IPL விசில் போடு – 11: சிங்கமொன்று புறப்பட்டதே…

ஒரு வழியாக லீக் சுற்று போட்டிகள் முடிவடைந்து ப்ளேஆஃப் சுற்று போட்டிகள் தொடங்கவுள்ளன. Amidst all the drama, intensity and anxiety the top 4 teams have qualified for the knockoff! கடைசி கட்ட போராட்டங்களுக்கும் எதிர்ப்பார்புகளுக்கும் ரசிகர்களூம் அணிகளும் தயாராகிவிட்டன. இந்த வார போட்டிகள் அனைத்தும் அதிரடி பைசா வசூல். புள்ளிகளை அதிகரிக்கவெண்டும் என சில அணிகள் போராட, தான் போட்டியில் நிலைக்க மற்ற அணிகளின் முடிவுகளை எதிர்நோக்கி சில அணிகளும் காத்திருக்க கடைசி போட்டியின் 16வது ஓவர் வரை ப்ளேஆஃப் சுற்றுக்கு தகுதி பெரும் அணி எதுவாக இருக்கும் என ரசிகர்களை ஈர்க்க வைத்தது இந்த வருட IPL.

வார தொடக்கத்திலேயே சன்ரைசர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸும் ப்ளேஆஃப் தகுதிசுற்றுக்கு முன்னேற, 3வது மற்றும் 4வது இடத்துக்கு கடும் போட்டி. எஞ்சி இருந்த 2 இடங்களுக்கு டெல்லி அணியைத்தவிர மற்ற 5 அணிகளும் கடுமையாக மோதின.   And here is how the tournament unfolded:

மே 19: கோல்கத்தா அணியின் judgement day. ஹதராபாதில் நடந்த சன்ரைசர்ஸ் அணிக்கெதிரான போட்டியில் 5 விக்கட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று ப்ளேஆஃப் சுற்றுக்கு தகுதிபெற்றது. தமிழக வீரர் தினேஷ் கார்த்திக்கை சென்னை நம்பியதோ இல்லையோ, ஆளப்போறான் தமிழன் என்று கொல்கத்தா நம்பியது வீண்போகவில்லை. இத்தனை போட்டிகளில் சிறப்பாக விளையாடிய போதும் இந்திய அணியில் இடம்பெறாதது வெறும் அரசியல்.

நம்ம நாட்ல ஒரு பக்கம் அரசியல்வாதிங்க விளையாடராங்க, இன்னொரு பக்கம் விளையாட்ல அரசியல். இது மாறாத வரைக்கும் இரண்டும் உருப்படாது.

என்ற சாமானியனின் குரலில் நியாயம் இருக்கவே செய்கிறது.

மே 20:  லீக் சுற்றின் கடைசி நாளான நேற்று மும்பை அணிக்கு வாழ்வா சாவா என்ற நிலை. போட்டியை வென்றாக வேண்டிய கட்டாயத்தில் களமிறங்கிய மும்பை அணியின் சவப்பெட்டியில் கடைசி ஆணியை அடித்தது டெல்லி அணி. 175 என்ற கடினமான இலக்குடன் களமிறங்கிய மும்பையின் ஸ்டார் ஆட்டக்காரர்கள் ஒவ்வொருவரும் சொற்ப்ப ரன்களூக்கு ஆட்டமிழந்தனர். 18வது ஓவரை வீச வந்த லியம் ப்ளங்கெட் இந்த நாளை மறக்க நாட்களெடுக்கும். மும்பையின் பென் கட்டிங் 3 சிக்ஸர்கள் 2 பவுன்ரிகள் என விளாசினாலும், கடைசி ஓவரில் ஹர்ஷல் பட்டேல் ஓவரில் அவுட்டானதும் மும்பையின் அத்தனை நம்பிக்கையும் சிதறியது.

பேட்டிங்கில் சூர்யகுமார் யாதவும், எவின் லூயிஸும் தவிர்த்து வேறு எந்த பேட்ஸ்மென்னும் இந்த வருடம் 300 ரன்களை தாண்டவில்லை. Just for comparison, இந்த வருடம் கொல்கத்தாவின் சுனில் நரேன் அடித்த ரன்கள் 327, மும்பையின் அணித்தலைவர் ரோஹித் சர்மா எடுத்தது 286 ரன்கள்.

Big names can only win matches but not the championship

என்ற கசப்பான உண்மையை உணர்ந்திருப்பார்கள்.

மும்பை இந்தியன்ஸ் வெளியேறியதை தொடர்ந்து ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் ப்ளேஆஃப் வாய்ப்பு கிட்டத்தட்ட உறுதியானது. ரன்ரேட் விகிதத்தில் மிகவும் பிந்தங்கியிருந்த பஞ்சாப் அணிக்கும் சென்னை சூப்பர் கிங்ஸுகும் அதே நாளில் நடந்த கடைசி போட்டியில் சென்னை அணி வெற்றி பெற்றது. 160 என்ற சுலப இலக்கை நோக்கி விளையாடிய சென்னை அணியின் துவக்க ஆட்டக்காரர்கள் வெளியேறியதும் தல தோனி ஹர்பஜனையும் அவரை தொடர்ந்து தீபக் சகாரையும் அனுப்பியது utter chaos. அஷ்வின் முதற்கொண்டு அத்தனை பவுலர்களும் தலையை சொறிய தோனியின் யூகம் என்னவென்று தெரியாமல் குழம்பியது தான் highlight.

சென்ற வருடம் வரை டி20 போட்டிகளில் impact bowler ஆக வலம் வந்த அஷ்வினின் ஓவரில் தீபக் சகார் 3 சிக்ஸர்கள் அடித்தது அவரின் நம்பிக்கையை கொஞ்சம் ஆட்டங்கான வைத்திருக்கும். இந்த வருடம் ஆரஞ்சு தொப்பியை வென்ற பஞ்சாப் அணியின் ஆன்ரு டையின் 19வது ஓவரில் ரெய்னா 2 சிக்ஸர்களூம் 2 பவுன்ரிகளும் எடுத்தது speldid treat for eyes.

உங்க இலக்கை எட்ட தோனியோ ப்ராவாவோ ஜடேஜாவோ தேவையில்லை, எங்க ஹர்பஜனும் சகாரும் போதும் என்று அவர்களை அனுப்பி அவர்களூக்கும் ஒரு live practise கொடுத்தது அஷ்வினின் ego வை சீண்டிப் பார்த்திருக்கும்.

தீபக் சகாரின் ஆட்டத்தை பார்த்ததும், “நீ அடிச்சது பத்தாதுன்னு இன்னும் போக வர சின்ன பயலெல்லம் கூப்பிட்டு அடிச்சு பழகிக்க வேற சொல்லற. பழக இது என்ன உடம்பா இல்ல பள்ளிக்கூடமா? ஒன்னு கிடக்க ஒன்னு ஆகியிருந்தா இந்த டீமை யாரு காப்பாத்தறது, இவங்க family-ய யாரு மைண்டைன் பன்னறது. இரக்கமில்லையா உனக்குஎன்று நம்ம வடிவோலுவின் வண்டு முருகன் டயலாகை அணியின் முதலாளி ப்ரீத்தி ஜிந்தா சொல்வதாக உங்களுக்கு நினைவில் வந்தால் அதற்கு நாம் பொறுப்பாக முடியாது.

5 விக்கட் வித்தியாசத்தில் சென்னை அணி வெற்றி பெற, ப்ளேஆஃப் சுற்றுக்கு முன்னேறிய அணிகள் உறுதியானது:

ddqquxlu8aas1ab

Kudos to the CSK think tanks for believing in talents that no one believed.

மும்பை அணி வெளியேறியது மிக்க மகிழ்ச்சி என ப்ரீத்தி ஜிந்தா (விளையாட்டாக?) அரங்கத்தில் சொன்னது நேற்றைய ஹைலைட்.

எது எப்படியோ ஜாஸ் பட்லரும் பென் ஸ்டோக்ஸும் இல்லத நிலையில் ராஜஸ்தான் அணி ப்ளேஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றது அதிர்ஷ்டமா? விடா முயற்ச்சியா? கடவுளின் அருளா? என நெட்டிசன்கள் திண்டுக்கல் லியோனின் தலைமயில் ஒரு சிறப்பு பட்டிமன்றமே நடத்திக்கொண்டிருக்க, அதையெல்லாம் பற்றி கவலைப்படாமல் அந்த வீரர்கள் கொண்டாடும் பதிவை அணி ட்விட்டரில் பதிய, மற்ற அணிகள், குறிப்பாக மும்பை அணி, காண்டாகி கொண்டிருப்பார்கள்.

இந்த வாரம் நடந்த மற்ற சுவாரஸ்யமான நிகழ்ச்சிகள் சில:

சன்ரைசர்ஸ் அணிக்கெதிரான போட்டியில் டிவில்லியர்ஸின் அபாரமான கேட்ச் நம் நினைவிலிருந்து மறைய நிறைய வருடங்களாகும். Against gravity, against all improbability, this catch is out of the world!

மும்பையின் ஹர்திக் பாண்டியாவும் பஞ்சாபின் கே.எல். ராகுலும் தங்கள் சட்டையை மாற்றிக்கொண்டது அதிரடி தூள்! பொதுவாக கிரிக்கெட் போட்டிகளில் இவ்வாறு வீரர்கள் தங்கள் சட்டையை மாற்றி உடுத்திக்கொள்வது அரிது, கால்பந்து போட்டிகளில் இவ்வாறு நடப்பது சகஜம். போட்டியைத் தாண்டி பிரியாத நட்பே ப்ரெண்ட்ஷிப்பா என்று உணர்த்தியது simply superb!

 

அதே போட்டியில் ரசிகர்களுக்கு தான் வென்ற போட்டி நாயகன் (man of the match) விருதை கொடுத்தார் கே.எல். ராகுல்.

When life throws a Rahul, make it KL and not Gandhi!

எப்படியோ அத்தனை சோதனைகளையும் கடந்து முதல் நான்கு அணிகளுக்கிடையே நடக்கும் ப்ளேஆஃப் சுற்றுப் போட்டிகள் நாளை தொடங்கவுள்ளன.

ddtrpinvmaaka-a

சென்னையின் ஆதிக்கம் தொடருமா? தல தோனி இன்னும் ஒருமுறை கோப்பையை வெல்வாரா? இன்னும் சில தினங்களில் இந்த கேள்விகளுக்கான பதில்கள் தெரியவரும். அதுவரை சென்னை சூப்பர் கிங்ஸுக்காக ஒரு பெரிய விசிலுடன்,

ஹரிஹரன்

முந்திய பகுதிகள்:
IPL விசில் போடு – 10: And the Juggernaut rolls on…
IPL விசில் போடு – 9: Kings, for a reason
IPL விசில் போடு – 8: Paradise lost… Paradise regained
IPL விசில் போடு – 7: The name is Dhoni
IPL விசில் போடு – 6: ஆந்திர ஆவக்காயும் சுவையானதே!
IPL விசில் போடு – 5: பைசா வசூல்!
IPL விசில் போடு – 4: கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே
IPL விசில் போடு – 3
IPL விசில் போடு -2 : திரும்பி வந்துட்டேன்னு சொல்லு!
IPL – விசில் போடு – 1

ஹரிஹரன்: சொந்த ஊர் சென்னை. படித்தது கோவையில். வேலை சிங்கையில். வேலை நேரம் போக நாடி நரம்பில் ஊறியிருப்பது கிரிக்கெட். நாவல், சிறுகதையிலும் சிறிது நாட்டம். விருப்பி வாசிப்பது Sidney Sheldon மற்றும் இந்திரா சொளந்திரராஜன்.

Leave a comment