பாரீஸில்

மீண்டும் பாரீஸ் பிஸின‌ஸ் ட்ரிப்பில் வ‌ந்திருக்கிறேன். இந்த‌ முறை கொஞ்ச‌ம் அதிக‌ நாள் த‌ங‌க‌ வேண்டும். இர‌ண்டு மாத‌ங்க‌ள். இந்த‌ முறை அனுஷாவையும் நிதியையும் அழைத்து வ‌ர‌வில்லை. வ‌ந்து மூன்று நாட்க‌ள் தான் ஆகிற‌து அத‌ற்குள் அவ‌ர்க‌ளை ரொம்ப‌வும் மிஸ் செய்கிறேன். சாய்ங்கால‌ம் ஆபீஸ் விட்டு வ‌ந்த‌வுட‌ன் என் ம‌க‌ள் கையை நெற்றிக்கு அருகில் ஸ்ட்ரெயிட்டாக‌ வைத்து சொல்லும் “ஹ‌லோ டாடி”யை மிஸ் செய்கிறேன். அவ‌ள் என் கைக‌ளைப் பிடித்து ‘லா லா லா’ பாடுவ‌தை மிஸ் செய்கிறேன்.

ச‌ன்டீவியின் அத்துமீற‌ல்

ஆறு வ‌ருட‌ங்க‌ளுக்கு (ஃபெப்ர‌வ‌ரி 1 2004 அன்று) முன் ஜான‌ட் ஜாக்ச‌னும் ஜ‌ஸ்டின் டிம்ப‌ர்லேக்கும் சூப்ப‌ர் ப‌வுல் ஃபுட்பால் போட்டியில் ந‌ட‌ன‌மாடிக்கொண்டிருந்த‌ பொழுது ஜான‌ட்டின் ஒரு ப‌க்க மார்பு துணியை உண‌ர்ச்சி வேக‌த்தில் தெரியாம‌ல் கிழித்து விட்டார் டிம்ப‌‌ர்லேக். (தெரிந்தே செய்தார்; அவ‌ருடைய‌ பாட‌லில் இது போன்ற‌தொரு வ‌ரி வ‌ருகிற‌து “Hurry up ’cause you’re taking too long… better have you naked by the end of this song”  என்று வாதிடுப‌வ‌ர்க‌ளும் இருக்கிறார்க‌ள் )

 இந்த‌ வ‌ர‌லாற்று அம்ச‌ம் பொருந்திய‌ ச‌ம்ப‌வ‌ம் ந‌ட‌ந்த‌து வெறும் அரை செக‌ன்ட் ம‌ட்டுமே. இந்த‌ super bowl நிக‌ழ்ச்சியை நேர‌டியாக‌ ஒளிப‌ர‌ப்பிக்கொண்டிருந்த‌ சிபிஎஸ் தொலைக்காட்சி சேன‌ல் இந்த‌ ச‌ம்ப‌வ‌த்தையும் ஒளிப‌ர‌ப்பிவிட்ட‌து.

மீடியாக்க‌ளை க‌ண்காணிக்கும் ‍பிடிசி இந்த‌ ச‌ம்ப‌வ‌ம் ஒளிப‌ர‌ப்பான‌தைக் க‌ண்டித்து இன்டீச‌ன்சி க‌ம்ப்ளெய‌ன்ட் (idenceny complaint) வ‌ழ‌க்கை பெட‌ர‌ல் கோர்ட்டில் (FCC)  தாக்க‌ல் செய்த‌து. இந்த‌ நிக‌ழ்ச்சி ஒளிப‌ர‌ப்பான‌தைத் தொட‌ர்ந்து 540,000 புகார்க‌ள் அமெரிக்க‌ ம‌க்க‌ளால் தாக்க‌ல் செய்யப்ப‌ட்ட‌து. க‌ன‌டாவில் ம‌க்க‌ள் புகார் செய்த‌ன‌ர்.
வ‌ழ‌க்கை விசாரித்த‌ ஃபெட‌ரல் கோர்ட் இதை ஒளிப‌ர‌ப்பிய‌ சிபிஎஸ் க்கு 550000 டாலர் அப‌ராத‌ம் விதித்த‌து. இந்த‌ வ‌ழ‌க்கு இன்றும் நிலுலையில் இருக்கிற‌து என்ப‌து வேறு விச‌ய‌ம்.

நேர‌டி ஒளிப‌ர‌ப்பில் (திட்ட‌மிடாம‌ல்) ந‌ட‌ந்த‌ த‌ற்செய‌ல் நிக‌ழ்ச்சிக்கே அமெரிக்க ம‌க்க‌ள் 540,000 புகார்க‌ளை ப‌திவு செய்த‌ன‌ர். 550,000 டாலர் அபராத‌ம் விதிக்க‌ப்ப‌ட்ட‌து.

ஆனால் ச‌ன் டீவி ஒளிப‌ர‌ப்பிய‌ நித்தியான‌ந்தர் ர‌ஞ்சிதா ச‌ம்ப‌ந்த‌ப்ப‌ட்ட‌ காட்சிக‌ள் அப்ப‌ட்ட‌மான‌ அத்துமீற‌ல். திட்ட‌மிட்ட‌ செய‌ல். Explicit sexual content. ப்ரைம் டைம் செய்தி நேர‌த்தில் ஒரு வீட்டில் எல்லோரும் அம‌ர்ந்து செய்தி பார்த்துக்கொண்டிருக்கும் பொழுது எப்ப‌டி இவ்வாறான‌ செக்ஸ் ப‌ட‌த்தை ஒளிப‌ர‌ப்பினார்க‌ள்? ஒளி ஒலி ப‌ர‌ப்பிய‌து குற்ற‌மில்லையா?

முத‌லில் ச‌ன்டீவியின் மேல் தானே வ‌ழ‌க்கு ப‌திவு செய்ய‌வேண்டும்? குஷ்புவின் மீதும் ஜெய‌ராமின் மீதும் நித்தியான‌ந்த‌ர் மீதும் வ‌ன்முறைக‌ளை க‌ட்ட‌விழ்த்து விடும் ம‌க்க‌ள் முத‌லில் த‌ங்க‌ள‌து வ‌ர‌வெற்ப‌றையில் என்ன‌ ந‌ட‌க்கிற‌து என்று பார்க்க‌வேண்டும்.

நித்தியான‌ந்த‌ர் செய்த‌து குற்றமா இல்லையா என்ப‌து அவ‌ரை பின்ப‌ற்றுப‌வ‌ர்க‌ளின் ந‌ம்பிக்கை சார்ந்த‌து;அது அவ‌ர்க‌ளை ம‌ட்டுமே பாதிக்கும்; ஆனால் ச‌ன்டீவி செய்த‌து எல்லோரையும் பாதிக்கும் ஒரு அப்ப‌ட்ட‌மான‌ அத்துமீற‌ல்.
 
Do we have parental television council or media watch dog group here? மீடியாக்க‌ளை க‌ண்காணிக்கும் குழு இந்தியாவில் இருக்கிற‌தா இல்லையா? ஏனென்றால் ந‌ம‌து குழ‌ந்தைக‌ளும் டீவி பார்க்கிறார்க‌ள்.

Darren Brown : ஹிப்னாட்டிஸம் (Videos)

Darren Brownஐப் பற்றிய தகவல்களை இங்கே பார்க்கலாம்.

யூடியூபில் நான் கண்டெடுத்த சில வீடியோக்கள்!

நடு ரோட்டில் நிறையப் பணத்துடன் வைக்கப்பட்ட wallet.
video [http://www.youtube.com/watch?v=bxYCh_p2Mjs&feature=related]

முன்னப்பின்னத் தெரியாதவரிடம் அவரது walletஐ just like that கேட்டுப்பெறுவது எப்படி?
video [http://www.youtube.com/watch?v=CIIz2FAgwcw&feature=related]

குடிக்காமல் போதை வருமா?
video [http://www.youtube.com/watch?v=zryGzTbU49I&feature=related]

கண்ணுக்குத் தெரியாமல் மறைந்துகொள்வது?
video [http://www.youtube.com/watch?v=Ws54lrylm7c&feature=related]

எண் விளையாட்டு
video [http://www.youtube.com/watch?v=gxJtlJ4eze4&feature=related]

Control shopping mall visitors?
video [http://www.youtube.com/watch?v=IOEKdaXIEHc&feature=related]

மக்களை அசையாமல் நிற்கவைக்க முடியுமா?
video [http://www.youtube.com/watch?v=KTml6AY-1RQ&feature=related]

🙂

மழை செய்யும் கோளாறு கொதிக்குதே பாலாறு (ஐ லவ் இளையராஜா)

இந்தப்பாடல் எப்பொழுது கேட்டாலும் அதே நறுமணத்துடன் புத்தம் புதியதாக இருப்பது எனக்கு ஆச்சரியம். எத்தனை முறை கேட்டாலும் அலுக்கவே அலுக்காத பாடல். இது போல ஒரு சிச்சுவேஷன் சாங் எனக்குத் தெரிந்து இல்லை. இது இளையராஜா பாடலா இல்லை ஜானகி பாடலா என்பதில் எனக்கு சிறு குழப்பம் எப்பொழுதுமே இருக்கும். ஆனால் உன்னிப்பாகக் கேட்டால் இது இருவரது பாடல் என்பது விளங்கும். Fantastic team work.

முதலில் முழுப்பாடலையும் கேளுங்கள் அப்புறம் எனக்கு பிடித்தமான இடங்களைக் கேட்கலாம்.

ஆரம்பமே அமர்களம்; முதலில் இளையராஜா தனது வேலையை முடித்துவிட்டு ஜானகியிடம் கொடுத்துவிடுகிறார்; ஜானகியின் ஹம்மிங்கும் பிறகு தூக்கலாக பொன்வானம் பன்னீர் தூவுது என்று சட்டென்று அவர் ஆரம்பிப்பதும் அருமை.

மறுபடி இளையராஜா;பிறகு மறுபடியும் ஜானகி. fantastic humming அப்புறம் லல்லலலா; பிறகு மறுபடியும் இளையராஜா; உன்னிப்பாகக் கவனித்தீர்கள் என்றால் இளையராஜா இரண்டு விதமான தாளம் பயன்படுத்தியிருப்பார்; மழைப்பூக்களே (பின்னால் ஒரு தாளம்) ஒதுங்க இடம் பார்க்குதே (வேறொரு தாளம்); மலர் அம்புகள் (முதல் தாளம்) உயிர் வரைக்கும் தாக்குதே (அதே இரண்டாம் தாளம்) அது தான் கடைசி வரையிலும் வரும்!

Best Part! ஜானகியின் லல்லல்லலாவும் இளையராஜாவின் பின்னனியும்; வெள்ளை மல்லிகை தேவ கண்ணிகை என்னும் இடத்தில் முற்றிலும் வேறு விதமான இசையைப் பயன்படுத்தியிருப்பார்.

My most favourite song!

சென்னையில் நடக்கும் உடல் பாகமாற்று மோசடி : நேஷனல் ஜியோகர·பி

நான் ஏற்கனவே வாடகைத்தாய் outsourcing பற்றி எழுதியிருந்தேன். இன்று நேஷனல் ஜியோகர·பியில் Inside என்றொரு நிகழ்ச்சி பார்த்துக்கொண்டிருந்தேன்; மேலை நாட்டு மக்களின் தேவைகளுக்காக வளர்ந்துவரும் நாடுகளின் மக்கள் ஒரு சொற்ப தொகையை வாங்கிக்கொண்டு தங்களது உடல் பாகங்களை விற்பது தொடர்பான ஒரு டாக்குமென்டரி. கிட்னி விற்பது (கடத்துவது) தொடர்பாக ஏறக்குறைய பதினைந்து ஆண்டுகளுக்கு முன்னரே பல சினிமாக்கள் தமிழில் வந்துவிட்டன. பல (நம்பர் ஒன் புலனாய்வு) பத்திரிக்கைகள் இதைப் பற்றி ஏற்கனவே பல முறை பல்துளக்கி இருக்கின்றன. விவேக் கூட காமெடி பண்ணியிருக்கிறார். ஆனால் இப்பொழுதும் சென்னையில் இது போன்ற மோசடிகள் நடக்கின்றன என்று நேசனல் ஜியோகரபியில் பார்த்தபொழுது மனதுக்கு கொஞ்சம் கஷ்டமாகத்தான் இருக்கிறது.

பாகங்கள் மாற்றிப் பொருத்தப்படுவது சென்னையில் மிகப்பெரிய பிஸினஸ். ஒரு கிட்னி மாற்றிப்பொருத்துவதற்கு அமெரிக்கர்கள் (அல்லது பணக்காரர்கள்) நாற்பதாயிரம் டாலர் வரை கொடுக்கிறார்களாம். சுனாமிக்குப் பிறகு வாழ்விழந்த நிறைய பேரி கிட்னியை தானமாக கொடுத்திருக்கிறார்களாம். NGயின் நிருபர் ஒருவர் (வெளிநாட்டவர்) தமிழர் ஒருவரின் துணையுடன் அவர்களை சந்தித்தார். ஒவ்வொருவரும் வயிற்றில் மிகப்பெரிய கீரலைக் காட்டுகின்றனர். ஒவ்வொருவரும். அவர்களுக்கு நியாயமாகக் கிடைக்கவேண்டிய பணம் கிடைக்கவில்லை என்று நிருபர் சொல்கிறார். அவர்களும் சொல்கிறார்கள். ஆனால் யாரும் வாயைத்திறக்க முன்வரவில்லை.

கடைசியாக் ஒருவர் பேட்டிக்கு சம்மதித்து ஒரு தனியான இடத்திற்கு நிருபரை அழைத்துச்சென்று தனக்கு நேர்ந்த துயர சம்பவத்தைக் கூறுகிறார். பக்கத்துவீட்டுக்கு அடிக்கடி நிறைய பேர் வந்து போவதை அறிந்த அவர் என்னவென்று விசாரிக்க அங்கே ஆரம்பித்தது அவருக்கு சோதனை. பக்கத்துவீட்டுப் பெண் அவர்கள் கிட்னி விற்கிறார்கள் என்றும் ஒன்றரை லட்சம் வரை கிடைக்கும் என்றும் ஆசை காட்ட இவரும் தனக்கிருக்கும் கஷ்டங்களை நினைத்து தனது கிட்னியை விற்கமுடிவு செய்திருக்கிறார். ஒரு புரோக்கரின் துணையுடன் விற்பதற்கு ஏற்பாடு செய்திருக்கிறார். ஏகப்பட்ட டெஸ்ட்களுக்குப் பிறகு மதுரையில் உள்ள ஒரு ஹாஸ்பிட்டலில் இந்த பாகம் மாற்றுதல் நடந்தேறியிருக்கிறது. எல்லாம் முடிந்த பிறகு அந்தப் பெண்ணுக்கு கொடுக்கப்பட்ட தொகை வெறும் எழுநூறு டாலர்கள். நாற்பதாயிரம் எங்கிருக்கிறது எழுநூறு எங்கிருக்கிறது?

நியாயம் கேட்டதற்கு அவர் மிரட்டப்பட்டிருக்கிறார். கொலை மிரட்டலும் வந்திருக்கிறது. NGயின் ரிப்போர்ட்டர் அந்த புரோக்கரைத் தேடிப்பிடித்து அவரிடம் செல்கிறது. அவர் டீக்கடை வைத்திருக்கிறார். அவரது மனைவியோ யாரோ போயிடுங்க போயிடுங்க என்று சொல்கிறார். புரோக்கர் பேச விருப்பம் தெரிவிக்கவில்லை. பிறகு என்ன நடந்ததோ அவரே பேச வருக்கிறார். அந்தப் பெண்ணுக்கு என்ன கிடைக்கவேண்டுமோ அது கிடைத்திருக்கிறது. மூன்று வருடம் கழித்து ஏன் அவர் இதைப் பெரிது படுத்தவேண்டும்? என்கிறார்.

அந்தப் பெண்ணுக்கு டீன் ஏஜில் ஒரு பையன் இருக்கிறான். அந்தப்பையனின் கால்கள் வீங்கிக்கொண்டிருக்கிறது. கிட்னி ·பெயிலியர். அம்மா ஏற்கனவே சொற்ப பணத்துக்கு கிட்னியை விற்றுவிட்டாள். மகனுக்குக் கொடுக்க அம்மாவிடம் கிட்னி இல்லை. விதி என்று சொல்லமாட்டேன்.

இந்த பாகமாற்று முறைக்குப் பின்னால் ஒரு பெரிய நெட்வொர்க் இருக்கிறதாம். டாக்டர்கள், புரோக்கர்கள், டிராவல் ஏஜென்டுகள், பணம் மாற்றும் கள்ள மார்கெட்டுகள், அதிகாரிகள். வெளிநாட்டவருக்கு பாகங்கள் மாற்றிப்பொருத்துவதை சட்டம் அனுமதிக்க வேண்டுமா இல்லையா என்பது தனி டிபேட்டாக இருக்கட்டும், அதற்கு முன் ஏனப்பா பாவம் கிட்னி விக்க வர்றவங்ககிட்ட கூட மோசடிபன்றவங்களக் கூட கண்டுக்கமாட்டீங்களா?

NG புலனாய்வு செய்ததை நமது நம்பர் ஒன் புலனாய்வு பத்திரிக்கைகள் ஏன் செய்யவில்லை? அவர்களுக்கு விரல் நாயகனையும் குரல் நாயகியைப் பற்றியும் துப்புதுலக்கவே நேரமில்லை.பாவம் விட்டுவிடுங்கள்.

இந்த பாகமாற்று க்ரைம் சைனாவையும் விடவில்லை ஏன் நியுயார்க்கைக் கூட விடவில்லை. சைனாவில் கைதிகளிடமிருந்து பாகங்கள் வாங்கப்பட்டிருக்கின்றன. நியுயார்க் இன்னும் மோசம். பிணப்பெட்டியில் அடக்கம் பண்ணப்பட்ட பிணங்களில் இருந்து எழும்புகள் மற்றும் பல பாகங்கள் எடுக்கப்பட்டிருக்கின்றன. யாருடைய அனுமதியும் இல்லாமல்.

மோசடி வெளிச்சத்துக்கு வரும் வரை; நியுயார்க் முழுவதும் நான்கு இடுகாடுகள் இந்த மோசடியில் சம்பந்தப்பட்டிருந்தனவாம்.

வறுமையில் வாடும் மக்களை பணமுதலைகள் தங்கள் சுயநலத்திற்கு பயன்படுத்துவது என்று தான் முடிவுக்கு வருமோ தெரியவில்லை. லஞ்சம் வாங்கும் அதிகாரிகளும் மோசடிக்கு பெரிதும் உதவும் புரோக்கர்களும் என்று தான் பிடிபடுவார்களோ தெரியவில்லை. சுனாமி போன்ற பெரிடர்கள் தாக்கும்பொழுது வழுவிழந்த மக்களைக் குறிவைத்து பண முதலைகளும் புரோக்கர்களும் பல காய்கள் நகர்த்துவார்கள். இவர்களுக்கு செக் வைப்பது யார்? இதைத் தடுக்க என்ன செய்யலாம்?

யார் முழித்திருக்கப் போகிறார்கள் – 9 (முடிந்தது)

3 டிசம்பர் 2005

இந்த தேதி நம்மில், இருபது ஆண்டுகளுக்கு முன்னர் நடந்த சம்பவத்தை தவிற வேறு எதையாவது நினைவு படுத்துகிறதா?

ஆனால் மிகவும் முக்கியமான நாள் இது. இருபத்தியோரு வருடங்களுக்கு முன்னர் சிறு குழந்தைகள் – சிறுவர்களும் சிறுமிகளும் – மிகுந்த நச்சுத்தன்மை கொண்ட ஒரு வாயுவால் பாதிக்கப்பட்டனர். இன்றைக்கு இந்த சிறுமிகளும் சிறுவர்களும் குழந்தை பெற்றுக்கொள்ளும் அளவிற்கு வழந்திருப்பார்கள். பிறக்கப்போகும் இந்த குழந்தைகள் குறைகளோடு பிறப்பார்களா? விஷவாயுவின் நச்சுத்தன்மை பாதிக்கப்பட்டவர்களின் உடல்களில் இருந்துகொண்டு பிறக்கப்போகும் குழந்தைகளை பாதிக்குமா? இது வரை மறுக்கப்பட்ட இந்த விசயத்தை புள்ளிவிபரங்கள் வெளிச்சத்துக்கு கொண்டுவருமா?

போப்பால் பேரிடர் இன்னும் நிகழ்ந்துகொண்டுதான் இருக்கிறதா?மார்ச் 21 2001 அன்று கைவிடப்பட்ட அந்தத் தொழிற்சாலையின் வளாகத்தில் தீப்பிடித்துக்கொண்டது. அந்தத் தீ அருகில் இருந்த 32 குடிசைகளை சிதைத்தது. அங்கு வாழ்ந்தவர்கள் மிளகாய் எறிந்து கருகும் வாடையை சுவாசித்ததாகச் சொன்னார்கள். அவர்கள் கண்களிலிருந்து நீர் வழிந்தோடிக்கொண்டிருந்தது. எறிந்துகொண்டிருந்த தீ அவர்களை முச்சுத்திணறடித்தது அவர்கள் சுவாசிக்க இயலாமல் தொண்டை அடைக்க டிசம்பர் 3 1984 ஐ நினைவுகூர்ந்தனர். வரலாறு திரும்பியது.

பிப்ரவரி 2001இல் டவ் கெமிக்கல்ஸ் (DOW) என்கிற மிசிக்கனைச் சேர்ந்த நிறுவனம் 11.6 பில்லியன் டாலர்களுக்கு யூனியன் கார்பைடு நிறுவனத்தை வாங்கி உலகின் இரண்டாவது பெரிய ரசாயனத் தொழிற்சாலையாக மாறியது. ஆனால் டவ் போப்பாலில் நடந்து முடிந்த துயரச்சம்பவத்துக்கு எந்த அளவிலும் பொறுப்பேர்க்க முடியாது என்று கூறிவிட்டது. கொடுக்கப்பட்ட 470 மில்லியன் டாலர் தான் இறுதியான இழப்பீட்டுத் தொகை, UCC அதைக் கொடுத்துவிட்டது எனவே அது சம்பந்தமான எந்த இழப்பீடும் இனி நாங்கள் கொடுக்கமாட்டோம் என்று திட்டவட்டமாக அறிவித்துவிட்டது. டவ்வின் முக்கியமான மேலாளார் ஒருவர் இவ்வாறு சொன்னார்: “நாங்கள் மனித நேயத்துக்காக மட்டுமே சில விசயங்களை செய்துகொண்டிருக்கிறோம், இதைக் கொண்டு நாங்கள் இழப்பீடு தருவதற்கான முயற்சியை மேற்கொண்டிருக்கிறோம் என்று குழம்பிக்கொள்ள வேண்டாம்”.

ஆனால் இதே நிறுவனம் டெக்ஸாஸில் இருக்கும் UC நிறுவனத்தை வாங்கி ஒருவருடத்துக்குள் அப்பொழுது UCயின் மேல் தொடரப்பட்டிருந்த அஸ்பெஸ்டாஸ் சம்பந்தப்பட்ட வழக்குக்கு பொறுப்பேற்றுக்கொண்டது. இதனால் இந்த நிறுவனத்துக்கு 7 பில்லியன் டாலர் நஷ்டமானது. டவ் டெக்ஸாஸில் இருந்த UCஐ வாங்குவதற்கு முன்னர் இந்த வழக்கு சம்பந்தமாக ஏதும் இழப்பீடு கொடுக்கப்பட்டிருக்கவில்லை அதனால் தான் நாங்கள் வாங்கியவுடன் நடந்துகொண்டிருந்த வழக்குக்கு பொறுப்பேற்றுக்கொண்டு இழப்பீட்டுத் தொகையும் கொடுத்தோம், ஆனால் போப்பாலில் நடந்தது வேறுமாதிரி. அங்கு ஏற்கனவே நாங்கள் வாங்குவதற்கு முன்னரே ஒரு இழப்பீட்டுத் தொகை கொடுக்கப்பட்டாயிற்று என்று நிஜத்தை எதிர்கொள்ளாமல் தப்பித்துக்கொண்டது.

அதேசமயத்தில் 23 மே 2002 இல், இந்திய அரசின் சார்பாக, சிபிஐ போப்பாலின் நீதிமன்றத்திடம் ஒரு கோரிக்கையை வைத்தது:வாரன் ஆன்டர்சன் மீது சுமத்தப்பட்டிருக்கும் கிரிமினல் குற்றங்களைத் தள்ளுபடி செய்யவேண்டும் என்பதே அது. பத்துவருட கடுங்காவல் தண்டனைக்கு உரியதான கொலைக்குற்றத்திலிருந்து கீழிறக்கி இரண்டு வருட தண்டனை மட்டுமே கொடுக்கக்கூடிய குற்றங்களை மட்டுமே சுமத்தவேண்டும் என்கிற கோரிக்கை அது.

29 ஆகஸ்ட் 2002 அன்று நீதிமன்றம் இந்தக் கோரிக்கையை நிராகரித்தது. ஆன்டர்சனைக் கைது செய்ய வாரன்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது. தலைமறைவாகிவிட்ட அவர் இதுவரையில் எந்த நீதிமன்றத்திலும் ஆஜராகவில்லை.எனவே தண்டனையைக் குறைக்கவேண்டும் என்கிற கோரிக்கை முட்டாள்த்தனமானது என்றது நீதிமன்றம். நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு நிதிக்குக் கிடைத்த பெரிய வெற்றி என்று கொண்டாடப்பட்டது.

இந்தத் துயரசம்பவம் நடந்து இருபது ஆண்டுகள் ஆனபொழுது எல்லோருடைய மனநிலையும் கொண்டாட்டத்துக்கு மாறியிருந்தது. மார்ச் 2004 அன்று அமெரிக்க ·பெடரல் கோர்ட் UCCயை பாதிப்படைந்த இடத்தை சர்வதேசத் தரத்தில் சுத்தாமாக்க முழுப்பொறுப்பும் ஏற்றுக்கொள்ளுமாறு அறிவுறுத்தியது. மத்தியப்பிரதேச மாநில அரசும் மாசுக்கட்டுப்பாட்டுத்துறையும் இந்தமாதிரியான வேலை செய்வதற்கு தங்களிடம் பணமோ தொழில்நுட்பவசதியோ இல்லையென்று சொல்லிவிட்டது. ·பெடர்ல் நீதிமன்றம், ஒரு அந்நிய நாட்டின் நிறுவனம் இந்தியாவுக்கு சொந்தமான பகுதியில் இவ்வாறான சுத்தப்படுத்தும் காரியம் செய்வதை இந்தியா அனுமதிக்கிறதா என்று கேட்டிருந்தது. கொஞ்சம் இழுபறிக்குப் பிறகு ஜந்தர் மந்தரில் துயரசம்பவத்தில் தப்பிப்பிழைத்த மக்கள் மகிழ்ச்சியுறும் வகையில் இந்திய அரசாங்கம் இதற்கு ஒப்புக்கொண்டது.

இதுவொரு முக்கியமான முடிவு. ஒரு பன்னாட்டு நிறுவனம் ஒரு “மூன்றாம் உலகத்தை” சேர்ந்த நாட்டில் தான் செய்து விட்ட தவறுக்கு பரிகாரம் செய்ய வற்புறுத்தப்பட்டது இதுவே முதல்முறை. 1989 இல் கொடுத்த இழப்பீட்டுத் தொகைக்குப் பிறகு நடந்துமுடிந்த சம்பவத்துக்கு பொறுப்பேற்கத் தேவையில்லை என்கிற UCCயின் வாதம் இனி ஒருபோதும் செல்லாது.

19 ஜீலை 2004 அன்று மேலுமொரு வெற்றி கிடைத்தது.இந்திய உச்சநீதி மன்றம் மீதமிருக்கும் இழப்பீட்டுத்தொகையான 1500 கோடி ரூபாயை பாதிக்கப்பட்ட 5,66,876 மக்களும் பிரித்துக்கொடுக்குமாறு வழியுறுத்தியது. நீதிக்காக இருபது வருடங்கள் காத்திருப்பது மிகவும் தாமதமான ஒன்று என்பது நம்மில் பலருக்குத் தோன்றலாம், ஆனால் பாதிப்படைந்த மக்களுக்கு இது பல சோதனைகளுக்குப் பிறகு போராடிய அவர்களது மன உறுதிக்குக் கிடைத்த வெற்றி.

Wall Street Journalஇல் அமெரிக்க கார்பரேட் நிறுவனங்களின் பல மேலாளர்கள் இந்த வழக்கை தொடர்ந்து கவனித்து வருவதாக சொல்லப்பட்டது. முதன்முறையாக அமெரிக்க நிறுவனம் ஒன்று வளர்ந்துவரும் மூன்றாம் உலகத்தில் தான் செய்த தவறுக்கு என்ன பரிகாரம் செய்யப்போகிறது என்று அவர்கள் ஆவலோடு எதிர்பார்த்துக்கொண்டிருந்தனர்.

இழப்பீட்டுத் தொகை அறிவிக்கப்பட்ட அன்று, UCCயின் பங்குகள் இரண்டு டாலர்கள் உயர்ந்தது. நிறுவனத்தின் சொத்து அப்படியே இருக்கிறது என்று மக்கள் சந்தோஷமாகத்தான் இருந்தார்கள். சராசரியாக பாதிப்படைந்த ஒரு நபர் வெறும் 500 டாலர்கள் மட்டுமே பெற்றதை நினைத்து அவர்கள் யாரும் வறுத்தப்படவில்லை. இந்த 500 டாலர்கள் பாதிக்கப்பட்ட மக்களின் மருத்துவச்செலவுக்குக் கூட போதாது என்பது அவர்களுக்குத் தெரியாதா என்ன?

லாப நோக்கோடு அலையும் கார்பரேட் நிறுவனங்கள் ஒரு காலத்தில் உலகையே அடிமையாக்கிவிடும் என்கிற அபாயகரமான உண்மையை நம்மில் பலரும் வசதியாக மறந்துவிடுகிறோம். நிறுவனத்தின் வெற்றிக்கு முன்பு மனிதநேயம் பொருட்டேயல்ல என்கிற படு பயங்கர தத்துவத்தை நாம் தீனி போட்டு வளர்த்துவருகிறோம்.

பூச்சிக்கொள்ளி மருந்துகளால் கேன்சர் வரும். எனவே அவை அமெரிக்காவில் தடைசெய்யப்பட்டுள்ளது. ஆனால் ஆசியா, ஆப்பிரிக்கா மற்றும் லத்தீன் அமெரிக்க நாடுகளில் மிகச் சுதந்திரமாக அது விற்கப்படுகிறது. டர்ஸ்பன் (Dursban) என்கிற பூச்சிக்கொள்ளி மருந்து குழந்தைகளுக்கு மூளை பாதிப்பை உண்டாக்கும் என்பதை தெரிந்திருந்தும் DOW நிறுவனம் அதை கவலைப்படாமல் சுதந்திரமாக விற்றுவருகிறது. டூபான்ட் (DuPont) நிறுவனம் ஓசோன் படலத்தை சிதைத்து தோல் கேன்சரை உருவாக்கும் chloroflurocorbans என்கிற ரசாயனத்தை உருவாக்கத்தான் செய்கிறது. பாலூட்டும் அன்னை தன் குழந்தைக்கு டையாக்ஸினை அவளறியாமலே புகட்டிக்கொண்டிருக்கிறாள். நம் உடலை நாமே கடுப்படுத்தவியலாத ஒரு புதிய வன்முறையை நாம் உருவாக்கிவிட்டோம்.

“ரசாயன தொழிலில் ஒரு ஹிரோஷிமா” வான போப்பால் ஒரு முக்கியமான அடையாளமாக இருந்து வந்திருக்கிறது. தொழிலாளர்களால் வழிநடத்தப்பட்டு ஒரு தன்னார்வ புரட்சி இயக்கமாக வளர்ந்து போராட்ட குணத்தையும் எதிர்ப்பு சக்தியையும் தன்னுள் அடக்கி வருடங்கள் பல கடந்த பின்னும் அந்த இயக்கம் இன்னும் அதே மூர்க்கத்துடன் இயங்கி வருகிறது.

போப்பால் தன் பெண்களை அவர்களது சிறையிலிருந்து மீட்டுக்கொண்டுவர ஒரு காரணியாக இருந்தது. அவர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். பூங்காக்களில் கூடி போராட்டத்துக்கான வழிமுறைகளை ஆராய்ந்தனர்.அநீதிக்கு எதிராக தொடர்ந்து போராடும் ஒரு அணியை அவர்கள் உலகம் முழுவதிலும் உருவாக்கிவிட்டிருந்தனர். அவர்கள் தங்களது குரல்கள் சத்தமாகவும் சுத்தமாகவும் ஒலிக்கவேண்டும் என்று விரும்பினர். அதையே செய்தும் காட்டினர்.

சுற்றுப்புற சூழ்நிலைக்கு கொடுக்கப்படும் நோபல் பரிசாகக் கருதப்படும் Goldman Environment பரிசு, பாதிப்படைந்த மக்களின் நீதிக்கு போராடியதற்காக, ரஷிடா பி (Rashida Bi) மற்றும் சம்பா தேவி சுக்லா(Champa Devi Shukla) ஆகிய இரு பெண்களுக்கும் ஏப்ரல் 2004 இல் கொடுக்கப்பட்டது.

விருது வழங்கும் விழாவில் இந்த இரு பெண்களும் கீழ் வருமாறு பேசினர்:
டவ் நிறுவனம் தான் இன்னும் நீண்டுகொண்டிருக்கும் அந்த துயரசம்பவத்துக்கு பொறுபேர்க்க வேண்டும் என்கிற தீர்ப்பு வந்த அந்த நாள் உலகம் முழுவதும் இருக்கும் சாமான்ய மக்களுக்கு மகிழ்ச்சி அளிக்கக்கூடியதாக இருக்கும் என்பதை நாங்கள் அறிவோம்.அந்த நாளில் இருந்து நச்சுத்தன்மை மிகுந்த ரசாயனத்தை தயாரிக்கும் எந்த நிறுவனமும் மனிதநேயத்துக்கு முன் லாப நோக்கத்தை முன்வைப்பதைப் பற்றி ஒன்றுக்கு இரண்டு முறை யோசிக்கும். நாங்கள் அடிபனிந்து போகிறவர்கள் அல்ல. இந்த உலகத்தின் வாழ்வாதாரத்தையும் உயிரின் ஆதாரத்தையும் அச்சுறுத்தும் எவரையும் நாங்கள் எதிர்த்துப் போராடுவோம். அதன்மூலம் நாங்கள் இருட்டை வென்றிடுவோம்.

குரல்கள்:
போப்பாலில் நடந்த துயரசம்பவத்துக்கு ஈடாக போர்களில் பயன்படுத்தப்படும் ரசாயனங்களை மட்டுமே ஒப்பிடமுடியும். இந்த சம்பவம் நடந்த அன்று போப்பால் மற்றும் அதன் சுற்றுப்புறத்திலும் வெளியாகிய 45 டன் MICஇல் போஸ்ஜீன்(phosgene) சிறிதளவு கலந்திருக்கிறது. போஸ்ஜீன் முதலாம் உலகயுத்தத்திலும், இரண்டாம உலக யுத்தத்திலும் மேலும் ஈரான் – ஈராக் யுத்தத்திலும் பயன்படுத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ரசாயனத்தின் தன்மையையும் அது கனிசனமான அளவு சுற்றுப்புறத்தில் கலந்திருப்பதையும் கருத்தில் கொண்டு ஆராய்ந்தால், இதனுடைய விளைவுகள் இன்னும் பல காலத்துக்கு தொடர்ந்துகொண்டிருக்கும். திட்டவட்டமான ஒரு இழப்பின் மதிப்பீட்டுக்கு வர இயலாது என்பது உண்மை.
18 டிசம்பர் 1984 அன்று டெல்லி அறிவியல் கழகம் பத்திரிக்கைகளுக்கு அளித்த ஒரு அறிக்கை.

டிசம்பர் 3

இறந்துவிட்டவர்களை நினைவு கூர்வதோடு மட்டுமில்லாமல், வாழ்ந்துகொண்டிருக்கும் மனிதர்களின் நீதிக்காகவும் இனி பிறக்கப்போகும் குழந்தைகளின் நலனுக்காவும் போராட வேண்டும் என்கிற உறுதியை இந்த நாளில் நாம் எடுக்கவேண்டும்.

**
(முடிந்தது)
மூலம்: BHOPAL GAS TRAGEDY- THE WORST INDUSTRIAL DISASTER IN HUMAN HISTORY By SUROOPA MUKHERJEE.

யார் முழித்திருக்க போகிறார்கள் – 8

UCCயுடன் சேர்த்து UCILம் வழக்கிலிருந்து கழட்டிவிடப்பட்டது. நீதிமன்றம் இறுதி தீர்ப்பை நிறைவேற்றுவதற்கு அவர்கள் பங்கு மிக முக்கியம் என்று கூறியது. இதற்கு என்ன அர்த்தம் என்றால்: UCILக்கு எதிராக பதிவுசெய்யப்பட்ட அனைத்து வழக்குகளும் தள்ளுபடி செய்யப்படும்.

குரல்கள்:
பன்னாட்டு நிறுவனங்கள் வேலையில்லாத்திண்டாட்டத்தைக் குறைப்பதற்காகத் தான் வளர்ந்துவரும் நாடுகளில் தொழில் ஆரம்பிக்கின்றன என்று யாரும் சொல்வதில்லை. பிறகும் ஏன் அவர்கள் குறைந்த கூலி கிடைக்கும் இடத்தில் தொழில் ஆரம்பிக்கிறார்கள்? லாபம் அதிகம் கிடைக்கும் என்ற ஒரே நொக்கத்துடன் மட்டுமே. ஆனால் இந்தக் காரணத்தைத் தவிர வேறொரு காரணமும் வெளிச்சத்துக்கு வராமல் இருக்கிறது. வளர்ந்துவரும் நாடுகளில் பாதுகாப்புத் தர விதிகள் மிகவும் குறைவாக இருக்கும், மேலும் ஏதாவது அசம்பாவிதம் நடந்துவிட்டால் அதற்கான இழப்பீட்டை மிகவும் மலிவாக முடித்துவிடலாம் என்பதே.
Philip Knightley in London Newsletter, Indian Express 30 Dec 1984

இழப்பீட்டுத்தொகைக்கு எதிராக பலதரப்பட்ட குழுக்களும் போராட்டங்களை நடத்தின. வழக்கு பதிவு செய்யப்பட்ட பொழுது கேட்கப்பட்ட தொகை 3 பில்லியனாக இருக்கும் பட்சத்தில் இந்திய அரசாங்கம் ஏன் வெறும் 470 மில்லியன் டாலருக்கு ஒப்புக்கொண்டது என்ற கேள்வி திரும்ப திரும்ப கேட்கப்பட்டது.

மேலும் குற்றம்,பொறுப்பு போன்ற விசயங்களை நீதிமன்றம் எவ்வாறு மறந்தது என்ற கேள்வியுடனும் ஆங்காங்கே போராட்டங்கள் நடந்தன. ஒரு விஷவாயு தயாரிக்கும் தொழிற்சாலை தொடங்கப்பட்ட பொழுது அதன் சம்பந்தமான சட்டதிட்டங்கள் ஏன் தெளிவாக கடுமையாக பின்பற்றப்படவில்லை என்ற கேள்வியை UCCயிடமோ, UCILஇடமோ அல்லது குறைந்தபட்சம் மத்தியபிரதேஷ் அரசிடமோ கூட நீதிமன்றம் முன்வைக்கவில்லை என்பது தான் மிகவும் வேதனையான விசயம். சமுதாயம் விஷவாயுவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உண்மையாக கொடுக்கப்படவேண்டிய தொகையைப் பற்றி மறந்துவிட்டது போலவே இருந்தது.

வளர்ச்சியையும் முன்னேற்றத்தையும் இழந்துவிட்ட அந்த மக்களுக்கு உடல்நலம் குறித்த சலுகைகள் தேவைப்படும். அவர்களின் வாழ்க்கைமுறையை செப்பனிடவேண்டும். அவர்கள் தங்களின் எஞ்சியிருக்கும் வாழ்க்கையை நன்றாக வாழவேண்டும். இவற்றில் ஒன்றைக்கூட யாரும் கவனத்தில் கொள்ளவில்லை.

UCC கொடுத்த 470 மில்லியன் டாலர் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சரியாக, முறையாக பிரித்துக்கொடுக்கப்படும் என்று இந்திய அரசாங்கம் உறுதியளிக்குமா? உறுதியளிக்கமுடியுமா? சந்தேகம் தான். காரணம் ரொம்ப சிம்பிள். பாதிக்கப்பட்ட மக்களை வகைப்படுத்த எந்த சூத்திரமும் அரசாங்கத்திடம் இல்லை என்பதே. மேலும் நீண்டகால நிவாரணத்திட்டம் என்ற ஒன்றும் அரசாங்கத்தின் மனதில் இல்லை. கடைசி சோகம் என்னவென்றால்- இழப்பீட்டுத் தொகை முறையாக பாதிக்கப்பட்டவர்களை சென்றடையவில்லை என்பதே. பாதிக்கப்பட்ட ஒவ்வொருவரும் தலா 25000 ரூபாய் பெற்றனர். அதில் பத்தாயிரம் ரூபாய் இடைக்கால நிவாரணாமாக கொடுக்கப்பட்டது என்று கழித்துக்கொள்ளப்பட்டது. காலதாமதமாக கிடைத்த பணத்துக்கு வட்டியும் கொடுக்கப்படவில்லை. பாதிக்கப்பட்ட மக்கள் தொடர்ந்து தங்களது ஏழ்மையிலே வாழ்ந்தனர் – அனைவராலும் புறக்கணிக்கப்பட்டு. மறக்கப்பட்டு. காலம் முழுதும் ஊணமாக்கப்பட்டு.

உண்மையை வெளிக்கொனரும் வாய்ப்பு இந்திய கோர்ட்டிடம் இருந்தது. இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி மக்களின் மத்தியில் போப்பால் பேரிடரை என்றும் மறவாமல் செய்திருக்கமுடியும். வராலறையும் அவ்வரலாறு நமக்களிக்கும் படிப்பினைகளையும் மறப்பதென்பது மிகவும் ஆபத்தான விசயம். போப்பாலின் உண்மை நிலவரம் இவ்வாறு மறைக்கப்படிருக்கும் பொழுது, இதே போல பேரிடர் எங்கு எப்பொழுது நடக்கும் என்பதை யாரரிவார்?

குரல்கள்:
போப்பால் பேரிடர் மாதிரியான துயரசம்பவங்கள் அமெரிக்காவில் நடந்திருந்தால் இந்நேரம் அதற்கான தீர்வுகள் கண்டிப்பாகக் கிடைத்திருக்கும் என்பதில் சிறிதளவும் ஐயம் இல்லை. நிறுவனம் இதற்குப் பொறுப்பேற்று தீர்வு காணாவிடில், அமெரிக்க அரசாங்கமே தீர்வைக் கொண்டுவந்திருக்கும், பிறகு அந்தத் தீர்வுக்கான பணத்தை மூன்று மடங்காக நிறுவனத்திடம் கறந்திருக்கும். அமெரிக்காவில் இருக்கும் நிறுவனங்களின் மேலாளர்கள் ஒவ்வொருக்கும் இது தெரிந்திருக்கும்.இது ரசாயன விஷ கழிவுகளை வெளியேற்றினால் நிறுவனத்துக்குக் கிடைக்கும் பக்கவிளைவுகள் என்பதை அவர்கள் நன்று அறிவார்கள்.
Curtis Moore, former Attorney to US Senate

1990-91

விஷவாயுவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கும் பூகம்பம் மற்றும் வெள்ளம் போன்ற இயற்கை சீற்றங்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்கும் என்ன வித்தியாசம் என்றால், விஷவாயுவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வலியும் வேதனையும் துன்பமும் நாளுக்குநாள் அதிகரித்துக்கொண்டு வருவதுதான். கடைசியாக, விஷவாயு மட்டுமே தங்கள் வாழ்க்கையைப் பாதிக்கவில்லை என்பதை அவர்கள் உணர்ந்துகொண்டார்கள்.இதே அளவுக்கு வேதனை தரக்கூடிய விசயம் என்னவென்றால், இவர்களை சந்தேகப்பார்வையுடன் பார்க்கும் சமுதாயத்துடன் இணைந்து வாழ்வதே. பாதிக்கப்பட்ட மக்களில் நிறைய பேருக்கு இரட்டிப்பு அடி. படிப்பறிவும் இல்லாமல் வேலைவாய்ப்பும் இல்லாமல் சேரிகளில் வறுமைக்கோட்டுக்கு கீழே வாழ்ந்து வரும் அவர்களை சமுதாயம் ஏற்கனவே ஒரு சுமயாக கருதிக்கொண்டிருந்தது. இப்பொழுது இந்த நகரம் அவர்களை புல்லுருவிகளாகவும் எண்ணியது. ஆபரேஷன் பெயித் (Operation Faith) முடிந்ததுக்கப்புறமும் தொடர்ந்துவரும் சில பிரச்சனைகளால் நிர்வாகக்கோளாறுகள் இன்னும் நிறைய இருந்தன. 1991ஆன் ஆண்டில் மத்தியபிரதேஷ் அரசாங்கம் போப்பாலின் முகத்தை அழகு படுத்த விரும்பியது. அழகு படுத்தும் வேலை துவங்கியது. பூங்காக்களை சீரமைப்பது, சாலைகளை ஒழுங்குபடுத்துவது மற்றும் தெருக்களுக்கு விளக்கேற்றுவது.

இதில் வெகு சில பணிகளே விஷவாயுக்களால் பாதிக்கப்பட்ட மக்கள் வாழும் பகுதிக்கு சென்றடைந்தது. இங்கு வாழ்ந்து கொண்டிருக்கும் பெரும்பாலான மக்கள் சமுதாயத்தின் அடித்தட்டைச் சேர்ந்தவர்கள். அவர்களது மண் மற்றும் ஓலைக் குடிசைகளை இருட்டும், திறந்திருக்கின்ற சாக்கடைகளின் துர்நாற்றமுமே சூழ்ந்திருந்தன. சராசரியாக ஒரு குடும்பம் ஒரு மாதத்துக்கு 150 ரூபாய் மட்டுமே சம்பாதிக்கமுடிந்தது. சமைப்பதற்கு பெண்கள் கரித்துண்டுகளையும் மாட்டு எருக்களையுமே பயன்படுத்தினர். விஷவாயுக்களால் பாதிக்கப்பட்டிருந்த அவர்களது கண்களும் நுரையீரலும், புகைகக்கும் மண் அடுப்புகளில் மீண்டும் எரிந்தன.

குரல்கள்:
ஜூன் 16 1984 இல் ராஜ் குமார் கேஸ்வனி IRaj Kumar Keswani) எழுதிய கட்டுரையில் அவர் கீழ்வருமாரு கூறியிருக்கிறார்”போஸ்ஜின் (phosgene) என்கிற ரசாயனத்தை பயன்படுத்துவது தொழிற்சாலையில் வேலைசெய்யும் பணியாளர்களையும் தொழிற்சாலைக்கு அருகில் குடியிருக்கும் மக்களையும் மிகவும் பாதிக்கும்” (கேஸ்வனி தான் தொழிற்சாலையின் பாதுகாப்பைக் குறித்து முதலில் அபாயச்சங்கு ஊதியவர்.
Radhika Ramaseshan in Economic and Political Weekly, 22-29 Dec 1984

1975இல் M.N.Buch, என்ற போப்பாலின் IAS அதிகாரி, மக்கள் வசிக்கும் பகுதிகளில் தொழிற்சாலையை அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தார். அவர் நகரத்துக்கு வெகு தூரத்தில் தொழிற்சாலையை இடமாற்ற யோசனை கூறியிருந்தார். ஆனால் அந்த IAS அதிகாரி தான் கடைசியில் இடமாற்றப்பட்டார். இப்பொழுது அழகு படுத்தும் முயற்சியில் இந்த சேரி குடிசைகளும் இடமாற்றப்பட்டன. நிறைய குடிசைகள் இடித்து தள்ளப்பட்டன. மக்கள் நகரத்துக்கு அப்பால் 12-14 கி.மீ தள்ளி குடியேறினர்.

இவற்றுள் ஒன்று லால் இம்லி வாலி மஸ்ஜித் கி பஸ்தி (Lal Imli Wali Masjid Ki Basti). 26 மே 1991 அன்று, நகர அதிகாரிகள், 200 காவல்துறையினரின் துணையுடன், 75 குடிசைகளை தகர்த்தெறிந்தனர். மற்றுமொருமுறை விஷவாயுக்களால் பாதிக்கப்பட்ட மக்கள் திக்கு தெரியாமல் ஓடத்துடங்கினர். ஒவ்வொரு குடும்பத்துக்கும் சொற்ப தொகையான ரூ.1000 வழங்கப்பட்டது. மேலும் 15 மூங்கிலும், 5 பாயுகளும் மற்றும் 10மீ பிளாஸ்டிக் ஷீட்களும் வழங்கப்பட்டன. நகரத்துக்கு வெளியே அவர்கள் 12 அடிக்கு 25 அடியில் குடிசைகள் கட்டிக்கொள்ள அனுமதி வழங்கப்பட்டது. இவ்வாறன ஒரு மாற்று இடத்தில் – புதிய காந்தி நகர் – கடைகள் இல்லை. பேருந்து நிறுத்தம் இல்லை. பக்கத்தில் மருத்துவமணை இல்லை. அங்கு வாழும் மக்கள் அனைவருக்கும் தண்ணீர் கொடுப்பதற்கு ஒரே ஒரு அடிகுழாய் மட்டுமே இருந்தது.

இந்த இடம் பெயர்தல் நினைத்ததை விடவும் கடுமையானதாக இருந்தது. இடைக்கால நிவாரணம் கிடைக்கவேண்டும் என்றால் அவர்கள் தங்கின ஏதாவது ஒரு வார்டில் அவர்கள் பதிவு செய்திருக்க வேண்டும். குடியிருப்பு மாறிய பிறகு அவர்கள் தங்களது பதிவுகள் கேன்சல் செய்யப்பட்டன. இந்த மாதிரியான ஒரு மிகப்பெரிய இடம்பெயரும் நடவடிக்கை, பாதிக்கப்பட்ட மக்களுக்குள் இருந்த ஒற்றுமையைக் குலைத்தது. புதிய குடியிறுப்புக்கு அவர்கள் ஒருவருக்கொருவர் சண்டையிட வேண்டியதாயிற்று.

விஷவாயுவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வாழ்க்கை முற்றிலுமாக மாறியிருந்தது. பாதிக்கப்பட்ட மக்கள் தங்கள் உடலில் ஏற்பட்டுவிட்ட நிறைய மாற்றங்களோடு போராட வேண்டியிருந்தது. அவர்களால் கவனத்தை ஒருமுகப்படுத்த இயலவில்லை. எதையும் ஞாபகம் வைத்துக்கொள்ள முடியவில்லை. வேறு எந்த கடினமான வேலையையும் செய்யமுடியவில்லை. நிறைய பேர் கடினமான உடல் உழைப்பை நம்பியிருந்தவர்கள். மூட்டைதூக்குவது, கட்டுமான பணிகளில் ஈடுபடுவது இல்லையேல் வண்டி இழுப்பது போன்ற வேலைகளைதான் அவர்கள் செய்து வந்தனர். விஷவாயுவால் பலகீனம் அடைந்துவிட்ட அவர்கள் சம்பாதிக்கும் திறனை இழந்தார்கள். நாளடைவில் அவர்கள் மிகவும் ஏழ்மையான நிலையை அடைந்துவிட்டிருந்தனர். நெசவு தொழிலிலோ அல்லது பேப்பர் ஆலைகளிலோ, புகைகக்கும் ரயில் நிலையங்களிலோ வேலை செய்தவர்கள், அபாயகரமான பைபர்களுடனும், நச்சு புகைகளிலும் வருந்தினர். மாதத்தில் 15 அல்லது 20 நாட்கள் அவர்கள் உடல்நலம் பாதிக்கப்பட்டு அவதியுற்றனர். உடல் ஒத்துழைக்காத பட்சத்தில் அவர்கள் தங்கள் சுயகவுரத்தை இழந்தனர், கடும் மன உழைச்சலுக்கு ஆளாகினர்.

விபத்தில் தப்பித்தவர்கள் விஷவாயு பீதி என்று குறிப்பிடப்பட்ட நோயால் அவதியுற்றனர்.ஏதோ ஒரு வாயுவை சுவாசித்த பொழுதோ அல்லது மூச்சுத்திணறல் ஏற்பட்ட பொழுதோ அவர்கள் மிகுந்த பீதிக்குள்ளானர்கள். இந்த பிரச்சனைகள் மனோதத்துவம் சார்ந்தது என்று பெரிதும் ஒதுக்கப்பட்டுவிடும். அவர்களை யாரும் நோயாளிகளாக பாவிக்கக்கூட தயங்கினர். அவர்களை யாரும் புரிந்துகொள்ளவில்லை. முயற்சிக்கவும் இல்லை.

மருத்துவமனைகள் விஷவாயுவால் பாதிக்கப்பட்டவர்களை வரையறுக்க சில அறிகுறிகளை வகைப்படுத்தியிருந்தன. அந்த அறிகுறிகளைக் கொண்டிருந்தவரை அவர்கள் விஷவாயுவால் பாதிக்கப்பட்டவர் என்று குறித்துக்கொண்டனர். அவருக்கு அத்தாட்சி சாண்றிதழும் வழங்கப்படும். இதனால் பாதிக்கப்பட்டவருக்கு இடைக்கால நிவாரணமோ அல்லது உணவோ கிடைக்கும். ஆனால் இடைக்கால நிவாரணமான 200 ரூபாயைப் பெறுவதற்கு அவர்கள் பல்வேறு கடினமான நடைமுறைகளை கடக்க வேண்டியிருந்தது. இந்த கடினமான நடைமுறைகளை எளிதாக்க -மனதளவிலும், உடலளவிலும்- யாரும் முன்வரவில்லை. அவர்கள் அனுபவிக்கும் கஷ்டத்தை யாரும் நினைத்துப்பார்க்ககூட இல்லை.

வளர்ந்துவரும் தொழிற்துறை சார்ந்த சமுதாயத்தில் ஏற்படவிருக்கும் பாதிப்புகளை குறித்து யாரும் அவ்வளவாக சிந்திப்பதில்லை. கார்பைடு தொழிற்சாலை வேலைவாய்ப்பு வழங்கி அதன்மூலம் கடைநிலை மக்களின் வாழ்க்கைத் தரத்தை ஓரளவேனும் உயர்த்தும் என்றே யோசித்தனர். மாநில அரசும் இந்த ஒப்பந்தத்தில் ஒரு பங்குதாரரே. இந்த ஆர்வத்தில் யாருக்கும் தொழிற்சாலையை மக்கள்தொகை அதிகமாக இருக்கும் இடத்தில் நிறுவக்கூடாது என்கிற சிந்தனை உதித்ததாக தெரியவில்லை. திட்டமிடுதலின் போது வளர்ச்சியினோடு பொறுப்புணர்ச்சியும் வந்திருக்கவேண்டும். ஆனால் காலவேகத்தில் பொறுப்புணர்ச்சி என்ற விசயம் பின் இருக்கையையே பிடிக்கமுடிந்தது. எதுவும் அவர்களுக்கு அபாயகரமாகத் தோண்றவில்லை, சேரிகள் மட்டுமே மிகப்பெரிய ஆபத்தை எதிர்நோக்கியிருந்தனர்.

விஷவாயுவால் பாதிக்கப்பட்ட சேரிவாழ் மக்கள், பாதிப்பு ஏற்படுத்திய கார்பைடு தொழிற்சாலையால் சிறிதளவு கூட பயன்பெறவில்லை என்பது மிகவும் அபூர்வமான விசயம் ஆகிவிடுகிறது. அவர்களுக்கு தொழிற்சாலை மீண்டும் வேலை கொடுக்கவில்லை. அவர்கள் தினக்கூலிகளாக தங்களது வேலையைத் தொடர்ந்தனர். பீடி சுற்றுபவர்களாகவும், செருப்பு தைப்பவர்களாகவும், வீட்டுவேலை செய்பவர்களாகவும் காலந்தள்ள வேண்டியிருந்தது. அவர்கள் மிகவும் அடித்தட்டு வாழ்க்கையை வாழ்ந்துகொண்டிருந்தனர்.

அதேசமயத்தில் சட்டம் தன் வேலையை செய்துகொண்டிருந்தது. அக்டோபர் 3 ஆம் தேதி 1991 அன்று, திருத்தப்பட்ட தீர்ப்பு ஒன்று வழங்கப்பட்டது. குற்றம்சாட்டப்பட்ட 12 நபர்கள் (UCC மற்றும் UCIL) மீதும் மீண்டும் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

(தொடரும்)
thanks : swaroopa mukarjee

முப்ப‌த்தியிர‌ண்டு கேள்விக‌ள்

உங்களுக்கு இதை அனுப்பிய பதிவரின் பதிவுகளில் உங்களுக்குப் பிடித்த பதிவு?

பாலாவின் எழுத்து இன்ஃப‌ர்மேட்டிவ்வாக‌ இருக்கும். என்னை ஆர‌ம்ப‌கால‌த்தில் ஊக்குவித்த‌வ‌ர்க‌ளில் மிக‌ முக்கிய‌மான‌வ‌ர்.அவ‌ர‌து அனாலிஸிஸ் டைப் ப‌திவுக‌ள் என‌க்குப் பிடிக்கும்.

உங்களுக்கு ஏன் இந்தப் பெயர் வந்தது?
குர‌ல்வ‌லை? ப்ளாக் ஆர‌ம்பிக்க‌வேண்டும் என்கிற‌ எண்ண‌ம் வ‌ந்த‌வுட‌ன் தோன்றிய‌ முத‌ல் பெய‌ர். அப்ப‌டியே வைத்துவிட்டேன். முத்து? என் தாத்தாவின் பெய‌ர். என்னுடைய‌ அப்ப‌த்தாவிட‌ம் கேட்டால் அவ‌ரு அர்ச்சுன‌ரு என்பார். அர்ச்சுன‌ர் என்றால் சக‌ல‌க‌லா வ‌ல்ல‌வ‌ன் என்று அர்த்த‌மாம். அவ‌ர் அர‌சு ப‌ள்ளியில் த‌லைமை ஆசிரிய‌ராக‌ வேலை பார்த்த‌வ‌ர். நாட‌க‌ம் ந‌டிப்பு இசை என்று ப‌ல‌ துறைக‌ளில் கால் ப‌தித்த‌வ‌ர். ல‌ட்சிய‌ ந‌டிக‌ர் எஸ்.எஸ்.ஆர் என் தாத்தாவின் மாண‌வ‌ர் என்று அப்பா சொல்லுவார். என் தாத்தா இற‌க்கும் பொழுது நான் நான் நிறை மாத‌மாம். அத‌னால் தான் என‌க்கு முத்து என்கிற‌ பெய‌ர் கிடைத்த‌து.

உங்களுக்கு உங்க பெயர் பிடிக்குமா?
ம்ம்..நிறைய‌.

கடைசியாக அழுதது எப்போது?
என் அண்ண‌ன் ம‌க‌ள் ச‌க்தி எங்க‌ளை விட்டுப் பிரிந்த‌ பொழுது.

உங்களுக்கு உங்க கையெழுத்து பிடிக்குமா?
பிடிக்கும். பிடிக்காது. என் கையெழுத்து என் ம‌ன‌ நிலையைப் பொருத்து மாறுப‌டும்.

பிடித்த மதிய உணவு?
டிப‌ன் பாக்ஸில் த‌க்காளி சாத‌ம், த‌யிர் சாத‌ம். வீட்டில் என்றால் வெஜிட்டேரிய‌னில் ப‌ருப்பு க‌த்திரிக்காய் கூட்டு. நான் வெஜ் : மீன் குழ‌ம்பு.

நீங்க வேற யாருடனாவது நட்பு வெச்சுக்குவீங்களா?
இது என்ன‌ கேள்வி? க‌ண்டிப்பாக‌.

கடல்ல குளிக்கப் பிடிக்குமா? அருவியில குளிக்கப் பிடிக்குமா?
அருவியில‌ தான் குளிக்க‌ப் பிடிக்கும். ஆனால் அருவியில் நான் குளித்த‌தே இல்லை. 😦

ஒருவரைப் பார்க்கும்போது முதலில் எதைக் கவனிப்பீர்கள்?
க‌ண். சிரிப்பு.

உங்க கிட்ட உங்களுக்குப் பிடிச்ச விஷயம் என்ன? பிடிக்காத விஷயம் என்ன?
த‌ன்ன‌ம்பிக்கை+ச‌கிப்புத்த‌ன்மை. கோப‌ம்+சோம்பேறித்த‌ன‌ம்.

உங்க சரி பாதி கிட்ட உங்களுக்கு பிடித்த, பிடிக்காத விசயம் எது?
த‌ன்ன‌ம்பிக்கை+ச‌கிப்புத்த‌ன்மை+பொறுமை; ஒன்றுமில்லை.

மனைவி இல்லாமல் செய்ய விரும்பும் ஒரே காரியம்?
ஏதுமில்லை.

இப்போ யார் பக்கத்துல இல்லாம போனதுக்கு வருந்துகிறீர்கள்?
அம்மா. அப்பா. ஊர்ல‌ இருக்காங்க‌.

இதை எழுதும் போது என்ன வர்ண ஆடை அணிந்து உள்ளீர்கள்?
வெறும் லுங்கி ம‌ட்டும்.

என்ன பார்த்து/கேட்டுக் கொண்டு இருக்குறீங்க?
உன் மேல‌ ஆச‌தான் (ஆயிர‌த்தில் ஒருவ‌ன்) நேஷ‌ன்ல் ஜியோக‌ராஃபியில் மெகா ஸ்ட‌ர்க்ச்ச‌ர்ஸ்.

வர்ணப் பேனாக்களாக உங்களை மாற்றினால் என்ன வர்ணமாக உங்களுக்கு ஆசை?
ஸ்கை ப்ளூ.

பிடித்த மணம்?
காஃபி; ம‌ல்லிகை; ம‌ழை ம‌ண் வாச‌னை; செடி ம‌ர‌ங்க‌ள் ம‌ண்டிய‌ இட‌ங்க‌ளில் வ‌ரும் ப‌ச்சை வாசனை.

பிடித்த விளையாட்டு?
க்ரிக்கெட்; டேபிள் டென்னிஸ்;

கண்ணாடி அணிபவரா?
சோடாபுட்டி.

எப்படிப்பட்ட திரைப்படம் பிடிக்கும்?
ம‌ர்ம‌ம்; யூகிக்க‌முடியாத‌ க்ளைமாக்ஸ்; திடீர் திருப்ப‌ங்க‌ள் கொண்ட‌ ப‌ட‌ங்க‌ள்; அதே ச‌ம‌ய‌த்தில் தெளிந்த‌ நீரோடை போன்ற‌ அமைதியான‌ அழ‌கான‌ ப‌ட‌ங்க‌ள்; அனிமேஷ‌ன் மூவிஸ் எல்லாம்.

கடைசியாகப் பார்த்த படம்?
தியேட்ட‌ரில் ஒரு வ‌ருட‌த்துக்கு முன்பு குசேல‌ன்; டீவியில் ச‌மீப‌த்தில் LA Confidential.

பிடித்த பருவ காலம் எது?
மெல்லிசான‌ காற்றுட‌ன் கூடிய‌ இலையுதிர் கால‌ம்.

என்ன புத்தகம் படித்துக் கொண்டு இருக்கீங்க?
1. Joel on Software.
2. Cosmos – Carl Sagan

உங்கள் டெஸ்க்டாப்ல் இருக்கும் படத்தை எத்தனை நாளுக்கு ஒரு நாள் மாற்றுவீர்கள்?
ம‌னைவி ம‌ற்றும் குழ‌ந்தையின் ந‌ல்ல‌ புதிய‌ போட்டோ கிடைக்கும் பொழுது.

பிடித்த சத்தம்? பிடிக்காத சத்தம்?
ப‌ள்ளிக்குழ‌ந்தைக‌ள் ப‌டிக்கும் ச‌த்த‌ம்; ப்ளாக் போர்டில் சாக்பீஸ் சில‌ ச‌ம‌ய‌ங்க‌ளில் நாராச‌மாய் ஒரு ச‌த்த‌ம் கொடுக்குமே அந்த‌ ச‌த்த‌ம்..

வீட்டை விட்டு நீங்கள் சென்ற அதிக பட்ச தொலைவு?
இந்தியாவில் விசாக‌ப‌ட்டின‌ம்.

உங்களுக்கு ஏதாவது தனித் திறமை இருக்கிறதா?
தூங்குவ‌தெல்லாம் திற‌மை லிஸ்டில் வ‌ராது என்ப‌தால்; வேக‌மாக‌ப் ப‌டிப்ப‌து(Fast Reading)

உங்களால் ஏற்றுக் கொள்ள முடியாத ஒரு விஷயம்?
குழ‌ந்தைக‌ளை அடிக்கும் பெற்றோர்க‌ள்;பெற்றோர்க‌ளுக்கு அட‌ங்காத‌ வ‌ள‌ர்ந்த‌ பொறுப்ப‌ற்ற‌ ஆண் பிள்ளைக‌ள்.

உங்களுக்கு உள்ளே இருக்கும் சாத்தான்?
நானே.

உங்களுக்கு பிடித்த சுற்றுலா தலம்?
Nothing Specific.

எப்படி இருக்கணும்னு ஆசை?
ஸ்ட்ராங்காக‌; ஸிக்ஸ் பேக்ஸ்; புஜ‌ ப‌ல‌ம் காட்டுப‌வ‌னாக‌; அம்மா அப்பாவுட‌ன் ஆன‌ந்த‌மாக‌ பொழுதைக் க‌ழிப்ப‌வ‌னாக‌; ம‌னைவி குழ‌ந்தையுட‌ன் இன்னும் நேர‌ம் செல‌வ‌ழிப்ப‌வ‌னாக‌; சிக்க‌ன‌மான‌வ‌னாக‌;

வாழ்வு பற்றி ஒரு வரி சொல்லுங்க?
வாழ்க்கை மிக‌ மிக‌ குறுகிய‌து; என‌வே வாழ்ந்துவிடுங்க‌ள்.

நீங்க அழைக்கப் போகும் பதிவரிடம் உங்களுக்கு பிடித்த விஷயம். அவரை அழைக்கக் காரணம் என்ன?

1. பொன்ஸ்: என்னைப்போல‌வே திடீர் திடீர்ன்னு எப்ப‌வாச்சும் எழுத‌ற‌வ‌ர்; என்னைப் போல‌ அல்லாம‌ல் எழுதினால் ந‌ச்சுன்னு எழுத‌ற‌வ‌ர்.
2. நிர்ம‌ல்: அமைதியான‌ அழ‌கான‌ சிந்திக்க‌ வைக்கும் ப‌திவ‌ர்; ரொம்ப‌ நாளா ஆள‌வே காணோம்.
3. வெட்டிப்ப‌ய‌ல் (ஏற்க‌ன‌வே எழுதிட்டாருன்னு நினைக்கிறேன்) என‌க்குப் பிடித்த‌ ப‌திவ‌ர்க‌ளில் ஒருவ‌ர்; எந்த‌ விச‌ய‌த்தையும் சுவ‌ராஸ்ய‌மாக‌ எழுத‌க்கூடிய‌வ‌ர்.
4. சுகுமார்: நான் பார்த்து விய‌க்கும் ப‌திவ‌ர்க‌ளில் ஒருவ‌ர்; குறுகிய‌ கால‌த்தில் வ‌லையுல‌கில் பிர‌ப‌ல‌மான‌வ‌ர்; ப‌ய‌ங்க‌ர‌ கிரியேட்டிவ்வான‌ ஆள்;
5. அதிஷா : இவ‌ருடைய‌ ந‌க்க‌ல் என‌க்கு ரொம்ப‌வும் பிடிக்கும்.
6. எஸ் ராம‌கிருஷ்ண‌ன் : பிடித்த‌ எழுத்தாள‌ரைப் ப‌ற்றி மேலும் தெரிந்து கொள்வ‌த‌ற்கு.
7. ஜெய‌மோக‌ன்:பிடித்த‌ எழுத்தாள‌ரைப் ப‌ற்றி மேலும் தெரிந்து கொள்வ‌த‌ற்கு.

***

 

ரத்தம் கறைகளை விட்டுச்செல்வதில்லை.

By M K Bhadrakumar
அசலைப் படிக்க.

முன்னொரு காலத்தில் நாம் பிரபாகரனை உருவாக்கினோம். சிறுவனாக இருந்த அவரை எங்கிருந்தோ நாம் தேர்ந்தெடுத்தோம். அவரிடத்தில் நம்மைக் கவர்ந்த விசயம் – அவருக்கு அரசியல் தெரியாது என்பது. அவர் பயந்தசுபாவமுள்ளவராக இருந்தார். ஆனால் அவர் ஆயுதங்களின் மேல் மோகம் கொண்டவராகவும் ராணுவ ஆட்சியில் நம்பிக்கை கொண்டவராகவும் இருந்தார். அவருடைய இத்தகைய குணாதிசயங்கள் அப்பொழுது நம் தேவைகளுக்கு மிகவும் பொருத்தமாக இருந்தது.

அது என்னவென்றால் இலங்கையில் ஆட்சிபுரிந்துகொண்டிருந்த ஜெயவர்தனேயின் அரசை அவமானப்படுத்துதல். அதன்மூலமாக இந்தியப்பெருங்கடலில் ஒரு மிகப்பெரிய சக்தியாக உருவாகிக்கொண்டிருக்கும் இந்தியாவை மதிக்காமல் நடந்தால் என்னென்ன ஆபத்துக்களைச் சந்திக்க நேரிடும் என்கிற பாடத்தை இலங்கைக்கு கற்றுக்கொடுப்பது. ஜெயவர்தனே மேலை நாடுகளின் மேல் அதீத கவர்ச்சி கொண்டவராக இருந்தார் மேலும் அவர் ஆக்ஸ்·போர்டில் வரலாறு படித்தபோது மன்றோ டாக்டரின் என்கிற ஒன்றை படிக்காதது போலவே இப்பொழுது நடந்துகொண்டிருக்கிறார். மேலும் இஸ்ரேலியர்களுடனும் அமெரிக்கர்களுடனுமான அவரது இணக்கமான போக்கு நமக்கு சுத்தமாகப் பிடிக்கவில்லை. இது நமது கொள்ளைப்புரத்திலே நடந்துகொண்டிருப்பது நமக்கு மிகுந்த எரிச்சலைத் தருகிறது.

எனவே நாம் பிரபாகரனை ஊக்கப்படுத்தினோம் ஜெயவர்தனேயின் போலிக் கவுரவத்தில் துளைபோடுவதற்கு நாம் அவரைப் பயன்படுத்தினோம். டெக்கானின் சீக்கியத் தலைவர் ஜர்னைல் சிங் பிந்தரன்வாலே போல.

காலம் சென்றது. கொலும்பு அரசின் மேற்கத்தியப்போக்கின் மேல் நமக்கு வேறொரு இணக்கமான பார்வை உருவாகியிருந்த பொழுது, பிரபாகரனின் தேவை முடிவடைந்துவிட்டதாகவே நாம் கருதினோம். மேலும் ஜெயவர்தனேயை அடியோடு வெறுத்த நமது அகந்தை கொண்ட தலைவர் இப்பொழுது ஆட்சியில் இல்லை. புதிதாக வந்திருக்கும் மென்மையான தலைவர் முந்தையவரின் அரசியல் கொள்கைகளைக் கொண்டிருக்கவில்லை.

மாறிவிட்டிருந்த நமது கொள்கைகளுக்கு இணங்கவேண்டும் என்று பிரபாகரனின் கைகளை நாம் முறுக்கினோம். ஆனால் அதற்குள்ளாக பிரபாகரன் ஒரு முழுமையான ஆண்மகனாக வளர்ச்சி அடைந்துவிட்டிருந்ததை நாம் மறந்துவிட்டிருந்தோம்.

நமது அச்சுறுத்தல்களையும் நமது நிர்பந்தங்களையும் அவர் எதிர்த்தார்.நாம் மேலும் அவரை நிர்பந்தித்து அடிபணியவைக்க நாம் முனைந்த பொழுது அவர் நம்மை திருப்பி அடித்தார். அவர் கொலைகாரர்களை அனுப்பி நம் பாசத்துக்குறிய தலைவரைக் கொன்றார். அதன் பிறகு அவர் நமது ஜென்ம விரோதியாக மாறிப்போனார்.

ஆனாலும் நாம் அவரை ஏதும் செய்யமுடியவில்லை. அவர் மிகுந்த வலுவடைந்துவிட்டிருந்தார். அவரது மக்களிடையே ஒரு முடிசூடா மன்னராக மாறிப்போனார். நாம் பொறுத்திருந்தோம். பொறுமையாக காத்திருந்தோம். நாம் தான் எருமை போல பொறுமை உள்ளவர்கள் ஆயிற்றே. நம்முடைய வரலாறு ஐந்தாயிரம் ஆண்டுகளுக்கு உட்பட்டது. நம்மைப் போல பொறுமைசாலிகளாக இருக்க யாரால் முடியும் சொல்லுங்கள்? நமது அண்டவெளிகளில் பரவியிருக்கும் மதம் நமக்கு பொறுமையையும், உணர்ச்சிவசப்படாமல் இருக்கவும் கற்றுக்கொடுத்திருக்கிறது. நாம் நமது நேரத்திற்காக காத்திருந்தோம்.

அப்புறம் அந்த நாளும் வந்தது. நாம் நமது வேலையை முடித்துக்கொள்ள பிரபாகரனின் எதிரிகளோடு கூட்டு வைத்துக்கொண்டோம். திட்டம் போட்டோம். அவர்களுக்கு ஆயுதங்கள் வழங்கினோம். அவர்களுக்கு கொல்வதற்கான பயிற்சிகளை முறையாக அளித்தோம். நமது உளவுநுட்பங்களை உபயோகித்து அவர்களை சரியாக வழிநடத்தினோம். பிரபாகரன் தப்பிப்பதற்கு உண்டான வழிகள் அனைத்தையும் ஒவ்வொன்றாக அடைத்தோம். அதற்கப்புறம் பிரபாகரனின் கழுத்தில் கயிறு இறுகும் வரை பொறுமையாக காத்திருந்தோம்.

இன்று அவர் இல்லை. நம்பினால் நம்புங்கள் அவருடைய சாவில் நமக்கு எந்த பங்கும் இல்லை. அவர் எங்கு எப்பொழுது இறந்தார் என்பது இனி மர்மத்தில் சூழப்பட்ட புதிராகவே இருக்கும். நமக்கு தெரிந்தவற்றை நாம் வெளியிடுவோமா என்ன?

நமக்குத் தெரிந்ததெல்லாம் பிரபாகரனின் இறப்பு செய்தி உலகத்தின் காதுகளுக்கு எட்டி அது முழித்துக்கொண்டபொழுது இந்தியாவின் தெற்குப்பக்கத்தில் இருக்கும் தமிழ்நாட்டில் மே 13 அன்று தேர்தல் முடிந்துவிட்டிருந்தது என்பது மட்டுமே. இல்லையென்றால் பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் என்னவாகியிருக்கும்? ஜனநாயகம் விசித்திரமானது.

சிங்கள மக்கள் இந்தியாவின் நண்பர்கள். நமது முதல்தர மக்களும் அவர்களது முதல்தர மக்களும் ஒரே மொழிகளைப் பேசுபவர்கள். இருவருக்கும் ஆங்கிலம் நன்றாக வரும். இருவரும் கோல்· நன்றாக விளையாடுவார்கள். இருவருக்கும் சில்லென்ற பியர் ரொம்பவும் பிடிக்கும். எனவே நாம் அவர்களை இந்தநேரத்தில் வாழ்த்தியே ஆகவேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.

நமது கைகளில் ரத்தம் இருப்பது உண்மைதான். அது ஒரு சபிக்கப்பட்ட சங்கடம். ஆனால் நமது கைகளில் ரத்தம் இருப்பது நமது வரலாற்றில் முதல்முறை அல்லவே.

எங்கள் வார்த்தைகளை நம்புங்கள். நீண்டகாலம் நீடிக்கக்கூடிய தீங்குகள் ஏதும் நடந்துவிடாது. ரத்தம் கறைகளை விட்டுச்செல்வதில்லை.

-M K Bhadrakumar
(Ambassador M K Bhadrakumar was a career diplomat in the Indian Foreign Service. His assignments included the Soviet Union, South Korea, Sri Lanka, Germany, Afghanistan, Pakistan, Uzbekistan, Kuwait and Turkey
Thanks: Asia Times Online )

அசலைப் படிக்க.

ப்ரான்ஸ் பயணம் -2

அன்று இரவு மிகவும் அசதியாக இருந்த காரணத்தால் பேக் செய்யவில்லை. ஏற்கனவே அனுஷா கொஞ்சம் கொஞ்சமாக பேக் செய்து வைத்திருந்தார். பேக் செய்வதற்கு எங்களிடம் இரண்டு லிஸ்ட் இருந்தது. ஒன்று மிக அத்தியாவசியமான பொருட்கள். பாஸ்போர்ட், ரெஸிடென்ட் கார்ட், லென்ஸ் கேஸ் போன்ற ஐட்டங்கள். மற்றவை அடுத்த லெவல் அத்தியாவசிய தேவைகள் லைக் என்னோட டவுன் ஜாக்கெட், அனுஷாவோட டவுன் ஜாக்கெட், ஸ்ரீநிதியோட ஜாக்கெட், க்ளவுஸ், வுல்லன் சாக்ஸ் மற்றும் பல பல. குளிர் பிரதேசத்தில் உடைகள் மிக மிக அத்தியாவசியத் தேவை.

எதெல்லாம் ஹேண்ட் லக்கேஜ்ல போகனும்ங்கறதே பெரிய டிபேட்டா இருந்தது. புது ரைஸ் குக்கர் வாங்குவதா இருப்பதையே எடுத்துச்செல்வதா என்கிற டிபெட்டும் ரெண்டு மூனு நாளாக இருந்து கொண்டு வந்தது. என்னது ரைஸ் குக்கர் கொண்டுபோனீங்களாங்கற கேள்வி கேட்கிற மக்களுக்கு, நாங்கள் ஹீட்டிங் ப்ளேட் மற்றும் மிக்ஸியே எடுத்துக்கொண்டு போனோம். பாப்பா இருக்கிறதல்லவா? பாப்பாவை அழைத்துச் செல்வதால் சாப்பாட்டுக்கு என்ன செய்வது என்கிற ப்ளான் எல்லாம் ரெடி. முப்பது நாட்களுக்கு தேவையான Gerber, Rice போன்றவை ஏற்கனவே வாங்கிவைத்தாயிற்று. இருக்கிற ரைஸ் குக்கர் கொஞ்சம் பெரியதாக இருப்பதால், வேறொரு சிறியதான ரைஸ்குக்கர் வாங்கினால் கொஞ்சம் இடம் ·ப்ரியாகும் என்பதால், முத்து பேக்கிங்கை பாதியில் விட்டுவிட்டு புது ரைஸ் குக்கர் வாங்கக் கிளம்பினான்.

ஒரு வழியாக சிற்சில சண்டைகளோடு பேக்கிங் முடிவுக்கு வந்தது. அஞ்சப்பரில் சாப்பாடு ஆர்டர் செய்திருந்தோம். கரெக்ட்டாக வந்து சேர்ந்தது. சாப்பிட மனமும் இல்லை பசியும் இல்லை. எங்கள் சிந்தனை முழுவதும் எப்பொழுது பாரிஸில் இறங்கி ஹோட்டலுக்கு போவோம் என்பதில் இருந்தது. எல்லோரும் ரெடி. ஸ்ரீநிதி அழகாக பிங் டாப்ஸ் மற்றும் பிங் பேண்டில் அழகாக உட்கார்ந்து விளையாடிக்கொண்டிருந்தார். என்னுடைய பாஸ் காரில் என்னை ஏர்போர்ட்டில் விட்டுவிடுகிறேன் என்று சொல்லியிருந்தார். செந்திலும் உடன் வருவார். அவர்கள் வரும் நேரத்தை உறுதிப்படுத்திக்கொண்டு கொஞ்சம் ரிலாக்ஸ்டாக உட்கார்ந்தோம். வீடெங்கிலும் குப்பைபூமியாக இருந்ததால் கூட்டிவிட்டுவருகிறேன் என்றார். அவர் பாதி கூட்டிமுடிப்பதற்குள் ஸ்ரீநிதி திடீரென்று வாமிட் எடுக்க ஆரம்பித்தார். வாமிட் எடுத்துக்கொண்டேயிருந்தார்.

எங்களுக்கு கையும் ஓடவில்லை காலும் ஓடவில்லை. என்ன ஆயிற்று என்று பார்ப்பதற்குள் நிறையவே வாமிட் எடுத்துவிட்டிருந்தாள். எனக்கு தேவையான நேரத்தில் மூளை அஸ்தமனமாகிவிடும். அன்றும் அப்படியே ஆனது, ஆனால் அனுஷா சமயோஜிதமாக டக்கென்று விரல்களை வாயுனுள் நுழைத்து தொண்டையில் சிக்கிக்கொண்டிருந்த அந்த சிறு பேப்பரை எடுத்துவிட்டார். பிறகு தான் வாமிட் நின்றது. எப்பொழுதும் சுத்தமாக இருக்கும் எங்கள் வீடு. அன்று கிளம்பும் அவசரத்தில் வீட்டையும் சுத்தப்படுத்தவில்லை, பாப்பாவையும் சரியாக கவனிக்கவில்லை. ஸ்ரீநிதி இப்படி வாமிட் எடுத்தது இதுவே முதல்முறை. இதெல்லாம் பிள்ளைவளர்ப்பில் சகஜம் என்பது பின்னாளில் புரிந்தது.

*

மூன்றுமணிநேரத்திற்கு முன்னர் ஏர்போர்ட்டில் இருப்பது என்னுடைய வழக்கம். பாப்பாவேறு கூட வருவதால், அன்று கரெக்ட்டாக சென்றுவிட்டேன். முதலில் போனால் தான், ப்ளைட்டில் பேபி ட்ரே கிடைக்கும். இல்லையேல் யாராவது எடுத்துக்கொண்டால் கஷ்டம் தான். பிறகு பதினான்கு மணி நேரம் பாப்பாவை மடியிலே தான் வைத்திருக்கவேண்டும். அது ரொம்பவும் கஷ்டம். சிங்கப்பூரில் இருந்து இந்தியா போகும் மூன்று மணி நேரத்திற்குள் எங்களுக்கு போதும் போதும் என்றாகிவிடும் பொழுது, பதினான்கு மணி நேரம்?

ப்ரான்ஸ் போகிறோம் என்று முடிவாகிவிட்டபொழுது மிகவும் சந்தோசமானவர் என்னுடைய அண்ணன் தான். இப்பத்தெரியும்டா உனக்கு லாங் ஜர்னின்னா என்ன? பதிமூணு பதிநாலுமணி நேரம் ப்ளைட்ல உக்கார்றதுன்னா என்னன்னு புரியும். குளிர்ன்னா என்னன்னு புரியும் என்றார். வாஸ்தவம் தான். எனக்கு பிஸினஸ் க்ளாஸ். அனுஷா மற்றும் குழந்தைக்கு எகனாமி க்ளாஸ். ப்ரான்ஸ் ஏர்லைன்ஸ்.

பிஸினெஸ் க்ளாஸ்னா லக்கேஜ்ல கொஞ்சம் ஸ்ட்ரிக்டா இருக்கமாட்டாங்கன்னு நினைச்சேன். ஆனா ப்ஸினெஸ் க்ளாஸ்னாலும் எந்த க்ளாஸ்னாலும் ஒரு பெட்டிக்கு முப்பது கிலோவுக்கு மேலே வெக்கக்கூடாதுன்னு ஸ்ட்ரிக்டா சொல்லிட்டார் அந்த பெண்மணி. செந்திலும் என்னுடைய பாஸ¤ம் கஷ்டப்பட்டு ரீபேக் செய்தனர். தாங்க்ஸ் டு போத் ஆ·ப் யு கைஸ். எங்களுடைய strollerஐ விமானத்தின் உள்ளேயே கொடுத்துவிடலாம் என்று சொன்னார்கள். எங்களுக்கு வசதியாகப் போயிற்று.

*

அனுஷா என்ன ஆனாலும் பிஸினெஸ் க்ளாஸை விட்டுக்கொடுக்காதீர்கள் என்று சொல்லியிருந்தார். என்னோட பிஸினெஸ் க்ளாஸ் சீட்டில் என்னுடைய ஹேண்ட் பேக்கை வைத்துவிட்டு அனுஷா,ஸ்ரீநிதி உட்கார்ந்திருக்கும் இடத்தில் கொஞ்ச நேரம் நின்றுகொண்டிருந்தேன். பேபி ட்ரே இன்னும் கொஞ்சநேரத்தில் கொடுப்போம் என்று சொன்னார்கள். பிஸினெஸ் க்ளாஸ்க்கும் அனுஷா உட்கார்ந்திருக்கும் சீட்டிற்கும் அதிக தூரமில்லை. சொல்லப்போனால் அனுஷா எகானமி க்ளாஸ் ஆரம்பிக்கும் முதல் சீட்டில் உட்கார்ந்திருந்தார். டயபர் பேக்கை அவரிடம் கொடுத்துவிட்டு, நான் என்னுடைய இடத்திற்கு சென்றேன். ஸ்ரீநிதி சிரித்துகொண்டேயிருந்தாள். Aisleக்கு அந்தப்பக்கம் உட்கார்ந்திருந்த வெள்ளைக்காரதாத்தாவுடன் விளையாடிக்கொண்டே இருந்தாள். விமானம் நகரத் தொடங்கியது.

விமானம் ரன்வேயில் வேகம் எடுத்தது. ஏதோ குழந்தை அழும் சத்தம் கேட்டது. ஸ்ரீநிதி. அழுகை என்றாள் அப்படியொரு அழுகை. எனக்கு இருப்பு கொள்ளவில்லை. எழுந்து சென்றால் அங்கே உட்கார்ந்திருந்த விமானப்பணிப்பெண் விடமாட்டேன் என்கிறார். ஸ்ரீநிதி அழுகை நிற்கவில்லை. ஸ்ரீநிதிக்கு என்னுடைய O2 செல்போன் ரொம்பவும் பிடிக்கும். அது அவளுடைய toy. அதற்குத்தான் O2 லாயக்கு. :(. அந்தப்பக்கம் ஓட்டமும் நடையுமாக சென்ற ஒரு விமானப்பணிப்பெண்ணிடம் கொடுத்துவிட்டேன். O2 தான் இதுநாள் வரை செய்துகொண்டிருந்த ஒரே வேலையையும் இப்பொழுது செய்யவில்லை. ஸ்ரீநிதியின் அழுகை நின்றபாடில்லை.

விமானம் மேலெழும்பி நிதானமடைந்தவுடன் ஓட்டமும் நடையுமாக ஸ்ரீநிதியின் இடத்தைத் தேடி ஓடினேன். இன்னும் அழுகையை நிறுத்தவில்லை. அருகிலிருந்த பெண்ணிடம் நீங்கள் பிஸினெஸ் க்ளாஸில் அமர்ந்துகொள்கிறீர்களா என்று கேட்டேன்? என் கேள்விமுடியும் முன் ராமபிராண் ராமாயணத்தில் டஸ்ஸென்று மறைவதுபோல மறைந்தார். பின்னாலிருந்த ஒரு வெள்ளக்கார தாத்தா பாட்டி ஏதேதோ விளையாட்டுக்காட்டினார்கள். ம்ஹ¥ம்.

02 ·பெயில் ஆனதால் ஐபோனின் துணையை நாடினேன். எப்பவுமே ஒரு ஒழுங்கு முத்தின வாழக்கா கூடவே இருக்கும்ல அது போல ஒன்னு பக்கத்திலே உக்காந்திருந்தது. மற்றொரு வெள்ளக்காரத்தாத்தா. செல்போன் யூஸ் பண்ணக்கூடாதாம். யோவ் பிள்ளை இப்படி கத்திட்டிருக்கு உனக்கு என்னய்யா வந்தது? ஆனா ஐபோன்ல ஏர்ப்ளேன் mode ஒன்னு இருக்கு. அத ஸ்விட்ச் பண்ணிட்டோம்னா செல்போன் வொர்க் ஆகாது. அத அவருக்கு அந்த ரணகளத்திலயும் explain செய்தேன். But he is ignorant and arrogant. He repeatedly asked me to put off the phone. I really didnt took much care of him. I just asked him to go to hell.

அப்புறம் கொஞ்ச நேரத்தில் என் மகள் கொஞ்சம் சாந்தமானாள். தூங்கிப்போனாள். பேபி ட்ரே மிகவும் உதவியாக இருந்தது. She slept comfortably. எங்களுக்கு dinner வந்தது. We took our time to finish our dinner. முதல் சீட் என்பதால் கால் நீட்டிக்கொள்ள நிறையவே இடம் இருந்தது. முன்னாள் உட்கார்ந்திருந்த ஒரு தாத்தாவிடம் சொல்லி நானும் அனுஷாவும் ஒரு photo எடுத்துக்கொண்டோம்.
மணி என்ன இன்னும் எவ்வளவு நேரம் இருக்கிறது என்று பார்த்தபொழுது: இன்னும் பதினோறு மணி நேரம் இருந்தது.

ஸ்ரீநிதி அவ்வப்போது விழித்து அழுதுகொண்டிருந்தாள். அனுஷா கையில் வைத்து தூக்கிக்கொண்டே பாட்டு பாடி தூங்கவைத்துக்கொண்டிருந்தார். கொஞ்சம் கொஞ்சமாக நேரம் கரைந்துகொண்டிருந்தது ஒரு மிகப்பெரிய மெழுகுதிரி போல.

என் மகள் அப்பதான் தூங்க ஆரம்பித்திருப்பாள், Turbulance warning நாராசமா ஒலிக்கும். தூங்குகிற குழந்தையை தூக்கி belt போட்டுக்கொள்வோம். தூக்கனுங்கற அவசியம் இல்லை, ஆனால் நமக்கு பயமாக இருக்கும். தூக்கிருவமா வேணாமா தூக்கிருவமா வேணாமான்னு யோசிச்சு யோசிச்சு சரி தூக்கிருவோம்னு பொதுகுழுவில முடிவுபண்ணி தூக்கி மடியில வெச்சுக்குவோம். பிறகு பெல்ட் போட்டுவிட்டு தூங்கவெச்சு அப்பாடான்னு உக்காந்திருப்போம். பிறகு பேபி ட்ரேயில குழந்தையை மீண்டும் தூங்கவைக்கலாம்னு தோணறதுக்குள்ள ரொம்ப நேரம் போயிருக்கும். தூங்கபோட்டவுடன் மீண்டும் Turbulance warning. மனுசனுக்கு எப்படி இருக்கும்?

அருகில இருந்த ஒரு French Coupleஇடம் நான் மெதுவாக பேச்சுக்கொடுக்க ஆரம்பித்தேன்.

*