எஸ் ராமகிருஷ்ணன் அவர்களுக்கு:

எஸ் ராமகிருஷ்ணன் அவர்களுக்கு,

நான் என்ன சொல்வது என்றே தெரியவில்லை. நீங்கள் எனக்கு கிட்டத்தட்ட ஒரு விதமான உந்துசக்தி. எழுதுவதற்கு நீங்கள் எனக்கு குரு. உங்கள் கதாவிலாசத்தை படித்த பிறகே, ஒவ்வொரு மனிதனுக்குள்ளேயும் நிறைய கதைகளும் அனுபவங்களும் புதைந்து கிடக்கின்றன என்பதையும், அதை மிகச்சரியாக அந்த நினைவுகளை தட்டியெழுப்பி ரசிக்கும் படியாக எழுதலாம் என்பதையும் அறிந்துகொண்டேன். தமிழ் எழுத்துலகையும் தமிழ் வாசகர்களையும் ஒரு படி மேலே எடுத்துச்சென்றவர்களுள் நீங்களும் ஒருவர் என்பதை யாரும் மறுக்கமுடியாது. உங்களது நெடுங்குருதி எனக்கு மிகவும் பிடித்தமான நாவல்களுள் ஒன்று. என் நினைவில் மட்டுமல்ல தமிழ் எழுத்துலகில் அந்த நாவலுக்கு என்றென்றும் மிக முக்கியமான ஒரு இடம் உண்டு. அப்படிப்பட்ட ஒரு எழுத்தாளர், தாவரங்களின் உரையாடல் என்கிற மிக நுட்பமான ஒரு சிறுகதையை படைத்த ஒரு இலக்கியவாதி, நான் மிகுந்த உயரத்தில் வைத்து மதிக்கும் ஒரு நபர், என் எழுத்துக்களை ரசித்து பாராட்டுவது, எனக்கு மிகுந்த மகிழ்ச்சியையும், மேலும் எழுதவேண்டும் (பிற பதிவர்கள்: இனி ரொம்ப மொக்க போடுவான் போலிருக்கே!) என்கிற எண்ணத்தை கொடுக்கிறது. நாங்கள் (பதிவுலக நண்பர்கள்) தினமும் அலுவலக வேலைகளை முடித்துவிட்டு, வீட்டுக்கு வந்தபிறகு, சில வீட்டு வேலைகளையும் கவனித்துவிட்டு, கிடைக்கிற சில மணித்துளிகளில் டீவி பார்த்து, குமுதம் ஆனந்தவிகடன் போன்ற பத்திரிக்கைகளையும், தீராநதி போன்ற இலக்கிய பத்திரிக்கைகளையும் ஒரு பார்வை பார்த்துவிட்டு, தினப்பத்திரிக்கைகளையும் பார்த்துவிட்டு, பிற பதிவுகளையும் பார்த்து, சினிமாவும் பார்த்து, மறுநாள் காலை ஒன்பது மணிக்கு அலுவலகத்துக்கு செல்லவேண்டும் என்பது நினைவில் இருந்தும், இரவு மூன்று மணி வரை கண் முழித்து எழுதும் பதிவுகளை, உங்களைப் போன்றவர்களிடமிருந்து கிடைக்கும் பாராட்டுக்கள் தான், அர்த்தமுள்ளவைகளாக மாற்றுகின்றன. உங்கள் பாராட்டு எனக்கு மனநிறைவை அளிக்கிறது. நான் ரசிக்கும் படியாகத்தான் எழுதுகிறேன் என்பதை எனக்கு சுட்டிக்காட்டியது. நான் எழுதிய பல பதிவுகளை நான் உங்கள் பின்னூட்டத்திற்கு பிறகு எடுத்து வாசித்து சீர் தூக்கி பார்த்தேன். Its like self-evaluation. Self Analysis. நன்றி. மிக்க நன்றி. மீண்டும் வருக. நிறைகளை மட்டுமில்லாது, குறைகளையும், முடிந்தால் உங்கள் பணிகளுக்கு மத்தியில் நேரம் இருந்தால், சுட்டிக்காட்டுங்கள்.

இப்பொழுது கூட திராநதியில் நீங்கள் எழுதிவரும் “சித்திரங்கள் விசித்திரங்கள்” பகுதியை படித்துக்கொண்டுதான் இருந்தேன். இவ்வாறான விசயங்களை (ஓவியங்களை பற்றி, அயல் சினிமா, துணையெழுத்து, தேசாந்தரி ) எழுதுவதற்கு என்னென்ன படிக்கிறீர்கள்? இவ்வாறான ஒரு எல்லைகள் விரிந்த ஒரு வாசிப்பு எப்படி சாத்தியமாகிறது? எங்களுக்கும் கொஞ்சம் சொல்லிக்கொடுங்களேன். தாங்கள் படித்த புத்தகங்களையும், புது விசயங்களையும் (like கற்றதும் பெற்றதும்) தமிழ் வாசகர்களுக்கு உங்களை போன்ற எழுத்தாளர்கள் அறிமுகப்படுத்தியிருக்கிறார்கள். ஆனால் அவ்வாறன விசயங்களை நீங்கள் எப்படி தேடிப்பிடித்து படிக்கிறீர்கள் என்பதையும் எங்களுக்கு கற்றுத்தாருங்கள். Teach us how to fish!

நெகிழ்ச்சியுடன்,
MSV Muthu

அரசியலுக்காக ஆட்டம் போடாதீர்கள்!

நான் பெரும்பாலும் வேறு தளங்களிலோ அல்லது நியூஸ் பேப்பரிலோ வெளியான செய்தியையோ கட்டுரையையோ அப்படியே copy-paste செய்ததில்லை. தொடுப்பு மட்டுமே கொடுப்பது வழக்கம். இந்த முறை – ஒரு செய்தியை (சரியாக சொன்னால் ஒரு அறிக்கையை) அப்படியே இங்கே cut-copy-paste செய்கிறேன்.

Hats-Off Rajini!


அரசியலுக்காக ஆட்டம் போடாதீர்கள்- கர்நாடகத்துக்கு ரஜினி சூடு

நான் பெரிதாக மதிக்கிற கர்நாடக அரசியல்வாதிகள் இன்று அரசியல் ஆதாயத்துக்காக ஆட்டம் போடுகிறார்கள். அவர்களை எச்சரிக்கிறேன்… அரசியலுக்காக ஆட்டம் போடாதீர்கள்; அதன் விளைவு மோசமாக இருக்கும். மக்கள் உங்களைச் சும்மா விடமாட்டார்கள் என்று நடிகர் ரஜினிகாந்த் கூறினார்.

தமிழ்த் திரையுலகினர் நடத்திய உண்ணாவிரதப் போராட்டத்தின் இறுதியில் பேசிய ரஜினி,

இது ஒரு வித்தியாசமான சந்திப்பு என்றுதான் சொல்ல வேண்டும். மிகவும் அதிகமாகப் பேசி புகழ் பெறுவதும் கஷ்டம், குறைவாகப் பேசி புகழ் பெறுவதும் கஷ்டம். இங்கே பேசியவர்கள் மிகவும் உணர்ச்சி வசப்பட்டார்கள். நியாயம்தான். நடந்துள்ள விஷயங்கள் அனைத்தும் மனதுக்கு மிகவும் வேதனையைத் தருவதாக உள்ளன.

குறிப்பாக கர்நாடகாவில் தமிழ் மக்கள் தாக்கப்பட்டதற்கு எனது கடுமையான கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். தமிழ் மக்கள் மீதான வன்முறைக்குக் காரணமானவர்களைக் கண்டிக்கிறேன்.

பல ஆண்டுகளுக்கு முன்பே ஓகேனக்கல்லின் ஒரு பகுதி கர்நாடகாவுக்கும், மறுபகுதி தமிழகத்துக்கும என ஒதுக்கப்பட்டது. தனக்காக ஒதுக்கப்பட்ட பகுதியிலிருந்து தண்ணீர் எடுத்துக்கொள்ள தமிழகத்தை எதிர்ப்பது எந்த விதத்தில் நியாயம்… உதைக்க வேண்டாமா, இதை எதிர்ப்பவர்களை.
நாடு எங்கே போய்க் கொண்டிருக்கிறது. அரசு, சுப்ரீம் கோர்ட் எல்லாம் இருக்கிறதா… மக்கள் யார் பேச்சைக் கேட்கிறார்கள்… யார் சொன்னால் கேட்பார்கள்… புரியவில்லை.

என்ன நடந்தாலும் கைகட்டி வேடிக்கைப் பார்க்க எதற்கு அரசாங்கம்? இந்த வட்டாள்… நாராயணகவுடாவை எல்லாம் விடுங்கள்.

கொஞ்சம் பெரிய தலைவர்கள் ரேஞ்சுக்குப் பேசுவோம்.

கர்நாடகத்தைச் சேர்ந்த நான் மிகவும் மதிக்கிற ஒரு தலைவர் அவர். ஒரு பெரிய கட்சியின் சார்பில் முதல்வராகக் கூட இருந்தவர். சில தினங்களுக்கு முன் அவர் கர்நாடக மக்களைத் தூண்டிவிடும் விதத்தில் பேசியிருக்கிறார். இதை அந்தக் கட்சி சும்மா வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கிறது.
காரணம் அங்கே விரைவில் வரப்போகிற சட்டசபைத் தேர்தல். அரசியல் ஆதாயத்துக்காக அப்படிச் செய்கிறார்கள். மக்கள் என்ன முட்டாள்களா.. அவர்களுக்கு ஒன்றுமே தெரியாதா…?

எல்லாவற்றையும் மேலிருந்து பார்த்துக் கொண்டிருக்கும் கடவுளுக்குச் சமமானவர்கள் மக்கள். அவர்களை யாரும் ஏமாற்ற முடியாது. உண்மையாகப் பேச வேண்டும். மனசாட்சிக்கு விரோதமில்லாமல் நடந்து கொள்ள வேண்டாம்.

சட்டப்பூர்வமாக நம் தமிழகத்துக்கென்று தரப்பட்ட உரிமையை மறுப்பதில் என்ன நியாயம் இருக்கிறது?

மக்களுக்கு ஒரு நாள் நீங்கள் பதில் சொல்லியே தீர வேண்டும். நான் கர்நாடகத்திலிருக்கும் மதிப்புக்குரிய தேவ கெளவுடா, குமாரசாமி, எடியூரப்பா, சித்தராமையா போன்றவர்களுக்கு ஒன்று சொல்லிக் கொள்கிறேன். அரசியலுக்காக ஆட்டம் போடாதீர்கள்… அதன் விளைவு மோசமாக இருக்கும். மக்கள் உங்களைச் சும்மா விடமாட்டார்கள்.

நேற்று கூட மும்பையைச் சேர்ந்த ஒரு பெரிய தலைவர் என்னிடம் சொன்னார், கலைஞரால்தான் பிரச்சினை இவ்வளவு பெரிதாகிவிட்டது என கிருஷ்ணா கூறி வருவதாக…

நான் கலைஞருக்கும் சரி மற்ற தலைவர்களுக்கும் சரி… ஒன்று மட்டும் சொல்லிக் கொள்கிறேன். இது நகத்தால் கிள்ளி எறியப்பட வேண்டிய விஷயம். அதற்கு இதைவிட்டால் சரியான நேரம் கிடைக்காது. இப்போது அதைச் செய்யத் தவறிவிட்டால் பின்னர் கோடாலி கொண்டு வெட்டினாலும் பிரச்சினை தீராது.

உங்களது இந்த அரசியல் விளையாட்டில் பாதிக்கப்படுவது அப்பாவி மக்கள்தான். எனவே இம்மாதிரி உணர்வுப்பூர்வமான விஷயங்களை அரசியலாக்காதீர்கள் என்றார் ஆவேசமாக.

ரஜினிகாந்த் முதல் முறையாக கர்நாடகத்திற்கு எதிராக மிகவும் கோபமாக பொங்கி எழுந்து பேசியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

குரல்வலைக்கு எஸ்.ராமகிருஷ்ணன் அவர்களின் பாராட்டு

அன்பு நண்பருக்கு

தற்செயலாக உங்கள் வலைப்பக்கத்தை காணும் சந்தர்ப்பம் கிடைத்தது.

ஒன்றிரண்டு பதிவுகளை வாசிக்கத் துவங்கி இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக உங்கள் பதிவுகளாகவே வாசித்து கொண்டிருந்தேன்.

பரந்துபட்ட வாசிப்பு அனுபவமும், நுட்பமாக எடுத்துச் சொல்லும் விதமும். புனைகதைகளும் நன்றாக உள்ளன. உங்கள் எழுத்தின் சிறப்பு அதில் வெளிப்படும் இயல்பான நகைச்சுவை. இணையத்தில் மிக அபூர்வமாகவே இது போன்ற எழுத்தை வாசிக்க நேர்ந்திருக்கிறது.

மனம் நிறைந்த பாராட்டுகள்.

எஸ். ராமகிருஷ்ணன். எழுத்தாளர். சென்னை


*
அவரது பின்னூட்டத்தை இங்கே காணலாம்:

புவியீர்ப்பு விசைக்கு கட்டணம் : அ முத்துலிங்கம் எழுதிய கதையும் அதை சார்ந்த ஒரு செய்தியும்

சமீபத்தில் அ.முத்துலிங்கம் அவர்கள் எழுதிய ஒரு சிறுகதையை படித்தேன். கதையின் பெயரும் அது வெளிவந்த இதழும் சரியாக நினைவில் இல்லை. தீராநதி / காலச்சுவடு / உயிர்மை இவற்றுள் ஏதாவது ஒன்றாக இருக்கலாம்.அதைப் பற்றி பதிவிட வேண்டும் என்று எடுத்து வைத்திருந்தேன். இன்று அந்த கதையில் வருவதைப் போன்ற ஒரு செய்தியை நாளிதழில் பார்த்தபொழுது சட்டென மீண்டும் நினைவுக்கு வந்தது அந்த கதை. என் வீட்டில் தேடியபொழுது அந்த கதை எங்கோ சென்று பதுங்கிக்கொண்டு விட்டது. நன்றாயிருக்கிற நம்மை (கதயை) பற்றி எழுதுகிறேன் பேர்வழி என்று கடித்து குதறி துப்பிவிடுவான் என்கிற பயம் கூட காரணமாக இருக்கலாம்.

கதை நமது வாழ்க்கையையும் நம்மை வழி நடத்துகிற அரசையும் நையாண்டி செய்கிறது. இந்த மாதிரியான சிந்தனை சிலருக்கு தான் வாய்க்கும். அ.முத்துலிங்கம் இன்றைய தமிழ் இலக்கியத்திற்கு இலங்கை அளித்திருக்கிற கொடை என்று யாரோ சொல்லியிருந்தார்கள். நான் அதை வழிமொழிகிறேன்.

கதையின் நாயகனுக்கு பில் கட்ட சொல்லி அரசிடமிருந்து கடிதம் வந்திருக்கிறது. பில்லை பிரித்து பார்த்த நாயகன் அதிர்ச்சிக்குள்ளாகிறான். கிரடிட் கார்டு பில்லா என்று நீங்கள் கேட்டால், இல்லை. அதெல்லாம் நமக்குத்தான் வரும். என்ன பில்? புவியீர்ப்பு விசைக்கான பில். என்னது?! புவியீர்ப்பு விசையை பயன்படுத்துவதற்கு அரசுக்கு பணம் கட்டவேண்டுமா? ஆமாம். கதையில் அரசு மக்கள் பயன்படுத்தும் புவியீர்ப்பு விசையை கணக்கில் கொண்டு மாதமாதம் ஒரு பில் அனுப்புகிறது. நாயகன் பணம் கட்ட மறுக்கிறார். அரசு நீங்கள் தண்ணீருக்கு கட்டணம் செலுத்துகிறீர்கள். மின் கட்டணம் கட்டுகிறீர்கள். காற்றுக்கு கூட (சுத்தீகரிப்பு) கட்டணம் கட்டுகிறீகள். ஏன் தரைக்கு கூட கட்டணம் கட்டுகிறீர்கள். பிறகு புவிஈர்ப்பு விசைக்கு கட்டணம் கட்டுவதற்கு மட்டும் என்ன யோசனை என்று கேட்கிறது. அதற்கு நாயகன் : காற்றை சுத்தம் செய்கிறீர்கள். தண்ணீரை சுத்தம் செய்கிறீர்கள். அதனால் கட்டணம் கட்டுகிறோம். புவியீர்ப்பு விசைக்கு நீங்கள் என்ன செய்கிறீர்கள்? என்று கேட்கிறார். அதற்கு அரசு: புவியீர்ப்பு விசை எவ்வளவு முக்கியம் தெரியுமா? அது இல்லாவிட்டால் பூமியே சுழலாது. அதனால் நீங்கள் கண்டிப்பாக கட்டணம் செலுத்தவேண்டும் என்று வாதிடுகிறது. நமது நாயகன் விடாமல்: தண்ணீருக்கு பில் கட்டவில்லையென்றால் தண்ணீரை நிறுத்திவிடுகிறீர்கள். மின் கட்டணம் கட்டவில்லையென்றால் மின்சாரத்தை தடைசெய்து விடுகிறீர்கள். புவியீர்ப்பு விசைக்கு கட்டணம் கட்டவில்லையென்றால் நீங்கள் என்ன செய்யமுடியும்? என்று புத்திசாலித்தனமாக கேட்கிறார். (என்னை மாதிரியே யோசிக்கிறாரு!) அதற்கு அந்த அரசு அதிகாரி, சிரித்து கொண்டே சொல்கிறார். இப்படித்தான் ஒரு அதிமேதாவி (நான் இல்லப்பா!) சொன்னான், அவனை என்ன செய்தோம் தெரியுமா? அவனை ஒரு சாட்டிலைட்டில் அமர்த்தி புவியீர்ப்பு விசை இல்லாத இடத்திற்கு கொண்டு சென்று விட்டுவிட்டோம். அப்படியே அவன் பூமியை சுற்றி வந்து கொண்டிருந்தான். பிறகு அவன் புவியீர்ப்பு விசையின் இன்றியமையாமையை உணர்ந்த பிறகு அவனை கொண்டுவந்து பூமியில் விட்டோம் என்கிறார். ஐயா ஓசியில் பூமியை சுற்றி பார்க்கலாம் என்று நம் நாயகன் நப்பாசையில் இருக்க, அந்த அரசு அதிகாரி மேலும் ஒரு குண்டைத் தூக்கி போடுகிறார்.

அவ்வாறு பூமியை சுற்றி வருவதற்கு அவருக்கான செலவு 1000000000 மில்லியன் டாலர் (எனக்கு தொகை ஞாபகமில்லை. இது போன்ற ஒரு பெரிய தொகை தான்) அவரால் கண்டிப்பாக இந்த ஜென்மத்தில் கட்ட முடியாது. எனவே அவரது மகன்களிடம் (பேரன்கள் காலத்திலும்) இந்த தொகையை அவர்கள் எப்படியும் கட்டி முடிக்கவேண்டும் என்று எழுதி வாங்கியிருக்கிறது அரசு. இதை கேட்டு மிரண்டு போன நம் நாயகன் கண்டிப்பாக நாளைக்கே பணத்தை கட்டிவிடுகிறேன் என்று சொல்லி அவ்வாறே கட்டியும் விடுகிறார்.

அடுத்த மாதமும் புவியீர்ப்பு விசை பில் வருகிறது. எடுத்து பார்த்தவருக்கு அதிர்ச்சி. போன மாசத்தை விட இந்த மாசம் அதிகமாக இருக்கிறது பில். கடுப்பான நம் நாயகன் புவியீர்ப்பு மேற்பார்வை அலுவலகத்துக்கு தொடர்பு கொள்கிறார். தொலைபேசியில் வந்த அலுவலர், புகாரை விசாரித்து விட்டு, ஏன் கட்டணம் கூடியிருக்கிறதென்று சொல்லுகிறார்: உங்கள் மனைவி போன மாசத்தை விட இந்த மாசம் நிறைய வெயிட் (வெயிட் கூடினால், புவியீர்ப்பு விசை அதிகம் தேவைப்படும்!) போட்டிருக்கிறார். மேலும் உங்களுக்கு வெளிநாட்டிலிருந்து விருந்தினர்கள் வந்திருக்கிறார்கள் அதனால் தான் இந்த மாதம் உங்களுக்கு புவியீர்ப்பு கட்டணம் கூடியிருக்கிறது என்கிறார்.

***

நான் நாளிதழில் பார்த்த செய்தி: சிங்கப்பூர் சம்பந்தப்பட்ட செய்தி. சிங்கப்பூரில் ஒரு புது கார் வாங்கினீர்கள் என்றால் அதை பத்து வருடங்களுக்கு தான் உபயோகப்படுத்த முடியும். பத்து வருடங்களுக்கு மேல் என்றால் scrap தான். சிங்கப்பூர் அரசு, மக்களை கார் உபயோகப்படுத்த விடாமல், public transportஐ support செய்கிறது. அதற்காக இந்தமாதிரியான சட்டதிட்டங்கள். கொஞ்ச நாளைக்கு முன்ன, சிங்கப்பூரில ஒரு சர்வே நடந்தது. சிங்கப்பூர் மக்களின் தேசப்பற்று எப்படி இருக்கிறது என்று சும்மா ஒரு சர்வே நடத்தியது Strait Times. மக்களுக்கு தேசிய கீதத்தை விட நகரில் எங்கெங்கு ERP உள்ளது என்பது மனப்பாடமாக தெரிந்திருந்தது.

நேற்று (March 31 2008) The Straits Times (HOME) இல் வெளிவந்த செய்தி இது:
மக்களை கார் ஓட்டுவதிலிருந்து விடுவித்து எப்படி Public Transportஇல் போக வைக்கலாம் என்கிற Master Plan.

>> Planning a satellite-based system that charges drivers for the distance they travel.

புவியீர்ப்பு விசைக்கு கட்டணம் கட்டும் காலம் வெகுதூரத்தில் இல்லை என்றே எனக்கு தோன்றுகிறது.
***

PS: blogger ஏன் இப்படி படுத்துது?! Help பண்றேன் பேர்வழி என்று என்னை கடுப்பேத்துகிறது. Blog post text boxல யார் தமிழ் டைப்பிங் கேட்டா?! சும்மா ஏதாவது ஒரு வார்த்தையை கலர் மாத்தலாம் என்று select செய்தாலே it hangs.

வீடு மாற்றம் இல்லை, விளம்பரம், ஒரு கவிதை, ஒரு பல்ட்டி

 

***
Bloggerஇல் இருந்து wordpressக்கு மாறும் எண்ணத்தை கைவிட்டுவிட்டேன். இப்போதைக்கு வீடு மாற்றும் எண்ணம் இல்லை. போனவாரம் எல்லாம் என்ன செய்வதென்று தெரியாமல் கொட்டகொட்ட முழித்துக் கொண்டிருந்தேன். Blogger to wordpress import tool எல்லாருக்கும் வேலை செய்யும் எனக்கு மட்டும் வேலைசெய்யாது. நானும் நிறைய தடவை முயற்சி செய்து பார்த்துவிட்டேன் முடியவில்லை. என்னிடம் 175 போஸ்ட்டுகள் தான் இருக்கின்றன. சரியாக எல்லாதடவையும் 87 போஸ்ட்டுகளே import ஆகிறது. இது பாதியிலே நின்று விட்டதால் பின்னூட்டங்களும் import செய்யப்படவில்லை. போங்கப்பா என்று விட்டுவிட்டேன். பின்னூட்டங்களை விட்டுவிட்டு போக மனமில்லை. மேலும் இருக்கிற பதிவுகளையும் அப்படியே விட்டுவிட்டு புதிதாக ஆரம்பிக்கவும் மனமில்லை. மனமிருந்தால் மார்க்கபந்து தான் ஆனா நமக்கு வேலை செய்யமாட்டேங்குதே!

***
கொஞ்ச காலத்துக்கு blogger தான் என்று முடிவாகிவிட்டபின், இருக்கிற தொடப்பத்த வெச்சு வீட்ட எப்படி சுத்தப்படுத்தறது என்று யோசிச்சேன். Labelsஐ பயன்படுத்தியே categories போட்டுவிட்டேன். மேலும் ஒவ்வொரு தொகுப்புக்கும் ஒவ்வொரு இடம் இடப்பக்கமும் வலப்பக்கமும் கொடுத்துட்டேன். ஆனால் அவை தற்சமயம் dynamic இல்லை. நாமளே தான் மாற்றவேண்டும். அது ஒன்றும் பெரிய விசயம் இல்லை. stumbleupon, digg this, del.ico.us போன்ற bookmarks சேர்க்கவேண்டும்.

***
வெளியே மழை பெய்து கொண்டிருக்கிறது. எனக்கும் தூக்கம் வருகிறது. இதோ ஒரு கவிதை:

மழை என்னும் பிராணி

திடீரென
விழித்த தூக்கத்தில்

உள்ளே வரத்துடிக்கும்
ஒரு
பிராணியைப்போல
கதவுகளைப்
பிறாண்டிக்கொண்டிருந்தது
மழை

என்
தலையணைக்கடியிலிருந்த
கனவுகளையும்
அழைத்துக்கொண்டு
நனையப்போயிருக்கிறது
தூக்கம்

-த அகிலன்

ஆமாம், நனையப்போன தூக்கம், வேகமாக திரும்பி மீண்டும் என்னை தலையணைக்கு அழைக்கிறது. கனவுகள் எனக்காக காத்திருக்கின்றன.

***

ஒரு “நானா சொன்னேன்?” வகை:
டிசம்பர் 14 2007
“It is necessary for the sake of maintaining peace and security in the country”
DATUK SAMY VELLU speaking a day after the five Hindraf leaders were detained for organising a massive rally last nov 25 to protest against government policies which allegedly discriminate against Indian Community.

மார்ச் 30 2008
“This is done in fairness, sympathy and also we feel that we as Indians have to do something about it. It is not a publicity stunt”
DATUK SAMY VELLU, calling for detainee’s release yesterday.

நடந்து முடிந்த தேர்தலில் சாமிவேலு தோல்வியைத் தழுவினார் என்பது குறிப்பிடத்தக்கது.

***

வீடு மாற்றம் இல்லை, விளம்பரம், ஒரு கவிதை, ஒரு பல்ட்டி

Bloggerஇல் இருந்து wordpressக்கு மாறும் எண்ணத்தை கைவிட்டுவிட்டேன். இப்போதைக்கு வீடு மாற்றும் எண்ணம் இல்லை. போனவாரம் எல்லாம் என்ன செய்வதென்று தெரியாமல் கொட்டகொட்ட முழித்துக் கொண்டிருந்தேன். Blogger to wordpress import tool எல்லாருக்கும் வேலை செய்யும் எனக்கு மட்டும் வேலைசெய்யாது. நானும் நிறைய தடவை முயற்சி செய்து பார்த்துவிட்டேன் முடியவில்லை. என்னிடம் 175 போஸ்ட்டுகள் தான் இருக்கின்றன. சரியாக எல்லாதடவையும் 87 போஸ்ட்டுகளே import ஆகிறது. இது பாதியிலே நின்று விட்டதால் பின்னூட்டங்களும் import செய்யப்படவில்லை. போங்கப்பா என்று விட்டுவிட்டேன். பின்னூட்டங்களை விட்டுவிட்டு போக மனமில்லை. மேலும் இருக்கிற பதிவுகளையும் அப்படியே விட்டுவிட்டு புதிதாக ஆரம்பிக்கவும் மனமில்லை. மனமிருந்தால் மார்க்கபந்து தான் ஆனா நமக்கு வேலை செய்யமாட்டேங்குதே!***
கொஞ்ச காலத்துக்கு blogger தான் என்று முடிவாகிவிட்டபின், இருக்கிற தொடப்பத்த வெச்சு வீட்ட எப்படி சுத்தப்படுத்தறது என்று யோசிச்சேன். Labelsஐ பயன்படுத்தியே categories போட்டுவிட்டேன். மேலும் ஒவ்வொரு தொகுப்புக்கும் ஒவ்வொரு இடம் இடப்பக்கமும் வலப்பக்கமும் கொடுத்துட்டேன். ஆனால் அவை தற்சமயம் dynamic இல்லை. நாமளே தான் மாற்றவேண்டும். அது ஒன்றும் பெரிய விசயம் இல்லை. stumbleupon, digg this, del.ico.us போன்ற bookmarks சேர்க்கவேண்டும். .

***
வெளியே மழை பெய்து கொண்டிருக்கிறது. எனக்கும் தூக்கம் வருகிறது. இதோ ஒரு கவிதை:

மழை என்னும் பிராணி

திடீரென
விழித்த தூக்கத்தில்

உள்ளே வரத்துடிக்கும்
ஒரு
பிராணியைப்போல
கதவுகளைப்
பிறாண்டிக்கொண்டிருந்தது
மழை

என்
தலையணைக்கடியிலிருந்த
கனவுகளையும்
அழைத்துக்கொண்டு
நனையப்போயிருக்கிறது
தூக்கம்

-த அகிலன்

ஆமாம், நனையப்போன தூக்கம், வேகமாக திரும்பி மீண்டும் என்னை தலையணைக்கு அழைக்கிறது. கனவுகள் எனக்காக காத்திருக்கின்றன.

***

ஒரு “நானா சொன்னேன்?” வகை:
டிசம்பர் 14 2007

It is necessary for the sake of maintaining peace and security in the country

DATUK SAMY VELLU speaking a day after the five Hindraf leaders were detained for organising a massive rally last nov 25 to protest against government policies which allegedly discriminate against Indian Community.

மார்ச் 30 2008

This is done in fairness, sympathy and also we feel that we as Indians have to
do something about it. It is not a publicity stunt

DATUK SAMY VELLU, calling for detainee’s release yesterday.

நடந்து முடிந்த தேர்தலில் சாமிவேலு தோல்வியைத் தழுவினார் என்பது குறிப்பிடத்தக்கது.

***

சிரிப்பு போலீஸ்!

எதற்கு இந்த வீண் சண்டை? யார் பெரியவர் யார் சிறியவர்? என்னுடைய மெயில் ஐடி எப்படி ஐயா உங்களுக்கு கிடைத்தது? ஒரு தேவையில்லாத மெயில் சிக்குன மெயில் அடிக்கெல்லாம் அனுப்பப்பட்டிருக்கிறது. உங்களுக்கு வந்துச்சா? யாருக்கு வேணும் உங்க சண்டை? True Known அப்படீங்கற True Unknown தான் இந்த மெயில அனுபிச்சது. சத்தியமாக எனக்கு அந்த anonymous mail வரும்வரை இதில் குறிப்பிட்டிருந்த எந்த சண்டையும் தெரியாது. வலைப்பூக்களில் நடக்கும் சண்டைகளை நான் கவனிப்பதே கிடையாது. அப்போ எனக்கு இந்த மெயில் அவசியமா? அவ்ளோ பெர்ர்ர்ரிய cc list. இதுல காமெடி என்னன்னா, வந்த மெயிலே spam, அதுக்கு நிறைய பேர் மறுமடியும் எல்லாருக்கும் cc போட்டு ‘remove myid’ன்னு சொன்னது. இது மட்டும் spam இல்லியா? உங்களையெல்லாம் பார்க்க சிரிப்பு போலீஸ் மாதிரி தான் இருக்கு.

இப்படி வர்ற மெயிலால என் மெயில் பாக்ஸ் நிறைந்து விடும் என்பதற்காக நான் சொல்லவில்லை. ஒரு தேவையில்லாத செய்தியை ஏன் எல்லாருக்கும் அனுப்புகிறீர்கள்? இதே போல் புத்தாண்டு வாழ்த்து வந்தது சரமாக வந்தது. SPAMஆ இருந்தாலும் இத்தனை பேர் வாழ்த்துக்களை பகிர்ந்து கொள்வதை பார்க்கும் பொழுது சந்தோஷமாகத்தான் இருந்தது. வாழ்த்துக்களுக்கு எண்ணிக்கையில்லை. ஆனால் ஒருவர் மேல் ஒருவர் தேவையில்லாமல் வீண் பழி சுமத்துவது எதற்கு? ஏன் இந்த கொலைவெறி? ஒற்றுமையாக இருப்போம் தோழர்களே. கருத்துவேறுபாடுகள் இருக்கலாம். ஆனால் துவேஷம் வேண்டாமே. ப்ளீஸ்.

நாம் அனைவரும் ஒருங்கிணைந்து ஆரோக்கியமானதொரு விவாத கருத்துப் பறிமாற்ற மேடையாக மட்டுமே தமிழ் வலைப்பூவை வைத்திருப்போம்.

***

ஜெயமோகனின் (ஆளாளுக்கு ஜெயமோகனைப் பற்றி பேச ஆரம்பிச்சுட்டாய்ங்கப்பான்னு நீங்க புலம்புறது என் காதுல விழுது!) கடிதத்தை மதி கந்தசாமியின் வலைப்பூவில் பார்த்தேன். ஜெயமோகன் அவரது கோபத்தை (அல்லது over-confidence!) கொக்கரிப்பாக வெளிபடுத்தியிருக்கிறார். அவர் வலைப்பக்கமய்யா அது. அவருக்கு என்ன தோணுதோ அத அவர் எழுதுவார். (கூடிய விரைவில் வலைப்பூக்களை கட்டுப்படுத்துவதற்கு கடினமான சட்டதிட்டங்களை கொண்டுவரலாம்.) ஆனா இதுவும் எங்க வலைப்பக்கமுல்ல? நாங்களும் எழுதுவம்ல. எழுதுவம்ல!

நான் மதிக்கு எழுதிய பின்னூட்டத்தின் சாரம் இங்கே::
ஜெயமோகனின் உலகம் தருக்கம் தத்துவம் மற்றும் ஆழமான ?! கேள்விகள் சார்ந்தது என்று அவரே உருவாக்கிக் கொண்டார். தத்துவமும் தர்க்கமும் கொக்கரிப்பில் முடிந்து சக மனிதர்களை மண்ணில் இட்டு மிதிக்கத்தான் செய்யும் என்றால் அந்த தத்துவமும் தர்க்கமும் எதற்கு? தத்துவமும் தர்க்கமும் வாழ்க்கையை புரிந்து கொள்ள செய்யவேண்டும். வாழ்க்கையை புரிந்து கொண்டால் “தான்” இருக்காது.

“நான் தமிழ் வரலாற்றில் என்றும் இடம்பெறும் ஆளுமை” என்று அவர் சொல்லியிருப்பது “தான்” என்பதில்லாமல் வேறு எதைக் காட்டுகிறது? அப்ப நீங்க சொல்லும் உங்க தத்துவமும் தர்க்கமும் யாருக்கு? உயிரோடு இருக்கும் பொழுதே தானே தனக்கு சிலை வைத்துக்கொண்டது போலத்தான் இவரது ஸ்டேட்மன்ட்டும் இருக்கிறது.

ஆனால் இதற்காக அவர் புத்தகத்தையெல்லாம் படிக்காமல் நான் இருக்கமாட்டேன். Reading is pleasure.

உங்களையெல்லாம் பாத்தா எனக்கு சிரிப்பு போலீஸ் மாதிரிதான் இருக்கு” ன்னு சொல்லிட்டு உடு ஜூட்.

***

சிரிப்பு போலீஸ்

எதற்கு இந்த வீண் சண்டை? யார் பெரியவர் யார் சிறியவர்? என்னுடைய மெயில் ஐடி எப்படி ஐயா உங்களுக்கு கிடைத்தது? (உங்களுக்கு மெயில் வந்துச்சாப்பா?) போலி டோண்டுவாவது காலி காண்டுவாவது! யாருக்கு வேணும் உங்க சண்டை? சத்தியமாக எனக்கு அந்த anonymous mail வரும்வரை போலி டோண்டுவைத் தெரியாது. வலைப்பூக்களில் நடக்கும் சண்டைகளை நான் கவனிப்பதே கிடையாது. அப்போ எனக்கு இந்த மெயில் அவசியமா? அவ்ளோ பெர்ர்ர்ரிய cc list. இதுல காமெடி என்னன்னா, வந்த மெயிலே spam, அதுக்கு நிறைய பேர் மறுமடியும் எல்லாருக்கும் cc போட்டு ‘remove myid’ன்னு சொன்னது. இது மட்டும் spam இல்லியா? உங்களையெல்லாம் பார்க்க சிரிப்பு போலீஸ் மாதிரி தான் இருக்கு.

இப்படி வர்ற மெயிலால என் மெயில் பாக்ஸ் நிறைந்து விடும் என்பதற்காக நான் சொல்லவில்லை. ஒரு தேவையில்லாத செய்தியை ஏன் எல்லாருக்கும் அனுப்புகிறீர்கள்? இதே போல் புத்தாண்டு வாழ்த்து சரமாக வந்தது. SPAMஆ இருந்தாலும் இத்தனை பேர் வாழ்த்துக்களை பகிர்ந்து கொள்வதை பார்க்கும் பொழுது சந்தோஷமாகத்தான் இருந்தது. வாழ்த்துக்களுக்கு எண்ணிக்கையில்லை. ஆனால் ஒருவர் மேல் ஒருவர் தேவையில்லாமல் வீண் பழி சுமத்துவது எதற்கு? ஏன் இந்த கொலைவெறி? ஒற்றுமையாக இருப்போம் தோழர்களே. கருத்துவேறுபாடுகள் இருக்கலாம். ஆனால் துவேஷம் வேண்டாமே. ப்ளீஸ்.

நாம் அனைவரும் ஒருங்கிணைந்து ஆரோக்கியமானதொரு விவாத கருத்துப் பறிமாற்ற மேடையாக மட்டுமே தமிழ் வலைப்பூவை வைத்திருப்போம்.

***

ஜெயமோகனின் (ஆளாளுக்கு ஜெயமோகனைப் பற்றி பேச ஆரம்பிச்சுட்டாய்ங்கப்பான்னு நீங்க புலம்புறது என் காதுல விழுது!) கடிதத்தை மதி கந்தசாமியின் வலைப்பூவில் பார்த்தேன். அவரது கோபத்தை (அல்லது over-confidence!) கொக்கரிப்பாக வெளிபடுத்தியிருக்கிறார். அவர் வலைப்பக்கமய்யா அது. அவருக்கு என்ன தோணுதோ அத அவர் எழுதுவார். (கூடிய விரைவில் வலைப்பூக்களை கட்டுப்படுத்துவதற்கு கடினமான சட்டதிட்டங்களை கொண்டுவரலாம்.) ஆனா இதுவும் எங்க வலைப்பக்கமுல்ல? நாங்களும் எழுதுவம்ல. எழுதுவம்ல!

நான் மதிக்கு எழுதிய பின்னூட்டத்தை இங்கே தருகிறேன்:

ஜெயமோகனின் உலகம் தருக்கம் தத்துவம் மற்றும் அழமான ?! கேள்விகள் சார்ந்தது என்று அவரே உருவாக்கிக் கொண்டார். தத்துவமும் தர்க்கமும் கொக்கரிப்பில் முடிந்து சக மனிதர்களை மண்ணில் இட்டு மிதிக்கத்தான் செய்யும் என்றால் அந்த தத்துவமும் தர்க்கமும் எதற்கு? தத்துவமும் தர்க்கமும் வாழ்க்கையை புரிந்து கொள்ள செய்யவேண்டும். வாழ்க்கையை புரிந்து கொண்டால் “தான்” இருக்காது.

“நான் தமிழ் வரலாற்றில் என்றும் இடம்பெறும் ஆளுமை” என்பது “தான்” என்பதில்லாமல் வேறு எதைக் காட்டுகிறது? அப்ப உங்க தத்துவமும் தர்க்கமும் யாருக்கு? உயிரோடு இருக்கும் பொழுதே தானே தனக்கு சிலை வைத்துக்கொண்டது போலத்தான் இவரது ஸ்டேட்மன்ட்டும் இருக்கிறது.

ஆனால் இதற்காக அவர் புத்தகத்தையெல்லாம் படிக்காமல் நான் இருக்கமாட்டேன்.

“உங்களையெல்லாம் பாத்தா எனக்கு சிரிப்பு போலீஸ் மாதிரிதான் இருக்கு” ன்னு சொல்லிட்டு ஜூட்.

***

புது layout! கலக்கறே முத்து!

(நாமளே சொல்லிக்க வேண்டியதுதான்)
புது layoutக்கு மாறியாச்சு. தனி domainஉம் வாங்கியாச்சு. இப்ப குரல்வலை எப்படி இருக்கிறது? கொஞ்சம் பரவாயில்லையா? ப்ரகாஷ், கொஞ்சம் ப்ளீசிங்கான டெம்ப்ளேட்டுக்கு மாறுங்கன்னு ரொம்ப காலத்துக்கு முன்ன சொன்னார். இப்பத்தான் செய்யமுடிஞ்சது. ஆனா ப்ளீசிங்கா இருக்கான்னு தெரியல்ல!

ஆனா bloggerல categories வெச்சுக்கிறது பெரும்பாடா இருக்கும் போல தெரியுது. wordpressல ரொம்ப சிம்பிள். Blogger label கொடுத்திருந்தாலும், label வேற categories வேற இல்லீங்களா? நிறைய workarounds பார்த்தேன். நீங்களும் எதுனா வழி இருந்ததுனா சொல்லுங்க. Page Elementsல page add பண்றதும் கஷ்டமாத்தான் இருக்கு. AddLink button வேலை செய்யமாட்டேங்குது. AdSense போடலாமான்னு யோசிச்சுட்டு இருக்கேன்.

என்ன திடீர்ன்னு layout change and all அப்படீன்னு கேக்கறீங்களா? எல்லாம் நம்ப ஜெயமோகன் சார் தான் காரணம். Blogosphereல நேத்து மொளச்ச காளான் அவர் 🙂 அவரே அவரோட ப்ளாக்க எவ்ளோ அழகா வெச்சிருக்கார், நாம எப்போலேர்ந்து பதிவு மண்ணாங்கட்டி பண்றோம்? அப்படீங்கற ஒரு உத்வேகம் தான்.

கங்கணம், பின் கதைச் சுருக்கம்

(ஜெயமோகன், அழகிய பெரியவன், பெருமாள் முருகன், எஸ்.ராமகிருஷ்ணன், பா.ராகவன், ரஜினி, பார்த்திபன், ஆனந்த விகடன், ஞாநி)

பா.ராகவன் எழுதிய பின் கதைச் சுருக்கம் என்கிற புத்தகத்தை எனக்கு என் நண்பர் ஒருவர் படிக்க கொடுத்தார். கொஞ்ச காலமாக நானும் அவரும் கிடைக்கும் நேரங்களில் நாவல் விவாதம் செய்துகொண்டிருக்கிறோம். ஏதோ நாங்கள் படித்த அளவு. அவர் ஏதேதோ எழுத்தாளர்களின் பெயர்களைச் சொல்லுவார். நிறைய பெயர்களை நான் இதுவரையில் கேள்விப்பட்டதில்லை. அப்பொழுதுதான் பா.ராகவனின் பெயரைச் சொல்லி அவர் எழுதிய நாவல் படித்ததுண்டா என்று கேட்டார். எனக்கு பா.ராகவனை டாலர் தேசத்தின் மூலமே தெரியும். அதனால் அவர் அவ்வாறான (எவ்வாறான? அவை என்ன ரகம்?) புத்தகங்கள் மட்டுமே எழுதுகிறவர் என்று தவறாக நினைத்திருந்தேன். இந்த பின் கதைச் சுருக்கம் புத்தகம் அவருக்கு பிடித்தமான நாவல்களைப் பற்றியது. அவருக்கு பிடித்தமான நாவல்களைப் பற்றி அழகாக கூறியிருந்தார்.
அவர் லிஸ்டில் இருந்த நாவல்களின் பட்டியல் கீழே:

நாவல்: எழுத்தாளர்
அலை உறங்கும் கடல் : பா ராகவன்
ஒற்றன் : அசோகமித்திரன்
ஏசுவின் தோழர்கள் : இந்திரா பார்த்தசாரதி
குட்டியாப்பா : நாகூர் ரூமி
வேள்வித்தீ, காதுகள் : எம் வி வெங்கட்ராம்
நுண்வெளி கிரணங்கள் : சு வேணுகொபால்
மகாநதி : பிரபஞ்சன்
இருவர்: ஆர்.வெங்கடேஷ்
அனுராகத்தின் தினங்கள் : வைக்கம் முகம்மது பஷீர்
ஜனகணமன : மாலன்
வாடாமல்லி : சு சமுத்திரம்

அவர் சொன்ன மூன்று பிற மொழி நாவல்களை நான் இதில் சேர்க்க இல்லை. மேலே குறிப்பிட்ட நாவல் பட்டியளில் நான் ஒற்றன் மட்டுமே படித்திருக்கிறேன். ஒரு வருடத்திற்கு முன்பு. அதைப் பற்றி பதிவு ஒன்று எழுதவேண்டும் என்று நினைத்திருந்தேன். பிறகு எப்பொழுதும் போல மறந்துவிட்டது. பா.ராகவன் குறிப்பிட்ட பிறகு தான் நினைவு வந்தது. ஒற்றன் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. அழகாக யதார்த்தமாக ஒரு பயணக்கட்டுரை போல ஒரு டயரி போல அசோகமித்திரன் எழுதியிருந்தார்.

அவர் அயோவா பல்கலைக்கழகத்திற்கு எழுத்தாளர் பட்டறையின் நிமித்தமாக மேற்கொண்டிருந்த பயணத்தையும் அதில் அவர் சந்தித்த பிற நாட்டு எழுத்தாளர்களைப் பற்றியும் நிறைய சொல்லியிருப்பார். அதில் ஒரு எழுத்தாளர் சார்ட் போட்டு வைத்துக்கொண்டு அறையில் அடைந்து கொண்டு நாவல் எழுதிக்கொண்டிருப்பார். சார்ட் போட்டுக்கொண்டு எழுத நாவல் என்ன சாப்ட்வேரா? சொல்லப்போனால் சாப்ட்வேரே கூட சார்ட் போட்டுக்கொண்டு செய்யும் பொழுது ஒழுங்காக வருவதில்லை.

எஸ் ராமகிருஷ்ணனின் கதாவிலாசம் உருக்கமாக இருக்கும். அவரது ஒவ்வொரு அத்தியாயமும் அவர் சொன்ன எழுத்தாளரைப் தேடிப் படிக்க தூண்டும். ஆனால் பா.ராகவனின் இந்த தொகுப்பு ஒட்டாமல் இருக்கிறது. நான் சொல்றத சொல்லிட்டேன் படிக்கனும்னா படிச்சுக்கோ ரகம். என்னைப் பொருத்தவரையில் ஒற்றன், one hundred years of solitude, விஷ்ணுபுரம், Midnights Children போன்ற புத்தகங்களைப் பற்றி இன்னும் அழுத்தமாக சொல்லியிருக்கலாம் என்றே தோன்றியது.

***

இந்தவாரம் என்னவோ கல்யாண சம்பந்தமான விசயங்களையே படித்துக்கொண்டிருக்கவும் கேட்டுக்கொண்டிருக்கவும் பார்த்துக்கொண்டிருக்கவும் வேண்டியதாகிற்று.

பெருமாள் முருகன் எழுதிய கங்கணம் நாவல் படித்தேன். முப்பத்தைந்து வயதைக் கடந்து விட்டும் இன்னும் திருமணம் ஆகாமல் மனக்கஷ்டத்தில் இருக்கும் ஒரு கவுண்டரைப் பற்றிய கதை அது. எனக்கு தெரிந்த ஒருவர் நாற்பது வயது வரை திருமணம் வேண்டாம் என்று தீர்மானமாக இருந்துவிட்டு, தனது நாற்பத்தி இரண்டாவது வயதில் திருமணம் செய்து கொண்டார். அவரது கஷ்டம் வேறு மாதிரி. அவர் தனது தங்கைகளுக்கு திருமணம் செய்து வைத்துவிட்டுத்தான் தான் நான் திருமணம் செய்து கொள்வேன் என்று தீர்மானமாக இருந்து விட்டவர். வேறு சிலருக்கு ஜாதகத்தில் சிக்கல் இருக்கிறது என்கிற காரணத்தால் திருமணம் தள்ளிப்போவதற்கு வாய்ப்பிருக்கிறது. ஆனால் கதையின் நாயகானான மாரிமுத்துக் கவுண்டருக்கு இது போல காரணங்கள் ஏதும் இல்லை. ஓரளவு வசதியான குடும்பத்தில் பிறந்தவர் தான். தங்கை ஒருவர் இருக்கிறார். ஆனால் அவருக்கு எப்பொழுதோ திருமணம் ஆகியிருக்கிறது. தனது இருபதாவது வயதில் முதல் பெண் பார்க்கச் சென்றவர் கவுண்டர். ஆனாலும் முப்பத்தைந்து வயது வரை திருமணமாகாமல் இருக்கிறார்.பதினைந்து வருடமாக பெண் பார்த்துக்கொண்டேயிருக்கிறார்.

பெருமாள் முருகன் எனக்கு புதிய அறிமுகம். நூலகத்தில் எதேச்சையாக எடுத்தேன். இதற்கு முன்னர் அழகிய பெரியவன் எழுதிய தகப்பன் கொடி என்கிற நாவலை நான் படித்திருந்தேன். கங்கணம் நாவலின் முதல் இரண்டு அத்தியாயம் எனக்கு தகப்பன் கொடியை மீண்டும் படிப்பது போன்றே இருந்தது. ஆனால் அது வேறு, இது வேறு. கங்கணம் நாவலின் தளம் வேறு. தகப்பன் கொடி முழுக்க முழுக்க ஒடுக்கப்பட்டவர்களைப் பற்றியது. அவர்களது குரல் நாவல் தோறும் ஒலித்துக்கொண்டேயிருக்கும். கங்கணத்திலும் அவ்வப்போது அது போன்ற குரல்கள் ஒலித்தாலும், அவை இப்பொழுது என்ன நிலைமை என்பதையும் எடுத்துக்காட்ட தவறவில்லை.

உதாரணத்திற்கு, மாரிமுத்து கவுண்டரின் பண்ணயத்தில் வேலை செய்த அவனது சிறு வயது நண்பன் ராமனை மாரிமுத்து நீண்ட நாட்களுக்கு பிறகு பார்க்க நேரிடுகிறது. அப்பொழுது பேச்சுவாக்கில் மாரிமுத்து, ராமனை மீண்டும் பண்ணயத்து வேலைக்கு அழைக்க, ராமன் திட்டவட்டமாக
“பண்ணயத்து வேலையெல்லாம் இப்ப எந்த சக்கிலி பாப்பான்? அந்தக்காலம் மசக்காலம். பண்ணயமே கதின்னு கெடந்தம். இப்ப வேலையா இல்ல, அத உடுய்யா” என்று திட்டவட்டாமாக மறுத்து விடுகிறார். ராமனும் மாரிமுத்துவும் நண்பர்களாகவே இருக்கின்றனர்.கடைசியில் ராமன் தான் மாரிமுத்துவுக்கு பெண் தேடிக்கொடுக்கிறான். மாரிமுத்துவின் பண்ணயத்தில் இருக்கும் குப்பனுக்கும் நாவலில் மிக முக்கியமான இடமுண்டு. இவ்வாறன விசயங்கள் காலம் மாறிவிட்டிருக்கிறது என்பதை அப்பட்டமாக காட்டுகிறது.

நாவல் முழுவதுமே நான் ரசித்தேன். என் அலுவலகத்திற்கும் என் வீட்டிற்கும் 40 நிமிட ரயில் பயணம். போக வர ஒரு மணி இருபது நிமிடம். கண்டிப்பாக படித்துத்தான் ஆக வேண்டும். இப்பொழுதெல்லாம் கையில் புத்தகம் இல்லாமல் வீட்டை விட்டு இறங்குவதில்லை. கங்கணம் மிகவும் சுவாரஸ்யம். சிங்கப்பூரின் பாதாள ரயிலில் நான் சென்று கொண்டிருந்தாலும், அந்த நாவலின் கிராமங்களை கடந்தே எனது ரயில் சென்று கொண்டிருந்தது. மாரிமுத்து என்னுடனே பயணித்துக்கொண்டிருந்தார். அந்த நாற்பது நிமிடமும் நான் நாவலிலே மூழ்கிக்கிடப்பேன். உண்மையில் அழகாக எழுதியிருந்தார் பெருமாள் முருகன். மாரிமுத்து எத்தனை கஷ்டங்கள் அடைந்திருந்தான் என்பதை இதற்கு மேலாக யாராலும் சொல்லமுடியுமா என்பதும் சந்தேகமே. மேலும் உறவுகள் குறித்தும் ஒரு அசலான அலசலை முன் வைத்திருக்கிறார் பெருமாள் முருகன். ஏதேதோ செல்லாத காரணங்களை முன் வைத்து திருமணத்திற்கு தடையாக இருக்கும் தன் அம்மாவையே வார்த்தைகளால் மாரிமுத்து கடித்து குதறும் பொழுது நமக்கு அவன் மீது கோபம் ஏற்படுவதற்கு மாறாக இரக்கமே மேலிடுகிறது.

மேலும் மாரிமுத்துவின் சித்தப்பா பையன் வேறு ஒரு சாதி பெண்ணை காதலிப்பது தெரிந்து, மாரிமுத்து சந்தோஷப்படுவது, ஒவ்வொரு மனிதனுக்குள்ளேயும் மறைந்திருக்கும் குரோதத்தை அப்பட்டமாய் எடுத்துக்காட்டுகிறது. “எனக்கு பொறக்கறதும் பசவதான். எம்மாடு போடறதும் காளதான்” என்று பெருமை பொங்க அடித்த தம்பட்டங்களின் கதி என்னவாகும்? ‘பையனுக்கு எத்தன பன்னிக்குட்டி சீராக் குடுத்திருக்கறாங்க’ என்று யாராவது விசாரிக்காமலா போய் விடுவார்கள்? சித்தப்பன் சித்தியை பார்த்து ‘காட்டுல வெள்ளாம இல்லீன்னா சம்பந்தி ஊட்டுக்குப் பன்னி மேக்கப் போயிர்லாம்’ என்று ஜாடையாக வேனும் ஓரிருவர் பேசுவார்கள். மாரிமுத்துவின் யோசனையில் குதூகலம் கூடியது

மாரிமுத்துவும் சாதரண மனிதன் தானே. பதினைந்து வருடங்கள் கழித்து திருமணம் கைகூடி வரும்பொழுது எப்படியும் திருமணம் எந்த தடங்கலும் இல்லாமல் நடந்துவிட வேண்டும் என்கிற துடிப்பு அவனுள் இதயத்துடிப்பை விட அதிகமாக இருக்கிறது. அவன் கொஞ்சமேனும் பாசத்தோடு இருந்த பாட்டி கவலைக்கிடமாக இருப்பதை அறிந்த மாரிமுத்து, யாவரும் இருக்கிறார்கள் என்பதை மறந்து, “கிழவி கல்யாணம் வரைக்கும் தாங்குமா?” என்று கேட்கிறான். இது குரூரமாக பலருக்கு தோன்றலாம். ஆனால் அவன் நிலையில் இருந்து பார்த்தோமேயானால், நாம் அந்த வார்த்தைகளை சொல்லியிருக்க மாட்டோம் என்பதற்கு எந்த உத்திரவாதமும் கிடையாது.

இந்த கல்யாணம் என்கிற விஷயத்தைக் கண்டுபிடித்தவன் யாராக இருக்கும்? அவனுக்கு இதற்குள் இத்தனை பிரச்சனைகள் வரும் என்று தெரிந்திருக்குமா? மனித வம்சத்தின் மீது கொலைவெறி கொண்ட ஒருவன், பழிவாங்கும் வகையில் கல்யாண முறையை உருவாக்கியிருப்பான்” என்று மாரிமுத்து யோசிக்கும் பொழுது, அது உண்மையென்றே படுகிறது.

இந்த வார்த்தைகளை கொஞ்சம் கவனமாக பார்க்கவேண்டும். அவன் சொல்வது, கல்யாணத்தைப் பற்றியல்ல. கல்யாண முறையைப் பற்றி. ஆனால் கல்யாணமுறையை நாம் அப்படியேவா பின்பற்றிகொண்டு வருகிறோம். கண்டுபிடித்தவனுக்கு பிறகு அது எவ்வளவோ பரிணாம வளர்ச்சி பெற்றுவிட்டது. நம்மால் முடிந்த அளவிற்கு நம்முடைய சுயநலங்களையும் குரோதங்களையும் அதன் மேல் ஏற்றிவிட்டிருக்கிறோம். கல்யாணமுறை என்பது நாம் உருவாக்கியதுதானே?

விகடனில் இருந்து குமுதத்திற்கு மாறிவிட்டிருக்கும் ஞாநியின் ஓ பக்கங்களில் அவர் இந்த வாரம் சொன்னதே இந்த சமயத்தில் எனக்கு ஞாபகம் வருகிறது:

முதலில் நம் கல்லூரிப் பாடப்புத்தகங்களில் திருக்குறளின் இன்பத்துப் பாலுக்கு இருந்து வரும் நடைமுறைத் தடையை நீக்க வேண்டும். காதல் என்றால் என்னவென்று தெரியாமல், வணிக சினிமா காட்டும் வக்கிரக் காதலால் குழம்பித் தடுமாறி ஆண் பெண் உறவுகளை சிக்கலாக்கிக் கொள்ளும் நம் இளைஞர்களுக்கு உதவுவதற்காக +2 முதல் கல்லூரி வரை கல்லூரி வளாகங்களில் உளநல ஆலோசகர்களை அரசு செலவில் நியமிக்க வேண்டும். தொடர்ந்து தங்கள் குடும்பங்களில் காதல் திருமணங்களை ஊக்குவிக்கும் குடும்பங்களை ஆண்டுதோறும் தேர்ந்தெடுத்து தமிழ்நாட்டின் சிறந்த குடும்ப விருது வழங்கவேண்டும்

ஆனால் இது எந்த அளவிற்கு நடைமுறையில் சாத்தியம் என்பது தெரியவில்லை. ஆனால் கேட்பதற்கு நன்றாக இருக்கிறது. ரஜினி தன் படத்தில் உபயோகிக்கும் (அவரே பின் பற்றாத) பஞ்ச் டயலாக்கைப் போல. ஆனால் இதை நடைமுறைப்படுத்தினால், நடைமுறைப்படுத்தும் அந்த கட்சிக்கு (அது எவ்வளவு பெரிய வெங்காய கட்சியாக இருக்கும் பட்சத்திலும்) டெபாசிட் கூட தேராது என்பது மட்டும் உண்மை. ஞாநியின் இந்த கட்டுரையை படித்த தலைவர்கள் கண்டிப்பாக ஒரு சிரிப்பு சிரித்திருப்பார்கள். விகடன்ல இருந்து தூக்கினதுக்கு இப்பல்ல காரணம் தெரியுது என்று கூட அவர்கள் யோசித்திருக்க கூடும்! இவ்வாறன புரட்சிகர கருத்துக்களை எவ்வளவு காலம் குமுதம் வெளியிடுவார்கள் என்பதும் தெரியவில்லை.

பேசாமல் ஜெயமோகன் போல ஒரு வலைப்பூ ஆரம்பித்து, தன் இஷ்ட்டத்துக்கு எதை வேணுமென்றாலும் ஞாநி எழுதிக்கொள்ளலாம். அப்படி எழுதும் பொழுது, அதை கண்டித்து தன் புத்தகத்தில் வெளியிட்டு விகடனோ குமுதமோ இலவச விளம்பரம் தேடித்தருவார்கள். ஜெயமோகனுக்கு அடிச்சது லக், அவரது வலைப்பூக்கு இலவசமாக விகடன் போஸ்டர் அடித்து விளம்பரம் தேடித்தந்திருக்கிறது. இதுநாள் வரை ஜெயமோகனை எத்தனை பேருக்கு தெரியும்? ஆனால் இப்பொழுது அவரது ப்ளாக்கும் கண்டிப்பாக எல்லாருக்கும் (விகடன் வாசகர்களுக்கு) தெரிந்திருக்கும். விகடனின் இலவச போஸ்டர் விளம்பரம், மேலும் சும்மா வேலை இல்லாமல் உட்கார்ந்திருக்கும் சாப்ட்வேர் இன்ஜினியர்கள் அதை forward செய்ததன் மூலம் மேலும் விளம்பரம் அவருக்கு கிடைத்திருக்கிறது. இந்த எம்ஜியார் காமெடி நான் சிறு பையனாக இருந்த பொழுது பாபு-கோபு என்கிற மிமிக்கிரி கோஷ்டியின் கேசட்டிலே கேட்டிருக்கிறேன். இது தமிழ்நாட்டிலிருக்கும் எல்லாருக்கும் தெரிந்தது தான். ஜெயமோகன் சொல்வதினால் என்ன கேடு வந்துவிட போகிறது? எனக்கு ஒன்றும் புரியவில்லை. விகடனுக்கும் விளம்பரம், நாங்கள் காலத்தோடு ஒட்டிக்கொண்டுதான் இருக்கிறோம் பாருங்கள், ஜெயமோகனின் வலைப்பூவை கூட நாங்கள் கவனித்துக்கொண்டுதான் இருக்கிறோம் என்பது போன்று. இருவருக்கும் win-win.

எங்கேயோ அரம்பித்து எங்கேயோ வந்துவிட்டேன். கங்கணம் கண்டிப்பாக வாசிக்க வேண்டிய புத்தகம் என்றெல்லாம் சொல்லமாட்டேன். இந்த உலகத்தில் எதுவும் கண்டிப்பு இல்லை. இந்த புத்தகத்தை படிப்பதனால் ஏதும் கிடைக்கப்பெறும் என்றோ, படிக்காவிட்டால் ஏதும் கிடைக்காது என்றோ சொல்லமுடியாது. நாவல்கள் படிக்காதவர்கள் நிறைய பேர் நம்மை விட எல்லாம் தெரிந்தவர்களாகவே இருக்கிறார்கள். என் நண்பன் ஒருவன், எப்பொழுதும் டீவி பார்த்துக்கொண்டேயிருப்பான். நான் ஒருமுறை அவனிடம், ஏன்டா எப்பபார்த்தாலும் டீவி பார்த்துக்கிட்டே இருக்க, ஏதாவது படியேன் என்று சொல்வேன். அதற்கு அவன் சொல்வான், நீ படிக்கறதுனால சந்தோஷமா இருக்க, நான் டீவி பார்க்கறதுனால சந்தோஷமா இருக்கேன், மொத்ததில நாம் ரெண்டு பேறும் சந்தோஷமாத்தான் இருக்கோம்?

எனக்கு இந்த நாவல் முழுதுமே பிடித்திருந்தாலும், நான் படித்து முடித்தபின்னும் அசை போட்டுக்கொண்டிருக்கும் வரி: கனவுகள் முடிகளைப் போலே உதிர்ந்துகொண்டேயிருக்கின்றன. நல்ல நாவல். படிப்பதினால் தவறில்லை. படியுங்கள். நான் இந்த நாவலை வெள்ளிக்கிழமை படித்து முடித்தேன், சனிக்கிழமை காலை எழுந்து சாப்பிட்டு விட்டு, டீவியை போட்டால், நீ வருவாய் என படம் ஓடியது. பார்த்திபன் நெடு நாட்களாக பெண் கிடைக்காமல் அலைந்து கொண்டிருப்பார். ஆச்சரியமாக, அந்தப் படத்தில் பார்த்திபன் கவுண்டர்.

***