PlayList : Muthu’s Most Wanted

சென்னை 600028-ல உன் பார்வை மேலே பட்டால் நான் தூசியாகின்றேன் பாட்டு கேட்டிங்களா? விஜய் யேசுதாஸ் பாடியது. இப்போ அது தான் என்னோட ·பேவரிட் சாங். அப்புறம் உன்னாலே உன்னாலே , ஜூன் போனா ஜூலை from உன்னாலே உன்னாலே. எஸ்பிபி, சித்ரா பாடிய யாரோ யாருக்குள் இங்கு யாரோ யுவனின் வாய்ஸ் எனக்கு எப்பவுமே பிடிக்கும். so, அவரது வாய்ஸ்க்காக வேர்ல்ட் கப்ப ஜெயிக்கப்போறோம்

அப்புறம் that seducing voice ஒ ஓ என்னன்னமோ பண்ணுது பண்ணுது யார் பாடியது என்று பார்த்தேன். அனுஷ்கா. இந்தக்காவா? ஆனா உடம்பை ஏன் “உடும்பு” என்று சொல்கிறார்? உடும்பு செய்யுது இம்சைன்னு சொல்றார். அதுவும் கூட நல்லாத்தான் இருக்கு. (ஓவர் ஜொள்ளுடா!).

உன் சிரிப்பினில் உனக்குள் நான் from பச்சைக்கிளி முத்துச்சரம்.

அப்புறம் என்ன பாட்டு? ம்ம்.. அறியாத வயசு from பருத்திவீரன். ராஜா ராஜா தான். சிலருக்கு அவர் வாய்ஸ் பிடிக்காது. ஆனால் சில girls seductive என்று சொல்லக்கேள்விப்பட்டிருக்கிறேன். அதுவும் இந்தப்பாட்ல first stanza முடிஞ்சப்புறம் மறுபடியும் “அறியாத வயசு” ன்னு அடித்தொண்டையில பாடுவாரு பாருங்க. சூப்பர்.

அப்புறம் ஸ்ரீநிவாஸ் பாடிய மௌனமே உன்னிடம் அந்த மௌனம் தானே அழகு பாடல் from மொழி. வித்யாசாகர் எப்படினாலும் வருஷத்துக்கு பத்து சூப்பர் மெலடி கொடுத்தரார். அதே படத்தில் சுஜாதா பாடிய காற்றின் மொழியே பாடல். அப்புறம் நெஞ்சிருக்கும் வரையிலிருந்து பாம்பே ஜெயஸ்ரீயும், விஜய்யேசுதாசும் பாடிய பிடிச்சிருக்கு பிடிச்சுருக்கு

போக்கிரியிலிருந்து சுசித்ரா பாடிய டோலு டோலு தான் . நீ முத்தமொன்று கொடுத்தால்

அடுத்த பாட்டு கொஞ்சம் பழசு தான் ஆனாலும் என் லிஸ்ட்ல எப்படியோ இன்னும் இருக்கு. யுவன் பாடிய ஏதேதோ எண்ணங்கள் வந்து கண்ணை விட்டு கண் இமைகள் from பட்டியல். ஐ லைக் யுவன்ஸ் வாய்ஸ். இப்போ girls voice-ல எனக்கு பிடிச்சது. ஷ்ரேயா கோஷல். அடேங்கப்பா. கொஞ்சல்ஸ் வாய்ஸ். ஒரு முறை எனக்கு பிடித்தபாடல் கேட்டுப்பாருங்கள்.

அப்புறம் வந்துட்டாருய்யா நம்ப தலை. சூரியனோ சந்திரனோ from சிவாஜி. எஸ்பிபி still rocks.

உன் பார்வையில் பைத்தியமானேன் from சம்திங் சம்திங் உனக்கும் எனக்கும்.

தாமிரபரணியில் கருப்பான கையால முதல்ல கேக்கும்போது பிடிக்கல. ஆனா வீடியோவில பாக்கும் போது பானுவோட dance steps பிடிச்சிருந்தது. அதுவும் முதல் step. பானுவோட ஸ்டெப்ஸ் பாத்ததுக்கு அப்புறமும் பாட்டு பிடிக்காம போயிருமா என்ன? விஷாலும் நல்லாவே ஆடியிருந்தார். ஒரு சிரிப்பு சிரிப்பாரே, நல்லாயிருந்துச்சு.

இந்தப்பாட்டு கேட்டிருக்கீங்களான்னு தெரியல. வாத்தியார்ன்னு ஒரு படம் வந்துச்சு தெரியுமா? நம்ப ஆக்ஷன் கிங் அர்ஜுன் நடிச்சது. அதுல ஒரு நல்ல பாட்டு இருக்கு.
எங்கோ பாத்திருக்கிறேன் இமான் பாடியிருக்கிறார்.

கடைசியா: அதிரடிக்காரன் மச்சான் மச்சான் மச்சான் டேய் from சிவாஜி. ரஹ்மானே பாடியிருக்கார். பில்லா ரங்கா பாஷா தான். ரஹ்மான் பாடிய பாட்டு சூப்பர்தான். 🙂

எப்போ என்ன பாட்டு கேட்டாலும், தூங்கறப்போ இளையராஜா இல்லீனா சீர்காழி தான். சில சமயம் ரொம்ப பயமா இருந்துச்சுன்னா, லைக் அன்னைக்கு exorcism of emily rose பாத்ததுக்கு அப்புறம் நைட் ரொம்ப பயமாபோயிருச்சு, “மண்ணானாலும் திருச்செந்தூரில் மண்ணாவேன்” தான். 🙂

ரொம்ப தலைவலி!

னக்கு சனிக்கிழமை ரொம்ப தலைவலி. வீடு வேற மாத்தறமா, நிறைய வேலை வேற. க்ளீனிங். பேக்கிங். புத்தகங்களப் பேக் பண்றதுக்கு தான் கொஞ்சம் நேரம் பிடிச்சது. நல்லா ரெண்டு அட்டைப்பெட்டி வாங்கி உள்ள அடச்சுட்டேன். மதியம் சாப்பிடப்போறதுக்கு சாயங்காலம் நாலு மணி ஆயிடுச்சு. போய் க்ராப் ஒரு புடி பிடிச்சேன். அதுவும் இனியவன் சூப்பரோ சூப்பர். அஞ்சப்பர் மாதிரி காஸ்ட்லி கிடையாது ஆனால் அஞ்சப்பரை விட நல்ல டேஸ்ட் இருக்கு. (அஞ்சப்பர் மற்றும் இனியவன், இவங்க ரெண்டு பேரும் யாருப்பான்னு அப்பாவியா கேக்குற அம்மாஞ்சிகளுக்கு. இவை ரெண்டும் லிட்டில் இந்தியாவிலிருக்கும் உணவகங்கள்) சாப்பிட்டுட்டு நாலு டீவிடி வாங்கினேன். இதே வேலையாப்போச்சு. ஒன்னு புத்தகம் இல்லீன்னா டீவிடி. ஆனாஎன்னக்கேட்டா புத்தகத்த விட டிவிடி பெட்டர். டிவிடிய கண்டிப்பா பாத்திருவோம். புத்தகம்? என்கிட்ட எத்தன புத்தகம் இருக்கு தெரியுமா இன்னும் டச் கூட பண்ணாம? (வாங்கினப்ப டச் பண்ணியிருப்பல்ல? ஏன் இப்படி பீலா விடறன்னு கேக்குற அதிமேதாவிகளுக்கு: இன்னும் தாங்க்ஸ் பேஜ் கூட படிக்காம அப்படியே வைத்திருக்கிற புத்தகங்கள்)இந்த தடவ பேக் பண்றப்போதாதான் இன்னும் எத்தனி புத்தகம் படிக்கனும்டா நீன்னு கேட்டுக்கிட்டேன். (இப்போ விஜய் டீவியில யார் மனசுல யாரு ஓடிட்டிருக்கு. அதில கலந்துக்க வந்த ஒருத்தர்ட்ட நம்ப க்ராண்ட் மாஸ்டர் உங்களுக்கு பாடத்தெரியுமான்னு கேட்டுத்தொலச்சுட்டார். கலந்துக்க வந்தவர் இது தான்டா சான்ஸ்ன்னு ஆமா ஆமான்னு பாட (சாரி. பேச) ஆரம்பிச்சார். கவிதைகள் சொல்லவா உன் பெயர் சொல்லவா பாடல். கண்றாவி. இவென் கவலையே படறதில்ல. நாலு பேரு சாவறாங்கன்னு கவலையே படறதில்லன்னு பொலம்பினான். எதுனாச்சும் தெரியுமான்னு புரோகிராம் நடத்துறவர் கேட்டா, இல்லீங்ணா ஒன்னும் தெரியாதுங்ணான்னு சொல்லி தப்பிக்கலாம்ல. எங்கள ஏன் படுத்தறீங்க?)

நான் சொல்ல வந்ததே வேற. அன்னக்கி சனிக்கிழமை சாயங்காலம் க்ராப் கிராப் எல்லாம் சாப்ட்டு முடிச்சிட்டு வீட்டுக்கு வந்தா செம தலைவலி. பேசாம தூங்கிடலாமன்னு யோசிச்சேன். ஆனா சும்மாவே நமக்கு ராத்திரி தூக்கம்வரமாட்டேங்குது. (இத நான் சொல்லனும்ங்கற அவசியம் கிடையாது. ஏன்னா இது எல்லா ப்ளாக்கர்ஸ்க்கும் இருக்கற ஒரு காமன் charaச்ter. தூக்கம் வருதுன்னா நாங்க ஏன்யா post போடப்போறோம்?) இதுல சாயங்கலம் தூங்கினா கண்டிப்பா சிவராத்திரி தான். அதுவும் இந்த வீட்ல தனியா முழிச்சிருக்கறது கஷ்டம். அதுவும் நாளைக்கு காலி பண்றோம். கடைசி நாள் இன்னிக்காவது முத்துகிட்ட பேசுவோம்ன்னு பண்ணென்டு மணிக்கு நடமாடறவைங்க அப்ரோச் பண்ணாய்ங்கன்னு வெச்சுக்கோங்க என்ன பன்றது. இதுல The Exorcism Of Emily Rose படத்துல பண்ணென்டு மணிக்கு கெடியாதுமே, மூனு மணிக்கு தாமே அவிங்கல்லாம் கெளம்புவாய்ங்கன்னு சொன்னாய்ங்க. அன்னிக்கிருந்து காலையில பிஸ் அடிக்க கூட எழுந்திருக்கறதில்ல. சைனீஸ் பேய்க எல்லாம் எத்தன மணிக்கு கெளம்புதுகளோ யாருகண்டா? இந்த The Exorcism Of Emily Rose, சும்மா சொல்லக்கூடாது ரெண்டு மூனு இடத்துல ரொம்ப பயமாப் போச்சு. Emily Rose தங்கை நடு ராத்திரி அக்காவோட ரூம்ல ஏதோ சத்தம் கேக்குத்துன்னு மெதுவா மெதுவா வந்து Emily Emilyன்னு ஸ்வீட்டான வாய்ஸ்ல கூப்பிடறப்போ அது சுவரு பூராம் நகத்தால கீறி ஒரு சவுண்டு கொடுக்கும் பாருங்க அடேயப்பா. அதுக்கப்புறம் exorcism பண்றப்போ. அதுக்கப்புறம் Emilyயோட பாய் ப்ரண்ட் அவளோட ரும்ல இருந்துட்டு டுபாக்கூர் நல்லா தூங்கிடுவான். அப்புறம் கொஞ்ச நேரம் கழிச்சு எங்கடா emilyய காணோம்னு மெதுவா திரும்பி பாப்பான் பாருங்க: emily Z மாதிரி வளஞ்சு வளஞ்சு படுத்து முகத்த மட்டும் அவன நோக்கி திருப்பி கண்ண தொறந்தமாதிரி இருப்பாபாருங்க, ஒரு நிமிஷம் நடுங்கிடுச்சு.

என்ன சொல்லவந்தேன்? ம்ம்ம்..அன்னக்கி சனிக்கிழமை சாயங்காலம் செம தலவலி, தூங்கிடலாம்னு நெனச்சு பின்ன வேணாம்னு முடிவு செஞ்சேன். வாங்கிட்டு வந்திருக்கற படங்கள்ள ஏதாவது ஒன்ன கொஞ்ச நேரம் பாத்துட்டு அப்புறம் தூங்கிடலாம்னு நெனச்சேன். வாங்கின படங்கள் : மொழி, அழகிய தீயே, கண்ட நாள் முதல் அப்புறம் பச்சைக்கிளி முத்துச்சரம். இதுல நாலையுமே நான் பாத்திட்டேன். ஆனா நாலு படங்களும் எனக்கு ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப பிடிக்கும். எத்தன தடவ வேணும்னாலும் பாக்கலாம். இந்த நாலில் எனக்கு பிடிச்சது மொதல்ல, கண்ட நாள் முதல். பிரசண்ணா எனக்கு பிடிக்கும். ஆனா இந்த படத்தில் ஸ்பெஷல் லைலா தான். பிரசன்ன கூட(just friends) பைக்ல போகும் போது, அவளோட மானேஜர் அந்த வழியா கார்ல வருவார். லைலா பிரசன்னாகிட்ட அந்த மானேஜர் தொல்ல தாங்கமுடியல ஓவர் ஜொல்லுன்னு போட்டுக்கொடுத்திடுவா. பிரசண்ணா உடனே பைக்க விட்டு இறங்கி மானேஜர்கூட கார்ல ஏறிட்டு வழியெல்லாம் அவர அடிச்சு தொவச்சு கிளம்புன இடத்துக்கே கொண்டுவருவார். வந்தஉடனே அந்த மானேஜர் லைலாகிட்ட மன்னிப்பு கேப்பார். அவர் போனப்பிறகு லைலா பிரசன்னாவ கட்டிக்குவா. இனிமே நான் வேலைக்குப்போகலன்னு க்யூட்டா முகத்தவெச்சுகிட்டு சொல்லுவா பாருங்க.ஹ¤ம்ம்ம். அப்புறம் ஒரு நாள் லைலா வீட்ல கோபமா ரூம்ல கதவசாத்திக்கிட்டு வெளிலவராம இருப்பா, யார் யாரோ வந்து கதவதட்டுவாங்க திறக்கமாட்டா, அப்பத்தான் நம்ப ஹீரோ ப்ரசண்ணா வருவார். வந்து ஹலோ லைலா நான் ப்ரசண்ணா வந்திருக்கேன் கதவதிற என்பார். உடனே கதவு திறக்கப்படும். லைலா வெளில வந்து : ப்ரசன்னா என்ன பெரிய இவனா? அவன் தட்டுனா திறக்கனுமா? முடியாது போடா என்பார். செம க்யூட். இது மாதிரி அந்த படம் முழுக்க கடைசியில லைலா பிரசன்னாவுக்கு ஒரு slap கொடுக்கறவரைக்கு க்யூட் தான். ஐ லவ் திஸ் மூவி.

பச்சைக்கிளி முத்துச்சரம் ஒரு தைரியமான அப்ரோச். ஆனா நிறைய ஆங்கில படங்கள் இதே போல இருக்கு. லைக் derailed அப்புறம் out of time. ஆனா தமிழ்ல இது கொஞ்சம் புதுசு. ஹீரோ திரைக்கு பின்னால என்ன கூத்தடிச்சாலும் திரையில் நல்லவராகத்தான் வருவார். அதுவும் நம்ப சரத்குமார் மாதிரி சுப்ரீம் ஹீரோஸ் கேக்கவே வேணாம். ரொம்ப ரொம்ப நல்ல ரொல்ல தான் நடிப்பாரு. ஆனா இந்த படத்துல வர்றது போல சம்பவங்கள் நடக்காமலா இருக்கு. ரொம்ப நாளைக்கு முன்ன ஜீவில படிச்ச ஒரு நியூஸ். ஈஸ்ட் கோஸ்ட் ரோட்ல ஒரு தடவ ஒரு ஜோடி நைட் ரொம்ப லேட்டா பைக்ல ஊருக்கு திரும்பி வந்திட்டு இருந்திருக்காங்க. போலீஸ் போஸ்ட் அவங்கள் நிறுத்தியிருக்காங்க. பாத்தா அந்த பொண்ணு முகம் முழுதும் காயம். அப்புறம் கையெல்லாம் கூட. சுடி கிழிஞ்சிருக்கு. போலீஸ் என்ன நடந்துச்சுன்னு எத்தனதடவ கேட்டும் பதில் சொல்ல மாட்டேன்டுருச்சுக. அப்புறம் போலீசு நீங்க இப்படி மவுனமா இருந்தா நாங்க எப்படித்தான் அவிங்கள புடிக்கறதுன்னு வருத்தப்பட்டு கேட்டபிறகு தான் அவிங்க சொன்னாய்கலாம்: இவன் என்னோட மனைவி இல்ல. என்னோட கலீக். வெளில தெரிஞ்சா இவளோட வீட்டுக்காரனும் என்னோட வீட்டுக்காரம்மாவும் எங்கள டைவர்ஸ் பண்ணிடுவாங்க. so, உலகத்தில எல்லாமே நடக்குது இல்லீங்கல. ஆனா அத தைரியமா கதையா சொல்றப்போதான் அந்த சம்பவங்கள் எல்லார் கண்லயும் படுது. எல்லாரும் உஷார் ஆவறதுக்கு ஒரு சந்தர்ப்பம். அதுவும் பெரிய ஹீரோ ஹீரோயின் நடிக்கறப்போ ஒரு effect இருக்கு இல்லியா? கடைசி பைட் தேவையில்லதான். ( விஜய் டீவியில காத்து கருப்பு ஓடிட்டு இருக்கு. ஒரு சில சமயங்களில் தனியா உக்காந்து பாத்தம்னா இது கூட கொஞ்சம் பயமாத்தான் இருக்கு!)

என் ப்ரண்ட் ஒருத்தன் (கோனபாட்டில் கோவிந்தன்) மொழி படத்த எப்படியாச்சும் பாத்துப்புடனும்னு ரெண்டு தடவ யூசூன் வரைக்கும் போனான். ஒரு தடவ 300 பாத்திட்டு வந்தான். இன்னொரு தடவ வேற ஏதோ படத்த பாத்திட்டு வந்தான். ரெண்டு தடவையும் நான் எஸ்கேப். என்னோட சாபம் தான் அவனுக்கு டிக்கெட் கிடைக்கலன்னு சொல்லிட்டிருந்தான். முஸ்தபால மொழி சிடிய பாத்தானா விடுவானா? வாங்கிட்டான். அன்னைக்கே பாத்துட்டோம். வேற வேலை? ஆனா நல்ல படம் தான். சில டுபாக்கூர் படங்களுக்கு மூனு மணிநேரம் செலவழிக்கறதுக்கு இது எவ்வளவோ பெட்டர். ரொம்ப நல்ல படம்ங்க. ஆனா எனக்கு ப்ருத்திவிராஜை பிடிக்காது. கனா கண்டேன்ல அவர எனக்கு பிடிச்சிருந்தது. ஆனா பாரிஜாதம்ல அவ்வளவா பிடிக்கல. (உனக்கு பிடிச்சா என்ன பிடிக்காட்டி என்ன மேட்டருக்கு வா!) ப்ரகாஷ்ராஜ் வரவர பின்னி எடுக்கறார். அந்த காக்ரோச்ச எங்க அட்மிட் பண்ணியிருக்கீங்கன்னு கேக்கறப்போ குபீர் சிரிப்பு. ஜோதிகா தான் ஹீரோ. ஹீரோ ஹீரோ ஹீராதி ஹீரோ. ஜோதிகா உங்க யார் கிட்டயும் இல்லாத மொழி ஒன்னு என்கிட்ட இருக்கு அது மௌனம்னு சொல்றப்போவும், பிருத்திவ், ஜோதிகாவுக்கு இசையை உணர கற்றுத்தரும் போதும் க்ளைமாக்ஸிலும் அட்டகாசம். க்ளைமாக்ஸில் ஜோதிகா ரோஸ் நிறப்புடவையில் அட்டகாசமாக இருந்தார். சூர்யா ஒழிக.

என்னப்பா சொல்ல வந்தேன்? ம்ம்ம்..அன்னக்கி சனிக்கிழமை சாயங்காலம் என் ப்ரண்ட் மட்டும் வற்புறுத்தலைன்னா அந்த படத்த மிஸ் பண்ணியிருப்பேன். அது சென்னை 600028. ஏற்கனவே அந்த க்ரூப் தயாரித்த உன்னைச் சரணடைந்தேன் பாத்திருக்கறேன். அடிதடி படங்கள் அதிகம் வந்த அந்த காலகட்டத்தில் அந்த படம் ஒரு வித்தியாசமான முயற்சிதான். ஆனா ஓவர் நாடகத்தனன். இங்கிலீஷ்ல இந்த படம் வந்தா Gayன்னு சொல்லிருவாய்ங்க. ஆனா சென்னை 600028 சூப்பரோ சூப்பர். ரொம்ப நாளைக்கு அப்புறம் full படமும் காமெடி. லைக் உள்ளத்தை அள்ளித்தா. ஆனா இந்த காமெடி நேச்சுரல். நாம டெய்லி வாழ்க்கையில் பாக்கறதுதான் ஆனா பெர்பெக்ட்.

க்ளைமாக்ஸ் கூடங்க. பைனல்ல போராடி கப் ஜெயிப்பாய்ங்கன்னு நினச்சா, அத கூட காமெடி பண்ணிட்டாய்ங்க. இளவரசு நானும் ஆடறேன் ஆடறேன்னு சொல்லிட்டேயிருப்பார். கடைசில யாரோ வரலைன்னு, இளவரச ஆடக்கூப்பிடுவார் நம்பாளு (அவர் பேரெல்லாம் மறந்துபோச்சு! ஆனா மொத்தத்தில அவரத்தான் எனக்கு பிடிச்சது). இளவரசு ரொம்ப பீளிங்கா ஏண்டா ஜெயிக்க வேண்டிய மேச்ச என்ன ஆடச்சொல்றீங்க, அர்ணால்டு இருப்பான் அவன ஆடச்சொல்லுங்கன்னு சொல்லுவார். நம்பாளு கொஞ்சநேரம் பாத்துட்டு, சும்மா கேட்டா இவர் ஏன் இப்படி ப்ளீங்கா பேசறார்ன்னு சொல்லுவாரே பாக்கலாம். சீரியஸ கூட காமெடி ஆக்கிட்டாங்க. சின்ன பசங்ககூட பெட்டிங் மேட்ச் போட்டு முப்பத்தி சொச்சம் ரன் அடிச்சுட்டு, பவுலர் கிட்ட டேய் லெக்லையே போடுறா, முப்பது ரன் தான்டா அடிச்சிருக்கோம்னு ரொம்ப பீளிங்கா சொல்றது. (எங்களுக்கு இதே மாதிரி ஒரு அனுபவம் இருக்கு. சென்னையில NGO காலனி க்ரவுண்ட்ல, சின்ன பசங்ககூட ஆடி மொத்தத்துக்கு 12 ரன் தான் அடிச்சோம். அப்புறம் மொதோ ஓவர் நான் தான் போட்டேன். மூனு பால் மூனு ·போர். நாலாவது பாலும் ஒரு ·போர் அடிச்சு ஜெயிச்சாய்ங்க. நல்லவேலையா நாங்க பெட்டிங் எல்லாம் கட்டல.) அப்புறம் க்ரவுண்ட விட்டு ஒருத்தன் வெளில அடிச்சுடுவான். (நம்ப எல்லோரும் rules வெச்சிருப்போம்ல. வெளில அடிச்சா அவுட்டான்னு. அதே மாதிரிதான்). இன்னொருத்தன் பால் எடுக்க சுவரேரி குதிச்சு வெளில ரோட்டுக்கு போகனும். சுவர் வரைக்கும் வேகமாக ஓடி, சுவர் ஏறுவதற்கு முன்னாடி, திரும்பி அடிச்சவன போடா பொறம்போக்குன்னு திட்டிட்டு போவான் பாருங்க. exactly நம்ப பண்ணதுமாதிரிதான். “ஓ ஓ என்னன்னமோ பண்ணுது பண்ணுது” வாய்ஸ் ரொம்ப seducing. அந்த பாட்டுக்கு ஆடுற அம்மணி first introduceஆகும் போதே தெரிஞ்சிடுச்சு அந்த பாட்டு இந்த அம்மணிக்குத்தான்னு. எல்லா பாடலுமே நல்லாயிருக்கு. எனக்கு பிடிச்சது எஸ்.பி.பி “பாடிய யாரோ யாருக்குள் இங்கு யாரோதான்”.

விஜய் டீவில ஜில்லுன்னு ஒரு ஜோடி (அனிதா ஜோடி! அழகிய அசுரா அழகிய அசுரா பாடியவர்) ஓடிட்டிருக்கு. அந்த தம்பதியினரில் மனைவி கணவரைப் காமிச்சு, மமதிகிட்ட, எந்த functionக்கு போனாலும் இவர் லேட்தான்னு சொல்லுவார். அதற்கு மமதி அவர்களைப் பார்த்து, “ஏன் எல்லா functionக்கும் லேட்டாப்போறீங்க, நீங்க ரெண்டு பேரும் dress எங்க பண்ணுவீங்க ஒரே ரூமிலா?” ன்னு கேக்கறார். மமதி நீங்க ஓபராவி·ப்ரே இல்லீங்கோ. அவங்க மமதியின் இடக்கை கண்டுகொள்ளவில்லை. கண்டுகொண்டாலும் பதில்சொல்ல விரும்பவில்லை.

அஜித்துக்கு ஒரு (சீரியஸ்) கதை

சுடரில் நான் எழுதிய அஜீத்துக்கான கதையை(?!) படித்த நிறைய நபர்கள் என்னை திட்டியிருந்தனர். திட்டியவர்களில் என் அண்ணனும் ஒருவர். “முத்து நீ இப்படி செஞ்சிருக்கக் கூடாது. ஒழுங்கா ஒரு சீரியஸ் கதை எழுதியிருக்கவேணும்” என்றார். நான் என்ன பண்ணட்டும் நான் இன்னும் ஆழ்வார் effect லிருந்து மீண்டு வரவில்லை. தவிரவும் நான் கதாசிரியனும் அல்ல. ஏதோ சிறுகதை என்ற பெயரில் ஏதோ எழுதி மக்களை ஏமாற்றிக்கொண்டிருக்கிறேன்:).

சரி கதைக்கு வருவோம். என்கிட்ட அஜீத்துக்கு(எல்லா ரசிகர்களும் அவர்களுடைய ஹீரோக்களுக்கு ஒரு கதை எப்போதுமே ரெடியாக வைத்திருக்கிறார்கள். எனக்கு ரஜினி ஜேம்ஸ்பாண்ட் -ofcourse தமிழில் தான் – கதாப்பாத்திரத்தில் நடிக்கவேண்டும் என்ற ஆசை நீண்ட நாட்களாக உண்டு!) ஒரு கதை இருக்குன்னு சொன்னார் என்னுடைய அண்ணன். சொல்றேன்னு சொல்ல ஆரம்பிச்சார்.

–பார்ட் 1-
அஜித் ஒரு மிகவும் கஷ்டப்படும் குடும்பத்தில் பிறந்தவர். மிகவும் ஏழ்மையான சூழ்நிலையில் வளர்ந்தவர். படித்தவர். ஏதோ ஒரு பேச்சிலர் டிகிரி (BSc Chemistry என்று வைத்துக்கொள்ளுங்களேன்!). வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து கொள்கிறார். வழக்கம் போல வேலை (அல்லது வேலைக்கான வேளை!) வரவில்லை. ஏதேதோ சின்ன சின்ன வேலைகள் கைக்கும் பத்தாமல் வாய்க்கும் பத்தாத சம்பளத்துடன் வேலை செய்கிறார். TNPSC பரிட்சை அல்லது ஏதோ ஒரு கவர்மெண்ட் வேலைக்கான பரிட்சை எழுதி தேர்ச்சிபெறுகிறார். அதிர்ஷ்டவசமாக ஏதும் பணம் கொடுக்காமல் அவருக்கு குமாஸ்தா (அல்லது கிளார்க்) வேலை கிடைத்துவிடுகிறது. வேறொரு ஊரில்.

மாதச் சம்பளம் பிடித்தம் போக கையில் 4500 ரூபாய். லஞ்சம் வாங்க மனமில்லை, வாய்ப்பும் இல்லை. என்ன சம்பளமாக இருந்தாலும் சந்தோஷமாக வேலையில் சேருகிறார். மிகுந்த ஈடுபாட்டுடன் வேலை செய்கிறார். வாழ்க்கை உருண்டோடுகிறது.

–பார்ட் 1 end–

— பார்ட் 2–
ஒரு நாள் செய்தித்தாளை புரட்டிக்கொண்டிருக்கும் போது எட்டாவது ஷீட்டில் ஷ்ரேயா தோன்றும் பம்ப்செட் விளம்பரத்துக்கு கீழே ஒரு பெட்டிச் செய்தியைப் பார்க்கிறார். அந்த செய்தி: பிரபல கலைக்கல்லூரி புரபொசர் : சயன்ஸ் சாமியாண்டி (பேரு பிடிக்கலைன்னா, வேற நல்ல பெயர் நீங்களே வெச்சுக்கங்கப்பா!) காணவில்லை! சாமியாண்டி அஜித்துக்கு பாடம் எடுத்தவர். என்ன பாடம் யூகியுங்கள்: chemistry. correct!

அஜீத் வீட்டுக்கு போன் செய்து அம்மாவிடம் விபரம் கேட்கிறார். அம்மா, ஆமாடா அவரக் காணல எங்க போனார்னு தெரியல்ல. அவங்க மனைவிக்கும் தெரியல. சண்டை கிண்டை ஏதும் கிடையாதாம். கடத்தலா இருக்குமோன்னு போலீஸ் சந்தேகப்படுது என்கிறார்.

அஜீத் அத்துடன் அந்த பிரச்சனையை மறந்து விட்டு தனது கிளார்க் வேலையை தொடருகிறார். மற்றொரு நாள் மற்றொரு கல்லூரியின் chemistry புரபொசர் கடத்தப்படுகிறார். அடுத்த சில நாட்களில் மற்றொரு புரபொசர். இப்படி பத்து புரபொசர்கள்.

கதையை இங்கே நிறுத்தி விட்டு, என் அண்ணன் அதுக்கப்புறம் யோசிக்கனும் என்றார். என்னத்த யோசிக்கறது. முடிச்சறவேண்டியது தான? அவர்களை கடத்தியது ஒரு தீவிரவாத கும்பல். அவர்கள் கடத்தப்பட்ட கெமிஸ்ட்ரி புரபொசர்களை வைத்து மிக அதி நவீனமான வெடிகுண்டு ஒன்றை தயாரிக்கிறார்கள். அஜீத் தீவிரவாத கும்பலைக் கண்டுபிடித்து அழித்து புரொபொசர்களை மீட்டுக்கொண்டு வருகிறார். (புரொபசர்கள் மீண்டும் கல்லூரிக்கு வந்து வழக்கத்தை விட அதிகமாக மொக்க போட ஆரம்பிக்கிறார்கள். மாணவர்கள் கொலை வெறியுடன் அஜித்தை தேடுவது இரண்டாம் பாகமாக எடுத்துக்கொள்ளலாம்)

ரமணா, இந்தியன், அந்தியன், பாட்சா போன்ற படங்களின் தாக்கம் நம்மை விட்டு இன்னும் போகவில்லை என்பது மட்டும் புரிகிறது.

–பார்ட் 2 end–

–பார்ட் 2 வேற மாதிரி–
எனக்கு முதல் பாதி கதையுடன் சம்மதமே. ஆனால் என்னுடைய இரண்டாவது பார்ட் கொஞ்சம் வேறு மாதிரி. ஏற்கனவே பார்த்திருப்பது தான்.

இந்த நாட்டில் இப்பொழுது இரண்டு பகுதிகளாக இளைஞர்கள் இருக்கிறார்கள். ஒரு பகுதி தங்களது முப்பது வயதுக்குள் எப்படியாவது மூவாயிரம் ரூபாய் சம்பளத்தை எட்டிப்ப்டித்துவிடத் துடிப்பவர்கள். மற்றொரு பகுதி : தங்களது இருபத்தியைந்து வயதுக்கும் முப்பதாயிரம் ரூபாய் சம்பளத்தைப் பார்த்து விடுபவர்கள்.

–நன்றி: விகடன். (ஞாநி)

நமக்கு (சாப்ட்வேர் துறையில் இருப்பவர்கள்) ஊரில் நிறைய நண்பர்கள் இருக்ககூடும். அந்த நண்பர்கள் நம்மைப்போல சாப்ட்வேர் படிக்காமல் ஏதேனும் BBA யேவோ அல்லது MBA யேவோ படித்துவிட்டு ஏதோ ஒரு வேலையில் மூவாயிரமோ, ஐந்தாயிரமோ வாங்கிக்கொண்டிருக்கக்கூடும். நாம் நாட்டை விட்டு வெளியேறி வந்து விட்டதால் அவர்களுடன் பழக வாய்ப்பில்லாமல் போயிருக்கலாம்(கிட்டத்தட்ட மறந்தே போயிருப்போம். ஏனினும் ஊருக்கு போகும் போது அவர்களை கண்டிப்பாக சந்தித்திருப்போம். அப்பொழுது நாம் அவர்களிடம் நட்பு மாறி ஒரு அந்நியோன்மைத் தன்மை வந்திருப்பதைக் காண் முடியும். வாடா போடா என்று பேசிக்கொண்டிருந்தவர்கள் வாங்க போங்க என்று பேச ஆரம்பித்திருக்கலாம்)

இப்படி யோசித்துப்பாருங்கள்: ஒரு நண்பர் வட்டாரம் இருக்கிறது. அவர்கள் சென்னையில் பிறந்து சென்னையில் வளர்ந்தவர்கள். ஒரு தெருவில் வசித்த நண்பர்கள். ஒன்றாக படித்து ஒன்றாக விளையாடி ஒன்றாக சைட்(?!) அடித்தவர்கள். அவர்களில் பெரும்பாலோனோர் நன்றாக படித்து (அல்லது கொஞ்சம் காசு செலவழித்து என்ஜினியரிங் காலேஜில் சேர்ந்துவிடுகின்றனர்) இருவரைத் தவிர. இந்த இருவரும் BBA ஏதோ ஒரு கலைக்கலூரியில் படிக்கின்றனர். அவர்களுடைய என்ஜினியரிங் கல்லூரி நண்பர்கள் படித்துக்கொண்டிருக்கும் போதே சென்னையில் ஒரு பெரிய software company இல் place ஆகி விடுகின்றனர். இவர்கள் இருவரும் வேலையில்லாமல் இருக்கின்றனர்.

அதில் ஒருவர் அஜித். அஜித் மிகவும் கஷ்டப்பட்டு TNPSC பரிட்சை எழுதி ஏதோ ஒரு கவர்மெண்ட் வேலை வாங்கிவிடுகிறார். எனினும் சம்பளம் மூவாயிரம் ரூபாய் தான். உடன் இருக்கும் நெருங்கிய நண்பர்கள் சாப்ட்வேர் மக்கள். மாதம் முப்பதாயிரம் சம்பாதிப்பவர்கள்.

இந்த நண்பர் குழுவில் நடக்கும் மனப்போராட்டங்களே கதை. அந்த நண்பர் குழுவில் சேரவும் முடியாமல் விலகவும் முடியாமல் தத்தளிக்கும் இளைஞராக அஜித். ஒரு நேரச் சாப்பாடு ஹோட்டலில் சாதாரணமாக ஐம்பது ரூபாய் இருக்கும் போது மாதம் மூவாயிரம் ரூபாய் சம்பளம் வாங்கும் அஜித் எப்படி சமாளிப்பார்? ஒரு நேர treat க்கு ஐந்தாயிரம் ரூபாய் தாராளமாக செலவழிக்கும் கூட்டத்துடன் எப்படி ஒட்டுவார்? ஒரே வீதியில் இருந்து கொண்டு அவர்கள் காரில் போகும் போது, இவர் பழைய ஓட்டை சைக்கிளில் (அல்லது பெரும் கூட்டமாக இருக்கும் பல்லவன் பேருந்தில்) எப்படி போவார்?

இது வெறும் கரு மட்டுமே. கதை திரைக்கதை நன்றாக அமைக்கலாம். இதில் இல்லாத நகைச்சுவை இல்லை. சோகம் இல்லை. சந்தோஷம் இல்லை. அன்பு இல்லை. நிராகரிப்பு இல்லை. பொறாமை இல்லை. மனப்புழுக்கம் இல்லை. நட்பு இல்லை. காதல் இல்லை.

மேலும் சமுதாயத்தில் பின் தங்கிவிட்ட பெரும்பாலான இளைஞர்களின் வாழ்க்கையை அனைவரும் திரும்பிப்பார்க்க உதவும். ஒரு வறுமையின் நிறம் சிவப்பு போல. வறுமையின் நிறம் சிவப்பு படத்தில் இருந்தது வேறு பிரச்சனை. எல்லோருக்கும் வேலையில்லை. இப்பொழுது வேறு பிரச்சனை. economical gap.

அஜித் மிகச்சிறந்த நடிகர் என்பதில் எந்த சந்தேகமும் இருக்க வாய்ப்பில்லை.வாலியில் ஊமை அஜித் பேட்டி கொடுத்துக்கொண்டிருக்கும் போது, interviewer அவரை சிரிக்க சொல்லுவார், அப்பொழுது சிரிப்பாரே ஒரு சிரிப்பு, அந்த சிரிப்பில் ரசிகனானேன் நான். அதற்கப்புறம் நிறைய படங்கள்: முகவரி, அமர்களம் (ரகுவரனிடம் “நீ கடவுளா” என்று குடித்து விட்டு கேட்பது), வில்லன். இப்பொழுது வரலாறு: பெண் தன்மை கொண்ட கேரக்டரை இவ்வளவு சிறப்பாக யாரும் இது வரை செய்ததில்லை! அவரை விட்டால் இந்த மாதிரி சமூக பிரச்சனைகளை நடிக்க வேறு யார் இருக்கிறார்கள்(இவ்வாறான கதாப்பாத்திரம் தான் முகவரியில் செய்தார். எவ்வளவு அழகாக செய்திருந்தார்?)

எப்பொழுதுமே ஹீரோவாக (அடிதடி சண்டை போட்டுக்கொண்டு, பழிவாங்கிக்கொண்டு, தீவிரவாதிகளை துவம்சம் செய்துகொண்டு) தான் இருக்கவேண்டும் என்றில்லை. சில சமயங்களில் (வெகு சில சமயங்களில்) மக்களில் ஒருவராக இருப்பதில் தவறில்லையே? ஏன் கமலஹாசன் அவ்வப்போது வறுமையின் நிறம் சிவப்பு போன்ற படங்கள் செய்யவில்லையா? ஏன் அவ்வளவு பெரிய ஆக்ஷன் ஹீரோவான ரஜினி ஆறிலிருந்து அறுபது வரை செய்யவில்லையா?

பருத்தி வீரன்

லிட்டில் இன்டியாவிலிருந்து யூசூன் போவதற்கு 857 பஸ் எடுத்தால் கண்டிப்பாக முக்கால் மணி நேரம் ஆகும். எனக்கு இப்பொழுதெல்லாம் பஸ்ஸில் தூக்கம் வருவதில்லை. உடன் வரும் நண்பரும் செல் போனையே கட்டிக்கொண்டு அழுபவர். SMS அடித்தே ஓய்ந்த கைகள் அவரது கைகள். ஒரு முறை அவருடன் பீச்சுக்கு சென்றிருந்த பொழுது கிட்டத்தட்ட ஒன்றரை மணி நேரம் நான் என்ன செய்வதென்று தெரியாமல் கடலில் விடாது அடித்து கொண்டிருக்கும் அலைகளையும், வானத்தில் நிமிசத்துக்கு ஒரு முறை (அல்லது இரு முறை) தரை இறங்கிக்கொண்டிருக்கும் விமானங்களை எண்ணிக்கொண்டிருந்தேன், அவர் நான் அருகின் அமர்ந்திருப்பது தெரியாமல் ஹாயாக தனது ஆஸ்திரேலிய நண்பரிடம் பேசிக்கொண்டிருந்தார். பேசி முடித்து விட்டு சாரி முத்து என்று மட்டும் சொன்னார். எனவே இந்த முறை சற்று உஷாராக ஆனந்த விகடன், ரிப்போர்ட்டர் மற்றும் இந்தியா டுடே வாங்கிக்கொண்டேன். முக்கால் மணி நேரம் பொழுது போக வேண்டுமே.

நாங்கள் யூசினில் பருத்தி வீரன் படம் பார்க்கச் சென்றோம். முதலில் அமீருக்கு HatsOff. அவரது மௌனம் பேசியதே படமே அப்பொழுது வந்து கொண்டிருந்த குப்பைகளுக்கு (தமிழன், ஜெமினி) மத்தியில் ஒரு அழகான கவிதை. கடைசி டிவிஸ்ட் ஒரு surprise. ராம் பத்தி நான் சொல்லத்தேவையில்லை.

பருத்திவீரன் மற்ற இரண்டு படங்களையும் தூக்கி அல்லேக்காக சாப்பிட்டு விட்டது. எதார்த்தமான காட்சிகளால் படம் நம்மைக் கட்டிப்போடுகிறது. மதுரைத் தமிழ் வசனங்கள் ஆகட்டும், பாடல்கள் ஆகட்டும், பாடல் பாடும் நாட்டுப்புற கலைஞர்கள் ஆகட்டும், பின்னனி இசை ஆகட்டும், நடிகர்கள் (பிரியாமணி, சரவணன் மற்றும் கார்த்தி) எல்லோரும், யுவனின் ரீரெக்கார்டிங் என்று அனைத்தும் மிகச்சரியாக அழகாக அமைந்திருக்கின்றன. well done. படத்தின் முதல் பாதி கெட்ட அலம்பல். மதுரைக்குசும்பு ஒவ்வொரு ப்ரேமிலும் இருக்கிறது.

நான் இன்றிரவு சாப்பிடவில்லை. படத்தின் பாதிப்பு என்னிடம் இன்னும் இருக்கிறது. தியேட்டரிலே அழுது விட்டேன் (மகாநதிக்கப்புறம் நான் தியேட்டரில் அழுத படம் இது). தியேட்டரை விட்டு வந்ததும் என்னை முத்தழகு என்று அழைத்த நண்பர் ஒருவர் செமத்தியாக என்னிடம் வாங்கிக்கட்டிக்கொண்டார். எப்படி இவரால் இப்படி ஒரு படத்தைப்பார்த்து விட்டு வந்து காமெடி பண்ண முடிகிறது என்று எனக்கு சத்தியமாக தெரியவில்லை.

அந்த நண்பர் சொன்னார் : முத்து, திஸ் இஸ் ஜஸ்ட் எ சினிமா, சோ டேக் இட் ஈஸி. சினிமா தான். பிம்பம் தான். ஆனால் மனது கேட்கமாட்டேன் என்கிறதே. முத்தழகு (பிரியாமணி) “என்னைத் தூக்காதடா தூக்காதடா” என்று கதறும் போது -அதை நினைக்கும் இந்த நொடி கூட- நெஞ்சு வெடித்து விடுவது போல இருக்கிறதே. துக்கம் தொண்டையை அடைக்கிறதே. நான் நினைத்ததெல்லாம் ஒன்று தான் : படத்தில் காட்டப்பட்டது போன்ற சம்பவம் எங்காவது கண்டிப்பாக நடந்திருக்கும். அந்த பெண்ணும் அவரது காதலும் கண்டிப்பாக கதறியிருக்கும். அவரை நினைத்து தான் எனக்கு அழுகை வந்தது. அந்த சம்பவத்தை நினைத்து தான் மனது கிடந்து அடித்துக்கொள்கிறது. ஏன் இப்படி நடக்கிறது? ஏன் இப்படி நடக்கிறது?

படத்தில் இப்படித்தான் முடிவு இருக்கப்போகிறது என்றூ யூகித்தவுடன் நான் என் நண்பனிடம் போய்விடலாமடா என்று கேட்டேன். அவன் கொஞ்ச நேரம் பொருடா என்றான். அப்புறம் கொஞ்ச நேரத்தில் அவன் எழுந்து போய்விட்டான். நான் கடைசி வரை படத்தைப் பார்த்து விட்டு தான் வந்தேன். வரும் வழியிலெங்கும் நாங்கள் ஒருவருக்கு ஒருவர் ஏதும் பேசிக்கொள்ளவில்லை. வீட்டுக்கு வந்தும் ஏதும் பேசாமல் இருக்கவே, வீட்டிலிருந்த படம் பார்க்காத மற்றொரு நண்பர் ஏன் எல்லோரும் இப்படி இடி விழுந்தது போல உட்கார்ந்திருக்கிறீர்கள் என்று கேட்ட பிறகு தான் நாங்கள் படத்தை பற்றி பேச்சு எழுந்தது. படத்தின் தாக்கம் அப்படி.

ஒரு பெண் சாகக்கிடக்கிறாள் என்று தெரிந்து எப்படி நான்கு நபர்களால் அவள் கற்பழிக்கப்படுகிறாள்? அவர்களின் மனிதாபிமானம் எங்கே போனது? அதிலும் ஒருவன் கற்பழிப்பதற்கு ஆய்த்தமாகிற பொழுது, மற்றொருவன் பக்கத்திலிருந்து நாய் போல பார்த்து, ஒரு தடவ என்று அவளை முத்தமிட்டு செல்ல எப்படி முடிகிறது? படம் தான் என்று ஒதுக்கி தள்ளிவிட முடியவில்லை. இது போன்ற சம்பவங்கள் நடக்கவில்லையா என்ன?

இந்த வார ரிப்போர்ட்டரில் கூட இது போன்ற ஒரு சம்பவம் காவல் நிலையத்திலே நடந்திருந்ததாக செய்தி வந்திருந்தது. கற்பழிக்கப்பட்டவர் பதினைந்து வயது பெண்ணிற்கு தாய். நம்மில் மனிதாபிமானம் வற்றிக்கொண்டே போகிறதா? மனசாட்சி என்ற ஒன்று இல்லாமலே போகிறதா? மிருகங்கள் தானா நாம்? அதிலும் படத்தில் அந்த பெண் கதறுகிறாள்: என்ன விட்டுங்கடா. எனக்கு நாளைக்கு கல்யாணம்டா என்கிறாள். எவ்வளவு தைரியமான பெண் அவள். அவளுக்கு தான் வீரன்(கார்த்தி) மீது எவ்வளவு காதல்? சிறு வயதிலிருந்து அவனைக்காதலித்து. அப்பாவை, அம்மாவை வெட்டிப்போட்டு விட துணிந்து, தற்கொலைக்கு முயன்று, வீரனிடமும் அப்பாவிடமும் அடிவாங்கி வீரனின் மனதில் நுழைந்து அவனது காதலை பெற்று அது நிறைவேறும் போது கற்பழிக்கப்பட்டு இறப்பது எவ்வளவு கொடூரம்? வீரனிடம்: “உன் பாவம் எல்லத்தையும் அவைங்க என் கிட்ட இறக்கி வெச்சுட்டு போயிட்டாய்ங்கடா” என்று சொல்லும் போதும் “டேய் என்ன காணாப்பொணமா ஆக்கிடுடா” என்று கதறும் போதும் இந்த உலகத்தில் வாழ்வதற்கான அர்த்தங்கள் மிகவும் குறைந்து போய்விட்டதைப்போன்றே தோன்றுகிறது. மனிதர்கள் அனைவரும் நல்லவர்களாக வெளித்தோற்றத்திற்கு தோன்றலாம். ஆனால் இளவஞ்சி சொன்னதைப் போல ” மனிதர்களின் குணம் சூழ்நிலைகளுக்கு தகுந்தது போல மாறும்” என்பது உண்மை என்றே தோன்றுகிறது. மனிதனாக இருந்தவன் கண நேரத்தில் கொடுரமான மிருகம் ஆகிவிடுகிறான்.

அதனால் தான் சர்வசாதரணமாக படித்துக்கொண்டிருக்கும் பெண்களை பஸ்ஸ¤க்குள் வைத்து எறித்து விட துணிகிறோம். எவ்வளவு திமிர் இருந்தால் பஸ்ஸ¤க்குள் பெண்களை வைத்து எறித்திருப்பார்கள்? அவர்களுக்கு தூக்கு தண்டனை வழங்கியதில் ஏதேனும் தவறு இருக்கிறதா என்ன? விகடனில் ஞானி சொல்லியிருக்கும் (ஆரசியல் சார்ந்த) கருத்துக்களை ஏற்றுக்கொள்ளவே முடியாது. சொல்லப்போனால் : விஜயகாந்த் சொன்னது போல அரபு நாட்டில் கொடுக்கப்படும் தண்டனைகள் போல கொடுக்கவேண்டும்.

பருத்தி வீரன் படத்தில் வந்த லாரி டிரைவர்கள் என் கைகளில் கிடைத்தால் நான் வேறு மாதிரியான தண்டனை வழங்குவேன் (எனக்கு அதிகாரம் இருக்கும் பட்சத்தில்). அவர்களைக் கொல்லக் கூடாது. நந்தாவில் கொடுப்பதைப் போன்ற தண்டனை அவர்களுக்கு கொடுக்கவேண்டும். வாழ்நாள் பூராவும் அவர்கள் தாங்கள் செய்த கொடுரத்தை நினைத்துப் பார்த்து கொண்டேயிருக்கட்டும். அவர்கள் திருந்துவதற்கு சான்ஸ் தரக்கூடாதா என்று புல்ஷிட் மனித உரிமை மண்ணாங்கட்டி பேசுபவர்களுக்கு: அது தான் கொடுத்திருக்கிறோமே. உயிரை விட்டு வைத்திருக்கிறோமே. அவர்கள் வாழட்டும். செத்துக்கொண்டே வாழட்டும்.

சாரு நிவேதிதா சொல்வது போல் இங்கு தான் பள்ளிக்குழந்தைகளை ரேப் செய்த ஆசிரியர்கள் transfer மட்டும் பெற்றுக்கொண்டு தப்பித்துக்கொள்ளலாம். அடுத்த பள்ளிக்கூடத்தில் குழந்தைகளே இல்லையா என்ன? கேட்டால் : ஜனநாயகம். மண்ணாங்கட்டி.

இங்கு பத்திரிக்கைகள் செய்யும் கொடுமையும் டூ மச். ரிப்போர்ட்டரில் விபச்சார புரோக்கர் பிரசாத்தின் detailed பேட்டி வந்திருந்தது. அவர் ஏதோ corporate CEO ரேஞ்சுக்கு தனது தொழில் நுணுக்கங்களை சொல்லிக்கொண்டிருந்தார். இவர்களும் துருவி துருவி “உங்களை புதிதாக தொடர்பு கொள்பவர்கள் எப்படி தொடர்புகொள்ளலாம்” என்று மிக முக்கியமான கேள்விகளை கேட்டிருந்தார்கள். அவர் படு கேஸ¤வலாக கூலாக பதில் சொல்லிக்கொண்டுருந்தார். “என்னிடம் வராத நடிகைகளே இல்லை” என்ற தலைப்பு வேறு. (நான் ரிப்போர்ட்டரை வாங்கவில்லை என்னுடன் வந்த நண்பர் தான் வாங்கினார். நான் பிரசாத்தின் பேட்டியை படிக்கவில்லை. என் நண்பர் படித்து விட்டு அதிர்ச்சிக்குள்ளாகி என்னிடம் காட்டினார்.) கண்ணி கழியாத பெண்கள் எப்பொழுதும் என் கைவசம் இருப்பார்கள். VIPகள் கேட்டவுடன் நான் அனுப்பிவைத்து விடுவேன் என்கிறார். இந்த கொடுமையை எங்கே போய் சொல்வது. இதை இவ்வளவு detailed ஆக பத்திரிக்கை வெளியிட வேண்டுமா என்ன?

இன்னொரு புறம் தாலி சாமியார் (அவர் பெண்கள் போல தாலி, வளையல்கள், மிஞ்சி என்று போட்டுக்கொண்டிருக்கிறார்), சாக்கடை சாமியார் என்று ஏகத்துக்கும் சாமியார்கள். எத்தனை சாமியார்கள் கைது செய்யப்பட்டாலும், மக்கள் மீண்டும் மீண்டும் ஏதோ ஒரு சாமியாரிடம் ஆசிர்வாதம் வாங்க காத்துக் கிடப்பதைப் பார்க்கும் போது கோபமே வருகிறது. பாவமாகவும் இருக்கிறது. மக்களை குறை சொல்லுவதா (கண்ணி கழியாத பெண்கள் கேட்கும் VIP. சாகப்பிழைக்க கிடக்கும் பெண்ணை நான்கு நபர்கள் சேர்ந்து ஒன்றன் பின் ஒருவராக ரேப் செய்வது. காக்கும் கடமையில் இருப்பவர்களே கற்பை சூரையாடுவது. பாவடை சாமியார் ஜட்டி சாமியார் என்று ஏதோ ஒரு சாமியாரிடம் ஆசி பெற காத்து ஏமாறுவது) அல்லது அரசியல் தலைவர்களை குறை சொல்லுவதா? முதலில் இவர்களுக்கு தலைவர்கள் தேவையா? உங்களையெல்லாம் தௌஸன்ட் பெரியார் வந்தாக்கூட திருத்த முடியாதுடா என்று சொல்வது தான் சரியோ?

மற்றபடி படம் மிக மிக அருமை. ஒவ்வொரு காட்சியும் அருமையாக கிராமத்தை அச்சு அசலாக நம்மிடையே கொண்டுவந்திருக்கிறார். ஏதோ ஒரு கிராமத்தில் வாழ்ந்தது போன்றே ஒரு எண்ணம். எவ்வளவு விசயங்களை இந்த தலைமுறை குழந்தைகள் இழக்கப்போகிறார்கள் என்று தெரியவில்லை. படத்தில் சிறுமி முத்தழகு சிறுவன் வீரனிடம் “டேய் டேய் நான் உங்கூட சீட்டிடா (பழம்)” என்று சொல்வது அழகாக இருக்கிறது. கண்டிப்பாக இந்த ஜெனரேசன் குழந்தைகள் என்னவென்று கேட்ப்பார்கள். அப்பத்தாக்களை விட்டு, அம்மாச்சிகளை விட்டு, அம்மாவை, அப்பாவை, சித்திகளை விட்டு, அண்னன்களை அக்காக்களை விட்டு நாம் எதைத் தேடிக்கொண்டிருக்கிறோம்? ஈமெயிலில் வந்த சாப்ட்வேர்மக்களைப் பற்றிய கவிதையின் ஒரு வரி ஞாபகம் வருகிறது : நம் ஒவ்வொருவரின் வீட்டு திண்ணையிலும் வாழப்படாமல் வாழ்க்கை மீந்து கிடக்கிறது.

ப்ரியாமணிக்கு தேசிய விருது கிடைக்கலாம். முத்தழகுக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள் மற்றும் கண்ணீர் துளிகள். நான் வேறு என்ன செய்ய முடியும்? ப்ளீஸ் அமீர் இது போல படங்கள் தொடர்ந்து எடுங்கள், ஆனால் க்ளைமாக்ஸ் இவ்வளவு சோகமாக வைக்காதீர்கள். எனது பணிவான வேண்டுகோள்.

ஆழ்வார்

அட போங்கப்பா. போக்கிரி எவ்வளவோ பெட்டர். அஜித் ராமராக, கிருஷ்ணராக, நரசிம்மராக வேடம் போட்டு தீயவர்களை (அவருக்கு தீங்கு செய்தவர்களை!) அழிக்கிறார். கண்றாவி. போய் கொன்னுட்டு வரவேண்டியது தானே, அது என்ன வேஷம் போட்டுக்கொண்டு கொல்வது? நல்லா புல்லாங்குழல் கையில் வைத்துக்கொண்டு ஆளுயர மாலை போட்டுகொண்டு, உடம்பு முழுக்க நீலக்கலர் பூசிக்கொண்டு, அஜித் வில்லன்களைப் பந்தாடுவது காமெடியாக இருக்கிறது. அஜித் பிணவரையில் வேலை பார்ப்பவர். ஏன் பிணவரையில் வேலை பார்க்கிறார்? அதற்கு கோனார் நோட்ஸ் பாணியில் விளக்கம் அழிக்கப்படுகிறது. அதாவது பழிவாங்கும் மூடில் இருக்கும் அஜித் மனிதர்களைக் கொல்லும் போது பச்சாதாபம் ஏற்படக்கூடாதல்லவா அதனால் தான் பிணவரையில் வேலை பார்க்கிறாராம். பிணங்களைப் பார்த்துப் பார்த்து கொல்லும் போது இரக்க உணர்வு மேலிடாதாம். உக்காந்து யோசிப்பாய்ங்களோ?

எடுத்தவுடன் ராமர் வேடமிட்டு கொல்கிறார். முதல் இரண்டு கொலைகளுக்கு வசனமே கிடையாது. மூன்றாவது கொலை பண்ணும்போது கொலை செய்யப்படவேண்டியவர் தூங்கிக்கொண்டிருக்கிறார். அவர் நெற்றிப் பொட்டில் துப்பாக்கியை வைக்கிறார், ராமர். அவர் தூக்கத்திலிருந்து விழிக்கிறார். வேஷம் போட்டு வந்திருப்பவரைப் வினோதமாக பார்க்கிறார். யார் நீ என்று கேட்கிறார். ராமர் (அஜித்): “கடவுள். நான் கடவுள்” என்கிறார். தியேட்டரில் கைதட்டல் காதைப் பிளக்கிறது. முதல் முறை மட்டுமே. அடுத்த முறை அவர் இதே டயலாக் சொல்லும் போது அடப்போப்பா. பாலாவுக்கே போன் போட்டு சொல்லிடு என்ற நினைப்பே வருகிறது.

அதே அஜித், பிணவரையில் சேர்ந்ததற்கு காரணம் சொல்லிவிட்டு “இங்கே வருபவர்கள் எல்லாம் சுடுகாட்டுக்கு செல்கிறார்கள். நான் மட்டும் இங்கேயே இருக்கிறேன்” என்றவுடன் முன்னால் நான் கடவுள் என்று சொன்னபோது தியேட்டரில் கைதட்டிய அதே நபர், சத்தமாக, “நீ எப்போ போவ?” என்கிறார். தியேட்டரே சிரிக்கிறது.

பல காட்சிகளில் கண்டினியூட்டியே இல்லை. அசின் வேறு பிளவுசில் வீட்டுக்குள் இருக்கிறார். அஜித்துடன் வெளியே வரும் போது வேறு டாப்ஸில் இருக்கிறார். அஜித் வில்லனை -தங்கையைக்கொன்றவனை- தான் வேலை செய்யும் GH ல் பார்க்கிறார். எவ்வளவு கோபம் வரும்? அதும் அவனைக்கொல்ல தேடிக்கொண்டிருப்பவனுக்கு எவ்வளவு கோபம் வரும்? காக்கியூனிபார்மில் இருப்பவர் அவனைப்பார்த்ததும் அவனை விரட்டிக்கொண்டு வெளியே வருகிறார். வரும் போது அழகாக வெள்ளைப் பேண்ட்டும் கலர் சட்டையும் போட்டிருக்கிறார். நீண்ட நாள் தேடிய வில்லனைப் பார்த்தவுடன் யாராவது போய் டிரஸ் சேஞ்ச் செய்து கொண்டு வருவார்களா? அதுக்கும் காரணம் இருக்கிறது. ஏனென்றால் அடுத்து அஜித் வில்லனைத் தவர விடுகிறார். வில்லன் காரில் தப்பிக்கிறார். சிக்னலில் நிற்கிறார். அஜித் துப்பாக்கியை வைத்து சுடுகிறார். குண்டு தவறி அந்தப்பக்கம் வந்த போலீஸ் வேனில் பட்டுவிடுகிறது. போலீஸ் ஏற்கனவே வேஷம் போட்டு கொலை செய்து கொண்டிருக்கும் நபரை தேடிக்கொண்டிருக்கிறார். அஜித்தைப் பார்த்ததும் விரட்டுகிறார். பின்னர் சண்டையில் அஜித் விசிட்டிங் கார்ட் மட்டும் குப்பைத்தொட்டியில் விழுந்து விடுகிறது. உடனே அதில் ஆசிட் விழுந்து போட்டோ மட்டும் தீய்ந்து விடுகிறது. ஆனால் GH என்பது தெளிவாக தெரிகிறது. உடனே போலீஸ் GHக்கு சென்று எல்லோரையும் சோதனை போடுகிறார். போலீஸ் கும்பல் கும்பலாக ஹாஸ்பிடலுக்கு உள்ளே ஓடிக்கொண்டேயிருக்கின்றனர் சில நிமிடங்களுக்கு. அப்புறம் அஜித் காக்கி சட்டையில் வருகிறார். அப்போ காக்கி சட்டையில் சண்டை போட்டால் போலீஸ் கண்டுபிடித்துவிடுமாம். அதனால் கலர் சட்டையில் ஓட விட்டிருக்கிறார். இவ்வளவு தூரம் யோசித்த டைரக்டர் கதையை கொஞ்சம் யோசித்திருக்கலாம்.

யாருப்பா அவரு, போலீஸ் இன்ஸ்பெக்டர்? சொடக்கு போடவே நேரம் பத்தல அவருக்கு. எதுக்கெடுத்தாலும் அவனைப் புடிக்காம விடமாட்டேன் என்று சபதம் போடுகிறார். வேஷம் போட்டு கொலைகாரன் கொன்றான் என்று தெரிந்தவுடன், அவர், இந்த சிட்டில யாரெல்லாம் வேஷம் போட்டிருக்கிறார்களோ அவர்களை எல்லாம் பிடித்துவாருங்கள் என்கிறார். வெஷம் போட்டவன், அப்படியே வேஷத்தோடா இருப்பான்? ஜென்டில்மேனின் சரண்ராஜை இமிடேட் செய்ய முயற்சித்திருக்கிறார். பாவம்.

அசின். அழகாக இருக்கிறார். திரிஷா ரசிகர் மன்றத்திலிருந்து அசினுக்கு மாறிவிடலாமா என்று யோசித்துக்கொண்டிருக்கிறேன். ஆனால் என்ன வேலை அவருக்கு? பாடல் பாடவேண்டுமே.அப்புறம் ஹீரோவைத் துரத்தித்துரத்தி காதலிக்கிறார்.ஹைதரபாத்திலிருந்து வரும் அவர் ஏன் பிணவரையில் வேலை செய்யும் அஜித்தை தொரத்தி தொரத்தி காதலிக்க வேண்டும்? ஒரு மண்ணும் புரியல. பாடலுக்கு முன்னால் வருகிறார். அவ்வளவே. அவர் வந்தவுடன் தியேட்டரி அடுத்த பாடலா என்ற கமென்ட் எழுகிறது.

அப்புறம் ஒரு மிக பழைய பிளாஷ்பேக். அஜித்தின் அம்மாவும், தங்கையும் எப்படி கொல்லப்பட்டார்கள் என்பதை சொல்கிறார்கள். கதாகாலாட்சேபம் போல இருக்கிறது. பெருமாள் எங்களை தண்டிப்பார் என்று யாராவது ஒருவர் சொல்லிக்கொண்டேயிருக்கிறார்கள். பக்தி சொற்பொழிவு ஆற்றுபவர் எல்லோரையும் கடவுள் என்கிறார். அஜித்தைப் பார்த்தும் கடவுள் என்கிறார். கடவுளே. அன்பே சிவம் நாங்க பாத்தாச்சுப்பா. அப்புறம் அவர் அம்மாவிடம் (கீதா) சென்று தன்னைகடவுள் என்று சொன்னதாக கூறியவுடன், அவர் நீ எங்களுக்கு கடவுள் தந்த பிள்ளை தானப்பா என்று கூறுகிறார். மேலும் போட்டோ அல்பம் ஒன்றை எடுத்துக் காட்டுகிறார். அதில் சிறுவனாக பல கெட்டப்புகளில் – ராமர், கிருஷ்ணர் – காட்சி தருகிறார். அதனால தான் வேஷம் போட்டு கொன்றாராம், ஆழ்வார். கீதா அந்த ஆல்பத்தை அவரிடம் காட்டாமலே இருந்திருக்கலாம். பிளாஷ்பேக் முடிந்தவுடன், பின்னாலிருந்து ஒரு கமெண்ட் சத்தமாக “அப்பாடா ஒரு கண்டத்தை தாண்டியது போல இருக்கு”

ஒரே சத்தம். ஜூம் ஜூம் என்று காமெரா focus-unfocus ஆகிக்கொண்டேயிருக்கிறது. அஜித் பல ஆங்கிளில் காட்டப்படுகிறார். அடித்து நொறுக்கிறார். ஒரே குத்து ஆள் பல அடி உயரத்திற்கு பறந்து சென்று பல பல்டி அடித்து விழுகிறார். கண்ணாடிகள் சில்லு சில்லுகாக உடைகிறது. நமது காது கிழிகிறது. கடைசியில் நரசிம்ம வேடம் போட்டு மெயின் வில்லனை அழிக்கிறார். வயிற்றைக் கிழிக்கிறார். ஏன் டைம் வேஷ்ட் பண்ணி வேடம் போடுகிறார்? டிரஸ் செட், மாலை, சிங்க முகமூடி எல்லாம் கையிலே வைத்திருப்பாரோ? மாலை எங்க போய் வாங்குவார்?

விவேக் இருக்கிறார். ஐயோ பாவம். வடிவேல் ஓவர் டேக் செய்கிறார் சார், கொஞ்சம் சிரிக்க வைங்க. ஒரே ஒரு இடம் தான் நன்றாக இருந்தது. அதாவது மைல்சாமி சிறு தொழில் லோன் வாங்கி ஐந்தாயிரம் ரூபாய்க்கு அனுமார் வேஷம் போட்டு, பிச்சை எடுத்து, மாருதி கார் வாங்கினாராம். அதற்கு விவேக் கேட்கிறார் : என்னடா லோன் வாங்கி கார் வாங்கிட்ட எப்போ லோன் கட்டுவ? அதற்கு மைல்சாமி சொல்கிறார்: அடுத்த ஆட்சி வரும் போது அதான் லோன கேன்சல் பண்ணிருவாங்கல்ல பிறகு எதற்கு கட்டனும்.

மனோரமா இருக்கிறார். பிராந்திக்கும் மூட்டு வலி தைலத்திற்கும் வித்தியாசம் தெரியாத பாட்டி பாவம். முதல் முறை அடித்தவுடன் சடார் சடார் என்று திரும்பி, அருணாச்சலம் அருணாச்சலம் என்கிறார்.

இன்னொரு விசயம். ஐடி கார்ட் போலிஸில் கிடைக்கிறது. அதில் ஆசிட் விழுந்து முகம் தெரியாமல் போகிறது. உடனே போலீஸ் ஐடி கார்டை எடுத்துக்கொண்டு கம்ப்யூட்டர் ஸ்பெசலிஸ்ட் கிட்ட எடுத்திட்டு போய் அதற்கு பொருத்தமான உருவங்களை இணைத்துத் தரச் சொல்கிறார். முடியுமாங்க? தெரியல. ஆனால் அந்த மனிதர் பயங்கரமான அதி மேதாவியாக இருப்பார் போல அஜித்தின் போட்டாவை கனகச்சிதமாக வரைந்து கொடுக்கிறார். கச்சிதமாக. முல் முல்லாக மீசையுடன். உதட்டுக்குக்கீழ் இருக்கும் தாடி முதற்கொண்டு. சார். தொழில்நுட்பத்தை வெளியிடுங்கள் சார். பில் கேட்சை மிஞ்சி விடலாம்.

பாடல்கள். சொல்லித்தரவா சொல்லித்தரவா சொல்லித்தரவா. பரவாயில்லை. முகமத் சலாமத்தும், சாதனா சர்க்கமும் டமிலை கொலை செய்திருக்கிறார்கள் (சொல்லப்போனால் கற்பழித்திருக்கிறார்கள்!). “செலா செலா செலா நித்தானே ஷெப்பு செலா மலா மலா மலா நீ தானே கொல்லி மலா” என்கிறார். சுஜாதாவின் இடது கை விருதான நன்றாக தமிழ் பேசுவது எப்படி என்ற புத்தகத்தை இவருக்கு வழங்கலாம். உன்னிக்கிருஷ்ணன் பாடிய பல்லாண்டு பல்லாண்டு பாடல் நன்றாக இருந்தது. கேட்பதற்கு மட்டும்.ரிரெக்கார்டிங்: ஸ்ரீகாந்த் சார் காதிலிருக்கும் ear bud ஐ எடுத்துவிட்டு மியுசிக் போடுங்க. எங்க காது கிழியுது. இதுல matrix revolution music வேறு.

ஆனால் ராமர் வேடம் அஜித்திற்கு கனகச்சிதமாக பொருந்துகிறது. ராமாயணம், மகாபாரதம் சினிமாவாக எடுப்பவர்கள் அஜித்தை தாரளமாக அப்ரோச் செய்யலாம்.

கம்ப்பாரேட்டிவ்லி போக்கிரி பல மடங்கு பெட்டர். ஆழ்வார் சார், முழிச்சுக்கோங்க சார்.

போக்கிரி

ந்திரா (காரம் குறைந்த) மசாலா. தெலுங்கு போக்கிரி நான் பார்க்கவில்லை (என்னிடம் படம் இருக்கிறது), ஆனால் கண்டிப்பாக தமிழ் போக்கிரியைவிட பெட்டரா இருக்கும்னு நினைக்கிறேன். கதை? ஏற்கனவே நிறையமுறை பார்த்த கதைதான். சாமியில் வரும் முதல் 10 நிமிஷம் தான் படத்தின் கதை. பாண்டியனையும் சேர்த்து மிக்ஸ் செய்யுங்கள், அப்புறம் இனிப்புக்கு இருக்கவே இருக்கிறார் அசின், ஏலக்காய் முந்திரிப்பருப்பாக வடிவேலு மற்றும் பிரகாஷ்ராஜ். பொங்கல் வைக்கத்தெரியாத புது மனைவி முதல் முறை பொங்கல் வைத்து அதிசயமாக அது சுமாராவாவது இருக்கும் பட்சத்தில் ஒரு ஆச்சரியம் வருமே, அது போல கொஞ்சம் டிவிஸ்டுகள் (எனினும் எதிர்பார்க்கக்கூடியதே!) மொத்தத்தில் மசாலா பொங்கல். பொங்கல் கொஞ்சம் சுமாரா இருந்தாலும், இன்னும் நல்லா வெச்சிருக்கலாம்.

விஜய் அழகாக இருக்கிறார். ஸ்லிம்மாக. ட்ரிம்மாக. (நான் அஜித் ரசிகன் என்பதை நினைவில் கொள்க!) படு யூத்தாக இருக்கிறார். காஸ்டியூம்ஸ் கலக்கல். அதுவும் “நீ முத்தம் ஒன்று கொடுத்தால் முத்தமிழ்” பாடலில் படு ஸ்டைலாக இருக்கிறார். நன்றாக டான்ஸ் ஆடுகிறார் என்று நான் சொல்லத்தேவையில்லை. ஆடுங்கடா என்ன சுத்தி பாடலில் பிரபு தேவாவும், விஜயும் ஒரே காஸ்டியூமில் ஆடுகிறார்கள். (படையப்பா ரஜினி, கே.எஸ்.ரவிக்குமார் போல.) கருத்துப்!! பாடலும் நன்றாக இருக்கிறது. ரசிகர்களுக்கு செம தீனி.இந்த முறை ஓபனிங் பைட். ரஜினி எவ்வழியோ நானும் அவ்வழி என்கிறார் விஜய். ரஜினி பெயர் ஒரு முறையும் சந்திரமுகி பாடல் ஒரு முறையும் காட்டப்படுகிறது.தியேட்டர் கிழிகிறது.

ரசிகர்களை என்னவென்று சொல்ல? விஜய் வரும்போது விசில். பயங்கர சத்தம். சரி. அசின் வந்தார் அதற்கும் விசில், சத்தம்.அப்புறம் வடிவேலு வந்தார் அவருக்கு படு பயங்கர சத்தம். விஜய்க்கு கிடைத்ததைக் காட்டிலும் அதிகம். அதற்கப்புறம் பிரகாஷ்ராஜ் வரும் பொழுது அவருக்கு இன்னும் அதிகமான விசில் சத்தம். இதில் எல்லா முறையும் நானும் ஜோதியில் ஐக்கியமாகிக்கொண்டேன்.


எனது விசில் பயிற்சி தோல்வியைக் கண்டது. ஆனால் படத்தில் ஒரு காட்சி : விஜய் அசினை ஆட்டோவில் ஏற்றி விடுவதற்கு விசில் அடித்து ஆட்டோவைக் கூப்பிடுகிறார். அசின் விசிலடிப்பதை ரசித்து எனக்கும் சொல்லிக்கொடுங்க என்கிறார். விஜய் அவருக்கு பாடம் நடத்துகிறார். கொழுத்துங்க விஜய். இதுக்காகவாது விசிலடிக்க கத்துக்கணும், என்ன சொல்றீங்க?

படம் சூட்டிங் ஆரம்பித்த பொழுதிலிருந்து பிரபுதேவா எப்போ இன்டர்வியு கொடுத்தாலும் படத்தில் ஒரு லிப்ட் சீன் இருக்கிறது கவித்துவமாக வந்திருக்கிறது என்று சொல்லிக்கொண்டேயிருந்தார். கவிதை (அசின்) இருந்ததே லிப்டுக்குள், அதனால் சொல்லியிருப்பாரோ? கவிதைதான். கத்துக்குட்டி கவிஞரின் முதல் கவிதை.

அசின் அழகாக இருக்கிறார். முதல் பாதியில் கொஞ்சம் வருகிறார். பிற்பாதியில் பாடலுக்கு முன்னால் மட்டுமே வருகிறார். விஜய் படத்தில் அவர் வேறு என்ன எதிர்பார்க்க முடியும்?

வடிவேலு அமர்க்களம். சிரிப்புக்கு கியாரண்டி. விஜயை வேவு பார்க்க பல கெட்டப்புகளில் (சிம்புவைப் போல கண்ணாடி அணிந்து கொண்டு இறங்கு மீசையும், உதட்டுக்கு கீழ் தாடியுமாக வருவது சூப்பர்) வரும்பொழுதெல்லாம் விஜயின் நண்பர்கள் அவரை அடையாளம் கண்டுகொள்ள கடுப்பான வடிவேலு, ஏண்டா இவ்வளவு கஷ்டப்பட்டு கெட்டப் சேஞ்ச பண்ணிட்டு வந்திருக்கிறேன் இவ்வளவு ஈசியா புடிக்கிறீங்களே, கெட்டப்புக்கு கொஞ்சமாவது மரியாதை கொடுங்கடா என்று புலம்புவது சிரிக்கவைக்கிறது.

சுட்டும் விழிச் சுடரே பாடலுக்கு வடிவேலுவும், அசினும் ஆடுவது சூப்பரோ சூப்பர். வடிவேலுவில் எக்ஸ்பிரசன் மற்றும் பாடி லாங்வேஜ் கேட்கவே வேண்டாம்.

பிரகாஷ்ராஜ் எப்பொழுதும் போல. அவர் வேலையை கன கச்சிதமாக செய்திருக்கிறார். நெப்போலியன் அவரை கைது செய்து செல்லில் அடைத்து, சுற்றி நிற்கும் போலீஸ்காரர்களிடம், இவன் தூங்கினால் அடிங்க என்று சொல்லிவிட்டு சென்று விட, பிரகாஷ்ராஜ் தூக்கம் தள்ளத் தள்ள தூங்காமல் சுற்றி சுற்றி வந்து கொண்டிருப்பது சிரிக்கவைக்கிறது.

ஒரு கவர்ச்சி பாடல் வேறு. என் செல்லப்பேரு ஆப்பிள் பாடலுக்கு யாரோ நடனம் ஆடினார். யாரென்று தெரியவில்லை.(தெரிந்தவர்கள் துப்பு கொடுக்கவும்). பக்கத்தில் உட்கார்ந்திருந்த என் நண்பர் : ஆப்பிளா? தர்பூசணி மாதிரி இருக்கா! என்றார்.

சில ரசிக்கத்தகுந்த சமாச்சாரங்கள் இருந்தாலும் படத்தில் தொய்வு இருந்து கொண்டேயிருக்கிறது. இன்டர்வெல் விட்ட பொழுது இப்பொழுதுதான் இன்டர்வெல்லா என்று கேட்கும் அளவுக்கு. கடைசியில் படம் முடிந்த பொழுது ஆடுங்கடா என்ன சுத்தி பாடல் எப்பொழுதோ ரொம்ப நேரத்துக்கு முன்னால் கேட்ட மாதிரி இருந்தது.

ஆனந்த விகடனில் வந்த ஜோக்:
“சுவீட் கடைக்காரர் விஜயை வைத்து படம் எடுத்தால் என்ன பேர் வைப்பார்?”
“பேக்கரி”

பிரபுதேவாவின் டச் அங்காங்கே தெரிந்தாலும் இது முழுக்க முழுக்க விஜய் படமே!

இம்சை அரசன் 23ஆம் புலிகேசி

என்னுடைய கல்லூரிக் காலங்களிலிருந்தே நான் விகடனில் வரும் ‘அரசன்’ சம்பந்தப்பட்ட கார்டூன்களின் ரசிகன். அந்த கார்டூன்களில் சில சமயம் ‘சிம்பு’ என்ற பெயர் இருப்பதைப் பார்த்திருக்கிறேன். இந்த கார்டூன்கள் ஒரு மனிதனின் கற்பனைத்திறனை (creativity) பறைசாற்றுபவை. மதனின் கார்டூனும் அவ்வாறே. ஆனால் நமக்கு தெரியாத அல்லது நாம் அனுபவிக்காத, அதுவும் நாம் புராதாண காலத்து அரச தமிழ் சினிமாவில் கண்டு ஆச்சரியப்பட்ட, வீர தீர பராக்கிரம மன்னர்களை, அரசர்களை நையாண்டி செய்வதை பார்க்கும் பொழுது எங்கிருந்தோ சிரிப்பு வந்து தொற்றிக்கொள்கிறது.

பட அறிவிப்பு வந்து, அதுவும் வடிவேலு தான் இம்சை அரசன் என்ற பொழுது, எனது மகிழ்ச்சி பன்மடங்கு அதிகரித்தது. அன்றிலிருந்து நான் படத்தை எதிர்பார்த்து காத்திருந்தேன். பல தடைகளை மீறி படம் திரையிடப்பட்டிருக்கிறது. குதிரை வதைத் தடுப்புச்சட்டம் நுழைந்தது, படத்தில் வரும் நகைச்சுவைகளையும் மிஞ்சி விட்டது. அரசர் காலத்து படங்களை எடுக்கும் பொழுது, அரசர் குதிரையில் வருவது போன்று காட்டவேண்டுமேயானால், நாம் PreKG/LKG/UKG, படிக்கும் பொழுது விளையாடப் பயன்படுத்திய மரக்குதிரைகளையா உபயோகிக்க முடியும்? குதிரைகளின் மீது இவர்களுக்கு இருக்கும் பாசத்தை சண்டை காட்சிகளில் உதை வாங்கி, சுமோவின் கார் கண்ணாடிகளை உடைத்துக் கொண்டு விழும் (உபையம்: சந்திரமுகி) துணைநடிகர்கள் மீது காட்டியிருக்கலாம். மனித வதை தடைச் சட்டம் என்று ஒன்று இருக்கிறதா இல்லையா?

படம், என் நண்பன் பாணியில் சொல்வதென்றால், ‘ரவுசு’ தான். படம் ஆரம்பித்தவுடன், திரையில் தோன்றும், கதாபாத்திரங்களை அம்புக்குறியிட்டு அறிமுகப்படுத்தும் பொழுது, அங்கே தூணில் ஒட்டிக் கொண்டிருக்கும் பல்லியை, ‘அரண்மனை பல்லி’ என்று வட்டமிட்டு காட்டும் பொழுது தொடங்குகிறது ‘ரவுசு’. அங்கிருந்து கடைசியில், ‘நம் மூதாயதயர்களான அலெக்சாண்டர், சாம்ராட் அசோகர்,BraveHeart Mel Gibson போன்று வீரமாக வாழ்வோம்’ என்று இம்சை அரசன் (வடிவேலு) கர்ஜிக்கும் வரை படம் நெடுக ரவுசு தான். அவர் மீசையே ரவுசு தான்.

‘சிம்புதேவன்’ அடிபடையில் தான் ஒரு கார்டூனிஸ்ட் என்பதை படத்தில் பல இடங்களில் நிரூபிக்கிறார். அந்தபுரத்தைக் காட்டும் பொழுது, ‘அந்தபுரம் 24 மணி நேர சேவை’ என்று முகப்பில் எழுதியிருப்பது, கோட்டை வாசலில்,’பழைய எண்:24 புதிய எண்:42 எதிர்கால எண்: 0.05′ என்று எழுதியிருப்பது போன்று சில உதாரணங்கள்.

வடிவேலு நல்ல நகைச்சுவை நடிகர் என்பதை மறுபடியும் ஒரு முறை ஆணித்தனமாக நிரூபித்திருக்கிறார். அவருக்கு ‘கைப்பிள்ளை’யிலிருந்து நான் தீவிர ரசிகன். என் நண்பர் கூட்டம் ‘வாலிப வயசு’ என்று கைப்பிள்ளை போன்று இன்றும் செய்து காட்டிவருகின்றனர். ‘ஆணியே புடுங்கவேனாம்’ என்ற ‘ப்ரண்ட்ஸ்’ திரைப்படத்தில் வரும் வசனம் இன்றும் எங்கள் வட்டத்தில் புழக்கத்தில் உள்ளது. ஆனால் அவர் திரையில் தோன்றிய பொழுது நான் மட்டுமே கைதட்டிக் கொண்டிருந்தேன். சிங்கப்பூரில் கை தட்டக்கூடாதோ?

ஒரு வடிவேலே வயிற்றைப் புண்ணாக்கும் பொழுது படத்தில் இரண்டு வடிவேலுகள். கேட்கவா வேண்டும்? கரடி நகைச்சுவையும், அக்காகோலா,கப்சி, ஜாதிச் சண்டை மைதானம் போன்றவையும் நம் வயிற்றைப் பதம் பார்க்கின்றன. படம் முடிந்து வந்தவுடன், மதியம் சாப்பிட்ட சாப்பாடு சரியில்லையோ என்று நினைக்குமளவு வயிற்று வலி.

அக்காகோலா,கப்சி போன்ற வெளிநாட்டு உற்சாகபாணங்களை ஆங்கிலேயர்கள் விற்க வரும்பொழுது, மங்குனி(அப்படியென்றால் என்ன?) அமைச்சர் உள்ளூர் தயாரிப்பு நசுக்கப்பட்டு விடாதா என்று கேட்கும் பொழுது, பெயர் மட்டும் தமிழில் வைத்துக்கொள்ளலாம், மக்கள் ஏமாந்துவிடுவார்கள் என்று இம்சை அரசன் கூறுவது சற்று யோசிக்கவைக்கிறது. வெறும் நகைச்சுவை மட்டுமல்ல, சிந்திக்கவும் விசயம் இருக்கிறது.

இந்த நல்ல முயற்சிக்கு வித்திட்ட ஷங்கருக்கு பாராட்டுகள்.

எனக்கு Lord Of The Rings பார்க்கும் பொழுதெல்லாம், நமது பொன்னியின் செல்வன் கதை, ஞாபகத்திற்கு வரும். ஏன் பொன்னியின் செல்வன் கதையை அதே பிரம்மாண்டத்துடன் திரைப்படமாக தயாரிக்க முடியாது என்ற எண்ணமும் உடன்வரும்.

சிறிது நாட்களுக்கு முன்பு தான் ‘சஞ்சய் லீலா பன்சாலியின்’ ‘தேவதாஸ்’ திரைப்படம் பார்த்தேன். எத்தனை அழகு? எத்தனை பிரம்மாண்டம்? என்னமோ தெரியவில்லை எனக்கு உடனே ஞாபகத்திற்கு வந்தது பழைய ‘நெஞ்சம் மறப்பதில்லை’ தான், அதை அப்படியே, மிகப் பிரம்மாண்டமாக, மறு தயாரிப்பு செய்யலாம்!

இம்சை அரசனின் வெற்றியால், இவை எதிர்காலத்தில் சாத்தியப்படலாம்.

Imsai Arasan 23am Pulikesi : Review