படம்-நியூஸ்-புத்தகம்-கா·பி

ரிக்கி பாண்டிங்,ரஜினிகாந்த், IBN-CNN, ஜல்லிக்கட்டு, மும்பை மானபங்கம்

There’s a breathless hush in
the class tonight
Ten to make and the match to win
A bumping pitch and a
blinding light.
An hour to play, and
the last man in.
And it’s not for the sake of a
ribboned coat.
Or the selfish hope of a
season’s fame,
But his captain’s hand on
his shoulder smoke
Play up! Play up! And play
the game!

Henry Newbolt எழுதிய இந்த கவிதையை Ricky Ponting மனப்பாடம் செய்யவேண்டும். மனப்பாடம் செய்தால் மட்டும் போதாது, இதன் அர்த்தத்தையும் புரிந்துகொள்ளவேண்டும். விளையாட்டு என்றால் என்னவென்று தெரிந்துகொள்ள வேண்டும். மேலும் திடலில் ஒருவருக்கு ஒருவர் மரியாதை கொடுக்கவேண்டும் என்பதையும் நினைவில்கொள்ள வேண்டும்.

Chak de India திரைப்படத்தை BCCI சாருக்கானுக்கு ப்ரத்தியேகமாக போட்டுக்காட்டலாம். மேலும் சாருக்கானுடன் ஒரு சந்திப்பையும் ஏற்பாடு செய்யலாம். நடந்து முடிந்த சிட்னி டெஸ்ட் ஆஸ்திரேலியாவின் தெருச்சண்டை மனோபாவத்தை உலகுக்கு எடுத்துக்காட்டுவதாக அமைந்தது, ஆஸ்திரேலியாவின் மீது தீராத காண்டிலிருக்கும் மற்ற அணிகளுக்கு, மகிழ்ச்சியைத் தருவதாக இருந்திருக்கும்.

Peter English என்கிற ஆஸ்திரிலேய எடிட்டர், crickinfoவில் எழுதியிருப்பதை இங்கே பாருங்கள்:

“Somebody probably a preschool teacher, needs to explain simply to Ricky Ponting
about the damages that has been caused by his team during the Sydney Test”

ஆனால், விளையாட்டு விளையாட்டு தான், போர் இல்லை, என்கிற விசயத்தை இந்தியர்களாகிய நாம் சொல்வதற்கு தகுதி உடையவர்களா என்பதையும் இந்த நேரத்தில் சிந்திக்க வேண்டும். டோனி வீடு தாக்கப்பட்டதை இந்த நேரத்தில் நாமெல்லாம் நினைவில் கொள்ளவேண்டும்.

எனவே மேலே கொடுக்கப்பட்ட Henry Boltஇன் கவிதையை, ரிக்கி பாண்டிங் படிக்க வேண்டும். படித்து விட்டு, அவர் இந்தியர்களுக்கும் தாரளமாக forward செய்யலாம்.

ஆனாலும் கங்கூலி அவுட் ஆனது, கொஞ்சம் ஓவர்தான். அவுட் இல்லை என்று தீர்மானமாக நின்ற கங்கூலியைப் பார்த்து ரிக்கி பாண்டிங் கோஷ்டி சிரித்தது மேலும் எரிச்சலூட்டுவதாக அமைந்தது. அம்பையர்களே நீங்கள் தூங்குங்கள் தவறில்லை. Afterall, then and there, every one takes a nap, during his work. ஆனால் தூங்கி எழுந்தபின், third umpire, என்கிற ஒருவர் இருக்கிறார் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

***

BCCI, கடைசி மேட்சை கேன்சல் செய்யப்போகிறது, என்கிற அறிவிப்பு வெளியானதும், அவர்கள் எவ்வளவு பணம் ஸ்பான்ஸர்ஸ¤க்கு கொடுக்க வேண்டியது இருக்கும் என்கிற எண்ணம் எல்லார் மனதிலும் உதித்தது. எல்லாரும் ஒவ்வொரு கணக்கு போட்டனர். ஆனால் அந்த கணக்கில் என்னுடைய 25$ சேர்க்கப்பட்டிருந்ததா என்று தெரியவில்லை. நானும் தானயா subscribe பண்ணிருக்கேன்? எனக்கு யார் பணத்தை திருப்பி தருவா? என்கிற குழப்பம் என்னுள் இருந்தது. என் நண்பர்கள் யாவரும் அப்படி திருப்பித் தருவதற்கு வாய்ப்புகள் ரொம்பவும் கம்மி என்றே சொன்னார்கள். எனக்கு புரியவில்லை, ஏன் என்னுடைய பணமும் தானே முக்கியம். இந்த முறை பார்த்துவிடலாம் என்கிற ஆவலோடு இருந்தேன், ஆனால் BCCI மேட்ச் நடக்கும் என்கிற முடிவுக்கு சென்று விட்டது, கொஞ்சம் ஏமாற்றம் அளித்தது. ஆனால் ஆஸ்திரிலேயாவின் ரெக்கார்ட்டை இந்தியா முறியடிக்கப்போகிறது (மறுபடியும்!) என்கிற நினைப்பு வரும் பொழுது அந்த ஏமாற்றம் மறைந்து விடுவது என்னவோ உண்மைதான்.

Over Confidence! நமக்கு சூடு சொரணை இருக்கா இல்லியாப்பா?

இன்னிக்கு பட்டிமன்றத்துல கூட ராஜா சொன்னார்: இந்தியா ஜெயிக்கறதுக்கு ரொம்ப கஷ்டப்படுது, அப்படி ஜெயிக்கறமாதிரி போனாக்கூட பக்னர் வந்து பக்குன்னு அமுக்கிடறார்

***

ரஜினிகாந்த் ஷங்கர் படத்தில் மீண்டும் நடிப்பது ரெட்டிப்பு மகிழ்ச்சி. அவர் முதல்வனிலே நடித்திருக்க வேண்டியது. ஷங்கரின் தாக்கம் ரஜினியிடம் நிறையவே இருக்கிறது இப்பொழுது. He is aiming big, bigger than ever before. முதல்வனில் ரஜினி நடித்திருந்தால், பத்து வருஷத்தில் கண்டிப்பாக நிறைய மாற்றங்கள் நடத்திருக்கும். இந்நேரத்துக்கு ஒரு international ஹீரோவாக வளர்ந்திருப்பார். ரம்யாகிருஷ்ணனோடு அதிகமா ஆசைபடற ஆம்பள ஆப்பாயில் போடத்தெரியாத பொம்பளன்னு தத்துவம் பேசிக்கொண்டிருந்திருக்க மாட்டார்.

இப்பொழுதுதான், ரஜினிகாந்தை வடக்குப்பக்கத்து மக்கள் திரும்பிப்பார்க்க ஆரம்பித்திருக்கின்றனர். (அவங்க திரும்பிப் பார்த்தா என்ன, பாக்காட்டி நமக்கென்ன?) CNN-IBNல வந்த ஒரு செய்தி:

The third contender is ultimate style king Rajnikanth. It will be a travesty to
call him the ageing style king, because he showed in Sivaji-The Boss that age
just has nothing to do with it. For one, you cannot make out he is ageing. And
two, does it matter?

The film turned out to be a big blockbuster,
packing cinema halls even in the north. He can fight, sing and dance just as
well as the youngest Kapoor on the block — Ranbir ‘Saawariya’ Kapoor — if not
better: the kid can learn a few things from Rajnikanth.

அடெங்கப்பா “learn a few things from Rajnikanth” இதற்கு முன்னர் ரஜினிகாந்துக்கு இந்திய அளவில் ஒரு அங்கீகாரம் கிடைத்தது, தளபதி படத்தின் போது என்று தான் நான் நினைக்கிறேன். Filmfare அட்டையில் வெளிவந்த ரஜினிகாந்தின் அந்த புகைப்படம் தான், என்னுடைய, இதுநாள் வரையிலான favourite. அந்த படம் யாரிடமாவது இருந்தால் எனக்கு அனுப்பிவையுங்கள்.

ஒரு வைட் பைஜமா குர்தாவில் அழகாக கைகளை மடித்துவிட்டு சிரித்துக்கொண்டிருப்பார் ரஜினிகாந்த்.

***

CNN-IBN Indian of the year Listஇல் ரஜினிகாந்த் மற்றும் கங்கூலி ஆகிய இருவரும் வந்தது இனிய அதிர்ச்சி. இவர்கள் இருவரின் மீதும் எனக்கு நிறைய நம்பிக்கை உண்டு. இவர்கள் இருவரின் போராட்ட குணம் அனைவருக்கும் ஒரு பாடம். எந்த நிலையிலும் சோர்ந்து போகாமல், மீண்டும் எழுந்து வர முடியும் என்று நிரூபித்தவர்கள் இவர்கள் இருவரும். நான் ஓட்டு போட்டுட்டேன்.

ஆனால் ரஜினிகாந்தை CNN-IBN லிஸ்டில் சேர்த்தது, தெற்கு பக்கத்து மக்களையும் கவர வேண்டும் என்கிற வியாபார தந்திரமா என்கிற சந்தேகம் எனக்கு இருந்து கொண்டுதான் இருக்கிறது.

***

ஜல்லிக்கட்டுக்கு தடை விதித்த பொழுது எழுத ஆரம்பித்த பதிவு இது. இன்று ஜல்லிக்கட்டுக்கு தடை நீக்கம் செய்யப்பட்டு விட்டது. எதுக்கு இந்த வீண் பந்தா? ஏன் ஜல்லிக்கட்டுக்கு தடை? இந்தியாவிலே ஒரே ஒரு இடத்தில் தான் இது நடக்கிறது அதையும் காலி செய்து விடலாம் என்கிற நோக்கமா? இது ஆண்டாண்டு காலமாக நடக்கும் வீர விளையாட்டு. இதில் வீரம் எங்கிருக்கிறது என்று என் நண்பர் ஒருவர் கேட்டார். என்னது? வீரம் இல்லியா? இந்த விளையாட்டை டீவியில் பார்ப்பதற்கு கூட வீரம் வேண்டுமப்பா. உயிர் போகிறதே என்று கவலைப்படுகிறீர்களா? அடா அடா என்னே உங்களது மக்களின் மீது இருக்கும் பாசம்? உங்கள் பாசம் என்னை வியப்படைய வைக்கிறது. மற்ற எல்லவற்றையும் சரிசெய்தாகிவிட்டது. இது தான் பாக்கி. இந்த ஜல்லிக்கட்டை நிறுத்தி விட்டால், இந்தியாவில் உயிர் சேதமே இருக்காதா? இது வீர விளையாட்டு. தமிழர் குணங்களில் எஞ்சி நிற்கும் ஒரு சில குணங்களில் இதுவும் ஒன்று. நம்மாளு இலவசத்துக்கும் க்யூவில நிப்பான், மாட்ட அடக்கறதுக்கும் க்யூவில நிப்பான். எங்களை பாதுகாத்துக்க எங்களுக்கு தெரியும். நாட்ல காயர்லாஞ்சிக்கு தீர்ப்பு கிடைச்சாச்சான்னு பாருங்கப்பு.

***

ஜல்லிக்கட்டுக்கு தடைன்னு மட்டும் வேகவேகமா தீர்ப்பு எழுதத் தெரியுதுல? அதே தீர்ப்ப அதே வேகத்தோட, பம்பாயில் பெண்களை ஒரு கும்பலே மானபங்கம் செஞ்சதே, அத ஒரு வாரத்துக்குள்ள கண்டுபிடிக்கனும்னு, இல்லீன்னா சம்பந்தப்பட்ட அதிகாரிகளை பணி நீக்கம் செய்ய வேண்டும்னு தீர்ப்பு எழுதச்சொல்லுங்க பார்ப்போம்? முடியாது. ஆயிரெத்தெட்டு ரூல்ஸ் இருக்கு. கைது செய்யப்பட்டவங்களுக்கு பெயில் கிடைக்குது. காயர்லாஞ்சி என்ன ஆச்சு? கேஸ் நடத்துக்கிட்டே இருக்கு. ஏன், இந்த மாதிரி கேஸ்ஸ¤க்கு கூட வேகமா தீர்ப்பு எழுத முடியாதா? ஒன்னுமே புரியல.

இன்னிக்கு, இன்னவரைக்கும் மும்பை கேஸ்ல கண்டுபிடிச்சத, ரேணுகா சவுத்ரி விசாரிக்க போகிறார். என்ன நடக்குதுன்னு பாப்போம்.

***

பத்திரிக்கைகளின் வேலை ஒரு செய்தியை எழுதுவதோடு மட்டுமே முடிவடைவதில்லை. அதை யார் வேண்டுமென்றாலும் செய்யலாம். இப்பொழுது ப்ளாகர்களே செய்திகளை பதிவு செய்கிறன்றனர். பத்திரிக்கைகளின் வேலை, செய்திகளை follow-up செய்வது. பின்ன என்ன இதுக்கு நம்பர் ஒன் புலனாய்வு இதழ்ன்னு அட்டையில போடனும்?

எத்தன மறக்கப்பட்ட கேஸ்கள்? அவையெல்லாம் என்ன ஆயிற்று?

***

என் நண்பன் என்னிடம் கேட்ட பத்து கேள்விகள், மற்றும் பதில்கள்.

இன்று மதிய சாப்பாட்டிற்கு அப்புறம், உட்கார்ந்து பேசிக்கொண்டிருந்த பொழுது என் நண்பன் என்னிடம் பத்து கேள்விகளை கேட்டான். அதற்கு பதில் சொல்ல சொன்னான். விளக்கம் தேவையில்லை என்றும், just as short as possible, முடிந்தவரை yes/no மட்டுமே சொல்லவேண்டும் என்றான்.

அவன் கேட்ட கேள்விகளும் அதற்கான பதில்களும்.

1. Tamil Cinema’s best introduction song?
புதிய வானம் புதிய பூமி (அன்பே வா)
பொதுவாக என் மனது தங்கம் (முரட்டுக்காளை)


2. Best PrimeMinister for India? Best President?
திரு. ராஜீவ் காந்தி. President?! எனக்கு அந்த பதவியே பிடிக்காது. அந்த பதவியே தேவையில்லை என்று நினைப்பவன் நான்.

3. India’s best (usefull) nobel prize winner?
Sir CV Raman

4. India’s economy is dependent on US economy. Do you think India’s economy can be independent?
Since every thing is Globalized now, there cannot be really an independent economy. But India have to come out of “IT sevice” sector. We have to innovate something. We need to spend a lot in research.

5. Does Indian NRI’s have patriotisim still left in them?
Yes. (But I dont think that is important)

6. India/Pakisan problem will be solved in future?
No. தூங்குகிறவர்களை மட்டுமே எழுப்ப முடியும்.

7. இது நாள் வரை தமிழ்நாட்டின் சிறந்த முதலமைச்சர் யார்? இனி யார் சிறந்த முதலமைச்சராக இருப்பார்?
இதுநாள் வரை: பெருந்தலைவர் காமராஜர்.
இனி: ரஜினிகாந்த் (இனி வரும் முதல்வர்களில்)

8. எம்ஜிஆர்/சிவாஜி அப்புறம் ரஜினி/கமல் அப்புறம் விஜய்/அஜித், இனி யார்?
தனுஷ் / (யாரும் இல்லை)

9. புத்தகம் படிக்காமல் இருப்பது, கெட்ட பழக்கமா என்ன ?
கண்டிப்பாக கிடையாது.

10. Are we really destroying the world by polluting and cosuming the nature in excess?
Yes. Of Course.
A cartoon from Sunday Times/Strait Times

செத்தாலும் and Veronika decides to die

சில மாதங்களுக்கு முன் சிவஸ்ரீ அவர்கள் எழுதிய “செத்தாலும்” என்கிற சிறுகதையை படிக்க நேர்ந்தது. அது காலச்சுவடில் வெளிவந்தது என்று நினைக்கிறேன். அந்த சிறுகதை ஒரு பெண்ணைப் பற்றியது. அந்தப் பெண் ஏதோ ஒரு காரணத்துக்காக தற்கொலைக்கு முயற்சி செய்வாள். ஆனால் அவள் விஷ மருந்து குடித்திருந்த நிலையில், குற்றுயிரும் குலை உயிருமாக, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, கடின போராட்டத்தற்குப் பிறகு காப்பாற்றப்படுவாள். அந்த சிறுகதையில் சிவஸ்ரீ, அந்தப் பெண் உயிர் பிழைப்பதற்குள் என்னென்ன வகையில் கஷ்டப்படுகிறாள் என்பதை நிதானமாக அழகாக நகைச்சுவையாக சொல்லியிருந்தார். கதையைப் படிப்பவர்களுக்கு தற்கொலை ஆசை, அதுவும் விஷ மருந்து குடித்து தற்கொலை செய்துகொள்ளும் ஆசை கண்டிப்பாக வராது, என்றே எனக்கு தோன்றியது. எனக்கு கதை மிகவும் பிடித்திருந்தது. எனவே சிவஸ்ரீ அவர்களுக்கு ஒரு ஈமெயில் அன்றே அனுப்பினேன். அவரிடமிருந்து உடனே பதில் வந்தது. சில நாட்கள் கழித்து அவர், ஜனாதிபதி கையால் விருது வாங்கிய செய்தியும் பேப்பரில் வந்திருந்தது.

ஒரு சில வாரங்களுக்கு முன் ஏதும் படிக்க கிடைக்காமல், Paulo Coelho எழுதிய, veronika decides to die என்கிற புத்தகத்தை எடுத்தேன். இந்த புத்தகம் ரொம்ப நாட்களுக்கு முன்னால் வாங்கியது, படிக்காமல் வைத்திருந்தேன். Paulo coelho ஒரு brazilian எழுத்தாளர். அவரது The Alchemist என்கிற நாவல் மிகவும் பிரபலமானது. எனக்கு மிகவும் பிடித்தமான நாவலும் கூட. இன்று வரை, புத்தகம் வாசிக்காத எனது நண்பர்கள் யாவருக்கும் பிறந்தநாள் பரிசாக நான் முதலில், இந்த நாவலைத்தான் கொடுத்திருக்கிறேன். எப்படியும் ஒரு ஐந்து காப்பியாவது இந்த நாவலை நான் வாங்கியிருப்பேன். இந்த நாவலே ஒரு தழுவல் தான். ஆயிரத்தோரு அரேபிய இரவுகளில் வரும் ஒரு கதையை அடிப்படையாக வைத்து, Paulo coelho இதனை அருமையாக எழுதியிருப்பார். Laurence Fishburne (The Matrix) இந்த நாவலை படமாக தயாரித்துக் கொண்டிருக்கிறார் என்று கேள்வி. அந்த எழுத்தாளர் எழுதிய Veronika decides to die, என்கிற நாவலை நான் வாசிக்கத் தொடங்கிய சிறிது நேரத்திலேயே, அந்த நாவல், சிவஸ்ரீ அவர்களின் கதையின் சாயலைக் கொண்டிருந்ததை உணர்ந்தேன். சாயல் என்று சொல்லிவிட முடியாது, ஆரம்பம் கிட்டத்தட்ட 80% அதே போலத்தான். மூன்று அத்தியாயங்களுக்கு மேலே, படிக்க பிடிக்காமல் மூடி வைத்து விட்டேன்.

ஒரு ஐடியாவின் ஒரிஜினாலிட்டி எங்கே இருக்கிறது என்பதை அதன் ஒரிஜினலைப் பார்க்கும் வரையில் யாருக்கும் தெரிவதில்லை. கமலஹாசனின் குருதிப்புனல் படத்தில் வரும் “every one has a breaking point” வசனம் எனக்கு மிகவும் பிடித்தமானது. ச்சே கமலஹாசன் எப்படி யோசிக்கிறார் என்று நினைத்திருந்தேன். ஆனால் அதே வசனத்தை The Shawshank Redemption திரைப்படத்தில் பார்க்க நேர்ந்தது. இப்போ நாம எங்கெங்கோ படித்ததை பகிர்ந்து கொள்கிறோம் இல்லியா? அது போல அவர் எங்கெங்கோ பார்த்ததை நம்மோடு பகிர்ந்துகொள்கிறார். ஆனால் நாம் courtesy இன்னார் என்று சொல்லிவிடுகிறோம், அவர் சொல்வதில்லை அவ்வளவு தான் வித்தியாசம்.

***

கற்றது தமிழ் திரைப்படத்தை முன்வைத்து சாருநிவேதிதா எழுதியிருந்த கட்டுரையை வாசித்தேன். Georges Bataille வின் சில வரிகளை மேற்கோள் காட்டிவிட்டு, படத்தை இன்னும் சிறப்பாக செய்திருக்கலாம் என்றும் பிரபாகரனின் கஷ்டங்களை மட்டும் எடுத்திருந்தால் ஒரு விதமான குரூர அழகியல் கிடைத்திருக்கும் இப்பொழுது அது மிஸ்ஸிங் என்று எழுதியிருந்தார். குரூர அழகியல் சார்ந்த திரைப்படங்கள் என்றதும் எனக்கு சட்டென்று நினைவுக்கு வந்தது இரண்டு படங்கள். ஒன்று ஆறிலிருந்து அறுபது வரை. மற்றொன்று பொற்காலம். ஆனால் இந்த கற்றது தமிழ் திரைப்படம் குரூரமானது என்ற வகையில் ஒத்துக்கொள்ளலாமே தவிர, குரூர அழகியல் என்றெல்லாம் நினைத்துக்கூட பார்க்க முடியாது. அழகாய் இருப்பதற்கு சில இலக்கணங்கள் இருக்கிறதல்லவா? வன்முறையை மற்றும் காழ்ப்புணர்ச்சியை தூண்டிவிடும் இந்த திரைப்படம், நானும் எனது படமும் தமிழை முன்வைத்து வரலாற்றில் இடம் பெறுகிறோமா இல்லையா பார், என்பது போன்ற சவாலுக்காக எடுக்கப்பட்டது என்றே தோன்றுகிறது. Like அம்முவாகிய நான் திரைப்படத்தில் வரும் வசனத்தைப் போல, “you stand in history!”. அம்முவாகிய நான் திரைப்படத்தைப் பற்றி பிரிதொரு முறை பேசலாம்.

கற்றது தமிழ் ஒரு வகையில் தடை செய்யப்படவேண்டிய திரைப்படம். Boys என்ற திரைப்படத்தை தடைசெய்தவர்கள் இதை தடை செய்யாமல் இருப்பதற்கு என்ன காரணம் என்று தெரியவில்லை. அன்றைக்கு மதன், தனது திரைப்பார்வையில், இந்த திரைப்படத்தைப் பற்றி இயக்குனரிடம் கேட்ட பொழுது, அவர் மென்துறை சார்ந்த மக்களின் மீது தீராத பாசம் வைத்திருப்பது போலவும் அவர்களுக்காக தான் பரிதாப்படுவதாகவும் சிலாகித்து மிகவும் வருத்தத்தோடு (கவனிக்க, சிலாகித்து பின் வருத்தத்தோடு!) சொல்லியிருந்தார். அவர் வருத்தப்படுவதற்கு ஒன்றுமே இல்லை, இப்படியொரு படத்தை எடுத்தபிறகு.

அந்த அன்னை அன்னை பாடலும், அந்த call center பையனும், பிராபாகர் அவனை படுத்தி வைத்த பாடும் (நம்மையும் சேர்த்துதான்!) இன்றும் எனக்கு பசுமையாக நினைவில் நிற்கிறது. “அன்னை அன்னை” பாடலை நீ பாடிக்காட்டு பார்ப்போம் என்பான் பிரபாகர் இதெல்லாம் ஒரு சவாலாய்யா? நாங்க என்ன இங்கிலாந்தில் இருந்தா இறங்கி வந்திருக்கோம்? இன்றைக்கு இருக்கும் blog மக்களில் பெரும்பாலானோர் மென்துறையை சார்ந்தவர்களே!

அவர்கள் தமிழை வளர்க்கிறார்களோ
(தமிழை யாரும் வளர்க்க முடியாது, தமிழ் தான் எங்களை வளர்க்கிறது!) இல்லியோ, எப்படியேனும், ஜெயமோகனையோ, ராமகிருஷ்ணனையோ, கிராவையோ, சுராவையோ, கல்கியையோ, பாரதியையோ ஆதவனையோ சிவஸ்ரீ யையோ பற்றி எழுதிக்கொண்டுதானே இருக்கிறார்கள்? எனக்கு தெரிந்த ஒரு ஆங்கில blogger, பாரதியின் பாடல்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துக் கொண்டிருக்கிறார்.

“அன்னை அன்னை” பாடலை என்னால் பத்து நிமிடங்களில் மனப்பாடம் செய்யமுடியும், என்னைப் போல..no i think its enough!

படத்தில் வரும் ஒரு முட்டாள் தனமான டயலாக் இப்பொழுதுதான் எனக்கு ஞாபகம் வந்தது: “ஏன்டா இரண்டாயிரம் வருஷத்துக்கு முன்னால் வந்த தமிழைப் படித்த எனக்கே இரண்டாயிரம் ரூபாய் தான் சம்பளம். இப்ப வந்த கம்ப்யூட்டர் படிச்ச உனக்கு இரண்டு லட்சம் சம்பளமா?” (correcta ஞாபகம் இல்லை!)

இவ்வாறான பொறுப்பற்ற வசனங்கள் ஒரு சாரர் மீது கோபத்தையும் வன்மத்தையும் கட்டவிழ்த்து விடுவதால் தான் இந்த படத்தை தடை செய்திருக்க வேண்டும் என்கிறேன்.

அது சரி, Georges Bataille வை சாருநிவேதிதா ழார் பத்தாய் என்கிறாரே, என்ன விதமான உச்சரிப்பு இது? இப்படித்தானா உச்சரிக்க வேண்டும்? தெரிந்தவர்கள் துப்பு கொடுக்கவும்.

***

வாரிசுகள், இராவணகாவியம், கலர்டீவி மற்றும் பொன்னியின் செல்வன்

வாரிசு அரசியல் என்பது சரியா? தவறா? (உனக்கு இது ரொம்ப முக்கியமா? உன்கிட்ட யாராச்சும் கேட்டாங்களா?) ரொம்ப நாளைக்கு முன்னர் முடியாட்சி இருந்தது. Like தசரதன் ஆட்சி செய்தார் என்றால், அவருக்கு அப்புறம் ஸ்ரீ ஸ்ரீ இராமபிரான் ஆட்சி செய்வது போல. அவர் காட்டுக்கு சென்றாலும், மக்கள் அவர் திரும்ப வரும் வரை வெயிட் செய்வாங்க. அப்புறம் கிழக்கிந்திய கம்பெனியின் ஆட்சி வந்தது. பிறகு குடியாட்சி முறை வந்தது. குடியாட்சி முறையா என்றால், atleast பெயரளவில். ஆனால் நடப்பது உண்மையில் குடியாட்சியா? ஓட்டு போடுகிறோம் ஆனால் ஆட்சியில் அமர்வது யார்?

நடுவில் இருந்த கிழக்கிந்திய கம்பெனியின் ஆட்சியில் மட்டுமே வாரிசு அரசியல் இல்லை எனலாம். காம்ரேட்கள் ஆட்சி செய்யும் சில மாநிலங்களைத் தவிர மற்ற எல்லா இடங்களிலும் வாரிசு அரசியலே -முடியாட்சியே- நடைபெறுகிறது. வாரிசு என்பது சொந்த மகனாகவோ, அல்லது மகளாகவோ தான் இருக்கவேண்டும் என்பதில்லை. சித்தப்பா மகனாகக் கூட இருக்கலாம். அல்லது மனைவியாகவோகூட இருக்கலாம், இல்லையேல் – எனக்கு ஒன்றும் தெரியாதுப்பா- எப்படி வேண்டுமென்றாலும் இருக்கலாம். வாரிசு என்று அறிவிக்கும் அவருக்கும், வாரிசானவருக்கும், இல்லையேல் வாரிசாக தன்னை அறிவித்துக்கொண்டவருக்கும் கண்டிப்பாக நெருங்கிய தொடர்பு இருந்திருக்கிறது. இருக்கும். இந்திய அரசியலை – ஏன் உலக அரசியலை கூட- உற்று, இல்லை இல்லை சும்மாகாச்சுக்கும் பார்த்தால் கூட, வாரிசு அரசியல் எங்கும் நிறைந்திருப்பது புலப்படும்.

இதற்கும் இன்று (21/11/2007) இந்தியா வந்த அமேரிக்காவின் ஜெஸ்ஸி எல் ஜாக்ஸன் என்ற சிவில் ரைட்ஸ் ஆக்டிவிஸ்ட் ராகுல் காந்தியைச் சந்தித்ததற்கும் எந்த சம்பந்தமும் இல்லை.

அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா.

***

இராமாயணம் என்னை கடந்த சில நாட்களாகவே ரொம்பவும் பாதித்து விட்டது. இதற்கு முன்னர் எனக்கு இராமாயணத்தில் அவ்வளவாக நம்பிக்கை இல்லை. இப்பவும் தான். ஆனால் நடந்து முடிந்த விவாதங்கள் என்னை இராமாயணத்தை பற்றி அறிந்துகொள்ளத் தூண்டின.

ரொம்ப நாட்களுக்கு முன்னால் இருந்தே எனக்கிருந்த சந்தேகங்கள் இவை தான்:
1. இராமர் இராமெஸ்வரத்தில் பாலம் அமைத்து இலங்கையை அடைந்திருந்தால், அங்கிருக்கும் லோக்கல் மக்களின் உதவி இல்லாமல் செய்திருக்க முடியாது. இப்படி ஒரு மிகப்பெரிய விசயம் தமிழ்நாட்டில் நடந்திருக்கும் பொழுது, இதை எப்படி நம் இலக்கியவதிகள், வரலாற்று மக்கள் தீவிரமாக பதிவு செய்யாமல் விட்டனர்?

2. இராமரைப் பற்றிய குறிப்புகள் தமிழ் இலக்கியத்தில் ஏன் அவ்வளவாக இல்லை? அழிக்கப்பட்டதா? அழிக்கப்பட்டது என்றால், வரலாறு மறைக்கப்பட்டிருக்கிறது என்று தானே அர்த்தம்? அப்பொழுது, வரலாறு என்பதே பொய் என்றாகிவிடுமே? (ofcourse, அது தான் உண்மையும் கூட!)

விகடனில் மதனிடம் ஒரு கேள்வி கேட்கப்பட்டது:
கேள்வி: பெண்களைப் பற்றிய வரலாறு பெரிதும் இல்லையே ஏன்?
பதில்: இதுவரை பெண்கள் பெரிதாக எங்கும் ஆட்சி செய்யவில்லை. இனிமேல் ஆட்சிசெய்யலாம். வரலாறு எழுதப்படலாம்.

ஆட்சியில் இருப்பவர்கள் தங்களைப் பற்றி பெரிதாக எழுதிக்கொள்வது இயல்புதான். தங்களைத் தாங்களே புகழ்ந்துகொள்வதை கூட ஒரு வழியில் ஏற்றுக்கொள்ளலாம் ஆனால் தாங்கள் நல்லவனாக வல்லவனாக இருக்கவேண்டும் என்பதற்காக, மற்றவர்களை கேவலமாக சித்தரிப்பதை எப்படி ஒப்புக்கொள்ள முடியும்?

இராவணன் தீவிர சிவபக்தன் என்பதற்கான ஆதாரங்கள் தமிழ் இலக்கியத்தில் நிறைய இருக்கின்றன. ஆனால் அவன் சீதையைக் கவர்ந்து சென்றான் என்பதற்கான ஆதாரங்கள் தமிழில் அதிகம் இல்லையே? கம்பராயணம் என்பது இலக்கியம். அது வால்மிகியின் நாவலைத் தழுவி எழுதுவதைப் போன்று. புதுமைப்பித்தன் ருஷ்ய நாவல்களைத் தழுவி எழுதியது போல. ஹருகி முராகமி எழுதிய ஜப்பானிய நாவலை ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பதைப் போல அவ்வளவே. அதை வரலாற்று தடயமாக ஏற்றுக்கொள்ள முடியாது.

இராமபிரானின் பராக்கிரமங்களை நிரூபிக்க ஒரு வில்லன் தேவையென்றால், மகாபாரதம் போலவே, அவர்களுக்குள் ஒரு வில்லனை தேடிக்கொள்வது தானே? ஏன் அங்கிருந்து இவ்ளோ தூரம் வந்து ஒரு சிவபக்தனான தமிழ் மன்னனை வில்லனாக பிடிப்பானேன்? இப்பொழுதிருக்கும் தமிழ் படங்களுக்கு, ஹிந்தி பேசும் வில்லன்களை நாம் தேடிப்பிடிப்பது போல. இராவணனைப் பற்றி வான்மீகி எழுதியதற்கு என்ன காரணம் இருந்திருக்க முடியும்?

எனக்கு இராமபிரானைப் பற்றி கவலை இல்லை, I really dont care. இராவணன் தீயவன் தானா? ஆதாரம் இருக்கிறதா?

Proof of concept?

***

இம்மாதிரியான ஒரு சூழலில் தான், நான் நூலகத்தில் சும்மா சுற்றிக்கொண்டிருந்த பொழுது, இராவணகாவியம் என்ற நூலைப் பார்த்தேன். அதன் முதல் சில பக்கங்களில், கதைச்சுருக்கம் கொடுக்கப்பட்டிருந்தது. நாற்பதுகளில் வெளிவந்த இந்த நூல் அப்பொழுது தடை செய்யப்பட்டிருந்திருக்கிறது. பின்னர் திராவிட ஆட்சி வந்ததற்கு அப்புறம் தான் தடை நீக்கம் செய்யப்பட்டிருக்கிறது.

இராமபிரானைப் பற்றி கேலியாக பேசினால், மக்கள் மனம் புண்படுமோ என்று யோசிக்கும் வருத்தப்படும், நம் தலைவர்கள் (சில நடிகர்களும் கூட!), இராவணனைப் பற்றி இழிவாக (கவனிக்கு இழிவாக, கேலியாக அல்ல!) பேசும் போது ஒரு சமூகத்தின் மனம் புண்படுமே என்று ஏன் நினைப்பதில்லை?

இராவண காவியத்தில் ஒரு கேள்வி கேட்கப்படிருந்தது:
அதாவது அவ்வளவு பெரிய மன்னனான, சீதையை தூக்கிவரத் துணிவிருந்த இராவணனுக்கு, சீதையை அடைவது அவ்வளவு கடினமாகவா இருந்திருக்கும்? அதுவும் தனது எல்லைக்குள்? ஆனால் அவன் சீதையின் மீது ஒரு விரலைக் கூட வைக்கவில்லை என்பது தான் உண்மை. (வைக்கமுடியவில்லை என்பதெல்லாம் சும்மா கதை!) இராவணன் சீதையை தங்கையாகத்தான் தூக்கிவந்திருக்கிறான். அது தான் உண்மை. தன் தங்கையின் மூக்கை அறுத்தவர்களுக்கு நல்ல பாடம் புகட்ட வேண்டும் என்பதற்காகத்தான் தூக்கிவந்திருக்கிறான், என்று சொல்கிறது இராவண காவியம்.

யோசிக்க வேண்டிய விசயம் தான்.

ஆரியர்கள் திராவிடர்களை மட்டம் தட்ட இப்படியெல்லாம் எழுதினார்கள் எனபதையும் மறுத்து விட முடியாது. ஏனென்றால் கம்பராமயணம் சோழர்கள் காலத்தில் வெளிவந்தது, சோழர்கள் திராவிட மன்னர்கள் அல்லர்.

இராவண காவியம் கதைச் சுருக்கத்தை செராக்ஸ் செய்து வைத்திருக்கிறேன், வெளியிடலாம் என்று தான் நினைத்தேன், ஆனால் என் நோக்கம் இராமபிரானைப் பற்றி அவதூறு சொல்ல வேண்டும் என்பதல்ல, இராவணன் நல்லவனாக இருந்திருப்பானோ என்கிற நப்பாசை தான்.

ஏனென்றால், இந்திய சட்டத்தின் படி, ஆயிரம் குற்றவாளிகள் தப்பிக்கலாம், ஆனால் ஒரு நிரபராதி தண்டிக்கப்படக்கூடாது, என்பது தானே? 🙂

அரசே முன் வந்து, இதை ஆராய்ச்சி செய்ய முன்வரலாம். ஆராய்ச்சி செய்ய நிதி ஒதுக்கலாம். மற்ற நாடுகளில் என்னென்னவோ ஆராய்ச்சி செய்கிறார்கள். ஒரே ஒரு அகல்வாராய்ச்சியில் தோண்டியெடுக்கப்பட்ட கல்லில் எழுதப்பட்ட எகிப்திய மெசபட்டோமிய சொற்களை வைத்துக்கொண்டு பல வருடங்களாக பொழுதைக் கழிப்பவர்கள் இருக்கிறார்கள் இல்லியா? இந்த ஆராய்ச்சி projectஇன் மூலமாவது, தமிழை முறையாக விரும்பிப் படித்தவர்களுக்கு, தமிழ் கற்றவர்களுக்கு நிறைய வேலை வாய்ப்பை வழங்கலாம்.

இது ரொம்ப முக்கியமா என்று கேட்பவர்களுக்கு: 750கோடி ரூபாய் செலவில் (ஒரு பகுதி செலவுதான், மொத்த செலவு இல்லை) கலர்டீவி கொடுப்பதையும், சிவாஜி போன்ற மிகப்பெரிய பட்ஜெட் படங்களுக்கு கூட தமிழில் பெயர் வைத்தனர் என்கிற ஒரே ஒரு காரணத்துக்காக, வரிசலுகை வழங்குவதையும், ஒப்பிடும் போது இது முக்கியமானதாகத்தான் படுகிறது.

செய்வார்களா திராவிடர்கள்?

***

Lord Of The Rings இன் மூன்று பாகங்களையும் மூன்றாவது முறையாக பார்த்து முடித்தேன். இந்த முறை என் மனைவியுடன். இரண்டு பாகங்கள் பார்த்து முடித்த அவருக்கு, மூன்றாவது பாகத்தைப் பார்க்காமல் இருக்க முடியவில்லை. மூன்றாவது பாகம் பார்த்து முடித்த பின், நான்காவது பாகம் இருந்தால் நன்றாக இருக்குமே என்றார்.

எனக்கு தெரிந்தவரையில், இதேபோன்றதோரு படம், இனிமேல் எடுக்கமுடியுமா என்பது சந்தேகமே. பீட்டர் ஜாக்சன் நம்மை அவர்களின் காலத்திற்கே அழைத்துச் சென்றிருப்பார். ஒவ்வொருமுறை பார்க்கும் பொழுதும் எனக்கு, ஒரே மாதிரியான அதே மாதிரியான நெகிழ்ச்சியே கிடைக்கிறது. Fresh always. Faromir போருக்கு செல்லும் பொழுது, Pipin பாடும் அந்த பாடல் மனதை உருக்கிவிடுகிறது. நான் பார்த்த அத்தனை தடவையும். அதே போல sam மற்றும் Frodoவின் நட்பு எப்பொழுதும் அழகாகவே, நெகிழ்ச்சியாகவே இருக்கிறது. Smegolஐப் பார்க்கும் பொழுது எல்லாம் எப்பொழுதும் போலவே கோபமும், இரக்கமும் ஒரு சேர வருகிறது. Aragorn மற்றும் Gandalfஐப் பார்க்கும் போது வியப்பு மற்றும் மரியாதை ஏற்படுகிறது. legolas, எப்பொழுதும் போல fantastic.

பிற்காலத்தில் தொழில் நுட்ப வளர்ச்சியால், இதை விட அருமையாக படங்கள் எடுக்க வாய்ப்பிருக்கிறது. ஆனால் அந்தப்படங்கள் LOTR நம் மனதில் ஏற்படுத்திய தாக்கதை ஏற்படுத்துமா என்பது சந்தேகம் தான்.

***

எனக்கு LOTR பார்க்கும் பொழுதெல்லாம், ஒரு விசயம் ஞாபகத்துக்கு வந்துவிடும். ஒரு விசயத்துக்காக ஏங்குவேன், நான். அது பொன்னியின் செல்வனை திரைப்படமாக எடுப்பது. எவ்வளவு அழகான கதை அது? எவ்வளவு அருமையான Aragornஐப் போல வீர மன்னர்களை உடைய கதை அது? பொன்னியின் செல்வன் தமிழ் வரலாற்று புனைவு நாவல்களின் தலைசிறந்த ஒன்று, என்பதை மறுக்கஇயலாது. புதுமைப்பித்தனுக்கு கல்கியின் மீது வேறு விதமான எண்ணம் இருந்தாலும், பொன்னியின் செல்வன் is epic.

எனக்கு பொன்னியில் செல்வனை திரைப்படமாக ஆக்க வேண்டும் என்பது நீண்ட நாள் விருப்பம். மணிரத்னம் பொன்னியின் செல்வன் கதையை திரைக்கதையாக மாற்றி விட்டார், 80 சீன்களிள் அழகாக எழுதிவிட்டார் என்று செய்திகள் அவ்வப்போது வரும். உண்மையாகவே இருந்துவிட வேண்டும் என்று நினைப்பேன்.

பொன்னியின் செல்வனை திரைப்படமாக உருவாக்க ரைட்ஸ் முன்பு சிவாஜி அவர்கள் வைத்திருந்ததாகவும், பின்னர் அது எம்ஜிஆர் அவர்களின் கைக்கு மாறியது என்றும், இப்பொழுது கமலஹாசனிடம் இருக்கிறது என்றும் சொல்லப்படுகிறது.

என்னுடைய ஆசை:
நடிகர்கள்:

ராஜராஜ சோழன் : கமலஹாசன்
வல்லவராயன் வந்தியத்தேவன் – ரஜினிகாந்த்
ராஜெந்திரசோழன் – கமலஹாசன் (அல்லது அஜித்குமார்)
பெரிய பலுவேட்டரையர் – சத்யராஜ் (அல்லது ப்ரகாஷ்ராஜ்)
சின்ன பழுவேட்டரையர் – நெப்போலியன்

மணிரத்னம் டைரகட் செய்யவேண்டும். இளையராஜா இசையமைக்கவேண்டும். ஏவிஎம் தயாரிக்க வேண்டும். மூன்று பாகங்களாகக் கூட எடுக்கலாம். ஆனால் கண்டிப்பாக ஒரு பாகமாக எடுக்கக் கூடாது. மருதநாயகத்துக்கு முன்னர் கமல் இதைச் செய்யலாம்.

நடக்குமா?
***

Ram And Shantaram

(Ram, Shantaram, Rang De Basanti, Satham Podathae, Rajinikanth)

எஸ்.ராமகிருஷ்ணன் ஒரு முறை – விகடனில் தொடராக வெளிவந்த தேசாந்தரியில் என்று நினைக்கிறேன் – புராதாண சின்னங்களை பாதுகாப்பது பற்றி எழுதியிருந்தார். அவற்றைப் பாதுகாப்பதில் வெளிநாட்டினர் காட்டும் அக்கறையையும் நாம் காட்டும் அக்கறையையும் ஒப்பிட்டுப் பார்த்து, மிகுந்த வருத்தத்துடன், நாம் ஏன் அவற்றைப் பாதுகாப்பதில் ஆர்வம் எடுத்துக்கொள்வதில்லை என்று வியப்பாக கேட்டிருந்தார்.

இராமாயணம் புனைவாக இருக்கலாம் இல்லையேல் உண்மையாகக் கூட இருக்கலாம். யாருக்கு தெரியும்? யார் proove செய்யமுடியும்? எல்லா பிரச்சனைகளுக்குமே இரு தரப்பான வாதங்கள் எப்பொழுதுமே இருந்து வந்திருக்கின்றன. இப்படியும் வாதாடலாம். அப்படியும் வாதாடலாம். அதானால் தானோ என்னவோ நமது நாக்கிற்கு எழும்பு என்பதே கிடையாது. எப்படி வேண்டுமானாலும் வளையும். நமக்கிருக்கும் கொள்கைகள் கணக்கிலடங்காதவை. அந்த கொள்கைகளையெல்லாம் கண்டிப்பாக மற்றவர்கள் மீது திணித்துத்தானாக வேண்டுமா? ராமர் பாலம் என்பது ராமர் கட்டினதோ அல்லது ராவணன் கட்டினதோ அல்லது ரஜினிகாந்த் கட்டினதோ, எப்படி இருந்தாலும் அது ஒரு புராதண சின்னம். Historical Place. அதை ஏன் இடிப்பானேன்? நமது புராதாண சின்னங்களை நாமே பாதுகாக்காவிட்டால் யார் தான் பாதுகாப்பது?

***

நேற்று மதியம் நன்றாக பருப்பு மற்றும் கத்தரிக்காய் புளிக்குழம்பை ஒரு கட்டு கட்டிவிட்டு, அரை மயக்கத்தில் டீவி பார்த்துக்கொண்டிருந்த பொழுது, HBOவில் Davinci Code ஓடிக்கொண்டிருந்தது. என் மனைவி (எனக்கு திருமணம் முடிந்துவிட்டது. This sep 13th. Very sorry Girls! 🙂 ) DaVinci Code படத்தை பார்த்ததில்லை. எனவே நான் அந்தக் கதையை – கர்த்தருக்கு மனைவி உண்டு என்பதையும் அவர்களுக்கு குழந்தை இருந்திருக்கிறது என்பதையும்* – விளக்கிக் கூற அவளும் ஆர்வமாகி பார்க்க ஆரம்பித்தபொழுது, வேறு வழியின்றி நான் ஒவ்வொரு காட்சியாக விளக்கத் தொடங்கினேன். எனக்கிருக்கும் பழக்கம் என்னவென்றால் படத்தின் முடிவு twistingஆ இருந்தா, அந்த முடிவைப் பற்றி கொஞ்சம் கூட hint கொடுக்கமாட்டேன். (நானே என் சொந்த அறிவால் -இருக்கும் பட்சத்தில்!- என்னிடம் கதை கேட்பவர்களை மேலும் குழப்பிவிடுவேன்! அந்த twist வரும்பொழுது அவர்கள் முகத்தில் காணக்கிடைக்கும் அதிர்ச்சி கலந்த ஆச்சரியத்தை மிகவும் ரசிப்பேன்.) எனக்கு மதிய தூக்கம் சுத்தமாக போய்விட்டது. இரண்டாவது முறை பார்த்த பொழுதும் DaVinci Code நன்றாகத்தான் இருந்தது.

நான் மலேசியாவில் இருந்த பொழுது, இந்த Davinci Code நாவல், கிட்டத்தட்ட இரண்டு வருடங்களாக, Fiction Listஇல் முதல் இடத்தை தக்கவைத்துக்கொண்டிருந்தது. இந்த நாவலை Bangsar MPHஇல் வாங்கி ஒரே மூச்சில் படித்துமுடித்தேன். Opus Deiயும் Knights Of the Templarஉம், Priory Of Sionஉம் என்னை மிகுந்த ஆச்சரியத்தில் ஆழ்த்தின. Internetஇல் தேடியபொழுது இவையாவும் உண்மையே என்பது போல வாதங்கள் மற்றும் ஆதாரங்கள் (?!) நிறைய கிடைத்தன. எதை நம்புவது?

Rang De Basantiஇல் சித்தார்த்தின் அப்பா சித்தார்த்தைப் பார்த்து SMS generation என்று திட்டுவார். அதென்ன SMS generation? Any speech that goes beyond 2 or 3 sentences becomes a lecture! அதே போலத்தான் என் மனைவியும், படத்தில் சேர்ந்தார் போல ரெண்டு நிமிஷம் யாராவது பேசிக்கொண்டிருந்தால், தூக்கம் வருது என்று பெரிய்ய்ய கொட்டாவி விட ஆரம்பித்துவிடுவாள். உஷாராக அவளிடம் பேச்சுக் கொடுத்துக் கொண்டேயிருக்க வேண்டும்.

சும்மா கதை கேட்டால் பரவாயில்லை, அதில் நிறைய சந்தேகங்கள் வேறு கேட்பாள். படத்தின் logicக்கில் டைரக்டர் விட்ட ஓட்டைகளை, நான் தான் பெரும்பாலும் அடைத்துக்கொண்டிருப்பேன். (Like Sivaji.) இல்லையென்றால், என்ன பெரிய இங்கிலீஷ் படம், நம்ப தமிழ் படம் மாதிரிதான் எடுக்கறாய்ங்க, என்று ஈசியாக சொல்லிவிடுவாள்.

இந்தப்படத்தைப் பார்த்த பிறகு, அவள் மிகுந்த வியப்பில் ஆழ்ந்துபோனாள். எப்படி இத அந்த மக்கள் ஒத்துக்கிட்டாங்க? சண்டை போடலியா? என்று கேட்டுக்கொண்டேயிருந்தாள்.

ஒரு மதத்தின், ஆணிவேரையே சாய்த்துப்பார்க்கக் கூடிய conceptஐ கொண்டது இந்தப்படம். யோசித்துப் பாருங்கள், ராமர் பத்தி இதேபோலதொரு controversial படத்தை இந்தியாவில் எடுத்திருந்தால் என்னவாகியிருக்கும்?

சகிப்புத்தன்மை என்கிற ஒன்று இருக்கிறதில்லையா? அதேபோல கருத்துச் சுதந்திரம் என்கிற ஒன்றும் இருக்கிறதில்லையா? ஒருவர் ராமர் இருக்கிறார் என்று சொன்னால் மற்றவருக்கு அதை மறுக்கும் உரிமை இருக்கிறதா இல்லையா?

***

சத்தம் போடாதே என்றொரு படம் பார்த்தோம். நன்றாக இருந்தது. அந்த சென்னை600028 இல் அந்த cricket teamஇல் இருந்த ஒரு பையன் (captain நூல் விடும் அந்த பெண்ணிற்கு – அந்தப் படத்தில வர்ற கிரிக்கெட் captainப்பா, மாட்டிவிட்ருவீங்க போல- அண்ணனாக நடித்தவர்..பெயர் மறந்துபோச்சு) தான் இதில் ஹீரோ. நன்றாக நடித்திருக்கிறார். பத்மப்ரியாவும் (Girlsன்னா மட்டும் பெயர ஞாபகம் வெச்சிக்கோ!) நன்றாக நடித்திருந்தார் (இவரு பெரிய சிவாஜிகணேஷன், சர்டிப்பிகேட் கொடுக்கறாரு!). யுவன்ஷங்கர் ராஜாவின் இசை அருமை. Like in Ram. ஆனால் வஸந்துக்கு இந்த கேஸ் ஸ்டவ்வை வெடிக்கவைப்பதில் அப்படி என்னதான் ஆசையோ தெரியவில்லை. Easyயான solution இல்ல?

மொத்தத்தில் படம், அமைதியான நிசப்தமான, சற்றே மர்மம் நிறைந்த, இரவு போல. அனுபவித்து ரசிக்கலாம், அமைதியாக, கொஞ்சம் திகிலோடு. தியேட்டரில் சென்று படம் பாருங்கள் -என்னைப்போல வேலை வெட்டியில்லாமல் இருந்தால். Rerecording superb.

***

நிறைய புத்தகங்களை மாற்றி மாற்றி படிக்க எடுத்தேன். George Orwell எழுதிய 1984, joseph heller எழுதிய Catch 22, mark haddon எழுதிய the spot of bother, friedman எழுதிய world is flat. இதில் 1984 நன்றாக இருந்தது. science fiction. கொஞ்சம் பிடிபட ஆரம்பித்த பொழுது, தொலைத்துவிட்டேன். (என்னது புத்தகத்தை தொலச்சியா? டாக்ஸில வந்தபோது தொலச்சுட்டேன். அப்படியே எழுந்துவந்துட்டேன்.) எதேதோ புத்தகங்கள் படிச்சிட்டு, கடைசில shantaramல வந்து நிக்கறேன். இதில் கிட்டத்தட்ட 200 பக்கங்கள் படிச்சிட்டேன். so far so good. shantaram இப்பொழுது திரைப்படமாக எடுக்கப்படுகிறது. Johny Depp Shantaramஆக நடிக்கிறார்.

இது ஒரு உண்மை கதை. Gregory David Roberts என்கிற ஒரு ஆஸ்திரிலேய கைதி (கொள்ளை மற்றும் போதைப் பழக்கத்துக்கு அடிமையானவர்) , ஜெயிலில் (Victoria – maximum security prison) இருந்து தப்பித்து, இந்தியா வந்து, பாம்பேயில் பெயரை Shantaramஆக மாற்றிக்கொண்டு, வாழ்ந்தவர். பாம்பேயில் இருந்த பொழுது பல நிழல் உலக தாதாக்களிடம் தொடர்பு வைத்திருந்தவர்.

நம்ம ஊர் போலீஸ் பேசாம அவர aproover ஆக சொல்ல வேண்டியது தான? நிறைய தாதாக்களை arrest செய்யலாமே?!

***

Shantaramஇல் ஒரு வரி வரும். (p. 150)

A dream is a place where wish and fear meet. When the wish and the fear are exactly the same, we call the dream, a nightmare.

உண்மைதானோ? இந்த நாவலில் எனக்கு மிகவும் பிடித்தமான விசயம் என்னவென்றால் : அவசரமில்லாத நிதானமான descriptive narration. பாம்பேயிலிருந்த பொழுது ஒவ்வொருவரையும், ஒவ்வொரு விசயத்தையும் கூர்ந்து கவனித்திருக்கிறார். எல்லோரையும் அழகாக வர்ணிக்கிறார். Exactly like a honest narration, you know or atleast it appears like that, atleast to me. மேலும் ஆங்காங்கே அவர் தெளித்து செல்லும் philosophical thoughts. நம்மை நிறுத்தி, நிதானமாக யோசிக்க வைக்கின்றன. நிதானமாக.

***

* – As told in the novel Davinci Code written by Dan Brown.

படம். புத்தகம். நியூஸ். கா·பி.

(ஜனாதிபதி பதவி, ப்ரதீபாபாட்டீல், Salman Rushdie, பத்திரிக்கை சுதந்திரம், Investigative Journalism,Paparazzi )

Salman Rushdieக்கு KnightHood கொடுத்ததை எதிர்த்து, நடந்த பேரணிகள் (இந்தியாவில், கேரளாவில் கூட!) என்னை வியப்பில் ஆழ்த்தின. அவரை எதிர்த்து அன்று பேரணியில் பங்கு பெற்றவர்கள், அவருடைய நாவல்களை வாசித்திருப்பார்களா என்ற எண்ணம் என்னுள் எழுந்ததை, இங்கே நான் சொல்லியாகவேண்டும். வாசித்திருப்பார்களா? என்ன நாவல் வாசித்திருப்பார்கள்? Satanic Versus? Shame? Fury? Midnight’s Children? The Ground Beneath Her Feet? கடைசில இன்னொரு சாய்ஸ் All Of The Above? கண்டிப்பாக படித்திருக்கமாட்டார்கள் என்றே, நான் நினைக்கிறேன். அப்படியிருக்க ஏன் இத்தனை பேர் பேரணியில் பங்கு பெற்றார்கள்? யாரோ சொல்கிறார்கள் -சிறிதும் யோசிக்காமல், சற்றும் ஆராயாமல் – நாம் அவர்களின் கூத்துக்கு, like a puppet dancing to the strings (of politicians, religious gurus and cinema celebs), சந்தோஷமாக ஆடிக்கொண்டிருக்கிறோம்.

நான், இதுவரை சல்மான் ருஷ்டி எழுதிய ஒரே ஒரு நாவலைத்தான் படித்திருக்கிறேன், அது – The Ground Beneath Her Feet. அது ஒரு பிரமாதமான நாவல். I just loved the way he narrated. அவரைப் போல யாராலும் சீரியசாக காமெடி (அல்லது கேலி!) செய்ய முடியாது. சில விசயங்களில் அவர் என்னைப் போல, பட்டப்பெயர் வைபப்தில்!. கதையில் வரும் கதாப்பாத்திரங்களுக்கு முதலில் பெயர் வைப்பார், தொடர்ந்து அந்த கதாப்பாத்திரத்துக்கு ஒரு பட்டப்பெயரும் வைத்துவிடுவார். பிறகு அந்தக்கதாப்பாத்திரத்துக்கு நாவல் தோறும் அதே பட்டப்பெயர் தான். நமக்கு, அந்த கதாப்பாத்திரத்தின் உண்மையான பெயரே மறந்துபோயிவிடும். Like Reverend Mother.

போனவாரம் தான் The Midnight’s Children படிக்க ஆரம்பித்தேன். என் deskஇல் இந்தப்புத்தகத்தைப் பார்த்த என்னுடைய boss, இதையா படிக்கிறாய்? 25 பக்கங்களைக்கூட உன்னால் படிக்க முடியாது. You will shoot that guy என்றார். நான் ஒன்றும் சொல்லிக்கொள்ளவில்லை. ஆனால் எனக்கு Salman Rushdieஐப் பிடிக்குமே என்று மட்டும் தான் சொன்னேன்.

ஆனால் அவர் சொன்னது உண்மை என்பதை மறுக்கமுடியாது. 25பக்கங்கள் என்ன, என்னால் 15 பக்கங்களைக்கூட தாண்ட முடியவில்லை. I just cant stand that “perforated sheet”. what a stupid and cruel imagination? எப்படி இப்படி யோசிக்கறார்? Captivity படத்தில் அந்த juice (அதாங்க கண்,காது,மூக்கு மற்றும் இத்தியாதிகள்!) கூட இப்படித்தான், எப்படி இவர்களால் இப்படி யோசிக்கமுடிகிறது? இது ஒருவகையான torture என்றால், perforated sheet வேறு வகையான torture. அது என்ன Perforated Sheet?

Perforated Sheet என்றால் ஓட்டை இருக்கிற துணி என்று அர்த்தம். கதையின் ஹீரோவின் தாத்தா காஷ்மீரில் ஒரு டாக்டர். அவர் அப்பொழுதுதான் தனது practiceஐ அந்த ஊரில் ஆரம்பித்திருக்கிறார். அங்கிருக்கும் ஒரு மிகப்பெரிய செல்வந்தரின் மகளுக்கு நோய் கண்டவுடன், அந்த செல்வந்தர் தனது ஆஸ்தான மருத்துவர் வராததால் (அல்லது வேண்டுமென்றே!), ஹீரோவின் தாத்தாவை அழைக்கிறார். செல்வந்தரின் மகளுக்கு (Reverend Mother!) இரண்டு மூன்று செக்யூரிட்டிகள் (பெண்கள்!) இருக்கிறார்கள். டாக்டர் அந்த பெண்ணின் அறைக்குள் நுழைகிறார். அந்த பெண் ஒரு துணிக்கு அப்பால் இருக்கிறார். துணியில் ஒரு ஓட்டை இருக்கிறது. அதிர்ந்த டாக்டர், நோயாளி இப்படி துணிக்கு பின்னால் இருந்தால், நான் எப்படி பரிசோதிப்பது என்கிறார். அதற்கு அந்த தந்தை சொல்கிறார், அதற்கு தான் ஓட்டை வைத்திருக்கிறோமே! அவளுக்கு எந்த எந்த பாகங்களில் பிரச்சனை இருக்கிறதோ, அந்த அந்த பாகங்களை இந்த ஓட்டையில் வைப்பாள், நீங்கள் அந்தந்த பாகங்களை பரிசோதித்துப் பார்த்து விட்டு, மருந்து கொடுக்கலாம்! வஞ்சனையில்லாம் அந்த பெண்ணுக்கு மாற்றி மாற்றி எல்லா பாகங்களிலும் நோய் வருகிறது. டாக்டரும் பரிசோதிக்கிறார். டாக்டர்கள் பெண்களைத் தொட்டு பரிசோதிப்பது, அவர்களது தொழில். ஆனால் அந்த அந்த பாகங்களை ஓட்டையில் வைத்துப் பரிசோதிப்பது தான், Cruel Imagination!

ஆனால் சில வாக்கியங்கள் எனக்கு பிடிக்கவே செய்தது. Reverend Motherக்கும் டாக்டருக்கும் நடக்கும் வாக்குவாதத்தில் (ஒரு கிரிமினல் கவிஞரை வீட்டில் ஒளித்துவைத்ததற்கு), டாக்டர் “வாயை மூடு!” என்று சொல்லிவிடுகிறார். அன்றிலிருந்து, அந்த Reverend Mother, யாருடனும் பேசுவதில்லை. ஏற்கனவே கணத்துப்போயிருந்த அவரது உடல், இப்பொழுது யாருடனும் பேசாமல் இருக்கும் பொழுது, மேலும் மேலும் வேகமாக இன்னும் அதிகமாக, கணமாகிக்கொண்டே போனது. அவர் பேசாமல் தன்னுள்ளே அடைத்துவைத்துருக்கும் வார்த்தைகள், அவரை ஊதி பெரிதாக்கின.

Mumtaz noticed with concern that her mother was swelling, month by month. The unspoken words inside her were blowing her up

***

Midnight’s Childrenஐத் தூக்கிப்போட்டுவிட்டு (ஏற்கனவே இருக்கிற பிரச்சனைகள் போதாதுன்னு,இதுல இது வேறையா!), Orhan Pamuk எழுதிய Istanbul Momories of a city படிக்க ஆரம்பித்தேன். கொஞ்சம் படித்தப்பிறகு தான் தெரிந்தது அது ஒரே மூச்சில் படித்துவிடக்கூடிய நாவல் போன்றது அல்ல என்பது. ரசித்து படிக்க வேண்டிய ஒன்று. எனக்கு Orhan Pamukக்கின் அந்த எளிமையான நடை பிடித்திருக்கிறது, அவ்வப்போது பளீரென மின்னல் போல வெளிப்படும் சிறு சிறு நகைச்சுவையும். இப்போதைக்கு மூன்று chapters மட்டுமே படித்திருக்கிறேன்.

***

பிறகு என்ன படிப்பது என்று தெரியாமல், 1001 books you must readஐப் பார்த்து, Philip Roth எழுதிய, The Plot Against America படிக்க ஆரம்பித்தேன். என்னால் படிக்கமுடியவில்லை. இரண்டு chaptersலையே நாக்கு வெளியே தள்ளிருச்சு. அவ்ளோ பெரிய பெரிய வாக்கியங்கள். ஒவ்வொரு வாக்கியத்தையும் இரண்டு மூன்று முறை படிக்கவேண்டியிருந்தது. So, அதையும் கடாசிவிட்டு, வேறு என்ன படிக்கலாம் என்று யோசித்துக்கொண்டிருந்தேன். (அப்பொழுதுதான், பிரச்சனை நாவல்களில் அல்ல, என்னுடைய மூட் தான் சரியில்லை என்பது தெரிந்தது!In Cold Blood படித்துமுடித்தபிறகு கடந்த மூன்று வாரங்களாக ஒரு சில பக்கங்களை மட்டுமே படித்திருக்கிறேன்.) அப்பொழுதுதான் Libraryஇல் The Magic Of Thinking Big கண்ணில் பட்டது. கொஞ்ச காலத்துக்கு நாவல்களை தள்ளிவைத்துவிட்டு, self-help படிக்கலாம் என்றிருக்கிறேன். Lets see how it helps!

***

என்னுடைய நண்பர் ஒருவர் தான் எனக்கு இந்த புத்தகத்தைப் பரிந்துரை செய்தார். நானும் அவரும் மிக நெருங்கிய தோழர்கள் (Comrades!) ஆகிவிட்டோம், மிக குறுகிய காலத்தில். எனக்கும் அவருக்கு நிறைய விசயங்கள் sync ஆகின்றன. என்னைப் போலவே அவருக்கும் மூன்று விசயங்கள் ரொம்பப்பிடிக்கும், புத்தகம். மூவீஸ். கா·பி.
ஒரு நாள் Bordersக்கு வெளியே அமர்ந்து, CoffeeBean கா·பியை (கா·பியை விட்டுவிடுகிறேன் என்று நான் மிகவும் மரியாதை வைத்திருக்கும் ஒரு ·ப்ரண்டிடம் வாக்குறுதி கொடுத்திருக்கிறேன். இந்தக் பாழாய்ப்போன கா·பியை ஒவ்வொரு முறை குடிக்கும் போதும் குற்ற உணர்ச்சி மேலிடுகிறது.கண்டிப்பாக மிக விரைவில் விட்டுவிடுவேன்.) ரசித்துக்குடித்துக்கொண்டிருக்கும் போது, ப்ரதீபா பாட்டில் பற்றி பேச்சு வந்தது. அவர் இப்போ ஜனாதிபதி. ஒன்றும் சொல்வதற்கில்லை. ஆனால் உண்மையிலே, மனதைத் தொட்டு சொல்லுங்கள், இந்தியாவுக்கு ஜனாதிபதி பதவி என்ற ஒன்று தேவைதானா? அவர்களுக்கு இவ்ளோ பெரிய அரண்மனையும், இவ்ளோ வேலையாட்களும் தேவைதானா? இதற்கும் ப்ரிட்டிஷ் ராஜ வம்சத்திற்கும் என்ன வித்தியாசம்? சரி அது ஒரு கவுரமான பதவி என்று வைத்துக்கொண்டால், அதற்கு அரசியல்வாதிகள் எதற்கு? போன்ற கணக்கிலடங்கா கேள்விகள் தீர்ந்து போன எங்கள் கா·பிக்கோப்பையை நிரப்பிக்கொண்டிருந்தன. அவர் ஜனாதிபதி ஆவதற்கு முன்னர் அவரைப்பற்றி தினமும் ஒரு செய்தி வெளியிட்டு வந்த பத்திரிக்கைகள், இப்பொழுது ஏன் அவரைப் பற்றி ஒரு செய்தியும் வெளியிடுவதில்லை? அவர்கள் எங்கே போனார்கள்? அப்படியானால், அவர்கள் வெளியிட்ட செய்திகள் அனைத்தும் பொய்யா? இதனால் தான் பத்திரிக்கை மீதும் கருத்துச் சுதந்திரத்தின் மீதும் எரிச்சல் எரிச்சலாக வருகிறது. நீங்களும் உங்கள் கருத்துச்சுதந்திரமும், பிறகு மிகப்பெரிய மண்ணாங்கட்டியும். எல்லாம் சந்தர்ப்பவாதம். (கொஞ்சம் யோசித்தால் சமீபத்தில் நடந்த எத்தனை பயங்கரங்கள் மறைக்கப்பட்டிருக்கின்றன அல்லது மறக்கடிக்கப்பட்டிருக்கின்றன என்று விளங்கும்.) இப்போ சமீபத்தில் ஆந்திரா-முடிகொண்டாவில் நடந்த துப்பாக்கிசூட்டை இன்னும் எத்தனை நாட்கள் பத்திரிக்கைகள் ஞாபகத்தில் வைத்து follow-up செய்கின்றன என்று பார்ப்போம்.

***

பத்திரிக்கை சுதந்திரம் என்று நாங்கள் பேசிக்கொண்டிருந்த அன்று தான், பத்திரிக்கைச் சுதந்திரத்தையும் அதன் வலிமையையும் (the power of investigative journalism) கச்சிதமாக உணர்த்தும் All the presidents men என்றொரு படத்தைப் பார்த்தேன். அமெரிக்க ஜனாதிபதி Nixonஐ பதவி விலக வைத்த இரு பத்திரிக்கை நிருபர்களைப் (Bob Woodward மற்றும்
Carl Bernstein) பற்றிய படம் இது. (கடைசி வரைக்கும் நிக்சன் தான் ஊழல் –Watergate Scandal– செய்ததாக ஒத்துக்கொள்ளவில்லை என்றாலும் அவருக்கு அளிக்கப்பட்ட மன்னிப்பை ஏற்றுக்கொண்டதால் ஊழல் செய்தவராக கருதப்படுகிறார்!)

இந்த investigationஐ இந்த இரண்டு நிருபர்கள் தான் செய்திருந்தனர் என்ற பொழுதிலும், இதற்கு பெரிதும் துணையாகவும், ஊக்கமாகவும், தூண்டுகோலகாவும் இருந்தது, The Washington Postஇன் Executive Editor, BenBradlee தான். நாடு முழுவதும் இந்த இரு ரிப்போர்ட்டர்களை நம்பாமல் (அல்லது நம்ப விரும்பாமல்!) இருந்த பொழுது, WhiteHouse மன்னிப்பு கேட்க்காவிட்டால் வழக்கு தொடர்வோம் என்று எச்சரிக்கை செய்தபொழுதும், “I am going to stick with the boys!” என்று சொல்லி உண்மையை வெளிக்கொண்டுவந்தவர்.

இந்த investigationஐ முடித்தவுடன் Bob Woodward மற்றும் Carl Bernstein, நடந்த சம்பவங்களைத் தொகுத்து All the presidents men என்ற புத்தகமாக வெளியிட்டனர். புலிட்சர் பரிசு (1973) பெற்ற இந்த Non-Fiction புத்தகத்தை அடிப்படையாக எடுக்கப்பட்டது தான் All the presidents men என்ற திரைப்படம். An excellent movie. எனக்கு படங்களைப் பார்த்து முடித்தவுடன் அந்தப்படத்தில் வரும் ஹீரோ போல இருந்தால் எப்படி இருக்கும் என்று நினைப்பேன். For Example, காக்க காக்க பார்த்த பிறகு அசிஸ்டண்ட் கமிஷ்னர் (அதுவும் பாருங்கள், கமிஷ்னர் வேண்டாமாம். அசிஸ்டண்ட் கமிஷ்னர் தான் வேண்டுமாம்!) ஆக வேண்டும் என்று சீரியஸாக யோசித்தேன். படம் பார்த்துவிட்டு வந்து மறு நாள் காலையில் எழுந்து தன்டால் அடித்தது (இரண்டு நாட்களுக்கு மட்டுமே!) நினைவிருக்கிறது. என் நண்பர் தனக்கும் இதே போல ஒரு wierd behaviour இருப்பதை ஒத்துக்கொண்டபிறகு தான் எனக்கு ஓகே கூல் (நிறைய பேர் இப்படித்தான் இருக்காய்ங்க!) என்று தோன்றியது.

இந்தப்படத்தைப் பார்த்த பிறகு பத்திரிக்கையாளராக வேண்டும் என்ற எண்ணம் தோன்றியது. Investigative Journalism. தமிழ்நாட்டில் நிறைய விசயத்தை investigate செய்யலாம். Like த்ரிஷாவை வைத்து விஜயும் அஜீத்தும் கில்லி ஆடுகிறார்களா? அதைத்தானே இங்கு investivative journalism செய்கிறோம் என்று சொல்லிக்கொண்டிருப்பவர்கள் செய்துகொண்டிருக்கிறார்கள்? இதுவா Investigative Journalism? இதை Paparazzi என்றல்லவா சொல்வார்கள்.

***

படம். புத்தகம். காபி

நேத்து Fitness-Firstல எடுத்த DVDஐ ரிட்டர்ன் பண்ணப்போ, அந்த ரிஷப்சனிஸ்ட் சொன்னாங்க, “Muthu, first time you are paying fine, isnt it? Else, you are always on time!” அப்படியா?!! இல்லீங்க்கா, நீங்க என்ன ரொம்ப புகழறீங்க, ஒரு தடவையோ அல்லது ரெண்டு தடவையோ தான் நான் ஒழுங்கா டைமுக்கு ரிட்டர்ன் பண்ணிருக்கேன், மத்த எல்லா தடவையும் கண்டிப்பா fine தான். இப்போ புதுசா, Fitness-First Raffles Placeல, அந்தப்பக்கம் ஓரமா கார்னர்ல ஒரு ட்ரட்மில் இருக்குல்ல, அது நான் கட்டின fineல வாங்கினதுதான்னு எல்லாரும் சொல்றாங்க, உங்களுக்கு தெரியுமா?

சொல்லப்போனா இந்தப்படத்தை எடுத்தேனேயொழிய, நான் பார்க்கவேயில்ல. வீட்டுக்கே எடுத்திட்டு போகல. இங்க ஆபீஸ்லயே என் டெஸ்க்லையே வெச்சிட்டு போயிட்டேன். அப்புறம் அது பாட்டுக்கு ஓரமா, எனக்கென்னன்னு உட்கார்ந்திருந்திச்சு, நேத்து என்னோட boss வந்து, DVDஐ எடுத்து படம் எப்படியிருந்துச்சுன்னு கேக்கறவரைக்கும், இந்த DVDஐ நான் மறந்தேபோயிட்டேன். AKEELAH AND THE BEE, தான் அந்த DVD. படம் பார்க்காமலயே ரெண்டு டாலர் fine கட்டினேன். ஞாபகமறதி அதிகமாயிட்டே வருது.

***

என் ப்ரண்ட் அஸ்வின் (சம்மன சாமியார்!) திடீர்னு போன் பண்ணி வாடா இன்னிக்கு மீட் பண்ணலாம்னு சொல்வான். நாங்க எப்பவும் மீட் பண்ணும் Bordersல தான் இந்த saturdayவும் மீட் பண்ணினோம். வழக்கம் போல சில புத்தகங்களைப் புரட்டினோம். புதுசு புதுசா எழுதிட்டேயிருக்காய்ங்க. Kite Runnerஐ எழுதிய khaled hoseiniயின் Thousand Splendid Suns வந்திருக்கு. அது தான் அடுத்து வாங்கனும். சில புத்தகங்கள், தாமாகவே famous ஆகிவிடும். சில அதன் எழுத்தாளர்களின் புகழால் famous ஆகும், ஆனால் புத்தகத்தில் ஒன்றுமே இருக்காது. எடுத்துக்காட்டுக்கு, Catcher In The Rye மிக பிரபலமான புத்தகம். எனக்கு மிகவும் பிடித்தமான புத்தகங்களில் ஒன்று. மறுமுறை வாசிக்கவேண்டும் என்று நினைத்திருக்கிறேன். இந்தப் புத்தகம் வெளிவந்த பொழுது JDSalinger ஒன்றும் புகழ் பெற்ற எழுத்தாளர் கிடையாது. ஆனால் புத்தகம் Famous ஆனது. ஆனால் JDSalinger எழுதிய வேறொரு புத்தகமான, NineStories, JDSalingerக்காக famous ஆனது. ஆனால் NineStories அப்படி ஒன்றும் நல்ல புத்தகம் இல்லை. இந்த Thousand Splendid Suns, புத்தகம் எந்த வகை என்று தெரியவில்லை. பொருத்திருந்துதான் பார்க்கவேண்டும்.

எங்கெங்கு காணினும் HarryPotterஅடாங்கறமாதிரி, எல்லா புத்தகக்கடைகளிலும் (SAN’s bookshopல கூட!) குவிந்துகிடக்கிறது, DeathlyHallows. நான் இன்னும் வாங்கவில்லை. ஐம்பது டால்ர்களாமே?! குறையட்டும். மேலும், நான் இன்னும் HalfBlood Prince படித்து முடிக்கவில்லை. அதை படித்துமுடிக்கும் போது, PaperBack வந்துவிடும், விலையும் குறைந்துவிடும். எனக்கு Hard-Cover edition பிடிப்பதேயில்லை. (என்னிடம் எந்த நாவலுக்கும் hard-cover edition இல்லை!) யார் அதை -அவ்வளவு கணமாக- தூக்கிக்கொண்டு அலைவது? ஜெயமோகன் எழுதிய, கொற்றவை நாவலை, கொஞ்ச காலம் படிக்காமல் நிப்பாட்டிவைத்திருப்பதற்கு, ஒரு காரணம், பயமுறுத்தும் அதன் சுத்த தமிழ் உரைநடையாக இருந்தபொழுதிலும், அதன் கணமும் இன்னொரு முக்கிய காரணம் என்பதில் சந்தேகமில்லை. தமிழில் பேப்பர் பேக் வருவதேயில்லை. விஷ்ணுபுரத்திற்கோ, கொற்றவைக்கோ பேப்பர்-பேக் வந்துச்சுன்னா, அதன் எடையில் கணிசமான அளவு குறைய வாய்ப்பிருக்கிறது. படுத்துக்கொண்டு ஹாயாக, கையில் பிடித்துக்கொண்டு படிக்கலாம்.

அஸ்வின், ஏனோ RK Narayanan எழுதிய புத்தகங்களைத் தேடிக்கொண்டிருந்தான். கிடைக்கவில்லை. அப்படியே எங்கயாவது சாப்டுட்டு, வீட்டுக்கு போயிருக்கலாம். படத்துக்கு போகலாம்னு SHAWக்கு போனோம்.

***

என்னோட வாழ்க்கையில, ஒரு சினிமாவுக்கு போயிட்டு, பாதில எழுந்துவந்ததுன்னா ஒரே ஒரு படம் தான். விஜய் நடித்த படம் அது. ரம்பா, தேவயாணி போன்ற நடிகையர் திலகங்களும் அதில நடிச்சிருந்தாங்க. பெயர் என்னன்னு மறந்துபோச்சு. ஆனா படத்தோட கரு ஞாபகம் இருக்கு : விஜயோட கனவில ரம்பா வருவாங்க. கூடவே அவங்களோட மச்சமும். பிறகு எல்லாருமா சேர்ந்து ரம்பாவ தேடிக்கண்டுபிடிப்பாங்க. ஒரு முக்கால்மணி நேரம் பாத்திருப்பேன், எங்க ஊர் மஹாராஜா தியேட்டரில, அப்புறம் விட்டேன் ஜூட். இதில் gate திறக்கமாட்டேன்னு சொன்னாய்ங்க. போடாங்கொய்யாலன்னுட்டு escape ஆகிட்டேன். torture படம்.

அதுக்கப்புறமா, ஓடி வந்ததுன்னா, இந்த சனிக்கிழமை பார்த்த படம் தான். Captivity. நான் உள்ளே போய் பத்து நிமிஷத்தில இதத்தான் நினெச்சேன். நம்ப ராஜ்மோகனையும் (ஜாக்குவார் தங்கம்!) கூட்டிட்டு வந்திருக்கலாமேன்னு. ரத்தத்தப் பார்த்தாலே அலறுகிறவன். இந்தப்படத்தில வரும் ஷ்பெஷல் ஜூஸைப் பார்த்தால் என்ன செய்திருப்பான்னு,எனக்கு ஒரே யோசனை. கண்டிப்பா பின்னங்கால் பிடறியில படற அளவுக்கு ஓடிருப்பான். அது என்ன ஸ்பெஷல் ஜூஸ்? காது, மூக்கு, கண்ணு, நாக்கு போன்ற (அதுக்கப்புறம் என்ன என்ன mix செஞ்சாருன்னு பாக்கல, நான் தான் இறுக்கமா கண்ண மூடிக்கிட்டன்ல!) இத்தியாதிகளை ஒரு மிக்ஸியில் போட்டு, அரைத்து அதை கட்டிப்போடப்பட்டிருக்கும் (கடத்தப்பட்டிருக்கும்!) பெண்ணுக்கு, வாயில் funnelஐ வைத்து ஊத்துவது. அஸ்வின் காதில போய் “மாமா இப்பவும் ஒன்னும் கெட்டுப்போயிடல, எஸ்கேப் ஆயிரலாம்டா” ன்னு சொன்னேன், பய ரெடியா ஓகே சொன்னான். starbucks காபி குடித்துக்கொண்டிருந்த எனக்கு, சில சீன்களில், கிட்டத்தட்ட vomit வந்தேவிட்டது. சும்மாவே starbucks காபி அப்படித்தான் இருக்கும்.

***

கொஞ்சம் தலைவலி இருந்ததால, அன்னிக்கு starbucks காபி வாங்கினேன். இப்பவெல்லாம் ஓடு தண்ணி.அவ்ளோ பெரிய கப்புல. (அதையும் நான் குடிச்சிட்டேன்ங்கறது வேறு விசயம்!) அஸ்வின், sugar போடாம வாங்கிட்டு வந்திட்டான். என்னடா sugar போட்டியான்னு கேட்டேன்? என்னது தனியா நாம sugar போடணுமா? குடுக்கற காசுக்கு அவிங்க sugar கூட போட்டுத்தற மாட்டாய்ங்களான்னு அப்பாவியா கேட்டான்!

வாங்கிட்டு வந்திட்டு, seatல உக்காந்து, குடிச்சிட்டு, அவன் கிட்ட கொடுத்தேன். கொஞ்சம் குடிச்சுப்பாருடான்னு சொன்னேன். அவன் காபி டீ எதுவும் குடிக்கமாட்டான். அமுல் பேபி. பால் மட்டும் தான் சாப்டுவார். ஜான்சன் அன்ட் ஜான்சன் பேபி பவுடர் தான் உபயோகிப்பார். என்கிட்டருந்து வாங்கி, காபிய ஒரு மடக்கு குடிச்சான். பிறகு, உரத்த குரலில், என்னடா கழனிதண்ணி (மாட்டுக்கு வெப்பாங்கல்ல!) மாதிரி இருக்குன்னான். எனக்கு முன்னாள் உட்கார்ந்திருந்த ஒரு சைனீஸ் பொண்ணு, அதுக்கு ஏன் நீ மாடு மாதிரி கத்தறங்கறமாதிரி பாத்தா!

வெளில வரும்போது, அவன்கிட்ட கேட்டேன், “ஏன்டா, நீ கழனிதண்ணி குடிச்சிருக்கியா?!”

இந்த தியேட்டருக்கு விதிக்கப்பட்ட சாபம் போல. இந்த தியேட்டரில் (இதே screen!) நான் இன்னொரு படமும் பாத்திருக்கிறேன். Shrek3. அதுவும் torture படம் தான். வேறுவிதமான torture.

***

என் ப்ரண்ட் ராஜ்மோகனுக்கு animation movies எதுவுமே பிடிக்காது. பிடிக்காது என்றால் கொஞ்சம் கூட பார்க்கமாட்டான். ஹாலில் உட்கார்ந்திருக்கும் போது, சேனல் மாத்தும் போது, தப்பித்தவறி ஏதாவது ஒரு சேனலில் ஏதாவது ஒரு அனிமேஷன் மூவி ஓடிக்கொண்டிருந்தால் போதும், உடனே அவனிடத்திலிருந்து வரும் கமெண்ட்: “போட்டாங்கடா பொம்மப்படம்!” என்னாது பொம்மப்படமா?

முன்பு, Cars படத்துக்கு அவனை நான் வலுக்கட்டாயமாக கூப்பிட்டேன். எப்படியும் அனிமேஷன் மூவி ஒன்றை, அவனைப் பார்க்கவைத்தே தீருவது என்ற கொலைவெறியோடு சுற்றிக்கொண்டிருந்தேன். ஏன்னா, அவனும் பாக்கமாட்டான், வீட்ல DVD போட்டாக்கா நம்பளையும் பாக்கவிடமாட்டான். ஏதாவது சொல்லி கேலி பண்ணி நம்பள torture பண்ணுவான், torture. நான் எவ்வளவு கூப்பிட்டும், எவ்வளவு offer பண்ணியும் like, டிக்கெட் போடறேன், பாப்க்கார்ன் வாங்கித்தாரேன், ஸ்ட்ராபெர்ரி ஐஸ்கிரீம் வாங்கித்தாரேன், அன்னிக்கு dinner கூட நான் sponser பண்றேன்னு சொல்லியும் வரமாட்டேன்னுட்டான். அவ்வளவு மன உறுதி அவனுக்கு. (இல்லீன்னா, சகிப்புத்தன்மை இல்லீன்னு கூட வெச்சுக்கலாம்!). இந்த முறை Shrek3 க்கு கூப்பிட்டுப் போகலாம் என்றிருந்தேன். நல்லவேலை கூப்பிடல. அவன் வந்திருக்கமாட்டாங்கறது வேற விசயம், ஆனா வந்திருந்தான்னா, இனிமேல் பொம்மப்படமே (அவன் பாஷயில்!) தன் வாழ்நாளில் பார்த்திருக்கமாட்டான். ஆனா, cars படம் ரொம்ப நல்லாயிருந்தது. Superb Movie.

***

என்னுடைய நண்பர் (கேள்வியின் நாயகன்!), முன்பொருமுறை, முன்புன்னா கொஞ்ச மாசத்துக்கு முன்ன, கொடுத்திருந்த ஒரு DVDஐ இன்னும் பார்க்காமல் வெச்சிருந்தோம். ஏன்னா அது DVD-RIP fileங்கறதனால, என்னோட stupid Philiphs DVD Playerல ஓடல. அந்தப்படம் – Stay Alive. இப்ப புதுசா நம்ப ஜாக்குவார் தங்கம் ஒரு DVD player வாங்கியிருக்கார். Panasonic Music System. அதுல என்ன போட்டாலும் ஓடுது. ரொம்பநாளைக்கு முன்ன என்னோட இன்னொரு நண்பர் கொடுத்திருந்த ரெஹ்மான் பாடல் கலெக்ஷன் DVD, எதுலையுமே ஓடல. என்னோட DVD Player, என்னோட laptop, என் ப்ரண்டோட laptopன்னு எதுலையுமே ஓடல. என்னோட ப்ரண்ட், அந்த DVDஐ திருப்பி கேட்டப்போ, போயா போ, ஓடாத DVDஐக் கொடுத்திட்டு திரும்ப வேற கேக்கறையான்னு சொல்லிட்டேன். ஆனா பாருங்க அது -எதுலையுமே ஓடாத அந்த டுபாகூர் DVD கூட – அந்த Panasonic palyerல ஓடுச்சு. அதுதான் சொன்னேன், ஜாக்குவார் தங்கத்துக்கிட்ட, நீ டெய்லி, அமிர்தா ஹோட்டல்ல இருந்து வாங்கிட்டு வாறியே சப்பாத்தி, அதுல பில்லான்னு எழுதி, போட்டீன்னாக்க, தல நடிக்கிற, இன்னும் வெளிவராத, பில்லா படம் கூட ஓடும்டான்னு. அவன் மொறச்சு பாத்தான்.

இந்த Stay Alive படத்த அன்னிக்கு பாக்கறதுக்கு ஒன்னும் இல்லாம, ஓடாதுங்கற நம்பிக்கைல தான் அந்த playerல போட்டேன். ஆச்சரியம், ஓடிருச்சு. அப்புறம் தான் ரொம்ப feel பண்ணோம், பேசாம ஓடாமலே இருந்திருக்கலாம்னு. சுத்த waste movie. Game விளையாடுவாங்களாம், அந்த Gameல வர்ற பேய், விளையாடுறவங்க gameல எப்படி சாகறாங்களோ, அதே மாதிரி, exactly like that, கொல்லுமாம். ஓவர் பூ. ஆனா, எங்க கொள்கை எப்படீன்னா, படம் எவ்வளவு டுபாக்கூரா இருந்தாலும், கடைசி வரைக்கும் பாக்காம எழுந்திருக்க மாட்டோம். So, கடைசி வரைக்கும் பார்த்தோம்.
The Urban Legend மாதிரி ஏதாவது திருப்பம் வரும்மான்னும் பாத்துட்டேயிருந்தோம். Nothing.

***

கூண்டிலடைக்கப்பட்ட பறவை

எனக்கு நீ வேண்டும்;
ஆனால் ஒருபோதும் என்
கைகளால் உன்னை
அணைத்துக்கொள்ள
முடியாதென்றும் தெரியும்.
நீ துல்லியமான
பிரகாசமுள்ள ஆகாயம்.
நானோ
கூண்டிலடைக்கப்பட்ட பறவை.

– ·பரூக் ·பரோக்சாத்