சிரிப்பு போலீஸ்!

எதற்கு இந்த வீண் சண்டை? யார் பெரியவர் யார் சிறியவர்? என்னுடைய மெயில் ஐடி எப்படி ஐயா உங்களுக்கு கிடைத்தது? ஒரு தேவையில்லாத மெயில் சிக்குன மெயில் அடிக்கெல்லாம் அனுப்பப்பட்டிருக்கிறது. உங்களுக்கு வந்துச்சா? யாருக்கு வேணும் உங்க சண்டை? True Known அப்படீங்கற True Unknown தான் இந்த மெயில அனுபிச்சது. சத்தியமாக எனக்கு அந்த anonymous mail வரும்வரை இதில் குறிப்பிட்டிருந்த எந்த சண்டையும் தெரியாது. வலைப்பூக்களில் நடக்கும் சண்டைகளை நான் கவனிப்பதே கிடையாது. அப்போ எனக்கு இந்த மெயில் அவசியமா? அவ்ளோ பெர்ர்ர்ரிய cc list. இதுல காமெடி என்னன்னா, வந்த மெயிலே spam, அதுக்கு நிறைய பேர் மறுமடியும் எல்லாருக்கும் cc போட்டு ‘remove myid’ன்னு சொன்னது. இது மட்டும் spam இல்லியா? உங்களையெல்லாம் பார்க்க சிரிப்பு போலீஸ் மாதிரி தான் இருக்கு.

இப்படி வர்ற மெயிலால என் மெயில் பாக்ஸ் நிறைந்து விடும் என்பதற்காக நான் சொல்லவில்லை. ஒரு தேவையில்லாத செய்தியை ஏன் எல்லாருக்கும் அனுப்புகிறீர்கள்? இதே போல் புத்தாண்டு வாழ்த்து வந்தது சரமாக வந்தது. SPAMஆ இருந்தாலும் இத்தனை பேர் வாழ்த்துக்களை பகிர்ந்து கொள்வதை பார்க்கும் பொழுது சந்தோஷமாகத்தான் இருந்தது. வாழ்த்துக்களுக்கு எண்ணிக்கையில்லை. ஆனால் ஒருவர் மேல் ஒருவர் தேவையில்லாமல் வீண் பழி சுமத்துவது எதற்கு? ஏன் இந்த கொலைவெறி? ஒற்றுமையாக இருப்போம் தோழர்களே. கருத்துவேறுபாடுகள் இருக்கலாம். ஆனால் துவேஷம் வேண்டாமே. ப்ளீஸ்.

நாம் அனைவரும் ஒருங்கிணைந்து ஆரோக்கியமானதொரு விவாத கருத்துப் பறிமாற்ற மேடையாக மட்டுமே தமிழ் வலைப்பூவை வைத்திருப்போம்.

***

ஜெயமோகனின் (ஆளாளுக்கு ஜெயமோகனைப் பற்றி பேச ஆரம்பிச்சுட்டாய்ங்கப்பான்னு நீங்க புலம்புறது என் காதுல விழுது!) கடிதத்தை மதி கந்தசாமியின் வலைப்பூவில் பார்த்தேன். ஜெயமோகன் அவரது கோபத்தை (அல்லது over-confidence!) கொக்கரிப்பாக வெளிபடுத்தியிருக்கிறார். அவர் வலைப்பக்கமய்யா அது. அவருக்கு என்ன தோணுதோ அத அவர் எழுதுவார். (கூடிய விரைவில் வலைப்பூக்களை கட்டுப்படுத்துவதற்கு கடினமான சட்டதிட்டங்களை கொண்டுவரலாம்.) ஆனா இதுவும் எங்க வலைப்பக்கமுல்ல? நாங்களும் எழுதுவம்ல. எழுதுவம்ல!

நான் மதிக்கு எழுதிய பின்னூட்டத்தின் சாரம் இங்கே::
ஜெயமோகனின் உலகம் தருக்கம் தத்துவம் மற்றும் ஆழமான ?! கேள்விகள் சார்ந்தது என்று அவரே உருவாக்கிக் கொண்டார். தத்துவமும் தர்க்கமும் கொக்கரிப்பில் முடிந்து சக மனிதர்களை மண்ணில் இட்டு மிதிக்கத்தான் செய்யும் என்றால் அந்த தத்துவமும் தர்க்கமும் எதற்கு? தத்துவமும் தர்க்கமும் வாழ்க்கையை புரிந்து கொள்ள செய்யவேண்டும். வாழ்க்கையை புரிந்து கொண்டால் “தான்” இருக்காது.

“நான் தமிழ் வரலாற்றில் என்றும் இடம்பெறும் ஆளுமை” என்று அவர் சொல்லியிருப்பது “தான்” என்பதில்லாமல் வேறு எதைக் காட்டுகிறது? அப்ப நீங்க சொல்லும் உங்க தத்துவமும் தர்க்கமும் யாருக்கு? உயிரோடு இருக்கும் பொழுதே தானே தனக்கு சிலை வைத்துக்கொண்டது போலத்தான் இவரது ஸ்டேட்மன்ட்டும் இருக்கிறது.

ஆனால் இதற்காக அவர் புத்தகத்தையெல்லாம் படிக்காமல் நான் இருக்கமாட்டேன். Reading is pleasure.

உங்களையெல்லாம் பாத்தா எனக்கு சிரிப்பு போலீஸ் மாதிரிதான் இருக்கு” ன்னு சொல்லிட்டு உடு ஜூட்.

***

3 thoughts on “சிரிப்பு போலீஸ்!

  1. //இதுல காமெடி என்னன்னா, வந்த மெயிலே spam, அதுக்கு நிறைய பேர் மறுமடியும் எல்லாருக்கும் cc போட்டு ‘remove myid’ன்னு சொன்னது. இது மட்டும் spam இல்லியா? உங்களையெல்லாம் பார்க்க சிரிப்பு போலீஸ் மாதிரி தான் இருக்கு.///:))))))))))))))

    Like

  2. nalla sonneenga nattamai ayya..sema comedy ennannaa..neenga soldrathi padikumpothu ennai vechu comedy keemedy pannalaiyennu vadivelu sonnathuthan yosikka vaikkuthu..

    Like

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s