அட போங்கப்பா. போக்கிரி எவ்வளவோ பெட்டர். அஜித் ராமராக, கிருஷ்ணராக, நரசிம்மராக வேடம் போட்டு தீயவர்களை (அவருக்கு தீங்கு செய்தவர்களை!) அழிக்கிறார். கண்றாவி. போய் கொன்னுட்டு வரவேண்டியது தானே, அது என்ன வேஷம் போட்டுக்கொண்டு கொல்வது? நல்லா புல்லாங்குழல் கையில் வைத்துக்கொண்டு ஆளுயர மாலை போட்டுகொண்டு, உடம்பு முழுக்க நீலக்கலர் பூசிக்கொண்டு, அஜித் வில்லன்களைப் பந்தாடுவது காமெடியாக இருக்கிறது. அஜித் பிணவரையில் வேலை பார்ப்பவர். ஏன் பிணவரையில் வேலை பார்க்கிறார்? அதற்கு கோனார் நோட்ஸ் பாணியில் விளக்கம் அழிக்கப்படுகிறது. அதாவது பழிவாங்கும் மூடில் இருக்கும் அஜித் மனிதர்களைக் கொல்லும் போது பச்சாதாபம் ஏற்படக்கூடாதல்லவா அதனால் தான் பிணவரையில் வேலை பார்க்கிறாராம். பிணங்களைப் பார்த்துப் பார்த்து கொல்லும் போது இரக்க உணர்வு மேலிடாதாம். உக்காந்து யோசிப்பாய்ங்களோ?
எடுத்தவுடன் ராமர் வேடமிட்டு கொல்கிறார். முதல் இரண்டு கொலைகளுக்கு வசனமே கிடையாது. மூன்றாவது கொலை பண்ணும்போது கொலை செய்யப்படவேண்டியவர் தூங்கிக்கொண்டிருக்கிறார். அவர் நெற்றிப் பொட்டில் துப்பாக்கியை வைக்கிறார், ராமர். அவர் தூக்கத்திலிருந்து விழிக்கிறார். வேஷம் போட்டு வந்திருப்பவரைப் வினோதமாக பார்க்கிறார். யார் நீ என்று கேட்கிறார். ராமர் (அஜித்): “கடவுள். நான் கடவுள்” என்கிறார். தியேட்டரில் கைதட்டல் காதைப் பிளக்கிறது. முதல் முறை மட்டுமே. அடுத்த முறை அவர் இதே டயலாக் சொல்லும் போது அடப்போப்பா. பாலாவுக்கே போன் போட்டு சொல்லிடு என்ற நினைப்பே வருகிறது.
அதே அஜித், பிணவரையில் சேர்ந்ததற்கு காரணம் சொல்லிவிட்டு “இங்கே வருபவர்கள் எல்லாம் சுடுகாட்டுக்கு செல்கிறார்கள். நான் மட்டும் இங்கேயே இருக்கிறேன்” என்றவுடன் முன்னால் நான் கடவுள் என்று சொன்னபோது தியேட்டரில் கைதட்டிய அதே நபர், சத்தமாக, “நீ எப்போ போவ?” என்கிறார். தியேட்டரே சிரிக்கிறது.
பல காட்சிகளில் கண்டினியூட்டியே இல்லை. அசின் வேறு பிளவுசில் வீட்டுக்குள் இருக்கிறார். அஜித்துடன் வெளியே வரும் போது வேறு டாப்ஸில் இருக்கிறார். அஜித் வில்லனை -தங்கையைக்கொன்றவனை- தான் வேலை செய்யும் GH ல் பார்க்கிறார். எவ்வளவு கோபம் வரும்? அதும் அவனைக்கொல்ல தேடிக்கொண்டிருப்பவனுக்கு எவ்வளவு கோபம் வரும்? காக்கியூனிபார்மில் இருப்பவர் அவனைப்பார்த்ததும் அவனை விரட்டிக்கொண்டு வெளியே வருகிறார். வரும் போது அழகாக வெள்ளைப் பேண்ட்டும் கலர் சட்டையும் போட்டிருக்கிறார். நீண்ட நாள் தேடிய வில்லனைப் பார்த்தவுடன் யாராவது போய் டிரஸ் சேஞ்ச் செய்து கொண்டு வருவார்களா? அதுக்கும் காரணம் இருக்கிறது. ஏனென்றால் அடுத்து அஜித் வில்லனைத் தவர விடுகிறார். வில்லன் காரில் தப்பிக்கிறார். சிக்னலில் நிற்கிறார். அஜித் துப்பாக்கியை வைத்து சுடுகிறார். குண்டு தவறி அந்தப்பக்கம் வந்த போலீஸ் வேனில் பட்டுவிடுகிறது. போலீஸ் ஏற்கனவே வேஷம் போட்டு கொலை செய்து கொண்டிருக்கும் நபரை தேடிக்கொண்டிருக்கிறார். அஜித்தைப் பார்த்ததும் விரட்டுகிறார். பின்னர் சண்டையில் அஜித் விசிட்டிங் கார்ட் மட்டும் குப்பைத்தொட்டியில் விழுந்து விடுகிறது. உடனே அதில் ஆசிட் விழுந்து போட்டோ மட்டும் தீய்ந்து விடுகிறது. ஆனால் GH என்பது தெளிவாக தெரிகிறது. உடனே போலீஸ் GHக்கு சென்று எல்லோரையும் சோதனை போடுகிறார். போலீஸ் கும்பல் கும்பலாக ஹாஸ்பிடலுக்கு உள்ளே ஓடிக்கொண்டேயிருக்கின்றனர் சில நிமிடங்களுக்கு. அப்புறம் அஜித் காக்கி சட்டையில் வருகிறார். அப்போ காக்கி சட்டையில் சண்டை போட்டால் போலீஸ் கண்டுபிடித்துவிடுமாம். அதனால் கலர் சட்டையில் ஓட விட்டிருக்கிறார். இவ்வளவு தூரம் யோசித்த டைரக்டர் கதையை கொஞ்சம் யோசித்திருக்கலாம்.
யாருப்பா அவரு, போலீஸ் இன்ஸ்பெக்டர்? சொடக்கு போடவே நேரம் பத்தல அவருக்கு. எதுக்கெடுத்தாலும் அவனைப் புடிக்காம விடமாட்டேன் என்று சபதம் போடுகிறார். வேஷம் போட்டு கொலைகாரன் கொன்றான் என்று தெரிந்தவுடன், அவர், இந்த சிட்டில யாரெல்லாம் வேஷம் போட்டிருக்கிறார்களோ அவர்களை எல்லாம் பிடித்துவாருங்கள் என்கிறார். வெஷம் போட்டவன், அப்படியே வேஷத்தோடா இருப்பான்? ஜென்டில்மேனின் சரண்ராஜை இமிடேட் செய்ய முயற்சித்திருக்கிறார். பாவம்.
அசின். அழகாக இருக்கிறார். திரிஷா ரசிகர் மன்றத்திலிருந்து அசினுக்கு மாறிவிடலாமா என்று யோசித்துக்கொண்டிருக்கிறேன். ஆனால் என்ன வேலை அவருக்கு? பாடல் பாடவேண்டுமே.அப்புறம் ஹீரோவைத் துரத்தித்துரத்தி காதலிக்கிறார்.ஹைதரபாத்திலிருந்து வரும் அவர் ஏன் பிணவரையில் வேலை செய்யும் அஜித்தை தொரத்தி தொரத்தி காதலிக்க வேண்டும்? ஒரு மண்ணும் புரியல. பாடலுக்கு முன்னால் வருகிறார். அவ்வளவே. அவர் வந்தவுடன் தியேட்டரி அடுத்த பாடலா என்ற கமென்ட் எழுகிறது.
அப்புறம் ஒரு மிக பழைய பிளாஷ்பேக். அஜித்தின் அம்மாவும், தங்கையும் எப்படி கொல்லப்பட்டார்கள் என்பதை சொல்கிறார்கள். கதாகாலாட்சேபம் போல இருக்கிறது. பெருமாள் எங்களை தண்டிப்பார் என்று யாராவது ஒருவர் சொல்லிக்கொண்டேயிருக்கிறார்கள். பக்தி சொற்பொழிவு ஆற்றுபவர் எல்லோரையும் கடவுள் என்கிறார். அஜித்தைப் பார்த்தும் கடவுள் என்கிறார். கடவுளே. அன்பே சிவம் நாங்க பாத்தாச்சுப்பா. அப்புறம் அவர் அம்மாவிடம் (கீதா) சென்று தன்னைகடவுள் என்று சொன்னதாக கூறியவுடன், அவர் நீ எங்களுக்கு கடவுள் தந்த பிள்ளை தானப்பா என்று கூறுகிறார். மேலும் போட்டோ அல்பம் ஒன்றை எடுத்துக் காட்டுகிறார். அதில் சிறுவனாக பல கெட்டப்புகளில் – ராமர், கிருஷ்ணர் – காட்சி தருகிறார். அதனால தான் வேஷம் போட்டு கொன்றாராம், ஆழ்வார். கீதா அந்த ஆல்பத்தை அவரிடம் காட்டாமலே இருந்திருக்கலாம். பிளாஷ்பேக் முடிந்தவுடன், பின்னாலிருந்து ஒரு கமெண்ட் சத்தமாக “அப்பாடா ஒரு கண்டத்தை தாண்டியது போல இருக்கு”
ஒரே சத்தம். ஜூம் ஜூம் என்று காமெரா focus-unfocus ஆகிக்கொண்டேயிருக்கிறது. அஜித் பல ஆங்கிளில் காட்டப்படுகிறார். அடித்து நொறுக்கிறார். ஒரே குத்து ஆள் பல அடி உயரத்திற்கு பறந்து சென்று பல பல்டி அடித்து விழுகிறார். கண்ணாடிகள் சில்லு சில்லுகாக உடைகிறது. நமது காது கிழிகிறது. கடைசியில் நரசிம்ம வேடம் போட்டு மெயின் வில்லனை அழிக்கிறார். வயிற்றைக் கிழிக்கிறார். ஏன் டைம் வேஷ்ட் பண்ணி வேடம் போடுகிறார்? டிரஸ் செட், மாலை, சிங்க முகமூடி எல்லாம் கையிலே வைத்திருப்பாரோ? மாலை எங்க போய் வாங்குவார்?
விவேக் இருக்கிறார். ஐயோ பாவம். வடிவேல் ஓவர் டேக் செய்கிறார் சார், கொஞ்சம் சிரிக்க வைங்க. ஒரே ஒரு இடம் தான் நன்றாக இருந்தது. அதாவது மைல்சாமி சிறு தொழில் லோன் வாங்கி ஐந்தாயிரம் ரூபாய்க்கு அனுமார் வேஷம் போட்டு, பிச்சை எடுத்து, மாருதி கார் வாங்கினாராம். அதற்கு விவேக் கேட்கிறார் : என்னடா லோன் வாங்கி கார் வாங்கிட்ட எப்போ லோன் கட்டுவ? அதற்கு மைல்சாமி சொல்கிறார்: அடுத்த ஆட்சி வரும் போது அதான் லோன கேன்சல் பண்ணிருவாங்கல்ல பிறகு எதற்கு கட்டனும்.
மனோரமா இருக்கிறார். பிராந்திக்கும் மூட்டு வலி தைலத்திற்கும் வித்தியாசம் தெரியாத பாட்டி பாவம். முதல் முறை அடித்தவுடன் சடார் சடார் என்று திரும்பி, அருணாச்சலம் அருணாச்சலம் என்கிறார்.
இன்னொரு விசயம். ஐடி கார்ட் போலிஸில் கிடைக்கிறது. அதில் ஆசிட் விழுந்து முகம் தெரியாமல் போகிறது. உடனே போலீஸ் ஐடி கார்டை எடுத்துக்கொண்டு கம்ப்யூட்டர் ஸ்பெசலிஸ்ட் கிட்ட எடுத்திட்டு போய் அதற்கு பொருத்தமான உருவங்களை இணைத்துத் தரச் சொல்கிறார். முடியுமாங்க? தெரியல. ஆனால் அந்த மனிதர் பயங்கரமான அதி மேதாவியாக இருப்பார் போல அஜித்தின் போட்டாவை கனகச்சிதமாக வரைந்து கொடுக்கிறார். கச்சிதமாக. முல் முல்லாக மீசையுடன். உதட்டுக்குக்கீழ் இருக்கும் தாடி முதற்கொண்டு. சார். தொழில்நுட்பத்தை வெளியிடுங்கள் சார். பில் கேட்சை மிஞ்சி விடலாம்.
பாடல்கள். சொல்லித்தரவா சொல்லித்தரவா சொல்லித்தரவா. பரவாயில்லை. முகமத் சலாமத்தும், சாதனா சர்க்கமும் டமிலை கொலை செய்திருக்கிறார்கள் (சொல்லப்போனால் கற்பழித்திருக்கிறார்கள்!). “செலா செலா செலா நித்தானே ஷெப்பு செலா மலா மலா மலா நீ தானே கொல்லி மலா” என்கிறார். சுஜாதாவின் இடது கை விருதான நன்றாக தமிழ் பேசுவது எப்படி என்ற புத்தகத்தை இவருக்கு வழங்கலாம். உன்னிக்கிருஷ்ணன் பாடிய பல்லாண்டு பல்லாண்டு பாடல் நன்றாக இருந்தது. கேட்பதற்கு மட்டும்.ரிரெக்கார்டிங்: ஸ்ரீகாந்த் சார் காதிலிருக்கும் ear bud ஐ எடுத்துவிட்டு மியுசிக் போடுங்க. எங்க காது கிழியுது. இதுல matrix revolution music வேறு.
ஆனால் ராமர் வேடம் அஜித்திற்கு கனகச்சிதமாக பொருந்துகிறது. ராமாயணம், மகாபாரதம் சினிமாவாக எடுப்பவர்கள் அஜித்தை தாரளமாக அப்ரோச் செய்யலாம்.
கம்ப்பாரேட்டிவ்லி போக்கிரி பல மடங்கு பெட்டர். ஆழ்வார் சார், முழிச்சுக்கோங்க சார்.
semmaiya irukku unga post. enjoyed reading 🙂
LikeLike
:-)நல்ல விமர்சகருக்கான சுஜாதா விருதை உங்களுக்கு கொடுக்க சொல்ல தோன்றுகிறது
LikeLike
சூப்பர் விமர்சனம்.அஜித் கொலைப்படை வந்து தாக்கப்போவுது. உஷார்! 🙂
LikeLike
Ayya….en ayya pongal annaikku sucide attempt…..poludhu poga lei na guppura padhuthu asin illey trisha ooda duet pada vendiyathu thaney…..kali pongal than po…..kal nenju karan ayya nee…….>>> ..peyar unnakku therium.. >>>
LikeLike
Laugh riot! ! சும்மா பின்னி எடுத்திருக்கீங்க! :))
LikeLike
most biased review ….. hope u landed up in to this movie and all along in ur life u have seen only oscar winning movies no mention on ajith’s new lookbut keep doing this inspite of all ur blah blahs see this Aazhwar opens at No.1!2007 Week 2[1] ஆழ்வார் – 96 shows daily – 24 screens (opening)[2] போக்கிரி – 64 shows daily – 16 screens (opening)[3] திருவிளையாடல் ஆரம்பம் – 37 shows daily – 11 screens (5th weekend)[4] வெயில் – 32 shows daily – 10 screens (6th weekend)[5] தாமிரபரணி – 28 shows daily – 7 screens (opening)[5] வரலாறு – 28 shows daily – 12 screens (13th weekend)[7] குரு – 25 shows daily – 6 screens (opening)[8] ரெண்டு – 23 shows daily – 7 screens (8th weekend)[9] நெஞ்சிருக்கும்வரை – 18 shows daily – 7 screens (5th weekend)[10] அழகிய அசுரா – 12 shows daily – 6 screens (4th weekend)[11] பொய் – 11 shows daily – 5 screens (4th weekend)[12] ஈ – 10 shows daily – 6 screens (13th weekend)http://boxoffice.blogs.friendster.com/Thala rocks .. and hope except few high qualified flim critics available in net .. nobody give a look for your reviewand best part is prasiaing vijay CTRL + C , CTRL + V attempt on mahesh Babu the PRINCE …… LOL …. puliya paathu punnai soodu potta kadhai than ……
LikeLike
அனானி: வருகைக்கு நன்றிநிர்மல்: விருதா? இடது கையா? வலது கையா? வந்ததுக்கு நன்றி நிர்மல்.சர்வே சன்: கொலைப்படையா? ஏன் சார் பயமுறுத்திறீங்க?வேட்டையராஜா: சரிடா. நீ தப்பிச்சிட்டீல பேசுவ!சுதர்சன்: தாங்கஸ்அனானி: சரிங்க சார். ஓகே சார். குட் மார்ணிங் சார். ப்ரசண்ட் சார். வந்ததுக்கு தாங்க்ஸ் சார்.
LikeLike
Releasing in More number of theatres in not important. Make it to box office is important
LikeLike