குண்டுவெடிப்பு நடந்து சில நிமிடங்களிலே எனக்கு தெரிந்துவிட்டது. iPhoneக்கும் NDTV appக்கும் நன்றி. தெரிந்தவுடன் என் மனதில் தோன்றியது ஒரு கெட்டவார்த்தை. உறக்கவே சொல்லிவிட்டேன். என் மனைவி சொன்னார்: அவன அப்படி திட்றதனால என்ன நடக்கப்போகுது?
ஒரு மும்பை ப்ளாக்கர் கீழ்வருமாறு எழுதியிருக்கிறார்:
Bombs are something we have to live with now. Obviously, like other nasty things we have to live with, such as murder and robbery, it’s important to minimise the number of incidents. We haven’t had any attacks for two years and a half, which I think is good going. I’ll happily take one attack every two years that kills about twenty of us, and accept the risk of being one of those twenty next time round.
இது மிகவும் வேதனையான விசயம். இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை இது போன்றதொரு குண்டுவெடிப்பை ஏற்றுக்கொள்வதாகவும்; அப்படி குண்டுவெடிப்பு ஏற்பட்டு உயிரிழப்பு நேரும் பொழுது உயிரிழக்கும் அந்த இருபது பேரில் ஒருவராக இருக்கக்கூடும் ஆபத்தை சந்திக்கத் தயாராக இருப்பதாக சொல்வதற்கு எத்தனை தைரியம் வேண்டும்? வேறு வழி? கொலைகள் நடக்கிறது. கொள்ளை நடக்கிறது. கொலையும் கொள்ளையும் நடக்காமலே இருந்தால் நல்லது தான். ஆனால் முடியுமா? அவ்வளது பாதுகாப்பை வழங்க முடியுமா? இவ்வளவு சிறிய சிங்கப்பூரிலே கொலைகள் நடப்பதைத் தடுக்கமுடியவில்லை.
எப்படி இவற்றுடன் வாழப்பழகிக்கொண்டோமோ அப்படி குண்டுவெடிப்புகளுடனும் வாழப்பழகிக்கொள்வோம். அவர் குண்டுவெடிப்பு நடந்த இட்த்திலிருந்து ஒரு கிமீ தொலைவில் தான் இருந்திருக்கிறார். இரண்டு ஆண்டுகளுக்கு முன்னரும் அப்படி இருந்திருக்கக் கூடும். அப்படி இருந்திருந்தால், இப்படித்தான் யோசிக்கத்தோன்றும். குண்டு வெடிக்காத இடத்தில் இருக்க ஆசையாகத்தான் இருக்கும். அப்படி ஒரு இடம் இருக்கிறதா என்ன? ஆனானப்பட்ட அமெரிக்காவிலே – CIA, FBI, ABC என சகட்டுமேனிக்கு உலகமெங்கும் உளவுத்துறை வைத்திருக்கும் அமெரிக்காவிலே – டிவின் டவரை இடித்து தரைமட்டமாக்கினார்கள். எங்கு ஓடுவது?
அமெரிக்காவில் சமீபத்தில் நடக்கவிருந்த குண்டுவெடிப்பைத் தடுத்து நிறுத்தியது நினைவிருக்கும் என்று நினைக்கிறேன். அது பற்றிய செய்தியொன்றை அப்பொழுது பார்த்துக்கொண்டிருந்த பொழுது ஒரு விஷயம் என்னை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. அது தீவிரவாதிகள் உருவாக்கிய புதிய வேலைவாய்ப்புகள். அப்பொழுது இரண்டு புதிய வேலைகள் என் கண்ணில் பட்டன. Terror Expert மற்றும் Terrorism Analyst. இதைப் பற்றி நான் ஏற்கனவே எழுதியிருக்கிறேன்.படிக்க: தீவிரவாதிகள் உருவாக்கிய முற்றிலும் புதிய வேலைவாய்ப்புகள்.
நான் மேலே குறிப்பிட்ட மும்பைப் பதிவர் மேலும் ஒரு விஷயத்தைச் சொன்னார். அது: ரெயில்வே தண்டவாளத்தைக் கடக்கும் பொழுது அடிபட்டு இறந்தவர்களின் எண்ணிக்கை கடந்த ஐந்தாண்டுகளில் மட்டும் இருபதாயிரம்!
இன்னும் ஒருவரும் பிடிபடாத நிலையில் குண்டுவெடிப்பு தொடர்பாக பொதுஜனம் கொடுத்த டிப் ஒன்றை கண்டுகொள்ளாமல் விட்டதற்காக ஒரு காண்ஸ்டபிள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
நல்ல பதிவு நண்பரேஅப்பாவி மக்களை கொல்பவர்கள் காட்டுமிராண்டிகளை விட கேவலமானவர்கள்.விரைவில் கண்டுபிடித்து தண்டனை வழங்க வேண்டும்
LikeLike