கிரீடம்

வரிசையாக சில ப்ளாப்புக்கு அப்புறம் அஜித்துக்கு கை கொடுக்க வந்திருக்கும் sweet hit இந்தப் படம். புது இயக்குனர்கள் மீது அவர் வைத்திருக்கும் நம்பிக்கை வீண் போகவில்லை. Thats why he is known as the man of confidence. டைரக்டர் விஜய் தன் பணியை கரெக்டாக செய்திருக்கிறார். (அஜீத்தை டைரக்ட் செய்யும் விஜய்?!)

(மலையாள எழுத்தாளர் மற்றும் பிரபல இயக்குனரான லோகிததாஸ் தன் கிராமத்தில் நடந்த ஒரு உண்மைச்சம்பவத்தை வைத்து பிண்ணிய கதையை சிபி மலையாளி 1989இல் கிரிடம் என்ற படமாக டைரக்ட் செய்தார். இதில் மோகன்லாலும் திலகனும் நடித்திருந்தனர். 1990இல் இந்திய அரசின் விருதை பெற்றது இந்தப்படம். 1993இல் இதனுடைய அடுத்த பார்ட்டாக செங்கோல் வெளிவந்தது. மேலும் இதே கிரீடத்தை ஹிந்தியில் ப்ரியதர்சன் ஜாக்கிஷராப்பை வைத்து கர்தீஷ் என்ற பெயரில் ரீமேக் செய்தார்.என் மலையாள நண்பர் ஒருவர் கொடுத்த தகவல் : இது தான் மலையாளத்தில் தொடர்ந்து ஒரு வருடம் ஓடிய திரைப்படமாம்!)
Thanks :துளசி கோபால்

“யாரிடமும் குற்றமில்லை காலம் செய்த குற்றமிதுதான்” படத்தின் முடிவில் வரும் இந்த வரிகள் தான் படத்தின் கரு. ஏற்கனவே நிறையமுறை பார்த்த கதைதான். ஆனால் புதிதாக சொல்லியிருக்கிறார்கள். எங்கேயும் யாருக்காகவும் இயக்குனர் காம்ப்ரமைஸ் செய்துகொள்ளவில்லை. முதல் பாதி திரைப்படம் அசத்தல். காமெடி கதம்பம். விவேக், சந்தானம், சத்யன் என்று காமெடிக்கு நிறைய ஆட்கள் இருக்கிறார்கள். ஆனால் யாரையும் இயக்குனர் டாமினேட் செய்யவிடவில்லை. எந்த காமெடியும் தனி ட்ராக்காக இல்லை. கதையினோடே வருகிறது. விவேக் வழக்கம்போல ஆங்காங்கே நடப்பு செய்திகளை தூவி சிரிக்கவைக்கிறார். “இது ஏட்டையா வீடா?” என்று கேட்டுவரும் போன் காலுக்கு, “இல்ல வேட்டையாடு விளையாடு ராகவன் வீடு” என்று கண்களை விரல்களை வைத்து விழித்து -கமலஹாசன் மாதிரி – செய்து காட்டுவது அமர்க்களம்.

அஜித் அழகாக இருக்கிறார். அமைதியாக இருக்கிறார். க்ளைமேக்ஸில் அழகாக நடித்திருக்கிறார். கண்டிப்பாக க்ளைமேக்ஸ் பெரிதாக பேசப்படும். (ஒரு நல்ல நடிகரை இன்னும் சரியாக யாரும் use பண்ணவில்ல என்று தோன்றுகிறது) பாந்தமாக வசனம் பேசுகிறார். No punch dialogues. பாத்தீங்களா, பஞ்ச டயலாக்ஸ் இல்லீன்னாலே நல்ல படமோன்னு நினைக்கவேண்டியிருக்கு! முதல் பாதியில் அஜீத்துக்கு நிறைய வேலை இல்லை. அஜீத் த்ரிஷா காதல் அழகாக மலர்கிறது. (ஆனால் அவ்ளோ ஈசியா? யாரவது லவ் பண்ணவங்க சொல்லுங்கப்பா! என்னோட மரமண்டைக்கு ஏறவேமாட்டேங்குது!) த்ரிஷா செம அழகு. உதட்டுக்கு கீழே இருக்கும் மச்சம் செம க்யூட். (ஷ்ரேயா இல்லீனா பானு!!! ரசிகர் மன்றத்துக்கு மாறிடலாமான்னு நினெச்சிட்டிருந்தேன், கிரிடம் த்ரிஷாவைப் பார்த்த பிறகு இப்போதைக்கு கட்சி மாறும் எண்ணம் இல்லை. அடுத்து பீமா வேற வருது. பார்ட்டி நாளுக்கு நாள் அழகாகிட்டே வருது!!) த்ரிஷா ஒரு சீன்ல ரொம்ப கொஞ்சராங்க! அடாஅடா!!!! (ம்ம்ம்..மாஸ்டர் ஆம்லேட்!) தண்ணீர் தொட்டிக்குள் அஜீத்துடன் உட்கார்ந்து கொண்டு த்ரீஷா அஜீத்தின் வீட்டு நபர்களைப் பற்றி அடிக்கும் கமெண்ட்கள் ஜோர். த்ரிஷா, அஜீத் வீட்டுக்கு வந்து, அவர் வரும் வரை பார்க்கமுடியாமல் தவித்து, அவர் வந்தவுடன் கண்டுகொள்ளாமல் ஆக்ட் கொடுப்பது க்யூட். (ஓவர் ஜொல்லுடா!) “அக்கம் பக்கம் யாருமில்லா பூலோகம் வேண்டும்” பாடலில் த்ரிஷா அவ்ளோ அழகு!

“கனவெல்லாம்” பாடலின் வரிகள் அருமை. ராஜ்கிரணுக்கு இந்த படம் மேலும் ஒரு மைல்கல். தனக்கு கொடுக்கப்பட்ட வேலையை கனகச்சிதமாக செய்திருக்கிறார். தவறாக காரைப் பார்க் செய்துவிட்டு, போலீஸ்காரரை அடிக்கும் MLA மகனை, பளார் என்று அறைவதும், வில்லனின் ஆட்களிடம் தனியாளாக சண்டையிடுவதும் கம்பீரம். அந்த fight-sequence நன்றாக இருந்தது. (பிரசாந்த் நடித்த தமிழ் படத்தை நினைவூட்டினாலும் நன்றாக இருந்தது) அப்பா வில்லன்களிடம் அடிவாங்குவதை பார்த்து, அஜீத் பதறி ஓடிவந்து, வில்லனை நன்றாக இரும்புக்கம்பியால் அடித்து துவைத்துவிட்டு, அவன் மூச்சுப்பேச்சில்லாமல் கீழே விழுந்தபிறகு, நடந்துவிட்டதை நினைத்து கையில் வைத்திருக்கும் இரும்புக்கம்பியை பதறி தூக்கியெறிவது அருமை. அஜித் நிறைய இடங்களில் நிறைவாக செய்திருக்கிறார். லவ்விலும் சரி. சண்டையிலும் சரி. குடும்ப பாசத்திலும் சரி. ஓவர் ஆக்ட் இல்லாமல் அளவாக அழகாக செய்திருக்கிறார். costumes, வழக்கம்போல அவருடைய semi-formal ஸ்பெஷல். SI interviewவில் அஜித் செம க்யூட். அந்த shirt. பளிச்சின்னு ஷேவ் செய்யப்பட்ட அந்த முகம். அழகான டை. மறுபடியும் காதல் கோட்டை அஜீத். சொல்லப்போனால் அதைவிட அழகான அஜீத். ஒரு நடுத்தர வர்க்க குடும்பமும், குடும்பத்தின் பாசமும் ஓவர் sentimentஆக இல்லாமல் அழகாக காட்டப்பட்டிருக்கிறது. “

சில காட்சிகள் வழக்கம்போல் இருக்கும் என்று நினைக்கையில் ஆங்காங்கே சில திருப்பங்கள் நம்மை நிமிர்ந்து உட்காரவைக்கின்றன. ஆனால் அவ்ளோ பெரிய வில்லன் தனியாகவே எப்பொழுதும் அடிவாங்குவது கொஞ்சம் நெருடல். க்ளைமாக்ஸ் எதிர்பாறாத ஒன்று. வழக்கம்போல எந்த compromiseஉம் டைரக்டர் செய்துகொள்ளவில்லை. அப்படின்னா அப்படித்தான். தேவையில்லாத சண்டைக்காட்சிகள் இல்லை. ஓரு இடத்தை தவிற வேறு (அதுவும் இங்கே mute செய்யப்பட்டுவிட்டது) எங்கும் இரட்டை அர்த்த வசனங்கள் இல்லை. ஹீரோவின் துதி இல்லை. இரண்டாம் பாதி கொஞ்சம் இழுவை. மற்றபடி படம் good. GV.Prakashஇன் பின்னனி இசை படம் நெடுகிலும் பாந்தமாக இருக்கிறது, காதுகளை உறுத்தாமல்.

ஒரு தந்தையின் கனவு நிறைவேறாமலே போனது மட்டும் கொஞ்சம் வருத்தமாக இருந்தது. கடைசியில் போலீஸ் ஸ்டேஷனில் இருக்கும் கிரிமினல்கள் லிஸ்டில், வரதனின் (வில்லன்) போட்டோ கிழிக்கப்பட்டு அதே இடத்தில் சக்தியின் (அஜீத்) போட்டோ ஒட்டப்படுகிறது. “யாரிடமும் குற்றமில்லை காலம் செய்த குற்றமிதுதான்” என்ற வரிகள் விஜய் ஏசுதாஸின் கனீர் குரலில் ஒலிக்கிறது. வரதனும் இப்படித்தான் குற்றவாளி ஆகியிருப்பாரோ என்று ஒரு நிமிடம் யோசிக்கவைக்கிறது. அது சரி. பிறக்கும்போதே எல்லோரும் குற்றவாளிகளாகப் பிறக்கிறார்களா என்ன?

எப்போதுமே மலையாளத்திலிருந்து தமிழுக்கு ரீமேக் செய்யப்பட்ட படங்களைப் பார்த்துவிட்டு, மலையாள ஒரிஜனலைப் பார்க்கும் போது, மலையாள ஒரிஜினல் பெட்டர் என்றுதான் எனக்கு தோன்றும். உதாரணத்திற்கு, அண்ணா நகர் முதல் தெரு. இதன் ஒரிஜினலான “காந்திநகர் பர்ஸ்ட் ஸ்ட்ரீட்” எனக்கு ரொம்பவும் பிடித்திருந்தது. சத்யராஜ்-ஜனகராஜ் (மாதவா எங்கேயோ போய்ட்டடா!) காமெடியும் நன்றாகத்தான் இருந்தது இல்லையென்று சொல்லவில்லை. ஆனால் மோகன்லால்-சீனிவாசன் காம்பினேஷன் அவர்களை விட நன்றாக இருந்ததாகவே தோன்றியது. எனக்கு சீனிவாசனை ரொம்பவும் பிடிக்கும். அதற்கப்புறம், சந்திரமுகி. (நான் சொல்லத் தேவையில்லை!) இப்பொழுது கிரீடம். கிரீடத்தைப் பற்றி என் மலையாள நண்பர் சஜீத்திடம் சொன்னபோது சட்டென்று உணர்ச்சிவசப்பட்டுவிட்டார். மலையாள கிரீடம் கண்டிப்பாக பார்க்கவேண்டும்.

யார் முழித்திருக்க போகிறார்கள் – 6

(இதற்கு முந்தைய பகுதிகளை sidemenuவில் பார்க்கவும்)

மே 12 1986

மே 12 1986 அன்று யூனியன் கார்பைடு கேட்டுக் கொண்டதற்கிணங்க, நீதிபதி ஜான் F கீனன் (John F Keenan), வழக்கை தள்ளுபடி செய்ய மறுத்துவிட்டார். ஆனால், வழக்கை அமெரிக்காவில் வைத்து விசாரிக்க முடியாது என்ற அவர்களின் கோரிக்கையை நீதிபதி ஏற்றுக்கொண்டு, வழக்கை இந்தியாவுக்கு மாற்றுமாறு தீர்ப்பு வழங்கினார். மேலோட்டமாக பார்க்கும் போது, நீதிமன்றம் இந்தியாவிற்கு சாதமாக பாரபட்சமாக நடந்து கொண்டது போல் தெரியும். பாதிக்கப்பட்ட தன் மக்களுக்கு சரியான நீதி வாங்கித்தர இந்தியாவுக்கு இது சரியான சந்தர்ப்பமாக அமையும் என்றும் நீதிபதி கூறினார். இது ஒருவகையில் UCCக்கு சாதகமே. வளர்ந்துவரும் நாடான இந்தியாவில் வாழ்க்கைத்தரம் தாழ்ந்திருப்பதால், இந்திய நீதிமன்றம் வழங்கும் பாதிப்பிற்கான இழப்பிடு -அமெரிக்காவை ஒப்பிட்டுப் பார்க்கும் போது- மிகவும் குறைவாக இருக்கும் என்று அவர்கள் நினைத்தார்கள்.

நீதிபதி கீனனின் தீர்ப்பு இந்த வழக்கில் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது. நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்பார்த்து காத்திராமல், தாமே ஒரு இழப்பீட்டு தொகைக்கு, பேச்சுவார்த்தையின் மூலம் வந்தடைவதற்கு இந்த தீர்ப்பு அடித்தளமாக அமைந்தது. இதற்கு அவர்கள் சொன்ன காரணம்: UCCயின் அமெரிக்க அலுவலகத்தின் மேல் குற்றம் சுமத்தி நிரூபிப்பது மிகவும் கடினம். நடந்த பேரிழப்புக்கு UCIL தான் காரணம் ஏனென்றால் UCIL, முற்றிலும் இந்தியர்களால் நடத்தப்பட்டு வருகிறது என்றார்கள். UCILஇன் மொத்த தொழிலாளர்களில் ஒரு மிகச்சிறிய விழுக்காட்டினருக்கே அமெரிக்காவில் பயிற்சி அளிக்கப்பட்டது என்றும், UCCக்கு UCILஇன் மீது முழுக்கட்டுப்பாடு இருந்தாலும், அது இந்தியாவின் சட்டதிட்டத்துக் கட்டுப்பட்டதே என்றும் அவர்கள் கூறினார்கள்.

எனவே பேச்சுவார்த்தையே மிக வேகமான ஒரு தீர்வுக்கு வழிவகுக்கும் என்ற ஒரு பிம்பம் அவர்களால் தோற்றுவிக்கப்பட்டது. இரு தரப்பினருக்கு இடையே சுமூகமான ஒரு தீர்வை ஏற்படுத்துவதற்கு நீதிமன்றம் போராடியிருக்கிறது என்று நீதிபதி கூறினார். ஆனால், என்ன ஆனாலும், UCC, 350 மில்லியன் டாலர்களுக்கு மேல் ஒரு பைசா கூட கொடுக்கத் தயாராக இல்லை என்பதை அவர் கூறவில்லை. அது என்ன 350 மில்லியன் டாலர் கணக்கு, வேறொன்றுமில்லை, அது UCCக்கு கிடைக்கும் இன்சூரன்ஸ் தொகை. ஒரு செட்டில்மெண்ட் தொகை மட்டும் தானா என்ற கோஷம் யாராலும் எங்கும் எழுப்பப்படவேயில்லை. நீதி என்ற வார்த்தை சிறிது சிறிதாக பின்னுக்கு தள்ளப்பட்டு மறக்கடிக்கப்பட்டது.

ஆரம்பத்திலிருந்தே, இந்த போப்பால் வழக்கில், ஒரு வெளிநாட்டு நீதிமன்றம் இன்னொரு நாட்டின் பாதுகாப்பு அம்சத்தை எப்படி கணக்கிடமுடியும், என்ற ஆட்சேபத்திற்குறிய வாதம் இருந்துவந்தது. இந்தியா ஒரு ஏழை நாடாக இருப்பதால், இங்கு வாழ்க்கைத் தரம்; சொத்து; வளம்; உடல்நலம் மற்றும் நம்பிக்கை சார்ந்த விசயங்கள்; கண்டிப்பாக மிகுந்த வேறுபாட்டுடன் -அமெரிக்காவுடன் ஒப்பிடும் போது- இருக்கும். “இந்த வேறுபாடுகளையெல்லாம் மீறி நாம் நமது வாழ்க்கைத்தரம் மற்றும் நமக்கிருக்கும் கொள்கைகளை அவர்கள் மீது திணிக்கவேண்டுமா?” என்று கேள்வி எழுப்பினார் நீதிபதி.

ஆனால் இந்த வேறுபாடுகளை மனதில் கொண்டுதான் UCC போப்பாலில் பாதுகாப்பு வியூகத்தை கவனக்குறைவாக தரம் குறைந்ததாக அமைத்ததா? ஆனால் இவ்வாறான கேள்வி எழும் என்பதை நீதிபதி நன்கு உணர்ந்திருந்தவர் போல ,”இந்த பூச்சிக்கொல்லி தொழிற்சாலை மிகுந்த ஆபத்தை விளைவிக்கக்கூடியது என்பதை இந்தியா உணர்ந்திருந்தும் இது கொடுக்கும் வருவாய் அவர்களுக்கு தேவையானதாக இருந்த பட்சத்திலே அவர்கள் இந்த தொழிற்சாலையை நிறுவ ஒப்புக்கொண்டார்கள்” என்றார். அவர் சொன்னதற்கான அர்த்தம் என்னவென்றால்: “வளர்ந்து வரும் நாடான இந்தியா, ஒரு வல்லரசின் ஆபத்தான் தொழில்நுட்பத்தை அரவணைத்துக்கொள்ள தயாராக இருக்கும் பட்சத்தில், அந்த தொழில்நுட்பம் ஏற்படுத்தும் இழப்பிற்கும் இந்தியாவே பொறுப்பு ஆகும்

இந்த தீர்ப்பின் அதிர்ச்சியான் விசயம் என்னவென்றால், தீர்ப்பு UCCயின் தனிப்பட்ட பிரச்சனைக்கு ஆதராவாக இருந்தது என்பதே. ஆனால் உலக நாடுகளின் துணையுடன் உலகநாடுகளுக்கு எல்லாம் ஏற்படவிருக்கும் ஒரு பொதுப்பிரச்சனையை மனதில் கொண்டு இந்தியா முன் வைத்த வாதம் கண்டுகொள்ளப்படவில்லை. நீதிபதி இந்த பிரச்சனையை ஒரு தனிப்பட்ட கம்பெனியின் பிரச்சனையாக மட்டுமே அனுகினார். இது மொத்த மனித இனத்திற்கும் தீங்கு விளைவிக்கக் கூடிய பொதுபிரச்சனையாக அவர் அறிய தவறினார்.

தீடிரென்று, இழப்பின் தீவிரமும் எண்ணிக்கையும், மிக அதிகமாக இருந்த பொழுதிலும், போப்பால் பிரச்சனை ஒரு உள்ளூர் பிரச்சனையாக மாறிப்போனது. இனிமேல் அந்த கம்பெனியாச்சு மக்களாச்சு என்றே எல்லோரும் நினைத்தனர். உலகின் மிகப் பயங்கரமான ஒரு பேரிடர், உலகமக்களையெல்லம் பாதிக்கக்கூடிய பின்விளைவுகளைக் கொண்ட பேரிடர், உலகம் முழுவதும் பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஏற்படவிருக்கும் மாற்றங்கள், பல்லாயிரம் மக்களை பலிவாங்கியும், இன்னும் பல்லாயிரம் மக்களை பாதித்திருக்கும் இந்தப் பேரிடர், அமெரிக்காவின் மிகப்பெரிய வர்த்தகத்தின் முன் தனது முக்கியத்துவத்தை இழந்தது. வேறு வார்த்தைகளில் சொல்வதாக இருந்தால், அமெரிக்க நீதிபதியின் பார்வையில், வர்த்தகம் மனித உரிமையை வென்றுவிட்டது.

ஏழைக்கு மனித உரிமையாவது? மண்ணாங்கட்டியாவது?!

ஹமிதியா (Hamidia) மருத்துவமனையைச் சேர்ந்த டாக்டர் சத்பதி (Dr.A.Satpathy, forensic expert) கையில் பிடித்திருக்கும் இந்த பெரிய புகைப்படம், இன்னும் அடையாளம் காணப்படாத மற்றும் யாராலும் சொந்தம் என்று ஏற்றுக்கொள்ளப்படாத மக்களின் புகைப்படங்களைக் காட்டுகிறது. டாக்டர் சத்பதி விஷவாயுவினால் பாதிக்கப்பட்ட இருபதினாயிரத்துக்கும் மேற்பட்ட பிரேதங்களைப் பரிசோதனை செய்திருக்கிறார். அவர் பாதிக்கப்பட்டவர்கள் 27 விதமான வேறு வேறு விஷ இரசாயனப் பொருட்களால் பாதிக்கப்பட்டிருந்தனர் என்று கண்டறிந்தார். அவர்கள் விஷத்தன்மை மிகுந்த நச்சு வாயுக்களால் -அவற்றை சுவாசித்ததால் – தான் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்றார். ஆனால் இவ்வளவு இரசாயனப் பொருட்கள் எப்படி வந்தன என்பதனை விளக்குவதற்கு யாருக்கும் தெரிந்திருக்கவில்லை.

செப்டம்பர் 5 1986

செப்டம்பர் 5 1986 அன்று இந்தியா நியூயார்க் நகரிலிருந்து வழக்கை போப்பால் மாவட்ட நீதிமன்றத்திற்கு மாற்றிக்கொண்டது.

வழக்கம்போல, UCC, தனது சட்ட தந்திரங்களால், நீதிமன்றத்தை “மறுப்பு” கணைகளால் தாக்கியவன்னம் இருந்தது. ஒரு பூச்சிக்கொல்லி தொழிற்சாலை நிறுவுவதன் மூலம் ஏற்படவிருக்கும் ஆபத்தை தாங்கள் எந்தக் காலத்திலும் மாநில ஆரசிடமிருந்தோ அல்லது மத்திய அரசிடமிருந்தோ மறைத்ததில்லை என்று UCC சத்தியம் செய்யாத குறையாக சொன்னது. மேலும் MIC அப்படியொன்றும் மிகப்பயங்கரமானது அல்ல என்றும் கூறியது. மக்கள் தொகை அதிகம் இருக்கும் இடத்தில் தொழிற்சாலை நிறுவியதை மறுத்தது. நான்காவது ஐந்தாண்டு திட்டத்தில் (1969-1974) விதிக்கப்பட்ட பன்நாட்டு ஒருங்கிணைப்பு விதிகளை மீறியதை மறுத்தது. விசவாயு கசிந்ததை மறுத்தது. அது ஒரு தொழிலாளியிம் நாசவேலை என்று தடாலடியாக பல்டி அடித்தது.

கடைசியாக, அவர்களில் இருப்பையே அவர்கள் நிராகரித்தார்கள்!! இந்திய வழக்கறிஞர்கள் UCCஐப் பற்றிக்குறிப்பிடும் போது,”மிகப்பெரிய பன்னாட்டு நிறுவனம்” என்று கூறியிருந்தார்கள். இதைப் பயன்படுத்திய UCC அப்படியாருமே இல்லை என்றது. ஒரு சொல்லை எடுத்துக்கொண்டு அதற்கு வேறுவேறு அர்த்தங்கள் கற்பித்து வழக்கை திசைதிருப்புவது வழக்கறிஞர்களுக்கு கைவந்த கலை. ஆனால் இது சிலேடையின் உச்சக்கட்டம். UCC கண்ணுக்குப்புலப்படாத ஒரு அமெரிக்க வர்த்தகம். அவர்கள் மற்ற நாடுகளில் இருக்கும் சில பெரிய நிறுவனங்களில் சில பங்குகளை மட்டுமே வைத்திருந்தனர். அவ்வாறான வேற்று நாட்டு நிறுவனங்களில் ஒன்று தான் UCIL என்று கூத்தடித்தனர்.

போப்பால் தொழிற்சாலையில் தினமும் நடக்கும் விசயங்களுக்கும் தங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்பதை காட்டிக்கொள்ள விரும்பியது UCC. அப்படியிருக்க நேர்ந்த இந்த பேரிடருக்கு எப்படி UCC பொறுப்பாகமுடியும் என்று பாவமாக கேட்டது UCC. ஆனால் எவ்வளவு பாவமாக முகத்தை வைத்துக்கொண்டு சொன்னாலும் உண்மை அதுவல்ல. UCILஇன் எந்த ஒரு பாலிசியும், செலவுதிட்டமும், செலவும், நிறுவனத்தின் எந்த ஒரு அறிக்கையும், டான்பரியில் (Danbury) இருக்கும் UCCயின் தலைமை அலுவலகத்தின் ஒப்புதல் வாங்கவேண்டும். இதை நீதிமன்றத்தில் நிரூபிப்பது மிகவும் கடினமான வேலை.

(தொடரும்)

thanks : swaroopa mukarjee

காந்தம்-7

(தொடர்கதை)

(இதற்கு முந்தய பகுதிகளை sidemenuவில் பார்க்கவும்)

முன்னும் பின்னும்.
2

டன்டடகட டன்டடகட டன்டடகட டன்டடகட டன்டடகட டன்டடகட டன்டன்டன்டன்டன் டன்டடகடடன்டடகடடன்டடகட பிபீபிபீபிபீபீ………டன்டடகட டன்டடகட டன்டடகடடன்டடகட டன் டன் டன் பிபீபிபீபிபீபீ..

சங்கு சேகண்டி முழங்கவே
சலங்கைச் சத்தம் கேட்கவே
வீச்சருவா தூக்கிக்கிட்டு
வெள்ளக் குதிரை மேலே
ஆடி வாரான் பாடிவாரான்
எங்க பெரிய கருப்பன் தானே

“ம்ம்ம்ம்.ம்ம்ம்ம்..பாட்டு மறந்துபோச்சுடா…அப்புறம் என்னடா வரும்?”
“போதும். போதும். நீ என்னிக்கு ஒழுங்கா பாடிருக்க? சாமிக்கு அருள் வந்திடுச்சு.”

காளி தன் வெட்டப்படாத சடைமுடியை இங்கும் அங்கும் ஆட்டியபடி முழியைப் பிதுக்கி, நாக்கை வெளியே மடக்கி வைத்து, கையில் அருவா பிடித்திருப்பதைப் போல ஒரு வாழை மட்டையை பிடித்துக்கொண்டு அங்கும் இங்கும் குதித்துக்கொண்டிருந்தான். காளிக்கு பணிரெண்டு வயது. காளி கொஞ்சம் வளர்ந்திருந்தான். பிறந்த பொழுது எப்படி இருந்தானோ அதே கரிய நிறம், ஒல்லியான தேகம். ஆனால் அந்த சிறிய கண்களின் வசீகரம் சற்று கூடி இருப்பது போல இருந்தது. கருப்பு நிற கால்சட்டை அணிந்திருந்தான். மேலே சட்டை ஏதும் போட்டிருக்கவில்லை. கழுத்தில் அப்பாவின் புலிநகம் அதே மினுக்கோடு இருந்தது.

விலா எழும்பு தெரிய வயிற்றை எக்கி அடித்தொண்டையிலிருந்து காளி கர்ஜித்தான், “டேய் கருப்பன் வந்திருக்கன்டா” “கருப்பா”..அருகிலிருந்த குமார் காளியின் கைகளை இறுக்கமாக பற்றிக்கொண்டான் “கருப்பா எங்களயெல்லாம் காப்பாத்தி கொடுப்பா” “ம்ம்..காப்பாத்தறேன்டா..காப்பாத்தறேன்” காளியின் டவுசர் இடுப்பில் நிற்காமல் கீழிறங்கியது. அருகிலிருந்த சிறுமிகள் சிரித்தனர். “கருப்பா டவுசர் அவுறுது பார்” காளி கையிலிருந்த வாழை மட்டையை கீழே போட்டுவிட்டு டவுசரை இருக்கிப் பிடித்து முடிச்சு போட்டான். பிறகு மீண்டும் கீழே போட்ட வாழை மட்டையை குனிந்து எடுத்து கையில் அருவா போல வைத்துக்கொண்டான். இதையெல்லாம் செல்வி பார்த்திருப்பாளோ என்ற சந்தேகம் வர ஓரக்கண்ணால் அவளை பார்த்தான். ஒரு ஓரத்தில் கத்தரிப்பூ நிறத்தில் பூப்போட்ட சீட்டி பாவாடை அணிந்து சோகமே உருவாக ஓரத்தில் நின்று கொண்டிருந்தாள் செல்வி.

“ம்ம்..ஒவ்வொருத்தரா வாங்கப்பா” பூசாரி பக்தர்களை அழைத்தார். சிறுவர்கள் முட்டிமோதிக்கொண்டனர். எல்லோரும் உட்கார்ந்து கொண்டனர். யாரும் எழுந்திருக்கவில்லை. “ம்ம்..அருள் வாக்கு வாங்க ஒவ்வொரு ஆளா வாங்கப்பா” ம்ம்..ஹ¥ம்..ஒருத்தன் கூட எழுந்திருக்கவில்லை. “டேய்……….” காளி மறுபடியும் கத்தவே, ஒரு சிறுவன் எழுந்தான்.

ஏன்டா பாடபொஸ்தகத்திலெல்லாம் ஆறு ஏரின்னு ஏதேதோ சொல்றாய்ங்கல்ல அதெல்லாம்
எங்கடா இருக்கு?

மெதுவாக நடந்து காளியின் அருகே வந்தான். “காளி..” சட்டென்று இயல்பு நிலைக்கு வந்த காளி, வாழை மட்டையை வைத்து அவனை நங்கென்று தலையில் தட்டினான், “அண்ணேன்னு சொல்றா” பிறகு மீண்டும் “ம்ம்ம்ம்ம்” என்று ஆடத்துடங்கினான். அந்த சிறுவன் தலையை தடவிக்கொண்டே “காளியண்ணே..” என்றான். இப்பொழுது பூசாரி போல பக்கத்தில் நின்றிருந்த குமார் காளியிடமிருந்து வாழைமட்டையை பிடுங்கி சிறுவனின் தலையில் மீண்டும் ஒருமுறை நங்கென்று அடித்தான் “அண்ணனா, மூஞ்சப்பாரு..கருப்பான்னு சொல்லுடா சடத்தலையா”. கடுப்பான சிறுவன் தலையை தடவிக்கொண்டே “வோய் குமாரு கொமாரு ஓந்தலை மட்டும் நல்ல தலையா..போடா முட்டைத் தலையா” குமாரின் தலை முட்டை அகலவாக்கில் வைத்தால் எப்படி இருக்குமோ அப்படி இருக்கும், பின்னால் வீங்கியது போல. சமாதன முயற்சியில் இறங்கிய கருப்பசாமி சாந்தமாக “பக்தா என்ன வேண்டும் கேள்” என்றது.

ம்ம்…சாமி..சாமி..இந்த சேகர் இருக்கியான்ல சேகர்..அவென் எம் பம்பரத்த..ம்ம்..ஆக்கர் ஆடிச்சு ஆக்கர் அடிச்சு ஒடச்சுபுடறயான்..நீ அவென் பம்பரத்த..ம்ம்..ம்…ம்…ஒளிச்சுவெச்சுடு..”

“ம்ம்..காப்பாத்தி கொடுக்கறனப்பா..உம் பம்பரத்த காப்பாத்தி கொடுக்கறனப்பா.” என்று காளி கண்களை மூடிக்கொண்டு ஒரு ஆட்டம் போட்டு, குமார் பிள்ளையார் கோயிலிருந்து ஆட்டயபோட்டுட்டு வந்து கையில் வைத்திருந்த திருநீரை எடுத்து, அந்த சிறுவனின் நெற்றியில் பூசினான். காளி “ம்ம்ம்ம்ம்ம்..” என்று உடலை குலுக்கினான். சிறுவனும் தன் பங்குக்கு ஆடத்தொடங்க, குமார் அவனை நிறுத்தி, நீயெல்லாம் ஆடக்கூடாது, போ போய் உக்கார் இல்லீண்ணா சேகர விட்டு ஆக்கர் அடிக்க சொல்லுவேன் என்றதும் அவன் சத்தம் போடாமல் தன் இடத்தில் சென்று உட்கார்ந்து கொண்டான்.

அடுத்து ஒவ்வொருத்தராய் வந்து அருள் வாக்கு வாங்கிக்கொண்டனர். காளி இன்னும் விட்டபாடில்லை, விடாமல் ஆடிக்கொண்டிருந்தான் குமார் “போதும் சாமி போதும்” என்றும் கேட்காமல் சங்மங் என்று குதித்துக்கொண்டிருந்தான். “டேய்..யாராவது கத்தரிப்பூ கலர்ல பாவாட சட்ட போட்டவங்க இருந்தா வரச்சொல்லுடா” என்றான். குமார், சுற்றும் முற்றும் பார்த்தான், பிறகு செல்வியைப் பார்த்தான். புரிந்து கொண்டவன், காளியிடம் திரும்பி “அடியேய்..உனக்கு ரப்பு தான்டி..” என்று சொல்லிவிட்டு, “ஏத்தா கெழவி”..”டேய் செல்விடா” “ம்ம்க்கும் தெரியுது தெரியுது..ஏத்தா செலவி..இங்க வா..சாமி கூப்பிடுது பாரு”

முதலில் வரமாட்டேன் என்று மறுத்தவள் பிறகு என்ன நினைத்தாளோ மிக மெதுவாக எழுந்து வந்தாள். ஆடிக்கொண்டிருந்த காளியின் முன்னர் வந்து நின்றாள். குமார், “ஏன் சோகமா இருக்க? எதுவா இருந்தாலும் நம்ப கருப்பன் கிட்ட சொல்லு, தீத்து வெச்சுடும்” என்றான். காளி சிரித்தபடி ஆடிக்கொண்டிருந்தான்.

தயங்கியபடிக்கு நின்று கொண்டிருந்தவள், பிறகு மெதுவாக “காளி.காளி.. என்ன என்ன அந்த கணக்கு வாத்தியார் அடிச்சிட்டாருடா. இங்கபாரு..” என்று உள்ளங்கையை விரித்துக்காட்டினாள். உள்ளங்கையில் வரிகள். காளி மிகக்கடுமையாக முகத்தை வைத்துக்கொண்டான். “டேய் வாத்தி..” என்று கத்தினான், பிறகு செல்வியிடம் திரும்பி “எதுக்கு உன்ன அந்த வாத்தி அடிச்சான்?” என்றான். செல்வி அழத்தொடங்கினாள். அவளது கண்களில் சிறு சிறு துளிகள் துளிர்த்தன. காளி இப்பொழுது ஆடவில்லை. அவளையே பார்த்துக்கொண்டிருந்தான். “என் கணக்கு நோட்டு தொலஞ்சுபோச்சு..வேற நோட்டு வாங்க ஐயா துட்டு கொடுக்கல..இன்னிக்கு கூட வாத்தியார் அடிச்சாரு தெரியுமா?” என்றாள் கேவியபடி. காளி இந்த உலகத்திலே இல்லை.

“டேய் குமாரு அந்த வாத்தியானா நாளைக்கு..வேணா வேணாம் இன்னிக்கே ஒருவழி பண்ணிடுவோம்டா.. செல்வி அதுக்குமுன்ன உனக்கொரு வழி சொல்லட்டா” என்றான் காளி. செல்வி அழுவதை நிறுத்துவிட்டு, “என்னடா?” என்றாள். “பக்கத்துல வா காதில சொல்றேன்” “ம்ம்” செல்வி கண்ணீரைத்துடைத்துக்கொண்டே காளியின் அருகில் சென்றாள். காளி அவளது காதுகளுக்கு அருகில் சென்றான், செல்வி கண்ணத்தில் வழிந்த கண்ணீரை துடைத்துக்கொண்டே காத்திருந்தாள், காளி பச்சக் என்று செல்வியின் கண்ணத்தில் ஒரு முத்தம் வைத்தான். பிறகு திரும்பிப்பார்க்காமல் தலைதெறிக்க ஓட்டம் பிடித்தான். ஏற்கனவே குமார் காளியின் முன்னால் ஓடிக்கொண்டிருந்தான்.

செல்வி கீழே விழுந்து மண்ணில் புரண்டு அழ ஆரம்பித்தாள். போடா காளி தக்காளி என்றாள் மிகச்சத்தமாக.

***

“டேய் காளி அங்க ஒன்னு இருக்கு பாருடா” என்றான் குமார். காளி பாய்ந்து சென்று அதை எடுத்து தன் டவுசர் பையில் போட்டுக்கொண்டான். குமார் தரையில் ஒரு இடம் பாக்கியில்லாமல் தவழ்ந்தபடி தேடினான். காளி அவனுக்கு அருகில் நின்று கொண்டு பரவலாக நோட்டம் விட்டுக்கொண்டிருந்தான். பிறகு ஏதும் கிடைக்காமல் “டேய் குமார் நாம சாவடிக்கு போவோம்டா. பெரிசுக எல்லாம் தூங்கிருக்குங்க” என்று காளி சொல்ல இருவரும் மந்ததையை விட்டு சாவடிக்கு நடையைக் கட்டினர்.

சாவடியில் அந்த காலை பதினோரு மணி வெயிலையும் பொருட்படுத்தாமல் நாலைந்து வழுக்கைத் தலை பெரிசுகள் தூங்கிக்கொண்டிருந்தனர். பிள்ளையார் சத்தமில்லாமல் உட்கார்ந்திருந்தார். காளியும் குமாரும் படிகளிலும் சாவடிக்கு கீழேயும் தெடினர். நல்ல வேட்டை. நிறைய கிடைத்தது. இருவரும் சிரித்துக்கொண்டனர். பிறகு வேகவேகமாக நடக்கத்தொடங்கினர். ஊரணியைக் கடந்து மொட்டைமலையில் ஏறி, கோவிலுக்கு பின்னால் சென்று அங்கிருந்த திண்டில் குத்தவைத்து உட்கார்ந்து கொண்டனர்.

காளி பையில் கைவிட்டு சேகரித்ததில் ஒன்றை எடுத்து வாயில் வைத்துக்கொண்டான். துண்டு பீடி. குமாரும் ஒன்றை எடுத்து வாயில் வைத்துக்கொண்டான். காளி டவுசர் பையில் கைவிட்டு ஒரு தீப்பெட்டியை எடுத்து அதில் மீதமிருந்த இரண்டு தீக்குச்சிகளில் ஒன்றை எடுத்தான். வாயில் துண்டுபீடியை வைத்துக்கொண்டு குமார் காளிக்கு ஏதோ சமிக்ஞை காட்டினான். காளி என்னவென்று கேட்க, காத்தடிக்குது அந்தப்பக்கம் திரும்பி பத்தவை என்றான். காளி குமாரின் மதிநுட்பத்தை வியந்தவாறு சுவற்றுப்பக்கம் திரும்பி தனது பீடியைப் பற்றவைத்துக்கொண்டான். அவனது பீடி மிகவும் சிறியதாக இருந்தது. கஞ்சப்பிசினாரி பயலுக கடைசிவரைக்கும் இழுத்துட்டுத்தான் போடறாய்ங்க என்றான் புகையை வெளியே விட்டுக்கொண்டே. பிறகு குமாரின் பீடியைப் பற்றவைத்தான். இருவரும் ரசித்து புகைக்க ஆரம்பித்தனர்.

காற்று பீடியைக் கரைத்துக்கொண்டிருந்தது. காளியின் முன்னந்தலையில் விழுந்த அவனது நீண்ட தலைமுடி காற்றில் இங்கும் அங்கும் அலைந்து கொண்டிருந்தது. அவன் அருகிலிருந்த சுவற்றில் சாய்ந்து உட்கார்ந்து கொண்டான். அங்கிருந்து பார்க்கும் போது அருகிலிருந்த நிறைய கிராமங்கள் தெரிந்தன. கடினமான வெயில் எங்கும் படர்ந்திருந்தது. கண்ணுக்கெட்டிய தூரம் வரையிலும் பொட்டக்காடு மட்டுமே தெரிந்தது. தூரத்தில் யாரோ வெடிவைத்து பாறையைத் தகர்க்கும் சத்தம் கேட்டது.

காளி ஏதோ நினைவு வந்தவனாக திரும்பி குமாரிடம் கேட்டான் “ஏன்டா பாடபொஸ்தகத்திலெல்லாம் ஆறு ஏரின்னு ஏதேதோ சொல்றாய்ங்கல்ல அதெல்லாம் எங்கடா இருக்கு?” குமார் தனக்கு-எதுவும்-தெரியாது-தான்-எதையும்-ஒளித்தும்வைக்கவில்லை என்பதைப் போல ஒரு பாவனை காட்டிவிட்டு அடுத்த துண்டுபீடியை எடுத்து வாயில் வைத்து அணையப்போகும் பீடியின் நெருப்பில் அதைப் பற்றவைத்துக்கொண்டான்.

காளி ஏதும் பேசாமல் வெயிலையே வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தான். பீடிப்புகை காற்றில் எழும்பி கரைந்து கொண்டிருந்தது.

***

இருள் பூச்சியின் சத்தம் கனமாக கேட்டது. அது நிலவின் ஒளி போல தூங்கும் பொழுது வருகிறது. காலையில் எழுந்தால் நிலவைப் போலவே காணாமல் போய்விடுகிறது என்று யோசித்துக்கொண்டே காளி ஒரு பக்கமாக சாய்ந்து கால்களை மடக்கி கைகளை கால்களுக்கும் முகத்துகும் நடுவை வைத்துக்கொண்டு கண்களை மூடிப் படுத்திருந்தான். ராக்கம்மா அவனுக்கு அருகில் படுத்திருந்தாள். கதவு திறக்கும் சத்தம் கேட்டு முழித்துக்கொண்டு எழுந்தாள். ரங்கன் வந்தான். ராக்கம்மாவின் தலைமுடியை முடிந்துகொண்டு “சாப்படறியா?” என்றாள். “ம்ம்..இருக்கறத போடு” என்றவாரே உட்கார்ந்தான். பிறகு “எங்க உன் செல்ல மருமவன் தூங்கிட்டானா? இன்னிக்கு அவன் மொட்டமலையில் உட்கார்ந்து பீடி குடிச்சத எங்கூட்டாளிக பாத்திருக்காய்ங்க. காலையில் எந்திரிக்கட்டும் அவனுக்கு இருக்கு” என்றான். ராக்கு ஒரு சட்டி நிறைய கூழ் போன்ற ஏதோ ஒன்றையும் மிளகாய் இரண்டும் எடுத்து வந்து அவனருகில் வைத்துவிட்டு, அவன் பக்கத்தில் உட்கார்ந்து கொண்டாள். “இந்தா பேசாம சாப்பிடு. நீ பண்ணாத சேட்டையையா உன் மருமவன் செய்யறான்?”

***

காளி எழுந்து பார்த்தான். அனைவரும் தூங்கிவிட்டிருந்தனர். ராக்குவும் ரங்கனும் ஆழ்ந்த உறக்கத்திலிருந்தனர். காளி மெதுவாக எழுந்து ஓசைப்படாமல் கதவைத்திறந்து கொண்டு வெளியே வந்தான். வெம்மையான காற்று அவன் முகத்தில் அறைந்தது. மெதுவாக நடக்க ஆரம்பித்தான். குமார் வீட்டைக்கடக்கும் போது உதட்டைக்குவித்து மெதுவாக ஒரு விசில் அடித்தான். இரண்டு மூன்று நிமிடங்களில் குமார் வெளியே வந்தான்.

இருவரும் நடக்க ஆரம்பித்தனர். கொஞ்சம் தூரம் சென்றதும், இன்னும் சில பையன்கள் சேர்ந்துகொண்டனர். சிலர் கைகளில் சாக்குகளும் கிழிந்து நைந்து போன பழைய போர்வைகளும் இருந்தன. அவர்கள் ஊரணியை நோக்கி நடக்க ஆரம்பித்தனர்.

காளி இன்னிக்கு என்ன படம்டா?” என்றான் கொஞ்சம் குட்டையாக இருந்தவன்.

***
(காந்தம் ஈர்க்கும்)

ஓவியம்: ராம்கி

நீயும். உன் மீன்களும்.

நீ இல்லாத
இந்த நாட்களில்
மீன்கள் என்னை
வந்தடைந்தன.

மீன்கள் இல்லாத
உன்னுள்
என் செதில்கள் மட்டும்
நீந்துகின்றனவாம்.

***

மீன்கள் என்னை
வந்தடைந்த அன்று
இலைகளற்ற
இந்த மரத்தினடியில்
செதில்கள் இல்லாத நானும்
உன் வெற்றிடமும்
மௌனமாக
அமர்ந்திருந்தோம்.

பேச்சுத்துணை கிடைக்காத
மீன்கள்
இலையில்லாத கிளைகளில்
சென்று ஒட்டிக்கொண்டன.

நீ இல்லாத
உன் வெற்றிடத்தை
உதிர்ந்த இலைகள்
கூட
நிரப்ப மறுக்கின்றன.

***

திடுக்கிட்டு
விழிக்கும் நான்
முன்நகராத
பின்னிரவில்
என்னை உற்றுநோக்கும்
உன்
மீன்களுடன்
பேசத்துவங்குகிறேன்.

ஏனோ,
என் வார்த்தைகள்
கிளைகளை
சென்றடைவதேயில்லை.

***

நீயும். உன் மீன்களும்.

நீ இல்லாத
இந்த நாட்களில்
மீன்கள் என்னை
வந்தடைந்தன.

மீன்கள் இல்லாத
உன்னுள்
என் செதில்கள் மட்டும்
நீந்துகின்றனவாம்.

மீன்கள் என்னை
வந்தடைந்த அன்று
இலைகளற்ற
இந்த மரத்தினடியில்
செதில்கள் இல்லாமல்
நானும் உன் வெற்றிடமும்
மௌனமாக
அமர்ந்திருந்தோம்.

பேச்சுத்துணை கிடைக்காத
மீன்கள்
இலையில்லாத கிளைகளில்
சென்று ஒட்டிக்கொண்டன.

நீ இல்லாத
உன் வெற்றிடத்தை
உதிர்ந்த இலைகள்
கூட
நிரப்ப மறுக்கின்றன.

திடுக்கிட்டு
விழிக்கும் நான்
முன்நகராத
பின்னிரவில்
என்னை உற்றுநோக்கும்
உன்
மீன்களுடன்
பேசத்துவங்குகிறேன்.

ஏனோ,
என் வார்த்தைகள்
கிளைகளை
சென்றடைவதேயில்லை.

You do, don’t you?

He had met her a year ago in Boston, where she had lived with her widowed
mother. He had found Catherine homely and dull, on that first meeting, with
nothing to her credit but her lovely smile, not a sufficient reason ever to see
her again. He had telephoned her the next evening. Of the countless girls he had
known in his student years she was the only one with whom he had never
progressed beyond a few kisses.

He had had many violent loves, when he swore he
could not live without this girl or that; he forgot Catherine for weeks at a
time and she never reminded him. He had always come back to her, suddenly,
inexplicably, as he did tonight.

Her mother, a gentle little schoolteacher, had died last winter. Catherine had
gone to live with an uncle in New York. Keating had answered some of her letters
immediately, others–months later. She had always replied at once, and never
written during his long silences, waiting patiently. He had felt, when he
thought of her, that nothing would ever replace her. Then, in New York, within
reach of a bus or a telephone, he had forgotten her again for a month.

He never thought, as he hurried to her now, that he should have announced his
visit. He never wondered whether he would find her at home. He had always come
back like this and she had always been there. She was there again tonight.
She opened the door for him, on the top floor of a shabby, pretentious
brownstone house. “Hello, Peter,” she said, as if she had seen him yesterday.

“God, I’ve missed you!” he said, and knew that he had, every day since he’d seen
her last and most of all, perhaps, on the days when he had not thought of her.

“You haven’t changed much,” she said. “You look a little thinner. It’s becoming.
You’ll be very attractive when you’re fifty, Peter.”

“That’s not very complimentary–by implication.”

“Why? Oh, you mean I think you’re not attractive now? Oh, but you are.”

“You shouldn’t say that right out to me like that.”

“Why not? You know you are. But I’ve been thinking of what you’ll look like at
fifty. You’ll have gray temples and you’ll wear a gray suit–I saw one in a
window last week and I thought that would be the one–and you’ll be a very great
architect.”

“You really think so?”

“Why, yes.” She was not flattering him. She did not seem to realize that it
could be flattery. She was merely stating a fact, too certain to need emphasis.
He waited for the inevitable questions. But instead, they were talking suddenly
of their old Stanton days together, and he was laughing, holding her across his
knees, her thin shoulders leaning against the circle of his arm, her eyes soft,
contented. He was speaking of their old bathing suits, of the runs in her
stockings, of their favorite ice-cream parlor in Stanton, where they had spent
so many summer evenings together–and he was thinking dimly that it made no
sense at all; he had more pertinent things to tell and to ask her; people did
not talk like that when they hadn’t seen each other for months. But it seemed
quite normal to her; she did not appear to know that they had been parted.

He was first to ask finally:
“Did you get my wire?”
“Oh, yes. Thanks.”
“Don’t you want to know how I’m getting along in the city?”
“Sure. How are you getting along in the city?”
“Look here, you’re not terribly interested.”
“Oh, but I am! I want to know everything about you.”
“Why don’t you ask?”
“You’ll tell me when you want to.”
“It doesn’t matter much to you, does it?”
“What?”
“What I’ve been doing.”
“Oh…Yes, it does, Peter. No, not too much.”
“That’s sweet of you!”
“But, you see, it’s not what you do that matters really. It’s only you.”
“Me what?”
“Just you here. Or you in the city. Or you somewhere in the world. I don’t know.
Just that.”
“You know, you’re a fool, Katie. Your technique is something awful.”
“My what?”

“Your technique. You can’t tell a man so shamelessly, like that, that you’re
practically crazy about him.”

“But I am.”
“But you can’t say so. Men won’t care for you.”
“But I don’t want men to care for me.”
“You want me to, don’t you?”
But you do, don’t you?”

“I do,” he said, his arms tightening about her. “Damnably. I’m a bigger fool
than you are.”
“Well, then it’s perfectly all right,” she said, her fingers in his hair, “isn’t
it?”

He left her two hours later, and he walked away feeling light, clean, happy, his
fears forgotten. He thought only that he had promised to come again tomorrow and that it was an unbearably long time to wait.She stood at the door, after he had gone, her hand on the knob he had touched,and she thought that he might come tomorrow–or three months later.

– An excerpt from The Fountain Head – By Ayn Rand

You do, don’t you?

He had met her a year ago in Boston, where she had lived with her widowed
mother. He had found Catherine homely and dull, on that first meeting, with
nothing to her credit but her lovely smile, not a sufficient reason ever to see
her again. He had telephoned her the next evening. Of the countless girls he had
known in his student years she was the only one with whom he had never
progressed beyond a few kisses.

He had had many violent loves, when he swore he
could not live without this girl or that; he forgot Catherine for weeks at a
time and she never reminded him. He had always come back to her, suddenly,
inexplicably, as he did tonight.

Her mother, a gentle little schoolteacher, had died last winter. Catherine had
gone to live with an uncle in New York. Keating had answered some of her letters
immediately, others–months later. She had always replied at once, and never
written during his long silences, waiting patiently. He had felt, when he
thought of her, that nothing would ever replace her. Then, in New York, within
reach of a bus or a telephone, he had forgotten her again for a month.

He never thought, as he hurried to her now, that he should have announced his
visit. He never wondered whether he would find her at home. He had always come
back like this and she had always been there. She was there again tonight.
She opened the door for him, on the top floor of a shabby, pretentious
brownstone house. “Hello, Peter,” she said, as if she had seen him yesterday.

“God, I’ve missed you!” he said, and knew that he had, every day since he’d seen
her last and most of all, perhaps, on the days when he had not thought of her.

“You haven’t changed much,” she said. “You look a little thinner. It’s becoming.
You’ll be very attractive when you’re fifty, Peter.”

“That’s not very complimentary–by implication.”

“Why? Oh, you mean I think you’re not attractive now? Oh, but you are.”

“You shouldn’t say that right out to me like that.”

“Why not? You know you are. But I’ve been thinking of what you’ll look like at
fifty. You’ll have gray temples and you’ll wear a gray suit–I saw one in a
window last week and I thought that would be the one–and you’ll be a very great
architect.”

“You really think so?”

“Why, yes.” She was not flattering him. She did not seem to realize that it
could be flattery. She was merely stating a fact, too certain to need emphasis.
He waited for the inevitable questions. But instead, they were talking suddenly
of their old Stanton days together, and he was laughing, holding her across his
knees, her thin shoulders leaning against the circle of his arm, her eyes soft,
contented. He was speaking of their old bathing suits, of the runs in her
stockings, of their favorite ice-cream parlor in Stanton, where they had spent
so many summer evenings together–and he was thinking dimly that it made no
sense at all; he had more pertinent things to tell and to ask her; people did
not talk like that when they hadn’t seen each other for months. But it seemed
quite normal to her; she did not appear to know that they had been parted.

He was first to ask finally:
“Did you get my wire?”
“Oh, yes. Thanks.”
“Don’t you want to know how I’m getting along in the city?”
“Sure. How are you getting along in the city?”
“Look here, you’re not terribly interested.”
“Oh, but I am! I want to know everything about you.”
“Why don’t you ask?”
“You’ll tell me when you want to.”
“It doesn’t matter much to you, does it?”
“What?”
“What I’ve been doing.”
“Oh…Yes, it does, Peter. No, not too much.”
“That’s sweet of you!”
“But, you see, it’s not what you do that matters really. It’s only you.”
“Me what?”
“Just you here. Or you in the city. Or you somewhere in the world. I don’t know.
Just that.”
“You know, you’re a fool, Katie. Your technique is something awful.”
“My what?”
“Your technique. You can’t tell a man so shamelessly, like that, that you’re
practically crazy about him.”
“But I am.”

“But you can’t say so. Men won’t care for you.”
“But I don’t want men to care for me.”
“You want me to, don’t you?”
“But you do, don’t you?”
“I do,” he said, his arms tightening about her. “Damnably. I’m a bigger fool
than you are.”
“Well, then it’s perfectly all right,” she said, her fingers in his hair, “isn’t
it?”

He left her two hours later, and he walked away feeling light, clean, happy, his
fears forgotten. He thought only that he had promised to come again tomorrow and that it was an unbearably long time to wait.She stood at the door, after he had gone, her hand on the knob he had touched,and she thought that he might come tomorrow–or three months later.

– An excerpt from The Fountain Head – By Ayn Rand

எப்படியேனும் கடத்திவிடு

உயிர் உடைவதை உணர்கிறேன். தலையெழுத்தை தலைகீழாய் எழுதினேன். தலைகீழாய் எழுதியதைப் படிக்கமுடியாமல் மாய்ந்துபோகிறேன். தலையெழுத்தைப் படிக்கத்தெரிந்த நட்சத்திரம் ஒன்று மேக இதயத்துக்குள் மறைந்துகொண்டது. இதயங்கள் காற்றில் அலைக்கழிக்கப்படுகின்றன. வடிவங்கள் மாறியவாறு இருக்கின்றன. ஒவ்வொரு வடிவத்திலும் நான் தொலைத்த நட்சத்திரத்தை தேடித்தேடி அலைகிறேன். மேகங்கள் என்னை கடத்திச்செல்கின்றன. குயிலொன்று என்னை மேகத்திலிருந்து மீட்டெடுக்கிறது. அந்த குயிலின் பாடல் என்னைப் பற்றிக்கொள்கிறது. குயில் அசையாமல் நின்று கொண்டிருக்கும் அந்த ஆலமரத்திலேறி அமர்ந்துகொண்டது. ஆல இலைகள் குயிலின் பாடலை சுவாசித்தன. குயில் பாடுவதை நிறுத்திக் கொண்டது. பாடல்களைத் தேடி வேர்களில் நெடுந்தூரம் பயணம் செய்தேன். அந்த மரத்தின் இலைகளின் நரம்புகளில் அந்தப் பாடல்களைத் தேடித்திரிந்தேன். இலைகள் காற்றில் உதிர்ந்தன. பாடப்பட்ட பாடல்கள் காற்றில் கலந்திருக்கின்றன. காற்றிலிருந்து குரலை மட்டும் பிரிக்கத் தெரிந்த பறவை ஒன்று வேண்டும். இறைவனிடம் கேட்டேன். பிறகு, பறவை வேண்டாம், இந்த இரவை மட்டும் எப்படியேனும் கடத்திவிடு, என்று மீண்டும் வேண்டிக் கொண்டேன். இரவு கனக்கிறது. இறைவன் என்னை மௌனமாக பார்த்துக்கொண்டிருந்தார். இரவு கனவுகளில் மெதுவாக ஊர்ந்துகொண்டிருந்தது. கனவு, இரவின் கரிய இருளில், சிக்கிக்கொண்டிருந்தது. கனவுகளினூடே பறவை ஒன்று பறந்துவந்தது. அது நான் இழந்த பாடல்களை மீட்டுத்தந்தது. பாடல்கள் அருவியில் நனைந்தன. அருவியின் சத்தம் பாடல்களை நினைவிழக்கச்செய்தது. கனவுகளில் வெள்ளம் பெருக்கெடுத்தது. இரவு உப்புக்கரித்தது. உப்புக்கரித்த நினைவுகள் கணங்களை நிறுத்துகின்றன. கடந்துவிட்ட கணங்களிலிருந்து நினைவுகளை சேகரிக்க முயல்கிறேன். சேகரிக்கப்படாத நினைவுகள் ரயில் நிலையங்களில் சுற்றித்திரிகின்றன. அனாதையான அந்த நினைவுகள் ரயில் நிலையங்களில் மணி காட்டும் டிஜிட்டல் கடிகாரங்களில் சென்று ஒளிந்து கொண்டன. புள்ளிகளாய் தேய்ந்தன. நினைவிடங்களை விட்டகலாத மூச்சுக்காற்று அங்கேயே சுற்றித்திரிந்தது. ஜான்சன்ஸ் பேபி பவுடரின் மணம் என் மூச்சுக்காற்றை இறுகப்பிடிக்கிறது. என் இதயத்தில் உன்னைக் கண்டதும் அது அங்கேயே ஒழிந்துகொண்டது. என் சிவப்பனுக்கள் பவுடரின் மணத்தை உறிஞ்சிக்கொள்கின்றன. நினைவுகள் என் ரத்தக்குழாய்களுக்குள் இங்கும் அங்கும் திக்குத்தெரியாமல் அலைந்து கொண்டிருக்கின்றன. அவை உறைந்து போகும் நாட்களை எண்ணி காத்துக்கிடக்கின்றன.

The Testament Of Gideon Mack and Making of ஹலோ அஸ்விக்குட்டி

என் நண்பர் ஒருவரிடம் “உங்களுக்கு பேய்கள் மீது நம்பிக்கை இருக்கிறதா?” என்று கேட்டேன். என்னை ஒரு முறை ஆழமாக பார்த்த அவர், சட்டென “இல்லை” என்றார். “ஏன்?” என்றேன். அதற்கு அவர் “இது வரை நான் பேய்களைப் பார்த்ததில்லை. மற்றவர்கள் சொல்வார்களே அது போல உணர்ந்தது கூட இல்லை. சில கதைகளை மட்டுமே கேட்டிருக்கிறேன். அப்படியிருக்க நான் பேய்களை எப்படி நம்புவது?” என்றார். “உங்களுக்கு கடவுள் நம்பிக்கை இருக்கிறதா?” என்றேன் தொடர்ந்து. அவர் சிரித்து விட்டார். “ம்ம்ம்..பேஷா இருக்கே!” என்றார். “இந்த உலகத்தில் எந்த ஒரு விஷயத்துக்கும் எதிர்மறையான விஷயம் ஒன்று இருக்கிறதல்லவா? பகல் என்றால் இரவு. நல்லவன் நான், என்றால் கெட்டவன் நீங்கள்(!). அதே போல ஒரு நல்ல சக்திக்கு எதிராக ஒரு தீயசக்தி இருக்கவேண்டுமே. அப்படியென்றால், நீங்கள் கடவுளை நம்புகிறீர்கள் என்றால், பேய்களையும் நம்பித்தானே ஆகவேண்டும்” என்றேன்.

கொஞ்ச நேரம் யோசித்த அவர், “முத்து வாட் டு யூ வான்ட்?” என்றார். “உங்களுக்கு பேய்கள் நம்பிக்கை இருக்கிறதா இல்லையா?” “எனக்கு பேய் படங்கள் பார்க்க ரொம்பவும் பிடிக்கும். ஆனால் படம் பார்த்து முடித்த பிறகு நிறைய பயமாக இருக்கும். ஆனாலும் மறுமுறையும் பேய்ப்படங்கள் பார்ப்பேன். மறுமுறையும் பயப்படுவேன். கடவுள் எனக்கு மன ஆறுதலைத் தருகிறார். தன்னம்பிக்கையைத் தருகிறார். எனவே நான் அவரை நம்புகிறேன். பேய்கள் எனக்கு அச்சத்தைத் தருகின்றன. எனவே நான் அவைகளை நம்பவில்லை என்று எனக்கு நானே சொல்லிக்கொள்கிறேன். என் மனநிம்மதிக்கு கேடு விளைவிக்கும் ஒன்றை ஏன் நான் வலுக்கட்டாயமாக நம்பவேண்டும்?” என்றார்.

***

The Testament Of GideonMack” என்றொரு புத்தகம். போன வருடம் புக்கர் பரிசுக்கு (long list) நாமினேட் செய்யப்பட்டது இது. கதை, கிடியன் என்ற பாதிரியாரைப் (Minister Of A Church ministerக்கு தமிழில் வார்த்தை தெரியவில்லை, எனவே பாதிரியார் என்றே சொல்லுகிறேன்!) பற்றியது. நாவல் நம்பிக்கை சார்ந்த ஒன்று. மனிதனின் குணங்களை அலசுகிறது. சம்பவங்களைச் சொல்கிறது. பிற வாதங்களை முன் வைக்கிறது. நம்மை குழப்புகிறது. பிறகு தீர்வை நம்மிடம் விட்டுவிடுகிறது. (அட போங்கப்பா! நாவல் படிச்சப்புறம் ஒரு முடிவு கெடைக்கலேன்னா என்னா அர்த்தம்?ன்னு கேக்கறவங்களுக்கு கண்டிப்பா இந்த நாவல் சரிப்படாது)

மனிதர்களின் குணாதிசயங்கள் மிகவும் விந்தையானவை(ஆமா இவரு ரொம்ப கண்டாரு!). ஒரு விசயத்தை நாம் பிடித்துக்கொள்ள தொடங்கிவிட்டோமேயானால், நமது மனம் பிறர் என்ன சொன்னாலும் கண்டுகொள்வதில்லை. நமக்கு அது உண்மையாகப் படுகிறது. மனம் ஆராய மறுக்கிறது. (சிவாஜி படம் அவ்ளோ un-logical இருந்தப்பவும் கைத்தட்டி பேப்பரகிழிச்சு எறிஞ்சு கத்தினப்பவே எனக்கு தெரியும்டா!) கண்ணால் பார்ப்பது பொய் என்று சும்மாவா சொன்னார்கள்.

***

நாவல் ஒரு புத்தக வெளியீட்டாளரிடமிருந்த ஆரம்பிக்கிறது. அந்த புத்தக வெளியீட்டாளருக்கு ஒரு சுவாரஸ்யமான கையெழுத்து பிரதி கிடைக்கிறது. அந்த பக்கங்கள் ஒரு மனிதனின் வாழ்க்கை வரலாறு போல இருக்கிறது. அந்த மனிதன் தன் வரலாற்றை தானே சொல்கிறான். புத்தக வெளியீட்டாளரின் நண்பர் ஒரு பத்திரிக்கையாளர்(freelance). அவர் தான் இந்த கைஎழுத்து பிரதியை தனது நண்பரான புத்தக வெளியீட்டாளருக்கு கொடுக்கிறார். அவர் இந்த கைப்பிரதியை புத்தகமாக வெளியிட வேண்டும் என்று வெளியீட்டாளரிடம் கோரிக்கை வைக்கிறார்.

நாவலில் அந்த கைப்பிரதி அப்படியே தரப்பட்டிருக்கிறது. அதை எழுதியவர் பெயர் கிடியன். கிடியனே கதை சொல்கிறார். (self-narrative).

***

கிடியன் ஒரு பாதிரியார். மிகவும் கண்டிப்பான சூழ்நிலையில் வளர்ந்தவர். அவருடைய தந்தையுமே ஒரு பாதிரியார் தான். கிடியன் வளரும் போது அவருக்கு பாதிரியார் வேலை பிடிக்கவில்லை. ஏனென்றால் கிடியனுக்கு கடவுளின் மேல் கொஞ்சம் கூட நம்பிக்கையில்லை. ஆனால் வளர்ந்து வேலை தேடும் போது வேறு வழியில்லாமல் (அல்லது பிடித்தே!) பாதிரியார் ஆவதற்கு ஒத்துக்கொள்கிறார். கிடியனுக்கு வேலை பிடித்திருக்கிறதா, பிடிக்கவில்லையா என்பது வேறு குழப்பம்.

காலேஜில் படிக்கும் போது ஒரு பெண்ணைக் காதலிக்கிறார். ஆனால் அவள் தன்னுடைய நண்பனைக் காதலிக்கிறாள் என்று தெரிந்து, வேறு வழியில்லாமல் அவளுடைய தோழியை கிடியன் காதலிக்கிறார்(தலை சுத்துதா, மறுபடியும் ஒரு முறை இந்த வரியைப் படிங்க!). ஆனாலும் அவள் மீது காதல் குறையவேயில்லை. நண்பனும் இவர் காதலித்த பெண்ணும் மணமுடித்துக்கொள்கிறார்கள். இவரும், இவர் காதலித்த பெண்ணின் தோழியும் மணமுடிக்கின்றனர். இருவர் குடும்பமும் ஒரே ஊரில் வசிக்கிறது. (ரொம்ப சிக்கலான விசயத்தை எவ்ளோ சிம்பிளா விளக்கிருக்கான் முத்து. யு ஆர் க்ரேட் டா!)

கிடியனுக்கு காலையில் எழுந்து அல்லது வேலை முடித்து வந்து ஜாக்கிங் செய்வது வழக்கம்(என்ன மாதிரி ரொம்ப சுறுசுறுப்பு. Fitness-Freak!). ஜாக்கிங் பயிற்சியால் மாரத்தான் ஓட்டங்களுக்கும் இவர் செல்வார். அவ்வாறு மாரத்தான் ஓட்டங்களுக்கு செல்லும் போது ,ஸ்பான்ஸர்ஸ் கொடுக்கும் பணத்தை வைத்து நிறைய நல்ல விசயங்களை அந்த ஊருக்கு செய்து வருகிறார். மேலும் சில ரிசர்ச்சுக்கு பணம் வசூலித்துக் கொடுக்கிறார். கிடியனும் அவரது மனைவியும் வாழ்க்கையை ரசிக்கத்துவங்குகிறார்கள். ஒரு நாள் கிடியனின் மனைவி ஒரு விபத்தில் பலியாகிறார். வாழ்க்கையை ரசிக்கத் தொடங்கும் போது நேர்ந்த இந்த மிகப்பெரிய இழப்பை கிடியனால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. இடிந்து போகிறார். ஆனால் வாழ்க்கை ஓட வேண்டுமே? நம் காலம் முடியும் வரையில் வாழ்ந்துதானே ஆகவேண்டும்? நம் காலத்தை முடித்துக்கொள்ள நம்மால் முடிந்தாலும், நம்மால் முடியாது என்பது தானே உண்மை!

வாழ்க்கை அவருக்கு ஜாக்கிங்காக ஓடுகிறது. ஜாக்கிங் செல்வதை அவர் வெகுவாக நேசிக்கத்தொடங்குகிறார். அவர் ஜாக்கிங் செல்லும் பாதை நல்ல பச்சை பசுமையாக இருக்கும் (scotland! என்ன Scotlandன்னு ஒரு ஆச்சரியக்குறி? போயிருக்கியா அங்க?). சில இடங்களில் மரங்கள் அடர்ந்த காட்டுப் பகுதி போல இருக்கும். அவருடைய நண்பனின் வீடும் அந்த வழியிலே இருக்கிறது. ஒரு நாள் கிடியன் ஜாக்கிங் செல்லும் போது ஒரு கல்தூணைப் (ஸ்தூபி போன்ற ஒன்று!) பார்க்கிறார். அவ்வாறான கல்தூண்கள் அந்த ஊரிலே கொஞ்சம் தான் இருக்கின்றன. இம்மாதிரியான தூணை அவர் இந்த இடத்தில் இதற்கு முன்னர் (நேற்று கூட) பார்க்கவில்லை. இரவோடு இரவாகவும் இந்ததூணை யாராவது கொண்டுவந்து வைத்திருக்க வாய்ப்பில்லை. அருகில் சென்று தொட்டுப்பார்க்கிறார். அவரால் நம்பமுடியவில்லை. ஜாக்கிங்கிலிருந்து திரும்பிய கிடியன் தன் நண்பனிடமும் நண்பனின் மனைவியிடமும் சொல்கிறார் அவர்கள் நம்புவதற்கு மறுக்கின்றனர். கடைசியில் நண்பனின் மனைவி மட்டும் ஒரு நாள் இருவரும் சென்று பார்ப்போம் என்று சொல்கிறாள். (ஆனால் கடைசி வரைக்கும் அவளோ வேறுயாரோ அந்த தூணைப் பார்க்கவில்லை!)

(கிடியனும் அவருடைய நண்பனின் மனைவியும் ஒரு உணர்ச்சிவசப்பட்ட சூழ்நிலையில் உறவு கொள்கின்றனர். அவள் இது தான் முதலும் கடைசியும் என்று திட்டவட்டமாக சொல்லிவிடுகிறாள். அந்த சம்பவத்துக்கு அப்புறம் அவள் அது போல ஒரு நிகழ்வு நடக்கவேயில்லை என்பது போல் தான் இருக்கிறாள். கிடியனுக்கே இதில் சந்தேகம் வந்துவிடுகிறது. அந்த நிகழ்வு ஒரு கனவோ என்று நினைக்கத்தொடங்குகிறார். ஏனென்றால், அவர்கள் இருவரும் தனியே இருப்பதற்கு நிறைய சந்தர்ப்பங்கள் பின்னர் கிடைத்தும், அவள் அந்த சம்பவத்தைப் பற்றி ஏதும் பேசியதும் இல்லை, அட்லீஸ்ட் ஒரு சமிக்ஞை கூட காட்டியதில்லை)

இவ்வாறான சூழ்நிலையில் ஒரு நாள் தன் தோழியின் நாய் ஒன்றைக் காப்பாற்ற முயன்று ஒரு ஆற்றுக்குள் விழுந்து விடுகிறார் கிடியன்(இதுக்கு தான் தோழிகள் முன்னாடி ஓவரா சீன் போடக்கூடதுன்றது!).அந்த ஆறு மிகவும் பெரியது ஆழமானது. அந்த இடத்தைவிட்டு கொஞ்சம் தூரம் சென்றதும் அந்த ஆறு பூமிக்கு அடியில் ஓடும். விழுந்த கிடியன் மூன்று நாட்கள் கழித்து ஆற்றில் கரை ஒதுங்குகிறார். மூன்று நாட்கள்! அவர் மூன்று நாட்கள் பூமிக்கு அடியில் இருந்திருக்கிறார் (மீன்கள் மட்டுமே உயிர்வாழக்கூடிய இடம்!), உணவில்லாமல். தலையிலும் காலிலும் பலத்த அடிகளுடன் இருக்கிறார். ஆனால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மிக விரைவில் தேறுகிறார். மருத்துவர்கள் ஆச்சரியமாகப் பார்க்கின்றனர். மெடிக்கல் மிராக்கிள் என்கின்றனர். (ஏம்ப்பா தமிழ் படங்கள்ல இந்த டயலாக் வந்தா மட்டும் சிரிக்கறீங்க?)

கிடியன் பூமிக்கு அடியில் இருந்த போது, அங்கே வாழ்ந்துகொண்டிருந்த(!) ஒரு மனிதன் தான் தன்னைக் காப்பாற்றி உணவளித்தான் என்கிறார். அந்த மனிதன் வேறு யாரும் இல்லை, அவன் தான் சாத்தான் என்று குண்டைத்தூக்கிப் போடுகிறார். யாவரும் நம்ப மறுக்கின்றனர். விழுந்ததில் புத்தி பிசகிவிட்டது என்கின்றனர். ஆனால் நம்மைப் பொறுத்தவரைக்கும் கிடியான் நன்றாகவே, தெளிவான மனதுடனே இருப்பதாகப் படுகிறது. கிடியான் தான் சாத்தனை சந்தித்ததை திட்டவட்டமாக நம்புகிறார். சாத்தனுடன் நடந்த உரையாடல்கள் அவருக்கு சட்டென நினைவுக்கு வருகிறது. தன் நண்பனை அழைத்து அவன் முன்னாலே (கிட்டத்தட்ட வாக்குமூலம் போல்! வாக்குமூலத்தின் போது தான் போதையில் இருக்கவில்லை என்பதற்கு சாட்சி அந்த நண்பர்!) பதிந்து வைத்துக்கொள்கிறார். பிறகு அத்தனையையும் தன் கையாலே எழுதுகிறார்.

பிறகு தலைவறைவாகிறார். ஊரை விட்டு வெளியேறி ஒரு விடுதியில் தங்கிவிட்டு, கடைசியாக எழுதியதில் சில திருத்தங்களையும் செய்து விட்டு, கைப்பிரதியை விடுதியிலே விட்டுவிட்டு, அருகிலிருக்கும் ஒரு மலையில் சென்று இறந்து போகிறார். அவர் கைப்பட எழுதிய அவரது கதை அவர் தங்கியிருந்த விடுதியிலிருந்து எடுக்கப்பட்டு பத்திரிக்கை நண்பரின் மூலம் அந்த புத்தக வெளியாட்டளரிடம் கிடைக்கிறது.

புத்தக வெளியீட்டாளர், இந்த கைப்பிரதியைக் கொடுத்த தன் நண்பனை (பத்திரிக்கையாளர்) கிடியன் வாழ்ந்த ஊருக்கு சென்று அங்கே அவருக்கு இருக்கும் ஒரே சொந்தமான அவரது நண்பனின் குடும்பத்தை சந்தித்து உண்மை நிலவரத்தை அறிந்துவருமாறு சொல்கிறார்.

பத்திரிக்கையாளரைச் சந்திக்க முதலில் மறுக்கும் நண்பனின் குடும்பம் பிறகு பேசுவதற்கு ஒத்துக்கொள்கிறது. நண்பனின் மனைவி பேச சம்மதிக்கிறாள். பத்திரிக்கையாளரும் நண்பனின் மனைவியும், கிடியன் பார்த்ததாக சொன்ன அந்த ஸ்தூபி இருக்கும் இடத்திற்கு செல்கிறனர். அப்பொழுது அவள்: ஒரு நாள் இரவு கிடியன் இந்த வழி போவதைப் பார்த்து, தான் பின் தொடர்ந்ததாகச் சொல்கிறாள். “அங்கே அந்த தூண் இருந்ததாக சொல்லப்படுகிற இடத்துக்கு பக்கத்தில் கிடியன் நின்று கொண்டு யாரிடமோ பேசிக்கொண்டிருந்தார்.(சாத்தான்!) அந்த ஆள் மறைவாக இருந்தார்” என்கிறாள். பத்திரிக்கையாளர் “அப்படியானால் நீங்கள் அந்த தூணைப் பார்த்தீர்களா?” என்கிறார். அதற்கு அவள், “தெரியவில்லை. பார்த்தது போலவும் இருக்கிறது. பார்க்காதது போலவும் இருக்கிறது” என்கிறாள்.

கடைசியாக பத்திரிக்கையாளர் தயங்கி தயங்கி கிடியனுக்கும் அவளுக்கு இருந்த அந்த உறவைப் பற்றி கேட்க்கிறார். அந்த உறவு உண்மையிலே நடந்ததா இல்லை கிடியானின் கற்பணையா? நடந்தது என்றால் ஏன் மீண்டும் ஒரு முறை நடக்கவில்லை? ஏன் அவள் அவ்வாறான ஒரு நிகழ்வை நடந்ததாக காட்டிக்கொள்ளவேயில்லை? என்று கேட்க்கிறார்.

அதிர்ந்து போன அவள், “ஒரு முறையா? அதற்கப்புறம் எத்தனை முறை நாங்கள் உறவு கொண்டுள்ளோம் தெரியுமா?” என்கிறாள்.

குழப்பத்துடன் பத்திரிக்கையாளர் திரும்புகிறார். நாமும் தான்.

இந்த இடம் தான் மிகவும் குழப்பான இடம். ஏன் கிடியான் அப்படி சொன்னார்? இதே போல கதாப்பாத்திரங்களையும் அவைகள் சொல்லும் விசயத்தையும் நம்மால் நம்பமுடியவில்லை. கிடியன் சாத்தானிடம் “ஊரில் ஏன் யாருக்குமே அந்த தூண் தென்படவில்லை” என்று கேட்க்கும் பொழுது, சாத்தான் “அது உனக்காகவே அங்கே வைக்கப்பட்டது” என்கிறது. சாத்தனை நம்ப முடியுமா? நண்பனின் மனைவி பார்த்தது போல இருந்ததாக சொல்கிறாளே?

கேள்விகள் கேள்விகள் கேள்விகள்!

நாவல் படிப்பதற்கு இதமாக, ஒரு சலமில்லாத ஆங்காரமில்லாத அலட்டல் இல்லாத நீரோடை போல இருந்தது. ஆங்காங்கே மெல்லிய சிரிப்பலைகளும் எழாமல் இல்லை. கண்டிப்பாக ஒரு முறை படிக்கலாம். முதல் ஐம்பது பக்கங்கள் கொஞ்சம் கஷ்டமாக இருந்தது, பிறகு smooth. (ம்ம்.. மார்க் பொட்டுட்டாருய்யா மார்க் ஆண்டனி!)

***

என்னுடைய ஹலோ அஸ்விக்குட்டி கதையைப் படித்த சிலர் ஏன் இப்படி ஒரேயடியாக tragedyயே எழுதிக் கொண்டிருக்கிறீர்கள் என்றும், ஏன் பேய்கதைகளையே கட்டிக்கொண்டு அழுகிறீர்கள் என்றும் கேட்டனர். என்னிடம் பதில் இல்லை. அவ்வாறான கதைகள் தான் என்னை எழுதவைக்கிறது. நான் கதைகளை பெரும்பாலும் எழுதுவதில்லை, கதைகள் தான் என்னை எழுதச் சொல்கின்றன. (நௌ, திஸ் இஸ் டூ டூ மச்!)

***

இந்த ஹலோ அஸ்விக்குட்டியில் சிவா தற்கொலை செய்துகொள்வதைப்போன்ற ஒரு சம்பவம் எங்கள் ஊரில் நடந்தது. எங்கள் வீட்டுக்கு மிக அருகில். (இந்த தபா, ஊருக்கு போனபோது உன் மூஞ்ச அவன் கிட்ட காட்டினதான? அதான் தற்கொலை செஞ்சுகிட்டான்!)

சாதிவிட்டு சாதி காதலித்தான் ஒரு பையன். நாம் தான் கொஞ்சம் வித்தியாசமானவர்கள் ஆயிற்றே?! அதாவது காதலுக்கு மரியாதை படத்தை முன்னூறு தடவை டீவியில் குடும்பத்தோடு பார்த்து கண்ணீர் விடுவோம், ஆனால் வீட்டில் உண்மையிலே யாராவது தப்பித்தவறி காதலித்து தொலைத்தால், அந்த காதலுக்கு கண்டிப்பாக அவமரியாதை தான். (அடி பிரிச்சுமேஞ்சிருவோம்ல! உங்கள புரிஞ்சுக்கவே முடியலடான்னு விவேக் சும்மாவா சொன்னாரு!)

அவன் வீட்டில் இதற்கு சம்மதிக்கவில்லை. வீட்டின் சம்மதத்தை அவன் எதிர்பார்த்தான். வீட்டுக்குள் செல்லாமல் வீட்டிற்கு வெளியே இருக்கும் மொட்டை மாடிப்படிக்கட்டிலேயே உட்கார்ந்து கொண்டிருந்தான். நான்கு நாட்கள். சாப்பிடவேயில்லை. எங்கும் போகவில்லை. அவனுடைய வீட்டிலும் கொஞ்சம் கூப்பிட்டுப்பார்த்தார்கள். ஏனோ சமாதான முயற்சியில் இறங்கவில்லை. அவன் தற்கொலை செய்து கொண்டான்.

ரொம்ப நாட்களுக்குப் பிறகு அந்த வீட்டிற்கு ஒரு புதுமணத்தம்பதியினர் வருகின்றனர். மனைவி வெளியூரைச் சேர்ந்தவர். கணவனும் தான். ஒரு நாள் திடீரென அந்தப் பெண் (மனைவி!) இறந்து போன அந்தப் பையன் போல பேசத்தொடங்கியிருக்கிறாள்.நான் இங்கே தான் உட்கார்ந்திருந்தேன். இங்கே தான் மருந்துகுடித்தேன் என்று கனகச்சிதமாக சொல்கிறாள். இறந்தவனின் அம்மா வந்து கதறி அழுதிருக்கிறார்.

நான் பார்க்கவில்லை எனினும், இந்த சம்பவத்தை சுற்றி இருந்த மக்கள் அனைவரும் பார்த்திருக்கின்றனர். என்னுடைய அக்காவும். நானும் என் அக்காவும் வீட்டுக்கு வெளியே படிக்கட்டில் இரவு உட்கார்ந்து பேசிக்கொண்டிருந்த பொழுது அக்கா இந்தக் கதையை என்னிடம் சொன்னார். அவர் இந்தக் கதயைச் சொல்லிமுடிக்கும் போது (exactly that moment you know!), இறந்து போன அந்த பையனின் அம்மா எங்கள் வீட்டு வழியே நடந்து சென்றார். எங்களைப் பார்த்து சிரித்தார்.

மேலும் ரயில் தண்டவாளத்தில் செல் போன் உபயோகித்ததால் ரயில் வருவதைக்கவனிக்காமல் ஒரு பெண் இறந்து போனார் என்ற செய்தி ரொம்ப நாட்களுக்கு முன்னர் படித்திருந்தேன். இந்தச் செய்தி என் மனதில் ஆழமாக பதிந்து விட்டது. என்னை ஆழமாக பாதித்தும் விட்டது.

இந்த இரு சம்பவங்களை வைத்து பின்னப்பட்டதுதான் ஹலோ அஸ்விக்குட்டி என்ற கதை. சிலருக்கு இது crap ஆக இருக்கலாம். ஆனால் எனக்கு எழுதும் போது, “நான் அஸ்வினி இல்லடா சிவா” என்று அந்த பெண் சொல்லும் போது, உண்மையிலே புல்லரித்து விட்டது. கொஞ்சம் பயமாகக் கூட போய்விட்டது.

அந்த இரண்டாவது பப் சீனை ரசித்து எழுதினேன்.(ம்ம்ம்க்க்கும். நாங்க ரசிக்கனும்ப்பா!) அதில் வரும் “உன்ன கூட்டிக்கிட்டு கடைக்கு போறேன்” என்ற வரிகள் என்னுடைய வரிகள் இல்லை, புதுப்பேட்டையில் வரும் “புல் பேசும் பூ பேசும்” பாடலில் வரும் வரிகள். (வேற எங்க எங்க இருந்து, எத எத சுட்ட, ஒழுங்கா சொல்லிடு!)

கதை கொஞ்சம் நீளமாக இருந்தாலும் பொறுமையாக வாசித்தவர்களுக்கும், வாசித்து பின்னூட்டம் அளித்தவர்களுக்கும் நன்றிகள். (அப்பாடா ஒருவழியா மொக்கய முடிச்சுட்டான்! சங்கத்த கலைங்கடா! ஆ..என்னாது ஒரு பக்கியவும் காணோம்!)

***

(ஆஹா… இன்னும் முடிக்கலையாடா நீ! கருத்து சொல்லப்போறியா?!)

பேய்களை நம்புவதா வேண்டாமா என்பது வேறு விசயம். ஒரு சுவாரஸ்யத்திற்காக நம்பலாம்!
ஆனால் “நம்பிக்கை தான் கடவுள். பயம் தான் பேய்” என்பது மட்டும் முற்றிலும் உண்மை.

***

The butterfly has lost its wings

எனக்கு மிகவும் பிடித்தமான பாடல் இது, இன்று இதை நிறைய தடவை கேட்டு விட்டேன். (ஏனென்று தெரியவில்லை, சில சமயங்களில் மனதுக்கு கஷ்டமாக இருந்தால் இந்த பாடலை repeatஇல் போட்டுவிடுகிறேன்.) தூங்கச் செல்லும் முன் இதை உங்களிடம் பகிர்ந்து கொண்டால் என்னவென்று தோன்றியது. so, இந்த பதிவு.

இசையும், பாடலின் வரிகளும், பாடியவரின் வாய்ஸ¤ம் எனக்கு ரொம்பவும் பிடித்திருக்கிறது.

பாடலின் வரிகள்:

World Citizen – I Won’t Be Disappointed

What happened here?
The butterfly has lost its wings
The air’s too thick to breathe
And there’s something in the drinking water.



The sun comes up
The sun comes up and you’re alone
Your sense of purpose come undone
The traffic tails back to the maze on 101

And the news from the sky
Is looking better for today
In every single way
But not for you

World citizen

World citizen

It’s not safe
All the yellow birds are sleeping
Cos the air’s not fit for breathing
It’s not safe

Why can’t we be
Without beginning, without end?
Why can’t we be?

World citizen

World citizen

And if I stop
And talk with you awhile
I’m overwhelmed by the scale
Of everything you feel
The lonely inner state emergency

I want to feel
Until my heart can take no more
And there’s nothing in this world I wouldn’t give

I want to break
The indifference of the days
I want a conscience that will keep me wide awake

I won’t be disappointed
I won’t be disappointed
I won’t be.

I saw a face
It was a face I didn’t know
Her sadness told me everything about my own

Can’t let it be
When least expected there she is
Gone the time and space that separates us

And I’m not safe
I think I need a second skin
No, I’m not safe

World citizen

World citizen

I want to travel by night
Across the steppes and over seas
I want to understand the cost
Of everything that’s lost
I want to pronounce all their names correctly

World citizen

World citizen

I won’t be disappointed
I won’t be.

She doesn’t laugh
We’ve gone from comedy to commerce
And she doesn’t feel the ground she walks upon
I turn away

And I’m not sleeping well at night
And while I know this isn’t right
What can you do?

பாடலை இங்கே கேளுங்கள்

Babel என்ற திரைப்படத்தின் soundtrackஇல் இருக்கும் பாடல் இது. படத்தில் வருகிறதா என்று தெரியவில்லை,மறந்து விட்டது.