ஆவிய க்ராஸ் கொஸ்டீன் பண்றதுன்னா சும்மாவா?

கடந்த வெள்ளியன்று தினமலரில் நான் பார்த்து ரசித்து சிரித்த இரண்டு படங்கள். முடிஞ்சா சிரிச்சுக்கோங்க.

ஆவி ஜோதிடம்:

சூப்பரப்பு. ஆகா.ஆகா. ஆவி கோர்ட்டுக்கு சாட்சி சொல்ல வருமா? சொல்றதுக்கில்ல, ஜட்ஜ் மேலேயே வந்தாலும் வரும். இனிமேல் லாயருங்கோ கேஸ் கட்டு எடுத்தார தேவையில்ல, எழும்புக்கூடு, மண்டையோடு, குடுகுடுப்பை பழைய சுவடிக்கட்டு தான் எடுத்துவரனும். லா படிக்கத்தேவையில்ல, BO (Bachelor of Ouija) தான் படிக்கனும். என்ஜினியரிங் ஸ்டூடென்ட்ஸ் மாதிரி பிராக்டிக்கல்ஸ் லேப் எல்லாம் கூட உண்டு. ப்ரட் போர்ட் மாதிரி ouija போர்ட். சர்க்யூட் மாத்தி கொடுத்தா, மவனே தொலஞ்ச! ஆவி ரத்தமெல்லாம் குடிக்குமாமே? இதெல்லாம் படிக்கம்போதே பன்னனும், பின்ன ஆவிய க்ராஸ் கொஸ்டீன் பண்றதுன்னா சும்மாவா? போலீஸ்க்கு கவர்மெண்ட் புது கார் எல்லாம் வாங்கி கொடுக்கத்தேவையில்ல, மையும் (மை எழுதறதுக்குன்னு நெனச்சீங்கன்னா, ஐயோ பாவம்!), எழுமிச்சையும் மட்டும் போதும். உட்கார்ந்த எடத்திலேருந்து புடிப்பம்ல.

கலி காலம்னு சும்மாவா சொன்னாய்ங்க. விஜயகாந்த் கவனிப்பாராக. அவரு தொகுதிங்க!

ஆனா ஒன்னு : நமக்கு அடுத்த கதைக்கு “கரு” கிடைச்சாச்சு.

அப்புறம், இந்தப் படம்.

நிறைய பேரு பாத்திருக்கலாம். ஆனா எனக்கு சுரீர்ன்னுச்சு. போட்டோ எடுத்து போட்டாங்க. லஞ்ச வாங்குனவரு மொகத்த எங்க கொண்டு போய் வச்சுக்குவாரு? தெரியல. பாவம்ல. தப்புத்தேன். லஞ்சம் வாங்குனது தப்புத்தேன். ஆனா கொடுக்கறதும் தப்புத்தான? போகக்கூடாத வழியில போகறதலாத்தான அவரு வழி மறைக்குறாரு. காசு கேக்குறாரு. தப்பு செஞ்சுட்டு மறைக்குறதுக்குத்தான நீ லஞ்சம் கொடுக்கற? அப்புறம் தினமலர் ஏன் ஒரு பக்கமா சார்ந்து செய்தி போடுது? தன்னை கவனித்த வாகனத்துக்கு வாஞ்சையுடன் வழி காட்டுகிறார் என்ற நக்கல் டயலாக் எதுக்கு? லஞ்சம் கொடுத்தவன பத்தி ஒன்னும் காணோம்? அவரு மட்டும் நல்லவரா? மக்களும் திருந்தனும்ங்க. அதிகாரத்துல இருக்குறவங்களுக்கு கூடுதல் பொறுப்பு இருக்குனுங்கறது வாஸ்தவம் தான், அதுக்காக மத்தவங்களுக்கு பொறுப்பே இருக்கத் தேவையில்லியா?

காமோ சோமோ

இந்த பதிவை எழுதவேண்டிய நிலை வந்துவிட்டதை நினைக்கும்போது கொஞ்சம் சங்கடமாகத்தான் இருக்கிறது. காலங்கள் மாறிக்கொண்டேயிருக்கின்றன. மனிதர்களும் காலத்திற்கேற்றார்போல் தம்மை மாற்றியமைத்துக்கொள்கின்றனர். நடை, உடை, பேச்சு, கலாச்சாரம் என்று காலப்பெருஞ்சுழலில் இவையாவும் பெரிய மாற்றத்தைக் கண்டிருக்கின்றன. குகைகளில் வாழ்ந்து திரிந்து தன் மனம்போன போக்கில் வாழ்ந்து வந்த மனிதன் பிற்பாடு என்ன நினைத்தானோ தெரியவில்லை தன்னை நெறிப்படுத்தத் தொடங்கினான். விதிகள் வகுக்க ஆரம்பித்தான். ஒருவனுக்கு ஒருத்தி என்றான். தீங்கு செய்யலாகாது என்றான். பிறன்மனை நோக்காமை என்றான். அடுத்தவரை துன்புறுத்தினால் தண்டனை என்றான். விலங்குகள் போல இருந்த மனிதன் எதற்காக பிற்பாடு தனக்கு தானே விதிகளை வகுத்துக்கொண்டான்? அவன் என்ன கேனையனா?

கலாச்சாரம் என்ற ஒன்று எவ்வாறு பிறந்தது? எதற்காக உருவாகிறது? எவ்வாறு மாற்றம் அடைகிறது? நாம் உடுக்கும் உடை, பேசும் பேச்சு, பயிலும் பொழி, உண்ணும் சாப்பாடு, வணங்கும் தெய்வம் என்று எத்தனையோ விசயங்களில் கலாச்சாரம் மாறுபட்டிருக்கிறது. தமிழ் வெண்பா இயற்றிக்கொண்டிருந்த நாம் இன்று ஆங்கிலம், ஜெர்மனி, ஜாப்பனீஷ் என்று வகைக்கு ஒன்றாக படிக்கிறோம். பள்ளியில் கூட தமிழுக்கு பதிலாக சான்ஸ்க்ரீட் எடுத்து படிப்பவர்கள் இருக்கிறார்கள். இது வேறு. இது சர்வைவல் ஆப் த பிட்டஸ்ட். இது மனிதன் தன்னை இந்த உலகத்தில் இருத்திக்கொள்ள செய்யவேண்டியது. வரவேற்கத்தக்க ஒன்று. இவ்வாறன விசயங்களில் மாற்றம் தேவை. ஆனால் கலாச்சாரத்தின் ஆணிவேரிலே மாற்றம் தேவையா? ஒருவனுக்கும் ஒருத்தி என்பது போய், இப்பொழுது ஒருவனுக்கு ஒருவன் என்றும், ஒருத்திக்கு ஒருத்தி என்று ஆகும் நிலை அவசியம் தானா? அதை ஆதரிக்க சட்டம் தேவையா?

ஓரினச்சேர்க்கையை ஊக்குவிக்கக்கூடாது என்பது தான் அனைவரது நோக்கமாகவும் இருக்கும். ஆனால் ஒரினச்சேர்க்கையை ஆதரிப்பது போல சட்டம் இயற்றினால் அது ஊக்குவிப்பது இல்லாமல் வேறு என்ன? பாசிவிப்பதா? என்னங்கைய்யா இது? ஷியாம் பெனேகல், அருந்ததிராய், விக்ரம் சேத் பரிந்துரைசெய்திருக்கிறார்கள். நிறைய ஆங்கில நாவல்கள் வாசிப்பார்கள் போலும். வாசித்துவிட்டு போகட்டும். தவறில்லை. அதற்காக நாவலில் படித்த கதைகளை எல்லாம் பரிந்துரை செய்ய வேண்டுமா என்ன? சரி அப்படியே பரிந்துரை செய்தாலும் நாம் யோசிக்கவேண்டுமா இல்லையா? மேற்கத்திய எக்கனாமியை பின்பற்றுவது தவறில்லை. அவர்களைப் போல ஓட்ஸ் சாப்பிடுவதில் பிழையில்லை. அவர்களைப்பார்த்து, கொழுத்தும் மெட்ராஸ் வெயிலில் கோட்சூட் அணிந்து கொண்டால்கூட பரவாயில்லை. வெஸ்டர்ன் டாய்லெட்டில் உட்கார்ந்து கொண்டாலும் தப்பில்லை. ஆனால் கலாச்சாரத்தையும் வருஙகால சந்ததியினரையும் அடியோடு பாதிக்கும் ஒரு விசயத்தை நாம் விதைக்கலாமா?

சிலர் இந்த சட்டம் ஓரினச்சேர்க்கையாளர்களை அடையாளம் கண்டுகொள்ள உதவும் என்றும் அதன் மூலம் அவர்களை திறுத்தலாம் என்றும் பாஸிட்டிவாக யோசிக்கின்றனர். புல்ஷிட். இந்தியாவிலிருக்கும் மக்கள்தொகைக்கு இவர்கள் எங்கிருந்து திறுத்துவார்கள்? இல்லை இது போன்று திறுத்திய வரலாறு ஏதேனும் இருக்கிறதா? மது அருந்துவதை சட்டபூர்வமாக்கி என்னாவாயிற்று? எத்தனை பேர் மது அருந்துவதை நம்மால் தடுக்கமுடிந்தது? சட்டம் என்ற ஒன்று கொண்டுவந்துவிட்டால் அதை வாபஸ் பெறுவது என்பது இயலாத காரியம். இப்பொழுது யாரும் மது அருந்தக்கூடாது என்றொரு சட்டம் கொண்டுவரவேண்டும் என்றால் அதை நினைத்துக்கூட பார்க்கமுடியாது. ஏற்கனவே அங்கொன்றும் இங்கொன்றுமாக இருக்கும் இந்த ஓரினச்சேர்க்கை பழக்கம் சட்டபூர்வமாக்கி விட்டால் பரம்பொருள் போல ஆகிவிடவும் வாய்ப்பிருக்கிறது. சிகரெட்டை போல. விக்ரம் சேத்துக்கு என்ன கவலை? வழக்கம்போல பக்கம் பக்கமாக எழுதி உலகின் மிகப்பெரிய புத்தகம் எழுதியவர் என்ற லிஸ்டில் மேலும் முன்னேறப்பார்ப்பார்.

இதில் மனித உரிமை பிரச்சனை வேறு. மண்ணாங்கட்டி. ஓரினச்சேர்க்கை மனித உரிமையா? எந்த ஊரில் சொன்னார்கள்? அமெரிக்காவிலா? நீங்கள் எங்கிருக்கிறீர்கள்? என்னது அத்திப்பட்டியிலா? பிறகென்ன போய் நாளைய சாப்பாட்டிற்கு என்ன வழி என்று பாரும். இல்லை உங்கள் அத்திப்பட்டி, மேப்பில் இன்னும் இருக்கிறதா என்று மற்றொருமுறை பார்த்து உறுதி படுத்திக்கொள்ளும். நினைப்பதெல்லாம் செய்தால் அதற்குப்பெயர் மனித உரிமையா? அதற்கு டெபனிஷன் வேறு. எந்த உயிரும் மற்றொரு உயிருக்கு தீங்கு ஏற்படுத்தாமல் வாழ உரிமையிருக்கிறது என்று. ஒரு மனிதன் நிர்வானமாய் இருந்தால் அதில் ஏதேனும் மற்றவருக்கு கெடுதி இருக்கிறதா? பிறகு ஏன் அது தடை செய்யப்படுகிறது? இது மனித உரிமையில்லையா? இங்கே மட்டும் கலாச்சாரம் கூரையைப்பொத்துக்கொண்டு டபக் என்று விழுகிறதோ? மது அருந்துவது மனித உரிமையா. மது அருந்திவிட்டு அந்த போதையில் நீ மற்றொரு மனிதனின் உரிமையில் தலையிடவில்லையா? மது அருந்திவிட்டு லாரியை ரோட்டில் ஒட்டாமல் ரோட்டை விட்டு கீழே மணலில் உனக்கு பயந்து கஷ்டப்பட்டு ஸ்கூட்டர் ஓட்டிக்கொண்டிருக்கும் மனிதனை பத்திரமாக சொர்கத்திற்கு அனுப்பிவிட்டு நீ ஆலமரத்தின் கிளையில் லாரியை பார்க் செய்ய ட்ரை பண்ணதில்லையா? குடிப்பது உரிமைதான். அதனால் மற்றவர்களுக்கு மறைமுகமாக தீங்கு ஏற்படுகிறதா இல்லையா? அப்பொழுது உங்கள் டெபனிஷன் தவறாகிறதே. மதுவாவது பரவாயில்லை கவர்மெண்ட் பிச்சை எடுக்காமல் காலம் தள்ள உதவுகிறது. மிஞ்சிபோனால் ஒரு தனி மனிதனையோ, அல்லது ரோட்டில் ஸ்கூட்டர் ஓட்டும் அப்பாவி மனிதனையோ, அல்லது ஒரு குடும்பத்தையோ தான் பாதிக்கும். இந்த ஓரினச்சேர்க்கை நம் சந்ததியினர் அனைவரையுமல்லவா பாதிக்கும். கலாச்சாரத்தை வேரோடு அழிக்குமே.

ஒவ்வொரு மனிதனுக்கு, ஒரு சமுதாயத்துக்கும், நாட்டுக்கும், ஏன் விலங்குக்கும் கூட ஒரு தனித்துவம் – ஐடன்டிட்டி – இருக்கிறது. அது தான் நமது அடையாளம். அதை எக்காரணத்தைமுன்னிட்டும் நாம் தொலைத்துவிடக்கூடாது. சிங்கம் என்றால் கர்ஜிக்கத்தான் வேண்டும். பிடரியில் முடி இருக்கத்தான் செய்யும். அது மனிதனைப்பார்த்து கிராப் வெட்டிக்கொண்டு ஹேர் கலரிங்கும் செய்து கொண்டால் நன்றாகவா இருக்கும். மேற்கத்தியனரின் கலாச்சாரமும் வாழ்க்கைமுறையும் வேறு. நீ இதற்கு சட்டம் வைத்திருக்கிறாயா? ஓகே. குட். அவ்வளவுதான். எங்களுக்கு இது சரிப்படாது. நாங்கள் ஓரினச்சேர்க்கையை தடுக்க என்ன செய்யலாம் என்று நாங்களே யோசித்துக்கொள்கிறோம். நமக்கு யோசிக்கத்தெரியாதா? எதற்கெடுத்தாலும் அமெரிக்காவிலிருந்து கட், காப்பி, பேஸ்ட் தானா? நாங்கள் – சாப்ட்வேர் மக்கள் – பரவாயில்லை.

இது கலாச்சாரத்திற்கு மட்டுமல்ல. இயற்கைக்கே விரோதமானது. தெரியாமலா இயற்கை ஆணையும் பெண்ணையும் படைத்தது. அல்லது கடவுள் மறுப்புக்கொள்கை உள்ளவர்களுக்கு. Evolution என்றால், தன் தேவைக்காகத்தானே ஆணாகவும், பெண்ணாகவும் evolve ஆனோம். தேவையில்லையென்றால் ஆண் முட்டும் தானே பரிணாமவளர்ச்சி அடைந்திருப்பான். திருவள்ளுவர் மிகப்பெரிய அறிவாளி என்று உலகமே ஒத்துக்கொள்கிறது. அவர் காமத்துப்பாலைப்பற்றி விரிவாக எழுதியிருக்கிறார். அங்கே எங்காவது ஓரினச்சேர்க்கை வருகிறதா? இல்லை நமது புராணங்கள் எதிலும் இவ்வாறு வருகிறதா? இப்ப மட்டும் என்ன அவசியம் பொத்துக்கொண்டு வந்தது? இதிலும் குலோபலைஷெசனா? சுதந்திரமா? இப்படி படிப்படியாக கட்டுப்பாடுகளை இழந்து கொண்டுவந்தால் நாம் மறுபடியும் சுதந்திரமான விலங்குகளாகத்தானே ஆவோம்? நமக்கும் ஐந்தறிவு விலங்குக்கும் என்ன வேறுபாடு?

ஓரினச்சேர்க்கையாளர்களை ஒதுக்கிவிட முடியாது. அதற்காக அதை சட்டமாக்கவும் கூடாது. தண்டனையில்லையேல் குற்றம் பல்கிப்பெருகி ஆலவிருட்சமாக வளர்ந்துவிடும். ஏன் கொலையை குற்றம் என்று சொல்கிறோம்? அதற்கு அதிகபட்சத்தண்டனை வழங்குகிறோம்? குற்றம் என்பதால் தான் கொலையை செய்ய மனிதன் தயங்குகிறான். இல்லையென்றால் என்னடா என் மீசையைப்பார்த்தாடா சிரிக்கிற என்று கத்தியை சொருகிவிட்டு சாதாரணமாக செல்வான் மனிதன்.

அடக்குமுறைகளாலும் சட்டத்திட்டங்களாலும் பயத்தினாலும் தான் மனிதன் மனிதனாக இன்று வரை இருந்துவந்திருக்கிறான். அப்படி அவசர அவசரமாக சட்டமாக்க இதென்ன அடிப்படை பிரச்சனையா? இந்தியாவில் உண்ண உணவு, உடுக்க உடை, இருக்க இடம், குடிக்க தண்ணீர், படிக்க கல்வி – கன்னடத்திலோ, தமிழிலோ அல்லது லத்தீனிலோ, அதுவல்ல பிரச்சனை – அனைவருக்கும் கிடைக்கிறதா?பிறகு, இந்த சட்டத்திற்கு என்ன அவசரம்? இல்லை உங்களுக்கு பொழுது போகவில்லையா? பொழுது போகவில்லையென்றால் சாக்பீஸில் கோடு போட்டு தாயம் விளையாடுவது தானே? ஏன் காமோ சோமோ – என்ன அர்த்தம் என்று கேட்காதீர்கள் ப்ளீஸ் – வென்று என்னத்தையாவது செய்துகொண்டிருக்கிறீர்கள்?

நன்றி: சிவபாலன்.

கேட்பதற்கு உரிமையில்லை!

ரஜினி ஒரு மூன்றெழுத்து மந்திரம். ஒத்துக்கொண்டாலும் ஒத்துக்கொள்ளாவிட்டாலும் அவர் ஒரு மந்திரம் தான். சிலர் அவரைப் புகழ்ந்து விளம்பரம் தேடிக்கொள்கின்றனர். சிலர் அவரை விமர்சித்து விளம்பரம் தேடிக்கொள்கின்றனர். விளம்பரம் விளம்பரம் தான்.

ரஜினி வேலு பிரபாகரனுக்கு உதவி செய்திருக்கிறார். அது கடனாகவோ, ரொக்கமாகவோ எப்படி வேண்டுமென்றாலும் இருக்கலாம். அதை வேலுப்பிரபாகரன் விகடனுக்கு அளித்திருக்கும் பேட்டியில் கூறியிருக்கிறார். கவனிக்க, ரஜினியின் சொந்தமோ அல்லது ரஜினியின் ரசிகர் மன்றமோ அல்லது ரஜினியோ இதைச் சொல்லவில்லை. வேலு பிரபாகரனே கூறியிருக்கிறார். ரஜினியின் நிர்பந்தத்தினாலே அவர் சொன்னார் என்று நினைத்து விட வாய்ப்பிருக்கிறது. அது சின்ன புத்தியுள்ளவர்களுக்கே சாத்தியம். ரஜினியை காட்ட சாட்டமாக விமர்சித்தவர் வேலு பிரபாகரன். தனக்கு ஒரு கஷ்டம் என்று வந்தவுடன் ரஜினியிடம் அதை சொல்லியிருக்கிறார். ரஜினி பழயதை நினைத்து உதவியிருக்கலாம். அல்லது நினைக்காமல் உதவியிருக்கலாம். உதவி உதவி தானே ஐயா? வேலுபிரபாகரனின் கஷ்டம் தீர்ந்ததா இல்லையா? உங்களுக்கு ஏன் பற்றிக்கொண்டு வருகிறது? மற்ற எத்தனை தயாரிப்பாளர்கள் கஷ்டப்படுகிறார்கள் அவர்களுக்கு ஏன் உதவவில்லை என்று கேட்பது மிக மிக அபத்தமாக இருக்கிறது. ஒருவர் மற்றொருவருக்கு உதவுகிறார் என்றால் அவரிடம் போய்: ஏய் நீ ஏன் அடுத்தவருக்கு உதவவில்லை என்று கேட்பது போல் இருக்கிறது. மேலும் ரஜினி தனது படங்களில் நலிந்த தயாரிப்பாளர்களை இணைத்தயாரிப்பாளர்களாக சேர்த்துக்கொள்கிறார் என்பது அனைவருக்கும் தெரிந்த செய்தி. தற்போதைய சிவாஜியில் கூட எஸ்.பி.முத்துராமனை சேர்த்திருக்கிறார். பண்டரிபாய், வீ.கே.ராமசாமியை தனது முந்தைய படங்களில் சேர்த்திருந்தது உங்கள் அனைவருக்கும் தெரிந்திருக்கும். குற்றம் பார்ப்பதே குற்றம். அதிலும் நல்லவிசயத்தில் குற்றம் பார்ப்பது என்பது மிக மிக அபத்தம்.

மனோரமா ரஜினியை விமர்சித்தார். அதனால் அவருக்கு படங்கள் குறைந்தது. அதற்கு காரணம் ரஜினியாம். ரஜினி எல்லோரிடமும் சென்று மனோரமாவிற்கு வாய்ப்பு தராதீர்கள் என்று சொன்னாராம். சினிமாவிலிருந்து கொண்டே சினிமாக்காரர்களை விமர்சிப்பது – அதுவும் பெர்சனலாக – சினிமாக்காரர்களையே எரிச்சலடையச் செய்யும்.நாளை நம்மையும் விமர்சிப்பார் என்ற பயம் கூட காரணமாக இருக்கும். மேலும், ஒரு துறையில் பலசாலியாக இருப்பவரை, அந்த துறையில் இருக்கும் ஒருவர் விமர்சித்தால், மற்ற யாரும் விமர்சித்தவருக்கு ஆதரவு தர மாட்டார்கள். தாட் இஸ் நேச்சுரல். ரஜினியே வாய்ப்பு கொடுத்தால் மற்றவர்கள் தானாகவே வாய்ப்புத்தருவார்கள் என்பதால் கூட முதலில் ரஜினி அழைத்து வாய்ப்பு தந்திருக்கலாம். ஹீரோக்களை துதி பாடுவது என்பது புதிதல்ல, அதை சகித்துக்கொள்வதும் நமக்கு புதிதல்ல. எம்.ஜி.ஆர் திரைப்படங்களில் படத்திலிருக்கும் ஈ. எறும்பு முதற்கொண்டு அனைத்தும் அவரைத் துதிபாடும். அப்படியிருக்க மனோரமாவும் அந்த படத்தில் ஒரு கதாப்பாத்திரம். ரஜினியே நீங்கள் எனக்கு வில்லியாக நடியுங்கள்; என்னைத் திட்டுங்கள் என்று சொல்லியிருந்தால் கூட அன்றைய சூழ்நிலையில், மனோரமா அதை செய்திருக்கமாட்டார் என்றே தோன்றுகிறது. அப்படியிருக்க இதைக்காரணம் காட்டி அவரை சேடிஸ்ட் என்று சொல்வது நியாயமா? நம் சுய விளம்பரத்திற்காக அவரை பிண்டம் என்று சொல்லலாமா?

ரஜினி ஏதாவது சமூகசேவை செய்திருக்கிறாரா என்றும் கேட்கிறார்கள் அவர் ஒரு நடிகர். அவர் தொழில் நடிப்பது. சமூக சேவை செய்வது அல்ல [அப்படியும் அவர் நிறைய செய்திருக்கிறார்]. மேலும் அவர் செய்ய வேண்டும் என்கிற அவசியம் ஏதும் இருக்கிறதா என்ன? கடவுள் அவரைப் படைக்கும் போது : சிவாஜிராவ், நீங்கள் தமிழகம் சென்று திருத்தொண்டாற்றக்கடவது என்று சொல்லி அனுப்பினாரா என்ன? நீங்கள் சமூக சேவை செய்வதற்கென்றே தேர்ந்தெடுத்து அனுப்பிவைத்திருக்கிறீர்களே முதலில் அவர்கள் சமூக சேவை செய்கிறார்களா என்று பாருங்கள். பிறகு நம் ரேஞ்சுக்கு நாம் என்ன செய்கிறோம் என்று பாருங்கள். நீங்களும் சமுதாயத்தில் ஒரு அங்கத்தினர் தானே, ரஜினியைப் போல்.

அவர் கோடி கோடியாக அள்ளுகிறார். பிறகு இமயமலைக்கு போகிறார் என்றொரு பேட்டி வந்திருந்தது. இது என்ன அநியாயம்? அவர் சம்பாதிக்கிறார். அவர் இமயமலைக்கு செல்கிறார், இல்லை எங்கு வேண்டுமானாலும் செல்லட்டும். உனக்கென்ன? உன் காசையா திருடிவிட்டு செல்கிறார்? படம் பார்த்த தமிழ்மக்களுக்கு அவர் என்ன செய்தார் என்று கேட்கிறார்கள். என்ன செய்யவேண்டும்? சாம்பார் இட்லி சாப்பிடுகிறோமே சரவணபவனில், சரவணபவன் நமக்கு என்ன செய்தது என்று கேட்க முடியுமா? சாம்பார் இட்லி சாப்பிட்டாச்சா? அப்படியே ஓடிப்போயிடு. அதுதான். படம் பார்த்தீல. உன்ன யாராச்சும் தர தரன்னு புடிச்சு இழுத்துட்டு போனாங்களா? கண்டிப்பா டிக்கெட் வாங்கு இல்லேன்னா குலநாசம்னு யாராச்சும் பயமுறுத்துனாங்களா? அதுவும் முதல் நாளே பாக்கலீன்னா உனக்கு ஆயுள் தண்டனைன்னு சொன்னாங்களா? நீயாத்தான பார்த்த. நீ கொடுத்த காசு படத்துக்கு சரியாப்போச்சு. அவ்வளவுதான். மளிகைக்கடையில கடல உருண்டை வாங்குறமாதிரிதான். வாங்கிட்டியா? சாப்டாச்சா? போயிட்டேயிரு. அண்ணாச்சி உன் கடையில் நான் கடலஉருண்ட சாப்பிட்டிருக்கேன், நீ எனக்கு என்ன செஞ்சன்னு கேக்க முடியுமா? படம் புடிச்சிருந்தா பாரு. இல்லயா பாக்காத. பாத்துப்புட்டு, விசிலடிச்சுப்புட்டு ஐயோ நீ இமயமலைக்கு போனா நான் எங்க போறதுன்னு கேட்டா? சம்பாதிக்கறார் சம்பாதிக்கறார் என்றால்? வரி கட்டுகிறாரா இல்லையா?

ஐயா, நாட்ல எல்லோரும் தான் சம்பதிக்கிறோம். எல்லோரும் தான் செலவழிக்கிறோம். எல்லோருக்கும் செலவு இருக்கு. அவங்க அவங்க சக்திக்கு தகுந்தாமாதிரி. மொதல்ல நாம நம் சக்திக்கு உட்பட்டு என்ன தான தர்மம் பண்றோம். என்ன பொது நலத்தொண்டுகள் கிழிக்கறோம்னு பார்க்கனும். அதவிட்டுப்புட்டு அவன் நொல்ல, இவன் தொல்லன்னு சொல்றது வேறஒன்னுமில்ல பொறாமை அதன் விளைவாக அரசியல். அவர் ஒரு நடிகர். இன்னும் நேரடி அரசியலில் கால் எடுத்து வைக்கவில்லை. அவர் அரசியலுக்கு வரட்டும், பதவியில் அமரட்டும் அப்போது கேட்கலாம் எங்களுக்கு என்ன செய்தாய் என்று? அது வரைக்கும் நமக்கு கேட்பதற்கு உரிமையில்லை.

செய்ய வேண்டும் தான். செய்திருக்கலாம் தான். அவர் வசதிக்கு அவர் இப்பொழுது செய்துகொண்டிருப்பதைக்காட்டிலும் மிக நன்றாக செய்யலாம் தான். எத்தனையோ கிராமங்கள் வறுமையால் உலன்று கொண்டிருக்கின்றன. அதில் ஒரே ஒரு கிராமத்தை மட்டும் தத்தெடுக்கலாம். அதற்கு வசதிகள், வேலைவாய்ப்பு என்று ஏற்படுத்திக்கொடுக்கலாம். பள்ளிக்கூடங்கள் திறக்கலாம். புதிதுபுதிதாக ரிசெர்ச்சுக்கு உதவலாம். விவசாய ரிசர்ச். உப்புத்தண்ணி ரிசர்ச். முடி கொட்டாமல் தடுப்பது எப்படி. அவருக்காவது உபயோகமாக இருக்குமே. இதை செய்ய முடியாதா அவரால்? பிறகு பணமிருந்து என்ன பயன்? – இத விட்டுபுட்டு எங்க பேச கூப்டாலும் போய் மேடையேறி, பேச கூப்டவரை நல்லவரு வல்லவருன்னு மட்டும் பேசிட்டு ஒரு கத சொல்லிட்டு போனா என்னங்க அர்த்தம்? – ஆனால் இதையெல்லாம் செய்யாதது குற்றமில்லை. இதை அவர் மட்டும் தான் செய்திருக்க வேண்டும் என்றில்லை. செல்வந்தர்களாக இருக்கும் எவரும் செய்திருக்கலாம். யார் செய்தார்கள்? தமிழ்நாட்டில் இவர் ஒருவர் மட்டும் தான் பணக்காரராக இருக்கிறாரா? வேறு எவரிடமும் பணமில்லையா?

இது தமிழகத்தின் தலையெழுத்து. என் தெலுங்கு நண்பர் ஒருவர் கேட்டார் : ஏன் சூர்யா ஜோதிகா திருமணத்திற்கு இவ்வளவு முக்கியத்துவம் தருகின்றன உங்கள் பத்திரிக்கைகள் என்று. நியாயம் தானே? ஏன் இவ்வளவு முக்கியத்துவம்? படங்களுக்கு ஏன் இவ்வளவு முக்கியத்துவம்? பத்திரிக்கைகளும் தொலைக்காட்சிகளும் நம்மை சினிமா என்ற போதையில் அமுக்கி வைத்திருக்கவே விரும்புகின்றன. சினிமா ஒரு பொழுது போக்கி. நம் ஊரில் பொழுதைப்போக்குவதற்கு வேறு விசயங்கள் இல்லாததும் ஒரு காரணமாக இருக்கலாம். அப்படியே இருந்தாலும் – தீம் பார்க் – மிக காஸ்ட்லியாக இருக்கின்றன. குடும்பத்துடன் செல்ல வேண்டுமானால் பாதி மாத சம்பளம் – சாப்ட்வேர் மக்களே நான் உங்களைப்பற்றி பேசவில்லை – எடுத்து வைக்கவேண்டும். அதைவிட சினிமா எவ்வளவோ தேவலை. சீப் அன்ட் பெஸ்ட் பொழுதுபோக்கி. 60ரூபா டிக்கெட் எடுத்து மூன்று மணி நேரம் உட்கார்ந்துவிட்டு வந்துவிடலாம். அது கொடுக்கும் தலைவலியில் வீட்டு பிரச்சனைகளை ஈசியாக மறந்துவிடுகிறோம்.

வேண்டுமானால் நாம் சினிமா – தியேட்டருக்கு போய் – பார்ப்பதை நிறுத்தலாம். இதற்குத் தான் நமக்கு உரிமை இருக்கிறது. படம் பார்ப்பதற்கு பதிலாக: அந்த நேரத்தை நம் உடம்பை பேணுவது, வீட்டில் தோட்டம் வளர்ப்பது, குடும்பத்தினருடன் – சண்டைவராமல்- முக்கியமாக தாய் தந்தையருடன் பேசிக்கொண்டிருப்பது, அவர்களது கதைகளை காது கொடுத்து கேட்பது, பிள்ளைகளை பார்க்கு பீச் என்று அழைத்து செல்வது, உறவினர் வீட்டிற்கு விசிட் -டேரா போட்டு அவர்களுக்கு செலவிழுத்து வைக்காமல்-அடிப்பது, எங்கேயாவது டிரிப் அடிப்பது, புத்தகம் படிப்பது -படித்துவிட்டு; ஜெயமோகனை: நான் உன் புத்தகம் படித்தேன் நீ எனக்கு என்ன செய்தாய் என்று கேட்ககூடாது-படிக்கதூண்டுவது, விளையாடுவது, விளையாட இடமில்லையா, எங்கே இடம் அமைக்கலாம் என்று யோசிப்பது என்று எத்தனையோ விசயங்கள் இருக்கிறது.

சினிமா பார்ப்பதை நிறுத்துவோம். அதற்கு செலவழிக்கும் காசையும் நேரத்தையும் – முக்கியமாக நேரம் -ஒருங்கினைப்போம். நல்ல விசயத்திற்கு ஸ்டிரீம் லைன் பண்ணுவோம். அது தான் நம்மால் முடிந்தது. அதை விட்டுட்டு இன்னும் எத்தனை காலம் ரஜினியையே குற்றம் சொல்லிக்கொண்டிருப்பது? போங்கப்பா. போங்கப்பா. போய் பிள்ளைகளை படிக்க போடுங்கப்பா.

கதம்பம்

சென்ற சில நாட்களாக – வாரங்களாக – நான் இரசித்த கவிதைகள், ஜோக்குகள்,பாடல்கள் போன்றவை. நீங்கள் படித்திருக்கலாம்.

ஒரு காதல் கவிதை :

தங்கத்தின் மதிப்பு லண்டனிலும்
வைரத்தின் மதிப்பு நெதர்லாந்திலும்
மதிப்பிடப்படுவதாக
செய்திகள் சொல்கின்றன
ஆனால். இரண்டின் மதிப்பும்
நிர்ணயிக்கப்படுவது
உன் கழுத்தில் தான்

விகடனில் வந்த ஒரு கேள்வி:

“நாங்கள்லாம் மொத ஷோவே பார்த்துட்டம்ல!” ங்கிறதைக் காட்டுறதுக்காகவே, தியேட்டர்ல முன் ஸீட்ல உட்கார்ந்துக்கிட்டு ‘டக்குன்னு குத்திருவான் பாரேன்’, ‘அடுத்த ஸீன்ல இருக்குடி இவனுக்கு ஆப்பு’ ‘பாட்டு போடப்போறாய்ங்கடா’ன்னு ஸீனுக்கு ஸீன் டிரெய்லர் ஓட்டி டார்ச்சர் பண்றானுங்களே முந்திரி பக்கோடா காதருங்க..இந்த இம்சை ஏன்டா?

மற்றொரு கேள்வி:

லவ்வருக்கு போன் பேசுற பூரா பூனைப் பயலுகளும் ‘அப்புறம் அப்புறம்’ ங்கிறதை மட்டுமே ஆயிரத்தெட்டு தடவை யூஸ் பண்றானுங்களே. வொய்? வொய்? ராத்திரி எட்டு மணிக்கு மேலே பொண்ணுங்க எந்த கால் பேசினாலும் ஹஸ்கி வாய்ஸ்லயே பேசுறாங்களே, வொய்மா வொய்?

அரசியல்ல இதல்லாம் சகஜமப்பா!

ஒரு கொரளு: ஒரு வெளக்கம்.

கவ்வையால் கவ்விது காமம் அதுஇன்றேல்
தவ்வென்னும் தன்மை இழந்து

யாராச்சும் நீ லவ்ஸ் வுட சொல்லோ நாலு ஜெனம் சத்தய்ச்சினுதான் போவும், அது ரப்ச்சர் கெடியாதும்மே! லவ்ஸ¤க்கே அதாம்மே கிரிகிரி!

மெய்யாலுமா?

மற்றொரு குபீர் சிரிப்பு செய்தி : தினமலரில் வந்தது!! ஆனாலும் தினமலருக்கு நக்கல் ஜாஸ்திபா!

மற்றொரு யோசிக்கவைத்த கவிதை:

கை இல்லாமல்
கால் இல்லாமல்
உறுப்புகள் கோரப்பட்டு
மனுசங்க இருக்காங்க
வயிறு இல்லாத மனிதன்
இல்லவே இல்லை

சிந்தனை புதிது. என் தோழி ஒருத்தி இதெல்லாம் கவிதையாடா? என்றாள். அழகாக இருந்தால் எல்லாமே கவிதைதான், இல்லையா?

சமீபத்தில் கேட்ட சினிமா பாடலொன்று என் மனதை மிகவும் பாதித்தது. மிகுந்த சமூக பொறுப்புணர்வோடு பாடிக்கொண்டுவந்த கவிஞர், திடீரென்று இவ்வாறு சொல்லுகிறார்.

பாடல் : என்னம்மா தேவி ஜக்கம்மா
படம் : தம்பி

யார் எழுதியது என்று தெரியவில்லை.

விவசாயம் செய்யுன்னா
வேணான்னு சொல்லுறான்
வெளிநாடு போயித்தான்
ஒட்டகம் மேய்க்கிறான்

என்ன வார்த்தைகள் இவை? இதற்குப்பெயர் சமூகப்பொறுப்புணர்வா? நக்கலும் நையாண்டியும் அல்லவா மேலோங்கி நிற்கிறது? விவாசாயம் நல்ல வருமானம் தருகின்ற தொழிலாக இருந்தால் யார் அதை விட்டுவிட்டு ஒட்டகம் மேய்க்கப்போகப்போகிறார்கள்? விவாசயம் முக்கியமானது, நான் கடைசி வரை விவாசயம் மட்டுமே செய்துகொண்டிருப்பேன் என்று சொல்லிக்கொண்டு கூல் சட்டியை ஏந்திக்கொண்டிருக்கலாம் தான். நீங்கள் (சினமாக்காரர்கள்) என்ன செய்வீர்கள்? நெய்வேலியில் கருப்புசட்டை அணிந்து கொண்டு ஊர்வலம் போவீர்கள், பிறகு, அப்புறம்? உலக சினிமாவில் முதல் முறையாக என்று துபாய் பாலைவனத்தில் அதே ஒட்டகங்களோடு – கடுமையான வெயிலையும் பொருட்படுத்தாமல் பைஜாமா குர்தா சகிதம் – டூயட் பாட போய்விடுவீர்கள். பிறகு கூல் சட்டியை யார் நிறப்புவது? நீங்கள் சினிமாக்காரர்கள். காதல் கத்தரிக்காய் வெண்டைகாய் என்று அரைத்த மாவையே அரைத்து மக்களை ஏமாற்றிக்கொண்டு இருங்கள். வெளிநாட்டில் உட்கார்ந்து, சொந்த பந்தம் மனைவி மக்கள் என்று அத்தனையும் விட்டு தம்முடைய அடுத்த சந்ததியினராவது நன்றாக இருக்கவேண்டும் என்று உழைத்து – கவனிக்க, உழைத்து – கொண்டிருக்கும் மக்களின் புண்பட்ட மனதை மேலும் மேலும் ரணமாக்காதீர்கள். உங்களுக்கு புண்ணியமாய் போகட்டும்.

மற்றுமொரு பாடல், சித்ரா மிக அருமையாக பாடியிருக்கிறார்.
படம்: பொய்.

என்ன தொலைத்தாய்
எதனைத் தொலைத்தாய்

தமிழைத் தொலைத்த
தலைமுறை போலே
தண்ணீர் தொலைத்த
தமிழகம் போலே
வருடம் தொலைத்த
வாலிபன் போலே
கருணையைத் தொலைத்த
கடவுளைப் போலே

வீரம் தொலைத்த
வாளைப்போலே
ஈரம் தொலைத்த
நிலத்தைப் போலே
கிழக்கு தொலைத்த
சூரியன் போலே
எல்லை தொலைத்த
தேசம் போலே

என்ன தொலைத்தாய்
நீ
எதனைத் தொலைத்தாய்?

இங்கே பாடலைக்கேளுங்கள்.

என்னுடைய ரோடங்கும் நயாகராக்கள் என்ற பதிவின் கருத்தை(!) ஒட்டிய
கவிதை ஒன்றை இந்த வார தீராநதியில் படிக்க நேர்ந்தது.

ஒரு மின்னல்

சமதரையிலிருந்து
மூன்றடி உயர்த்தித்தான் கட்டினேன்

சுவர்களில்
இட்டு வைக்கும் எச்சங்களைத்
தினமும் துடைத்து அள்ளுகிறேன்

சிறுமழை பெய்யினும்
தேங்கும் நீரில் வீடு தெப்பம்

எல்லாப் புறமும்
பசும்பாசிக் கொடிகள் ஏறுகின்றன
கிறுக்கல் வடிவ நீர்ப்பூச்சிகள்
எப்போதும் வீட்டையே சுற்றுகின்றன

இரவெல்லாம்
தவளைகள் கத்தித் தொலைக்கின்றன

இன்று அதிகாலை
கதவைத் திறந்தபோது
வாசலில் தலைவைத்துச்
சுகமாய்த் தூங்கி கொண்டிருந்தது
அந்த பாம்பு

சலனத்தில்
அது ஒரு மின்னலெனச்
சற்றே புரண்டு படுக்கையில்
என்க்கு புரிந்தது

அதன் வீட்டுக்குள் எனதுவீடு

.

-பெருமாள்முருகன்

குப்பையைக் கிளறுவது கோழியல்ல

திருப்பூர் நண்பர் ஒருவர் சொன்ன தகவல் ஒன்று அதிர்ச்சியாக இருந்தது. “கோவை, ஈரோடு, திருப்பூர் போன்ற மாவட்டங்களில் மூடப்பட்ட பல ஆலைகள் திறக்கப்பட்டு, இப்போது ஜரூராக நடந்துகொண்டு இருக்கிறது. அவற்றில் நூற்றுக்கணக்கான சிறுமிகளைக் கொண்டுவந்து பணியில் அமர்த்தியுள்ளார்கள். மூன்று வருட ஒப்பந்தம். மிகவும் மோசமான உணவோடு, அடிப்படை வசதிகூட இல்லாத இடங்களில் அந்தக் குழந்தைகள் தங்கவைக்கப்படுகிறார்கள். தவிர, அந்த மூன்று வருடமும் அந்தச் சிறுமிகள், ஆலைக்கு வெளியே எங்கும் செல்ல முடியாது. இந்த மூன்று வருடச் சிறை வாழ்க்கை முடிந்து, அவர்கள் வீட்டுக்குப் போகும்போது, கையில் 30,000 ரூபாயும், திருமணம் செய்துகொள்ளத் தாலியும் கொடுக்கிறார்கள். இந்த நவீன குழந்தைக் கொத்தடிமைத் தொழிலுக்கு ‘சுமங்கலி’ என்று பெயரும் வைத்துள்ளார்கள் ” என்று வேதனையோடு குறிப்பிட்டார் அந்த நண்பர்.

“தல வாரிப் பொட்டுவெச்சு பள்ளிக்கூடம் போக நின்னேன்
மல போல தட வந்தது. ஏ…அம்மாவே தட மேல தட சொன்னது…”
பள்ளிக்கூடம் செல்ல முடியாத ஒரு குழந்தையின் ஏக்கம் தொக்கி நிற்கிற இந்தப் பாடல் வரிகள் மனதைப் பிசைகின்றன.

சாலைகளின் ஓரத்தில் நடந்து செல்லும்போதோ, ஓட்டலில் சாப்பிடும் போதோ, உறவினரின் வீட்டுக்கு விருந்துக்குப் போகும்போதோ, சிக்னலுக்காக வாகனத்தில் காத்திருக்கும்போதோ நீங்கள் கவனித்திருக்கலாம்..கலையாத கனவுகளோடும், தீராத ஏக்கங்களோடும், இளம் வயதுக்கே உரிய சந்தோஷத்தைத் தொலைத்துவிட்ட விழிகளோடும், குடும்பத்தைக் காப்பாற்ற வேண்டிய பொறுப்புச் சுமையோடும் ஜீவனற்று நடமாடிக்கொண்டு இருக்கும் பலப் பல குழந்தைகளை.

அரசியல் சட்டத்தின் அடிப்படையில் பார்த்தால், வேலைக்கு அமர்த்தப்படுகிற 14 வயதுக்குட்பட்ட அனைவருமே குழந்தைத் தொழிலாளர்கள்தான். பஞ்சு ஆலைகள், கண்ணாடித் தொழிற்சாலைகள், சுரங்கங்கள் என்று அந்த எந்த ஒரு அபாயகரமான தொழில்கள் எவை எவை என்பதை இன்னும் நம்முடைய சட்டங்கள் வரையறுத்துச் சொல்லவில்லை. அதனால் விதவிதமாக அரசாங்கத்தை ஏமாற்றிக் குழந்தைகளைத் தொழிலில் அமர்த்தும் கொடுமை நடந்துகொண்டு இருக்கிறது.

விடுதிகள், உணவகங்களில் மட்டுமல்ல வீட்டு வேலைக்குக்கூடச் சிறுவர்களை அமர்த்துவது குற்றம்தான்.

இந்தியாவில் உள்ள குழந்தைத் தொழிலாளர்களின் எண்ணிக்கை ஒரு கோடிக்கும் அதிகம் என்கிறது ஒரு புள்ளிவிவரம். தமிழகத்தில் மட்டும் 6 லட்சத்துக்கும் அதிகமான குழந்தைத் தொழிலாளர்கள் இருப்பதாக ஒரு கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது.

உச்ச நீதிமன்ற நீதிபதி எம்.சி.மேத்தா ஒரு தீர்ப்பில் ‘குழந்தைகள் வேலைக்கு அமர்த்தப்படுவது தெரிந்தால், அமர்த்தியவரைக் கைது செய்து, அவரிடமிருந்து 20,000 ரூபாய் அபராதம் வாங்கி, அரசாங்கமும் இன்னொரு 20,000 ரூபாய் போட்டு, அந்தக் குழந்தையின் பெற்றோருக்கு வேலை கொடுக்க வேண்டும். அப்படி வேலை கொடுக்க முடியாவிட்டால், இன்னும் 5,000 ரூபாய் போட்டு, 18-வயது வரை அந்தக் குழந்தைக்கு உதவ வேண்டும்’ என்று ஒரு டிரஸ்ட் துவங்கச் சொன்னார். அது என்ன ஆயிற்று என இன்று வரை யாருக்கும் தெரியாது.

20.8.06 விகடன் இதழிலிருந்து.

சுஜாதா குறிப்பிட்ட கவிதை ஒன்று எனக்கு ஞாபகம் வருகிறது,

குப்பையைக்
கிளறுவது கோழியல்ல
கோணிப்பையுடன் சிறுவன்.

தீர்வு?

நான் சென்னையில் இருக்கும் பொழுது நான் மற்றும் எனது நண்பர்கள் அசோக், நவநீதன், சிவா, கெம்பு மற்றும் எனது அலுவலக நண்பர்கள் சிலர் சேர்ந்து ஸ்பீட் என்ற ஒரு அமைப்பு தொடங்கினோம்.
SPEED – Society for Poverty Eradication and Educational Development. நாங்கள் ரெஜிஸ்டர் செய்யவில்லை. ஆனால் மாதா மாதம் உறுப்பினர்கள் அனைவரும் கொஞ்சம் பணம் போடுவோம். மே மாத இறுதியில் அந்த பணத்தை மொத்தமாக திரட்டி படிப்பதற்கு பணமில்லாத குழந்தைகளுக்கு உதவியிருக்கிறோம்.

இரண்டு வருடம் மட்டுமே ஒழுங்காக செயல்படுத்தினோம். அடுத்து அவரவருக்கு அவர் அவர் கஷ்டங்கள், வேலைகள் மற்றும் டி.வி.டி கள்.

நான் இதை செய்து கொண்டிருப்பதை அறிந்து (நான் சொல்லாமலே) எனது CTO என்னை அவர் அறைக்கு அழைத்து, உடனடியாக ரூ.1000 கொடுத்தார். எனது சக அலுவலர் நான் இந்த திட்டத்தை விளக்கிக்கொண்டிருக்கையில், சட்டென்று நல்ல திட்டம் முத்து, இந்தா என்னுடைய இந்த மாத கட்டணம் என்று ரூ. 100 எடுத்துக்கொடுத்தார்.

மக்கள் என்றைக்குமே உதவுவதற்கு தயாராகத்தான் இருக்கிறார்கள். தங்களால் முடிந்தவரை உடவிக்கொண்டுதான் இருக்கிறார்கள். அவர்களை ஒருங்கினைத்து – தண்ணீருக்கு அணை போல – செயல்படுத்தத் தான் முடியவில்லை. [இதுவும் ஆங்காங்கே நடந்து கொண்டுதான் இருக்கிறது என்பதை மறுப்பதற்கில்லை]

சரி. குழந்தை படிப்பதற்கு பணம் கட்டியாகிவிட்டது. அவர்களின் தலையில் இருக்கும் குடும்ப பாரத்தை எப்படி இறக்கிவைப்பது? அடுத்தகட்ட பிரச்சனையும் இருக்கிறது.

அரசாங்கத்திற்கு மட்டும் தான் அக்கறை வேண்டுமா? குழந்தைகளின் மீதான நமது அக்கறை அவ்வளவுதானா?

சிற்பிகளும் சிலைகளும்

நேற்று இரவு சன் டீவியில் நடிகர் திலகம் சிவாஜி கணேஷனின் சிலை திறப்பு விழா நிகழ்ச்சி ஒளிபரப்பு செய்யப்பட்டது. பைரேட்ஸ் ஆப் த கரீபியன் பார்க்கப் போய் இந்த நிகழ்ச்சியை முதலில் இருந்து பார்க்க குடுத்துவைக்கவில்லை எனக்கு. பல நடிகர்களின் பொன்னான பேச்சுகளைக் கேட்க முடியாமல் போனதில் எனக்கு வருத்தம் தான். எத்தனை நடிகர்கள், அப்பப்பா. அனைவரையும் ஒரு சேரப் பார்ப்பதில் ஒரு சந்தோஷம் இருக்கத்தானே செய்கிறது. மேலும், வலைபதிவுகளில் பலர் சிவாஜி சிலையைப் பற்றி விவாதித்தும் வந்திருக்கின்றனர். வைக்கவேண்டும். வைக்கக்கூடாது. வைத்தால் பராவாயில்லை. வைத்து விட்டுத்தான் போகட்டுமே, நமது ஹாலிலா வைக்கிறார்கள். என்பதைப் போன்று பல விவாதங்கள். நம்மிடம் விவாதங்களுக்கு பஞ்சமா என்ன? பெண்களின் கூந்தலுக்கு இயற்கையிலே மனம் இருக்கிறதா இல்லையா என்று அரசனே விவாதத்தை தொடங்கிய நாடல்லவா இது. அதற்கு ஒரு நீதி வழங்க அல்லது ஒரு முடிவு ஏற்படுத்த உலககைக் காக்கும் கடவுளே இறங்கி வந்த விவாதம் அல்லவா இது. சும்மா சொல்லக்கூடாது. சிவாஜி கணேஷன் சார் நன்றாக நடித்திருப்பார். அல்லது சிம்மக்குரலில் கர்ஜித்திருப்பார். படமாகப் பார்க்காமலே சும்மா கதை வசனம் மட்டும் கேட்டாலே போதும் படம் கண்ணில் விரியும். அப்படி யார் நடித்தார்கள். நடிக்கிறார்கள். அல்லது நடிப்பார்கள். ஏன்னா கலையை ரசிப்பதற்கும் ஒரு மனது வேனும் பாருங்க. அது தமிழனுக்கு அதிகம் இருக்குதுங்கிறேன்.

சும்மாவா. எத்தனை நடிகர்களை முதல்வர் ஆக்கியிருக்கிறோம். ஆனா உண்மையிலே நமக்கு ரசிப்புத்தன்மை அதிகமுங்க. ரசிப்புத்தன்மைனுதானுங்க சொன்னேன். சகிப்புத்தன்மைன்னும் சொல்லலீங்க. எனக்கு சிவாஜி சாரை நிறைய புடிக்குமுங்க. அவரோட கடைசி காலத்து, ‘ஜாதீய முற்போக்கு’ படங்களை தவிர்த்துட்டா, பல படங்கள் எனக்கு பிடித்த படங்கள் தானுங்க. உத்தமபுத்திரன், மனோகரா, பராசக்தி, அந்த நாள், பாசமலர், பாவமன்னிப்பு, தெய்வமகன், புதியபறவை, முதல்மரியாதை, வீரபாண்டிய கட்டபொம்மன் அப்படீன்னு அடிக்கிகிட்டே போகலாம். உத்தமபுத்திரனின் இளவரசர் (இப்போ புலிகேசி, புலிகேசி!) போல இதுவரைக்கும் யாரும் ஸ்டைல் பண்ணதில்லை என்பது உண்மை. அதுவும், புதிய பறவையில ‘பார்த்த ஞாபகம் இல்லையோ’ என்ற பாடலில் அப்படியே ஸ்டைலாக புகை விடுவாரே பார்க்கலாம். அமர்களமுங்க. நல்லவேளை ‘தமிழ் குடிதாங்கி’ அப்ப இல்லீங்க.ஆனா அப்பவெல்லாம் சுற்றுச் சூழல் இந்த அளவுக்கு மாசு படவில்லை பாருங்க. அதுவும், அப்ப இருந்த இளைஞர்கள் ரொம்ப நல்லவங்க பாருங்க. இப்பத்தான் நாம கெட்டு குட்டியசுவரா போயிட்டம். சினிமா பாத்து பாத்து கெட்டுப் போயிட்டம். அப்புறம் பாசமலரில் பல கெட்டப்புங்க. ஏழை வெகுளியாக, பின்னர் ஸ்டைலான பணக்காரனாக. என்ன வித்தியாசம் காட்டினார். அட அடா. நம்ப ரஜினி அங்க புடிச்சாருங்க. அப்புறம் அண்ணாமலை, படையப்பா சூப்பர் டூப்பர் ஹிட்டுங்க. நல்லவனுக்கு நல்லவனையும் சேத்துக்கோங்க. அட அது அப்பங்க. இப்ப தலைவரு, எல்லாருக்கும் நல்லவருங்க. ரொம்ம்ப நல்லவருங்க. வேற வழி?. எப்படி இருந்த அவரு இப்படி ஆகிட்டாரு.ஹ¤ம்.அப்புறம், தெய்வமகனுங்க. ‘டாட்’ ‘டாடி’ ன்னு ஒரு நிமிஷம் கூட நிக்காம, ஸ்டைலா, நகம் கடிச்சுக்கிட்டு ஒரு மேல்தட்டு பையனா நடிச்சிருப்பாரு பாருங்க. தூள் டக்கருங்க. அந்த படத்திலே, வயதான தந்தையாகவும், இளவயது முகத்தில் கறை படிந்த, இன்பீரியார்டி காம்ப்ளக்ஸ் இருக்கிற ஆளா நடிச்சிருபாருங்க. யாருங்க இப்ப அப்படிப் பண்ணுவா? மனசைத் தொட்டு சொல்லுங்க. வீரபாண்டிய கட்டபொம்மனுங்க. நம்ப யாராச்சும் வீர பாண்டிய கட்டபொம்மன பார்த்திருக்கோங்களா? ஆனா, பாடபுத்தகத்தில கூட சிவாஜிசாரு தானுங்க வீர பாண்டிய கட்டபொம்மனா, சும்மா அப்படியே, ஜோரா, கெத்தா, கம்பீரமா இருக்காரு பாருங்க. கட்டபொம்மன் இப்படித்தான் இருந்திருப்பாரோ? நமக்கு தெரியாததும் வசதிதானுங்க. என்ன சொல்றீங்க? இல்லீனா, யாராச்சும், கட்டபொம்மனுக்கு மீசை 7 செ.மீ தான், ஆனால் படத்தில் சிவாஜி 12 செ.மீ மீசை வெச்சிருக்காருன்னு கேஸ் போட்டாலும் போட்றுவாங்க. கேஸ¤க்கா பஞ்சம்? குஷ்பு மேல 27 கேஸ் போட்டம்ல. போட்டம்ல. என்ன நான் சொல்றது?

அட. அவரு தொழில அவரு நல்ல செஞ்சாரா இல்லியா? அதச் சொல்லுங்க. நாளைக்கு, நல்ல பல் குத்துன பல் டாக்டருக்கும், நல்ல இருதய ஆப்பரேசன் செஞ்ச ‘பைபாஸ்’ டாக்டருக்கும், நல்ல ஸ்பெஷல் டீயூசன் வெச்சு, சொல்லிக் கொடுத்த வாத்தியாருக்கும், வாத்தியாரம்மாவுக்கும், நல்லா விழாம கட்டடம் கட்டின இஞ்சினீயருக்கும், நல்ல குப்பை அள்ளுன துப்புறவாளர்களுக்கும், எங்கையும் மோதாம பஸ், ‘இப்பிடிக்கா’ கவுத்தாத லாரி ஓட்டுனருக்கும், ஒழுங்கா சில்லரை மீதம் கொடுத்த கண்டக்டருக்கும், நல்ல விவசாயம் செஞ்ச அல்லது கடனை ஒழுங்கா கட்டின விவசாயிக்கும், கட்-காபி-பேஸ்ட் செய்யாத புரோகிரமருக்கும், excel sheet அ வெச்சுக்கிட்டு ஓபி அடிக்காத புராஜக்ட் மேனேஜருக்கும், சிலை வெச்சா முதல்வருக்கு புண்ணியமாப் போகுமுங்க.

ஆனா நாமெல்லாம் டீவியில் பேட்டி கொடுத்தா யாராவது பாப்பாங்கன்னு நினைக்கிறீங்களா? அதுவுமில்லாம, சிவாசி சார் முதல்வருக்கு நண்பருங்க.

சரி. நமக்கெதுக்குங்க, இதில முக்கியமா, நடிக-நடிகயைரை பேட்டி எடுக்கும் போது, மொதல்ல சினேகாவையும், அதுக்கப்புறம் உடனே நம்ப சிரிகாந்தும் (அதாங்க. கொழுந்தானாருங்க. அட அது பெரிய கொடுமைங்க) வந்தாருங்களே கவனிச்சீங்களா? என்ன நினைக்கிறீங்க?ம்…ம்….ம்… அட! நமக்கு எது முக்கியமோ அதத்தானே பாக்கனும். என்ன நான் சொல்றது?

விதிகள்

விதிகள் என்பன யாவை? விதிகளை வகுப்பது யார்? விதிகளை தவறாமல் பின்பற்றுபவர்களும், தவறாமல் மீறுபவர்களும் யாவர்? பின்பற்றுபவர்களுக்கு என்ன கிடைக்கிறது? மீறுபவர்கள் என்ன இழக்கிறார்கள்? விதிகளை மீறினால் தண்டனை நிச்சயமா? விதிகளை மீறுபவர்கள் அனைவருக்கும் தண்டனை கிடைக்கிறதா? தண்டனை என்பது என்ன? இதுபோன்ற சில அதிமுக்கியமான கேள்விகள் என் தலையைக் குடைவது எதற்காக? கேள்விகள் சில சமயங்களில் ஒன்றன் பின் ஒன்றாக தொற்றிக்கொண்டு, கடும் புகை கக்கிச் செல்லும் தொடர்வண்டியாகின்றன. பல சமயங்களில் அந்த புகை பெறும்பாலும் ஆக்ஸ்சிஜனாகவே இருப்பது தான் ஆச்சரியம்.

ஒரு வீட்டில் ஒன்றாய், இரத்த பந்தங்களாய் வாழ்பவர்களே பல சமயங்களில் விட்டுக் கொடுக்க மறக்கிறார்கள், மறுக்கிறார்கள். அவர்கள் ஒருமித்த ஒத்தக் கருத்தை அடைவது என்பது பெரும்பாலும் பகற்கனவே. பகற்கனவு பலிக்காதா என்று என்னிடம் எதிர்கேள்வி கேட்காதீர்கள். பலிக்காதுதான் அதுதான் விதி. கற்பிதம். அவ்வாறு இருக்க யாரோ ஒருவர் எப்பொழுதோ விதித்த விதிகளை அனைத்து மக்களும் ஒருசேரக் கட்டிப்பிடித்து கடைப்பற்ற அல்லது கடைப்பிடிக்க ஒத்துக்கொள்வது எவ்வாறு சாத்தியமாகிறது? தீர விசாரித்துப் பார்த்து அதன் ரிஷிமூலத்தைத் தொடர்ந்தோமேயானால், அந்த விதி யாரால் எப்பொழுது இடப்பட்டது, என்பதே புரியாமல், தெரியாமல், ஐன்ஸ்டினின் ரிலேடிவிட்டித் தியரியை ஸ்பெசல் டியூசன் வைத்து படித்தும் புரியாமல் முழிக்கும் மாணவனைப் போன்றே முழிக்க வேண்டிவரும்.

காலங்கள் மாறுகின்றன. தெய்வங்களும் தான். அந்தக் காலத்தில் கொற்றவை என்ற பெண் தெய்வத்தை மக்கள் வழிபட்டு வந்திருக்கின்றனர். கொற்றவை என்ற தெய்வம் இப்பொழுது எங்கே இருக்கிறது?

தூய்மைக்கு அளவுகோல் எதேனும் உண்டா? அவ்வாறு அளவுகோலைத் தயாரிக்க வேண்டுமெனில் தூய்மையை விளக்கத் தெரிந்திருக்க வேண்டுமல்லவா? தூய்மை வெறும் பறத்தூய்மை மட்டுமா? அல்லது அகத்தூய்மையையும் சேர்த்தது தானா?

சப்பானியர்களிடம் சொல்லி, மனிதன் அருகில் வந்தவுடன், அவன் தூய்மையை கண்டுபிடித்து, மூக்கைப் பிடித்துக் கொள்ளும், அல்லது வாந்தி எடுக்கும் அல்லது ஒரே ஓட்டம் பிடிக்கும் ரோபோட்டுகளை செய்யச் சொல்லலாம் தான். அதை வாங்கி தமிழகத்தில் மற்றும் கேரளாவில் இருக்கும் அனைத்துக் கோவில்களுக்கும் கொடுத்து விடலாம் தான். அதையும் மீறி அசுத்தமான மனிதனோ, மனுசியோ அல்லது நடிகையோ நுழைந்து விட்டாலும், அந்த தோஷத்தைப் போக்க, உடனுக்குடன் என்ன யாகம் செய்யலாம், எத்தனை அபராதம் விதிகலாம் என்று சொல்லும் ரோபோவையும் செய்யச் சொல்வது தான் அதி முக்கியம். அவ்வாறு செய்வதால் அசுத்தமான யாவரும் கோவிலுக்குள் புகாமல் தடுத்துவிடல்லம் தான். ஆனால் மனத்தூய்மையை எவ்வாறு அளப்பது? விதிகள்? அதுசரி, சில கண்ணப்பநாயனார்களை வைத்துக் கொண்டு புறத்தூய்மையையே விளக்க அல்லது வகுக்க முடியாமல் திணறும் பொழுது, அகத்தூய்மையின் விதிகளை யார் அளப்பது?

கோவிலுக்குச் செல்லும் பொழுது அனைவரும் ரேஷன் கார்டைக் கொண்டு வரவேண்டும் என்று சட்டம் இயற்றலாம். அப்படி செய்தால் சில் மீரா ஜாஸ்மின்களை கோவிலுகுள் புகுந்துவிடாமல் தடுத்துவிடலாம் தான், ஆனால் ரேஷன் கார்டில் அடையாளத்திற்கு புகைப்படம் கிடையாதே? மீரா ஜாஸ்மின், நயந்தாராவின் ரேஷன்கார்டை காண்பித்தால் என்ன செய்வது? அது சரி, நயன் தாராவை யாராவது தெரியாமல் இருப்பார்களா என்ன?

பேசாமல், இப்படிச் செய்தால் என்ன? வாக்களர் அடையாள அட்டை? ஏன் சிரிக்கிரீர்கள்?

பின் குறிப்பு:
மீராஜாஸ்மீன் மீது வழக்குத் தொடர்ந்தவர்கள் யாராயினும் :
அஞ்சப்பர் உணவு விடுதியில், மட்டன் சுக்காவை ஒரு கட்டு கட்டிவிட்டு, நேரே சிவன் கோவிலுக்குச் செல்லும், சிவனின் கண்மூடித்தனமான பக்தன் ஒருவன் எங்கள் ரூமில் இருக்கிறான். கேட்டால் கண்ணப்பனாயனாரைக் காட்டுகிறான். வந்தால் கேஸ் ஒன்று நிச்சயம். ஆனால் ஒன்று, அவன் நடிகையோ, நடிகனோ இல்லை!

இடஒதுக்கீடு பற்றி ஞானி

இடஒதுக்கீடு பற்றி நாட்டில் உள்ள அனைவரும் விவாதங்கள் செய்து கொண்டிருக்கும் இந்த வேலையில், ஞானி, விகடனில் சிறந்த விளக்கம் அளித்திருக்கிறார். அதில் சில இங்கே,

பிற்படுத்தப்பட்டவருக்கு மருத்துவம், பொறியியல் கல்லூரிகளில் இடம் ஒதுக்குவதால் என்ன ஆபத்து வந்துவிடும் என்று எதிர்க்கிறார்கள்?
தகுதி திறமை இல்லாதவர்கள் டாக்டர்களாகவும் இன்ஜினீயராகவும் ஆகிவிடுவார்கள் என்பதே எதிர்பவர்களின் வாதம். இந்த வாதம் படு ஓட்டையானது என்பதற்கு தென்னிந்தியாவே சாட்சி! கட்ந்த ஐம்பது ஆண்டுகளில், தமிழ்நாட்டில் ஆயிரக்கணக்கான் டாக்டர்கள்/இன்ஜினீயர்கள் பிற்படுத்தப்பட்ட/தாழ்த்தப்பட்ட ஜாதியில் இருந்து வந்திருக்கிறார்கள்.வட இந்தியாவின் உயர் சாதி டாக்டர்கள்/இன்ஜினீயர்களை விட இவர்கள் திறமைக் குறைவானவர்கள் என்று சொல்ல ஒரு சாட்சியமும் இல்லை. மருத்துவ சிகிச்சைக்காக வட இந்தியா முதல் பாகிஸ்தானிலிருந்தெல்லாம் நோயாளிகல் தேடி வருவது தென்னிந்தியாவைத்தான்.

யாருக்கெல்லாம் தகுதியும் திறமையும் இருக்கிறதோ அவர்கள் எல்லோரும் படிக்கட்டுமே! எதற்காக் இடஒதுக்கீடு?
எந்தப் படிப்பையும் படிக்க விரும்பிகிற எல்லோருக்கும் வாய்ப்பு தர வேண்டும் தான். ஆனால் அதற்கான கல்லூரிகள் இட வசதி இதற ஏற்பாடுகள் குறைவாக இருக்கும் நிலையில், யாருக்கு முன்னுரிமை என்று தீர்மானிக்க வேண்டியிருக்கிறது.

சரி. ஏன் சாதி அடிபடையில் முன்னுரிமை தர வேண்டும்?
ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக சாதி அடிப்படையில் உயர்வு தாழ்வு சொல்லப் பட்டு வந்ததுதான் காரணம். அப்படி இருந்திராவிட்டால்,இதுவும் தேவைப்பட்டிராது.சாதி அடிப்படையில் ஏற்றத்தாழ்வு நிலவி வரும் இந்த சமூகத்தில், அதை மாற்ற சாதி அடிப்படையில் தான் சலுகை தரப்பட்டாகவேண்டும்.

ஏன் பொருளாதார அடிப்படையில் இட ஒதுக்கீடு தரக் கூடாது? எல்லா சாதி ஏழைகளுக்கும் முன்னுரிமை தருவது தானே நியாயம்?
பொருளாதார அடிப்படையில் ஏழைக்கு முன்னுரிமை தரலாமே என்ற கோரிக்கையை, சாதி ரீதியிலான இடஒதிக்கீடு வரும்போது மட்டும் எழுப்புவார்கள்.ஏற்கனவே பணக்காரர்களுக்கு மட்டும் இடஒதுக்கீடு இருக்கும் இடங்களில் ஏன் எழுப்பவில்லை என்று யோசியுங்கள்.

புரியவில்லை. பணக்காரர்களுக்கு எங்கே இட ஒதுக்கீடு இருக்கிறது?
தனியார் பொறியியல், மருத்துவ இதர கல்லூரிகளில் மேனேஜ்மென்ட் கோட்டா என்ற பெயரில், சீட்டுக்கு இவ்வளவு தொகை நன்கொடை என்று ஏற்பாடு இருக்கிறதே அது என்னவாம்? பணம் உள்ளவர்கள் சீட்டை வாங்கிக் கொள்ளலாம் என்பது பணக்காரர்களுக்கு இருக்கும் இடஒதுக்கீடு தானே?தவிர ஐ.ஐ.எம். போன்ற உயர்மட்டக் கல்லூரிகளில் கட்டணத்தைக் குறைக்கக்கூடாது என்று வற்புறுத்தப்பட்டதே,அதற்கு என்ன அர்த்தம்? பணம் உள்ளவர்கள் மட்டுமே அங்கு படிக்கவரும் நிலை தொடரவேண்டும் என்பதற்குத்தானே?

அப்படியானால் உயர் சாதியில் இருக்கும் எழைகளின் நிலை என்ன?
பொது ஒதுக்கீட்டில் வரும் எல்லோருக்குமே, பொருளாதார அடிப்படையில் தனி ஒதுக்கீடு தரலாம் என்று வி.பி.சிங். போன்றவர்கள் யோசனைகூறியிருக்கிறார்கள்.ஆனால் இடஒதுக்கீடு என்பது சாதி எற்றத் தாழ்வைச் சரி செய்ய வந்ததே தவிர வர்கக வேறுபாட்டை சரிசெய்ய அல்ல.அதற்கு இன்னொரு திட்டம் தேவை.

PS:
blogger2 க்கு மாறின உடனே நான் மே மாதத்தில் போட்ட இந்தப் பதிவு உயிர் பெற்றிருக்கிறது. Er..Actually நான் இந்தப் பதிவு தான் புதுசா post பண்ணினேன். 😦

இடஒதுக்கீடு இப்பொழுதும் தேவையா?

உயர் கல்வி நிறுவனங்களில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இட ஒதுக்கீடு அளிப்பதென்ற மத்திய மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சர் அர்ஜூன் சிங்கின் முடிவை எதிர்த்து வட மாநிலங்களில் வரலாறு காணாத அளவில் போராட்டங்கள் நடந்து வருகிறது. எந்த ஒரு அரசியல் கட்சியும் ஆதரவளிக்காத நிலையில் இட ஒதுக்கீட்டிற்கு எதிரான போராட்டம் தொடர்ந்து வலுப்பெற்று வருவது ஒரு ஆச்சரியமான நிகழ்வே. டில்லி, பஞ்சாப், ஹரியானா, மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களில் மருத்துவக்கல்லூரி மாணவர்கள் மற்றும் டாக்டர்களின் போராட்டத்தால் ராணுவ டாக்டர்களை வரவழைக்கும் அளவுக்கு நிலைமை மோசமாகியுள்ளது.

என்ன தான் நடந்தது? அமைச்சர் அர்ஜுன் சிங் வாதிடும் சட்டத்திருத்தம் இதுதான்,

Amendment of article 15.-
In article 15 of the Constitution, after clause (4), the following clause shall be inserted, namely:-

“(5) Nothing in this article or in sub-clause (g) of clause (1) of article 19 shall prevent the State from making any special provision, by law, for the advancement of any socially and educationally backward classes of citizens or for the Scheduled Castes or the Scheduled Tribes in so far as such special provisions relate to their admission to educational institutions including private educational institutions, whether aided or unaided by the State, other than the minority educational institutions referred to in clause (1) of article 30.”.

(1) New Indian Express 10th April -Arjun rushes in where SC didn’t tread The phrase, “socially and educationally backward classes,” has been twisted by Arjun Singh to mean OBCs. This is significant given that, as Justice Khare says, not one of the three key Supreme Court rulings on the subject, Pai, Islamic Academy and Inamdar, mentioned OBCs as a target group for reservations in educational institutions. Justice Khare, who presided over the bench in both Pai and Islamic Academy case, made it clear: “The interpretation of Pai judgment means there can be reservation fixed for the weaker sections but never was there any mention of OBC. The Constitution doesn’t define or recognise OBC, it’s a government interpretation.” Consider the key SC rulings on the subject:

இதில் அமைச்சர் அர்ஜுன்சிங் கூறுகிறார் போல் பிற்பட்ட ஜாதி என்ற சொல் இல்லை, 27% இட ஒதுக்கீடு என்பதும் இல்லை. இந்த திருத்தம் இட ஒதுக்கீட்டிற்கு வகை செய்கிறது, அதை கட்டாயமாக்கவில்லை. அதாவது அரசு மாணவர் சேர்க்கையில் சிறப்பு விதிகளை செய்ய உரிமை தருகிறது. அரசு கட்டாயம் செய்ய வேண்டும் என்றோ, இட ஒதுக்கீடு 27% இருக்க வேண்டும் என்றோ அது கூறவில்லை. இந்த 27% என்பது மண்டல் கமிஷன் சிபாரிசு செய்தது.

சரி, உயர்கல்வியில் இடஒதுக்கீடு பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு இப்பொழுதும் தேவையா, என்ற மிக முக்கியமான கேள்வி எழுந்துள்ளது. மத்திய அரசு உயர்கல்வி நிறுவனங்களில் மாணவர் சேர்க்கையில் பிற்பட்ட வகுப்பினருக்கு எதிரான அல்லது தடையாக ஏதேனும் உள்ளது என்று யாரும் கூறவில்லை. விடைத்தாள் திருத்தம், தேர்வு முறை யில் அவர்களுக்கு எதிரான பாரபட்சம் நிலவுவதாகவும் புகார் இல்லை. அப்படி இருக்கும் போது திடீரென ஏன் இட ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும், அதுவும் 27%. இவற்றில் பிற்பட்ட மாணவர்களும் சேர்த்துக் கொள்ளப்படுகிறார்கள், தேர்ச்சி பெறுகிறார்கள். பாரபட்சம் இல்லாத போது எதற்காக 27% இட ஒதுக்கீடு தேவை?

49.5% இட ஒதுக்கீடு என்பது கிட்டதட்ட 50% இட ஒதுக்கீடு. அதாவது இந்தியாவில் உயர்கல்வி நிறுவனங்களில் மாணவர் சேர்க்கையில் 50% ஜாதி அடிப்படையில் தீர்மானிக்கப்படுகிறது என்றால் இது அனைவருக்கும் சம வாய்ப்பு என்பதையே கேலிக் கூத்தாக்குகிறது. அரசே இப்படி ஜாதி அடிப்படையில் பாரபட்சங்களை, சமநிலைசீர்குலைவினை செய்தால் ஜாதி அடிப்படையில் சமூகம் செயல்படுவதை அரசு ஊக்குவிக்கிறது, ஜாதிய கட்டுமானத்தினை இன்னும் வலுவாக்குகிறது என்றுதான் பொருள். ஜாதிதான் தீர்மானிக்குமெனில் ஜனநாயகம், சம உரிமை, பாரபட்சமின்மை, ஜாதிய பாகுபாடுகளை ஒழிப்பது போன்றவற்றை மூட்டைக் கட்டி வைத்துவிட்டு ஜாதிதான் பிரதானம், இதில் முதலிடத்தில் பிற்பட்டோர், பின் தலித்கள்,பழங்குடியினர், பின்னர் முற்பட்ட ஜாதிகள் என்று அறிவித்து விடலாம்.

அம்பேத்கார் இட ஒதுக்கீடு என்பது குறைந்த அளவிலேயே இருக்க வேண்டும் என்ற கருத்தினைக் கொண்டிருந்தார். இப்போது உள்ள 69% இட ஒதுக்கீடு 50% ஒதுக்கீடு போன்றவை அவர் கருத்திற்கு முரணாக உள்ளன. அம்பேத்கரும், அரசியல் சட்டத்தினை உருவாக்கியவர்களும் இட ஒதுக்கீட்டினை ஒரு குறிப்பிட்ட காலத்திற்கான தீர்வாகவே கண்டனர். இட ஒதுக்கீட்டின் பெயரில் ஜாதி வேறுபாடுகளை உருவாக்குவதோ அல்லது அதிகரிப்பதோ அல்லது சமூகத்தில் பிளவு ஏற்படுத்துவதோ அவர்கள் நோக்கம் இல்லை. ஆனால் இப்போது அவர்கள் கருத்துக்கள் மறக்கப்பட்டு, மறைக்கப்பட்டு ஜாதி ரீதியினால இட ஒதுக்கீடு எங்கும் வேண்டும், எதிலும் வேண்டும், எப்போதும் வேண்டும் என்ற நிலைப்பாடே சரியானது என்று வாதிடப்படுகிறது. இது தொடருமானால் ஒரு நாள் இட ஒதுக்கீட்டினால் பாதிக்கப்பாடுவோர் பொறுமை இழந்து விடுவர். அதுதான் இப்பொழுது நடந்திருக்கிறது.

உயர் கல்வியில் போட்டி போடும் மாணவர்கள் ஒரு குறிப்பிட்ட சமமான தகுதியைப் பெற்றிருப்பர். உதாரணமாக மருத்துவத்தில் முது நிலை, பொறியியலில் முது நிலை போன்றவற்றைப் படிக்க அடிப்படை தகுதி உள்ளது. அத்தகுதியை எட்டிய பின் யார் பிற்பட்டோர் யார் முற்பட்டோர் இருவரும் ஒருவர்தான். பிற்பட்டோர் என்பதால் இட ஒதுக்கீடு ஆரம்பக் கல்வியுடன் நின்றுவிடுவதில்லையே. BE, MBBS,BTECH என்ற அளவிலும் இருக்கிறது. இதற்கு அப்புறமும் இட ஒதுக்கீடு வேண்டும் என்பது என்ன நியாயம். உயர் ஜாதி மாணவர், பிற்பட்ட ஜாதி மாணவர் இருவரும் ஒரே படிப்படைப் படித்து ஒரே பட்டத்தினை பெற்றிருக்கும் போது அவர்களிடையே ஒருவருக்கு மட்டும் ஜாதி அடிப்படையில் முன்னுரிமை, சலுகை தருவது என்ன நியாயம்.IIM களில் மேலாண்மை முதுகலை படிப்பிற்கான நுழைவுத் தேர்வு எழுதுவோரில் பலர் BE/BTECH படித்தவர்கள், வேலை அனுபவம் கொண்டவர்களும் உண்டு. இங்கு ஜாதி ரீதியில் பாகுபடுத்துவது எப்படி சரியான தேர்வு முறையாக இருக்க முடியும். வேலை அனுபவம், மற்றும் படிப்பு உள்ள முற்பட்ட ஜாதியைச் சேர்ந்த ஒருவரை விட படிப்பு மட்டுமே உள்ள ஒருவர் பிற்பட்ட ஜாதி என்ற ஒரே காரனத்திற்காக முன்னுரிமை பெறுவது என்பது சரியானதல்ல.

மருத்துவ உயர் படிப்புகளில் இடங்கள் மிகவும் குறைவு.சில பிரிவுகளில் ஒரு கல்லூரியில் 20 இடங்கள் இருக்கும், மாநிலம் முழுவதும் 100 இடங்கள் இருந்தால் அதிகம். இதில் 50% இடஒதுக்கீடு அடிப்படையில் மட்டும் ஒதுக்கப்படும் என்பது என்ன நியாயம். மீதி 50% இடங்களுக்கும் பிற்பட்ட, தாழ்த்தப்பட்ட ஜாதியினர் போட்டி போடலாம் என்று இருக்கும் போது இட ஒதுக்கீட்டினால் பாதிக்கப்படுவர்களுக்கு என்ன கிடைக்கும், கிட்டதட்ட பூஜ்யம். தமிழ் நாட்டில் இப்படித்தான் நிலைமை இருக்கிறது.முற்பட்ட வகுப்பினர் MS, MD போன்றவற்றில் சேர்வது மிகமிக கடினமாக இருக்கிறது. இதால் பாதிக்கப்படுபவர்களுக்கு ஒரே நம்பிக்கை மத்திய அரசின் கீழ் இருக்கும் மருத்துவ ஆராய்ச்சி,கல்வி நிறுவனங்கள். அங்கும் 50% இட ஒதுக்கீடு என்றால் அவர்கள் எங்கு போவார்கள், என்ன செய்வார்கள். ஒரே குடும்பத்தினைச் சேர்ந்தவர்கள் பிற்பட்ட ஜாதி என்பதால் தாத்தா, மகன்/மகள், பேரன்/பேத்தி என்று தொடர்ந்து சலுகை அனுபவிப்பார்கள். ஆனால் முற்பட்ட ஜாதி என்றே ஒரே காரணத்திற்காக ஒருவருக்கு இடம் கிடைக்காது.
இதுதான் சமூக நீதி என்றால் அந்த சமூக நீதி இன வெறுப்புக் கோட்பாட்டிற்கு ஒப்பானதுதான்.

ஒரு புறம் தமிழ் நாடு முன்னேறிய மாநிலம் என்கிறோம். ஆனால் தமிழக மக்கள் தொகையில் இட ஒதுக்கீட்டினால் பயன் பெறுவோர் மொத்த மக்கள் தொகையில் 87%. (BC-46.14%, MBC-17.43%, Denotified Communities 3.44%, SC- 19% ST1.04%) (2) .அப்படியானால் தமிழ்நாட்டில் மக்கள் தொகையில் 87% socially and educationally backward ஆக இருக்கிறார்களா. 1947 முதல் முன்னேற்றமே இல்லையா.நீதிக்கட்சி காலத்திலிருந்தே பிற்பட்ட ஜாதிகள் அதே நிலையில்தான் உள்ளனவா. socially and educationally backward என்ற நிலையிலிருந்து எந்த ஜாதியும், முன்னோக்கி நகரவே இல்லையா. இப்போதும் இட ஒதுக்கீடு கட்டாயம் தேவை என்ற நிலையிலா எல்லா பிற்பட்ட ஜாதிகளும் உள்ளன?

உதாரணத்திற்கு 2004 ஆம் ஆண்டில், ஹிண்டு தினப் பத்திரிக்கையில் (23-08-2004) வந்த செய்தி,
பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த மாணவர்கள், 1224 மருத்துவக் கல்லூரி இடங்களில் 952 இடங்களை பெற்றிருக்கின்றனர். இது மொத்தம் 77.9 விழுக்காடு ஆகும். முதல் 14 ரேங்க்குகளும் பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த மாணவர்களுக்கே கிடைத்தன. அதிலும் open competition category யில், 5 தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த மாணவர்கள் இடம் பெற்றிருக்கின்றனர். மேலும் முதல் 400 ரேங்க்குகளில், 31 மாணவர்கள் தான் முற்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்கள். முதல் 100 ரேங்குகளில், வெறும் 6 மாணவர்கள் மட்டும் தான் முற்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்கள், 79 மாணவர்கள் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்களும் மீதமுல்ல13 மாணவர்களும் மிகவும் பிற்படுத்தபட்ட வகுப்பைச் சேர்ந்தவர்கள்.

இந்த செய்தியை வைத்துப் பார்த்தால் FC மாணவகளை விட BC,MBC மாணவர்களே முன்னேறியுள்ளனர். இவ்வாறான நிலையில் இடஒதுக்கீடு முதலில் தேவையா என்கின்ற கேள்வி எழுகிறது? அப்படியே தேவைப்பட்டாலும் சமூக அடிப்படையில் தான் இருக்கவேண்டுமா என்ற கேள்வியும் எழுகிறது.

சரி, பொருளாதார அடிப்படையில் இடஒதுக்கீடு கொடுக்கலாம் என்றால், அரசியல் சட்டத்தில் இடமில்லை.

இட ஒதுக்கீடு என்பது கல்விரீதியாக, சமூகரீதியாக பின் தங்கியுள்ள வகுப்புகளுக்கு என்றே அரசியல் சட்டம் கூறுகிறது. நரசிம்ம ராவ் அரசு பொருளாதார ரீதியாக பின் தங்கியுள்ளோருக்கு ஒரு குறிப்பிட்ட சதவீத இட ஒதுக்கீடு தரும் ஆணையைப் பிறப்பித்தது. பிற்பட்டோருக்கான இட ஒதுக்கீடு குறித்த வழக்கினை விசாரித்த உச்ச நீதிமன்ற பெஞ்ச் அந்த ஆணை செல்லத்தக்கது அல்ல என்று நிராகரித்துவிட்டது. ஏனெனில் அரசியல் சட்டத்தில் அப்படி இட ஒதுக்கீடு தர இடமில்லை. இட ஒதுக்கீடு என்பது வறியவர்களை முன்னேற்றும் திட்டம் அல்ல. பின் தங்கிய வகுப்புகள் சமூக ரீதியாக,கல்வி ரீதியாக முன்னேறவும், அந்த முன்னேற்றம் காரணமாக அரசு வேலைகள் போன்றவற்றில் உரிய இடங்களைப் பெற உதவும் ஒரு கருவி. பொருளாதார முன்னேற்றம் அதன் மூலம் ஏற்பட்டாலும் இட ஒதுக்கீடு வறுமை ஒழிப்புத் திட்டம் அல்ல.
எனவே அரசியல் சட்டத்தில் மாற்றம் செய்யாமல் அத்தகைய இட ஒதுக்கீடு செய்ய முடியாது. துரதிருஷ்டவசமாக இந்த உண்மைகள் பெரும்பாலோருக்குத் தெரிவதில்லை.


சிலர் இந்த போராட்டத்தை எதிர்த்தும், கடுமையாக விமர்சித்தும் வருகிறார்கள், ஆனால் மாணவர்கள் தங்கள் எதிர்கால நலனுக்காகப் போராடுகிறார்கள், உரிமைகளுக்காக, சம வாய்ப்பிற்காக போராடுகிறார்கள். அதனால் பொது மக்கள் சிரமப்படுவது உண்மை. அதற்கு பொறுப்பு அரசுதான். இட ஒதுக்கீடு கொண்டு வர எண்ணியுள்ளோம், உங்கள் நலன்களை பாதிக்க விரும்பவில்லை, எனவே உங்கள் ஆலோசனைகளைக் கோருகிறோம் என்று மாணவர்களிடம் கூறி, அறிவிப்பு வெளியிடும் முன்னர் பேச்சு வார்த்தைகள் நடத்தியிருக்கலாமே. மத்திய அரசு சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் இயக்குனர்கள், ஆசிரியர்கள், தொழிற் துறை. கல்வியாளர்களை கலந்தாலோசிக்காமல் ஒரு அறிவிப்பினை வெளியிட அவசியம் என்ன.

இத்தகைய ஒரு மாற்றம் ஒரு பெரும் மாற்றம் என்பதால் அதற்கு தேவையான கால அவகாசத்தினை யோசித்திருக்க வேண்டும். இட ஒதுக்கீடு தர நினைக்கிறோம், அதே சமயம் தகுதி,திறமை உடையவர்கள் நலனும் பாதிக்கக்கூடாது என்று விரும்புகிறோம். எனவே நாடு தழுவிய ஒரு விவாதம் ஏற்பட்டு, பல்வேறு தரப்பினர் கருத்தினை ஆய்ந்த பின் கருத்தொற்றுமை ஏற்பட வழி செய்வோம் என்று அரசு முடிவு செய்திருக்கலாமே.
அரசு தன் முடிவினை ஒரு தலைபட்சமாக திணிக்க முயன்றது. இதற்கு எதற்கு மாணவர்களை குறை சொல்ல வேண்டும். மேலும்,
மத்திய அரசு அமைத்துள்ள கமிட்டியில் இருவர் வெளிப்படையாக இட ஒதுக்கீட்டினை ஆதரிப்பவர்கள்.எனவே அந்த கமிட்டி எத்தகைய முடிபுகளை எடுக்கும் என்பது வெளிப்படை.மாணவர்கள் கூறிவது போல் ஒரு கமிஷன் அமைக்க வேண்டும். இந்த கமிட்டி என்ற கண்துடைப்பினை மாணவர்கள் நமப்த்தயாரில்லை என்பது நியாயமானதே.

ஒரு குறிப்பிட்ட சில ஜாதி ஓட்டுகளுக்காக, இட ஒதுக்கீடு என்ற பெயரிலும், சமூக நீதி என்ற பெயரிலும் கல்வித்துறையில், உயர்கல்வியில் உள்ள பிரச்சினைகளை மூடி மறைக்கப் பார்க்கிறார்கள் நமது பாசத்திற்கும் நேசத்திற்கும் உரிய இரத்தத்தின் ரத்தங்களான, அரசியல்வாதிகள்.

– சில செய்திகள் தின்னை யிலும், சில ஹிண்டுவிலும் எடுக்கப்பட்டுள்ளன.

திங்கட்கிழமை தோறும் உபவாசம் இருங்கள்

திண்ணையில் திரு.செல்வன் ‘இந்து வளர்ச்சி விகிதத்தை அழித்த மன்மோகன் சிங்’ என்றகட்டுரை எழுதியிருந்தார், தலைப்பைப் பார்த்ததும் எதோ வீண் பழி கட்டுரை என்றே நினைத்து,படிக்கத் துவங்கிய எனக்கு, சில பல ஆச்சரியங்கள் காத்திருந்தன. இந்திய அரசியல் தெரியாதஎனக்கு, இவை ஆச்சரியங்கள் தாம். இதோ ஆச்சரியங்கள் சில,

1. 1960-1992 வரை ஒரே வடிவமைப்பில் வந்த அம்பாசிடர் கார். 32 ஆண்டுகள், பல நாடுகள் ஆட்டோமொபைல் துறையில் அசுர வளர்ச்சி அடைந்த இந்த காலகட்டத்தில், நாம் ஒரே மாடல் கார்களையே செய்து கொண்டிருந்திருக்கிறோம்.
2. உணவுப் பஞ்சத்தை தீர்க்க உணவு இறக்குமதி செய்வதை விட்டு, மக்களை திங்கட்கிழமை தோறும் உபவாசம் இருக்கச்சொன்ன, பிரதம மந்திரி, மொரார்ஜி தேசாய்.
3. ஆசிய விளையாட்டு போட்டியை இந்தியா நடத்த வாய்ப்பு வந்த பொழுது அதை ஆடம்பரம் என்று மறுத்த, மொரார்ஜி தேசாய்.
4. கம்ப்யூட்டர் இறக்குமதி, தொலைதொடர்பு துறையில் முன்னேற்றம் என்று ராஜீவ் அரசு முன்னேற்றப் பாதையில் சென்று கொண்டிருந்த போது, 1985 மே தினத்தை கம்ப்யூட்டர் எதிர்ப்பு தினமாக அறிவித்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சி.
5. பெட்ரோல் இறக்குமதி செய்ய காசில்லாமல், உலகின் எந்த நிதி நிறுவனமும் கடன் தர மறுத்த பின், ரிசர்வ் வங்கியில் இருந்த தங்கத்தை பாங்க் ஆப் இங்கிலாந்திடம் அடகு வைத்து கடன் பெற்ற சந்திரசேகர் அரசு.

தங்கம் மீட்கப்பட்டதா என்று தெறியவில்லை.
சரி, இதில் இந்து வளர்ச்சி விகிதத்தை எவ்வாறு மன்மோகன் சிங் அழித்தார்?கட்டுரை பேசுகிறது,

“இந்து வளர்ச்சி விகிதம்” என குறிப்பிட காரணம் அப்போதைய கிழக்காசிய டைகர் எகானமி நாடுகளின் வளர்ச்சி விகிதம் தான்.தென்கிழக்கு ஆசிய நாடுகள்(பவுத்தம்) அசுர வேகத்தில் பாய்ந்து முன்னேறின.மேற்கத்திய நாடுகள்(கிறிஸ்துவம்) பெரும் வளர்ச்சி அடைந்தன.பெட்ரோல் காசு இஸ்லாமிய நாடுகளை பெரும் செல்வந்தர்களின் நாடாக்கியது.இப்படி அனைத்து மத நாடுகளும் அசுர வேகத்தில் முன்னேற, இந்தியா தேவ வேகத்தில்(இந்து வளர்ச்சி விகிதத்தில்) முன்னேறியதால் இவ்வளர்ச்சி விகிதத்தை “இந்து வளர்ச்சி விகிதம்” என கிண்டலாக பொருளாதார நிபுணர்கள் குறிப்பிட்டனர்.சோஷலிச செக்யூலரிஸ்டுகள் கொண்டு வந்த வளர்ச்சி விகிதம் அப்படி(##)….

1991ல் நரசிம்மராவ் ஆட்சிக்கட்டிலை ஏறினார்.மன்மோகன் சிங் நிதி அமைச்சரானார்.1992 ஜூலையில் இந்திய வரலாற்றை மாற்றி அமைத்த அதிநவீன பட்ஜெட்டை அறிமுகப்படுத்தினார்.சிங் பட்ஜெட்டை படிக்க படிக்க பங்கு சந்தை குறியிட்டு எண் விஷம் போல் ஏறியது.இடதுசாரிகளின் ரத்த அழுத்தம் அதை விட அதிக வேகத்தில் ஏறியது.சிங் பட்ஜெட்டை படித்து முடித்ததும் பொருளாதார நிபுணர்கள் ஆனந்தக்கண்ணீர் வடித்தனர்.புதிய இந்தியா 1992ல் பிறந்தது.

வளர்ச்சி அடைந்த புதிய வல்லரசின்,மக்கள் நலன் பேணும் நல்லரசின் விதைகள் அன்று மன்மோகனாலும்,நரசிம்மராவாலும் விதைக்கப்பட்டன.நாரயணமூர்த்தி,ஆசிம் பிரேம்ஜி போன்றவர்களை உருவாக்கி,பல கோடி இளைஞர்களின் வாழ்வில் ஒளிவிளக்கை ஏற்றிவைத்தார் மன்மோகன்.மன்மோகன் ஏற்றிய ஒளிவிளக்கை சிதம்பரமும்,ஜஸ்வந்த் சிங்கும்,யஷ்வந் சின்காவும் அதன் பின் மீண்டும் சிதம்பரமும் அணையாமல் கொண்டு சென்றனர்.

1992 பட்ஜட்டை படைத்ததற்காக மன்மோகனை இடதுசாரிகள் இன்னும் மன்னிக்கவில்லை.”வேலை செய்தால் தான் சம்பளம்” என்று சொல்லிவிட்டாரே என்று கோபம் அவர்களுக்கு.”உழைப்பவனுக்கு தான் உயர்வு,சுறுசுறுப்பானவனுக்கு தான் முன்னேற்றம்,சோம்பேறிக்கு ஆப்பு” போன்ற கொள்கைகளை கொண்டு வந்ததால் புதிய பொருளாதார கொள்கையே பிடிக்காமல் போய்விட்டது காம்ரேடுகளுக்கு.
‘இந்து வளர்ச்சி விகிதத்தை’ ஒழித்துக்கட்டி, நவீன இந்தியாவை படைத்த பாரதத்தின் புதிய கடவுளான மன்மோகனுக்கு கோயில் கட்டி கும்பாபிஷேகம் நடத்தினாலும் நாம் அவருக்கு பட்ட நன்றிக்கடன் தீராது.”