என் உயிர்த் தோழன் – 5

5
மீண்டும் அவனுடைய அப்பா.

“சார்..சீ.சாரி.. அங்கிள்..நான் ரம்யா பேசறேன். சித்தார்த் இருக்கானா..சீ..இருக்காங்களா”
“அடடே..ரம்யாவா? அப்ஸர்வேசன் நாட்புக்க நீயே வெச்சுக்குவியாம். அப்புறம் காலேஜில வந்து வாங்கிக்கிறானாம்”
“அப்சர்வேசன் நோட்? ஓ..ஓகே அங்கிள். சித்தார்த்..”
“சித்தார்த்துக்கு நேத்துலருந்து கொஞ்சம்..கொஞ்சம் என்ன நெறயவே டயரியா..ஆஸ்பத்திரியில இருக்கான்.டாக்டர் ஒரு நாள் தங்கிட்டு போங்கன்னு சொல்லிருக்கார்..நான் இப்போதான் வீட்டுக்கு வந்தேன். நீ கால் பண்ணுவ.. பண்ணினா ஒன்னும் அப்ஸர்வேசன் நோட்டுக்கு ஒன்னும் அவசரமில்லன்னு சொல்லச்சொன்னான்”
“அங்கிள்..சித்தார்த்.. இப்போ எப்படி இருக்கான்?”
“அதான் சொன்னேனே நல்லாயிருக்கான்ம்மா..பத்துபதினோறு மணிக்கெல்லாம் டிஸ்சார்ஜ் பண்ணிருவாங்கன்னு நினைக்கிறேன்”.
“அங்கிள்..அங்கிள் எந்த ஹாஸ்பிடல்?”
“திருமங்கலம். தருண் கிளினிக்ம்மா”
“ஓகே அங்கிள். தாங்க்ஸ்”

“அம்மா”
“நான் சிந்து வீட்டுக்கு போயிட்டு வரட்டுமா?”
“ஏன்? இந்நேரத்திலயா?? நீ போக மாட்டியே? அவ தான எப்பவும் வருவா?”
“ம்ம். அவளுக்கு ரொம்ப உடம்புக்கு முடியலையாம். டயரியாவாம்”
“என்னாச்சு அவளுக்கு? அண்ணன அவ வீட்ல ட்ராப் பண்ணச்சொல்றேன். போயிட்டுவா”
“அவ்வா”
“நான் சொல்லிக்கிறேன்”

அண்ணன எப்படி சமாளிக்கிறதுன்னு நான் யோசிச்சிட்டிருந்தப்போதான், அவனே என்னை தெருமுக்கில இறக்கிவிட்றதா சொன்னான். நல்லதாப்போச்சு. சிந்து வீட்ல இருந்து கொஞ்ச தூரத்தில தான் இருக்கு க்ளீனிக். அக்சுவலா எங்க ஸ்கூலுக்கு பக்கத்தில தான் இருக்கு. ம்ம்..நாங்க படிச்ச ஸ்கூலுக்கு பக்கத்தில தான் இருக்கு. சிந்துவீட்டுக்கு போயிட்டு அவளையும் கூட்டிட்டு போகலாமா? இல்ல நாமளே தனியா போகலாமா? சிந்துவக்கூப்பிட்டா அவ நீ எதுக்கு இவ்ளோ மெனக்கெடுறன்னு கேப்பா. என்ன பதில் சொல்றது. நானே தனியா போறதுன்னு முடிவெடுத்தேன்.

“இங்க சித்தார்த்ன்னு..”
“நேர போய் லெப்ட்ல திரும்பும்மா. ரூம் நம்பர் 89”
“சரிங்க”

நான் வேகவேகமா நடந்து திரும்பறதுக்கும் கௌரி என் மேல மோதறதுக்கும் கரெக்ட்டா இருந்தது.

“அக்கா. நீங்க எங்க இங்க?”
“கௌரி..நீ”
“இன்னிக்கு ஞாயிற்றுக்கிழமை தானே சும்மா தான இருக்கேன்னுட்டு அப்பா கூட ஹாஸ்பிட்டல் வந்தேன்”
“ஓ..ஓகே”
“அக்கா யூ வில் பி சர்ப்ரைஸ்ட். உங்களுக்கு ஒன்னு தெரியுமா?”
“என்ன?”
“சித்தார்த் ஞாபகம் இருக்கா? ஸ்கூல்ல உங்க ப்ரண்ட்”
“ஆங்… ஞாபகம் இருக்கு”
“அவர் இங்க தான் இருக்கார். டயரியா. போய் பாருங்க ரூம் நம்பர் 89”
“ஓ இஸ் இட்?” “ஓகே நான் போய் பாக்கறேன்”
“ஓகே அக்கா. BYE.”
“BYE”

“ஆமா அக்கா நீங்க எதுக்கு வந்தீங்க..”
“ம்ம்..சும்மா தான்..”

கௌரியோட அப்பாதான் இங்க டாக்டர். என்னை ரொம்ப நல்லா தெரியும். எல்லார் கிட்டயும் உண்மை சொல்லிருந்தாக்கூட ஒன்னும் இல்ல. ஹ்ம்ம்..யாராவது பாத்து கேட்டா என்ன சொல்றது?

டக் டக் டக்
வாம்மா..நீ..
நான் ரம்யாம்மா..சித்தார்த்தோட க்ளாஸ்மேட்..
ஓ..உள்ளவாம்மா..எப்படிம்மா இருக்க
நல்லாயிருக்கேன்ம்மா
சித்தார்த் இங்க இருக்கறது அதுக்குள்ள உங்களுக்கெல்லாம் தெரிஞ்சிருச்சா.
ஜஸ்ட் இந்த ஹாஸ்பிடலுக்கு வந்தேன்..கௌரி சொன்னா..
ஓ..கௌரி சொன்னால? இங்க தான் இவ்ளோ நேரம் இருந்தா..இப்போத்தான் தூங்கினான்..வயிறு பெயின் இருக்கும் போல..எழுப்பட்டும்மா
..
எழுப்பட்டும்மா
..
நீ அவன் காலேஜ் க்ளாஸ்மேட்டா?
..
உங்க வீடு எங்க இருக்கு? தூங்கறான்..எழுப்பட்டுமா..

சித்தார்த் ரொம்பவும் ஒல்லியான மாதிரி இருந்தது. முகம் ரொம்பவும் டயர்டா இருந்தது. நான் பக்கத்தில் உட்கார்ந்து கொண்டேன். அவனுடைய அம்மா பேசியதை நான் கவனிக்கவில்லை. என் கவனம் முழுவதும் சித்தார்த் மேலேயே இருந்தது. ஏன் எனக்கு அழுகை வருகிறது. அழக்கூடாது. அவன் கைகளைப் பிடித்தேன். ஜில்லென்றிருந்தது. அவன் நல்லா தூங்கிட்டிருந்தான். எழுப்பறேன்னு தான் சொன்னாங்க. ஆனா எழுப்பவில்லை. கைகளில் பள்ஸ் பார்த்தேன். வயிறை தொட்டுப்பார்த்தேன். அவனுடைய அம்மா பேசாமல் உட்கார்ந்திருந்தார்கள். பிறகு மீண்டும் பல்ஸ் பாக்குற சாக்கில அவன் மணிக்கட்டில ஒரு கிள்ளு கிள்ளினேன். டப்புன்னு முழிச்சுப்பாத்தான். என்னைப் பார்த்தவுடனே பயந்தே போயிட்டான். பிறகு வந்துட்டியா? நல்லாயிருக்கியாங்கற மாதிரி ஒரு சிரிப்பு சிரிச்சான். அவ்வளவுதான். எனக்கு அது போதும். தூங்கி நல்லா ரெஸ்ட் எடுடான்னு சொன்னேன். சொல்லல.

சிந்துவின் வீட்டுக்கு ஓட்டமும் நடையுமாக சென்றேன். அந்த தெரு கொஞ்சம் குறுகலான தெரு. காலையில் இட்லி வியாபாரம் நடந்துகொண்டிருந்தது. எல்லோரும் என்னையே பார்ப்பது போல
இருந்தது. நான் வேகத்தை கூட்டினேன். இங்கிருந்து பார்க்கும் பொழுது சிந்துவின் வீடு தெரியும். தெரிந்தது. பக்கத்தில் எங்களுடைய காரும் தெரிந்தது.

அமைதியாக உள்ளே நுழைந்தேன். அண்ணன் உட்கார்ந்திருந்தான். சிந்து என்னைப் பாவமாகப் பார்த்தாள். அண்ணன் கிளம்பலாமா என்றான்.

ட்ரிங்
ட்ரிங்
ட்ரிங்
ஹலோ
ரம்..
தயவுசெய்து இனிமே கால் பண்ணாத ப்ளீஸ்
டக்

அந்த ஞாயிற்றுக்கிழமை அவன் மீண்டும் கால் செய்த பொழுது, என் அருகில் வீட்டில் இருக்கும் எல்லோரும் உட்கார்ந்திருந்தனர். ஐ விஷ் ஆர் நாட் ஐ டோல்ட் த சேம் எக்ஸாக்ட் ஸ்டுபிட் லைன்ஸ். சித்தார்த்.. சித்தார்த்.. என்னை மன்னிச்சிடுடா ப்ளீஸ். மன்னிப்பியா. ப்ளீஸ். நான் ஹாஸ்டல்ல தங்கல அதுக்கப்புறம். அப்பா என்னை தினமும் காரில ட்ராப் செஞ்சு ஈவினிங் பிக் அப் பண்ணிடுவார். ஒரு நாள் காலேஜில இருந்து அவன் வீட்டுக்கு நான் டயல் செஞ்சேன். அவனுடைய அப்பா எடுத்தார்.

ஹலோ
ஹலோ
சித்தார்த்
சித்தார்த் இல்லியேம்மா. வெளில போயிருக்கான்.
சரி அங்கிள்.

ஒரு நாள் என்னைத் தேடி ஈவினிங் காலேஜுக்கு வந்திருக்கான். நான் தான் காலேஜில தங்குறது இல்லியே. நான் இல்லைன்னு சொன்னதா என் ப்ரண்ட் சொன்னா. ரொம்ப நேரம் அந்த மரத்தினடியில இருக்கிற அந்த பெஞ்சிலே உட்கார்ந்திருக்கிறான். நான் எப்பொழுதும் அங்கே பார்க்கும் அணிலிடமாவது ஏதாவது அவன் சொல்லிருக்கலாம். மறுநாள் நான் அந்த அணிலை நான் தேடிச்சென்றேன்.

துக்கம் தொண்டையை அடைக்க மீண்டும் அவன் வீட்டுக்கு டயல் செய்தேன். இந்த தொலைபேசி உபயோகத்தில் இல்லை. நீங்கள் டயல் செய்த எண்ணை சரிபார்க்கவும். மீண்டும் டயல் செய்தேன். மீண்டும் அதே மெசேஜ். அந்த மரத்தினடியில் உட்கார்ந்து கொண்டிருந்தேன். சித்தார்த் ப்ளீஸ் இப்போ வாடா. ப்ளீஸ் இப்போ வாடா. ப்ளீஸ்டா. என்னம்மா க்ளாஸ¤க்கு போகலையான்னு கேட்டது அந்த அணில்.

(தொடரும்)

என் உயிர்த் தோழன் – 4

4
“ஹாய் ரம்யா”
“ஹாய் செல்வா? என்ன இந்தப்பக்கம்”
“சும்மா வந்தேன். வரலாமில்ல”
“ஓ ஸ்யர்”

“உட்காரலாமா?”
“ஓ ஸ்யர்”

“என்ன பண்ணிட்டிருந்த”
“சும்மா..ஜஸ்ட் லைக் தட்”

“சாப்பிட்டாச்சா”
“இப்போ போகலைன்னா எனக்கு சாப்பாடு கிடைக்காது”
“இன்னைக்கு ஒரு நாள் சாப்பிடாம டயட்ல இரேன்”

“கேர் ·பார் ஆன் ஐஸ்க்ரீம்”
“ஐஸ்க்ரீம்? நோ செல்வா. ஐ ஹாவ் டு கோ “
“ஜஸ்ட் டென் மினிட்ஸ். ப்ளீஸ்”
“பட்..”
“ப்ளீஸ் ரம்யா.”

“எங்க?”
“ஜஸ்ட் உன் காம்பஸ்ல இருக்கிற க்வாலிட்டி ஐஸ்க்ரீம்முக்கு போவோம்”
….

வழியிலெங்கும் சும்மா எதுனாச்சும் பேசிக்கொண்டே வந்தான். எனக்கு எரிச்சலாக இருந்தது. யாரோ வந்திருக்கிறார்கள் என்று சொன்னதும் என் மனதின் ஓரத்தில் சித்தார்த்தாக இருக்குமோ என்கிற ஆசை இருந்தது. நல்லவேளை ஐஸ்க்ரீம் பார்லர் வேகமாக வந்துவிட்டது.

நான் உள்ளே கால் எடுத்து வைத்ததும், டப் என்றொரு சத்தம் கேட்டது. பலூன் வெடிக்கும் சத்தம். ஹ¥ய் என்று சத்தம். பின் ஹாப்பி பர்த் டே டூ யூ பாடல். கடையில் இருந்த நீல நிற திரையை விலக்கிக்கொண்டு சௌமியா, கணேஷ், இந்திரா, கோபால், ஷீபா எல்லோரும் வந்தனர். கடைசியாக சித்தார்த் வந்தான். இன்று எனக்கு பர்த்டே.

எல்லோரும் சென்று விட்ட பிறகு, சித்தார்த் என்னை காலேஜ் ஹாஸ்டலில் விட்டுவிட வந்தான்.
இருவரும் ஹாஸ்டலுக்கு வெளியே மரத்தினடியில் இருந்த பெஞ்சில் உட்கார்ந்தோம்.

“எப்படி இருக்க”
“ம்ம்..அஸ் யூ ஸீ”
“யூ ஹேவ் ச்சேஞ்ச்ட் எ லாட்.”
“யூ டூ”
“குட். யூ லுக் குட்.”
“இஸ் இட்? ஓவ் ஓக்கே. அப்பைத்தான் என்னோட கேர்ஸ் ப்ரண்ட்ஸ¤ம் சொல்றாங்க”
“அய்யே..ரொம்ப அலட்டிக்காத..அப்புறம்”
“நத்திங்”
“உன்னோட கேர்ள் ப்ரண்ட்ஸ¤க்கு மத்தில என்னோட பர்த்டே கூட ஞாபகம் வெச்சிருக்கிற”
“ம்ம். ஐ வில்”
“சாப்பிட்டியா”
“இன்னும் இல்ல”
“வீட்டுக்கு எப்படிப் போவ?”
“உனக்கென்ன கவலை?”
“சொல்லுடா”
“வண்டி”
“தள்ளுவண்டியா?”
“ஆமா உங்கப்பா இழுக்கற தள்ளுவண்டிதான்”
“அப்பாவ ஏன் இழுக்கற”
“நான் எங்க இழுக்கறேன். உங்க அப்பா தான் இழுக்கறார் தள்ளுவண்டி”
“ஸ்டுபிட்”
“ம்ம் சரி”
….
….
“நீ என்ன சாப்பிடுவ?”
“என்னவேணுன்னாலும் சாப்பிடுவேன்”
“இன்னிக்கு உங்க கேண்டீன்ல என்ன போடுறாங்க? டெட் பாடி பார்ட்ஸ்ல செஞ்ச ப்ரியாணி தான?”
“உன் மூஞ்சி. ச்சை. உவ்வே”
“மூஞ்சிய கோணலா வெச்சாத்தான் நீ நல்லாயிருக்கிற”
“வாட்” (கோணலா ஒரு சிரிப்பு)
“ஒண்ணுமில்ல”
“அது” (கோணல் சிரிப்பு இன்னும் மாறவில்லை. இமைகள் ஒரு முறை தாழ்ந்து நிமிர்கின்றன. கண்கள் சிரிக்கின்றன.)
“சரி நான் கிளம்பறேன்”
“கிளம்பு” (மெல்லிய சிரிப்பு)
“வர்றேன்”
“வராத” (மிக மெல்லிய சிரிப்பு)
“போயிடுவேன்”
“போகாத”
..
“வா”
..
“உக்காரு”
“உன் வார்டன் திட்டப்போறாங்க”
“திட்டமாட்டாங்க”
“ம்ம். என்ன சொல்லு”
“ஒண்ணுமில்ல”
“இப்பவும் புக்ஸ கட்டிட்டு தான் அழறயா?”
“ம்ம். வாட் எல்ஸ்”
“பாய் ப்ரண்ட்ஸ் வெச்சுக்க வேண்டியதுதான”
“அது இருக்காங்க ரொம்பபேர்”
“ம்ம்ம்.”
“யார செலக்ட் பன்றதுன்னு தான் தெரியல”
“ம்ம்ம்”
“என்ன ம்ம்?”
“யாரையாவது செலக்ட் பண்ணிக்கோ”
“அது எங்களுக்கு தெரியும். ப்ராஸஸ் பண்ணிட்டிருக்கேன்”

“சரி. உனக்கு எத்தனை கேர்ள் ப்ரண்ட்ஸ்”
“மூனு”
“அடப்பாவி. அசால்ட்ட சொல்ற”
“இதுல என்ன இருக்கு”
“பேர் சொல்லு”
“உனக்கெதுக்கு”
“சொல்லுடா”
“முடியாது”
“சொல்லுடா”
“முடியாது போடி”
..
“நான் போட்டா?”
“ம்ம்”
“வார்டன் திட்டுவாங்க”
“ம்ம்” “ஒழுங்கா சாப்பிட்டுட்டு நிம்மதியா படுத்து தூங்கு”
“ம்ம்”
“என்னோட வீட்டு போன் நம்பர் வேணுங்கறவங்க கேட்டு வாங்கிக்கலாம்.”
“ஹை போன் வாங்கியாச்சா”
“ம்ம்”
“சரி நான் ஞாயித்துக்கிழமை வீட்டுக்கு வரும்போது எனக்கு போன் பண்ணு”
“ம்ம்”
“யர்லி மார்னிங்..ஆறு மணிக்குள்ள பண்ணு”
“ம்ம்..என்னது ஆறு மணியா. நோ சான்ஸ்.”
“என்னோட பேசணும்னு நினைக்கறவங்க காலைல ஆறு மணிக்குள்ள பேசுங்கப்பா”
..
“சரி நான் கிளம்பறேன்”
“சென்று வா மகளே”
..
..
“ரம்யா”
“என்ன? போகவிடமாட்டியே”
“க்ரீட்டிங் கார்ட்”
“தாங்க்ஸ். தாங்க்ஸ் எ லாட். இந்த பர்த்டேய நான் என்னைக்குமே மறக்கமாட்டேன்”
“ரொம்ப சென்டிமெண்ட்டா ஆகாத”
“ம்ம்” (கீழே குணிந்து கொள்கிறாள்.)
“சரி. வார்டன் உள்ள விடலன்னா என்ன பண்ணுவ. கிளம்பு.”
“ஏன் உன் வீடு பக்கத்துல தான இருக்கு”
“அடிப்பாவி. வீட்ல உத வாங்க வைக்க பாக்குறயா?”
“சரி. நான் கிளம்பறேன். உன் தள்ளுவண்டிய பாத்து பத்திரமா உருட்டிட்டு போ.”
“சரிங்க மேடம். நீங்க உங்க டெட் பாடிஸ பத்திரமா பாத்துக்கோங்க”

எல்லா ஞாயிறும் சித்தார்த் கரெக்ட்டாக ஆறு மணிக்கு எங்கள் வீட்டுக்கு கால் பண்ணுவான். அஸ் யூஸ்வல் எங்களுக்கும் சிக்னல் இருந்தது. ஒரு கால். ஒரு ரிங். ரெண்டாவது கால். ரெண்டு ரிங். மூணாவது கால். மூணு ரிங். எங்கள் வீட்டில் சித்தார்தை நன்றாக தெரியும் என்றாலும், ஒரு த்ரிலுக்காகத்தான் சிக்னல் வைத்துக்கொண்டோம். மேலும் சித்தார்த் தான் என்று தெரிந்துவிட்டால் அவ்வா, என்னடி ஆம்பள பையனுடன் இப்படி பேச்சு என்று திட்டுவார்கள் இல்லியா? அதற்கு முந்தைய ஞாயிறு வரை லேட்டாக எழுந்திருக்கும் நான், இப்பொழுதெல்லாம் கரெக்ட்டாக ஆறு மணிக்கு எழுந்துவிடுவது அம்மாவுக்கு ஆச்சரியமாக இருந்தது. அவ்வாவுக்கும் தான். எழுந்து ஏதோ நாட்டு நடப்புகளில் ஆர்வம் இருப்பவள் போல பேப்பரை எடுத்துக்கொண்டு ·போனைப் பார்த்து உட்கார்ந்து கொள்வேன். கரெக்ட்டாக ஆறு மணிக்கு ஒரு மணி அடிக்கும்.

ட்ட்ரிங்

ஹலோ சார்
ஹலோ மேடம்
எப்படி சார் இருக்கீங்க
நல்லாயிருக்கேன் மேடம்
என்ன பண்றீங்க சார்
குளிறுது நல்லா போர்வைக்குள்ள இருக்கேன்.
எனக்கும் குளிறுது
எப்படி போச்சு இந்த வாரம்
உன் தொல்லையில்லாம ரொம்ப நல்லா போச்சு
அப்படியா? ஹரிஷ் எப்படி இருக்கான்?
அவன பத்தி இப்போ என்ன?
சரி விடு கேக்காட்டி ஹரிஸ் பத்தி ஏதும் கேக்கலையேன்னு வருத்தப்படுவியேன்னுதான் கேட்டேன்
ச்சேஞ் த டாபிக்
ம்ம் இந்த வாரம் என்ன இன்ட்ரஸ்டிங்..?
பொறுடி..ப்ரண்ட்ம்மா..ம்ம்..ஆமா சிந்து தான்..
அடிப்பாவி.
கண்டுகிடாத..அப்புறம் என்னடி இவ்ளோ வேகமா எழுந்திட்ட..

ஒரு வாரம் ·போன் கால் வரவில்லை. மணி ஆறாச்சு. ஆறரை ஆச்சு. எனக்கு பொறுக்கமுடியவில்லை. அவன் நம்பருக்கு நானே டயல் செய்துவிட்டேன். என் வீட்ல அவனை நன்றாக தெரிந்தாலும், அவன் வீட்ல என்னை அவ்வளவாக தெரியாது. அவன் அப்பா எடுத்தார்கள். டப் என்று கட் செய்துவிட்டேன். பயம். என்ன செய்வது? என்ன செய்வது? நீங்கள் இது மாதிரியான ஒரு சூழ்நிலையில் இருந்தீர்கள் என்றால் தான் உங்களுக்கு இது புரியும். எனக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை.

எனக்கிருக்கும் ஒரே சாய்ஸ். மீண்டும் கால் செய்வது தான். அதுவும் வேகமாக செய்யவேண்டும். இன்னும் கொஞ்ச நேரத்தில் வீட்டில் எல்லோரும் எழுந்து விடுவார்கள். அப்புறம் பேசவே முடியாது. அப்புறம் அடுத்த வாரம் தான். மீண்டும் டயல் செய்தேன். என் விரல்கள் நடுங்கின. சித்தார்த் எடுத்திருடா. ப்ளீஸ்.

(தொடரும்)

என் உயிர்த் தோழன் – 3

3

“சித்தார்த்”
சித்தார்த்திடம் பேசிக்கொண்டிருந்த லக்ஷ்மி, கணேஷ் எல்லாரும் விலகிக்கொண்டார்கள்.
“ரம்யா”
“நல்ல மார்க் கிடைக்கலையா”
“ம்ம். பரவாயில்ல. 1120”
“ம்ம் நானும் தான்” “ஐ ஹோப் ஐ வில் கெட் மெடிக்கல்”
“எனக்கு கிடைக்காது”
“ம்ம்..”
..
..
“எங்க ஜாயின் பண்ணப் போற”
“தியாகராஜா. கம்ப்யூட்டர் சயின்ஸ்”


“எப்ப பார்க்கலாம்?”
“டைம் கிடைக்கும் போது”

“நான் மதுரை மெடிக்கல் காலெஜில தான் சேருவேன். சென்னை போகமாட்டேன்.”
“ம்ம். போகாத.”

“எப்ப பார்க்கலாம்?”
“எப்பவேணுமின்னாலும்”

“அழாத ரம்யா”
“ம்ம்”

..

“இங்க தான இருக்கப்போறோம். பாத்துக்கலாம்”
“ம்ம்”
“உங்க அண்ணன் வர்றார்”
“ம்ம். எப்போ பார்க்கலாம்?”
“அழாத. கண்ண துடைச்சுக்கோ. உங்க அண்ணன் வர்றார்.”

“என்ன ஆச்சு? ரெண்டு பேரும் நல்ல மார்க் தான வாங்கிருக்கீங்க?”
“இல்லண்ணா. இன்னும் கொஞ்சம் அதிகம் வாங்கிருக்கலாம்”

என் அண்ணன் என்னை அழைத்துக்கொண்டு வந்தபிறகு, யாருமற்ற தனிமையில் அந்த மரத்தினடியில் அவன் நின்றுகொண்டிருந்ததைத் தான் நான் கடைசியாகப் பார்த்தேன். அவன் உடைந்துபோயிருந்தான். ஐ வாண்டட் டு பி வித் ஹிம் ·பார் எ வைல்.

நான் மெடிக்கல்காலேஜில் சீட் கிடைத்ததை பற்றி அவனுக்கு தான் முதலில் லெட்டர் போட்டேன். congrats என்று பதில் லெட்டர் வந்தது. பிறகு புதன் கிழமை தோறும் எனக்கு அவனிடமிருந்து லெட்டர் வரும். நான் ஒவ்வொரு ஞாயிறும் அவனுக்கு லெட்டர் போஸ்ட் பண்ணுவேன். சும்மா என்ன படிச்சோம் என்ன பார்த்தோம்னு. எனக்கு சினிமா பார்க்கிற வழக்கம் இல்லையென்பதால் அவன் சொல்லுகிற சினிமா செய்திகளை சும்மா கேட்டுக்கொள்வேன். ஐ ஆம் நாட் இன்ட்ரஸ்டட் இன் சினிமா. எனக்கு சினிமா பார்ப்பது பிடிக்காது என்பது அவனுக்கு ஆச்சரியமாக இருக்கும். ஸ்கூலிலே அவன் நிறைய தடவை என்னிடம் கேட்டிருக்கிறான். உண்மையிலே நீ சினிமா பாக்கமாட்டியா இல்ல சும்மா சொல்றியான்னு. எனக்கு பாடல்களும் தெரியாது. ஆனால் எனக்கு என்ன பாடல் பிடிக்கும் என்பது அவனுக்கு தெரியும். பாடறியேன் படிப்பறியேன் தான் என்னுடைய ·பேவரிட் சாங். ஏனென்றால் அது மட்டும் தான் எனக்கு தெரியும்.

ஒன்பது மாதங்கள் ஓடி விட்டன. அவன் லெட்டர் எனக்கு கிடைக்கும் பொழுதெல்லாம் எனக்கு அவனை பார்க்கவேண்டும் போல இருக்கும். அவனுக்கு எப்படி இருக்கிறது என்று எனக்கு தெரியாது. அவனுடைய லெட்டரில் ஒரு சின்ன வெற்றிடம் கூட விடாமல் ஏதாவது எழுதியிருப்பான். எங்கள் பள்ளி ஆண்டுவிழா நெருங்கிக்கொண்டிருந்தது. பள்ளி ஆண்டுவிழாவுக்கு பழைய பாட்ச் மாணவர்களை அழைப்பார்கள். வாராவாரம் இன்னும் ஒரு மாதம் இருக்கிறது. இன்னும் ரெண்டு வாரம் இருக்கிறது. இன்னும் ஒரு வாரம் இருக்கிறது என்று லெட்டரில் எழுதிக்கொண்டு வந்தோம். இருவருக்குமே ரொம்ப நாள் கழித்து பார்க்கப்போகிறோம் என்கிற ஆவல் இருந்தது. ஐ வாஸ் ஹைலி எக்ஸைட்டட்.

“ஹே சித்தார்த் வந்துட்டான். அங்க பாரு”
“ஹே ஆமா”
எனக்கு கைகள் நடுங்க ஆரம்பித்தன. புல்லரித்தது. கழுத்து சூடாக ஆனது. கைகளை நெஞ்சுக்கு குறுக்காக கட்டிக்கொண்டேன். கைவிரல்கள் சில்லிட்டிருந்தன. அவனைப் பார்த்தேன். ஒன்பது மாதங்கள் கழித்து அவனைப் பார்த்தேன். இங்கதான இருக்கோம் எப்பவேனா பாத்துக்கலாம்னு சொன்னான். இப்ப ஒன்பது மாசம் ஆச்சு. எனக்கு கண்கள் கலங்கின. கொஞ்சம் குண்டாகிவிட்டான் போல. தலையில் முடி நிறைய வைத்திருந்தான். அதே சிரிப்பு. அதே சோடாபுட்டி. எங்களை நோக்கி வேகவேகமாக வந்துகொண்டிருந்தான். அவன் என்னைப் பார்த்தது போலவே தெரியவில்லை. என்னடா ஹேர் ஸ்டைல் இதுன்னு பயாலஜி மேடம் கேட்டாங்க. பக்கத்தில இருந்த ஷீபா அப்பாஸ் ஹேர்ஸ்டைல் மேம் என்றாள்.

இரவாகியது. என்னிடம் ஒரு வார்த்தை கூட பேசவில்லை. ஒரு வார்த்தை கூட பேசவில்லை. நான் என்ன தப்பு செஞ்சேன். எனக்கு அழுகை அழுகையாக வந்தது. அழுதேவிட்டேன்.

“சித்தார்த்”
“ஹாய் ஷீபா. எப்படி இருக்க?”
“நல்லா இருக்கேன். ரம்யா கூட ஏன் பேசமாட்டேன்ற?”
“பேசினேனே.”
“பொய் சொல்லாத. அவ அழறா”

“பேசறேன்”
“ஏன் இப்படி பண்ற?”

கிளம்பும் முன் என்னிடம் வந்தான். ஏதோ சும்மானாச்சுக்கும் பேசற மாதிரி பேசினான். கிளம்பறேன்னு கிளம்பிட்டான். எனக்கு கோபம் கோபமா வந்தது. அழுகை அழுகையா வந்தது. போடா லூசு. போடா லூசுன்னு திட்டிட்டேயிருந்தேன். ஐ ஹேட் ஹிம். பார்க்கப்போறோம் பேசப்போறோம்ன்னு எத்தனை நாள் காத்திருந்தேன். அன்று தான் வீட்டில் அவ்வாவிடம் முதலில் கோபப்பட்டேன். எனக்கு சாப்பிடவே பிடிக்கவில்லை. அவ்வா சாப்பிட வற்புறுத்தவே “போறீங்களா இல்லியா?” ன்னு கத்திட்டேன். அவ்வா முகம் வாடிப் போச்சு. போயிட்டாங்க. சாரி அவ்வா.

பிறகு அடுத்த புதன் கிழமை அவனிடமிருந்து லெட்டர் வந்தது. பேச என்னவோ போல இருந்ததாம். இடியட். இதெல்லாம் ஒரு காரணமா? நீ ஏன் பேசலன்னு என்கிட்ட கேட்டான். அவன் பேசாட்டி என்ன? நான் ஏன் அவன் கிட்ட பேசல? தாட் டே கேம் அன் வென்ட். ஜஸ்ட் லைக் தட். ஜஸ்ட் லைக் தட்.

இரண்டு மூன்று மாதங்கள் ஓடிவிட்டன. நோ கான்ட்டாக்ட்ஸ். லெட்டர் தொடர்பு நின்று போய்விட்டது. ஏன் எதற்கு என்கிற கேள்வி இல்லை. ஜஸ்ட் லைக் தட். நான் இரண்டு முறை லெட்டர் போட்டேன். சும்மா ஏனோ தானோன்னு பதில் எழுதினான். முன்னெல்லாம் கேப் விடாம எழுதறவன் இப்போ ஒரு பக்கம் தான் எழுதினான். இப்போ கொஞ்ச நாளா அதுவும் இல்ல. எனக்கும் எக்ஸாம்ஸ். ப்ராக்டிக்கல்ஸ். டெட்பாடீஸ். ஐ வாஸ் டோட்டலி ஆக்குப்பைட்.

“ரம்யா”
“ஐரினா? என்னப்பா?”
“யாரோ உன்ன பார்க்கவந்திருக்காங்கடி”
“குளிச்சிட்டிருக்கேன். வர்றேன்னு சொல்லு ஐரின்”

மணி இரவு ஏழாகிறது. இன்னேரம் யார் என்னைப் பார்க்க வந்திருப்பா? அண்ணன்? மெதுவாக படிகளில் இறங்கினேன். வானம் இன்னும் இருட்டவில்லை. குளித்து முடித்து வந்ததால் கழுத்தில் மீதமிருந்த நீர்த்துளிகளில் காற்று மோதி அவற்றை உடைத்து நொறுக்கியது. ஜில்லென்று இருந்தது. ஐ ·பெல்ட் ·ப்ரஸ். யார் வந்திருக்கிறா? எங்கே என்று தேடினேன். ஹ¥ இஸ் தட்? செல்வா?

(தொடரும்)

என் உயிர்த் தோழன் – 2

2

அவன் ரொம்ப நேரம் வரலைன்னவுடனே எனக்கு அழுகையா வந்தது. இவ்வளவு கஷ்டப்பட்டு எல்லா ஏற்பாடும் பண்ணிட்டு அவன் இல்லாட்டா எப்படி? பஸ் லேட்டோ? பஸ்ல இருந்து கீழே விழுந்துட்டானோ? என் மண்டை குழம்பிக்கிட்டே இருந்துச்சு. கடைசியில் வந்தான். லூசு மாதிரி ஒரு பேண்ட் ஒரு சர்ட் போட்டுட்டு வந்தான். நான் இன்னைக்கு ரெட் சுடி போட்டிருந்தேன். முன்ன ஒரு தடவ சனிக்கிழமை ஸ்பெஷல் க்ளாஸ¤க்கு நான் போட்டுட்டு வந்திருந்தப்போ நல்லாயிருக்குன்னு சொன்னான். நேரே வந்து ப்ரோகிராம் ஸ்கெடியூல் செக் பண்ணிட்டு. ஸ்டேஜூக்கு ஏறிட்டான். ஏதோ கையில பேப்பர் வெச்சிருந்தான். எடுத்து கடகடன்னும் வாசிக்க ஆரம்பிச்சிட்டான். வரவேற்புரை. அவங்க அப்பா எழுதிக்கொடுத்திருக்கனும். இந்த லூசுக்கு இப்படியெல்லாம் எழுத தெரியாது. என் கூட அதிகமா பேசவேயில்ல. பேசும்போது கையவெச்சு மூக்க பொத்திக்கிட்டேதான் பேசினான். முதல்ல ஷீபாதான் குளிக்காம வந்திட்டா போலன்னு நினைச்சேன். அப்புறம் தான் தெரிஞ்சது அவன் மூக்குல அழகா பெரிய ஒரு பரு. சார் அதனால தான் மூக்க பொத்திக்கிட்டே பேசியிருக்கார். பர்சனாலிட்டி கொறஞ்சு போச்சுன்னா? நான் தான் சொன்னேன் : பரு இருந்தாலும் நல்லாத்தான் இருக்க. கைய எடுத்துட்டு நார்மலா பேசுன்னு. அதுக்கபுறமும் மூக்க மூடிட்டேதான் பேசினான்.

“எனக்கும் கவி அரங்கத்துக்கும் என்ன சம்பந்தம்?”
“அதெல்லாம் எனக்கு தெரியாது. நீ ஸ்டேஜுக்கு வரணும்”
“வாட்? நெவர். என்ன ஒரு தடவை அவமானப் படவெச்சது பத்தாதா?”
“நீ ஒன்னும் செய்யவேண்டாம். ஜஸ்ட் வந்து உக்காரு போதும்.”
“வேற யார் யார் வர்றா?”
“ஐ ஹேவ் ஆஸ்க்ட் ஹிந்தி ஜீ அன்ட் சயின்ஸ் மேடம்”
“லூசா நீ? உன் சாய்ஸ் எல்லாம் வித்தியாசமா இருக்கு”
“யெஸ். இங்க இருக்கிற யாருக்குமே கவிதைன்னா என்னன்னு தெரியாது. பின்ன யார கூப்பிட்டா என்ன? நான் எனக்கு பிடிச்சவங்கள கூப்படறேன். யூ ஆர் கம்மிங்”

கூப்பிட்டது மட்டுமில்லாம என்னைத்தான் நடுவில உக்காரவெச்சான். ஆனா அவன் பக்கத்தில உட்கார்ந்திருந்ததால எனக்கு ஒன்னும் தெரியல. என்னை கூப்பிட்டதுக்கு அவன் க்ளீனா காரணம் சொன்னான்: க்ளாஸ் லீடர். சரியான ஆள் தான் நம்மாளு.

(நடு ராத்திரியில எழுந்து லைட்டப்போட்டு டைரிய தேடிக்கண்டுபிடித்து. நம்மாளு என்கிற வார்த்தையை ஒன்றும் தெரியாதவாறு பேனாவை வைத்து அடிக்கிறாள். டைரியையே பார்த்துக்கொண்டிருக்கிறாள்.)

ஆனா பிடிச்சவங்களைக் கூப்பிடறேன்னு சொன்னது எனக்கு பிடிச்சிருந்தது.

“சித்தார்த்”
(மேத்ஸ் புக்கிலிருந்து நிமிர்ந்து பார்க்கிறான்)
“என்னோட ஆட்டோகிராப் புக்.”
“ஓ. ஓகே”
வாங்கி பக்கத்தில் அமர்ந்திருக்கும் சூரியாவிடம் கொடுக்கிறான். மேத்ஸ் புக்கில் மூழ்கிப்போகிறான்.
..
“சூர்யா..ஒரு நிமிஷம்..நான் என் டீட்டெய்ல்ஸ் கொஞ்சம் ·பில் பண்ணிக்கொடுக்கிறேன். ஆட்டோகிராப் புக்க கொஞ்சம் கொடேன்”
“ஓகே ரம்யா. இந்தா”

“சித்தார்த்”
(இப்போ பயாலஜி புக்கிலிருந்து நிமிர்ந்து பார்க்கிறான் சித்தார்த்)
“என்னொட ஆட்டோகிராப் புக்”
“ஓ ஓகே”


“ஹே நான் தான் முதல்ல எழுதப்போறேன்”
“யெஸ் யெஸ் சித்”

எனக்கு ரொம்ப சந்தோஷமா இருந்துச்சு. ஐ வாஸ் ஹேப்பி. ஐ வான்டட் ஹிம் டு ·பில் அப் பர்ஸ்ட்.

(நடு ராத்திரியில் எழுந்து ஆட்டோகிராப் புக்கை திறந்து பார்க்கிறாள். முதல் பக்கத்தில் “Unshared is an ocean” என்று எழுதப்பட்டு சித்தார்த் என்று கிறுக்கப்பட்டிருந்தது)

“சூர்யா. கொஞ்ச நேரம் இங்க உக்காந்துக்கவா?”
“ஓ ஸ்யர் ரம்யா” சூர்யா எழுந்துகொண்டான்.
“சித்தார்த்”
“என்ன ரம்யா?”
“தமிழ் கட்டுரை போட்டிக்கு போறியா இல்லியா?”
“அதான் போகலைன்னு சொன்னேன்ல”
“போயேன் ப்ளீஸ்”
“ஐ டோன்ட் வாண்ட் டு பார்டிசிபேட். எனக்கு எக்ஸாம் தான் முக்கியம்”
“எக்ஸாக் இருக்கட்டும் நீ நல்லா பண்ணிடுவ. இது எல்லா ஸ்கூலுக்கும் நடக்கிற போட்டி.நீ போயேன் ப்ளீஸ். நீ கலந்துக்கிட்டினா நீ தான் பர்ஸ்ட் வருவ.”
“ரம்யா..”
“எனக்காக போயேன் ப்ளீஸ்”

“எனக்காக. ஐ வாண்ட் டு சீ யூ வின். ப்ளீஸ்”

சொன்னோம்ல. சொன்னோம்ல. எட்டு ஸ்கூளுக்கு நடந்த போட்டில அவன் தான் பர்ஸ்ட் வாங்கினான். ஹி இஸ் ஸ்மார்ட். தலைப்பு ஏதோ பெண்ணிய முன்னேற்றமாம். பன்னிய முன்னேற்றம்னு தலைப்பு கொடுத்திருந்தாக்கூட அவன் தான் பர்ஸ்ட் வாக்கிருப்பான். அவனுக்கு கொடுத்த பரிசை என்னிடம் கொடுத்தான். நான் வேண்டாம்னு சொன்னேன். பிறகு சந்தோஷமாக வாங்கிக்கொண்டேன். ஒரு ஷீல்ட். அவன் பெயர் போட்டது. இப்பொழுது என்னிடம் தான் இருக்கிறது. எப்பொழுதும் என்னிடம் தான் இருக்கும்.

“ரம்யா”
“ஹாய் சித்தார்த்”
“எக்ஸாம் எப்படி எழுதின?”
“குட். நல்லா எழுதினேன். நீ”
“நானும் நல்லா எழுதியிருக்கேன்” “இன்னைக்கு ·பேர்வெல் பார்ட்டிக்கு வருவேல்ல”
“கண்டிப்பா. என்ன கேள்வி இது?”
“இல்ல லேட் ஆயிடும். உங்க அவ்வா விடுவாங்களா?”
“விடுவாங்க”
“வீட்டுக்கு போயிட்டு வருவியா?”
“ம்ம். யூனி·பார்மோட இருக்கவேண்டாம்னு நினைக்கிறேன்”
“ம்ம்”
“நீ வீட்டுக்கு போறியா?’
“ஆமா.”
“பஸ்ல போகனுமே. போயிட்டு வந்திடுவியா?”
“சுதாகரும் வர்றான். ரெண்டு பேரும் எங்க வீட்டுக்கு போயிட்டு ட்ரெஸ் ச்சேஞ் பண்ணிட்டு வந்திடுவோம்”
“என்ன ட்ரெஸ் போடப்போற?”
“என்ன போடட்டும்?”
“என்ன கேட்டா?”
“சரி ஏதாவது போட்டுக்கிறேன்”
….
“ரெட் டீசர்ட் போடு. க்ரீம் பேண்ட் போடுவியே அதப் போடு”
“ம்ம் சரி தொவைச்சிருக்கான்னு தெரியல பாக்குறேன்”
..
“நான் என்ன போடட்டும்?”
“என்ன போடப்போற?”
“சொல்லேன்..”
“ரெட் சுடி போடேன்”

அவன் அப்படி பார்த்ததை நான் பார்த்ததில்லை. என்னையே பார்த்துக்கொண்டிருந்தது போல இருந்தது. நான் எப்பொழுது அவன் பக்கம் பார்த்தாலும் அவன் என் பக்கமே பார்த்துக்கொண்டிருந்தான். நான் குணிந்தே உட்கார்ந்திருந்தேன். ·பேர்வெல் பார்ட்டியில் அவனை திடீர்னு பேசச்சொல்லிட்டாங்க.

“சித்தார்த். எப்படி இப்படி பேசுற?”
“நல்லாயிருந்துச்சா?”
“ரொம்ப நல்லாயிருந்துச்சு”
“யூ லுக் குட்”
“வாட்” (ஸ்மைல். மைல்ட் வெக்கம். கீழே குனிந்துகொள்கிறாள்)
“சுடி நல்லாயிருக்கு”
“ம்ம்” (வேறு பக்கம் திரும்பிக்கொள்கிறாள்)

பார்ட்டி முடிஞ்சு ரொம்ப நேரம் உட்கார்ந்து பேசிக்கொண்டிருந்தோம். எங்கள் பிரிவைப் பற்றி யாருக்கும் கவலையிருப்பதாக தெரியவில்லை. இராவகிவிட்டது. அவனோடு தனியாக பேசவேண்டும் என்று நினைத்தேன். முடியவேயில்லை. அவன் எங்கே போனாலும் என் கண்கள் அவனையே பின் தொடர்ந்தன. சாப்பிட்டுவிட்டு கை கழுவச்செல்லும் போது அவன் வருவதைப் பார்த்தேன். மெதுவாக கை கழுவினேன். மிக மெதுவாக. என்னருகில் வந்தவன் சிரித்தான். இருட்டில் நாங்கள் இருவர் மட்டும். எனக்கு இருதயதுடிப்பு அதிகரித்தது. கைகழுவிக்கொண்டான். கர்சீப் தேடினான். இல்லை. என்னிடம் கை நீட்டினான். என் கர்சீப்பை கொடுத்தேன். முகத்தில் ஒற்றிக்கொண்டு பின் கைகளைத் துடைத்தான். மீண்டும் என்னிடம் கொடுத்தான். சிரித்தான். போகலாமா என்றான்.

“எக்ஸாம் எல்லாம் முடிச்சதுக்கப்புறம் உன்னையெல்லாம் பாக்கவேமுடியாதுல்ல”
“ஏன் சித்தார்த் எப்போவேணுன்னாலும் வீட்டுக்கு வா. நீ தான் வந்திருக்கியே”
“அது இப்போ. ஸ்கூல் முடிச்சாச்சுன்னா உன்ன பாக்கவர்றதுக்கு சரியான காரணம் நான் சொல்லனும். இல்லியா?”

அவன் பஸ்ஸ்டான்டுக்கு போகணும். என் வீடு பஸ்ஸ்டாண்ட் தாண்டித் தான் இருக்கு. அதனால நான் லக்ஷ்மி, சௌமியா, வாணி, சூர்யா எல்லாரும் நடந்தே வந்தோம். அவன் சௌமியாவுடன் தான் பேசிக்கொண்டே வந்தான். என்னிடம் பேசவேயில்லை. நானும் வாணியும்தான் பேசிக்கொண்டே வந்தோம். “ரம்யா” என்றொரு குரல் கேட்கவே திரும்பிப்பார்த்தேன். அப்பா. ஸ்கூட்டரில். நான் வண்டியில் ஏறிக்கொண்டேன். அவன் என் பார்வையில் புள்ளியாகித்தேயும்வரை நான் அவனைப் பார்த்துக்கொண்டேயிருந்தேன்.எனக்கு அழுகையாக வந்தது. ஐ க்ரைட். நாங்கள் ·பேர்வெல் பார்ட்டி முடித்துவிட்டோம். ·பேர்வெல்.

(தொடரும்)

என் உயிர்த் தோழன் – 1

(குட்டித் தொடர்கதை)

1

“என்னாச்சு ரம்யா? ஏன் ரொம்ப நாளா ஸ்கூலுக்கு வரல?”
“ம்ம்..உடம்புக்கு முடியலடா”
“ஜான்டீஸா”
“ம்ம்ம்ம்”
“இப்போ சரியாப்போச்சா”
“ம்ம்”
“ஏன் சரியாவே பேசமாட்டேன்ற?”
“ஒன்னுமில்லடா” “இந்தச் செயின் நல்லாயிருக்கா?”
“சூப்பரா இருக்கு. புதுசா?”
“ம்ம் அவ்வா வாங்கிக் கொடுத்தாங்க”
“ஜான்டீஸ் வந்ததுக்கா?”

சித்தார்த் கேட்டப்போ எனக்கு என்ன பதில் சொல்றதுன்னு தெரியல. ஒரு நாள் அவனுக்கு புரியும்.

“இன்னிக்கு ரிகர்சல் எப்படி இருந்தது?”
“சூப்பரா இருந்தது”
“நான் நடிச்சது பிடிச்சிருந்தா?”
“நீ நடிச்சத விட, அந்த மைக் கீழ விழுந்தப்போ நீ கொடுத்த ரியாக்ஷன் நல்லா இருந்தது”

நல்லா நடிக்கிறான். நல்லா பேசறான். நல்லா படிக்கிறான். எங்க அப்பாவுக்கு இவன ரொம்ப பிடிக்கும். என்கிட்ட நிறைய தடவை அவன பத்தி பேசியிருக்கிறார், ஸ்கூலுக்கு வரும் பொழுதெல்லாம் இவன் கிட்ட பேசாம போனதேயில்ல.அவன் கைய பிடிச்சுக்கிட்டு நின்னு பேசிட்டிருப்பார். அவனுடைய நண்பர்கள் என் அப்பா வருவதைப் பார்த்தவுடன் “டேய் உன்னோட மாமா வர்றாருடா” என்று என் காதுபடவே கிண்டல் செய்கிறார்கள். சித்தார்த் ரொம்ப நல்லவன் இதையெல்லாம் அவன் காதில் போட்டுக்கொண்டதைப் போலவே தெரியவில்லை.

“அப்பா”
….
“அப்பா”
“என்னடா?”
“இனிமே ஸ்கூலுக்கு வரும்போது சும்மா சும்மா சித்தார்த்தோட பேசாதீங்கப்பா”
“ஏன்?”

“பசங்க கிண்டல் பண்றாங்களா?”

“சரி. இனிமே தேவைன்னா மட்டும் பேசறேன்”

ஆனால் இன்றும் அப்பா பள்ளிக்கு வந்திருந்தபோது சித்தார்த்திடம் பேசியதைப் பார்த்த செல்வா வேண்டுமென்றே நான் க்ளாஸ¤க்கு வரும்பொழுது, சித்தார்த்தைப் பார்த்து “டேய் சித்தார்த் மாமா வந்திருந்தாரே. என்ன சொன்னார்?” என்று கேட்டுத்தொலைத்தான். இடியட். நான் தான் க்ளாஸ் லீடர் என்றாலும், கிட்டத்தட்ட அவன் தான் க்ளாஸ் லீடர். நான் உப்புக்குச்சப்பானி. ப்ரிண்ஸி எதுன்னாலும் ரெண்டு பேரையும் சேத்துதான் கூப்பிடுவாங்க.

“மேடம்”
“என்னாச்சு ஆயா?”
“ப்ரின்ஸி மேடம் சித்தார்த்தையும் ரம்யாவையும் கூட்டிட்டு வரச்சொன்னாங்க”
..
“சித்தார்த், ரம்யா போயிட்டுவாங்க”
..

நான் தான் ஏதும் பேசவில்லை என்றால், அவனாவது ஏதாவது பேசியிருக்கலாம். எங்கள் க்ளாஸிலிருந்து பிரின்ஸி ரூம் ரொம்ப தூரம். அட்லீஸ்ட் இன்னைக்கு அப்படி தோன்றியதா? இரண்டு பேரும் ஒரு வார்த்தை கூட பேசிக்கொள்ளவில்லை. அவன் இன்றைக்கு ஷ¥ போடவில்லை. வெறும் செறுப்பு தான் போட்டிருந்தான். டை கட்டவில்லை. இன் செய்யவில்லை. ஏன் இப்படி இருக்கிறான்? அதுவும் இன்று ப்ரின்ஸி ரூமுக்கு வேற போனோம். அது சரி. இவன் தான் ஸ்கூலுக்கு செல்லப்பிள்ளை ஆச்சே. எல்.கே.ஜில இருந்து ஒரே ஸ்கூல்ல படிச்சா இப்படித்தான் ஆகும். பெரிய தாதான்னு நினைப்பு. ஆனா ரொம்ப திமிர். ப்ரின்ஸி இந்தமுறை குழந்தைகள் தினவிழாவை நாங்கள் தான் (+2) நடத்தவேண்டும் என்று சொல்லிவிட்டார். திமிர் பிடிச்சவன் போகும் போதும் ஒரு வார்த்தை கூட பேசவில்லை. வரும் பொழுதும் ஒரு வார்த்தை கூட பேசவில்லை. நான் அவனை திரும்பிக்கூட பார்க்கவில்லை. அவனும் என்னை திரும்பிப் பார்க்கவில்லை.

“ரம்யா. நாங்க இந்தப்பாட்டு செலக்ட் செஞ்சிருக்கோம்”
வெல்வெட்டா வெல்வெட்டா..
மன்மதன் கல்வெட்டா..
“ச்சீ என்ன பாட்டுடி இது? இது ·பிப்த் பசங்களுக்கா?”
“அப்ரூவ் பண்றியா இல்லியா?”
“நான் அப்ரூவ் பண்றனா இல்லியாங்கறது வேற விசயம். சித்தார்த் அப்ரூவ் பண்ணனும்”
“நீ போய் அவன் கிட்ட கேளு.. சரின்னுடுவான்”
“என்ன விளையாடுறியா? இந்த பாட்ட நான் அவன் கிட்ட போட்டு காட்டனுமா?”
“யெஸ்”
“நெவர்”
“லைன்ஸ் தான் அப்படி இருக்கும். ஆனா டான்ஸ¤க்கு இந்த பாட்டு கரெக்ட்டா இருக்கும். ஸீ த பீட்ஸ்..”
..
“என்னவோ சொல்ற..சரி டேப் ரிக்கார்டர கொடு..நீயும் கூட வா..”

நான் போய் அவன் கிட்ட இந்தப்பாட்ட போட்டு காண்பிச்சேன். அவன் ஒன்னுமே சொல்லல. தூக்கிட்டு ஓடிறுன்னு மட்டும் தான் சொன்னான். ஷீபா ஏதோ சொல்ல ஆரம்பிச்சா.. வேற பாட்டு செலக்ட் பண்ணுங்க ப்ளீஸ்ன்னு டக்குன்னு சொல்லிட்டான். அவ வாய மூடிட்டு வந்தா. நாங்க திரும்பி நடந்து வரும் போது கோபால் அவன் கிட்ட ஏதோ சொல்லிருக்கான். அவன் முறைச்சானாம். ஷீபா தான் கேட்க சொன்னான்னா எனக்கு எங்க போச்சு அறிவு. முண்டம். கண்டிப்பா சித்தார்த் ஒத்துக்கமாட்டான்னு தெரியும். பட் ஐ ஜஸ்ட் வாண்டட் டு நோ வாட் ஹீ திங்க்ஸ்.

“எக்ஸ்க்யூஸ்மி மிஸ்”
“யெஸ் கம் இன் சித்தார்த்”



“என்னாச்சு சித்தார்த்”
“நத்திங் மிஸ்”

..
“என்னாச்சுடீ உன் ஆளுக்கு”
“என் ஆளா? உதைப்பேன்”
“என்னம்மோ எல்லாரும் கீழ குணிஞ்சு குணிஞ்சு பாக்குறாங்க?”
“ஆமா..என்னாச்சுடி?”

அவன் பக்கத்து ஊரிலிருந்து பஸ்ஸில் பள்ளிக்கு வருபவன். இன்று கொஞ்சம் லேட். இன்று என்ன இன்று எப்போதுமே அவன் லேட் தான். ப்ரிண்ஸி சித் லேட்டா வந்தா மட்டும் கண்டுகொள்ளாது. அவனை மட்டும் போகச்சொல்லிடும். பணிரெண்டாவது படிக்கிற எருமைமாடு லெட்டா வந்தா போகச்சொல்றதா? ஏன்னா அவன் ஸ்கூலோட ஹீரோ. இன்னிக்கு பஸ்ஸ¤ல ரன்னிங்க்ல இறங்கிருக்கான். கீழ விழுந்துட்டான். ஸ்கூல்ல ஹீரோன்னா, விழுந்தா ரத்தம் வராதா? முழங்கால் எல்லாம் ரத்தம். மிஸ் அங்கிட்டும் இங்கிட்டும் ஓடுது. எல்லோரும் என்ன என்னன்னு பாத்தாங்க. நான் கண்டுக்கிடல. எனக்கென்ன வந்தது?

“சித்தார்த் என்ன ஆச்சு?”
“நத்திங். ஐ யாம் ஓகே ரம்யா”
“கால்ல காயமா?. பஸ்ல விழுந்துட்டியா?”
“ம்ம்..சும்மா ஒன்னுமில்ல..”


(கோபால் சித்தார்த்தின் காதில் ஏதோ சொன்னான்)
“ஏய் ஏன் அழற?”
“உன் மூஞ்சி. நான் எங்க அழறேன்” “லஞ்ச் கொட்டிடுச்சாமே”
“ம்ம்”
“எங்க கூட வந்து சாப்பிடேன்” (மெதுவாக மூக்கை உறிஞ்சுகிறாள்)
“நீ தயிர் சாதமும் பொட்டுகடலையும் தான கொண்டு வந்திருப்ப?”
“வேணாட்டிப்போ”
..

ஆனா இன்னிக்கு அம்மா மோர் குழம்பு கொடுத்திருந்தாங்க. பொட்டுக்கடலை எப்பொழுதும் கொண்டுவருவேன் என்பது உண்மைதான் என்றாலும் அது எனக்கு ஈவினிங் ஸ்நாக்ஸ் தான். சாப்பாட்டுக்கு போய் யாராவது பொட்டுக்கடலையை தொட்டுக்கொள்வார்களா? இடியட். ஆனா நான் தினமும் பொட்டுக்கடலை கொண்டுவருகிறேன் என்பது அவனுக்கு எப்படி தெரியும்? நான் கூப்பிட்டப்போ வராதவன் சௌமியா கூப்பிட்டப்போ சாப்பிட வந்தான். நண்பர்களையும் அழைத்து வந்திருந்தான். எங்க பதினாலு வருட பழக்கத்தில் இன்றைக்குத்தான் கேர்ள்ஸ¤ம் பாய்ஸ¤ம் ஒன்றாக க்ளாஸில உட்கார்ந்து சாப்பிட்டோம். எல்லோரிடமும் கொஞ்சம் கொஞ்சம் வாங்கிக்கொண்டான். என்னுடைய மோர் குழம்பை வாங்கி சாப்பிடவேயில்லை. நானும் கொடுக்கவில்லை. ஏன் சாப்பிடும் பொழுது ஆட்காட்டி விரலை தனியாக நீட்டிக்கொள்கிறான்? ஸ்டைல்ன்னு நினைப்பு! தடாலடியாக என்னுடைய ஸ்நாக்ஸ் பாக்ஸை அவனே எடுத்து திறந்துவிட்டான். கொஞ்சம் பொட்டுக்கடலை எடுத்து சாப்பிட்டான். அந்த சிவப்பு ஸ்நாக்ஸ் பாக்ஸை ரொம்ப நேரம் கைகளில் மாற்றி மாற்றி வைத்துக்கொண்டிருந்தான். கைகளில் நீள நீளமாக நகம். வெட்டுவானா மாட்டானா? சோடாபுட்டி. சோடாபுட்டி.

“ரம்யா”
“ஆங் என்ன?”
“எங்களோட நாடகத்தில ஒரு நர்ஸ் வேஷம் இருக்கு. நீ நடிக்கிறியா?”
“என்னது நானா?”
“நடிக்கனும்.”
“ஏய் ஸ்டுபிட்டா நீ? இத்தன வருஷத்தில ஒரு நாளாவது நான் ஸ்டேஜ்க்கு பக்கமாவது போயிருக்கனா?”
“போயிருக்க. என்னோட யூகேஜில டான்ஸ் ஆடுற மாதிரி போட்டோ இருக்கு. பாக்குறியா?”
“இடியட் அது யூகேஜில. இப்போ என்னால முடியாது”
“எப்போ பாத்தாலும் படிச்சுட்டுதான இருக்க. கொஞ்ச நேரம் ரிலாக்ஸ்டா வந்து சும்மா நடியேன்”
“முடியாது”
“உன்ன நான் நடிக்க கூட்டிட்டு வருவேன்னு சொல்லிருக்கேன்”
“நீ சொன்னா? நோ.”

அவன் அப்படி மூஞ்ச வெச்சுக்கிறத பாக்க சகிக்கல. ரொம்ப பாவமா இருந்துச்சு. ஆனா இது நாள் வரைக்கும் நான் டான்ஸ்க்காகவோ ட்ராமாவுக்காகவோ ஸ்டேஜ் ஏறினதே இல்லை. எனக்கு ரொம்ப பயம். ஒரு தடவை இங்கிலீஸ் மேம் ரொம்ப வற்புறுத்தி கூப்பிட்டும் வரமுடியாதுன்னுட்டேன். இன்னைக்கு சித் கூப்பிட்டதும் என்ன செய்யறதுன்னு தெரியல. ஆனா இவன் இப்படி என்கிட்ட கேட்டதேயில்ல. பயமாகவும் இருக்கு. என்னோட பெஸ்ட் ப்ரண்ட்டோட ரிக்வஸ்ட தட்டவும் முடியல.

“ஹேய் ரம்யா வாட் எ சர்ப்ரைஸ்”
“சும்மா வந்தேன்”
சித்தார்த் ஓடி வந்தான்.
“ஹே ரம்யா தேங்க்ஸ்.”
தமிழம்மாவிடம் திரும்பி “அம்மா அந்த நர்ஸ் வேஷம்” என்றான்

தமிழம்மா எனக்கு கொஞ்சம் பெரிய டயலாக் கொடுத்தாங்க. கோர்ட் சீன். நான் நர்ஸாக வந்து சித்தார்த்துக்கு ஆதரவாக சாட்சி சொல்லவேண்டும். இது கொஞ்சம் பெரிய டயலாக். சித்தார்த் பக்கத்திலிருந்தே சொல்லிக்கொடுத்தான். என்னால் எவ்வளவு பெரிய கட்டுரையையும் எளிதாக மனப்பாடம் செய்து விட முடியும். ஆனால் இந்த நாடகம். வாசிக்கும் பொழுது நன்றாக சித்தார்த்திடம் சொல்லிவிடுகிறேன். ஆனால் ரிகர்சல்லுன்னு வர்றப்போத்தான் உதறுது.

“கனம்..க்க்” “க்க்கோர்ர்ட்டார் அவர்களே”
“ரம்யா பயப்படாம சொல்லு”
“எதிரே நிற்கும் ப்ராக்கியூஸ்டர்..”
சிரிப்பு.
“ரம்யா ஒரு தடவை நல்லா டயலாக்க பாரு. ஏன் கை நடுங்குது உனக்கு”

என்னால முடியல. ஒரே ஓட்டமா ஓடி வந்துட்டேன். சித்தார்த் பின்னால ரம்யா ரம்யான்னு கத்தறது கேட்டது. க்ளாஸ¤க்கு வந்து ஒரே அழுகை. ஷீபாவும் வாணியும் தான் தேற்றினார்கள். சித்தார்த் அன்றைக்கு க்ளாசுக்கு வரவேயில்லை. அவன் மேல எனக்கு கோபம் கோபமா வந்தது. எனக்கு ஒன்னும் கோபம் வரலை. நான் ஏன் கோபப்படனும்? அவன் கூப்பிட்டதுக்கு ட்ரை பண்ணினேன். அவ்ளோதான்.

“கௌரி தட் வாஸ் ·பெண்டாஸ்டிக்”
“தாங்க்ஸ்”
“டான்ஸ் ரொம்ப ரொம்ப நல்லா இருந்துச்சு. இல்ல ரம்யா”
“ம்ம்”
“உனக்கு க்ளாஸிக் தான் வரும்னு நினைச்சேன். வெஸ்டர்னும் பிச்சு உதறுர”
கௌரி வழிகிறாள்.
“உன்னொட ஸ்டெப்ஸ் எல்லாத்துலயும் ஒரு நளினம் இருந்துச்சு. இல்ல ரம்யா?”
“ம்ம்”
“சித்தார்த் ஷேல் வி மூவ் டு நெக்ஸ்ட் க்ளாஸ்”

இருக்கும். இருக்கும். அது என்ன இல்ல ரம்யான்னு என்னைய கேக்குறது? விழாவுக்கு இன்னும் கொஞ்ச நாள் தான் இருக்கிறது. இன்னிக்கு மத்தவங்க ப்ரோகிராம்ஸ் எல்லாத்தையும் பென்ச்மார்க் பண்ணனும்னு நான் தான் சொன்னேன். அது தான் தப்பா போச்சு. இவன் என்னடான்னா போற வர்ற இடத்துலயெல்லாம் வழியறான். நல்லா இருந்துச்சுன்னா நல்லாயிருந்துச்சுன்னு சொல்லவேண்டியதுதான. அது என்ன நளினமா இருந்துச்சுன்னு வழியல் வேண்டிக்கிடக்கு? சரியான வழிஞ்சான் கோஷ்ட்டி. நானும் அவனும் பேசிக்கிட்டே நடக்கிறத பாத்த செல்வா அங்கிருந்து கத்தினான்: சித்தார்த் கொடுத்துவெச்சவண்டா நீ. இன்னிக்கு சித்தார்த் ரொம்ப சிரிச்சான். வழிஞ்சான். லூசு. அவன் சிரிச்சா அழகாயிருக்கும். ஆனா சிடுமூஞ்சி. சிரிக்கவே சிரிக்காது.

“என்னடி இன்னும் சித்தார்த்த காணோம்?”
“வந்திருவான்”


“செல்வா. சித்தார்த் எப்போ வருவான்?”
“தெரியல ரம்யா. வந்திருக்கனும். நேத்து டெகரேட் பண்ணிட்டு லேட்டாத்தான போனான். வந்திருவான்”
“ப்ரிண்ஸி எப்போ ப்ரோகிராம் ஸ்டார்ட் பண்றதுன்னு கேக்கறாங்க”
“ஸ்டார்ட் பண்ணலாமே!”

“சித்தார்த் வரட்டும் மேடம். வந்திருவான்”

(தொடரும்)

Muthu In France

த‌ற்சம‌ய‌ம் வேலை நிமித்த‌மாக‌ ஃப்ரான்ஸ் வ‌ந்திருக்கிறேன். என் ம‌னைவியையும் குழ‌ந்தையையும் அழைத்து வ‌ந்திருக்கிறேன். ஒரு மாத‌ம் இங்கே த‌ங்கியிருப்பேன் என்று நினைக்கிறேன். நான் தங்கியிருக்கும் இட‌ம் Saint Quentin . இன்னும் phone ந‌ம்ப‌ர் வாங்க‌வில்லை. யாராவ‌து ப‌க்க‌த்தில் இருக்கீங்க‌ளாப்பா? ரொம்ப‌ மொக்க‌ போட‌ மாட்டேன். பாரீஸ் கூட்டிட்டுட்டுபோன்னு ப‌டுத்த‌மாட்டேன். சும்மா வெளில‌ இருந்து ஆத‌ர‌வு த‌ந்தாப்போதும். This Saint Quentin town is cold and unusually quite.

பாலய்யா

இன்னிக்கு மதிய சாப்பாட்டப்ப ஒரு தெலுங்கு பையனும் சாப்பிட வந்திருந்தான். கூட அவனோட ப்ரண்ட் ஒருத்தன். அவனும் தெலுங்கு தான். அதெப்படியோ காது காதுன்னு பேசிட்டே காதும் காதும் வெச்ச மாதிரி தெலுங்கு பசங்க எல்லாம் ஒன்னுமன்னா ஆயிரானுங்க. மதிய சாப்பாடு முடிச்சிட்டு கீழே இறங்கி வந்தோம்னா, ஒரு கும்பலா உக்காந்து பேசிட்டு இருப்பாய்ங்க. பூராம் தெலுங்கு பசங்க. கிட்டத்தட்ட அந்த ஏரியால இருக்குற எல்லா தெலுங்கு பசங்களும் உக்காந்து விஜயசாந்தி கட்சி லேதய்யா..சிரஞ்சீவி காதுய்யான்னு அரசியல பிரிச்சு மேஞ்சுட்டிருப்பாய்ங்க. நீங்க பக்கத்துல போய் நின்னிங்கனாக்க: அரே யார்..லஞ்ச் ·பினிஸ்ட்ன்னு கேப்பாய்ங்க. இந்த “யார்”-அ ஏன் கட்டிட்டு அழறாய்ங்கன்னு தெரியமாட்டேங்குது. நமக்கு “யார்”-அ கேட்டாலே கிர்ருன்னு ஏறுது.

அப்படி அவன் கூட பேசிட்டிருக்கும் போதுதான், நம்ப பாலய்யா பத்தின டாபிப் வந்தது. எனக்கு பாலய்யாவ ரொம்ப ரொம்ப பிடிக்கும். அவர மாதிரி ஒரு ஆக்ஷன் ஹீரோ இனி பிறந்துதான் வரனும். நம்ப விஜயகாந்தே அட இப்படி செஞ்சிருக்கலோமோன்னு யோசிக்க வெக்கற அளவுக்கு அவரோட படங்களில innovation, creativity போன்றவைகளை அள்ளி தினிச்சு பாக்கறவங்களை திக்குமுக்காட வெச்சிருவார்.

எடுத்துக்காட்டுக்கு இந்த வீடியோ பாருங்க:

மேலும் அவர் சம்பந்தமான எல்லா வீடியோக்களையும் நீங்க பாக்கலாம். Time back guarantee!

இப்போ இந்த செய்தி ஏன் தேவையில்லாம வந்ததுன்னா: அவரு எலெக்ஷன் campaign ஆரம்பிக்கிறாராம்.

எனக்கு ஒரு ஆசை: அவரு ஒரு நேரடி தமிழ் படத்துல நடிக்கனும். அப்பத்தான் நம்ப ஹீரோக்கள் அடங்குவாங்க. காளை படத்துல சிம்புவோட அந்த intro scene இருக்கெ அப்பப்பா. அதப்பாத்துட்டு பாலைய்யாவே ஆடிப்போயிட்டாராம். அதெப்படிங்க, verticalஆ குளத்து தண்ணீலருந்து ரௌடிகளை பொரட்டிப்போட்டு வெளியில வந்து கொஞ்ச நேரம் அப்படியே காத்துல நின்னு, 360 டிகிரில காமெராவ சுத்தவிட்டு, பிறகு அப்படியே horizontalஆ குளத்து படிக்கு வந்து ஸ்லோ மோஷனில நடக்கமுடியும்னு பாலய்யா பாக்குறவங்களையெல்லாம் நோண்டி நோண்டி கேட்டிட்டிருந்தாராம்.(அதென்னங்க சார் பெரிசு, அவங்க அப்பா இந்த வயசிலயும் என்னம்மா டான்ஸ் ஆடுவார் தெரியுமா? சும்மா சொடக்கு போட்டுக்கிட்டே ·போன எடுத்து ஹலோ யார் பேசறதுன்னு கேப்பார், தெரியுமா ? அவர் பேசினா பரபரப்புக்கும் தெரியுமா? நீங்க கத்துக்கனும் சார்!) காளைல, சிம்பு முடி கிடியெல்லாம் ஒரு ரேஞ்சா predator alien மாதிரி வெச்சிருந்தாரா, காளையும் ஏதோ super powered alien படந்தான்னு நெனச்சுட்டேன்.

Depressing news is epidemic.

எனக்கு ஒரு நண்பர் இருக்கிறார். கிட்டத்தட்ட என்னத்த கண்ணய்யா ரகம். எல்லாவற்றிலும் ஒரு தவறைக் கண்டுபிடித்து வாழ்க்கை நாசமா போயிட்டிருக்குன்னு சொல்லுவார். பேசாம எல்லாரும் மாடு மேய்க்கப் போகனும்னு சொல்லுவார். அப்பமட்டும் வாழ்க்கை சுபிக்சமா இருக்குமா என்ன? ஏதாவது ஒரு மெயில ·பார்வேர்ட் பண்ணிக்கிட்டேயிருப்பார். அவருக்கு மட்டும் எப்படித்தான் இந்த மெயில் எல்லாம் கிடைக்குதோ தெரியல. பெட் பாட்டில்னால இன்னும் கொஞ்ச நாள்ல உலகமே அழியப்போறது. பெப்ஸி குடிக்கிறதால தொண்டைப்புண் வந்து குடல் பூராம் வெந்துபோறது. லாப்டாப் அதிகநேரம் யூஸ் பண்ணினா விரல்கள் எல்லாம் சூம்பிப்போறது. செல்போன்ல நிறைய நேரம் பேசினா மூளையில கண்ணுக்குத்தெரியாத புழுக்கள் உருவாவறதுன்னும் சகட்டுமேனிக்கு டெய்லி ஒரு மெயில் அனுப்பிச்சுட்டேயிருப்பார்.

இப்போ ஜாப் லாஸ். அங்க பத்தாயிரம் பேருக்கு வேலை போச்சு. இங்க ஆயிரம் பேர தூக்கிட்டாங்க. இங்க முன்னூறு பேருக்கு பிங்க் ஸ்லிப் கொடுத்தாச்சுன்னு ஒரே depressing மெயில்ஸ். அதத்தான் நாங்களும் பாக்கறோமில்ல. வேறு மெயில் அனுப்பிச்சுட்டு அதுக்கு நடுவுல இது போல ஒரு மெயில் அனுப்பிச்சா கூட பரவாயில்லீங்க. டெய்லி retrenchment மெயில் தான்.

இன்னிக்கு அவரு ஆபீஸ¤க்கு வந்திருக்காரு, இன்டர்நெட் பூராம் துலாவியிருக்கிறாரு; ஒரு ஜாப் லாஸ் மெயில் கூட கண்ணில படல. என்ன செய்றதுன்னு புரியாம யோசிச்சார் மாப்ள. அப்போத்தான் அவரோட ·ப்ரண்ட் “நோ ஜாப்..” ன்னு இவருக்கு ஒரு மெயில் அனுப்பிச்சிருக்கார். நம்ப மாப்ள அப்பாடா இன்றைய பொழுது இனிதே கழிந்ததுன்னு அந்த மெயில டப்புன்னு ·பார்வேர்ட் பண்ணிட்டார். அப்புறம் நிதானமா படிச்சதுக்கப்புறம் தான் தெரிஞ்சது, அது நிஜமான job இல்லையாம், எப்பவும் schedule பண்ணிவெச்சிருக்கிற Batch Jobs தானாம். ஏதோ data problemனால இன்னிக்கு ஓடலையாம். அதத்தான் அவரோட நண்பர் : “No jobs run today”ன்னு மெயில் அனுப்பிச்சிருக்கார்.

Friend, please dont spread depressing news. Depressing news makes a depressing environment. And that is not good for anyone. Take it easy. Every one is in the same boat. இன்னிக்கு செத்தா நாளைக்கு பால்.

Britannica just dont get it!

இந்த செய்தியை பார்த்தீர்களா?

Britannica president Jorge Cauz ஒரு பேட்டியில் இவ்வாறு சொல்லியிருக்கிறார்:
“If I were to be the CEO of Google or the founders of Google I would be very [displeased] that the best search engine in the world continues to provide as a first link, Wikipedia,” he said.”Is this the best they can do? Is this the best that [their] algorithm can do?”

விக்கிப்பீடியாவின் வெற்றி ரகசியகங்கள் என்று கணக்கிட்டால்:
1. விக்கிப்பீடியாவில் பிரிட்டானிக்காவை விட மிக மிக மிக அதிகமான கட்டுரைகள் (5 மில்லியனுக்கும் மேல்) இருக்கின்றன.
2. கட்டுரைகள் விஸ்தாரமானவை.
3. விக்கிப்பீடியா எண்னற்ற reference (also see) கொடுக்கிறது. (யாரோ ஒரு புண்ணியவான் என்னுடைய பருத்திவீரன் விமர்சனத்தை பருத்திவீரனின் விக்கிபீடியா கட்டுரையில் referenceஆக இணைத்துள்ளனர். இது தான் விக்கிப்பீடியாவின் பலம்)
4. நிறைய பேர் தொடர்ந்து கட்டுரைகளின் தரத்தை மேம்படுத்துவது.
5. எல்லாவற்றையும் விட: இலவசம்.

மேலும் தகவல்களுக்கு.

கூகிள் search, அது தேடிக்கொண்டுவரும் பக்கங்கள் எவ்வளவு புராதானமானவை, எவ்வளவு உண்மையானவை; எவ்வளவு eliteஆனவை என்பதை கண்டுகொள்வதில்லை, its so simple; அந்த பக்கங்களுக்கு எவ்வளவு பேர் link கொடுத்திருக்கிறார்கள் என்பது தான் முக்கியம்.

Britannicaவின் புதிய யுக்தி:
He said the encyclopedia had set a benchmark of a 20-minute turnaround to update the site with user-submitted edits to existing articles, which are written by the encyclopedia’s paid expert contributors.
இப்போவாவது உணர்ந்துகொண்டார்களே. But too late.

இந்த யுக்தியால் Britannicaவிற்கு நிறைய புது articles வருகிறது என்று வைத்துக்கொண்டாலும்; ஒரு நாளைக்கு ஆயிரம் பக்கங்கள் வருகிறது என்றால், அதை எப்படி சரி பார்க்கப் போகிறார்கள்? எவ்வளவு நபர்களை இந்த வேலைக்கு நியமிப்பார்கள்? விக்கிப்பீடியாவின் வெற்றி அவர்கள் வெளியிடும் கட்டுரைகள் எந்த அளவுக்கு உண்மையாக இருக்கிறது என்பதில் இல்லை; எந்த அளவிற்கு verifiableஆக இருக்கிறது என்பதே. Britannica just dont get it.

ஆனால் ஆராய்ச்சி சம்பந்தப்பட்ட படிப்புகளுக்கு விக்கிப்பீடியா அவ்வளவாக உதவுவதில்லை; அதற்கு பிரிட்டானிக்காவைத்தான் நாட வேண்டியிருக்கிறது என்கிற வாதம் இருந்துகொண்டுதான் இருக்கிறது. இங்கே பார்த்தால் ஆனால் அதற்கும் வழி இருக்கிறது:
Scholarpedia
Citizendium (We aim at reliability and quality, not just quantity என்று சொல்கிறார்கள்! )

ஆனாலும் பிரிட்டானிக்கா இன்னும் எந்த தைரியத்தில் “Premium Membership : Free Trial” option வெச்சிருக்குன்னு கொஞ்சம் கூட புரியல! யாராவது அவங்களுக்கு உலகத்துல என்ன நடக்குதுன்னு எடுத்து சொல்லுங்கப்பா.

மேலும் இந்த வீடியோவை பாருங்கள். (A comparison video)

கடைசிக் கேள்வி:
பிரிட்டானிக்காவில் விக்கிபீடியா பற்றிய entry இருக்கிறதா? 🙂

கம்ப்யூட்டர்களே இல்லையென்றால் என்ன செய்துகொண்டிருப்பாய்?

கம்ப்யூட்டர்களே இல்லையென்றால் என்ன செய்துகொண்டிருப்பாய் என்றொரு 50% மொக்க 50% interesting கேள்வியை என் நண்பர் ஒருவர் என்னிடம் இன்று மதிய சாப்பாட்டின் போது கேட்டார். அவர் கேட்டதற்கும் இப்போ ஆங்காங்கே கமுக்கமாக வாரி வழங்கப்பட்டுக்கொண்டிருக்கும் pink slipகளுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை! சும்மா just like that கேட்டார்.

நான் கம்ப்யூட்டர் பார்த்த பொழுது பதினோறாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தேன்.(ஐயையோ ஸ்கூல் ஸ்டோரியா?!) நான் மேத்ஸ் பயாலஜி மேஜர் என்பதால் கம்ப்யூட்டர் எனக்கு பாடம் இல்லை. மேலும் மேத்ஸில் வரும் ஒரு சாப்ட்டர் கம்ப்யூட்டருக்கே என் தலை சுற்றும். என்னங்கடா ஒரே ஒன்னு ஜீரோவ வெச்சு ஏதேதோ வித்த காட்டுறாய்ங்கன்னு நினைப்பேன். அப்பொழுதெல்லாம் பின்நாட்களின் இந்த கம்ப்யூட்டர்களை கட்டிக்கொண்டுதான் அழப்போகிறேன் என்று என் மரமண்டைக்கு தெரிந்திருக்கவில்லை. டாக்டர் ஆகப்போகிறேன் என்று தான் சத்தியமாக நினைத்துக்கொண்டிருந்தேன். என் நண்பன் ஒருவனை டாக்டர் என்று தான் என் பள்ளி நண்பர்கள் சிலர் அழைப்பார்கள். அப்படி அழைத்த சிலர் டாக்டர் ஆகிவிட்டார்கள் என்பது வேறு விசயம்! அவன் பிற்காலத்தில் அண்ணாயுனிவர்சிட்டியில் எலக்ட்ரானிக்ஸ் முடித்துவிட்டு இப்பொழுது அதற்கும் சம்பந்தமில்லாத மானேஜ்மெண்ட் வேலை பார்த்துக்கொண்டிருக்கிறான் என்பது வேறு ஒரு விசயம்.

பதினோறாம் வகுப்பில் எங்களுக்கு கம்ப்யூட்டர் முன்னால் உட்காருவதற்கு கொடுக்கப்பட்ட நேரம் வெறும் ஐந்து நிமிஷம். அதுவும் ப்ரிண்ஸ் ஆப் பெர்சியா தாஸ் கேம் விளையாடினோம். விளையாடினேன். அதற்கப்புறம் எனக்கும் கணினிக்குமான உறவு நயந்தாரா சிம்புவின் உறவைப்போல ஆகிவிட்டது; ஓப்பன் விண்டோ சிஸ்டத்தில் கம்ப்யூட்டர் இன்ஜினியரிங் படிப்பை நான் தேர்ந்தெடுக்கும் வரை.

இப்பொழுதெல்லாம் கம்ப்யூட்டர் இல்லாத வாழ்க்கையை நினைத்துக்கூட பார்க்கமுடியாது. கம்ப்யூட்டரை விட்டுத்தள்ளுங்கள் இன்டர்நெட் இல்லையென்றால்?

ஒரு வேளை கம்ப்யூட்டர் என்கிற ஒன்றே இல்லாமல் இருந்திருந்தால்?

1. பல்டாக்டர்: டாக்டர் கனவுகளோடு இருந்தாலும் எனக்கு டாக்டர் சீட் கிடைக்கவில்லை, மயிரிலையில் டாக்டர் ·ப்ர·பஷன் என்னிடமிருந்து தப்பியது. இன்று உயிரோடிருக்கும் பல பேஷண்டுகளும் தான். ஆனால் எனக்கு பிடிஎஸ் கிடைத்தது. பல் டாக்டர். ஹோமியோபதி கிடைத்தது. அப்பாவுக்கு ஒரே குழப்பம். எனக்கு குழப்பமில்லை. பல் டாக்டர் படிக்கவும் ஹோமியோபதி படிக்கவும் எனக்கு விருப்பமில்லை. அப்பா அருகிலிருந்த ஒரு டாக்டரிடம் ஆலோசனை கேட்டார். எங்க அப்பா கேட்ட கேள்வி: பல் டாக்டருக்கு படித்துவிட்டு, மாஸ்டர் டிகிரி படிப்பதற்கு இருதய ஸ்பெஷலிஸ்ட் தேர்வு செய்ய முடியுமா என்பதே? Apparantly, முடியாது என்பது பின் நாளில் தெரிந்தது. ஏனென்றால் பல் என்பது வேறு; இருதயம் என்பது வேறு இல்லியா? பல் பிடுங்கும் பொழுது பிரச்சனை ஆகிவிட்டால் பல்லோடு போச்சு! ஒருவேளை நான் கம்ப்யூட்டர் படிக்கவில்லை என்றால், பல் டாக்டராக ஆகியிருந்திருப்பேன். ஹொமியோபதி மருத்துவராக ஆகியிருக்க வாய்ப்பில்லை. ஹோமியோபதி மருத்துவ ரீடர்ஸ் மன்னிக்கவும். Somehow it didnt look interesting.

2. வாத்தியார்: எனக்கு வாத்தியாராக வேண்டும் என்கிற ஆசையும் நிறைய உண்டு. இப்பொழுது கூட. I think the reason is my father, oppurtunity to interact with kids and you’ll get a lot of free time. புத்தகங்கள் படிப்பதற்கு உபயோகிக்கலாம். மற்றொரு காரணம் : You can be a hero among your students. காமெடியனாகத்தான் நிறைய வாத்தியார்களை மாணவர்கள் வைத்திருக்கிறார்கள் என்றாலும், வெகு சில வாத்தியார்களை தங்கள் மானசீக mentorஆக வைத்திருக்கும் மாணவர்கள் நிறைய பேர் உண்டு. என் அப்பாவை அவரது மாணவர்கள் வைத்திருந்ததை போல. ஏன் எனக்கே அவ்வாறான mentors உண்டு! அதனால் வாத்தியாரக ஆகி இருப்பதற்கும் வாய்ப்புகள் அதிகம். அப்படியே ஒரு கவர்மெண்ட் வாத்தியாராக ஆகியிருந்தால், பொங்கலுக்கு பம்ப்பர் பரிசாவது கிடைத்திருக்கும். இன்கிரிமெண்டல் எல்லாம் ஜெட் வேகத்திற்கு உயர்ந்திருக்கிறதாமே?

3. அரசியல்வாதி: நான் ஸ்கூல் படிக்கும் பொழுது என்னுடைய ஹிஸ்டரி மேடம் என்னை பிற்காலத்தில் நீ ஒரு அரசியல்வாதியாகத்தான் வருவாய் என்பார். நிறையதடவை அவ்வாறு கூறியிருக்கிறார். சீரியஸாக. நான் மேடை நாடகங்கள் நடித்ததற்காக இருக்கலாம். இயற்கையாகவே இருக்கும அதிகப்பிரசங்கித்தனமாக இருக்கலாம். இல்லை ஓவர் வாயாகக்கூட இருக்கலாம். ஆனால் அவர் அப்படி தான் சொன்னார். எனக்கு அரசியல் மீது நாட்டம் இருக்கிறதா? கொஞ்சம் இருக்கிறது என்பது உண்மைதான்; அனால் கிடைக்கக்கூடிய அடி உதை குத்துகளை நினைத்தால்; எஸ்கேப். ஒருவேளை கம்ப்யூட்டர் படிக்கவில்லையென்றால், ஊரிலே வாத்தியாராக ஆகி, சந்தர்ப்ப சூழ்நிலைகளால் அரசியல்வாதியாக ஆகியிருக்கக்கூடும். யார் கண்டார்கள்? எங்க ஊர் பெரிய அண்ணனிடம் தர்ம அடிகள் கூட வாங்கியிருக்க வாய்ப்புண்டு.

4. எழுத்து: நான் பள்ளிக்கூடம் படிக்கும் பொழுது எனது எட்டாம் வகுப்பில் என் அப்பா எழுதிக்கொடுத்த ஒரு நாடகத்திற்கு க்ளைமேக்ஸ் மாற்றி அமைத்தது தான் எனது முதல் எழுத்துப் பணி. அதற்கப்புறம் ஒரு நாடகம் எழுதியிருக்கிறேன். என அப்பாவின் நாடகத்தை தழுவி. சில பல கவிதைகள் எழுதி பலரை படுத்தியிருக்கிறேன். பிறகு என்ஜினியரிங் காலேஜ் வந்த பிறகு இவற்றையெல்லாம் சில வருடங்கள் மறந்தே போனேன். பிறகு சென்னைக்கு வேளைக்கு வந்த பிறகு மீண்டும் தற்செயலாக நடந்த ஒரு சம்பவத்தை வைத்து “அறை நண்பன்” என்கிற கதை ஒன்றை எழுதினேன். த்ரில்லர். என் நண்பர்கள் அனைவருக்கும் அது பிடித்திருந்தது. பாராட்டினர். ஆனால் அதுதான் அவர்களுக்கு வினையாகிவிட்டது. ஆடினவன் காலும் எழுதினவன் பேனாவும் (கீ போர்டும்) சும்மா இருக்காதுன்னு சொல்லுவாங்க, அது உண்மைதான். கூட சேர்த்து எழுதினவன பாராட்டின நண்பனும் சும்மா இருக்கமுடியாதுன்னு சேத்துக்கோங்க. அடுத்தடுத்து எழுதி காமிச்சு அவன வாசிக்கவெச்சு, அவன ஊர விட்டே ஒட வெப்போமில்ல. நல்லாயிருக்குடா மச்சான் எனக்கு வயிறு கலக்குற மாதிரி இருக்கு, கொஞ்சம் போயிட்டுவரவான்னு அவன் எஸ்கேப் ஆக பாத்தாக்கூட விட மாட்டோமில்ல, என்ன பிடிச்சது? எந்த இடத்தில பிடிச்சதுனு கேள்விகள் கேப்போமில்ல. பிறகு சென்னையில் இருக்கும் போதே: நிறைய சிறுகதைகள், ஒரு நாவல் (நசீர்), காந்தம் என்று நிறைய எழுதிவிட்டேன். ஒரு வேளை முழுநேர பாக்கெட் நாவல் எழுத்தாளனாக இருந்திருக்கக்கூடும். யார் கண்டா தாடி கீடியெல்லாம் வெச்சுக்கிட்டு “எழுத்து பித்தர் முத்து” ன்னு கூட ஆகியிருந்திருப்பேன்.

நீங்கள் கம்ப்யூட்டர் இல்லாவிடில் என்ன செய்துகொண்டிருப்பீர்கள்?

இதை தொட‌ர‌வேண்டும் என்றும் இதுக்கெல்லாம் ச‌ரியான‌ ஆள் அவ‌ர் தான் என்றும் என‌க்கு ந‌ம்ப‌த்த‌குந்த‌ வ‌ட்டார‌ங்க‌ள் தெரிவித்த‌தாலும் நான் ப்ர‌காஷை அழைக்கிறேன்.

மேலும்:

பாஸ்ட‌ன் பாலா
பொன்ஸ்
ல‌க்ஷ்ம‌ண்
பினாத்தல்கள் (I loved Thirumangalam Millionaire)
siva

புது வலைப‌திவ‌ர்:
செந்தில் (சூர்யா ப‌திவுக‌ள்)
Bala