IPL விசில் போடு – 13: Champions CSK!

படையப்பா படத்துல ரம்யாகிருஷ்ணன் ஒரு டயலாக் ரஜினி சாரை பார்த்து சொல்லுவாங்கவயசானாலும் உங்க ஸ்டைலும் அழகும் உங்கள விட்டு போகவே இல்லன்னு,”  அது ரஜினி சாருக்கு மட்டுமில்லாது சென்னை சுப்பர் கிங்சுக்கும் பொருந்தும். Against all backslashes,  conspiracy, criticism and hatred, CSK has emerged as a champion side! எத்தனை ஏச்சுக்கள், எத்தனை கிண்டல் கேலிகள், அத்தனையும் தாண்டி சாதித்தது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி.

2018 IPL இறுதிப்போட்டியில் சன்ரைசஸ் ஹைதராபாத் அணியை வென்று கோப்பையை தட்டிச் சென்றது சென்னை சூப்ப்ர கிங்ஸ். Way to go CSK!

deobxdquwaexsck

போட்டி என்னவோ வான்கடே அரங்கத்தில் நடந்தாலும் ரசிகர்களிடையே “எங்கே செல்லும் இந்த கோப்பை? MRC நகர் (மாறன்) வீட்டுக்கா? இல்லை 300 மீட்டர் தூரத்தில் போட் கிளப் ரோட்டில் இருக்கும் என். சீனிவாசன் வீட்டுக்கா” என்று ஒரு பெரிய யுத்தமே ட்விட்டெரில் நடந்தது.  சென்னை ரசிகர்கள் என்னவோ கொண்டாடியது “சீனி மாமா” என்ற என்.சீனிவாசனைத் தான்.

நம் ரசிகர்களை பொருத்தவரை, தாய் மாமா என்பது ஒரு relation.  சீனி மாமா என்பது ஒரு emotion.

டாஸ் வென்ற தோனி பவுலிங் தேர்வு செய்தார். மெதுவாகவே தன் கணக்கை ஆரம்பித்த சன்ரைசர்ஸ் அணி நன்றாகவே விளையாடியது. சென்னை அணியின் வழக்கமான கர்ண வள்ளள்கள் சர்துல் தாகூர் மற்றும் டுவைன் ப்ராவோ தயவில் 20வது ஓவரின் முடிவில் 178 ரன்கள் குவித்தது. தாகூர், ப்ராவோ மற்றும் ஜடேஜா ஆகியோர் மொத்தமாக வீசிய 9 ஓவர்களில் மட்டும் சன்ரைசர்ஸ் 101 ரன்கள் குவித்தது. இதில் 5 சிக்ஸர்களும் 9 பவுன்ரிகளும் அடக்கம். மும்பை மைதானதில் சன்ரைசர்ஸ் போல திறமையான பவுலர்களை கொண்ட அணிக்கு இது மிகவும் competitive total என்றே கூறலாம்.

தொடர்ந்து விளையாட வந்த சென்னை அணி ஆமை வேகத்தில் விளையாட நினைத்தாலும் ஸ்கோர் போர்ட் என்னவோ கல் சிலை போல் நகராமல் இருந்து. This innings from Watson will be unforgetable for various reasons. முதல் ரன்னை எடுக்க அவர் 9 பந்துகளை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. சென்ற அரையிருதி சுற்றில் முதல் 5 பந்துகள் எதிர்கொண்டு 6வது பந்தில் ஆட்டமிழந்தது நினைத்து கொஞ்சம் tension ஆகியிருக்கலாம். வாட்சன் ஒரு பக்கம் ரன்கள் எடுக்காதது மறுபக்கம் டூப்ளெசியின் மீது pressure ஏற நான்காவது ஒவரில் சந்தீப் சர்மாவின் பந்தில் ஆட்டமிழந்தார்.

ஆறாவது ஓவரில் மறுபடியும் சந்தீப் சர்மா. இந்த முறை வாட்சனின் தன்னம்பிக்கை கொஞ்சம் அதிகரிக்க ஒரு பவுண்டரி மற்றும் ஒரு சிக்ஸருட்ன பவர் ப்ளே ஓவர்கள் முடிவடைந்தது. இலக்கை எட்ட ஒவ்வொரு ஓவருக்கும் 10 ரன்கள் தேவை என்ற நிலையில் 7 வது ஓவர் முதல் சென்னையின் அதிரடி ஆட்டம் தொடங்கியது. சன்ரைசர்ஸ் அணியின் ரஷித் கானை சென்னை வீரர்கள் கையாண்ட விதம் அற்புதம். ஆக்ரோஷமாகவும் ஆடாமல் அதே சமயம் விக்கெட் எதுவும் கொடுக்காமலும் சாதுர்யமாக விளையாடியனர்.

புவனேஷ்வர் குமார் மற்றும் ரஷீத் கானை தவிர்த்து ஏனைய பவுலர்களை target செய்தது ஒரு master plan! கடந்த ஆட்டங்களில் சிறப்பாக பவுலிங் செய்த சித்தார்த் கவுலின் பந்துகளை வாட்சனும் ரெய்னாவும் சிக்ஸர்களாகவும் பவுன்ரிகளாகவும் விளாசினர். 13வது ஓவர் கிட்டத்தட்ட game changer எனலாம். ஷேன் வாட்சன் சந்திரமுகியாகிய ஓவர். சந்தீப் சர்மா வின்

முதல் பந்து: தப்பித்தது. ரன்கள் ஏதுமில்லை

இரண்டாம் பந்து: எக்ஸ்ரா கவரில் பவுன்டரி

மூன்றாம் பந்து: நினைத்த படி சந்தீப் சர்மா ஷார்ட் பந்தாக வீச, லாங் ஆனில் சிக்ஸர்

நான்காம் பந்து: யார்கர் வீச நினைத்து வேறு என்னமோ வீச, மறுபடியும் சிக்ஸர்

ஐந்தாம் பந்து: இந்த முறை length ball. மறுபடியும் லாங் ஆனில் சிக்ஸர்

ஆறாம் பந்து: டென்ஷனில் வைட்

மறுபடியும் ஆறாம் பந்து: சற்று outside off ஆக வந்த பந்தை off side இல் பவுன்ரி

கிட்டத்தட்ட ஆட்டம் முடிந்தது என்றே நினைக்க தோன்றியது. 9.37 என்ற ரன்ரேட் சந்தீப் சர்மாவின் ஓவருக்குப் பின் 6.85. அதன் பின் ஓவ்வொறு ஓவரிலும் பவுன்ரிகள் எடுக்க 19வது ஓவரில் இலக்கை எட்டியது சென்னை சூப்பர் கிங்ஸ். சென்னை அணி வெல்ல பல காரணங்கள் இருந்தாலும் அதில் சில இதோ:

  1. டாஸில் வெற்றி
  2. லுங்கி மற்றும் தீபர் சஹாரின் துல்லியமான பந்து வீச்சு
  3. சன்ரைசர்ஸ் அணி பவுலர்களை, குறிப்பாக புவனேஷ்வர் குமாரையும் ரஷீத் கானையும் கையாண்ட விதம்
  4. வாட்சனின் அபாரமான ஆட்டம்

ப்ளேஆஃப் சுற்று வரை நம்பர்-1 அணியாக வலம் வந்த சன்ரைசர்ஸ் அணி இறுதிப்போட்டில் தோல்வியடைந்தது பல காரணங்களினால்:

  1. முதலில் களமிறங்கும் ஷிகர் தவான் மற்றும் கேன் வில்லியம்சன் மீதே அதீதமாக நம்பியது
  2. மிடில் ஆர்டரில் யாரும் பொறுப்பேற்காதது. 11 கோடி கொடுத்து வாங்கிய மனீஷ் பாண்டே முதல் போட்டி முதல் சொதப்பினார். கடைசி 2-3 போட்டிகளில் அவரை களமிறக்கவில்லை. இந்த வருடத்தில் அதிகமாக ரன் அடித்த வீரர்கள் பட்டியலில் சன்ரைசர்ஸ் அணி சார்பில் ஷிகர் தவான் மற்றும் கேன் வில்லியம்சன் தவிர வேறுயாருமில்லை.
  3. சுழற்பந்தில் ரஷித் கானைத் தவிர வேறுயாரும் சோபிக்கவில்லை – வேறுயாரும் இல்லையென்றே சொல்லலாம்
  4. டேவிட் வார்னர் இல்லதது

சினிமாவில் ஹீரோ முதலில் ஆதிக்கம் செலுத்துவார், ஹீரொயின்களுடன் டூயட் பாடுவார். படத்தின் இடையில் வில்லன் ஹீரோவை முடக்க, க்ளைமாக்ஸில் ஹீரோ வில்லனை அடித்து துவைத்து வெற்றி காண்பார். சென்னை அணியின் கதையும் இதே போலத்தான். 2010 மற்றும் 2011 வருட சாம்பியன் அணி 2015இல் தற்காலிகமாக தடை வாங்கி மறுபடியும் களமிறங்கிய போது அனைவரும் நம்பிக்கையிழந்து உண்மை.

  • சென்னை அரங்கில் போட்டி நடைபெறாது போனது முதல் அடி. ஏலத்தில் எடுக்கும் வீரர்களை தங்கள் home groundஇன் சூழலுக்கேற்ப்பவே தேர்ந்தெடுப்பர். When a home pitch is shifted, it always affects the team dynamics.
  • எதிர்பார்ப்புடன் ஏலத்தில் எடுத்த நியுசிலாந்து வீரர் மிச்செல் சாண்ட்னெர் மற்றும் கேதார் ஜாதவ் காயம் காரணமாக ஒதுங்கினர்.
  • ஏலத்தின் முடிவில் ரசிகர்களின் அதிருப்தி

அத்தனை சோதனைகளை கடந்து சாதித்தது சாதாரண காரியமில்லை. Hats off CSK for making it happen!

Here is their journey to finals

அடுத்த வருடம் தேர்தல் நடக்கவுள்ள நிலையில் இந்தியாவில் போட்டிகள் நடைபெறுமா என பொருத்திருந்து பார்க்க வேண்டும். அதற்க்குள் அணிகள் தங்கள் சுயபரிசோதனைகளை செய்வார்கள். எது நடந்தாலும் நடக்காவிட்டாலும் சென்னை ரசிகர்கள் அடுத்த வருட போட்டிகள் தொடங்கும் வரை தங்கள் கொண்டாட்டங்களை நிறுத்தப் போவதில்லை.

அதுவரை சென்னை சூப்பர் கிங்ஸுக்கு சூப்பர் விசிலுடன்,

ஹரிஹரன்

முந்திய பகுதிகள்:
IPL விசில் போடு – 12: சிங்கநடை போட்டு சிகரத்தில் ஏறு….
IPL விசில் போடு – 11: சிங்கமொன்று புறப்பட்டதே…
IPL விசில் போடு – 10: And the Juggernaut rolls on…
IPL விசில் போடு – 9: Kings, for a reason
IPL விசில் போடு – 8: Paradise lost… Paradise regained
IPL விசில் போடு – 7: The name is Dhoni
IPL விசில் போடு – 6: ஆந்திர ஆவக்காயும் சுவையானதே!
IPL விசில் போடு – 5: பைசா வசூல்!
IPL விசில் போடு – 4: கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே
IPL விசில் போடு – 3
IPL விசில் போடு -2 : திரும்பி வந்துட்டேன்னு சொல்லு!
IPL – விசில் போடு – 1

ஹரிஹரன்: சொந்த ஊர் சென்னை. படித்தது கோவையில். வேலை சிங்கையில். வேலை நேரம் போக நாடி நரம்பில் ஊறியிருப்பது கிரிக்கெட். நாவல், சிறுகதையிலும் சிறிது நாட்டம். விருப்பி வாசிப்பது Sidney Sheldon மற்றும் இந்திரா சொளந்திரராஜன்.

IPL விசில் போடு – 12: சிங்கநடை போட்டு சிகரத்தில் ஏறு….

 

Checklist of CSK:

Be one among the top 2 teams : Check – Done ☑️

Qualify for playoffs : Check – Done ☑️

Ensure low scoring target : Check – Done ☑️

Heart Attack for fans : Check – Done ☑️

நன்றாக விளையாடி, பின் தடுமாறி, அதன்பின் மயிரிழயில் தப்பிப்பது எப்படி ஏன்ற புத்தகம் இருந்தால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அதை வெளியிடலாம்.

ரசிகர்களை இருக்கையின் நுனியில் உட்கார வைத்து, நகங்கள் தேய, இதயத்துடிப்பு பன்மடங்காக அதிகரிக்க, “ஐயா, ராசா முடியலப்பா சாமிஎன கடைசியில் புலம்ப வைத்து அதன்பின் ஓரிரெண்டு பந்துகளிளோ ஓரிரெண்டு விக்கட்டுகளிளோ ஒரு அணி வென்றால் அது சென்னை சூப்பர் கிங்ஸ் அணியென அறிவோமாக.

இந்த வருடத்தின்திக் திக்” CSK போட்டிகள் (கடைசி 3 ஓவர்களில் எடுத்த ஓட்டங்கள் அடிப்படையில்):

47 off 2.5 vs MI, Wankhede

41 off 2.5 vs KKR, Chennai

44 off 2.4 vs RCB, Bengaluru

43 off 2.1 vs SRH, Wankhede

Anyways, Well done CSK for making it to yet another finals!

இதுவரை கலந்துகொண்ட ஓவ்வொரு வருடமும் (இடையில் தற்காலிகமாக தடை செய்யப்பட்ட 2 வருடங்கள் தவிர்த்து) ப்ளேஆஃப் சுற்றுக்கு தகுதி என்பது சாதாரண சாதனை அல்ல.  அதையுந்தாண்டி இறுதிச்சுற்றுக்கு தகுதி பெறுவது மிகப்பெரிய விஷயம், especially when you comeback from a suspension. தடை முடிந்து திரும்ப்ம்போது, தனி நபரோ அல்லது அணியோ, சம்மந்தப்பட்ட வீரர்களும் ரசிகர்களும் மனதளவில் மிகவும் சோர்ந்த நிலையில் இருப்பர். இவ்வாறு இருக்கையில்  மறுபடி எழுந்து எதிரியின் வீழ்த்துவது சினிமாவில் மட்டுமில்லாமல் நடைமுறையிலும் சாத்தியம் என்று நிறுபனம் செய்தது சென்னை சூப்பர் கிங்ஸ்.

CSK

No prizes for guessing, டாஸ் வென்ற தோனி பவுலிங் தேர்வு செய்தார். அணியில் பில்லிங்ஸுக்கு பதில் வாட்சன். ஆரம்பமே படு ஜோராக அமைய, முதல் ஓவரில் முதல் பந்தில் ஷிகார் தாவனின் ஸ்டம்புகள் பறந்தன. போட்டியின் momentum சற்றும் குறையக்கூடாது என அடுத்து வந்த ஆட்டக்காரர்கள் counter attack முறையில் ரன்களை குவித்தாலும், ஓவர்கள் கடந்து செல்லச்செல்ல விக்கட்டுகள் விழ ஆரம்பித்தன, thanks to the shuffling in bowling by Dhoni.

வழக்கமாக கடைசி 5 ஓவர்கள் (death overs)  வீச வரும் ப்ராவோவை இந்த முறை 7வது ஓவர் வீச அழைத்தார் தோனி, which can be considered as a very smart and tactical move. 2 முக்கியமான விக்கட்டுகள் எடுத்ததுமின்றி, அந்த கேட்சை சர்வசாதாரனமாக பிடித்தது தான் highlight. தப்பாம தான்யா பேரு வைச்சுருகாங்க Bravo!

17வது ஓவர் வரை அடக்கி வாசித்த சன்ரைசர்ஸ் அணி, 18வது ஓவர் முதல் தன் ருத்ரதாண்டவத்தை தொடங்கியது. 2016 டி20 உலகக்கோப்பை புகழ் கார்லோஸ் ப்ராத்வேட் தன் அதிரடி ஆட்டத்தை ஆரம்பிக்க நினைத்தாரோ என்னவோ, பழம் நழுவி பாலில் விழுந்து அங்கிருந்து நழுவி வாயில் விழுந்த கதையானது. சென்னையின் கொடை வள்ளல் ஷர்துல் தாகூரின் தயவில் 18வது ஓவரில் 17 ரன்களும் 20வது ஓவரில் 20 ரன்களூம் வாரி வழங்கினார். இதில் நான்கு சிக்ஸர்களும் ஒரு பவுன்ரியும் அடக்கம்.

140 என்ற சுலப இலக்கை நோக்கி விளையாடத் தொடங்கிய சென்னை கிட்டத்தட்ட சன்ரைசர்ஸ் அணியைப் போலவே விளையாடியது ஆச்சரியத்திலும் ஆச்சரியம். இரு இன்னிங்ஸையும் ஒப்புனோக்க ஏகப்பட்ட ஒற்றுமைகள்!

சன்ரைசர்ஸ் ஹைதராபாத்

சென்னை சூப்பர் கிங்ஸ்

தாவன் (முதல் பந்து) 0-1

வாட்சன் (ஐந்தாவது பந்து) 0-1

கோஸ்வாமி : 2-43 (3.5 ஓவர்)

ரைய்னா : 2-24 (3.3 ஓவர்)

வில்லியம்சன் : 3-36 (4.2 ஓவர்)

ராயுடு : 3-24 (3.4 ஓவர்)

100 ஓட்டங்கள் – 17.1 ஓவர்களில்

100 ஓட்டங்கள் : 17.2 ஓவர்களில்

18வது ஓவரில் – 17 ஓட்டங்கள்

18வது ஓவரில் – 20 ஓட்டங்கள்

20 ஓவரில் – 20 ஓட்டங்கள்

19வது ஓவரில் – 17 ஓட்டங்கள்

7 விக்கட்டுகள் இழந்து தோல்வியின் நுனியில் சென்னை நின்ற நிலையில்அவ்வளவு தான் bro. ஆட்டம் ஓவர், கிளம்பளாம்என்று சென்னை ரசிகர்கள் நினைத்த போதுதான்நில்லுங்கபா, இனி தான் ஆட்டமேஎன்று டூப்ளெஸி தன் அதிரடியை ஆரம்பித்தார்.  18வது ஓவரில் ஒரு சிக்ஸர் 3 பவுன்ரிகள், 19வது ஓவரில் ஷர்துல் தாகூர் (ஆம் நம் சென்னையின் கர்ண பிரபுவே தான்) 3 பவுன்ரிகள் விளாசினார். தல தோனியின் ஸ்டையிலை பின்பற்றி டூப்பெளிஸியும் 20வது ஓவரின் முதல் பந்தில் சிக்ஸர் அடிக்க சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இன்னொறு முறை IPL போட்டிகளில் இறுதிச் சுற்றுக்கு முன்னேறியது.

இதோ அந்த கடைசி இரண்டுதிக் திக்ஓவர்கள்

யாராவது உங்களை “IPL என்றால் என்ன?” என்று கேட்டால் “A tournament where 7 teams fight each other to meet CSK in finals” என்று பதில் கூறலாம்.

இன்று நடக்கும் eliminator போட்டியில் வெற்றி பெறும் அணியை ஹைதராபாத் கொல்கத்தாவில் அடுத்து சந்திக்கவிருக்கின்றது. இந்த  போட்டிகளை சென்னை கூர்ந்து கவனித்து தன் யுக்திகளை நிர்ணயிக்கும்.

இன்று தெற்கு ஆப்ரிக்கா கிரிக்கெட் வீரர் “Mr. 360 degree” டிவில்லியர்ஸ் தன் ஓய்வை அறிவித்தது கொஞ்சம் அதிர்ச்சியான செய்தியாக இருந்ததுஅடுத்த வருசம் உலகப்கோப்பை போட்டிகள் இருக்கு, விளையாடி கோப்பைய ஜெய்ச்சுட்டு ஓய்வெடுக்கலாமே தல என்று ட்விட்டரில் ரசிகர்கள் உருகினர். Cricket world will certainly miss you sir! Royal salute to the most loved cricketer in the world! சென்று வாருங்கள் டிவில்லியர்ஸ்.

dd5htkgvaaecbvx

சென்னை அணிக்காகவும், டிவில்லியர்ஸுக்காகவும் ஒரு சூப்பர் விசிலுடன்.

முந்திய பகுதிகள்:
IPL விசில் போடு – 11: சிங்கமொன்று புறப்பட்டதே…
IPL விசில் போடு – 10: And the Juggernaut rolls on…
IPL விசில் போடு – 9: Kings, for a reason
IPL விசில் போடு – 8: Paradise lost… Paradise regained
IPL விசில் போடு – 7: The name is Dhoni
IPL விசில் போடு – 6: ஆந்திர ஆவக்காயும் சுவையானதே!
IPL விசில் போடு – 5: பைசா வசூல்!
IPL விசில் போடு – 4: கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே
IPL விசில் போடு – 3
IPL விசில் போடு -2 : திரும்பி வந்துட்டேன்னு சொல்லு!
IPL – விசில் போடு – 1

ஹரிஹரன்: சொந்த ஊர் சென்னை. படித்தது கோவையில். வேலை சிங்கையில். வேலை நேரம் போக நாடி நரம்பில் ஊறியிருப்பது கிரிக்கெட். நாவல், சிறுகதையிலும் சிறிது நாட்டம். விருப்பி வாசிப்பது Sidney Sheldon மற்றும் இந்திரா சொளந்திரராஜன்.

IPL விசில் போடு – 11: சிங்கமொன்று புறப்பட்டதே…

ஒரு வழியாக லீக் சுற்று போட்டிகள் முடிவடைந்து ப்ளேஆஃப் சுற்று போட்டிகள் தொடங்கவுள்ளன. Amidst all the drama, intensity and anxiety the top 4 teams have qualified for the knockoff! கடைசி கட்ட போராட்டங்களுக்கும் எதிர்ப்பார்புகளுக்கும் ரசிகர்களூம் அணிகளும் தயாராகிவிட்டன. இந்த வார போட்டிகள் அனைத்தும் அதிரடி பைசா வசூல். புள்ளிகளை அதிகரிக்கவெண்டும் என சில அணிகள் போராட, தான் போட்டியில் நிலைக்க மற்ற அணிகளின் முடிவுகளை எதிர்நோக்கி சில அணிகளும் காத்திருக்க கடைசி போட்டியின் 16வது ஓவர் வரை ப்ளேஆஃப் சுற்றுக்கு தகுதி பெரும் அணி எதுவாக இருக்கும் என ரசிகர்களை ஈர்க்க வைத்தது இந்த வருட IPL.

வார தொடக்கத்திலேயே சன்ரைசர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸும் ப்ளேஆஃப் தகுதிசுற்றுக்கு முன்னேற, 3வது மற்றும் 4வது இடத்துக்கு கடும் போட்டி. எஞ்சி இருந்த 2 இடங்களுக்கு டெல்லி அணியைத்தவிர மற்ற 5 அணிகளும் கடுமையாக மோதின.   And here is how the tournament unfolded:

மே 19: கோல்கத்தா அணியின் judgement day. ஹதராபாதில் நடந்த சன்ரைசர்ஸ் அணிக்கெதிரான போட்டியில் 5 விக்கட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று ப்ளேஆஃப் சுற்றுக்கு தகுதிபெற்றது. தமிழக வீரர் தினேஷ் கார்த்திக்கை சென்னை நம்பியதோ இல்லையோ, ஆளப்போறான் தமிழன் என்று கொல்கத்தா நம்பியது வீண்போகவில்லை. இத்தனை போட்டிகளில் சிறப்பாக விளையாடிய போதும் இந்திய அணியில் இடம்பெறாதது வெறும் அரசியல்.

நம்ம நாட்ல ஒரு பக்கம் அரசியல்வாதிங்க விளையாடராங்க, இன்னொரு பக்கம் விளையாட்ல அரசியல். இது மாறாத வரைக்கும் இரண்டும் உருப்படாது.

என்ற சாமானியனின் குரலில் நியாயம் இருக்கவே செய்கிறது.

மே 20:  லீக் சுற்றின் கடைசி நாளான நேற்று மும்பை அணிக்கு வாழ்வா சாவா என்ற நிலை. போட்டியை வென்றாக வேண்டிய கட்டாயத்தில் களமிறங்கிய மும்பை அணியின் சவப்பெட்டியில் கடைசி ஆணியை அடித்தது டெல்லி அணி. 175 என்ற கடினமான இலக்குடன் களமிறங்கிய மும்பையின் ஸ்டார் ஆட்டக்காரர்கள் ஒவ்வொருவரும் சொற்ப்ப ரன்களூக்கு ஆட்டமிழந்தனர். 18வது ஓவரை வீச வந்த லியம் ப்ளங்கெட் இந்த நாளை மறக்க நாட்களெடுக்கும். மும்பையின் பென் கட்டிங் 3 சிக்ஸர்கள் 2 பவுன்ரிகள் என விளாசினாலும், கடைசி ஓவரில் ஹர்ஷல் பட்டேல் ஓவரில் அவுட்டானதும் மும்பையின் அத்தனை நம்பிக்கையும் சிதறியது.

பேட்டிங்கில் சூர்யகுமார் யாதவும், எவின் லூயிஸும் தவிர்த்து வேறு எந்த பேட்ஸ்மென்னும் இந்த வருடம் 300 ரன்களை தாண்டவில்லை. Just for comparison, இந்த வருடம் கொல்கத்தாவின் சுனில் நரேன் அடித்த ரன்கள் 327, மும்பையின் அணித்தலைவர் ரோஹித் சர்மா எடுத்தது 286 ரன்கள்.

Big names can only win matches but not the championship

என்ற கசப்பான உண்மையை உணர்ந்திருப்பார்கள்.

மும்பை இந்தியன்ஸ் வெளியேறியதை தொடர்ந்து ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் ப்ளேஆஃப் வாய்ப்பு கிட்டத்தட்ட உறுதியானது. ரன்ரேட் விகிதத்தில் மிகவும் பிந்தங்கியிருந்த பஞ்சாப் அணிக்கும் சென்னை சூப்பர் கிங்ஸுகும் அதே நாளில் நடந்த கடைசி போட்டியில் சென்னை அணி வெற்றி பெற்றது. 160 என்ற சுலப இலக்கை நோக்கி விளையாடிய சென்னை அணியின் துவக்க ஆட்டக்காரர்கள் வெளியேறியதும் தல தோனி ஹர்பஜனையும் அவரை தொடர்ந்து தீபக் சகாரையும் அனுப்பியது utter chaos. அஷ்வின் முதற்கொண்டு அத்தனை பவுலர்களும் தலையை சொறிய தோனியின் யூகம் என்னவென்று தெரியாமல் குழம்பியது தான் highlight.

சென்ற வருடம் வரை டி20 போட்டிகளில் impact bowler ஆக வலம் வந்த அஷ்வினின் ஓவரில் தீபக் சகார் 3 சிக்ஸர்கள் அடித்தது அவரின் நம்பிக்கையை கொஞ்சம் ஆட்டங்கான வைத்திருக்கும். இந்த வருடம் ஆரஞ்சு தொப்பியை வென்ற பஞ்சாப் அணியின் ஆன்ரு டையின் 19வது ஓவரில் ரெய்னா 2 சிக்ஸர்களூம் 2 பவுன்ரிகளும் எடுத்தது speldid treat for eyes.

உங்க இலக்கை எட்ட தோனியோ ப்ராவாவோ ஜடேஜாவோ தேவையில்லை, எங்க ஹர்பஜனும் சகாரும் போதும் என்று அவர்களை அனுப்பி அவர்களூக்கும் ஒரு live practise கொடுத்தது அஷ்வினின் ego வை சீண்டிப் பார்த்திருக்கும்.

தீபக் சகாரின் ஆட்டத்தை பார்த்ததும், “நீ அடிச்சது பத்தாதுன்னு இன்னும் போக வர சின்ன பயலெல்லம் கூப்பிட்டு அடிச்சு பழகிக்க வேற சொல்லற. பழக இது என்ன உடம்பா இல்ல பள்ளிக்கூடமா? ஒன்னு கிடக்க ஒன்னு ஆகியிருந்தா இந்த டீமை யாரு காப்பாத்தறது, இவங்க family-ய யாரு மைண்டைன் பன்னறது. இரக்கமில்லையா உனக்குஎன்று நம்ம வடிவோலுவின் வண்டு முருகன் டயலாகை அணியின் முதலாளி ப்ரீத்தி ஜிந்தா சொல்வதாக உங்களுக்கு நினைவில் வந்தால் அதற்கு நாம் பொறுப்பாக முடியாது.

5 விக்கட் வித்தியாசத்தில் சென்னை அணி வெற்றி பெற, ப்ளேஆஃப் சுற்றுக்கு முன்னேறிய அணிகள் உறுதியானது:

ddqquxlu8aas1ab

Kudos to the CSK think tanks for believing in talents that no one believed.

மும்பை அணி வெளியேறியது மிக்க மகிழ்ச்சி என ப்ரீத்தி ஜிந்தா (விளையாட்டாக?) அரங்கத்தில் சொன்னது நேற்றைய ஹைலைட்.

எது எப்படியோ ஜாஸ் பட்லரும் பென் ஸ்டோக்ஸும் இல்லத நிலையில் ராஜஸ்தான் அணி ப்ளேஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றது அதிர்ஷ்டமா? விடா முயற்ச்சியா? கடவுளின் அருளா? என நெட்டிசன்கள் திண்டுக்கல் லியோனின் தலைமயில் ஒரு சிறப்பு பட்டிமன்றமே நடத்திக்கொண்டிருக்க, அதையெல்லாம் பற்றி கவலைப்படாமல் அந்த வீரர்கள் கொண்டாடும் பதிவை அணி ட்விட்டரில் பதிய, மற்ற அணிகள், குறிப்பாக மும்பை அணி, காண்டாகி கொண்டிருப்பார்கள்.

இந்த வாரம் நடந்த மற்ற சுவாரஸ்யமான நிகழ்ச்சிகள் சில:

சன்ரைசர்ஸ் அணிக்கெதிரான போட்டியில் டிவில்லியர்ஸின் அபாரமான கேட்ச் நம் நினைவிலிருந்து மறைய நிறைய வருடங்களாகும். Against gravity, against all improbability, this catch is out of the world!

மும்பையின் ஹர்திக் பாண்டியாவும் பஞ்சாபின் கே.எல். ராகுலும் தங்கள் சட்டையை மாற்றிக்கொண்டது அதிரடி தூள்! பொதுவாக கிரிக்கெட் போட்டிகளில் இவ்வாறு வீரர்கள் தங்கள் சட்டையை மாற்றி உடுத்திக்கொள்வது அரிது, கால்பந்து போட்டிகளில் இவ்வாறு நடப்பது சகஜம். போட்டியைத் தாண்டி பிரியாத நட்பே ப்ரெண்ட்ஷிப்பா என்று உணர்த்தியது simply superb!

 

அதே போட்டியில் ரசிகர்களுக்கு தான் வென்ற போட்டி நாயகன் (man of the match) விருதை கொடுத்தார் கே.எல். ராகுல்.

When life throws a Rahul, make it KL and not Gandhi!

எப்படியோ அத்தனை சோதனைகளையும் கடந்து முதல் நான்கு அணிகளுக்கிடையே நடக்கும் ப்ளேஆஃப் சுற்றுப் போட்டிகள் நாளை தொடங்கவுள்ளன.

ddtrpinvmaaka-a

சென்னையின் ஆதிக்கம் தொடருமா? தல தோனி இன்னும் ஒருமுறை கோப்பையை வெல்வாரா? இன்னும் சில தினங்களில் இந்த கேள்விகளுக்கான பதில்கள் தெரியவரும். அதுவரை சென்னை சூப்பர் கிங்ஸுக்காக ஒரு பெரிய விசிலுடன்,

ஹரிஹரன்

முந்திய பகுதிகள்:
IPL விசில் போடு – 10: And the Juggernaut rolls on…
IPL விசில் போடு – 9: Kings, for a reason
IPL விசில் போடு – 8: Paradise lost… Paradise regained
IPL விசில் போடு – 7: The name is Dhoni
IPL விசில் போடு – 6: ஆந்திர ஆவக்காயும் சுவையானதே!
IPL விசில் போடு – 5: பைசா வசூல்!
IPL விசில் போடு – 4: கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே
IPL விசில் போடு – 3
IPL விசில் போடு -2 : திரும்பி வந்துட்டேன்னு சொல்லு!
IPL – விசில் போடு – 1

ஹரிஹரன்: சொந்த ஊர் சென்னை. படித்தது கோவையில். வேலை சிங்கையில். வேலை நேரம் போக நாடி நரம்பில் ஊறியிருப்பது கிரிக்கெட். நாவல், சிறுகதையிலும் சிறிது நாட்டம். விருப்பி வாசிப்பது Sidney Sheldon மற்றும் இந்திரா சொளந்திரராஜன்.

IPL விசில் போடு – 10: And the Juggernaut rolls on…

நேற்று பூனாவில் நடைபெற்ற சன்ரைசர்ஸ்க்கெதிரான போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றிபெற்றது.

Following the recent trend, வெற்றி தோல்வி என மாறி மாறி கண்ணாமூச்சி காட்ட, சென்னை அணி 11ஆம் தேதி ஜெய்பூரில் நடந்த போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியிடம் தோல்வியடைந்தது. டாஸில் வென்ற தொனி ஆச்சரியமாக பேட்டிங் தெர்வுசெய்தார். அணியின் management அறிவுரை என்றார். வேண்டா வெறுப்பாக ஒப்புக்கொண்டது முகத்தில் அப்பட்டமாகத் தெரிந்தது. பிட்சில் ஏகப்பட்ட விரிசல்கள் இருப்பது ஒரு காரணமாக இருக்கலாம். பின்னர் பவுலிங் செய்ய வரும்போது சுழல்பந்து வீரர்களுக்கு சாதகமாக இருக்கும் என்ற ஒரு காரணமாகவும் இருக்கலாம்.

Par score 160 என்று இருக்கையில் சென்னை அணி 176 ரன்கள் எடுத்தது. இதில் ராஜஸ்தான் அணி தானமாக கொடுத்த 10 வைட் ரன்கள் அடக்கம். தொடர்ந்து பேட்டிங் செய்த வந்த ராஜஸ்தான் அணியின் ஜாஸ் பட்லர் முதல் மூன்று பந்தில் 3 பவுன்ரிகள், அடுத்து  ஓவரிலும் 2 பவுன்ரிகள் 1 சிக்ஸர் என அதிரடி துவக்கம் தந்தார். பவர் ப்ளேவின் முடிவில் 52 ரன்கள் குவிக்க ஆட்டம் சூடுபிடித்தது. நடுவில் கொஞ்சம் விக்கட்டுகள் விழ கடைசி 3 ஓவரில் 38 ரன்கள் தேவையிருக்க ப்ராவாவோனின் ஓவரில் தோனி ஒரு கடினமான கேட்சை தவறவிட்டார். கடைசி 2 ஓவரில் 28 ரன்கள் தேவையிருந்தது.

டி20 போட்டிகளில் கடைசி 5 ஓவர்களை death overs என்பார்கள். இந்த ஓவர்களில் ஆட்டத்தின் போக்கே மாற வாய்ப்புண்டு. 19வது ஓவரை வீச வந்த டேவிட் வில்லி எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் இந்த போட்டியை மறக்க முயலுவார். கர்னாடகா ரஞ்சி வீரர் கிருஷ்ணப்பா கௌதம் 2 சிக்ஸர்கள் விளாச, ராஜஸ்தான் ராயல்ஸ் அணி அந்த ஓவரில் மொத்தம் 16 ரன்கள் குவித்தது. கடைசி ஓவரில் 12 ரன்கள் தேவை என்ற நிலையில் ப்ராவோவின் ஓவரில் ஜாஸ் பட்லர் ஒரு இமாலய சிக்ஸருடன் 2 ரன்களாக மூன்று முறை எடுக்க ராயல்ஸ் அணி வெற்றி இலக்கை எட்டியது.

You can’t win just because you are talented, you need to execute well.

சென்னை அணி இதை நன்றாக உணர்ந்திருக்கும். வழக்கமாக உணர்ச்சிவசப்படாத Captain Cool தோனி அன்று பேட்டியில் சென்னை அணி பவுலர்களை வருத்தெடுத்ததை பார்த்த பலரின் புருவங்கள் உயர்ந்திருக்கும்.

Will Dhoni’s reaction fire up the CSK bowlers என்ற கேள்வியுடன் ஆரம்பித்த சன்ரைசர்ஸ் அணிக்கெதிரான இன்றைய போட்டி மற்றொறு masterclass.  Not just a contest between table toppers, but a contest between the best bowling unit and the best batting unit என்பதால் சுவாரசியத்திர்க்கு பஞ்சமில்லை.  டாஸ் வென்ற தோனி வழக்கம் போல் பவுலிங் தேர்வு செய்தார். காயம் காரணமாக ஒதுங்கியிருந்த தீபக் சகார் உள்ளே வர பவுலிங் கொஞ்சம் வலுவடைந்தது.

ஆரம்பமே அமர்க்களமாக அமைய நான்காவது ஓவரில் தீபக் சகாரின் பந்தில் அலெக்ஸ் ஹால்ஸ் அவுட். இரண்டாவது விக்கட்டுக்கு தாவனும் சன்ரைசர்ஸ் அணியின் கேப்டன் வில்லியம்சன்னும் சேர்ந்து 123 ரன்கள் குவித்தனர். நியுசிலாந்து வீரர் கேன் வில்லியம்சன் இன்னொரு Mr. Cool. மிக துல்லியமான திட்டமிடல், தன் அணி வீரர்களின் திறமையை முழுவதும் பயன்படுத்திக்கொள்ளும் ஆற்றல், அலட்டிக்கொள்ளாத attitude என்று கேப்டன் பதவிக்கான முழுத்தகுதியும் உள்ளவர்.

நம் எம்.ஜி.யாரைப் போல் ஓடி ஓடி உழைக்கனும் என்று பாடியவாரே விளையாடுவார் என்று நினைக்கத் தோன்றும்.

ஸ்டைர்க் ரேட் 130 முதல் அதிகபட்சமாக 135 இருக்கும். ஆனால் பவுண்ரிகளும் சிக்ஸர்களூம் அதிகம் இருக்காது. பல சந்தர்ப்பங்களில் டேவிட் வார்னரை விட மிக சிறப்பாக அணியை வழிநடத்துகிறார். இன்னிங்ஸ் முடிவில் சன்ரைசர்ஸ் அணி 179 ரன்கள் குவித்திருந்தது.

பின்னர் விளையாட வந்த சென்னை அணியின் துவக்க ஆட்டக்காரர்கள் ராயுடுவும் வாட்சனும் மிகச் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தினர். ஆந்திராவுக்கே  கோங்குராவா என்று அம்பத்திபாகுபலிராயுடு வந்த ஓவ்வொறு பந்தையும் திருப்பதி லட்டாக மாற்றியது தான் highlight. ஒரு பக்கம் வாட்சன் விளாச மறுபக்கம் சன்ரைசர்ஸ் அணியின் ஒவ்வொறு ஸ்டார் பவுலர்களையும் பதம் பார்த்தார். 7 பவுண்ரிகளும் 7 சிக்ஸர்களும் பறக்க வெறும் 62 பந்துகளில் டி20 போட்டிகளில் தனது முதல் சதத்தை அடித்தார்.

சென்னை அணியைப் பொருத்தவரை மும்பை இந்தியனஸ் அணியிடமிருந்துகளவாடியவீரர்கள் அனைவரும் மிகச் சிறந்த வீர்களாக உருமாரியது கொஞ்சம் அதிசயம். ப்ராவோ, டுவைன் ஸ்மித், ராயுடு, ஹர்பஜன் சிங் என அனைவரும் சென்னை சூப்பர் கிங்ஸை பொருத்தவரை low capital with high returns என்ற முதலீடு வகையைச் சேர்ந்தவர்கள். யாரும் சோடை போனதில்லை.

எந்த ஒரு நிறுவனம் தன் ஊழியர்கள் மீது உண்மையான நம்பிக்கை வைத்து ஊக்கமும் அளிக்கின்றதோ அந்த அளவுக்கு அந்த ஊழியர்கள் தங்கள் திறனை வெளிக்கொணர்வார்கள்.

இதற்கு சென்னை அணியும் ராயுடு, வாட்சன் போன்ற வீரர்கள் சிறந்த உதாரணம். தோனியும் தன் பங்கிற்க்கு ஒரு பவுண்ரியும் சிக்ஸரும் தெரிக்க விட, சென்னை அணி 8 விக்கட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

ddfsmuoxkaepamy

சன்ரைசர்ஸ் அணியைப் பொருத்த வரை புவனேஷ்வர் குமார், சந்தீப் சர்மா, ரஷீத் கான், சித்தார்த் கவுல் என IPL போட்டிகளின் ஆகச் சிறந்த பவுலர்கள் இருந்தாலும் இந்த வருடத்தில் அவர்களுக்கெதிறாக மூன்று அணிகளின் வீரர்கள் (க்ரிஸ் கெய்ல், ரிஷப் பந்த், அம்பத்தி ராயுடு) சதமடித்திருப்பது விசித்திரம்.

கிட்டத்தட்ட ப்ளேஆஃப் சுற்றுக்கு தேர்வான நிலையில், இதே நாளில் நடந்த மற்றொறு போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மும்பை இந்தியன்ஸ் அணியை வென்றதன் மூலம் சென்னை அணி தனது ப்ளேஆஃப் தேர்வை உறுதி செய்ததுசூரியன் கிழக்கில் உதிக்காமல் கூட போகலாம் ஆனால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ப்ளேஆஃப் சுற்றுக்கு தகுதி பெறாமல் போகாது என்று ரசிகர்கள் ட்வீட்டியது நியாயமானதே.

For yet another clinical performance, சென்னை அணிக்கும் ராயுடுவுக்கும் ஒரு சூப்பர் விசிலுடன்,

ஹரிஹரன்

முந்திய பகுதிகள்:
IPL விசில் போடு – 9: Kings, for a reason
IPL விசில் போடு – 8: Paradise lost… Paradise regained
IPL விசில் போடு – 7: The name is Dhoni
IPL விசில் போடு – 6: ஆந்திர ஆவக்காயும் சுவையானதே!
IPL விசில் போடு – 5: பைசா வசூல்!
IPL விசில் போடு – 4: கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே
IPL விசில் போடு – 3
IPL விசில் போடு -2 : திரும்பி வந்துட்டேன்னு சொல்லு!
IPL – விசில் போடு – 1

ஹரிஹரன்: சொந்த ஊர் சென்னை. படித்தது கோவையில். வேலை சிங்கையில். வேலை நேரம் போக நாடி நரம்பில் ஊறியிருப்பது கிரிக்கெட். நாவல், சிறுகதையிலும் சிறிது நாட்டம். விருப்பி வாசிப்பது Sidney Sheldon மற்றும் இந்திரா சொளந்திரராஜன்.

IPL விசில் போடு – 9: Kings, for a reason

நேற்று பூனாவில் நடைபெற்ற ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூருக்கெதிரான போட்டியில் 6 விக்கெட் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றிபெற்றது.

முன்பு 3ஆம் தேதியில் கோல்கத்தாவுக்கெதிரான போட்டியில் 6 விக்கட் வித்தியாசத்தில் கோல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வென்றது. Yet another sublime perfornance from the Kolkata boys! கிட்டத்தட்ட ஏனோ தானோ என்று விளையாடியது சென்னை. 20 ஓவர்களில் 177 ரன்களை மட்டுமே சென்னை அணியால் எடுக்க முடிந்தது. 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில், சென்னை அணியின் புது கர்ணப்பிரபு ஆசிப் தயவில், 18வது ஓவரில் கொல்கத்தா அணி வெற்றிவாகை சூடியது.

8 வருடங்களாயினும் mystery spinner ஆகவே வலம் வரும் சுனில் நரேன், நிடஹாஸ் கோப்பைக்கு பின் மிகுந்த எதிர்பார்ப்புடன் விளையாடும் தினேஷ் கார்திக், அணியின் ஆணிவேராக ஆன்ரே ரசில், 19 வயதுக்கு உட்பட்ட உலகப்கோப்பை கதாநாயகர்கள் சிவம் மவி மற்றும் ஷுப்மன் கில் என அந்த அணியில் ஹீரோக்களுக்கு பஞ்சமில்லை. ஓவ்வொரு போட்டிகளிலும் determination தெரிகிறது. Not just on the papers, களத்திலும் ஒரு balanced அணியாக விளையாடுகிறார்கள்.

இந்த IPL போட்டிகள் கிரிகெட்டையும் மட்டுமல்ல சிலசமயம் வாழ்க்கை பாடத்தையும் சேர்த்தே சொல்லித்த்தருகிறது.

கோல்கத்தா அணியின் புதுவரவு ரிங்கு சிங். உத்திரப்பிரதேச ரஞ்சிக் கோப்பை பேட்ஸ்மேன். அப்பா வீட்டுக்கு வீடு எரிவாயு சிலிண்டர் எடுத்துச் செல்லும் சாதாரண ஊழியர். திருமண வயதில் மகள். வருமானம் பெரிதாக இல்லாவிட்டாலும் மகனின் ஆர்வத்தையும் திறமையும் அறிந்து தான் கஷ்டபட்டாலும் பரவாயில்லை மகனின் வாழ்க்கை சிறக்க வேண்டும் என்று நினைக்கும் typical middle class அப்பா. இம்மாதிரியானவர்களை பார்க்கும் போது நல்லா விளையாடுயா என்று எதிரணி ரசிகர்கள் கூட ஆதரிப்பார்கள். கஷ்டப்பட்டு அடிமட்டத்திலிருந்து மேலெழும்பி வந்தவர்களின் டிசைன் அப்படி.

நேற்றைய சென்னை சூப்பர் கிங்ஸுக்கும் ராயல் சாலஞ்சர்ஸ் அணிக்கும் இடையே நடந்த போட்டி தனிரகம். சென்னை ரசிகர்கள் BP மாத்திரையுடன் போட்டிகளை காணவந்தது சசிக்காமல், பொருத்தது போதும் மனோகரா பொங்கி எழு என்று தோனி வசனம் சொன்னாறோ என்னவோ, சென்னையின் சர் ஜடேஜாவும் அணியின் புது தமிழ் புலவர் ஹர்பஜனும் பெங்களூர் பேட்ஸ்மென்களை பந்தாடினர்.

சென்னை அணியில் டூப்ளெசி, கரண் சர்மா, ஆசிப் ஆகியோருக்கு பதில் டேவிட் வில்லி, பழைய கர்ண பிரபு சர்துல் தாகூர் மற்றும் துருவ் ஷோரே. டாஸ் வென்ற தோனி பவுலிங் தேர்வு செய்தார். கிட்டத்தட்ட எல்லா அணிகளும், போட்டி எங்கு நடந்தாலும் சரி, டாஸ் வென்றவுடன் பவுலிங் தேர்வு செய்வது வழக்கமாகிவிட்டது.

டாஸ் ஒன்றே போட்டியின் முடிவுகளை நிர்ணயுக்குமாயின் அந்த போட்டியில் யார் விளையாடினால் என்ன என்ற கேள்வியே பலர் மனதில் இப்போது.

ராயல் சாலஞ்சர்ஸ் அணியில் டிகாக்குக்கு பதிலாக டிவில்லியர்ஸ். புது தெம்புடன் கலக்குவார் என்று எதிர்பார்புடன் காத்திருந்த ரசிகர்களூக்கு ஏமாற்றமே. மெக்கல்லம் சொற்ப்ப ரன்களுக்கு ஆட்டம் இழக்க, கோலி ஜடேஜாவின் முதல் பந்தில் கிளீன் போல்ட். உண்மையிலேயே நாம் தான் விக்கெட் எடுத்தோமா என்று அதிர்ச்சியில் இந்த விக்கெட்டை கொண்டாடுவதா வேண்டாமா என்று திருதிருவென விழித்த ஜடேஜாவின் நிலைமை பரிதாபமாக இருந்தது.

வெளிய வா, கவனிக்கறேன் என்பது போல் கோலி முறைக்க, நான் இல்லீங்க அண்ணா என்று ஜடேஜா பார்வையால் கெஞ்ச, தொலைக்காட்சி வர்ணணையாளர்கள் முதல் கடைக்கோடி ரசிகர்கள் வரை டிவிட்டரிலும் முகநூலிலும் ஜடேஜாவை வைத்து ஒரு நையாண்டி தர்பாரே நடத்தினர்.

பார்தீவ் பட்டேல் மற்றும் டிம் சவுத்தி தவிர்த்து அனைவரும் ஒரு இலக்க ரன்களுக்கு ஆட்டமிழந்தனர். இந்திய காப்டனின் அணி இப்படி IPL போட்டிகளில் கைப்பிள்ளை போல் இருப்பது ஆச்சரித்திலும் ஆச்சரியம். Stronger in papers but a punch bag in field doesn’t suit you RCB! வெறும் மூன்று பேட்ஸ்மென்களை வைத்து போட்டிகளில் வெற்றி பெறுவது எப்படி தல என்றுசில பெங்களூர் ரசிகர்கள் சமூகவளைதளங்களில் புலம்புவது நியாமாகவே தோன்ருகிறது. Poor playing XI selection, not being able to manage the given resources, not being able to guide the team to victory என்று கேப்டன் கோலியின் மேல் ஏகப்பட்ட புகார்கள். இதையெல்லாம் தாண்டி கோலிக்குள் இருக்கும் பேட்ஸ்மெனும் அவதிக்குள்ளாவது தான் பரிதாபம்.

அடுத்து வந்த டிவில்லியர்ஸும் ஹர்பஜன் பந்தில் ஆட்டமிழந்தார். மியூச்சுவல் பண்ட் விளம்பரத்தின் இறுதியில் வரும் “Mutual Fund Investments are Subjected to market risk” என்று சொல்பவரின் வேகத்தை விட தோனி வேகமாக ஸ்டம்பிங் செய்தார். With a reaction timeof 0.16 seconds, தோனியின் வேகம் சிலிர்க்க வைக்கிறது.

dccbmf6wkaa3qyw

கொலி மற்றும் டிவில்லியர்ஸ்ஸின் விக்கெட் விழுந்தவுடன் கிட்டத்தட்ட 8 ஓவருக்குள்ளேயே ஆட்டம் முடிந்தது என்று ரசிகர்கள் ஆர்பரித்தனர். 20ஆம் ஓவரின் முடிவில் ராயல் சாலஞ்சர்ஸ் அணி வெறும் 127 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது. பின்னர் வந்த சென்னை துவக்க ஆட்டக்காரர்கள் முன்பு போல் சிறப்பாக விளையாடவில்லை. உமேஷ் யாதவும் செகாலும் மிகச் சிறப்பாக பந்து வீசினர்.

ராயுடுவுன் ரெய்னாவும் ஒரளவு போட்டியை கட்டுக்குள் கொண்டுவர கடைசி 3 ஓவர்களில் 22 ரன்கள் தேவையாக இருந்த போது கொண்டுவந்த BP மாத்திரைகளை சென்னை ரசிகர்கள் எடுக்க தயாரானார்கள். அதுக்கெல்லாம் அவசியம் இல்லை என்று போல 18ஆவது ஓவரை வீச வந்த செகாலை தோனி பதம் பார்த்தார். இரண்டாவது பந்தில் அடித்த சிக்ஸர் மிட்விக்கெட் பவுண்ரியை தாண்டி ரசிகர்களிடம் சிக்கியது. மூன்றாவது பந்து வைட். ஒரு சுழர் பந்து வீரர் வைட் பந்து வீசுவது கிரிமினல் குற்றமாகவே பார்க்கபடுகின்றது. கோலிடம் அதிகாரம் இருந்தால் செகலை 7 வருடம் கடுங்காவல் சிறையில் தள்ளுவார் போலும். அடுத்து வந்த நான்காம் ஐந்தாம் பந்துகளும் சிக்ஸர்களாக பறக்க, கடைசி பந்தில் ப்ராவோ சிங்கிள் எடுக்க, சென்னை தன் அபிமான எதிரியை 6 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது.

dccbo4pxuaexnry

Technically a win or two should guarantee CSK to playoffs, ஆனால் ரசிகர்களை பொருத்தவரையில் யாரிடம் ப்ளேஆப் போட்டிகளில் விளையாடப் போகிறோம் என்றே பேச்சு. ஜடேஜாவும் ஹர்பஜனும் சேர்ந்து கூட்டாக 5 விக்கெட்டுகளை எடுத்தது சென்னைக்கு பெரிய ஆருதலாக இருக்கும். புது வரவு டேவிட் வில்லி மிக வேகமாக அதே சமயம் துல்லியமாக பந்துவீசுகிறார். இருந்தாலும் பவுலிங் விஷயத்தில் consistant ஆக இருப்பார்களா என்பதை அடுத்து வரும் சில போட்டிகளின் முடிவுகள் சொல்லும்.

சென்னையின் அடுத்த போட்டிக்கு இன்னும் ஐந்து நாட்கள் இருக்க இந்த இடைப்பட்ட காலத்தில் மற்ற அணிகள் எவ்வாறு விளையாடுவார்கள் என்பதை சென்னை அணி மட்டுமில்லாது ரசிகர்களும் ஆவலுடன் எதிர்ப்பார்கள். அதற்கேற்றவாறு சென்னை அணியும் தன் வியூகங்களை மாற்றும் என்று எதிர்ப்பார்க்கலாம்.

அதுவரை, சர் ஜடேஜாவுக்காகவும் ஹர்பஜனுக்காகவும் சூப்பர் விசிலுடன்,

ஹரிஹரன்

முந்திய பகுதிகள்:
IPL விசில் போடு – 8: Paradise lost… Paradise regained
IPL விசில் போடு – 7: The name is Dhoni
IPL விசில் போடு – 6: ஆந்திர ஆவக்காயும் சுவையானதே!
IPL விசில் போடு – 5: பைசா வசூல்!
IPL விசில் போடு – 4: கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே
IPL விசில் போடு – 3
IPL விசில் போடு -2 : திரும்பி வந்துட்டேன்னு சொல்லு!
IPL – விசில் போடு – 1

ஹரிஹரன்: சொந்த ஊர் சென்னை. படித்தது கோவையில். வேலை சிங்கையில். வேலை நேரம் போக நாடி நரம்பில் ஊறியிருப்பது கிரிக்கெட். நாவல், சிறுகதையிலும் சிறிது நாட்டம். விருப்பி வாசிப்பது Sidney Sheldon மற்றும் இந்திரா சொளந்திரராஜன்.

IPL விசில் போடு – 8: Paradise lost… Paradise regained

Master of heart beat has done it again. பூனாவில் நடைபெற்ற டில்லிக்கெதிரான போட்டியில் 13 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றிபெற்றது.

முன்பு 28ஆம் தேதியில் மும்பைக்கெதிறான போட்டியில் 8 விக்கட் வித்தியாசத்தில் மும்பை அணி இந்தியன்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வென்றது. பங்குபெற்ற 6 போட்டிகளில் 5 போட்டிகளில் தோல்வி என்ற நிலையில் கிட்டத்தட்ட இனி வரும் எல்லா போட்டிகளிலும் வெற்றி பெற வேண்டும் என்ற கட்டாயத்தில் களத்தில் இறங்கியது மும்பை. கறை நல்லது என்று தோனி முடிவெடுத்தாரோ என்னவோ! ஆட்டம் ஆரம்பம்ந்தொட்டு ஒரு தோய்வு இருந்தது உண்மை. The contest clearly lacked a punch. தோற்றாலும் பரவாயில்லை, lets give a chance to young talents என்று தோனி நினைத்திருக்கலாம். கடைசி 2 ஒவர்களில் 22 ரன்கள் தேவை என்ற நிலையில், சென்னை அணியின் கர்ண பிரபு சர்துல் தாக்கூர் 19ஆம் ஓவரில் தன் தயாள குணத்துடன் 17 ரன்களை வாரி வழங்கினார். கதம் கதம் முடிந்தது முடிந்தது என்று பாபா ரஜினியின் வசனத்துடன ரசிகர்கள் வெளியேற, மும்பை 2 பந்துகள் மீதமிருக்க வெற்றி கண்டது.

நேற்றைய போட்டியில் எதிர்பார்ப்புகள் கொஞ்சம் அதிகம். தொடர் தோல்விகளுக்கு பொறுப்பேற்று கம்பீர் அணித் தலைவர் பதவியிலிருந்து வெளியேர டில்லி அணிக்கு ஸ்ரெயஸ் ஐயர் புது காப்டனாக தேர்வு செய்யப்பட்டார். போட்டித்தொடரின் இடையே அணித்தலைவர் பொறுப்பு மாற்றப்படுவது இது முதல் தடவையல்ல. இருந்தாலும் கம்பீர் விஷயத்தில் கொஞ்சம் வித்தியாசம். களத்தில் இறங்கும் 11பேர் கொண்ட அணியிலிருந்தும் விலகி தன் வருட ஊதியம் (கிட்டத்தட்ட 2.8 கோடி) முழுவதும் அணிக்கு திருப்பி அளிக்க முடிவுசெய்துள்ளார். Take a bow Gambhir!

புது தலைவர் ஸ்ரேயஸ் ஐயர் பதவியேற்றதும் அதிரடி காட்டி கோல்கத்தா அணிக்கெதிரான போட்டியில் தனியொருவராக 93 ரன்கள் குவித்தார்.

சில நேரங்களில் சிலருக்கு பொறுப்புகள் அளிக்கப்படும் போது, அவர்கள் தங்களின் அணியை இன்னும் அடுத்த கட்டத்துக்கு எடுத்துச்செல்வார்கள்.

விராட் கோலி விஷயத்திலும் அவ்வாறே நடந்தது.

As the young guns lock horns with the old boys, போட்டியில் விறுவிறுப்புக்கு பஞ்சமிருக்காது என்ற எண்ணம் பொய்யாகவில்லை. டில்லி அணி அதே 11பேருடன் விளையாட, சென்னை அணியில் ஏகப்பட்ட மாற்றங்கள். தாகூர், பில்லிங்ஸ், தீபக் சகார் மற்றும் இம்ரான் தாஹீர் வெளியேற, லுங்கி, கே எம் ஆசிப், கரன் சர்மா, டூப்ளெசி உள்நுழைந்தனர். டாஸ் வென்ற ஸ்ரேயஸ் சென்னை அணியை பேட்டிங் செய்ய அழைத்தார்.

ஆரம்பமே அமர்களம் என்பது போல முதல் பந்திலேயே வாட்சனுக்கு life! அதன் பின் டூப்ளெசியும் சேர்ந்து கலக்க, பவர் ப்ளேயின் முடிவில் 56 ரன்கள் குவித்திருந்தது. டூப்ளெசியும் ரெய்னாவும் வெளியேற, அம்பத்தி “பாகுபலி” ராயுடு தன் பங்கிற்க்கு டில்லி பவுலர்களை பதம் பார்த்தார். Yet another master class from Dhoni – கடைசி 5 ஓவர்களில் மட்டும் 74 ரன்களை தோனியும் ராயுடுவும் குவித்தனர். Turning the clock என்பார்கள். தொனியின் விஷயத்தில் இந்த வாசகம் 100% பொருந்ததும். அடித்த 5 சிக்ஸர்களூம் simply brutal! ஏழு எட்டு வருடங்களூக்கு முந்திய தோனியை கண் முன் கொண்டுவந்தது. சில நேரங்களில் பேட்டின் நுனியில் பட்டு சிக்ஸர்கள் கிடைப்பதுண்டு. இவைகளை top edge என்பார்கள். அவ்வாறாக இல்லாமல் அத்தனையும் சரியான தீபாவளி சரவெடி.

ராயுடு IPL போட்டிகளுக்கு முன் தன் விக்கெட் யாருக்கும் கிடையாது, ரன் அவுட் தான் என்று வேண்டுதல்களோடு வந்தாரோ என்னவோ. கடந்த 4 போட்டிகளில் 3 முறை ரன் அவுட். அவ்வாறு அவுட் ஆகும் போதும் “பரவாயில்ல விடு தல, நீ நின்னு கலக்கு” என்று சொல்லாமல் சொல்லிச் செல்கிறார். இந்த ராயுடு புதுசு.

பார்ப்பவர்களுக்கு இது கிரிக்கெட் டீமா, அல்லது விக்ரமன் படமா என்ற சந்தேகம்.

அடுத்து பேட் செய்ய வந்த டில்லி போட்டியை தாரை வார்க்க தயாராக இல்லை. இரண்டு விக்கெட்டுகள் எடுத்தாலும், தாகூர் இல்லாவிட்டால் என்ன நானிருகிறேன் என்று தன் 3 ஓவர்களில் 43 ரன்களை கே.எம்.ஆசிப் தாராளமாக அள்ளி வழங்கினார். கேரளாவிலிருந்து புது வரவு. நம்மட போலர் வல்லிய போலர் என்ற நினைப்பிலிருந்த சேட்டன்களின் நினைப்பில் டில்லி வீரர்கள் கதக்களி ஆடியதை பார்க்க கொஞ்சம் பரிதாபமாகவே இருந்தது.

ஐந்தாவது விக்கடுக்கு ரிஷப் பந்தும் விஜய் சங்கரும் சேர்ந்து 88 ரன்கள் குவிக்க, சிக்ஸர்களூக்கும் பவுண்ரிகளூக்கும் பஞ்சமில்லை. Specialist death bowler ப்ராவொவையும் விட்டு வைக்கவில்லை. ஒரு பக்கம் ரிஷம் பந்த் 45 பந்துகளில் 79 ரன்கள் குவிக்க, 19வது ஓவரில் ப்ராவோவின் பந்துகளை சிக்ஸர்களாக விஜய் சங்கர் தெரிக்க விட, நிடஹாஸ் கோப்பையின் கெட்ட நிகழ்வுகள் ரசிகர்கள் மனதிலிருந்து அகலும் என்று நம்புவோமாக. கடைசி ஓவரில் 28 ரன்கள் தேவை என்ற நிலையிலும் விடாது முயர்ச்சித்த விஜய் சங்கர் கிட்டத்தட்ட வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கையளித்தார். Well done young man! இந்தியாவின் அடுத்த தலைமுறை வீரர்கள் பளிச்சென்று தெரிகிறார்கள்.

dcfc4ocu0aaa5tc1

சென்னையை பொருத்தவரை லுங்கி நம்பிக்கையளிக்கிறார். ஹர்பஜன் விக்கெட் எடுக்காவிட்டாலும் ரன்களை அதிகம் கொடுக்கவில்லை – economy rate is not bad. மற்ற போலர்கள் அதிகம் சோபிக்க வில்லை. கரன் சர்மாவுக்கு ஒரு ஓவர் கூட கொடுக்கவில்லை. இந்த கேள்வியை கிரிக்கெட் வர்ணணையாளர்களூம் மறந்தது ஏனோ தெரியவில்லை! பவுலிங் மற்றும் பீள்டிங்கில் சென்னை அதிக கவனமாக இருக்க வேண்டும் – loopholes are getting bigger and bigger. ஒரு வேளை அடுத்த போட்டியில் டூப்ளெசிக்கு பதிலாக டேவிட் வில்லி களமிறங்கினால் நல்லதென தோன்றுகிறது.

வாட்சன் மற்றும் தல தோனியின் மற்றொறு கலக்கலான ஆட்டதிற்க்கும், table toppers சென்னை சூப்பர் கிங்க்ஸுக்கும் சேர்த்து,

ஒரு பெரிய விசிலுடன்,

ஹரிஹரன்

முந்திய பகுதிகள்:
IPL விசில் போடு – 7: The name is Dhoni
IPL விசில் போடு – 6: ஆந்திர ஆவக்காயும் சுவையானதே!
IPL விசில் போடு – 5: பைசா வசூல்!
IPL விசில் போடு – 4: கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே
IPL விசில் போடு – 3
IPL விசில் போடு -2 : திரும்பி வந்துட்டேன்னு சொல்லு!
IPL – விசில் போடு – 1

ஹரிஹரன்: சொந்த ஊர் சென்னை. படித்தது கோவையில். வேலை சிங்கையில். வேலை நேரம் போக நாடி நரம்பில் ஊறியிருப்பது கிரிக்கெட். நாவல், சிறுகதையிலும் சிறிது நாட்டம். விருப்பி வாசிப்பது Sidney Sheldon மற்றும் இந்திரா சொளந்திரராஜன்.

IPL விசில் போடு – 3

ஹரிஹரன்

3

சென்னை மாநகராட்சி உங்களை அன்புடன்வரவேற்கிறது.
1095 நாள் காத்திருப்பு ஒருவழியாக முடிந்தது! இத்தனை காலம் காத்திருந்த பலனாக சென்னை ரசிகர்களுக்கு மாபெரும் விருந்தாக இந்த போட்டி அமைந்தது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கோல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியை வென்று சேப்பாக்கம் தன் கோட்டை என நிருபித்தது. Welcome back to the den Lions!
ஆனால் இந்த போட்டியை முழுமையாக ஏனோ ரசிக்க முடியவில்லை. அரங்கத்தில் போட்டியை காணவந்த சில ரசிகர்கள் தாக்கப்பட்டனர். போட்டியின் போது சென்னை வீரர் டூபெளிசியின் மீது செருப்பு வீசப்பட்டது. சென்னை இதுவரை பார்த்திராத காட்சிகள் இவை. கோல்கத்தா மற்றும் இன்னும் சில வட இந்திய நகரங்களில் இவ்வாறு நடந்ததுண்டு.
சாதாரண கிரிக்கெட் ரசிகனுக்கும் இந்த நிகழ்வகளுக்கும் தொடர்பிருக்காது என நாம் சொன்னலும் knowledgeable crowd என அனைவராலும் பாராட்டப்படும் சென்னை மக்களுக்கு இது ஒரு களங்கம். 1999 ஆண்டு சென்னையில் நடந்த பாக்கிஸ்த்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் எதிரணி வென்றாலும் எழுந்து நின்று கைதட்டி பாரட்டிய நிகழ்ச்சி தான் கண் முன் வந்து சென்றது. இந்த நிகழ்வுகளின் காரணமாக சென்னையில் போட்டி தடைபடாது என நம்புவோமாக. Hope good sense will prevail.
Coming back to the splendid contest, சென்னை ஒரு புது ஹீரோவை அடையாளம்கண்டுகொண்டது.இங்கிலாந்து வீரர் சாம்பில்லிங்ஸ் அதிரடியை காட்டசார் ஜடேஜா முத்தாய்ப்பாய் சிக்கர் அடித்து வெற்றியை உறுதி செய்தார். சாம்பில்கிங்ஸ் இன்னமும் ஒருவளர்ந்து வரும் வீரராகவே இங்கிலாந்தில் கருதப்படுகிறார். இருந்தாலும்தம்பி வா, தலைமையேற்கவா என்று இங்கிலாந்துவாரியம் அவருக்கு காப்டன்பதவிக்கு அழைப்புகொடுக்கலாம்.
சென்னை மாதிரியானமைதானத்தில் டாஸ் ஒருமுக்கியமான விஷயமாகக் கருதப்படுகின்றது. ஆட்டம் செல்லச் செல்ல பிட்ச்மெதுவடையும். அவ்வாறு இருக்கையில் டாஸ் வென்றஅணி வழக்கமாக பேட்டிங்செய்யும். ஏனேன்றால், அடுத்துபந்து வீசும்போது பிட்ச்சுழற்பந்துக்கு சாதகமாகஇருக்கும். டாஸ் வென்றதோனி ஆச்சிரியமாக பவுலிங் தேர்வு செய்தார்.எதிரணியில் நிறைய அதிரடிஆட்டக்காரர்கள் இருப்பது ஒருகாரணமாக இருக்கலாம்.இதனால் ரன் இலக்குகை குறிவைத்து ஆடுவது எளிது என்று நினைத்திருக்கலாம்.இரண்டாவதாக சென்னை மைதானத்தில் இரவு பனிப்பொழிவு அதிகம்.அதனால் பவுலர்ககளுக்கு இரண்டாவது இன்னிங்ஸில்பந்து வீசுவது கடினம் என்று நினைத்திருக்கலாம்.
கோல்கத்தா தொடக்க ஆட்டக்காரர்கள் ஆரம்பம் முதல் அதிரடியாக விளையாடினர்.ஒரு பக்கம் விக்கட்டுகள் சரிந்தாலும் பத்து ஓவர்களில்கிட்டத்தட்ட 90 ரன்களுக்கு மேல் எடுத்தனர். பின்னால்வந்த ஆன்ரே ரசல் பதினோரு சிக்சர்களை அடித்து அரங்கத்தை அதிரவைத்தார்.
மேற்க்கிந்திய வீரர்கள் அதிரடி ஆட்டப்பிரியர்கள்.தொடக்ககாலந்தொட்டு தன்அபார ஆட்டத்திறனால் எதிரணி வீரர்களை குலை நடுங்கச்செய்வர். 2000வருடத்திற்க்குப்பின் இரங்குமுகந்தான். அடுத்து வரும் உலக கோப்பை தகுதி சுற்றில் ஸ்காட்லேண்ட் ஜிம்பாப்வே அணிகளுடன் மொதும் பரிதாபமான சூழ்நிலை. ப்ராவோ,போலார்ட், சாமுவேல்ஸ்,கெயில், ஆன்ரே ரசல், சுனில்நரேன் போன்ற சிறந்த வீரர்கள்இருந்தும் சிறந்த அணியாகத் திகழாதது துரதிஷ்டவசம்.
நவக்கிரஹம் போல தனியாகபலனை தருவார்கள், கூட்டாக/அணியாக அல்ல.
சென்னை அணியின் முரளிவிஜய் மறுபடியும் மிஸ்ஸிங். போட்டிக்கு இரண்டு நாள் முன்பாக நாம் எடுத்த கருத்துகணிப்பில் பெரும்பாலானொர் முரளி விஜய் வரவேண்டுமென்று பதிவு செய்தார்கள்.


ஆனால் சென்ற போட்டியில் களமிறங்கிய ராயுடுவும் வாட்சனும் நானும் ரவுடி தான் என்று நினைதார்களோ என்னவோ, கொல்கத்தா பவுளர்களை பதம் பார்த்தார்கள். முரளி விஜய் இனி களமிரங்குவது சிரமமென தெரிகிறது. சாம் பில்லிங்ஸ், ப்ராவோ மற்றும் ஜடேஜா கைகொடுக்க சென்னை ஒரு பந்து மிதமிருக்க வெற்றி கண்டது.

Opening and lower order looks formidable now. சென்னை மிடில் ஆர்டரில் கவனம் செலுத்துவது நல்லது. காயமடைதொரின் என்னிக்கை வேறு கூடுகிறது. அனேகமாக playing XI போல் Injured XI வருமோ என்னவோ.


Opening and lower order looks formidable now. சென்னை மிடில் ஆர்டரில் கவனம் செலுத்துவது நல்லது. காயமடைதொரின் என்னிக்கை வேறு கூடுகிறது. அனேகமாக playing XI போல் Injured XI வருமோ என்னவோ

தல தோனியின் அதிரடி ஆட்டத்தை காணவந்த ரசிகர்களுக்கு கொஞ்சம் ஏமாற்றந்தான். அடுத்த போட்டியில் தல கலக்குவார் என்ற நம்பிக்கையுடன், welcome once again lions.
சூப்பர் விசிலுடன்,
ஹரிஹரன்

முந்திய பகுதிகள்:

IPL விசில் போடு -1

IPL விசில் போடு – 2


ஹரிஹரன்: சொந்த ஊர் சென்னை. படித்தது கோவையில். வேலை சிங்கையில். வேலை நேரம் போக நாடி நரம்பில் ஊறியிருப்பது கிரிக்கெட். நாவல், சிறுகதையிலும் சிறிது நாட்டம். விருப்பி வாசிப்பது Sidney Sheldon மற்றும்இந்திரா சொளந்திரராஜன்.

IPL விசில் போடு -2 : திரும்பி வந்துட்டேன்னு சொல்லு!

-ஹரிஹரன்

2

திரும்பி வந்துட்டேன்னு சொல்லு!

CSK is back with a bang! 2018 IPL முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மும்பை இந்தியன்ஸ் அணியை அதன் சொந்த மண்ணில் தோற்க்கடித்து தனது வருகையை பதிவு செய்தது.

அதென்ன சார் சொந்த மண்? தோனியும் ரெய்னாவும் பாக்கிஸ்தான் வீரர்களா என்று நீங்கள் கேட்டால் உங்களுக்கு IPL பற்றி இன்னும் புரிதல் வேண்டும் என்று தான் சொல்ல வேண்டும். உங்கள் ஊரில் உங்களுக்கு எதிராக ஒரு வெளிநாட்டவர் விளையாடினால் கூட உங்கள் கண் முன்னே ஐம்பதாயிரம் பேர் அந்த வெளினாட்டவருக்குத்தான் ஆதரவு அளிப்பார்கள். அப்போது உங்களுக்கு அது தன்னுடைய சொந்த மண் என்ற உணர்வு எப்படி வரும்?

damyvovwkaab32m3939227663761785487.jpg

காலன், கரிகாலன் ப்ராவோ தன் விஸ்வரூபத்தைக்காட்ட, ஜாதவ் நீ கேலி செய்த ஆள் நானில்லை என்று சொல்லாமல் சொல்ல, தன் அபாரமான ஆற்றலை CSK   வெளிக்கொணர்ந்தது. ஏழு சிக்ஸர்கள் எடுத்த எரிமலை என நீ அன்போடு அழைக்கப்படுவாய் ப்ராவோ என்று நெட்டிஸன்கள் கொண்டாட , மங்களகரமாக சென்னை தன் அக்கௌண்டை துவக்கியது.

சென்னை சூப்பர் கிங்ஸை பொருத்தவரையில் நாம் அந்த அணியை உலகின் பிரசிதிப்பெற்ற Manchester United அணியுடன் ஒப்பீடு செய்யலாம்.

Value for money, huge fan base என அனைத்தும் சூப்பர் கிங்ஸுக்குப் பொருந்தும். ஏலத்தின் போது யார் யாரை கேலி செய்தார்களோ அவர்கள் தான் நேற்றய போட்டியில் பிளந்து கட்டினார்கள்.

டாசில் வெற்றி பெற்ற தோனி பவுலிங்கை தேர்வு செய்தார். Playing XI எனப்படும் களமிறங்கும் வீரர்கள் பெயர்களை பார்த்த போது அனைவரும் கொஞ்சம் அதிர்ச்சியானது உண்மைதான். மூன்று நான்கு வீரர்களை தவிர்த்து impact players யாரும் இல்லை. கண்ணில் விளக்கெண்ணையை ஊற்றி பார்த்தால் கூட ஆக்ரோஷமாக ஆடும் வீரர்களை கண்டுபிடிக்க முடியவில்லை. Is this a winning team என்ற கேள்வி வராமல் இல்லை. ஒட்டுமொத்தமாக தோனியை நம்பியே அணியை அமைத்திருக்கிறார்கள் என்று தெளிவாக தெரிந்தது.

 2015 ஆண்டு வரை தோனி தன் அணியில் ஆக்ரோஷமாக ஆடும் தொடக்க ஆட்டக்காரர்களை களமிரக்குவார். ஒரு solid lower down இருக்கும். சுழர் பந்தில் அஷ்வின் கலக்குவார். அத்தனையும் மிஸ்ஸிங்.

குறிப்பாக அஷ்வின், கிளிக்கு இறக்கை முளைச்சுடுத்து ஆத்த விட்டு பறந்துபோயிடுத்து என்று ரசிகர்கள் முகநூலிலும் டுவிட்டரிலும் புலம்பியது நியாயமானதே.

ஏழு பவுலர்கள் தேவையா தல என்ற கேள்வி தோனிக்கு மட்டுமில்லை சென்னை அணியின் மங்களம் சார் ஸ்டீபன் பிளமிங்கையும் யோசிக்கவைத்திருக்கும். Anyways, இது நமது முதல் போட்டி. வீரர்களை சோதனை அடிப்படையிலேயே தேந்தெடுத்திருப்பார்கள் என நம்புவோமாக.


ஸ்கோர்கார்ட்

Batting

bowling


எது எப்படியோ இந்த வெற்றி இரண்டு வருடங்களாக ஏங்கித்தவித்த ரசிகர்கள் மத்தியில் ஒரு பெரிய உற்சாகத்தை ஏற்படுத்தியது. மும்பை இந்தியனஸ் அணி எப்போதுமே ஆரம்பத்தில் வாமன அவதாரம் எடுத்து பின் ஒரே அடியில் இறுதியில் எதிரணியை வெல்லும். அதனால் இந்த தோல்வி அவர்களுக்கு துளியும் பாதிப்பை ஏற்படுத்தியிருக்காது. காண்டாகி அம்பானி ஜியோவில் கைவைப்பாரோவென்ற கலவரம் கிரிக்கெட் பார்க்காதவர்கள் கண்களில் தெரிந்தது. 

போட்டிகள் செல்லச்செல்ல போட்டித்தன்மை மாறமாற அணிகளும் தங்களின் யுக்த்திகளை மாற்றும். ஓரிரு வாரங்களில் அணிகளின் உண்மையான பலமும் பலவீனங்களும் தெரியவரும். சென்னை சூப்பர் கிங்ஸும் தன் பங்கிர்க்கு எவ்வாறு தன் யுக்திகளை கையாளும் என்பதை பொருத்துத்தான் பார்க்க வேண்டும். அதுவரை,

இன்னும் பலமான விசிலுடன்.

ஹரிஹரன்

முந்திய பகுதிகள்: IPL விசில் போடு -1


ஹரிஹரன்: சொந்த ஊர் சென்னை. படித்தது கோவையில். வேலை சிங்கையில். வேலை நேரம் போக நாடி நரம்பில் ஊறியிருப்பது கிரிக்கெட். நாவல், சிறுகதையிலும் சிறிது நாட்டம். விருப்பி வாசிப்பது Sidney Sheldon மற்றும் இந்திரா சொளந்திரராஜன்.

IPL – விசில் போடு – 1

-ஹரிஹரன்

1

IPL a.k.a The Great Indian Circus has finally begun. ஒன்றரை மாத திருவிழா நாளை முதல் ஆரம்பம்! பதினோரு மாதமும் ஒரே அணியாக, இந்திய அணியாக, விளையாடிய வீரர்கள் வெவ்வேறு அணியாக, மற்ற நாட்டவருடன்வி ளையாடும் வித்தியாசமான போட்டி. குரங்கு என “அன்பாக வர்ணித்த” ஹர்பஜனும் சைமசும் கட்டித்தழுவி வெற்றியை கொண்டாட, அதை பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சியடைய வைத்த போட்டி. இந்தியனாக இருந்து சென்னை சூப்பர் கிங்சாக உருமாரி பின் இந்தியனாக மறுபடியும் பரிணாம வளர்ச்சி தரும் போட்டி.

ydrdo_sk_400x400513950112345151173.jpg

என்ன சார், அப்படி என்னதான் இருக்கு இந்த போட்டியில்? After all, it’s another T20 game என்று நீங்கள் நினைத்தால், sorry sir, you may be wrong என்று தான் சொல்லத் தோன்றுகிறது. இந்த பத்து வருடத்தில் எவ்வளவோ சர்ச்சைகள். இருந்தாலும் பார்போரின் எண்ணிக்கைக்கு என்னவோ குறைவில்லை. அரங்கம் முழுவதும் பார்வையாளர்கள், வண்ண விளக்குகள், those beautiful cheerleaders, ஒவ்வொரு விக்கட்டுக்கும் பவுண்டரிக்கும் ஆர்பரிக்கும் ரசிகர்கள், கடைசி ஓவரில் தன் அணி வெற்றி பெருமா என்ற ஏக்கத்துடன் நகத்தை கடிக்கும் அணியினர், என சுவாரசத்தியர்க்கு பஞ்சமில்லை.

ஒரு வேளை திருவள்ளுவர் இருந்திருந்தால் சிக்சர் அடித்து வாழ்வாரே வாழ்வார் மற்றவரெல்லாம் சிங்கள் அடித்து சாவார் என்று ஒரு குறள் IPL பற்றி ஸ்பெஷலாக பாடியிருக்கலாம்.

அதெல்லாம் ஒகே, என்ன ஸ்பெஷல் இந்த வருடம்?

சூதாட்ட சர்ச்சையால் இரண்டு வருட வனவாசத்திற்க்கு பிறகு சென்னை சூப்பர் கிங்சும், ராஜஸ்தான் ராயல்சும் களமிளங்குகிறது. வருட தொடக்கத்தில் நடைபெற்ற ஏலத்தித்திற்கு முன்பே ஓவ்வொரு அணிக்கும் மூன்று வீரர்களை தக்க வைக்க சந்தர்ப்பம் கொடுக்கபட்டது. No prizes for guessing – சென்னை அணி “தல” தோனியையும், “சின்ன தல” ரெய்னாவையும், “சர்” ஜடேஜாவையும் தக்க வைத்தது.

ஏலத்தின் முதல் நாளில் இது சென்னை சூப்பர் கிங்சா? இல்லை சென்னை சீனியர் கிங்சா?

 

என்ற கேள்வி வராமல் இல்லை. ஏலத்தில் எடுத்த அத்தனை வீரர்களுக்கும் 32 வயதுக்கு மேல். மற்ற அணியினர் வளர்ந்து வரும் வீரர்களை வாங்க, சென்னை சீனியர்களின் மீது முதலீடு செய்தது. இரண்டாவது நாளில் தலை கீழ். இருந்த பணத்தில் நிறைய uncapped வீரர்களை வாங்கியது. இவர்கள் மாவட்ட அளவிலோ மாநில அளவிலோ விளையாடும் வீரர்கள்.

இதனூடே காவிரி பிரச்சனையினால் கொந்தளித்து கொண்டிருக்கும் தமிழகத்தில் போட்டியை நடத்தவிட மாட்டோம் என்று சில அமைப்புகள் வேறு.

கண்ணாடிய திருப்பி வச்சா எப்படி ஜீவா வண்டி ஓடும் என்று கேட்கத்தான் தோன்றுகிறது.

 

எது எப்படியோ ரசிகர்களுக்கு இன்னும் ஒன்னறை மாததிற்க்கு பொழுது போக்க பஞ்சமில்லை. இது விளையாட்டே அல்ல ஒரு entertainment package என்று நீங்கள் நினைத்தாலும் சரி, என் அணி என் உரிமை என்று நீங்கள் நினைத்தாலும் சரி, IPL is here to stay.

சர்வதேச அளவில் இந்த போட்டிக்கென ஒவ்வொறுவருடமும் ஒரு கால அட்டவனையை உருவாக்க ஐசிசி திட்டமிட்டளுள்ளது. வர்த்தகரீதியில் ஒரு வருடத்தில் ஐந்தாயிரம் கோடி வருமானம் என இதன் வளர்ச்சியோ வாயை பிளக்க வைக்கிறது.

நாளை முதல் போட்டியில் சென்னை அணி தன் பரமவைரியான மும்பை அணியுடன் மோதுகிறது. தல பழைய கெத்துடன் திரும்புவார் என்று ஏக்கத்துடன் காத்திருக்கும் ரசிகர்களோடு

விசில் போடுவோம்


ஹரிஹரன்: சொந்த ஊர் சென்னை. படித்தது கோவையில். வேலை சிங்கையில். வேலை நேரம் போக நாடி நரம்பில் ஊறியிருப்பது கிரிக்கெட். நாவல், சிறுகதையிலும் சிறிது நாட்டம். விருப்பி வாசிப்பது Sidney Sheldon மற்றும் இந்திரா சொளந்திரராஜன்.