ப்ரான்ஸ் பயணம் -1

ரொம்ப நாளா எழுதனும்னு நினைச்சது, ஆனா தள்ளி தள்ளிப் போய் இப்போ தான் நேரம் கிடைச்சிருக்கு. முதல்ல கண்டிப்பா எழுதனுமான்னு நினைச்சேன், ஆனா போனவாரம் விவோசிட்டி ஷாப்பிங்மால் மனைவியுடனும் குழந்தையுடனும் போயிருந்த பொழுது, ப்ரான்ஸ்க்கு கிளம்புவதற்கு முந்தின நாள், இரவு பத்தரை மணிக்கு எல்லா ஷாப்பிங்கும் முடித்துவிட்டு ஒருவிதமான பயத்துடனும் சந்தோசத்துடனும் திகிலுடனும் வீட்டுக்கு வருவதற்கு டாக்சிக்கு கால் செய்துவிட்டு காத்திருந்தது எங்கள் இருவருக்கும் ஞாபகம் வந்தது. அன்று நாங்கள் கால் செய்திருந்த டாக்ஸி எங்களை பிக் அப் செய்யாமல் வேறொருவரை ஏற்றிக்கொண்டு சென்றுவிட்டது. மிகுந்த அலுப்புடன், குழந்தை வேறு அழுதுகொண்டிருந்தது, மீண்டும் கால் செய்து இந்தமுறை எங்களை டாக்ஸி மிஸ் செய்துவிடாமல் இருப்பதற்கு டாக்ஸி மாலின் டாக்ஸி ஸ்டாண்டிற்குள் நுழையும் இடத்திற்கே சென்று நின்றதும், ஜஸ்ட் லைக் எ ப்ளாஸ், எங்களுக்கு ஞாபகம் வந்தது. வந்ததும் சிலீரென்ற ஒரு சந்தோஷமான திருப்திகரமான உணர்வு எனக்கு தோன்றியது. என் மனைவிக்கும் தோன்றியிருக்கிறது. அவரும் அந்த நாளை நினைவுகூர்ந்தார். வீ ·பெல்ட் ஹேப்பி. ப்ரான்ஸ¤க்கு சென்று வந்த அந்த சுகமான த்ரில்லான அனுபவத்தை உங்களுடன் பகிர்ந்துகொள்ளத் தோன்றியது.

*

இன்னும் இரண்டு வாரத்தில் ப்ரான்ஸ் கிளம்பவேண்டும் என்று முடிவு செய்த பிறகு, நான் தனியாகப் போகிறேனா அல்லது மனைவியையும் குழந்தையையும் அழைத்து செல்லப்போகிறேனா என்கிற கேள்வி எங்கள் இருவரிடமும் தொக்கி நின்றது. முதலில் எங்களுக்கு இருந்த சந்தேகம் குழந்தையின் உடல்நிலை. குழந்தைக்கு எட்டுமாதம். ப்ரான்ஸில் சீதோஷ்னநிலை எப்படி இருக்கும் என்று பார்த்ததில் எங்களுக்கு ஷாக்:2 டிகிரி செல்சியஸ் இருந்தது. எங்களுக்கு ஒன்றும் புரியவில்லை. ரெண்டு டிகிரி செல்சியஸ் என்றால் எப்படி இருக்கும் என்று யோசித்துப் பார்த்ததில், கொடைக்கானலும் ஊட்டியும் மட்டுமே எங்கள் ஞாபகத்துக்கு வந்தன. அதுவும் இரவில் மட்டுமே ரெண்டு டிகிரி செல்சியஸ் இருக்கும். இங்கு நாள் முழுவதும் குளிரில் இருக்கவேண்டும். எப்படியும் ஹோட்டலில் தான் தங்கப்போகிறோம். அங்கு ஹீட்டர் இருக்கத்தான் போகிறது. ரூமில் இருக்கும் வரை குளிருக்கு பயமில்லை. ஆனால் வெளியே போகும் பொழுது? இவ்வளவு தூரம் போய்விட்டு ரூமுக்குள்ளே இருக்க முடியுமா? ப்ரான்ஸில் இருக்கும் சில நண்பர்களிடம் விசாரித்ததில் மார்ச் இறுதியில் தான் குளிர் கொஞ்சம் குறையும் என்று சொன்னார்கள். நாங்கள் பயணம் செய்யப்போகும் மாதம் – பிப்ரவரி முதல் வாரத்தில் இருந்து மார்ச் முதல் வாரம் வரை. முதலில் எங்கள் டாக்டரிடம் ஆலோசனை கேட்டோம். அவர் மிகவும் குளிராக இருக்குமே என்றார். பிறகு என் மனைவியைப் பார்த்து நீங்கள் என்ன சொல்கிறீர்கள் என்றார். ஆ·ப் கோர்ஸ் அவர் என்னுடன் வரத்தானே விரும்புவார். பாப்பாவுக்கு நிறைய துணி எடுத்துக்கொள்ளுங்கள் என்றார். Dress in layers என்றார். ஒன்னும் பயப்படத்தேவையில்லை என்றார். அவர் அப்படித்தான் சொல்லுவார், நாமல்ல யோசிக்கனும். என் மனைவி கண்டிப்பாக வருவேன் என்று சொல்லிவிட்டார்.வந்து ரூம்முக்குள்ளே இருந்தாலும் இருப்பேன் ஆனா கண்டிப்பா வராம இருக்கமாட்டேன்னுட்டார். நான் ஒவ்வரிடமும் தகவல் சேகரிக்க ஆரம்பித்துவிட்டேன். First things first. How does this 2 degree celcius thing feels like? என்னுடைய அண்ணனிடம் கேட்டபொழுது அவர் it is horrible என்று சொன்னார். ஆனால் ஒரு விசயத்தை அவர் மறந்துவிட்டதை நான் போய்வந்தபிறகு தான் அறிந்துகொண்டேன். வேறு சில நண்பர்களும் என்னை பயமுறுத்தவே செய்தனர். நான் என்னுடைய ஐபோனில் weather appஇல் பாரீஸையும் சேர்த்துக்கொண்டேன். நேரம் கிடைக்கும் பொழுதெல்லாம் பாரீஸில் இப்பொழுது என்ன வெட்பம் என்று பாத்துக்கொள்வேன். Always 2 or 3.

*

முதலில் எனக்கு தைரியம் அளித்தது என்னுடைய அம்மா தான். ஒன்னும் ஆகாது தைரியமா கூட்டிட்டுப் போய்ட்டு வா. குளிருதுன்னா அதுக்கு ஏத்தமாதிரி ஸ்வெட்டர் குல்லா எல்லாம் வாங்கிக்க, இப்போ போகாம அனுஷா பிறகு எப்போ போவா? நேரம் வாய்க்கிற பொழுது போயிட்டு வந்திடனும் என்கிற தைரியம் தருகிற வார்த்தைகளை அவர் கொடுத்தார். என் மனைவியும் மிகவும் பிடிவாதமாக இருந்தார். நானும் என்னென்னவோ சொல்லிப்பார்த்தேன். ம்ஹ¥ம் கேக்கிற மாதிரி தெரியல. எனக்கும் கூட்டிட்டு போகனும்னு ஆசை தான். ஆனா குழந்தையை அழைத்துச்செல்வதில் தான் கொஞ்சம் பயம் இருந்தது. மீண்டும் மீண்டும் யோசித்துக்கொண்டிருந்தேன். நானும் என் மனைவியும் மீண்டும் மீண்டும் பேசினோம். வேறு என்ன என்ன ஆப்ஸன்ஸ் இருக்கிறது என்பதை யோசித்தோம். மீண்டும் துடங்கின இடத்திலே வந்து நின்றோம். என் மனைவி தனது முடிவில் இருந்து மாறவேயில்லை. She was so confident. அவர் போக்கிரி விஜய் மாதிரி.

*

ஒரு வழியாக முதலில் நான் எனக்கு விசா அப்ளை பண்ண சென்றேன். ப்ரான்ஸ் விசா யூஎஸ் ஹெச் ஒன் பி போல இல்லை என்பது எனக்கு தெரிந்திருந்தும் ஏதோ கொஞ்சம் த்ரில்லாகத்தான் இருந்தது. But that officer was so humble and polite, particularly not so rude as some US Counsalates are. அப்பொழுதே முடிவு செய்து விட்டேன், என் மனைவியையும் குழந்தையையும் அழைத்து செல்வது என்று. எனக்கு விசா அப்ளை செய்வதில் ஒரு சிக்கலும் இருக்கவில்லை. டிக்கெட் இன்ஸ¥ரன்ஸ் போன்ற இத்யாதிகளை ஆபீஸே கவனித்துக்கொள்ளும். என் மனைவிக்கும் குழந்தைக்கும் விசா அப்ளை செய்ய டிக்கெட் புக் செய்யவேண்டும் பிறகு இன்சூரன்ஸ் எடுக்கவேண்டும். Serangoon Travels எனக்கு எளிதாக டிக்கெட்டும் இன்ஸ¥ரன்ஸ¤ம் எடுத்துக்கொடுத்தது. முப்பது நாளைக்கு ·பேமிலி இன்சூரன்ஸ் எடுத்துக்கொண்டேன். முன்னூரு டாலர் ஆனது என்று நினைக்கிறேன். மறுநாள் மனைவியையும் குழந்தையையும் French Embassyக்கு நேரே வரச்சொல்லிவிட்டு நானும் சென்றேன். அங்கிருந்த ஒரு தமிழ் செக்கியூரிட்டி என்னுடன் கொஞ்ச நேரம் என் மனைவி வரும் வரை பேசிக்கொண்டிருந்தார். நான் அப்ளை செய்த அதே கவுன்சலர் லக்லி இருந்தார். அப்ளை ப்ராஸஸ் வாஸ் எ ப்ரீஸ்.

*

விசா அப்ளை செய்தவுடன் பர்சேஸ் செய்ய ஆரம்பித்துவிட்டோம். முதலில் பாப்பாவுக்கு. நிறைய லேயர் சட்டைகள் வாங்கிக்கொண்டோம். என் அலுவலகத்தின் ஷாப்பிங் காம்ப்ளக்ஸில் இருக்கும் டாம் அன்ட் ஸ்டிப்பானியில் ஆரம்பித்தோம். எங்களைப் பொறுத்தவரை ட்ரெஸ்களில் நிறைய டிசைன்ஸ் தேவையில்லை. மேலே மேலே போடுவதற்கு சீப்பாக அதே சமயத்தில் குளிரைத் தாங்கக்கூடிய அளவுக்கு இருக்கவேண்டும் என்பதே. டாம் அன்ட் ஸ்டிப்பானியில் எங்கள் எதிர்பார்ப்புக்கு ஏற்ற மாதிரி ட்ரெஸ் கிடைத்தன. பிறகு மறுநாள் முஸ்தபா சென்றோம். நான் கிளம்பும் வரையிலும் எனக்கு வேலைப்பளு அதிகம். சனிக்கிழமை கூட செல்லவேண்டிய நிர்பந்தம். ஞாயிறு ஒரு நாள் தான் பர்ச்சேஸ் செய்யமுடியும். அந்த ஞாயிற்றுக்கிழமை முஸ்தபாவில் பாப்பாவுக்கு மேலும் சில ட்ரெஸ்களும் pack செய்வதற்கு சில bagsஉம் வாங்கிக்கொண்டோம். We had a list. A complete list. அதை இரண்டாக பிரித்துக்கொண்டோம், என்னால் வீக் டேஸில் பர்சேஸ¤க்கு வரமுடியாத சூழ்நிலை இருப்பதால், வீட்டுக்கு அருகிலேயே கிடைப்பவற்றை என் மனைவி வாங்கிக்கொள்வது என்றும் மீதம் இருப்பவற்றை வேறொரு லிஸ்டிற்கும் மாற்றிக்கொண்டோம். இது தவிர, கிளம்பும் முன் முக்கியமான திங்க்ஸை சரிபார்த்துக்கொள்வதற்கு ஒரு லிஸ்ட் என்று மொத்தம் மூன்று லிஸ்ட். என் மனைவி கொஞ்சம் கொஞ்சமாக வீட்டுக்கு அருகிலேயே வாங்கிக்கொண்டிருந்தார். புதன்கிழமை விசா அப்ரூவ் ஆனது. டிக்கெட் கன்·பார்ம் செய்யவேண்டும். வழக்கம்போல எனக்கு வேலை அதிகம். அன்று செராங்கூன் ப்ளாசா போக முடியவில்லை. சனிக்கிழமை கிளம்பவேண்டும் இன்னும் நாங்கள் குளிருக்கான ப்ரத்யேக உடை ஏதும் வாங்கவில்லை. இன்னும் ஷாப்பிங் லிஸ்ட் நிறைய இருக்கிறது. அன்று காலை மட்டும் நான் விடுமுறை. அதற்கு முன்னதாக என் மனைவி winter clothes விற்கும் எல்லா கடைகளுக்கும் கால் செய்து கேட்டுவிட்டார் என்னுடைய குழந்தைக்கு down jacket கிடைக்கவில்லை. நான் vivocityயில் இருக்கும் winter timesக்கு அதற்கு முந்தின நாளே அவசர விஸ்ட் ஒன்று அடித்திருந்தேன். They didnt have down jackets for babies. I dont know the reason yet. It is pretty wierd, Babies are also supposed to wear down jackets right?

*
சிங்கப்பூரில் winter clothes கிடைப்பது கொஞ்சம் கஷ்டம். அதுவும் ஆ·ப் சீசனில் தேடினால் கொஞ்சம் காஸ்ட்லியாகவும் இருக்கும். எங்கெங்கு வாங்கலாம் என்கிற இந்த லிங்கைப் பாருங்கள்.

அன்று டோபிகாட்டில் இருக்கிற Cold Wearஇல் முதலில் எங்கள் winter clothes பர்சேஸை ஆரம்பித்தோம். அங்கிருந்த ஒரு சேல்ஸ் கேர்ள் எங்களுக்கு கொஞ்சம் டிப்ஸ் கொடுத்தார். அங்கிருந்த ஒரு மானிடரில் பாரீஸை தேடிக்கண்டுபிடித்து தட்பவெட்ப ஹிஸ்டரியைக் கண்டுபிடித்து அதற்கு ஏற்றார் போல என்ன வாங்கவேண்டும் என்கிற ஆலோசனை கொடுத்தார். அது எங்களுக்கு பெரிதும் உதவியாக இருந்தது.

அவர் சொன்ன லிஸ்ட்
1. Thermal Long John Pants
2. Full sleeve cotton TShirt
3. Sweater
4. Down Jacket
5. Scarf
6. Cap
7. Hand Gloves
8. Inner Pants
9. woolen Socks
10. Good grip shoe

They didnt have anything for babies. They pointed towards Mother Care.
*
மதர்கேரில் ஸ்ரீநிதிக்கு(பாப்பா) ஒரே ஒரு ஸ்வெட்டர் தான் இருந்தது. டவுன்ஜாக்கெட்டும் அல்ல ஸ்வெட்டரும் அல்ல. இரண்டுக்கும் நடுவே இருக்கிற ஒரு ஜந்து. நீண்ட ஆலோசனைக்குப் பிறகு வேறு வழியின்றி அதை வாங்கிக்கொண்டோம். எனக்கு அலுவலகத்திலிருந்து அழைப்பு வரவே அன்றைய பர்ஸேஸ் அத்துடன் முடிந்தது.

வெள்ளிக்கிழமை விவோசிட்டிக்கு படைஎடுத்தோம். அங்கே winter times இருக்கிறது. அங்கிருந்த ஒரு சேல்ஸ் ரெப்ரஸன்டேடிவ் நிறையவே ஒத்துழைத்தார். கிட்டத்தட்ட மூன்று மணிக்கு ஆரம்பித்த எங்களது பர்சேஸ் இரவு ஏழுமணிக்குத்தான் முடிந்தது. ஸ்ரீநிதிக்கு Long John Pants வாங்கிக்கொண்டோம். எங்களுக்கு வாங்கவில்லை. அனுஷா மிக மார்டனான ஒரு டவுன்ஜாக்கெட் எடுத்துக்கொண்டார். நமக்கு எப்பொழுதும் போல மிகச்சாதாரணமாக தோற்றம் அளிக்கும் டவுன்ஜாக்கெட். அழகுக்கு எதற்கு அழகு? ஒரு வழியாக winter timesஇல் அமைதி திரும்பியபொழுது Giantஇல் சூராவளி தொடங்கியிருந்தது. எல்லா பர்சேஸையும் முடித்துக்கொண்டு டாக்ஸிக்கு காத்திருக்கையில் மறுநாள் பயணத்தை நினைத்து வயிறு கலங்க ஆரம்பித்திருந்தது. ஸ்ரீநிதியும் கடும் கோபத்தில் இருந்தார்.

*
(தொடரும்)

பாத்துகங்கப்பா நானும் பொலிடிக்கல் அனலிஸ்ட் தான்!

முன்னமே சொல்லிருக்கன்ல என்கூட ஒரு தெலுங்குக்காரர் ஒர்க் பண்றாருன்னு, இன்னக்கி அவரு கூட உக்காந்து சாப்பிட்டேன். விளைவு பல அரசியல்:தெலுங்கு சட்டமன்ற நிலவரங்களை தெரிந்து கொண்டு என் ஜெலரல் நாலட்ஜை வளர்த்துக்கொள்ள உதவியாக இருந்தது. அவரும் மற்றொரு தெலுங்குக்காரரும் சாப்பிடும்பொழுதெல்லாம் அரசியல் பேசிக்கொண்டிருப்பதைக் கேட்டிருக்கிறேன். இன்றும் சாப்பிடும்பொழுது சிரஞ்சீவி, தெலுங்குதேசம் போன்ற பெயர்கள் கூட்டுபொறியல்களாக ருசிக்கப்பட்டுக்கொண்டிருந்த பொழுது, தெரியாத்தனமா சிரஞ்சீவி எப்படி? என்கிற ஒரு கேள்வியைக்கேட்டுவிட்டேன். அவ்வளவுதான். என்னால் முடிந்த அளவுக்கு (ஞாபகம் இருக்கிற அளவுக்கு) தமிழில் மொழிபெயர்த்திருக்கிறேன்.

சிரிஞ்சீவிக்கு தனி மெஜாரிட்டி கிடைக்காது. ஆனா அவர் தான் ஆட்சியில் யார் அமர்வார் என்பதை முடிவுசெய்வார். (எங்கபாத்தாலும் கிங் மேக்கரா இருக்காய்ங்கப்பா. எல்லாரும் கிங்மேக்கர் ஆயிட்டா அப்புறம் யார் கிங் ஆகுறது?) விஜயசாந்தி விஜயசாந்தின்னு ஒரு லேடி சூப்பர்ஸ்டார் இருந்தாங்களே அவங்களோட கட்சி என்ன ஆச்சு? ஓ இருக்காங்க. அவங்க ரோஜா எல்லாரும் தெலுங்கு தேசம் கட்சியில சேர்ந்திட்டாங்க. என்னது விஜயசாந்தி கட்சியை கலைச்சிட்டாங்களா? (என்னை அரசியல் ஞானசூன்யம் போல நண்பர் பாக்கறார். நண்பர் ஒரு முறை தினமலர் படித்துக்கொண்டிருந்தைப் பார்த்ததாக ஆங்காங்கே வதந்தி நிலவி வருகிறது. அவர் தமிழ் நன்றாகப் பேசுவார். கிட்டத்தட்ட நம்ப தசாவதாரம் சிபிஐ கமல் போல! ஒரு நாள் தெரியாத்தனமா நான் அவரிடம்: உங்களுக்கு தமிழ் வாசிக்கத்தெரியுமான்னு கேட்டுத் தொலைச்சிட்டேன். என்னை விசித்திரமாக பார்த்த அவர், தமிழ் என்ன இசை வாத்தியமா வாசிக்கிறதுக்கு, படிக்கத்தெரியுமான்னு கேளுங்கய்யான்னார்.) ஆமா. கலைச்சிட்டாங்க. அப்புறம் அவங்களோட தனித்தெலுங்கானாங்கற கொள்கை என்னவாச்சு? சிரிக்கறார். பிறகு மீண்டும் ரோஜாவைப் பற்றிய செய்திகள். ரோஜா ரசிகராக இருந்திருக்க வேண்டும். இப்போ ரோஜா நம்ப கம்ப்யூட்டர் தாத்தா சந்திரபாபு நாயுடுவுடன் சேர்ந்துகொண்டு சிரஞ்சீவியை கண்டபடிக்கு பேசுகிறார்கள். சிரஞ்சீவி ஒரு நடிகர். நடிகர்கள் எல்லாம் நடிகைகளை கேவலமாக நடத்துவார்கள் என்று ஒட்டுமொத்த நடிகர்களையும் குறைகூறுவதோடு சிரஞ்சீவியையும் வாரியிருக்கிறார் தெரியுமா? ரோஜா அரசியல் பிரச்சாரம் செய்யும் பொழுது சில இடங்களில் மக்கள் ஆடச்சொல்வார்களாம். (நம்பாளுகளுக்குத்தான் தெரியுமே: இதுதான்டா சந்தர்ப்பம். இப்ப என்னகேட்டாலும் செய்வாய்ங்கன்னு நல்லா ராகிங் செஞ்சிருக்காய்ங்க போல.) ரோஜாவும் ஏதோ மக்கள் கலா ஆர்வத்தில் தான் நடனமாடச்சொல்கிறார்கள் என்று எப்பொழுதும்போல மக்களை புரிந்துகொள்ளாமல் நடனமாடியிருக்கிறார். கொஞ்சம் கொஞ்சமாக அவரை பிரச்சார பீரங்கி பதவியிலிருந்து இறக்கி, நடனசிகாமனி ஆக்கியிருக்கிறார்கள் தெலுங்கு மக்கள். (நக்கல் பிடிச்சவைங்கப்பா) ஆனா நடிகைகளின் கேள்விக்கு பதிலாக சிரஞ்சீவி: இப்போத்தான் தெரியுதா நான் (ஹீரோ) ரொம்ப கெட்டவன்னு? போன வருஷம் என்னோட ப்ளட் பாங்க் மற்றும் ஹாஸ்பிட்டல்ல நடந்த விழாவுக்கு வந்து என்னைப் பாராட்டி இவர்தான் வர வேண்டும் என்று பேசியது நினைவில்லையா என்று கேட்டிருக்கிறார் (அது போன வருஷம் இது இந்த வருஷம்ப்பா. ஆமா ஏன் சிரஞ்சீவி ரோஜா விஜயசாந்தியெல்லாம் பிடிச்சு போடல. பேமெண்ட் அதிகமாகியிருக்குமோ?) ஆனாலு ஒரு கட்சியின் தலைவர் பதவியிலிருந்துகொண்டு நடிகைகளைப் போல பேசமுடியாதல்லவா, அதனால் தனது மகளிர் அணியினரை வைத்து பேசவைத்திருக்கிறார் (இல்லை அவர்களே சிரஞ்சீவியின் மீது கொண்ட அன்பினால் பேசியிருக்கிறார்கள். ஆஹா இப்பத்தான்யா புரியுது ஏன் இவங்க எல்லா மகளிர் அணி வெச்சுக்கிறாங்கன்னு.) (இப்படியாக நடிகர் நடிகைகளிடையே அரசியில் அரைகுறை ஆடையோடு நடுத்தெருவில் நடனமாடிக்கொண்டிருக்கிறது.)

நீங்க சிரஞ்சீவி ரசிகரா? கேள்வியை எதிர்பாக்காத அந்த நபர், சுதாரித்து, தன் டிபன்பாக்ஸில் மீதமிருந்த தயிர் சாதத்தை இரண்டு ஸ்பூன் எடுத்து டபக் டபக் என்று வாயில் போட்டுக்கொள்கிறார். அருகிலிருந்த பாவக்கா பொறியலையும் கொஞ்சம் எடுத்து வாயில் போட்டுக்கொள்கிறார். பிறகு: அரேயார் (யாரது அரே?) வேறு என்ன சாய்ஸ் இருக்கிறது. ஒன்னு பாலகிருஷ்ணா. இல்லீன்னா சிரஞ்சீவி. பாலகிருஷ்ணாக்கு சிரஞ்சீவி எவ்வளவோ மேல். ஆமா. அது என்னவோ வாஸ்தவம் தான். யூடியூபில பாலய்யான்னு தேடுங்க போதும். அவ்ளோ க்ளிப்ஸ். எல்லாம் பாலய்யாவோட ஒரிஜினல் திங்கிங் அன்ட் கிரியேட்டிவிட்டி. ஒரு காட்சியிலெல்லாம் ரயில் பெட்டியை வெறும் கையை வைத்தே நகர்ந்து போக வைப்பார். இத்தனைக்கு கைக்கும் ரயில் பெட்டிக்கும் இடையே ரொம்ப தூரம் இருக்கும். நீங்க நம்பலைல? எனக்கு தெரியும். வேணுமினா நீங்களே செர்ச் பண்ணி பாத்துக்கங்க.

அப்புறம் தெலுங்குதேசம். இன்னும் எலெக்ஷன் முடிவடையவில்லை சந்திரபாபு நாயுடுக்கு இப்பொழுதே தான் ஜெயித்து முதல் மந்திரியாகிவிட்டதாக நினைப்பு. மக்களிடம் படிவங்கள் கொடுத்து அவற்றை பூர்த்தி செய்து தருமாறு நச்சரிக்கறாராம். என்ன படிவங்கள்ன்னு நான் கேட்டாத்தான் நண்பர் சொல்வாரா? அவரே சொல்ல ஆரம்பித்தார். சந்திரபாபு அறிவித்திருக்கிற திட்டத்தைப் பார்த்தால், பேசாம இந்தியா போயிட்டு (ஆந்தரா) வீட்ல இருந்துட்டு தூங்கி தூங்கி எந்திருச்சா போதும். வேலைக்கே போகவேண்டாம். அப்படி என்ன திட்டம்? ஏழை மக்களுக்கு இலவச வீடு. இலவசமாக கரண்டு. இலவசமாக கலர் டீவி (ஒருத்தர ஒருத்தர் பாத்து படிச்சுக்கிறதுதான். இதுலயாச்சும் தமிழ்நாடு முன்னோடியா இருக்கம்னு ஒரு பெருமை!) இருபது கிலோவோ நாற்பது கிலோவோ அரிசி. மாதம் இரண்டாயிரம் ரூபாய் பணம். உங்கள் கண்கள் சரியாகத்தான் வாசித்துக்கொண்டிருக்கின்றன. யெஸ். மாதா மாதம் இரண்டாயிரம் ரூபாய் இலவசம். அப்புறம் எதற்கு வேலைக்கு போகவேண்டும்? (தமிழ்நாட்டில் வீடுதோறும் இலவசமாக் மாதத்துக்கு பத்து திருட்டு டீவிடிக்கள் கொடுப்பதாகவும் அந்தந்த கட்சி சேனல்களில் மக்கள் பங்குபெரும் இன்னும் பல நடனநாட்டிய நிகழ்ச்சிகள் நடத்துவதாகவும் வாக்குறுதிகள் அளித்திருப்பதாக கேள்வி!) ஆஹா இந்த திட்டம் நல்லாயிருக்கே. யாராவது நம்ப அரசு பொங்கலுக்கு வழங்கிய பம்ப்பர் பரிசை ஒன்று இரண்டு என்று வரிசைப் படுத்துங்கப்பா. அதுசரி, யார் ஏழை யார் பணக்காரர் என்பதை யார் முடிவு செய்வது? எப்படி முடிவு செய்வார்கள்? என்னை விசித்திரமாக பார்த்த அவர்: வேறயார் அரசியல்வாதிகள் தான் முடிவு செய்வார்கள். ரேஷன் கார்டை வைத்துத்தான். எல்லோரிடமும் வெள்ளை அல்லது பிங்க் ரேஷன் கார்டுகள் வைத்திருப்பார்கள். வெள்ளை ரேஷன் கார்டு ஏழை மக்களுக்காம். (நம் ஊரில் பிங்க் ரேஷன் கார்ட் வைத்திருப்பவர்கள் எல்லோருரிடமும் வெள்ளை ரேஷன் கார்டும் இருப்பது விந்தையிலும் விந்தை) இந்த வெள்ளை ரேஷன் கார்டுகளை வைத்து ஏழை மக்கள் கண்டுபிடிக்கப்படுவார்களாம். மொத்தம் ஒரு கோடியே என்பது லட்சம் ஏழை மக்கள் இருக்கிறார்களாம். அவர்களுக்கு இவ்வளவு இலவசங்களை அள்ளிக்கொடுக்க முப்பதாயிரம் கோடி ரூபாய் தேவைப்படுமாம். (பின்னர் அவரே திருத்திக்கொள்கிறார்: முப்பதாயிரம் கோடி கோடி ரூபாய்) எனது கணிதமூளை இந்தமாதிரியான சந்தர்ப்பங்களில் ஷட்டவுன் ஆகிவிடுவது வழக்கம். இன்றும் அவ்வாறே செய்தது. காங்கிரஸ்காரர்கள் இத்தனையையும் எப்படி செய்யப்போகிறார் என்பதை சொல்லவேண்டும் என்று கேட்கிறார்களாம் (ஐ! ஆச தோச. நீங்க காப்பிஅடிக்கவா? தவிரவும், எங்களுக்கே இன்னும் புரியாமல் இருக்கும் பொழுது உங்களுக்கு எப்படி விளக்கமுடியும்?)

பாலகிருஷ்ணா. த ஒன் மேன் ஆர்மி. த பாலய்யா. த பால்ட்ரிக்ஸ் (லைக் மேட்ரிக்ஸ்) அவரும் சந்திரபாபு நாயுடுவும் பிரதர் இன் லாவாம். இப்பொழுது பாலய்யாவின் மகளை சந்திரபாபுநாயுடுவின் மகன் கல்யாணம் செய்திருக்கிறாராம். (குட்!) அதனால், பாலய்யா காட் நோ சாய்ஸ். எனக்கு The White Tigerஇல் அரவிந்த அடிகா எழுதிய வரிகள் நினைவுக்கு வருகிறது:

My cousin-sister Reena got hitched off to a boy in the next village. Because we were the girl’s family, we were screwed. We had to give the boy a new bicycle, and cash, and a silver bracelet, and arrange for a big wedding—which we did. Mr. Premier, you probably know how we Indians enjoy our weddings—I gather that these days people come from other countries to get married Indian-style. Oh, we could have taught those foreigners a thing or two, I tell you! Film songs blasting out from a black tape recorder, and drinking and dancing all night! I got smashed, and so did Kishan, and so did everyone in the family, and for all I know, they probably poured hooch into the water buffalo’s trough.

பாலய்யாவும் பெண்ண பெத்தவர் தான? பிரச்சாரம் பண்ணுன்னா பண்ணத்தான வேணும்?! பாலய்யாவிடம் மீடியா ஒரு முறை காங்கிரஸை பற்றி கேட்டிருக்கிறார்கள். அதற்கு அவர் சொல்லியிருக்கிறார்: என் பவர் தெரியாம என்னோட மோதறாங்க. நான் ஒரு முறை முறைத்தேன் என்றால் காங்கிரஸ் கட்சியே இல்லாமல் போய்விடும் (அடங்கப்பா!) இதை மீடியாக்காரர்கள் காங்கிரஸ் கட்சியினரிடம் கேட்டிருக்கிறார்கள்: அவர்கள் அவர் ஒரு சூப்பர்மேன். அவர் நினைத்தால் என்னவேண்டும் என்றாலும் செய்வார். ப்ளீஸ் எங்கள மாட்டிவிட்டுடாதீங்கன்னு நக்கல் அடித்திருக்கிறார்கள்.

பாலய்யா போகிற இடமெல்லாம், தொடையில தட்டி தட்டி பிரச்சாரம் செய்கிறாராம். (தொடயில் தட்றது அவரோட ஸ்டைல் அப்படீன்னு அவரே நினைச்சுக்கறார்!) போகிற இடத்தில் எல்லாம் மக்கள் அவரை அதே ஸ்டைல் பண்ணச்சொல்லி கேட்கிறார்களாம். நம்மை ஓட்டுகிறார்கள் என்று புரியாமல் இதுவும் மாங்குமாங்கென்று ஸ்டைல் பண்ணி காட்டியிருக்கிறது. (எனக்கு ஒரு விசயம் ஞாபகத்துக்கு வருகிறது: நான் காலேஜ் படிக்கும் பொழுது மெக்கானிக்கல் வாத்தியார் இருந்தார். அவரோட ஒவ்வொரு க்ளாஸ்லையும் மாரல் ஸ்டோரி சொல்லுவார். செம மொக்கையா இருக்கும். கிட்டத்தட்ட இந்த பதிவு போலன்னு வெச்சுக்கங்களேன். ஆனா கேர்ள்ஸ் எல்லாம் ரொம்ப ரசிக்கிற மாதிரி ஆக்ட்கொடுக்குங்க. அவர் க்ளாஸ¤க்கு வந்ததுதான் தாமதம். கேர்ள்ஸ் சார் மாரல் ஸ்டோரி சார். மாரல் ஸ்டோரி சார்ன்னு கேக்க ஆரம்பிச்சிடுங்க. அவருக்கு முகத்தில் பெருமையைப் பாக்கனுமே. அப்பப்பா தாங்காது. மனுஷனுக்கு பொண்ணுங்க எல்லாம் நம்மள ஓட்டுதுகன்னு கடைசிவரைக்கும் தெரியாது!)

பாலய்யா இப்படி தொடையில் கைய வெச்சு தட்டி தட்டி ஸ்டைல் பண்ணி பண்ணி, காங்கிரஸோட சின்னம் (ஐந்து விரல்கள்) பாலய்யாவின் தொடையில் பதிந்தேபோய்விட்டதாம். இந்த ரகசியத்தை எப்படியோ மர்மமான முறையில் துப்புதுலக்கி தெரிந்துகொண்ட காங்கிரஸ்காரர்கள், காங்கிரஸ் சின்னத்தை தனது தொடையிலே பதித்துவைத்துக்கொண்டிருக்கும் தெலுங்குதேச கட்சிக்காரரான பாலய்யாவே உண்மையில் காங்கிரஸ்காரர் தான் என்று அவரை வைத்தே எதிர் பிரச்சாரம் செய்கிறார்களாம். (இது எப்படி இருக்கு!)

Blog.Magazines.WhiteTiger.WolfTotem.

இந்த நூற்றாண்டின் சிறந்த கண்டுபிடிப்பாக எதைக்கூறுவீர்கள் என்று என்னிடம் கேட்டால் நான் சொல்வது: Blog. Blog வருவதற்கு முன்னரும் Personal பக்கங்கள் இருக்கத்தான் செய்தன என்றாலும், அவ்வாறான பக்கங்களை உருவாக்குவது தொழில்நுட்பம் தெரிந்தவர்களுக்கே சாத்தியமாக இருந்தது. Learning HTML was a very big hurdle. இப்பொழுது அந்த தடை நீங்கிவிட்டதால் சொந்த பக்கங்களை வைத்துக்கொள்வது மிக மிக எளிதாகிவிட்டது. தமிழ்வாத்தியார்கள் தமிழ் எழுத்தாளர்கள் எல்லாம் blog வைத்திருக்கிறார்கள் என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன். ஒரு நாள் என் அண்ணியிடமிருந்து ஒரு மெயில். என்னுடைய அண்ணன் மகள்களுக்கு புதிய ப்ளாக் ஆரம்பித்திருப்பதாக. அவர்கள் வரையும் படங்களை பகிர்ந்துகொள்வதற்கு blog உதவியாக இருக்கிறது. இந்த ப்ளாக் என்கிற கான்சப்ட் வராமல் இருந்திருந்தால், அவர்கள் உலகத்துடன் படங்களை பகிர்ந்துகொள்வது கண்டிப்பாக சாத்தியப்பட்டிருக்காது. Moreover, when someone is listening, when you know there is an audience, your creativity increases exponentially.

*

சில வருடங்களுக்கு முன்னர் வரை நிறைய software magazines ப்ரிண்ட் செய்யப்பட்டுக்கொண்டிருந்தன. திடீரென்று அவையெல்லாம் மாயமாக மறைந்துவிட்டன. கொஞ்சம் கொஞ்சமாக இந்த Programmer’s Magazine culture அழிந்துகொண்டுவருகிறது. Software Magazine was absorbed by Dr.Dobb’s Portal. ASP.NETPro இப்பொழுது இலவசமாக PDF உருவில் கிடைக்கிறது. I am going to unsubscribe CODE magazine. இருக்கிற blogகளை follow ( ?! 😦 ) செய்வதே மிகக்கடினமாக இருக்கிறது.

*

இரண்டு புத்தகங்கள் வாங்கினேன். அரவிந்த் அடிகா எழுதிய The White Tiger மற்றும் Jiang Rong எழுதிய Wolf Totem. The White Tigerஐ ஒரே மூச்சில் படித்துமுடித்தேன். I cannot put it down. மேலும் அவர் நடையில் இருந்த நக்கலை மிகவும் ரசித்துப்படித்தேன். சல்மான் ருஷ்டியிடம் தான் இந்த எழுத்து நடையை நான் வாசித்திருக்கிறேன். அவருக்கு பிறகு இந்தியர்களையும் அவர்களது வாழ்க்கையையும் இவ்வளவு நுனுக்கமாக யாரும் நக்கலடிக்கவில்லை என்றே நினைக்கிறேன். I liked “the minister’s sidekick” என்கிற கதாப்பாத்திரம். ஒரு சாப்டரில் சைட்கிக் (அல்லக்கை) என்று சொல்லிவிட்டால், அவர் அடுத்து வரும் அனைத்து சாப்டர்களிலும் சைட்கிக் தான். முதல் சாப்டரில் சொல்லிவிட்டு பத்தொன்பதாவது சாப்டரில் அவரை பற்றிக்கூறும் பொழுதும் சைட்கிக் தான். மேலும் Rooster Camp மிக அற்புதமான ஒரு உதாரணம். நன் ஹிந்து மதத்தில் எத்தனை கடவுள்கள் இருக்கிறார்கள்? 30,000,000 கடவுள்களா? இருக்கும்ல. காட்பாடில ஆரம்பிச்சு கட்பாடிவரை எண்ணுனோமினா கூடவே வரும். தமிழர்களை நீக்ரோக்கள் என்று சொன்னது வேண்டுமானால் தமிழன் என்கிற முறையில் வருத்தமாக இருந்தது. ஆனால் உக்காந்து யோசிக்கும் பொழுது, நீக்ரோக்கள் சொந்தமண்ணைச்சேர்ந்த மக்கள் என்கிற பொருள் தருவதாயின், தமிழர்கள் நீக்ரோக்கள் என்பது சந்தோஷமே. என் நண்பர் ஒருவருக்கு (இந்தியர்களையும் இந்தியர்களின் அட்ஜஸ்ட் கரோ யார் என்கிற கொள்கையும் வெகுவாக நக்கலடிப்பவர்) forward செய்து வைத்தேன். நாவல்களை படித்திராத அவர், இந்த நாவலை இரண்டே நாட்களில் படித்து முடித்தார். அவ்வளவு உண்மை. இந்த புத்தகத்தை கல்லூரிகளில் பாடமாக வைக்கவேண்டும். பிறிதொரு நாள் இந்த புத்தகத்தைப் பற்றி ஒரு தனிபதிவிடவேண்டும் என்கிற எண்ணம் இருக்கிறது.

*

Wolf Totem. Totem என்கிற வார்த்தையை இதற்கு முன்னர் நான் கேள்விப்பட்டதில்லை. Totem என்பது என்னவென்று தெரியாமலே தான் இந்தப் புத்தகத்தை நான் வாங்கினேன். பிறகு encyclopediaவில் தேடியபொழுது காவல் தெய்வங்கள் என்கிற தோராயமான பொருள் வருவது தெரிந்தது. நம்ம ஊர்ல கருப்பசாமி தூண் இருப்பது போல.

முதல் அறுபது பக்கங்கள் படித்துமுடித்திருக்கிறேன். கிட்டத்தட்ட நேஷனல் ஜியோகராபியில் ஒரு த்ரில்லான டாக்குமென்டரி பார்த்தது போல ஒரு உணர்வு. ஓநாய்களின் வேட்டைத்திறனை அற்புதமாக எடுத்துச்சொல்லியிருக்கிறார் எழுத்தாளர்.

*

மங்கோலியாவின் ஒரு பகுதியில் பனி படர்ந்து வருகிறது. அந்த மலையின் ஒரு புறம் காற்று எப்பொழுதும் அழுத்தமாக வீசிக்கொண்டிருக்கும். அதனால் பனி படர்ந்து தங்குவதில்லை. அங்கிருக்கும் புல்வெளி எப்பொழுதும் பனியிலிருந்து தப்பித்துவிடும். ஆனால் மலையின் மறுபுறம் காற்று அவ்வளவாக வீசாத காரணத்தால் பனி ஒரு ஆள் உயரத்துக்கு கூட சேர்ந்துவிடும். பனியினால் மலையில் புல்வெளி மீதம் இருக்கும் இந்தப்பகுதியில் மான்கள் இரைதேட வந்துவிடும். நீண்டநாட்கள் புற்களைப் பார்க்காமல் பயணம் செய்த இந்த மான்கள் ஒரே சமயத்தில் பச்சைப் பசுமையாக இவ்வளவு புற்களைப் பார்த்தபிறகு வாய் ஓயாமல் சாப்பிட ஆரம்பிக்கும். ஒநாய்கள் மான்களை மோப்பம் பிடித்துவிடும். ஆனால் உடனடியாக வேட்டையாடிவிடாது. காத்திருக்கும். மான்கள் புற்களைத் தின்று வயிற்றை நிறப்பும் வரையிலும் காத்திருக்கும். இரை கிடைத்த சந்தோஷத்தில் மான்களும் புற்களை வயிறு வெடிக்கும் அளவிற்கு தின்னும். ஓநாய்கள் மிகத்தந்திரமானவை. நரிகள் தான் தந்திரமானவை என்று பாடங்களில் படித்திருக்கிறோம். ஆனால் அது மிகப்பெரிய பொய். தந்திரம் என்பதை விட ஓநாய்களைப் போல திட்டமிட வேறு எந்த உயிரினத்துக்கும் தெரியாது. மனிதனே மிக தந்திரமான போர் தந்திரங்களை ஓநாய்களிடமிருந்துதான் கற்றுக்கொண்டிருக்கிறான். மான்களை வேட்டையாட ஓநாய்கள் அதிகாலை நேரத்தைத்தான் தேர்ந்தெடுக்கும். இரவுமுழுவதும் தூங்கிவிட்டு சிறுநீர்கழிக்காமல் படுத்திருக்கும் மான்கள். அந்த நேரத்தில் ஓநாய்களை அவற்றை வேட்டையாடும் பொழுது அவற்றால் நீன்ட தூரம் ஓட இயலாது. உண்மைதான். வெகுசில கிழமான்கள் மட்டுமே தூக்கத்தின் நடுவே எழுந்து சிறுநீர்கழித்துக்கொள்ளும். மேலும் அதே ஒரு சில கிழமான்கள் மட்டுமே, புற்களை வயிறு முட்ட தின்னாது. அல்·பா மேல்(Alpha Male) எனப்படும் ஓநாய்களின் தலைவன் உண்டுவிட்டு கலைத்திருக்கும் மான்களை வேட்டையாட பாதி வட்டமாய் தன் சகாக்களை நிறுத்திக்கொண்டு அந்த சரியான தருணத்திற்காக காத்திருப்பான். தருணம் எட்டியவுடன் வேட்டை துவங்கும் பொழுது மான்களுக்கு தாங்கள் செய்துவிட்ட தவறு புரிந்திருக்கும். ஆனால் இந்தப்பாடம் அவைகளுக்கு மிக மிக காஸ்ட்லி.

wolf totemஇல் கொடுக்கப்பட்டிருக்கும் ஓநாய்களின் வேட்டைத்திறனின் ஒரு சாராம்சம் இது. படித்துக்கொண்டிருக்கிறேன்.

*

நேஷனல் ஜியோகர·பியில் சிறுத்தை மான்களை வேட்டையாடுவதை வழக்கம்போல காட்டிக்கொண்டிருந்தார்கள். எத்தனை முறை இதைப் பார்த்தாலும் நமக்கு இது போர் அடிப்பதே இல்லை. அதே ஆச்சரியமான அகல விரித்த கண்களுடனே தான் நாம் இப்பொழுதும் பார்த்துக்கொண்டிருக்கிறோம். மான்களுக்காக நான் கவலையெல்லாம் படப்போவதில்லை. இந்தமுறை நான் பார்த்தபொழுது ஒரு விசயத்தை கூர்ந்து கவனித்தேன். சிறுத்தை தான் அதிவேகமாக ஓடும் சக்திபடைத்தது. ஆனால் பார்த்திருக்கிறீர்களா, அவை வேட்டையாடும் பொழுது, டப்பென்று எகிறிகுதித்து ஓடுவதில்லை. அதிவேகமாக ஓடும் சிறுத்தை கூட பம்மி பம்மி தான் தனது வேட்டையை துவக்குகிறது. இதிலிருந்து என்ன தெரிகிறது? (நீ வேலைவெட்டி இல்லாம சும்மா உக்காந்து டீவி பார்த்துகிட்டிருக்குறன்னு தெரியுது) சும்மாவா திருவள்ளுவர் சொல்லியிருக்கார்:
(அறத்துப்பாலில் பம்மல் அதிகாரத்தில் ஒன்பதாவது குறள்)
பம்முவார் பம்மாதார் பம்மாவிடில் சட்டென
பம்மி பயன்பெ றுவார்.

சிறுத்தைகிட்டருந்து கத்துக்கோங்கப்பா.

*

ஆனாலும் நீ ரொம்பத் தாராளம் தான் (ஐ லவ் இளையராஜா)

இளையராஜாவின் குரலில் எனக்கு மிகவும் பிடித்த பாடல் இது. இளையராஜாவே ஒரு மிகப்பெரிய ரசிகர் என்பது : குளிக்குது ரோசா நாத்து தண்ணி கொஞ்சம் ஊத்து ஊத்து என்று பாடும் பொழுதும் ஆனாலும் நீ ரொம்பத் தாராளம் தான் என்கிறபொழுதும் நன்றாகத்தெரியும். தாராளம் என்கிற வார்த்தையை அவர் உச்சரிப்பதே அழகு தான்.

மக்கள் இன்னமும் புத்தகங்கள் படிக்கிறார்கள்!

சில சமயங்களில் பதிவிடும் போது, தினமும் ஒரு பதிவிட எப்படியும் வாய்த்துவிடும். சில சமயங்களில் வாரக்கணக்கில் ஒரு பதிவு கூட எழுதாமல் விட்டுவிடுவோம். எழுத ஏதும் கிடைக்கவில்லை என்கிற அர்த்தம் இல்லை. நேரம் கிடைக்காதது ஒரு காரணமாக இருந்தபொழுதிலும், சும்மா இருப்பதே சுகம் என்று இருக்கும் ஒரு மனநிலை தான் காரணம். திடீரென்று ஒரு நாள் எழுத ஆரம்பித்தால், பதிவுகள், ரயில் பெட்டிகள் போல ஒன்றன் பின் ஒன்றாக தொடர்ந்து வந்துகொண்டிருக்கும்.

ஒரு புத்தகத்தை முழுதாக வாசித்து நிறைய நாட்கள் ஆகிறது. புத்தகத்தை எடுத்து படித்தே நிறைய நாட்கள் ஆகிறது. பஸ்ஸிலோ ரயிலிலோ அல்லது ஏதாவது ஒரு விசயத்துக்காக காத்திருப்பின் பொழுதோ அருகில் யாரேனும் அமர்ந்து புத்தகம் படித்துக்கொண்டிருந்தால் வயித்தெரிச்சல் தான் வருகிறது. நான் ஐ·போன் வைத்திருக்கிறேன். நீங்கள் கடும் வெயிலையும் பனிபொழிவையும் ஒரு சேர பார்த்திருக்கிறீர்களா? நான் பார்த்ததில்லை. நீங்களும் பார்த்திருக்கமாட்டீர்கள் என்றே நினைக்கிறேன். அது போன்ற ஒரு விசயம் தான் இந்த ஐ·போன். முட்டாள்தனமான ஆனால் அதே சமயத்தில் மிகச்சிறந்த device இதுதான். ஐ·போனில் நான் ரசிக்கும் விசயம் : Multi zoom. கடந்த சில ஆண்டுகளாக நான் நிறைய PDAக்கள் மாற்றி மாற்றி வைத்திருந்திருக்கிறேன். HPiPAQ, O2 மற்றும் Black Berry. என் நண்பர்கள் சிலர் HT, dopod,Nokia E series மற்றும் ஆம்னியாக்கள் வைத்திருப்பதையும் பார்த்திருக்கிறேன். ஆனால் மேலே சொன்ன ஒரு PDAவில் கூட ஐ·போனில் இருக்கும் அளவுக்கு வசதியாக internet browse செய்ய முடியாது. எம்.எம்.எஸ், எஸ்.எம்.எஸ் ·பார்வேர்ட் செய்ய முடியாதது போன்ற விசயங்கள் எனக்கு ஒரு பொருட்டேஅல்ல. I need browsing; that is realy fantastic in iPhone.

ஐ·போன் வாங்கிய பிறகு (அக்ச்சுவலா ஐ·போன் என் மனைவிக்குத் தான் வாங்கினேன்!) ஏனோ புத்தகம் எடுத்துச்செல்வதில்லை. என் நண்பர்கள் அடித்த கமெண்ட்: முன்பெல்லாம் முத்துவோட பையில புத்தகம் இருக்கும்; இப்போ காலை சாப்பாடு, மதிய சாப்பாடு என்று பைய திறந்தா ஒரே டப்பாக்கள் மயமா இருக்கு! உண்மைதான். ஆனால் புத்தகம் எடுத்துச்செல்லாமல் இருப்பதற்கு பையில் இடமில்லாதது காரணம் இல்லை. மனமிருந்தால் மார்க்கபந்து! எடுத்துச்செல்ல விருப்பமில்லாததே காரணம். ஐ·போனில் என் கூகிள் ரீடரைத் திறந்தால், நேரம் போவதே தெரியாது. அதற்கப்புறம் இருக்கவே இருக்கிறது டிவிட்டர். அதற்குள்ளாக ஆபீஸ் வந்துவிடும். அப்புறம் மீண்டும் வீடு திரும்பும் போது அதே ரீடர் மற்றும் டிவிட்டர். ஐ மிஸ் மை புக்ஸ்.

இன்று ஆபிஸிலிருந்து வீட்டுக்கு MRTயில் வந்துகொண்டிருக்கும் பொழுது, என் அருகே நின்றிருந்த ஒரு நபர் ஒரு புத்தகத்தை வாசித்துக்கொண்டிருந்தார். என்னிடம் ஒரு கெட்ட பழக்கமிருக்கிறது. அநேகமாக புத்தக பிரியர்கள் அனைவருக்குமே இந்த நோய் இருக்கும் என்று நினைக்கிறேன். பக்கத்தில் படித்துக்கொண்டிருக்கும் நபர் என்ன புத்தகம் படித்துக்கொண்டிருக்கிறார் என்று தெரிந்துகொள்ளாவிட்டால் எங்களுக்கு மண்டை வெடித்து சுக்குநூறாகிவிடும். நானும் எவ்வளவோ முயற்சி செய்தேன். அப்பொழுது தான் கவனித்தேன் அந்த நபருக்கு அருகில் பின்னால் நின்றுகொண்டிருந்த ஒரு நபர் சீரியஸாக எட்டிப்பார்த்து அந்த நபர் திறந்துவைத்திருக்கும் பக்கங்களை ஓசியாக படித்துக்கொண்டிருந்தார். He must be very bored. கடைசியாக என் பிரயத்தனங்களை பார்த்து பாவப்பட்ட அந்த நபர், சும்மா ரிலாக்ஸ்டாக புத்தகத்தை மடிப்பது போல மடித்து எனக்கு அந்த புத்தகத்தின் தலைப்பைக் காட்டினார். One night at a call center.

அந்த நபர் படித்துக்கொண்டிருக்கும் பொழுது நான் அவரின் முகத்தையே பார்த்துக்கொண்டிருந்தேன். புத்தகம் படிக்கும் பொழுது வாசிப்பவரின் முகபாவனைகளை எனக்கு ரசிக்கப்பிடிக்கும். நான் எழுதிய கதைகளை என் நண்பர்களுக்கு படிக்க கொடுக்கும் பொழுது, அருகில் உட்கார்ந்து அவர்களின் முக மாற்றங்களை கவனித்துக்கொண்டிருப்பேன். பெரும்பாலும் அவர்களது முகம் ஏதோ மலச்சிக்கலில் மாட்டிக்கொண்டிருப்பதைப் போன்றே இருக்கும். ஆனால் இந்த நபர் பல்வேறு உணர்ச்சிகளை காட்டிக்கொண்டிருந்தார். சிரிப்பு. வெட்கம். சிரிப்பு கலந்த வெட்கம். அவர் வாசித்தலை பறிபூரணமாக ரசித்துக்கொண்டிருந்தார்.

ஐ·போன்களும் கின்டில்களும் Audio Booksஉம் வந்துவிட்ட பிறகும் மக்கள் இன்னமும் பேப்பர் புத்தகங்களை படித்துக்கொண்டுதான் இருக்கிறார்கள்.

Surrogacy and Lahore Murder Mystery.

நியுயார்க் டைம்ஸில் வெளிவந்த இந்த கட்டுரை படித்தீர்களா?

They were saying that this was done to show the Indians that we in Pakistan are also the victims of terrorism.
“You think our own government did it?” I asked.
“No one else could get away with this kind of thing,” he insisted.

Others were more specific: a member of the opposition Pakistan Muslim League said he “had no doubt” that this was the work of the Indian intelligence agencies. A former head of Pakistan’s security service, the I.S.I., agreed with him. An analyst from Islamabad, discussing the attack later in the day on a popular chat show, said that “from every angle” it was evident that India, by attacking a foreign cricket team in Pakistan, had gained. “Who benefits?” she said. “You have to ask who benefits.”

Again at the paan stall, now surrounded by listeners, I asked Ali Raza if he thought there was a chance that the attack was the work of terrorists or criminals. “There is a chance,” he admitted. “But it could be the agencies. It could be the government. It could be India also.”
I asked, “What about other people?”
“Which other people?”
I said, “The people who kidnap journalists and bomb the homes of politicians and slit the throats of government spies.”
He was thinking about it.

லாகூரில் நடந்தது என்ன? யார் காரணம் என்றெல்லாம் பலரும் யோசித்துக்கொண்டிருக்கும் இந்நேரத்தில், இந்த சம்பவம் பாகிஸ்தான் இன்டர்நேஷனல் கிரிக்கெட்டுக்கு ஒரு மூடுவிழாவாக இருக்கும் என்று பலர் சொன்னாலும், இதனால் இந்தியாவும் பாதிக்கப்படுகிறது என்பது தான் உண்மை; உண்மையிலும் உண்மை. ஐபிஎல் விளையாட வருவதற்கு ஏற்கனவே பல நாடுகள் தயக்கம் காட்ட ஆரம்பித்துவிட்டன. இந்த சம்பவம் இந்தியாவின் கிரிக்கெட்டையும் பாதிக்கத்தான் போகிறது. Anything that happens in the sub-continent affects the whole sub-continent. இதில் யாருக்கு அதிக லாபம்? அல்லது அதிக இழப்பு? ஐபிஎல் பாதிப்படைந்தால் யாருக்கு நஷ்டம்?

*

Surrogacy பற்றிய கட்டுரை ஒன்றை சமீபத்தில் பார்க்க நேர்ந்தது. இதில் வாடகைத் தாய் ஒரு தொழிலாக வளர்ந்து வருவதைப் பற்றி குறைபட்டுக்கொண்டிருந்தார் Thomas Frank.

வாடகைத்தாய் தொழிலாக வளர்ந்துவருவது மட்டுமின்றி அது இந்தியாவுக்கு outsource செய்யப்பட்டும் விட்டது. இந்தியாவில் வாடகைத்தாய்க்கு ஒரு குழந்தை பெற்றுத்தர ஏழாயிரம் ரூபாய் சம்பளமாம். இதே வாடகைத்தாய்க்கு அமெரிக்காவில் 70000 டாலர் வரை செலவிடவேண்டுமாம். Outsourcing looks like a better alternative!

இதற்கெல்லாம் ஒபாமா தடை போடுவாரா என்பது மற்றொரு கிளைக்கேள்வியாக இருந்தபொழுதிலும், இந்த வாடகைத்தாய் முறையை, குழந்தை பெற்றுக்கொள்ளக்கூடிய தகுதி உடைய நார்மல் தம்பதியினர் குழந்தை பெற்றுக்கொள்வதிலிருந்து தப்பிக்க பயன் படுத்தலாமா கூடாதா என்பது மிகப்பெரிய ஒரு கேள்வி. ஆனால் பதில் இல்லை. It depends.

பெண்கள் பலரும் வேலைக்கு வந்துவிட்ட இந்தச் சூழலில் பெண்கள் குடும்ப வேலைகள் செய்வதில் சிக்கல் வந்துவிடுகிறது. பிள்ளைகளை வளர்ப்பது ஒரு முக்கியமான வேலை. இப்பொழுது சிங்கப்பூரில் நான் பார்த்தே என்னுடைய நண்பர்கள் பலர் தங்களது குழந்தைகளை பார்த்துக்கொள்ள பேபி சிட்டர்ஸ் வைத்துக்கொள்கின்றனர். வீட்டுக்கு வந்து பார்த்துக்கொள்ளும் பேபி சிட்டர்ஸ் ஒரு வகை. இது ரொம்ப காஸ்ட்லி. எளிமையான வழி: பேபி சிட்டர்ஸின் வீட்டுக்கே சென்று குழந்தையை விட்டுவிட்டு வருவது. பிறகு சாயந்தரம் போய் கூட்டிக்கொள்வது. எத்தனை மாதக்குழந்தை? இரண்டு மாதக்குழந்தை. என் நண்பரும் நானும் அவருடைய குழந்தைக்கு பேபி சிட்டர் தேடிக்கொண்டிருந்த பொழுது வந்த resumeவில் இருந்த ஒருவரைப் பார்க்க சென்றோம். அவர் அறைக்குள்ளேயே புகை பிடித்துக்கொண்டிருந்தார். நிராகரித்தோம். நாங்கள் போனபோது அவர் அப்படி புகை பிடித்துக்கொண்டிருந்ததால் தான் எங்களுக்கு தெரிந்தது இல்லையேல்? இவ்வாறு பேபி சிட்டர்ஸ் வைத்துக்கொள்வது தவறு என்று நான் சொல்லவரவில்லை; அதைத் தான் it depends என்று ஏற்கனவே சொல்லிவிட்டேனே. ஆனால் ஒரு இருபது வருடத்திற்கு முன்னர் இது கண்டிப்பாக சாத்தியமாக இருந்திருக்காது. தேவைகள் அதிகரிக்க அதிகரிக்க பெண்கள் வீட்டைவிட்டு வெளியேற வேண்டியிருக்கிறது. சில முக்கிய கடமைகளையும் துறந்து.

பெரும்பாலான அலுவலகங்கள் பெண்களுக்கு மூன்று மாதமே மகப்பேறு விடுமுறை அளிக்கின்றன. மூன்று மாதம் கழித்து, பிள்ளைகளை யார் பார்த்துக்கொள்வது? பிள்ளைகளை பார்த்துக்கொள்வதை விட மகப்பேற்றினால் ஏற்படும் சிக்கல்கள் மூன்று மாதங்களுக்குள் சரியாகிவிடுவதில்லை. அப்போ வேலைக்கு எப்படி போவது? மேலும் பிள்ளையை சுமந்துகொண்டிருக்கும் காலத்தில் ஒழுங்காக வேலையில் கவனம் வைக்கமுடியவில்லை. அதனால் வேலையில் நியாயமாகக் கிடைக்கும் முன்னேற்றமும் கிடைப்பதில்லை. நான் மலேசியாவில் வேலை செய்து கொண்டிருக்கும் பொழுது, என்னுடைய பிஸினஸ் அனலிஸ்ட் ஒருவர் பிள்ளை பிறக்கும் ஒரு நாளுக்கு முன் வரை தானாக காரை ஓட்டிக்கொண்டு அலுவலகத்துக்கு வருவார். வீட்டிற்கும் அலுவலகத்திற்கும் ஒரு மணிக்கும் மேலாக பயணம் செய்யவேண்டியிருக்கும். அவரை பார்க்க எங்களுக்கே பயமாக இருக்கும். ஏன் இந்த தேவையில்லாத பிரச்சனை? பேசாமால் வாடகைத்தாயிடம் outsource செய்துட்டா பிரச்சனை தீர்ந்ததுல்ல என்று சில கெரியர் ஓரியன்டட் பெண்கள் நினைக்கிறார்கள்.

தவறில்லையே? இப்பொழுது குழந்தை பெற்றுக்கொள்ளும் போது ஏற்படும் வலியைக்குறைக்க (அல்லது வலியே தெரியாமல் இருக்க) ஊசிகள் போடப்படுகின்றன. இதைத் தவிர சி-செக்ஷனுக்கு போகலாமே என்று விரும்பிக்கேட்பவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். இந்தியாவில் சி-செக்சன் கேட்காமலயே கிடைக்கும் என்பது வேறு விசயம். (முதலில் இதை வழிமுறைப் படுத்த அரசு முன்வரலாம். இது ஒரு தனி டாபிக்.) இதே போல இன்னும் சில பல வருடங்கள் கழித்து வாடகைத்தாயும் சர்வ சாதாரணமான விசயம் ஆகிவிடலாம், யாருக்கு தெரியும்? Division of labour! (via)

*

வாக்குமூல‌ம் (சிறுக‌தை) (மீள் ப‌திவு)

1

நான் = பிரபு

என்னால் நம்பவே முடியவில்லை. நித்யாவா இப்படி?
‘டேய் உண்மையாகத்தான் சொல்றியா?’ நான் மதனிடம் கேட்டேன். உடன் முரளியின் சகோதரன் கார்த்திக் இருந்தான். நான், முரளி, மதன், கணேஷ், நித்யா, சுபா, திருவேங்கடம் அனைவரும் எம்.சி.யே. கடைசி வருட நண்பர்கள்.
‘நான் என்ன பொய்யா சொல்லப் போறேன். ரொம்ப நாள் கழிச்சு நேத்து தான் தண்ணியடிக்கும் போது கணேஷ் ஒளர்னான்’
நான் நம்ப முடியாமல், முரளியின் சகோதரன் கார்த்திக்கைப் பார்த்தேன். கார்த்திக் தலை கவிழ்ந்தான்.
‘கணேஷ் வீட்டு போன் தான் இதுக்கு மெஸஞ்சர்’ – மதன்
கார்த்திக் இப்பொழுது மதனை முறைத்தான்.
கையில் வைத்திருந்த பீரை இன்னொரு மடக் குடித்தான்.
மதன் – ‘என்னை ஏன்டா முறைக்கிற? முரளி எனக்கு நண்பன் மாதிரி பிரபுவும் எனக்கு நண்பன் தான். எத்தனை நாள் மறைக்கிறது? பல நாள் திருடன் ஒரு நாள் அகப்படுவான்ல?’ என்று கூறி சிரித்தான்.
‘டேய்..உன் கெழமொழியெல்லாம் இருக்கட்டும், சத்தியமா சொல் நீ சொல்றதெல்லாம் உண்மையா?’ நான்
‘மாப்ள. இந்த பீர் பாட்டில் மேல சத்தியமா சொல்றேன்! நித்யா, முரளிய லவ் பண்றா! அவன் கிட்ட ப்ரோபோசும் பண்ணிட்டா!’
என்னால் நம்ப முடியவில்லை.
மதன் – ‘ஏண்டா! நீயும் நித்யாவும், இணை..பிரியா நண்பர்களாச்சே, உன்கிட்ட அவ இத சொல்லலியா? என்னதான் இருந்தாலும் நீ பாய் பிரண்டு தானே, கேர்ள் பிரண்டா இருந்தா சொல்லியிருப்பா!’ என்று ஏதோ ஜோக் சொன்னவன் போல விழுந்து விழுந்து சிரித்தான்.
‘நித்யா ஏன் இப்படி செய்தாள்! என்னிடம் சொல்லியிருக்கலாமில்ல?’

**

2
நான் = திருவேங்கடம்

நான் திருவேங்கடம். நான், சுபா, நித்யா,மதன், கணேஷ், முரளி அனைவரும் ஒரே கிளாஸ். எம்.சி.யே. மதுரை காமராஜ் மாலை நேர கல்லூரி. ம்..ம்.. ஒருத்தனை விட்டுட்டேன்னு நினைக்கிறேன். அவன் தான்..அலட்டல் கேசு…பிரபு. மெட்ராஸ்லேருந்து மதுரைக்கு படிக்க வந்திருக்கான். படிக்கவா வந்திருக்கான்? ம்..ம்..அவனுக்கு நிறைய பெண்கள் சினேகிதம். அதனாலேயே அவனுக்கு திமிர் ஜாஸ்தி.
நான் தான் சென்டர் ஆப் அட்ராக்ஷன், இன்னைக்கு.
‘டேய், குழந்தை..சொல்லுடா..பிரபு டைரியில இருந்து எந்த பொண்ணு போன் நம்பரை எடுத்த?’ – கணேஷ்.
குழந்தைன்னு என்னைத்தான் கூப்பிடுறான், இந்த சோடாபுட்டி கணேஷ். ஒன்னும் இல்லீங்க, அதென்ன பிரபு பேசினாத்தேன் பொண்ணுங்க எல்லாம் பேசுமா? நான் பேசுனா பேசாதான்னு பிரபு டைரியில இருந்து எனக்கு பிடிச்ச பொண்ணு போன் நம்பரை எடுத்துட்டேன். அத இவிங்க எப்பிடியோ மோப்பம் பிடிச்சிட்டாய்ங்க. மாட்டிக்கிட்டேன். சும்மா விடுவாய்ங்களா? ஆனாலும் நானாவது சொல்றதாவது? ஹ..ஹே..கம்முன்னு நல்லா தவளைய முழுங்கின பாம்பு மாதிரி உக்காந்திருந்தேன்.
‘டேய்..டேய்.. அது மஞ்சு போன் நம்பர் தானே?’ – மதன், ‘நான் தான் கிளாஸ்லேயே பார்த்திருக்கேனே, உன்னோட ஒன்றரைக் கண்ணில அரைக் கண்ண உருட்டி அவளை பாப்பியே? ஆமா குழந்தை..எனக்கு ஒரு சந்தேகம்..அவளோட பெரிய உடம்பு என் அரைக் கண்ணில பத்துதா?’ என்று கேட்டுவிட்டு மாயா பஜார் ரங்காராவ் மாதிரி சிரித்துவைத்தான்.
நான் சிரிக்கல. ம்..ம்…சிரிப்பனா?
‘ப்ளீஸ்.. டா மாமு. சொல்லிடு. இத்தனை பேர் கேக்கரோமில்ல. உன்னோட ஆளு யாருன்னு நாங்க தெரிஞ்சுக்கிறோமே..ப்ளீஸ் டா செல்லம் சொல்லுடா…’ கணெஷ்.
‘ம்ம்..ஹ¤ம்.. மாட்டேன்’ நான்
‘சரி நமக்குள்ள ஒரு டீல். நீ இதச் சொன்னேன்னா..நாங்க..உனக்கு ஒரு ஹாட் மேட்டர் சொல்லுவோம்’ மதன்.
மதனை கணேஷ் முறைத்தான். எதற்கு மதனை கணேஷ் முறைக்கிறான். எனக்கு ஏதோ பொறி த‌ட்டிய‌து.
‘ஓகே..அப்படீன்னா..நீ முதல்ல சொல்லு’ நான்
அப்பொழுதுதான் எனக்கே தெரிந்தது. நித்யாவும் நல்ல பொண்ணு, முரளியும் நல்ல பையன். வாயே திறக்கமாட்டான். அதுவும் பொண்னுங்ககிட்ட கேக்கவேவேணாம். எப்படி இவர்களுக்குள்? என்ன இருந்தாலும் முரளி என் நண்பன்..ஹ்ம்ம்..எங்கிருந்தாலும் வாழ்க!!
‘இப்ப சொல்லுடா..யாரு போன் நம்பரை நீ எடுத்த?’ மதன் விடுவதாயில்லை.
‘ம்..சொல்லமாட்டேன்..என்னை என்ன‌ லூசுன்னு நினைச்சயா?”

**

3
நான்=கணேஷ்
இன்றைக்கு ரூமில நான், மதன், முரளியின் சகோதரன் கார்த்திக் இருக்கிறோம். கார்த்திக் ஒரு மூளையில படுத்திருக்கிறான். மதனும் நானும் பேசிக்கொண்டிருக்கிறோம். இந்தப் பக்கம் முரளி தூங்கிகொண்டிருக்கிறான். குழந்தை வந்தான்.
‘வாடா..குழந்தை!’ மதன்.
‘என்னடா இரண்டு பேரும் இடி விழுந்தா மாதிரி உட்கார்ந்திருக்கீங்க’ – குழந்தை.
நாங்கள் ஒன்றும் சொல்லவில்லை.
பானையில் தண்ணீர் குடித்து விட்டு, எங்கள் பக்கத்தில் வந்து உட்கார்ந்தான் குழந்தை.
‘சொல்லுங்கடா. என்ன ப்ராபளம்? நான் தீர்த்துவைக்கிறேன்’ – குழந்தை.
‘நித்யாவுக்கு வேற மாப்பிள்ளை பார்த்துட்டாங்களாம். இந்த வருட படிப்பு முடிந்ததும் கல்யாணமாம். அதான் என்ன பண்றதுன்னு தெரியாம இன்ன வரைக்கும் அழுதிட்டு இப்பத்தான் படுத்தான் முரளி’ நான்
சிறிது நேரம் யோசித்த குழந்தை, ‘அதுக்கென்ன, நித்யாவை கல்யாணத்துக்கு சம்மதிக்கச் சொல், நிச்சயம் முடியட்டும். நம்ம ஆள் தான் காதல் மன்னனாச்சே, கல்யாணத்திற்கு முந்தின நாள் கடத்திட்டு வந்துரட்டும்’..குழந்தை சொல்லிவிட்டு என்னிடம் திரும்பி ஏதோ கௌவ்ரம் சிவாஜி ரேஞ்சுக்கு ஒரு லுக் விட்டு, ‘என்ன கணேஷ் நான் சொல்றது?’ என்றான்.
மதன் வேகமாக எழுந்து வாஷ் பேசினில் போய் நன்றாகக் காரித்துப்பிவிட்டு வந்தான். எங்கள் குரூப்பிலே குழ‌ந்தை தான் ‘ஓட்டு’ வங்கி. அவனைத் தான் ஓட்டு ஓட்டு என்று அனைவரும் ஓட்டுவோம். முரளியின் தம்பி கார்த்திக் கூட சில சமையங்களில் கேலி செய்வான். ஆனால் அதில் தப்பில்லை என்று தோன்றுகிறது.
‘ஐடியா சரியில்லேன்னா வேற யோசிப்போம்’ என்று நகர்ந்து உட்கார்ந்தான் குழந்தை.
அப்பொழுது தான் தூக்கதிலிருந்து கார்த்திக் எழுந்தான். ‘டேய் கார்த்திக்..இங்க வாடா!’ என்றான் குழ்ந்தை.
கார்த்திக் வந்து உட்கார்ந்தான்.
‘பயப்படாதே! ஒன்றும் நடக்காது! நான் இருக்கிறேன். எப்படியாவது உங்க அண்ணனையும் அண்ணியையும் (நித்யா) சேர்த்து வைக்கிறேன்’ குழந்தை.
கார்த்திக் பேசாமல் இருந்தான்.
‘ஆமா..உங்க அண்ணன், இத பத்தி உங்க அப்பாகிட்ட சொன்னா என்ன?’ குழந்தை.
‘எங்க அப்பாகிட்டயா?’ கார்த்திக்
‘ஆமா’ குழந்தை.
‘செருப்பால‌டிப்பாரு’ சொல்லிவிட்டு எழுந்து போய்விட்டான் கார்த்திக்.
குழந்தை எங்களைப் பார்த்தான்.

**

4
நான்=பிரபு

என்னால் நம்பவும் முடியவில்லை. நம்பாமல் இருக்கவும் முடியவில்லை. கேட்கலாம் என்றால், தன்மானம் இடம் தரவில்லை. அவளா வந்து சொல்லியிருக்கலாம். ச்.சே..கடைசியில் இப்படி ஆகிடுச்சே. கணேஷ் வீட்டு போன் தான் மெசஞ்சராமே!..ஹம்ம்..
நான் கணேஷ் வீட்டிற்குள் நுழைந்தேன்.
‘வாப்பா, பிரபு! எப்படி இருக்கே! உன்னோட கேர்ள் பிரண்ட்ஸ் எல்லாம் நலமா? நலமறிய அவா!’ என்று சொல்லிக் கண்சிமிட்டினார், கணேஷின் அப்பா.
கணேசஷின் அப்பா கணேஷைப் போல கல்லூளி மங்கன் கிடையாது.எதையும் மறைக்காமல் பேசுபவர்.
‘எல்லாம் நால்லாயிருக்கங்கப்பா!’ நான்
‘ஏண்டி மரகதம், யார் வந்திருக்கா பாரு, மன்மதராசா வந்திருக்காக! காப்பி எடுத்திட்டு வாம்மா!’ மனைவியை அழைத்தார். எனக்கு சிரிப்புதான் வந்தது. நானா ம‌ன்ம‌த‌ராசா?
‘கணேஷ் எங்கப்பா காணோம்?’ என்றேன்.
‘முரளி வந்திருந்தான் கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி. உனக்கு ஒரு விசயம் தெரியுமா? கணேசுக்கு பொண்ணுங்ககிட்டே இருந்தெல்லாம் போன் வருது! இன்னைக்கு நான் போனை எடுத்திட்டேன்! ஹி..ஹி..ஹி..’ என்று சொல்லி மறுபடியும் கண்சிமிட்டினார்.
எனக்கு பகீரென்றது.
‘போன்ல யாருப்பா?’ நான்.
‘நித்யாவோ ச‌த்யாவோ ச‌ரியா ஞாபகம் இல்ல‌. நீ என்ன‌ ரொம்ப‌ ஆர்வ‌மாயிருக்க‌. அதான‌ நீ தான் காத‌ல் ம‌ன்ன‌னாச்சே!’ என்றார்.
ம்..ம்.. என்க்கு தெரியாமலா? எனக்கு கோபம் வந்தது.
‘இப்போ எங்க போயிருக்கானுங்க இவனுங்க?’ நான்
‘போன் வந்த கொஞ்ச நேரத்தில ரெண்டு பேரும் வெளியில கிளம்பி போய்ட்டாய்ங்க. இவிங்க திரியிற திரிச்சலே சரியில்ல. ஏண்டியம்மா காப்பித் தண்ணிய கொண்டுவா!’
‘சரிப்பா நான் போயிட்டு வாரேன்’ நான்
‘அட, இருடா! காபி சொல்லியிருகேன்ல! நீ இருந்தா தான் எனக்கு கிடைக்கும்!’

**

5
நான்=கார்த்திக். முரளியின் சகோதரன்.
குழந்தை வந்து உட்கார்ந்தார். ‘டேய்! கார்த்தி! உனக்கு சின்ன வயசு. நீ எதைப் பத்தியும் கவலைப் படாதே.!’
எனக்கு சின்ன வயசாம். நானும் எம்.சி.யே ஈவினிங் காலேசில தான் படிக்கிறேன். இவங்களோட ஒரு வயசு கம்மி. குழந்தை அளந்தாருன்னா அதுக்கு அளவே இருக்காது. டுபுக்ககு. இவரை குழந்தைன்னு கூப்பிடறதுக்கே ஒரு கதை இருக்கு.

ஒரு நாள் இரவு ரொம்ப நேரமா பன்றி ஒன்று கத்திக் கொண்டிருந்தது. நீண்ட நேரமாகியும் பன்றியின் சத்தம் ஓயவில்லை. எங்களுக்கே தூக்கம் வரவில்லை. குழந்தை வீராப்பாக நான் சென்று பார்த்து வருகிறேன் என்று சொல்லி சென்றவர், சிறிது நேரம் கழித்து திரும்பி வந்தார். வந்தவர்,’அது ஒன்றுமில்லை பசங்களா. பன்றி ‘குழ்ந்தை’ போட்டிருக்கு’ என்றார்.

பன்றியாவது? குழந்தையாவது? எங்களுக்கு சிரிப்பு வந்தது. நாங்கள் அவரிடம் மறுபடியும் கேட்க, அவர் கூலாக ‘என்னங்கடா, புரியாதமாதிரி பார்க்கறீங்க! பன்றி குழந்தை போட்டிருக்கு அதுதான் கத்தறது. தூங்குங்க!’ என்று சொல்லிவிட்டு படுத்துக்கொண்டார். அன்றிலிருந்து திருவேங்க‌ட‌த்தின் திருநாமம் குழ‌ந்தை என்றான‌து.

‘டேய்..கார்த்திக்! நான் வேணும்னா உங்க அப்பாரு கிட்ட வந்து பேசட்டுமா? நான் சொன்னா உங்க அப்பா கேப்பாரு! ஒன்னு செய்யறேன், இந்த வாரம் உங்க அப்பாகிட்ட வந்து பேசறேன்!’
இவர் வந்து பேசினா எங்க அப்பா கேட்ருவாரா? டுபுக்குன்னா ச‌ரியாத்தான் இருக்கு.

**

6
நான்=பிரபு
அதோ முரளியும் கணேசும் std பூத்திலிருந்து வெளியே வருகிறார்கள். நான் மறைந்து கொள்கிறேன். அவர்கள் என்னைக் கடந்து சென்றபின், நான் மெதுவாக கடைக்குள் நுழைகிறேன்.
‘வாங்க பிரபு, அண்ணே’ என்றான் பூத் பையன்.
‘ஏண்டா! முரளியும் கணேசும் இங்க வந்தாங்களா? என்றேன். தெரியாததுபோல்.
‘ஆமாண்ணே! வந்தாங்க!’
‘எதுக்கு வ‌ந்தாங்க‌?’
‘ம்ம் புரோட்டா சால்னா சாப்பிட‌ வ‌ந்தாங்க’
நான் அவ‌ன் க‌ஸ்ட‌ம‌ர்க‌ள் ட‌ய‌ல் செய்யும் போன் ந‌ம்ப‌ர்க‌ளை குறித்து வைக்கும் லெட்ஜ‌ரைப் புர‌ட்டினேன்.
‘அண்ணே..என்னாச்சு? சிபிஐல‌ வேலை கிட‌ச்சுடுச்சா?’
அவள் வீட்டு நம்பர் தான்.

**

7
நான்=கணேஷ்
குழந்தை வந்தான். முரளியிடம் சென்றான்.
‘டேய் முரளி! உனக்கு இதெல்லாம் தேவையாடா! நீ எதுக்கு இங்க வந்த? படிக்கத்தானே? உன்னை எவ்வளவு கஷ்டப்பட்டு வீட்ல படிக்க வைக்கிறாங்க? உனக்கு லவ்வெல்லாம் தேவையாடா?’ முரளி மவுனமாக இருந்தான்.
‘அம்மா அப்பா பாத்து கல்யாணம் பண்ணிவைக்கிற பொண்ணைத் தான் கல்யாணம் செய்துக்கனும் அதுதான் நிலைக்கும்! காதல் கல்யாணம் எல்லாம் சும்மா ஜிகினா தூள் மாதிரி’ குழந்தை. உதாரணத்துக்கொன்னும் கொறைச்சல் இல்ல. முரளி ஏதும் பேசவில்லை.
‘என்னடா பேசாம இருக்க? இப்ப என்னையே எடுத்துக்கோ. வீட்ல பாக்குற பொண்ண கல்யாணம் பண்ணிக்கனும்னு தான் நான் இன்னும் லவ் பண்ணாம இருக்கேன்!’ குழந்தை
திஸ் இஸ் டூ மச். எனக்கு சிரிப்பு வந்தது. முரளி நிமிர்ந்து பார்த்து விட்டு மறுபடியும் தலையைக் கவிழ்ந்து கொண்டான்.
‘இப்போ என்னதான் பண்ணலாம்னு முடிவோட இருக்க?’ குழந்தை முரளியை விடுவதாகை இல்லை.
‘டேய் மாமா! இங்க வா! ஏற்கனவே பயத்துல இருக்கிற அவன் கிட்ட எதையாவது சொல்லி மேலும் பயமுறுத்தாத. பய ஏதாவது பண்ணிக்கப் போறான்! நான் குழந்தையைக் கூப்பிட்டேன்.
குழந்தை திகிலுடன் முரளியைப் பார்த்துவிட்டு, என்னிடம் வந்தான்.
‘என்னடா சொல்ற?’ குழந்தை.
‘நீ தான் ஏதாவது ஐடியா கொடுக்கனும்’ நான்
குழந்தை தீவிரமாக யோசித்தான்.

**

8
நான்= சுபா
2..5..6..6..3..6..4 எண்களை டயல் செய்து, ரிசீவரை காதுக்கு கொடுத்தேன்.
ஒரு ரிங்…ரெண்டு ரிங்…’மடையா எடுடா..’
‘ஹலோ’ மறுமுனை
‘ஹலோ! பிரபுவா?’ நான்
‘ம்ம்.. சுபா?’ பிரபு
‘ஆமா! எப்படிடா இருக்க?’ நான்
‘ரொம்ப முக்கியம். என்ன விசயம் சொல்லு!’ பிரபு
‘என்னடா ரொம்ப சூடா இருக்க போலிருக்கு, ம்..ம்..சரி..முரளியை எப்படி பிடிக்கிறது?’ நான்
‘வாட்?’ பிரபு
‘இல்லப்பா! முரளியை எப்படி கான்ட்டாக்ட் பன்றதுன்னு கேட்டேன்?’ நான்
‘நீ எதுக்கு அவனைக் கான்ட்டாக்ட் பண்ணனும்?’ பிரபு
‘இன்னிக்கு காலையில, நித்யாவும் முரளியும் வெளியில போனாங்க, இன்னும் வரலை! மதியம் 2 ஆச்சு, அவங்க அம்மா தேடறாங்க! அதான் கேட்டேன்! நீ என்னமோ ரொம்ப பிகு பண்ணற’ நான்
சிறிது மவுனம். பிறகு லைன் துண்டிக்கப்பட்ட சத்தம்.
எனக்கு ஏமாற்றம். கோபமும் கூட. ‘இவன் ஏன் இப்படி பண்றான், ஸ்டுப்பிட்’ ரிசீவரை வைத்தேன்.

**

9
நான்=கணேஷ்

திருவேங்கடம் இங்கிட்டும் அங்கிட்டுமாக நடந்து கொண்டிருந்தான். திருவேங்கடமா? யாரு அதுன்னு யோசிக்கிறீங்களா? அதுதாங்க, நம்ம குழந்தை! ஹி..ஹி..

குழந்தை, நித்யா-முரளி க்கு ஒரு வழி யோசித்துக் கொண்டிருந்தான். அறையில் மதன், நான்,குழந்தை,கார்த்திக் ஆகியோர் இருக்கிறோம்.
குழந்தை தொல்லை தாங்கமுடியல. ஐடியா தருகிறேன் பேர்வழி என்று எதையாவது ‘அச்சு பிச்சு’ ன்னு உளறார்.
‘இப்படிப் பண்ணா என்ன? பேசாமா நித்யாவை முரளி வீட்லையும் முரளியை நித்யா வீட்லையும் வேலை செய்ய சொல்வோம். அப்புறம் நித்யா வீட்ல முரளியையும், முரளி வீட்ல நித்யாவையும் புடிச்சுப் போயிரும். அப்புறம் என்ன சுபம் தான்’ குழந்தை.
‘என்ன படம் முடிஞ்சிருச்சா! ஏன் குழந்தை நீ வேற படுத்தற? எரிச்சலக் கிளப்பாம கொஞ்சம் சும்மா இருக்கியா?’ நான்
‘அதெப்படி நாம பேசாம இருக்கிறது, நம்ம பிரண்டோட வாழ்க்கை இல்லியா?’ என்று சொல்லிவிட்டு மறுபடியும் குறுக்கும் நெடுக்குமாக நடக்க ஆரம்பித்தான்.

**

10
நான்=கணேஷ்
‘டேய் எல்லோரும் இருக்கீங்களா? எங்கடா போய் தொலைஞ்சீங்க?’ நல்ல போதையில் பிரபு வந்தான்.
நான் பிரபுவைப் பார்த்து, ‘ என்னடா பிரபு? எப்பவுமே இங்க வந்து தானே ஏத்துவ? இன்னிக்கு ஏத்திக்கிட்டு அப்புறம் இங்க வந்திருக்க?’ என்று கேட்டேன்.
பிரபு, ‘உஷ்…நீ பேசாத!’ விக்கல் ‘நீ கூட..நீ கூட..என்கிட்ட சொல்லாம மறைச்சிட்ட பார்த்தியா?
நான், ‘டேய்..நித்யா உன் பிரண்டு, உனக்கு தெரியும்னு நினைச்சேன்’
‘பிரண்டு..பொல்லாதா பிரண்டு..அவளை நான் என் பிரண்டு மாதிரியாடா வெச்சிருந்தேன்..இங்க டா..இங்க வெச்சிருந்தேன் அவளை’ பிரபு இதையத்தைக் காட்டினான்.
எனக்கு விளங்கியது. ஆகா மேட்ட‌ர் இப்ப‌டி போகுதா?
‘என்னடா சொல்ற மச்சான்?’ மதன்
‘என்ன நொன்னாடா சொல்ற? அதான் சொன்னேனே, இதயத்தில வெச்சிருக்கேன்னு. யெஸ். ஐ லவ் ஹெர்! அதுக்குள்ள இந்த முரளி பய வந்து ஆட்டைய களைச்சுட்டான்’ விக்கல்.
நாங்கள் விக்கித்து நின்றோம்.
‘ஊமை ஊரைக் கெடுக்கும் பெருச்சாளி வீட்டக் கெடுக்கும்னு சும்மாவா சொன்னானுங்க, ஊமை மாதிரி இருந்திட்டு என்னென்ன வேலை பண்ணியிருக்கான் பாரு இந்த முரளி. அவனுக்கு துணை இந்தக் கூட்டம். இந்தக் கூட்டத்துக்கு தலைவர்..கணேஷ்’..என்னைப் பார்த்து கண்ணை உருட்டினான், பிரபு.
‘நான் ஒரு வேளை செத்தா, என் சாவுக்கு நீங்கள் தான் காரணம் அப்படீன்னு லெட்டர் எழுதி வெச்சிருக்கேன். கவிதை கூட எழுதிருக்கேன். படிக்கவா?’ பாக்கெட்டைத் துளாவி ஒரு லெட்டர் ஒன்றை எடுத்தான்.
எனக்கு திக்கென்றது. கவிதைக்காக அல்ல.
‘நீ எதுக்குடா சாகனும்?’ நான்.
‘டேய் மடையா, மனுசனா பிறந்தா, சாகறது உறுதிடா. அதுவும் ரெண்டு புல் பாட்டில் பூச்சிக் கொல்லி மருந்து குடிச்சா கண்டிப்பா குளோஸ் டா..ஹா..ஹா..’ சிரித்துக் கொண்டே சரிந்தான் பிரபு. வாயில் லேசாக நுரை.
‘ஐயையோ…விளையாட்டு வினையாகிடுச்சேடா! தூக்குங்கடா தூக்குங்கடா’ பதறிக்கொண்டு தூக்கினோம்.

**

11
நான்=நித்யா

இன்று காலை எழுந்து குளித்து விட்டு, என்னுடைய கம்ப்யூட்டர் ரூம்முக்கு வந்தேன். நாளைக்கு அஸைன்மென்ட் வைக்க வேண்டும். இன்று புரோகிராம் எழுதி டெஸ்ட் செய்ய வேண்டும். தெண்டப் பசங்க, நாளைக்கு என்னைப் பார்த்துதான் காப்பியடிப்பானுங்க. பவர் பட்டனை ஆன் செய்தேன். கம்ப்யூட்டர் பூட் ஆகவில்லை. ஆப் செய்து ஆன் செய்தேன்..ம்..ஹ¤ம்…பூட் ஆகவில்லை..போனதடவை..இது மாதிரி ஆனப்போ கணேஷ் தான் சரி செய்து கொடுத்தான்.
கணேஷ் நம்பரை சுழற்றினேன்.
கணேஷின் அப்பா எடுத்தார். ‘ஹலோ..யார் பேசறது?’
‘கணேஷ் இருக்காறா?’
‘நீ யாரும்மா?’
‘நான் கணேஷோட பிரண்ட் நித்யா.’
‘ஓஹோ…!! டேய் கணேஷ் ஓடியாடா! எதோ பொண்ணு பேசுதுடா..ம்..ம்ம்ம்..ம்ம்ம்ம்..’ சிரித்தார்
கணேஷ் போனை வாங்கி பேசினான்.
‘என்ன நித்யா?’

**

12
நான்=கணேஷ்
அப்பாவிடமிருந்து போனை வாங்கினேன்.
‘என்ன நித்யா?’
‘என் கம்ப்யூட்டர் பூட் செய்யலடா. ஏதோ ப்ராபளம் போல் தெரியுது!’ என்றாள்
நான் சில சிம்ட்டம்ப்ஸ் (symptoms) கேட்டும் எனக்கு புலப்படவில்லை, சரி வீட்டிற்கே வருகிறேன் என்று சொல்லிவிட்டு, முரளி இதில் எக்ஸ்பேர்ட் என்பதால் அவனையும் வருமாறு அழைத்துக் கொண்டேன். நானும் முரளியும் நித்யா வீட்டிற்கு சென்றோம்.

**

13
நான்=முரளி
நித்யா வீட்டிற்கு சென்றும் ஒன்றும் பிரையோஜனம் இல்லை. எங்களுக்கு ஒன்றும் பிடிபடவில்லை. எனவே புராஸஸரை எடுத்துக் கொண்டு செர்வீஸ் ஸ்டேசன் போகலாம் என்று முடிவு செய்தோம். நித்யாவும் ‘நானும் ஹார்டுவேர் கத்துக்கணும் அடுத்த முறை உன்னைக் கூப்பிடவேண்டாம் பாரு, அதனால நானும் வருவேன்’ என்று அடம் பிடிக்கவே அவளையும் அழைத்து சென்றோம். செர்வீஸ் ஸ்டேசனில் நேரமாகும் என்று சொல்லவே, நித்யாவை அனுப்பிவிட்டோம்.
சிறிது நேரம் கழித்து, அவர்கள் நாளைக்குத்தான் கிடைக்கும் என்று சொல்லவே, இந்த தகவலை நித்யாவிடம் சொல்ல std பூத்திற்கு சென்றோம். பூத் பையன் நாங்க‌ள் ட‌ய‌ல் செய்த‌ நம்பரைக் குறித்துக் கொண்டான்.

**

14
நான்=மதன்
ஆம்புலன்ஸ் ஓடிக் கொண்டிருந்தது. பிரபு அரை மயக்கத்திலிருந்தான். பல்ஸ் இருந்தது. நாங்கள் செய்வதறியாமல் விழித்துக் கொண்டிருந்தோம்.
‘டேய்..பிரபு’ நான்
‘ம்ம்..ம்ம்..ய்..ய்..யா..யாலு இது..நி.நி..நி..ல்த்யா..வ.கூல்ட்டிட்டுவா’
‘டேய் நான் மதன்டா. என்னை மன்னிச்சிடுடா. நீ கேர்ள் பிரண்டு அது இதுன்னு பிலிம் காட்டினதால உன்னை உன் டியர் பிரண்டோட சண்டை போட வைக்கலானுதான் பிளான் போட்டோம். நான் தான் உன்கிட்ட முதன் முதலா சொன்னது! உண்மையிலே முர‌ளிக்கும் நித்யாகவுக்கும் ந‌டுவில‌ ஒன்னுமே இல்ல.பொய் சொன்ன‌துக்கு ப்ளீஸ் என்னை மன்னிச்சிடுடா!’
சைரன் ஒலி காதைப் பிளந்தது.
‘ப்ளீஸ் சாரிடா!’ கணேஷ்
‘ம்….ம்…ல்ல்…ல்..’ பிரபு முனகினான்
‘மன்னிச்சிட்டேன்னு சொல்றா’ நான்
‘ம…ன்..ல்…னி..ச்…சி..ட்..ட்…ட்..டே….ன்…’
‘சரி! அந்த வாக்குமூல‌ லெட்டர் எங்கேடா வெச்சிருக்க!’ நான் துலாவினேன்.
மடேர் என்று அடி விழுந்தது.
பிரபு எழுந்து உட்கார்ந்தான்.
‘அட பாவி! நான் உயிருக்கு போறாடிக்கிட்டிருக்கிற நேரத்திலும் உனக்கு லெட்டர் தான் முக்கியமா? Driver sir அம்புலன்ஸ நிறுத்துங்க! எனக்கு ஒன்றுமில்லை! ஐயாம் பெர்பெக்ட்லி ஆல்ரைட்!’ பிரபு.
எங்களுக்கு நிலைமை விளங்கி, அவனை மொத்த ஆரம்பித்தோம்.

**

15
நான்=பிரபு

நாங்கள் அனைவரும் அமைதியாக உட்கார்ந்திருந்தோம். ஆளுக்கொரு மூலையில். குழந்தை வந்தான்.
‘அடடே..பிரபுவா? வாடா! ரொம்ப நாளைக்கப்புறம் இந்தப் பக்கம் வந்திருக்க?’
ம்ம் என்றேன்
‘ஆமா..உனக்கு மேட்டர் தெரியுமா?’
‘என்ன?’ நான்
‘நம்ப நித்தியும்…’
‘நித்தியா? யாரு அது?’
‘அதாண்டா உன் பிரண்டு நித்யா!’
‘ம்ம்.ம்ம்’
‘உன் பிரண்டு நித்யாவும். நம்ப முரளியும் லவ் பண்றாங்களாமே!! நித்தி வீட்ல..மாப்ள பார்த்துட்டாங்களாம்..அவங்களைச் சேர்த்து வைக்க நீதான் ஐடியா ஏதாவது கொடுக்கனும்’
நான் கணேஷைப் பார்த்தேன். கணேஷ் மதனைப் பார்த்தான். ம‌த‌ன் முரளியை பார்த்தான். முரளி என்னைப் பார்த்தான்.

குழந்தைக்காக நான் ஐடியா யோசிக்க ஆரம்பித்தேன்.

வாசித்த‌தும் யோசித்த‌தும்

போஸ்ட் ஆபீஸ் மோசடி,ஜேம்ஸ் ஓடிஸ்,யாருக்கும் ஓட்டளிக்க விருப்பமில்லை,kindle,H1B, Movies

மோசடிகள் எங்குமே வழக்கமாகிவிட்ட பிறகு போஸ்ட் ஆ·பீஸில் மட்டும் நடக்காமல் இருக்குமா என்ன? வேடசந்தூர் போஸ்ட் ஆ·பீஸில் மோசடி செய்யப்பட்ட பணம் அதிகமில்லை ஜென்டில் மேன் : ஜஸ்ட் ஒன்றரைக்கோடி! போஸ்ட் ஆபீளில் கூட பணத்துக்குப் பாதுகாப்பு இல்லியா? மேலும் ஒரு விசயம் இங்கே யோசிக்கவேண்டும்: இந்த கேஸை துப்பறிய சிபிஐ வேண்டுமா? இங்கே இருப்பவர்களால் ஏன் பல் வெளக்கி துப்பமுடியவில்லை?

என் மனைவி நேற்று என்னிடம் “இனிமே பாங்க நம்பி பணம் போடவே முடியாதா?” என்றார். முதல்ல பணம் இருந்தாத்தானே போடுவோங்கறது இன்னொரு பக்கம், ஆனா உண்மையில பாங்கமட்டுமில்ல யார நம்பியும் பணம் போட முடியாது என்பது தான் உண்மை. குழந்தைகள் பேரில் ஏழு வருசத்துக்கு ரெட்டிப்பு, ஒன்பது வருசத்தில் முட்டிப்பு என்றெல்லாம் இனி அவ்வளவு சுலபமாக போட முடியாதோ?. எப்ப எந்த பேங்க் காலியாகும்ன்னு யாருக்குமே தெரியல. சிங்கப்பூரில ஒரு வயதான தம்பதியினர் தங்களது பென்ஷன் பணத்தை (நூறாயிரம் டாலர்) லேமேன் பிரதர்ஸில் 2008 ஜூனில் இன்வெஸ்ட் செய்தனர். ஆறு மாதங்களில் போட்ட பணம் காலி. சுத்தம். இப்போதைக்கு தங்கம் வாங்குவது தான் சிறந்த வழி என்றும் சிலர் சொல்கின்றனர். கெட்டித்தங்கமாக இருந்தால் பின் நாளில் விற்கலாம். நகையாக வாங்கினால் விற்கும் பொழுது அவ்வளவு லாபம் இருக்காது. ஆனால் தங்கம் விலையும் ராக்கெட் வேகத்துக்கு ஏறிக்கொண்டு போகும் போது என்னத்தான்யா வாங்குறது? So, Cash is King. சிங்கப்பூரில் என்னுடைய நண்பர்கள் சிலர் தங்களது வீடுகளை விற்று விட்டு கனிசமான ஒரு தொகையை கையகப்படுத்தியிருக்கின்றனர். எனக்கு விற்க ஆசை தான். வீடு?

*


இந்த ஜேம்ஸ் ஓடிஸ் தொல்ல தாங்க முடியலப்பா. காந்தி உபயோகப்படுத்தின பொருட்களை வைத்துக்கொண்டு அவர் விடுகிற ரவுசு தாங்கல.ஆமா அவ‌ருகிட்ட‌ எப்ப‌டி இந்த‌ பொருட்க‌ள் எல்லாம் போச்சுங்க‌ற‌ கேள்வி என் ம‌ண்டைய‌ காலையிலிருந்து குடைந்து கொண்டிருக்கிற‌து. ஏலம் விடக்கூடாதுன்னா இந்தியா போருக்கு செலவழிக்கும் பணத்தை ஏழைகளின் சுகாதாரத்துக்கு செலவழிக்கவேண்டுமாம். இதெல்லாம் ரொம்ப நக்கல் ஆமா. ரிசன்டா ஸ்லம்டாக் மில்லியனர் படம் பாத்திருப்பார் போல. அப்படியே அரவிந்த அடிகா எழுதின வைட் டைகரையும் படிச்சிருங்க. நான் இன்னும் ஸ்லம்டாக்கும் பார்க்கவில்லை, வைட் டைகரும் படிக்கவில்லை. ஆமா, ஸ்லம்டாக் மில்லியனருக்கு அப்புறம், இந்தியர்களை ஸ்லம் டாக்ஸ் என்று அமெரிக்கர்கள் கேலி பண்ணுகிறார்களாமே? உண்மையா?

*

வருகிற தேர்தலில் யாருக்கும் ஓட்டளிக்க விருப்பமில்லையா, கவலையை விடுங்கள், நீங்கள் யாருக்கும் ஓட்டளிக்க விருப்பப்படவில்லை என்பதை அரசுக்கு தெரிவித்துவிடலாம். ஒரு பாரம் இருக்கிறதாம். அது ஓட்டுச்சாவடியிலே கிடைக்குமாம். ஓட்டுப்பதிவு தினத்தன்று ஓட்டுச்சாவடிக்கு சென்று, அந்த பாரத்தை அங்கிருப்பவர்களிடமிருந்து பெற்று, பூர்த்திசெய்து கொடுத்துவிடவேண்டுமாம். எங்களப் பாத்தா என்ன இனாவானா மாதிரி இருக்கா? ஓட்டுப்போட்டாலேநம்ம ஊர் அரசியல்வாதிங்க ஒன்னும் செய்யறதில்ல. இதில பாரம் வாங்கி பூர்த்தி செய்து ஓட்டுப்போட மாட்டேன்னு எழுதிக்கொடுத்தா, நம்மள நடுத்தெருவுக்கு கொண்டுவந்திருவாங்க. நான் யாருக்கு ஓட்டுப்போட்டோம் என்பது ரகசியமாக வைக்கப்படுவது போலவே, நாம் ஓட்டுப்போடலை என்பதையும் ரகசியமாக வைக்கவேண்டாமா? இது சம்பந்தமாக ஒரு கேஸ் நிலுவையில் இருக்கிறதாம். ஆனால் ஓட்டுப்போடவில்லை என்றால், தேர்தல் முடிவில் மாற்றம் இருக்குமா? யாருக்கு அதிக ஓட்டோ அவர் தானே வெற்றி பெற்றதாக கணக்கில் கொள்ளப்படும்? யாருக்குமே டெபாஸ்ட் கிடைக்கலன்னா? அங்கேயும் நமக்குத்தான் ஆப்பு. மீண்டும் ஒரு முறை தேர்தல் நடத்தப்படும். நம் வரிப்பணம் தான் விரயம் ஆகும். உண்மையில் யாருக்குமே டெபாஸிட் கிடைக்கலேன்னா அந்த தொகுதில என்ன தான்யா பண்ணுவாங்க?

*

அமேசான் ஐ·போனில் தங்களது டிஜிட்டல் புத்தகங்களை தறவிறக்கம் செய்துகொள்ள அனுமதித்திருப்பதைப் பார்த்தீர்களா? Smart Move. இப்போ அமேசான் தான் iTunes for Books. இதன் மூலம் கண்டிப்பாக அவர்களது இரண்டாம் ஜெனரேஷன் Kindle விற்பனை கனிசமாக பாதிக்கப்படும் என்பது உண்மை தான் என்றாலும், ஐ·போனில் தறவிறக்க அனுமதித்த பிறகு, நிறைய புத்தகங்கள் (கிட்டத்தட்ட 240,000 புத்தகங்கள்) விற்கும் என்பது உண்மைதான். After all, Amazon sells books. மேலும் இந்த கடினமான எகனாமிக் காலத்தில் புத்தகம் வாசிப்பதற்கென்று (Kindle) யார் நூற்றுக்கனக்கான டாலர்களை செலவலிக்கப்போகிறார்கள்?

*

H1B விசா ப்ராஸஸிங் கடினமாக்கப்படுகிறதாமே?

Senators Charles Grassley (R-Iowa) and Richard Durbin (D-Ill.), two of the program’s vocal critics, are pressing for legislative reform as well. They plan to introduce legislation by early April that would require employers to pledge they had attempted to hire American workers before applying for H-1B visas—a step not required under current law. “I want to make sure that every employer searches to make sure there is no American available to do the job,” says Grassley.

செய்தி எதிர்பார்த்த ஒன்று தான் என்றாலும், இந்த செய்திக்கு வந்திருந்த பின்னூட்டங்கள் நன்றாக இருந்தன:

1. Outsourcing is irreversible – it will continue to happen in some form or the other (as it has happened all through history). Did you know that Microsoft, JPM & Goldman Sachs have shifted jobs from people laid off here to India and China in the past couple of months? They have not ‘technically’ outsourced any jobs. They’ve just moved jobs to their own offices elsewhere. How do you expect to catch such crooks, who’ll find ways to manipulate your definition of outsourcing?

2. With US universities producing approximately 330,000, computer science and informationsystems graduates annually, I find it difficult to believe that companies can’t staff positions with trained US citizens. Low pay is the reason. I’d be willing to bet that on anyy given day a US trained individual could out perform an H-1B holder.

கிழே இருக்கும் இந்தப்பின்னூட்டம் தான் என்னை எரிச்சலடையச் செய்தது:
3. One solution to the H1-B and L1 problem would be to tighten eligibility. If it is truly for the best and brightest then only those with PhD’s from the top 50 international universities should be eligible and may be Master’s from the top 25. One commonly cited ranking is the Shanghai Jiaotong University and the Times of London Survey. A link is below: http://www.eurogates.nl/en_holland_news/page/15/id/683/

ஏன் இந்தியாவின் தலைசிறந்த விஞ்ஞானியை உங்களிடம் அனுப்பிவைக்கிறோம். ஓகேவா?

Cartoon from Newyorker:

*
ஸ்டாக் மார்கெட் எல்லாம் மண்ணைக்கவ்வ மூவி பிஸினஸ் லாபத்தை அள்ளிக்கொடுக்கிறதாமே? Up by 14%?

*