குரல்வலைப் பக்கங்கள்

(உலகக்கோப்பை கிரிக்கெட், ஓலைச்சிலுவை, பழசிராஜா, நடுநிசி நாய்கள், யாரும் ஜெஸிக்காவைக் கொலைசெய்யவில்லை.)

நான் கிரிக்கெட் பார்ப்பதை நிறுத்தி 350 வருஷம் ஆச்சுன்னு சொன்னேன் என் நண்பரிடம்; அவர் சிரித்தார். உண்மைதான். ஒரு ஓவர் இல்லை இல்லை ஒரு பால் கூடப் பார்த்து நிறைய வருடங்கள் ஆச்சு. நான்கு வருடங்கள். போன உலகக்கோப்பை நினைவிருக்கிறதா? அதில் இந்தியா பங்களாதேஷ் போட்டி நினைவிருக்கிறதா. சூடு சொறனை இருக்கிற கிரிக்கெட் ரசிகன் எவனும் அந்த மேட்சை மறக்கமாட்டான். அப்புறம் இந்தியா இலங்கை மேட்ச் ஞாபகம் இருக்கிறதா?

விடிய விடிய காலை நான்கு மணி (சிங்கப்பூர் நேரம்) வரை மேட்ச் பார்த்தோம். அப்பொழுது நான் பேச்சுலர். சச்சின், ராகுல், கங்கூலி என்கிற நட்சத்திரங்கள் நிறைந்த டீம். என்ன ஆயிற்று? முதல் சுற்றிலேயே வெளியேறினோம். தோல்வி. அதுவும் யாரிடம் கத்துக்குட்டி பங்களாதேஷிடம். பிறகு இலங்கையிடம். அந்த மேட்ச் இன்று வரை எனக்கு நினைவிருக்கிறது. டிராவிட் அவுட் ஆன கனம் என் கிரிக்கெட் பார்க்கும் ஆசையை குழிதோண்டிப் புதைத்தது. மறுநாள் எங்கள் தொலைக்காட்சி வேலை செய்யவில்லை. தற்கொலை செய்து கொண்டது. அது தான் நான் பார்த்த கடைசி மேட்ச்.

கங்கூலியும், சச்சினும், டிராவிட்டும் அன்றோடு ரிட்டையர்ட் ஆகிவிட்டார்கள். வெற்றி தோல்விகள் சகஜம் தான். ஆனால் எப்படித் தோற்கிறோம் என்பது மிக முக்கியம். யாரிடம் தோற்கிறோம் என்பது மிக முக்கியம். கிரிக்கெட் பார்க்கவில்லையென்றாலும், செய்திகள் அவ்வப்போது கண்ணில் படும். இந்த முறை உலகக்கோப்பைக்கு முன் சேவாக் “இந்த முறை பங்களாதேஷைப் பழி வாங்குவோம்” என்று சொல்லியிருந்தார். எனக்கு குபீர் சிரிப்பு வந்தது. சட்டென்று எனக்கு தோன்றிய வசனம் “இந்த உலகம் இன்னுமாடா உங்கள நம்பிக்கிருக்கு” என்பது தான். இந்த வேர்ல்ட் கப் நாம் வாங்கலாம் என்று ஒரு சிலர் சொல்லிக்கொண்டிருக்கின்றனர். வாங்கலாம். அதிர்ஷ்டவசமாக நமக்குக் கிடைக்கலாம். ஆனால் என் அளவில் போன உலகக்கோப்பையில் பங்களாதேஷிடம் தோற்று முதல் சுற்றிலேயே வெளியேறிய அன்றே இந்திய கிரிக்கெட் டீம் கலைக்கப்பட்டாயிற்று. போங்கப்பா போங்கப்பா போய் பிள்ளைகளப் படிக்கப்போடுங்கப்பா.

மா.சிவக்குமார் தமிழ்நாட்டு மீனவர்கள் சுட்டுக்கொல்லப்படுவதைக் கண்டித்து இந்த உலகக்கோப்பையைப் புறக்கணியுங்கள் என்று சொல்கிறார். நான் எப்பொழுதோ புறக்கணிக்கத் தொடங்கியாச்சு.

***

ஜெயமோகன் எழுதிய ஓலைச்சிலுவை படித்தீர்களா? சிறுகதை படிக்கும் பழக்கமுள்ளவர்கள் கண்டிப்பாக படியுங்கள். இதுபோன்ற ஒரு கதையை சமீபத்தில் நான் படித்ததில்லை. கதை தோறும் பல தருனங்களில் நெகிழ்வாக உணர்ந்தேன்.

உலகப்போரில்; ப்ரான்ஸின் ஒரு போர் முனையில் அடிபட்ட ராணுவவீரர்களுக்கு சிகிச்சை அளித்துக்கொண்டிருக்கிறார் சாமர்வெல். ராணுவ வீரர்கள் பலருக்கு கைகால்கள் சிதைந்து போயிருக்கிறது. குருதி வழிந்தோடி ஒரு கால்வாய் போலவே ஆகிவிட்டிருக்கிறது. அடிபட்டவர்களுக்கு உடனடியாகச் சிகிச்சை அளிக்காவிடில் ஒரு மணி நேரத்துக்குள்ளாக அவர்கள் இறந்து விடும் அபாயம் இருக்கிறது. சாமர்வெல் வெறி பிடித்தார் போல சிகிச்சை அளித்துக்கொண்டிருக்கிறார். நீண்ட நேர உழைக்குப் பின்; கலைத்து அங்கிருந்த கட்டிலில் படுக்கிறார். அங்கு பக்கத்தில் இருந்த கட்டிலில் கால்கள் சிதைந்து ரத்தம் ஓடிக்கொண்டிருந்த ஒரு ராணுவ வீரன் தன்னைக் கூர்ந்து பார்ப்பது கண்டு துடுக்குற்று எழுகிறார். பரவாயில்லை ஓய்வெடுத்துவிட்டு வாருங்கள் என்று சைகையில் சொல்கிறான் அந்த ராணுவவீரன்.

விக்கிப்பீடியாவில் இருந்து எடுக்கப்பட்ட இந்த சம்பவம் தொடர்பான ஒரு குறிப்பு:
During the Battle of the Somme in 1916 he was one of four surgeons working in a tent, while hundreds of wounded men lay dying on stretchers outside. On short breaks from surgery, he spoke with some of the dying men, and noted that not one asked to be treated ahead of the others.

எத்தகைய மனிதன் சாமர்வெல்?
1. எவரஸ்ட்டை இரண்டு முறை ஏறுவதற்கு கடும் முயற்சி செய்திருக்கிறார்.
2. மணிக்கனக்காக பேட்மிட்டன் விளையாடுபவர்.
3. இசையில் தேர்ந்தவர்
4. அறுவை சிகிச்சை நிபுணர்
5. தன் நாட்டு மக்கள் அல்லாத வேறொரு நாட்டின் மக்கள் மேல் அதீத அன்பு கொண்டு அவர்களுக்காக வாழ்வை அற்பனித்தவர்.
6. தீவிர இறை நம்பிக்கை கொண்டவர்.

இது கதையாக இருந்தாலும்; பல உண்மைச் சம்பவங்களை வைத்துப் பிண்ணப்பட்டிருக்கிறது. இந்த கதையின் நாயகனான சாமர்வெல்லைப் பற்றி மேலும் தெரிந்துகொள்ள விக்கிப்பீடியாவைப் பாருங்கள்.

வேறொரு நண்பர், அவ்ளோ நல்லாருக்கா? கதையில கடைசியா ட்விஸ்ட் இருக்கா? என்றார். இல்ல, அதனால படிக்க உக்காரும் முன் ஒரு பாக்கெட் ட்விஸ்ட் வாங்கி வைத்துக்கொண்டு உக்காருங்கன்னு சொன்னேன். கஷ்டம்.

***

பழசிராஜா பார்த்தேன். கேரள வர்மா பழசிராஜா. வரலாற்றுத் திரைப்படங்களை இப்பொழுது எடுக்கும் பொழுது எப்படி ஒரு நாடகத்தன்மை தெரிகிறதோ அதே போன்றதொரு நாடகத்தன்மை இதிலும் இருக்கிறது. அதிலும் மொழிமாற்றம் செய்யப்பட்ட படம். மம்முட்டியின் குரல் ஒரு பக்கம் கெட்கிறது. வாய் ஒருபக்கம் அசைகிறது. இதில சரத்குமார் வேற. சும்மா நெஞ்ச நிமித்திக்கிட்டு வர்றார். அவ்வளவுதான். சுமன் கூட ஒரு ·பைட். இதுக்குத்தான் என்னைய படத்தில வெச்சிருக்காங்கன்னு சொல்றார். கிட்டத்தட்ட. 🙂 ஒரு படமாக எடுக்கக்கூடிய அளவிற்கு பழசிராஜாவின் வாழ்க்கையில் சம்பவங்கள் இல்லையோ என்று எண்ணத்தோன்றுகிறது.

***

அப்புறம் த மோஸ்ட் வாண்டட் மூவி பார்த்தேன். அதாங்க: நடுநிசி நாய்கள். தியேட்டர்க்குள்ள இருந்து டிவிட்டினேன். தெரியாம படத்துக்கு வந்துட்டன்டா. இனிமே இந்தப் பக்கவே வர மாட்டேன்டான்னு. கொடுமை.

எனக்கு படத்தின் சப்ஜெக்டில் பிரச்சனை ஒன்றும் இல்லை. எடுக்கட்டும். ஆனா ஒரு த்ரில்லர் இப்படியாப்பா இருக்கும்? ஹாலிவுட் படங்கள் எல்லாம் பார்க்கறீங்க தான? அட்லீஸ்ட் கொரியன் படங்கள் கூட பார்த்ததில்லையா? பின்ன ஏன் இப்படி? லக்ஷ்மியம்மா லக்ஷ்மியம்மான்னு. இதுல மல்டிபிள் பர்சனாலிட்டி கதை வேற.

உங்களுக்கெல்லாம் திரில்லர் எதுக்கு? ஹீரோ சைக்கோ. சோ வாட்? அவர் எப்படி சைக்கோ ஆனார்ன்னு ஹிஸ்டரி ஆப் த இனிஸிடென்ட் ஜியோகரபி ஆப் த ப்ரசிடென்ட் சொல்லி முடிக்கறதுக்குள்ள படமே ஒரு முடிவுக்கு வந்திடுது. எதுக்குய்யா சைக்கோவ சைக்கோவாவே விட்றவேண்டியதுதான? எதுக்கு காரணத்தை தேடிக்கிட்டே அலையறீங்க? ஹீரோ ஒரு சைக்கோ. அவனோட வேலை சாம்பர குடிச்சு கத்திரிக்காய கடிக்கறதுதான்னு விட்றவேண்டியதுதான? அவன் எதுக்காக சாம்பார விடாம குடிக்கிறான்? அவனுக்கு எப்படி கத்தரிக்காய் பிடிச்சுப்போனதுன்னு ஏன் எங்களப் படுத்தறீங்க? செவன்னு ஒரு படம் வந்துச்சு பாத்திருக்கீங்களா சார். பாத்திருப்பீங்க. காக்க காக்கவில டப்பாக்குள்ள மண்டைய வெச்சு பார்சல் பண்றத வேற எங்கருந்து பிடிச்சீங்க? அப்பவே நினைச்சிருக்கீங்க நாமளும் வாழ்க்கையில ஒரு சைக்கொ த்ரில்லர் எடுக்கனும்னு. எடுத்துட்டீங்க. சரி. இந்தப் படம் ரிலீஸ் ஆகும் போதா என் மனைவி ஊருக்குப் போகனும். அதனாலத்தான தியேட்டரில போய் உக்காந்தேன். இல்லன்ன போயிருந்திருக்க முடியுமா?! மிஸ் யூ டா ச்செல்லு. 😉

எங்கோ எப்பொழுதோ நடந்த ஒன்றை பெரிதுபடுத்தி எழுதினாத்தான் கதை. சினிமா. சிறுத்தையில கார்த்தி எப்படி போலிஸா சும்மா புகுந்து விளையாடறார். அப்படியா இருக்கு நம்ம ஊர்ல போலிஸ¤? சாமர்வெல் எவரஸ்ட் ஏறும் போது, இந்தப்பக்கமும் அந்தப்பக்கமும் பனிச்சறிவு ஏற்பட்டு கூடவந்தவர்கள் அடித்துச்செல்லப்பட, அவர் மட்டும் உயிர் பிழைக்கிறார். அவரும் செத்துவிட துணிகையில், அவர் தலைக்கு மேலே பனிச்சறுக்கு ஏற்பட்டு பனி ஏசுவின், ஆசீர்வதிக்கும் ஒரு கை போல உறைகிறது. சாமர்வெல் எவரஸ்டை ஏறின உண்மைச் சம்பவத்தை வைத்துக்கொண்டும் கற்பனையைத் தட்டிவிட்டால் கிடைப்பது இது தான். இது தான் கதை. குழந்தைக்கு யானை வானத்தில் பறந்தால் தான் கதை.

எப்பொழுதும் எங்கேயும் நடப்பது போல அப்பா பையனுக்கு ஆனா ஆவன்னா சொல்லிக்கொடுத்தாருன்னு சொன்னா என்ன ஆகும்? ஒரு பய திரும்பிப்பாக்கமாட்டான். ஊருக்குள்ள ரவுடின்னு ·பார்ம் ஆயாச்சு; அப்புறம்? இந்த மாதிரி ஒரு நாலும் படம் எடுத்தாத்தானே நாலு பேர் பேசுவாங்க .

சின்னப்பிள்ளைகள் பாப்பாங்க?! சின்னப்பிள்ளைங்க எதுக்குப் பாக்கறாங்க? அதான் சர்டிபிகேட் இருக்கே. பின்ன எப்படி சின்னப்பிள்ளைங்க தியேட்டருக்குள்ள போவாங்க? (திருட்டு) டீவிடி? தாட்ஸ் நாட் டைரக்டர்ஸ் பிராப்ளம்.

சிகப்பு ரோஜாக்கள் முப்பது வருடங்களுக்கு முன் வந்தது. சிவக்குமார் பென்சில்ல மீசை வரைஞ்சிட்டு நடுச்சிட்டிருந்த சமையம். செக்ஸ் காட்லையா? அதுவும் பெண்ணே வலிய வந்து செக்ஸ் கேட்பது போல காட்டவில்லையா? மகன் (வளர்ப்பு மகனாக இருந்த போதிலும்) செக்ஸ் வைத்துக்கொளவதை அப்பா படம் பிடித்து ரசிப்பது போலக் காட்டவில்லையா?

கௌதம் மேனனின் எந்த படங்களும் எனக்கு அவ்வளவாகப் பிடித்ததில்லை. காக்க காக்க தவிர. வேட்டையாடு விளையாடுவின் முதல் 20 நிமிடங்கள் தவிர.

ஆறுதலுக்கு சிகப்பு ரோஜாக்களில் இருந்து அட்டகாசமான இந்தக் காட்சியைப் பாருங்கள்.

தமிழில் நல்ல த்ரில்லருக்கு இன்னும் எத்தனை நாள் காத்திருக்கனுமோ தெரியல.

***

No one killed jessica (யாரும் ஜெஸிக்காவைக் கொலை செய்யவில்லை) என்கிற ஹிந்திப் படம் பார்த்தேன். துப்பறியும் பத்திரிக்கையாளர்கள். மீடியாக்கள். உண்மைச் சம்பவத்தை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்ட படமாம்.

ஜெஸிக்கா வளர்ந்துவரும் மாடல். அதிநவீன பார்களில் காக்டெயில் மேக்கர். ஒரு நாள் பாரில் நள்ளிரவைத் தாண்டியபின்னர் டிரிங்க்ஸ் தீர்ந்து விடுகிறது. மூன்று நபர்கள் ஜெஸிக்காவிடம் வந்து டிரிங்க்ஸ் கேட்கின்றனர். ஜெஸிக்கா இல்லை என்று சொல்ல, அவர்களில் ஒருவர் துப்பாக்கியைக் காட்டி மிரட்டுகிறான். ஜெஸிக்கா அதான் இல்லையே பின்ன எங்க இருந்து கொடுக்கிறதுன்னு கேட்டுக்கொண்டிருக்கிற போதே அவன் சட்டென்று ஜெஸிக்காவைச் சுட்டுவிடுகிறான். கொஞ்ச நேரத்தில் ஜெஸிக்கா இறந்து விடுகிறாள். சுட்டவன் மந்திரியின் மகன். மந்திரி பண பலம் செல்வாக்கை வைத்து சாட்சிகளை விலைக்கு வாங்குகிறார். ஜெஸிக்காவின் அக்கா போறாடுகிறார். முன்னூறு நபர்கள் இருந்த அந்த பாரில் இரண்டு மூன்று பேரே சாட்சி சொல்கின்றனர். முக்கிய சாட்சி ஜெஸிக்காவின் நண்பன் (குடும்பத்தின் நண்பனும் கூட) கடைசி நேரத்தில் நான் வாக்குமூலமே கொடுக்கவில்லை. எனக்கு ஹிந்தியே தெரியாது என்று ஜகா வாங்கிவிடுகிறான். ஜெஸிக்காவைக் கொன்றவர்கள் விடுதலை செய்யப்படுகிறார்கள்.

இது வரை படம் அட்டகாசம். அருமையான மேக்கிங். வித்யா பாலன் கன கச்சிதமாக செய்திருக்கிறார். இது போல தமிழில் படங்கள் எப்பொழுது வரும்?!

இதற்கப்புறம் ஒரு மீடியா மேடம் இந்த வழக்கில் அக்கறை கொண்டு எப்படி உண்மையை வெளிக்கொணர்கிறார் என்பதே கதை.

சிடி கிடைத்தால் கண்டிப்பாகப் பாருங்கள்.

***

Your support can make a difference in Indian Fishermen’s Life

Hi Friends,

I am sure you must have heard about the recent killings of Indian Fishermen from Tamil Nadu. by Sri Lankan Navy., if you have not request you to read through these links from popular dailies. – Pandiyan Killed on 12th of Jan 2011Jayakumar Strangulated on 24th Jan 2011 ,

So far, in the last few decades 530 fisherman has been killed, thousands of fisherman has been harassed, and multiple crores of rupees worth fishing equipments and boats have been demolished by Sri Lankan Navy. Our Indian Government has been a silent spectator for all this.

As a fellow Indian brothers & sisters , I appeal to you to voice your support for the fellow Indian fishermen brothers . As a fellow Indian you can do the following to voice your support for the poor fishermen, who have become target for the Sri Lankan Navy.

1.Sign the petition to stop the killing by Sri Lankan Navy – http://www.petitiononline.com/TNfisher/petition.html
2.Join the online protest to save the fishermen by tweeting about this using #tnfisherman tag – http://twitter.com/#!/search?q=%23tnfisherman
3.You can add the twibbon to your twitter profile / Face book profile picture to show your protest – http://twibbon.com/join/TNFisherman
Read and contribute for the Face Book page on Save Tamil Nadu Fisherman – http://www.facebook.com/savetnfisherman
4.Read and contribute articles for www.savetnfisherman.org

We are also seeking volunteers to contribute to this cause. If you are interested you can write to us savetnfisherman@gmail.com, tnfishermancampaign@gmail.com

One last request, Please send this mail to as many us of your friends and colleagues.

with best regards,

A Fellow Indian

(Via Athisha)

குடியரசுதின வேண்டுகோள்

via Jeyamohan.
>>
ஈரோடு கிருஷ்ணனும் நண்பர்களும் பசுமைபாரதம் என்ற அமைப்பை நடத்திவருகிறார்கள். வருடம்தோறும் அவர்கள் விடுக்கும் வேண்டுகோள் இவ்வருடமும்

ஆகஸ்ட் 15 , ஜனவரி 26 போன்ற தேசிய தினங்களில் நமது தொலைக்காட்சி முழுவதும் ஆக்கிரமித்து கொண்டிருப்பது திரை படங்களும், நட்சதிர பேட்டிகளும் . இது ஒரு வகையில் நமது விடுதலை போர் வீரர்ர்களயும், தேச பக்தர்களையும் சிறுமை படுத்துவதே. அன்று ஒரு நாள் நாம் தொலை காட்சி பெட்டியை நிறுத்தி வைத்து நமது புறக்கணிப்பை பதிவு செய்வோம். 
>>

2010 இல் நான் படித்த புத்தகங்கள்

1. Richard Dawkins எழுதிய The Greatest Show On Earth
2. Brain Greene எழுதிய The Elegant Universe
3. Michio Kaku எழுதிய Parallel Worlds
4. Jerry A Coyne எழுதிய Why Evolution Is True
5. Jarred Diamond எழுதிய Guns,Germs and Steel
6. Richard Dawkins எழுதிய The Blind Watchmaker
7. Carl Zimmer எழுதிய Evolution – The Triumph of an Idea
8. Richard P Feynman எழுதிய கட்டுரைகளின் தொகுப்பான The Pleasure Of Finding Things Out
9. Richard P Feynman எழுதிய கட்டுரைகளின் தொகுப்பான Surely You’re Joking, Mr. Feynman
10. The Beermat Entrepreneur

என் (மென்!) துறை சார்ந்த புத்தகங்கள்:
1. Head First Design Patterns
2. The Art Of Agile Development
3. Brownfield Application Development
4. Succeeding with Agile – Software Development Using Scrum
5. C# In Depth
6.Agile Project Management With Scrum
7. Patterns Of Enterprise Application Architecture (படித்தேன்; படிக்கிறேன்; படிப்பேன்! ;))

மதம் – குழந்தைகளின் மீதான வன்முறை

The Indian Clerk என்கிற நாவலைப் படித்துக் கொண்டிருக்கிறேன். David Leavitt எழுதியது. இப்பொழுதெல்லாம் பெரும்பாலும் Non-Fiction வகையான புத்தகங்கள் படிப்பதால் நாவல் படிப்பதற்குப் போதுமான நேரம் கிடைப்பதில்லை. நாவல் படிப்பதிலும் எனக்கு ஆர்வம் வெகுவாகக் குறைந்துவிட்டது. (மீண்டும் ஆர்வத்தைத் தூண்டும் விதத்தில் ஏதாவது ஒரு அற்புதமான நாவல் ஒன்றைப் பரிந்துரை செய்யுங்களேன்!)

நான் வாரம் ஒரு புத்தகம் படிக்கிறேன் என்று வைத்துக்கொண்டால் என் வாழ்நாள் முழுவதிலும் நான் சில ஆயிரம் புத்தகங்கள் மட்டுமே படித்திருப்பேன் – இது உலகத்தில் கிடைக்கப்பெறும் புத்தகங்களின் எண்ணிக்கையில் சொற்பம் தான். தந்திரம் என்னவென்றால் – படிக்கவேண்டிய ப்த்தகங்களைத் தெரிந்து வைத்திருப்பதே! (The trick is to know which books to read!)
– கார்ல் சாகன்

நூலகத்தில் இந்த நாவலைப் பார்த்த பொழுதே நினைத்தேன் இது அவரைப் பற்றியதாகத்தான் இருக்கவேண்டும் என்று. நான் நினைத்தது சரியாகப் போயிற்று. இது அவரைப்பற்றிய நாவலே தான்!

யார் அவர்? யூகியுங்கள் பார்ப்போம். (Clue – நாவலின் பெயர் The Indian Clerk :))

இந்த நாவல் கணித மேதை ராமனுஜர் பற்றியது ஆனால் இங்கிலாந்தின் கணிதமேதையான G.H.Hardyஐ சுற்றிப் பிண்ணப்பட்டுள்ளது. வெறும் ஐம்பது பக்கங்கள் மட்டுமே படித்துள்ள நிலையில் நாவலைப் பற்றி பெரிதாகச் சொல்வதற்கு ஒன்றுமில்லை!

நாவலில் வரும் ஒரு கேள்வி என்னைக் கவர்ந்தது:

ஒரு ஊரில் உள்ள ஒரு பார்பர் அந்த ஊரில் தானே முகச்சவரம் செய்து கொள்ளாத எல்லோருக்கும் முகச்சவரம் செய்துவிடுகிறார். அப்படியென்றால் அவருக்கு அவரே முகச்சவரம் செய்துகொள்வாரா?

***

சமீபத்தில் நான் படித்துமுடித்த வேறொரு புத்தகம் Christopher Hitchens எழுதிய god is not great. ஹிட்சன்ஸ் ஒரு அமெரிக்கப் பத்திரிக்கையாளர். ஒரு தேர்ந்த debater. யூ டியூபில் அவரது debate வீடியோக்களைத் தேடிப்பாருங்கள். அவருக்கு இருப்பது மூளையா இல்லை என்சைக்லோப்பீடியாவா என்று தெரியவில்லை. எப்படி ரஷ்யாவின் மூலையில் நடந்த சம்பவங்களைக் கூட சரியான சந்தர்ப்பத்தில் எடுத்து விட முடிகிறது? அவருக்கு எதிராக வாதம் செய்பவர் என்றைக்குமே பாவம் தான் – ஹிட்சன்ஸ் முன்னால் அவர் முட்டாளாகத்தான் தெரிவார்.

Richard Dawkins உங்களுக்குத் தெரிந்திருக்கும் என்று நினைக்கிறேன். அவர் ஒரு விஞ்ஞானி. இன்று உலகத்தில் இருக்கும் மிகச் சிறந்த கடவுள் மறுப்பாளர்களில் மிக முக்கியமானவர். அவரது எல்லாப் புத்தகங்களுமே அற்புதமானவை. (விஜய் டீவியின் மன்மதன் அம்பு நிகழ்ச்சியில் கோபிநாத்திடம் கமலஹாசன் தான் தற்பொழுது படித்துக்கொண்டிருக்கும் புத்தகம் எனச் சொன்னது Richard Dawkins எழுதிய The Greatest Show on Earth என்கிற புத்தகம் தான். கமலஹாசன் ஆனால் எதோ வேறு ஒரு பெயர் சொன்னார்!) ஆரம்பமாக The God Delusion என்கிற அவரது புத்தகத்தை நான் பரிந்துரை செய்வேன். (தற்பொழுது தி.க.வினர் இந்தப் புத்தகத்தை தமிழில் மொழிபெயர்த்திருக்கிறார்கள் என்று கேள்விப்பட்டேன்). பிறகு The Blind Watchmaker.

Richard Dawkins தனது இந்த வருடத்தின் ஹீரோ Christopher Hitchens தான் என்று சொல்லியிருக்கிறார்.

God is not great பலவகையில் ஒரு அருமையான புத்தகம். பொறுமையாக படித்தீர்கள் என்றால் இது ஒரு விழிப்புணர்ச்சியைக் கொடுக்கும். (நீங்கள் விழித்துக்கொள்ளத் தயாராக இருக்கவேண்டும்! தூங்குவது போல நடிக்கக் கூடாது!)

மதம் என்பது குழந்தைகளின் மீதான வன்முறை

என்று சொல்கிறார் Hitchens.

பதினெட்டு வயதுக்கு அப்புறம், குழந்தைகளுக்கு நாம் நம்முடைய மதத்தைப் பற்றிச் சொல்லிக்கொடுத்திருந்தோம் என்றால் இந்த உலகம் முற்றிலுமாக வேறுமாதிரி இருந்திருக்கும்.

எப்படி ஐய்யா மதம் குழந்தைகளின் மீதான் வன்முறையாகும்?

ஒரு எடுத்துக்காட்டுக்கு நீங்கள் ஒரு இந்து. நீங்கள் வசிக்கும் வீட்டுக்குப் பக்கத்தில் ஒரு கிறிஸ்தவர் வசிக்கிறார் என்று வைத்துக்கொள்ளுங்கள். நீங்கள் உங்கள் குழந்தைக்கு தினமும் வேத பாடங்கள் சொல்லிக்கொடுத்து ஹிந்துவாக வளர்க்கிறீர்கள். (அல்லது அப்படியேதும் ப்ரத்யேகமாக சொல்லிக்கொடுக்காவிடிலும் நீங்கள் கும்பிடும் கடவுளையே உங்கள் குழந்தைக்கு நீங்கள் பரிந்துரை செய்கிறீர்கள்)ஆனால் உங்கள் குழந்தை பக்கத்திலிருக்கும் கிறிஸ்தவரின் வீட்டுக்கு சென்று பழகுவதால் அவரது மதத்தால் ஈர்க்கப்பட்டு கிறிஸ்துவப் பழக்கங்களை கடைப்பிடிக்க ஆரம்பிக்கிறது. பைபிள் தான் படிக்கிறது. கிறிஸ்துவனாக மாறப்போகிறேன் என்று சொல்கிறது.

அப்பொழுது நீங்கள் என்ன சொல்வீர்கள்? ஐயையோ பாழாப்போன பக்கத்து வீட்டுக்காரன் என் குழந்தையின் பச்ச மனச கலச்சு இல்லாதது பொல்லாததையெல்லாம் சொல்லிக்கொடுத்திருக்கானே அப்படீன்னு புலம்ப மாட்டீர்கள்?!

பக்கத்து வீட்டுக்காரன் செய்வது உங்கள் குழந்தையின் மீதான வன்முறை என்றால், நீங்கள் செய்வது?!

***

நான் ஆ·பீஸிலிருந்து வரும் பொழுது ரயிலில் என்னுடன் வேலை பார்க்கும் ஒருவரிடம் பேசிக்கொண்டு வந்தேன். அப்பொழுது அவர் தன் இரண்டு வயது மகளை ஒரு பள்ளியில் சேர்த்திருப்பதாகவும். அந்தப் பள்ளியில் இடம் கிடைக்கவேண்டும் என்றால் அட்மிஷன் தெதிக்கு முந்தின நாள் இரவு முழுவதும் வரிசையில் நிற்க வேண்டும் என்று சொன்னார். அப்படியென்ன அந்த பள்ளியில் விஷேசம் என்றேன். ஸ்லோகம் எல்லாம் சொல்லித்தருகிறார்கள். சாப்பாட்டுக்கு முன்னால் சாமி கும்பிடச் சொல்லிக்கொடுக்கிறார்கள் என்று அடுக்கிக்கொண்டே சென்றார்.

அத்துடன் நில்லாது என்னையும் என் மகளை அந்த பள்ளியில் சேர்த்துவிடுமாறு சொன்னார். நான் எனக்கு கடவுள் நம்பிக்கையில்லை என்றேன். திடுக்கிட்டுப் பார்த்தவர் ஒருவாரு சமாளித்து பேச்சைத் தொடர்ந்தார். பிறகு சைடு கேப்பில “இப்போ நீங்க கடவுள் நம்பிக்கை இல்லைன்னு சொல்றீங்க நான் என்ன உங்களுக்கு மதிப்பு கொடுக்காமலா போயிடப்போறேன்” என்றார்.

சட்டென்று நான் “இப்போ நீங்க கடவுள் இருக்கார்ன்னு சொல்றீங்க நான் என்ன உங்கள மதிக்காமலா போயிட்டேன்” என்றேன். அத்துடன் அவர் கப்சிப்.

சில நூற்றாண்டுகளுக்கு முன் ஹோமோ செக்ஸ¤வல்ஸ் எப்படி வெளிப்படையாக தாங்கள் ஹோமோ செக்ஸ¤வல்ஸ் என்று சொல்லிக்கொள்ள இயலவில்லையோ அதே நிலையில் இன்று கடவுள் மறுப்பாளர்கள் இருக்கிறார்கள்

என்று யாரோ சொல்லியிருந்தார்கள். மிகச் சரி.

***

நீங்கள் ஹாயாக பீச்சில் குளித்துக்கொண்டிருக்கிறீர். திடுமென சுனாமி வந்துவிடுகிறது. நீங்கள் உங்களைக் காத்துக்கொள்ள ஓடுகிறீர்கள். நீங்களாகவே ஓடி தப்பிக்க முடியாது. உங்களுக்கு இரண்டு சாய்ஸ் இருக்கிறது. உங்களின் இஷ்ட தெய்வத்தின் படம் ஒன்று இருக்கிறது. பக்கத்தில் அறிவியலின் கண்டுபிடிப்பான புத்தம் புதிதாக அதிவேகமாகச் செல்லும் கார் ஒன்று இருக்கிறது. நீங்கள் என்ன செய்வீர்கள்?

1. கடவுளே என்னைக் காப்பாற்று. சுனாமியை நிறுத்திவிடு என்று அந்தப் படத்தைக் கும்பிடுவீர்களா? (ஐயப்பன் கோவிலில் சமீபத்தில் நடந்த சம்பவத்தை நினைவில் கொள்க!)
2. அந்தக் காரில் ஏறிக்கொண்டு அறிவியலின் துணைகொண்டு தப்பிப்பீர்களா?

(அந்த அறிவியலை மனிதன் கண்டுபிடிக்க காரணமாக இருந்ததே கடவுள் தானே என்கிற மிக மொன்னையான பதிலைத் தரக்கூடாது!)

***

சில வருடங்களுக்கு முன் ஒரு பார்ட்டிக்குச் சென்றிருந்த பொழுது – சாப்பிட்டுக்கொண்டிருந்த பொழுது – ஒரு ஆந்திராக்காரர் தமிழர்களைப் பற்றி கமெண்ட் ஒன்று அடித்துக்கொண்டிருந்தார். “கல்யாணப்பத்திரிக்கையில் கட்சித் தலைவர்களின் படங்களைப் போய் போடுகிறார்கள் இவர்கள். அதெப்படி கல்யாணப் பத்திரிக்கையில் கூட கட்சித் தலைவர்களின் படங்களைப் போடுகிறீர்கள்? கணேஷ் ஷிவாவைப் போன்ற கடவுள்களின் படங்களைத்தானே போடவேண்டும்?!” என்று நக்கலாகச் சிரித்தார்.

அங்கிருந்த ஒரு கடவுள் மறுப்பாளர் “கட்சித் தலைவர்களின் படங்களைப் போட்டாலாவது அவர்கள் கல்யாணத்திற்கு வருவதற்கு வாய்ப்பிருக்கிறது!” என்று படக்கென்று சொன்னார். எல்லோரும் கப்சிப்.

முற்றிலும் உண்மை. 🙂

***

பூமியிலிருந்து தெரியும் பால்வெளி!

Greenwich Royal Observatory இந்த வருடத்தில் “சிறந்த வானியல் புகைப்படம்” போட்டியின் முடிவை வெளியிட்டிருக்கிறது. வெற்றி பெற்ற புகைப்படங்களை இங்கே காணலாம். மற்ற எல்லா புகைப்படங்களையும் இங்கே பார்க்கலாம்.

பூமியும் பிரபஞ்சமும் (Earth and Space) என்கிற தலைப்பில் வெற்றி பெற்ற புகைப்படம் கீழே:

மிகப்பழமையான மரத்தை ஒட்டினாற் போல கத்தையான ஒளிக்கீற்று தெரிகிறதல்லவா அதுதான் நம் பூமி இருக்கும் சூரியகுடும்பம் இருக்கும் பால்வெளி (Milkyway Galaxy). நம் பால்வெளி தட்டையான டிஸ்க் போன்றது; நட்சத்திரங்கள், வாயுக்கள் மற்றும் தூசியிலானது. ஒரு லட்சம் ஒளி ஆண்டு தூரம் (9 லட்சம் ட்ரில்லியன் கிலோமீட்டர்)அகலம் கொண்டது. பால்வெளியின் நடுவிலிருந்து பால்வெளியின் கடைக்கோடி தூரத்தில் மூன்றில் ஒரு பங்கு தூரத்தில் நமது சூரியன் இருக்கிறது. (ஒரு ஓரத்தில்!) இந்தப் புகைப்படம் பால்வெளியின் உள் நோக்கிப் மையத்தைப் பார்க்கின்றது.ஒரு டிவிடி டிஸ்கின் ஒரு ஓரத்தில் இருந்து கொண்டு டிஸ்கின் மையத்தைப் பார்ப்பது போன்று.

மேலும் இந்தப் புகைப்படத்தில் நீங்கள் பார்க்கும் இந்த மரம் மிகவும் பழமையானது – செங்கிஸ் கான் படையெடுப்பின் பொழுது இந்த மரம் இங்கே நின்று கொண்டிருந்ததாம். செங்கிஸ் கான் பார்த்த மரத்தை நாமும் பார்க்கிறோம்! இதுவே ஆச்சரியமாக இருந்தால் – இந்தப் புகைப்படத்தில் இருக்கும் பல நட்சத்திரங்களின் ஒளி முப்பதாயிரம் வருடப் பழமையானது. நீங்கள் பார்க்கும் நட்சத்திரத்திலிருந்து வரும் ஒளி முப்பதாயிரம் வருடத்திற்கு முன்னால் தனது பயணத்தை ஆரம்பித்தது.

உங்களுக்குத் தெரியுமா?
சூரியனின் ஒளி பூமியை வந்தடைய எடுத்துக்கொள்ளும் நேரம் எவ்வளவு? எட்டு நிமிடங்கள். அதாவது நாளை மதியம் 12:00 மணிக்கு தகிக்கும் வெயிலில் நீங்கள் நடந்து கொண்டிருக்கும் பொழுது யாராவது சூரியனை தண்ணீர் ஊற்றி அணைத்து விட்டால் 12:08 க்குத்தான் சூரியன் அணைந்துவிட்டது உங்களுக்குத் தெரியும். ஏனென்றால் 11:59 க்கு சூரியனிலிருந்து கிளம்பிய ஒளி பூமியை 12:07க்குத்தான் வந்தடையும். அதேபோல 12:00 மணிக்கு சரியாக சூரியன் அணைந்து விடும் முன்னர் கிளம்பிய ஒளி பூமியை 12:08க்குத்தான் வந்தடையும்.

நீங்கள் பார்க்கும் நட்சத்திரங்களின் ஒளி ஆயிரம் ஆயிரம் ஆயிரம் ஆண்டுகள் பழமையானவை!

புகைப்படங்களைக் கண்டு களியுங்கள்! Be inspired!

நாம் நட்சத்திரங்களால் ஆனவர்கள்

நவம்பர் 9 அன்று கார்ல் சாகனின் (Carl Sagan) 76வது பிறந்ததினம் – உலகம் முழுவதும் இந்த நாள் கார்ல் சாகன் டேவாகக் கொண்டாடப்படுகிறது.

அவர் ஒரு science popularizer. அறிவியலை பொதுமக்களுக்கு ஆசை ஆசையாய் எடுத்துச் சொன்னவர். அவரைப் போல வேறு யாரும் அண்டத்தைப் பற்றியும் அறிவியலைப் பற்றியும் இந்த அளவுக்கு பொது மக்களுக்கு விளக்கி சொன்னதில்லை. விளக்கம் என்றால் அடிப்படையிலிருந்து மாற்றம் கொடுக்கிற விளக்கம்!

எனக்கு பிடித்த கார்ல்சாகனின் மேற்கோள்கள்:

Of course Pale Blue Dot!

From this distant vantage point, the Earth might not seem of particular interest. But for us, it’s different. Look again at that dot. That’s here, that’s home, that’s us. On it everyone you love, everyone you know, everyone you ever heard of, every human being who ever was, lived out their lives. The aggregate of our joy and suffering, thousands of confident religions, ideologies, and economic doctrines, every hunter and forager, every hero and coward, every creator and destroyer of civilization, every king and peasant, every young couple in love, every mother and father, hopeful child, inventor and explorer, every teacher of morals, every corrupt politician, every “superstar,” every “supreme leader,” every saint and sinner in the history of our species lived there – on a mote of dust suspended in a sunbeam.

The Earth is a very small stage in a vast cosmic arena. Think of the rivers of blood spilled by all those generals and emperors so that, in glory and triumph, they could become the momentary masters of a fraction of a dot. Think of the endless cruelties visited by the inhabitants of one corner of this pixel on the scarcely distinguishable inhabitants of some other corner, how frequent their misunderstandings, how eager they are to kill one another, how fervent their hatreds.

Our posturings, our imagined self-importance, the delusion that we have some privileged position in the Universe, are challenged by this point of pale light. Our planet is a lonely speck in the great enveloping cosmic dark. In our obscurity, in all this vastness, there is no hint that help will come from elsewhere to save us from ourselves.

The Earth is the only world known so far to harbor life. There is nowhere else, at least in the near future, to which our species could migrate. Visit, yes. Settle, not yet. Like it or not, for the moment the Earth is where we make our stand.

It has been said that astronomy is a humbling and character-building experience. There is perhaps no better demonstration of the folly of human conceits than this distant image of our tiny world. To me, it underscores our responsibility to deal more kindly with one another, and to preserve and cherish the pale blue dot, the only home we’ve ever known.

என் மொழிபெயர்ப்பு இங்கே.

“The nitrogen in our DNA, the calcium in our teeth, the iron in our blood, the carbon in our apple pies were made in the interiors of collapsing stars. We are made of star stuff.”

நமது டிஎன்ஏவில் இருக்கிற நைட்ரஜன், நமது பற்களில் இருக்கிற கால்சியம், நமது இரத்தத்தில் இருக்கிற இரும்பு; நாம் சமைக்கிற போண்டாவில்(?!) இருக்கிற கார்பன்; இவையெல்லாம் வெடித்துச் சிதறும் நட்சத்திரங்களில் இருந்து வந்தவை. நாம் நட்சத்திரங்களால் ஆனவர்கள்.

If you want to make an apple pie from scratch, you must first create the universe!

ஒரு போண்டாவை(?! ;)) நீங்கள் முதலிலிருந்து உருவாக்கவேண்டும் என்றால்; முதலில் நீங்கள் ஒரு அண்டத்தை உருவாக்க வேண்டும்!

Somewhere something incredible is waiting to be known!

நம்புதற்கரிய ஏதோ ஒன்று எங்கோ நாம் அறிந்துகொள்வதற்காகக் காத்திருக்கிறது!

Incredible!

*

நான் முன்னமே Symphony Of Science என்கிற பாடலைப் பற்றி எழுதியிருந்தேன். பார்க்காதவர்கள் இங்கே பார்க்கலாம்! சயின்டிஸ்ட்களின் குரல்களை வைத்தே பாடலாக மாற்றியிருக்கின்றனர். அழகு!

*

எனக்குப் பிடித்த இரண்டு விஞ்ஞானிகளும் இதில் வருவர்: கார்ல் சாகன் மற்றும் ரிச்சர்ட் ·பெயின்மேன்.

Power force wrist band and ராசிக்கல்

வெளிநாடுகளிலும் மககளிடம் மூடநம்பிக்கைகளைப் புகுத்தி ஏமாற்றுவேலைகள் செய்து பணம் பிடுங்குவது அதிகம் நடைபெறும். இப்பொழுது சுழன்று அடித்துக்கொண்டிருக்கிறது ஒரு சூராவளி. அது power force wrist band!

Power Force’s Innovative Products were developed to work with your body’s natural inner force. Within each Power Force powerband are ions that work with your body’s energy to give you confidence from within. Your inner force is limitless. Channel this force with Power Force powerband. Power Your Inner Force.

நீங்கள் இந்த ப்ளாஸ்டிக் பட்டையை கையில் அணிந்து கொண்டால் அதிலிருக்கும் ஐயான்கள் உங்கள் உடம்பிலிருக்கும் எனர்ஜியோடு சேர்ந்துகொண்டு உங்களுக்கு தன்னம்பிக்கையை அதிகரிக்குமாம். உங்கள் உள் சக்தி அளப்பரியது…என்று ஏகத்துக்கும் அளந்து விட்டிருக்கிறது இதன் மார்க்கெட்டிங்க் கும்பல்.

பல பிரபலங்கள் இதை வாங்கி அணிந்திருக்கின்றார்கள். வாங்கியவர்களின் கணக்கு மில்லியனைத் தாண்டும் என்கிறார்கள். கஷ்டம்.

அவர்கள் சொல்லும் முக்கியமான விசயங்கள்:

We react with frequency because we are a frequency.

Your body’s energy field likes things that are good for it.

Why Holograms? We use holograms because they are composed of Mylar—a polyester film used for imprinting music, movies, pictures, and other data. Thus, it was a natural fit.

A primitive form of this technology was discovered when someone, somewhere along the line, picked up a rock and felt something that reacted positively with his body.

பிரச்சனை என்னவென்றால்: இந்த கைப்பட்டையில் கொலராடோ யுனிவர்சிட்டியின் முத்திரை இருக்கிறது!

இது ஒரு சுத்த நான்சென்ஸ் சமாச்சாரம். இதைத்தான் psuedo-science என்று சொல்லுவார்கள். அதாவது மூடநம்பிக்கைகளை அறிவியலைக் கொண்டு விளக்க முற்படுவது. ஜோதிடம் ஒரு முக்கியமான psuedo-science.

எங்கோ ஒரு நபர் ஒரு கல்லை எடுத்துக் கையில் வைத்த பொழுது ஏதோ ஒன்று அவரது உடம்பில் பாஸிடிவாக செயல்பட்டது என்று கூறுகிறார்கள். (இந்த ஏதோ ஒன்று தான் எப்பொழுதுமே பிரச்சனை!) அந்த நபர் எதை நம்பினார் என்பது பிரச்சனை இல்லை – அந்த பாறையின் அதிர்வுகள் நமது அதிர்வலைகளுடன் சேர்ந்து ஒத்திசை ஏற்படுத்தியது என்பது தான் காமடி.

நீங்கள் ஒரு கல்லை ஒத்திசைக்க (ressonate) வைக்கமுடியும் ஆனால் கல் தானே அதிர்வலைகளை உண்டாக்காது.

இந்த பட்டையில் இருப்பதைப் போன்ற ஹாலோகிராம்கள் எந்தவித அலைகளையும் எழுப்பவதில்லை; மேலும் நம் உடம்பும் எந்த வித அலைகளையும் எழுப்பவதில்லை. நம் உடம்பிற்கு frequency; energy field என்று ஏதும் கிடையாது. மேலும் உள் சக்தி என்கிற ஒன்று கிடையவே கிடையாது.

இயற்பியலின் விதிகளின் படி இந்த பட்டை நம்மை பாதிக்காது – உங்களுக்கு ப்ளாஸ்டிக்கினால் அலர்ஜி ஏற்பட்டால் ஒழிய!

மேலும் தகவல்களுக்கு

இது மனிதர்களிடம் மூட நம்பிக்கைகளைப் புகுத்துவது எவ்வளவு எளிது என்று காட்ட உதவும் இன்னொரு சம்பவம் – நம்மூரில் விற்கப்படும் ராசிக்கல் சாமாச்சாரம் போலவே!

சாருநிவேதிதா இளையராஜாவின் இந்த ரீரெக்கார்டிங்க கேளுங்க

இளைய ராஜா பற்றிய விவாதங்களின் போதெல்லாம் அவர் ரீரெக்கார்டிங்கில் கிங் என்று சொல்லி என் வாயை அடைத்து விடுவார்கள். நானும் அது சரிதான் என்று சரண்டராகி தோல்வியை ஒப்புக் கொண்டு ஓடி வந்து விடுவேன். நேற்று இரவு ஒரு பிரபலமான இசைக் கலைஞர் வீட்டில் Bedrich Smetana என்ற செக் நாட்டு கம்போஸரின் இசைத் தொகுப்புகளைக் கேட்ட போது இளைய ராஜாவின் ரீரெக்கார்டிங் சாதனையெல்லாம் இந்த ஸ்மெட்டானாவிடமிருந்து உருவப் பட்டது என்பதைத் தெரிந்து ஆச்சரியம் அடைந்தேன்” என்று இங்கே அவர் சொல்லியிருக்கிறார்..சாருவின் எந்த எழுத்துக்களையும் நான் ஸீரோ டிகிரி படித்ததற்கப்புறம் படிப்பதில்லை..ஆனால் எப்படியோ அவரது சமீபத்திய இந்த அஞன்கன்பூசியா உளரல் என் கண்ணில் பட்டுத் தொலைத்துவிட்டது..

சாருநிவேதிதா இளையராஜாவின் இந்த ரீரெக்கார்டிங்க கேளுங்க..

முதல் மரியாதையில இருந்து..

சிந்துபைரவியிலிருந்து..

மூடுபனியிலிருந்து

நாயகனிலிருந்து

மௌனராகத்திலிருந்து..

ராஜபார்வையிலிருந்து

கோபுரவாசலிலே..

ஜானியிலிருந்து

Mouna Ragam – Chasing Sequence

*****
சாருநிவேதிதாவுக்கு இந்த வீடியோ சமர்பணம்: