important)

6. India/Pakisan problem will be solved in future?
No. தூங்குகிறவர்களை மட்டுமே எழுப்ப முடியும்.

7. இது நாள் வரை தமிழ்நாட்டின் சிறந்த முதலமைச்சர் யார்? இனி யார் சிறந்த முதலமைச்சராக இருப்பார்?
இதுநாள் வரை: பெருந்தலைவர் காமராஜர்.
இனி: ரஜினிகாந்த் (இனி வரும் முதல்வர்களில்)

8. எம்ஜிஆர்/சிவாஜி அப்புறம் ரஜினி/கமல் அப்புறம் விஜய்/அஜித், இனி யார்?
தனுஷ் / (யாரும் இல்லை)

9. புத்தகம் படிக்காமல் இருப்பது, கெட்ட பழக்கமா என்ன ?
கண்டிப்பாக கிடையாது.

10. Are we really destroying the world by polluting and cosuming the nature in excess?
Yes. Of Course.
A cartoon from Sunday Times/Strait Times

வாரிசுகள், இராவணகாவியம், கலர்டீவி மற்றும் பொன்னியின் செல்வன்

வாரிசு அரசியல் என்பது சரியா? தவறா? (உனக்கு இது ரொம்ப முக்கியமா? உன்கிட்ட யாராச்சும் கேட்டாங்களா?) ரொம்ப நாளைக்கு முன்னர் முடியாட்சி இருந்தது. Like தசரதன் ஆட்சி செய்தார் என்றால், அவருக்கு அப்புறம் ஸ்ரீ ஸ்ரீ இராமபிரான் ஆட்சி செய்வது போல. அவர் காட்டுக்கு சென்றாலும், மக்கள் அவர் திரும்ப வரும் வரை வெயிட் செய்வாங்க. அப்புறம் கிழக்கிந்திய கம்பெனியின் ஆட்சி வந்தது. பிறகு குடியாட்சி முறை வந்தது. குடியாட்சி முறையா என்றால், atleast பெயரளவில். ஆனால் நடப்பது உண்மையில் குடியாட்சியா? ஓட்டு போடுகிறோம் ஆனால் ஆட்சியில் அமர்வது யார்?

நடுவில் இருந்த கிழக்கிந்திய கம்பெனியின் ஆட்சியில் மட்டுமே வாரிசு அரசியல் இல்லை எனலாம். காம்ரேட்கள் ஆட்சி செய்யும் சில மாநிலங்களைத் தவிர மற்ற எல்லா இடங்களிலும் வாரிசு அரசியலே -முடியாட்சியே- நடைபெறுகிறது. வாரிசு என்பது சொந்த மகனாகவோ, அல்லது மகளாகவோ தான் இருக்கவேண்டும் என்பதில்லை. சித்தப்பா மகனாகக் கூட இருக்கலாம். அல்லது மனைவியாகவோகூட இருக்கலாம், இல்லையேல் – எனக்கு ஒன்றும் தெரியாதுப்பா- எப்படி வேண்டுமென்றாலும் இருக்கலாம். வாரிசு என்று அறிவிக்கும் அவருக்கும், வாரிசானவருக்கும், இல்லையேல் வாரிசாக தன்னை அறிவித்துக்கொண்டவருக்கும் கண்டிப்பாக நெருங்கிய தொடர்பு இருந்திருக்கிறது. இருக்கும். இந்திய அரசியலை – ஏன் உலக அரசியலை கூட- உற்று, இல்லை இல்லை சும்மாகாச்சுக்கும் பார்த்தால் கூட, வாரிசு அரசியல் எங்கும் நிறைந்திருப்பது புலப்படும்.

இதற்கும் இன்று (21/11/2007) இந்தியா வந்த அமேரிக்காவின் ஜெஸ்ஸி எல் ஜாக்ஸன் என்ற சிவில் ரைட்ஸ் ஆக்டிவிஸ்ட் ராகுல் காந்தியைச் சந்தித்ததற்கும் எந்த சம்பந்தமும் இல்லை.

அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா.

***

இராமாயணம் என்னை கடந்த சில நாட்களாகவே ரொம்பவும் பாதித்து விட்டது. இதற்கு முன்னர் எனக்கு இராமாயணத்தில் அவ்வளவாக நம்பிக்கை இல்லை. இப்பவும் தான். ஆனால் நடந்து முடிந்த விவாதங்கள் என்னை இராமாயணத்தை பற்றி அறிந்துகொள்ளத் தூண்டின.

ரொம்ப நாட்களுக்கு முன்னால் இருந்தே எனக்கிருந்த சந்தேகங்கள் இவை தான்:
1. இராமர் இராமெஸ்வரத்தில் பாலம் அமைத்து இலங்கையை அடைந்திருந்தால், அங்கிருக்கும் லோக்கல் மக்களின் உதவி இல்லாமல் செய்திருக்க முடியாது. இப்படி ஒரு மிகப்பெரிய விசயம் தமிழ்நாட்டில் நடந்திருக்கும் பொழுது, இதை எப்படி நம் இலக்கியவதிகள், வரலாற்று மக்கள் தீவிரமாக பதிவு செய்யாமல் விட்டனர்?

2. இராமரைப் பற்றிய குறிப்புகள் தமிழ் இலக்கியத்தில் ஏன் அவ்வளவாக இல்லை? அழிக்கப்பட்டதா? அழிக்கப்பட்டது என்றால், வரலாறு மறைக்கப்பட்டிருக்கிறது என்று தானே அர்த்தம்? அப்பொழுது, வரலாறு என்பதே பொய் என்றாகிவிடுமே? (ofcourse, அது தான் உண்மையும் கூட!)

விகடனில் மதனிடம் ஒரு கேள்வி கேட்கப்பட்டது:
கேள்வி: பெண்களைப் பற்றிய வரலாறு பெரிதும் இல்லையே ஏன்?
பதில்: இதுவரை பெண்கள் பெரிதாக எங்கும் ஆட்சி செய்யவில்லை. இனிமேல் ஆட்சிசெய்யலாம். வரலாறு எழுதப்படலாம்.

ஆட்சியில் இருப்பவர்கள் தங்களைப் பற்றி பெரிதாக எழுதிக்கொள்வது இயல்புதான். தங்களைத் தாங்களே புகழ்ந்துகொள்வதை கூட ஒரு வழியில் ஏற்றுக்கொள்ளலாம் ஆனால் தாங்கள் நல்லவனாக வல்லவனாக இருக்கவேண்டும் என்பதற்காக, மற்றவர்களை கேவலமாக சித்தரிப்பதை எப்படி ஒப்புக்கொள்ள முடியும்?

இராவணன் தீவிர சிவபக்தன் என்பதற்கான ஆதாரங்கள் தமிழ் இலக்கியத்தில் நிறைய இருக்கின்றன. ஆனால் அவன் சீதையைக் கவர்ந்து சென்றான் என்பதற்கான ஆதாரங்கள் தமிழில் அதிகம் இல்லையே? கம்பராயணம் என்பது இலக்கியம். அது வால்மிகியின் நாவலைத் தழுவி எழுதுவதைப் போன்று. புதுமைப்பித்தன் ருஷ்ய நாவல்களைத் தழுவி எழுதியது போல. ஹருகி முராகமி எழுதிய ஜப்பானிய நாவலை ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பதைப் போல அவ்வளவே. அதை வரலாற்று தடயமாக ஏற்றுக்கொள்ள முடியாது.

இராமபிரானின் பராக்கிரமங்களை நிரூபிக்க ஒரு வில்லன் தேவையென்றால், மகாபாரதம் போலவே, அவர்களுக்குள் ஒரு வில்லனை தேடிக்கொள்வது தானே? ஏன் அங்கிருந்து இவ்ளோ தூரம் வந்து ஒரு சிவபக்தனான தமிழ் மன்னனை வில்லனாக பிடிப்பானேன்? இப்பொழுதிருக்கும் தமிழ் படங்களுக்கு, ஹிந்தி பேசும் வில்லன்களை நாம் தேடிப்பிடிப்பது போல. இராவணனைப் பற்றி வான்மீகி எழுதியதற்கு என்ன காரணம் இருந்திருக்க முடியும்?

எனக்கு இராமபிரானைப் பற்றி கவலை இல்லை, I really dont care. இராவணன் தீயவன் தானா? ஆதாரம் இருக்கிறதா?

Proof of concept?

***

இம்மாதிரியான ஒரு சூழலில் தான், நான் நூலகத்தில் சும்மா சுற்றிக்கொண்டிருந்த பொழுது, இராவணகாவியம் என்ற நூலைப் பார்த்தேன். அதன் முதல் சில பக்கங்களில், கதைச்சுருக்கம் கொடுக்கப்பட்டிருந்தது. நாற்பதுகளில் வெளிவந்த இந்த நூல் அப்பொழுது தடை செய்யப்பட்டிருந்திருக்கிறது. பின்னர் திராவிட ஆட்சி வந்ததற்கு அப்புறம் தான் தடை நீக்கம் செய்யப்பட்டிருக்கிறது.

இராமபிரானைப் பற்றி கேலியாக பேசினால், மக்கள் மனம் புண்படுமோ என்று யோசிக்கும் வருத்தப்படும், நம் தலைவர்கள் (சில நடிகர்களும் கூட!), இராவணனைப் பற்றி இழிவாக (கவனிக்கு இழிவாக, கேலியாக அல்ல!) பேசும் போது ஒரு சமூகத்தின் மனம் புண்படுமே என்று ஏன் நினைப்பதில்லை?

இராவண காவியத்தில் ஒரு கேள்வி கேட்கப்படிருந்தது:
அதாவது அவ்வளவு பெரிய மன்னனான, சீதையை தூக்கிவரத் துணிவிருந்த இராவணனுக்கு, சீதையை அடைவது அவ்வளவு கடினமாகவா இருந்திருக்கும்? அதுவும் தனது எல்லைக்குள்? ஆனால் அவன் சீதையின் மீது ஒரு விரலைக் கூட வைக்கவில்லை என்பது தான் உண்மை. (வைக்கமுடியவில்லை என்பதெல்லாம் சும்மா கதை!) இராவணன் சீதையை தங்கையாகத்தான் தூக்கிவந்திருக்கிறான். அது தான் உண்மை. தன் தங்கையின் மூக்கை அறுத்தவர்களுக்கு நல்ல பாடம் புகட்ட வேண்டும் என்பதற்காகத்தான் தூக்கிவந்திருக்கிறான், என்று சொல்கிறது இராவண காவியம்.

யோசிக்க வேண்டிய விசயம் தான்.

ஆரியர்கள் திராவிடர்களை மட்டம் தட்ட இப்படியெல்லாம் எழுதினார்கள் எனபதையும் மறுத்து விட முடியாது. ஏனென்றால் கம்பராமயணம் சோழர்கள் காலத்தில் வெளிவந்தது, சோழர்கள் திராவிட மன்னர்கள் அல்லர்.

இராவண காவியம் கதைச் சுருக்கத்தை செராக்ஸ் செய்து வைத்திருக்கிறேன், வெளியிடலாம் என்று தான் நினைத்தேன், ஆனால் என் நோக்கம் இராமபிரானைப் பற்றி அவதூறு சொல்ல வேண்டும் என்பதல்ல, இராவணன் நல்லவனாக இருந்திருப்பானோ என்கிற நப்பாசை தான்.

ஏனென்றால், இந்திய சட்டத்தின் படி, ஆயிரம் குற்றவாளிகள் தப்பிக்கலாம், ஆனால் ஒரு நிரபராதி தண்டிக்கப்படக்கூடாது, என்பது தானே? 🙂

அரசே முன் வந்து, இதை ஆராய்ச்சி செய்ய முன்வரலாம். ஆராய்ச்சி செய்ய நிதி ஒதுக்கலாம். மற்ற நாடுகளில் என்னென்னவோ ஆராய்ச்சி செய்கிறார்கள். ஒரே ஒரு அகல்வாராய்ச்சியில் தோண்டியெடுக்கப்பட்ட கல்லில் எழுதப்பட்ட எகிப்திய மெசபட்டோமிய சொற்களை வைத்துக்கொண்டு பல வருடங்களாக பொழுதைக் கழிப்பவர்கள் இருக்கிறார்கள் இல்லியா? இந்த ஆராய்ச்சி projectஇன் மூலமாவது, தமிழை முறையாக விரும்பிப் படித்தவர்களுக்கு, தமிழ் கற்றவர்களுக்கு நிறைய வேலை வாய்ப்பை வழங்கலாம்.

இது ரொம்ப முக்கியமா என்று கேட்பவர்களுக்கு: 750கோடி ரூபாய் செலவில் (ஒரு பகுதி செலவுதான், மொத்த செலவு இல்லை) கலர்டீவி கொடுப்பதையும், சிவாஜி போன்ற மிகப்பெரிய பட்ஜெட் படங்களுக்கு கூட தமிழில் பெயர் வைத்தனர் என்கிற ஒரே ஒரு காரணத்துக்காக, வரிசலுகை வழங்குவதையும், ஒப்பிடும் போது இது முக்கியமானதாகத்தான் படுகிறது.

செய்வார்களா திராவிடர்கள்?

***

Lord Of The Rings இன் மூன்று பாகங்களையும் மூன்றாவது முறையாக பார்த்து முடித்தேன். இந்த முறை என் மனைவியுடன். இரண்டு பாகங்கள் பார்த்து முடித்த அவருக்கு, மூன்றாவது பாகத்தைப் பார்க்காமல் இருக்க முடியவில்லை. மூன்றாவது பாகம் பார்த்து முடித்த பின், நான்காவது பாகம் இருந்தால் நன்றாக இருக்குமே என்றார்.

எனக்கு தெரிந்தவரையில், இதேபோன்றதோரு படம், இனிமேல் எடுக்கமுடியுமா என்பது சந்தேகமே. பீட்டர் ஜாக்சன் நம்மை அவர்களின் காலத்திற்கே அழைத்துச் சென்றிருப்பார். ஒவ்வொருமுறை பார்க்கும் பொழுதும் எனக்கு, ஒரே மாதிரியான அதே மாதிரியான நெகிழ்ச்சியே கிடைக்கிறது. Fresh always. Faromir போருக்கு செல்லும் பொழுது, Pipin பாடும் அந்த பாடல் மனதை உருக்கிவிடுகிறது. நான் பார்த்த அத்தனை தடவையும். அதே போல sam மற்றும் Frodoவின் நட்பு எப்பொழுதும் அழகாகவே, நெகிழ்ச்சியாகவே இருக்கிறது. Smegolஐப் பார்க்கும் பொழுது எல்லாம் எப்பொழுதும் போலவே கோபமும், இரக்கமும் ஒரு சேர வருகிறது. Aragorn மற்றும் Gandalfஐப் பார்க்கும் போது வியப்பு மற்றும் மரியாதை ஏற்படுகிறது. legolas, எப்பொழுதும் போல fantastic.

பிற்காலத்தில் தொழில் நுட்ப வளர்ச்சியால், இதை விட அருமையாக படங்கள் எடுக்க வாய்ப்பிருக்கிறது. ஆனால் அந்தப்படங்கள் LOTR நம் மனதில் ஏற்படுத்திய தாக்கதை ஏற்படுத்துமா என்பது சந்தேகம் தான்.

***

எனக்கு LOTR பார்க்கும் பொழுதெல்லாம், ஒரு விசயம் ஞாபகத்துக்கு வந்துவிடும். ஒரு விசயத்துக்காக ஏங்குவேன், நான். அது பொன்னியின் செல்வனை திரைப்படமாக எடுப்பது. எவ்வளவு அழகான கதை அது? எவ்வளவு அருமையான Aragornஐப் போல வீர மன்னர்களை உடைய கதை அது? பொன்னியின் செல்வன் தமிழ் வரலாற்று புனைவு நாவல்களின் தலைசிறந்த ஒன்று, என்பதை மறுக்கஇயலாது. புதுமைப்பித்தனுக்கு கல்கியின் மீது வேறு விதமான எண்ணம் இருந்தாலும், பொன்னியின் செல்வன் is epic.

எனக்கு பொன்னியில் செல்வனை திரைப்படமாக ஆக்க வேண்டும் என்பது நீண்ட நாள் விருப்பம். மணிரத்னம் பொன்னியின் செல்வன் கதையை திரைக்கதையாக மாற்றி விட்டார், 80 சீன்களிள் அழகாக எழுதிவிட்டார் என்று செய்திகள் அவ்வப்போது வரும். உண்மையாகவே இருந்துவிட வேண்டும் என்று நினைப்பேன்.

பொன்னியின் செல்வனை திரைப்படமாக உருவாக்க ரைட்ஸ் முன்பு சிவாஜி அவர்கள் வைத்திருந்ததாகவும், பின்னர் அது எம்ஜிஆர் அவர்களின் கைக்கு மாறியது என்றும், இப்பொழுது கமலஹாசனிடம் இருக்கிறது என்றும் சொல்லப்படுகிறது.

என்னுடைய ஆசை:
நடிகர்கள்:

ராஜராஜ சோழன் : கமலஹாசன்
வல்லவராயன் வந்தியத்தேவன் – ரஜினிகாந்த்
ராஜெந்திரசோழன் – கமலஹாசன் (அல்லது அஜித்குமார்)
பெரிய பலுவேட்டரையர் – சத்யராஜ் (அல்லது ப்ரகாஷ்ராஜ்)
சின்ன பழுவேட்டரையர் – நெப்போலியன்

மணிரத்னம் டைரகட் செய்யவேண்டும். இளையராஜா இசையமைக்கவேண்டும். ஏவிஎம் தயாரிக்க வேண்டும். மூன்று பாகங்களாகக் கூட எடுக்கலாம். ஆனால் கண்டிப்பாக ஒரு பாகமாக எடுக்கக் கூடாது. மருதநாயகத்துக்கு முன்னர் கமல் இதைச் செய்யலாம்.

நடக்குமா?
***

Ram And Shantaram

(Ram, Shantaram, Rang De Basanti, Satham Podathae, Rajinikanth)

எஸ்.ராமகிருஷ்ணன் ஒரு முறை – விகடனில் தொடராக வெளிவந்த தேசாந்தரியில் என்று நினைக்கிறேன் – புராதாண சின்னங்களை பாதுகாப்பது பற்றி எழுதியிருந்தார். அவற்றைப் பாதுகாப்பதில் வெளிநாட்டினர் காட்டும் அக்கறையையும் நாம் காட்டும் அக்கறையையும் ஒப்பிட்டுப் பார்த்து, மிகுந்த வருத்தத்துடன், நாம் ஏன் அவற்றைப் பாதுகாப்பதில் ஆர்வம் எடுத்துக்கொள்வதில்லை என்று வியப்பாக கேட்டிருந்தார்.

இராமாயணம் புனைவாக இருக்கலாம் இல்லையேல் உண்மையாகக் கூட இருக்கலாம். யாருக்கு தெரியும்? யார் proove செய்யமுடியும்? எல்லா பிரச்சனைகளுக்குமே இரு தரப்பான வாதங்கள் எப்பொழுதுமே இருந்து வந்திருக்கின்றன. இப்படியும் வாதாடலாம். அப்படியும் வாதாடலாம். அதானால் தானோ என்னவோ நமது நாக்கிற்கு எழும்பு என்பதே கிடையாது. எப்படி வேண்டுமானாலும் வளையும். நமக்கிருக்கும் கொள்கைகள் கணக்கிலடங்காதவை. அந்த கொள்கைகளையெல்லாம் கண்டிப்பாக மற்றவர்கள் மீது திணித்துத்தானாக வேண்டுமா? ராமர் பாலம் என்பது ராமர் கட்டினதோ அல்லது ராவணன் கட்டினதோ அல்லது ரஜினிகாந்த் கட்டினதோ, எப்படி இருந்தாலும் அது ஒரு புராதண சின்னம். Historical Place. அதை ஏன் இடிப்பானேன்? நமது புராதாண சின்னங்களை நாமே பாதுகாக்காவிட்டால் யார் தான் பாதுகாப்பது?

***

நேற்று மதியம் நன்றாக பருப்பு மற்றும் கத்தரிக்காய் புளிக்குழம்பை ஒரு கட்டு கட்டிவிட்டு, அரை மயக்கத்தில் டீவி பார்த்துக்கொண்டிருந்த பொழுது, HBOவில் Davinci Code ஓடிக்கொண்டிருந்தது. என் மனைவி (எனக்கு திருமணம் முடிந்துவிட்டது. This sep 13th. Very sorry Girls! 🙂 ) DaVinci Code படத்தை பார்த்ததில்லை. எனவே நான் அந்தக் கதையை – கர்த்தருக்கு மனைவி உண்டு என்பதையும் அவர்களுக்கு குழந்தை இருந்திருக்கிறது என்பதையும்* – விளக்கிக் கூற அவளும் ஆர்வமாகி பார்க்க ஆரம்பித்தபொழுது, வேறு வழியின்றி நான் ஒவ்வொரு காட்சியாக விளக்கத் தொடங்கினேன். எனக்கிருக்கும் பழக்கம் என்னவென்றால் படத்தின் முடிவு twistingஆ இருந்தா, அந்த முடிவைப் பற்றி கொஞ்சம் கூட hint கொடுக்கமாட்டேன். (நானே என் சொந்த அறிவால் -இருக்கும் பட்சத்தில்!- என்னிடம் கதை கேட்பவர்களை மேலும் குழப்பிவிடுவேன்! அந்த twist வரும்பொழுது அவர்கள் முகத்தில் காணக்கிடைக்கும் அதிர்ச்சி கலந்த ஆச்சரியத்தை மிகவும் ரசிப்பேன்.) எனக்கு மதிய தூக்கம் சுத்தமாக போய்விட்டது. இரண்டாவது முறை பார்த்த பொழுதும் DaVinci Code நன்றாகத்தான் இருந்தது.

நான் மலேசியாவில் இருந்த பொழுது, இந்த Davinci Code நாவல், கிட்டத்தட்ட இரண்டு வருடங்களாக, Fiction Listஇல் முதல் இடத்தை தக்கவைத்துக்கொண்டிருந்தது. இந்த நாவலை Bangsar MPHஇல் வாங்கி ஒரே மூச்சில் படித்துமுடித்தேன். Opus Deiயும் Knights Of the Templarஉம், Priory Of Sionஉம் என்னை மிகுந்த ஆச்சரியத்தில் ஆழ்த்தின. Internetஇல் தேடியபொழுது இவையாவும் உண்மையே என்பது போல வாதங்கள் மற்றும் ஆதாரங்கள் (?!) நிறைய கிடைத்தன. எதை நம்புவது?

Rang De Basantiஇல் சித்தார்த்தின் அப்பா சித்தார்த்தைப் பார்த்து SMS generation என்று திட்டுவார். அதென்ன SMS generation? Any speech that goes beyond 2 or 3 sentences becomes a lecture! அதே போலத்தான் என் மனைவியும், படத்தில் சேர்ந்தார் போல ரெண்டு நிமிஷம் யாராவது பேசிக்கொண்டிருந்தால், தூக்கம் வருது என்று பெரிய்ய்ய கொட்டாவி விட ஆரம்பித்துவிடுவாள். உஷாராக அவளிடம் பேச்சுக் கொடுத்துக் கொண்டேயிருக்க வேண்டும்.

சும்மா கதை கேட்டால் பரவாயில்லை, அதில் நிறைய சந்தேகங்கள் வேறு கேட்பாள். படத்தின் logicக்கில் டைரக்டர் விட்ட ஓட்டைகளை, நான் தான் பெரும்பாலும் அடைத்துக்கொண்டிருப்பேன். (Like Sivaji.) இல்லையென்றால், என்ன பெரிய இங்கிலீஷ் படம், நம்ப தமிழ் படம் மாதிரிதான் எடுக்கறாய்ங்க, என்று ஈசியாக சொல்லிவிடுவாள்.

இந்தப்படத்தைப் பார்த்த பிறகு, அவள் மிகுந்த வியப்பில் ஆழ்ந்துபோனாள். எப்படி இத அந்த மக்கள் ஒத்துக்கிட்டாங்க? சண்டை போடலியா? என்று கேட்டுக்கொண்டேயிருந்தாள்.

ஒரு மதத்தின், ஆணிவேரையே சாய்த்துப்பார்க்கக் கூடிய conceptஐ கொண்டது இந்தப்படம். யோசித்துப் பாருங்கள், ராமர் பத்தி இதேபோலதொரு controversial படத்தை இந்தியாவில் எடுத்திருந்தால் என்னவாகியிருக்கும்?

சகிப்புத்தன்மை என்கிற ஒன்று இருக்கிறதில்லையா? அதேபோல கருத்துச் சுதந்திரம் என்கிற ஒன்றும் இருக்கிறதில்லையா? ஒருவர் ராமர் இருக்கிறார் என்று சொன்னால் மற்றவருக்கு அதை மறுக்கும் உரிமை இருக்கிறதா இல்லையா?

***

சத்தம் போடாதே என்றொரு படம் பார்த்தோம். நன்றாக இருந்தது. அந்த சென்னை600028 இல் அந்த cricket teamஇல் இருந்த ஒரு பையன் (captain நூல் விடும் அந்த பெண்ணிற்கு – அந்தப் படத்தில வர்ற கிரிக்கெட் captainப்பா, மாட்டிவிட்ருவீங்க போல- அண்ணனாக நடித்தவர்..பெயர் மறந்துபோச்சு) தான் இதில் ஹீரோ. நன்றாக நடித்திருக்கிறார். பத்மப்ரியாவும் (Girlsன்னா மட்டும் பெயர ஞாபகம் வெச்சிக்கோ!) நன்றாக நடித்திருந்தார் (இவரு பெரிய சிவாஜிகணேஷன், சர்டிப்பிகேட் கொடுக்கறாரு!). யுவன்ஷங்கர் ராஜாவின் இசை அருமை. Like in Ram. ஆனால் வஸந்துக்கு இந்த கேஸ் ஸ்டவ்வை வெடிக்கவைப்பதில் அப்படி என்னதான் ஆசையோ தெரியவில்லை. Easyயான solution இல்ல?

மொத்தத்தில் படம், அமைதியான நிசப்தமான, சற்றே மர்மம் நிறைந்த, இரவு போல. அனுபவித்து ரசிக்கலாம், அமைதியாக, கொஞ்சம் திகிலோடு. தியேட்டரில் சென்று படம் பாருங்கள் -என்னைப்போல வேலை வெட்டியில்லாமல் இருந்தால். Rerecording superb.

***

நிறைய புத்தகங்களை மாற்றி மாற்றி படிக்க எடுத்தேன். George Orwell எழுதிய 1984, joseph heller எழுதிய Catch 22, mark haddon எழுதிய the spot of bother, friedman எழுதிய world is flat. இதில் 1984 நன்றாக இருந்தது. science fiction. கொஞ்சம் பிடிபட ஆரம்பித்த பொழுது, தொலைத்துவிட்டேன். (என்னது புத்தகத்தை தொலச்சியா? டாக்ஸில வந்தபோது தொலச்சுட்டேன். அப்படியே எழுந்துவந்துட்டேன்.) எதேதோ புத்தகங்கள் படிச்சிட்டு, கடைசில shantaramல வந்து நிக்கறேன். இதில் கிட்டத்தட்ட 200 பக்கங்கள் படிச்சிட்டேன். so far so good. shantaram இப்பொழுது திரைப்படமாக எடுக்கப்படுகிறது. Johny Depp Shantaramஆக நடிக்கிறார்.

இது ஒரு உண்மை கதை. Gregory David Roberts என்கிற ஒரு ஆஸ்திரிலேய கைதி (கொள்ளை மற்றும் போதைப் பழக்கத்துக்கு அடிமையானவர்) , ஜெயிலில் (Victoria – maximum security prison) இருந்து தப்பித்து, இந்தியா வந்து, பாம்பேயில் பெயரை Shantaramஆக மாற்றிக்கொண்டு, வாழ்ந்தவர். பாம்பேயில் இருந்த பொழுது பல நிழல் உலக தாதாக்களிடம் தொடர்பு வைத்திருந்தவர்.

நம்ம ஊர் போலீஸ் பேசாம அவர aproover ஆக சொல்ல வேண்டியது தான? நிறைய தாதாக்களை arrest செய்யலாமே?!

***

Shantaramஇல் ஒரு வரி வரும். (p. 150)

A dream is a place where wish and fear meet. When the wish and the fear are exactly the same, we call the dream, a nightmare.

உண்மைதானோ? இந்த நாவலில் எனக்கு மிகவும் பிடித்தமான விசயம் என்னவென்றால் : அவசரமில்லாத நிதானமான descriptive narration. பாம்பேயிலிருந்த பொழுது ஒவ்வொருவரையும், ஒவ்வொரு விசயத்தையும் கூர்ந்து கவனித்திருக்கிறார். எல்லோரையும் அழகாக வர்ணிக்கிறார். Exactly like a honest narration, you know or atleast it appears like that, atleast to me. மேலும் ஆங்காங்கே அவர் தெளித்து செல்லும் philosophical thoughts. நம்மை நிறுத்தி, நிதானமாக யோசிக்க வைக்கின்றன. நிதானமாக.

***

* – As told in the novel Davinci Code written by Dan Brown.