IPL விசில் போடு – 13: Champions CSK!

படையப்பா படத்துல ரம்யாகிருஷ்ணன் ஒரு டயலாக் ரஜினி சாரை பார்த்து சொல்லுவாங்கவயசானாலும் உங்க ஸ்டைலும் அழகும் உங்கள விட்டு போகவே இல்லன்னு,”  அது ரஜினி சாருக்கு மட்டுமில்லாது சென்னை சுப்பர் கிங்சுக்கும் பொருந்தும். Against all backslashes,  conspiracy, criticism and hatred, CSK has emerged as a champion side! எத்தனை ஏச்சுக்கள், எத்தனை கிண்டல் கேலிகள், அத்தனையும் தாண்டி சாதித்தது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி.

2018 IPL இறுதிப்போட்டியில் சன்ரைசஸ் ஹைதராபாத் அணியை வென்று கோப்பையை தட்டிச் சென்றது சென்னை சூப்ப்ர கிங்ஸ். Way to go CSK!

deobxdquwaexsck

போட்டி என்னவோ வான்கடே அரங்கத்தில் நடந்தாலும் ரசிகர்களிடையே “எங்கே செல்லும் இந்த கோப்பை? MRC நகர் (மாறன்) வீட்டுக்கா? இல்லை 300 மீட்டர் தூரத்தில் போட் கிளப் ரோட்டில் இருக்கும் என். சீனிவாசன் வீட்டுக்கா” என்று ஒரு பெரிய யுத்தமே ட்விட்டெரில் நடந்தது.  சென்னை ரசிகர்கள் என்னவோ கொண்டாடியது “சீனி மாமா” என்ற என்.சீனிவாசனைத் தான்.

நம் ரசிகர்களை பொருத்தவரை, தாய் மாமா என்பது ஒரு relation.  சீனி மாமா என்பது ஒரு emotion.

டாஸ் வென்ற தோனி பவுலிங் தேர்வு செய்தார். மெதுவாகவே தன் கணக்கை ஆரம்பித்த சன்ரைசர்ஸ் அணி நன்றாகவே விளையாடியது. சென்னை அணியின் வழக்கமான கர்ண வள்ளள்கள் சர்துல் தாகூர் மற்றும் டுவைன் ப்ராவோ தயவில் 20வது ஓவரின் முடிவில் 178 ரன்கள் குவித்தது. தாகூர், ப்ராவோ மற்றும் ஜடேஜா ஆகியோர் மொத்தமாக வீசிய 9 ஓவர்களில் மட்டும் சன்ரைசர்ஸ் 101 ரன்கள் குவித்தது. இதில் 5 சிக்ஸர்களும் 9 பவுன்ரிகளும் அடக்கம். மும்பை மைதானதில் சன்ரைசர்ஸ் போல திறமையான பவுலர்களை கொண்ட அணிக்கு இது மிகவும் competitive total என்றே கூறலாம்.

தொடர்ந்து விளையாட வந்த சென்னை அணி ஆமை வேகத்தில் விளையாட நினைத்தாலும் ஸ்கோர் போர்ட் என்னவோ கல் சிலை போல் நகராமல் இருந்து. This innings from Watson will be unforgetable for various reasons. முதல் ரன்னை எடுக்க அவர் 9 பந்துகளை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. சென்ற அரையிருதி சுற்றில் முதல் 5 பந்துகள் எதிர்கொண்டு 6வது பந்தில் ஆட்டமிழந்தது நினைத்து கொஞ்சம் tension ஆகியிருக்கலாம். வாட்சன் ஒரு பக்கம் ரன்கள் எடுக்காதது மறுபக்கம் டூப்ளெசியின் மீது pressure ஏற நான்காவது ஒவரில் சந்தீப் சர்மாவின் பந்தில் ஆட்டமிழந்தார்.

ஆறாவது ஓவரில் மறுபடியும் சந்தீப் சர்மா. இந்த முறை வாட்சனின் தன்னம்பிக்கை கொஞ்சம் அதிகரிக்க ஒரு பவுண்டரி மற்றும் ஒரு சிக்ஸருட்ன பவர் ப்ளே ஓவர்கள் முடிவடைந்தது. இலக்கை எட்ட ஒவ்வொரு ஓவருக்கும் 10 ரன்கள் தேவை என்ற நிலையில் 7 வது ஓவர் முதல் சென்னையின் அதிரடி ஆட்டம் தொடங்கியது. சன்ரைசர்ஸ் அணியின் ரஷித் கானை சென்னை வீரர்கள் கையாண்ட விதம் அற்புதம். ஆக்ரோஷமாகவும் ஆடாமல் அதே சமயம் விக்கெட் எதுவும் கொடுக்காமலும் சாதுர்யமாக விளையாடியனர்.

புவனேஷ்வர் குமார் மற்றும் ரஷீத் கானை தவிர்த்து ஏனைய பவுலர்களை target செய்தது ஒரு master plan! கடந்த ஆட்டங்களில் சிறப்பாக பவுலிங் செய்த சித்தார்த் கவுலின் பந்துகளை வாட்சனும் ரெய்னாவும் சிக்ஸர்களாகவும் பவுன்ரிகளாகவும் விளாசினர். 13வது ஓவர் கிட்டத்தட்ட game changer எனலாம். ஷேன் வாட்சன் சந்திரமுகியாகிய ஓவர். சந்தீப் சர்மா வின்

முதல் பந்து: தப்பித்தது. ரன்கள் ஏதுமில்லை

இரண்டாம் பந்து: எக்ஸ்ரா கவரில் பவுன்டரி

மூன்றாம் பந்து: நினைத்த படி சந்தீப் சர்மா ஷார்ட் பந்தாக வீச, லாங் ஆனில் சிக்ஸர்

நான்காம் பந்து: யார்கர் வீச நினைத்து வேறு என்னமோ வீச, மறுபடியும் சிக்ஸர்

ஐந்தாம் பந்து: இந்த முறை length ball. மறுபடியும் லாங் ஆனில் சிக்ஸர்

ஆறாம் பந்து: டென்ஷனில் வைட்

மறுபடியும் ஆறாம் பந்து: சற்று outside off ஆக வந்த பந்தை off side இல் பவுன்ரி

கிட்டத்தட்ட ஆட்டம் முடிந்தது என்றே நினைக்க தோன்றியது. 9.37 என்ற ரன்ரேட் சந்தீப் சர்மாவின் ஓவருக்குப் பின் 6.85. அதன் பின் ஓவ்வொறு ஓவரிலும் பவுன்ரிகள் எடுக்க 19வது ஓவரில் இலக்கை எட்டியது சென்னை சூப்பர் கிங்ஸ். சென்னை அணி வெல்ல பல காரணங்கள் இருந்தாலும் அதில் சில இதோ:

  1. டாஸில் வெற்றி
  2. லுங்கி மற்றும் தீபர் சஹாரின் துல்லியமான பந்து வீச்சு
  3. சன்ரைசர்ஸ் அணி பவுலர்களை, குறிப்பாக புவனேஷ்வர் குமாரையும் ரஷீத் கானையும் கையாண்ட விதம்
  4. வாட்சனின் அபாரமான ஆட்டம்

ப்ளேஆஃப் சுற்று வரை நம்பர்-1 அணியாக வலம் வந்த சன்ரைசர்ஸ் அணி இறுதிப்போட்டில் தோல்வியடைந்தது பல காரணங்களினால்:

  1. முதலில் களமிறங்கும் ஷிகர் தவான் மற்றும் கேன் வில்லியம்சன் மீதே அதீதமாக நம்பியது
  2. மிடில் ஆர்டரில் யாரும் பொறுப்பேற்காதது. 11 கோடி கொடுத்து வாங்கிய மனீஷ் பாண்டே முதல் போட்டி முதல் சொதப்பினார். கடைசி 2-3 போட்டிகளில் அவரை களமிறக்கவில்லை. இந்த வருடத்தில் அதிகமாக ரன் அடித்த வீரர்கள் பட்டியலில் சன்ரைசர்ஸ் அணி சார்பில் ஷிகர் தவான் மற்றும் கேன் வில்லியம்சன் தவிர வேறுயாருமில்லை.
  3. சுழற்பந்தில் ரஷித் கானைத் தவிர வேறுயாரும் சோபிக்கவில்லை – வேறுயாரும் இல்லையென்றே சொல்லலாம்
  4. டேவிட் வார்னர் இல்லதது

சினிமாவில் ஹீரோ முதலில் ஆதிக்கம் செலுத்துவார், ஹீரொயின்களுடன் டூயட் பாடுவார். படத்தின் இடையில் வில்லன் ஹீரோவை முடக்க, க்ளைமாக்ஸில் ஹீரோ வில்லனை அடித்து துவைத்து வெற்றி காண்பார். சென்னை அணியின் கதையும் இதே போலத்தான். 2010 மற்றும் 2011 வருட சாம்பியன் அணி 2015இல் தற்காலிகமாக தடை வாங்கி மறுபடியும் களமிறங்கிய போது அனைவரும் நம்பிக்கையிழந்து உண்மை.

  • சென்னை அரங்கில் போட்டி நடைபெறாது போனது முதல் அடி. ஏலத்தில் எடுக்கும் வீரர்களை தங்கள் home groundஇன் சூழலுக்கேற்ப்பவே தேர்ந்தெடுப்பர். When a home pitch is shifted, it always affects the team dynamics.
  • எதிர்பார்ப்புடன் ஏலத்தில் எடுத்த நியுசிலாந்து வீரர் மிச்செல் சாண்ட்னெர் மற்றும் கேதார் ஜாதவ் காயம் காரணமாக ஒதுங்கினர்.
  • ஏலத்தின் முடிவில் ரசிகர்களின் அதிருப்தி

அத்தனை சோதனைகளை கடந்து சாதித்தது சாதாரண காரியமில்லை. Hats off CSK for making it happen!

Here is their journey to finals

அடுத்த வருடம் தேர்தல் நடக்கவுள்ள நிலையில் இந்தியாவில் போட்டிகள் நடைபெறுமா என பொருத்திருந்து பார்க்க வேண்டும். அதற்க்குள் அணிகள் தங்கள் சுயபரிசோதனைகளை செய்வார்கள். எது நடந்தாலும் நடக்காவிட்டாலும் சென்னை ரசிகர்கள் அடுத்த வருட போட்டிகள் தொடங்கும் வரை தங்கள் கொண்டாட்டங்களை நிறுத்தப் போவதில்லை.

அதுவரை சென்னை சூப்பர் கிங்ஸுக்கு சூப்பர் விசிலுடன்,

ஹரிஹரன்

முந்திய பகுதிகள்:
IPL விசில் போடு – 12: சிங்கநடை போட்டு சிகரத்தில் ஏறு….
IPL விசில் போடு – 11: சிங்கமொன்று புறப்பட்டதே…
IPL விசில் போடு – 10: And the Juggernaut rolls on…
IPL விசில் போடு – 9: Kings, for a reason
IPL விசில் போடு – 8: Paradise lost… Paradise regained
IPL விசில் போடு – 7: The name is Dhoni
IPL விசில் போடு – 6: ஆந்திர ஆவக்காயும் சுவையானதே!
IPL விசில் போடு – 5: பைசா வசூல்!
IPL விசில் போடு – 4: கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே
IPL விசில் போடு – 3
IPL விசில் போடு -2 : திரும்பி வந்துட்டேன்னு சொல்லு!
IPL – விசில் போடு – 1

ஹரிஹரன்: சொந்த ஊர் சென்னை. படித்தது கோவையில். வேலை சிங்கையில். வேலை நேரம் போக நாடி நரம்பில் ஊறியிருப்பது கிரிக்கெட். நாவல், சிறுகதையிலும் சிறிது நாட்டம். விருப்பி வாசிப்பது Sidney Sheldon மற்றும் இந்திரா சொளந்திரராஜன்.

Leave a comment