2008இல் என்னென்ன நடக்கலாம்?

வலைப்பூ நண்பர்களுக்கு, என் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். இந்த புத்தாண்டிலாவது, உறக்கமின்றி, எதை எழுதித் தொலைக்கலாம், என்று மண்டையை உடைத்துக் கொண்டிருக்கும், வலைப்பூ நண்பர்களுக்கு (எனக்கும் சேத்துதான்!) நல்ல சுகமான உறக்கம் கிடைக்க இறைவனை வேண்டிக்கொள்கிறேன்.

ஏனோ எனக்கு Avril Lavigneயின் “Chill out whatcha yelling’ for?” வரிகள் ஞாபகத்துக்கு வருகின்றன.

***
சர்வேசன் நடத்திய சிறுகதைப்போட்டி பற்றி தெரியாமல் இருந்து விட்டிருக்கிறேன். நேற்றைக்கு தான் தெரியும். ஏதோ நான் எழுதியிருந்தால், முதல் பரிசு கிடைத்திருக்கும், என்பதற்காக நான் சொல்லலீங்க, அப்படியாச்சும் ஒரு சிறுகதை எழுதியிருப்பன்ல? சில சமயம் இப்படித்தான், என்னை சுற்றிலும் என்ன நடக்கிறது என்று தெரியாமல், பூனை போல கண்களை மூடிக்கொண்டிருப்பேன். விழித்துக்கொள்ளும் போது, நன்றாக விடிந்திருக்கும். And obviously, I would have missed all the fun! எப்படியும் இந்த வாரத்திற்குள் ஒரு சிறுகதை எழுதி போஸ்ட் செய்ய முயற்சிக்கிறேன். (ஐயோ! என்று நீங்கள் கத்துவது எனக்கு கேட்கவில்லை!)

***

சர்வேசன், உங்கள் சர்வேக்களுக்கு, நீங்கள் zohoவை பயன்படுத்தலாமே? zoho creator try பண்ணியிருக்கீங்களா? இந்தியன் ஏர்லைன்ஸ் பற்றிய complaint பக்கத்திற்கு நான் zoho creatorஐ பயன்படுத்தி இருக்கிறேன். (இன்னும் வெளியிடவில்லை! உங்களுக்கு exclusive preview!) அந்த பக்கத்தை நீங்கள் இங்கே பார்க்கலாம். zoho creatorஐ பயன்படுத்தி நீங்கள் நிமிடத்தில் ஒரு web page create செய்து விடலாம். we can create validation scripts and lot of other things also. And you can also design the view for the datas entered by the users, as you wish! Really nice! And it can be embedded with in blogger! Try it. If you know it previously, then sorry, for my late point out!

***
இரண்டு நாட்கள் விடுமுறையில் நான் நிறைய டீவி பார்த்தேன். (ஒரு டீவி தான் நிறைய program பார்த்தேன். உஷாரா இருக்க வேண்டியிருக்கு.) அதில கஜேந்திரான்னு ஒரு படம் காட்டப்பட்டது. சுரேஷ் கிருஷ்ணா இயக்கம். நம்ப விஜயகாந்த் சார் நடிச்சது. ஐயோ காமெடி தாங்கல. ஏற்கனவே நரசிம்மாவின் டிரான்ஸ்பார்முக்கே ஷாக் அடிக்கும் சீனப் பாத்து, பழங்காநத்தம் தியேட்டரில இருந்து, பின்னங்கால் பிடறில படற அளவுக்கு ஓடிவந்தது எனக்கு இன்னும் பசுமையா நினைப்புல இருந்தும், எந்த தைரியத்தில, டீவி சேனல மாத்தாம இருந்தேன்னு, எனக்கு இன்னும் புரியவேமாட்டேங்குது. ஆனாலும் எனக்கு தைரியம் ஜாஸ்திபா.
விஜயகாந்த் intro scene. வில்லன்களுடன் சண்டை போடவேண்டும். ரமணா படத்தில “டேய் அடங்குடா. உங்க அண்ணனோட ரெட்டைக்கைய ஒத்தக்கையா ஆக்குனவரே அவர்தாண்டா” டயலாக் சொல்லுவார்ல, அவர்தான் அடியாட்களின் தலைவன். (ரமணா நல்ல படம் என்பதை யாரும் மறுக்கமுடியாது!). அவர் கத்திய எடுத்து விஜயகாந்த கிழிச்சிடுவார். ரத்தம் வந்திடும். கத்தில ரத்தம் ஒட்டிட்டு இருக்கும். யாரோட ரத்தம்? விஜயகாந்தோட ரத்தம். கூலா, விஜயகாந்த் சிகரெட் எடுத்து வாய்ல வைப்பார். சிகரெட்டை பத்தவெக்க தீப்பெட்டி இருக்காது. அதையும் அடியாட்களின் தலைவனே சொல்வான்: சிகரெட்டை பத்த வைக்க வத்திப்பட்டி வேணும்ல என்கிட்ட இல்லீல்ல என்ன செய்வ?! (சண்டை போட வந்தீங்களா? சிகரெட் பத்தவைக்க வந்தீங்களா?!) உடனே நம்ப தலை ஒரு சிரிப்பு சிரிப்பார். பிறகு இவருடைய ரத்தம் பட்ட கத்தி இருக்குல்ல, அத எடுத்து ரத்தம் சிகரெட்ல படற மாதிரி சும்மா வெப்பார், சிகரெட் பத்திக்கும்!
அப்புறம் மீசை மேல கைய வெப்பார். “என் மீசை மேல கைய வெச்சா என்ன ஆகும்னு தெரியுமா?” ன்னு கேட்டுட்டே, மீசைய சும்மா சுண்டி விடுவார், அடியாட்களில் ஒருத்தன், சும்மா பல்டி அடிச்சு தூரமா போய் விழுவான்.

***

உங்க safetyக்காத்தான் சொல்றேன், அவர் அரசியல் கூட்டத்தில பேச வந்தா, பக்கத்தில கிக்கத்தில போய்டாதீங்க. மீசைய சுண்டி கிண்டி விட்டுறப்போறாரு. தூரமாவே நின்னுக்குங்க.

***

கடந்த சில வாரங்களில் Orhan Pamuk எழுதிய Snow, Douglas Adams எழுதிய Hitchhikers Guide To Galaxy, சா.கந்தசாமி எழுதிய தொலைந்துபோனவர்கள் படித்து முடித்தேன். Aldous Huxley எழுதிய Brave New World படிக்க எடுத்தேன். பிடிபடவில்லை. பிறகு Haruki Murakami எழுதிய Hard-boiled wonderland and the End of the world இப்பொழுது படித்துக்கொண்டிருக்கிறேன்.

ஏற்கனவே Haruki Murakami எழுதிய Norwegian Wood படித்திருக்கிறேன். எனக்கு அவரது எழுத்து நடை, அலட்டல் மற்றும் அலங்காரம் இல்லாத வாக்கியங்கள், மிகவும் பிடித்திருந்தன. Norwegian Wood படித்து முடித்ததும், The windup birds chronicle வாங்கினேன். இந்தியா சென்றிருந்த பொழுது, நேரம் கிடைத்தால், படிப்பதற்காக எடுத்துச்சென்றிருந்தேன். ஒரு பக்கம் கூட படிக்கவில்லை. புத்தகமும் எங்கே போனதென்று தெரியவில்லை. தலைமறைவாகி விட்டது.

இந்த வருடம் மட்டும் மூன்று புத்தகங்களை தொலைத்திருக்கிறேன்: Orhan Pamuk எழுதிய Istanbul:memories of a city எங்கே போனது என்றே தெரியவில்லை. Geroge Orwell எழுதிய 1984 cabஇல் தொலைத்துவிட்டேன். அப்புறம் இந்த windup bird.
***

தமிழில் எஸ்.ராமகிருஷ்ணன் சிறுகதைத் தொகுப்பும், புதுமைப்பித்தனின் கட்டுரைத் தொகுப்பும் படித்துக்கொண்டிருக்கிறேன்.

எஸ்.ராமகிருஷ்ணனின் சிறுகதைத் தொகுப்பில், எனக்கு தாவரங்களின் உரையாடல் என்கிற சிறுகதை மிகவும் பிடித்திருந்தது. இவருக்கு கதைக் களம் எங்கிருந்து கிடைக்கிறது என்பது மிகவும் வியப்பாகவே இருக்கிறது. எனக்கு பிடித்திருந்த மற்றொரு கதை “ஒரு தலைகீழ் கதை“. ஆயிரம் கால் இலக்கியத்தின் அடுத்த பகுதியில் இந்த கதைகளைப் பற்றி எழுதுவேன் என்று நினைக்கிறேன்.

தாவரங்களின் உரையாடல் என்கிற கதையின் போக்கில் இருந்த மற்றொரு சிறுகதையை காலச்சுவடில் படிக்க நேர்ந்தது. அது யுவன் சந்திரசேகரின் “உள்ளோசை கேட்பவர்கள்” என்கிற சிறுகதை. சிறுகதை அல்ல நெடுங்கதை தான்.

***

இந்த வருடம் தான் நான் நிறைய புத்தகங்கள் படித்திருக்கிறேன். என்னென்ன புத்தகங்கள் என்று என் நினைவில் இருக்கிற அளவிற்கு யோசித்து ஒரு பதிவு போடுகிறேன். நிறைய சினிமாக்கள் பார்த்திருக்கிறேன். (இந்த list முடியாது!) கொஞ்சம் technology கற்றுக்கொண்டிருக்கிறேன். நிறைய விசயங்கள் செய்யவேண்டும் என்று நினைத்து செய்யாமல் விட்டிருக்கிறேன். செய்யாமல் விட்ட அனைத்தையும் இந்த புது வருடத்தில் செய்யவேண்டும் என்று உறுதி எடுத்திருக்கிறேன். உங்களுக்கும், நீங்கள் நினைத்தது எல்லாவற்றையும் செய்து முடிக்கக்கூடிய மன வலுவையும் உடல் வலுவையும் இறைவன் கொடுக்கவேண்டும் என்று வேண்டிக்கொள்கிறேன்.

***
2008 இல் என்ன என்ன நடக்கும்? நடக்கலாம்?

1. ஸ்ருதியில் லக்ஷ்மண், தசாவதாரம் தோல்வியைத் தழுவியிருக்கலாம் என்று எழுதியிருந்தார். அது நடக்காது என்றே நினைக்கிறேன். நடக்கவும் கூடாது. தொடர்ந்து தோல்வியைத் தழுவினாலும், தன் முயற்சியை சற்றும் கைவிடாத கமல், ரசிகர்களாகிய நம்மீது கொண்டிருக்கும் அபாரமான நம்பிக்கையை, நாம் இந்த முறையாவது சிதைத்து விடக்கூடாது என்றே நான் நினைக்கிறேன்.

2. ரஜினி முருகதாஸ் பாலச்சந்தர் கூட்டணியில் அடுத்த பட அறிவிப்பு வரலாம்.

3. ஸ்டாலின் முதலமைச்சராகவும், அழகிரி திமுக கட்சித் தலைவராகவும் பொறுப்பேற்கலாம்.

4. த்ரிஷா இன்னும் க்யூட்டாகியிருக்கலாம்

5. இந்தியாவில் CostToCompany மேலும் அதிகரித்து மாஸ்கோவிற்கோ அல்லது வியட்நாமிற்கோ MNC Companies படையெடுக்கலாம்.

6. பாடும் office programmeஐ suntv விஜய் டீவியிடமிருந்து காப்பிஅடித்து “Corporateகீதம்” என்கிற பெயரில் புதிய புரோகிராம் ஆரம்பிக்கலாம்.

7. விஜய் டீவி ஜோடி நம்பர் ஒன் season 2 போட்டியாள்ர்களை வைத்து மேலும் என்னென்ன வகையில் business செய்யலாம் என்று யோசித்து, ஜோடி நம்பருடன் ஒரு நாள் என்று ரசிகர்களை அவர்கள் வீட்டிற்கு அழைத்து சென்று மொக்க போடலாம்.

8.சுற்றுச்சூழல் மாசு படுவதைத் தடுக்க ஒரு அருமையான திட்டம்: electric scooter என்று சொல்லிக்கொண்டு நச்சுத்தண்மையுள்ள பேட்டரிகளை பயன்படுத்தி மேலும் சுற்றுச்சூழலை மாசு படுத்தலாம். வேற என்ன? குதிரை வண்டியிலா போக முடியும்?!

9. Microsoft .Net4.0, 4.5, 5.0, 5.5, 6.0, 6.5 என்று மாசத்துக்கு ஒன்னாக release செய்து புரோகிராமர்களை குழப்பி, இதுல புரோகிராம் பண்றதுக்கு, நாலு பன்னிக்குட்டி வாங்கித்தாங்கப்பா, அத மேச்சாவது பொழச்சுக்கறேன் என்று பிதாமகன் சூர்யா போல கடுப்படைய வைக்கலாம்.

10. Web2.0 மற்றும் Virtual PCs விஸ்வரூபம் எடுக்கலாம். Zohoவை கூகிள் நசுக்க பார்க்கலாம். zoho ·பீனிக்ஸ் பறவையாக எழுந்து நிற்கலாம்.Microsoftஇன் Live பெரும் தோல்வியைத் தழுவலாம். கூகிள் இன்ன பிற சின்ன சின்ன utilities sitesஐ aquire செய்யலாம். Microsoft இறுதியில் web தன் கையை விட்டு சென்றுவிட்டதை உணர்ந்து கொள்ளலாம். கூகிளுடன் partnership போடலாம்.

11. சன் மைக்ரோ சிஸ்டம் தனது 2009 பட்ஜெட்டை கணக்கிட்டு அந்த தொகையை Microsoftஐ sue செய்து வசூலிக்கலாம்.

12. சிங்கப்பூரில் வீட்டு வாடகை டப்பென்று குறையலாம். (கடவுளே இது மட்டும் கண்டிப்பா நடக்கனும்! முடியல!)

13. ராகுல் காந்தி டீவியில் அதிகம் தென்பட ஆரம்பிப்பார்.

14. விஜயகாந்த் புது சேனல் (ஆண்டாள் அழகர் சேனல்) ஆரம்பித்து கன்னாபின்னான்னு கவர்மெண்ட் ரூல்ஸ் பேச ஆரம்பிக்கலாம். தனது மண்டபம் இடிக்கப்பட்டது ரெக்கார்ட் செய்ததை மீண்டும் மீண்டும் தனது டீவியில் காட்டலாம். தனது ஆண்டாள் அழகர் கல்லூரி எப்படியெல்லாம் நன்றாக இருக்கிறது என்பதைப் பற்றிய செய்திப்படம் நாளொன்றுக்கு நான்கு முறை ஒளிபரப்பலாம். விஜயகாந்த் நடித்த அதிரடி திரைப்படங்கள் அதிரடியாக காட்டப்படலாம். (?!)

15. சரவணா ஸ்டோர்ஸில் மேலும் விலை குறைப்பு நடக்கலாம். மக்கள் கூட்டம் மேலும் அதிகரிக்கலாம். யாராவது ஒரு NRI செமத்தியாக அடிவாங்கலாம். அங்கு வாங்கின அழகான ஸ்லிப்பர்ஸ் இன்னும் குறைவான நாட்களே உயிர்வாழலாம்.

16. விப்ரோ இன்போஸிஸ் டாட்டா போன்ற நிறுவனங்கள் மீடியா தொழிலில் இறங்கி கதாநாயகர்களின் கால்ஷீட் கிடைக்காமல் ராமராஜனை புது படத்திற்காக அனுகலாம். ராமராஜனின் எங்க ஊரு பாட்டுக்காரனை ரீமேக் செய்யலாம். நிஷாந்தி நடித்த ரோலில் சினேகா நடிக்கலாம்.
17. மோகன் உதயகீதத்தை ரீமேக் செய்து கையில் மைக் இல்லாமல் காலரில் சின்ன மைக் வைத்துக்கொண்டு மேலும் வேக வேகமாக இங்கிட்டும் அங்கிட்டும் நடந்து “சங்கீத மேகம்” பாடல் பாடலாம்.

18. ரேடியோ மிர்ச்சி சென்னை அலைவரிசை இன்டர் நெட்டில் வரலாம் (ஏற்கனவே இருந்தா link கொடுங்க நண்பர்களே). சூரியன் FM மொக்க தாங்க முடியலப்பா.

19. ஒலிம்பிக்ஸில் இந்தியா medal tableலிலே வராமல் போகலாம். (இது கண்டிப்பாக நடக்க கூடாது என்பது தான் என் விருப்பம். நடந்தால் சொல்வதற்கில்லை!)

20. ஆஸ்திரேலியாவை இந்தியா டெஸ்டில் வீழ்த்தலாம். கங்கூலி மேலும் இரண்டு சதம் அடிக்கலாம். (நான் subscribe பண்ணியிருக்கேன்ப்பா!)

21. தமிழ்நாட்டில் கலர்டீவி நடமாட்டம் அதிகரிக்கலாம். தெருவில் மனிதர்கள் நடமாட்டம் குறையலாம்.

22. ஜெயமோகன் இன்னும் பெரிய புத்தகம் எழுதலாம். vikram sethக்கும் அவருக்கும் யார் அதிக பக்கங்கள் எழுதியது, எழுதப்போவது என்கிற போட்டி உருவாகலாம். (விக்ரம் செத்தை அடிச்சுக்க முடியாது என்பது என் கருத்து. ஆனாலும் ஜெயமோகனைப் பற்றியும் ஒன்னும் சொல்வதற்கில்லை)

23. சேக்குவேரா படம் போட்ட தொப்பிகள் மற்றும் ஜட்டிகள் இந்தியாவில் பிரபலமடையலாம். அதை அணிந்து கொண்டிருக்கும் ஒரு யூத்திடம் இவர் யார் என்று கேட்டால் சட்டென்று அவர் “you dont know him. pity you. He is a great Rock Star!” என்று சொல்லலாம்.

24. ப்ளாஸ்மா டீவிக்களையும் ஐபாட்களையும் காமெராக்களையும் லேப்டாப்களையும் செல்போன்களையும் இந்தியர்கள் வாங்கி குவிக்கலாம். (Electronic wastesஐ என்ன செயவது என்பதை பற்றி கவர்மெண்ட் வழக்கம் போல யோசிக்காமல் இருக்கலாம்)

25. வழக்கம்போல ஏரிகளை தூர்வாராமல் விடலாம். புதிய நீர் தேக்கங்கள் கட்டப்படாமல் போகலாம். இன்னும் நிறைய சிமென்ட் ரோடுகளை போட்டு தண்ணீரை நிலத்தில் சேர விடாமல் தடுக்கலாம். பருவமழை அடித்து ஊத்தலாம். தண்ணீர் யாருக்கும் பயன் படாமல் கடலில் சென்று கலக்கலாம். T.கள்ளுப்பட்டி விவசாயிகள் மழை விட்ட மூன்றாம் நாள் தண்ணீருக்கு என்ன செய்வது என்று வானத்தைப் பார்த்து உட்கார்ந்திருக்கலாம்.

26. அரசு ஏழை எளியோர் பயன்படும் வகையில் டீவிடி ப்ளேயர்க்ளை அன்பளிப்பாக தரலாம். மாசம் இரண்டு டீவிடிகளை மலிவான விலையில் ரேஷன் கடைகளில் வாங்கிக்கொள்ள செய்யலாம். வீட்டில் நிறைய பெண்கள் இருந்தால் நாடக டீவிடிகளும் அவர்களுக்கு கூடுதலாக வழங்கலாம்.

27. மலிவு விலை சாராயம் ரேஷனிலே வழங்கப்படலாம். குடும்பத்தலைவர்களின் நலன் கருதி, அந்த சாராயத்தை பெண்களே வந்து வாங்கிப்போக வேண்டும் என்றும் சட்டத்திருத்தம் கொண்டுவரலாம்.

28. பெசன்ட் நகர் பீச்சில் மேலும் சில வெளிநாட்டு காபி கம்பெணிகள் கடை திறக்கலாம். ஒரு காப்பி 400ரூபாய் விற்கலாம். அதையும் வாங்குவதற்கு நான் க்யூவில் காத்துகிடந்து நின்று “one more sugar packet please” என்று எரிச்சலாக சிரிக்கலாம்.

29. மதுரையில் மேலும் பாலங்கள் கட்டப்படலாம். ஏதும் உபயோகிக்கப்படாமல் பேருந்துகள் மீண்டும் மதுரைக்குள்ளே வரலாம். எவ்வளவு பாலங்கள் கட்டப்பட்டாலும் தொழில் நுட்பம் வளர்ந்தாலும், திருப்பரங்குன்றம் மட்டும் ரயில்வே கிராஸிங்க்குள் அடைந்து கிடக்கலாம். அவசரமாக ஹாஸ்பிடலுக்கு செல்ல வேண்டும் என்கிற நிலை வரும் போது, கடவுளே லெவல் க்ராஸிங் திறந்திருக்கவேண்டும் என்று மனதுக்குள் ஒவ்வொரு திருப்பரங்குன்றத்துக்காரனும் வேண்டிக் கொள்ளலாம். அப்படி வேண்டிக்கொண்டு சென்று விட்டு வீட்டிற்கு வந்த பிறபாடு இதை பற்றி கவலையே படாமல், அரசி சீரியலில் மூழ்கிப்போகலாம்.

30. திருப்பரங்குன்றத்திற்கு பக்கத்தில் இருக்கும் வெள்ளக்கல்லில் மேலும் மேலும் மதுரையின் மொத்த குப்பைகளும் கொட்டப்படலாம். நோய் பரவாமல் இருக்க எந்த ஏற்பாடும் செய்யப்படாமல் இருக்கலாம். வெள்ளைக்கல் மக்களைப் போல திருப்பரங்குன்றத்து மக்களும் ஈக்களுக்கு பயந்து திருமணங்களைக்கூட இரவில் நடத்தலாம். திருப்பரங்குன்றத்தில் ஈக்கள் மேலும் அதிகரிக்கலாம். சாப்பிடும் போது வந்தமரும் ஈக்களை விரட்டிவிட ஒவ்வொரு வீட்டிலிருக்கும் நபர்களின் எண்ணிக்கையைப் பொறுத்து அரசு கை விசிறிகள் வழங்கலாம். ஒரு நாளைக்கு ஒன்பத்திரண்டு தடவை மின்சாரம் தடைப்படும் பொழுதாவது உபயோகித்துக்கொள்ளலம் இல்லியா?
***
Muthu, Chill out whatcha yelling’ for?!

என் நண்பன் என்னிடம் கேட்ட பத்து கேள்விகள், மற்றும் பதில்கள்.

இன்று மதிய சாப்பாட்டிற்கு அப்புறம், உட்கார்ந்து பேசிக்கொண்டிருந்த பொழுது என் நண்பன் என்னிடம் பத்து கேள்விகளை கேட்டான். அதற்கு பதில் சொல்ல சொன்னான். விளக்கம் தேவையில்லை என்றும், just as short as possible, முடிந்தவரை yes/no மட்டுமே சொல்லவேண்டும் என்றான்.

அவன் கேட்ட கேள்விகளும் அதற்கான பதில்களும்.

1. Tamil Cinema’s best introduction song?
புதிய வானம் புதிய பூமி (அன்பே வா)
பொதுவாக என் மனது தங்கம் (முரட்டுக்காளை)


2. Best PrimeMinister for India? Best President?
திரு. ராஜீவ் காந்தி. President?! எனக்கு அந்த பதவியே பிடிக்காது. அந்த பதவியே தேவையில்லை என்று நினைப்பவன் நான்.

3. India’s best (usefull) nobel prize winner?
Sir CV Raman

4. India’s economy is dependent on US economy. Do you think India’s economy can be independent?
Since every thing is Globalized now, there cannot be really an independent economy. But India have to come out of “IT sevice” sector. We have to innovate something. We need to spend a lot in research.

5. Does Indian NRI’s have patriotisim still left in them?
Yes. (But I dont think that is important)

6. India/Pakisan problem will be solved in future?
No. தூங்குகிறவர்களை மட்டுமே எழுப்ப முடியும்.

7. இது நாள் வரை தமிழ்நாட்டின் சிறந்த முதலமைச்சர் யார்? இனி யார் சிறந்த முதலமைச்சராக இருப்பார்?
இதுநாள் வரை: பெருந்தலைவர் காமராஜர்.
இனி: ரஜினிகாந்த் (இனி வரும் முதல்வர்களில்)

8. எம்ஜிஆர்/சிவாஜி அப்புறம் ரஜினி/கமல் அப்புறம் விஜய்/அஜித், இனி யார்?
தனுஷ் / (யாரும் இல்லை)

9. புத்தகம் படிக்காமல் இருப்பது, கெட்ட பழக்கமா என்ன ?
கண்டிப்பாக கிடையாது.

10. Are we really destroying the world by polluting and cosuming the nature in excess?
Yes. Of Course.
A cartoon from Sunday Times/Strait Times

இந்தியன் ஏர்லைன்ஸ¤ம் சரியான சில்லரையும்!

ஏதோ ரைமிங்காக இருக்க வேண்டும் என்பதற்காக நான் இந்த தலைப்பை வைக்கவில்லை, இதில் அர்த்தம் இருக்கிறது.

இந்தியன் ஏர்லைன்ஸில் நான் இதுவரை ஒரே ஒரு முறைதான் சென்றிருக்கிறேன். மலேசியாவில் இருந்த பொழுது, அவசரமாக அடித்த ஒரு விசிட்டின் போது, இந்தியன் ஏர்லைன்ஸில் போக வேண்டிய சந்தர்ப்பம் வாய்த்தது. அது நாள் வரையில் மலேசியன் ஏர்லைன்ஸில் பயணித்திருந்த எனக்கு, இந்தியன் ஏர்லைன்ஸில் சென்ற இந்த பயணம், மிகுந்த வித்தியாசமாகவே இருந்தது. பயணச்சவுகரியங்களைப் பற்றி நான் இங்கு குறிப்பிடவில்லை. மூன்றரை மணி நேர பயணத்தில் சவுகரியங்கள் பெரிதாக தேவைப்படாது. சரியான நேரத்துக்கு, பாதுகாப்பாக, செல்லவேண்டிய இடத்துக்கு, சென்றால் மட்டுமே போதுமானது. சரியான நேரம் என்பது, இப்ப 9:10 க்கு விமானம் சென்னையில் தரையிறங்க வேண்டும் என்று வைத்துக்கொள்ளுங்கள், 9:10 க்கு exactly தரையிறங்க வேண்டும் என்பது முக்கியமல்ல. ஒரு கால்மணி நேரம் அரைமனி நேரம் தாமதத்தை அனுமதிக்கலாம். காரணங்கள்: ஏதாவது எதிர்பாறாத விசயங்களால் – தட்பவெட்ப நிலை சரியில்லை, மிகுந்த மழையாக இருக்கிறது போன்ற காரணங்களால் – கூட தாமதமாகலாம். இந்த காரணங்கள் எல்லாம் தினமும் நடக்காது. என்றோ ஒரு நாள் அல்லது சில மாதங்களில் மட்டும் (மழைக்காலம், பனிக்காலம்) நடக்கும். மேலும் தொழில்நுட்ப பிரச்சனைகளும் விமானம் தாமதமாக செல்வதற்கு காரணியாக அமைந்து விடுவதுண்டு. தொழில்நுட்ப பிரச்சனை தினமும் ஏற்படுமா?

நான் முதன்முதலில் இந்தியன் ஏர்லைன்சில் பயணம் செய்த அன்று விமானம் ஒன்றரைமணி நேரத்துக்கும் மேலாக தாமதம். காரணங்கள் ஏதும் சொல்லப்படவில்லை. நானும் கேட்டுக்கொள்ளவில்லை. அதற்கப்புறம் நான் இந்தியன் ஏர்லைன்ஸில் போகவில்லை. சிங்கப்பூர் வந்ததற்கு அப்புறம் சிங்கப்பூர் ஏர்லைன்ஸில் பயணிக்கத் தொடங்கினேன். ஒரு நாளும் தாமதமாக சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் சென்றதில்லை, ஒரு முறை தவிர. ஆனால் அந்த முறை தாமதமானதற்கு ஒரு காரணம் இருந்தது. அதாவது, பேக்கேஜ் செக் இன் செய்து விட்ட ஒரு நபர் கடைசி நேரத்தில், பயணம் செய்யப்போவதில்லை என்று முடிவெடுத்துவிட்டார். அவருடைய பெட்டிபடுக்கைகளை மீண்டும் எடுத்து வைப்பதற்கு தாமதமாகிவிட்டது. இது போன்ற காரணங்களை ஏற்றுக்கொள்ளலாம், இல்லியா?

என் நண்பர்கள் யாவரும் இந்தியன் ஏர்லைன்ஸில் பயணம் செய்பவர்கள். அவர்களை வழியனுப்பி விட பெரும்பாலும் நான் செல்வதுண்டு. அத்தனை முறையும் இந்தியன் ஏர்லைன்ஸ் தாமதமாகவே புறப்பட்டது. ஒரு மணி நேரமோ அல்லது இரண்டு மணி நேரமோ அல்லது மூன்று மணி நேரமோ. நாங்கள் நண்பரை வழியனுப்பிவிட்டு MRT ஏறியிருப்போம், அவரிடமிருந்து கால் வந்துவிடும்: விமானம் ஒரு மணி நேரம் தாமதாம்! என்று. சிரித்துக்கொள்வதைத் தவிர வேறு என்ன செய்யமுடியும்?

***

இந்த முறை இந்தியா சென்றிருந்த பொழுது நான் இந்தியன் ஏர்லைன்ஸில் புக் செய்தேன். எல்லோரும் இந்தியன் ஏர்லைன்ஸில் சென்று மிச்சம்பிடிக்கிறார்களே, நாமும் மிச்சம்பிடித்தால் என்ன என்று தோன்றவே, இந்த முடிவை எடுத்தேன். ஒரு மணி நேரம் தானே தாமதம். so what? இந்தியா சென்று மில்லியன் டாலர் ஒப்பந்தத்தையா கை எழுத்திடப்போகிறாய்? என்று என்னை நானே கேட்டுக்கொண்டேன். இல்லைதான்.

அந்த நாளும் வந்தது. நான் மற்றும் எனது நண்பர் வட்டாரம் ஏர்போர்ட்டில் குழுமியிருந்தோம். என்னுடன் என்னுடைய கலீக் ஒருவரும் பயணம் செய்தார். நான், எனது கலீக் அவரது மனைவி, மற்றும் எங்களது நண்பர்கள் என அன்று மாலை அரட்டைக்கச்சேரி ஏர்போர்ட்டில் ஆரம்பமானது. நண்பர்கள் இருந்ததால் கொஞ்ச நேரம் கழித்து பேக்கேஜ் செக்கின் செய்து கொள்ளலாம் என்று நினைத்திருந்தோம். காயா டோஸ்ட் சாப்பிட்டுக்கொண்டிருந்த பொழுது, விமானம் ஒரு மணி நேரம் தாமதம் என்று சொல்லப்பட்டது. இதில் என்ன ஆச்சரியம் இருக்கிறது என்று நினைத்துக்கொண்டோம். இன்பாக்ட் இதை நான் எதிர்ப்பார்த்திருந்தேன். அரட்டைக்கச்சேரி தொடர்ந்தது. மீண்டும் தாமதம் என்று அறிவிக்கப்பட்டது. இந்த முறை எத்தனை மணி நேரம் என்று அறிவிப்பு செய்யப்படவில்லை. காலவரையற்ற உண்ணாவிரதம் போல, காலவரையற்ற தாமதம். அப்படீன்னா, டிக்கட் மூனு மாசத்துக்கு முன்னவே எடுத்து, பர்சேஸ் செய்து, பெட்டி படுக்கைகளை எல்லாம் பேக் செய்து, நாளைக்கு இந்தியா போகக் போகிறோம் என்ற நினைப்போடு தூக்கம் வராமல் தவித்து, காலை ஆபீஸ் சென்று, இரண்டு மணி நேரம் பெர்மிஷன் போட்டுவிட்டு, வீட்டுக்கு வந்து, நண்பனையும் அழைத்துக்கொண்டு, டாக்சி பிடித்து, ஏர்போர்ட்டில் வந்து அமர்ந்து, காயா டோஸ்ட் சாப்பிட்டுக்கொண்டிருப்பவன் என்ன கேனையனா?

***

எந்த ஸ்டுபிட் காரணங்களுக்காகவும் நீங்கள் உங்கள் விமானத்தை தாமதமாக கிளப்பலாம். எத்தனை மணி நேரம் என்று எங்களுக்கு சொல்லவேண்டுமா வேண்டாமா? எங்களை வரவேற்க உறவினர்கள் வருவார்களா மாட்டார்களா? அவர்களுக்கு நாங்கள் தோராயமாக ஒரு நேரம் சொல்லவேண்டுமா வேண்டாமா? உங்களைப் போல irresponsible fellows என்று எங்களை நினைத்தீர்களா? என் நேரம் மட்டுமல்ல, என் நணபர்களின் நேரமும் வீணாகப் போய்க்கொண்டிருந்தது. அதில் பெண்களும் அடக்கம். என்னை வழியனுப்பிவிட வந்தவர்கள் என்னை வழியனுப்பாமல் எப்படி போவார்கள்? முதல்லையே மூணுமணி நேரம் ஆவும் என்று சொல்லித் தொலைத்தால் அவர்கள் வீட்டுக்கு போவார்கள் அல்லவா?

எத்தனை மணி நேரம் தாமதம் என்றே சொல்லாதவர்கள், ஏன் தாமதம் என்றா சொல்லப்போகிறார்கள்?

***

நேரம் பறந்தோடியது. இன்னும் ப்ளைட் எப்பொழுது கிளம்பும் என்று யாருக்கும் தெரியவில்லை. ஏற்கனவே மூன்று மணி நேரம் தாமதம். நானும் என் நண்பரும் மட்டும் கிளம்பி என்ன ஆச்சு என்று பார்க்கப்போனோம். அங்கே ஏற்கனவே பெரும் கூட்டம் இருந்தது. என்ன என்று விசாரித்ததில்: ப்ளைட் கேன்சல் செய்யப்பட்டது தெரியவந்தது.

அங்கிருந்த ஒரு நபர், எல்லோருக்கும் அடுத்தநாள் இதே நேரம் சிங்கப்பூரிலிருந்து கிளம்பவிருக்கும் இந்தியன் ஏர்லைன்ஸ¤க்கு போகும்படி சொல்லிக் கொண்டிருந்தார். ஒரு நாள் லேட். சிலர் அதையும் கேட்டுக்கொண்டு சரி என்று உள்ளே தாங்கள் ஏற்கனவே செக் இன் செய்து விட்ட பேக்கேஜ் என்னவாகும் என்று கேட்டுக்கொண்டிருந்தனர்.

எனக்கும் என் நண்பருக்கும் ஒன்றும் புரியவில்லை. என்ன இது இவ்ளோ அசால்டா ப்ளைட்ட கேன்சல் செய்துட்டு கூலா அடுத்தநாள் ப்ளைட்டுக்கு போ என்று சொல்கிறார்களே என்று நினைத்தோம். கேன்சல் செய்யப்பட்டதற்கு காரணம் மழையாம். ஏதோ சில தட்பவெட்ப காரணங்களால் ப்ளைட் தாமதம் அல்லது கேன்சல் செய்யப்படும். அது OK. அப்படி என்றால் அந்த விமான நிலையத்தில் இருந்து எந்த ப்ளைட்டும் கிளம்பாது. எல்லாமே கேன்சல் செய்யப்படும். atleast ஒரே இடத்திற்கு செல்லும் விமானங்கள் யாவும் கேன்சல் செய்யப்படும். இங்கே, சென்னைக்கு செல்லும் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் கிளம்பிவிட்டது, மலேசியன் ஏர்லைன்ஸ் கிளம்பிவிட்டது ஆனால் இந்தியன் ஏர்லைன்ஸ¤க்கு மட்டும் ஜலதோஷம் பிடித்து கடும் காய்ச்சல் கண்டு விட்டது, எங்களை வியப்பில் ஆழ்த்தியது. மற்ற விமாங்கள் எல்லாம் ஸ்வெட்டர் போட்டுக்கொண்டா போகிறது? அல்லது யாராவது குடை பிடிக்கிறார்களா?

பிறகு தான் தெரிந்தது: விமானம் பழுதடைந்து விட்டதாம். Technical Problem.

***

இதில் எங்களுடம் பயணம் செய்த ஒரு குழு (முதலமைச்சருடன் கோயம்புத்தூரில் மீட்டிங் என்று சொல்லிக்கொண்டது) ஏன் விமானம் பழுதடைந்தது உங்களுக்கு முன்னமே தெரியாதா? என்று அங்கிருந்த இந்தியன் ஏர்லைன்ஸின் representativeஐ கேட்ட பொழுது, அது எப்படி தெரியும்? விமானத்தை ஸ்டார்ட் செய்யும் போது தானே தெரியும் என்று அவர் அப்பாவியாய் பதிலளித்தார்.

நாங்கள் போராட்டத்திற்கு தயாரானோம். அந்த முதலமைச்சருடன் மீட்டிங் குழுவும், நானும்,என் நண்பரும், அமேரிக்காவில் இருந்து தனது திருமணத்திற்கு செல்லும் மற்றொருவரும் ஒரு குழுவாக சேர்ந்து கொண்டோம்.

எங்களது கோரிக்கை: நாளை இரவு வரை காத்திருக்க முடியாது. எங்களை இன்றே வேறு ஏதாவது ப்ளைட்டில் இந்தியாவுக்கு அனுப்பிவிடு. பயணிகள் நாங்கள் டிக்கெட்டை கேன்சல் செய்தால் அல்லது extend செய்தால் fine வசூலிக்கிறீர்களா இல்லியா?

நாங்கள் எவ்வளவு போராடினாலும் அந்த representative தான் சொன்னதையே தான் சொல்லிக்கொண்டிருந்தார்.
***

இதில் ஒரு விசேஷம் என்னவென்றால், அந்த அமேரிக்க நபரின் திருமணம் நாளை மறுநாள். அதாவது நாளைக்கு அவருக்கு நிச்சயதார்த்தம். முதலில் இப்படி ஒரு சூழ்நிலையை அவரே உருவாக்கிக்கொள்ளலாமா? இவ்வளவு அசால்டா வரலாமா? வந்தாலும், இந்தியன் ஏர்லைன்ஸில் டிக்கெட் போடலாமா? அவர் மிகுந்த டென்சன் ஆகிவிட்டார். மீட்டிங் குழு, தங்களுக்கு நாளை காலை மீட்டிங் இருக்கிறது என்றும் கண்டிப்பாக காலையில் கோயம்புத்தூரில் இருக்க வேண்டும் என்று சொல்கிறது.

இதில் காமெடி என்னவென்றால்: மீட்டிங் மீட்டிங் என்று சொல்லிக்கொண்டிருந்த அந்த குழுவைப் பார்த்து கடுப்பான அந்த representative, உங்க மீட்டிங் பேப்பரை எடுத்துக் காட்டுங்கள் பார்ப்போம் என்று சொல்ல, தடுமாறிய அவர்கள், தேடித் துலாவி, ஒரு விசிட்டிங் கார்டை எடுத்து நீட்டினர்.

***
எங்களுக்கு மீட்டிங் இருக்கு சேட்டிங் இருக்கும் அதப்பத்தி உங்களுக்கு என்ன? நீங்க சீட்டிங் பண்ணாம எங்களை ஏதாவது ஒரு ப்ளைட்டில ஏத்திவிடுங்கப்பா என்றே தோன்றியது. கடைசியில் சண்டை போட்டு, மறு நாள் அதி காலை சிங்கப்பூரிலிருந்து பெங்களூர் கிளம்பும், இந்தியன் ஏர்லைன்ஸில் இடம் கிடைத்தது.

அந்த அமெரிக்க நபர், மறு நாள் காலை பதினோறு மணிக்கு பெங்களூரிலிருந்து கோயம்புத்தூர் செல்லும் விமானத்தில், தனது மாமாவின் மூலம் டிக்கெட் ஏற்பாடு செய்தார்.

நான், என் நண்பர்களின் மூலம், பெங்களூரிலிருந்து சென்னைக்கு செல்ல டிக்கெட் எடுக்க முற்பட்டேன். முடியவில்லை. சரி பெங்களூர் சென்று பார்த்துக்கொள்ளலாம் என்று முடிவு செய்து விட்டேன்.

***

ஆனால் இந்தியன் ஏர்லைன்ஸ் மறு நாளும் லேட். ஒன்பதுரைக்கு பெங்களூர் செல்லவேண்டிய விமானம், சரியாக பத்தே முக்காலுக்கு பெங்களூர் சென்டடைந்தது. நானும் என் நண்பரும் அந்த அமேரிக்க நபரும்அடித்து பிடித்துக்கொண்டு வெளியேறினோம். அந்த அமேரிக்க நபருக்கு இன்னும் சரியாக பத்து நிமிடத்தில் ப்ளைட். அவர் முகம் வெளுத்துவிட்டது. ஒர் வகையில் அவர் லக்கி: அவரது லக்கேஜ் தான் முதலில் வந்தது. அடித்து பிடித்து ட்ராலியில் ஏற்றி வழியனுப்பி வைத்தோம். தூரமாக சென்று கைகாட்டி விட்டு சென்றார். அதற்கப்புறம் ப்ளைட்டை பிடித்தாரா இல்லியா என்பது தெரியவில்லை. பிடித்திருப்பார் என்றே நினைக்கிறேன். அதுவும் தாமதமாகத்தான் கிளம்பியிருக்கும். கண்டிப்பாக.

***

அடுத்தது லக்கேஜ் பிரச்சனை. என் கலீக்கினுடைய லக்கேஜ் வரவேயில்லை. அதில் தான் அவர் நகைகளை வைத்திருந்தார். பயந்து போன அவர், மானேஜரிடம் புகார் செய்ய, அவர் கண்டிப்பாக லக்கேஜ் உங்கள் வீடு தேடி வரும் என்று உறுதியளித்தார். விசயம் என்னவென்றால்: அவருக்கு போன இரண்டு முறையும் லக்கேஜ் ஒழுங்காக வந்து சேரவில்லை. இதை என்னிடம் பிரயாணம் முழுதும் புலம்பிக்கொண்டே வந்தார். சில சமயம் பயந்தால் அப்படியே ஆகி விடும் என்று சொல்வார்கள். உண்மையோ என்னவோ?!

அவருடைய மனைவிக்கு டாக்டர் அப்பாய்ன்ட்மென்ட் அன்று இருந்தது. இந்தியன் ஏர்லைன்ஸின் irresponsible தனத்தால் அவருடைய மனைவிக்கு அன்றைய அப்பாய்ன்ட்மென்ட் கேன்சல் செய்யப்பட்டது. அவர் மலேசிய தமிழர், மனைவியின் சிகிச்சைக்காகவே சென்னைக்கு புறப்பட்டார். மீண்டும் அந்த பிஸியான டாக்டரிடம் அப்பாய்ன்ட்மென்ட் வாங்குவதற்கு இரண்டு நாள் பிடித்தது. அதுவரை சென்னையில் இவர் எங்கு தங்குவார்? முதலில் பெங்களூரிலிருந்து சென்னைக்கு போக பணம் இந்தியன் ஏர்லைன்ஸின் தாத்தாவா கொடுக்கும்? சென்னையில் இரண்டு நாள் தங்குவதற்கு இந்தியன் ஏர்லைன்ஸின் தாத்தாவோட தாத்தாவா பணம் கொடுப்பார்?

***

எனக்கும் முக்கியமான ஒரு வேலை இருந்தது. அது என் வருங்கால மனைவியைப் பார்ப்பது. மற்றும் சென்னையில் நண்பர்களுக்கு பத்திரிக்கை வைப்பது. இவர்கள் அன்றைய காலை என்னை பெங்களூரில் இறக்கிவிட்ட பொழுது, சென்னைக்கு செல்லும் எல்லா விமானங்களும் சென்று விட்டன. அடுத்த விமானம் சாய்ங்காலம் ஐந்து மணிக்கு தான். அன்றைய மதியம் முழுவதும், 200 ரூபாய்க்கு ஒரு வெளங்காத பிரியாணியை ஏர்போர்ட்டிலே சாப்பிட்டு விட்டு, நேரடியாக மதுரைக்கு டிக்கெட் எடுத்து, அன்று சாயங்காலமே மதுரைக்கு வந்து சேர்ந்தேன். என் வருங்கால மனைவியையும் பார்க்கவில்ல, நண்பர்களுக்கு கல்யாணப்பத்திரிக்கையும் வைக்கவில்லை.

***

முடிஞ்சது முடிஞ்சு போச்சு. ஹதம் கதம்.

***

என்னுடைய மனைவியின் ப்ளைட் டிக்கெட்டை extend செய்ய இந்தியன் ஏர்லைன்ஸில் அலுவலகத்திற்கு சென்றிருந்தேன். முதலில் எப்படியேனும் என்னை திருப்பி அனுப்பிவிடவே அந்த லேடி முயற்சி செய்தார். லைக், உன் மனைவியின் பாஸ்பொர்ட் வேணும் என்றார். எதற்கு என்று கேட்டதற்கு, அவர் சிங்கப்பூருக்கு வந்த தேதி வேண்டும் என்றார். எனக்கு தெரியும் என்றபொழுது, அது தவறாக இருக்கும் முடியாது என்றார். பிறகு ஒரு வழியாக பேசி ஒத்துக்கொள்ளவைத்த பிறகு, only cash என்றார்.

சிங்கப்பூரில் மூலைமுடுக்கெல்லாம் eNets (eNets என்பது debit card system போல) accept பண்ணும் பொழுது, இவர்கள் மட்டும் only cash என்பார்கள். சரி cash எடுத்துவிட்டு வருகிறேன், என்று மீண்டும் வந்த வழியே நடந்து சென்று cash எடுத்துவிட்டு வந்தேன்.

இந்த முறை வேறு பெண்மணி. எனக்கு முதல் லேடிக்கு நடந்த பேச்சுவார்த்தையை இவர் கவனித்துக்கொண்டுதான் இருந்தார்.

நான் சென்று உட்கார்ந்த உடன், என்ன வேண்டும் என்று கேட்டுவிட்டு, கூலாக சொன்னார்: 73 dollars. cash. only cash. only exact change. என் கிட்ட சில்லரை இல்லை என்று சொல்லிவிட்டு, சரியான சில்லரை இருந்தால் உட்கார், இல்லீன்னா, அப்படியே எழுந்து ஓடிப்போய்டு, என்பது போல ஒரு பார்வை பார்த்தார். (அவருடைய தோரணை இருந்ததே, அப்பப்பா!) Lucky me, என்கிட்ட சில்லரை இருந்தது.

***
என்னை இந்த பதிவை எழுதத் தூண்டியது அந்தப்பெண்ணின் மனப்போக்கு. I am master, you are servant என்பது போல. உண்மையில் யார் master, யார் servant? காந்தியடிகள் என்ன சொன்னார்? காந்தியடிகள் இருக்கட்டும்.

நான் 73 டாலர் கொண்டுவந்து அவரிடம் கொடுத்து டிக்கெட் extend பண்ண வருவதால் தான் அவருக்கு அந்த வேலை இருக்கிறது என்பதை அவர் மறந்து விட்டார். மறந்தே விட்டார்.

உண்மையிலே, சரியான சில்லரை கொடுக்கவேண்டும் என்பதை நான் ரொம்ப நாட்களுக்குப் பிறகு – டவுன் பஸ்ஸில் கண்டக்டர் சொல்லிக் கேட்டது – அன்று தான் கேட்டேன்.

நான் அந்த பெண்மணியிடம் கேட்டது ஒன்று தான்: இந்த சில்லரை (கேட்க்கும்) பழக்கத்தை இந்தியாவிலிருந்து இங்கு கொண்டுவந்து விட்டீர்கள் போல!

***

செத்தாலும் and Veronika decides to die

சில மாதங்களுக்கு முன் சிவஸ்ரீ அவர்கள் எழுதிய “செத்தாலும்” என்கிற சிறுகதையை படிக்க நேர்ந்தது. அது காலச்சுவடில் வெளிவந்தது என்று நினைக்கிறேன். அந்த சிறுகதை ஒரு பெண்ணைப் பற்றியது. அந்தப் பெண் ஏதோ ஒரு காரணத்துக்காக தற்கொலைக்கு முயற்சி செய்வாள். ஆனால் அவள் விஷ மருந்து குடித்திருந்த நிலையில், குற்றுயிரும் குலை உயிருமாக, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, கடின போராட்டத்தற்குப் பிறகு காப்பாற்றப்படுவாள். அந்த சிறுகதையில் சிவஸ்ரீ, அந்தப் பெண் உயிர் பிழைப்பதற்குள் என்னென்ன வகையில் கஷ்டப்படுகிறாள் என்பதை நிதானமாக அழகாக நகைச்சுவையாக சொல்லியிருந்தார். கதையைப் படிப்பவர்களுக்கு தற்கொலை ஆசை, அதுவும் விஷ மருந்து குடித்து தற்கொலை செய்துகொள்ளும் ஆசை கண்டிப்பாக வராது, என்றே எனக்கு தோன்றியது. எனக்கு கதை மிகவும் பிடித்திருந்தது. எனவே சிவஸ்ரீ அவர்களுக்கு ஒரு ஈமெயில் அன்றே அனுப்பினேன். அவரிடமிருந்து உடனே பதில் வந்தது. சில நாட்கள் கழித்து அவர், ஜனாதிபதி கையால் விருது வாங்கிய செய்தியும் பேப்பரில் வந்திருந்தது.

ஒரு சில வாரங்களுக்கு முன் ஏதும் படிக்க கிடைக்காமல், Paulo Coelho எழுதிய, veronika decides to die என்கிற புத்தகத்தை எடுத்தேன். இந்த புத்தகம் ரொம்ப நாட்களுக்கு முன்னால் வாங்கியது, படிக்காமல் வைத்திருந்தேன். Paulo coelho ஒரு brazilian எழுத்தாளர். அவரது The Alchemist என்கிற நாவல் மிகவும் பிரபலமானது. எனக்கு மிகவும் பிடித்தமான நாவலும் கூட. இன்று வரை, புத்தகம் வாசிக்காத எனது நண்பர்கள் யாவருக்கும் பிறந்தநாள் பரிசாக நான் முதலில், இந்த நாவலைத்தான் கொடுத்திருக்கிறேன். எப்படியும் ஒரு ஐந்து காப்பியாவது இந்த நாவலை நான் வாங்கியிருப்பேன். இந்த நாவலே ஒரு தழுவல் தான். ஆயிரத்தோரு அரேபிய இரவுகளில் வரும் ஒரு கதையை அடிப்படையாக வைத்து, Paulo coelho இதனை அருமையாக எழுதியிருப்பார். Laurence Fishburne (The Matrix) இந்த நாவலை படமாக தயாரித்துக் கொண்டிருக்கிறார் என்று கேள்வி. அந்த எழுத்தாளர் எழுதிய Veronika decides to die, என்கிற நாவலை நான் வாசிக்கத் தொடங்கிய சிறிது நேரத்திலேயே, அந்த நாவல், சிவஸ்ரீ அவர்களின் கதையின் சாயலைக் கொண்டிருந்ததை உணர்ந்தேன். சாயல் என்று சொல்லிவிட முடியாது, ஆரம்பம் கிட்டத்தட்ட 80% அதே போலத்தான். மூன்று அத்தியாயங்களுக்கு மேலே, படிக்க பிடிக்காமல் மூடி வைத்து விட்டேன்.

ஒரு ஐடியாவின் ஒரிஜினாலிட்டி எங்கே இருக்கிறது என்பதை அதன் ஒரிஜினலைப் பார்க்கும் வரையில் யாருக்கும் தெரிவதில்லை. கமலஹாசனின் குருதிப்புனல் படத்தில் வரும் “every one has a breaking point” வசனம் எனக்கு மிகவும் பிடித்தமானது. ச்சே கமலஹாசன் எப்படி யோசிக்கிறார் என்று நினைத்திருந்தேன். ஆனால் அதே வசனத்தை The Shawshank Redemption திரைப்படத்தில் பார்க்க நேர்ந்தது. இப்போ நாம எங்கெங்கோ படித்ததை பகிர்ந்து கொள்கிறோம் இல்லியா? அது போல அவர் எங்கெங்கோ பார்த்ததை நம்மோடு பகிர்ந்துகொள்கிறார். ஆனால் நாம் courtesy இன்னார் என்று சொல்லிவிடுகிறோம், அவர் சொல்வதில்லை அவ்வளவு தான் வித்தியாசம்.

***

கற்றது தமிழ் திரைப்படத்தை முன்வைத்து சாருநிவேதிதா எழுதியிருந்த கட்டுரையை வாசித்தேன். Georges Bataille வின் சில வரிகளை மேற்கோள் காட்டிவிட்டு, படத்தை இன்னும் சிறப்பாக செய்திருக்கலாம் என்றும் பிரபாகரனின் கஷ்டங்களை மட்டும் எடுத்திருந்தால் ஒரு விதமான குரூர அழகியல் கிடைத்திருக்கும் இப்பொழுது அது மிஸ்ஸிங் என்று எழுதியிருந்தார். குரூர அழகியல் சார்ந்த திரைப்படங்கள் என்றதும் எனக்கு சட்டென்று நினைவுக்கு வந்தது இரண்டு படங்கள். ஒன்று ஆறிலிருந்து அறுபது வரை. மற்றொன்று பொற்காலம். ஆனால் இந்த கற்றது தமிழ் திரைப்படம் குரூரமானது என்ற வகையில் ஒத்துக்கொள்ளலாமே தவிர, குரூர அழகியல் என்றெல்லாம் நினைத்துக்கூட பார்க்க முடியாது. அழகாய் இருப்பதற்கு சில இலக்கணங்கள் இருக்கிறதல்லவா? வன்முறையை மற்றும் காழ்ப்புணர்ச்சியை தூண்டிவிடும் இந்த திரைப்படம், நானும் எனது படமும் தமிழை முன்வைத்து வரலாற்றில் இடம் பெறுகிறோமா இல்லையா பார், என்பது போன்ற சவாலுக்காக எடுக்கப்பட்டது என்றே தோன்றுகிறது. Like அம்முவாகிய நான் திரைப்படத்தில் வரும் வசனத்தைப் போல, “you stand in history!”. அம்முவாகிய நான் திரைப்படத்தைப் பற்றி பிரிதொரு முறை பேசலாம்.

கற்றது தமிழ் ஒரு வகையில் தடை செய்யப்படவேண்டிய திரைப்படம். Boys என்ற திரைப்படத்தை தடைசெய்தவர்கள் இதை தடை செய்யாமல் இருப்பதற்கு என்ன காரணம் என்று தெரியவில்லை. அன்றைக்கு மதன், தனது திரைப்பார்வையில், இந்த திரைப்படத்தைப் பற்றி இயக்குனரிடம் கேட்ட பொழுது, அவர் மென்துறை சார்ந்த மக்களின் மீது தீராத பாசம் வைத்திருப்பது போலவும் அவர்களுக்காக தான் பரிதாப்படுவதாகவும் சிலாகித்து மிகவும் வருத்தத்தோடு (கவனிக்க, சிலாகித்து பின் வருத்தத்தோடு!) சொல்லியிருந்தார். அவர் வருத்தப்படுவதற்கு ஒன்றுமே இல்லை, இப்படியொரு படத்தை எடுத்தபிறகு.

அந்த அன்னை அன்னை பாடலும், அந்த call center பையனும், பிராபாகர் அவனை படுத்தி வைத்த பாடும் (நம்மையும் சேர்த்துதான்!) இன்றும் எனக்கு பசுமையாக நினைவில் நிற்கிறது. “அன்னை அன்னை” பாடலை நீ பாடிக்காட்டு பார்ப்போம் என்பான் பிரபாகர் இதெல்லாம் ஒரு சவாலாய்யா? நாங்க என்ன இங்கிலாந்தில் இருந்தா இறங்கி வந்திருக்கோம்? இன்றைக்கு இருக்கும் blog மக்களில் பெரும்பாலானோர் மென்துறையை சார்ந்தவர்களே!

அவர்கள் தமிழை வளர்க்கிறார்களோ
(தமிழை யாரும் வளர்க்க முடியாது, தமிழ் தான் எங்களை வளர்க்கிறது!) இல்லியோ, எப்படியேனும், ஜெயமோகனையோ, ராமகிருஷ்ணனையோ, கிராவையோ, சுராவையோ, கல்கியையோ, பாரதியையோ ஆதவனையோ சிவஸ்ரீ யையோ பற்றி எழுதிக்கொண்டுதானே இருக்கிறார்கள்? எனக்கு தெரிந்த ஒரு ஆங்கில blogger, பாரதியின் பாடல்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துக் கொண்டிருக்கிறார்.

“அன்னை அன்னை” பாடலை என்னால் பத்து நிமிடங்களில் மனப்பாடம் செய்யமுடியும், என்னைப் போல..no i think its enough!

படத்தில் வரும் ஒரு முட்டாள் தனமான டயலாக் இப்பொழுதுதான் எனக்கு ஞாபகம் வந்தது: “ஏன்டா இரண்டாயிரம் வருஷத்துக்கு முன்னால் வந்த தமிழைப் படித்த எனக்கே இரண்டாயிரம் ரூபாய் தான் சம்பளம். இப்ப வந்த கம்ப்யூட்டர் படிச்ச உனக்கு இரண்டு லட்சம் சம்பளமா?” (correcta ஞாபகம் இல்லை!)

இவ்வாறான பொறுப்பற்ற வசனங்கள் ஒரு சாரர் மீது கோபத்தையும் வன்மத்தையும் கட்டவிழ்த்து விடுவதால் தான் இந்த படத்தை தடை செய்திருக்க வேண்டும் என்கிறேன்.

அது சரி, Georges Bataille வை சாருநிவேதிதா ழார் பத்தாய் என்கிறாரே, என்ன விதமான உச்சரிப்பு இது? இப்படித்தானா உச்சரிக்க வேண்டும்? தெரிந்தவர்கள் துப்பு கொடுக்கவும்.

***

இன்சிடென்ட்ஸ்-9

(இதற்கு முந்தைய பகுதிகளை சைடு மெனுவில் பார்க்கவும்!)

(இன்சிடென்ட்ஸ்-6 இன் தொடர்ச்சி. )

ஸ்ஸில் ஏறக்குறைய மரண ஓலங்கள் தான். அந்த சத்தத்திலேயே மிகவும் சத்தமாக இருந்தது எங்களது ஹிஸ்டரி மேடத்தின் குரல் தான். ஜீஸஸ் ஜீஸஸ் என்கிற அவரது பிரார்த்தனை பஸ்ஸின் கம்பிகளில் பட்டு எதிரொலித்து மூடியிருந்த கண்ணாடி ஜன்னலில் மீதமிருந்த கொஞ்சம் இடைவெளியில் விழுந்தடித்துக்கொண்டு ஓடியது. முதலில் எங்களுக்கு – பின்னால் கடைசி சீட்டில் அமர்ந்திருந்த எங்களுக்கு – ஒன்றுமே புரியவில்லை. (எப்பதான்டா உனக்கு முதல்லயே புரிஞ்சிருக்கு, சொல்லு?)

ஏதோ மிகப்பெரிய கல்லில் தான் பஸ் மோதிவிட்டது என்று நாங்கள் நினைத்தோம். அப்புறம் பின் கண்ணாடியின் வழியாகப் பார்த்தபோது தான், எங்க பஸ் மோதியதால் உடைபட்டு பாதி மட்டுமே நின்று கொண்டிருந்த அந்த அரசு டவுன் பஸ் தெரிந்தது. “ஐயோ ஆக்ஸிடென்ட்டா” என்று நாங்கள் ஒரு சேர கத்துவதற்குள், பஸ்ஸிலிருந்து கூக்குரல்கள் கேட்க ஆரம்பித்துவிட்டன. ஒரு அமில வாசனை, தகரம் எரியும் வாசனை, மெசின்களின் வாசனை பஸ் முழுவதும் நிறைந்திருந்தது.

பஸ் நிலை தடுமாறி ரோட்டை விட்டு இறங்கப் பார்த்தது. ரோட்டுக்கு அந்த பக்கமும் இந்த பக்கமும் கரடு முரடான குழிகள். குழிகள் தோறும் முட்புதர்கள். குழிகள் மிகுந்த ஆழமாக இருந்ததைப் போன்று தோன்றியது. எங்களது டிரைவர், பஸ்ஸை கவிழ்த்துவிடாமல், எதிரே இருந்த அந்த பெரிய மரத்தில் மோதிவிடாமல், மிகுந்த சாமர்த்தியத்தோடு ஒருவழியாக நிறுத்திவிட்டார். ஆனால் பஸ் ஒரு பக்கம் சாய்ந்து கொண்டு நிற்பது மட்டும் நன்றாகத் தெரிந்தது.(கண்ணாடிய ஒழுங்கா போடு!) இல்லீன்னா என் ப்ரண்ட் கணேஷ் ஏன் கோணலா நிக்கனும்? பஸ் நின்று விட்ட பிறகு பெட்ரோல் லீக் ஆகி பஸ் வெடித்துவிடுமோ என்கிற பயம் என்னை சூழ்ந்து கொண்டது.(நீ படம் பாக்கறத கொஞ்சம் குறைக்கிறது பெட்டர்!) எனக்கு வியர்க்க ஆரம்பித்தது. (பயம் வந்துவிட்டது என்று சொன்னவுடன், வியர்க்க ஆரம்பித்து விட்டது என்கிற வாக்கியம் தானகவே வந்து தொற்றிக்கொள்கிறது. என்ன செய்ய!) பஸ் முழுவதும் கேர்ல்ஸ் வாய்ஸ் பல தெய்வங்களையும் அழைத்துக் கொண்டிருந்தது. (பாய்ஸ் எல்லாம் என்னப்பா செஞ்சிக்கிட்டு இருந்தாய்ங்க? ஆமா ஆமா நீ எங்க அவிங்களப் பாத்திருக்கபோற?!) என் ப்ரண்ட் யாரை அழைத்துக்கொண்டிருக்கிறாள் என்று தேடினேன். (சொன்னனா?) எட்டி எட்டி பார்த்து, கடைசியில் அவளை ஸ்பாட் செய்த பொழுது, அவள் தன் சீட்டில் அமைதியாக உட்கார்ந்து, எங்கள் பக்கம் பார்த்துக்கொண்டிருந்தாள். (எங்கள் பக்கமா? என் பக்கம்னு தானா சொல்ல வந்த? ஒழுங்கா சொல்லிடு!) (பிற்பாடு என்னைத் தானே தேடிக்கொண்டிருந்தாய் என்று கேட்ட பொழுது திட்டவட்டமாக மறுத்து விட்டாள்)

கொஞ்சம் கூக்குரல்கள் எல்லாம் அடங்கிய பிறகு, வெளியேறுவது எப்படி என்கிற சிந்தனை வந்தது.(ஆமா பெரிய சிந்தனை சிற்பி இவரு!) ஸ்டூடண்ட்ஸ் யாருக்கும் அபாயமான பெரிய அடி ஒன்றும் இல்லை. முன்னால் உட்கார்ந்திருந்த +1 மாணவர்கள் சிலரின் மண்டை மட்டுமே உடைந்திருந்தது.(சந்தோஷமா இருந்திருப்பியே!) அந்த ரணகளத்தில் கூட என் ப்ரண்ட் செல்வக்குமார் கமெண்ட் அடித்தான் : இப்ப proove பண்ணிடலாம்டா அவிங்க மண்டையில களிமண் தான் இருக்குன்னு. டிரைவருக்கு பலத்த அடி. அவர் ஸ்டியரிங்கில் மாட்டிக்கொண்டார். (பிறகு நாங்க பஸ்ஸை விட்டு இறங்கி, டிரைவரை ஆம்புலனஸ் வந்து தூக்கி சென்றவுடன் தான், ஸ்டியரிங் ஒரு டிசைனா நெளிஞ்சிருந்ததைப் பார்த்தோம்.) டிரைவர் உட்கார்ந்திருந்த பகுதி ஏறக்குறைய முழுவதும் சிதைந்திருந்தது. மிஸ்ட் போன்ற ஒரு புகை கியர் பாக்ஸிலிருந்து வெளியேறிக் கொண்டிருந்தது. கொஞ்ச நேரத்துக்கு முன்னர் வரை, நானும் சூரியாவும் உட்கார்ந்திருந்த அந்த கதவை, இப்பொழுது, தள்ளி திறக்க முயன்றோம். முடியவில்லை. கதவு மண்ணுக்கு அடியில் புதைந்திருக்கிறது. நிறைய பேர் கதவுக்கு அருகில் குழும, பஸ் மேலும் கவிழ்வது போன்ற பிரமை உண்டாகியது.(மன பிராந்தி!) என்ன செய்தாலும் கதவு திறக்கவில்லை. வெளியே எட்டிப்பார்த்தால், கருவேல முட் புதர் சரிவு.(எட்டிப்பாக்காத! ஏன் பாக்குற?) கதவில் ஏறி அந்தப்பக்கம் குதித்துவிடலாம் என்று நினைத்த போது, முட்கள் எங்களை கடுமையாக பயமுறுத்தின.

அதிகாலை என்பதால் அந்த இடத்தில் மக்கள் அதிகம் இல்லை. விபத்துக்கு காரணமான அந்த அரசுப் பேருந்திலும் அந்த அதிகாலையில் பெரிய மக்கள் கூட்டம் ஒன்றும் இருந்திருக்கவில்லை. அதனால் தான் உயிர் இழப்பு அதிகமாக இல்லை. ஆனால், கொஞ்ச தூரத்தில், தங்களது நிலங்களில் ஏதேதோ வேலைகள் செய்து கொண்டிருந்த சிலர், வித்தியாசமாக பார்க் செய்யப்பட்டிருக்கும் எங்கள் பஸ்ஸை நோக்கி, அதிவேகமாக ஓடி வர தொடங்கினர்.

எங்கள் பிரின்ஸியின் கண்ணாடி உடைந்திருந்தது. அந்த உடைந்த கண்ணாடியையும் போட்டுக்கொண்டு, என்ன செய்வதென்று தெரியாமல், இங்கு அங்கும் பேந்த பேந்த விழித்துக்கொண்டிருந்தார். எனக்கு பாவமாக இருந்தது. உடைந்த கன்ணாடியைப் போட்டுக்கொண்டு அவர் என்னதான் செய்வார்? நல்லவேளை, என் கண்ணாடி உடையவில்லை.(தப்பிச்சடி) நாங்கல்லாம் கருஞ்சிறுத்தைப்பு.

என் கண்ணாடி மட்டும் அன்று உடைந்து போயிருந்தால், நான் தைரியமாக கதவை தாண்டி, முட்புதர்களுக்குள் குதித்திருப்பேன். (கீழே என்ன கிடக்கிறது என்று தெரிந்தால் தானே பயம் வரும்!) சிலர் அந்தப்பக்கம் இருக்கும் ஜன்னல் கண்ணாடியின் வழி இறங்கிவிட முயற்சித்துக் கொண்டிருந்தனர். என் ப்ரண்ட் ஒருத்தன் ஜன்னல் கண்ணாடியின் வழியே தலையை விட்டு எப்படியாவது இறங்கிவிட வேண்டும் என்று முயற்சிசெய்து கொண்டிருந்தான். அது அவனுக்கே கொஞ்சம் ஓவர் தான். டிரைவரின் wind shieldஐயே உடைத்தால் கூட அவனுக்கு கொஞ்சம் டைட்டாகத்தான் இருக்கும், இதில இவரு ஜன்னல் கண்ணாடி வழியாக, அதுவும் push கண்ணாடி, பாதிதான் கேப் இருக்கும், இறங்கப்பார்த்தால், எங்களுக்கு சிரிப்பு வருமா வராதா? (திமிருடா)

அப்பொழுதுதான், மிகச்சத்தமாக ஹிஸ்டரி மேடத்தின் குரல் கேட்டது. ஹே பாய் கெட் டவுன் யூ இடியட் என்று கண்ணாடியின் வழியாக தலையை விட்டுக் கொண்டிருந்தவனைப் பார்த்து ஒரு சவுண்ட் கொடுத்தார்.ஹிஸ்டரி மேடத்தின் மண்டை உடைந்திருந்தது. அந்தப் பெரிய முகத்தை, கணிசமான அளவு, இரத்தம் மூடியிருந்தது. எனக்கு சட்டென்று, இவர் எப்படி வெளியே குதிக்கப் போகிறார் என்ற விபரீத எண்ணம் தோன்றியது. சான்சே இல்லை.

இதற்குள் என் நண்பர்கள் சிலர் பின் சீட்டு கண்ணாடிகளை உடைக்க முயன்றனர். நாங்கள் கதவைத் திறக்க முயன்றோம். மண்ணில் மாட்டிக்கொண்டிருந்த கதவு, நாங்கள் விட்ட ஒவ்வொரு உதைக்கும், பதில் சொல்லாது உம்மென்றிருந்தது, என் நண்பன் சூரியாவைப் போல. கதவும் எங்களைப் போல பயந்துகொண்டிருந்திருக்க வேண்டும்.

கொஞ்ச நேரத்திற்குள், அக்கம் பக்கம் ஆட்கள் கூடிவிட்டனர். அந்த அதி காலையில், ஆட்டுக்கும் மாட்டுக்கும் புல் அறுக்க சென்ற மக்கள், சத்தத்தைக்கேட்டு அடித்துப்பிடித்து ஓடி வந்து, கருவேல முட்களை முடிந்த அளவிற்கு அகற்றி, எங்களை இறக்கி விட்டனர். சிலருக்கு முட்கள் வெகுவாக குத்தத்தான் செய்தது.(முள்ளுன்னா குத்தத்தான் செய்யும், பின்ன கொஞ்சவா செய்யும்?) எங்கள் மேடம்களை கீழிறக்குவது தான் கொஞ்சம் கஷ்டமாக போய்விட்டது.

முதலில் இறங்கிய நாங்கள் பஸ்ஸின் அந்தப்பக்கம் போய், பெட்டிகளை ஜன்னல் வழியாக, உள்ளிருக்கும் நண்பர்கள் கொடுக்க, வாங்கி கீழே அடுக்கி வைத்தோம். கொஞ்ச நேரத்தில் அனைவரும் இறங்கிவிட, டிரைவர் மட்டும் இறங்கமுடியாமல் அப்படியே இருந்தார். பிறகு ஆம்புலனஸ் அழைக்கப்பட்டு, அவர்கள் வந்து டிரைவரை ஸ்ட்ரச்சரில் தூக்கிக் கொண்டு சென்றனர். டிரைவர் பலத்த காயங்களுடன் பிழைத்துவிட்டார் என்று பிற்பாடு அறிந்துகொண்டோம்.

காலையில் நடு ரோட்டில் நாங்கள் எங்கு போவது என்று தெரியாமல் நின்று கொண்டிருந்தோம். பசி வேறு. பிறகு எங்கள் பிரின்ஸியின் உறவினர் ஒருவரின் உதவியால், ஒரு அரசு பேருந்தை வாடகைக்கு அமர்த்தி நேரடியாக கண்ணியாகுமரி வந்தடைந்தோம். உறவினர், போலீஸ் அதிகாரி என்பது குறிப்பிடத்தக்கது. (நோ கமென்ட்ஸ்)

பாதி டூரில் வீட்டுக்கு திரும்பிச் சென்றால் பள்ளியின் பெயர் கெட்டுவிடும் என்கிற காரணத்தாலோ என்னவோ டூரை கேன்சல் செய்யவில்லை. (ஆமா பெரிய ஊட்டி கான்வென்ட்ல படிச்சாரு) எப்படி பிரின்ஸி, அந்த காட்டுக்குள் (அதாவது பெரிய நகரம் ஏன் சின்ன கிராமம் கூட, ஏதும் அருகில் கிடையாது) தனி ஒரு பெண்ணாக இருந்து நிலைமையை சமாளித்தார் என்பது இன்றளவும் எனக்கு ஆச்சரியம் தான். யார் யாரை எப்படி தொடர்பு கொண்டார்? அப்பொழுது நான் ஒன்பதாவது படித்துக்கொண்டிருந்தேன். 1994. (ம்ம்..பிடிஏ வெச்சு வயர்லெஸ் லான்ல பிலெகேட்சுக்கு மெயில் அனுப்பிச்சார்)

கண்ணியாகுமரி எங்கள் டூர் ப்ளானில் இருந்தது தான். ஆனால் நடந்த ஆக்ஸிடென்டால் அங்கு புக் செய்திருந்த ஹோட்டலுக்கு ஒரு நாள் முன்னரே சென்று விட்டோம். அந்த ஹோட்டல் ஹவுஸ்புல். பிறகு நான், சூரியா, தர்மர் அண்ணன் (எங்கள் ப்யூன்) ஒரு டீமாகவும், மணிகண்டன் மற்றும் வெகு சில +1 மாணவர்களும் மற்றொரு டீமாகவும் சென்று ஹோட்டல்களில் ரூம் தேடினோம். எந்த ஒரு ஹோட்டலிலும் அவ்வளவு ரூம்கள் காலியாக இருக்கவில்லை. பிறகு நாடார் மேன்சனில் ஒரு பெரிய ஹால் கிடைக்கவே, அதையே வாடகைக்கு எடுத்துக்கொண்டோம்.

எங்க ப்ளான் படி, அன்று குற்றாலத்தில் குளித்திருக்க வேண்டியது. ஆனால் நாடார் மேன்சனின் இத்துப்போன பக்கெட் தண்ணீரில் குளிக்க வேண்டியதாகிற்று. இப்படியாக எனது முதல் குற்றால டூர் சிதைந்து போனது. அன்று சிதைந்த என் குற்றால பயணம், இன்று வரை நிறைவேறவேயில்லை.

அதற்கப்புறம், கண்ணியாகுமரியில் சுற்றிவிட்டு, முக்கூடலில் குளித்து விட்டு, வேறு பிரைவேட் பஸ் பிடித்துக்கொண்டு, மார்த்தாண்டம் வழியாக திருவணந்தபுரம் வந்தடைந்தோம். வருஷம்16 படம் ஷ¥ட்டிங் செய்யப்பட்ட பத்மநாபபுரம் பேலஸ் (அவ்ளோ வரலாற்று சிறப்புமிக்க அரண்மனைக்கு ஒரு திரைப்படத்தை வைத்து அடையாளம் சொல்வதா என்றால் என்ன சொல்வது? திருவிதாங்கூர் அரண்மனை என்று சொன்னால் நிறைய பேருக்கு ஏதும் தெரிந்திருக்காது என்பது உண்மை. ஆனால், வருஷம்16 அரண்மனை என்று சொல்வதால், ஓ அந்த அரண்மனையா என்று கேட்க வாய்ப்பிருக்கிறது இல்லியா?) வழியில் பார்த்தோம்.

எனக்கு இன்னும் அந்த பிரமிப்பு அப்படியே இருக்கிறது எனலாம். பிரமிப்பு இல்லை, கொஞ்சம் பயம் தான். ஏனென்றால் எங்களுடன் வந்த ஒரு guide உள்ளே தனியாக போய் மாட்டிக்கொண்டால் வெளியேறுவது கஷ்டம் என்று பயமுறுத்திவிட்டார். அரண்மனையும் அப்படித்தான் இருந்தது. ஹாவென்று. எனக்கு இன்னும் பளீரென்று ஞாபகம் இருப்பது, ராணியவர்கள் சபையைப் பார்க்க, உட்காரும் இடம். அந்த இடம் சுத்தமாக மறைக்கப்பட்டு இருக்கும். உள்ளே உட்கார்ந்திருக்கும் ராணி (அல்லது ராணிகள்!) சபையைப் பார்ப்பதற்கு சிறு சிறு துளைகள் மட்டுமே போடப்பட்டிருக்கும்.(எப்படி பாத்தீங்களா?)

ராணிய யாரும் சைட் அடிக்க முடியாது, ஆனா அவர் யாரை வேணும்னாலும் சைட் அடிக்கலாம், யாருக்கும் தெரியாமலே. நிறைய அறைகள் இருக்கின்றன, பூட்டப்பட்டு.

ராஜாக்களின் கம்பீரமும் அவர்களின் ரகசிய புலம்பல்களும் அந்த அறைகளுக்குள்ளேயே அடைந்துகிடக்கின்றன. அரண்மனை தோறும் ஒரு ஈர வாடை அடித்துக்கொண்டேயிருந்தது.


பிகு: பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன

தமிழ் சினிமா : என் பரிந்துரை

சாம்பார் வடையின் இந்தப் பதிவைப் பார்த்ததும், நாமும் எழுதினால் என்ன என்று நினைத்தேன். எவ்ளோ படம் வாழ்க்கையில் பார்த்திருப்போம்? அதற்கு எவ்ளோ நேரம் செலவழித்திருப்போம்? மொத்தம்?

ஒரு மூன்றாவது வகுப்பு படிக்கும்போதிருந்து படம் பார்க்கத் தொடங்கியிருப்பேன் என்று வைத்துக்கொள்வோம், இப்போ எத்தனை வருடங்கள் ஆச்சு? கிட்டத்தட்ட 20 வருஷம் ஆச்சு. (முத்து வயசாயிடுச்சுடா உனக்கு!) ஒரு வருசத்துக்கு averageஆ 52 வாரங்கள்ன்னு வெச்சுக்கோங்க..மொத்தம் எத்தனை வாரங்கள் ஆச்சு? 20*52 = 1040 வாரங்கள் ஆச்சு. ஒரு வாரத்துக்கு ஒரு படம்ன்னு வெச்சுக்கிட்டாக்க மொத்தம் 1040 படங்கள் ஆச்சு. ஒரு படம் குறைந்தபட்சம் இரண்டு மணி நேரம் ஓடுதுன்னு வெச்சுக்கோங்க, மொத்தம் 2080 மணி நேரம் படத்துக்காக செலவழிச்சிருக்கேன். மொத்தம் 87 நாட்கள். இது minimum amount of time. அடேங்கப்பா!

இவ்ளோ நேரம் படம் பார்க்க செலவழிச்சுட்டு, வருங்கால மக்களுக்கு படம் சிபாரிசு பண்ணலைன்னா என்ன அர்த்தம், நீங்களே சொல்லுங்க? சினிமாவும் இசையும் (முக்கியமா குத்துப்பாட்டு!) இந்தியர்களின் இதயத்தில் இருக்கிறது. சினிமா நடிகர்கள்? அரியணையிலிருக்கிறார்கள்.

ஆனால் பிடித்த படங்கள் என்பது வேறு, வருங்கால சந்ததியனருக்கு சிபாரிசு செய்வது என்பது முற்றிலும் வேறு. எடுத்துக்காட்டாக, 7G ரெயின்போ காலனி எனக்கு மிகவும் பிடித்த படங்களில் ஒன்று. ஆனால் அதை என் சந்ததியினருக்கு நான் சிபாரிசு செய்வேனா என்பது சந்தேகம் தான். செய்யமாட்டேன் என்றே நினைக்கிறேன்.

நான் சிபாரிசு செய்யும் படங்கள் இவைதான்:

எம்ஜிஆர்
நாடோடி மன்னன்
ஆயிரத்தில் ஒருவன்
மலைக்கள்ளன்
எங்க வீட்டுப் பிள்ளை
உலகம் சுற்றும் வாலிபன்

சிவாஜி
உத்தம புத்திரன்
மனோகரா
பராசக்தி
அந்த நாள்
புதிய பறவை
பாச மலர்
பாவமன்னிப்பு
பலே பாண்டியா
ஆலயமணி
பாரதவிலாஸ்
வீரபாண்டியகட்டபொம்மன்
கப்பலோட்டிய தமிழன்

முட்டக்கண் ராமச்சந்திரன்
சாரங்கதாரா
சபாபதி
அடுத்த வீட்டு பெண்

ஸ்ரீதர்
நெஞ்சம் மறப்பதில்லை
நெஞ்சில் ஓரு ஆலயம்
தேனிலவு
காதலிக்க நேரமில்லை

ஜெய்சங்கர்,ரவிச்சந்திரன்
அதே கண்கள்
மூன்றெழுத்து
வல்லவன் ஒருவன்

பாலச்சந்தர்
நினைத்தாலே இனிக்கும்
எதிர் நீச்சல்
சர்வர் சுந்தரம்
சாது மிரண்டால்
மேஜர் சந்திரகாந்த்
அவர்கள்
வறுமையின் நிறம் சிவப்பு
மனதில் உறுதி வேண்டும்
சிந்து பைரவி
உன்னால் முடியும் தம்பி.

ரஜினி

முல்லும் மலரும்
பில்லா
ஜானி
தில்லு முல்லு
படிக்காதவன்
குரு சிஷ்யன்
தம்பிக்கு எந்த ஊரு
மன்னன்
தளபதி
அண்ணாமலை
பாட்ஷா
சந்திரமுகி

பாரதிராஜா
பதினாறு வயதினிலே
நிழல்கள்
ஒரு கைதியின் டைரி
முதல் மரியாதை
சிகப்பு ரோஜாக்கள்
டிக் டிக் டிக்

மோகன்
விதி
நூறாவது நாள்

கமல்
விக்ரம்
வாழ்வேமாயம்
மூன்றாம்பிறை
சலங்கை ஒலி
சத்யா
அபூர்வ சகோதரர்கள்
சாணக்யன்
வெற்றிவிழா
நாயகன்
மைக்கேல் மதன காமராஜன்
குணா
சதிலீலாவதி
குருதிப்புனல்
காதலா காதலா
பஞ்சதந்திரம்
வசூல்ராஜா
விருமாண்டி
அன்பே சிவம்
வேட்டையாடு விளையாடு

மணிரத்னம்
மௌனராகம்
அஞ்சலி
இருவர்
அலைபாயுதே

பாக்யராஜ்
அந்த 7 நாட்கள்
இன்று போய் நாளை வா
தூரல் நின்னு போச்சு
இது நம்ம ஆளு

விசு
சம்சாரம் அது மின்சாரம்

விஜயகாந்த்
ஊமை விழிகள்
அம்மன் கோவில் கிழக்காலே
வைதேகி காத்திருந்தாள்
கேப்டன் பிரபாகரன்
புலன்விசாரனை

பிறபடங்கள்
ஓர் இரவு
பஞ்சவர்ணக்கிளி
பாமா விஜயம்
சாந்தி நிலையம்

வருஷம் 16
என் பொம்முக்குட்டி அம்மாவுக்கு
பூவிழி வாசலிலே
பூவே பூச்சூடவா
அக்னி நட்சத்திரம்
அரங்கேற்றவேளை
ஆண்பாவம்

கரும்புள்ளி (“என் உயிர் தோழன்” பாபு)
பாரதி
உதயம் (நாகார்ஜூன், அமலா, ரகுவரன்)

சூரியன்
நாட்டாமை

ஜென்டில் மேன்
இந்தியன்
ஜீன்ஸ்
முதல்வன்

அழகி
புதியபாதை
ஹவுஸ்புல்

காக்க காக்க
மௌனம் பேசியதே
நந்தா
கஜினி
கில்லி
காதல் மன்னன் (அஜீத்)
ஆசை
சேது
தில்
மொழி
காதல்
பருத்தி வீரன்
ராம்
காதலுக்கு மரியாதை

கனா கண்டேன்
கண்ட நாள் முதல்

ஜீவா (சத்யராஜ், அமலா)
நடிகன்

பாதாள உலகம்
மாயாபஜார்

மைடியர் குட்டிச்சாத்தான்
ஜெகன்மோகினி
பதிமூனாம் நம்பர் வீடு
உருவம்
48 மணி நேரம் (ரேவதி)
ஷாக்

இன்னும் நிறைய படங்கள் இருக்கு லிஸ்ட்ல, இன்னொரு தடவை சொல்றேன்.

வாரிசுகள், இராவணகாவியம், கலர்டீவி மற்றும் பொன்னியின் செல்வன்

வாரிசு அரசியல் என்பது சரியா? தவறா? (உனக்கு இது ரொம்ப முக்கியமா? உன்கிட்ட யாராச்சும் கேட்டாங்களா?) ரொம்ப நாளைக்கு முன்னர் முடியாட்சி இருந்தது. Like தசரதன் ஆட்சி செய்தார் என்றால், அவருக்கு அப்புறம் ஸ்ரீ ஸ்ரீ இராமபிரான் ஆட்சி செய்வது போல. அவர் காட்டுக்கு சென்றாலும், மக்கள் அவர் திரும்ப வரும் வரை வெயிட் செய்வாங்க. அப்புறம் கிழக்கிந்திய கம்பெனியின் ஆட்சி வந்தது. பிறகு குடியாட்சி முறை வந்தது. குடியாட்சி முறையா என்றால், atleast பெயரளவில். ஆனால் நடப்பது உண்மையில் குடியாட்சியா? ஓட்டு போடுகிறோம் ஆனால் ஆட்சியில் அமர்வது யார்?

நடுவில் இருந்த கிழக்கிந்திய கம்பெனியின் ஆட்சியில் மட்டுமே வாரிசு அரசியல் இல்லை எனலாம். காம்ரேட்கள் ஆட்சி செய்யும் சில மாநிலங்களைத் தவிர மற்ற எல்லா இடங்களிலும் வாரிசு அரசியலே -முடியாட்சியே- நடைபெறுகிறது. வாரிசு என்பது சொந்த மகனாகவோ, அல்லது மகளாகவோ தான் இருக்கவேண்டும் என்பதில்லை. சித்தப்பா மகனாகக் கூட இருக்கலாம். அல்லது மனைவியாகவோகூட இருக்கலாம், இல்லையேல் – எனக்கு ஒன்றும் தெரியாதுப்பா- எப்படி வேண்டுமென்றாலும் இருக்கலாம். வாரிசு என்று அறிவிக்கும் அவருக்கும், வாரிசானவருக்கும், இல்லையேல் வாரிசாக தன்னை அறிவித்துக்கொண்டவருக்கும் கண்டிப்பாக நெருங்கிய தொடர்பு இருந்திருக்கிறது. இருக்கும். இந்திய அரசியலை – ஏன் உலக அரசியலை கூட- உற்று, இல்லை இல்லை சும்மாகாச்சுக்கும் பார்த்தால் கூட, வாரிசு அரசியல் எங்கும் நிறைந்திருப்பது புலப்படும்.

இதற்கும் இன்று (21/11/2007) இந்தியா வந்த அமேரிக்காவின் ஜெஸ்ஸி எல் ஜாக்ஸன் என்ற சிவில் ரைட்ஸ் ஆக்டிவிஸ்ட் ராகுல் காந்தியைச் சந்தித்ததற்கும் எந்த சம்பந்தமும் இல்லை.

அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா.

***

இராமாயணம் என்னை கடந்த சில நாட்களாகவே ரொம்பவும் பாதித்து விட்டது. இதற்கு முன்னர் எனக்கு இராமாயணத்தில் அவ்வளவாக நம்பிக்கை இல்லை. இப்பவும் தான். ஆனால் நடந்து முடிந்த விவாதங்கள் என்னை இராமாயணத்தை பற்றி அறிந்துகொள்ளத் தூண்டின.

ரொம்ப நாட்களுக்கு முன்னால் இருந்தே எனக்கிருந்த சந்தேகங்கள் இவை தான்:
1. இராமர் இராமெஸ்வரத்தில் பாலம் அமைத்து இலங்கையை அடைந்திருந்தால், அங்கிருக்கும் லோக்கல் மக்களின் உதவி இல்லாமல் செய்திருக்க முடியாது. இப்படி ஒரு மிகப்பெரிய விசயம் தமிழ்நாட்டில் நடந்திருக்கும் பொழுது, இதை எப்படி நம் இலக்கியவதிகள், வரலாற்று மக்கள் தீவிரமாக பதிவு செய்யாமல் விட்டனர்?

2. இராமரைப் பற்றிய குறிப்புகள் தமிழ் இலக்கியத்தில் ஏன் அவ்வளவாக இல்லை? அழிக்கப்பட்டதா? அழிக்கப்பட்டது என்றால், வரலாறு மறைக்கப்பட்டிருக்கிறது என்று தானே அர்த்தம்? அப்பொழுது, வரலாறு என்பதே பொய் என்றாகிவிடுமே? (ofcourse, அது தான் உண்மையும் கூட!)

விகடனில் மதனிடம் ஒரு கேள்வி கேட்கப்பட்டது:
கேள்வி: பெண்களைப் பற்றிய வரலாறு பெரிதும் இல்லையே ஏன்?
பதில்: இதுவரை பெண்கள் பெரிதாக எங்கும் ஆட்சி செய்யவில்லை. இனிமேல் ஆட்சிசெய்யலாம். வரலாறு எழுதப்படலாம்.

ஆட்சியில் இருப்பவர்கள் தங்களைப் பற்றி பெரிதாக எழுதிக்கொள்வது இயல்புதான். தங்களைத் தாங்களே புகழ்ந்துகொள்வதை கூட ஒரு வழியில் ஏற்றுக்கொள்ளலாம் ஆனால் தாங்கள் நல்லவனாக வல்லவனாக இருக்கவேண்டும் என்பதற்காக, மற்றவர்களை கேவலமாக சித்தரிப்பதை எப்படி ஒப்புக்கொள்ள முடியும்?

இராவணன் தீவிர சிவபக்தன் என்பதற்கான ஆதாரங்கள் தமிழ் இலக்கியத்தில் நிறைய இருக்கின்றன. ஆனால் அவன் சீதையைக் கவர்ந்து சென்றான் என்பதற்கான ஆதாரங்கள் தமிழில் அதிகம் இல்லையே? கம்பராயணம் என்பது இலக்கியம். அது வால்மிகியின் நாவலைத் தழுவி எழுதுவதைப் போன்று. புதுமைப்பித்தன் ருஷ்ய நாவல்களைத் தழுவி எழுதியது போல. ஹருகி முராகமி எழுதிய ஜப்பானிய நாவலை ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பதைப் போல அவ்வளவே. அதை வரலாற்று தடயமாக ஏற்றுக்கொள்ள முடியாது.

இராமபிரானின் பராக்கிரமங்களை நிரூபிக்க ஒரு வில்லன் தேவையென்றால், மகாபாரதம் போலவே, அவர்களுக்குள் ஒரு வில்லனை தேடிக்கொள்வது தானே? ஏன் அங்கிருந்து இவ்ளோ தூரம் வந்து ஒரு சிவபக்தனான தமிழ் மன்னனை வில்லனாக பிடிப்பானேன்? இப்பொழுதிருக்கும் தமிழ் படங்களுக்கு, ஹிந்தி பேசும் வில்லன்களை நாம் தேடிப்பிடிப்பது போல. இராவணனைப் பற்றி வான்மீகி எழுதியதற்கு என்ன காரணம் இருந்திருக்க முடியும்?

எனக்கு இராமபிரானைப் பற்றி கவலை இல்லை, I really dont care. இராவணன் தீயவன் தானா? ஆதாரம் இருக்கிறதா?

Proof of concept?

***

இம்மாதிரியான ஒரு சூழலில் தான், நான் நூலகத்தில் சும்மா சுற்றிக்கொண்டிருந்த பொழுது, இராவணகாவியம் என்ற நூலைப் பார்த்தேன். அதன் முதல் சில பக்கங்களில், கதைச்சுருக்கம் கொடுக்கப்பட்டிருந்தது. நாற்பதுகளில் வெளிவந்த இந்த நூல் அப்பொழுது தடை செய்யப்பட்டிருந்திருக்கிறது. பின்னர் திராவிட ஆட்சி வந்ததற்கு அப்புறம் தான் தடை நீக்கம் செய்யப்பட்டிருக்கிறது.

இராமபிரானைப் பற்றி கேலியாக பேசினால், மக்கள் மனம் புண்படுமோ என்று யோசிக்கும் வருத்தப்படும், நம் தலைவர்கள் (சில நடிகர்களும் கூட!), இராவணனைப் பற்றி இழிவாக (கவனிக்கு இழிவாக, கேலியாக அல்ல!) பேசும் போது ஒரு சமூகத்தின் மனம் புண்படுமே என்று ஏன் நினைப்பதில்லை?

இராவண காவியத்தில் ஒரு கேள்வி கேட்கப்படிருந்தது:
அதாவது அவ்வளவு பெரிய மன்னனான, சீதையை தூக்கிவரத் துணிவிருந்த இராவணனுக்கு, சீதையை அடைவது அவ்வளவு கடினமாகவா இருந்திருக்கும்? அதுவும் தனது எல்லைக்குள்? ஆனால் அவன் சீதையின் மீது ஒரு விரலைக் கூட வைக்கவில்லை என்பது தான் உண்மை. (வைக்கமுடியவில்லை என்பதெல்லாம் சும்மா கதை!) இராவணன் சீதையை தங்கையாகத்தான் தூக்கிவந்திருக்கிறான். அது தான் உண்மை. தன் தங்கையின் மூக்கை அறுத்தவர்களுக்கு நல்ல பாடம் புகட்ட வேண்டும் என்பதற்காகத்தான் தூக்கிவந்திருக்கிறான், என்று சொல்கிறது இராவண காவியம்.

யோசிக்க வேண்டிய விசயம் தான்.

ஆரியர்கள் திராவிடர்களை மட்டம் தட்ட இப்படியெல்லாம் எழுதினார்கள் எனபதையும் மறுத்து விட முடியாது. ஏனென்றால் கம்பராமயணம் சோழர்கள் காலத்தில் வெளிவந்தது, சோழர்கள் திராவிட மன்னர்கள் அல்லர்.

இராவண காவியம் கதைச் சுருக்கத்தை செராக்ஸ் செய்து வைத்திருக்கிறேன், வெளியிடலாம் என்று தான் நினைத்தேன், ஆனால் என் நோக்கம் இராமபிரானைப் பற்றி அவதூறு சொல்ல வேண்டும் என்பதல்ல, இராவணன் நல்லவனாக இருந்திருப்பானோ என்கிற நப்பாசை தான்.

ஏனென்றால், இந்திய சட்டத்தின் படி, ஆயிரம் குற்றவாளிகள் தப்பிக்கலாம், ஆனால் ஒரு நிரபராதி தண்டிக்கப்படக்கூடாது, என்பது தானே? 🙂

அரசே முன் வந்து, இதை ஆராய்ச்சி செய்ய முன்வரலாம். ஆராய்ச்சி செய்ய நிதி ஒதுக்கலாம். மற்ற நாடுகளில் என்னென்னவோ ஆராய்ச்சி செய்கிறார்கள். ஒரே ஒரு அகல்வாராய்ச்சியில் தோண்டியெடுக்கப்பட்ட கல்லில் எழுதப்பட்ட எகிப்திய மெசபட்டோமிய சொற்களை வைத்துக்கொண்டு பல வருடங்களாக பொழுதைக் கழிப்பவர்கள் இருக்கிறார்கள் இல்லியா? இந்த ஆராய்ச்சி projectஇன் மூலமாவது, தமிழை முறையாக விரும்பிப் படித்தவர்களுக்கு, தமிழ் கற்றவர்களுக்கு நிறைய வேலை வாய்ப்பை வழங்கலாம்.

இது ரொம்ப முக்கியமா என்று கேட்பவர்களுக்கு: 750கோடி ரூபாய் செலவில் (ஒரு பகுதி செலவுதான், மொத்த செலவு இல்லை) கலர்டீவி கொடுப்பதையும், சிவாஜி போன்ற மிகப்பெரிய பட்ஜெட் படங்களுக்கு கூட தமிழில் பெயர் வைத்தனர் என்கிற ஒரே ஒரு காரணத்துக்காக, வரிசலுகை வழங்குவதையும், ஒப்பிடும் போது இது முக்கியமானதாகத்தான் படுகிறது.

செய்வார்களா திராவிடர்கள்?

***

Lord Of The Rings இன் மூன்று பாகங்களையும் மூன்றாவது முறையாக பார்த்து முடித்தேன். இந்த முறை என் மனைவியுடன். இரண்டு பாகங்கள் பார்த்து முடித்த அவருக்கு, மூன்றாவது பாகத்தைப் பார்க்காமல் இருக்க முடியவில்லை. மூன்றாவது பாகம் பார்த்து முடித்த பின், நான்காவது பாகம் இருந்தால் நன்றாக இருக்குமே என்றார்.

எனக்கு தெரிந்தவரையில், இதேபோன்றதோரு படம், இனிமேல் எடுக்கமுடியுமா என்பது சந்தேகமே. பீட்டர் ஜாக்சன் நம்மை அவர்களின் காலத்திற்கே அழைத்துச் சென்றிருப்பார். ஒவ்வொருமுறை பார்க்கும் பொழுதும் எனக்கு, ஒரே மாதிரியான அதே மாதிரியான நெகிழ்ச்சியே கிடைக்கிறது. Fresh always. Faromir போருக்கு செல்லும் பொழுது, Pipin பாடும் அந்த பாடல் மனதை உருக்கிவிடுகிறது. நான் பார்த்த அத்தனை தடவையும். அதே போல sam மற்றும் Frodoவின் நட்பு எப்பொழுதும் அழகாகவே, நெகிழ்ச்சியாகவே இருக்கிறது. Smegolஐப் பார்க்கும் பொழுது எல்லாம் எப்பொழுதும் போலவே கோபமும், இரக்கமும் ஒரு சேர வருகிறது. Aragorn மற்றும் Gandalfஐப் பார்க்கும் போது வியப்பு மற்றும் மரியாதை ஏற்படுகிறது. legolas, எப்பொழுதும் போல fantastic.

பிற்காலத்தில் தொழில் நுட்ப வளர்ச்சியால், இதை விட அருமையாக படங்கள் எடுக்க வாய்ப்பிருக்கிறது. ஆனால் அந்தப்படங்கள் LOTR நம் மனதில் ஏற்படுத்திய தாக்கதை ஏற்படுத்துமா என்பது சந்தேகம் தான்.

***

எனக்கு LOTR பார்க்கும் பொழுதெல்லாம், ஒரு விசயம் ஞாபகத்துக்கு வந்துவிடும். ஒரு விசயத்துக்காக ஏங்குவேன், நான். அது பொன்னியின் செல்வனை திரைப்படமாக எடுப்பது. எவ்வளவு அழகான கதை அது? எவ்வளவு அருமையான Aragornஐப் போல வீர மன்னர்களை உடைய கதை அது? பொன்னியின் செல்வன் தமிழ் வரலாற்று புனைவு நாவல்களின் தலைசிறந்த ஒன்று, என்பதை மறுக்கஇயலாது. புதுமைப்பித்தனுக்கு கல்கியின் மீது வேறு விதமான எண்ணம் இருந்தாலும், பொன்னியின் செல்வன் is epic.

எனக்கு பொன்னியில் செல்வனை திரைப்படமாக ஆக்க வேண்டும் என்பது நீண்ட நாள் விருப்பம். மணிரத்னம் பொன்னியின் செல்வன் கதையை திரைக்கதையாக மாற்றி விட்டார், 80 சீன்களிள் அழகாக எழுதிவிட்டார் என்று செய்திகள் அவ்வப்போது வரும். உண்மையாகவே இருந்துவிட வேண்டும் என்று நினைப்பேன்.

பொன்னியின் செல்வனை திரைப்படமாக உருவாக்க ரைட்ஸ் முன்பு சிவாஜி அவர்கள் வைத்திருந்ததாகவும், பின்னர் அது எம்ஜிஆர் அவர்களின் கைக்கு மாறியது என்றும், இப்பொழுது கமலஹாசனிடம் இருக்கிறது என்றும் சொல்லப்படுகிறது.

என்னுடைய ஆசை:
நடிகர்கள்:

ராஜராஜ சோழன் : கமலஹாசன்
வல்லவராயன் வந்தியத்தேவன் – ரஜினிகாந்த்
ராஜெந்திரசோழன் – கமலஹாசன் (அல்லது அஜித்குமார்)
பெரிய பலுவேட்டரையர் – சத்யராஜ் (அல்லது ப்ரகாஷ்ராஜ்)
சின்ன பழுவேட்டரையர் – நெப்போலியன்

மணிரத்னம் டைரகட் செய்யவேண்டும். இளையராஜா இசையமைக்கவேண்டும். ஏவிஎம் தயாரிக்க வேண்டும். மூன்று பாகங்களாகக் கூட எடுக்கலாம். ஆனால் கண்டிப்பாக ஒரு பாகமாக எடுக்கக் கூடாது. மருதநாயகத்துக்கு முன்னர் கமல் இதைச் செய்யலாம்.

நடக்குமா?
***

லைன்ஸ்மாருங்க

(சிறுகதை)

நாங்க அப்பவெல்லாம் எங்க அப்பா தங்கியிருந்த க்வார்ட்டர்ஸ்க்குப் போவோம் தெரியுமா? எப்பவெல்லாம்டி? ம்ம்..படிச்சிட்டிருக்கப்போ. என்ன படிச்சிட்டிருந்த? குமுதமா? ம்ம்..உன் மூஞ்சி..ஸ்கூல் படிச்சிட்டிருந்தப்போ. ஓ நீ ஸ்கூல் எல்லாம் போயிருக்கியா? பரவாயில்லையே. ம்ம்..நாங்க போயிருக்கமே. சர்டிப்பிக்கேட் கூட வெச்சிருக்கேன் தெரியுமா? ம்ம்..குட்..வெரிகுட்..அதுசரி உங்க அப்பா ஏன் குவார்டர்ஸ்ல போய் தங்கினாரு? உங்க கூட எல்லாம் சண்டையா? போடா பொறுக்கி. அவர் அங்க வேலை செஞ்சாருடா. எங்க? குவார்ட்டர்ஸ்லயா? ஐயோ..என்ன ஒழுங்கா சொல்லவிடறயா? இப்போ தான் எனக்கு ப்ளாஷ்பேக் மூடே வந்திருக்கு..கொஞ்ச நேரம் சும்மா இரேன்.. நீ உன் டுபாகூர் கேர்ள்ப்ரண்ட்ஸ் பத்தி அள்ளிவிட்ட ரீல் எல்லாம் நான் பொறுமையா கேட்டேன்ல..மரியாதையா என் டீ எஸ்டேட் ப்ளாஷ்பேக்க கேக்கற புரியுதா? என்னம்மா? தோ வாரேன்..அப்படியே லைன்ல இரு..அம்மா கூப்பிடறாங்க..வாரேன்..

ஹலோ..ஹலோ..எங்கடாபோய்ட்ட? ஸ்டுபிட்..இடியட்..ம்கும் ம்க்கும்..ஐயோ வாயேன்டா..ஹலோ..ஹாங்..யாரு? ய்யாழு? ஹை..கௌசல்யாவா? உங்க மாமா எங்கடி போனாரு? மா..மா..அ..ங்..க.. யா..ன.(கீச் கீச் என்று கத்துகிறாள் சிரிக்கிறாள்)..டக் டொக் ..டொக்..ஹலோ..யாராச்சும் எடுங்களேன்..தடியா..டக் டொக்..காது வலிக்குது..கட் பண்ணப்போறேன்டா..ஹலோ..தடியா..என்னடி? எங்கடா போன? உனக்கு ஒன்னு தெரியுமா? நான் யான பாத்தனே? எங்க தெருவுக்குள்ள வந்துச்சு..ம்ம்க்கும்..ஐயோ பப்பு யானைய பாத்துச்சா..ஜுஜுஜு..எருமமாடு..யானை பாக்கறதா இருந்த கண்ணாடி முன்ன போய் பாக்கறதுதான? நல்லா பன்னிக்குட்டி மாதிரி இருந்துக்கிட்டு யான பாத்தேன்னு கொஞ்சரதபாரு..வோய்..யாரப்பாத்துடி பன்னிக்குட்டின்னு சொன்ன..நீ பன்னிக்குட்டி..உன்….போதும் போதும்..அத்தோட நிப்பாட்டிக்கடா..அப்புறம் நான் பத்ரகாளியாயிடுவேன்டா..ஆகா இப்ப மட்டும் என்னவாம்..அப்படித்தான இருக்க? போடா நீ தான்டா எரும..யான..எல்லாமே..நீ தான்..போடா நான் காத பொத்திக்கிட்டேன்..நீ தான்.. நான் கேக்கல..கேக்கல..கேக்கல..என்னம்மா வேணும் உனக்கு இப்போ? ஏன் தொனதொனன்ட்டு இருக்க? அடியேய்..காலைல இருந்து ரெண்டு பேரும் பேசிட்டு தான இருக்கீங்க..கல்யாணம் செஞ்சிட்டு பேசத்தான போறீங்க..அது எங்களுக்கு தெரியும்..உனக்கு என்ன வேணும் அத மட்டும் சொல்லு? மூஞ்சிய கீஞ்சிய கழுவிட்டு வந்து வெளக்க பொறுத்தி வைடி..அதுக்கப்புறம் பேசுடி..வேணாம்னா சொல்றேன்..சரிடா..நான் அப்புறமா பேசறேன்..அடப்பாவி..எஸ்கேப் ஆயிட்டான்..

***

வீடெல்லாம் பெருசு பெருசா இருக்கும் தெரியுமா? ஒவ்வொரு ரூமும் ரொம்ப பெருசா இருக்கும். வீட்டுக்கு கடைசில கிச்சன் இருக்கும். வீட்டுக்கு பின்னாடி சின்ன தோட்டம் இருக்கும். நான் மொத மொத போனப்போ..கிச்சன் கதவத் திறந்தனா..ஹையோ..எப்படி இருந்துச்சு தெரியுமா? பின்னால பூராம் மலை..பூராம் பச்சை பச்சையா இருந்துச்சு..எனக்கு அப்படியே ஹையோன்னு இருந்துச்சு..நானும் எங்க அக்காவும் கீழ இறங்கி புல் தரையில நல்லா சத்தம் போட்டு கத்திக்கிட்டு குதி குதின்னு குதிச்சோம்.. நிறைய குட்டி குட்டி குருவியா..குருவியா என்னன்னு தெரியல..இருந்துச்சு..அத வெரட்டிக்கிட்டே போனோம்..அங்க க்யூட்டா ஒரு செம்பருத்தி செடி இருக்கும் தெரியுமா? செடி பூராம் செம்பருத்தியா பூத்திருக்கும்..அப்புறம் கீழ கூட விழுந்திருக்கும்..நாங்க எடுத்து தலைக்கு வெச்சிக்குவோம்..அப்புறம் அதக் காயவெச்சு அரச்சு..அம்மா என்ன என்னவோ போடுவாங்க..தலைக்கு ஷாம்புவா யூஸ் பன்னுவோம்…வீட்டுக்கு முன்னாடி குட்டி குட்டியா புல் மொளச்சிருக்கும்..எல்லாம் ஒரே ஹைட்ல இருக்கும் தெரியுமா..நாங்க நல்லா படுத்து உருளுவோம்..முன்னால இருக்குற அந்த தோட்டம்..நல்லா பெருசா ப ஷேப்புல இருக்கும்..சுத்தி வேலி போட்டிருப்பாங்க..அங்க அங்க பாறையா இருக்கும்..நானும் எங்க அக்காவும் டேவிட்டும் குட்டனும் அதில தான் ஏறி நின்னு மீட்டிங்ல பேசுற மாதிரி பேசுவோம்..யாரு? டேவிட்டா? சொல்லவேயில்ல..பொறுடா..கதைய மட்டும் கேளு..ம்ம்..சரிங்க மேடம்..அப்பவெல்லாம் எங்க அக்கா பெரிய வாயாடி..இப்ப மட்டும் என்னவாம்? பொறுக்கி..வாய மூடு.. இங்கிலீஷ்ல பேசுதுகளாம்..மேல ஏறி நின்னுக்கிட்டு..கைய மைக் மாதிரி வெச்சுக்கிட்டு..லேடீஸ் அன்ட் ஜென்டில்மேன் அப்படீன்னு ஆரம்பிக்குங்க…அப்புறம் என்ன பேசறதுன்னு தெரியாது..அஸ¤புஸ¤இவிஸ்குவிஸ்..ன்னு ஏதோ உளருவோம்..நீ இப்ப வரைக்கும் அப்படித்தானடி இங்கிலீஸ் பேசற? இருடா உன்ன வந்து கவனிச்சுக்கறேன்..யாரு இங்கிலீஸ் ஒழுங்கா பேசமாட்டா? நான் ஹிந்தியே நல்லா பேசுவனே? ஹிந்தியா? சொல்லவேயில்ல? ம்ம்ம்..தீவாளிக்கு துணி எடுத்தாச்சா படம் பாத்துதான் நான் மொதோ ஹிந்தியே கத்துக்கிட்டேன்..என்னது தீவாளிக்கு துணி எடுத்தாச்சாவா? பொங்கலே வரப்போகுதுடி.. அது என்ன தீவாளிக்கு துணி எடுத்தாச்சா படம்?..ம்ம்ம்..சொல்லமாட்டேன் கண்டுபிடிடா பாப்போம் ..

***

டேவிட்டோட அப்பாவும் எங்க அப்பாவும் ஆபிஸரா இருந்தாங்க..நீ பாக்கனுமே..எங்க அப்பா வீட்டுக்கு வர்றப்போ, பின்னாலயே ப்யூன் பைல எடுத்துட்டு வர்றத..ஏன் உங்க அப்பா ஆபிஸ்ல வேலை செய்யாமா தூங்குவாரோ? வோய்..உன்ன மாதிரின்னு நினைச்சியா..அவ்ளோ வேலை பொறுக்கி..ம்ம்..டேவிட்டும் குட்டனும் அண்ணன் தம்பிங்க. ம்ம்..அப்புறம் என்ன அக்கா தங்கச்சியாவா இருப்பாய்ங்க..கதைய சொல்லுடி..சும்மா..சன் டீவி நாடகம் மாதிரி இழுத்துக்கிட்டு இருக்க…உனக்கு நக்கல் ஜாஸ்தியாகிடுச்சுடா..வந்து கவனிச்சுக்கறேன்..டேவிட் பத்தி சொல்லுடி..ம்ம்..டேவிட் நல்ல குண்டு குண்டுன்னு குண்டு பூசனி மாதிரி இருப்பான்..நல்லா ஹைட்டா..கண்ணு பூனக்கண்ணு..உன் கண்ணு மாதிரி..இல்ல அதவிட பூனக்கண்ணு..எங்க கேங்கலயே அவனுக்கு மட்டும் தான் மலையாளம் தெரியும்..அதுனால அவனுக்கு திமிரு ஜாஸ்தி..ரொம்ப பண்ணிக்குவான்..குட்டன் அமைதியானவன்..திக்கு வாய்…அதனால ரொம்ப பேசமாட்டான்.. குட்டனுக்கு மலையாளம் தெரியாதா? பேரு மலையாளப்பேரு மாதிரிதான இருக்கு? ஐயே பேரு அதில்ல..நாங்க குட்டன் குட்டன்னு தான் கூப்பிடுவோம்..உண்மையான பேரு என்னன்னு எனக்கு தெரியல..தெரியலயா? எத்தானாப்பு படிச்சிட்டிருந்த அப்போ? ம்ம்..ஒரு ஆறவது இருக்கும்னு நினைக்கிறேன்..

***

நீ குட்டன் வீட்ட பாக்கனுமே..அவ்ளோ டெக்கரேட் பண்ணி வெச்சிருப்பாங்க..எனக்கு தெரிஞ்சு அவ்ளோ அழகா டெக்கரேட் யாரும் செஞ்சது இல்ல..பெரிய இவ..உலகம் பூராம் சுத்திருக்கா..வோய் டுபுக்கு அதான் எனக்கு தெரிஞ்சளவுக்குன்னு சொல்றோம்ல..மரத்தோட அடிப்பாகத்த வேரோட அறுத்திட்டு வந்து..அதுக்கு அழகா வார்ணீஷ் பெயின்ட் எல்லாம் அடிச்சு வெச்சிருப்பாங்க..நல்லா வேர் வேரா பிண்ணிக்கிட்டு இருக்கறமாதிரி எல்லாம் என்னவோ செஞ்சிருப்பாங்க..அழகா பெயிண்ட் அடிச்சிருப்பாங்க..அப்ப எல்லாம் டியூப் லைட் இல்லன்னு நினைக்கிறேன்…நீ இருக்கற கிராமத்துல இப்பவரைக்கும் டியூம் லைட் இல்லலடி..உத வாங்குவ..நாங்க கிராமத்துல இருக்கமா? சென்னைடா..செம்பட்ட தலையா..என்னாது? செம்பட்ட தலையா? உனக்கு திமிராயிடுச்சுடி..உஷ்..கதைய கேளு..அப்போ எல்லாம் குண்டு பல்ப் தான்..உன் சைஸ்க்கு ஏத்தமாதிரியே உங்க அப்பா பல்ப் வெச்சிருந்திருக்காருடி..கொஞ்சநேரம் அமைதியா இருக்கியா? குண்டு பல்ப் எல்லாம் கம்பெனிலையே கொடுத்திடுவாங்க.. உங்க அப்பா என்ன கிழக்கிந்திய கம்பனிலையா வேலை பாத்தாரு? வந்தேன் அடி பிச்சிருவேன்..டீ எஸ்டேட் டா..டீ எஸ்டேட்..அது என்னவோ பேரு..க்ளன்மேரி..ம்ம்..அதான்..கொடுவால கூட வேலைபாத்திருக்காரு..கொடுவாவா? என்ன வாயில ஓடுமே அதுவா? ஐயோ..அது ஒரு எஸ்டேட்..பாம்பனார் பக்கத்துல இருக்கு..என்னது பாம்பன் பாலமா? ஐயோ..

***

பாம்பனார் தெரியாதா? குமிளிக்கு அடுத்து இருக்கு..ஓ..நான் குமிளியே போனதில்ல தெரியுமா? ரொம்ப முக்கியம்….அடிப்பாவி..ஒரு நாள் காலையில நல்லா பொங்கல ஒரு கட்டு கட்டிட்டு..ஒரு முயல் குட்டிகூட விளையாடிட்டு இருந்தமா..ஐ..ஒரு முயல் குட்டி இன்னொரு முயல்குட்டியிடம் விளையாடுகிறது..டேய்..அக்காவும் விளையாண்டாடா..ஓ அப்படியா..ரைட்டு விடு..மேல சொல்லு..அப்பதான் டேவிட் வேகவேகமா மூச்சிரைக்க ஓடிவந்தான்..வந்து ஒரு யானை செத்துப்போச்சு..பாக்க வர்றீங்களான்னு கேட்டான். உடனே சரின்னு சொல்லிட்டோம்..நாங்க முயல் குட்டிய கூண்டில விட்டுட்டு அவன் கூட கிளம்பினோம்..வீட்ல கூட எங்க போறோம்னு சொல்லல..

***

அன்னிக்கின்னு பாத்து வெயிலு கொளுத்துச்சு பாத்துக்க..ஓ அந்த வெயில்ல தான் நீ கருப்பாயிட்டயோ..ஆமா இவரு பெரிய சிவப்புன்னு நினைப்பு..டேவிட் தான் லீடர்..அவனுக்கு தான் வழி தெரியும்..மலையாளமும் தெரியும்..நான், குட்டன்,அக்கா எல்லாரும் போனோம்..வழி பூராம் தார் ரோட்டுக்கு அந்தப்பக்கமும் இந்தப்பக்கமும் ஒரே மரம்…என்னது ஒரு மரம் தானா? ஒரேஏஏஏஏஏஏஏ மரமா இருந்துச்சு..என்ன மரம் தெரியுமா? தெரியாது..ஐயோ அவ்ளோ அழகா இருக்கும்..அது செடி மாதிரியும் இருக்காது..மரம் மாதிரியும் இருக்காது..செடிமரம்னு வெச்சுக்க..ம்ம்..சரி வெச்சுக்கறேன்..இலை எப்படி தெரியுமா இருக்கும்? நடுவுல ஒரு வெயின் மாதிரி, மீனுக்கு இருக்கும்ல நடுவுல எலும்பு..நல்லா திம்பா போல தெரியுதே..எலும்பு மாதிரி இருக்கும்..அதுல இருந்து இந்தப்பக்கமும் அந்தப்பக்கமும் அடர்த்தியா நெருக்கமா ரொம்ப மெல்லிசா நீளமா பச்சை பச்சையா இலை இருக்கும்..மரம் பூராம் அந்த இலை தான் இருக்கும்..அடர்த்தியா…பாக்கவே அவ்ளோ அழகா இருக்கும்…ரோட்டுக்கு இந்தப்பக்கமும் அந்தப்பக்கமும் டீ எஸ்டேட் இருக்கும்..அங்க லைன்ஸ்மார் எல்லாம் தேயிலை பரிச்சிட்டு இருப்பாங்க…

***

லைன்ஸ்மாருங்களா? அது என்ன லைன்ஸ்மாருங்க? ஹா ஹா அது ஒரு விசித்திரமான பேரு..எனக்கே அத யாரவது சொல்லக்கேட்டா சிரிப்பு வரும்…லைன்ஸ்மாருங்கன்னா லைன் வீட்டில குடியிருக்கவங்கன்னு அர்த்தம்..அவங்க தோட்டத்தில வேலை செய்யறவங்க..லைனா அவங்க வீடு இருக்கும்..பூராம் மஞ்சள் பெயின்ட் அடிச்சிருக்கும் தெரியுமா..பாக்கறதுக்கு ஒரே மாதிரி சின்னச்சின்னதா அழகா இருக்கும்..அங்க குடியிருக்கவங்களத்தான் லைன்ஸ்மாருங்கன்னு சொல்லுவாங்க..ஆனா எனக்கு அந்தப் பேரு பிடிக்கவே பிடிக்காது..அது என்ன இங்கிலீஸ¤ம் தமிழும் கலந்த பேரு..ஒன்னு இங்கிலீஷ்ல சொல்லனும் இல்லைன்னா தமிழ்ல சொல்லனும்..சை..நான் மெட்ராஸ்க்கு வந்ததுக்கப்புறம் இதே போல ஒரு வார்த்தை கேட்டேன்..இன்ன வரைக்கும் அந்த வார்த்தை கேக்கறப்பவெல்லாம் எனக்கு சிரிப்பா வரும்..என்ன வார்த்தைடி? அரஅவரு.. எவரு அவரு? ச்சி..லூஸ¥..அரை ஹவர்..half an hour அப்படிங்கறததான் இப்படி சுருக்கிட்டானுங்க..

***

ரொம்ப தூரம் நடந்தோம்..டேவிட் இந்தா வந்திருச்சு இந்தா வந்திருச்சுன்னே எங்கள ரொம்பதூரம் நடக்கவெச்சிட்டான்..உனக்கு ஒன்னு தெரியுமா? நடுவுல சுடுகாடு ஒன்னு இருந்துச்சு..ஐயோ நான் சொல்லல..எனக்கு பயமா இருக்குடா…சொல்லுடி..இல்ல நான் சொல்லல..அந்த லூசுங்களுக்கு பேய்க்கதை சொல்றதுக்கு வேற நேரமே கிடைக்கலையா? அப்ப போய் சொல்லுச்சுங்க..ரோட்ல யாருமே இல்ல.. ரோட்டுக்கு சைட்ல சமாதி சமாதியா இருந்துச்சு..மேல சிலுவை.. எனக்கு பயமா போயிருச்சு..நான் சைடு பக்கமே திரும்பல..கைய இருக்கமா மூடிக்கிட்டு வேகவேகமா அவங்க கூடவே நடந்தேன்..திடீர்னு என்ன பண்ணுச்சுங்க தெரியுமா..என்ன விட்டுட்டு திடுதிடுன்னு ஓட ஆரம்பிச்சிருச்சுங்க..நான் அலறி அடிச்சுக்கிட்டு பின்னாலையே ஓடினேன்..

***

கொஞ்ச நேரம் கழிச்சு அதோ அங்கதான் யான செத்துக்கெடக்குன்னு காமிச்சான் டேவிட். அங்க கொஞ்சம் கூட்டமா இருந்துச்சு..எனக்கு என்னவோ மாதிரி ஆகிடுச்சு..நடந்து வந்த டயர்ட் வேற..வந்திருக்கவே கூடாதோன்னு தோணிச்சு..அங்க கொஞ்சம் பேர் நின்னுட்டிருந்தாங்க..எல்லாம் ஒல்லியா..கைலியும் பனியனும் போட்டுட்டு..யாரும் டேவிட் அளவுக்கு குண்டு இல்ல..ஐயாமாரு வீட்டு பிள்ளைங்களான்னு அவுங்க கேட்டாங்க..நான் யானையப் பாக்கவே இல்ல கொஞ்ச நேரம் வரைக்கும்..யானையத் தவிர வேற எல்லா இடத்தையும் பாத்திட்டிருந்தேன்..யூக்கலிப்டஸ் மரம்..அதோட ஸ்மெல்..உன்னி செடி..உன்னிப் பூ..ஆனா அத்தன ஸ்மலையும் தாண்டி ஒரு வேண்டாத ஸ்மல் அந்த இடத்தில் இருக்குற மாதிரி இருந்துச்சு..

***

யானையப் பாக்க பாவமா இருந்துச்சு தெரியுமா..தந்தமே இல்லை..யானை அவ்ளோ பெருசா இருந்துச்சு..துதிக்கை நல்லா சுருண்டு இருந்துச்சு..அதோட உடம்பு சைஸ¤க்கு துதிக்கை ரொம்ப சிறுசா தோனிச்சு..கண்ணு பளிச்சுன்னு திறந்திருந்துச்சு.. அதுல பூராம் ஈயா மொச்சிக்கிட்டு இருந்துச்சு..வாய்க்கு பக்கமும் ஈயா இருந்துச்சு..தந்தம் இருந்திருக்க வேண்டிய இடத்துல இன்னும் அதிகமா ஈ இருந்துச்சு..யானை அப்படியே ஹான்னு படுத்திருந்துச்சு..கால் நகம் எல்லாம் ரொம்ப பெரிசா இருந்துச்சு..தோல் நாங்க நடந்து வந்த தார் ரோடு மாதிரி கரடு முரடா இருந்துச்சு..ஏதேதோ பறவை சத்தம் கேட்டிட்டே இருந்துச்சு..கொஞ்சம் ஒரு மாதிரிதான் இருந்தது அந்த இடமே..யானை செத்து கிடந்த அந்த இடத்துக்கு பக்கத்தில அங்கிருந்த ஆட்கள் சிலர் பெரிய குழி தோண்டிட்டு இருந்தாங்க..நான் டேவிட் கிட்ட இந்த யானைய அந்த குழில போடுவாங்களான்னு கேட்டேன்..ஆமா பின்ன உன்னையா போடுவாங்கன்னு கேட்டான்..எவ்ளோ திமிர் அவனுக்கு..எப்படி தூக்குவாங்க அவ்ளோ பெரிய யானையன்னு நான் யோசிச்சிக்கிடே வந்தேன்..அவன் கிட்ட கேக்கல..அந்த திமிர் பிடிச்சவன் கிட்ட கேக்கனுங்கற அவசியம் இல்லன்னு நினைச்சுக்கிட்டேன்..இப்ப நினைச்சா சிரிப்பா வருது..

***

வரும்போது இன்னும் வெயில் ஜாஸ்திஆகிடுச்சு..எங்களால நடக்கவே முடியல..டேவிட் மட்டும் ஜாலியா இருந்தான்..குட்டன் தண்ணி வேணும் தண்ணிவேனும்னு வர்ற வழி எல்லாம் கேட்டுக்கிட்டே வந்தான்..சின்ன பையன் இல்லையா..அவன் எத்தனாப்புடி படிச்சான்? ம்ம்..அஞ்சாவதுன்னு நினைக்கிறேன்..ஆமா நீ ரொம்ப பெரிய பிள்ளையா இருந்தியாக்கும்? நாங்களும் எங்கயாச்சும் பைப் இருக்கான்னு தேடிகிட்டே இருந்தோம்..இல்லவே இல்ல..அவன் தண்ணி தண்ணின்னு கேக்கறதப் பாத்ததும் எனக்கும் தண்ணி தவிக்க ஆரம்பிச்சிடுச்சு..ஆனா வர்ற வழி எல்லாம் உன்னி பூ நிறைய இருந்தது..நீ உன்னிப்பூ பாத்திருக்கையா? இல்லையேடி.. அவ்ளோ க்யூட்டா இருக்கும்..குட்டி குட்டியா சிவப்பு கலர்ல பூ எல்லாம் ஒரே இடத்துல குவிஞ்சு அழகா ஒரே பூவா இருக்கும்..பூ வெளில சிவப்பு கலர்ல இருக்கும்..நடுவில மஞ்சள் கலரில இருக்கும்..சூப்பரா இருக்கும்..அதுல உன்னிப்பழம் கூட இருக்கும் தெரியுமா? ரொம்ப டேஸ்டா இருக்கும்..நம்ப குட்டித்தக்காளி இருக்கும்ல அது மாதிரி இருக்கும்..குட்டன் புலம்பல் ரொம்ப ஜாஸ்தி ஆகிடுச்சு..

***

ஒரு வழியா தேயிலை பறிச்சுக்கிட்டு இருந்த லைன்ஸ்மாருங்கல பாத்துட்டோம்..எவ்ளோ அழகா பறிப்பாங்க தெரியுமா? சிஸர்ஸ் மாதிரி ஒன்ன வெச்சுக்கிட்டு..கச்சக் கச்சக் கச்சக்ன்னு..எப்படிடி? ம்ம்..கச்சக் கச்சக் கச்சக்ன்னு..ஹ்..ஹா..ஹ்..ஹா..ஹா.ரொம்ப சிரிக்காதடா..பல்லு சுழிச்சுக்கப் போகுது..ம்ம்..அது சிஸர்ஸ் மாதிரி ஒரு பக்கம் தான் இருக்கும்..இன்னொரு சைட் வெட்டின இலைகள சேகரிக்கிற பை மாதிரி இருக்கும்..டப் டப்ன்னு வெட்டிட்டு..பின்னால தோள்ல போட்டிருக்கற பைல ஸ்டைல ரஜினி சிகரட்ட தூக்கிப்போடற மாதிரி போடுவாங்க..அதுவும் சிகரெட் கரெக்டா போய் உக்கார்ற மாதிரி பின்னால பையில போய் விழும்..எனக்கென்னவோ அவங்கள பாக்கும் போது கங்காருவோட ரிவர்ஸ் சைட் மாதிரி இருக்கும்..அழகா…வரிசையா நடந்து போவாங்க..

***

லைன்ஸ்காரங்க கிட்ட தண்ணி இருந்துச்சு..நான் டேவிட் அக்கா மூனு பேரும் தண்ணி நல்லா குடிச்சுக்கிட்டோம்..அந்த குட்டன் பயல் மட்டும் குடிக்கவேயில்ல தெரியுமா? அக்சுவலா அவன் தான் தண்ணி தண்ணின்னு கேட்டுட்டே வந்தான்..அவன் புலம்பல் தாங்க மாட்டாம தான் நாங்க லைன்ஸ்மாருங்க கிட்ட கேட்டோம்..அவன் கடைசிவரைக்கும் குடிக்கவேயில்ல..அவன் முகம் ஏதோ கோபமா இருக்குற மாதிரியே இருந்துச்சு..திக்கி திக்கி வேணாம் வேணாம்னு சொன்னான்..அவன் அண்ணன் டேவிட் குடிச்சான்..அப்பக்கூட அவன் கையப்புடிச்சு இழுத்து..எதோ திக்கி திக்கி சொன்னான்..அவன் பேசாம இருடா..அப்படியெல்லாம் சொல்லக்கூடாதுன்னு சொன்னான்..நான் என்னன்னு கேட்டேன்..சொல்லமாட்டேன்னுட்டான்..எனக்கு கோபம் கோபமா வந்திருச்சு..டேய் தண்ணி கேட்டலடா..தண்ணி கொடுக்கறாங்கல்லடா..வாங்கி குடிக்கவேண்டியதுதானடான்னு கேட்டேன்..நான் குடிக்கமாட்டேன்னு பிடிவாதமா இருந்துட்டான்..தலைய இங்கிட்டும் அங்கிட்டும் ஆட்டிக்கிட்டு அவன் அண்ணன முறைச்சுக்கிட்டு இருந்தான்..

***

அதுக்கப்புறம் அண்ணனும் தம்பியும் பேசிக்கவேயில்ல..குட்டன் ஏனோ எங்க பக்கதுலையே வர மாட்டென்னுட்டான்..உர்ன்னு வந்தான்..எங்களால நடக்கவேமுடியல..டேவிட்டுக்கு தான் மலையாளம் தெரியுமே..அவன்..அந்தப்பக்கம் போன டிராக்டர் ஒன்ன கை காமிச்சு ஏதோ அவிட இவிடன்னு பேசி எங்கள ஏத்திவிட்டுட்டான்..டிராக்டர்ல உக்காந்துட்டு வீடு வந்து சேர்ந்தோம்.. இனிமே இது மாதிரி யான செத்துச்சு..பூன செத்துச்சுன்னு பாக்க போகக்கூடாதுன்னு முடிவு செஞ்சோம்…

***

அவ்ளோ தான் கத. டேய்.. டேய்..தூங்கிட்டியா..ஸ்டுபிட்..
சரி தூங்குமூஞ்சி போய் தூங்கு….ம்ம்ம்ம்..என்னடா யோசிக்கற?
ம்ம்ம்..குட்டனப் பத்திதான்..

ஆமா அது என்ன ஹிந்திப்படம்டி? தீபாவளிக்கு துணி எடுத்தாச்சா? சொல்லுடி..
அடப்பாவி இன்னும் நீ கண்டுபிடிகக்லையா? டியூப் லைட்டா நீ.
தில்வாலே துல்கானியா லேஜாயேங்கே..அதுதான் தீவாளிக்கு துணி எடுத்தாச்சா!

ஒகே பை. தூங்கு. குட் நைட். குட் நைட்.

**

(நைட் ரொம்பநேரம் கண்ணுமுழிச்சு தன் ·பியான்ஸியுடன் பேசிக்கிட்டிருந்த அவன், அவள் கதை சொன்ன போது கீழே வரும் இந்த இடத்தில் மட்டும் தூங்கிவிட்டான்:)

குட்டன் ஏன் தண்ணி குடிக்கல தெரியுமா? எனக்கு அதுக்கப்புறம் தான் தெரியும்..டேவிட் சொன்னான்..நாங்க ரொம்ப அதட்டி கேட்டதுக்கப்புறம்..ஆட்டைக்கு சேத்துக்கமாட்டோம்டான்னு சொன்னதுக்கப்புறம் தான் அவனே சொன்னான்..எங்களுக்கு கோபம் கோபமா வந்துச்சு..எவ்ளோ திமிர் அந்த குட்டன் பயலுக்கு..இந்த வயசில அவனுக்கு எப்படி இதெல்லாம் தெரிஞ்சதுன்னு இப்போ நான் யோசிக்கறேன்..

இப்போ நான் குட்டனப் பாத்தேனா சப்பு சப்புன்னு நாலு அறை அவனுக்கு கொடுப்பேன்..ஏன்டா அவங்ககிட்ட தண்ணி வாங்கிக்குடிச்சா எந்தப்பக்கம்டா குறஞ்சு போயிடுவன்னு..

ஆனா அவன் சொல்லிருக்கான் : ஒரு ஆபிஸர் வீட்டு பையன், எப்படி லைன்ஸ்மாருங்க கிட்ட தண்ணி வாங்கிக்குடிக்கிறது?

***