செத்தாலும் and Veronika decides to die

சில மாதங்களுக்கு முன் சிவஸ்ரீ அவர்கள் எழுதிய “செத்தாலும்” என்கிற சிறுகதையை படிக்க நேர்ந்தது. அது காலச்சுவடில் வெளிவந்தது என்று நினைக்கிறேன். அந்த சிறுகதை ஒரு பெண்ணைப் பற்றியது. அந்தப் பெண் ஏதோ ஒரு காரணத்துக்காக தற்கொலைக்கு முயற்சி செய்வாள். ஆனால் அவள் விஷ மருந்து குடித்திருந்த நிலையில், குற்றுயிரும் குலை உயிருமாக, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, கடின போராட்டத்தற்குப் பிறகு காப்பாற்றப்படுவாள். அந்த சிறுகதையில் சிவஸ்ரீ, அந்தப் பெண் உயிர் பிழைப்பதற்குள் என்னென்ன வகையில் கஷ்டப்படுகிறாள் என்பதை நிதானமாக அழகாக நகைச்சுவையாக சொல்லியிருந்தார். கதையைப் படிப்பவர்களுக்கு தற்கொலை ஆசை, அதுவும் விஷ மருந்து குடித்து தற்கொலை செய்துகொள்ளும் ஆசை கண்டிப்பாக வராது, என்றே எனக்கு தோன்றியது. எனக்கு கதை மிகவும் பிடித்திருந்தது. எனவே சிவஸ்ரீ அவர்களுக்கு ஒரு ஈமெயில் அன்றே அனுப்பினேன். அவரிடமிருந்து உடனே பதில் வந்தது. சில நாட்கள் கழித்து அவர், ஜனாதிபதி கையால் விருது வாங்கிய செய்தியும் பேப்பரில் வந்திருந்தது.

ஒரு சில வாரங்களுக்கு முன் ஏதும் படிக்க கிடைக்காமல், Paulo Coelho எழுதிய, veronika decides to die என்கிற புத்தகத்தை எடுத்தேன். இந்த புத்தகம் ரொம்ப நாட்களுக்கு முன்னால் வாங்கியது, படிக்காமல் வைத்திருந்தேன். Paulo coelho ஒரு brazilian எழுத்தாளர். அவரது The Alchemist என்கிற நாவல் மிகவும் பிரபலமானது. எனக்கு மிகவும் பிடித்தமான நாவலும் கூட. இன்று வரை, புத்தகம் வாசிக்காத எனது நண்பர்கள் யாவருக்கும் பிறந்தநாள் பரிசாக நான் முதலில், இந்த நாவலைத்தான் கொடுத்திருக்கிறேன். எப்படியும் ஒரு ஐந்து காப்பியாவது இந்த நாவலை நான் வாங்கியிருப்பேன். இந்த நாவலே ஒரு தழுவல் தான். ஆயிரத்தோரு அரேபிய இரவுகளில் வரும் ஒரு கதையை அடிப்படையாக வைத்து, Paulo coelho இதனை அருமையாக எழுதியிருப்பார். Laurence Fishburne (The Matrix) இந்த நாவலை படமாக தயாரித்துக் கொண்டிருக்கிறார் என்று கேள்வி. அந்த எழுத்தாளர் எழுதிய Veronika decides to die, என்கிற நாவலை நான் வாசிக்கத் தொடங்கிய சிறிது நேரத்திலேயே, அந்த நாவல், சிவஸ்ரீ அவர்களின் கதையின் சாயலைக் கொண்டிருந்ததை உணர்ந்தேன். சாயல் என்று சொல்லிவிட முடியாது, ஆரம்பம் கிட்டத்தட்ட 80% அதே போலத்தான். மூன்று அத்தியாயங்களுக்கு மேலே, படிக்க பிடிக்காமல் மூடி வைத்து விட்டேன்.

ஒரு ஐடியாவின் ஒரிஜினாலிட்டி எங்கே இருக்கிறது என்பதை அதன் ஒரிஜினலைப் பார்க்கும் வரையில் யாருக்கும் தெரிவதில்லை. கமலஹாசனின் குருதிப்புனல் படத்தில் வரும் “every one has a breaking point” வசனம் எனக்கு மிகவும் பிடித்தமானது. ச்சே கமலஹாசன் எப்படி யோசிக்கிறார் என்று நினைத்திருந்தேன். ஆனால் அதே வசனத்தை The Shawshank Redemption திரைப்படத்தில் பார்க்க நேர்ந்தது. இப்போ நாம எங்கெங்கோ படித்ததை பகிர்ந்து கொள்கிறோம் இல்லியா? அது போல அவர் எங்கெங்கோ பார்த்ததை நம்மோடு பகிர்ந்துகொள்கிறார். ஆனால் நாம் courtesy இன்னார் என்று சொல்லிவிடுகிறோம், அவர் சொல்வதில்லை அவ்வளவு தான் வித்தியாசம்.

***

கற்றது தமிழ் திரைப்படத்தை முன்வைத்து சாருநிவேதிதா எழுதியிருந்த கட்டுரையை வாசித்தேன். Georges Bataille வின் சில வரிகளை மேற்கோள் காட்டிவிட்டு, படத்தை இன்னும் சிறப்பாக செய்திருக்கலாம் என்றும் பிரபாகரனின் கஷ்டங்களை மட்டும் எடுத்திருந்தால் ஒரு விதமான குரூர அழகியல் கிடைத்திருக்கும் இப்பொழுது அது மிஸ்ஸிங் என்று எழுதியிருந்தார். குரூர அழகியல் சார்ந்த திரைப்படங்கள் என்றதும் எனக்கு சட்டென்று நினைவுக்கு வந்தது இரண்டு படங்கள். ஒன்று ஆறிலிருந்து அறுபது வரை. மற்றொன்று பொற்காலம். ஆனால் இந்த கற்றது தமிழ் திரைப்படம் குரூரமானது என்ற வகையில் ஒத்துக்கொள்ளலாமே தவிர, குரூர அழகியல் என்றெல்லாம் நினைத்துக்கூட பார்க்க முடியாது. அழகாய் இருப்பதற்கு சில இலக்கணங்கள் இருக்கிறதல்லவா? வன்முறையை மற்றும் காழ்ப்புணர்ச்சியை தூண்டிவிடும் இந்த திரைப்படம், நானும் எனது படமும் தமிழை முன்வைத்து வரலாற்றில் இடம் பெறுகிறோமா இல்லையா பார், என்பது போன்ற சவாலுக்காக எடுக்கப்பட்டது என்றே தோன்றுகிறது. Like அம்முவாகிய நான் திரைப்படத்தில் வரும் வசனத்தைப் போல, “you stand in history!”. அம்முவாகிய நான் திரைப்படத்தைப் பற்றி பிரிதொரு முறை பேசலாம்.

கற்றது தமிழ் ஒரு வகையில் தடை செய்யப்படவேண்டிய திரைப்படம். Boys என்ற திரைப்படத்தை தடைசெய்தவர்கள் இதை தடை செய்யாமல் இருப்பதற்கு என்ன காரணம் என்று தெரியவில்லை. அன்றைக்கு மதன், தனது திரைப்பார்வையில், இந்த திரைப்படத்தைப் பற்றி இயக்குனரிடம் கேட்ட பொழுது, அவர் மென்துறை சார்ந்த மக்களின் மீது தீராத பாசம் வைத்திருப்பது போலவும் அவர்களுக்காக தான் பரிதாப்படுவதாகவும் சிலாகித்து மிகவும் வருத்தத்தோடு (கவனிக்க, சிலாகித்து பின் வருத்தத்தோடு!) சொல்லியிருந்தார். அவர் வருத்தப்படுவதற்கு ஒன்றுமே இல்லை, இப்படியொரு படத்தை எடுத்தபிறகு.

அந்த அன்னை அன்னை பாடலும், அந்த call center பையனும், பிராபாகர் அவனை படுத்தி வைத்த பாடும் (நம்மையும் சேர்த்துதான்!) இன்றும் எனக்கு பசுமையாக நினைவில் நிற்கிறது. “அன்னை அன்னை” பாடலை நீ பாடிக்காட்டு பார்ப்போம் என்பான் பிரபாகர் இதெல்லாம் ஒரு சவாலாய்யா? நாங்க என்ன இங்கிலாந்தில் இருந்தா இறங்கி வந்திருக்கோம்? இன்றைக்கு இருக்கும் blog மக்களில் பெரும்பாலானோர் மென்துறையை சார்ந்தவர்களே!

அவர்கள் தமிழை வளர்க்கிறார்களோ
(தமிழை யாரும் வளர்க்க முடியாது, தமிழ் தான் எங்களை வளர்க்கிறது!) இல்லியோ, எப்படியேனும், ஜெயமோகனையோ, ராமகிருஷ்ணனையோ, கிராவையோ, சுராவையோ, கல்கியையோ, பாரதியையோ ஆதவனையோ சிவஸ்ரீ யையோ பற்றி எழுதிக்கொண்டுதானே இருக்கிறார்கள்? எனக்கு தெரிந்த ஒரு ஆங்கில blogger, பாரதியின் பாடல்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துக் கொண்டிருக்கிறார்.

“அன்னை அன்னை” பாடலை என்னால் பத்து நிமிடங்களில் மனப்பாடம் செய்யமுடியும், என்னைப் போல..no i think its enough!

படத்தில் வரும் ஒரு முட்டாள் தனமான டயலாக் இப்பொழுதுதான் எனக்கு ஞாபகம் வந்தது: “ஏன்டா இரண்டாயிரம் வருஷத்துக்கு முன்னால் வந்த தமிழைப் படித்த எனக்கே இரண்டாயிரம் ரூபாய் தான் சம்பளம். இப்ப வந்த கம்ப்யூட்டர் படிச்ச உனக்கு இரண்டு லட்சம் சம்பளமா?” (correcta ஞாபகம் இல்லை!)

இவ்வாறான பொறுப்பற்ற வசனங்கள் ஒரு சாரர் மீது கோபத்தையும் வன்மத்தையும் கட்டவிழ்த்து விடுவதால் தான் இந்த படத்தை தடை செய்திருக்க வேண்டும் என்கிறேன்.

அது சரி, Georges Bataille வை சாருநிவேதிதா ழார் பத்தாய் என்கிறாரே, என்ன விதமான உச்சரிப்பு இது? இப்படித்தானா உச்சரிக்க வேண்டும்? தெரிந்தவர்கள் துப்பு கொடுக்கவும்.

***

In Cold Blood

In Cold Blood என்ற புத்தகத்தை ஆறு மாதங்களுக்கு முன்னால் வாங்கினேன். சில மாதங்களுக்கு முன்னால் படிக்க ஆரம்பித்து, முதல் ஆறு பக்கங்கள் மட்டுமே படித்தேன். அவ்வளவு தான் படிக்கமுடிந்தது, அப்போது. (படிப்பதற்கும் mood செட்டாகவேண்டும் இல்லியா?!) பிறகு வேறு வேறு நாவல்களுக்கு தாவிவிட்டு, பிறகு மீண்டும் சென்ற வாரம், புதன்கிழமை படிக்க ஆரம்பித்தேன். இரண்டே நாட்களில் -அதுவும் weekdays- படித்து முடித்தேன். என்னால் இந்த நாவலைப் படித்துமுடிக்கிற வரையில் வேறு எதிலும் கவனம் செலுத்த முடியவில்லை. அதற்கப்பிறகு, இந்த நாவலை தழுவி -தழுவி என்று சொல்லமுடியாது. அச்சு அசல் அதே போல – எடுக்கப்பட்ட திரைப்படம், In Cold Bloodஐயும் பார்த்தேன். இந்த நாவலைப் பற்றி என் நண்பரிடம் நிறைய பேசிக்கொண்டிருந்தேன். நிறையவே பேசிவிட்டேன். சாப்பிடும் போது. சாப்பிட்டு முடித்த பிறகு. வீட்டிற்கு செல்லும் வழியில். பிறகு செல்போனில். என் ஆர்வத்தைப் பார்த்த அவர், சென்ற வெள்ளியன்று, என் பிறந்தநாள் பரிசாக, Capote என்ற படத்தின் DVDஐ surprise presentஆக கொடுத்தார். அன்றே அந்த படத்தையும் பார்த்துவிட்டேன். (வேற வேலையே இல்லியாடா உனக்கு? என்கிற உங்களது குரல் என்னை வந்தடைந்து விட்டதை இங்கே தெரிவித்துக் கொள்ள கடமைப்பட்டிருக்கிறேன்!)

இந்த நாவல் ஒரு புதிய முயற்சி என்று Truman Capote சொல்கிறார். அதாவது Non-Fiction Novel. நாவல் என்றாலே புனைவுதான். ஆனால் இது புனைவு அல்லாத ஒரு உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்ட நாவல். அடிப்படை இல்லை. முழுக்க முழுக்க உண்மையே. “capote” படம் இந்த நாவலை எழுதிய Truman Capote அவர்களின் பயோகிராபி. பயோகிராபி என்று சொல்லமுடியாது. இந்த நாவல் உருவான கதை என்று வைத்துக்கொள்ளலாம். (இந்தப்பதிவில் இரு விசயங்களைப் பற்றிப் பார்க்கப்போகிறோம். In Cold Blood என்ற Truman Capote எழுதிய நாவல். Truman Capote எப்படி இந்த நாவலை எழுதினார் என்பதைப் பற்றிய படம்: Capote)

***

Kansas நகரத்திலிருந்து ஒதுங்கி தனியாக நிற்கும் Holcomb என்ற அழகான கிராமத்தில் நவம்பர் 1959இல் நடந்த நான்கு படுகொலைகளைப் பற்றியது தான் இந்த In Cold Blood என்ற நாவல். நாவல் பிரசுரம் செய்யப்பட்ட ஆண்டு 1965. 1967இல் இந்த நாவலை தழுவி எடுக்கப்பட்ட படம் “In Cold Blood”. பிறகு 2005 Capote வெளிவந்தது. Capoteயாக நடித்த Philip Seymour Hoffman (மிஷன் இம்பாசிபில் 3ல வந்த வில்லன்!) 2005இல் சிறந்த நடிகருக்கான அகாடெமி விருதைப் பெற்றார்.

Holcomb விவசாயத்தை முக்கியத் தொழிலாகக் கொண்ட கிராமம். அந்த கிராமத்தில் விவசாயம் செய்து வாழ்ந்து வருகிறது Clutter குடும்பம். Clutters கொஞ்சம் செல்வந்தர்கள். அந்த ஊரில் தன் நற்குணங்களால் நல்ல பெயரெடுத்தவர் Clutter. அவருக்கு மூன்று மகள்கள் ஒரு மகன். முதல் இரண்டு மகள்களுக்கும் திருமணம் நடந்து வேறு வேறு ஊர்களில் செட்டில் ஆகிவிட, கடைசி மகளும் மகனும் மட்டும் Holcombஇல் அப்பா அம்மாவுடன் வாழ்ந்து வருகிறார்கள். Clutterஇன் மனைவி Bonnie கொஞ்சம் மனநிலை தவறியவர். சிகிச்சைக்குட்பட்டு இப்பொழுதுதான் கொஞ்சம் தேறிவருகிறார். கடைசி மகள் Nancy அந்த ஊரின் செல்லப்பெண். Everyone’s Darling. அழகான. சுறுசுறுப்பான, பொறுப்பான, மரியாதையான பெண். “Nancy Clutter is always in a hurry, yet she always has time. And that’s one definition of a lady.” என்று ஒரு neighbour அவளைப் பற்றி சொலிகிறார். Kenyon கடைசி பையன். மொத்தத்தில் Clutter குடும்பம் அந்த ஊரின் உதாரணக்குடும்பம்.

இந்த நாவலில் மிக முக்கியமான விசயம் என்னவென்றால் சொல்லப்பட்டவிதம். The narration. ரொம்ப யதார்த்தமாக ஆனால் ஒரு சஸ்பென்ஸ் இருந்துகொண்டேயிருக்கக்கூடிய வகையில் இந்த நாவல் முழுவதையுமே அமைத்திருக்கிறார் Truman Capote. நாவல் ஆரம்பித்து கொஞ்ச பக்கங்களிலே நான்கு படுகொலைகள் நடந்துவிடுகின்றன. ஏன், சொல்லப்போனால், எனக்கு நாவல் படிக்க ஆரம்பிக்கும் முன்னரே தெரியும், இது நான்கு படுகொலைகளைப் பற்றியதுதான் என்பது. ஆனால் தெரிந்தும், எது என்னை நாவலின் கடைசிப்பக்கம் வரைக்கும் கொண்டுசென்றது? என்னை ஈர்த்தது எது? அது கொலைக்கான motive. அதைத் தேடித்தான் நான் பக்கங்கள் தோறும் விரைந்துகொண்டிருந்தேன்.

அதாவது Holcomb என்ற கிராமத்துக்கும், clutterக்கும் சிறிதும் சம்பந்தமில்லாத இரண்டு நபர்கள் (Perry, Dick), clutterஇன் வீட்டுக்குள் நடு இரவினில் புகுந்து, வீட்டிலிருந்த நான்கு பேரையும் (clutter, clutterஇன் மனைவி Bonie, Nancy and Kenyon) சுட்டுக் கொலைசெய்கின்றனர். ஆனால் அவர்கள் வீட்டில் இருந்த பல பொருட்கள் அப்படியே இருக்கின்றன. including bonie’s necklace. கொலை செய்யப்பட்டவர்களும் நன்றாக சௌகரியமாக படுக்கவைக்கப்பட்டு (கழுத்துக்கு தலையணை கொடுத்து! ஏதோ அவர்களுக்கு வலிக்கும் என்று உணர்ந்தவர்கள் போல!) கைகால் கட்டிப்போடப்பட்டு, சரியாக நெற்றிப்பொட்டில் சுடப்பட்டிருக்கின்றனர். கொலையைத் துப்பறியவரும் KBI (kansas’s beurau of investigation)ஐ சேர்ந்த Dewey என்பவரும் குழம்பிப்போகிறார். ஏன் கொலைசெய்யப்பட்டனர்? மேலும் clutter 80 centsக்கு கூட செக் -No Cash!- கொடுப்பவர் என்பதை அங்கிருக்கும் மக்கள் அனைவரும் அறிவர். அப்படியிருக்க பணத்தை தேடி அவர்கள் வந்திருக்கமாட்டார்கள் என்று திட்டவட்டமாக நம்புகிறது KBI. அவர்களுக்கு எந்த clueவும் கிடைக்கவில்லை. ஒன்றைத்தவிர. அது, கொலைசெய்யப்பட்டுக்கிடக்கும் பிரேதங்களைப் படம்பிடித்ததில் தற்செயலாக, ஒரு போட்டாவில் விழுந்திருக்கும், shoe impression. அப்படியே கொலைகாரர்கள் கிடைத்தாலும், அவர்கள் அந்த ஷ¥க்களோடே சுற்றிக்கொண்டு இருக்க வேண்டும், அப்படியிருந்தால் தான், அவர்களைக் கொலைகாரர்கள் என்று கோர்ட்டில் நிரூபிக்க முடியும். Proof. Sole Proof. (wow, முத்து கலக்கற!) கொலைகாரர்கள் அவ்வளவு முட்டாள்களா என்ன? ஷ¥வை தூக்கி வீசியிருக்கமாட்டார்களா என்ன?

Perryயும் Dickக்கும் கொலைசெய்துவிட்டு மெக்ஸிக்கோவிற்கு தப்பிச்செல்கின்றனர். ஆனால் சென்ற சிறிது நாட்களிலே – கையிலிருந்த பணமும், ஓட்டி வந்த காரை விற்ற பணமும் செலவழிந்த பிறகு – மெக்ஸிகோ திகட்டிவிட அவர்கள் மீண்டும் அமெரிக்கா (LasVegas, Nevada) வருகின்றனர். அங்கிருந்து புறப்படும் போது கையில் போதுமான பணம் -காரும் இல்லை- இல்லாததால், அவர்கள் பஸ்ஸில் பயணிக்கின்றனர். Perry ஒரு சிறந்த படிப்பாளி. நிறைய புத்தகங்கள் படிக்கின்றவன்.(நிறைய புத்தகங்கள் படிக்கறவயங்களையே நம்பக்கூடாதுப்பா!) படிப்பதோடு மட்டுமில்லாமல் கிடைக்கும் புதிய வார்த்தைகளை சேகரித்து, அதை எப்படியும் -தேவையே இல்லாத போது- உபயோகின்றவன். He is building his vocabulary. எனவே தான் வைத்திருந்த புத்தகங்களையும், தன்னுடைய ஷ¥வையும் (ஆதாரம்!) ஒரு பார்ஸலில் போட்டு Nevadaவுக்கு அனுப்பி வைக்கிறார்.(மாட்னடா நீ!)

இதற்கிடையே, ஜெயிலில் Dickக்குடன் ரூமை பகிர்ந்து கொண்ட ஒருவன், தற்செயலாக ரேடியோவில் Clutterவீட்டு கொலைகளைப் பற்றிய செய்தியைக் கேட்கிறான். அவனுக்கு உடனே விசயம் பிடிபடுகிறது. அதாவது, அவன், சிறுவயதில் clutterஇன் நிலத்தில் வேலை பார்த்தவன். clutter பெறும் பணக்காரர் என்பதை நன்கறிவான். அவன் ஒரு முறை எதேச்சையாக Dickக்கிடம் இதை சொல்லிக்கொண்டிருந்த போது, அன்றே clutterஐக் கொள்ளை அடிக்கப்போவதாக முடிவு செய்திருக்கிறான், Dick. அதை அவனிடமும் கூறியிருக்கிறான். மேலும், அவன், Dickக்கிடம் clutter வீட்டின் முழு வரைபடத்தையும் வரைந்து காண்பித்திருக்கிறான் -அவனுக்கு ஞாபகம் இருக்கும் அளவுக்கு. ஆனால், அவன் ஒரு தவறான விசயத்தை Dickஇடமும் Perryயிடமும் சொல்லியிருக்கிறான். அது Clutter வீட்டில் Safe இருக்கிறது என்பது! உண்மை என்னவென்றால், Clutter என்றுமே கையில் cash வைத்துக்கொள்வது கிடையாது, 20-30டாலர்கள் தவிர. ரேடியோவில் செய்தியைக் கேட்டவுடன், அவனுக்கு எல்லாமே விளங்குகிறது. KBI, துப்புக்கொடுப்பவர்களுக்கு கொடுப்பதாக அறிவித்திருந்த ஆயிரம் டாலர் பரிசுப்பணத்தை, நினைத்து அவன் approver ஆகிவிடுகிறான்.

மெக்ஸிக்கோவில் இருந்து திரும்பிய Perryயும் Dickம், தாங்கள் காட்டிக்கொடுக்கப்பட்டதை அறியாமல், போலி செக்குகளை –Dick, போலி செக்குகள் கொடுப்பதில் புலி!- இன்னும் கொடுத்துக்கொண்டு திரிகின்றனர். Perry போஸ்ட் ஆபிஸில் சென்று தனது பார்ஸலை எடுக்கும் போது கையும் கலவுமாக பிடிபடுகிறான். பார்ஸலில் ஷ¥ இருக்கிறது. ஆதாரம். இருவரும் குற்றத்தை ஒப்புக்கொல்கின்றனர். கொள்ளைஅடிக்கப்போனதாகவும், அங்கு கொள்ளைஅடிக்க ஏதும் இல்லை என்றபொழுது, அனைவரையும் சுட்டுவிட்டோம் என்றும் கூறுகின்றனர். Plan போட்டது Dick, ஆனால் சுட்டது Perry, என்று Dick சொல்கிறான். (அதுதான் உண்மையும் கூட) ஆனால் Perry இதை ஒத்துக்கொள்ள மறுக்கிறான். நான் தான் நான்கு நபர்களையும் சுட்டேன் என்றாலும், Dickக்கும் தண்டனை வேண்டும், அதனால் இரண்டு கொலைகளை Dick செய்தான், என்றும் இரண்டும் கொலைகளை நான் செய்தேன் என்றும் வாக்குமூலம் கொடுக்கிறான். இது Perryஇன் குணம். பொறாமை. தனக்கு இல்லையென்றால் யாருக்கும் இருக்கக்கூடாது. அவரிடம் இருக்கிறதா, தனக்கும் வேண்டும்!

இருவரின் குற்றங்களும் நிரூபிக்கப்பட்டு, இருவருக்கும் தூக்குதண்டனை வழங்கப்படுகிறது.

***

கொலை நடந்த மறுதினம் பேப்பரில் செய்தியாகப் பார்க்கும் Truman Capote இதில் ஆர்வமாகி ஒரு ஆர்டிக்கிள் எழுதுவதற்காக Holcombக்கு வருகிறார். அங்கு சென்று விசாரித்ததில், இந்த சம்பவத்தை, இதில் ஈடுபட்ட மனிதர்களின் வேறுபட்ட குணங்களை அறிந்த capote, இது ஒரு முழு புத்தகமாக எழுதுவதற்கு ஏற்றது என்று முடிவு செய்கிறார். இது வெறும் கொலையைப் பற்றிய சஸ்பென்ஸ் நாவல் இல்லை. இந்த கொலையில் சஸ்பென்ஸ் முக்கியமில்லை. மனிதர்களின் குணாதிசயங்கள், சஸ்பென்ஸை பின் சீட்டுக்கு தள்ளிவிட்டு, அவை முன் சீட்டுக்கு தாவி வருகின்றன. நாவல் நெடுகிலும் மனிதர்களின் குணங்கள் அலசப்படுகின்றன.

அன்று அவர்கள் செய்தது நான்கு கொலைகள். அதன் மூலம், அவர்களுக்கு கிடைத்த லாபம் எவ்வளவு தெரியுமா? 40-50 டாலர்கள். நான்கு உயிர்களின் மதிப்பு 50 டாலர்கள். ஏன் கொலை செய்தார்கள்? பிற்பாடு விசாரிப்பின் போது, Perry இவ்வாறு சொல்கிறான்:

“I don’t know why,” he said, as if holding it to the light, and angling it now here, now there. “I was sore at Dick. The tough brass boy. But it wasn’t Dick. Or the fear of being identified. I was willing to take that gamble. And it wasn’t because of anything the Clutters did. They never hurt me. Like other people. Like people have all my life. Maybe it’s just that the Clutters were the ones who had to pay for it.”

அவனுக்கே தெரியவில்லை, ஏன் கொலை செய்தோமென்று! Just an impulsive reaction. Clutterஐக் கொன்ற பிறகு, மத்த எல்லோரையும் கொல்லவேண்டியதாயிற்று.

Peryயின் அப்பா, ஒரு முறை அவனை நடுராத்திரியில் நடுங்கும் குளிரில் துப்பாக்கி முனையில் வீட்டை விட்டு துரத்துகிறார். அந்த நினைவு அவன் மனதில் ஆழமாக பதிந்துவிடுகிறது. சிறுவயதில் தாயும் தந்தையும் பிரிந்ததில், pery தாயுடன் இருக்கவேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்படுகிறான். அவள் ஒரு குடிகாரி. அவளால் தினமும் துன்புறுத்தபடுகிறான். பள்ளிக்கு சென்றால் இவனை (half-indian என்பதால்) மற்ற சிறுவர்கள் இவனை கேலி செய்கின்றனர். இதனால் ஒரு மனநோயாளியாக வளர்கிறான். எல்லோர் மீதும் பொறாமை கொள்கிறான். Capoteக்கு Pery மீது தான் பாசம். அல்லது பாசம் வைத்திருப்பதைப் போல நடிக்கிறார். (அது Capote திரைப்படத்தில் காட்டப்படுகிறது.)

Pery மன்நோயாளியாக வளர்ந்தததற்கு ஆயிரம் காரணம் இருக்கலாம் ஆனால் Nancy போன்ற சுறுசுறுப்பான அழகான அறிவான ஒரு பெண்னைக் கொல்வது என்பதை எந்த வகையில் ஒத்துக்கொள்வது?

அப்புறம் kenyon? அந்த சிறுவனின் முன்னால் அவனது தந்தையின் கழுத்தை அறுத்து கொலை செய்தது? தன் தந்தையின் இறுதிப் போராட்டத்தையும் உடலின் துள்ளலையும் பார்த்த அந்த சிறுவனின் கடைசி நிமிடம் எப்படி இருந்திருக்கும்? இந்த சத்தத்தையெல்லாம் கேட்டுக்கொண்டு தன் பிள்ளைகளின் கதி என்னவாயிருக்கும் என்று பதறிய அந்த தாயின் கடைசி நிமிடங்கள் எப்படி இருக்கும்?
எனவே தான் கடைசியில் தீர்ப்பு வழங்குவதற்கு முன்னர் ஜூரியிடம் ஜட்ஜ் இவ்வாறு சொல்கிறார்::

“What are you going to do? What are you going to do with these men that bind a man hand and foot and cut his throat and blow out his brains? Give them the minimum penalty? Yes, and that’s only one of four counts. What about Kenyon Clutter, a young boy with his whole life before him, tied helplessly in sight of his father’s death struggle. Or young Nancy Clutter, hearing the gunshots and knowing her time was next. Nancy, begging for her life: ‘Don’t. Oh, please don’t. Please. Please.’ What agony! What unspeakable torture! And there remains the mother, bound and gagged and having to listen as her husband, her beloved children died one by one. Listen until at last the killers, these defendants before you, entered her room, focused a flashlight in her eyes, and let the blast of a shotgun end the existence of an entire household.”
Pausing, Green gingerly touched a boil on the back of his neck, a mature inflammation that seemed, like its angry wearer, about to burst.-”So, gentlemen, what are you going to do? Give them the minimum? Send them back to the penitentiary, and take the chance of their escaping or being paroled? The next time they go slaughtering it may be your family. I say to you,” he solemnly said, staring at the panel in a manner that encompassed and challenged them all, “some of our enormous crimes only happen because once upon a time a pack of chicken-hearted jurors refused to do their duty. Now, gentlemen, I leave it to you and your consciences.”

Peryயும் Dickக்கும் தூக்குதண்டனைக்கு காத்திருக்கும் போது அங்கே Andy என்றொரு பதின்மவயது சிறுவன் அழைத்துவரப்படுகிறான். அவன் அவனுடைய அப்பா அம்மா அக்கா எல்லோரையும் எந்த குற்ற உணர்ச்சியும் இல்லாமல் பச்சாதாபமும் இல்லாமல் சுட்டுக்கொன்றவன். ஏன் என்று அவனுக்கு தெரியவில்லை. ஏன் கொன்றான்? அவனுக்கு பெரிய gangsterஆக வேண்டும் என்ற எண்ணம் உண்டாம்.

Dick ஒருமுறை Andy பற்றி சொல்லும் போது இவ்வாறு சொல்கிறான்:
“I really liked Andy. He was a nut-not a real nut, like they kept hollering; but, you know, just goofy. He was always talking about breaking out of here and making his living as a hired gun. He liked to imagine himself roaming around Chicago or Los Angeles with a machine gun inside a violin case. Cooling guys. Said he’d charge a thousand bucks per stiff.”

சமுதாயம் இவர்களைப் பொறுப்பில்லாமல் நடத்துகிறதா? அவனது குடும்பம் அவனைக் சரிவர கவனிக்க வில்லையா? அல்லது மனிதர்கள் குற்றவாளிகளாகவேதான் பிறக்கிறார்களா என்ன? Pery வளர்ந்த விதம் சரியில்லை என்று ஒத்துக்கொள்ளலாம். ஆனால் Dick? Dick ஒரு பாசமான குடும்பத்தை சேர்ந்தவனே. ஒழுங்காக வளர்ந்தவனே. ஆனால் அவன் மாறியதற்கு காரணம் பணத்தாசை. ஆடம்பரம். ஆடம்பரத்தால் போலி செக் கொடுக்க ஆரம்பித்தான். ஆடம்பரம் என்பது புலி வாலைப் பிடித்த கதைதான். செக் மோசடிக்கு உள்ளே சென்றவன், நான்கு நபர்களை கொலைசெய்யும் தீட்டம் தீட்டி, (ஆனால் அவன் ஒருவரைக்கூட கொல்லவில்லை) தூக்குதண்டனைக் கைதியாகி, கடைசியில் தூக்கிலிடப்பட்டு இறந்தான். இதற்கு சமுதாயம் எப்படி பொறுப்பாகும்? சமுதாயம் அவனை ஆடம்பரமாக வாழவேண்டும் என்று வற்புறுத்தியதா என்ன? ஆனால் அவன் மாறியதற்கு, நடந்த ஒரு ஆக்சிடென்ட் காரணமாக இருக்கலாம் என்று விவாதிக்கப்படுகிறது. (Richard Hickock தான் Dick.)

Dickஐப் பற்றிய Testification:
“Richard Hickock is above average in intelligence, grasps new ideas easily and has a wide fund of information. He is alert to what is happening around him, and he shows no sign of mental confusion or disorientation. His thinking is well organized and logical and he seems to be in good contact with reality. Although I did not find the usual signs of organic brain damage-memory loss, concrete concept formation, intellectual deterioration-this cannot be completely ruled out. He had a serious head injury with concussion and several hours of unconsciousness in 1950-this was verified by me by checking hospital records. He says he has had blackout spells, periods of amnesia, and headaches ever since that time, and a major portion of his antisocial behavior has occurred since that time. He has never had the medical tests which would definitely prove or disprove the existence of residual brain damage. Definitive medical tests are indicated before a complete evaluation can be said to existஸ Hickock does show signs of emotional abnormality. That he knew what he was doing and still went ahead with it is possibly the most clear-cut demonstration of this fact. He is a person who is impulsive in action, likely to do things without thought of consequences or future discomfort to himself or to others. He does not seem to be capable of learning from experience, and he shows an unusual pattern of intermittent periods of productive activity followed by patently irresponsible actions. He cannot tolerate feelings of frustration as a more normal person can, and he is poorly able to rid himself of those feelings except through antisocial activityஸ His self-esteem is very low, and he secretly feels inferior to others and sexually inadequate. These feelings seem to be overcompensated for by dreams of being rich and powerful, a tendency to brag about his exploits, spending sprees when he has money, and dissatisfaction with only the normal slow advancement he could expect from his jobஸ He is uncomfortable in his relationships to other people, and has a pathological inability to form and hold enduring personal attachments. Although he professes usual moral standards he seems obviously uninfluenced by them in his actions. In summary, he shows fairly typical characteristics of what would psychiatrically be called a severe character disorder. It is important that steps be taken to rule out the possibility of organic brain damage, since, if present, it might have substantially influenced his behavior during the past several years and at the time of the crime.”

இது Peryஐப் பற்றிய Testification.
: “Perry Smith shows definite signs of severe mental illness. His childhood, related to me and verified by portions of the prison records, was marked by brutality and lack of concern on the part of both parents. He seems to have grown up without direction, without love, and without ever having absorbed any fixed sense of moral values.He is oriented, hyper alert to things going on about him, and shows no sign of confusion. He is above average in intelligence, and has a good range of information considering his poor educational backgroundஸ Two features in his personality make-up stand out as particularly pathological. The first is his ‘paranoid’ orientation toward the world. He is suspicious and distrustful of others, tends to feel that others discriminate against him, and feels that others are unfair to him and do not understand him. He is overly sensitive to criticisms that others make of him, and cannot tolerate being made fun of. He is quick to sense slight or insult in things others say, and frequently may misinterpret well-meant communications. He feels he has great need of friendship and understanding, but he is reluctant to confide in others, and when he does, expects to be misunderstood or even betrayed. In evaluating the intentions and feelings of others, his ability to separate the real situation from his own mental projections is very poor. He not infrequently groups all people together as being hypocritical, hostile, and deserving of whatever he is able to do to them. Akin to this first trait is the second, an ever-present, poorly controlled rage-easily triggered by any feeling of being tricked, slighted, or labeled inferior by others. For the most part, his rages in the, past have been directed at authority figures-father, brother, Army sergeant, state parole officer-and have led to violent assaultive behavior on several occasions. Both he and his acquaintances have been aware of these rages, which he says ‘mount up’ in him, and of the poor control he has over them. When turned toward himself his anger has precipitated ideas of suicide. The inappropriate force of his anger and lack of ability to control or channel it reflect a primary weakness of personality structureஸ. In addition to these traits, the subject shows mild early signs of a disorder of his thought processes. He has poor ability to organize his thinking, he seems unable to scan or summarize his thought, becoming involved and sometimes lost in detail, and some of his thinking reflects a ‘magical’ quality, a disregard of reality. He has had few close emotional relationships with other people, and these have not been able to stand small crises. He has little feeling for others outside a very small circle of friends, and attaches little real value to human life. This emotional detachment and blandness in certain areas is other evidence of his mental abnormality. More extensive evaluation would be necessary to make an exact psychiatric diagnosis, but his present personality structure is very nearly that of a paranoid schizophrenic reaction.

ஆனால் அன்றைய kansas கோர்ட்டில் சட்டதிட்டங்கள் வேறு மாதிரியாக இருந்தது. விட்னஸ், “ஆம்”, “இல்லை” என்ற பதில்களை மட்டுமே கூறலாம். விளக்கம் சொல்லமுடியாது. அதனால் இருவரையும் test செய்த டாக்டர், இருவரும், மனநோயாளிகள் இல்லை (மேலோட்டமாகப் பார்க்கும் போது!) என்றே testify செய்திருக்கிறார்.

(Dick மற்றும் Perryஐப் பற்றி officialஆக அந்த டாக்டர் எந்த சான்றும் வழங்கவில்லை என்றாலும், விளக்கம் கேட்கப்படிருந்தால், அவர் மேலே சொன்னமாதிரி தான் சொல்லியிருப்பார்!)

Capoteக்கு ஒரு எண்ணம், நாவல் தோறும் இருக்கிறது. அது : கொலையாளிகளுக்கு தீர்ப்பு முறையாக வழங்கப்படவில்லை. அவர்கள் தரப்பு வாதங்களை யாரும் சரிவரக்கேட்கவில்லை. கோர்ட்டில் அவர்களின் குரல்கள் சரியாக ஒலிக்கவில்லை என்பதே. ஆனால் கொலைசெய்யப்பட்ட அந்த நால்வரின் குரல்கள் கொலையாளிகளின் மண்டையில் உரைத்ததா? Nancy “No! No! Please! Please!” என்று கெஞ்சிக் கூத்தாடினாளே? அது அவர்களின் காதுகளில் விழவில்லையா?

இறுதியாக Dick தூக்குமேடைக்கு செல்லும் முன்னர் இவ்வாறு கூறுகிறான்:
Hickock nodded. “I just want to say I hold no hard feelings. You people are sending me to a better world than this ever was”; then, as if to emphasize the point, he shook hands with the four men mainly responsible for his capture and conviction, all of whom had requested permission to attend the executions: K.B.I. Agents Roy Church, Clarence Duntz, Harold Nye, and Dewey himself. “Nice to see you,” Hickock said with his most charming smile; it was as if he were greeting guests at his own funeral

வேறொரு கொலைவழக்கில் -தொடர் கொலைகள்- கைது செய்யப்பட்ட Latham, இவ்வாறு சொல்கிறான்:
the world was hateful, and everybody in it would be better off dead. “It’s a rotten world,” Latham said. “There’s no answer to it but meanness. That’s all anybody understands-meanness. Burn down the man’s barn-he’ll understand that. Poison his dog. Kill him.” Ronnie said Latham was “one hundred percent correct,” adding, “Anyway, anybody you kill, you’re doing them a favor.”

தவறுகள் –எது தவறு? எது சரி? யாருக்கு தெரியும்? என்று வியாக்கியானம் பேசுபவர்களுக்கு: விதிக்கப்பட்ட விதிமுறைகளை மீறுவது தவறு! கடவுள் விதித்த விதிகளையும், மனிதன் விதித்த விதிகளையும்– செய்யும் அனைவரும் தாங்கள் நல்லவர்களே என்று தான் நினைத்துக்கொண்டிருக்கின்றனர். தங்களைச் சுற்றிலும் இருக்கும் மக்கள் யாவரும் தங்களுக்கு எதிராக இருப்பதாக அவர்கள் கற்பனை செய்துகொள்கிறார்கள். ஆனால் பல சமயங்களில் இந்த கற்பனை நிஜமாகவே ஆகிவிடுவதுதான் துரதிர்ஷ்டம்.

***

Capote படம் நன்றாகவே இருந்தது. கொஞ்சம் slow. Capoteஐப் பற்றி அறிந்து கொள்வதற்கு பெரிதும் உதவியது இந்தப்படம். Capoteஐப் பற்றி அறிந்து கொள்வதற்கு என்ன இருக்கிறது? அவர் ஒரு எழுத்தாளர் என்பதை விட எழுத்தாள-நடிகர் என்று சொன்னால் மிகையாகாது. அல்லது A writer full of lies. Of course, A writer has to lie, isnt it? கதையில் பொய் சொல்லலாம். கதை என்றாலே பொய் தானே? ஆனால் நிஜ வாழ்க்கையில்?

Pery மீது அவருக்கு முதலிலிருந்தே ஒரு kindof attraction இருந்துவந்திருக்கிறது என்பதை மறுக்கமுடியாது.சொல்லப்போனால், Capoteயே ஒரு open Gayதான். In Cold Blood புத்தகத்தை முக்கால் வாசி முடித்துவிட்ட நிலையில் ஒரு நாள் Peryஐ சந்திக்கவருகிறார் Capote. புத்தகம் எழுத ஆரம்பிக்கும் முன்னரே, புத்தகத்துக்கு பெயரும் வைத்துவிட்டார். (பெயர் வைத்ததோடு மட்டுமில்லாது, இந்த நூற்றாண்டின் மிகச்சிறந்த புத்தகங்களில் ஒன்றாக இந்த புத்தகம் பின்னாளில் அறியப்படும் என்று தன் நண்பர்களிடம் சொல்கிறார்!!) ஆனால், Pery, புத்தகத்துக்கு என்ன பெயர் வைக்கப்போகிறீர்கள் என்று அவரிடம் கேட்கும்போது, “இன்னும் ஒரு வார்த்தை கூட எழுதவில்லை. புத்தகத்துக்கு பெயரும் வைக்கவில்லை” என்று அப்பட்டமாக பொய் சொல்கிறார். Pery, Capoteஐ நம்பினானா என்பது தெரியவில்லை. நம்பியிருக்கவேண்டும். இல்லையேல், மாதக்கணக்கில் ஜெயிலில் உண்ணாவிரதம் இருக்கும் Perry, Capote வந்து உணவு கொடுத்தவுடன் ஏன் சாப்பிடவேண்டும்? (படத்தில் capoteதான் Perryயின் உண்ணாவிரத்தை முடித்துவைத்தார் என்று காட்டப்படுகிறது. ஆனால் நாவலில், capote, Pery எப்பொழுதும் கனவுகாணும் மஞ்சள் நிறப்பறவை தான், அவனின் உண்னாவிரத்தை முடித்துவைத்தது, என்று எழுதுகிறார். Capoteதான் அந்த பறவையோ?)

Capote புத்தகத்தை கிட்டத்தட்ட எழுதி முடித்துவிடுகிறார். இன்னும் க்ளைமேக்ஸ் மட்டும் தான் பாக்கி. Capote, நேரடியாக Peryயிடம் அன்று இரவு என்ன நடந்தது என்று கேட்டறிய விரும்புகிறார். முதலில் அவன் சொல்ல மறுத்து பிறகு எல்லாவற்றையும் capoteயிடம் சொல்கிறான். எல்லாம் எழுதியாச்சு. இன்னும் தூக்கு தண்டனைதான் பாக்கி. கொலையாளிகளுக்கு தூக்கு தண்டனை நிரைவேற்றப்பட்டுவிட்டால், புத்தகத்தை publish செய்துவிடலாம். ஆனால், விதி விளையாடியது! Perry மற்றும் Dickக்கு தூக்குதண்டனையை நிறைவேற்ற கோர்ட் தற்காலிகமாக தடை விதித்திருந்தது. Capote நாவலை எழுதிமுடிக்க முடியவில்லை. ஏற்கனவே மூன்று ஆண்டுகள் இந்த ஒற்றை நாவலுக்காக செலவழித்திருக்கும் Capote, மானசீகமாக Perryக்கு தூக்குதண்டனை விரைவில் நிறைவேற்றப்படவேண்டும் என்று நினைக்கிறார். விரும்புகிறார். அவரது தோழியிடமும் –Harper Lee, To Kill A Mocking Birdஐ எழுதியவர்!- இதைச் சொல்கிறார். Perry உதவி கேட்டு எழுதும் கடிதங்களுக்கு பதில் எழுத மறுக்கிறார் capote. ஒரு வழியாக தடை விலக்கப்பட்டு, கொலையாளிகளுக்கு தூக்குதண்டனைக்கு நாள் குறிக்கப்படுகிறது. கடைசியில், அவர்களுக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்படும் நாளன்று Capote, அவர்களைச் சந்திக்கிறார். எந்த முகத்தோடு? (அதற்காக வாடகைக்காக முகம் வாங்கமுடியும்?!) “I am sorry! I have done all I could!” என்று அழுகிறார் Capote. உண்மையாகவே அழுகிறார். தன்னால் எந்த உதவியும் செய்யமுடியாமல் போனதை நினைத்து அழுதார். தன் உதவி தனக்கே பாதகமாக -நாவலை முடித்து வெளியிட முடியாது!- அமையும் என்று நினைத்து இதுநாள் வரையில் அமைதியாக இருந்துவிட்டார். ஆனால் அந்த குற்ற உணர்ச்சி, இப்பொழுது கன்ணீராக வெளிவருகிறது. Perry “i know” என்கிறான். (எதை அவன் அறிவான், என்பதை அவன் மட்டுமே அறிவான்!)

இந்த நாவலுக்கு அப்புறம் வேறு எந்த நாவலையும் Capote எழுதி முடிக்கவில்லை என்றும், கடைசியில் குடிப்பழக்கத்தில் மூழ்கி இறந்ததாகவும், படத்தின் முடிவில் காட்டப்படுகிறது.
***

You do, don’t you?

He had met her a year ago in Boston, where she had lived with her widowed
mother. He had found Catherine homely and dull, on that first meeting, with
nothing to her credit but her lovely smile, not a sufficient reason ever to see
her again. He had telephoned her the next evening. Of the countless girls he had
known in his student years she was the only one with whom he had never
progressed beyond a few kisses.

He had had many violent loves, when he swore he
could not live without this girl or that; he forgot Catherine for weeks at a
time and she never reminded him. He had always come back to her, suddenly,
inexplicably, as he did tonight.

Her mother, a gentle little schoolteacher, had died last winter. Catherine had
gone to live with an uncle in New York. Keating had answered some of her letters
immediately, others–months later. She had always replied at once, and never
written during his long silences, waiting patiently. He had felt, when he
thought of her, that nothing would ever replace her. Then, in New York, within
reach of a bus or a telephone, he had forgotten her again for a month.

He never thought, as he hurried to her now, that he should have announced his
visit. He never wondered whether he would find her at home. He had always come
back like this and she had always been there. She was there again tonight.
She opened the door for him, on the top floor of a shabby, pretentious
brownstone house. “Hello, Peter,” she said, as if she had seen him yesterday.

“God, I’ve missed you!” he said, and knew that he had, every day since he’d seen
her last and most of all, perhaps, on the days when he had not thought of her.

“You haven’t changed much,” she said. “You look a little thinner. It’s becoming.
You’ll be very attractive when you’re fifty, Peter.”

“That’s not very complimentary–by implication.”

“Why? Oh, you mean I think you’re not attractive now? Oh, but you are.”

“You shouldn’t say that right out to me like that.”

“Why not? You know you are. But I’ve been thinking of what you’ll look like at
fifty. You’ll have gray temples and you’ll wear a gray suit–I saw one in a
window last week and I thought that would be the one–and you’ll be a very great
architect.”

“You really think so?”

“Why, yes.” She was not flattering him. She did not seem to realize that it
could be flattery. She was merely stating a fact, too certain to need emphasis.
He waited for the inevitable questions. But instead, they were talking suddenly
of their old Stanton days together, and he was laughing, holding her across his
knees, her thin shoulders leaning against the circle of his arm, her eyes soft,
contented. He was speaking of their old bathing suits, of the runs in her
stockings, of their favorite ice-cream parlor in Stanton, where they had spent
so many summer evenings together–and he was thinking dimly that it made no
sense at all; he had more pertinent things to tell and to ask her; people did
not talk like that when they hadn’t seen each other for months. But it seemed
quite normal to her; she did not appear to know that they had been parted.

He was first to ask finally:
“Did you get my wire?”
“Oh, yes. Thanks.”
“Don’t you want to know how I’m getting along in the city?”
“Sure. How are you getting along in the city?”
“Look here, you’re not terribly interested.”
“Oh, but I am! I want to know everything about you.”
“Why don’t you ask?”
“You’ll tell me when you want to.”
“It doesn’t matter much to you, does it?”
“What?”
“What I’ve been doing.”
“Oh…Yes, it does, Peter. No, not too much.”
“That’s sweet of you!”
“But, you see, it’s not what you do that matters really. It’s only you.”
“Me what?”
“Just you here. Or you in the city. Or you somewhere in the world. I don’t know.
Just that.”
“You know, you’re a fool, Katie. Your technique is something awful.”
“My what?”

“Your technique. You can’t tell a man so shamelessly, like that, that you’re
practically crazy about him.”

“But I am.”
“But you can’t say so. Men won’t care for you.”
“But I don’t want men to care for me.”
“You want me to, don’t you?”
But you do, don’t you?”

“I do,” he said, his arms tightening about her. “Damnably. I’m a bigger fool
than you are.”
“Well, then it’s perfectly all right,” she said, her fingers in his hair, “isn’t
it?”

He left her two hours later, and he walked away feeling light, clean, happy, his
fears forgotten. He thought only that he had promised to come again tomorrow and that it was an unbearably long time to wait.She stood at the door, after he had gone, her hand on the knob he had touched,and she thought that he might come tomorrow–or three months later.

– An excerpt from The Fountain Head – By Ayn Rand

The Testament Of Gideon Mack and Making of ஹலோ அஸ்விக்குட்டி

என் நண்பர் ஒருவரிடம் “உங்களுக்கு பேய்கள் மீது நம்பிக்கை இருக்கிறதா?” என்று கேட்டேன். என்னை ஒரு முறை ஆழமாக பார்த்த அவர், சட்டென “இல்லை” என்றார். “ஏன்?” என்றேன். அதற்கு அவர் “இது வரை நான் பேய்களைப் பார்த்ததில்லை. மற்றவர்கள் சொல்வார்களே அது போல உணர்ந்தது கூட இல்லை. சில கதைகளை மட்டுமே கேட்டிருக்கிறேன். அப்படியிருக்க நான் பேய்களை எப்படி நம்புவது?” என்றார். “உங்களுக்கு கடவுள் நம்பிக்கை இருக்கிறதா?” என்றேன் தொடர்ந்து. அவர் சிரித்து விட்டார். “ம்ம்ம்..பேஷா இருக்கே!” என்றார். “இந்த உலகத்தில் எந்த ஒரு விஷயத்துக்கும் எதிர்மறையான விஷயம் ஒன்று இருக்கிறதல்லவா? பகல் என்றால் இரவு. நல்லவன் நான், என்றால் கெட்டவன் நீங்கள்(!). அதே போல ஒரு நல்ல சக்திக்கு எதிராக ஒரு தீயசக்தி இருக்கவேண்டுமே. அப்படியென்றால், நீங்கள் கடவுளை நம்புகிறீர்கள் என்றால், பேய்களையும் நம்பித்தானே ஆகவேண்டும்” என்றேன்.

கொஞ்ச நேரம் யோசித்த அவர், “முத்து வாட் டு யூ வான்ட்?” என்றார். “உங்களுக்கு பேய்கள் நம்பிக்கை இருக்கிறதா இல்லையா?” “எனக்கு பேய் படங்கள் பார்க்க ரொம்பவும் பிடிக்கும். ஆனால் படம் பார்த்து முடித்த பிறகு நிறைய பயமாக இருக்கும். ஆனாலும் மறுமுறையும் பேய்ப்படங்கள் பார்ப்பேன். மறுமுறையும் பயப்படுவேன். கடவுள் எனக்கு மன ஆறுதலைத் தருகிறார். தன்னம்பிக்கையைத் தருகிறார். எனவே நான் அவரை நம்புகிறேன். பேய்கள் எனக்கு அச்சத்தைத் தருகின்றன. எனவே நான் அவைகளை நம்பவில்லை என்று எனக்கு நானே சொல்லிக்கொள்கிறேன். என் மனநிம்மதிக்கு கேடு விளைவிக்கும் ஒன்றை ஏன் நான் வலுக்கட்டாயமாக நம்பவேண்டும்?” என்றார்.

***

The Testament Of GideonMack” என்றொரு புத்தகம். போன வருடம் புக்கர் பரிசுக்கு (long list) நாமினேட் செய்யப்பட்டது இது. கதை, கிடியன் என்ற பாதிரியாரைப் (Minister Of A Church ministerக்கு தமிழில் வார்த்தை தெரியவில்லை, எனவே பாதிரியார் என்றே சொல்லுகிறேன்!) பற்றியது. நாவல் நம்பிக்கை சார்ந்த ஒன்று. மனிதனின் குணங்களை அலசுகிறது. சம்பவங்களைச் சொல்கிறது. பிற வாதங்களை முன் வைக்கிறது. நம்மை குழப்புகிறது. பிறகு தீர்வை நம்மிடம் விட்டுவிடுகிறது. (அட போங்கப்பா! நாவல் படிச்சப்புறம் ஒரு முடிவு கெடைக்கலேன்னா என்னா அர்த்தம்?ன்னு கேக்கறவங்களுக்கு கண்டிப்பா இந்த நாவல் சரிப்படாது)

மனிதர்களின் குணாதிசயங்கள் மிகவும் விந்தையானவை(ஆமா இவரு ரொம்ப கண்டாரு!). ஒரு விசயத்தை நாம் பிடித்துக்கொள்ள தொடங்கிவிட்டோமேயானால், நமது மனம் பிறர் என்ன சொன்னாலும் கண்டுகொள்வதில்லை. நமக்கு அது உண்மையாகப் படுகிறது. மனம் ஆராய மறுக்கிறது. (சிவாஜி படம் அவ்ளோ un-logical இருந்தப்பவும் கைத்தட்டி பேப்பரகிழிச்சு எறிஞ்சு கத்தினப்பவே எனக்கு தெரியும்டா!) கண்ணால் பார்ப்பது பொய் என்று சும்மாவா சொன்னார்கள்.

***

நாவல் ஒரு புத்தக வெளியீட்டாளரிடமிருந்த ஆரம்பிக்கிறது. அந்த புத்தக வெளியீட்டாளருக்கு ஒரு சுவாரஸ்யமான கையெழுத்து பிரதி கிடைக்கிறது. அந்த பக்கங்கள் ஒரு மனிதனின் வாழ்க்கை வரலாறு போல இருக்கிறது. அந்த மனிதன் தன் வரலாற்றை தானே சொல்கிறான். புத்தக வெளியீட்டாளரின் நண்பர் ஒரு பத்திரிக்கையாளர்(freelance). அவர் தான் இந்த கைஎழுத்து பிரதியை தனது நண்பரான புத்தக வெளியீட்டாளருக்கு கொடுக்கிறார். அவர் இந்த கைப்பிரதியை புத்தகமாக வெளியிட வேண்டும் என்று வெளியீட்டாளரிடம் கோரிக்கை வைக்கிறார்.

நாவலில் அந்த கைப்பிரதி அப்படியே தரப்பட்டிருக்கிறது. அதை எழுதியவர் பெயர் கிடியன். கிடியனே கதை சொல்கிறார். (self-narrative).

***

கிடியன் ஒரு பாதிரியார். மிகவும் கண்டிப்பான சூழ்நிலையில் வளர்ந்தவர். அவருடைய தந்தையுமே ஒரு பாதிரியார் தான். கிடியன் வளரும் போது அவருக்கு பாதிரியார் வேலை பிடிக்கவில்லை. ஏனென்றால் கிடியனுக்கு கடவுளின் மேல் கொஞ்சம் கூட நம்பிக்கையில்லை. ஆனால் வளர்ந்து வேலை தேடும் போது வேறு வழியில்லாமல் (அல்லது பிடித்தே!) பாதிரியார் ஆவதற்கு ஒத்துக்கொள்கிறார். கிடியனுக்கு வேலை பிடித்திருக்கிறதா, பிடிக்கவில்லையா என்பது வேறு குழப்பம்.

காலேஜில் படிக்கும் போது ஒரு பெண்ணைக் காதலிக்கிறார். ஆனால் அவள் தன்னுடைய நண்பனைக் காதலிக்கிறாள் என்று தெரிந்து, வேறு வழியில்லாமல் அவளுடைய தோழியை கிடியன் காதலிக்கிறார்(தலை சுத்துதா, மறுபடியும் ஒரு முறை இந்த வரியைப் படிங்க!). ஆனாலும் அவள் மீது காதல் குறையவேயில்லை. நண்பனும் இவர் காதலித்த பெண்ணும் மணமுடித்துக்கொள்கிறார்கள். இவரும், இவர் காதலித்த பெண்ணின் தோழியும் மணமுடிக்கின்றனர். இருவர் குடும்பமும் ஒரே ஊரில் வசிக்கிறது. (ரொம்ப சிக்கலான விசயத்தை எவ்ளோ சிம்பிளா விளக்கிருக்கான் முத்து. யு ஆர் க்ரேட் டா!)

கிடியனுக்கு காலையில் எழுந்து அல்லது வேலை முடித்து வந்து ஜாக்கிங் செய்வது வழக்கம்(என்ன மாதிரி ரொம்ப சுறுசுறுப்பு. Fitness-Freak!). ஜாக்கிங் பயிற்சியால் மாரத்தான் ஓட்டங்களுக்கும் இவர் செல்வார். அவ்வாறு மாரத்தான் ஓட்டங்களுக்கு செல்லும் போது ,ஸ்பான்ஸர்ஸ் கொடுக்கும் பணத்தை வைத்து நிறைய நல்ல விசயங்களை அந்த ஊருக்கு செய்து வருகிறார். மேலும் சில ரிசர்ச்சுக்கு பணம் வசூலித்துக் கொடுக்கிறார். கிடியனும் அவரது மனைவியும் வாழ்க்கையை ரசிக்கத்துவங்குகிறார்கள். ஒரு நாள் கிடியனின் மனைவி ஒரு விபத்தில் பலியாகிறார். வாழ்க்கையை ரசிக்கத் தொடங்கும் போது நேர்ந்த இந்த மிகப்பெரிய இழப்பை கிடியனால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. இடிந்து போகிறார். ஆனால் வாழ்க்கை ஓட வேண்டுமே? நம் காலம் முடியும் வரையில் வாழ்ந்துதானே ஆகவேண்டும்? நம் காலத்தை முடித்துக்கொள்ள நம்மால் முடிந்தாலும், நம்மால் முடியாது என்பது தானே உண்மை!

வாழ்க்கை அவருக்கு ஜாக்கிங்காக ஓடுகிறது. ஜாக்கிங் செல்வதை அவர் வெகுவாக நேசிக்கத்தொடங்குகிறார். அவர் ஜாக்கிங் செல்லும் பாதை நல்ல பச்சை பசுமையாக இருக்கும் (scotland! என்ன Scotlandன்னு ஒரு ஆச்சரியக்குறி? போயிருக்கியா அங்க?). சில இடங்களில் மரங்கள் அடர்ந்த காட்டுப் பகுதி போல இருக்கும். அவருடைய நண்பனின் வீடும் அந்த வழியிலே இருக்கிறது. ஒரு நாள் கிடியன் ஜாக்கிங் செல்லும் போது ஒரு கல்தூணைப் (ஸ்தூபி போன்ற ஒன்று!) பார்க்கிறார். அவ்வாறான கல்தூண்கள் அந்த ஊரிலே கொஞ்சம் தான் இருக்கின்றன. இம்மாதிரியான தூணை அவர் இந்த இடத்தில் இதற்கு முன்னர் (நேற்று கூட) பார்க்கவில்லை. இரவோடு இரவாகவும் இந்ததூணை யாராவது கொண்டுவந்து வைத்திருக்க வாய்ப்பில்லை. அருகில் சென்று தொட்டுப்பார்க்கிறார். அவரால் நம்பமுடியவில்லை. ஜாக்கிங்கிலிருந்து திரும்பிய கிடியன் தன் நண்பனிடமும் நண்பனின் மனைவியிடமும் சொல்கிறார் அவர்கள் நம்புவதற்கு மறுக்கின்றனர். கடைசியில் நண்பனின் மனைவி மட்டும் ஒரு நாள் இருவரும் சென்று பார்ப்போம் என்று சொல்கிறாள். (ஆனால் கடைசி வரைக்கும் அவளோ வேறுயாரோ அந்த தூணைப் பார்க்கவில்லை!)

(கிடியனும் அவருடைய நண்பனின் மனைவியும் ஒரு உணர்ச்சிவசப்பட்ட சூழ்நிலையில் உறவு கொள்கின்றனர். அவள் இது தான் முதலும் கடைசியும் என்று திட்டவட்டமாக சொல்லிவிடுகிறாள். அந்த சம்பவத்துக்கு அப்புறம் அவள் அது போல ஒரு நிகழ்வு நடக்கவேயில்லை என்பது போல் தான் இருக்கிறாள். கிடியனுக்கே இதில் சந்தேகம் வந்துவிடுகிறது. அந்த நிகழ்வு ஒரு கனவோ என்று நினைக்கத்தொடங்குகிறார். ஏனென்றால், அவர்கள் இருவரும் தனியே இருப்பதற்கு நிறைய சந்தர்ப்பங்கள் பின்னர் கிடைத்தும், அவள் அந்த சம்பவத்தைப் பற்றி ஏதும் பேசியதும் இல்லை, அட்லீஸ்ட் ஒரு சமிக்ஞை கூட காட்டியதில்லை)

இவ்வாறான சூழ்நிலையில் ஒரு நாள் தன் தோழியின் நாய் ஒன்றைக் காப்பாற்ற முயன்று ஒரு ஆற்றுக்குள் விழுந்து விடுகிறார் கிடியன்(இதுக்கு தான் தோழிகள் முன்னாடி ஓவரா சீன் போடக்கூடதுன்றது!).அந்த ஆறு மிகவும் பெரியது ஆழமானது. அந்த இடத்தைவிட்டு கொஞ்சம் தூரம் சென்றதும் அந்த ஆறு பூமிக்கு அடியில் ஓடும். விழுந்த கிடியன் மூன்று நாட்கள் கழித்து ஆற்றில் கரை ஒதுங்குகிறார். மூன்று நாட்கள்! அவர் மூன்று நாட்கள் பூமிக்கு அடியில் இருந்திருக்கிறார் (மீன்கள் மட்டுமே உயிர்வாழக்கூடிய இடம்!), உணவில்லாமல். தலையிலும் காலிலும் பலத்த அடிகளுடன் இருக்கிறார். ஆனால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மிக விரைவில் தேறுகிறார். மருத்துவர்கள் ஆச்சரியமாகப் பார்க்கின்றனர். மெடிக்கல் மிராக்கிள் என்கின்றனர். (ஏம்ப்பா தமிழ் படங்கள்ல இந்த டயலாக் வந்தா மட்டும் சிரிக்கறீங்க?)

கிடியன் பூமிக்கு அடியில் இருந்த போது, அங்கே வாழ்ந்துகொண்டிருந்த(!) ஒரு மனிதன் தான் தன்னைக் காப்பாற்றி உணவளித்தான் என்கிறார். அந்த மனிதன் வேறு யாரும் இல்லை, அவன் தான் சாத்தான் என்று குண்டைத்தூக்கிப் போடுகிறார். யாவரும் நம்ப மறுக்கின்றனர். விழுந்ததில் புத்தி பிசகிவிட்டது என்கின்றனர். ஆனால் நம்மைப் பொறுத்தவரைக்கும் கிடியான் நன்றாகவே, தெளிவான மனதுடனே இருப்பதாகப் படுகிறது. கிடியான் தான் சாத்தனை சந்தித்ததை திட்டவட்டமாக நம்புகிறார். சாத்தனுடன் நடந்த உரையாடல்கள் அவருக்கு சட்டென நினைவுக்கு வருகிறது. தன் நண்பனை அழைத்து அவன் முன்னாலே (கிட்டத்தட்ட வாக்குமூலம் போல்! வாக்குமூலத்தின் போது தான் போதையில் இருக்கவில்லை என்பதற்கு சாட்சி அந்த நண்பர்!) பதிந்து வைத்துக்கொள்கிறார். பிறகு அத்தனையையும் தன் கையாலே எழுதுகிறார்.

பிறகு தலைவறைவாகிறார். ஊரை விட்டு வெளியேறி ஒரு விடுதியில் தங்கிவிட்டு, கடைசியாக எழுதியதில் சில திருத்தங்களையும் செய்து விட்டு, கைப்பிரதியை விடுதியிலே விட்டுவிட்டு, அருகிலிருக்கும் ஒரு மலையில் சென்று இறந்து போகிறார். அவர் கைப்பட எழுதிய அவரது கதை அவர் தங்கியிருந்த விடுதியிலிருந்து எடுக்கப்பட்டு பத்திரிக்கை நண்பரின் மூலம் அந்த புத்தக வெளியாட்டளரிடம் கிடைக்கிறது.

புத்தக வெளியீட்டாளர், இந்த கைப்பிரதியைக் கொடுத்த தன் நண்பனை (பத்திரிக்கையாளர்) கிடியன் வாழ்ந்த ஊருக்கு சென்று அங்கே அவருக்கு இருக்கும் ஒரே சொந்தமான அவரது நண்பனின் குடும்பத்தை சந்தித்து உண்மை நிலவரத்தை அறிந்துவருமாறு சொல்கிறார்.

பத்திரிக்கையாளரைச் சந்திக்க முதலில் மறுக்கும் நண்பனின் குடும்பம் பிறகு பேசுவதற்கு ஒத்துக்கொள்கிறது. நண்பனின் மனைவி பேச சம்மதிக்கிறாள். பத்திரிக்கையாளரும் நண்பனின் மனைவியும், கிடியன் பார்த்ததாக சொன்ன அந்த ஸ்தூபி இருக்கும் இடத்திற்கு செல்கிறனர். அப்பொழுது அவள்: ஒரு நாள் இரவு கிடியன் இந்த வழி போவதைப் பார்த்து, தான் பின் தொடர்ந்ததாகச் சொல்கிறாள். “அங்கே அந்த தூண் இருந்ததாக சொல்லப்படுகிற இடத்துக்கு பக்கத்தில் கிடியன் நின்று கொண்டு யாரிடமோ பேசிக்கொண்டிருந்தார்.(சாத்தான்!) அந்த ஆள் மறைவாக இருந்தார்” என்கிறாள். பத்திரிக்கையாளர் “அப்படியானால் நீங்கள் அந்த தூணைப் பார்த்தீர்களா?” என்கிறார். அதற்கு அவள், “தெரியவில்லை. பார்த்தது போலவும் இருக்கிறது. பார்க்காதது போலவும் இருக்கிறது” என்கிறாள்.

கடைசியாக பத்திரிக்கையாளர் தயங்கி தயங்கி கிடியனுக்கும் அவளுக்கு இருந்த அந்த உறவைப் பற்றி கேட்க்கிறார். அந்த உறவு உண்மையிலே நடந்ததா இல்லை கிடியானின் கற்பணையா? நடந்தது என்றால் ஏன் மீண்டும் ஒரு முறை நடக்கவில்லை? ஏன் அவள் அவ்வாறான ஒரு நிகழ்வை நடந்ததாக காட்டிக்கொள்ளவேயில்லை? என்று கேட்க்கிறார்.

அதிர்ந்து போன அவள், “ஒரு முறையா? அதற்கப்புறம் எத்தனை முறை நாங்கள் உறவு கொண்டுள்ளோம் தெரியுமா?” என்கிறாள்.

குழப்பத்துடன் பத்திரிக்கையாளர் திரும்புகிறார். நாமும் தான்.

இந்த இடம் தான் மிகவும் குழப்பான இடம். ஏன் கிடியான் அப்படி சொன்னார்? இதே போல கதாப்பாத்திரங்களையும் அவைகள் சொல்லும் விசயத்தையும் நம்மால் நம்பமுடியவில்லை. கிடியன் சாத்தானிடம் “ஊரில் ஏன் யாருக்குமே அந்த தூண் தென்படவில்லை” என்று கேட்க்கும் பொழுது, சாத்தான் “அது உனக்காகவே அங்கே வைக்கப்பட்டது” என்கிறது. சாத்தனை நம்ப முடியுமா? நண்பனின் மனைவி பார்த்தது போல இருந்ததாக சொல்கிறாளே?

கேள்விகள் கேள்விகள் கேள்விகள்!

நாவல் படிப்பதற்கு இதமாக, ஒரு சலமில்லாத ஆங்காரமில்லாத அலட்டல் இல்லாத நீரோடை போல இருந்தது. ஆங்காங்கே மெல்லிய சிரிப்பலைகளும் எழாமல் இல்லை. கண்டிப்பாக ஒரு முறை படிக்கலாம். முதல் ஐம்பது பக்கங்கள் கொஞ்சம் கஷ்டமாக இருந்தது, பிறகு smooth. (ம்ம்.. மார்க் பொட்டுட்டாருய்யா மார்க் ஆண்டனி!)

***

என்னுடைய ஹலோ அஸ்விக்குட்டி கதையைப் படித்த சிலர் ஏன் இப்படி ஒரேயடியாக tragedyயே எழுதிக் கொண்டிருக்கிறீர்கள் என்றும், ஏன் பேய்கதைகளையே கட்டிக்கொண்டு அழுகிறீர்கள் என்றும் கேட்டனர். என்னிடம் பதில் இல்லை. அவ்வாறான கதைகள் தான் என்னை எழுதவைக்கிறது. நான் கதைகளை பெரும்பாலும் எழுதுவதில்லை, கதைகள் தான் என்னை எழுதச் சொல்கின்றன. (நௌ, திஸ் இஸ் டூ டூ மச்!)

***

இந்த ஹலோ அஸ்விக்குட்டியில் சிவா தற்கொலை செய்துகொள்வதைப்போன்ற ஒரு சம்பவம் எங்கள் ஊரில் நடந்தது. எங்கள் வீட்டுக்கு மிக அருகில். (இந்த தபா, ஊருக்கு போனபோது உன் மூஞ்ச அவன் கிட்ட காட்டினதான? அதான் தற்கொலை செஞ்சுகிட்டான்!)

சாதிவிட்டு சாதி காதலித்தான் ஒரு பையன். நாம் தான் கொஞ்சம் வித்தியாசமானவர்கள் ஆயிற்றே?! அதாவது காதலுக்கு மரியாதை படத்தை முன்னூறு தடவை டீவியில் குடும்பத்தோடு பார்த்து கண்ணீர் விடுவோம், ஆனால் வீட்டில் உண்மையிலே யாராவது தப்பித்தவறி காதலித்து தொலைத்தால், அந்த காதலுக்கு கண்டிப்பாக அவமரியாதை தான். (அடி பிரிச்சுமேஞ்சிருவோம்ல! உங்கள புரிஞ்சுக்கவே முடியலடான்னு விவேக் சும்மாவா சொன்னாரு!)

அவன் வீட்டில் இதற்கு சம்மதிக்கவில்லை. வீட்டின் சம்மதத்தை அவன் எதிர்பார்த்தான். வீட்டுக்குள் செல்லாமல் வீட்டிற்கு வெளியே இருக்கும் மொட்டை மாடிப்படிக்கட்டிலேயே உட்கார்ந்து கொண்டிருந்தான். நான்கு நாட்கள். சாப்பிடவேயில்லை. எங்கும் போகவில்லை. அவனுடைய வீட்டிலும் கொஞ்சம் கூப்பிட்டுப்பார்த்தார்கள். ஏனோ சமாதான முயற்சியில் இறங்கவில்லை. அவன் தற்கொலை செய்து கொண்டான்.

ரொம்ப நாட்களுக்குப் பிறகு அந்த வீட்டிற்கு ஒரு புதுமணத்தம்பதியினர் வருகின்றனர். மனைவி வெளியூரைச் சேர்ந்தவர். கணவனும் தான். ஒரு நாள் திடீரென அந்தப் பெண் (மனைவி!) இறந்து போன அந்தப் பையன் போல பேசத்தொடங்கியிருக்கிறாள்.நான் இங்கே தான் உட்கார்ந்திருந்தேன். இங்கே தான் மருந்துகுடித்தேன் என்று கனகச்சிதமாக சொல்கிறாள். இறந்தவனின் அம்மா வந்து கதறி அழுதிருக்கிறார்.

நான் பார்க்கவில்லை எனினும், இந்த சம்பவத்தை சுற்றி இருந்த மக்கள் அனைவரும் பார்த்திருக்கின்றனர். என்னுடைய அக்காவும். நானும் என் அக்காவும் வீட்டுக்கு வெளியே படிக்கட்டில் இரவு உட்கார்ந்து பேசிக்கொண்டிருந்த பொழுது அக்கா இந்தக் கதையை என்னிடம் சொன்னார். அவர் இந்தக் கதயைச் சொல்லிமுடிக்கும் போது (exactly that moment you know!), இறந்து போன அந்த பையனின் அம்மா எங்கள் வீட்டு வழியே நடந்து சென்றார். எங்களைப் பார்த்து சிரித்தார்.

மேலும் ரயில் தண்டவாளத்தில் செல் போன் உபயோகித்ததால் ரயில் வருவதைக்கவனிக்காமல் ஒரு பெண் இறந்து போனார் என்ற செய்தி ரொம்ப நாட்களுக்கு முன்னர் படித்திருந்தேன். இந்தச் செய்தி என் மனதில் ஆழமாக பதிந்து விட்டது. என்னை ஆழமாக பாதித்தும் விட்டது.

இந்த இரு சம்பவங்களை வைத்து பின்னப்பட்டதுதான் ஹலோ அஸ்விக்குட்டி என்ற கதை. சிலருக்கு இது crap ஆக இருக்கலாம். ஆனால் எனக்கு எழுதும் போது, “நான் அஸ்வினி இல்லடா சிவா” என்று அந்த பெண் சொல்லும் போது, உண்மையிலே புல்லரித்து விட்டது. கொஞ்சம் பயமாகக் கூட போய்விட்டது.

அந்த இரண்டாவது பப் சீனை ரசித்து எழுதினேன்.(ம்ம்ம்க்க்கும். நாங்க ரசிக்கனும்ப்பா!) அதில் வரும் “உன்ன கூட்டிக்கிட்டு கடைக்கு போறேன்” என்ற வரிகள் என்னுடைய வரிகள் இல்லை, புதுப்பேட்டையில் வரும் “புல் பேசும் பூ பேசும்” பாடலில் வரும் வரிகள். (வேற எங்க எங்க இருந்து, எத எத சுட்ட, ஒழுங்கா சொல்லிடு!)

கதை கொஞ்சம் நீளமாக இருந்தாலும் பொறுமையாக வாசித்தவர்களுக்கும், வாசித்து பின்னூட்டம் அளித்தவர்களுக்கும் நன்றிகள். (அப்பாடா ஒருவழியா மொக்கய முடிச்சுட்டான்! சங்கத்த கலைங்கடா! ஆ..என்னாது ஒரு பக்கியவும் காணோம்!)

***

(ஆஹா… இன்னும் முடிக்கலையாடா நீ! கருத்து சொல்லப்போறியா?!)

பேய்களை நம்புவதா வேண்டாமா என்பது வேறு விசயம். ஒரு சுவாரஸ்யத்திற்காக நம்பலாம்!
ஆனால் “நம்பிக்கை தான் கடவுள். பயம் தான் பேய்” என்பது மட்டும் முற்றிலும் உண்மை.

***

கண்டிப்பாக படிக்க வேண்டிய இருபது புத்தகங்கள்.








Thanks: August.

இந்த பட்டியல் “ஆகஸ்ட்” என்கிற மாத இதழ் வெளியிட்டிருந்தது. இவைதான் வேறு புத்தகங்கள் இல்லை என்பது இல்லை. ஆனால் இந்த இருபது புத்தகங்களும் நல்ல புத்தகங்கள் என்பது தான் உண்மை.

இவற்றில் நான் மூன்று மட்டுமே படித்திருக்கிறேன். Catcher In The Rye, Midnights Chidren and Fountain Head. இவை மூன்றுமே மிக அருமையான Novels.

பின் குறிப்பு:அனானியின் பின்னூட்டம் மிகச்சரி. “கண்டிப்பாக படிக்க வேண்டிய இருபது ஆங்கில புனைவுகள்” என்று இந்த இடுகைக்கு தலைப்பு கொடுத்திருந்தேன். பல மொழிபெயர்ப்பு புத்தகங்கள் இருப்பதால் அவற்றை ஆங்கில புனைவுகள் என்று சொல்வது சரியில்லை (அபத்தம்!). எனவே தலைப்பை மாற்றிவிட்டேன்.

பின் தொடரும் நிழலின் குரல் : தருமம் மறுபடி வெல்லும்!

There are annoying misprints in history, but the truth will prevail!
—Nikolai Ivanovich Bukharin (1937)

“மிஞ்சும் சொற்கள்” என்ற கடைசி அத்தியாயத்தில் இவ்வாறு சொல்கிறார் அருணாச்சலம்:

ஆனால் ஒன்று மட்டும் நிபந்தனை விதித்தேன். தலைப்பு நான் சூட்டுவதுதான். ‘பின் தொடரும் நிழலின் குரல்’- புகாரினை, வீரபத்ரபிள்ளையை, என்னைப் பின் தொடர்ந்தது எங்கள் நிழல்கள் தாம். நிழலை ஒருவன் ஒரு போதும் தவிர்க்கமுடியாது. அது மறுபாதி. அது நம்முடன் இடைவிடாது உரையாடுகிறது. ஒளியைத் தன்முன் கண்டு நடக்கும் ஒவ்வொருவர் பின்னாலும் நிழல் தொடருகிறது. நிழலின் குரலை ஒரு போதும் நாம் புறக்கணித்துவிடக்கூடாது.

***

ஜெயமோகன் என்ற எழுத்தாளரை யார் எனக்கு அறிமுகம் செய்தது என்று எனக்கு நினைவில்லை. எஸ். ராமகிருஷ்ணன் எனக்கு விகடன் மூலம் அறிமுகமானார். ஆனால் ஜெயமோகன் எனக்கு எதேச்சையாக நூலகத்தில் சும்மா படிப்பதற்கு தமிழ் நூல் தேடிக்கொண்டிருந்த போது அறிமுகமாகியிருப்பார் என்று நினைக்கிறேன். குறிப்பாக ‘காடு’ நாவல். அதற்கப்புறம் ஜெயமொகனின் சிறுகதைத் தொகுப்பு. காடு நாவலில் தான் பின் தொடரும் நிழலின் குரல் பற்றிய அறிமுகம் கிடைத்தது. அன்றிலிருந்து இந்த நாவலைப் படித்துவிடவேண்டும் என்று தீர்மானமாய் இருந்தேன். ஏன் என்று எனக்கு தெரியாது. அதற்கப்புறம் மதுரை இலக்கியபண்ணையில் இந்தமுறை ஜெயமோகன் நாவல்கலைத் தேடியபோது எனக்கு கிடைத்தது ஒன்றே ஒன்று தான்: விஷ்ணுபுரம். ஏன் என்று யோசித்தேன். ஒருவேளை நிறைய மக்கள் ஜெயமோகனைப் படிக்கிறார்கள் என்று நினைத்துக்கொண்டேன். அப்புறம் விஷ்ணுபுரத்தை வீட்டில் கொடுத்த போது, யாவரும் புத்தகத்தின் பக்கங்களின் எண்ணிக்கையைப் பார்த்து சற்று மிரளவே செய்தனர். அப்புறமும் தைரியமாக எடுத்து படித்தவர்களில் என் அப்பாவும் என் அண்ணனும். அதில் நூறு பக்கத்தைத் தாண்டியவர் என் அண்ணன் ஒருவரே. (என் அப்பாவும் அண்ணனும் நிறைய நாவல்கள் படிப்பவர்கள். என் அப்பா தமிழாசிரியர். என் அண்ணன் வழக்கறிஞர்). நான் இதற்கு முன்பு எழுதிய ஆயிரம் கால் இலக்கியம்-7 -ல் அசோகமித்திரன் அவர்களின் நேர்காணலில் அவர் ஒரு கேள்விக்கு அளித்த ஒரு பதிலில் : ஜெயமோகன், எஸ்.ராமகிருஷ்ணன் போன்றோர் நிறைய எழுதுகின்றனர். ஆனால் யார் படிக்கிறார்கள் என்று கேட்டிருந்தார். மிகச்சரியான கேள்வி. நியாயமான கேள்வி. இல்லையா?

இன்றைய பாம்ப்லட்(pamplet) உலகில் யார் எழுநூறு பக்க நாவல்களை படிக்க தயாரக இருக்கின்றனர்? அப்படியும் சொல்லிவிட முடியாது. பொன்னியின் செல்வனை மீண்டும் மீண்டும் பலமுறை படித்த -படிக்கின்ற! என் நண்பர் ஒருவர் சாப்ட்வேர் துறையில் இருப்பவர் தான்; பொன்னியின் செல்வனை, அதுவும் ஈ-புக், விடாமல் லேப்டாப்பைத் தூக்கிக்கொண்டே; படுக்கும் போது, உட்காரும் போது பாத்ரூமுக்கு தவிர; என்று எல்லாஇடங்களிலும் தூக்கிசென்று படித்து முடித்தார் – மக்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். ஆனால் பொன்னியின் செல்வன் வேறு மாதிரி. பின் தொடரும் நிழலின் குரல் (பி.நி.கு) வேறு மாதிரி. இரு நாவலையும் ஒப்பிடுதென்பதே அபத்தம். ஆனால் பக்கங்களின் எண்ணிக்கையில் மட்டுமே ஒப்பிடலாம். பொன்னியின் செல்வனில் ஒரு முடிச்சு எப்பொழுதும் இருந்து கொண்டேயிருக்கும். பிறகு காதல், நகைச்சுவை, வீரம் என்று சரியான அளவில் கலந்திருக்கும். ஆனால் பி.நி.கு தத்துவம் சார்ந்தது. தருக்கம் செய்வது. வாதடுவது. உண்மைகளை பொய்களை எடுத்து ஆராய்வது. அல்லது சிலர் சொல்லுவது போல ஒரு சார்பாக நின்று – அப்பொழுது வாதாடுவது. அலசுவது. இது சரி என்று சொல்வது. பிறகு இது சரியில்லை என்று சொல்லிவிடுவது. பிறகு அதுதான் சரி என்று சொல்வது. கடைசியில் அதுவும் சரியில்லை இதுவும் சரியில்லை இது தான் சரி என்று முடிவு சொல்லாமல் சொல்வது. சாலமன் பாப்பையாவின் பட்டிமன்றம் போல அல்ல.

வாதங்கள். வாதங்கள். பின்னர் மேலும் வாதங்கள். பின்னர் மேலும் மேலும் வாதங்கள். நம்மை குழப்பும் வாதங்கள். (பிறர் சொல்வது போல: குழம்பிய குட்டையில் மீன் பிடிக்கும் வாதங்கள்.!) சில இடங்களில் ஏன் இப்படி-போதுமைய்யா போதும் என்று மூடிவைத்துவிட தூண்டும் வாதங்கள். பிறகு நாமே யோசித்துப் பார்த்து வேறு என்ன வாதங்கள் இருக்கின்றன என்ற எதிர்பார்ப்பில் அதே பக்கத்துக்குப் போகவைக்கும் வாதங்கள். தெளிந்த வாசகன் மட்டுமே கடைசிவரை செல்ல முடியும். படிக்க வேண்டும் என்ற ஆர்வம் கொண்டவனை மட்டுமே கடைசி வரை கூட்டிச்செல்லும். படிக்க முடியவில்லையா? பிடிக்கவில்லையா? குழப்பமாக இருக்கிறதா? தயவு செய்து விலகிக்கொள். என்னுடைய ஆள் இல்லை நீ. உன்னை கண்டிப்பாக படிக்கவைக்கவேண்டும் என்ற ஆதங்கம் எனக்கு ஏதும் இல்லை. அதற்காக அத்தியாயங்கள் தோறும் முடிச்சுகள் வைக்க என்னால் முடியாது. முடிந்தால் படித்துக்கொள் என்று சவால் விடும் வாதங்கள்.

நான் நாவலை நூலகத்திலிருந்து எடுத்து ஒரு வாரம் வரையில் முன்னுரையிலேதான் இருந்தேன். நாவலின் முதல் அட்டையுடன் சேர்த்த பக்கத்தில் (வேறு பதிப்புகளில் எப்படி இருக்கிறது என்று தெரியாது. நான் படித்தது தமிழினி வெளியீடு!) பிட்ஸ்பர்க்கின் புகைப்படம் இருந்தது. எனக்கு அது பிட்ஸ்பர்க் தான் என்று என்னுடைய மேலாளர் சொல்லும்வரை தெரியாது. அப்படித்தான் இருக்கிறது எனது கம்யூனிச அறிவு. எனது பள்ளி நாட்களில் கொஞ்ச நாட்கள் (மாதம்!) நான் த.மு.எ.ச வின் உறுப்பினராக இருந்திருக்கிறேன். அவர்களது நூலகத்தில் (அவர்களது நூலகங்கள் அழகாக இருக்கும். அங்கு தான் எனக்கு முதன் முதலில் கணையாழியின் அறிமுகம் கிடைத்தது. மேலும் பல கம்யூனிச புத்தகங்களின் அறிமுகமும் கிடைத்தது. ஒன்றைக்கூட படித்ததில்லை என்பது வேறு விசயம். அனால் எனக்கு குமுதம் ஆனந்த விகடன் இல்லையே என்று ஏக்கமாக இருக்கும்!) இரண்டு திருக்குறள்கலோடு ஆரம்பிக்கிறது நாவல். அருமையான குறள்கள்.

அல்லற்பட்டு ஆற்றாது அழுத கண்ணீரன்றே
செல்வத்தைத் தேய்க்கும் படை.

அறத்தாறிதுவென வேண்டா சிவிகை
பொறுத்தானோடு ஊர்ந்தான் இடை.

***

தை வீரபத்ரபிள்ளை என்பவரைச்சுற்றியே சுழல்கிறது. வீரபத்ரபிள்ளை மிகப்பெரிய படிப்பாளி. உலக இலக்கியங்களைப் படித்தவர். டிபிஎல்யு என்ற தொழிற்சங்கத்தில் உறுபினராக இருக்கிறார். அதை நிறுவிய கே.கே.எம் என்றவருடைய வலதுகரமாக இருக்கிறார். தொழிற்சங்கம் ஸ்டாலினை மையமாகக்கொண்டு இயங்கிவருகிறது. ஸ்டாலினால்காந்த இயக்கம் கம்யூனிசத்தை சார்ந்திருக்கிறது. வீரபத்ரபிள்ளைக்கு இருக்கும் வெளி உலகத்தொடர்பால் (குறிப்பாக ரஷ்யா) அவருக்கு புகாரின் என்பவரைப் பற்றிய உண்மைகள் கிடைக்கிறது. கார்பச்சேவ் காலத்தில்.

புகாரின் ஸ்டாலிக்கு வலதுகரமாக இருந்தவர். ஸ்டாலினின், குளக்குகள் என்ற ரஷ்ய விவசாய பெருங்குடிகளுக்கு, எதிரான நிலைப்பாடு புகாரினை கிளர்த் தெழச்செய்கிறது. ஸ்டாலினுடன் மாறுபட்ட கருத்து கொண்டவராகிறார். ஸ்டாலின் புகாரினை தேசத்துரோகி என்று பழி சுமத்துகிறார். புகாரின் தனது இளம் மனைவியான அன்னாவை விட்டுவிடவேண்டும் என்ற நிபந்தனையின் பெயரில் குற்றங்களை ஒப்புக்கொள்கிறார். ஸ்டாலின் புகாரினுக்கு மரண தண்டனை விதிக்கிறார். புகாரினின் மனைவி சைபீரியாவின் வதைமுகாம்களில் சிறைப்படுத்தப்படுகிறாள். அவள் ஐம்பது வருடங்கள் கழித்து புகாரின் சொல்லியிருந்த வாக்குமூலத்தை கார்ப்பச்சேவ் விசாரணையில் கூறி கதறுகிறாள். புகாரின் நிரபராதி என்று தீர்ப்புவழங்கப்படுகிறது.

இதை அறிந்துகொள்ளும் வீரபத்ரபிள்ளைக்கு ஸ்டாலின் மேல் மிகுந்த கோபம் உண்டாகிறது. ஸ்டாலிக்கு எதிராக குரல் கொடுக்க முயல்கிறார். கட்சி மறுக்கிறது. அவரிடம் உண்மைகளை மறைக்கும் படி மன்றாடுகிறது. பலனில்லை. வீரபத்ரப்பிள்ளையின் படித்த அகங்காரம் முந்திக்கொண்டுவிட்டது. புகாரின் ஒன்றும் சதியில் சலைத்தவர் அல்ல. பணியாத வீரபத்ரப்பிள்ளை கட்சியை விட்டு துரோகிப் பட்டம் சுமத்தப்பட்டு தூக்கியெறியப்படுகிறார். வீரபத்ரபிள்ளை தனிமரமாகிறார். மொத்த கட்சியும் அவர் மீது புழுதி வாரியிரைக்கிறது. வீரபத்ரபிள்ளை குடிக்க ஆரம்பிக்கிறார். மனம் தடுமாறுகிறார். கடைசியில் அனாதையாக உயிர்விடுகிறார்.

கேகேஎம் என்பவர் கட்சியின் நிறுவனர். அவர் தான் கட்சியை வளர்த்தவர். பின்னர் சமீபகாலத்தில் பழைய கொள்கைகளை விட்டுக்கொடுக்காமல் -விட்டுக்கொடுக்கமுடியாமல்- ஒட்டாத தண்ணீராக கட்சியென்ற தாமரை இலையில் இருக்கிறார். அவரை தூக்கியெறிய விரும்பிய கட்சி மேலிடம், அவருடைய வலது கரமாக அருணாசலம் என்பவரை பயன்படுத்திக்கொள்கிறது. அருணாசலம் தேர்ந்தெடுக்கப்பட, கேகேஎம் வெளியேறுகிறார். பிறகு அவரும் கட்சியால் தூற்றப்படுகிறார்.

அருணாசலத்துக்கு மன இறுக்கம். ஆனால் வேறு வழியில்லை. இந்த சமயத்தில் தான் வீரபத்ரபிள்ளையின் மகனைச் சந்திக்கிறார் அருணாசலம். வீரபத்ரபிள்ளை எழுதிய ஒரு சிறுகதைத் தொகுப்பு அவருக்கு கிடைக்கிறது. அதற்குப்பிறகு அவரைப் பற்றி விசாரிக்கும் பொழுது கட்சியில் வீரபத்ரபிள்ளை என்ற ஒருவர் இருந்ததற்கான அத்தாட்சியே இல்லாமல் இருக்கிறது. கேகேஎம் தனக்கு எதுவும் தெரியாது என்று கூறிவிடுகிறார் (கேகேஎம் க்கு வலது கரமாக இருந்தவர் வீரபத்ரபிள்ளை). பிறகு வீரபத்ரபிள்ளை எழுதிய சிறுகதைக்கு முன்னுரை எழுதிய ஒருவரை பிடித்து அவருடைய தொடர்பு என்று கோர்த்து வீரபத்ரபிள்ளை என்பவரது உண்மையான அடையாளத்தை கண்டுபிடிக்கிறார்.

வீரபத்ரபிள்ளையின் நிழல் அருணாச்சலத்தை தொடருகிறது. அருணாச்சலம் கட்சி சவனியரில் வீரபத்ரபிள்ளை பற்றி எழுத மிகுந்த முனைப்போடு இருக்கிறார். கட்சி மோப்பம் பிடிக்கிறது. அருணாச்சலத்தை எச்சரிக்கிறது. அருணாச்சலம் மனம் பிறழ்கிறார். பைத்தியமாகிறார். அவரது மனைவி மற்றும் குழந்தையின் மீது கொண்ட பற்றின் காரணமாக அவர் மீண்டு வருகிறார். உண்மையைச் சொல்லப்போனால் மனைவி நாகம்மையின் மீது அவர் கொண்ட காதல் தான் அவரை மீட்டுகொண்டுவந்தது என்று எண்ணிக்கொள்ளலாம். (நான் எண்ணிக்கொண்டது!). இந்த பிரச்சனையில் முக்கிய புள்ளியாக இருப்பவர் ராமசாமி என்பவர். ராமசாமி என்பவர் தான் அருணாச்சலத்திற்கு வீரபத்ரப்பிள்ளை பற்றி சொன்னவர். வீரபத்ரபிள்ளையின் தீவிர அனுதாபி அவர். ராமசாமியின் வீட்டில் ஜெயமோகன் இருக்கும் போது அருணாச்சலம் முதன் முறையாக ராமசாமியை சந்திக்கிறார். முழுகதையையும் கேட்ட ஜெயமோகன் இதை நாவலாக தொகுத்து நமக்கு அருளியிருக்கிறார்.

இது தான் நாவலின் சாரம்சம். அடிச்சரடு. மல்லிகை இல்லாத நார். இதை சுற்றிலும் மல்லிகையாக ஜெயமோகனின் தத்துவம் மற்றும் தருக்கம். இங்கியல் மற்றும் மார்க்ஸிசம். ஸ்டாலின் மற்றும் லெனின். ட்ராட்ஸ்கி மற்றும் புகாரின். நான் மற்றும் எனது நிழல்.

***

னால் நிழல் என்று ஏன் பெயரிட்டார் என்று தான் எனக்கு விளங்கவில்லை. நிழல் நம்மை எதிர்த்து குரல் கொடுக்காது. நிழல் நம்மை கேள்வியும் கேட்காது. நிழல் நாம் செய்வதை மட்டுமே செய்யும். மிகுந்த இருட்டான இடங்களுக்கு சென்று விட்டால் நம்மை விட்டு அகன்று விடும். ஜெயமோகன் சொல்வதைப் போல “தன் முன் வெளிச்சத்தைக் கண்டு நடப்பவர்களை எப்பொழுதுமே நிழல் பின் தொடர்ந்து கொண்டிருக்கிறது” என்பது மட்டும் முற்றிலும் உண்மை. ஆனால் எப்போதும் நம்மை விட்டு அகலாத ஒன்று மனசாட்சி மட்டும் தான். மனசாட்சி தான் எப்பொழுதும் நம்மை கேள்வி கேட்டுகொண்டேயிருக்கும். நிழல் என்பது வேறொன்றும் இல்லை மனசாட்சியே என்று வைத்துக்கொள்ளலாமா? இல்லை நிழல் என்பது வரலாறா? நாம் ஒவ்வொருவரின் பின்னேயும் வரலாறு பாலைவன மணல் போல காற்றால் மாற்றப்பட்டுக்கொண்டேயிருக்கிறது. அந்த வரலாறு கூறும் உண்மைகளை உணர வேண்டுமா?

***

நாவல் எழுதப்பட்ட விதமே அற்புதம். எனக்கு இந்த முறை புதிது. அதாவது நாவல் முழுதையும் ஒரே கதையாகக் கூறாமல். கதையாக, கட்டுரையாக, கடிதமாக, கவிதையாக, நாடகமாக கூறியிருப்பதுதான் சிறப்பு. வீரபத்ரபிள்ளையின் ஆளுமைகள் அனைத்தும் நாவலில் அப்படியே இடம்பெறுகின்றன. வீரபத்ரபிள்ளை கட்சித்தலைமைக்கு கடிதம் எழுதுகிறார். கட்சித்தலைமை அவருக்கு பதில் கடிதம் எழுதுகிறது. இந்த இரு கடிதங்களிலும் ஸ்டாலினின் சிறப்பு மற்றும் வெறுப்பு அலசப்படுகிறது. வீரபத்ரப்பிள்ளையின் பிரசுரிக்கப்படாத கட்டுரைகள் கதைக்கு மேலும் பலம் சேர்க்கின்றன. வாதத்தை பலப்படுத்துகின்றன. கதையினூடாக ஜெயமோகன் வருவது யதார்த்தத்தை கொண்டுவருகிறது. நாவலின் பின் புலத்தைக் காட்டுகிறது.

***

ம்யூனிசம் தோன்றி இத்தனையாண்டுகள் ஆகிவிட்டிருந்தும் அவர்களது கனவான பொன்னுலகம் அவர்களுக்கு கிடைத்ததா? ஸ்டாலின் என்னதான் சாதித்தார்?

ஸ்டாலினால கம்யூனிசத்துக்க அடிப்படையான நிலச் சீர்திருத்தத்தையே நடைமுறைப் படுத்த முடியல. ஒன்றரைக் கோடி விவசாயிகளைக் கொண்ணுபோட்டு விவசாய அமைப்பையே நாசம் பண்ணினது தான் பலன். அவர் காலத்தில தான் உலகத்திலேயே பெரிய தானியக் களஞ்சியங்களில ஒண்ணான உக்ரேய்னில பஞ்சம் வந்து பல லட்சம் பேர் இறந்தாங்க. இன்னைக்கும் உக்ரேன் மீளலை.

இன்றைக்கிருக்கின்ற கம்யூனிசத்தின் மீது பல கேள்விகள் தொடுக்கப்படுகின்றன. பழைய கம்யூனிசத்துக்கு ஆதரவாகவும் கேகேஎம் பேசுகிறார். அவரை இன்றைய கம்யூனிசத் தொண்டர்கள் பழமைவாதி என்று முத்திரைக் குத்தி வெளியே அனுப்புகின்றனர். நிறுவனருக்கே இந்த நிலைமை. கட்சியும், தலைவர்களும் தங்களை மாறும் சமுதாயத்திற்கேற்ப மாற்றிக்கொள்ளவேண்டும் இல்லியா? தலைவர்கள் படிப்படியாக தரகு வேலை செய்யக் கற்றுக்கொள்கின்றனர்.

நம்ப சங்கத்தில இன்னிக்கு எந்த கிளைலடே தத்துவமும் வரலாறும் அரசியலும்
சொல்லித்தாறம்? இங்க கூடியிருக்குத கிளைச் செயலாளர்களில் எவனாவது ஒருத்தன் எந்திருச்சு இங்கியல்னா என்னன்னு ஒரு பத்து நிமிஷம் பேச முடியுமாடே? என்னடே எவனாவது இருக்கியளா?

சரித்திரம் முழுக்க மக்கள் முட்டாக் கும்பலாகத்தான் இருந்திருக்காங்க. அவங்களுக்கு எது நல்லதுண்ணு ஒருநாளும் அவங்களுக்கு தெரியாது. தொழிலாளி வர்க்க சர்வாதிகாரம்னு சொன்னவன் மடையன் இல்லை. தொழிலாளி வர்க்க ஜனநாயகம்னு சொல்ல அவனுக்கு தெரியாமலும் இல்லை. ஜனங்களால ஒரு மேலான அரசாங்கத்தை உண்டு பண்ணிக்க முடியாது. தனித்தனியா ஒவ்வொருத்தனும் யோக்கியமானவனாத்தான் இருப்பான். கூட்டாச்சேர்ந்தா அறிவு கெட்ட மந்தயா ஆயிடுவான். புத்தியுள்ளவன் இழுத்த இழுப்புக்கு போற மந்தை. ஜனங்களுக்கு அறிவு கிடையாது. அறிவுள்ள புரலட்டேரியந்தான் அவங்களை வழி நடத்தனும். கட்சியைத் தலைமை வழி நடத்தனும். தலைமையை தத்துவம் வழி நடத்தனும். அது ப்ளேட்டோ கண்ட கனவு. அதை நடைமுறைப் படுத்தியது கம்யூனிசம் மட்டும் தான்.

சிலவங்க கேட்கிறாங்க, முதலாளிகிட்டயிருந்து நம்ம சொத்த நாம எடுத்துக்கிட்டா
என்ன தப்பு எண்ணு. அத நாம போராடி எடுப்போம். அது நம்ம உரிமை. திருடினோம்னா அது முதலாளிக்க சொத்து, அவனுக்க உரிமை எண்ணு நாமளே சம்மதிக்கற மாதிரியாக்கும். பிறவு வர்க்கப் போராட்டம் இல்லை. திருட்டு போட்டிதான். அவன் நம்மைத் திருடுவான். நாம் அவனைத் திருடுவோம். யாரு சாமர்த்தியமா திருடுறானோ அவனுக்கு அதிகாரம். கடைசில தொழிலாளி ஜெயிச்சிட்டான்னு வச்சுக்க இன்னொரு திருடனுக்க ஆட்சிதானே வரும்? இன்னும்
பெரிய திருடனுக்க ஆட்சி. அதுதான் கம்யூனிசமா? சித்தாந்தம் படிச்சவன் தானேடே நீ? சொல்லு?

நாம் இப்ப எதுக்கு சங்கம் வெச்சிருக்கோம்? மனதைத் தொட்டுச் சொல்லு.
நாம தொழிலாளிக்கு உரிமைகளையா கத்துக் கொடுக்கறோம்? வர்க்கப் போராட்டத்துக்காவா அணி திரட்டறோம்? பாதிநாள் திருட்டுத் தொழிலாளிக்காக முதலாளி கிட்ட வக்காலத்து வாங்கிட்டிருக்கோம். இல்லன்னு சொல்லு பாக்கலாம்?

நீ தொழிலாளிக்க சம்பளம் வாங்கிட்டு சேவகம் செய்றவன் மாதிரி பேசுறே. நான் தொழிலாளியை வழிநடத்திட்டுப் போறவன் மாதிரி பேசுறேன்

நெஞ்சில தீ வெணும்டே அருணாச்சலம். அதை அணைய விட்டிரப்பிடாது. நீ இப்பம் செய்யிற ஆள் பிடிக்குத வேலைய எல்.ஐ.சி க்கு செய்தா இன்னைக்கு உனக்கு எத்தனை லட்சம் தேறியிருக்கும், சொல்லுடே. தீ வேணும்டே. பேச்சில
அதுக்கச் சூடு வேணும். அந்த சூடுதான் தொழிலாளிக்கு நம்மமேல நம்பிக்கையும்
மரியாதையும் உண்டாக்குது. அது நம்ம ஆசான்கள்கிட்டேயிருந்து நாம எடுத்துக்கிட்ட தீ. அறுபத்து மூணில இந்த சங்கில உள்ள தீயை நம்பித்தான் எனக்க பின்னால அறுபதினாயிரம் தொழிலாளர்கள் போராட்டத்துக்கு வந்தாங்க. பதினெட்டு பேர் குண்டடிபட்டு செத்தாங்க. பதினேழு மாசம் பட்டினி கிடந்தாங்க. தீ வேணும்டே. அதை அணைய விட்டுடாதே.

கதிர் என்ற இன்றைய கம்யூனிசத்தின் இளைஞர் சமுதாயத்தில் ஒருத்தர் இவ்வாறு வினா எழுப்புகிறார்:

மார்க்ஸியம் மதம் இல்லை. அருளுரையும் இல்லை. நாம் அதை வழிபட வேண்டிய அவசியம் இல்லை. மார்க்ஸியம் வந்து இப்ப நூறு வருஷம் ஆயாச்சு. அதோட பரிசோதனைக் காலம் முடிஞ்சாச்சு. இன்னமும் அது பூமிமேல அற்புதங்களை நடத்தும்னு நம்பிட்டிருக்கிறது மூடத்தனம். அதனால என்ன செய்யமுடியும் என்ன செய்யமுடியாதுன்னு இந்த நூறு வருஷ வரலாற்றிலிருந்து நாம படிக்கணும். மார்க்ஸியம் உருவாக்கின அரசாங்கங்களெல்லாம் பழைய சக்கரவர்த்திகளோட
அரசாங்கங்களைவிட மோசமானவைன்னு அப்பட்டமா தெளிவாயாச்சு. மார்க்ஸியத்தால ஒரு புதிய சமூக அமைப்பையோ, பொருளாதார அமைப்பையோ, கலாச்சார அமைப்பையோ உருவாக்க முடியாது. அப்படி அது உண்டு பண்ணிக் காட்டிய அமைப்புகளெல்லாம் ஏற்கனவே இருந்த அமைப்புகளை விட
மோசமானவை மட்டுமல்ல, அவை மோசமான பழைய அமைப்புகளோட நகல்கள். இனிமே இம்மாதிரிக் கனவுகளை ஒருத்தன் வெச்சிட்டிருந்தானா அவன் தொண்டனா கொடிபிடிகக்த்தான் லாயக்கு. ஆனா மார்க்ஸியம் உலகம் முழுக்க பல வெற்றிகரமான மாற்றங்களை உண்டு பண்ணியிருக்கு. ஒரு ஜனநாயக அமைப்பில, சுதந்திரப் பொருளாதார அமைப்பில, முக்கியமான ஒரு சக்தியா அது செயல்பட முடியும். முழுமையான மாற்று சமூகத்தை அது உருவாக்க முயலறப்பதான் பிரச்சனை
வருது. ஏன்னா மார்க்ஸியத்துக்கு அதுக்கான சக்தி இல்லை. எந்த சித்தாந்தத்துக்கும்
அந்த சக்தி கிடையாது. தெரிஞ்சும் தெரியாமலும் இயங்கக்கூடிய பல்லாயிரம், ஏன் பல கொடி சக்திகள் இணைஞ்சு சமூகமும் கலாச்சாரமும் பொருளாதார அமைப்பும் உருவாகுது. அதை எந்த சித்தாந்தமும் முழுமையா அணுகிட முடியாது. அதன் ஒரு பகுதியை மட்டும் தான் ஒரு சித்தாந்தம் தொட முடியும். அப்படி ஆய்வு செய்து அது முழுமையா நிரூபிச்ச உண்மைகளை முழு அபத்தமா ஆக்கக்கூடிய பல நூறு தளங்கள் மீதி இருக்கும். மார்க்ஸியம் தான் மானுடம் உண்டாக்கின சித்தாங்களிலேயே உபயோகமான சித்தாந்தமும் அதுதான். ஒரு பேச்சு வார்த்தை மேஜையில மார்க்ஸியம் ஏழைகளோட பிரதினிதியா உக்காந்து பேச முடியும்.
இன்னைக்கு தொழிலாளி வர்க்கம் அடைஞ்சிருக்கிற எல்லா லாபங்களும் மார்க்ஸியம் வழியா கிடச்சதுதான். மார்க்ஸியம் இல்லீன்னா உலகத்தில இருக்கிற எந்த வெல்பேர் ஸ்டேட்டும் கருணையோட இருக்க முடியாது. சமூக அமைப்பில சுரண்டப்பட்ட வர்க்கம் மார்க்ஸியக் கருத்தியலின் அடிப்படையில்தான் ஒன்று சேர்ந்து போராட முடியும். மார்க்ஸியத்தோட பணி இங்க தான். ஒன்று சேர்ந்து போராடரதுக்குத் தவிர்க்க முடியாத பெரும் கனவை அது உண்டு பண்ணித்தருது. அந்த கனவை தருக்கபூர்வமானதா மாத்தற தத்துவ அடிபப்டைகளை உருவாக்கிக்
காட்டுது. அந்த தருக்கம் தான் பேச்சு வார்த்தையில் தொழிலாளி வர்க்கத்தின்
மிகப்பெரிய துருப்புசீட்டு. எந்த தொழிலாளியும் பேச்சுவார்த்தைக்காக சாக மாட்டான். பெரிய கனவுகளுக்காத்தான் சாவான். தொழிலாளி சாகத்தயாரா இருந்தாதான் பேச்சுவார்த்தையில் ஏதாவது சாதிக்க முடியும். மார்க்ஸியத்தோட இடம் இதுதான்.

கொள்கை வேறு நடைமுறை வேறு. மேலே மத்தியில ஜகஜித்சிங் வருஷா வருஷம் அதை நடத்திக் காட்டுறாரே!

முற்றிலும் உண்மை. கட்சிகள் கொள்கை என்ற ஒன்றை எப்பொழுதோ உதறிவிட்டனர். இப்பொழுது இருப்பது survival of the fittest. அரசியல் பெரும் வியாபாரம். அதனால் தான் ஒரே கட்சி மாநிலங்களுக்கு மாநிலங்கள் வேறு வேறு கொள்கைகளை வைத்துக்கொண்டிருக்கின்றன. பல்வேறு கொள்கைகளை வைத்துக்கொண்டு அவர்களுக்கு மக்களைச் சந்திப்பதில் கூச்சம் ஏதும் இருப்பதில்லை. ஏனெனில் மக்களும் அப்படித்தானே? மக்கள் தானே கட்சி!

அருணாச்சலம் ஜெயமோகனை சந்திக்கும் போது நடைபெறும் உரையாடலில் ராமசாமி ஜெயமோகனை இவ்வாறு அறிமுகப்படுத்துகிறார்:

இவரு முக்கியமான தமிழ் எழுத்தாளர். சமீபமா இவர்தான் ஸ்டார். பேரு ஜெயமோகன் தருமபுரியில் டெலிபோன்ல வேலை பார்க்கிறார்.ரப்பர்னு ஒரு நாவலும் திசைகளின் நடுவேன்னு ஒரு சிறுகதைத் தொகுப்பும் வந்திருக்கு. புதிசா பெரிசா ஒரு நாவல் எழுதிட்டிருக்கார் விஷ்ணுபுரம்னு பேரு

அப்படியா?! நிறைய நபர்களுக்கு ஜெயமோகன் யார் என்றே தெரியவில்லை என்பது தான் உண்மை. பாலாவின் நான் கடவும் என்ற படத்துக்கு வசனம் எழுதுவதனால் அவர் இனி பிரபலமாகக்கூடும். இந்த நாவல் வெளிவந்தது 99 என்று நினைக்கிறேன். அந்த சமயத்தில் எவ்வளவு பேருக்கு ஜெயமோகன் தெரிந்திருக்கும் என்று சொல்லத்தேவையில்லை. மேலும் எனக்கு ஒன்று மட்டும் புரியவில்லை: இவ்வளவு அழகாக எழுதப்பட்ட இந்தப் புத்தகம் ஏன் பிரபலமாகவில்லை? ஏன் ஜெயமோகனோ ராமகிருஷ்ணனோ சாமன்ய இலக்கியத்தில் ஒரு இடத்தை பிடிக்க முடியவில்லை? கல்கியைப் போல. பிரபஞ்சனைப் போல. ஜானகிராமனைப் போல. பார்த்தசாரதியைப் போல. இனிமேல் கிடைக்குமோ?

ஜெயமோகனைப் பற்றி அருணாச்சலம் கொண்டிருக்கும் கணிப்பு:

பிறரை எடுத்த எடுப்பிலே குறைத்து மதிப்பிடும் அந்த அகங்காரம் முதிர்ச்சியின்மையின் விளைவு என்று பட்டது. இந்த இளைஞன் தன்னைப் பற்றிய மிதமிஞ்சிய சுயமதிப்பு கொண்டவனாக இருக்ககூடும்.

நான் ஜெயமோகனை ஒரு முறை சந்திருக்கிறேன். அப்பொழுது அவர் நாங்கள் வைத்திருக்கும் கேமரா போனைப் பற்றி கேட்பதில் ஆர்வமாக இருந்தார். என் நண்பர் ஒருவர் மிகவும் கூச்சப்பட்டார்: இவ்வளவு புத்தகங்கள் எழுதிய இவரை விட நம்மிடம் நிறைய வசதிகள் இருக்கிறதே. ஜெயமோகனை படத்திலோ அல்லது நேரிலோ பார்ப்பவர்கள் கண்டிப்பாக இவர் தான் கொற்றவையை எழுதினார் என்றால் தலையில் அடித்து சத்தியம் செய்தால் கூட நம்ப மாட்டார்கள். ஏனெனில் அவரிடம் சித்தர் வேஷம் கிடையாது!

அருணாச்சலத்திடம் தோழர் தீர்த்தமலை கட்சியின் விதிகளைப் பற்றி வாதாடும் போது:

அம்பதுகளில் ரணதிவேதீஸிஸ் வந்தப்ப குமரி மாவட்டத்தில மட்டும் ஆயிரம் பேர் கட்சியை விட்டுப் போயிருக்காங்க. பயங்கரமான அடக்குமுறைகளில் கூட கட்சிக்காக ரத்தம் சிந்தின முன்னூறு பேர் நம்ம கட்சி ஜனநாயகத்தை ஏத்துக்கிட்டப்ப விட்டுட்டு போனாங்க. கட்சியைவிட்டுப் போனவங்களில சிலர்தான் தேறினாங்க. மீதியெல்லாம் ஆளுமை கெட்டு, குடிகாரர்களாகி உதவாக்கரைகளாகி, சீரழிஞ்சு போனாங்க. சிலர் பூர்ஷ¤வாக்களாகக்கூட ஆனாங்க. ஏன், இப்ப நக்சலைட் இயக்கம் வெடிச்சப்ப கட்சிய விட்டு எண்ணூறு பேர் விலகிப் போகலையா? அதில வேணுகோபாலனை எனக்கு நல்லாத் தெரியும். நாலு வருஷம் நானும் அவனும் ஒரே
ரூம்ல தங்கியிருக்கோம். என் நிழலா இருந்தான். அவன் படிச்ச புஸ்தகங்களுக்க பின்
அட்டை படிச்சவங்களே நம்ம கட்சியில குறைவு. பெரிய அளவில தேசிய அளவில போகப் போறான்னு நம்பினோம். இப்ப பேச்சிப்பாறை டாம் பக்கமா பிச்சை எடுக்கறான். என்னைப் போன வருஷம் செமினார் சமயத்தில் வழி மறிச்சு, ‘குட்மாரிங் தோழர், புரட்சி ஓங்குக. ஒரு அம்பது ரூபா கொடுங்க’ ன்னு கேட்டான். மனசுக்குள்ள நொறுங்கிப் போயிட்டேன். ஆனா என்ன செய்யமுடியும் சொல்லுங்க?

கட்சி முன்னகருறப்ப சிலர் உதிர்ந்தே ஆகணும். திரிபுவாதிகள், கோழைகள், சுயநலவாதிகள் உதிருவாங்க. சில சமயம் கட்சியைவிடப் பெரிசா தங்களோட ஈகோவை வைச்சிருக்கிற படிப்பாளிகளும், திறமைசாலிகளும் உதிர்ந்திடலாம். ஆனா
யாரா இருந்தாலும் உதிர்ந்தா உதிர்ந்தது தான். ஏன்னா கட்சிங்கறது புராணங்களில
சொல்றது போல ஒரு விராட புருஷன். நாமெல்லாம் அதன் உறுப்புகள். நாம அதை விட்டுப் பிரிஞ்சுட்டோம்னா அழுகி மட்கி இல்லாமப் போக வேண்டியதுதான்.

தருக்கம் தார்மீகத்தின் முன்பு மட்டுமே தோற்கும்.

வீரபத்ரபிள்ளை எழுதிய ஏகப்பட்ட கடிதங்களில் எனக்கு மிகவும் பிடித்தமான கடிதம் இது தான்:

ஜன்னலைத்திறந்து, பாதையில் போகும் பொறுக்கியை வேடிக்கை பார்க்கும் வீட்டு மனிதா, இது உனக்கு. வீடு உனக்கு பாதுகாப்பல்ல. ஏனெனில் உன்னிடம் என்ன உள்ளது? அர்த்தமற்ற பயங்களும், அசட்டு உணர்ச்சிகளும், கணந்தோறும் பழமைகொள்ளும் சில பொருட்களும், மலச்சிக்களும் தவிர? தெரு மனிதர்களை இகழாதே. உன்னால ஒரு போதும் அவர்களைப் புரிந்து கொள்ள முடியாது. எல்லை வகுக்கப்படாத எதையும் பார்க்கவோ உணரவோ உனக்கு அனுமதி இல்லை.
உனக்கு அத்தனையும் ரேசனில் வழங்கப்படுகின்றன. காலம், வெளி, ஒளி, நீர் எல்லாமெ. குடும்ப அட்டையை கையில் வைத்தபடி -குடும்பத்தலைவன் என்று குறிப்பிட்டிருப்பதன் அபத்தமான பெருமிதத்துடன் -மகிழ்ந்துபோன அத்மாவாக உன் வீட்டுக்குள் வாழ்கிறாய். கதவிடுக்கில் பீரிடுகிறது தெருவின் திறந்த காற்று. உன் ஆஸ்துமாவிற்கு அது எமன். மூடுடா கதவை.

என்னை மிகவும் பாதித்த கவிதை:

இன்னும் வாழ்பவன் அல்ல, ஆவியும் அல்ல,
இழிந்த விலங்கும் அல்ல, மனிதனும் அல்ல
இனம்காண முடியாத ஏதோ ஒன்றாய்…

-புஷ்கின் என்ற ரஷ்ய கவிஞர் எழுதிய கவிதை

புகாரின் ட்ராட்ஸ்கி ஸ்டாலின் ஆகிய மூவரைப் பற்றிய செய்திகள். புகாரின் சதியால் கொல்லப்பட்டார் என்று கேள்விப்பட்டுதான் வீரபத்ரபிள்ளையின் நிழல் கேள்வி கேட்க ஆரம்பித்தது என்றால், புகாரின் ஒன்றும் சதியில் சலைத்தவர் இல்லையே! புகாரின் லெனினுக்குப் பிறகு ட்ராட்ஸ்கி வந்துவிடக்கூடாது என்ற காரணத்தினால் தான் ஸ்டாலினை ஆதரித்தார். பிறகு பல கொலைகளை அவரும் ஸ்டாலினோடு சேர்ந்து நிகழ்த்தியிருக்கிறார். மிகில்னாய் ரயில் நிலயத்தில் சைபீரியாவின் கட்டாய வதை முகாம்களுக்கு சென்று கொண்டிருக்கும் விவசாயிகளைப் பார்க்கும் வரை அவரது நிழல் தூங்கிக்கொண்டுதான் இருந்தது. பிறகு ஸ்டாலினோடு எதிர்ப்பு வலுத்தபின்னர் அவரது ஈகோ முந்திக்கொண்டது. நிழல் விழித்துக்கொண்டது. அவரால் பின்வாங்க இயலவில்லை.

அதே நிலைதான் வீரபத்ரபிள்ளைக்கும். வீரபத்ரபிள்ளைக்கு தெரியும் புகாரின் ஒன்றும் மிக நல்லவர் இல்லை என்பது. ஸ்டாலினும் புகாரினும் சேர்ந்து நடத்திய அரசியல் படுகொலைகளை அவரும் அறிந்தவர் தான். எனினும் ஏதோ ஒன்று அவரது மனதுக்குள் புகுந்து கொண்டுள்ளது. அது ஈகோ மட்டுமே. வேற எதுவாகவும் இருக்க வாய்ப்பு இல்லை.

கீழே ட்ராட்ஸ்கி மற்றும் புகாரின் செய்த சதிகள் கூறப்படுகின்றன:

பிலிப்குஸ்மிச் மிரானோவ் செம்படையின் மகத்தான தளபதிகளில் ஒருவர். எட்டு வருடம் ட்ராட்ஸ்கியின் உயிர் நண்பராக இருந்தார். மிக எளிய கசாக்கு குடும்பத்தில் பிறந்து, ஜாரின் ராணுவத்தில் படைவீரராக இருந்தவர். ட்ராட்ஸ்கியால் செம்படையில் சேர்க்கப்பட்டார். அக்டோபர் புரட்சியில் கிரெம்ளினில் நுழைந்த முதல் படைப்பிரிவை நடத்தினார். 1921-ல் கசாக்குகளின் கிளர்ச்சியை அடக்கும்படி தென்முனைக்கு அனுப்பப்பட்டார். அங்கு எளிய கசாக்கு குலப் பொதுமக்களை செம்படை சூறையாடியதைக் கண்டு மனம் பொறாது ட்ராட்ஸ்கியிடம் வாதாடினார். செம்படையின் தளபதிகளை கட்டுப்படுத்த வேண்டும் இல்லையேல் கசாக்குகளை மொத்தமாக வெண்படை ஆதரவாளர்களாக மாற்றிவிடவே இம்மாதிரி நடவடிக்கைகள் உதவும் என்று முறையிட்டார். ட்ராட்ஸ்கி அதை ஏற்கவில்லை.
மிரானோவ் துரோகம் செய்ததாக குற்றம்சாட்டப்பட்டு சாரணைக்குட்படுத்தப்பட்டார். சுட்டுக் கொல்லப்பட்டார். அதற்கு உத்தரவிட்டது ட்ராட்ஸ்கிதான். இன்று ட்ராட்ஸ்கியின் இடத்தில் ஸ்டாலின். மிரானோவின் இடத்தில் புகாரின்.

ஏப்ரலில் மிகில்னாய் ரயில் நிலயத்தில் புகைவண்டி சிறிது நேரம் நின்றது. வெளியே
எட்டிப்பார்த்தேன். திறந்த வெளியில் கிழிசல் உடைகள் அணிந்த பல்லாயிரம் விவசாயிகள் படுத்துக்கிடந்தார்கள். அவர்களைச் சுற்றி கவச வண்டிகளினாலான வேலி. துப்பாக்கி ஏந்திய காவலர்கள். பனி அவர்கள்மீது திரையிட்டிருந்தது. காற்றில் அது விலகும் போது ஒட்டி உலர்ந்த உடல்கள் தெரிந்தன. மூட்டை முடிச்சுகள். ஊடாக…குழந்தைகள்; குளிரில் விறைத்து, நீலம் பாரித்த குழந்தைகள்! அவர்கள் சைபீரியாவிற்குப் போகும் குளக்குகள். பெரும்பாலானவர்கள் அங்கு திரட்டப்படுவதற்கு முன்பே இறந்துவிட்டிருப்பார்கள்.
ரயிலுக்காக வெட்டவெளியில் காத்திருக்கையில் மீதிப்பேர் சாவார்கள். சைபீரியாவுக்கு எத்தனை பேர் போய்ச்சேர்வார்கள் என்று கூற முடியாது. இதுவரை ஒன்றரை கோடி விவசாயிகள் கொல்லப்பட்டிருப்பார்கள். ஒன்றரைக்கோடி உடல்களை குவித்துப் போட்டால் பீட்டர்ஸ்பர்க்கிலும் மாஸ்கோவிலும் உள்ள அனைத்து கட்டிடங்களையும்விட பெரிய பிணமலைகளாக இருக்கும்.

வீரபத்ரபிள்ளை எழுதிய கவிதைகள் தொகுக்கப்பட்டுள்ளன. அவற்றுள் எனக்கு பிடித்த இரண்டு கவிதைகள்.

கடிதங்கள்

தபால் வசதி அனுமதிக்கப்படாத ஊர்களில்
பலநூறு கடிதங்கள் தினம்
எழுதப்படுகின்றன.
அவை காற்றில் குளிர்போல
கனத்து தொங்குகின்றன.
சிறு
காற்றில் வருடலில்
மழையாகி அவர்கள் மீதே விழுகின்றன.
குளிர்ந்து அவர்களைச்
சுற்றி இறுகிவிடுகின்றன.
கடிதங்களின் கடுங்குளிரில் அவர்கள் தூங்குகிறார்கள்.
அப்போது வெப்பமான காற்றை
அவர்கள் கனவு காண்கிறார்கள்
வானில் ஒளியாக
சொற்கள் பரவ
ஆத்மாக்கள் அவற்றை உண்ணும்
ஒரு மகத்தான தினத்தைக்
காண்கிறார்கள்
பின்பு விழித்தெழுந்து கண்ணீர் விடுகிறார்கள்
மறுநாள்
மீண்டும்
இறுகும் பனியை உடைத்தெழுந்து
கடிதங்களை எழுதத் தொடங்குகிறார்கள்.

இந்த கவிதை கண்டிப்பாக சைபீரிய வதைமுகாம்களில் பழி சுமத்தப்பட்டு தண்டனைகளை (பெரும்பாலும் மரண தண்டனை!) எதிர் நோக்கி காத்திருக்கும் மக்களை நினைத்து எழுதப்பட்டதாகத்தான் இருக்க வேண்டும். கடிதங்கள் என்பவை அவர்களது தாகங்கள். விடுதலைத் தாகங்கள். ஆனால் யாரிடமிருந்து விடுதலை? விடுதலை வேண்டு புரட்சி செய்தவர்கள், புரட்சிக்கு தலைமைதாங்கியவர்கள் தான் விடுதலையை எண்ணி கனவு காண்கின்றனர். வெப்பமான காற்று சர்வாதிகாரம் இல்லாத பொன்னுலகம். ஆம் பொன்னுலகம். கம்யூனிசம் தோன்றி நூற்றாண்டாகிவிட்டபோதும் இன்னும் எங்கும் காணக்கிடைக்காத பொன்னுலகம். மகத்தான் தினமும் பொன்னுலகைக் காணும் தினமே! இங்கு அவர்களை மூடிக்கொள்ளும் பனி என்பது சர்வாதிகாரம். மீண்டும் மீண்டும் அடக்குமுறைகளை அவர்கள் உடைத்துக்கொண்டேயிருக்கிறார்கள். அடக்குமுறைகளை கட்டுகளை அவிழ்த்தெரிந்துகொண்டேயிருக்கிறார்கள், மீண்டும் வேறு புதிய கயிறால் கட்டப்படும் வரை.

யாருக்காக

யாருக்காக எழுதப்படுகின்றன கவிதைகள்?
இன்னும் சூரியன்
உதிக்கிறது
ஒளிபட்ட பனிப்பாறை போல
அவ்வளவு கடும் குளிருடன்.
எலும்பைத்
துளைக்கும் அதன் புன்னகை
மலர்கள் மலர்கின்றன.
தொடும்போதே உதிர்கின்றன.
இன்னும் மிச்சமிருக்கின்றன என நான்
அள்ளியள்ளித் திரட்டும் நம்பிக்கைகளை
உடைக்கிறது தூரத்து ஓலம்.
கையேந்தி நின்று ரொட்டிக்காக மன்றாடும்
இந்தச் சிறுகுழந்தை கேட்கவில்லை
யாருக்காக எழுதிக்கொண்டிருக்கிறேன்
இக்
கவிதைகளை என்று.

கேரள தலித் தலைவர் ஐயன்காளியும் காந்தியும் சந்தித்திக்கொண்டதாக சொல்லப்படுகிற கதை ஒன்றும் இடம்பெறுகிறது. காந்தியின் அகிம்சை நன்றாக அலசப்படுகிறது.

ஸ்டாலின் செய்தது தவறு என்றால் எங்கே தவறு நடந்தது?

மார்க்ஸின் தத்துவப்படி பொருளாதாரக் காரணிகளால இயல்பா புரட்சி வரணும். லெனின் அரசியல் நடவடிக்கை மூலம் புரட்சியைக் கொண்டுவந்தார். லெனின் ரஷ்யாவில நடத்தினது அதுதான். விழிப்புற்ற ஒரு சிறுபான்மையினர் அரசியல் நடவடிக்கை மூலமா புரட்சியைக் கொண்டுவந்து, பொதுவுடைமை சமூகத்தை உருவாக்க ஆரம்பிச்சாங்க. இது வால் நாயை ஆட்டிவைக்கிற மாதிரி. ரஷ்யாவில நடந்த சகல குளறுபடிகளுக்கும் காரணம் தடியால அடிச்சு பழுக்கவைக்க லெனின் செஞ்ச முயற்சிதான்.

இன்னைக்கு சுரண்டல் பிரம்மாண்ட வல்லமையா மாறியிருக்கு. அதுகிட்ட சாட்டையும் துப்பாக்கியும் இல்ல. அணுகுண்டும் கம்ப்யூட்டரும் இருக்கு. நம்மை ஏகாதிபத்தியம் அழிச்சிட்டிருக்கு. நம்ம வளங்கள் அழியுது. நம்ம உடல்கள் கெடுது. நம்ம கலாச்சாரம் சீரழியுது. ஏகாதிபத்தியம் இன்னைக்கு நம்மை பயமுறுத்தல. நம்மை அது மனோவசியம் பண்ணுது. நாம அதை விரும்பி வரவேற்றுத்
தலைமேலே தூக்கி வெச்சிட்டிருக்கோம். நீங்களும் நானும் சிந்திக்கிறதில கூட
ஏகாதிபத்திய விஷம் கலந்திருக்கு.

மார்க்ஸிசத்தில குறைகள் இருக்கலாம். அந்த குறைகளுக்காக நாம அதை நிராகரிச்சா பிறகு என்ன மிஞ்சும்? போராடத் தெரியாத மக்களா, அடிமைச் சவங்களா மண்மேல வாழறதா? மார்க்ஸிசத்தவிட தீவிரமான ஒரு போராட்ட ஆயுதம்
கிடைக்கிற வரை மார்க்ஸிசத்தை உலகம் கைவிட முடியாது. ஏன்னா மார்க்ஸிசம் ஒரு
எதிர்ப்பு சக்தி.

ஓநாயும் மனிதனும் சேர்ந்து வாழ்வது எப்படி? என்ற நாடகம் மிகவும் நன்றாக இருந்தது. மொத்த நாவலையுன் ஒரு நாடகத்தில் அடக்கி parody செய்தது போல இருந்தது. மகாபாரதம், வேதங்கள், கிறிஸ்தவம் என்று அனைத்தையும் ஜெயமோகன் ரஷ்ய கம்யூனிசத்தோடு ஒப்பிடுகிறார். நான் சிரித்ததைப் பார்த்து என் நண்பர் ஒருவர் எனக்கு வாசித்துக்காட்டு என்று சொல்லிவிட்டார். நாவல் படிக்க நேரமில்லை என்றால் கண்டிப்பாக இந்த ஒரு நாடகத்தை மட்டுமாவது படியுங்கள்! நாடகத்தில் வரும் கோழி கூட “ரிபப்ளிக்கோ! ரிபப்ளிக்கோ!” என்று கூவுகிறது.

***

னக்கு கம்யூனிசம் தெரியாது. நான் கட்சி சார்ந்தவனும் அல்ல. ஆனால் இந்த நாவல் எனக்கு கம்யூனிசத்தின் வேர்களை அறிய உதவியிருக்கிறது. கம்யூனிசத்தைப் பற்றிய நன்மைதீமைகளை அறிந்து கொள்ள உதவியிருக்கிறது. என் மனமும் புத்தியும் திறந்தேயிருக்கிறது. நான் கம்யூனிசத்தை சார்ந்தவனும் அல்லன். முதலாளித்துவத்தை சார்ந்தவனும் அல்லன். நான் கிடைக்கும் தகவல்களை சேகரித்துக் கொண்டிருக்கிறேன். படித்துக்கொண்டிருக்கிறேன். என்னால் எந்த நிலைப்பாடுக்கும் வரமுடியவில்லை. இந்த நாவலைப் படித்த கம்யூனிஸ்ட் எவரும் கண்டிப்பாக கடும் கோபம் கொள்வார்கள். இல்லையேல் கோபம் கொள்வதைப் போன்று நடிக்கவாவது செய்வார்கள். வேறு என்ன செய்ய முடியும்? கம்யூனிசமும் கட்சிதானே? அதை நம்பியும் மக்கள் இருக்கிறார்களே? அரசியல் தொழிலாக ஆகிவிட்டது இல்லையா? கொள்கை என்ற ஒன்றை அனைத்து கட்சிகளும் தார்மீக உரிமையுடன் உடைத்து எறிந்து விட்டனரே! இந்த ஒரு விஷயத்தில் அனைத்துக் கட்சிகளுக்கும் ஒரே கொள்கை. இதில் கம்யூனிசம் மட்டும் எப்படி விதிவிலக்காகும்? கட்சியை விட்டுத்தள்ளுங்கள். அது ஒரு பெரிய இயக்கம். நம்மிடம் கொள்கைகள் இருக்கிறதா? கொள்கைகளுக்காக நாம் நமக்கு மிகவும் தேவையான ஒன்றை இலக்கத் தயராக இருக்கிறோமா? அப்படி இழக்கத்தான் வேண்டுமா? இழந்தால் மட்டும் நாம் என்ன சாதித்து விட முடியும்? இழக்காமல் என்ன சாதிக்கிறோம்? வரலாறு நாம் இழந்தாலும் இழக்காவிட்டாலும் இயங்கிக்கொண்டேதான் இருக்கிறது. எண்ணற்ற உயிர்களை தனி மனித கொள்கைகளுக்காக பலிவாங்கிக்கொண்டேதான் இருக்கிறது.

சைபீரியா வதை முகாம்களுக்கு அனுப்பப்பட்ட குளக்குகள் பற்றி ஒரு கம்யூனிஸ்ட் சொல்லும் போது: “அவர்களை கட்டாய உழைப்புக்கு அனுப்பி வைத்தோம். உழைக்கச்சொன்னால் யாவருக்கும் கஷ்டம் தான்” என்று வாதிடுகிறார். ஒரு விஷயத்தில் இரு வேறு விதமான பார்வைகள் எப்பொழுதுமே இருக்கின்றன. ஒருமுகமாக அல்லது ஒருசார்பாக ஒரு விஷயத்தை அனுகினால் அதன் உண்மையை நாம் அறியமுடியாமல் போய் விடும். Have an un-biased-view!

***

மேலும் படிப்பதற்கு வேறு சுட்டிகள்:

புகாரின்:
http://en.wikipedia.org/wiki/Nikolai_Bukharin
http://art-bin.com/art/obukharin.html
http://www.marxists.org/archive/bukharin/works/1938/trial/index.htm
http://www.fee.org/publications/the-freeman/article.asp?aid=545

புகாரினின் மனைவி:
http://en.wikipedia.org/wiki/Anna_Larina

ஸ்டாலின்:
http://en.wikipedia.org/wiki/Stalin

குளக்குகளும் சைபீரியா வதைமுகாம்களும்:
http://en.wikipedia.org/wiki/Kulak
http://www.economicexpert.com/a/Kulak.htm

கேரளாவின் அய்யன்காளி:
http://en.wikipedia.org/wiki/Ayyankali

ரணதிவே:
http://www.citu.org.in/btr%20.htm

கவிஞர் புஷ்கின்:
http://en.wikipedia.org/wiki/Aleksandr_Pushkin

எழுத்தாளர் குப்ரின்:
http://en.wikipedia.org/wiki/Alexander_Kuprin

தச்ஸ்தோய்:
http://en.wikipedia.org/wiki/Tolstoy

Gathering The Water

ராபர்ட் எட்ரிக் எழுதிய “கேதரிங் த வாட்டர்” என்ற புத்தகத்தைப் படித்து இரண்டொரு மாதங்கள் ஆகியிருந்த பொழுதும் அதைப் பற்றி எழுத வேண்டும் என்கிற எண்ணம் என்னுள் இருந்து கொண்டேயிருந்தது. போன வருடம் புக்கர் பரிசுக்கு பரிந்துரை செய்யப்பட்ட புத்தகங்களில் இதுவும் ஒன்று. பரிந்துரைப் பட்டியலைப் பார்த்தபொழுதிலிருந்து தண்ணீரை சேமித்தல் என்கிற வித்தியாசமான தலைப்பு என்னுள் ஒருவித ஆர்வத்தைத் தூண்டுவதாகவே இருந்தது.

பைபிளின் ஆங்கிலம் போல இந்தப்புத்தகத்தின் ஆங்கிலம் இருக்கிறது என்றது ஒரு blurb. நான் பைபிள் படித்ததில்லை. ஆங்கிலம் எனக்கு வித்தியாசமாகவும் படவில்லை.

1847 இல் வட இங்கிலாந்தில் போர்ட் பள்ளத்தாக்கில் கட்டப்பட்ட ஒரு அணையினால் ஏற்படவிருக்கும் வெள்ளத்தால் அந்த பகுதி மக்கள் தங்கள் வீடுகளைக் காலி செய்யவேண்டிய நிலை ஏற்படுகிறது. இதை (வெள்ளத்தையும், மக்கள் வெளியேறுவதையும்) மேற்பார்வையிட “சார்லஸ் வெயிட்மேன்” என்பவர் அணை கட்டும் நிறுவனத்தால் நியமிக்கப்படுகிறார். அவருக்கு அந்த பகுதியிலே ஒரு பழையவீடு ஒதுக்கப்படுகிறது.

சார்லஸ் தன் மனைவி (fiancee) ஹெலனை சமீபத்தில் தான் இழந்திருக்கிறார். கொடுங்காய்ச்சலால் அவதிப்பட்ட அவர் திடீரென ஒருநாள் இறந்துவிடுகிறார்.

இந்த வேலையில் பெரிதும் நாட்டமில்லாமல் போர்ட் பள்ளத்தாக்கிற்கு வரும் சார்லஸ் அங்கு இன்னும் அனேக மக்கள் காலி செய்யாமல் இருப்பதை பார்த்து ஆச்சரியப்படுகிறார்.

ஒரு நாள் மீன் போன்று விரல்கள் இணைந்த (webbed) காலையும் கையையும் கொண்ட ஒரு மனிதன் இவரது வீட்டுக்கு வெளியே நிற்கிறான். வீட்டுக்குள் வர மறுக்கிறான். மிகுந்த கோபமாக இருக்கிறான். இந்த இடம் வெள்ளத்தால் முழுதும் அழிந்தால் கூட நான் இந்த இடத்தை விட்டுப் போக மாட்டேன் என்கிறான். தனது வீட்டை ரெயில்வே கம்பெணி மிகக்குறைந்த விலைக்கு எடுத்துக்கொண்டார்கள் என்றும், அவர்களை கோர்ட்டுக்கு இழுத்து நியாயம் கிடைக்கும் வரையில் போராடுவேன் என்றும் கூறுகிறான்.மனநிலை சரியில்லாதவன் போல இருக்கிறான்.

சார்லஸ் தன் வீட்டிற்கு முன்னால் இருக்கும் சிறு மலையில் இரு பெண்கள் தன்னைத் தொடர்ந்து கவனிப்பதைப் பார்த்து, கை அசைக்கிறார். அவர்கள் பதிலுக்கு கை அசைக்காமல் திரும்பி சென்றுவிடுகின்றனர்.

இவ்வாறாக, அவரது வருகை அங்கிருக்கும் மக்களுக்கு ஆர்வத்தைத்தூண்டுவதாக இருந்தாலும் பெரும்பாலானவர்களுக்கு பிடிக்காமல் இருக்கிறது.

பிறகு ஒரு நாள், முன்பு மலையில் பார்த்த இரு பெண்களில் ஒருவர், அவராகவே வந்து சார்லஸிடம் தன்னை மேரி என்று அறிமுகப்படுத்திக்கொள்கிறார். மேரிக்கு ஒரு மனநிலை சரியில்லாத தங்கை இருக்கிறார். அவர் பெயர் மார்த்தா. மார்த்தா இருபத்து ஏழு வருடங்களுக்கு முன் ஒரு காப்பகத்தில் இருந்தார். மேரி தனது லண்டன் வாழ்க்கை கசப்பாக போனபிறகு மார்த்தாவை காப்பகத்திலிருந்து அழைத்து வந்து தன்னுடன் வைத்துக்கொண்டார். இரு சகோதிரிகளும் ஊர் மக்களிடமிருந்து விலகியே இருக்கின்றனர்.

இவ்வாறான தங்களது சொந்த சோகங்களால் மேரியும், சார்லஸ¤ம் ஈர்க்கப்படுகின்றனர்.சார்லஸ் தனது மனைவியின் நினைவுகளை மேரியிடம் பகிர்ந்து கொள்கிறார்.

ஒரு முறை ஏரியைச் சுற்றி தனது மனைவியுடன் நடந்து கொண்டிருக்கும் பொழுது ஒரு பறவையை (வாத்து) ஒரு மீன் (spike) கவ்விப்பிடித்து திண்பதை சார்லஸ் பார்க்கிறார். அந்த சமயம் வேறு திசையில் பார்த்துக்கொண்டிருந்த அவரது மனைவி ஹெலன் இந்த காட்சியைக் காணத்தவறுகிறார். ஹெலன் பார்க்கும்பொழுது ஏரியில் – சார்லஸ் காட்டிய இடத்தில் – சிறிய அலைகளே சுழல்கின்றன. சார்லஸ், பறவையை மீன் பிடித்தது என்று எத்தனையோ முறை சத்தியம் பண்ணாத குறையாக திரும்பத்திரும்ப சொல்லிப்பார்க்கிறார். எனினும் என்ன காரணத்தாலோ அவரது மனைவி அவரை நம்பவேயில்லை. தண்ணீரில் ஏதாவது கல் விழுந்திருக்கலாம் என்கிறார். ஏன் அவள் நம்பவில்லை என்று தனக்கு இன்னும் புரியவில்லை என்று மேரியிடம் கூறுகிறார் சார்லஸ். ஏன் ஹெலன் சார்லசை நம்பவில்லை என்று எனக்கும் புரியவில்லை என்று நான் உங்களிடம் கூறுகிறேன். எல்லா மனைவிகளும் கணவர்களை நம்பிவிடுவதில்லை. சிலர் புத்திசாலிகளாக இருக்கிறார்கள்!

மேரியும், தான் இந்த ஊரில் வாழ்ந்த சின்ன வயது நினைவுகளை சார்லஸிடம் பகிர்ந்து கொள்கிறார். ஒரு நடத்தைதவறிய மனைவியை அவளுடைய கணவன் கொன்று, அவளை பாலத்தின் அடியில் தெளிவற்று ஓடிக்கொண்டிருக்கும் ஓடையின் கற்களுக்கு கீழே புதைத்துவிட்டதாக, தான் சிறு வயது முதல் கேட்டுவந்த நம்பிக்கையை (அல்லது கதையை) சார்லஸிடம் பகிர்ந்துகொள்கிறார் மேரி.

இருவரும் ஒருவருக்கு ஒருவர் பரஸ்பரம் அன்பாகவும் ஆறுதலாகவும் இருக்கின்றனர். மேரி, மார்த்தாவுக்கு போதுமான வசதிகள் காப்பகத்தில் கிடைக்கவில்லையென்றும், அதனால் தான் தன்னுடனே தங்குவதற்கு அழைத்துவந்துவிட்டதாகவும் சொல்கிறார். ஆனால், அணை கட்டுமான கம்பெனி, தான் நிறைய இழப்பீடு பெறுவதற்கே மார்த்தாவை அழைத்துவந்தாக நினைக்கிறது என்றும், தனது இழப்பீடு மார்த்தாவை மீண்டும் காப்பகத்தில் கொண்டு விடுவதைச் சார்ந்தே இருக்கிறது என்கிறார். தற்போது தனது வீட்டுக்கு இழப்பீடாக கட்டுமான கம்பெனி வழங்கிய தொகை எந்தவகையிலும் ஏற்புடையதாக இல்லை என்று கூறி கமிட்டியிடமிருந்து வந்த கடிதத்தை கிழித்தெரிகிறார்.

காலியான வீடுகளை சிதைக்க வந்திருப்பவர்கள் வெள்ளம் வருவதற்கு முன்பே வேலையை ஆரம்பிக்கின்றனர். சிலர் சமாதிகளைக் கூட தோண்டுகின்றனர்.

மக்கள் கொஞ்சம் கொஞ்சமாக வீடுகளைக் காலி செய்ய தொடங்குகின்றனர். ஒரு குடும்பம் தன் பொருட்களை முழுவதும் எரிப்பதைப் பார்க்கிறார் சார்லஸ். ஒரு நாள் தண்ணீரில் சுழல் ஏற்பட்டுவிட்டதென்று சார்லஸ் அழைக்கப்படுகிறார். பெரும் கூட்டம் அங்கே கூடியிருக்கிறது. அங்கிருந்த ஒரு பெண் தனது ஆடு அந்த இடத்தில் மூழ்கத்தெரிந்தது என்கிறார். சார்லஸ் தண்ணீருக்குள் இறங்கி பார்வையிட்டுத் திரும்புகிறார்.கூட்டம் கலைகிறது.

அம்மை நோய் பரவிக்கொண்டிருப்பதாக வதந்தி பரவுகிறது. நோயை விட வதந்தி வேகமாக பரவுகிறது. மறுபடியும் அந்த இணைந்த விரல்கள் மனிதன் வருகிறான். இம்முறை ஏனோ அவன் வழக்கத்துக்கு மாறாக மிகவும் அமைதியாக இருக்கிறான். இப்பொழுதுதான் முதன் முறையாக சார்லசைப் பார்ப்பது போல பேசுகிறான். மேரி குடும்பத்துக்கு தான் மிகவும் அறிமுகமானவன் என்றும், மார்த்தாவைத் தனக்கு மிகவும் பிடிக்கும் என்றும் கூறுகிறான். ஆனால் மேரி தன்னை மிகவும் வெறுக்கிறாள் என்கிறான்.

சார்லஸ் தான் தண்ணீர் அடர்ந்த சதுப்பு நிலத்தில் வழுக்கிவிடாமல் லாவகமாக நடப்பதை கனவில் காண்கிறான். உள்ளூர் மக்கள் அவனை கைதட்டி உற்சாகப்படுத்துகின்றனர். சார்லஸ் சிரிக்கிறான்.

மேரி, மார்த்தாவை திரும்பவும் காப்பகத்திலே சென்று விட்டுவிடத் தீர்மானிக்கிறாள். சார்லஸிடம் இதைக்கூறுகிறாள். மேலும் அணைக்குப் பக்கத்திலே இருக்கும் ஒரு வீட்டில் குழந்தை ஒன்று இறந்துவிட்டது என்றும் கூறுகிறாள்.

சார்லஸ் காக்கை இறகுகள் தரையில் கிடப்பதைப்பார்த்து, அவற்றைச் சேமிக்கிறான். தனது மனைவி ஹெலன் காக்கை இறகுகளை சிறு நினைவு பொருட்கள் செய்வதற்கு பயன்படுத்தியதை நினைத்துப்பார்க்கிறான். அவற்றை தனது சட்டைப்பையில் வைத்துக்கொண்டு வீட்டிற்கு திரும்பும் வழியில், அந்த ஊர்க்காரன் ஒருவன் காக்கை இறகுகள் உனக்கு கெட்ட விசயங்களை (துர் அதிர்ஷ்டங்கள்) கொண்டுவரும் என்கிறான்.

மார்த்தாவைக் காப்பகத்தில் கொண்டு போய் விடும் நாளன்று சார்லஸ், மேரியை தேடி அவள் வீட்டுக்கு செல்கிறான். வீட்டுக்குப் போகாமல் வெளியிலே, வரும் வழியிலே நிற்கிறான். நேரம் பறந்து கொண்டிருந்தும் மேரி வரவில்லை. மார்த்தாவை கவனித்துக்கொள்ளும் பணிப்பெண் சார்லஸைப் பார்த்து என்ன இங்கு நின்று கொண்டிருக்கிறீர்கள் என்கிறாள். சார்லஸ் விசயத்தை சொன்னவுடன், மேரி நேற்றே மார்த்தாவை காப்பகத்தில் சென்று விட்டுவிட்டாளே என்கிறாள். மேலும் மேரி நேற்று இரவு வந்த பொழுது மிகவும் சோர்வாகவும், சோகமாகவும் இருந்ததாகக் கூறுகிறாள்.

இருவரும் மேரியின் வீட்டிற்கு செல்கின்றனர். வீடு திறந்து கிடக்கிறது. பொருட்கள் கலைந்து, சிதறிக் கிடக்கிறது. யாரும் இல்லை. சார்லஸ் அலைந்து திரிந்து தேடுகிறான். உள்ளூர்காரர்கள் சிலரை துணைக்கு அழைத்துக்கொள்கிறான். எவ்வளவு தேடியும், எங்கு தேடியும், மேரி கிடைக்கவில்லை.

கமிட்டி சார்லஸை சந்திக்க வருகிறது. கமிட்டியைப் பார்த்ததும் ஊர் மக்கள் கூடிவிடுகிறார்கள். கமிட்டி இன்னும் காலி செய்யாதவர்களுக்கு, இழப்பீடு அதிகரிக்கப்படும் என்று கூறுகிறது. ஆனால் உண்மையில் அவர்கள் எதுவும் கொடுக்கப் போவதில்லை என்று சார்லஸிடம் தனிமையில் சொல்கிறார்கள். மேலும் அவர்கள் தண்ணீரின் அளவு கனிசமாக அதிகரித்துவிட்டது என்றும் நீங்கள் ஏன் இங்கேயே இன்னும் இருக்கிறீர்கள், வேறு ப்ராஜெக்ட்டுக்கு மாறவேண்டும் என்றும் சொல்கிறார்கள்.

மேரியின் உடல் அணைக்கு அருகே தண்ணீரில் மிதந்து கொண்டிருப்பதை மக்கள் காண்கிறார்கள். அவரது ஆடை பெரிதும் கிழிந்திருக்கிறது. சார்லஸ் அவரது உடலை, அணையின் ஆழத்திலிருந்து மீட்கும் கடினமான வேலையைச் செய்கிறார்.மேரி தான் ஆடை கிழிந்து உடல் தெரிய தண்ணீரில் மிதப்பதைப் பார்த்தால் என்ன நினைப்பாள் என்று நினைக்கிறார்.

புது வருடம் வரையில் அவர் அங்கேயே இருக்கிறார். அடிக்கடி மேரி அவரது கனவில் தோன்றி நீங்கள் தான் என் பாதுகாவலர் என்கிறார். பயத்துடனும் குழப்பத்துடனும் சார்லஸ் தனது கனவுகளைக் கழிக்கிறார்.

திரில்லோ, சஸ்பென்ஸோ, திருப்பங்களோ இல்லாத நாவல். ஆனால் அருமையான அமைதியான அழகான எழுத்து நடை. அலைகள் அதிகம் இல்லாத அமைதியான நீர்மட்டம், இந்த நாவல்.

Gathering the water : Robert Edric

Digital Fortress


இது நான் படித்த, Dan Brown எழுதிய, இரண்டாவது நாவல். Da Vinci Code ஒரு அற்புதமான நாவல். பக்கத்துக்குப் பக்கம் வித்தியாசம் படிக்க படிக்கப் சுவாரஸ்யம் என்ற விளம்பரம் குங்குமத்திற்கு பொருந்துகிறதோ இல்லையோ, Da vinci code க்குப் பொருந்தும். ஒவ்வொரு அத்தியாயத்தின் முடிவிலும் ஒரு திருப்பம் நிச்சயம்.

‘Digital Fortress’ என்ற நாவலை நிறைய மக்கள் கையில் வைத்திருப்பதைப் பார்த்திருக்கிறேன். நல்ல நாவல் என்றும் சொல்லக் கேள்வி. மேலும் இது கம்ப்யூட்டர், மற்றும் encryption, decrption ஐ சார்ந்திருப்பதால், ஒரு இயற்கையான ஆர்வ மிகுதியால் இந்த நாவலை படிக்க ஆரம்பித்தேன்.

நாவலின் கரு decryption. உலகத்தில் உள்ள அனைவரது இரகசியங்களையும் உடைத்துப் பார்க்கவல்லது TRANSLTR. இங்கே இரகசியம் என்றால் பூட்டிவைக்கப்பட்டது என்று பொருள்கொள்க. மறைக்கப்படாதது இரகசியமா? அது என்ன TRANSLATR? NSA (National Security Agency) decrypt செய்வதற்காக கண்டுபிடித்தது தான் TRANSLTR என்ற இராட்சத decryptor. ஒரு மில்லியன் processors. எல்லா algorithm களையும் எளிதாக decrypt செய்யவல்லது. 64 bit pass-key ஐயும் பத்தே நிமிடத்தில் decrypt செய்து விடும். NSA இதை பில்லியன் டாலர் செலவு செய்து கண்டுபிடித்து, உலகத்திற்கு Project Failure என்று அறிவித்துவிடுகிறது. உலகம் இதை நம்பி தாராளமாக encrypt செய்த message களை இணையத்தில் அனுப்பிக்கொண்டிருக்க, NSA உட்கார்ந்த இடத்திலிருந்து எளிதாக decrypt செய்து தீவிரவாத செயல்களை தடுக்கிறது. உதாரணத்திற்கு Bombing a school.

எனக்கு எப்படி TRANSLTR எல்லாவற்றையும் decrypt செய்ய முடிகிறது என்ற சந்தேகம் இருந்தது. TRANSLTR ஐ பொருத்தவரை decrypt செய்ய முடியாத algorithm இந்த உலகத்திலே இல்லை. அதெப்படி சாத்தியம் என்றால், Dan Brown சொல்கிறார்:

Susan had learned about the Bergofsky Principle early in her career. It was a
cornerstone of brute-force technology. It was also Strathmore’s inspiration for
building TRANSLTR. The principle clearly stated that if a computer tried enough
keys, it was mathematically guaranteed to find the right one. A code’s security
was not that its pass-key was unfindable but rather that most people didn’t have
the time or equipment to try.

Bergofsky Principle என்பது fiction. brute force என்பது nothing but trial and error. இது ஒரு லாக் செய்யப்பட்ட program என்றால் சரி. brute force ஐ பயன்படுத்தி திறந்துவிடலாம். திறந்து விட்டொம் என்பது run ஆகிக்கொண்டிருக்கும் புது program ஐ வைத்து தெரிந்து கொள்ளலாம். ஒரு சாதாரண message என்று வைத்துக்கொள்ளுங்கள், நாம் unlock செய்து விட்டொம் என்பதை எப்படி தெரிந்து கொள்வது?

உதாரணத்திற்கு :
HL FKZL VD LDS

என்ற message encrypt செய்யப்பட்டுள்ளது. இதற்கு key என்னவென்றால்: Replace each letter with a letter that follows in it in the alphabet. அதாவது : H->I L->M F->G.

So, decrypt செய்ததற்கப்புறம், IM GLAD WE MET என்று கிடைக்கும். சரி, இதுதான் சரியான decrypted message என்பது எப்படி confirm பண்ணுவது?

உலகத்திலுள்ள எல்லா encrypted message ஐயும் எளிதாக (அதிகபட்சமாக 40 நிமிடம்) decrypt செய்யும் TRANSLTR ஒரு fileஐ 16 மணி நேரமாக decrypt செய்ய இயலாமல் திணறக்கொண்டிருக்கிறது.

Tankoda என்ற ஜப்பானிய இளைஞர் (NSA Alumni) எழுதிய encryption algorithm பயன்படுத்தப்பட்டு encrypt செய்யப்பட்ட file அது. அந்த algorithm , rotating clear text என்ற concept ஐ அடிப்படையாக வைத்து எழுதப்பட்டது. decrypt செய்ய முடியாது. யாராலும். even TRANSLTR.

அது என்ன rotating clear text algorithm?

The notion of a rotating cleartext function was first put forth in an obscure,
1987 paper by a Hungarian mathematician, Josef Harne. Because brute-force
computers broke codes by examining cleartext for identifiable word patterns,
Harne proposed an encryption algorithm that, in addition to encrypting, shifted
decrypted cleartext over a time variant. In theory, the perpetual mutation would
ensure that the attacking computer would never locate recognisable word patterns
and thus never know when it had found the proper key. The concept was somewhat
like the idea of colonising Mars—fathomable on an intellectual level, but, at
present, well beyond human ability

rotaing clear text என்பது fiction. இது பொய் என்று பிற்பாடு நாவலில் கூறப்படுகிறது. என்றாலும், படிக்கும் போது இதை நம்ப முடியவில்லை. இது தான் நாவலின் மையம். Not a strong foundation huh?

மேலும் இன்னொரு விசயம். கிட்டத்தட்ட எனக்கு சிரிப்பே வந்து விட்டது. A tracer program.

Susan had created, in effect, a directional beacon disguised as a piece of
E-mail. She could send it to the user’s phony address, and the remailing
company, performing the duty for which it had been contracted, would forward it
to the user’s real address. Once there, the program would record its Internet
location and send word back to the NSA. Then the program would disintegrate
without a trace. From that day on, as far as the NSA was concerned, anonymous
remailers were nothing more than a minor annoyance

email தன்னைத்தானே execute செய்ய முடியாது. அது just data. not an executable. ஈமெயிலை திறந்து பார்ப்பவரின் ஒத்துழைப்பு இல்லாமல் அதை execute செய்ய முடியாது. நாமே, நமக்கு தெரியாத நபரிடமிருந்து மெயில் வந்தால் திறந்து பார்க்க யோசிக்கிறோம். யாராலும் decrypt செய்யமுடியாத algorithm எழுதியவர் அவ்வளவு எளிதாக ஏமாந்துவிடுவாரா என்ன? அதுவும் “delete itself” கண்டிப்பாக முடியாது. Dan Brown கொஞ்சம் யோசித்திருக்கலாம். இவ்வாறான குறைகள் நாவலில் ஒரு பிடிப்பை ஏற்படுத்தவில்லை. Biggest Plot Holes. Treat yourself as a computer illiterate, you could enjoy the novel.

Tankoda, decrypt செய்ய முடியாத algorithm ஒன்றை எழுதி (Digital fortress), அதை அந்த algorithm பயன்படுத்தி encrypt செய்து இணையத்தில் போஸ்ட் செய்து விடுகிறார். எல்லோரும் download செய்து கொள்ளலாம். ஆனால் யாராலும் encrypt செய்ய முடியாது. அதற்கான pass-key Tankoda விடம் மட்டுமே இருக்கிறது. மேலுன் இன்னொரு North Dakota என்ற பார்டனரிடம் இன்னொரு key இருக்கிறது. Tankoda NSA விற்கு கெடு கொடுக்கிறார். TRANSLTR உங்களிடம் இருக்கிறது என்று பகிரங்கமாக ஒத்துக்கொள்ளுங்கள், நான் Digital Fortress ஐ destroy செய்து விடுகிறேன். இல்லையேல் நான் pass-key ஐ பொது மக்களிடம் கொடுத்துவிடுவேன். அனைவரும் digital fortress வைத்து encrypt செய்து கொள்ளலாம்.

NSA இதை ஒரு சந்தர்பமாக கருதுகிறது. Digital Fortress ஐ break செய்துவிட்டு, அதற்கு ஒரு back door entry வைத்து (rewrite code), மறுபடியும் போஸ்ட் செய்து விடுவது.so, every one will think Digital Fortress in unbreakable and will switch to digital fortress to encrypt message/files while NSA happily decrypts all the messages.
இவ்வாறு அனைத்து message களையும் decrypt செய்வது தீவிரவாதத்தையும், பயங்கரவாதத்தையும் தரம் பிரிக்க உதவும் என்பது ஒரு பக்கம் இருந்தாலும், what happens to peoples privacy? Guards are guarding us, but who will guard the guards? இன்றைக்கு இருக்கும் government TRANSLTR ஐ நல்ல விசயத்திற்கு பயன் படுத்துகிறது. நாளை? After all these things, everyone has a right to keep their secrets, aint it?

பாலத்தின் அந்தப் பக்கம்

எஸ்.ராமகிருஷ்ணனின் நெடுங்குருதியைப் படித்தவர்களுக்கு சந்ததி சந்ததியாக தவழ்ந்து செல்லும் கதைக்களம் நினைவில் இருக்கலாம். எனக்கு நெடுங்குருதியை வாசிக்கும் பொழுது சற்று அலுப்பே மேலிட்டது. என்னடா இது கதை அனுமார் வால் போல நீண்டு கொண்டே செல்கிறது என்று. ஆனாலும் ஆசிரியரின் எழுத்து என்னை கட்டிப்போட்டிருந்தது. வெயில் அவன் கால்களைப்பிடித்து ஏறிக்கொண்டிருந்தது என்று வாசிக்கும் பொழுது நானும் வெயிலாக மாறி நாவலைச்சுற்றி படர்ந்து கொண்டிருந்தேன். எஸ். ராமகிருஷ்ணனின் வாக்கியங்கள் தமிழ் இலக்கியத்திற்கு புதியவை.

அதே போன்றதொரு சந்ததி கதை தான் The Glass Palace. Blurb ல் மூன்று சந்ததியினரின் கதை என்று போட்டிருக்கிறார்கள். ஆனால் என்னைப்பொருத்தவரை இது ஐந்து சந்ததியினரின் கதை. ராஜ்குமாரின் அம்மா, ராஜ்குமார், ராஜ்குமாரின் மகன்-நீல், நீலினுடைய மகள் ஜெயா, ஜெயாவின் அமெரிக்காவில் படிக்கும் மகன் என ஐந்து சந்ததியினரின் கதை இது.

பர்மாவில் தொடங்கி, இந்தியாவின் ரத்னகிரியில் தவழ்ந்து, மலேசியாவை நோக்கி படர்ந்து, பிறகு கல்கத்தாவில் கால் பதித்து மறுபடியும் பர்மாவிலே முடியும் கதை The Glass Palace. 540 பக்கங்கள் கொண்ட இந்த நாவலில் அத்தியாயங்கள் தோறும் The Glass Palace இன் சுவடுகளை தேடிக்கொண்டேயிருந்தேன். அது கடைசி அத்தியாயங்களில் தெரியவருகிறது.

நாவல் தோறும் ஒரு கடினமான இறுக்கம் நம்மை கதையுடன் பிணைக்கிறது. மனிதர்களை மிகுந்த கவனத்தோடு ஆராய்ந்திருக்கிறார். மிகத்துள்ளியமாக கதாப்பாத்திரங்களை செதுக்கியிருக்கிறார். 550 பக்கங்களிலும் ஒரு கதாப்பாத்திரம் பயணிக்க வேண்டுமெனில் அந்த கதாப்பாத்திரம் எவ்வளவு வலிவோடு இருக்கவேண்டும். அவ்வளவு வலிவோடு இருக்கிறார் கதையின் நாயகன் ராஜ்குமார்.

ஏகாதிபத்தியமும், அடக்குமுறையும் பலவாறு நாவல் தோறும் விவாதிக்கப்படுகின்றது. இந்திய சுதந்திரப்போராட்டத்தில் காந்தியின் வழி சரியா அல்லது நேதாஜியின் வழி சரியா என்ற விவாதம் நன்றாக இருந்தது. இந்திய வீரர்கள் ஆங்கிலேயர்களால் பிற நாடுளின் சுதந்திர போராட்டத்தை அடக்க பயன்படுத்தப்பட்டது விவாதிக்கப்படுகிறது. இந்திய வீரர்களை கைக்கூலிகள் என்றழைப்பது சரியா? இந்திய இராணுவத்தில் இருக்கிறார்கள் ஆனால் இங்கிலாந்திற்காக சண்டைபோடுகிறார்கள். இந்தியாவிற்காக சண்டையிட்டால் அது தேசப்பற்று. இங்கிலாந்திற்காக சண்டையிட்டால் அது தொழில் தானே. விசுவாசம் என்ற ஒற்றைச் சொல்லே அவர்களது விழிகளை கட்டிப்போட்டிருந்திருக்கிறது, நேதாஜி வரும் வரை.

இந்திய வீரர்களின் சுதந்திர தாகம் உணர்ச்சிவசப்பட வைக்கிறது. அதுவும் மலேசிய வாழ் இந்தியர்கள் (குறிப்பாக தமிழர்கள்) , இந்தியாவை ஒரு முறை கூட பார்க்காமல், போராட்டத்தில் தீவிரமாக இறங்குவது மெய்சிலிர்க்கவைக்கிறது. அவ்வாறான தேசப்பற்று இன்னும் நம்மில் யாருக்கேனும் ஒட்டிக்கொண்டிருக்கிறதா என்பது ஐயமே! பர்மாவின் அடக்குமுறையும், ஜப்பானின் காலனியலிசமும், இங்கிலாந்தின் ஏகாதிபத்தியமும் கூட விரிவாக ஆராயப்படுகின்றன. பர்மாவின் மன்னர் நாடு கடத்தப்பட்டு தன் மனைவியுடனும் மகள்களுடனும் இந்தியாவில் குடிவைக்கப்படுகின்றனர். மன்னருக்கும், ராணிக்கும் இன்னும் கம்பீரம் இருக்க, மகள் வண்டியோட்டுபவனுடன் சேர்ந்து அவன் குடிசையிலே இருக்கிறாள். எல்லோரும் மனிதர்களே. எனக்கு ராஜா என்பார் மந்திரி என்பார் ராஜ்ஜியம் இல்லை ஆள பாடல் நினைவுக்கு வந்தது, கூடவே பல்புக்கு கீழே ஆடிக்கொண்டிருக்கும் ரஜினியும்.

ஏதேச்சையாகப் படித்தேன் என்று சொல்ல முடியாது. செந்தில் தன்னுடைய ப்ளாகில் ஒருமுறை இந்த நாவலைப் பற்றி பதிவு செய்திருந்தார். அதற்கப்புறமே தேடிப்பிடித்து படித்தேன். செந்திலுக்கு நன்றி. நாவல், ஒரு உணர்ச்சிக்குவியல்.

அமிதவ் கோஷ் ஒரு அற்புதமான எழுத்தாளர் என்பதில் சிறிதும் சந்தேகம் இல்லை. அமிதவ்கோஷின் மற்றொரு நாவலான the hungry tide ஐ பார்த்து வைத்திருக்கிறேன்.

இந்த நாவலை படித்து முடித்த கையோடு Jon McGregor எழுதிய so many ways to begin என்ற நாவலை வாசிக்க ஆரம்பித்தேன். என்னவோ பிடிப்பு ஏற்படவில்லை. 15 பக்கங்கள் மட்டுமே படித்துவிட்டு நூலகத்தில் ரிட்டன் செய்து விட்டேன்.

சிறிது நாட்களுக்குப் பிறகு Mary Lawson எழுதிய The Other Side Of The Bridge கிடைத்தது. “பாலத்தின் அந்தப் பக்கம்” என்று தான் முதலில் நான் நினைத்தேன். ஆனால் உண்மையில் இது “பாலத்தின் அடிப்புறம்” என்று தான் மொழிபெயர்க்கப் படவேண்டும். நாவல் படித்துக்கொண்டிருந்த பொழுது இதை தமிழில் மொழிபெயர்த்தால் என்ன என்ற எண்ணம் என் மனதில் ஓடிக்கொண்டேயிருந்தது. 270 பக்கங்களைக் கொண்ட ஒரு நாவலை தமிழில் மொழிபெயர்ப்பது என்பது அவ்வளவு எளிதான காரியம் அல்ல.

நான் சில நகைச்சுவைப் படங்கள் பார்க்கும் போது வாய்விட்டு சிரித்திருக்கிறேன். உதாரணத்திற்கு பஞ்சதந்திரம்: “அப்படியே தட்டிக்கொடுத்து ஒரு கத சொல்லு ராம்” “ம்..ம்…ஒரு ஊர்ல ராம் ராம்னு ஒரு கேனயன் இருந்தானாம்…” “ஓ காமெடி ஸ்டோரியா…” இந்த வாக்கியங்களை எப்பொழுது கேட்டாலும் சிரிப்பு வரும். காரணம் வாக்கியங்கள் மட்டுமல்ல, இந்த காட்சியை கண்டவர்களால் மட்டுமே நன்றாக இரசித்து சிரிக்க முடியும். வாக்கியங்களை கேட்டவுடன், தேவயாணியும் கமலஹாசனும் கண்ணில் தெரிந்தால் தான் முழுமையாக ரசிக்க வாய்ப்பிருக்கிறது. சிரிக்கவைப்பது என்பது சினிமாவில் எளிது. ஒரு நாவலைப் படித்து, படிக்கும் பொழுது கண்ணில் நீர் வரும் அளவிற்கு சிரிக்க வைப்பதென்பது மிகவும் கடினம்.

Mary Lawson அதை செய்திருக்கிறார். நாவல் தோறும் நகைச்சுவை இழையோடிக்கொண்டிருக்கிறது என்பதை விட சில இடங்களில் வெடிச்சிரிப்புக்கும் பஞ்சமில்லை. ஒரு இரவு, இந்த நாவலை வைக்க மனமில்லாமல், சிரித்துக்கொண்டே படித்துக்கொண்டிருந்தேன். என் பக்கத்தில் படுத்திருந்த சரவணன் நிமிர்ந்து, நிமிர்ந்து பார்த்தார். பிறகு என் சிரிப்பு சத்தம் தாங்க முடியாமல் காதில் இயர் போனை வைத்துக்கொண்டு தூங்கிவிட்டார். மறுநாள் முறைத்தபடி இருந்தார். நான் என்ன செய்யமுடியும். அடக்கமுடியாத மற்ற இரண்டோடு சிரிப்பையும் சேர்த்துக்கொள்ளுங்கள். என்னால் சிரிப்பை அடக்கவே முடியாது. முடியும் என்றும் தோன்றவில்லை. மேலும் ஏன் அடக்கவேண்டும்?
விளைவுகள். கிடக்கிறது போங்கள்.

இதனால் இதை ஏதோ நகைச்சுவை நாவல் என்று எண்ணி விடாதீர்கள். மனிதர்களை சுற்றிலும் குடும்ப கட்டமைப்புக்குள் சுவையாக பின்னப்பட்ட நாவல் இது. மனிதர்களின் மனங்கள் குரங்கு. ஜெயமோகன் காடு நாவலில் சொல்லியிருப்பார் : தனிமை கிடைத்தவுடன் மனம் அதையே செய்யத்துடிக்கிறது. செய்துமுடித்தபின் ஒரு வெறுமை படர்கிறது என்பார். உண்மையே.

சில விசயங்களை செய்யக்கூடாது என்று நினைப்போம். ஆனால் மனம் அதை நோக்கியே பயணிக்கும். அழகி படத்தில் சயாஜி சிண்டே பார்த்திபனின் வீட்டில் இரவு குடித்து விட்டு வாந்தி எடுத்து வைத்திருப்பார். மறுநாள் காலை எழுந்து, சே எப்படி இந்த நாத்தத்த குடிச்சேன். இனிமே உன்ன செத்தாலும் தொடமாட்டேன் என்று சொல்லிக்கொண்டே கழுவி விட்டுக்கொண்டிருப்பார். அன்றைய இரவில் மறுபடியும் குடிப்பார். சொல்லிக்குற்றமில்லை. நாம் மனிதர்கள். ரோபோக்கள் அல்ல. ஆனாலும் சிலர் மனித குணத்தை விடுத்து மனதைக் கட்டுப்படுத்தி எந்த சூழ்நிலையிலும் ஒரே மாதிரி வாழ்கிறார்கள். அவர்களை தெய்வம் என்றும் சில சமயம் தெய்வ மச்சான் (நன்றி: கமலஹாசன்) என்றும் போற்றுகிறோம். ரோபோக்கள் தெய்வங்களா?

இளவயதில் ஒருவனைப் பார்த்து காதலுற்று அவன் அழகில், பேச்சுத்திறமையில் தன்னையே பறிகொடுத்து அவனது குழந்தையை தன்னில் சுமக்கிறாள் ஒரு பெண். ஆனால் அவனோ ஊரை விட்டே ஓடிவிடுகிறான். அவள் அவனுடைய அண்ணனை திருமணம் செய்து கொள்கிறாள். நாட்கள் ஓடுகிறது. பதினைந்து வருடங்கள் கழித்து ஓடியவன் திரும்ப வருகிறான். அடிமனதில் அவன் மேல் இருந்த காதல் வெறுப்பையும் மீறி, சூழ்நிலையையும் மீறி, மெல்ல மெல்ல மேலெழும்புகிறது. குழந்தையை கொடுத்துவிட்டு ஓட்டம் பிடித்த ஒருவனுடன் 15 வருடங்கள் கழித்து காதல் மீண்டும் துளிர்க்குமா? அதுவும் கணவன் இருக்கும் போது? இது சாத்தியமா? என்று எண்ணத்தோன்றுகிறது. சில சமயம் உண்மை பொய்யை விட பயங்கரமானதாகவும் நம்ப முடியாததாகவும் இருக்கும். சந்தேகமெனில் நக்கீரனையோ, ஜூவீயையோ ஒரு முறை திரும்பிப்பாருங்கள். நம் நாட்டிலே நடப்பதைப் பார்க்கலாம். இது சரியா தவறா என்ற விவாதம் ஒரு புறம் இருக்கட்டும். சரியென்றும் தவறென்றும் சொல்ல நாம் யார்? மனிதர்கள் சூழ்நிலைக்கைதிகள் என்பது தானே உண்மை. என் பிசிக்ஸ் வாத்தியார் சொல்லுவார் : ஒருத்தன (ஒரு மாணவனை) பற்றி முழுமையாக அறிந்து கொள்ள்வேண்டுமென்றால் அவனை அவனது நெருக்கமான நண்பர் குழுவோடு விட்டு பார்க்கவேண்டும். சூழ்நிலைகள் மனிதர்களை புறட்டிப்போட்டுவிடும்.

அண்ணன் தம்பிக்கு இடையேயான சிறுவயது நிகழ்ச்சிகள் மிகுந்த நகைச்சுவையாக இருந்தது. போரின் அவலங்களும், போரில் ஊனமுற்றவர்கள் படும் கொடுமைகளும், போர்கைதிகளின் நாட்டை இழந்த வருத்தமும், அகதி வாழ்க்கையும் மனதை நெருக்குகின்றன. போர் செய்வது, இராணுவத்தில் சேர்வது என்பது ஒரு வேலையா – Profession – அல்லது அதில் தேசப்பற்று ஏதும் இருக்கிறதா என்பது கேள்விக்குறி. கிட்டத்தட்ட profession ஆகிக்கொண்டு வரும் இந்த பணியில் கைதிகளாகப் பிடிக்கப்படுபவர்களின் நிலை?

நெஞ்சை உருக்கும் ஒரு சம்பவம் இந்த நாவலில் உண்டு. கதையில் வரும் அண்ணனின் (ஆர்த்தர்) நண்பன் ஒருவன் (கார்ல்) இராணுவத்தில் சேர்ந்து உலகப்போரில் பங்கு பெற்று கால் கைகளை இழந்து ஊருக்கு திரும்புகிறான். தினமும் ஆர்த்தர் அவனைப் பார்க்கப் போவான். எப்பொழுதும் அவர்களுக்கு இடையில் மவுனத்தை தவிர வேறு மொழி இருக்காது. நீண்ட நேரம் அப்படியே அமர்ந்திருப்பார்கள். ஒரு நாள் ஆர்த்தர் அவனைப் பார்க்கச் செல்லும் போது, கார்ல் தனக்கு எட்டாத தூரத்தில் இருக்கும் self இல் இருக்கும் துப்பாக்கியை எடுத்து தான் படுத்திருக்கும் கட்டிலுக்கு அருகில் இருக்கும் மேஜை மேல் வைக்கச்சொல்கிறான். யோசித்த ஆர்த்தரிடம், “எனக்கு போய் எடுப்பதென்பது சிரமம், கீழே விழுந்து சிரமப்பட்டு தவழ்ந்து போய் எடுப்பதற்குள் வெளியே சென்றிருக்கும் அம்மா வந்துவிடுவார்கள், இந்த உதவியை மட்டும் செய்” என்கிறான். ஆர்த்தர் நீண்ட யோசனைக்கு பின் வேக வேகமாக போய் துப்பாக்கியை எடுக்கிறான். அவன் வேகத்தைப் பார்த்த கார்ல் அவசரமில்லை அம்மா வருவதற்கு இன்னும் சிறிது நேரம் ஆகும் என்கிறான். துப்பாகியை எடுத்து மேஜைமேல் வைத்து விட்டு புறப்படும் ஆர்த்தரிடம் “பரவாயில்லை இன்னும் நேரமிருக்கிறது. உனக்கு கொடுத்த காபியை குடித்துவிட்டு போகலாம்” என்கிறான் கார்ல். ஆர்த்தர் மெதுவாக அமர்ந்து நிதானமாக காபியைக் குடித்துவிட்டுப் போகிறான்.

போர் எப்பொழுதும் Treaty யுடன் முடிவடைவதில்லை. அதன் அவலம் தலைமுறைதோறும் தொடர்ந்துகொண்டேயிருக்கிறது இல்லையா?

அதற்கப்புறம் Gathering The Water என்ற நாவலை வாசிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அடுத்த பதிவில் தண்ணீரை சேகரிக்கலாம்.

Pi

ஜெயமோகனின் காடு நாவலும் ஏழாவது உலகமும் மிக பெரிய உள் விரிவுகளை அடக்கிய நாவல்கள் அல்ல, ஆனால் விஷ்ணுபுரம் அப்படி அல்ல. மதுரை இலக்கியப்பண்ணையில் அந்தப் புத்தகத்தைப் பார்த்தப்பின் வாங்காமல் இருக்க இயலவில்லை. பக்கங்களின் எண்ணிக்கை பயமுறுத்துவதாக இருந்தது. அப்பா மருத்துவமனையில் இருந்த பொழுது நேரத்தை செலவு செய்வதற்காக படிக்க ஆரம்பித்தேன். எனக்கு தெரிந்து, தமிழ் அகராதியைக் கையில் (அல்லது தரையில்) வைத்துக்கொண்டு நான் படித்த முதல் தமிழ்நாவல் இது தான் என்று நினைக்கிறேன். நிறைய வார்த்தைகளுக்கு அர்த்தம் விளங்கவில்லை. அப்பாவிடம் கேட்டுத்தான் தெரிந்து கொண்டேன்.அப்பா ரிடையர்ட் தமிழாசிரியர் என்பதையும் சில கவிதைத் தொகுப்புகளும் எழுதியிருக்கிறார் என்பதையும் இங்கே குறிப்பிட்டாக வேண்டும். மேலும் என் அண்ணனுக்கும் – வக்கீலாக பணிபுரிகிறார்- அம்மாவுக்கும், நிறைய வார்த்தைகளுக்கு அர்த்தம் தெரிந்திருந்தது எனக்கு வியப்பாக இருந்தது.

விஷ்ணுபுரம் நாவலை நான் முழுதாக படிக்கவில்லை. 300 பக்கங்கள் வரை கொஞ்சம் பொருமையிருந்தது, அதற்கப்புறம் வாக்கியங்களில் சுற்றி சுற்றி மீள முடியாத மயக்கநிலைக்கே சென்று கொண்டிருந்தேன். ஆதலால் வாசிப்பை துரிதப்படுத்தினேன், skipping pages. ஏனோ நாவலின் முடிவைப் பார்த்துவிட்டால் போதும் என்றிருந்தது. ஆனால் முடிவென்பது இல்லை என்பதே நாவலின் கருப்பொருள். அப்படியிருக்க நாவலுக்கு எப்படி முடிவிருக்கும். தொடங்கிய இடத்திலே முடிகிறது. நாவலில் வரும் விஷ்ணுபுரமும், கோபுரங்களும் மிக மிக அழகு. அதிலும் கோபுரங்களின் கட்டமைப்பு பற்றி மிக விரிவாக விமர்சித்திருப்பது, நம்மை அந்த கோவிலின் அருகிலே கொண்டுசெல்கிறது. மிகத் தேர்ந்த ஒளிப்பதிவாளரின் நேர்த்தியுடன் காட்சி நம் கண் முன்னே விரிகிறது. கருடனின் கதையும் புல்லரிக்க செய்கிறது. முழுமையாக வாசிக்காத காரணத்தால் இந்த புத்தகத்தைப் பற்றி விரிவாக பேச இயலாது. ஆனால் விஷ்ணுவின் சிலையும் (அது விஷ்ணுவே இல்லையென்றும் நாவலிலே சொல்லப்படுகிறது) மூன்று வாசல்களும் என் கண் முன்னே இன்னும் நிற்கிறது. மீண்டும் ஒரு முறை – வாய்ப்பும் போதிய நேரமும் கிடைத்தால் – நிச்சயம் மறுபடியும் படிக்க வேண்டும்.

சோம. வள்ளியப்பன் எழுதிய அள்ள அள்ள பணம் என்ற பங்குச் சந்தையை அக்குவேறு ஆணிவேறாக அலசும் சிறிய – comparative to விஷ்ணுபுரம் – புத்தகம் ஒன்றை படித்தேன். மிக மிக நல்ல புத்தகம். பங்குச் சந்தையில் கால் வைக்க விரும்பும் புதியவர்களை ஊக்கப்படுத்துவதோடு; மிக அழகாக சறுக்கி விழக்கூடிய ஆபத்தையும் உணர்த்துகிறார் ஆசிரியர். நாணயம் விகடனுக்காக காத்திருக்கத் தேவையில்லை. வாங்குங்கள். படியுங்கள். களத்தில் இறங்குங்கள். ஆனால் சொல்லித்தெரிவதில்லை “பங்குச்சந்தை” கலை! பட்டுத்தான் தெரியவேணும். என்னுடைய பாஸ் புத்தகத்தைப் பார்த்தவுடன் வாங்கிச்சென்றுவிட்டார். ரஜினி பாடலில் வரும் : “அஞ்சுக்குள்ள நாலவை. ஆழம் பார்த்து காலவை” என்ற வாக்கியத்தை மட்டும் ஞாபகத்தில் இருத்திக்கொண்டால் போதுமானது.

எங்கள் ஆபீஸ் டவரில் இருக்கும் Private Lending Library யில் சுற்றிக்கொண்டிருந்த பொழுது, Life Of Pi என்ற நாவலைப் பார்த்தேன். Man Booker Prize வாங்கிய நாவல் இது. முன்பே பலமுறை பலர் சொல்ல கேள்விப்பட்ட நாவல் தான் இது. எப்பொழுதும் ஒரு மாதம் கால அவகாசம் தரும் Library, இந்த புத்தகத்தை சீரியஸ் ரீடிங் என்று கணக்கில் கொண்டு இரண்டு மாத காலம் அவகாசம் தந்தது. ஆனால் உண்மையைச் சொன்னால் : சீரியஸாக படித்தால், ஆறு மணி நேரத்தில் படித்து விடலாம். ஒரு சனிக்கிழமை இரவு. அவ்வளவே.

நீங்கள் ஆரம்பித்தால் மட்டுமே போதுமானது, நாவல் உங்களை பக்கங்கள் தோறும் கடத்திச் செல்லும், அமைதியாக ஓடும் நதியில் மிதக்கும் மரம் போல நீங்கள் உணர்வீர்கள். இதுவரை நான் படித்திராத கதைக் களம். புதிய உத்தி. அதிரடி க்ளைமாக்ஸ். நான் கொஞ்சம் தத்தி, அதனால் க்ளைமாக்ஸ் அதிரடியாக இருந்திருக்கலாம். உங்களுக்கு எப்படியோ! யான் மார்ட்டல் எழுதிய இந்நாவல் பாண்டிச்சேரியில் தொடங்கி கனடாவில் முடிகிறது. ஆசிரியரும் கனடாவைச் சேர்ந்தவரே. கனடாவின் இலக்கியம் வளம் மிக நன்றாக இருக்கிறதென்று நினைக்கிறேன்.

ஹீரோ பை (Pi) யின் அப்பா ஒரு மிருகக்காட்சி சாலை வைத்திருக்கிறார். ஒரு கட்டத்தில், zoo வை விற்று விட்டு தன் குடும்பத்தாருடன் கனடாவை நோக்கி கப்பலில் பயணிக்கிறார். கப்பல் கவிழ்ந்து விடுகிறது. பை மட்டும் ஒரு Life Boat ல் தப்பிக்கிறான். ஆனால் அந்தோ பரிதாபம், அந்த லைப் போட்டில் ஒரு ஓநாயும், ஒரு வரிக்குதிரையும், ஒரு ஓரங்குட்டானும், ஒரு 140 பவுண்ட் புலியும் இருக்கின்றன. அவை அனைத்தும் அவர்களுடைய மிருகக்காட்சி சாலையில் இருந்தவை. முதலில் புலி அமைதியாக இருக்கிறது. ஓநாய் வரிக்குதிரையை உயிருடன் கடித்து திண்ண ஆரம்பிக்கிறது. பிறகு ஓரங்குட்டானை கொல்கிறது. பை தொடர்ந்து கொல்லப்படாமல் தப்பிக்கிறான். பிறகு புலி விழித்துக் கொள்கிறது. ஒரே அடியில் ஓநாயை வீழ்த்துகிறது. பிறகு ஓநாயையும், எஞ்சிய வரிக்குதிரையின் பாகங்களையும், ஓரங்குட்டானையும் திண்கிறது. அடுத்தது பை தான்.

பை இருநூறுக்கும் மேற்பட்ட நாட்கள் எப்படி கடலில் அந்த மிருகத்திடமிருந்து தப்பித்து கரைசேருகிறான் என்பதே கதை. அதற்குப்பிற்கு ஒரே ஒரு சஸ்பென்ஸ் மட்டுமே இருக்கிறது. கடவுள் நம்பிக்கையையும், தன் நம்பிக்கையையும், வாழ நினைத்தால் வாழலாம் என்பதையும் அறிவுறுத்தும் நாவல் இது. மெல்லிய நகைச்சுவை நாவல் தோறும் பரவிக்கிடக்கிறது, பீச்சிலிருக்கும் மணல் போல. எடுத்துக்காட்டாக அவனுக்கு எப்படி Pi என்ற பெயர் வந்தது என்பது. நான் நாவலை வாங்கும் பொழுது, பை யின் அப்பா ஒரு மிகச்சிறந்த கணித மேதையாக – Pi=3.14 -இருக்கக்கூடும் என்று தான் நினைத்திருந்தேன். படியுங்கள் : A laugh guaranteed.

அப்புறம் நீண்ட நாட்களாக நூறு பக்கங்களை மட்டுமே படித்துவிட்டு வைத்த The Glass Palace என்ற அற்புதமான நாவலை மீண்டும் வாசிக்கத்தொடங்கினேன். அடுத்த பதிவில் Amitav Gosh ஐ சந்திக்கலாம்.