“பேனா எங்கேயடா? அடே ராசா நீ எடுத்தாயா? குரங்குகளா, ஒன்றை மேஜைமேல் வைக்கவிடாதீர்கள். அது பேனாவாகவா இருக்கிறது? இருந்தாலும் இந்த குழந்தைகள் இருக்கிறதே, சனியன்கள். மழலையாம், குழலாம், யாழாம்! அதைவிட ஒரு ஓட்டைக் கிராமபோனை வைத்துக்கொண்டு காதை துளைத்துக்கொள்ளலாம்.”
குழந்தைகளால் என்ன பிரயோஜனம்? சுத்தத் தமிழ் பேசத் தெரியுமா? அவைகளுக்குத்தான் என்ன ஒரு கூட்டத்திலே பழகத் தெரியுமா? இன்னும் அழாமல் இருக்கத்தெரியுமா?
எங்கள் வீட்டு ராஜா இருக்கிறானே அவன் பேச்செல்லாம் பாட்டு, பாட்டெல்லாம் அழுகை. அதுதான் கிடக்கிறது. அவனிடத்தில் என்ன அதிசயம் இருக்கிறது? அவனுக்கு இருக்கிம் அசட்டுத்தனத்திற்கு என்ன சொல்லுகிறது? என்னுடைய கைத்தடியை எடுத்துக்கொண்டான். அதுதான் அவனுக்கு குதிரையாம். குதிரைக்கும் தடிக்கம்பிற்கும் வித்தியாசம் தெரியாத அசட்டைப் பார்த்து யாரால் உத்ஸாகப்பட முடியும்? அதற்கும் ஒரு பிரகிருதி இருக்கிறது. அதுதான் அவன் தாயார். குதிரை மட்டுமா. காராக மாறுகிறது. மோட்டார் சைக்கிள் இரட்டை மாட்டுவண்டி இன்னும் என்ன வேண்டும்?
அதுதான் கிடக்கிறது தமிழை தமிழாகப் பேசத் தெரிகிறதா? இலக்கணம் தெரியுமா? தொல்காப்பியம் படித்திருக்கிறதா? இந்த குழந்தைகளினால் என்ன பிரயோஜனம்? உங்களுக்கு தெரியுமா அவைகளினால் என்ன பிரயோஜனம்?
–மணிக்கொடியில் 15.7.1934 அன்று புதுமைப்பித்தன் அவர்கள் எழுதிய கவிதை என்ற தலைப்பிட்ட கட்டுரையிலிருந்து
மேலும் யூடியூபிலிருந்து ஒரு வீடியோ:
http://www.youtube.com/watch?v=cXXm696UbKY
PS:
எங்கள் வீட்டில் ராஜா இல்லை, ராணி!!
Vaazhththukkal!..Ag
LikeLike
vara vara blogs la ellam oru daddy effect theriyudhe boss….
LikeLike