2008இல் என்னென்ன நடக்கலாம்?

வலைப்பூ நண்பர்களுக்கு, என் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். இந்த புத்தாண்டிலாவது, உறக்கமின்றி, எதை எழுதித் தொலைக்கலாம், என்று மண்டையை உடைத்துக் கொண்டிருக்கும், வலைப்பூ நண்பர்களுக்கு (எனக்கும் சேத்துதான்!) நல்ல சுகமான உறக்கம் கிடைக்க இறைவனை வேண்டிக்கொள்கிறேன்.

ஏனோ எனக்கு Avril Lavigneயின் “Chill out whatcha yelling’ for?” வரிகள் ஞாபகத்துக்கு வருகின்றன.

***
சர்வேசன் நடத்திய சிறுகதைப்போட்டி பற்றி தெரியாமல் இருந்து விட்டிருக்கிறேன். நேற்றைக்கு தான் தெரியும். ஏதோ நான் எழுதியிருந்தால், முதல் பரிசு கிடைத்திருக்கும், என்பதற்காக நான் சொல்லலீங்க, அப்படியாச்சும் ஒரு சிறுகதை எழுதியிருப்பன்ல? சில சமயம் இப்படித்தான், என்னை சுற்றிலும் என்ன நடக்கிறது என்று தெரியாமல், பூனை போல கண்களை மூடிக்கொண்டிருப்பேன். விழித்துக்கொள்ளும் போது, நன்றாக விடிந்திருக்கும். And obviously, I would have missed all the fun! எப்படியும் இந்த வாரத்திற்குள் ஒரு சிறுகதை எழுதி போஸ்ட் செய்ய முயற்சிக்கிறேன். (ஐயோ! என்று நீங்கள் கத்துவது எனக்கு கேட்கவில்லை!)

***

சர்வேசன், உங்கள் சர்வேக்களுக்கு, நீங்கள் zohoவை பயன்படுத்தலாமே? zoho creator try பண்ணியிருக்கீங்களா? இந்தியன் ஏர்லைன்ஸ் பற்றிய complaint பக்கத்திற்கு நான் zoho creatorஐ பயன்படுத்தி இருக்கிறேன். (இன்னும் வெளியிடவில்லை! உங்களுக்கு exclusive preview!) அந்த பக்கத்தை நீங்கள் இங்கே பார்க்கலாம். zoho creatorஐ பயன்படுத்தி நீங்கள் நிமிடத்தில் ஒரு web page create செய்து விடலாம். we can create validation scripts and lot of other things also. And you can also design the view for the datas entered by the users, as you wish! Really nice! And it can be embedded with in blogger! Try it. If you know it previously, then sorry, for my late point out!

***
இரண்டு நாட்கள் விடுமுறையில் நான் நிறைய டீவி பார்த்தேன். (ஒரு டீவி தான் நிறைய program பார்த்தேன். உஷாரா இருக்க வேண்டியிருக்கு.) அதில கஜேந்திரான்னு ஒரு படம் காட்டப்பட்டது. சுரேஷ் கிருஷ்ணா இயக்கம். நம்ப விஜயகாந்த் சார் நடிச்சது. ஐயோ காமெடி தாங்கல. ஏற்கனவே நரசிம்மாவின் டிரான்ஸ்பார்முக்கே ஷாக் அடிக்கும் சீனப் பாத்து, பழங்காநத்தம் தியேட்டரில இருந்து, பின்னங்கால் பிடறில படற அளவுக்கு ஓடிவந்தது எனக்கு இன்னும் பசுமையா நினைப்புல இருந்தும், எந்த தைரியத்தில, டீவி சேனல மாத்தாம இருந்தேன்னு, எனக்கு இன்னும் புரியவேமாட்டேங்குது. ஆனாலும் எனக்கு தைரியம் ஜாஸ்திபா.
விஜயகாந்த் intro scene. வில்லன்களுடன் சண்டை போடவேண்டும். ரமணா படத்தில “டேய் அடங்குடா. உங்க அண்ணனோட ரெட்டைக்கைய ஒத்தக்கையா ஆக்குனவரே அவர்தாண்டா” டயலாக் சொல்லுவார்ல, அவர்தான் அடியாட்களின் தலைவன். (ரமணா நல்ல படம் என்பதை யாரும் மறுக்கமுடியாது!). அவர் கத்திய எடுத்து விஜயகாந்த கிழிச்சிடுவார். ரத்தம் வந்திடும். கத்தில ரத்தம் ஒட்டிட்டு இருக்கும். யாரோட ரத்தம்? விஜயகாந்தோட ரத்தம். கூலா, விஜயகாந்த் சிகரெட் எடுத்து வாய்ல வைப்பார். சிகரெட்டை பத்தவெக்க தீப்பெட்டி இருக்காது. அதையும் அடியாட்களின் தலைவனே சொல்வான்: சிகரெட்டை பத்த வைக்க வத்திப்பட்டி வேணும்ல என்கிட்ட இல்லீல்ல என்ன செய்வ?! (சண்டை போட வந்தீங்களா? சிகரெட் பத்தவைக்க வந்தீங்களா?!) உடனே நம்ப தலை ஒரு சிரிப்பு சிரிப்பார். பிறகு இவருடைய ரத்தம் பட்ட கத்தி இருக்குல்ல, அத எடுத்து ரத்தம் சிகரெட்ல படற மாதிரி சும்மா வெப்பார், சிகரெட் பத்திக்கும்!
அப்புறம் மீசை மேல கைய வெப்பார். “என் மீசை மேல கைய வெச்சா என்ன ஆகும்னு தெரியுமா?” ன்னு கேட்டுட்டே, மீசைய சும்மா சுண்டி விடுவார், அடியாட்களில் ஒருத்தன், சும்மா பல்டி அடிச்சு தூரமா போய் விழுவான்.

***

உங்க safetyக்காத்தான் சொல்றேன், அவர் அரசியல் கூட்டத்தில பேச வந்தா, பக்கத்தில கிக்கத்தில போய்டாதீங்க. மீசைய சுண்டி கிண்டி விட்டுறப்போறாரு. தூரமாவே நின்னுக்குங்க.

***

கடந்த சில வாரங்களில் Orhan Pamuk எழுதிய Snow, Douglas Adams எழுதிய Hitchhikers Guide To Galaxy, சா.கந்தசாமி எழுதிய தொலைந்துபோனவர்கள் படித்து முடித்தேன். Aldous Huxley எழுதிய Brave New World படிக்க எடுத்தேன். பிடிபடவில்லை. பிறகு Haruki Murakami எழுதிய Hard-boiled wonderland and the End of the world இப்பொழுது படித்துக்கொண்டிருக்கிறேன்.

ஏற்கனவே Haruki Murakami எழுதிய Norwegian Wood படித்திருக்கிறேன். எனக்கு அவரது எழுத்து நடை, அலட்டல் மற்றும் அலங்காரம் இல்லாத வாக்கியங்கள், மிகவும் பிடித்திருந்தன. Norwegian Wood படித்து முடித்ததும், The windup birds chronicle வாங்கினேன். இந்தியா சென்றிருந்த பொழுது, நேரம் கிடைத்தால், படிப்பதற்காக எடுத்துச்சென்றிருந்தேன். ஒரு பக்கம் கூட படிக்கவில்லை. புத்தகமும் எங்கே போனதென்று தெரியவில்லை. தலைமறைவாகி விட்டது.

இந்த வருடம் மட்டும் மூன்று புத்தகங்களை தொலைத்திருக்கிறேன்: Orhan Pamuk எழுதிய Istanbul:memories of a city எங்கே போனது என்றே தெரியவில்லை. Geroge Orwell எழுதிய 1984 cabஇல் தொலைத்துவிட்டேன். அப்புறம் இந்த windup bird.
***

தமிழில் எஸ்.ராமகிருஷ்ணன் சிறுகதைத் தொகுப்பும், புதுமைப்பித்தனின் கட்டுரைத் தொகுப்பும் படித்துக்கொண்டிருக்கிறேன்.

எஸ்.ராமகிருஷ்ணனின் சிறுகதைத் தொகுப்பில், எனக்கு தாவரங்களின் உரையாடல் என்கிற சிறுகதை மிகவும் பிடித்திருந்தது. இவருக்கு கதைக் களம் எங்கிருந்து கிடைக்கிறது என்பது மிகவும் வியப்பாகவே இருக்கிறது. எனக்கு பிடித்திருந்த மற்றொரு கதை “ஒரு தலைகீழ் கதை“. ஆயிரம் கால் இலக்கியத்தின் அடுத்த பகுதியில் இந்த கதைகளைப் பற்றி எழுதுவேன் என்று நினைக்கிறேன்.

தாவரங்களின் உரையாடல் என்கிற கதையின் போக்கில் இருந்த மற்றொரு சிறுகதையை காலச்சுவடில் படிக்க நேர்ந்தது. அது யுவன் சந்திரசேகரின் “உள்ளோசை கேட்பவர்கள்” என்கிற சிறுகதை. சிறுகதை அல்ல நெடுங்கதை தான்.

***

இந்த வருடம் தான் நான் நிறைய புத்தகங்கள் படித்திருக்கிறேன். என்னென்ன புத்தகங்கள் என்று என் நினைவில் இருக்கிற அளவிற்கு யோசித்து ஒரு பதிவு போடுகிறேன். நிறைய சினிமாக்கள் பார்த்திருக்கிறேன். (இந்த list முடியாது!) கொஞ்சம் technology கற்றுக்கொண்டிருக்கிறேன். நிறைய விசயங்கள் செய்யவேண்டும் என்று நினைத்து செய்யாமல் விட்டிருக்கிறேன். செய்யாமல் விட்ட அனைத்தையும் இந்த புது வருடத்தில் செய்யவேண்டும் என்று உறுதி எடுத்திருக்கிறேன். உங்களுக்கும், நீங்கள் நினைத்தது எல்லாவற்றையும் செய்து முடிக்கக்கூடிய மன வலுவையும் உடல் வலுவையும் இறைவன் கொடுக்கவேண்டும் என்று வேண்டிக்கொள்கிறேன்.

***
2008 இல் என்ன என்ன நடக்கும்? நடக்கலாம்?

1. ஸ்ருதியில் லக்ஷ்மண், தசாவதாரம் தோல்வியைத் தழுவியிருக்கலாம் என்று எழுதியிருந்தார். அது நடக்காது என்றே நினைக்கிறேன். நடக்கவும் கூடாது. தொடர்ந்து தோல்வியைத் தழுவினாலும், தன் முயற்சியை சற்றும் கைவிடாத கமல், ரசிகர்களாகிய நம்மீது கொண்டிருக்கும் அபாரமான நம்பிக்கையை, நாம் இந்த முறையாவது சிதைத்து விடக்கூடாது என்றே நான் நினைக்கிறேன்.

2. ரஜினி முருகதாஸ் பாலச்சந்தர் கூட்டணியில் அடுத்த பட அறிவிப்பு வரலாம்.

3. ஸ்டாலின் முதலமைச்சராகவும், அழகிரி திமுக கட்சித் தலைவராகவும் பொறுப்பேற்கலாம்.

4. த்ரிஷா இன்னும் க்யூட்டாகியிருக்கலாம்

5. இந்தியாவில் CostToCompany மேலும் அதிகரித்து மாஸ்கோவிற்கோ அல்லது வியட்நாமிற்கோ MNC Companies படையெடுக்கலாம்.

6. பாடும் office programmeஐ suntv விஜய் டீவியிடமிருந்து காப்பிஅடித்து “Corporateகீதம்” என்கிற பெயரில் புதிய புரோகிராம் ஆரம்பிக்கலாம்.

7. விஜய் டீவி ஜோடி நம்பர் ஒன் season 2 போட்டியாள்ர்களை வைத்து மேலும் என்னென்ன வகையில் business செய்யலாம் என்று யோசித்து, ஜோடி நம்பருடன் ஒரு நாள் என்று ரசிகர்களை அவர்கள் வீட்டிற்கு அழைத்து சென்று மொக்க போடலாம்.

8.சுற்றுச்சூழல் மாசு படுவதைத் தடுக்க ஒரு அருமையான திட்டம்: electric scooter என்று சொல்லிக்கொண்டு நச்சுத்தண்மையுள்ள பேட்டரிகளை பயன்படுத்தி மேலும் சுற்றுச்சூழலை மாசு படுத்தலாம். வேற என்ன? குதிரை வண்டியிலா போக முடியும்?!

9. Microsoft .Net4.0, 4.5, 5.0, 5.5, 6.0, 6.5 என்று மாசத்துக்கு ஒன்னாக release செய்து புரோகிராமர்களை குழப்பி, இதுல புரோகிராம் பண்றதுக்கு, நாலு பன்னிக்குட்டி வாங்கித்தாங்கப்பா, அத மேச்சாவது பொழச்சுக்கறேன் என்று பிதாமகன் சூர்யா போல கடுப்படைய வைக்கலாம்.

10. Web2.0 மற்றும் Virtual PCs விஸ்வரூபம் எடுக்கலாம். Zohoவை கூகிள் நசுக்க பார்க்கலாம். zoho ·பீனிக்ஸ் பறவையாக எழுந்து நிற்கலாம்.Microsoftஇன் Live பெரும் தோல்வியைத் தழுவலாம். கூகிள் இன்ன பிற சின்ன சின்ன utilities sitesஐ aquire செய்யலாம். Microsoft இறுதியில் web தன் கையை விட்டு சென்றுவிட்டதை உணர்ந்து கொள்ளலாம். கூகிளுடன் partnership போடலாம்.

11. சன் மைக்ரோ சிஸ்டம் தனது 2009 பட்ஜெட்டை கணக்கிட்டு அந்த தொகையை Microsoftஐ sue செய்து வசூலிக்கலாம்.

12. சிங்கப்பூரில் வீட்டு வாடகை டப்பென்று குறையலாம். (கடவுளே இது மட்டும் கண்டிப்பா நடக்கனும்! முடியல!)

13. ராகுல் காந்தி டீவியில் அதிகம் தென்பட ஆரம்பிப்பார்.

14. விஜயகாந்த் புது சேனல் (ஆண்டாள் அழகர் சேனல்) ஆரம்பித்து கன்னாபின்னான்னு கவர்மெண்ட் ரூல்ஸ் பேச ஆரம்பிக்கலாம். தனது மண்டபம் இடிக்கப்பட்டது ரெக்கார்ட் செய்ததை மீண்டும் மீண்டும் தனது டீவியில் காட்டலாம். தனது ஆண்டாள் அழகர் கல்லூரி எப்படியெல்லாம் நன்றாக இருக்கிறது என்பதைப் பற்றிய செய்திப்படம் நாளொன்றுக்கு நான்கு முறை ஒளிபரப்பலாம். விஜயகாந்த் நடித்த அதிரடி திரைப்படங்கள் அதிரடியாக காட்டப்படலாம். (?!)

15. சரவணா ஸ்டோர்ஸில் மேலும் விலை குறைப்பு நடக்கலாம். மக்கள் கூட்டம் மேலும் அதிகரிக்கலாம். யாராவது ஒரு NRI செமத்தியாக அடிவாங்கலாம். அங்கு வாங்கின அழகான ஸ்லிப்பர்ஸ் இன்னும் குறைவான நாட்களே உயிர்வாழலாம்.

16. விப்ரோ இன்போஸிஸ் டாட்டா போன்ற நிறுவனங்கள் மீடியா தொழிலில் இறங்கி கதாநாயகர்களின் கால்ஷீட் கிடைக்காமல் ராமராஜனை புது படத்திற்காக அனுகலாம். ராமராஜனின் எங்க ஊரு பாட்டுக்காரனை ரீமேக் செய்யலாம். நிஷாந்தி நடித்த ரோலில் சினேகா நடிக்கலாம்.
17. மோகன் உதயகீதத்தை ரீமேக் செய்து கையில் மைக் இல்லாமல் காலரில் சின்ன மைக் வைத்துக்கொண்டு மேலும் வேக வேகமாக இங்கிட்டும் அங்கிட்டும் நடந்து “சங்கீத மேகம்” பாடல் பாடலாம்.

18. ரேடியோ மிர்ச்சி சென்னை அலைவரிசை இன்டர் நெட்டில் வரலாம் (ஏற்கனவே இருந்தா link கொடுங்க நண்பர்களே). சூரியன் FM மொக்க தாங்க முடியலப்பா.

19. ஒலிம்பிக்ஸில் இந்தியா medal tableலிலே வராமல் போகலாம். (இது கண்டிப்பாக நடக்க கூடாது என்பது தான் என் விருப்பம். நடந்தால் சொல்வதற்கில்லை!)

20. ஆஸ்திரேலியாவை இந்தியா டெஸ்டில் வீழ்த்தலாம். கங்கூலி மேலும் இரண்டு சதம் அடிக்கலாம். (நான் subscribe பண்ணியிருக்கேன்ப்பா!)

21. தமிழ்நாட்டில் கலர்டீவி நடமாட்டம் அதிகரிக்கலாம். தெருவில் மனிதர்கள் நடமாட்டம் குறையலாம்.

22. ஜெயமோகன் இன்னும் பெரிய புத்தகம் எழுதலாம். vikram sethக்கும் அவருக்கும் யார் அதிக பக்கங்கள் எழுதியது, எழுதப்போவது என்கிற போட்டி உருவாகலாம். (விக்ரம் செத்தை அடிச்சுக்க முடியாது என்பது என் கருத்து. ஆனாலும் ஜெயமோகனைப் பற்றியும் ஒன்னும் சொல்வதற்கில்லை)

23. சேக்குவேரா படம் போட்ட தொப்பிகள் மற்றும் ஜட்டிகள் இந்தியாவில் பிரபலமடையலாம். அதை அணிந்து கொண்டிருக்கும் ஒரு யூத்திடம் இவர் யார் என்று கேட்டால் சட்டென்று அவர் “you dont know him. pity you. He is a great Rock Star!” என்று சொல்லலாம்.

24. ப்ளாஸ்மா டீவிக்களையும் ஐபாட்களையும் காமெராக்களையும் லேப்டாப்களையும் செல்போன்களையும் இந்தியர்கள் வாங்கி குவிக்கலாம். (Electronic wastesஐ என்ன செயவது என்பதை பற்றி கவர்மெண்ட் வழக்கம் போல யோசிக்காமல் இருக்கலாம்)

25. வழக்கம்போல ஏரிகளை தூர்வாராமல் விடலாம். புதிய நீர் தேக்கங்கள் கட்டப்படாமல் போகலாம். இன்னும் நிறைய சிமென்ட் ரோடுகளை போட்டு தண்ணீரை நிலத்தில் சேர விடாமல் தடுக்கலாம். பருவமழை அடித்து ஊத்தலாம். தண்ணீர் யாருக்கும் பயன் படாமல் கடலில் சென்று கலக்கலாம். T.கள்ளுப்பட்டி விவசாயிகள் மழை விட்ட மூன்றாம் நாள் தண்ணீருக்கு என்ன செய்வது என்று வானத்தைப் பார்த்து உட்கார்ந்திருக்கலாம்.

26. அரசு ஏழை எளியோர் பயன்படும் வகையில் டீவிடி ப்ளேயர்க்ளை அன்பளிப்பாக தரலாம். மாசம் இரண்டு டீவிடிகளை மலிவான விலையில் ரேஷன் கடைகளில் வாங்கிக்கொள்ள செய்யலாம். வீட்டில் நிறைய பெண்கள் இருந்தால் நாடக டீவிடிகளும் அவர்களுக்கு கூடுதலாக வழங்கலாம்.

27. மலிவு விலை சாராயம் ரேஷனிலே வழங்கப்படலாம். குடும்பத்தலைவர்களின் நலன் கருதி, அந்த சாராயத்தை பெண்களே வந்து வாங்கிப்போக வேண்டும் என்றும் சட்டத்திருத்தம் கொண்டுவரலாம்.

28. பெசன்ட் நகர் பீச்சில் மேலும் சில வெளிநாட்டு காபி கம்பெணிகள் கடை திறக்கலாம். ஒரு காப்பி 400ரூபாய் விற்கலாம். அதையும் வாங்குவதற்கு நான் க்யூவில் காத்துகிடந்து நின்று “one more sugar packet please” என்று எரிச்சலாக சிரிக்கலாம்.

29. மதுரையில் மேலும் பாலங்கள் கட்டப்படலாம். ஏதும் உபயோகிக்கப்படாமல் பேருந்துகள் மீண்டும் மதுரைக்குள்ளே வரலாம். எவ்வளவு பாலங்கள் கட்டப்பட்டாலும் தொழில் நுட்பம் வளர்ந்தாலும், திருப்பரங்குன்றம் மட்டும் ரயில்வே கிராஸிங்க்குள் அடைந்து கிடக்கலாம். அவசரமாக ஹாஸ்பிடலுக்கு செல்ல வேண்டும் என்கிற நிலை வரும் போது, கடவுளே லெவல் க்ராஸிங் திறந்திருக்கவேண்டும் என்று மனதுக்குள் ஒவ்வொரு திருப்பரங்குன்றத்துக்காரனும் வேண்டிக் கொள்ளலாம். அப்படி வேண்டிக்கொண்டு சென்று விட்டு வீட்டிற்கு வந்த பிறபாடு இதை பற்றி கவலையே படாமல், அரசி சீரியலில் மூழ்கிப்போகலாம்.

30. திருப்பரங்குன்றத்திற்கு பக்கத்தில் இருக்கும் வெள்ளக்கல்லில் மேலும் மேலும் மதுரையின் மொத்த குப்பைகளும் கொட்டப்படலாம். நோய் பரவாமல் இருக்க எந்த ஏற்பாடும் செய்யப்படாமல் இருக்கலாம். வெள்ளைக்கல் மக்களைப் போல திருப்பரங்குன்றத்து மக்களும் ஈக்களுக்கு பயந்து திருமணங்களைக்கூட இரவில் நடத்தலாம். திருப்பரங்குன்றத்தில் ஈக்கள் மேலும் அதிகரிக்கலாம். சாப்பிடும் போது வந்தமரும் ஈக்களை விரட்டிவிட ஒவ்வொரு வீட்டிலிருக்கும் நபர்களின் எண்ணிக்கையைப் பொறுத்து அரசு கை விசிறிகள் வழங்கலாம். ஒரு நாளைக்கு ஒன்பத்திரண்டு தடவை மின்சாரம் தடைப்படும் பொழுதாவது உபயோகித்துக்கொள்ளலம் இல்லியா?
***
Muthu, Chill out whatcha yelling’ for?!

11 thoughts on “2008இல் என்னென்ன நடக்கலாம்?

  1. அய்யய்யோ கஜேந்திரா பாத்திங்களா?உடனே ஆஸ்பத்திரிக்கு போய் ஊசி போட்டுக்குங்க. இவ்வளவு நீளமா பதிவு இருக்கும்போதே நினைச்சேன்.நான் துபாய் வரும்போது ப்ளைட்ல போட்டானுங்க இந்த படத்தை என்ன பண்றது? நடுவழில எகிறி குதிக்க முடியாதே. :))

    Like

  2. தம்பி: வாங்க சார். ஊசிக்கெல்லாம் கேக்குமான்னு தெரியல. விஜயகாந்த் படங்களுக்கு இன்னும் மருந்து கண்டுபிடிக்கலப்பு.

    Like

  3. அய்யய்யோ….கஜேந்திரா முழுசா பாத்தீங்களா? ரொம்ப தைரியம்தான் உங்களுக்கு.ஏங்க…2008ல் நடக்கப்போவதைப் பற்றி இவ்வளவு பெரிய பட்டியலா?மத்தவங்களுக்கு ஏதாவது மிச்சம் வைங்க….:-))))))))

    Like

  4. இவ்ளோ பெரிசா மூச்சி வாங்குது…நீங்க நிறைய நல்ல புக்ஸ் படிக்கரீங்க இந்த வருடம் நீங்க படிச்சி ரசிச்ச புக் எங்களுக்கும் அறிமுகம் செய்யுங்கள் பிளிஸ்

    Like

  5. // இந்த புத்தாண்டிலாவது, உறக்கமின்றி, எதை எழுதித் தொலைக்கலாம், என்று மண்டையை உடைத்துக் கொண்டிருக்கும், வலைப்பூ நண்பர்களுக்கு (எனக்கும் சேத்துதான்!) நல்ல சுகமான உறக்கம் கிடைக்க இறைவனை வேண்டிக்கொள்கிறேன்.//இ(த்)து:-)))))))))))))பதிவு சூப்பர்.இந்தியாவின் ஜனத்தொகை பத்து பில்லியனை எட்டலாம் என்றதை விட்டுட்டீங்க போல!

    Like

  6. எம்மா – எவ்ளோ பெர்ய பதிவு – எப்டீங்க படிக்கறது ? 2008லே பதிவர்கள் யாருமே இவ்ளோ பெர்ர்சா போட மாட்டாங்க – சிக்கனமா சின்னதா தட்டச்சு பண்ணவே முடிலெ- நீங்க வேற.

    Like

  7. இளா: நன்றி இளா.சின்ன பையன்: நிறைய மிச்சம் வெச்சிருக்கேன் சின்னபையா!baby pavan: அவ்வப்போது அறிமுகம் செஞ்சுக்கிட்டுத்தான் இருக்கேன். இனிமேல் நிறைய செய்யறேன்.துளசி கோபால்: ஆமா அத விட்டுட்டேன்ல!சீனா: அப்படியா? இவ்ளோ பெரிசா போட மாட்டாங்களா?

    Like

  8. //திருப்பரங்குன்றத்திற்கு பக்கத்தில் இருக்கும் வெள்ளக்கல்லில் மேலும் மேலும் மதுரையின் மொத்த குப்பைகளும் கொட்டப்படலாம். நோய் பரவாமல் இருக்க எந்த ஏற்பாடும் செய்யப்படாமல் இருக்கலாம்.//TCE-ல ஏன் இவ்வளவு ஈ மொய்க்கிறது என்று வியந்திருக்கிறேன்…இப்பொழுதுதான் புரிகிறது.

    Like

  9. அப்போ திருபரங்குன்றம் கிடையாதா? பக்கத்துல இருக்கிற வெள்ளகல்லா? இதுநாள் வரை தெரியமா போச்சேப்பா. சரா

    Like

Leave a reply to Baby Pavan Cancel reply