Thanks: Newyorker.
Tag: நாட்டுநடப்பு
வாசித்ததும் யோசித்ததும்
போஸ்ட் ஆபீஸ் மோசடி,ஜேம்ஸ் ஓடிஸ்,யாருக்கும் ஓட்டளிக்க விருப்பமில்லை,kindle,H1B, Movies
மோசடிகள் எங்குமே வழக்கமாகிவிட்ட பிறகு போஸ்ட் ஆ·பீஸில் மட்டும் நடக்காமல் இருக்குமா என்ன? வேடசந்தூர் போஸ்ட் ஆ·பீஸில் மோசடி செய்யப்பட்ட பணம் அதிகமில்லை ஜென்டில் மேன் : ஜஸ்ட் ஒன்றரைக்கோடி! போஸ்ட் ஆபீளில் கூட பணத்துக்குப் பாதுகாப்பு இல்லியா? மேலும் ஒரு விசயம் இங்கே யோசிக்கவேண்டும்: இந்த கேஸை துப்பறிய சிபிஐ வேண்டுமா? இங்கே இருப்பவர்களால் ஏன் பல் வெளக்கி துப்பமுடியவில்லை?
என் மனைவி நேற்று என்னிடம் “இனிமே பாங்க நம்பி பணம் போடவே முடியாதா?” என்றார். முதல்ல பணம் இருந்தாத்தானே போடுவோங்கறது இன்னொரு பக்கம், ஆனா உண்மையில பாங்கமட்டுமில்ல யார நம்பியும் பணம் போட முடியாது என்பது தான் உண்மை. குழந்தைகள் பேரில் ஏழு வருசத்துக்கு ரெட்டிப்பு, ஒன்பது வருசத்தில் முட்டிப்பு என்றெல்லாம் இனி அவ்வளவு சுலபமாக போட முடியாதோ?. எப்ப எந்த பேங்க் காலியாகும்ன்னு யாருக்குமே தெரியல. சிங்கப்பூரில ஒரு வயதான தம்பதியினர் தங்களது பென்ஷன் பணத்தை (நூறாயிரம் டாலர்) லேமேன் பிரதர்ஸில் 2008 ஜூனில் இன்வெஸ்ட் செய்தனர். ஆறு மாதங்களில் போட்ட பணம் காலி. சுத்தம். இப்போதைக்கு தங்கம் வாங்குவது தான் சிறந்த வழி என்றும் சிலர் சொல்கின்றனர். கெட்டித்தங்கமாக இருந்தால் பின் நாளில் விற்கலாம். நகையாக வாங்கினால் விற்கும் பொழுது அவ்வளவு லாபம் இருக்காது. ஆனால் தங்கம் விலையும் ராக்கெட் வேகத்துக்கு ஏறிக்கொண்டு போகும் போது என்னத்தான்யா வாங்குறது? So, Cash is King. சிங்கப்பூரில் என்னுடைய நண்பர்கள் சிலர் தங்களது வீடுகளை விற்று விட்டு கனிசமான ஒரு தொகையை கையகப்படுத்தியிருக்கின்றனர். எனக்கு விற்க ஆசை தான். வீடு?
*

இந்த ஜேம்ஸ் ஓடிஸ் தொல்ல தாங்க முடியலப்பா. காந்தி உபயோகப்படுத்தின பொருட்களை வைத்துக்கொண்டு அவர் விடுகிற ரவுசு தாங்கல.ஆமா அவருகிட்ட எப்படி இந்த பொருட்கள் எல்லாம் போச்சுங்கற கேள்வி என் மண்டைய காலையிலிருந்து குடைந்து கொண்டிருக்கிறது. ஏலம் விடக்கூடாதுன்னா இந்தியா போருக்கு செலவழிக்கும் பணத்தை ஏழைகளின் சுகாதாரத்துக்கு செலவழிக்கவேண்டுமாம். இதெல்லாம் ரொம்ப நக்கல் ஆமா. ரிசன்டா ஸ்லம்டாக் மில்லியனர் படம் பாத்திருப்பார் போல. அப்படியே அரவிந்த அடிகா எழுதின வைட் டைகரையும் படிச்சிருங்க. நான் இன்னும் ஸ்லம்டாக்கும் பார்க்கவில்லை, வைட் டைகரும் படிக்கவில்லை. ஆமா, ஸ்லம்டாக் மில்லியனருக்கு அப்புறம், இந்தியர்களை ஸ்லம் டாக்ஸ் என்று அமெரிக்கர்கள் கேலி பண்ணுகிறார்களாமே? உண்மையா?
*
வருகிற தேர்தலில் யாருக்கும் ஓட்டளிக்க விருப்பமில்லையா, கவலையை விடுங்கள், நீங்கள் யாருக்கும் ஓட்டளிக்க விருப்பப்படவில்லை என்பதை அரசுக்கு தெரிவித்துவிடலாம். ஒரு பாரம் இருக்கிறதாம். அது ஓட்டுச்சாவடியிலே கிடைக்குமாம். ஓட்டுப்பதிவு தினத்தன்று ஓட்டுச்சாவடிக்கு சென்று, அந்த பாரத்தை அங்கிருப்பவர்களிடமிருந்து பெற்று, பூர்த்திசெய்து கொடுத்துவிடவேண்டுமாம். எங்களப் பாத்தா என்ன இனாவானா மாதிரி இருக்கா? ஓட்டுப்போட்டாலேநம்ம ஊர் அரசியல்வாதிங்க ஒன்னும் செய்யறதில்ல. இதில பாரம் வாங்கி பூர்த்தி செய்து ஓட்டுப்போட மாட்டேன்னு எழுதிக்கொடுத்தா, நம்மள நடுத்தெருவுக்கு கொண்டுவந்திருவாங்க. நான் யாருக்கு ஓட்டுப்போட்டோம் என்பது ரகசியமாக வைக்கப்படுவது போலவே, நாம் ஓட்டுப்போடலை என்பதையும் ரகசியமாக வைக்கவேண்டாமா? இது சம்பந்தமாக ஒரு கேஸ் நிலுவையில் இருக்கிறதாம். ஆனால் ஓட்டுப்போடவில்லை என்றால், தேர்தல் முடிவில் மாற்றம் இருக்குமா? யாருக்கு அதிக ஓட்டோ அவர் தானே வெற்றி பெற்றதாக கணக்கில் கொள்ளப்படும்? யாருக்குமே டெபாஸ்ட் கிடைக்கலன்னா? அங்கேயும் நமக்குத்தான் ஆப்பு. மீண்டும் ஒரு முறை தேர்தல் நடத்தப்படும். நம் வரிப்பணம் தான் விரயம் ஆகும். உண்மையில் யாருக்குமே டெபாஸிட் கிடைக்கலேன்னா அந்த தொகுதில என்ன தான்யா பண்ணுவாங்க?
*
அமேசான் ஐ·போனில் தங்களது டிஜிட்டல் புத்தகங்களை தறவிறக்கம் செய்துகொள்ள அனுமதித்திருப்பதைப் பார்த்தீர்களா? Smart Move. இப்போ அமேசான் தான் iTunes for Books. இதன் மூலம் கண்டிப்பாக அவர்களது இரண்டாம் ஜெனரேஷன் Kindle விற்பனை கனிசமாக பாதிக்கப்படும் என்பது உண்மை தான் என்றாலும், ஐ·போனில் தறவிறக்க அனுமதித்த பிறகு, நிறைய புத்தகங்கள் (கிட்டத்தட்ட 240,000 புத்தகங்கள்) விற்கும் என்பது உண்மைதான். After all, Amazon sells books. மேலும் இந்த கடினமான எகனாமிக் காலத்தில் புத்தகம் வாசிப்பதற்கென்று (Kindle) யார் நூற்றுக்கனக்கான டாலர்களை செலவலிக்கப்போகிறார்கள்?
*
H1B விசா ப்ராஸஸிங் கடினமாக்கப்படுகிறதாமே?
Senators Charles Grassley (R-Iowa) and Richard Durbin (D-Ill.), two of the program’s vocal critics, are pressing for legislative reform as well. They plan to introduce legislation by early April that would require employers to pledge they had attempted to hire American workers before applying for H-1B visas—a step not required under current law. “I want to make sure that every employer searches to make sure there is no American available to do the job,” says Grassley.
செய்தி எதிர்பார்த்த ஒன்று தான் என்றாலும், இந்த செய்திக்கு வந்திருந்த பின்னூட்டங்கள் நன்றாக இருந்தன:
1. Outsourcing is irreversible – it will continue to happen in some form or the other (as it has happened all through history). Did you know that Microsoft, JPM & Goldman Sachs have shifted jobs from people laid off here to India and China in the past couple of months? They have not ‘technically’ outsourced any jobs. They’ve just moved jobs to their own offices elsewhere. How do you expect to catch such crooks, who’ll find ways to manipulate your definition of outsourcing?
2. With US universities producing approximately 330,000, computer science and informationsystems graduates annually, I find it difficult to believe that companies can’t staff positions with trained US citizens. Low pay is the reason. I’d be willing to bet that on anyy given day a US trained individual could out perform an H-1B holder.
கிழே இருக்கும் இந்தப்பின்னூட்டம் தான் என்னை எரிச்சலடையச் செய்தது:
3. One solution to the H1-B and L1 problem would be to tighten eligibility. If it is truly for the best and brightest then only those with PhD’s from the top 50 international universities should be eligible and may be Master’s from the top 25. One commonly cited ranking is the Shanghai Jiaotong University and the Times of London Survey. A link is below: http://www.eurogates.nl/en_holland_news/page/15/id/683/
ஏன் இந்தியாவின் தலைசிறந்த விஞ்ஞானியை உங்களிடம் அனுப்பிவைக்கிறோம். ஓகேவா?
*
ஸ்டாக் மார்கெட் எல்லாம் மண்ணைக்கவ்வ மூவி பிஸினஸ் லாபத்தை அள்ளிக்கொடுக்கிறதாமே? Up by 14%?
*
கணிப்பு : மீள் பதிவு

முன்பு ஒருமுறை விகடனில் பிரசுரமான கார்ட்டூன்,எனக்கு எப்பொழுது பார்த்தாலும் சிரிப்பு வரும்.
Thanks- www.vikatan.com
ரஹ்மானும் பின்நவீனத்துவமும்
ஒரு முறை நானும் எனது நண்பரும் படம் பாக்க சென்றோம். அந்தப் படம் வங்காளி மொழியில் கபூர்ஷ்வா இனத்தவர்களைப் பற்றிய அண்டாகுஜ நாட்டில் எடுக்கப்பட்ட குறுஞ்செய்திப் படம். ரஹ்மான் இசையமைத்திருந்தார். என் நண்பர் பெயர் ஜாஷி. நாங்கள் இருவரும் பேசிக்கொண்டே வரும் பொழுது இந்தப் படத்தில் எந்தப்பாடல் ஹிட் ஆகும் என்றேன். நீ பிரம்மத்தை ஒத்துக்கொள்வாயாக என்றான் என் நண்பன். நான் சொன்னேன் ஓம் அப்படியே ஆகுக. கத் மத். மேலும் என் நண்பன் கேட்டான் இந்தப்படத்தில் எந்தப்பாட்டு ஹிட் ஆகும் என்று. நான் சொன்னேன் இந்தப்படத்தில் தான் பாட்டே இல்லியே, இது ஒரு குறுஞ்செய்தி படமாச்சே என்றேன். அதற்கு அவன் சொன்னான் நீ பிரம்மத்தின் மூலமாக பார்த்து சொல்வாயாக என்றான். அப்படியானால் ஒட்டகத்த கட்டிக்கோ கெட்டியாக ஒட்டிக்கோ பாடல் தான் ஹிட் ஆகும் என்றேன் நான். அவன் எப்படி சொல்கிறாய் என்றான். இதில் தான் ஒட்டகத்த கட்டிக்கோ கெட்டியாக ஒட்டிக்கோன்னு பின் நவீனத்துவமான வரிகள் இருக்கு அதனாலத்தான் இந்தப்பாடல் ஹிட்டாகும்ன்னு சொல்றேன் என்று சொன்னேன் . ஒட்டகத்த கட்டிக்கிறதுக்கும் கெட்டியாக ஒட்டிக்கிறதுக்கும் பின்நவீனத்துவத்துக்கும் என்ன சம்பந்தம் என்கிற மிக மிக விந்தையான கேள்வியை அவன் கேட்டான். அவன் அப்படிக்கேட்டிருக்கக்கூடாதுதான். பின் நவீனத்துவம் பாடல் வரிகளில் இல்லை, அவர் அவர் யோசிக்கும் முறையில் தான் இருக்கிறது என்கிற விளக்கத்தை அவனுக்கு கொடுத்தேன், மேலும் அவர் இசையமைத்த விதத்தில் தான் பின்நவீனத்துவம் இருக்கிறது என்றேன். புரிந்துகொண்ட அவன் ஆம் அப்படியே ஆகுக என்றான்.
வீட்டுக்கு சென்றவுடன் அந்த மடப்பய மவனான என் நண்பன் மேலும் தெளிவாக புரிந்து கொள்வதற்கு ஏதுவாக கீழே இருக்கும் சுட்டியையும் ஈ மெயிலில் பின் நவீனத்துவமாக அனுப்பினேன்:
இது ஒரு பின்நவீனத்துவ இயல்பு. நவீனத்துவ இசை அந்த ஆளுமையின் தனிப்பட்ட இயல்பின் வெளிப்பாடு. ரஹ்மானுக்கென உறுதியான சட்டகம் ஏதுமில்லை. அவரது ஆளுமைக்குப் பதிலாக ஒரு கூட்டுவெளிப்பாடு அவர் வழியாக நிகழ்கிறது. அவ்வாறு பல்வேறு திறமைகள் முயங்க உயர்தொழிநுட்பம் உதவுகிறது. தமிழ் சினிமா நவீனத்துவத்துக்கே வராமலிருந்த காலத்தில் இசையை பின்நவீனத்துவ காலகட்டத்துக்குக் கொண்டு சென்றதே ரஹ்மானின் சாதனை.
மற்றொரு நண்பர், அவர் காங்கிரஸ்காரர். அவர் ரஹ்மான் ஆஸ்கார் வாங்கியதற்கு காங்கிரஸ் தான் காரணம் என்கிற விந்தையான உண்மையை எனக்கு உணர்த்தினார். இந்த சுட்டியையும் எனக்கு அளித்தார்:
Anyway, Congrats தல. மேலே உள்ளதெல்லாம் பாத்தீங்கல்ல. இனியும் என்னென்ன சொல்லுவாய்ங்க பாத்திட்டே இருங்க. சாக்கிரதையா இருங்க.
ஒரு சாமானிய விவசாயி கோடிசுவரரான வெற்றிக் கதை!
மரங்கள் நடக்கின்றன
Thanks: தளவாய் சுந்தரம்
உங்களை ஒரு மா மரக் கன்றை நட்டு வளர்க்கச் சொன்னால் என்ன செய்வீர்கள்? நீங்கள் எப்படியோ தெரியாது; பெரும்பாலானவர்களின் சிந்தனை, “இந்த கன்னு எப்போது வளர்ந்து, எப்போது மரமாகி, எப்போது காய்த்து, எப்போது பழம் சாப்பிடுவது? அதற்குள் நம் காலமே முடிந்துவிடும்” என்றுதான் போகும். ஆனால், தனக்கு மாம்பழம் கிடைக்குமா என எதிர்பார்க்காமல், தொடர்ந்து மா மரங்களை நடுபவர்களால்தான் இந்த உலகம் உயிர் வாழ்ந்துக் கொண்டிருக்கிறது என்பது காலம் உணர்த்தும் உண்மை. அப்படிப்பட்ட நல்ல உள்ளம் படைத்த மனிதர்களுள் ஒருவர், மரம் தங்கசாமி!
தனது பெயருடன் மரத்தைச் சேர்த்துக் கொண்டிருக்கும் தங்கசாமி, காடு வளர்ப்பில் உலகுக்கே இன்று ஒரு முன்னுதாரணமாக இருக்கிறார். உலகின் பல பகுதிகளில் இருந்தும் வேளாண் ஆராய்ச்சியாளர்கள் தங்கசாமியின் தோட்டத்துக்கு வந்து பார்வையிடுகிறார்கள். தனி மனிதனாக அவர் செய்திருக்கும் சாதனைகள் பற்றி புத்தகம் எழுதுகிறார்கள். பத்தாம் வகுப்பு வரை மட்டுமே படித்திருக்கும் தங்கசாமியின் அனுபவங்கள், வேளாண் கல்லூரி மாணவர்களுக்கு பாடமாக இருக்கின்றன. புதுக்கோட்டை மாவட்டத்தில் கொத்த மங்கலத்துக்கு அருகே சேந்தன்குடி என்னும் கிராமத்தில், இருபத்தைந்து ஏக்கர் பரப்பளவில் அடர்ந்த காடு போல் இருக்கும் அவரது தோட்டத்துக்கு மாணவர்கள் பயிற்சிக்காக வருகிறார்கள். மரம் வளர்க்கும் தங்கசாமியின் பணி மற்றும் மக்களிடையே மரம் வளர்ப்பு பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் அவரது சேவை ஆகியவற்றைப் பாராட்டி ஜனாதிபதி விருது தங்கசாமிக்கு வழங்கப்பட்டுள்ளது.
இன்று பலராலும் மலைப்பாக பார்க்கப்படும், கோடிகளுக்கு அதிபதியாக இருக்கும் மரம் தங்கசாமி, ஒரு காலத்தில் கடன்காரராகி, கடனை அடைக்க சொத்தை விற்றுவிட்டு எதாவது ஹோட்டலில் சர்வர் வேலைக்குப் போகலாமா என யோசித்துக் கொண்டிருந்தவர் என்பதுதான் உண்மை. அவர் வெற்றி பெற்றது எப்படி? அவரது கதையை அவரே சொல்கிறார்…
“எந்தக் கெட்டப்பழக்கமும் இல்லாத, உழைப்பில் நம்பிக்கை உள்ள விவசாயி நான். எனக்கு இரண்டு மனைவிகள், இரண்டு குழந்தைகள். எங்கள் குடும்பத்தார் அனைவரும் தினமும் பத்து முதல் பதினைந்து மணி நேரம் உழைத்தோம். ஆனாலும் நான் கடன்காரனானேன். 1975இல் வந்த கடுமையான வறட்சியின் போது, உற்பத்தி செய்த எந்த விவசாயப் பொருளுக்கும் கட்டுப்படியாகிற விலை இல்லை. இதனால் சாகுபடி செலவைக்கூட திரும்பி எடுக்கமுடியாத நிலை. விஞ்ஞான முறைப்படி விவசாயம் செய்ததால், ரசாயண உரங்களுக்குச் செய்த செலவே என்னைப் பெரிய கடன்காரனாக ஆக்கிவிட்டது. என்ன செய்வது என்று சிந்திக்கத் தொடங்கினேன். சொத்தை எல்லாம் விற்று கடன்களை அடைத்துவிட்டு, எதாவது ஹோட்டலில் சர்வர் வேலைக்குச் சேர்ந்து குடும்பத்தையாவது காப்பாற்றுவோம் என்று தோன்றியது. வேறு வழி இல்லை.
அப்போது பேராசிரியர் சீனிவாசன், ‘மரப்பயிரும் பணப்பயிரே’ என்னும் தலைப்பில் அகில இந்திய வானொலியில் பேசியதைக் கேட்டேன். அதுதான் என் வாழ்வின் திருப்புமுனை. அன்றே நான் செய்துவந்த விவசாய முறைகள் அனைத்தையும் மூட்டைக் கட்டி வைத்துவிட்டு, மரம் வளர்ப்பது என்று முடிவு செய்தேன். அப்போது எனக்கு நாற்பத்தைந்து வயது. நூறு தேக்கு மரங்களை நட்டேன். இருபது வருடங்களுக்குப் பிறகு, ஒவ்வொன்றாக அவற்றை வெட்டி விற்று வயதான காலத்தை ஓட்டுவதுதான் அப்போதைய என் திட்டம். ஆனால், ஒரு வருடத்திலேயே இருபது அடி உயரம் அவைகள் வளர்ந்தன. அது தந்த உற்சாகத்தில் நூறு மாங்கன்றுகளை நட்டேன். அப்புறம் அது அப்படியே நூறு முந்திரி, நூறு புளி என்று வளர்ந்துக் கொண்டே போனது.
மர வகைகளைத் தேடி பயணம் செய்த போது நம்மாழ்வார் பற்றி கேள்விப்பட்டு அவரைச் சந்தித்தேன். அவரைச் சந்தித்தது என் வாழ்வின் இரண்டாவது திருப்புமுனை. அன்றே அவரை என் குருவாக ஏற்றுக்கொண்டேன். தேசிய நிகழ்ச்சிகள், தேர்தல், தலைவர்களின் பிறந்த தினம் உட்பட எல்லா விஷேச நாட்களிலும் மரங்கள் நடுவேன். வீரப்பன் சுடப்பட்ட அன்று ஒரு சந்தன மரத்தை எங்கள் தோட்டத்தில் நட்டேன். எனக்கு மரம் நட ஒரு காரணம் தேவைப்படுகிறது. அதற்கு நான் சம்பவங்களையும் பண்டிகைகளையும் பயன்படுத்திக் கொள்கிறேன். அவ்வளவுதான். இப்போது என் தோட்டத்தில் நூற்றி தொன்னூறு சாதிகளைச் சேர்ந்த ஐயாயிரம் மரங்கள் இருக்கின்றன.
ஏன் ஒரே வகை மரங்களை வைக்காமல் பல்வேறு மரங்களை கலந்து நடுகிறேன் என்ற கேள்வி உங்களுக்கு எழலாம். ஒரு மரம் பூமியிலிருந்து ஒரு சத்தை எடுத்து, இன்னொரு சத்தை பூமிக்கு கொடுக்கும். இந்த மரம் கொடுக்கும் சத்தை உண்டு செழிக்கும் இன்னொரு மரம் வேறொரு சத்தை பூமிக்கு கொடுக்கும். இப்படியே இந்த சங்கிலி பலவேறு ஜாதி மரங்களுக்கும் தொடரும். காடு செழித்திருப்பதன் தத்துவம் இதுதான். எல்லா மர வகைகளும் ஒரே இடத்தில் இருக்கும் போது எல்லா மரங்களுக்கும் சரிசதமாக சத்து பகிர்ந்து கொடுக்கப்படுகிறது. இதனால், நானும் ஒரே வகையாக இல்லாமல், காடு போல் பல்வேறு வகை மரங்களை கலந்து வைத்திருக்கிறேன். வேம்பு, சந்தனம், ரோஸ்வுட், செஞ்சந்தனம், மகோகனி, நெல்லி, புளி என்று பல்வேறு மர வகைகளுடன் இப்போது என் பண்ணை ஒரு மாதிரி பண்ணையாக இருக்கிறது. கலப்பு பண்ணையின் மூலமே தன்னிறவு அடைய முடியும் என்பதுதான் என் அனுபவம். கடன் இல்லாத விவசாயம், நோய் இல்லாத வாழ்க்கை, நஞ்சில்லா உணவு இதன் மூலம்தான் சாத்தியம்.
திருமண வைபவங்களுக்கு செல்லும் போது மணமக்களுக்கு மரக் கன்றுகளைப் பரிசாகத் தருவேன். தலைவர்களை அழைத்து என் தோட்டத்திலும் எங்கள் கிராமத்திலும் மரம் நடும் விழாக்களை நடத்துகிறேன். என் வீட்டுக்கு வரும் ஒவ்வொரு விருந்தினர்களுக்கும் மரக்கன்றுகளை பரிசாக கொடுத்து அனுப்புவேன். பள்ளிக்கூடங்களுக்குச் சென்று குழந்தைகள் மத்தியில் மரம் நடுவதன் தேவையை வலியுறுத்திப் பேசுவேன். பள்ளிக்கூட வளாகத்திலேயே மரங்கள் நடுவேன். இன்று புதுக்கோட்டை மாவட்டத்தில் நான் மரம் நடாத பள்ளிக்கூடமே இல்லை எனலாம். மேலும் தமிழ்நாடு முழுக்கப் பயணம் செய்து பத்தாயிரம் வேப்பம் விதைகளை விதைத்திருக்கிறேன். அதில் ஆயிரமாவது மரமாகியிருக்கும். மரங்கள் என்னுடன் பேசுகின்றன, நான் அவைகளுடன் பேசுகிறேன். மரம் நடக்கும் என்பதையும் என் அனுபவத்தில் நான் கண்டிருக்கிறேன்.
இதையெல்லாம் சொன்ன போதும், ஆரம்பத்தில் நான் ஊர் ஊராகச் சென்று மரம் நடுவதைப் பார்த்து விட்டும் எங்கள் கிராமத்தவர்களும் சுற்று வட்டாரத்தைச் சேர்ந்தவர்களும் என்னைக் கிண்டலும் கேலியும் செய்தார்கள். “தங்கசாமிக்கு கிறுக்குப் பிடித்து விட்டது”, “கிறுக்குப் போகிறது பார்” என்று என் காது படவே பேசினார்கள். அப்போது, “யார் கிறுக்கன் என்பதை காலம் தீர்மானிக்கும்” என்று மட்டும் அவர்களுக்குப் பதில் சொன்னேன். இப்போது அவர்களே ஒப்புக்கொள்கிறார்கள், “உங்களைக் கிறுக்கன் என்று சொல்லி, கடைசியில் நாங்கள்தான் கிறுக்கன் ஆகிவிட்டோம்” என்று சொல்லுவதுடன், என்னைப் பின்பற்றவும் செய்கிறார்கள்.
இப்போது நான் தினமும் ஆறு மணி நேரம் உழைக்கிறேன். ஒரு மனைவி வீட்டுச் சமையலைப் பார்த்துக் கொள்கிறாள். இன்னொரு மனைவி கால்நடைகளைப் பராமறிக்கிறாள். அவள் ஏ. எம். டி. பயிற்சி முடித்திருக்கிறாள். நாங்கள் இருவரும் கலந்து பேசி பயிர் முறையை அமைக்கிறோம்.
எங்கள் தோட்டத்தில் இரண்டு கிணறுகள் உள்ளன. முதலில் கவலையைப் போட்டு இறைத்தோம். அப்புறம் தண்ணீர் மட்டம் கிழே போய்விட்டது. அப்போது ஸ்லோஸ்பீட் மோட்டார் இஞ்சினை உபயோகித்து நூற்றைம்பது அடி ஆழத்தில் இருந்து தண்ணீர் எடுத்தோம். அதன்பிறகு தண்ணீர் மட்டம் அதற்கும் கிழே போய்விட்டது. இப்போது, எழுபது ஆயிரம் ரூபாய் செலவு செய்து முன்னூறு அடி ஆழ்குழாய் கிணறு போட்டு, நீர் மூழ்கி பம்புசெட்டை உபயோகித்துத் தண்ணீர் எடுக்கிறேன்.
நான் ரசாயண உரங்களை உபயோகிப்பதில்லை. விவசாயிகளுக்குத் தங்கம் குப்பைதான். “எருக்குழி இல்லாம ஏர் கட்டாதே. குப்பை உயர்ந்தால் குடி உயரம்” என்று அந்த காலத்திலேயே சொல்லியிருக்கிறார்கள். என் தோட்டத்தில் நூறுக்கும் மேற்பட்ட கம்போஸ்ட் குழிகளைப் பராமரித்து வருகிறேன். பண்ணைக் கழிவுகளை அதில் நிரப்பி விடுவேன். என் தோட்டத்தில் நிறைய ஆடு, மாடுகள் இருக்கின்றன. சூபா புல், என்.பி.21 கொழுக்கட்டைப் புல், கிளேரி செரியா போன்றவற்றைப் பண்ணையில் பயிரிட்டிருக்கிறேன். எனவே ஆடு, மாடுகளுக்குத் தீவன பிரச்னை இல்லை. ஆடு, மாடுகள் போடும் சாணத்தை கம்போஸ்ட் குழிகளில் போட்டு நிரப்புவேன். மரங்களுக்கு இடையே வரிசை வரிசையாக குழிகளை வெட்டி, பண்ணைக் கழிவுகளை அதில் போடுகிறேன். மரங்களுக்கும் பயிர்களுக்கும் அடியுரமாக வேப்பம் புண்ணாக்கைப் போடுகிறேன். மண் வளம் பிரசினையே இல்லை.
எங்கள் தோட்டத்தில் களை எடுப்பதில்லை, உழுவதில்லை. கழிவுகளை அப்படியே விட்டுவிடுவோம். அவைகள் மக்கி உரமாகிவிடுகின்றன. மேலும் இந்தக் கழிவுகள் ஈரப்பதத்தைத் தக்கவைக்கவும் உதவுகின்றன. இப்படி கழிவுகளை அப்படியே விடும்போது, அதில் பல நுண்ணியிர்கள் உருவாகும். இந்த நுண்ணியிர்கள் மண்வளத்தைப் பாதுகாப்பதுடன், மண்ணைக் கிளறி உழ வேண்டிய தேவை இல்லாமல் செய்கின்றன. இப்போது என் தோட்டத்துக்கு மயில்கள் உட்பட பல்வேறு வகை பறவைகள் வருகின்றன. அவற்றில் பல நமது ஊர்களுக்கு முற்றிலும் புதியவை என்பது குறிப்பிடத்தக்கது.
பூச்சிகளுக்கு வேப்பம் புண்ணாக்கு, வேப்பம் எண்ணெய், பீஞ்சுருவி இலை எல்லாம் போட்டு இடிச்சி ஊறவைச்சு தெளிக்கிறேன். பூச்சி கட்டுப்படுகிறது.
விதைகளைப் பொறுத்தவரைக்கும் உயர் விளைச்சல் தரும் சில விதைகளைத் தவிர வேறந்த வெளியிடு பொருள்களையும் நான் வாங்குவதில்லை. என்னைக் கேட்டால் விவசாயிகள், விஞ்ஞானிகளிடமும் ஆராய்ச்சியாளர்களிடமும் முனைவர்களிடமும் கொஞ்சம் எச்சரிக் கையாக இருக்க வேண்டும் என்றுதான் சொல்வேன். அவங்க ஆராய்ச்சியில் நல்லதும் வரலாம், கெட்டதும் வரலாம். சில வருடங்களுக்கு முன்னால் “ராஜ ராஜ”ன்னு ஒரு நெல் ரகத்தை ஆராய்ச்சியாளர்கள் அறிமுகம் செய்தார்கள். அதனைப் பயிரிட்ட எங்கள் கிராமம் மொத்தமும் நஷ்டமடைந்தது.
மரங்களுக்கு இடையே காய்கறிச் செடிகளைப் பயிரிட்டிருக்கிறேன். இதிலிருந்து வீட்டுக்குத் தேவையான காய்கறிகள் கிடைக்கின்றன. அன்றாட பால் தேவைக்கு வீட்டிலுள்ள மாடு கறக்கிறது. திடீரென்று பணம் தேவைப்பட்டால், நாலைந்து ஆட்டை பிடித்து விற்றுவிடுவேன். என்னிடமுள்ள ஆடுகளையெல்லாம் நடமாடும் வங்கி என்றுதான் நான் சொல்வது.
நான் பத்தாம் வகுப்பு வரை மட்டும்தான் படித்திருக்கிறேன். ஆனால், இப்போது என்னால் ஆங்கிலத்தில் வாசிக்க முடியும். அறிவியல் மற்றும் விவசாயம் சம்பந்தப்பட்ட புத்தகங்கள் படிப்பது எனக்குப் பிடிக்கும். இப்பொழும் தொடர்ந்து வாசிக்கிறேன்.
உலகில் பெருகிவரும் மக்கள் தொகை காரணமாக தேவைகளும் பெருகிவிட்டன. இதற்காக எந்த வரைமுறையும் இல்லாமல் இயற்கை ஆதாரங்கள் அழிக்கப்படுகின்றன. இப்படியேத் தொடர்ந்தால் வரும் நமது சந்ததிகளுக்கு நாம் எதை விட்டுவிட்டுப் போகப் போகிறோம் என்னும் கேள்வி எழுகிறது. நமது சந்ததியினர், “ஏன் சுவாசிக்கும் காற்று நஞ்சாக இருக்கிறது, ஏன் குடிக்கத் தண்ணீர் இல்லை, ஏன் மழை இல்லை” என்று நிச்சயம் கேட்பார்கள். இதற்குப் பதில் சொல்ல வேண்டிய பொறுப்பு நமக்கு இருக்கிறது. இப்போதே நாம் சுவாசிக்கும் காற்று, உண்ணும் உணவு, குடிக்கும் தண்ணீர் உட்பட அனைத்தும் மாசுபட்டுள்ளன. மாசுபட்டுவரும் சுற்றுச்சூழலைப் பாதுகாக்க மரங்கள் வளர்ப்பதுதான் இன்றைக்கு நம் முன்னுள்ள ஒரே வழி.
செஞ்சந்தன மரத்துக்கு அணு உலை கதிர் வீச்சைத் தடுக்கும் சக்தி இருக்கிறது. எனவே, ஜப்பானில் செஞ்சந்தனத்துக்கு தனி மவுசு. ஒரு டன் மூன்று லட்சம் ரூபாய் மதிப்புக்குப் போகிறது. எந்த வறட்சியையும் தாங்கி வளரக்கூடியது செஞ்சந்தனம். எனவே எல்லோரும் செஞ்சந்தனம் வளர்க்கலாம். முக்கியமாக கதிர் வீச்சு பாதிப்பு உள்ள பகுதிகளில் செஞ்சந்தனம் வளர்ப்பது மிக நல்லது.”
விடைபெறும் போது தங்கசாமி சொன்னார். “நான் எதுவும் புதியதாக செய்யவில்லை. நமது முன்னோர்களின் வழிமுறைக்கு, நமது பாரியம்பரியத்தை நோக்கித் திரும்பியிருக்கிறேன், அவ்வளவுதான். நாடெங்கும் மரம் வளர்ப்போம். சுற்றுச் சூழலை அழகுபடுத்துவோம். அதை விடாது பாதுகாப்போம்.”
(குமுதம் நிறுவனத்தில் இருந்து வெளிவருவதாக இருந்த ‘மண்வாசனை’ (விவசாய இதழ்) பத்திரிகைக்காக மரம் தங்கசாமியை அவரது தோட்டத்தில் சந்தித்தேன். மூன்று இலவச இதழ்களுக்குப் பிறகு மண்வாசனை நின்றுவிட்டது.)
நன்றி: மரம் தங்கசாமி படம் – நல்லது நடக்கட்டும் வலைப்பூ.
லென்ஸ்
(காளை, சட்டங்கள்,சிவாஜி,ஷங்கர்,கமல்)
காளை என்றொரு படம் வண்ணத்திரையில் காட்டப்பட்டது. ஐயோ அப்படி ஒரு நாராச ஹீரோயிஸம். பஞ்ச் பாடல் வேறு. வந்துட்டான்டா வந்துட்டான்டா காளை..வேண்டாம், இத்தோட நிப்பாட்டிக்குவோம்.
சோ·பாவையும் டீவியையும் வேறு இடத்திற்கு மாற்றியாச்சு. வாஸ்து மாற்றினாலாவது வண்ணத்திரையில் அட்லீஸ்ட் ஒரு பத்து நிமிஷம் பாக்கக்கூடிய படம் போடுவார்களா? இதுக்கு இது பே சானல் வேறு.
***
கொஞ்ச நாட்களுக்கு முன்னர் நானும் எனது நண்பன் ராஜேஷ¤ம் சும்மா நாட்டு நடப்பை (பொழுது போகலைன்னா வேறு என்ன பண்ண முடியும்?) விவாதித்துக்கொண்டிருந்தோம். அப்போது என் நண்பன் ஏன் இந்த அரசு எல்லா விஷயத்திலும் மூக்கை நுழைக்கிறது? அபார்ஷன் யார் பண்ணா என்ன பண்ணாட்டினா இவங்களுக்கு என்ன? என்றான். எனக்கு இது என்ன கேள்வி, இவ்வாறான சட்டங்களை அரசு இயற்றாமல் வேறு யார் இயற்றுவார்கள்? என்கிற மிக முக்கியமான சந்தேகம் வந்தது. ஹோமோக்களை யார் தடைசெய்வது? அல்லது தடைசெய்வதை யார் தடைசெய்வது? தடைசெய்யத்தான் வேண்டுமா? வால்-மார்ட் இங்கே கடை திறப்பதற்கு யார் எதிர்ப்பு தெரிவிப்பது? ரிலையன்ஸ் ·ப்ரஷ் வடக்கன்பட்டியில் கடை திறப்பதை யார் எதிர்ப்பது? திறக்கவேண்டாமா வேண்டுமா என்று யார் முடிவு செய்வது?
ஒரு பகுதியினர் இவ்வாறு வாதாடுகின்றனர். அதாவது, அபார்ஷனை தடுப்பதற்கோ அல்லது ஹோமோக்களை தடுப்பதற்கோ ஏன் சட்டங்களை உபயோகிக்கிறீர்கள்? உங்கள் சட்டங்களை அமுலுக்கு கொண்டுவருவதினால் எவ்வளவு பண விரயம் ஏற்படுகிறது? அதற்கு எங்களது வரிப்பணத்தையல்லவா உபயோகிக்கிறீர்கள்? மேலும் ஒரு சாரரை திருப்திப்படுத்துவதற்காக ஏன் இவ்வளவு பண நாசம் செய்யவேண்டும்?
சரி. அபார்ஷனையே எடுத்துக்கொள்வோம். அபார்ஷனை தடுப்பதா வேண்டாமா என்கிற முடிவுக்கு அரசு எப்படி வர முடியும்? என் நண்பனைப் போல ஒரு சாரர் அபார்ஷனை தடுக்கக் கூடாது என்கின்றனர். இந்த கோரிக்கையை ஏற்றுக்கொண்டால், எனது இன்னொரு நண்பன் அபார்ஷன் செய்வதை தடுக்கவேண்டும் என்கிற கோரிக்கை என்னவாகும்? அவன் மட்டும் வரிப்பணம் கட்டவில்லையா என்ன? அப்படீன்னா அரசு என்ன செய்ய வேண்டும்? எனக்கு இதுக்கும் சம்பந்தமில்லை எக்கேடோ கெட்டுப்போங்கன்னு அரசு சும்மா இருக்க முடியாது, அப்படி இருந்தாலும், அபார்ஷனை தடுக்கவேண்டும் என்று நினைப்பவர்களின் கோரிக்கை ஏற்கப்படாமல் போகிறது.
***
அபார்ஷனை தடுக்கக்கூடாது என்றால், போதைப்பொருள் கடத்துவதையும் தடுக்காமல் விட்டுவிடலாமா? சிங்கப்பூரில் போதை பொருள் கடத்தினால் மரண தண்டனை விதிக்கப்படும். போதைப்பொருள் புழக்கம், மற்றும் பழக்கம், இந்த தண்டனையால் வெகுவாக குறைந்திருக்கிறதாம். சட்டத்தினால் தானே இது சாத்தியப்பட்டது?
***
இந்த காளை, குசேலன், வில்லு அப்படியே இந்த டைரக்டர் பேரரசுக்கும் ஒரு தடையை விதித்தால் நான் (மற்றும் ரொம்ப பேர்) ரொம்ப சந்தோஷமா இருப்பேன்! படத்துல “வெட்டி கூறுபோடுங்கடா, சாரு எடுங்கடா” அப்படின்னு சும்மா கத்திக்கினே கெடக்கானுங்க. ஊறுகா கம்பெனி வெச்சிருந்திருப்பாய்ங்கன்னு நினைக்கிறேன். கஷ்டம்.
***
இந்த குசேலன் மசேலன் தசாவதாரம் கொசாவதராம் எடுக்கறவங்க எல்லாம் No Country For Old Men படம் பாருங்கப்பா. கண்டிப்பா பாத்திருப்பீங்க தெரியும், பாத்துட்டு இதெல்லாம் இந்த ஜனங்களுக்கு புரியாதுப்பான்னு எங்கள முட்டாள்களா நெனச்சிருப்பீங்கன்னும் தெரியும். மிக குறுகிய அளவில் கேரக்டர்களை வைத்துக்கொண்டு, இப்படி ஒரு த்ரில்லர் படம் கொடுக்கமுடியுமா?
ஏன் நம்ப உலக நாயகர்களுக்கு தாரே ஜமீன் பர் போன்ற படங்களை எடுக்க தோன்றவில்லை?
***
சிவாஜி நடித்த வெள்ளை ரோஜா என்கிற படத்தை சமீபத்தில் கொஞ்சம் பார்த்தேன். அதில் சிவாஜியே பாதிரியாராகவும் பின்னர் இன்ஸ்பெக்டராகவும் நடித்திருப்பார். அவ்வாறு நடிக்க வேண்டியதன் அவசியம் என்ன? இரண்டு கேரக்டர்களையும் (பாதிரியார் சாது, இன்ஸ்பெக்டர் tough) ஆக்கிட் கொடுத்து பிச்சு உதருகிறேனா பார் என்று சொல்வதற்கா? யாருக்கு சொல்லவேண்டும்? மேலும் சில புராண படங்களில் அவரே துணி துவைப்பவராகவும் பின்னர் அவரே கடவுளாகவும் வருவார். ஆண்டாளை வளர்த்தவராகவும் பின்னர் கிருஷ்ணராகவும். கடவுள் மனித ரூபத்தில் வந்தால் கூட பரவாயில்லை, அந்த கேரக்டருக்கும் இந்த கேரக்டருக்கும் சம்பந்தமே இருக்காது, ஆனால் அவரே நடிப்பார். ஏன்? அதேதான் கமலும் செய்தார். இனியும் செய்வார். இவ்வளவு பொருட்செலவில், ஏன் இத்தனை மேக் அப் மெனக்கெட்டு நடிக்கவேண்டும். அதான் ஜாக்கிசான் கேட்டாராம்: உங்க ஊர்ல நடிகர்களுக்கு பஞ்சமா? இந்த படத்தின் திரைக்கதைக்கு விகடன் அவார்ட் வேற. ஆர்ட்டுக்கு கொடுத்தார்கள், ஓகே. திரைக்கதைக்கா?
***
இந்த ஷங்கர் இன்னொருத்தர். மிகப் பிரமாண்டமா அதிக பொருட்செலவில் சயின்ஸ் பிக்ஷன் படம் எடுப்பார். ஆனால் உண்மையில், அவரது பாடலில் தான் சயின்ஸ் பிக்ஷன் இருக்கும். பதினைந்தாயிரத்து தொள்ளாயிரத்து தொன்னித்தி ஒன்பது ரோபோக்களுக்கு ஒவ்வொரு பார்ட்ஸ¤க்கும் ஒரு பெயிண்ட் அடித்து background-ல பாரீஸ் சாய்ந்த கோபுரத்தை கண்ணாடியில் செய்து, அதில் ரஜினியையும் ஐஸ்வர்யாவையும் நடனமாட விடுவார். சாரி:ரஜினியை வேகவேகமாக நடக்கவைப்பார்.
சயிண்டிஸ்ட் ஏனய்யா ஆயிரம் ரோபோக்களோடு நடனமாட வேண்டும்?
***
சிம்புதேவன் எவ்வளவு சம்பளம் வாங்குகிறார்?
இப்பொழுது சா·ப்ட்வேர் துறையில் வேலை செய்பவர்கள் நிறைய சம்பளம் வாங்குகிறார்கள் ஆனால் மற்றவர்களுக்கு அவ்வாறான சம்பளம் கிடைப்பதில்லை, அதனால் சா·ப்ட்வேர் துறையில் இருப்பவர்கள் எல்லாம் தேசதுரோகிகள் என்பது போன்ற காட்சிகள் வைப்பது தமிழ் சினிமாவுக்கு வழக்கமாகப்போய்விட்டது என்று நினைக்கிறேன். இவ்வாறான காட்சிகள் வைத்தால் வரி விலக்கு உண்டு என்று அரசு அறிவித்திருக்கிறதா என்ன?
அறை எண் 305இல் கடவுள் படத்தை இன்று வசந்தம் சேனலில் பார்க்க நேர்ந்தது. அதில் ஜாவா சுந்தரேசன் என்கிற சாப்ட்வேர் துறையைச் சார்ந்த நபரைப் பற்றிய காட்சிகள் அதிகம். நேரடியாகவே அவர் வாங்கும் மொத்த சம்பளம் அந்த மேன்சனில் குடியிருப்பவர்களது மொத்த சம்பளத்தை விட அதிகம் என்று அந்தப் படத்தில் வரும் ராஜேஷ் குறிப்பிடுகிறார். BSc Computer Science படித்த அவர் 85000 ரூபாய் சம்பளம் வாங்கும் பொழுது, BBA படித்த படத்தின் ஹீரோ 4000 ரூபாய் சம்பளத்துக்கு இன்னும் வேலை தேடிக்கொண்டிருக்கிறார் என்றோரு வசனமும் வருகிறது. இதில் செம கடுப்பான நம்ப ஹீரோ ஜாவா சுந்தரேசனின் அலுவலகத்துக்கு சென்று, அங்கிருக்கும் மேலாளரிடம் இதே கேள்விகளை கேட்டு, இனி எப்படி நீங்கள் சம்பாதிப்பீர்கள் பார்ப்போம் என்று, கேலக்ஸி பாக்ஸின் துணையுடன், அனைவரது விரல்களையும் இல்லாமல் செய்துவிடுகிறார். விரல்கள் இல்லையென்றால் எப்படி கம்ப்யூட்டரை ஆபரேட் செய்வீர்கள், எப்படி இவ்ளோ பணம் சம்பாதிப்பீர்கள்?
அந்த சா·ப்ட்வேர் கம்பெனியில் வேலை செய்யும் அனைத்து மக்களின் விரல்களும் குட்டியாகப் போகும் அந்த காட்சியையும் அவர் சா·ப்ட்வேர் துறையில் பணிபுரியும் மக்களை பயன்படுத்தியே செய்திருக்கிறார், என்கிற விசயத்தை படத்தின் டைரக்டர் சிம்புதேவன் மறந்துவிட்டார். அது கிடக்கட்டும். சிம்புதேவன் இந்த படத்தை இயக்குவதற்கு எத்தனை சம்பளம் வாங்கினார்?
சிம்புதேவனுக்கு இது எத்தனையாவது படம்? அவர் பெரிய கார்ட்டூனிஸ்ட் என்பதெல்லாம் இருக்கட்டும். இது இவருக்கு ரெண்டாவது படம் தானே? எத்தனை மாதங்கள் உழைத்து இந்த படத்தை எடுத்திருப்பார்? 6 மாதங்கள்? குத்துமதிப்பாக ஒரு 25 லட்சம் சம்பளம் வாங்கியிருப்பார் என்று வைத்துக்கொள்வோம். ஷங்கர் இதற்கும் குறைவானதொரு தொகை கொடுத்திருக்கமாட்டார் என்றே நான் நம்புகிறேன். ஆறு மாதங்களுக்கு 25 லட்ச ரூபாய். மாதத்திற்கு எத்தனை லட்சங்கள் வருகிறது? நான்கு லட்சம்! இது சா·ப்ட்வேர் துறையினர் வாங்கும் பணத்தை விட மிகவும் அதிகம்.
இவ்வளவு சம்பளம் வாங்குவதற்கு அவர் என்ன படித்திருக்கிறார். எனக்கு தெரியாது. என்னமோ படித்திருக்கிறார். அவர் படித்த அந்த படிப்பை படித்த அத்தனை பேரும் தமிழ் நாட்டில் அவர் வாங்குகிற சம்பளமா வாங்குகிறார்கள்? பிறகு ஏன் இவர் இவ்வளவு சம்பளம் வாங்குகிறார்? கேட்டால், அவர் மூளையை (creativity) காரணம் காட்டக்கூடும்.
சிம்புதேவன் கார் வைத்திருக்கிறாரா? படத்தில் வரும் ஜாவா சுந்தரேசனைப் போல அவரும் இன்னும் ரெண்டு படங்கள் கழித்து ஹெலிகாப்டர் வாங்கக்கூடும்.
கயர்லாஞ்சி தீர்ப்பு: நீதிபதியின் கண்ணீர்
க.ம. தியாகராஜ்
மகாராஷ்டிர மாநிலம் கயர்லாஞ்சியில் ஆதிக்கச் சாதியினரால் கொடூரமான முறையில் கொல்லப்பட்ட ஆறு தலித்துகளுக்கு நீதி வழங்கப்பட்டிருக்கிறது. ‘கயர்லாஞ்சி தலித் மக்கள் படுகொலை வழக்கு’ என அழைக்கப்பட்ட இவ்வழக்கின் முடிவை அறிந்துகொள்ள மனித உரிமை ஆர்வலர்களும் ஜனநாயகவாதிகளும் இரண்டாண்டுகளாகக் காத்திருந்தனர்.
கடந்த 17 மாதங்களாக நடந்துவந்த இந்த வழக்கில், கொலை செய்தது, விதிகளுக்கு மாறாகக் கூட்டமாகக் கூடியது, வன்செயலில் ஈடுபட்டது, சாட்சியங்களை அழித்தது போன்ற பல்வேறு பிரிவுகளின் கீழ் குற்றம் சாட்டப்பட்டு, குற்றவாளிகள் எனக் கண்டறியப்பட்ட எட்டுப் பேரில் ஆறு பேருக்கு மரண தண்டனையும் இரண்டு பேருக்கு ஆயுள் தண்டனையும் வழங்கப்படுவதாக பண்டாரா மாவட்டச் சிறப்பு நீதிபதி
எஸ்.எஸ். தாஸ் 24.9.2008இல் அளித்த தன் தீர்ப்பில் தெரிவித்துள்ளார். தீர்ப்பை வாசிக்கும்போது அவரது கண்கள் கலங்கிக் கன்னங்களில் நீர் வழிந்தோடியதாக ‘டைம்ஸ் ஆப் இந்தியா’ ஒரு பெட்டிச் செய்தியை வெளியிட்டுள்ளது.
நீதிபதி யாருக்காக, எதற்காக அழுதார்? ஒரு நீதிபதி தான் விசாரித்த வழக்கில் குற்றம் சுமத்தப்பட்டவர்களுக்குச் சட்டப்படி தண்டனை வழங்கும் போது அழுத நிகழ்வு இந்திய வரலாற்றில் இதுவே முதல்முறை. இதைத் தவிர வேறு சில சிறப்புகளும் இத்தீர்ப்புக்கு உண்டு. குற்றம் நிகழ்ந்த இரண்டாண்டுகளுக்குள் தண்டனை வழங்கப்பட்டதும் தலித் மக்களைப் படுகொலை செய்ததற்காக ஆறு பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டதுங்கூட இதுவே முதல்முறை. இதற்கு முன்பு மகாராஷ்டிரா மாநிலத்தில் 1997ஆம் ஆண்டு யுவாட்மாலில் இரண்டு தலித்துகள் கொல்லப்பட்டனர். மராத்வாடா பல்கலைக்கழகப் பெயர் மாற்றம் குறித்த போராட்டத்தின்போது ஒரு தலித் பலர் முன்னிலையில் உயிருடன் கொளுத்தப்பட்டார். இந்தக் குற்றத்தில் ஈடுபட்டவர்களுக்கு மிகக் குறைந்தபட்சத் தண்டனைகள் மட்டும் பெயரளவில் வழங்கப்பட்டன. இவற்றை ஒப்பிடும்போது கயர்லாஞ்சி தலித் மக்கள் படுகொலைசெய்யப்பட்ட வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பு நியாயமானதே எனக் கருதத் தோன்றும். உண்மை அதுவல்ல.
தீர்ப்பின் சுயரூபத்தைப் புரிந்துகொள்ள வேண்டுமென்றால் நாம் சற்றுப் பின்னோக்கிப் போக வேண்டும்.
உண்மை கண்டறியும் குழுக்களின் அறிக்கைகள் நமக்குச் சில உண்மைகளைச் சுட்டிக்காட்டுகின்றன.
மகாராஷ்டிரா மாநிலம், பண்டார மாவட்டம், மொகாலி தாலுகாவில் அமைந்துள்ள சிறுகிராமம்தான் ‘கயர்லாஞ்சி’. இதில் மொத்தம் 181 குடும்பங்கள் வசிக்கின்றன. மக்கள்தொகை 700. புத்த மதத்தைச் சேர்ந்த மகர் பிரிவுத் தாழ்த்தப்பட்டோர் குடும்பங்கள் மூன்று . கோண்டு இனப் பழங்குடியினர் குடும்பங்கள் 14. குன்பி மற்றும் களர் ஆகிய இதர பிற்படுத்தப்பட்டோர் குடும்பங்கள் 164.
கயர்லாஞ்சியின் மகர் பிரிவுத் தாழ்த்தப்பட்ட இனத்தைச் சேர்ந்த பையாலால் போட்மாங்கேவுக்கு 5 ஏக்கர் நிலம் இருந்தது. இவர் கிராமத்தின் ஒரு கோடியில் ஒதுக்குப்புறமாக மண் குடிசை அமைத்துத் தன் மனைவி சுரேகா (44 வயது), மகன்கள் சுதிர் (21), ரோஷன் (19), மகள் பிரியங்கா (17) ஆகியோருடன் வசித்துவந்தார். தமது நிலத்தில் நெல் மற்றும் பருத்தி சாகுபடி செய்துவந்த இவரது நிலத்திற்கு அடுத்துள்ள நிலம் பிற்படுத்தப்பட்ட இனத்தைச் சேர்ந்த கிராமத் தலைவருடையது. அந்நிலத்திற்கு டிராக்டர்கள், வண்டிகள் சென்றுவருவதற்கான பாதையாகக் கிராமத் தலைவருக்குப் பையாலாலின் நிலம் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது. சாகுபடிசெய்யப்பட்ட காலங்களில் வளர்ந்து நிற்கும் பயிர்களின் மேல் ஏறி நசுக்கிக்கொண்டு கிராமத் தலைவரின் டிராக்டரும் வண்டிகளும் சென்று வருவது வழக்கம். இதனால் பையாலாலின் இரண்டு ஏக்கர் நிலம் பறிபோனதாகவே கருதப்பட்டது. இது குறித்து நியாயம் வேண்டிப் பையாலாலின் மனைவி சுரேகா குரல் எழுப்பினார். அக்கிராமத்தின் மற்ற இரண்டு தலித் குடும்பங்கள் ஆதிக்கச் சாதியினரின் அச்சுறுத்தல் காரணமாக இவர்களுக்கு ஆதரவு தராமல் ஒதுங்கியிருந்தன.
பக்கத்துக் கிராமமாகிய ‘டுசாலா’வில் வசிக்கும் தன் ஒன்றுவிட்ட சகோதரர்கள் சித்தார்த், ராஜேந்திரா ஆகியோரிடம் தங்களது நிலத்தை மீட்டுத்தர உதவும்படி வேண்டியுள்ளார் சுரேகா. சித்தார்த் ‘கயர்லாஞ்சி’ கிராம உயர் ஜாதி மக்கள் பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த் தையில் ஈடுபட்டார். கோபம்கொண்ட ஆதிக்கச் சாதியினர் பிரச்சினையைத் திசைதிருப்பும் நோக்கில் தன் சொந்த நிலத்துக்கு ‘உரிமை’ கொண்டாடிய சுரேகாவுக்கும் அவளுக்காகப் பரிந்துபேசிய சித்தார்த்துக்கும் கள்ளத்தொடர்பு இருப்பதாகவும் சுரேகா கள்ளச் சாராய வியாபாரம் செய்துவருகிறார் எனவும் கதைகட்டினர்.
03.09.2006அன்று நியாயம் கேட்டுவந்த சித்தார்த்தை சுமார் 1.5 கிலோ மீட்டர் தூரம் துரத்திவந்த கயர்லாஞ்சி கிராம ஆதிக்கச் சாதி இந்துக்கள் அவரைக் கடுமையாகத் தாக்கினர். சுரேகா, மகள் பிரியங்கா, மகன்கள் சுதிர், ரோஷன் ஆகியோர் இதை நேரில் கண்ட சாட்சிகளாவர். அவர்கள் சித்தார்த் தாக்கப்பட்ட செய்தியை ராஜேந்திராவுக்குத் தெரிவித்தனர். அவர் சித்தார்த்தை ‘காம்ப்பீ’ நகர் ‘ராய் மருத்துவமனையில்’ சிகிச்சைக்காகச் சேர்த்தார். இது காவல் துறை தொடர்பான வழக்கு என்பதால் ராய் மருத்துவமனை சார்பில் காவல் துறையினரிடம் புகார்செய்யப்பட்டது.
சம்பவம் நடந்த இடம் கயர்லாஞ்சி என்பதால் வழக்கு அண்டால்கவான் காவல் நிலையத்திற்கு மாற்றப்பட்டது. 29.09.2006இல் 12 பேர் கைதுசெய்யப்பட்டனர். மகாதி தாலுகா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு அன்றே பிணையில் விடுவிக்கப்பட்டனர்.
விடுவிக்கப்பட்ட 12 பேரும் தம் உறவினர்கள் சுமார் 40 பேருடன் ‘டுசாலா’வுக்குச் சென்றனர். இவர்கள் வரும் செய்தியைக் கேட்ட சித்தார்த்தும் ராஜேந்திராவும் ஓடி ஒளிந்துகொண்டனர். அவர்கள் இருவரையும் காணாத கூட்டம் அடுத்து ‘கயர்லாஞ்சி’ நோக்கிக் கடும் கோபத்துடன் சென்றது. அக்கூட்டத்துடன் உள்ளூர் உயர் ஜாதி இந்துக்களும் சேர்ந்துகொண்டு பையாலாலின் குடிசையை நோக்கிப் பயங்கர ஆயுதங்களுடன் புறப்பட்டனர். குடிசைக்குள் பையாலாலின் மனைவியும் குழந்தைகளும் மட்டுமே இருந்தனர்.
குடிசைக்குள் புகுந்த உயர் ஜாதி இந்துக்கள், (பெண்கள் பலரும் அக்கூட்டத்துடன் வந்தனர்.) அவர்கள் அணிந்திருந்த ஆடைகளைக் கிழித்து நிர்வாணப்படுத்திக் கையோடு கொண்டுவந்திருந்த ஆயுதங்களால் கடுமையாகத் தாக்கினர். அதோடு அந்த நால்வரையும் தெருத்தெருவாக இழுத்துச்சென்றனர். ஊர்ப் பொது இடத்திற்குக் கொண்டுவந்து பையாலாலின் மனைவியையும் மகளையும் கூட்டத்திலிருந்த எல்லா ஆண்களும் மாறிமாறி பாலியல் வல்லுறவுக்குட்படுத்தினர். சூழ்ந்துநின்று இதைப் பார்த்துக்கொண்டிருந்த உயர் ஜாதி இந்துப் பெண்கள் யாரும் தம் ஆண்களின் வெறிபிடித்த இந்த வன்செயலைக் கண்டிக்கவுமில்லை, தடுக்கவும் முற்படவில்லை. பிறகு ஒரு கொடூரமான செயல் அரங்கேறியது. தாயையும் தங்கையையும் புணருமாறு பையாலாலின் மகன்கள் சுதிருக்கும் ரோஷனுக்கும் கட்டளையிட்டனர். அவர்கள் மறுத்துவிடவே அவர்களின் ஆண் உறுப்புகளைக் கத்தியால் வெட்டினர். பிறகு ரத்தம் தெறிக்கும் அவர்களது உடல்களை ஆகாயத்தில் தூக்கி எறிந்து விளையாடினர். அவர்களது உயிர் பிரியும்வரை நான் முந்தி நீ முந்தி எனப் பலரும் இந்த விளையாட்டில் ஈடுபட்டனர்.
குற்றுயிராய்க் கிடந்த இரு பெண்களின் குறிகளுக்குள்ளும் மாட்டு வண்டியின் நுகத்தடியில் பொருத்தப்படும் கம்புகளைச் சொருகினர். சிலர் நன்கு கூர்மையாகச் சீவப்பட்ட மூங்கில் குச்சிகளை அடித்துச் சொருகினர். அதிக இரத்தப் போக்கினாலும் தாங்க முடியாத இச்சித்திரவதைகளினாலும் உயிரிழந்த அப்பெண்களது உடல்களைத் தெருவில் வீசிவிட்டுச் சென்றனர். பிரியங்காவின் பிரேதத்தையும்கூடப் பலர் பாலியல் பலாத்காரம் செய்ததாகத் தன் பெயரை வெளியிட விரும்பாத ஒரு போலீஸ்காரர் கூறியுள்ளார். தன் குடும்பத்தினர்மீது தொடுக்கப்பட்ட மனிதத்தன்மையற்ற இத்தாக்குதல்களை ஒரு மறைவிடத்திலிருந்து ஆற்றாமையுடன் பார்க்க நேர்ந்ததாகத் தெரிவித்துள்ளார் பையாலால்.
பாதுகாப்பற்ற அப்பாவித் தலித் மக்களின் மீது தம் மிருகவெறியைப் பிரயோகித்து அவர்களை முற்றாக அழித்த ஆதிக்கச் சாதியினர் பிறகு ஒன்றுகூடி அன்று கயர்லாஞ்சியில் நடந்தவற்றை யாரும் யாரிடமும் சொல்லக் கூடாது எனவும் அவ்வாறு சொன்னால் சொன்னவர்களுக்கும் இதேவிதமான தண்டனைகள் காத்திருக்கின்றன எனவும் அச்சுறுத்திவிட்டுக் கலைந்து சென்றனர். சிதைக்கப்பட்ட அச்சடலங்கள் நாலாபுறங்களிலும் வீசி எறியப்பட்டன.
அன்று இரவு 7:45 மணிக்கு பையாலால் சித்தார்த்தை அழைத்துக்கொண்டு போய் அண்டால்கவான் காவல் நிலையத்தில் புகார்செய்தார். காவலர்கள் இரவு 11:00 மணிக்கு ‘கயர்லாஞ்சி’ கிராமத்திற்குச் சென்று விசாரித்தனர். அத்தகைய சம்பவம் எதுவும் அங்கே நிகழவில்லை என விசாரிக்கப்பட்ட அனைவரும் ஒரே குரலில் தெரிவித்தனர். காவல் துறை பையாலாலின் குடிசைப்பக்கம் எட்டிக்கூடப் பார்க்கவில்லை.
மறுநாள் 30.09.2006 காலை 8:00 மணிக்கு பையாலால் அண்டால்கவான் காவல் நிலையத்தில் எழுத்து மூலம் தன் புகாரைப் பதிவுசெய்தார். அதன்பின் ‘சிவ்லால் கராடே மஹராஜ்’ என்பவர் பிரியங்காவின் உடல் தன் நிலத்துக்கு அருகில் ஓடும் ‘வடேகவான்’ கால்வாயில் மிதப்பதாகக் காவல் துறைக்குத் தகவல் சொன்னார். சடலத்தின் பெண் குறிக்குள் கூரிய கம்பு சொருகப்பட்டிருப்பதாகவும் தெரிவித்தார் மஹராஜ். பிறகு கயர்லாஞ்சியைச் சுற்றிப் பல்வேறு இடங்களிலும் சிதறிக்கிடந்த நால்வரின் சடலங்களையும் கைப் பற்றியது காவல்துறை. அவசர அவசர மாகப் பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டு அந்த நான்கு சடலங்களும் புதைக்கப்பட்டன.
சடலங்கள் உருக்குலைந்துபோயிருந்தமையால் ‘உரிய விதி’களின்படி பிரேதப் பரிசோதனைசெய்ய இயலவில்லை என மருத்துவர் குழு அறிவித்தது. கொல்லப்பட்ட இரண்டு பெண்களின் யோனிக் குழாய்களையும் கருப்பைகளையும் சோதித்ததில் பெண்கள் இருவரும் பாலியல் வன்முறைக்குள்ளாக்கப்பட்டதற்கான ஆதாரம் எதுவுமில்லை எனவும் பிரேதப் பரிசோதனை அறிக்கை கூறியது.
பல்வேறு மனித உரிமைக் குழுக்களும் தன்னார்வக் குழுக்களும் கயர்லாஞ்சிக்கு வந்து முகாமிட்டன. நடந்தவற்றை அறிய அப்படுகொலைகளை நேரில் பார்த்த மக்களுடன் பேசினர். கடும் முயற்சிக்குப் பின்னர் உண்மை கண்டறியப்பட்டது. பையாலால் குடும்பத்தின்மீது நடத்தப்பட்ட தாக்குதல்களைக் குறித்த உண்மையைப் பகிர்ந்துகொள்ள மிகப் பயந்துபோயிருந்த கிராம மக்கள் முதலில் தயங்கினர். பிறகு பெயர்களை வெளியிடக் கூடாது என்னும் நிபந்தனையுடன் பேசத்தொடங்கினர்.
தேசிய மனித உரிமை ஆணையமும் பல்வேறு மனித உரிமை அமைப்புகளும் ஊடகங்களும் கொடுத்த தொடர் நெருக்கடிகளின் காரணமாக நான்கு பிணங்களையும் தோண்டி எடுத்து மீண்டும் பிரேதப் பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டிய கட்டாயம் அரசுக்கு உருவானது. ஆனால் ‘காலம் கடந்துவிட்ட’தால் அந்தச் சோதனையால் புதிதாக எந்தப் பயனும் கிடைக்கவில்லை என அரசு அறிவித்தது.
காவல் துறையினர் தம் ஒப்புதல் வாக்குமூலத்தில் அந்தப் பெண்கள் பாலியல் வல்லுறவுக்குள்ளாயினரா என்பதை உறுதிப்படுத்தும் நோக்கில் பிரேதப் பரிசோதனை நடத்தப்படவில்லை என்பதை ஒப்புக்கொண்டனர். மாவட்டக் காவல் துறைக் கண்காணிப்பாளர் இதனை “ஓர் இரக்கமற்ற வெறிபிடித்த அதிகபட்ச மிருகச் செயல்” எனக் கண்டித்துள்ளார். இதற்குப் பொறுப்பான காவல் துறை அலுவலர்களும் மருத்துவ அதிகாரிகளும் தற்காலிகப் பணிநீக்கம் செய்யப்பட்டனர்.
உண்மை கண்டறியும் குழுக்களின் அறிக்கைகளின்படி இந்தப் படுகொலைகள் வெறும் நிலத்துக்காக நடத்தப்பட்டவையல்ல என்பது தெளிவாகிறது. தம் சாதிய மேலாதிக்கத்தைக் காப்பாற்றிக்கொள்வதற்காக அந்த மேலாதிக்கத்தை ஒப்புக்கொள்ள மறுத்துத் தம் நிலத்துக்காகவும் அடிப்படை உரிமைகளுக்காகவும் சட்டத்தின் வழியில் போராடிய, தலித் குடும்பம் ஒன்றின் மீது நடத்தப்பட்ட வன்கொடுமைத் தாக்குதல் இது என்பதில் யாருக்கும் சந்தேகமிருக்க முடியாது. இந்தக் கோணத்தில் இந்த வழக்கை ஆராய நீதிபதிக்கு எது தடையாக இருந்தது? காவல் துறை தொடக்க நிலையிலிருந்தே ஆதிக்கச் சாதியினருக்குச் சாதகமாக மிகக் கவனமுடன் இந்த வழக்கைக் கையாண்டு வந்துள்ளது என்பது தெளிவு.
பையாலால் ஒரு தலித் என்பதாலேயே அவரது வாழ்வுக்கு ஆதாரமாக இருந்த அவருடைய நிலம் அவருடைய விருப்பத்திற்கு மாறாக உயர் ஜாதியினரால் பறிக்கப்பட்டு அவர்களது டிராக்டர்களும் கால்நடைகளும் செல்வதற்கான பாதையாக மாற்றப்பட்டது. அது குறித்து நியாயம் கேட்கவந்த சித்தார்த்மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்குக் காரணமும் அவர் ஒரு தலித் என்பதுதான்.
அவரால் கொடுக்கப்பட்ட புகார் 1989ஆம் ஆண்டு இயற்றப்பட்ட தாழ்த்தப்பட்ட, பழங்குடியினர்மீதான வன்கொடுமைகள் தடுப்புச் சட்டத்தின்கீழ் (ஷிசி & ஷிஜி றிக்ஷீமீஸ்மீஸீtவீஷீஸீ ஷீயீ கிtக்ஷீஷீநீவீtவீமீs கிநீt 1989) பதிவுசெய்யப்படாமல் இந்தியத் தண்டனைச் சட்டம் பிரிவு 147, 148, 149 & 324 ஆகியவற்றின் கீழ் பதிவுசெய்யப்பட்டுள்ளது.
வரலாற்றுச் சிறப்பு மிக்க தீர்ப்பு எனப் புகழ்ந்து கூறி வரவேற்கப்படும் இத்தீர்ப்பு உண்மையில் ‘ஜாதிய ஒடுக்குமுறைக்கு’ எதிரானதா? இப்படியரு தீர்ப்பு வழங்கப்பட்டதன் மூலம் ‘சமூக நீதி’ நிலைநாட்டப்பட்டுவிட்டது எனக் கொண்டாட முடியுமா? தனிப்பட்ட இரண்டு விவசாயிகளுக்கிடையே ஏற்பட்ட நிலத் தகராறு காரணமாக நடத்தப்பட்ட கொலைகள் எனப் பதிவுசெய்ததற்கும் அந்த நோக்கில் விசாரணைகள் நடத்தப்பட்டதற்கும் அதனடிப்படையில் குற்றவாளிகளுக்கு அதிகபட்சத் தண்டனைகள் வழங்கப்பட்டதற்கும் பின்னால் இயங்குவது உயர் சாதி மனோபாவத்தைத் தவிர வேறென்ன? அதிகபட்சத் தண்டனை என்பது இந்த மனோபாவத்தை மறைக்கும் ஒரு முகமூடியாகவே இந்தத் தீர்ப்பில் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. ஒருவகையில் இது உண்மைக்கு எதிரான ஒரு தீர்ப்பு.
2008 செப்டம்பர் 15இல் நீதிபதி எஸ். எஸ். தாஸ் அவர்களால் குற்றவாளிகள் என்று கண்டறியப்பட்ட எட்டு நபர்களைத் தவிர மற்ற அனைவரும் குற்றம் சரிவர நிரூபிக்கப்படவில்லை எனக் காரணம் காட்டி விடுவிக்கப்பட்டுள்ளனர். தன் தீர்ப்பில் இந்தக் கொலைகளுக்கு முன்விரோதமும் பழிவாங்கும் உணர்வுமே காரணம். வேறு எந்தக் கோணத்திலும் இந்த வழக்கை அணுகுவதற்கு எந்த முகாந்திரமும் இல்லை என்றும் ‘தெளிவு’படுத்தியுள்ளார். தலித்துகளுக்கெதிரான வன்முறையின் இருப்பை ஒப்புக்கொள்வதிலும் தலித்துகளுக்கெதிராக நடைபெற்றுவரும் குற்றங்களைத் தடுப்பதற்கு வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தைப் பயன்படுத்துவதிலும் நமது காவல் துறையும் நீதித் துறையும் கொண்டுள்ள அக்கறையின்மையின் வெளிப்படையான நிரூபணமாக விளங்குவது இத்தீர்ப்பு.
பையாலாலின் புகார் பெறப்பட்டவுடன் கயர்லாஞ்சிக்குச் சென்று விசாரித்த போலீசார் அது போன்ற சம்பவம் ஏதும் இந்த ஊரில் நடக்கவில்லை எனக் கிராமத்து ஆதிக்கச் சாதியினர் சொன்னதை அப்படியே ஏற்றுக்கொண்டு குறைந்தபட்சம் பையாலாலின் குடிசையைக்கூட எட்டிப்பார்க்காமல் திரும்பிச் செல்லுமளவுக்கு ‘அப்பாவி’களாய் இருந்துள்ளனர். மறுநாள் 30.09.2006 காலை 8:00 மணிக்கு பையாலால் எழுத்து மூலம் தமது புகாரைப் பதிவுசெய்த பின்னர், சிவலால் கராடே மஹராஜ் என்பவர் கொடுத்த தகவலின் பேரில் சடலம் கைப்பற்றப்பட்ட பிறகுதான், காவல் துறைக்கு பையாலால் தன் புகாரில் சொன்னதுபோல் ஏதாவது நடந்திருக்குமோ என்னும் சந்தேகம் வருகிறது.
17 வயதுள்ள ஒரு இளம் பெண்ணின் சடலம் நிர்வாணமாகவும் பெண் குறியில் கூரிய மரக்கட்டை அடித்துச் சொருகப்பட்ட நிலையிலும் கைப்பற்றப்பட்டுள்ளபோது அவர் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்டிருக்கலாமோ என்னும் மிக எளிமையான சந்தேகம்கூடக் காவல் துறையினருக்கு எழவில்லை. பிரேதப் பரிசோதனை நடத்திய மருத்துவர்களுக்கும்கூட அப்படி யரு கேள்வி எழவில்லை. விசாரணை செய்த நீதிபதிக்கும் அந்தச் சந்தேகம் எழவில்லை. எல்லோரும் அவ்வளவு அப்பாவிகளாய் இருந்திருக்கிறார்கள். ஆக, திட்டமிட்டுத் திசைதிருப்பப்பட்டுள்ள ஒரு வழக்கு இது என்பதை தலித்துகள் உணர வேண்டும்.
2006 அக்டோபர் முதல் நவம்பர்வரை பல தன்னார்வத் தொண்டு நிறுவனங்களும் மனித உரிமை அமைப்புகளும் கயர்லாஞ்சியில் முகாமிட்டு நேரில் கண்டறிந்து வெளியிட்டுள்ள அறிக்கைகளை நீதிமன்றம் பொருட்படுத்தாததற்குக் காரணம் என்ன?
பிரேதப் பரிசோதனை அறிக்கையில் காணப்படும் தவறான தகவல்களுக்காகவும் வழக்கைச் சரியாகப் பதிவுசெய்யாமல் கடமை தவறிய குற்றத்திற்காகவும் சம்பந்தப்பட்ட மருத்துவர்களும் காவல் துறை அதிகாரிகளும் தற்காலிகப் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். ஆனால் அந்தத் தவறான பிரேதப் பரிசோதனை அறிக்கையும் கடமை தவறிய காவல் துறை அதிகாரிகளால் தவறாகப் பதிவுசெய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கையும்தான் சாட்சியங்களாக ஏற்றுக்கொள்ளப்பட்டு அவற்றினடிப்படையில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
நீதிபதி கண்ணீருடன் இந்தத் தீர்ப்பை வழங்கியுள்ளார். யாருக்காக, எதற்காக வடிக்கப்பட்ட கண்ணீர் அது?
மரண தண்டனைக்கெதிரான குரல்கள் வலுப்பெற்றுவரும் ஒரு தருணத்தில் இவ்வழக்கில் குற்றவாளிகளெனத் தீர்ப்பளிக்கப்பட்ட ஆறு பேருக்கு மரண தண்டனை வழங்கப்பட்டுள்ளது. மனித உரிமைப் போராட்டம் என்பது அடிப்படையில் தலித் விடுதலைக்கான போராட்டம்தான் என்னும் அடிப்படையில் தலித் அமைப்புகள் கயர்லாஞ்சி வழக்கில் குற்றவாளிகளுக்கு வழங்கப்பட்டுள்ள மரண தண்டனையை ரத்துசெய்ய வலியுறுத்த வேண்டும்.
இந்த மரண தண்டனையை உயர் நீதிமன்றம் ரத்துசெய்ய வாய்ப்பிருக்கிறது என்பதை நாம் பொருட்படுத்த வேண்டியதில்லை. ஒவ்வொரு தலித்தும் ‘மனித உரிமையைக் காக்கப் போராடும், ஒரு போராளியே’ என்பதை நிரூபிக்கும் வகையில் வருணாசிரம தர்மத்தாலும் சாதியமைப்பாலும் மன நோயாளிகளாக மாற்றப்பட்ட கயர்லாஞ்சிக் குற்றவாளிகளுக்கு வழங்கப்பட்டுள்ள இந்த மரண தண்டனை ரத்துசெய்யப்பட வேண்டும் என வலியுறுத்துவதை தலித்துகள் மனித உரிமைகளுக்கான போராட்டத்தின் ஒரு பகுதியாகவே கருத வேண்டும்.
நன்றி காலச்சுவடு
வெட்கிக் கூசச்செய்யும்..
கீழே இருக்கும் இந்த யூடியூப் வீடியோவை நீங்கள் பார்த்திருக்கக்கூடும். பார்த்து மனம் வேதனைப் பட்டிருக்கக்கூடும். வெட்கிக் கூசியிருக்கக்கூடும். தமிழனாக இருப்பதற்கு வெட்கிக் கூசியிருக்கக்கூடும்.
சன் நியூஸ் தொலைக்காட்சியில் “இளகிய மனம் கொண்டவர்கள் பார்க்கவேண்டாமென்று” சொல்லுகிறார்கள்..நான் சொல்லுவது : “என்னைப்போல emotional guys கூட பார்க்கக்கூடாது. you are warned!”
மாணவர்களுக்குள் சண்டைகள் நடக்கும். இந்த சண்டை மாணவர்களுக்குள் நடக்கும் சாதரண சண்டை போல தெரியவில்லை. எனக்கு அதெல்லாம் பிரச்சனையில்லை. சண்டைகள் நடக்கும் பொழுது மாட்டிக்கொண்ட ஒருவர் இப்படி அடிவாங்குவது வாடிக்கையாக இருக்கலாம். ஆனால் போலீஸ் என்கின்ற ஒன்று அங்கே நின்று கொண்டிருந்ததே. அவர்கள் என்னத்தை செய்து கொண்டு இருந்தார்கள்? ஒருவரை பத்து பதினைந்து பேர் சேர்ந்து அடிக்கும் பொழுது அங்கேயிருக்கும் போலீஸ் அந்த சண்டையை தடுக்காமல், அடிவாங்குபவன் சாகும் வரை வேடிக்கை பார்க்கும் எனில்.. கேட்டால் permission கிடைக்கவில்லையாம்..அட போங்கப்பா.
அசிஸ்டென்ட் கமிஷ்னரை டிரான்ஸ்·பர் செய்தாகிவிட்டது. ஏழு மாணவர்களை அரெஸ்ட் செய்தாகிவிட்டது. Everything is ok now. ****. இன்னும் இது ஒரு மிகப்பெரிய கலவரமாக உருவாகக்கூடும் என்று சொல்லுவது ஒரு மிகப்பெரிய கலவரம் உருவாக வேண்டும் என்று நினைப்பதைப் போன்றது. எவ்வளவு பெரிய கலவரம் உருவானாலும், இந்த சம்பவத்தை, அடி தாங்காமல் மயக்கமுற்று ஒன்றும் செய்யமுடியாமல் கீழே சாய்ந்து விட்ட ஒரு மனிதனை, பெரிய பெரிய கம்புகளை வைத்து விடாமல் அடித்து, கடைசி எழும்புகள் நொறுங்கும் வரை அடித்து நொறுக்கும் காட்டுமிராண்டிக் காட்சியை போலீஸ் கண்டு களித்ததை இன்னும் கொஞ்சநாளில் நம்பர் ஒன் புலனாய்வு பத்திரிக்கைகள் கூட மறந்துவிடும்.
எத்தனையோ விசயங்களை மறந்திருக்கிறோம்..இதை மறக்கமாடோமா என்ன?
ஓலகஞாநியண்ணனுக்கு ஒரு பகிரங்கக் கடிதம்
ரஜினிக்கு நீங்கள் எழுதிய பகிரங்கக் கடிதம் கண்டேன். “உதறுதில்ல” என்கிற உங்களது நக்கலை வெகுவாக ரசித்தேன். வாழ்த்துக்கள்.
“இந்த வார அதிர்ச்சி : திமுக கலைஞர் பற்றி ஓ பக்கங்களில் ஏதும் இல்லாதது“
என்று நீங்களே உங்கள் ஓ பக்கங்களைப் பற்றி அதிர்ச்சி தெரிவித்துக்கொள்கிறீர்கள். உங்கள் அதிர்ச்சி கிடக்கட்டும் விடுங்கள், அது யாருக்கு வேண்டும்? அப்படி நீங்களே உங்கள் ஓ பக்கங்களில் திமுக வரவில்லை என்று அதிர்ச்சியடைகிறீர்கள் என்றால், திமுகவை பற்றியும் கலைஞரைப் பற்றியும் ஒவ்வொரு ஓ பக்கங்களிலும் எழுதிக்குவித்துக்கொண்டு வருகிறீர்கள் என்று தானே அர்த்தம். உங்களுக்கு திமுகவையும் கலைஞரையும் பிடிக்கவில்லை (அல்லது உங்களுக்குள் ஏதோ ஒரு மனஸ்த்தாபம்) என்கிற ஒரே காரணதுக்குக்காகத்தானே வாரா வாரம் எழுதுகிறீர்கள். உங்களுக்கு பிடிக்காத ஒரே காரணதுக்காக, நீங்கள் வாரா வாரம் எழுதிக்கிழிக்கும் பத்தியை படிக்கும் எங்களுக்கு அதில் விசயம் இருக்கிறதா இல்லையா என்று கூட நினைத்துப்பார்க்காமல், கலைஞரையும் திமுகவையும் அட்டாக் செய்யும் ஒரே நோக்கத்தோடு நீங்கள் எழுதுகிறீர்கள். ஒலகஞாநியண்ணே சாதரண வெகு ஜனப் பத்திரிக்கையின் பத்தி எழுத்தாளரான நீங்களே இவ்வளவு அரசியல் பண்ணும் பொழுது உலகம் முழுவதும் கோடிக்கணக்கில் ரசிகர்கள் வைத்திருக்கும் ரஜினி எவ்வளவு அரசியல் பண்ணுவார்?
ரஜினி அரசியலை சினிமாவுக்கு பயன்படுத்தறார் என்கிறீர்கள், நீங்கள் அரசியலை உங்கள் பத்திக்கு பயன்படுத்துகிறீர்கள். என்ன வித்தியாசம், சொல்லுங்க ஒலகஞாநியண்ணே. ஒரு தளம் கிடைத்துவிட்டது, கையில் பேனாவும் இருக்கிறது, இடஒதுக்கீடு பிரச்சனைக்கப்புறம் நாமளும் பெரிசா ஏதும் எழுதல, என்பதற்காக அப்பாடா ரஜினி மாட்டினாரு, வாய்யா வாய்யா வாய்யான்னு எழுதாதிங்க ஒலகஞாநியண்ணே.
மேலும் அதே பத்தியில்
“இந்த வார பூச்செண்டு : ரஜினிக்கு அழுத்தமான கதையுடன் ஒரு படத்தை நீண்ட நாட்களுக்குப் பிறகு அளித்ததற்காக“
என்று பத்தி முழுக்க அவர்மீது சேற்றை வாரி இரைத்துவிட்டு, இந்தாப்பா பூச்செண்டு சேறு வாசனை நல்லாருக்காது, பூச்செண்ட முகர்ந்து பாத்துக்கன்னு ஏன் கொடுக்கனும்?
குசேலன், “ஞாநி” அவர்களது தங்கக் கைகளால் பூச்செண்டு வாங்கும் அளவிற்கா நன்றாக இருக்கிறது. தருமி கேட்டது மாதிரி “என் பாடலில் எவ்வளவு பிழைகள் இருக்கின்றனவோ அவ்வளவை நீக்கிவிட்டு மீதம் இருப்பதற்கு பரிசு கொடுங்கள் மன்னா” என்றது போல, படத்திலிருக்கும் ஆபாசத்தையும், அபத்தத்தையும் நீக்கிவிட்டு, மற்றவைக்கு பூச்செண்டு கொடுப்பாராம். பத்தி முழுவதும், குசேலனை தாக்குகிறார், பிறகு பூச்செண்டாம்.
ரஜினியை மானங்கெட பேசிவிட்டு, அதே பத்தியில் பூச்செண்டு தரவேண்டிய அவசியம் என்ன? இப்ப உங்க பேனா உதறுதில்ல?
உங்கள மாதிரி அரசியல் பண்ண அவருக்கு சாமர்த்தியம் பத்தல. இருந்துச்சுன்னா நீங்க சொன்னது போல, கர்நாடகவை எதிர்த்து பேசிட்டு உடனே “எடியூரப்பா இன்று குளித்துவிட்டு வந்ததால் அவருக்கு பூச்செண்டு” என்று ரஜினி பேசியிருக்கக்கூடும்.
மேலும் உங்களைப் போல அவர் இவ்வாறெல்லாம் பேசியிருக்கலாம்:
“
இந்த வார குட்டு: ஒகேனக்கல் திட்டத்தை கர்நாடகா எதிர்ப்பதால், எடியூரப்பாவுக்கு ஒரு கில்லும், வாட்டாளுக்கு ஒரு கொட்டும்.
இந்த வார பூச்செண்டு: பெங்களூரில் IT கம்பெனிகள் நடத்தி தமிழர்கள் பலருக்கும் வேலை கொடுப்பதால், எடியூரப்பாவுக்கு ரோஸ் பூச்செண்டு, வாட்டாளுக்கு லாவண்டர் பூச்செண்டு. “
இப்படியெல்லாம் உங்களைப் போல ரஜினி பேசிருந்தாருன்னா, அவர் பிழைச்சுக்கிடுவார். அந்த சாமர்த்தியம் பத்தலண்ணே, ஞாநியண்ணே. கொஞ்சம் அவருக்கு சொல்லிக்கொடுங்க.
“அரசியலில் நீங்கள் குரல் கொடுத்த பொழுதெல்லாம் அதையொட்டி உங்கள் படம் தயாரிகிக்கொண்டிருப்பது வழக்கம்” என்று பேனா கிடைத்த மெத்தனத்தில் எழுதியிருக்கிறீர்கள்.
எத்தனை முறை ரஜினி தனது படத்தின் ரிலீஸ் தேதிக்கு முன்னர் அரசியல் பேசியிருக்கிறார்? Data கொடுக்கமுடியுமா ஒலகஞாநியண்ணே? சந்திரமுகிக்கு முன்னால் பேசினாரா? “நான் குதிரை” என்று அவர் பேசியது அரசியலா? சிவாஜி வெளியீட்டுக்கு முன்னர், அவர் அரசியல் பேசினாரா? பாட்சா படம் ஜனவரியில் ரிலீஸ் ஆனது, அவர் ஜெயலலிதவை எதிர்த்து எப்பொழுது பேசினார்? அவர் அரசியல் பேசித்தானா அவர் படம் ஓட வேண்டும்? எனக்கு தெரிந்த எத்தனையோ பெண்கள் குடும்பம் சகிதமாக சிவாஜி ரிலீஸ் தேதியன்னைக்கு தியேட்டருக்கு வந்து படம் பார்த்தார்கள். அவர்கள் அரசியலில் துளியும் ஆர்வம் இல்லாதவர்கள்.
“முதன் முதலில் பொது பிரச்சனையில் தெளிவாகப் பேசியது ஒகேனக்கல் பிரச்சனையில் தான்“
ஓகோ அப்படி! இப்ப யார் எப்பப்ப டெளிவா பேசறாங்கங்கறத தேர்ந்தெடுக்கிற பொறுப்பு உங்களோடதா? சொல்லவேயில்ல! இனி மேலும், இந்த வாரம் டெளிவா பேசினவருக்கு ஒரு பூச்செண்டு. டெளிவா பேசாவதங்களுக்கு கொட்டுன்னு ஒரு பகுதி ஆரம்பிச்சிருங்க சார். செம ஐடியா!
“எல்லா கன்னடகாரர்களையும் உதைக்க சொல்லவில்லை” என்று ரஜினி பல்டி அடித்ததாக சொல்லுகிறீர்கள்.
அப்படீன்னா எல்லா கன்னடகாரர்களையும் உதைக்கச்சொன்னாருன்னு சொல்றீங்களா? நீங்களே உக்காந்து யோசிச்சிட்டு சொல்லுங்க, எல்லா கன்னடகாரர்களையும் உதைக்க முடியுமா? ஒலகஞாநின்னு பேரவெச்சுக்கிட்டு இப்படி அசட்டுதனமா பேசினா எப்படி? எல்லா கன்னடகாரர்களையும் உதைக்கறதுக்கு எவ்வளவு நேரம் ஆகும்? கால் வலிக்குமா வலிக்காதா?
“குசேலன் பட வெளியீட்டை கர்நாடகாவில் தடை செய்ய முனைந்ததுதான் உங்கள் பல்டிக்கு காரணம்” என்கிறீர்கள்.
கண்டுபிடிச்சுட்டாருய்யா நம்ப ஒலகஞாநியண்ணே. ஆமா அதுக்குத்தான். இது தான் சின்ன குழந்தைக்கு கூட தெரியுமே! என்ற சொல்லை உங்களை போல ஒலகஞானம் கொண்ட பத்தி எழுத்தாளர் உபயோகிக்கலாமா? நெஞ்சில் கையை வைத்து சொல்லுங்கள், நமக்கு தண்ணீர் வராததற்கு அவர்கள் மட்டும் தானா காரணம்? நீங்கள் தெருக்களில் குழாயடி சண்டைகளை பார்த்ததில்லையா? ஏன் சென்னையில் லாரி தண்ணீர் பிடிக்க சென்றதில்லையா? ஆமா ஆமா திமுக பற்றிய செய்திகளை பூதக்கண்ணாடி வைத்து நாள்தோறும் தேடிக்கொண்டிருந்தால், எப்படி இதற்கெல்லாம் நேரம் இருக்கும்? நம்ப தெருவில, இந்த பக்கம் தெருவில வர்ற அடிகுழாய் தண்ணிய அந்தப் பக்கம் தெருவில இருக்கிற மக்களுக்கு கொடுக்க மாட்டேங்கறாங்க ஒலகஞாநியண்ணே. அப்ப அவங்கள என்ன சொல்லுவீங்க? தமிழ்த்தெரு-வெறியர்கள்? மேலும் ஒரு ஐடியா சார். கப்புன்னு பிடிச்சுக்கோங்க: இந்தவாரம் குழாயடி சண்டை போட்டவர்களுக்கு கொட்டு. குழாயடி சண்டை போடாதவர்களுக்கு பூச்செண்டு.
“பத்து பேரை தனியாளாக அடித்துப் போடுவது…எல்லாம் திரையில் தான் சாத்தியம்” என்று சொல்லியிருக்கிறீர்கள்.
நடிகர்கள் அப்படித்தாண்ணே. நீங்க உண்மையிலே ரஜினி திரும்பி மொறச்சு பாத்தா தீக்குச்சி பத்திக்கும்னு நினைச்சீங்களாண்ணே? ஐயோ பாவம். இந்தமாதிரியான குற்றச்சாட்டு, நாங்கள் பள்ளிக்கூடம் படிக்கும் போது, ரஜினிரசிகர்களுக்கும் கமல் ரசிகர்களுக்கும் இடையே நடக்கும் சண்டைக்குத்தான் பயன்படுத்துவோம். ஒலகஞாநியண்ணே இத தன்னோட ஒலகபத்தியில எழுதியிருக்கிறது ஆச்சரியமா இருக்கு.
““அது யாரோ ஒரு ரைட்டர் ஒரு படத்துல எழுதிய வசனம். அதை நான் பேசியிருக்கேன். அதை உண்மைன்னு நீங்க எடுத்துக்கிட்டா நான் என்ன செய்யறது” என்று சொல்லுகிறீர்கள். எவ்வளவு நேர்மையான, சரியான பதில் ! இதைப் பல வருடங்கள் முன்பே நீங்கள் சொல்லியிருந்தால் இப்போது வந்திருக்கும் எந்தப் பிரச்னையும் உங்களுக்கு வந்திராதே.” என்கிறீர்கள்.
ஒலகஞாநியண்ணே, அவர் இப்பொழுது சொல்ல என்ன நேரம் வந்துவிட்டது? சினிமாவிலிருந்து விலக்கிக்கொள்கிறாரா? அடுத்து அதிக பொருட்செலவில் தயாராகப் போகும் ரோபோ லைனில் இருக்கிறது. அவர் இந்த கேள்வியை படத்தில் வைத்திருக்கவே தேவையில்லை. வாசுவை பார்த்து ஒரு கண்ணசைவு செய்தால் போதும். அப்படியிருக்க அவர் இந்த வசனத்தை படத்தில் வைக்கவேண்டிய அவசியம் என்னவென்று கொஞ்சம் யோசிச்சீங்களா? சின்ன பிள்ளை மாதிரி குதிக்கிறீங்க? இவர் அஞ்சு வருசத்துக்கு முன்ன இத சொல்லிருந்தாலும், இன்னும் அஞ்சு வருசத்துக்கு முன்னால சொல்லிருந்தா எல்லாருக்கும் நல்லதுன்னு சொல்லியிருப்பீங்க.
““நான் வந்தா என்ன வராட் என்ன ? நீங்க உங்க வேலையைப் பாத்துகிட்டுப் போக வேண்டியதுதானே” என்கிறீர்கள். மக்கள் அவரவர் வேலையைப் பார்த்துக் கொண்டு போய்க்கொண்டுதான் இருந்தார்கள். நீங்கள்தான் வந்து அரசியல் டயலாக் பேசி உங்கள் பக்கம் கவனத்தைத் திருப்பினீர்கள்.“
இது அபத்தமோ அபத்தம். சின்னப்பிள்ளைகள் சண்டையிட்டுக்கொள்வதைப் போல.”நான் பேசாட்டுக்கு பேசாட்டுக்கு தாம்ம்மா இருந்தேன், இவந்தான் என்னய கிள்ளிவெச்சுட்டான்னு” சொல்றமாதிரி. அட்லீஸ்ட் உங்களோட பத்தி ஞானத்தையாவது யூஸ் பன்ணியிருக்கலாமே?!
“சுந்தர்ராஜனின் இன்னொரு கேள்விக்கு படத்தில் பதிலே இல்லை. வயசுப் பொண்ணுங்க கிட்ட வந்து `பழகிக்குங்க’ என்று பேசும் கேவலத்தைப் பற்றிக் கேட்கிறார். பதிலே இல்லை.“
பழகிக்கங்கன்னு சொல்றதுல அப்படி என்ன கேவலம் இருக்குன்னு எனக்கு புரியலண்ணே. அது ஒரு காமெடிக்குத்தானே வெச்சாங்க? ஓகோ படத்துல வர்றதயெல்லாம் சீரியஸா எடுத்துக்கிற ஆளா நீங்க? இது கேவலம்ன்னா இதவிட கேவலமா வேற எந்த படத்திலயும் இதுவரைக்கும் எதுவுமே வரலீங்களா ஒலகஞாநியண்ணே? குமுதம் “மூன்று பக்கங்களுக்கு மிகாமல் ரஜினியை பற்றி எழுதவும்” அப்படீன்னு சொன்னாங்களா? எதையெதையோ பிடிச்சு எழுதியிருக்கீங்க gap fill பண்ணியிருக்கீங்க?
“சூப்பர் ஸ்டர் இமேஜ் ஒகேனக்கல் வெள்ளத்தில் அடித்துப்போய்விட்டது” ஆமாப்பா, சொல்ட்டாரு கேட்டுக்கங்க. இப்ப “ரஜினி தூற்று” வெள்ளத்தில் நம்ப ஒலகஞாநியண்ணே பிச்சுக்கிணு போறாரு. எத்தனை பேர் படிச்சிருப்பாங்க. ரஜினி பத்தி எழுதிருக்காருன்னு. என்னோட பழைய boss கூட கேட்டார்: தலைவரை பத்தி யாரோ ஞாநிங்கறவரு ஏதோ எழுதிருக்காராமில்ல, இன்னைக்கு குமுதம் படிக்கனும்.
சார், ஞாநிசார், ஒலகஞாநிசார், பேமஸ் ஆகிட்டீங்க சார். வாழ்த்துக்கள்.

