டன் டன் டன் டகா

(சிறுகதை) தேன் கூடு போட்டிக்கு

ந்த குசும்பு தான வேணாங்கறது. என்னப் பாத்தா எப்படித் தெரியுது? வாடக வீடு தேடும்போதே இந்த நக்கலா?” என்றார் புரோக்கர்.

கேட்கக் கூடாதுன்னு தான் நினைச்சேன். ஆனா பாருங்க நமக்கு உதவியா இருக்கும்னு நினைக்கறப்போ, கேக்கறதுல்ல தப்பில்ல இல்லையா? அப்புறம் கேட்டிருக்கலாமேன்னு மனசு கிடந்து அலையக்கூடாது பாருங்க.

புரோக்கர் இன்னும் என்னையே வெறித்துக்கொண்டிருந்தார்.

***

டீவியில் அக்னிநட்சத்திரம் ஓடிக்கொண்டிருந்தது. நல்ல படம் தான். எத்தன வாட்டி பாக்குறது? தரையில் உட்கார்ந்து நல்லா கால் நீட்டி, சோபாவுல சாஞ்சுகிட்டு, கையில குமுதத்த வெச்சுக்கிட்டு, சும்மா படம் பாத்திட்டிருந்தேன். அசின் அழகு தான் இல்லியா? அதுவும் போக்கிரில கொஞ்சம் எக்ஸ்ட்ரா அழகு. மேக்கம் ஓவரா போட்டிருப்பாய்ங்களோ? வெளியே மழை நன்றாகப் பெய்து கொண்டிருக்கிறது. தம் அடித்தால் தேவலை ஆனால் இந்த ராட்சஸி…..’டன் டன் டன் டன் டகா..டன் டன் டன் டன் டகா..என் பொண்டாட்டி ஊருக்கு போயிட்டா..என் பொண்டாட்டி ஊருக்கு போயிட்டா..’ என்று கத்திக்கொண்டு தெருவில் ஓடிக்கொண்டிருந்தார் ஜனகராஜ். அட ஆமால்ல! தனமும் இல்லியே. ஊருக்கு போயிட்டால்ல..ஹா…ஹா…ஹா…ஹா…என்று சத்தமாக சிரித்தேன். இந்தக் காட்சியை நான் நிறைய தடவை பார்த்திருந்தாலும் இன்றைக்கு விழுந்து விழுந்து சிரித்தேன்.குமுதத்தை தூக்கி கடாசினேன். அது ஷ¥ ரேக் பக்கத்தில் போய் விழுந்தது. ஆவேசமாக எழுந்தேன். வேட்டிய மடிச்சு கட்டினேன். ..’டன் டன் டன் டன் டகா..டன் டன் டன் டன் டகா..என் பொண்டாட்டி ஊருக்கு போயிட்டா..என் பொண்டாட்டி ஊருக்கு போயிட்டா..’ வேகமாக மாடியிலிருக்கும் என் ரூமுக்கு ஓடி என் பையில் ( என்னுடைய ஷோல்டர் பேக்கின் பின் பகுதியில் யாருக்கும் தெரியாமல் ஒரு ஜிப் வைத்த எக்ஸ்ட்ரா இடம் இருக்கிறது. பொண்டாட்டிக்கு தெரியாமல் தம் அடிக்கும் எங்களுக்காகவே ஆண்டவன் அருளிச்செய்தத பேக் இது) இருந்த கோல்ட் பிளேக் சிகரெட்டையும், ஒழித்து வைத்திருந்த லைட்டரையும் எடுத்தேன். இரண்டு இரண்டு படிகளாக இறங்கி வந்தேன். இளமை ஊஞ்சலாடுகிறது. பூங்காற்று திரும்பியது. வாழ்க ஜனகராஜ். ச்..சே..இவ்வளவு சுதந்திரமா? கண்ணாடியில் பார்த்தேன். டேய் சுந்தரம்..எப்படிடா இவ்வளவு ஸ்மார்டா இருக்க? பின்ன சும்மாவா கவிதா, சார் மெமரி லீக் இருக்கு சார், கோர் டம்ப் ஆகுது சார்ன்னு சும்மா சும்மா நம்பமேல டம்ப் ஆகுறா? கவிதா? கவிதையே தெரியுமா? கவிதையே தெரியுமா…என் கனவு நீ தானடி…சிகரெட் என் உதடுகளில் சதாவாக டான்ஸ் ஆடிக்கொண்டிருந்தது.

எம் டீவியில் ஷகீரா ஹம்ம்ம்…ஆடிக்கொண்டிருந்தாள். சிகரெட் பாக்கெட் தீர்ந்து போய்விட்டது. சோபாவுக்கு கீழே ஒரே சிகரெட் குப்பை. தனம் பாத்தான்னா பேயாட்டம் ஆடுவா. பிசாசு. மணி எட்டு தான ஆகுது. சுந்தரம்..ம்ம்…ம்ம்…இன்னும் காலைலைக்கு நிறைய நேரம் இருக்கேடா.

கைலியக் கழட்டி ஷோபாவில கடாசி விட்டு, பேண்டை மாட்டிக்கொண்டு ஓட்டமும் நடையுமாக வெளியேறினேன்.

கையில் பிளாக் லேபிலும், நான்கு பாக்கெட் கோல்ட் பிளேக்கும், ஒரு குங்குமமும், ஒரு டஜன் வாழைப்பழமும், புரோட்டா சிக்கன் ஆம்லேட் பொட்டனமும்..ம்ம்ம்…அடப்பாவி ஆப்பாயில் வாங்கலியே டா..பரவாயில்ல வீட்ல போட்டுக்கலாம்..ஒரு லிட்டர் கோக் பாட்டிலும் வெச்சுக்கிட்டு கதவ எப்படித்தான் திறக்குறது?

தனியா எப்படி அடிக்குறதுன்னு சிவாவக் கூப்பிட்டா, முடியாது வேல இருக்குன்னுட்டான். பராவியில்ல தனிமையிலே இனிமை காண முடியுமே! நடு இரவினிலும் சூரியனும் தெரியுமே..தனிமையிலே….கதவை கிச்சின்னு பூட்டினேன். சிகரெட் புகை இன்னும் காற்றை நிரப்பிக்கொண்டிருந்தது.

டீபாயில் வரிசையாக பிளாக் லேபிளையும், கோக் பாட்டிலையும், புரோட்டா பொட்டனத்தையும், வாழைப்பழத்தையும் அடுக்கி வைத்து அழகு பார்த்தேன். கிச்சனுக்கு போய் ஆப்பாயில் போட்டுக்கொண்டு வந்தேன். கைலிக்கு மாறிடலாமா? அது தான் வசதி. சோபாலதான போட்டேன்? எங்க காணோம்? கீழ விழுந்திருச்சா? இல்லையே!

ஹாங்…அந்தா கொடியிலே கிடக்கு! சுந்தரம் நீ வர வர பொறுப்பாகிட்டே இருக்கியேடா. அழகா மடிச்சு கொடியில போட்ருக்க.


‘தீபாவளி தீபாவளி தீபாவளி நீ தான்டா..சூராவளி சூராவளி சூராவளி சுந்தரம் தான்டா’ பாதி பாட்டில் காலி. ஹக். ஹக். ப்ரியா பிக்கில்ஸ். சுவையும் அலாதி. நாக்கு சத்தமாக சப்பு கொட்டியது. என்னமா டான்ஸ் ஆடறா அசின்? அடா அடா..குமுதத்திலிருந்த அசின் படம் ஞாபகத்திற்கு வந்தது. டேய் சுந்தரம் குமுதத்த எடுத்து அசின க்ளோசப்ல பாருடா. அசின் நீ ஒரு பிசின்..ஹா..கவிதை கவிதை..சுந்தரம்… பொண்டாட்டி ஊருக்கு போனதுக்கப்புறம் கவிதை கூட சொல்றியா நீ?

டீபாயில் அழகாக அடுக்கி வைக்கப்பட்டிருந்த புத்தகங்களைப் புரட்டிப் போட்டு அசின் இருந்த குமுதத்தை தேடினேன். தனம் எடுத்தா எடுத்த எடத்தில வைன்னாடி சொல்வ, இப்பபாருடி, விகடனையும் குமுதத்தையும் மூலைக்கு ஒன்றாக வீசினேன். விகடன் ஷ¥ ரேக் பக்கத்தில் போய் விழுந்தது. முதல் பக்கத்திலே போக்கிரி அசின் அழகாக சிரித்துக்கொண்டிருந்தார். “போக்கிரி” என்று செல்லமாக அசினின் கண்ணத்தை பிடித்து கிள்ளினேன்.

நேத்து ராத்திரி ஆடிச்சது கின்னுன்னு இருக்கு. ஏற்கனவே லேட். அடித்து பிடித்து ஆபிசுக்கு கிளம்பினேன். ராத்திரி அடிச்ச கூத்துல வீடே ரணகளமாகியிருந்தது. சோபாவுக்கு கீழே ஒரே சிகரெட் துண்டுகள். வாழைப்பழத்தோல்கள்..காய்ந்து போன ஆப்பாயில் பிளேட்..தீர்ந்து போன பிளாக் லேபில்.

ஷ¥ ரேக்கிலிருந்து ஷ¥வைத்தேடி பிடித்து எடுத்தேன், விகடன் கீழே விழுந்தது.

கதவைத் திறந்து கொண்டு உள்ளே நிழைந்தேன். படுத்து எடுத்துட்டாயங்க. தனம் செல்லம் இருந்தான்னா சூடா காப்பி போட்டுக் கொடுப்பா. சேரில் உட்கார்ந்து ஷ¥ வைக்கழட்டி கடாசி விட்டு அப்படியே உட்கார்ந்திருந்தேன். செல்லம் எப்படா வருவ?

ஹ¤ம்..ம்ம்.. சோபாவில் வந்தமர்ந்தேன். குமுதம், விகடன், குங்கும எல்லாம் அழகாக அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. எனக்கு சுரீர் என்றது. ஷ¥ ரேக்கைப் பார்த்தேன்..நான் சமீபத்தில் கடாசிய ஷ¥வைத்தவிர சுத்தமாக இருந்தது. குனிந்து கீழே பார்த்தேன். சிகரெட் துண்டுகளைக்காணவில்லை. சுத்தம். ஆப்பாயில் பிளேட்டைக்காணோம். பிளாக் லேபில் காலி பாட்டில் இல்லை. மெதுவாக திரும்பி வீட்டை சுற்றும் முற்றும் பார்த்தேன். அட்சர சுத்தம். யார் கிளீன் பண்ணது.

வேகமாக எழுந்து கிச்சனிலிருக்கும் குப்பைத்தொட்டியைப் பார்த்தென். சிகரெட் துண்டுகளும், பிளாக் லேபிள் பாட்டிலும், வாழைப்பழத்தோல்களும் கிடந்தன. யார் கிளீன் பண்ணது?

ஒன்றும் புரியவில்லை. சாவி என்கிட்ட மட்டும் தான இருக்கு. தனம் வந்துட்டாளா?ஐயையோ.மாடிக்கு இரண்டு இரண்டு படிகளாக ஏறிச்சென்று பார்த்தேன். தனம் இல்லை. என் ரூமில் நான் காலையில் கழட்டிப் போட்ட கைலி அழகாக மடித்து ஹேங்கரில் மாட்டப்பட்டிருந்தது.

தனம் நமக்கு தெரியாமல் வேலைக்காரி செட்டப் பண்ணிருப்பாளோ? இல்லியே. என் கிட்ட மட்டும் தான சாவி இருக்கு!

மணி பார்த்தேன். ஒரு மணி என்று தவறாகக் காட்டிக்கொண்டிருந்தது.

என்ன எழவெடுத்த கடிகாரம் டா, ஒன்னுலே நிக்குது. என் வாட்சைப் பார்த்தேன் மணி 9:40 காலை. நேற்று கடாசிய ஷ¥ வைத்தேடினேன். அழகாக ஹ¥ ரேக்கில் இருந்தது.

ஷ¥ மாட்டிக்கொண்டு வெளியே கிளம்பும் போது, ஒரு யோசனை தோன்றியது. புத்தகங்களையும் பேப்பரையும் எடுத்து ஹால் பூராவும் விசிறினேன். ஷ¥ ரேக்கை ஒரே எத்து. கலைந்து கீழே விழுந்தது. கொடியில் கிடந்த துணிகளை எடுத்து கடாசினேன். ஏன்னா, நேத்து ராத்திரி தனத்துக்கு போன் பண்ணி, எனக்கு வேலைக்காரி எதுவும் செட்அப் பண்ணிருக்கியாடா செல்லம்னு கேட்டேன். உனக்கு அந்த நெனப்பு வேற இருக்காடா, செருப்பால அடிப்பேன்னா. இன்னைக்கு என்ன நடக்குதுன்னு பார்ப்போம். கதவை இழுத்து கிச்சுன்னு பூட்டினேன்.

வேலையே ஓடல. பயங்கர ஆன்டிசிபேஷன். கதவைத் திறந்தேன். கிட்டத்தட்ட நான் மயங்கி விழாத குறை. இன்றைக்கும் அட்சர சுத்தம்.

வீட்டுக்குள்ளே போறதா? வேணாமான்னு ஒரு சந்தேகம்! ‘ஹலோ எனிபடி ஹோம்?’ ன்னு கத்த நினைச்சேன், ஆனா ஈனசுரத்தில தான் முனங்க முடிஞ்சது.

வீட்டில் என்னைத்தவிர யாரும் இல்லை.

மணி அதே ஒன்றைக்காட்டிக்கொண்டிருந்தது. வாங்கி வந்திருந்த புது பேட்டரியை மாற்றினேன். 7:10 என்று திருப்பி வைத்தேன். ஏனோ சாமி பாட்டு கேட்கலாம் போல தோன்றவே. மஹாநதி ஷோபனா பாடிய முருகன் என்றால் அழகு பாடலில் ப்ளேயரில் போட்டேன்.

பயங்கர குளிர். தூங்கிவிட்டேன் போல.ப்ளேயர் சில இடங்களில் திக்கித்திணறிக்கொண்டிருந்தது. விரல்கள் ஜில்லென்றிருந்தது. ஜில்லென்று பத்து விரல்கள். சிடி தேய்ந்து விட்டதோன்னு நினைக்கிற அளவுக்கு மஹாநதி ஷோபனா திக்கினார். பாட்டை நிறுத்தி விட்டு, டீவியை ஆன் செய்தேன். படம் சரியாகத்தெரியவில்லை. சில சமயம் நன்றாகத்தெரிந்தது. பல சமயம் இருட்டாகியது. சை..மணி என்னான்னு பார்த்தேன். 7:15 என்று காட்டியது. அடப்பாவி பேட்டரி ஒர்க ஆகலையா? புது பேட்டரி ஆச்சே. என் வாட்சை எடுத்து பார்த்தேன். அதுவும் ஓடவில்லை. ஏன் இப்படி குளிர்கிறது? டீவியில் செல்வி நாடகம் முடிந்தது.

அப்பொழுதுதான் யாரோ படியிலிருந்து இறங்கி கிச்சனுக்குள் செல்வது போல இருந்தது. குட்டையாக. பெண். தலையை விரித்துக் கொண்டு. எனக்கு உடம்பு சிலிர்த்து விட்டது. தடால் புடால் என்று அடித்துக் கொண்டு எழுந்தேன். கிச்சன் காலியாக இருந்தது. பைப்பில் தண்ணீர் வழிந்து கொண்டிருந்தது.

ஆரம்பத்தில் கொஞ்சம் பயமாகத்தான் இருந்தது. அப்புறம் பழகி விட்டது. பெயரி ஆனந்தியாம். இந்த வீட்டில் வேலைக்காரியாக இருந்திருக்கிறது. அந்த ஐயா ஏமாற்றி விடவே, இதோ நான் உட்கார்ந்திருக்கும் ஷோபாவுக்கு மேலே ரொம்ப வீக்காக சுற்றிக்கொண்டிருக்கும் பேனில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கிறது. ஆனந்தி கொஞ்சம் கனம் தான். பேன் எப்படி தாங்கியது என்று தெரியவில்லை.

நான் எவ்வளவு தூரம் கலைத்துப் போட்டாலும் வீட்டை சுத்தமாக வைத்திருக்கிறது. சம்பளம் கொடுக்கத்தேவையில்லை. ஓசியில் ஏசி குளிர்.ஆனால் கடிகாரத்திற்கும் என் வாட்சுக்கும் மற்ற எலக்ட்ரானிக் பொருட்களுக்கும் பேட்டரி மாற்றித்தான் மாளவில்லை. கடைக்காரார், “என்னடா புரோட்டா கிரோட்டா வாங்கித் திங்கப்படாது, பேட்டரிய ஏன் திங்கற” ங்கறமாதிரி பார்க்கிறார். செல்போனை ஒழித்து வைக்க வேண்டியிருக்கிறது.

ஒரு நாள் அலுப்புடனும் தலைவலியுடனும் வந்து,”ஆனந்தி கொஞ்சம்” காப்பி என்றேன், கொஞ்ச நேரம் முறைத்துப் பார்த்து விட்டு மறைந்துவிட்டது. இரண்டு நாள் லீவு போட்டு விட்டது. வீடெங்கும் ஒரே குப்பை. அப்புறம் நான் காப்பி கேட்க மாட்டேன் நான் காப்பி கேட்க மாட்டேன் என்று என்பது பக்க நோட்டில் எழுதியப் பிறகு வந்து வேலையில் ஜாயின் செய்து கொண்டது. நான் கிரிகெட் மேட்ச் பார்க்கும் பொழுதும், செல்வி தொடர் பார்க்கும் பொழுது மட்டும், இந்தப் பக்கம் வரக்கூடாதுன்னு சொல்லியிருக்கேன். இருந்தாலும் அப்பப்ப வந்து தொந்தரவு செய்யும். மேட்ச் மங்கலாக தெரியும்.

ஒரு வழியா அட்ஜெஸ்ட் ஆகியிருந்தப்பத்தான், வீட்டு ஓனரு தன்னுடைய மகன் (வெளிநாட்டில் வேலை பார்த்தவர்) வந்து இந்த வீட்டில் தங்கப்போவதாகவும், அதனால் வீட்டை காலி செய்யுமாறு சொன்னார். எவ்வளோ மன்றாடியும் கேட்கவில்லை. உங்கள் மகனை நிறைய பேட்டரிகள் அமெரிக்காவிலிருந்து வாங்கி வரச்சொல்லுங்கள், தேவைப்படும் என்று சொன்னேன். புரியாமல் முழித்தார். போகப் போகப் புரியும் அந்த பேயின் வாசம் தெரியும்.

***

கேட்க வேண்டாம்னு தான் நினைச்சேன். ஆனா நமக்கு உபயோகமா இருக்கும்கிறப்போ கேட்கறது தான முறை. அப்புறம் கேட்டிருக்கலாமோன்னு மனசு கிடந்து அலையக்கூடாது பாருங்க.

‘சார் கேக்குறேன்னு தப்பா நினைக்காதீங்க’ என்றேன்.

காபி குடித்துக்கொண்டிருந்த வீட்டு புரோக்கர் நிமிர்ந்து பார்த்து, ‘என்ன சொல்லுங்க’ என்றார்.
நான் தயக்கத்துடன்,’உங்களுக்கு தெரியாதது இல்ல. வீட்டப்பத்தின எல்லா விசயங்களும் உங்களுக்கு தெரியும். வீடு எப்படி. யாராரு இருந்தாங்க.ம்..ம்…ம்…ம்ம்…யாராரு தற்கொலை செஞ்சிருக்காங்கன்னு…’

நான் முடிப்பதற்குள்ள, ‘சரிப்பா. அப்படி எதுவும் இல்லாத வீடாபார்த்து தாரேன்’ என்றார்.
‘இல்ல இல்ல..யாராவது தற்கொலை செஞ்சுக்கிட்ட வீடாப்பாருங்களேன். அதுவும் வேலைக்காரி தற்கொலை செஞ்சுக்கிட்ட வீடாப்பாருங்களேன்’ ன்னு சொன்னேன்.

சற்று நேரம் முறைத்து பார்த்த புரோக்கர், ‘இந்த குசும்பு தான வேணாங்கிறது…’ என்று கன்னாபின்னாவென்று திட்ட ஆரம்பித்தார்.

***

மனைவியின் துணையில்லாமலே ஒண்டி ஆளாய் வீட்டை ஷிப்ட் செய்து விட்டேன். புது வீடுதான். சுவற்றி வாட்ச் நன்றாக ஓடிக்கொண்டிருந்தது. ஆபீஸ் கிளம்புன் முன் – ஒரு நப்பாசையில் – ஷ¥ ரேக்கை கலைத்துப் போட்டேன். பேப்பரையும், துணிகளையும் கடாசினேன். வீடு குப்பையாக இருந்தது.

கதவைத்திறந்தேன். குப்பென்று சிகரெட் வாடை அடித்தது. காலையில் அடித்த சிகரெட் புகை இன்னுமா சுற்றிக்கொண்டிருக்கிறது. கலைத்தது கலைத்து போட்ட மாதிரியே இருந்தது. சுந்தரம் உனக்கு லக் இல்லடான்னு நினைச்சுக்கிட்டே சிகரெட் பாக்கெட்ட எடுத்தேன். பாக்கெட் காலி. டீவி பக்கத்தில் வெச்சிருந்த புது சிகரெட் பாக்கெட்ட எடுக்க போனேன். பாக்கெட் பிரிக்கப் பட்டிருந்தது. இரண்டு சிகரெட்களே மீதமிருந்தது. சோபாவுக்கு அடியிலெங்கும் சிகரெட் துண்டுகள்.

வாட்ச் ஓடவில்லை. மிகவும் குளிராக இருந்தது. யாரோ லுங்கி பனியனுடன் நிற்பது போலிருந்தது. இனி கோல்ட் பிளேக்கும், பிளாக் லேபிலும் இரண்டு மடங்காக வாங்கவேண்டும். ‘ஹாய்’ என்றேன் புதிய கம்பெனி கிடைத்து விட்ட சந்தோஷத்துடன்.

***

9 thoughts on “டன் டன் டன் டகா

  1. நேத்திக்கு அழகி பார்த்திங்களா சன் டிவில? தனம் வந்த பின்னாடி என்ன பண்ணறதா உத்தேசம்?

    Like

  2. namkum thanni adikarathuku company venum….athu pisasa eruntha kuda okay than…enuga, pisasuku mixinga konjam jasthiya uthuna, kandu pididichuduma enna

    Like

  3. wyvern: வாங்க. மிக்ஸிங் சரியில்லைன்னா சாந்தமான பேயா இருந்தா : என்னப்பா இப்படி பண்ணிப்புட்ட..கொஞ்சம் எக்ஸ்ட்ரா ஊத்தப்பான்னு கேட்கும். கோவக்கார பேயா இருந்தா : உங்க இரத்த குரூப் என்னன்னு கேக்கும். ஏன்னா சில பேய்களுக்கு ஒரு குறிப்பிட்ட பிளட் குரூப் தான் புடிக்குமாம், தெரியுமா?

    Like

  4. வெங்கட்ராமன்: வருகைக்கு நன்றி. காமடி கதைன்னு தான் நினைச்சு எழுதினேன், சிரிச்சீங்களா?

    Like

Leave a comment