புது சட்டை…
புது பேண்ட்டூ…….
புது வாட்ச்சூ……
புது மொபைலூ…..
புது ஷீ….
இரவல் வாங்கினா
திருப்பி கொடுத்துடனும்டா
சந்துரு…..
– ‘அன்புடன்’ இணைய குழுமத்தில் படித்தது
புது சட்டை…
புது பேண்ட்டூ…….
புது வாட்ச்சூ……
புது மொபைலூ…..
புது ஷீ….
இரவல் வாங்கினா
திருப்பி கொடுத்துடனும்டா
சந்துரு…..
– ‘அன்புடன்’ இணைய குழுமத்தில் படித்தது
அந்த பிளாஸ்டிக் டம்ளர்
விருந்தொன்றில் நீர் பருக
உபயோகிக்கப்பட்டது.
பிறகு கொஞ்சம் தேநீர்.
மறைவிடத்தில் கழுவப்பட்டு
மறுபடியும் நீர், தேநீர், பாயசமென
சுழன்ற அது எச்சிலைகளோடு எறியப்பட்டது.
விளையாட்டு சிறுவர்கள்
தன் சிறுநீர் துளிகளை
அதில் வழியச் செய்தனர்.
காற்றின் கருணையால்
பெருநகர வீதிகளை கடந்து
காடு மலையென அலைந்து திரிந்தது
கொடும் பசிகொண்ட நாயொன்று
அதை முகர்ந்து பார்த்துவிட்டுப் போனது.
மரணமிலா இழிவாழ்வால்
துவண்டிருந்த அதை,
அதை போலவே காடுகளில்
அலைந்து திரியும்
சற்றேறக் குறைய பைத்தியம் எனப்பட்ட
ஒருவன் தொட்டு தூக்கினான்
சுனைநீரால் நீராட்டினான்.
அவனால் கொஞ்சம்
மதுரசம் ஊற்றப்பெற்ற அது
சாபம் நீங்கி
பொற்கலயமானது.
–இசை, கணையாழியில் இருந்து.
திசைகள் இணைய தளத்தில் திரு. சொக்கனின் ‘ராம ராஜ்ஜியம் ராவண ராஜ்ஜியம்’ கட்டுரையை படிக்க நேர்ந்தது. அவர் சொன்ன கருத்துக்கள் மிகவும் ஏற்புடையதாக இருந்தது. அதிலும்,
‘இன்றைய சூழலில், நடுத்தரப் பொருளாதாரநிலையில் இருக்கும் ஓர் இளைஞனோ, குடும்பமோ அரசியலை, அரசியல்வாதிகளைக் கொஞ்சமும் நம்பாமல், எதிர்பார்க்காமல் தங்களின் வாழ்வைச் சுலபமாக அமைத்துக்கொண்டுவிடலாம்.
தனியார் நிறுவனங்கள் பெருகிவிட்டன, அரசு வேலைக்கு அவசியம் இல்லை, தேவையும் இல்லை, படிப்பதற்கோ, கல்யாணம் செய்வதற்கோ, வீடு கட்டுவதற்கோ கடன் தேவைப்பட்டால், (அநியாய வட்டியானாலும்) அதைத் தருவதற்குப் பன்னாட்டு வங்கிகள் வரிசையில் காத்திருக்கின்றன, மின்சாரத்தில் தொடங்கி, அடிப்படை விஷயங்கள் எல்லாவற்றையும் ஆனை விலை, குதிரை விலை கொடுத்தாவது வாங்கப் பழகிவிட்டோம், ஒருவேளை பிற உள்கட்டுமான வசதிகளில் குறை இருந்தாலும், ‘நம்ம ஊர்ல எல்லாமே இப்படித்தான்’ என்று சலித்துக்கொண்டு, அடுத்த விஷயத்தில் கவனம் செலுத்தப் போய்விடுகிறோம்.இப்படிப்பட்ட நவீன வாழ்க்கையில், ஆட்சியாளர்கள் என்பவர்கள் யார்? எதற்கு?’
மிக மிகச் சரியான கருத்து. மக்கள் கவனிப்பது இருக்கட்டும், முதலில் எதிர்கட்சிகள் கவனித்தார்களா?கடந்த 5 ஆண்டுகளில் எத்தனை முறை எதிர்கட்சிகள் போராட்டங்கள் நடத்தின? போராட்டங்கள் இல்லையென்றால், கடந்த ஆட்சியில் தவறுகளே இல்லையா?
ரயில்வே நிலையத்தில்
விசும்பல்கள்
மறைந்து விட்டன.
போனவுடன் கடிதம்
போடென்று
இப்போதெல்லாம்
பேசிக்கொள்வதில்லை யாரும்.
சிரித்துக் கொண்டே
விடைபெறுபவர்களின்
பாக்கெட்களில்
விடாமல் சிணுங்குகின்றன
செல்பேசிகள்
-சேவியர்
சுமார் 30 ஆண்டுகளுக்கு முன் குறும்பா, துளிப்பா, ஹைக்கூ,புதுக்கவிதை எல்லாம் வராத காலத்தில் கணையாழியில் ஒரு கவிதை.
நீ
பூ
வா
தா
சீ
போ
கணையாழியில் சுஜாதவும் இதை சிலாகித்துஇருகிறார்.
இதற்கு எதிர் கவிதை ஒன்று படிக்க நேர்ந்தது.
ஏய்
போய்
தேய்
காய்
மாய்
சாய்
ஆய்
நோய்
நாய்
பேய்
வாய்
சீய்
???அட கடவுளே !!
மதியிறுக்கம் (Autism) – ஒரு எளிய அறிமுகம் மிகப் பயனுள்ள கட்டுரை

புதுமைப்பித்தன் நூற்றாண்டு விழா சென்றமாதம் திருநெல்வேலியில் கொண்டாடப்பட்டது.
புதுமைப்பித்தன்சிறுகதைகள் மட்டும் எழுதவில்லை, தமிழ்நாட்டில் இருந்துகொண்டு 1938-39 காலகட்டத்தில் இரண்டாம் உலகயுத்தம் நடந்து கொண்டிருக்கும் போதே ஹிட்லர், முசோலினி பற்றி ‘கப்சிப் தர்பார்’, ‘பாசிஸ்ட் ஜடாமுனி’ ஆகிய நூல்களை எழுதினார். அது மட்டுமின்றி சோவியத் யூனியன் பற்றிய செய்திகளை அன்றைய காலகட்டத்தில் ஐரோப்பிய செய்தித்தாள்கள் மூலம் படித்தறிந்து ‘ஸ்டாலினுக்கு தெரியும்’ என்ற நூலையும் எழுதினார். தகவல் தொடர்பு சாதனங்கள் குறைவாக இருந்த அக்காலத்தில், மிகத்துல்லியமாக ஏகாதிபத்தியத்தின் தன்மைகளை புரிந்து கொண்டு மிகச்சரியாக வெளிப்படுத்தினார் புதுமைப்பித்தன். புதுமைப்பித்தன் வாழ்ந்த காலம் 1902-1948.