கயர்லாஞ்சி தீர்ப்பு: நீதிபதியின் கண்ணீர்

க.ம. தியாகராஜ்

மகாராஷ்டிர மாநிலம் கயர்லாஞ்சியில் ஆதிக்கச் சாதியினரால் கொடூரமான முறையில் கொல்லப்பட்ட ஆறு தலித்துகளுக்கு நீதி வழங்கப்பட்டிருக்கிறது. ‘கயர்லாஞ்சி தலித் மக்கள் படுகொலை வழக்கு’ என அழைக்கப்பட்ட இவ்வழக்கின் முடிவை அறிந்துகொள்ள மனித உரிமை ஆர்வலர்களும் ஜனநாயகவாதிகளும் இரண்டாண்டுகளாகக் காத்திருந்தனர்.

கடந்த 17 மாதங்களாக நடந்துவந்த இந்த வழக்கில், கொலை செய்தது, விதிகளுக்கு மாறாகக் கூட்டமாகக் கூடியது, வன்செயலில் ஈடுபட்டது, சாட்சியங்களை அழித்தது போன்ற பல்வேறு பிரிவுகளின் கீழ் குற்றம் சாட்டப்பட்டு, குற்றவாளிகள் எனக் கண்டறியப்பட்ட எட்டுப் பேரில் ஆறு பேருக்கு மரண தண்டனையும் இரண்டு பேருக்கு ஆயுள் தண்டனையும் வழங்கப்படுவதாக பண்டாரா மாவட்டச் சிறப்பு நீதிபதி

எஸ்.எஸ். தாஸ் 24.9.2008இல் அளித்த தன் தீர்ப்பில் தெரிவித்துள்ளார். தீர்ப்பை வாசிக்கும்போது அவரது கண்கள் கலங்கிக் கன்னங்களில் நீர் வழிந்தோடியதாக ‘டைம்ஸ் ஆப் இந்தியா’ ஒரு பெட்டிச் செய்தியை வெளியிட்டுள்ளது.

நீதிபதி யாருக்காக, எதற்காக அழுதார்? ஒரு நீதிபதி தான் விசாரித்த வழக்கில் குற்றம் சுமத்தப்பட்டவர்களுக்குச் சட்டப்படி தண்டனை வழங்கும் போது அழுத நிகழ்வு இந்திய வரலாற்றில் இதுவே முதல்முறை. இதைத் தவிர வேறு சில சிறப்புகளும் இத்தீர்ப்புக்கு உண்டு. குற்றம் நிகழ்ந்த இரண்டாண்டுகளுக்குள் தண்டனை வழங்கப்பட்டதும் தலித் மக்களைப் படுகொலை செய்ததற்காக ஆறு பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டதுங்கூட இதுவே முதல்முறை. இதற்கு முன்பு மகாராஷ்டிரா மாநிலத்தில் 1997ஆம் ஆண்டு யுவாட்மாலில் இரண்டு தலித்துகள் கொல்லப்பட்டனர். மராத்வாடா பல்கலைக்கழகப் பெயர் மாற்றம் குறித்த போராட்டத்தின்போது ஒரு தலித் பலர் முன்னிலையில் உயிருடன் கொளுத்தப்பட்டார். இந்தக் குற்றத்தில் ஈடுபட்டவர்களுக்கு மிகக் குறைந்தபட்சத் தண்டனைகள் மட்டும் பெயரளவில் வழங்கப்பட்டன. இவற்றை ஒப்பிடும்போது கயர்லாஞ்சி தலித் மக்கள் படுகொலைசெய்யப்பட்ட வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பு நியாயமானதே எனக் கருதத் தோன்றும். உண்மை அதுவல்ல.

தீர்ப்பின் சுயரூபத்தைப் புரிந்துகொள்ள வேண்டுமென்றால் நாம் சற்றுப் பின்னோக்கிப் போக வேண்டும்.

உண்மை கண்டறியும் குழுக்களின் அறிக்கைகள் நமக்குச் சில உண்மைகளைச் சுட்டிக்காட்டுகின்றன.

மகாராஷ்டிரா மாநிலம், பண்டார மாவட்டம், மொகாலி தாலுகாவில் அமைந்துள்ள சிறுகிராமம்தான் ‘கயர்லாஞ்சி’. இதில் மொத்தம் 181 குடும்பங்கள் வசிக்கின்றன. மக்கள்தொகை 700. புத்த மதத்தைச் சேர்ந்த மகர் பிரிவுத் தாழ்த்தப்பட்டோர் குடும்பங்கள் மூன்று . கோண்டு இனப் பழங்குடியினர் குடும்பங்கள் 14. குன்பி மற்றும் களர் ஆகிய இதர பிற்படுத்தப்பட்டோர் குடும்பங்கள் 164.

கயர்லாஞ்சியின் மகர் பிரிவுத் தாழ்த்தப்பட்ட இனத்தைச் சேர்ந்த பையாலால் போட்மாங்கேவுக்கு 5 ஏக்கர் நிலம் இருந்தது. இவர் கிராமத்தின் ஒரு கோடியில் ஒதுக்குப்புறமாக மண் குடிசை அமைத்துத் தன் மனைவி சுரேகா (44 வயது), மகன்கள் சுதிர் (21), ரோஷன் (19), மகள் பிரியங்கா (17) ஆகியோருடன் வசித்துவந்தார். தமது நிலத்தில் நெல் மற்றும் பருத்தி சாகுபடி செய்துவந்த இவரது நிலத்திற்கு அடுத்துள்ள நிலம் பிற்படுத்தப்பட்ட இனத்தைச் சேர்ந்த கிராமத் தலைவருடையது. அந்நிலத்திற்கு டிராக்டர்கள், வண்டிகள் சென்றுவருவதற்கான பாதையாகக் கிராமத் தலைவருக்குப் பையாலாலின் நிலம் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது. சாகுபடிசெய்யப்பட்ட காலங்களில் வளர்ந்து நிற்கும் பயிர்களின் மேல் ஏறி நசுக்கிக்கொண்டு கிராமத் தலைவரின் டிராக்டரும் வண்டிகளும் சென்று வருவது வழக்கம். இதனால் பையாலாலின் இரண்டு ஏக்கர் நிலம் பறிபோனதாகவே கருதப்பட்டது. இது குறித்து நியாயம் வேண்டிப் பையாலாலின் மனைவி சுரேகா குரல் எழுப்பினார். அக்கிராமத்தின் மற்ற இரண்டு தலித் குடும்பங்கள் ஆதிக்கச் சாதியினரின் அச்சுறுத்தல் காரணமாக இவர்களுக்கு ஆதரவு தராமல் ஒதுங்கியிருந்தன.

பக்கத்துக் கிராமமாகிய ‘டுசாலா’வில் வசிக்கும் தன் ஒன்றுவிட்ட சகோதரர்கள் சித்தார்த், ராஜேந்திரா ஆகியோரிடம் தங்களது நிலத்தை மீட்டுத்தர உதவும்படி வேண்டியுள்ளார் சுரேகா. சித்தார்த் ‘கயர்லாஞ்சி’ கிராம உயர் ஜாதி மக்கள் பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த் தையில் ஈடுபட்டார். கோபம்கொண்ட ஆதிக்கச் சாதியினர் பிரச்சினையைத் திசைதிருப்பும் நோக்கில் தன் சொந்த நிலத்துக்கு ‘உரிமை’ கொண்டாடிய சுரேகாவுக்கும் அவளுக்காகப் பரிந்துபேசிய சித்தார்த்துக்கும் கள்ளத்தொடர்பு இருப்பதாகவும் சுரேகா கள்ளச் சாராய வியாபாரம் செய்துவருகிறார் எனவும் கதைகட்டினர்.

03.09.2006அன்று நியாயம் கேட்டுவந்த சித்தார்த்தை சுமார் 1.5 கிலோ மீட்டர் தூரம் துரத்திவந்த கயர்லாஞ்சி கிராம ஆதிக்கச் சாதி இந்துக்கள் அவரைக் கடுமையாகத் தாக்கினர். சுரேகா, மகள் பிரியங்கா, மகன்கள் சுதிர், ரோஷன் ஆகியோர் இதை நேரில் கண்ட சாட்சிகளாவர். அவர்கள் சித்தார்த் தாக்கப்பட்ட செய்தியை ராஜேந்திராவுக்குத் தெரிவித்தனர். அவர் சித்தார்த்தை ‘காம்ப்பீ’ நகர் ‘ராய் மருத்துவமனையில்’ சிகிச்சைக்காகச் சேர்த்தார். இது காவல் துறை தொடர்பான வழக்கு என்பதால் ராய் மருத்துவமனை சார்பில் காவல் துறையினரிடம் புகார்செய்யப்பட்டது.

சம்பவம் நடந்த இடம் கயர்லாஞ்சி என்பதால் வழக்கு அண்டால்கவான் காவல் நிலையத்திற்கு மாற்றப்பட்டது. 29.09.2006இல் 12 பேர் கைதுசெய்யப்பட்டனர். மகாதி தாலுகா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு அன்றே பிணையில் விடுவிக்கப்பட்டனர்.

விடுவிக்கப்பட்ட 12 பேரும் தம் உறவினர்கள் சுமார் 40 பேருடன் ‘டுசாலா’வுக்குச் சென்றனர். இவர்கள் வரும் செய்தியைக் கேட்ட சித்தார்த்தும் ராஜேந்திராவும் ஓடி ஒளிந்துகொண்டனர். அவர்கள் இருவரையும் காணாத கூட்டம் அடுத்து ‘கயர்லாஞ்சி’ நோக்கிக் கடும் கோபத்துடன் சென்றது. அக்கூட்டத்துடன் உள்ளூர் உயர் ஜாதி இந்துக்களும் சேர்ந்துகொண்டு பையாலாலின் குடிசையை நோக்கிப் பயங்கர ஆயுதங்களுடன் புறப்பட்டனர். குடிசைக்குள் பையாலாலின் மனைவியும் குழந்தைகளும் மட்டுமே இருந்தனர்.

குடிசைக்குள் புகுந்த உயர் ஜாதி இந்துக்கள், (பெண்கள் பலரும் அக்கூட்டத்துடன் வந்தனர்.) அவர்கள் அணிந்திருந்த ஆடைகளைக் கிழித்து நிர்வாணப்படுத்திக் கையோடு கொண்டுவந்திருந்த ஆயுதங்களால் கடுமையாகத் தாக்கினர். அதோடு அந்த நால்வரையும் தெருத்தெருவாக இழுத்துச்சென்றனர். ஊர்ப் பொது இடத்திற்குக் கொண்டுவந்து பையாலாலின் மனைவியையும் மகளையும் கூட்டத்திலிருந்த எல்லா ஆண்களும் மாறிமாறி பாலியல் வல்லுறவுக்குட்படுத்தினர். சூழ்ந்துநின்று இதைப் பார்த்துக்கொண்டிருந்த உயர் ஜாதி இந்துப் பெண்கள் யாரும் தம் ஆண்களின் வெறிபிடித்த இந்த வன்செயலைக் கண்டிக்கவுமில்லை, தடுக்கவும் முற்படவில்லை. பிறகு ஒரு கொடூரமான செயல் அரங்கேறியது. தாயையும் தங்கையையும் புணருமாறு பையாலாலின் மகன்கள் சுதிருக்கும் ரோஷனுக்கும் கட்டளையிட்டனர். அவர்கள் மறுத்துவிடவே அவர்களின் ஆண் உறுப்புகளைக் கத்தியால் வெட்டினர். பிறகு ரத்தம் தெறிக்கும் அவர்களது உடல்களை ஆகாயத்தில் தூக்கி எறிந்து விளையாடினர். அவர்களது உயிர் பிரியும்வரை நான் முந்தி நீ முந்தி எனப் பலரும் இந்த விளையாட்டில் ஈடுபட்டனர்.

குற்றுயிராய்க் கிடந்த இரு பெண்களின் குறிகளுக்குள்ளும் மாட்டு வண்டியின் நுகத்தடியில் பொருத்தப்படும் கம்புகளைச் சொருகினர். சிலர் நன்கு கூர்மையாகச் சீவப்பட்ட மூங்கில் குச்சிகளை அடித்துச் சொருகினர். அதிக இரத்தப் போக்கினாலும் தாங்க முடியாத இச்சித்திரவதைகளினாலும் உயிரிழந்த அப்பெண்களது உடல்களைத் தெருவில் வீசிவிட்டுச் சென்றனர். பிரியங்காவின் பிரேதத்தையும்கூடப் பலர் பாலியல் பலாத்காரம் செய்ததாகத் தன் பெயரை வெளியிட விரும்பாத ஒரு போலீஸ்காரர் கூறியுள்ளார். தன் குடும்பத்தினர்மீது தொடுக்கப்பட்ட மனிதத்தன்மையற்ற இத்தாக்குதல்களை ஒரு மறைவிடத்திலிருந்து ஆற்றாமையுடன் பார்க்க நேர்ந்ததாகத் தெரிவித்துள்ளார் பையாலால்.

பாதுகாப்பற்ற அப்பாவித் தலித் மக்களின் மீது தம் மிருகவெறியைப் பிரயோகித்து அவர்களை முற்றாக அழித்த ஆதிக்கச் சாதியினர் பிறகு ஒன்றுகூடி அன்று கயர்லாஞ்சியில் நடந்தவற்றை யாரும் யாரிடமும் சொல்லக் கூடாது எனவும் அவ்வாறு சொன்னால் சொன்னவர்களுக்கும் இதேவிதமான தண்டனைகள் காத்திருக்கின்றன எனவும் அச்சுறுத்திவிட்டுக் கலைந்து சென்றனர். சிதைக்கப்பட்ட அச்சடலங்கள் நாலாபுறங்களிலும் வீசி எறியப்பட்டன.

அன்று இரவு 7:45 மணிக்கு பையாலால் சித்தார்த்தை அழைத்துக்கொண்டு போய் அண்டால்கவான் காவல் நிலையத்தில் புகார்செய்தார். காவலர்கள் இரவு 11:00 மணிக்கு ‘கயர்லாஞ்சி’ கிராமத்திற்குச் சென்று விசாரித்தனர். அத்தகைய சம்பவம் எதுவும் அங்கே நிகழவில்லை என விசாரிக்கப்பட்ட அனைவரும் ஒரே குரலில் தெரிவித்தனர். காவல் துறை பையாலாலின் குடிசைப்பக்கம் எட்டிக்கூடப் பார்க்கவில்லை.

மறுநாள் 30.09.2006 காலை 8:00 மணிக்கு பையாலால் அண்டால்கவான் காவல் நிலையத்தில் எழுத்து மூலம் தன் புகாரைப் பதிவுசெய்தார். அதன்பின் ‘சிவ்லால் கராடே மஹராஜ்’ என்பவர் பிரியங்காவின் உடல் தன் நிலத்துக்கு அருகில் ஓடும் ‘வடேகவான்’ கால்வாயில் மிதப்பதாகக் காவல் துறைக்குத் தகவல் சொன்னார். சடலத்தின் பெண் குறிக்குள் கூரிய கம்பு சொருகப்பட்டிருப்பதாகவும் தெரிவித்தார் மஹராஜ். பிறகு கயர்லாஞ்சியைச் சுற்றிப் பல்வேறு இடங்களிலும் சிதறிக்கிடந்த நால்வரின் சடலங்களையும் கைப் பற்றியது காவல்துறை. அவசர அவசர மாகப் பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டு அந்த நான்கு சடலங்களும் புதைக்கப்பட்டன.

சடலங்கள் உருக்குலைந்துபோயிருந்தமையால் ‘உரிய விதி’களின்படி பிரேதப் பரிசோதனைசெய்ய இயலவில்லை என மருத்துவர் குழு அறிவித்தது. கொல்லப்பட்ட இரண்டு பெண்களின் யோனிக் குழாய்களையும் கருப்பைகளையும் சோதித்ததில் பெண்கள் இருவரும் பாலியல் வன்முறைக்குள்ளாக்கப்பட்டதற்கான ஆதாரம் எதுவுமில்லை எனவும் பிரேதப் பரிசோதனை அறிக்கை கூறியது.

பல்வேறு மனித உரிமைக் குழுக்களும் தன்னார்வக் குழுக்களும் கயர்லாஞ்சிக்கு வந்து முகாமிட்டன. நடந்தவற்றை அறிய அப்படுகொலைகளை நேரில் பார்த்த மக்களுடன் பேசினர். கடும் முயற்சிக்குப் பின்னர் உண்மை கண்டறியப்பட்டது. பையாலால் குடும்பத்தின்மீது நடத்தப்பட்ட தாக்குதல்களைக் குறித்த உண்மையைப் பகிர்ந்துகொள்ள மிகப் பயந்துபோயிருந்த கிராம மக்கள் முதலில் தயங்கினர். பிறகு பெயர்களை வெளியிடக் கூடாது என்னும் நிபந்தனையுடன் பேசத்தொடங்கினர்.

தேசிய மனித உரிமை ஆணையமும் பல்வேறு மனித உரிமை அமைப்புகளும் ஊடகங்களும் கொடுத்த தொடர் நெருக்கடிகளின் காரணமாக நான்கு பிணங்களையும் தோண்டி எடுத்து மீண்டும் பிரேதப் பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டிய கட்டாயம் அரசுக்கு உருவானது. ஆனால் ‘காலம் கடந்துவிட்ட’தால் அந்தச் சோதனையால் புதிதாக எந்தப் பயனும் கிடைக்கவில்லை என அரசு அறிவித்தது.

காவல் துறையினர் தம் ஒப்புதல் வாக்குமூலத்தில் அந்தப் பெண்கள் பாலியல் வல்லுறவுக்குள்ளாயினரா என்பதை உறுதிப்படுத்தும் நோக்கில் பிரேதப் பரிசோதனை நடத்தப்படவில்லை என்பதை ஒப்புக்கொண்டனர். மாவட்டக் காவல் துறைக் கண்காணிப்பாளர் இதனை “ஓர் இரக்கமற்ற வெறிபிடித்த அதிகபட்ச மிருகச் செயல்” எனக் கண்டித்துள்ளார். இதற்குப் பொறுப்பான காவல் துறை அலுவலர்களும் மருத்துவ அதிகாரிகளும் தற்காலிகப் பணிநீக்கம் செய்யப்பட்டனர்.

உண்மை கண்டறியும் குழுக்களின் அறிக்கைகளின்படி இந்தப் படுகொலைகள் வெறும் நிலத்துக்காக நடத்தப்பட்டவையல்ல என்பது தெளிவாகிறது. தம் சாதிய மேலாதிக்கத்தைக் காப்பாற்றிக்கொள்வதற்காக அந்த மேலாதிக்கத்தை ஒப்புக்கொள்ள மறுத்துத் தம் நிலத்துக்காகவும் அடிப்படை உரிமைகளுக்காகவும் சட்டத்தின் வழியில் போராடிய, தலித் குடும்பம் ஒன்றின் மீது நடத்தப்பட்ட வன்கொடுமைத் தாக்குதல் இது என்பதில் யாருக்கும் சந்தேகமிருக்க முடியாது. இந்தக் கோணத்தில் இந்த வழக்கை ஆராய நீதிபதிக்கு எது தடையாக இருந்தது? காவல் துறை தொடக்க நிலையிலிருந்தே ஆதிக்கச் சாதியினருக்குச் சாதகமாக மிகக் கவனமுடன் இந்த வழக்கைக் கையாண்டு வந்துள்ளது என்பது தெளிவு.

பையாலால் ஒரு தலித் என்பதாலேயே அவரது வாழ்வுக்கு ஆதாரமாக இருந்த அவருடைய நிலம் அவருடைய விருப்பத்திற்கு மாறாக உயர் ஜாதியினரால் பறிக்கப்பட்டு அவர்களது டிராக்டர்களும் கால்நடைகளும் செல்வதற்கான பாதையாக மாற்றப்பட்டது. அது குறித்து நியாயம் கேட்கவந்த சித்தார்த்மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்குக் காரணமும் அவர் ஒரு தலித் என்பதுதான்.

அவரால் கொடுக்கப்பட்ட புகார் 1989ஆம் ஆண்டு இயற்றப்பட்ட தாழ்த்தப்பட்ட, பழங்குடியினர்மீதான வன்கொடுமைகள் தடுப்புச் சட்டத்தின்கீழ் (ஷிசி & ஷிஜி றிக்ஷீமீஸ்மீஸீtவீஷீஸீ ஷீயீ கிtக்ஷீஷீநீவீtவீமீs கிநீt 1989) பதிவுசெய்யப்படாமல் இந்தியத் தண்டனைச் சட்டம் பிரிவு 147, 148, 149 & 324 ஆகியவற்றின் கீழ் பதிவுசெய்யப்பட்டுள்ளது.

வரலாற்றுச் சிறப்பு மிக்க தீர்ப்பு எனப் புகழ்ந்து கூறி வரவேற்கப்படும் இத்தீர்ப்பு உண்மையில் ‘ஜாதிய ஒடுக்குமுறைக்கு’ எதிரானதா? இப்படியரு தீர்ப்பு வழங்கப்பட்டதன் மூலம் ‘சமூக நீதி’ நிலைநாட்டப்பட்டுவிட்டது எனக் கொண்டாட முடியுமா? தனிப்பட்ட இரண்டு விவசாயிகளுக்கிடையே ஏற்பட்ட நிலத் தகராறு காரணமாக நடத்தப்பட்ட கொலைகள் எனப் பதிவுசெய்ததற்கும் அந்த நோக்கில் விசாரணைகள் நடத்தப்பட்டதற்கும் அதனடிப்படையில் குற்றவாளிகளுக்கு அதிகபட்சத் தண்டனைகள் வழங்கப்பட்டதற்கும் பின்னால் இயங்குவது உயர் சாதி மனோபாவத்தைத் தவிர வேறென்ன? அதிகபட்சத் தண்டனை என்பது இந்த மனோபாவத்தை மறைக்கும் ஒரு முகமூடியாகவே இந்தத் தீர்ப்பில் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. ஒருவகையில் இது உண்மைக்கு எதிரான ஒரு தீர்ப்பு.

2008 செப்டம்பர் 15இல் நீதிபதி எஸ். எஸ். தாஸ் அவர்களால் குற்றவாளிகள் என்று கண்டறியப்பட்ட எட்டு நபர்களைத் தவிர மற்ற அனைவரும் குற்றம் சரிவர நிரூபிக்கப்படவில்லை எனக் காரணம் காட்டி விடுவிக்கப்பட்டுள்ளனர். தன் தீர்ப்பில் இந்தக் கொலைகளுக்கு முன்விரோதமும் பழிவாங்கும் உணர்வுமே காரணம். வேறு எந்தக் கோணத்திலும் இந்த வழக்கை அணுகுவதற்கு எந்த முகாந்திரமும் இல்லை என்றும் ‘தெளிவு’படுத்தியுள்ளார். தலித்துகளுக்கெதிரான வன்முறையின் இருப்பை ஒப்புக்கொள்வதிலும் தலித்துகளுக்கெதிராக நடைபெற்றுவரும் குற்றங்களைத் தடுப்பதற்கு வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தைப் பயன்படுத்துவதிலும் நமது காவல் துறையும் நீதித் துறையும் கொண்டுள்ள அக்கறையின்மையின் வெளிப்படையான நிரூபணமாக விளங்குவது இத்தீர்ப்பு.

பையாலாலின் புகார் பெறப்பட்டவுடன் கயர்லாஞ்சிக்குச் சென்று விசாரித்த போலீசார் அது போன்ற சம்பவம் ஏதும் இந்த ஊரில் நடக்கவில்லை எனக் கிராமத்து ஆதிக்கச் சாதியினர் சொன்னதை அப்படியே ஏற்றுக்கொண்டு குறைந்தபட்சம் பையாலாலின் குடிசையைக்கூட எட்டிப்பார்க்காமல் திரும்பிச் செல்லுமளவுக்கு ‘அப்பாவி’களாய் இருந்துள்ளனர். மறுநாள் 30.09.2006 காலை 8:00 மணிக்கு பையாலால் எழுத்து மூலம் தமது புகாரைப் பதிவுசெய்த பின்னர், சிவலால் கராடே மஹராஜ் என்பவர் கொடுத்த தகவலின் பேரில் சடலம் கைப்பற்றப்பட்ட பிறகுதான், காவல் துறைக்கு பையாலால் தன் புகாரில் சொன்னதுபோல் ஏதாவது நடந்திருக்குமோ என்னும் சந்தேகம் வருகிறது.

17 வயதுள்ள ஒரு இளம் பெண்ணின் சடலம் நிர்வாணமாகவும் பெண் குறியில் கூரிய மரக்கட்டை அடித்துச் சொருகப்பட்ட நிலையிலும் கைப்பற்றப்பட்டுள்ளபோது அவர் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்டிருக்கலாமோ என்னும் மிக எளிமையான சந்தேகம்கூடக் காவல் துறையினருக்கு எழவில்லை. பிரேதப் பரிசோதனை நடத்திய மருத்துவர்களுக்கும்கூட அப்படி யரு கேள்வி எழவில்லை. விசாரணை செய்த நீதிபதிக்கும் அந்தச் சந்தேகம் எழவில்லை. எல்லோரும் அவ்வளவு அப்பாவிகளாய் இருந்திருக்கிறார்கள். ஆக, திட்டமிட்டுத் திசைதிருப்பப்பட்டுள்ள ஒரு வழக்கு இது என்பதை தலித்துகள் உணர வேண்டும்.

2006 அக்டோபர் முதல் நவம்பர்வரை பல தன்னார்வத் தொண்டு நிறுவனங்களும் மனித உரிமை அமைப்புகளும் கயர்லாஞ்சியில் முகாமிட்டு நேரில் கண்டறிந்து வெளியிட்டுள்ள அறிக்கைகளை நீதிமன்றம் பொருட்படுத்தாததற்குக் காரணம் என்ன?

பிரேதப் பரிசோதனை அறிக்கையில் காணப்படும் தவறான தகவல்களுக்காகவும் வழக்கைச் சரியாகப் பதிவுசெய்யாமல் கடமை தவறிய குற்றத்திற்காகவும் சம்பந்தப்பட்ட மருத்துவர்களும் காவல் துறை அதிகாரிகளும் தற்காலிகப் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். ஆனால் அந்தத் தவறான பிரேதப் பரிசோதனை அறிக்கையும் கடமை தவறிய காவல் துறை அதிகாரிகளால் தவறாகப் பதிவுசெய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கையும்தான் சாட்சியங்களாக ஏற்றுக்கொள்ளப்பட்டு அவற்றினடிப்படையில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

நீதிபதி கண்ணீருடன் இந்தத் தீர்ப்பை வழங்கியுள்ளார். யாருக்காக, எதற்காக வடிக்கப்பட்ட கண்ணீர் அது?

மரண தண்டனைக்கெதிரான குரல்கள் வலுப்பெற்றுவரும் ஒரு தருணத்தில் இவ்வழக்கில் குற்றவாளிகளெனத் தீர்ப்பளிக்கப்பட்ட ஆறு பேருக்கு மரண தண்டனை வழங்கப்பட்டுள்ளது. மனித உரிமைப் போராட்டம் என்பது அடிப்படையில் தலித் விடுதலைக்கான போராட்டம்தான் என்னும் அடிப்படையில் தலித் அமைப்புகள் கயர்லாஞ்சி வழக்கில் குற்றவாளிகளுக்கு வழங்கப்பட்டுள்ள மரண தண்டனையை ரத்துசெய்ய வலியுறுத்த வேண்டும்.

இந்த மரண தண்டனையை உயர் நீதிமன்றம் ரத்துசெய்ய வாய்ப்பிருக்கிறது என்பதை நாம் பொருட்படுத்த வேண்டியதில்லை. ஒவ்வொரு தலித்தும் ‘மனித உரிமையைக் காக்கப் போராடும், ஒரு போராளியே’ என்பதை நிரூபிக்கும் வகையில் வருணாசிரம தர்மத்தாலும் சாதியமைப்பாலும் மன நோயாளிகளாக மாற்றப்பட்ட கயர்லாஞ்சிக் குற்றவாளிகளுக்கு வழங்கப்பட்டுள்ள இந்த மரண தண்டனை ரத்துசெய்யப்பட வேண்டும் என வலியுறுத்துவதை தலித்துகள் மனித உரிமைகளுக்கான போராட்டத்தின் ஒரு பகுதியாகவே கருத வேண்டும்.

நன்றி காலச்சுவடு

Democracy is coming to the USA!

You can put lipstick on pig. It is still a pig!
-உப‌ய‌ம் Barrack Obama
கோஹெனின் இந்த‌ பாட‌லை கேளுங்க‌ள்! ஒபாமாவிற்கும் அமேரிக்க‌ ம‌க்க‌ளுக்கும் இந்த‌ பாட‌ல்!

சினிமா வசனம் வாழ்விலும் இருக்கும் : விஜயகாந்த்!
“சினிமாவில் என்ன வசனம் பேசுகிறேனோ அந்த வசனம் வாழ்விலும் இருக்கும், ஒரே ஒருமுறை எங்களுக்கு சந்தர்ப்பம் கொடுங்கள், நேர்மையான ஆட்சியை கொடுப்பேன்’

-சினிமாவிலும் வாழ்க்கையிலும் வ‌ச‌ன‌ங்க‌ள் பேசித்திரியும் எங்க‌ள் அண்ண‌னுக்கு இந்த‌ பாட‌ல்!

Bonus:
இங்கே பார்க்க‌வும்

Democracy comes to USA! Pigs put lipstick!

You can put lipstick on a pig. It is still a pig!

-Barrack Obama

‌சி‌னிமா‌ வசன‌ம் வா‌ழ்‌விலு‌ம் இரு‌க்கு‌ம் : விஜயகாந்த்

“சினிமாவில் என்ன வசனம் பேசுகிறேனோ அந்த வசனம் வாழ்விலும் இருக்கும், ஒரே ஒருமுறை எங்களுக்கு சந்தர்ப்பம் கொடுங்கள், நேர்மையான ஆட்சியை கொடுப்பேன்”

காந்தம்

காந்தம் என்கிற எனது நாவலை நான் எழுத ஆரம்பிக்கும் முன்னர் (சென்னையில் இருந்த பொழுது) ஒரு சாம்பிளாய் நான் எழுதிய கவிதை நடை கதை. ஒரே ஒரு அத்தியாயம் தான் எழுதினேன். அப்புறம் உரைநடைக்கு மாறிவிட்டேன். இன்று வீடு மாற்றும் பொழுது கண்டெடுத்த என் டைரியில் இதைப் பார்த்தேன்.

திக்கெட்டும்
கும்மிருட்டு
வரிசையாய்
குடிசைகள்.
நித்திரையில்
மக்கள்
சுறுசுறுப்பாய்
சந்திரன்.

வெளிச்சமாய்
விட்டில் பூச்சி.
துணை தெடும்
பல்லி
ரத்தம் கேட்கும்
கொசு.
ரத்தம் கேட்கும்
கொசு.
அள்ளிக் கொடுத்த
மேகம்.
ஓய்ந்து போன வானம்
தெருவெல்லாம்
குட்டை.

சளக்..சளக்..
குட்டை தள்ளாடியது.
ஒடுங்கிய குஞ்சாய்
சிறுமி.
தெருவிளக்கு
விடுமுறை
எடுத்துக்கொண்டதால்
இவள்
தடுமாறி நடந்தால்
பதற்றமாய் தெடினாள்.
‘அப்பா’
நடுங்கியது குரல்.
எங்கும்
பரவியது
பயரேகை.

நாய்கள்
தூக்கம் கலைத்தன.
எழுந்து நின்று
வெறித்தன

வேகமானாள்
சிறுமி.
‘அப்பா’
அழத் துடங்கினாள்.

கால் இடறி
கீழே விழுந்தாள்
ஒரு கால்
மேல்
கிடந்தாள்.

‘டேய்..’
உளறினான்
ஊரறிந்த
குடிமகன்.

சிறுமி
மகிழ்ச்சியானாள்
முகத்தை
உற்று நோக்கினாள்
‘அப்பா’
அசைவில்லை.

குட்டையில்
நீர்
அள்ளினாள்.
முகம் துலைத்தவனின்
முகத்தில்
அடித்தாள்.

பிதற்றினான்
பித்தன்.
கடமை அறியா
கயவன்.

‘அப்பா’
பயமாயிறுக்கிறதப்பா.
அம்மா
புரண்டு அழுகிறாள்
தம்பி பிறக்கப் போகிறானாம்.
நீ வாப்பா’

சிந்தனையில்லாதவன்
செவிமெடுக்கவில்லை.
போதையில்
காதை இழந்தவன்.

பயனில்லாததால்
புறப்பட்ட இடத்திற்கே
புறப்பட்டாள் சிறுமி.

அமைதியாய்
வீடு.
ஆறுதலாய்
பக்கத்துவீட்டு
பாட்டி
அம்மா
தூங்கிக்கொண்டிருந்தாள்.

‘உனக்கு
தம்பி பிறந்திருக்கிறானம்மா’
உள்ளே ஓடினாள்
சிறுமி.

கருப்பாய்
அழகாய்
குழந்தை.

குனிந்து
உச்சி முகர்ந்தாள்.
கண்ணத்தில்
முத்தமிட்டாள்.
அருகில்
அமர்ந்தாள்.

அழ்ந்த
உறக்கத்தில் இருந்தான்
ஆளப்பிறந்தவன்.

ஓலகஞாநியண்ணனுக்கு ஒரு பகிரங்கக் கடிதம்

ரஜினிக்கு நீங்கள் எழுதிய பகிரங்கக் கடிதம் கண்டேன். “உதறுதில்ல” என்கிற உங்களது நக்கலை வெகுவாக ரசித்தேன். வாழ்த்துக்கள்.

இந்த வார அதிர்ச்சி : திமுக கலைஞர் பற்றி ஓ பக்கங்களில் ஏதும் இல்லாதது
என்று நீங்களே உங்கள் ஓ பக்கங்களைப் பற்றி அதிர்ச்சி தெரிவித்துக்கொள்கிறீர்கள். உங்கள் அதிர்ச்சி கிடக்கட்டும் விடுங்கள், அது யாருக்கு வேண்டும்? அப்படி நீங்களே உங்கள் ஓ பக்கங்களில் திமுக வரவில்லை என்று அதிர்ச்சியடைகிறீர்கள் என்றால், திமுகவை பற்றியும் கலைஞரைப் பற்றியும் ஒவ்வொரு ஓ பக்கங்களிலும் எழுதிக்குவித்துக்கொண்டு வருகிறீர்கள் என்று தானே அர்த்தம். உங்களுக்கு திமுகவையும் கலைஞரையும் பிடிக்கவில்லை (அல்லது உங்களுக்குள் ஏதோ ஒரு மனஸ்த்தாபம்) என்கிற ஒரே காரணதுக்குக்காகத்தானே வாரா வாரம் எழுதுகிறீர்கள். உங்களுக்கு பிடிக்காத ஒரே காரணதுக்காக, நீங்கள் வாரா வாரம் எழுதிக்கிழிக்கும் பத்தியை படிக்கும் எங்களுக்கு அதில் விசயம் இருக்கிறதா இல்லையா என்று கூட நினைத்துப்பார்க்காமல், கலைஞரையும் திமுகவையும் அட்டாக் செய்யும் ஒரே நோக்கத்தோடு நீங்கள் எழுதுகிறீர்கள். ஒலகஞாநியண்ணே சாதரண வெகு ஜனப் பத்திரிக்கையின் பத்தி எழுத்தாளரான நீங்களே இவ்வளவு அரசியல் பண்ணும் பொழுது உலகம் முழுவதும் கோடிக்கணக்கில் ரசிகர்கள் வைத்திருக்கும் ரஜினி எவ்வளவு அரசியல் பண்ணுவார்?

ரஜினி அரசியலை சினிமாவுக்கு பயன்படுத்தறார் என்கிறீர்கள், நீங்கள் அரசியலை உங்கள் பத்திக்கு பயன்படுத்துகிறீர்கள். என்ன வித்தியாசம், சொல்லுங்க ஒலகஞாநியண்ணே. ஒரு தளம் கிடைத்துவிட்டது, கையில் பேனாவும் இருக்கிறது, இடஒதுக்கீடு பிரச்சனைக்கப்புறம் நாமளும் பெரிசா ஏதும் எழுதல, என்பதற்காக அப்பாடா ரஜினி மாட்டினாரு, வாய்யா வாய்யா வாய்யான்னு எழுதாதிங்க ஒலகஞாநியண்ணே.

மேலும் அதே பத்தியில்

இந்த வார பூச்செண்டு : ரஜினிக்கு அழுத்தமான கதையுடன் ஒரு படத்தை நீண்ட நாட்களுக்குப் பிறகு அளித்ததற்காக

என்று பத்தி முழுக்க அவர்மீது சேற்றை வாரி இரைத்துவிட்டு, இந்தாப்பா பூச்செண்டு சேறு வாசனை நல்லாருக்காது, பூச்செண்ட முகர்ந்து பாத்துக்கன்னு ஏன் கொடுக்கனும்?

குசேலன், “ஞாநி” அவர்களது தங்கக் கைகளால் பூச்செண்டு வாங்கும் அளவிற்கா நன்றாக இருக்கிறது. தருமி கேட்டது மாதிரி “என் பாடலில் எவ்வளவு பிழைகள் இருக்கின்றனவோ அவ்வளவை நீக்கிவிட்டு மீதம் இருப்பதற்கு பரிசு கொடுங்கள் மன்னா” என்றது போல, படத்திலிருக்கும் ஆபாசத்தையும், அபத்தத்தையும் நீக்கிவிட்டு, மற்றவைக்கு பூச்செண்டு கொடுப்பாராம். பத்தி முழுவதும், குசேலனை தாக்குகிறார், பிறகு பூச்செண்டாம்.

ரஜினியை மானங்கெட பேசிவிட்டு, அதே பத்தியில் பூச்செண்டு தரவேண்டிய அவசியம் என்ன? இப்ப உங்க பேனா உதறுதில்ல?

உங்கள மாதிரி அரசியல் பண்ண அவருக்கு சாமர்த்தியம் பத்தல. இருந்துச்சுன்னா நீங்க சொன்னது போல, கர்நாடகவை எதிர்த்து பேசிட்டு உடனே “எடியூரப்பா இன்று குளித்துவிட்டு வந்ததால் அவருக்கு பூச்செண்டு” என்று ரஜினி பேசியிருக்கக்கூடும்.

மேலும் உங்களைப் போல அவர் இவ்வாறெல்லாம் பேசியிருக்கலாம்:


இந்த வார குட்டு: ஒகேனக்கல் திட்டத்தை கர்நாடகா எதிர்ப்பதால், எடியூரப்பாவுக்கு ஒரு கில்லும், வாட்டாளுக்கு ஒரு கொட்டும்.

இந்த வார பூச்செண்டு: பெங்களூரில் IT கம்பெனிகள் நடத்தி தமிழர்கள் பலருக்கும் வேலை கொடுப்பதால், எடியூரப்பாவுக்கு ரோஸ் பூச்செண்டு, வாட்டாளுக்கு லாவண்டர் பூச்செண்டு. “

இப்படியெல்லாம் உங்களைப் போல ரஜினி பேசிருந்தாருன்னா, அவர் பிழைச்சுக்கிடுவார். அந்த சாமர்த்தியம் பத்தலண்ணே, ஞாநியண்ணே. கொஞ்சம் அவருக்கு சொல்லிக்கொடுங்க.

அரசியலில் நீங்கள் குரல் கொடுத்த பொழுதெல்லாம் அதையொட்டி உங்கள் படம் தயாரிகிக்கொண்டிருப்பது வழக்கம்” என்று பேனா கிடைத்த மெத்தனத்தில் எழுதியிருக்கிறீர்கள்.

எத்தனை முறை ரஜினி தனது படத்தின் ரிலீஸ் தேதிக்கு முன்னர் அரசியல் பேசியிருக்கிறார்? Data கொடுக்கமுடியுமா ஒலகஞாநியண்ணே? சந்திரமுகிக்கு முன்னால் பேசினாரா? “நான் குதிரை” என்று அவர் பேசியது அரசியலா? சிவாஜி வெளியீட்டுக்கு முன்னர், அவர் அரசியல் பேசினாரா? பாட்சா படம் ஜனவரியில் ரிலீஸ் ஆனது, அவர் ஜெயலலிதவை எதிர்த்து எப்பொழுது பேசினார்? அவர் அரசியல் பேசித்தானா அவர் படம் ஓட வேண்டும்? எனக்கு தெரிந்த எத்தனையோ பெண்கள் குடும்பம் சகிதமாக சிவாஜி ரிலீஸ் தேதியன்னைக்கு தியேட்டருக்கு வந்து படம் பார்த்தார்கள். அவர்கள் அரசியலில் துளியும் ஆர்வம் இல்லாதவர்கள்.

முதன் முதலில் பொது பிரச்சனையில் தெளிவாகப் பேசியது ஒகேனக்கல் பிரச்சனையில் தான்
ஓகோ அப்படி! இப்ப யார் எப்பப்ப டெளிவா பேசறாங்கங்கறத தேர்ந்தெடுக்கிற பொறுப்பு உங்களோடதா? சொல்லவேயில்ல! இனி மேலும், இந்த வாரம் டெளிவா பேசினவருக்கு ஒரு பூச்செண்டு. டெளிவா பேசாவதங்களுக்கு கொட்டுன்னு ஒரு பகுதி ஆரம்பிச்சிருங்க சார். செம ஐடியா!

எல்லா கன்னடகாரர்களையும் உதைக்க சொல்லவில்லை” என்று ரஜினி பல்டி அடித்ததாக சொல்லுகிறீர்கள்.
அப்படீன்னா எல்லா கன்னடகாரர்களையும் உதைக்கச்சொன்னாருன்னு சொல்றீங்களா? நீங்களே உக்காந்து யோசிச்சிட்டு சொல்லுங்க, எல்லா கன்னடகாரர்களையும் உதைக்க முடியுமா? ஒலகஞாநின்னு பேரவெச்சுக்கிட்டு இப்படி அசட்டுதனமா பேசினா எப்படி? எல்லா கன்னடகாரர்களையும் உதைக்கறதுக்கு எவ்வளவு நேரம் ஆகும்? கால் வலிக்குமா வலிக்காதா?

“குசேலன் பட வெளியீட்டை கர்நாடகாவில் தடை செய்ய முனைந்ததுதான் உங்கள் பல்டிக்கு காரணம்” என்கிறீர்கள்.
கண்டுபிடிச்சுட்டாருய்யா நம்ப ஒலகஞாநியண்ணே. ஆமா அதுக்குத்தான். இது தான் சின்ன குழந்தைக்கு கூட தெரியுமே! என்ற சொல்லை உங்களை போல ஒலகஞானம் கொண்ட பத்தி எழுத்தாளர் உபயோகிக்கலாமா? நெஞ்சில் கையை வைத்து சொல்லுங்கள், நமக்கு தண்ணீர் வராததற்கு அவர்கள் மட்டும் தானா காரணம்? நீங்கள் தெருக்களில் குழாயடி சண்டைகளை பார்த்ததில்லையா? ஏன் சென்னையில் லாரி தண்ணீர் பிடிக்க சென்றதில்லையா? ஆமா ஆமா திமுக பற்றிய செய்திகளை பூதக்கண்ணாடி வைத்து நாள்தோறும் தேடிக்கொண்டிருந்தால், எப்படி இதற்கெல்லாம் நேரம் இருக்கும்? நம்ப தெருவில, இந்த பக்கம் தெருவில வர்ற அடிகுழாய் தண்ணிய அந்தப் பக்கம் தெருவில இருக்கிற மக்களுக்கு கொடுக்க மாட்டேங்கறாங்க ஒலகஞாநியண்ணே. அப்ப அவங்கள என்ன சொல்லுவீங்க? தமிழ்த்தெரு-வெறியர்கள்? மேலும் ஒரு ஐடியா சார். கப்புன்னு பிடிச்சுக்கோங்க: இந்தவாரம் குழாயடி சண்டை போட்டவர்களுக்கு கொட்டு. குழாயடி சண்டை போடாதவர்களுக்கு பூச்செண்டு.

பத்து பேரை தனியாளாக அடித்துப் போடுவது…எல்லாம் திரையில் தான் சாத்தியம்” என்று சொல்லியிருக்கிறீர்கள்.
நடிகர்கள் அப்படித்தாண்ணே. நீங்க உண்மையிலே ரஜினி திரும்பி மொறச்சு பாத்தா தீக்குச்சி பத்திக்கும்னு நினைச்சீங்களாண்ணே? ஐயோ பாவம். இந்தமாதிரியான குற்றச்சாட்டு, நாங்கள் பள்ளிக்கூடம் படிக்கும் போது, ரஜினிரசிகர்களுக்கும் கமல் ரசிகர்களுக்கும் இடையே நடக்கும் சண்டைக்குத்தான் பயன்படுத்துவோம். ஒலகஞாநியண்ணே இத தன்னோட ஒலகபத்தியில எழுதியிருக்கிறது ஆச்சரியமா இருக்கு.

“அது யாரோ ஒரு ரைட்டர் ஒரு படத்துல எழுதிய வசனம். அதை நான் பேசியிருக்கேன். அதை உண்மைன்னு நீங்க எடுத்துக்கிட்டா நான் என்ன செய்யறது” என்று சொல்லுகிறீர்கள். எவ்வளவு நேர்மையான, சரியான பதில் ! இதைப் பல வருடங்கள் முன்பே நீங்கள் சொல்லியிருந்தால் இப்போது வந்திருக்கும் எந்தப் பிரச்னையும் உங்களுக்கு வந்திராதே.” என்கிறீர்கள்.

ஒலகஞாநியண்ணே, அவர் இப்பொழுது சொல்ல என்ன நேரம் வந்துவிட்டது? சினிமாவிலிருந்து விலக்கிக்கொள்கிறாரா? அடுத்து அதிக பொருட்செலவில் தயாராகப் போகும் ரோபோ லைனில் இருக்கிறது. அவர் இந்த கேள்வியை படத்தில் வைத்திருக்கவே தேவையில்லை. வாசுவை பார்த்து ஒரு கண்ணசைவு செய்தால் போதும். அப்படியிருக்க அவர் இந்த வசனத்தை படத்தில் வைக்கவேண்டிய அவசியம் என்னவென்று கொஞ்சம் யோசிச்சீங்களா? சின்ன பிள்ளை மாதிரி குதிக்கிறீங்க? இவர் அஞ்சு வருசத்துக்கு முன்ன இத சொல்லிருந்தாலும், இன்னும் அஞ்சு வருசத்துக்கு முன்னால சொல்லிருந்தா எல்லாருக்கும் நல்லதுன்னு சொல்லியிருப்பீங்க.

“நான் வந்தா என்ன வராட் என்ன ? நீங்க உங்க வேலையைப் பாத்துகிட்டுப் போக வேண்டியதுதானே” என்கிறீர்கள். மக்கள் அவரவர் வேலையைப் பார்த்துக் கொண்டு போய்க்கொண்டுதான் இருந்தார்கள். நீங்கள்தான் வந்து அரசியல் டயலாக் பேசி உங்கள் பக்கம் கவனத்தைத் திருப்பினீர்கள்.

இது அபத்தமோ அபத்தம். சின்னப்பிள்ளைகள் சண்டையிட்டுக்கொள்வதைப் போல.”நான் பேசாட்டுக்கு பேசாட்டுக்கு தாம்ம்மா இருந்தேன், இவந்தான் என்னய கிள்ளிவெச்சுட்டான்னு” சொல்றமாதிரி. அட்லீஸ்ட் உங்களோட பத்தி ஞானத்தையாவது யூஸ் பன்ணியிருக்கலாமே?!

சுந்தர்ராஜனின் இன்னொரு கேள்விக்கு படத்தில் பதிலே இல்லை. வயசுப் பொண்ணுங்க கிட்ட வந்து `பழகிக்குங்க’ என்று பேசும் கேவலத்தைப் பற்றிக் கேட்கிறார். பதிலே இல்லை.

பழகிக்கங்கன்னு சொல்றதுல அப்படி என்ன கேவலம் இருக்குன்னு எனக்கு புரியலண்ணே. அது ஒரு காமெடிக்குத்தானே வெச்சாங்க? ஓகோ படத்துல வர்றதயெல்லாம் சீரியஸா எடுத்துக்கிற ஆளா நீங்க? இது கேவலம்ன்னா இதவிட கேவலமா வேற எந்த படத்திலயும் இதுவரைக்கும் எதுவுமே வரலீங்களா ஒலகஞாநியண்ணே? குமுதம் “மூன்று பக்கங்களுக்கு மிகாமல் ரஜினியை பற்றி எழுதவும்” அப்படீன்னு சொன்னாங்களா? எதையெதையோ பிடிச்சு எழுதியிருக்கீங்க gap fill பண்ணியிருக்கீங்க?

சூப்பர் ஸ்டர் இமேஜ் ஒகேனக்கல் வெள்ளத்தில் அடித்துப்போய்விட்டது” ஆமாப்பா, சொல்ட்டாரு கேட்டுக்கங்க. இப்ப “ரஜினி தூற்று” வெள்ளத்தில் நம்ப ஒலகஞாநியண்ணே பிச்சுக்கிணு போறாரு. எத்தனை பேர் படிச்சிருப்பாங்க. ரஜினி பத்தி எழுதிருக்காருன்னு. என்னோட பழைய boss கூட கேட்டார்: தலைவரை பத்தி யாரோ ஞாநிங்கறவரு ஏதோ எழுதிருக்காராமில்ல, இன்னைக்கு குமுதம் படிக்கனும்.

சார், ஞாநிசார், ஒலகஞாநிசார், பேமஸ் ஆகிட்டீங்க சார். வாழ்த்துக்கள்.

என்னை வாழவைக்கும் தெய்வங்களாகிய..

Basics first. ஒகேனக்கல் பிரச்சனைக்கும் நடிகர்களுக்கும் என்ன சம்பந்தம்?

*

திரைப்படங்களையும் திரைக்கலைஞர்களையும் நாம் எந்த நிலையில் வைத்திருக்கிறோம் என்பதைப் பற்றிய மறு ஆய்வுக்கான நேரம் வந்துவிட்டதென்றே நான் நினைக்கிறேன். சொல்லிக்கொள்ளலாம், எங்களுக்கு அவர்கள் just heroes என்று. ஆனால் அதே ஹீரோ நமக்கு பிடிக்காத அல்லது நம் அறிவுக்கு எட்டிய அளவிற்கு நியாயமில்லாத செயல்களை செய்யும் பொழுது நமக்கு கோபம் வருகிறது. ஆனால் அதே போல வேறொரு ஹீரோ செயல்படும் பொழுது நமக்கு கோபம் வருவதில்லை. அந்த தனிப்பட்ட ஹீரோவின் மீது மட்டும் நமக்கு ஏன் கோபம் வருகிறது? அவருக்கு நம் மனதில் தனியானதொரு இடம் இருக்கிறது என்று அர்த்தம், இல்லியா?

*

ரஜினிகாந்த் ஒகேனகல் பிரச்சனையில் மன்னிப்பு கேட்டிருக்கிறார், அல்லது காலில் விழுந்திருக்கிறார், அல்லது குரங்கு பல்டி அடித்திருக்கிறார் அல்லது என்னமோ செய்திருக்கிறார், இதில் யாருக்கு என்ன பிரச்சனை? முதலில் கன்னட பிரச்சனையில் அவர் பேசியதே, உங்களை நினைத்து பயந்து தானே! எங்கே பேசாமல் போய்விட்டால் தன்னை ஒதுக்கி வைத்துவிடுவார்களோ (அல்லது தனது சம்பாதிப்பு தடைப்படுமோ!) என்கிற காரணத்தினால் தானே. அமேரிக்காவிலோ அல்லது சிங்கப்பூரிலோ அல்லது ஆஸ்திரேலியாவிலோ அல்லது வேறு எந்த நாட்டில் வாழும் NRIகளான நீங்கள், உங்கள் கைகளை நெஞ்சுக்கு குறுக்கே வைத்து சொல்லுங்கள் பார்ப்போம், எந்த தருணத்திலாவது நீங்கள் தங்கி பிழைப்பு நடத்தும் நாட்டுக்கு ஆதரவாக, உங்கள் தாய்நாட்டுக்கு எதிராக குரல் நீங்கள் கொடுப்பீர்களா? கன்னடத்திற்கு தமிழ்நாட்டிற்கும் இடைய இருக்கக்கூடிய இந்த பிரச்சனை ரஜினிகாந்துக்கு ஒரு தர்மசங்கடம். இங்கேயும் பகைச்சுக்கமுடியாது, அங்கேயும் பகைச்சுக்க முடியாது. அங்கே அவரது இரத்த பந்தங்கள் மற்றும் நண்பர்கள் இருக்கின்றனர். இங்கே அவரது ரசிகர்கள் (மற்றும் சொத்துக்கள், மேலும் இனி சம்பாதிக்கப்போகும் சொத்துக்கள்) இருக்கின்றனர். மேலும் ரஜினிகாந்தின் உண்மையான மனநிலையை அவர் மட்டுமே அறிவார். மற்றவர்கள் சொல்லுகிற படி காசுக்காக சுயமரியாதையை இழப்பவராக இருக்கலாம், அல்லது என்ன செய்வது என்கிற தர்மசங்கடத்தில் அவர் இவ்வாறு செய்திருக்கலாம். யாரறிவார்?

*

ரஜினிகாந்த் எதற்காக குரல் கொடுத்தார்? கலவரத்தை தூண்டுபவர்களை உதைக்கவேண்டும் என்று யாருக்காக சொன்னார்? தர்மசங்கடத்தில் சொன்னாரோ அதர்மசங்கடத்தில் சொன்னாரோ, சொன்னாருல்ல? நமக்காகத்தான சொன்னார்? தமிழர்களுக்காகத்தான் குரல் கொடுத்தார்? பின் விளைவுகளை பற்றி யோசித்தாரா? (சாரி கேட்டுக்கிட்டா போச்சுன்னு யோசிச்சாரோ என்னமோ?!) அதற்கு வாட்டாள் என்ன சொன்னார்? அவர் எப்படி கன்னடத்துக்குள் வருகிறார் என்று பார்ப்போம், அவரது படங்கள் எப்படி இங்கே திரையிடப்படுகிறது என்று பார்ப்போம் என்று சொன்னார் அல்லவா? நமக்காக குரல் கொடுத்த அவருக்கு பிரச்சனை வருகிறது என்கிற பொழுது நாம் என்ன செய்தோம்? ரஜினிகாந்துக்கும் ராமதாஸ¤க்கும் நடந்த பிரச்சனைகளில் நாம் என்ன செய்தோம்? காற்று போன பலூன் என்று திரு.ராமதாஸ் அவரை புகழ்ந்த பொழுது, இன்று அவரை தமிழனத்துரோகி என்று வர்ணிப்பவர்கள் அவருக்காக என்ன செய்தார்கள்? இல்லை என்ன செய்ய முடியும்? படம் பார்க்கிறோம் படம் பார்க்கிறோம் என்று சொன்னால், thats just for our entertainment. அதும் திருட்டு வீசிடியில் பார்த்துவிடுகிறோம். அதை தவிர அவருக்கு என்ன நாம் செய்திருக்கிறோம்? அப்படியும் பாபா படம் தோழ்வியைத்தானே தழுவியது. நாம் அவரை தலையில் தூக்கிவைத்துக்கொண்டு ஆடுகிறோம் என்றால் பாபா படம் பிச்சுக்கிட்டில்லா ஓடிருக்கனும்? பாபா படப்பெட்டியை தூக்கிக்கொண்டு ஓடிய பொழுது “நல்ல சினிமா” (அவர்களுடைய பிரச்சனை) என்று தானே சும்மா பார்த்துக்கொண்டிருக்கிறோம்? நாம் அவரை நமது entertainmentக்காக மட்டும் உபயோகிப்போம், ஆனால் அவர் நமக்கு முதல்வரைப் போல நல்ல (?!) காரியங்கள் செய்ய வேண்டும் என்று நினைத்தால் எப்படி? அவர் யோசிப்பாருல்ல. என்னடா இப்படி தமிழ்நாட்ட நம்பி நம்ம நாட்ட பகைச்சுக்கிட்டோமே, இப்ப என்ன பண்றது. இவிங்க சும்மா சும்மா தலைவர் தலைவர்ன்னு தான் சொல்றாய்ங்க, கண்டிப்பா மத்த எல்லாரையும் (சிவாஜி, டிஆர், பாக்யராஜ், ராமராஜன்) கவுத்தத போல நம்மையும் கைவிட்டுருவாய்ங்கன்னு நினைப்பாருல்ல. நினைக்கறதில்ல என்ன தப்பு? மேலும் அன்றைக்கு, ஒகெனக்கல் பிரச்சனையில் எல்லா நடிகர்களும் அவேசமாக பேசிவிட்டு பிரச்சனையை பெரிதாக முடிக்கிவிடும் தருணத்தில், தமிழக அரசு எதற்காக ஜகா வாங்கியது? எதற்காக தேர்தல் முடியட்டும் என்று காத்திருந்தது? குசேலன் பட ரிலீசுக்கு முன்னால் ரஜினி மன்னிப்பு கேட்டது சுயநலம் என்றால் இது எந்த வகை? நீங்க தேவைப்படும் போது பிரச்சனைய கிளப்புவீங்க. மேடை போடுவீங்க. ஊர்வலம் போவீங்க. வேண்டாம்னு நினைச்சா பிரச்சனைய மூட்டகட்டிட்டு, இன்னொருநாள் பாத்துக்கிடலாம்னுட்டு போவீங்க. நாங்க எங்க businessஅ இழக்கனுமா? அப்படீன்னு கூட அவர் நினைத்திருக்கலாம். யோசித்திருக்கலாம். நியாயம் இருக்குல்ல?

*

குசேலன் படத்தில் இருந்த அந்த அரசியல் வசனத்தை நீக்கிவிட்டதாக படித்தேன். அந்த வசனம்: எப்போ வருவேன் எப்படி வருவேன்னு யாருக்கும் தெரியாது ஆனா வரவேண்டிய நேரத்தில் கரெக்ட்டா வருவேன்னு சொன்னீங்கல்ல, (ரஜினி தன் வாழ்நாளில் தான் பேசிய வசனத்துக்காக ரொம்பவும் வருந்துகிறார் என்றால் அது இந்த வசனமாகத்தான் இருக்கவேண்டும்)அது ஏன் சொன்னீங்க? (என்ன மயித்துக்கு சொன்னன்னு சுந்தர்ராஜன் கேட்ப்பார்) ரஜினி: அது அந்த திரைப்படத்தின் வசனகர்த்தா எழுதிக்கொடுத்த வசனம். நான் பேசினேன். நீங்க தவறா புரிஞ்சுக்கிட்டா நான் என்ன பண்றது. (இது கரெக்டான வசனம் இல்லை. என் ஞாபகத்தில் இருந்தது)

இந்த வசனத்தை ஏன் நீக்கவேண்டும்? ரசிகர்களின் மனது புண்படுகிறதாம். நிறைய கடிதங்கள் வந்தனவாம். அடச்சே! திருந்தவேமாட்டீங்களாப்பா? அவரு தான் சொல்லிட்டாருல்ல. அப்புறம் வசனத்தை நீக்குவதால் மட்டும் என்ன வந்துவிடப்போகிறது? ரசிகர்கள் சங்கடப்படவில்லை. ரஜினியின் ரசிகர்கள் விசித்திரமானவர்கள். எத்தன அடிச்சாலும் தாங்குவாங்க. அவங்க ரொம்ப நல்லவங்க. மற்றவர்கள் ரஜினியை கேவலமாக பேசுகிறார்களே என்கிற காரணத்தால் மட்டுமே, அவர்கள் வசனத்தை நீக்கவேண்டும் என்று விரும்பியிருப்பார்கள்.

*

எனக்கு ஒன்றும் மட்டும் புரியவில்லை. குசேலன் படம் ரிலீஸ் ஆவதற்கு ஓரிரு நாட்களுக்கு முன்னால் தான் ரஜினி கன்னட மக்களிடம் மன்னிப்போ சாரியோ பூரியோ கேட்டிருக்கிறார். இப்படி கேட்பதால், தன்னுடைய படம் ஓடுவதற்கு ஏதும் பிரச்சனை வந்துவிடக்கூடாது என்று தான் இப்படி பல்டி அடிக்கிறார் என்பதை நேத்து பிறந்த குழந்தை கூட சொல்லும். அது ரஜினிக்கு தெரியவில்லையா? நம்மை முழு சுயநலவாதி என்று முத்திரை குத்திவிடுவார்கள் என்பதை அவர் யோசிக்கவில்லையா? அப்படியா, அவ்வளவு மோசமாகவா அவருடைய அலோசகர்கள் இருக்கிறார்கள்?

அதாவது; நாம் நம் குடும்பத்தினருடன் இன்று சண்டை போட்டுக்கொள்ளலாம், நாளை சேர்ந்துவிடலாம். சாரி கேட்கத்தேவையில்லை. அடுத்தவனுடன் சண்டையிட்டால், கண்டிப்பாக சாரி கேட்டுத்தான் ஆக வேண்டும். இல்லையென்றால் மூக்கை உடைப்பான்.

அப்பா அம்மாவுடன் சண்டை போட்டாலும் பரவாயில்லை, அடுத்தவனுடன் சமாதனமாக போய்விடுவது உசிதம். அப்பா அம்மாவை எப்படின்னாலும் சரி கட்டிடலாம். என் செல்ல அப்பா என்றோ என் செல்ல அம்மா என்றோ இல்லை என்னை வாழ வைக்கும் தெய்வங்களாகிய அப்பா அம்மா என்றோ ஏதோ ஒன்றை சொல்லி சரிக்கட்டிடலாம். சரிக்கட்டிடலாம்.

*

அதனால் தான் சொல்கிறேன், திரைப்படங்களையும் திரைக்கலைஞர்களையும் நாம் மறுமதிப்பீடு செய்யவேண்டிய முக்கியமானதொரு தருணத்தில் இருக்கிறோம். இல்லையேல் ரஜினி நாளைக்கு அவருடைய மகளிடமோ மனைவியிடமோ மருமகனிடமோ சாரி கேட்டால் கூட நாம் அவரது போஸ்டர்களை கிழிக்கவேண்டிய நிலைக்கு தள்ளப்படுவோம்.

*

200வது பதிவு : Randy Pausch

இது என்னுடைய 200வது பதிவு. என்னுடைய மொக்கை பதிவுகளை வாசித்து கடுப்பாகி பின்னூட்டம் இட்டவர்களுக்கும், அப்படியே அப்பீட்டாகிய ரொம்ப நல்லவர்களுக்கும், என்ன பண்றது நம்ப ஆளாகிட்டான்னு சும்மானாச்சுக்கும் பாராட்டியவர்களுக்கும், என் பதிவுக்கு தொடுப்பு கொடுத்து இன்னும் கொஞ்சம் எக்ஸ்ட்ரா ஆக்சிஜன் செலுத்திய அன்பர்களுக்கும் நன்றிகள் பல பல!

*

Randy Pausch எழுதிய The Last Lecture என்கிற புத்தகத்தை இப்பொழுது படித்துக்கொண்டிருக்கிறேன். ஒரே மூச்சாக படித்து மூடிவைத்துவிடக்கூடிய புத்தகம் அல்ல அது. Randy Paush-ஐ பற்றி ஒரே நொடியில் நீங்கள் தெரிந்து கொண்டு விடலாம் எனினும், நானும் அவரை பற்றி குறிப்பிட வேண்டும் என்று விரும்புகிறேன்.

கார்னகி மெல்லான் (Carnegie Mellon) யுனிவர்சிட்டியில் கம்ப்யூட்டர் சயின்டிஸ்ட்டாக வேலை செய்து கொண்டிருந்தவர் Randy Pausch. ஒவ்வொரு விரிவுரையாளருக்கும் தனது பணி நிறைவுரும் (retirement) தருணத்தில் கடைசி லெக்சர் என்றொரு சடங்கு உண்டு. அது தான், அவர் அந்த கல்லூரியில் தரும் கடைசி லெக்சர். ஆனால் Randy Pauschக்கோ இந்த கடைசி லெக்சர் தான், அவருடைய வாழ்நாளின் கடைசி லெக்சர்.

Randy Pausch, Terminal Pancreatic Cancerஆல் பாதிக்கப்பட்டவர். August 2007இல் இன்னும் மூன்று மாதம் தான் என்று மருத்துவர்கள் கைவிரித்து விட்டனர். Randy Pausch போராடினார். தான் ஆசையாய் காதலித்து மணந்த மனைவியையும், மூன்று குழந்தைகளையும் விட்டுவிட்டு போகக்கூடாது என்று தன்னால் முயன்றவரை போராடினார். ஆனால் முடிவில் விதி வென்றது.

குழந்தைகள் வளரும் பொழுது அவர்களை நெறிப்படுத்த தான் இருக்கமாட்டோமே என்று வருந்தினார். ஆனால் அவர்களின் வாழ்க்கைக்கு தேவையான அறிவுரைகளை இப்பொழுதே அவர்களுக்கு சொல்லிவிடலாம் என்றால் கூட, அதை முழுவதுமாக கேட்டு புரிந்துகொண்டு அத்தனையையும் உள்வாங்கிக்கொள்ளும் பக்குவம் அவர்களுக்கு இல்லை. அவர்கள் இன்னும் குழந்தைகளே!

தான் கூற நினைக்கும் அறிவுரைகளையும், தனது அனுபவங்களையும் தனது கனவுகளை எப்படி தன்னால் அடையமுடிந்தது என்பதையும் வீடியோவில் பதிந்து வைத்துக்கொள்ளலாம் என்ற அவரது மனைவியின் யோசனையை அவர் நிராகரித்தார். வீடியோவில் தான் மட்டும் பேசிக்கொண்டிருந்தால் குழந்தைகளுக்கு சாதாரண அறிவுரையாக போய்விடும், நானூறு பேர்களின் முன்னால், படித்த லெக்சரர்களின் முன்னால் பேசினால், அவர்களது அமோதிப்பும் சேர்ந்து, குழந்தைகளிடம் சரியாக போய்ச்சேரும் என்று நினைத்து, தனது வாழ்நாள் சாதனைகளை (சாதனைகள் தான், அவரது புத்தகத்தை இல்லையெனில் அவரது லெக்சர் வீடியோவை பாருங்கள்!) ஒன்று திரட்டி ஒரு presentationஇல் தனது கல்லூரியில் The Last Lectureஆக கொடுத்தார். அவரது Topic: Really achieving your childhood dreams!

சாதனை என்பது என்னவென்றால், நினைத்ததை முடிப்பது. கனவுகளை நனவாக்குவது. நம்மில் எத்தனை பேருக்கு அது முடிந்திருக்கிறது? தனது கனவுகளை நிறைவேற்றிவிட்டதாக கூறும் Randy Pauschஇன் The Last Lectureஐ இங்கே பாருங்கள்!

Randy Pausch – July 25 2008இல் உயிர் நீத்தார்.

மொத்தமாக புத்தகத்த படித்துவிட்டு மேலும் சொல்லுகிறேன்.

*

நிஜ ஸ்பைடர்மேன் and other rants !

அலைன் ராபர்ட் (Alain Robert) என்கிற ப்ரெஞ்சு “ஸ்பைடர்மேன்” உலகத்தின் 85 உயரமான கட்டிடங்களை (including Eiffel Tower in Paris) வெறும் கையை உபயோகித்து ஏறி சாதனை (?) புரிந்திருக்கிறார். இவர் நாளை சிங்கப்பூர் நேரப்படி மாலை ஐந்து மணிக்கு, சிங்கப்பூரில் இருக்கும் ஏதோ ஒரு கட்டிடத்தை ஸ்பைடர்மேன் போல ஏறி சாதனை புரியப்போகிறார். எந்த கட்டிடம் என்பது ரகசியம். நாளை பொறுத்திருந்து பாருங்கள்.

46 வயதான இவர் இதற்கு முன்னர், 1997இல் Great World City என்கிற 18 மாடி கட்டிடத்தை ஏறி கடந்திருக்கிறார். பிறகு 2000இல் ரா·பிள்ஸ் ப்ளேஸ்-இல் இருக்கும் 63 தளங்களைக் கொண்ட யூனியன் பேங்க் கட்டிடத்தில் ஏறிக் கொண்டிருக்கும் பொழுது, 23வது மாடியில் வைத்து கைது செய்யப்பட்டார். “ஜன்னல்களை திறக்க முடியும் என்று நான் நினைத்திருக்கவில்லை, போலீஸ் இரண்டு மாடிகளின் ஜன்னல்களை திறந்து விட்டனர். நான் ஏறமுடியாமல் மாட்டிக்கொண்டேன்!” என்று வருத்தத்துடன் சொன்னார் அவர்.

பெட்ரோனாஸ் ட்வின் டவர் (Petronas Twin Tower), Taipei 101 மற்றும் சமீபத்தில் நியூயார்க் டைம்ஸ் பில்டிங் போன்ற கட்டிங்களையும் ஏறியிருக்கிறார்.

*

மேலும் தற்போது சிங்கப்பூர் வந்திருக்கும் மற்றொரு நபர்: Jimmy Wales. யாரென்று தெரிகிறதா? விக்கிபீடியாவின் நிறுவனர். இந்த முறை நான் இந்தியா சென்றிருந்த பொழுது, புதிய சரவணா ஸ்டோர்ஸ் வளாகத்துக்கு வெளியே படியில் சிறிது நேரம் உட்கார்ந்திருந்தபொழுது, என்ஸைக்ளோபீடியாக்களை விற்றுக்கொண்டிருக்கும் (விற்க முயற்சிசெய்யும்) சிலரைப் பார்த்தேன். எனக்கு மிகவும் வியப்பாக இருந்தது. இந்த மாதிரியான என்சைக்ளோப்பீடியாக்களை இன்னும் யாரெனும் வாங்குகிறார்களா என்ன? இதை விற்பதனால் இவர்களுக்கு என்ன கிடைத்துவிடப்போகிறது? ஒரு மாதத்திற்கு எத்தனை விற்பார்கள்? இது என்சைக்ளோப்பீடியா என்று தெரிந்திருப்பவர்களுக்கு கண்டிப்பாக இணையத்தை பற்றியும் தெரிந்திருக்கும். இணையத்தை தெரிந்தவர்களுக்கு விக்கிப்பீடியாவை கண்டிப்பாக தெரிந்திருக்கும். தெரிந்தால் அவர்கள் காசு கொடுத்து என்சைக்ளோப்பீடியாவை வாங்குவார்களா?

விக்கிப்பீடியாவை 263 மில்லியன் மக்கள் பயன்படுத்துகிறார்களாம். இணையத்தை பயன்படுத்தும் மொத்த மக்கள் தொகையில் 31 விழுக்காடு ஆகும். மொத்தம் 253 மொழிகளில் இயங்கிவருகிறது விக்கிபீடியா.
Encyclopedia Britannicaவில் இருக்கும் ஒவ்வொரு கட்டுரையிலும் சராசரியாக மூன்று தவறுகள் இருக்கிறது என்றும், அதே போல விக்கிப்பீடியாவின் ஒவ்வொரு கட்டுரையிலும் சராசரியாக நான்கு தவறுகள் இருக்கிறது என்றும் Scientific journal Nature – கூறுகிறது.

Whats Jimmy Wales philosophy?
“Imagine a world in which every single person on the planet is given free access to the sum of all human knowledge”

*

Georgia Crisis பற்றிய செய்திகளை புரட்டிக்கொண்டிருந்த பொழுது, இந்த வரிகளை படிக்க நேர்ந்தது: அதே சமயத்தில் புஷ் CNN-இல் ரஷ்யாவை கண்டித்தும் “we will stand behind Georgia” என்றும் கொஞ்சம் கூட சிரிக்காமல் பேசிக்கொண்டிருந்தது என்னை வியப்பில் ஆழ்த்தியது? Man, you Rock! எத்தனை பேர் பின்னால் தான் நீங்கள் நிற்பீர்கள்? இந்த சந்தர்ப்பத்தில் நெல்லை கண்ணன் அவர்கள் விஜய் டீவியின் தமிழ் பேச்சு எங்கள் மூச்சு நிகழ்ச்சியில் சொன்னது என் நினைவுக்கு வருகிறது: “உலகத்தை சிவப்பாக்கிக் கொண்டிருக்கும் மாளிகைக்கி வெள்ளை மாளிகை என்று பெயரிட்டிருப்பது விந்தையாக இருக்கிறது!”

“The moral of the story, though, is quite simple. The same western governments that supported the invasion of Iraq under the slogan of “regime change” and recently recognised the unilateral declaration of independence of Kosovo – another group of European ethnic rebels – are now telling Russia to stop doing similar things in Georgia.”

நச்!

*
ஆட்டோகிராப் ஒரு தத்துவ ஆய்வு என்கிற cheran’s autograph and the antinomies of Totality என்கிற கட்டுரையின் தமிழாக்கத்தை உயிர்மையில் படித்தேன். மற்றொரு angle.

அவள் இவனுடைய கற்பிதம்தான் என்பதும், அவளுடைய குணங்கள் தமிழ் சினிமாவின் மரபிற்கு ஏற்றது போல் திரிக்கப்படுகின்றன என்பதும், அவளுடைய சமூகச் சூழலைக் கதாநாயகனுக்கு சாதகமாகத் திரைப்படம் விவரிப்பதில் உறுதியாகிறது. அவளுடைய தரவாட் மாளிகையைப் பார்க்கும்போது, அவள் தாய்வழிச் சமூகத்தை முதன்மைப்படுத்தும் நாயர் குலத்தில் பிறந்தவள். அந்தக் குலத்தில் விதவை என்ற நிலைக்கே இடம் கிடையாது. மிகவும் மோசமான சூழலில்கூட, அதாவது அந்தக் குலத்தைச் சார்ந்த ஆண்கள் அதிகமாகப் போரிலே இறந்த சூழலிலும், கயிறு (1978) என்ற தகழி சிவ சங்கரனின் நாவலில் வருவது போல, நம் பூதிரி குலத்தில் பிறந்த ஆண்களை வீட்டிற்கு அழைத்து அவர்களுடன் நியோகம் செய்து, பிள்ளைகளைப் பெற்ற பிறகு, அவர்களுக்கு வெகுமதி அளித்து விடை பெறச் சொல்லுவதுதான் அந்தச் சமூகத்தின் வழக்கம். மேலும் இந்த முறையில் தந்தைக்கு எந்த முக்கியத்துவமும் கிடையாது. மாறாக தாய் மாமனுக்குத்தான் ஆண் பிள்ளைகளை வழிநடத்தும் அதிகாரம் தரப்படும். சொத்துகள் எப்பொழுதும் தாயிடமிருந்து மகளுக்குச் செல்லுமே தவிர, மகனுக்குச் செல்லாது. இதனால், தம்பூராட்டிக்குத்தான் அதிகாரம் அதிகமே தவிர இந்தத் திரைப்படத்தில் வருவது போல தம்பூரானுக்குக் கிடையாது.

அதாவது, ஆட்டோகிராஃப்பில் லத்திகாவின் தந்தைக்குத்தான் அதிகாரம் இருக்கிறது. அவளுடைய தாயையோ நாம் பார்ப்பதே கிடையாது. இதனால் சுயத்திற்கும் மற்றதிற்கும் இருக்கும் கற்பித ஒற்றுமைகளை வரையறுப்பதற்காக, நிஜமான அடிப்படைக் கலாச்சார வித்தியாசங்கள் வெளியேற்றப்படுகின்றன. மேலும், லத்திகாவின் தந்தையும், கணவனாக அவளுக்கு அமைபவனும், அவர்களுடைய அடியாட்களும் தமிழர்களை ‘பட்டி அல்லது நாய்’ என்று கூறி ஒதுக்கும் மலையாள வெறியர்களாக நிறுத்தப்படுகின்றனர். அதாவது, ‘மலையாளி ஒரு கொலையாளி’ என்று வர்ணித்து மலையாளிகளுக்கு எதிராகத் தமிழ்நாட்டில் அந்த மாதிரியான இனவெறிக் கூறுகள் செயல்படாதது போல், திரைப்படம் செயல்படுகிறது. இந்த மாதிரியான இனவெறிகள் ஒன்றொடு ஒன்று முட்டிக் கொள்ளும்போது, எதிர் இனத்தைச் சார்ந்த ஆண்களின் மீது வெறுப்பு எவ்வளவு கூடுகிறதோ அந்த அளவுக்கு அந்த இனத்தின் பெண்களின் மீது ஈர்ப்பு கூடுவது சகஜம். இதனால், அந்தப் பெண்கள் உள்பட அந்த எதிர்-இனத்தைச் சார்ந்தவர்கள் எல்லாம் சுய-இனத்தின் வேட்கைக்கு ஏற்றார் போல் கற்பிதம் செய்யப்படுவார்கள். இறுதியில், லத்திகா, அவளுடயை தந்தை, மற்றும் அவளுடைய கணவன் என்ற மூவரையுமே, தமிழன் செந்திலின் கற்பிதத்தை நிலைநிறுத்துவதற்காக, இந்தப் படத்தின் கதையாடல் காயடித்துவிடுகிறது.”

http://www.uyirmmai.com/ContentDetails.aspx?cid=26
http://www.uyirmmai.com/ContentDetails.aspx?cid=49

*

*
Btw, Happy Independence Day!

தமிழன் என்று சொல்லடா என்கிற நல்ல நிகழ்ச்சி ஒன்றை விஜய் டீவியில் பார்க்க முடிந்தது. Good Job Vijay!

பார்க்காதவர்கள் கண்டிப்பாக வருத்தப்படத் தேவையில்லை, இனி வரும் வாரங்களில் இந்த நிகழ்ச்சியை மீண்டும் மீண்டும் மறு ஒளிபரப்பாக போட்டு தேய் தேய்ன்னு தேச்சு, தமிழன் என்று சொல்லடான்னு கோபிநாத் சொன்னா, மொத அவன கொல்லுடான்னு சொல்லுறஅளவுக்கு ஆக்கிடும் விஜய் டீவி!

ஜெயமோகன் வெளியிட்டுள்ள (அவரது நண்பர் கிருஷ்ணன் அனுப்பிய) இந்த கடிதத்தை பார்த்தீர்களா?

*

Update:

Alain Robert (The original “SpiderMan” atlast, climbed 45-storey 176m high Suntech city tower one on Saturday (16Aug2008).

இயற்கைக்கு திரும்புதல் : பாலாஜி ஷங்கருடனான உரையாடல்

பாலாஜி ஷங்கர் என்பவர் ஒரு Neoவைப் போல. Neo? Mr.Anderson in The Matrix. The Matrix படத்தின் ஒன் லைன் “Get out the System : Free your mind” என்பது தான். Thats what Mr.Balaji Shankar has done.

***

Henry David Thoreau-வின் எண்ணங்கள் தான் பாலாஜிக்கு மனவெழுச்சியை உண்டாக்கின. மகாத்மாவைப் போலவே அவரும் Thoreauவினால் ஈர்க்கப்பட்டார். இயற்கையோடு வாழ்தலையும், எளிமையாக வாழ்தலையும் அவர்கள் பாலாஜிக்கு கற்றுத்தந்தனர்.

***
If a man does not keep pace with his companions, perhaps it is because he hears a different drummer – H D Thoreau in Walden

“ஒரு மனிதன் தன் சகாக்களோடு அணி சேர நடக்கவில்லை என்றால் அவன் வேறு ஏதோ தாளத்தின் இசையில் நடக்கிறான்”

***

தொர்ரோவின் சிந்தனைகளால் ஈர்க்கப்பட்ட பாலாஜிக்கு நீண்ட காலமாகவே அவரைப் போல இயற்கையோடு வாழவேண்டும், மீண்டும் இயற்கைக்கு திரும்பவேண்டும் என்கிற ஆசை இருந்து கொண்டே இருந்தது. நாம் என்ன செய்துகொண்டிருக்கிறோம்? நாடு எங்கே போய்க்கொண்டிருக்கிறது? எல்லோரும் white collar வேலைகளுக்கு வந்துவிட்டால் விவசாயத்தை யார் கவனிப்பது? சோற்றுக்கு எங்கே போவது? மேலும் நாள் முழுக்க குளிரூட்டப்பட்ட அறைக்குள் கணினியையே வெறித்துப்பார்த்துக்கொண்டிருந்து விட்டு சூரியக்கதிர்கள் கூட நம் மீது பட்டுவிடாமல் மிகக் கவனமாக நாம் வாழும் வாழ்க்கை நம்மை எதை நோக்கி இட்டுச்செல்கிறது? முதுகு தண்டு வலியை நோக்கியா? முதலில் நடுவிரலின் அடிப்பகுதியில் தோன்றி பிறகு மணிகட்டுக்கு முன்னேறி பிறகு தோள்பட்டைக்கு நகரும் நரம்பு வலியை நோக்கியா? எதை நோக்கி நாம் சென்று கொண்டிருக்கிறோம்?

நாம் நமது மூதாதயர்களை விட மகிழ்ச்சியாக இருக்கிறோமா? அவர்களை விட ஆரோக்கியமாக இருக்கிறோமா? அவர்களுக்கிருந்ததை விட ஓய்வான நேரங்கள் நமக்கிருக்கிறதா? இதையெல்லாம் விட அவர்களுக்கு இருந்த இயற்கை வளங்கள் நமக்கிருக்கிறதா? இருக்கும் இயற்கை வளங்களை நாம் அழித்துக்கொண்டல்லவா இருக்கிறோம்? போன்ற எண்ணற்ற கேள்விகள் தொடர்வண்டியாய் பாலாஜியை தாக்கின. கேள்விகளின் கடும் புகை அவரை சூழ்ந்துகொண்டது. எப்படி வெளியேறுவது?

இங்கே தான் Thoreau-வின் புகழ்பெற்ற கேள்வி அவர் முன் தோன்றியது: “How can I earn a livelihood and still have time to live?” இந்த அவசர யுகத்தில் வாழ்வதற்கெங்கே நேரம் இருக்கிறது?

வாழ்க்கையை வாழ்வதற்கு பணம் வேண்டும்; அதே சமயத்தில் அந்த வாழ்க்கையை ரசித்து வாழ நல்ல அமைதியான ஓய்வான மனமும் வேண்டும். என்ன செய்யலாம் என்கிற கேள்விக்கு; தேவைகளை குறைத்துக்கொள் என்பதே அவருக்கு பதிலாக கிடைத்தது.

***

“மண்மீதிலே எந்த மானிடர்க்கும் அளவில்லாத ஆசைகள்
ஒன்றல்லவே ஓராயிரத்தை தாண்டி நிற்கும் தேவைகள்”

என்கிற வரிகளை இன்று யேசுதாஸின் இனிமையான குரலில் கேட்டுக்கொண்டிருந்தேன். உண்மைதான்.

தேவைகள் அதிகமாக அதிகமாக மேலும் நாம் நம்மை வறுத்திக்கொள்கிறோம். பணத்தை நோக்கி ஓடுகிறோம், வாழ்க்கையில் தேங்கி நிற்கிறோம். தேவைகளை குறைத்துக்கொள்வதால், இந்த rat raceக்கு நாமும் அடிமையாக மாட்டோமே! கணக்கிலடங்காத எலிகளுடன் நாமும் நம்மை இணைத்துக்கொண்டு அதிகமாக சத்தமிட்டுக்கொண்டும் முட்டி மோதிக்கொண்டும் எதற்காகவோ ஓடிக்கொண்டிருக்கிறோம்; முடிவில் எவருக்கும் முடிவு என்பதே கிடைப்பதில்லை. எதையுமே நாம் சாதிப்பது இல்லை. முடிவாக போராட்டம் இல்லாத மனிதவாழ்க்கை என்பது இல்லை என்கிற அளவுக்கு நாம் கொண்டுவந்துவிட்டோம். ஒரு ப்ளஸ் டூ மாணவன் 1200 மதிப்பெண்களுக்கு 1150 மதிப்பெண்கள் வாங்கியாக வேண்டிய கட்டாயத்தை நாம் உருவாக்கிவிட்டோம்!

***

பாலாஜி ஷங்கர் பெங்களூரில் இருக்கும் IIS-இல் படித்தவர். ஆஸ்திரேலியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளில் வசித்துவிட்டு, வேலைசெய்து விட்டு பிறகு இந்தியா வந்து சென்னையில் சில காலம் வசித்துவிட்டு, பிறகு அந்த வேலையையும் விட்டுவிட்டு விவசாயத்தை கவனிக்க சென்றுவிட்டார். He got out of the system from which we are unable to get out; and probably will never get out!

ரெண்டு ஹெக்ட்டேர் நிலத்தை மட்டும் வாங்கிக்கொண்டு தனது விவசாயத்தை ஆரம்பித்து, இன்று தனது நிலத்திலிருந்து வரும் வருமானத்தில் ஆனந்தமாக வாழ்க்கை நடத்திக்கொண்டிருக்கிறார். No meetings. No deadlines. No clients. No nothing!

visit him here: http://earth.org.in

***

என் நண்பர் ராஜா நீண்ட காலமாக என்னிடம் இந்த “இயற்கைக்கு திரும்பதல்” என்கிற கோட்பாட்டை பற்றி நிறைய பேசிக்கொண்டிருந்தார். எனக்கு சமயத்தில் எரிச்சலாக இருக்கும். என்னய்யா இயற்கைக்கு திரும்புகிறீர்? சூரியன் மேலே படவில்லையா? உடல் உழைப்பு இல்லையா? காலையில எழுந்து ஜாக்கிங் போ. எக்ஸர்சைஸ் பண்ணு. சூரிய வெளிச்சத்தில நில்லு. இயற்கையோடு இருக்கனுமா? வருசத்துக்கு ரெண்டு முறை கேரளா போ. அவ்வளவு தான். இத விட்டுட்டு “இயற்கைக்கு போறேன்னுட்டு” இருக்கிற வேலையை விட்டுட்டு நான் மாடு மேய்க்கத்தான் போவேன்னா என்ன அர்த்தம்? விவசாயம் பண்ணுவேன்னு சொன்னா என்ன அர்த்தம்?

நம்மில் நிறைய நபர்களின் பெற்றோர்கள் நாம் கிராமத்திலே கிடந்து உழன்று அழிந்து விடக்கூடாது என்கிற காரணத்தினத்தை முன்னிறுத்தியே கிராமங்களை விட்டு வெளியேறினர். நாலு எழுத்து படிச்சா அவன் அவன் பொழப்ப பாத்துப்பான் என்கிற ஒன்றே அவர்களது கனவாக இருந்தது. அவர்களது கனவுகளை தகர்த்தெரிந்து விட்டு மீண்டும் அதே கிராமத்துக்கு செல்லத்தான் வேண்டுமா? என்கிற வாதத்தை நான் அவரின் முன் வைத்தேன்.

அதற்கு என் நண்பர் சொன்னார்: நீங்க இப்படி எல்லாரும் white collar jobsக்கு போனா யார் விவசாயம் செய்யுறது? சோறு எங்கே கிடைக்கும்? நான் சொன்னேன்: விஞ்ஞானம் வளர்ந்து கொண்டே தான் இருக்கிறது. எல்லாவற்றிர்கும் மாற்று இன்றில்லாவிட்டால் நாளை வரத்தான் போகிறது. அதே போல சோற்றுக்கு பஞ்சம் ஏற்படும் காலத்தில் நாம் “necessity is the mother of invention” என்கிற வாதத்தின் அடிப்படையில் சாப்பாட்டுக்கு மாற்றாக ஏதாவது கண்டுபிடித்தே தீருவோம். ஆங்கில science fiction படங்களில் வருவதைப் போல காலை எழுந்தவுடன் just ஒரு capsule மட்டும் போதும், நாள் முழுவதும் பசிக்கவே பசிக்காது! போதும்ல? இதுக்கு எதுக்கு விவசாயத்துக்கு போகணும்? சரிப்பா விவசாயத்துக்கு எல்லாரும் போறம்ன்னு வெச்சுக்குவோம்; இந்த கண்டுபிடிப்புகள் எல்லாம் யார் கண்டுபிடிக்கிறது?

எடுத்துக்காட்டாக நானும் பாலஜி ஷங்கரும் உரையாடிய Google Chatஐயும் அதற்கு உதவிய இன்ன பிற நெட்வொர்க் சமாச்சாரங்களையும் என் லேப்டாப்பையும் யார் கண்டுபிடிப்பது? மனிதகுளம் என்பது கடுமையான சீற்றம் கொண்ட ஒரு ஆற்றைப் போல. வழிநெடுகிலும் கிடக்கும் கற்களையும் மணலையும் உருட்டிக்கொண்டு அது சென்று கொண்டேயிருக்கும். we continue to evolve. நாம் ஆற்றோடு ஓடிக்கொண்டிருக்கிறோம். பாலாஜி ஆற்றின் திசையை திருப்பச் சொல்கிறார். பரிணாம வளர்ச்சி இல்லையேல் நாம் குட்டையாக தேங்கிவிடுவோம். அனைவரையும் விவசாயத்துக்கு திருப்ப வேண்டும்; simplify என்பது தாரக மந்திரமாக இருக்கும் பட்சத்தில் எல்லாரும் காந்தியை போல ஆடை உடுத்தாமலே இருப்போம். “இன்புற்றிருப்பதையன்றி வேறொன்றும் அறியேன் பராபரமே” என்று வாழ்ந்தால் விஞ்ஞானம் எப்படி வளரும்?

இப்படி சும்மா நானும் ராஜாவுமே பேசிட்டிருந்தா எப்படின்னுட்டு பாலாஜி ஷங்கருக்கு ஒரு ஓலை அனுப்பிச்சேன். அவரும் நான் ரெடி நீங்க ரெடியான்னு எனக்கு பதில் ஓலை போட்டார். அப்படி நாள் குறிச்சது தான் இந்த திங்கள் கிழமை இரவு 11:30 சிங்கப்பூர் நேரம். நானும் பாலாஜியும் பேசிய பேச்சுக்கள் தான் இந்த பதிவுக்கு வித்து.

***

பாலாஜி ஷங்கர் சொன்னார்: If you really look at it, நீங்கள் ஆற்றோடு ஓடவில்லை. நீங்கள் ஆற்றை எதிர்த்து நீச்சல் அடிக்கிறீர்கள். நான் தான் ஆற்றோடு ஓடுகிறேன். இந்த உலகத்தில் இருக்கும் அனைத்து ஜீவராசிகளும் இயற்கையுடனே ஒத்துவாழ்கிறது; மனிதன் மட்டுமே அதை மாற்ற முயற்சிக்கிறான். நான் மாற்ற முயற்சிக்கவில்லை. மேலும் அவருடைய நண்பர் சொன்னதாக சொன்னார்: “Now nobody makes easy chair! Life is no more easy!” நினைத்துப் பார்த்தால் எவ்வளவு உண்மை?

***

Lets imagine today I dont have to go to office, I dont have to send my children to school, I dont have to go to the market to buy things; அப்படீன்னு வெச்சுக்கோங்களே then I will become a tedious terror to the economy! என்றார் பாலாஜி. அப்படியென்றால் economy growth என்பதே இருக்காதே! அதற்கு அவர் சொன்னார்: GDP growth என்பதெல்லாம் சும்மா. எத்தனை விழுக்காடு மக்கள் வளர்ச்சியடைந்திருக்கிறார்கள்? இது corporationsஐ மட்டுமே வளர்ச்சியடையவைக்கும். நாம் rural economyஐ வளர்த்தால் ஒழிய பரவலாக வளர்ச்சி என்பது இருக்காது.

இருபதினாயிரம் பேருக்கு வேலை கொடுக்க இந்தியன் பேங்க் பரிட்சை வைக்கிறார்கள் அதை இருபது லட்சம் பேர் எழுதுகிறார்கள். அதுவும் ஒரு மிகப்பெரிய வேலையும் இல்லை. பத்தாயிரம் ரூபாய் தான் சம்பளம். சென்னையில் குடியிருக்க அவன் நாலாயிரம் ரூபாய் வாடகை கொடுக்கவேண்டும். மேலும் கரண்ட் பில் மருத்துவம் குழந்தைகள் படிப்பு போன்ற அத்தியாவிசய தேவைகள் போக அவனுக்கு என்ன மீதம் இருக்கும்?

***

சிங்கப்பூரில் வேலை செய்யும் நிறைய நபர்கள் குழந்தைகளின் படிப்பு செலவுகளை சமாளிக்க முடியாமல் இந்தியாவில் தங்களது பெற்றோர்களின் வீட்டில் தங்கவைத்து படிக்கவைக்கின்றனர் என்கிற பொழுது வேறு என்ன சொல்வது. அப்படி சேமிக்க முடியாத மனிதன் வேறு என்ன செய்வான் rat raceஇல் இன்னும் அதி வேகமாக ஓட ஆரம்பிப்பான். என் தாத்தா என் அப்பாவை பத்து வயசு வரை தோளில சுமந்து கொண்டு பள்ளிக்கூடத்துக்கு கூட்டி செல்வாராம். என் அப்பா என்னை ஏழாவது படிக்கும் வரை பள்ளிக்கூடத்துக்கு அழைத்துச்செல்வார். நான் என்ன செய்வேன்? என் தாத்தாவைப் போல நான் என் குழந்தைகளை தோளில் தூக்கிக் கொண்டு பள்ளிக்கூடத்துக்கு போகமுடியுமா? இவ்வாறெல்லாம் யோசித்தால்; சுத்த லூசாயிருப்பான் போல இருக்குன்னு நினைக்க வாய்ப்பிருக்கு. மேலும் இக்கால குழந்தைகளே அதை விரும்புவார்களா என்பது சந்தேகமே! மற்ற பசங்க கேலி செய்றாங்க என்று சொல்லிவிடுவார்கள்

***

Ecological Foot Print பற்றி தெரியுமா என்று கேட்டார்?
Ecological Foot Prints represent the land and water it takes to provide us with the things we use and to absorb our wastes.

எனக்கு தோராயமாக 7 ஹெக்ட்டேர் வந்தது. உங்களுக்கு எவ்வளவு தேவைப்படும் என்பதை நீங்களே பார்த்துக் கொள்ளுங்கள்.

***

upper class இந்தியர்களுக்கு ரெண்டு ஹெக்டேர் மூணு ஹெட்டேர் நிலம் தேவைப்படுமாம். நான் upper upper சுந்தரர் மாணிக்கவாசகர் இந்தியன் போலருக்கு; 7 ஹெக்டேர் தேவைப்படுது. அமெரிக்கர்களுக்கு பத்து ஹெக்டேர் தேவைப்படுமாம். நான் மேலே குறிப்பிட்ட அந்த வலைத்தளத்தின் கேள்விகளுக்கு பதிலளித்துக்கொண்டிருக்கையில், Mode Of Travel சம்பந்தபட்ட கேள்விகள் நிறைய கேட்கப்பட்டன. இதனால் மற்றும் packed foods and meat சாப்பிடுவதால் நிலம் அதிகமாக தேவைப்படுகிறதாம்! சிங்கப்பூரே கிட்டத்தட்ட Packed Food மாதிரித்தான்!

மேலும் பாலாஜி சொன்னது:
இப்ப இருக்கிற resources இப்ப இருக்கிற மக்கள் தொகைக்கே பத்தாது. அறுபது எழுபது விழுக்காட்டு மக்கள் Low ecological food printஇல் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். They dont travel much; they dont consume resources and they are not part of the central economy!

நாம் நிறைய electronic சாதனங்கள் பயன்படுத்துகிறோம். We employ lot of labour saving machinery, Like washing machine, mixi, grinder, fridge. Inspite of using these electronic devices for our house chores; we enjoy much less leisure than an average villager! Isnt this a paradox? வாழ்க்கையில குறிக்கோள் இல்லாத வெற்றிடம் ஆகிவிடுகிறோம்.

So when you see this its an unsustainable life style; no body is free enough; every body says we need more more!

உருபடியா வாழனும் அப்படீன்னா இந்த planetஅ காப்பாத்தனு அப்படீன்னா நம்ப தேவைகளை நாம குறைச்சுக்கனும் தேவைகள்னு சொல்றதக்காட்டிலும் ஆடம்பரங்களை குறைத்துக்கொள்ளவேணும். இத நான் கண்கூடா பாத்துட்டேன் நான் நிறைய சம்பளம் வாங்கிய போது சந்தோஷமா இல்ல ரொம்ப கம்மியா சம்பாதிக்கும் போது ரொம்ப ஆனந்தமா இருக்கேன். நான் ரொம்ப freeயா இருக்கேன். சம்பாதிக்கிறத இந்த கிராமத்திலையே invest செய்யறேன். Mutual Fundsஇல் invest செய்யவில்லை.
we are employing organic forming; அதனால நிறைய நபர்களை பணிக்கு அமர்த்தியிருக்கிறோம். அடுத்த வருஷம் மாடு வெச்சு உழனும்னு நினைச்சிருக்கோம்.

My plan is to cause minimal damage to the environment and still live a good life style. Like windmill வெச்சு motor ஓட்டறது.
If government wants it can implement it.

ஐம்பதாயிரம் கோடி ரூபாய்ல ஆரம்பக்கல்வி ஐம்பதாயிரம் கோடி ரூபாய்ல கடன் தள்ளுபடின்னு பண்றாங்க, இதுக்கு ஆயிரம் கோடி ரூபாய்ல windmill போட்டாங்கன்னாக்க current தேவையில்ல. இதெல்லாம் பண்ணாம nuclear energyன்னு நாடே கவுந்தாலும் பரவாயில்லன்னு அதத்தான் பண்ணுவேன்னு சொல்றாங்க.

நாற்பதாயிரம் கோடிரூபாய் இந்தியன் கவர்மெண்ட் spends for fertilizer subsidy!

நேத்துக்கூட பேப்பர்ல படிச்சேன் ஐந்தாயிரம் கோடி ரூபாய்ல ஏதோ தொழிற்கூடமோ ஏதோ திறக்கிறார்களாம், இது ஐம்பதாயிரம் வேலைகளை உருவாக்குமாம்?! அப்படீன்னா ஒரு வேலைக்கு பத்து லட்சம் ரூபாய் அரசு செலவழிக்கிறது. manufacturing sectorஇல் சராசரியாக ஒருவருக்கு வருடத்திற்கு ஒரு லட்சம் வரைதான் சம்பளம் கிடைக்கும்.

***

அடுத்த வருடத்தில் இருந்து தனது மகனுக்கு தானே பாடம் சொல்லிக்கொடுக்கப்போகிறாராம். பாடம் என்றால் சாயங்காலம் சும்மா ரெண்டு அரட்டு போட்டுட்டு என்னடா படிச்சிட்டியா? ஒழுங்கா மார்க் வாங்கி என் மானத்த காப்பாத்துவியா? ங்கற மாதிரி இல்ல. பள்ளிகூடத்துக்கே அனுப்பாமல் தானே பாடம் சொல்லிக்கொடுத்து பரிட்சை எழுத வைப்பது. சும்மா try பண்ணப்போறேன் என்றார். NIOS websiteக்கு கொஞ்சம் போய்ப்பாருங்கள்.

***

(அடுத்த பகுதியில் சந்திப்போம்)

நீல பத்மநாபன், ஞானகூத்தன், மதில்கள், முத்து, முராகமி, zen

ஒரு மகிழ்ச்சியான செய்தி: ஜுன் 21ஆம் தேதி எனக்கு பெண் குழந்தை பிறந்திருக்கிறது. ஸ்ரீநிதி என்று பெயரிட்டிருக்கிறோம்.

***

ஞானக்கூத்தன் கவிதைகள் என்கிற விருட்சம் வெளியிட்ட கவிதைத் தொகுப்பை படித்துக்கொண்டிருக்கிறேன் அவ்வப்போது. ஞானகூத்தன் 1968 -லிருந்து 1994 வரை எழுதிய கவிதைகளின் தொகுப்பு இந்த புத்தகம்.

என்னைக் கவர்ந்த கவிதைகள் சில:

அதனால் என்ன

பாடச் சொன்னால் வெட்கப்படுகிறார்கள்
பேசச் சொன்னால் கூச்சப்படுகிறார்கள்
ஆடச் சொன்னால் கோணுகிறார்கள்
நடிக்கச் சொன்னால் தயங்குகிறார்கள்
வரையச் சொன்னால் வராதென்கிறார்கள்
கவிதை வருமா என்றால் உடனே
எண்பது பக்க நோட்டுப் புத்தகம்
இரண்டை எடுத்து நீட்டுகிறார்கள்.

அதான?!

நாய்

காலம் கடந்துண்ணும் எதிர்மனைப் பாப்பான்
எச்சிற் களையைத் தெருவில் எறிந்தான்
ஆள் நடவாத தெருவிள் இரண்டு
நாய்கள் அதற்குத் தாக்கிக் கொண்டன
ஊர் துயில் குலைத்து நாய்கள் குரைக்கவும்
அயல்தெரு நாய்களும் ஆங்காங்கு குரைத்தன
நகர நாய்கள் குரைப்பது கருதிச்
சிற்றூர் நாய்களும் சேர்ந்து குரைத்தன
நஞ்சை புஞ்சை வயல்களைத் தாவிக்
கேட்கும் குரைச்சலின் குரைச்சலைக் கேட்டு
வேற்றூர் நாய்களும் குரைக்கத் தொடங்கின
சங்கிலித் தொடராய்க் குரைத்திடும் நாய்களில்
கடைசி நாயை மறித்துக்
காரணம் கேட்டால் என்னத்தைக் கூறும்?

பிரச்னை

திண்ணை இருட்டில் எவரோ கேட்டார்
தலையை எங்கே வைப்பதாம் என்று
எவனோ ஒருவன் சொன்னான்
களவு போகாமல் கையருகே வை.

இந்த கவிதை தான் முத்தாய்ப்பு:

உயர்திரு பாரதியார்

சிறுவயதில் நான் பார்த்த நடனம் ஒன்றில்
பாடினார் இளம் பெண்கள் இருவரேதோ
பாட்டுக்கு. எவரெழுதித் தந்தா ரந்தப்
பாட்டென்று நான் கேட்டேன் உம்மைச் சொன்னார்.

சிறுவயதில் நான் சென்ற பொதுக் கூட்டத்தில்
சூடுள்ள சிலவரிகள் ஒருவன் சொன்னான்
எவரெழுதித் தந்தவரி என்றேன். வேர்த்த
முகம்துடைத்துக் கொண்டபடி உம்மைச் சொன்னான்

மணியறியாப் பள்ளிகளில் தண்டவாளத்
துண்டொன்று மணியாகத் தொங்கல் போலக்
கவிஞரிலாத் தமிழகத்தில் எவரெல்லாமோ
கவிஞரெனத் தெரிந்தார்கள் உமக்கு முன்பு

அணைக்காத ஒலிபெருக்கி மூலம் கேட்கும்
கலைகின்ற கூட்டத்தின் சப்தம் போலப்
பிறகவிஞர் குரல் மயங்கிக் கேட்குமின்னும்
நீர் மறைந்தீர் உம் பேச்சை முடித்துக்கொண்டு.

மணியில்லாத பொழுது தண்டவாளத்துண்டுகள் மணிகளாக இருக்கின்றன. என்றாலும் ஒரு போது தண்டவாளத் துண்டு மணியாக முடியாது.

***

நீல.பத்மநாபன் அவர்கள் எழுதிய இலையுதிர் காலம் படித்து முடித்தேன். சுவராஸ்யம் இல்லை. சுவராஸ்யத்தைக் கூட விட்டுத்தள்ளுங்கள், நீல பத்மநாபன் அவர்களின் நேர்காணலை தீராநதியில் படித்தேன். 1968ல உறவுகள் என்கிற அழகான (நான் இன்னும் படிக்கவில்லை) நாவலை எழுதியவர். அன்றைக்கே விருது கொடுக்கப்பட்டிருக்க வேண்டியதாம். அப்ப நான் பிறக்கவேயில்ல! அடப்பாவிகளா. அவருக்கு எப்ப விருது கிடைத்திருக்கிறது பாருங்கள்.

வெளிநாட்டில் எல்லாம் விருது பெற்ற பின்னர், அந்த எழுத்தாளரின் புத்தகங்கள் அதிகமாக விற்க ஆரம்பிக்கும். இங்கு எப்படியோ? ஆனால் இப்பாவாவது கொடுத்தார்களே. சந்தோஷம். விருது செய்தியையும் நேர்காணலையும் படித்த பின்னர்தான் நான் நூலகத்தில் தேடிப்பிடித்து இலையுதிர் காலத்தை எடுத்து படித்தேன் என்பதை இங்கு சொல்லியாகவேண்டும். அவர் 2005 எழுதிய புத்தகம் இலையுதிர் காலம். இதை முன்வைத்துத்தான் சாகித்திய அகடெமி விருது அவருக்கு வழங்கப்பட்டிருக்கிறது. செய்யாமல் விட்ட ஒன்றை காலம் போன கடைசியில் செய்து சந்தோஷப்பட்டுக்கொள்கிறதோ அகடெமி? தெரியவில்லை. ஆனால் இலையுதிர்காலம் அகடெமி விருதுக்கு ஏற்றதா என்பது சந்தேகமே.

பேசாமல் சாகித்திய அகடெமி விருதை, வாழ்நாள் சாதனை விருது போல அறிவித்துவிடலாமே? நாங்கள் சாகித்திய அகடெமி விருது வாங்கிய ஒரு புத்தகத்தை தேடிகண்டுபிடித்து, நன்றாக இருக்குமென்று நினைத்து படித்து ஏமாற்றமடைய மாட்டோமே!

அவருடைய “தேரோடும் வீதி” அடுத்து படிக்க எடுத்து வைத்திருக்கிறேன்.

***

வைக்கம் முஹம்மது பஷீர் எழுதிய மதில்கள் என்கிற நாவலை ஏர்போர்ட்டில் வாங்கினேன். இன்னொன்று சொல்ல வேண்டும், சாருநிவேதிதா எழுதிய ராசலீலா நாவலையும் பார்த்தேன். 750 ரூபாயாம். வேலில போற ஓணான 750 ரூபாய் கொடுத்தா வாங்குவார்கள்? பேசாமல் வைத்துவிட்டேன். அதை வாங்கி படித்துவிட்டு, மூளை குழம்பி மேலும் ஒரு புல் தரையில் ரத்தம் போன்ற ஒரு கதையை எழுதினேன் என்றால், என்னுடைய ப்ளாக்குக்கு வரும் விசிட்டர்கள் ரூம் போட்டு என்னை அடித்தாலும் அடிக்க வாய்ப்பிருக்கிறது. ஆனால் நான் எழுதிய சிறுகதைகளிலே எனக்கு மிகவும் பிடித்தது புல் தரையில் ரத்தம் கதை தான். அந்த கதை ஒரு உண்மை சம்பவமும் கூட. The strait times-இல் செய்தியாக அதைப் படித்தேன்.

“Arrested for killing his father in 1958, Mr James was ruled mentally ill by a judge, sent to an asylum for the criminally insane – and then forgotten.

Decades after his doctors pronounced him cured, he remained trapped in a criminal justice nightmare. The hospital could release him only to the prisons authority. The prisons authority could pick him up only under a court order. The courts never called for him because they could not find his file.

When he was finally released, he became a hero in Sri Lanka, and his ordeal a source of embarrassment as it exposed the bloated, inefficient bureaucracy. ”

அதை அப்படியே ஒரு கதையாக எழுதலாம் என்று நினைத்தேன், சாருநிவேதிதாவின் ஜீரோ டிகிரி அப்பொழுதுதான் படித்து முடித்திருந்த நிலையில், என்னால் அப்படித்தான் எழுத முடிந்தது. மேலும் கதையின் நிஜ ஹீரோவான Mr.James ஒரு மனநிலை தவறியவர் என்பதாலும் மனப்பிறள்வு நிலையிலே எழுதலாம் என்று முடிவு செய்தேன்.

***

மதில்கள் நாவல் இல்லை. அது ஒரு குறு நாவல் அல்லது சிறுகதையை போன்ற ஒன்றே. என்னைக் கேட்டால் சற்றே பெரிய சிறுகதை என்று வைத்துக்கொள்ளலாம். “வேணுங்கறது வேணுங்கறபோது கிடைக்காது” என்பது தான் கதையின் கரு.

இதையே அழகாக:
“ஒத்திகை செய்து நடத்தப்படும் நாடகமல்ல வாழ்வு. நம் திட்டங்களையும் தீர்மானங்களையும் சிதறடித்து எதிர்பாரா தருணங்களில் ஓர் விபத்து போல மோதி நம்மை வீழ்த்தி பெப்பே காட்டுவதாகவே இருக்கிறது”
என்கிறார் சந்தியா நடராஜன். (மதில்கள்: பதிப்புரை)

வைக்கம் முஹம்மது பஷிர் எழுதிய கதைகள் எல்லாம் அவரது சொந்த அனுபவங்கள் என்று சொல்லுவார்கள். வைக்கம் முஹம்மது பஷீர் சிறை சென்றிருக்கிறாரா என்பது தெரியாது.

“ஆனால் இப்போது இந்த ஜெயில் வாழ்க்கை முழுக்க முழுக்க இலக்கியத்துக்காக.. நினைத்துப் பார்த்த போது எனக்கே பெருமிதமாக இருந்தது.” (ப:16)

இந்த கதையை சுரா மஞ்சரியில் மொழிபெயர்த்திருந்திருக்கிறார்.

ஒரு இலக்கியவாதி சிறை செல்கிறார். சிறையில் சில தலைவர்களும் உடன் இருக்கிறார்கள். சிறையின் மதில்கள் தான் “மதில்கள்”. சிறையில் அந்த இலக்கியவாதி ஆனந்தமாக பொழுதைக் கழிக்கிறார். கொஞ்ச நாட்கள் கழித்து அனைவரும் விடுதலை செய்யப்படுகிறார்கள். இவரைத் தவிர. தலைவர்கள் எல்லாரும் வெளியே சென்ற பின்னர், இந்த இலக்கியவாதி மட்டும் தனியே பொழுதைக் கழிக்கிறார். அப்பொழுதுதான் பெண்கள் பகுதியில் இருக்கும் ஒரு பெண்ணுடன் பரிச்சயம் ஏற்படுகிறது. இருவரும் பேசிக்கொள்கிறார்கள். பொருட்கள் பறிமாறிக்கொள்கிறார்கள். ஆனால் ஒருவரை ஒருவர் பார்த்தது கிடையாது. இருவருக்கும் அன்பு பெருக்கெடுக்கிறது. காதலாக மலர்கிறது. இருவரும் பார்த்துக்கொள்வதற்கு சந்தர்ப்பம் கிடைக்கிறது. நாளை பார்த்துக்கொள்ளலாம் என்று இருவரும் தங்களது அடையாளங்களை சொல்லிவைத்துக்கொள்கிறார்கள். அந்த இலக்கியவாதி நாளை அவளை பார்த்து விடலாம் என்று காத்துக்கொண்டிருக்கும் பொழுது, விடுதலை செய்யப்படுகிறார்.

“வை ஷ¤ட் ஐ பி ·ப்ரீ… ஹ¥ வான்ட்ஸ் ·ப்ரீடம்?” என்கிறார் அவர்.

அது தான் வாழ்க்கை! அழகான கதை!

***

ஹருக்கி முராக்கமியின் “The wind-up bird chronicle” படித்துக்கொண்டிருக்கிறேன். ரொம்ப காலமாக படித்துக்கொண்டிருக்கிறேன், கொஞ்சம் கொஞ்சமாக. On and Off. 600 பக்க நாவல் இது. Shantaram 900 பக்க நாவல். ஆனால் Shantaramஐ படித்தது போல தொடர்ச்சியாக Mr.Wind-up birdஐ படிக்க முடியாது. இதுவும் மனப்பிறள்வு சம்பந்தப்பட்ட நாவல் தான்.

இந்த மாதிரியான நாவல்களை தொடர்ச்சியாக படிப்பதனால் சில disadvantages இருக்கின்றன.

  1. நீங்கள் washing machineஇல் துணி போட்டிருக்கலாம். கொஞ்ச நேரத்தில் rinse செய்யும் போது அது sound கொடுக்கலாம். நீங்கள் உடனே washing-machine problem என்று நினைத்திவிடுவீர்கள். நினைத்தது மட்டுமல்லாமல், உங்கள் house ownerக்கும் சொல்லிவிடுவீர்கள். ஏன் தமிழ்மணத்துக்கு கூட சொல்லிவிட வாய்ப்பிருக்கிறது. அப்புறம் அந்த weird feeling வடிந்த பிறகு, தற்செயலாக washing machineஐ பார்க்கும் பொழுதுதான் தெரியும்; “You stupid, there is no problem with the machine, really, the problem is with your stupid head! The water outlet pipe of the washing machine was not released!” huh?!
  2. நீங்கள் நேத்து சாப்பிட பர்கரின் cheese TV remote controlஇல் விழுந்திருந்தால், TV remote controlஐ எடுத்துக்கொண்டு போய் தண்ணீரிலே கழுவி எடுப்பீர்கள். ஏதோ சாப்பிட்டு முடித்த தட்டை கழுவி வைப்பது போல.

An excerpt from the book:

Malta Kano put her elbows on the table and brought her palms together before her
face. “Neither,” she said. “There are no sides in this case. They simply do not exist. This
is not the kind of thing that has a top and bottom, a right and left, a front and back, Mr.
Okada.”
“Sounds like Zen,” I said. “Interesting enough in itself as a system of thought, but not
much good for explaining anything.”

So already weird heads, stay out of these books!

***